கத்தோலிக்கப்பையன்ஹிந்துபெண்ணைதிருமணம்செய்ததைகத்தோலிக்கச்சர்ச்ஏற்ருக்கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது. இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].
கத்தோலிக்கபோராளிகள்பெண்னியப்போராளிகள்வாய்திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூதாட்டிஉடலைபுதைக்கமறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர்.
தொடரும்மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது. மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
போலீசார்சமரசத்திற்குப்பிறகுஉடல்புதைக்கப்பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?
கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன, பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.
[5] ஜீ.நியூஸ், தேனி: மகன்மதம்மாறியதால்தந்தையின்உடலைஅடக்கம்செய்யமறுத்தகல்லறைபொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST
எம்பிக்கள்பிஜேபி–திமுகஎன்றால், வாத–விவாதங்களும்இந்து–இந்துவிரோதமாகஇருக்கலாமா?: பிறகு இடவொதிக்கீடு ஏன் என்று திமுக கேட்க வேண்டும். அம்பேத்கரை எதிர்க்க வேண்டும். ஆனால், மனுதாரர் பாஜக பின்புலம் கொண்டவர்[1]. இவ்விவகாரம் தொடர்பாக அவர் தாக்கல் செய்த 4 மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன[2] என்று குறிப்பிடுவதும் விசித்திரமானதே. ஏனெனில் இவரே திமுக எம்பி தான், இப்பொழுது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்குதல் செய்தாலும், “திராவிட மாடல்” என்றெல்லாம் குறிப்பிட்டு அரசியல் ரீதியிலான பதில் தான் பதிவு செய்துள்ளார். சூசை தீர்ப்பையும் மறக்கிறார் / மறைக்கிறார்.. பழைய கோர்ட்-கட்டுகளை பிரித்துப் பார்ப்பாரா அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பாரா? இல்லை, “திராவிட ஸ்டாக்கில்” இதெல்லாம் சகஜமப்பா என்பாரா? வக்கீல் என்ற முறையில் பாரபட்சம் இல்லாமல் பிரச்சினையை அணுக வேண்டும் என்பது கூட இல்லாமல் பதில்-மனு சமர்ப்பித்து இருப்பது தெரிகிறது.
கடந்தபலஆண்டுகளாககட்டாயமதமாற்றம்எதுவும்நடைபெறவில்லை: வில்சன் தொடர்கிறார், “மதம் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களுக்கு அதிகாரமில்லை[3]. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் இல்லை. நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது[4]. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றார். இதுபோன்ற செயல்கள் மதம் சார்ந்தவர்களை புண்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படுவது பொய்யான தகவல்; [பெரியாரிஸத்தில் இதெல்லாம் எப்படி வரும் என்று தெரியவில்லை. ஒருவேளை, இந்து மதம் இல்லை என்றால், அதெல்லாம் வரும் போலிருக்கிறது] கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை[5]. [ஆனால், மதம் மாறியவர்களுக்கு இடவொதிக்கீடு தேவை] அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தங்கள் மதத்தை பரப்புவதில் எந்த தவறும் இல்லை[6] [அதை, பகுத்தறிவு எப்படி ஒப்புக் கொள்கிறது, பெரியாரிஸம் ஏற்றுக் கொள்கிறது என்று தெரியவில்லை]. மதத்தை பரப்ப சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்[7] [இப்படியெல்லாம் கூட மனு தாக்கல் செய்யலாம் போலிருக்கிறது]. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்[8]., என்றெல்லாம் வக்காலத்து வாங்குவதை கவனிக்க வேண்டும்.
இனிதீர்ப்புஎப்படிஎன்றுபார்க்கவேண்டும்: லாவண்யாவின் தற்கொலை குறிப்பில், விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. என்ன சட்டம் இயற்ற வேண்டும் என்பதை சட்டமன்றத்துக்கு விட்டுவிட வேண்டும் என்றும், என்ன சட்டம் வேண்டும், எது வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும் எனவும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதெல்லாம் தெரியும், ஆனால், இது மட்டும் தெரியாது என்பதெல்லாமும் வேடிக்கை தான். தமிழ்நாட்டில் மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்றும், மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
அவர்கள்கடவுள்ஏசுஎப்படிஜாதியைஏற்றுக்கொள்கிறார்?: ஜாதிகளை வைத்துக் கொண்டு கடவுளர்களை ஏமாற்றும் கிருத்துவம், இஸ்லாத்தையும் சேர்த்துக் கொள்கிறது! ஆமாம், தலித் என்று பேசும் பொழுது, முஸ்லிம்களும் சேர்ந்து கொள்கிறார்கள். சச்சார் கமிட்டி போர்வையில், முஸ்லிம்களும் கேட்கத்தான் செய்கிறார்கள். கருணாநிதி கொடுத்த 3.5% உள்-ஒதிக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். ஓபிசியும் கிடைக்கிறது. ஆக எஸ்சி தான் இறுதி இலக்கு போலும். இப்பொழுது, “ஆதிதிராவிடர்” எனும் பொழுது, அமைதியாக இருக்கிறார்கள் போலும். கிருத்துவர்களுக்கு கொஞ்சம் கூட கிருத்து சொன்னது பற்றி கவலை இல்லை போலும். பொய் சொல்வதில் சளைத்தவர்களும் அல்லர். பணதையும், அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு, கூட செக்யூலர் அரசியல்வாதிகளை கைக்கூலிகளாக வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைக்கப் பெரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஜாதி என்றாலே, இந்து மதத்திற்குரியதாகிறது, ஆகவே கிருத்துவர்கள் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடுக் கேட்கமுடியாது என்று சூசை -எதிர்- இந்திய அரசாங்கம் உச்சநீதி மன்ற தீர்ப்பில் எடுத்துக் காட்டியது.
கடவுளாஜாதியாஎன்றால், ஜாதிஎன்றுஎப்படிகிறிஸ்துவர்செல்லமுடியும்?: ஆனால் கிருத்துவர்களோ, தம் மதத்தில் ஜாதிகள் உள்ளன இன்று பிரகடனப் படுத்துகிறார்கள். போதாக் குறைக்கு முஸ்லீம்களையும் கூட்டுக்கு அழைக்கிறர்கள். இப்பொழுது, ஸ்டாலினே வக்காலத்து வாங்கும் நிலைக்கு வந்தாகி விட்டது. அதற்காக தலித் கிருத்துவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்கு தலித் அந்தஸ்து வேண்டும் என்று கேட்கிறார்கள்! அதாவது, கிருத்துவர்களாக மாறிய பிறகும், முஸ்லீம்களாகிய மாறிய பிறகும், அவர்களது கடவுளர்களான ஏசு / ஜேஹோவா மற்றும் அல்லா முதலியோரால் அவர்களை மாற்ற முடிவவில்லை போலும். அதாவது இவர்கள் அவர்களை ஏமாற்றுகிறார்களா அல்லது அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லையா என்பது தெரிந்தாக வேண்டும். ஏனெனில், இப்படி எல்லா கடவுளர்களையும் எல்லா நேரங்களிலிலும் ஏமாற்றி வருவது கேவலமானது! ஆனால், கிறிஸ்துவர்கள் இதைப் பற்றி கவலைப் படுகிறார்களா அல்லது பயப் படுகிறார்களா?
[5] நக்கீரன், “தமிழ்நாட்டில்கட்டாயமதமாற்றம்என்பதுபொய்யானதகவல்” – உச்சநீதிமன்றத்தில்தமிழ்நாடுஅரசுபதில்மனு, செய்திப்பிரிவு, Published on 01/05/2023 (11:42) | Edited on 01/05/2023 (11:52).
இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!
இந்துகுடும்பம்மதம்மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5]. சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6]. போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார்விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதிமற்றும்அவரதுஇருமகன்களும்குடும்பத்துடன்சிலஆண்டுகளுக்குமுன்னர்இந்துமதத்திலிருந்துகிறிஸ்தவமதத்திற்குதங்களைமதமாற்றம்செய்துகொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.
பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்டபெட்டியில்வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8]. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது. சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர். இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.
உயிர்ப்பிக்கும்முயற்சியில்அவரதுகுடும்பத்தினர்ஈடுபட்டுஇருப்பதாகபக்கத்துவீட்டினர்புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.
மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார்விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதிமற்றும்அவரதுஇருமகன்களும்குடும்பத்துடன்சிலஆண்டுகளுக்குமுன்னர்இந்துமதத்திலிருந்துகிறிஸ்தவமதத்திற்குதங்களைமதமாற்றம்செய்துகொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின்மூலமாகஇறந்துபோனமாலதியைஉயிர்ப்பிக்கமுடியும்என்றநம்பிக்கையில்அவரதுஉடலைவீட்டிலேயேவைத்திருந்ததும்தெரியவந்தது.வீட்டிலிருந்துதுர்நாற்றம்வந்ததால்இதுவெளியேதெரிந்ததாகவும்தகவல்வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].
2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12]. இங்கும், அது பொறுந்தும்..
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)
Pope sends mesage for FABC 2022
போப்பும், ஆயர்மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில் உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினால்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[1]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[2].
The Chinese cardinal- none attended from China
ஆசியபிஷப்மாநாட்டில்சைனாபிஷப்புகள்கலந்துகொள்ளவில்லை: தொற்று என்றெல்லாம் காரணங்கள் சொல்லப் பட்டாலும், சைனா கிறிஸ்வத்திற்கு ஆதரவாக இல்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் சைனா பொருளாதார விசயங்களில் அதிரடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ மேலிடம் அனுமதி இல்லாமல், எந்த பிஷப்பும் ஒன்றும் செய்து விட முடியாது. அதுதான், சைனாவில் உள்ள நிலை. கம்யூனிஸ மாநாடு நடந்து, லி பிங் மறுபடியும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சைனா, மதரீதியிலாக எந்த பிரச்சினையையும் உண்டாக்கவோ, அல்லது அந்நாட்டில் உருவாக்கவோ விரும்புவதில்லை. பௌத்தம், ஷின்டோ போன்ற மதத்தினர் இருந்தாலும், அவை தங்களது இடங்களுக்குள், மடாலங்களுக்குள் பின்பற்ற வேண்டும். தெருக்களில் வரக் கூடாது. ஆகவே, கிறிச்துவர், முஸ்லிம்கள் மற்ற நாடுகளைப் போனூ சைனாவில், பிரச்சாரம் செய்வது, கூட்டங்கள் போடுவது, போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.
மதம்மாற்றதிட்டம்போடும்கூட்டம்: மாநாட்டின் போது, ஆசியாவில் வளர்ந்து வரும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மத உண்மைகளுக்கு பதிலளிப்பதற்காக ஆசியாவில் உள்ள தேவாலயத்திற்கான ஒரு கிறிஸ்துவ மேய்ப்பு திட்டத்தை – அதாவது மதமாற்றி- ஆடுமாடுகளைப் போன்ற கூட்டத்தை உண்டாக்க – உருவாக்க பங்கேற்பாளர்கள் பல ஆலோசனைகளில் சேர்ந்தனர். ஆசிய இளைஞர்களுக்கான பைபிளின் தனித்துவமான பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது[3]. “அடையாளம்: அடையாளம் கண்டதும், வாழ்க்கையில் உள்ள சவால்களை கடத்தல்” [‘Identity: Identified, Navigating the Challenges of Life] என்ற தலைப்பில் அந்த பைபிள் வெளியிடப் பட்டு, ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் மற்றும் சைமன் போஹ் பிஷப்புகளால் அவைக்குக் கொடுக்கப் பட்டது[4]. முன்பு கூட ஆசியாவிற்கான பைபிள், இந்தியாவிற்கான பைபிள் என்றெல்லாம் வெளியிட்டனர். ஆனால், சர்ச்சை உண்டானதால், அவற்றை சுற்றிலிருந்து அகற்றி விட்டனர். அதை மறந்தும் விட்டனர் எனலாம். கருத்துரிமை பேசுபவர்களுக்கும் கப்சிப் என்று தான் இருக்கிறார்கள்.
அக்டோபர் 12 முதல் 30 வரைபிஷப்மாநாடுநடக்கும்நேரத்தில்உலகம்முழுவதும், பலநாடுகளில்மக்கள்கொல்லப்படுதல்: இம்மாநாடு முடியும் தருவாயில், தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் அக்டோபர் 29 அன்று நடந்த ஹாலோவீன்[5] விழாவில் ஒரு குறுகிய சந்துக்குள் ஒரு பெரிய ஹாலோவீன் பார்ட்டி கூட்டம் அலைமோதியதில் ஊட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர், நூற்றிற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[6]. பில்லிப்பைன்ஸிலும், பலத்த மழை, வெள்ளத்தினால், 45 பேர் கொல்லப் பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர்[7]. 30-10-2022 அன்று தொங்கு பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 150 பேர் பலியாகினர். உக்ரைனில் தொடர்ந்து போர்; பாலஸ்தீனத்தில் கலவரம் கொலை; ஈரான் ஆர்பாட்டத்தில் 150 பேர் கொலை, என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன-இருக்கின்றன. 29-10-2022 அன்று தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகளில் நூற்றிற்கும் மேலானோர் சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் கொல்லப் பட்டனர். ஆசியாவின் ஆயர்களின் கூட்டத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்களின் தூதுவர் தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிலிப்பைன்ஸில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்[8]. தாங்கள் எப்பொழுதும், அவர்களுடன் இருந்து, உதவுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்[9].
Traditional Thailand dance – Inculturation
ஆசியசர்ச்ஆசியத்தன்மையுடன்இருக்கவேண்டும், ரோம்–தன்மைகுறைந்திருக்கவேண்டும்: ஆசியாவில் உள்ள தேவாலயங்கள், திருச்சபையின் ஆசியத் தன்மையை வலியுறுத்தும் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் போப் பிரான்சிஸ் திருச்சபை சமூகங்களை, இக்கால இறையியல் மூலம் மேலும் அடித்தளமாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று, ஶ்ரீலங்காவின், ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான விமல் திரிமான்ன கூறுகிறார்[10]. ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்-தன்மை குறைந்திருக்க வேண்டும் என்று பேசுவதும்[11] தமாஷாக இருக்கிறது. எப்படித் தான் வார்த்தைகளை மாற்றி, சுற்றி வளைத்துப் பேசினாலும், வாடிகன் கவுன்சில் -2 என்றெல்லாம் பேசும் பொழுது, அவர்களது திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். உள்-கலாச்சாரமயமாக்கல், உரையாடல் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான். ஏற்கெனவே முரண்பாடுகளுடன் செயல் பட்டு வருகின்றன.
கிருத்துவத்தால்வன்முறையினைக்குறைக்கமுடியவில்லை: இத்தாலியிலிருந்து வரும் ஒரு நாளிதழ், “உதவ மற்றும் நீதி கேட்டு கூக்குரலிடும் மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள்…..ஆசிய கண்டத்தில் எழுச்சியுறும் மக்களுக்கு உதவுங்கள்……..ஒன்றாக உழைத்து புதிய ஆசியாவை உண்டாக்குவோம்,” என்றெல்லாம் மாநாட்டில் பேசியதாக கூறுகிறது[12]. இதெல்லாம் வழக்கமான கோஷங்கள் தானே தவிர, புதியதாக உன்றும் இல்லை. முதலில் இருக்கும் கிருத்துவர்களை, கிருத்துவர்களாக இருக்க இவர்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால், அதை செய்வதில்லை. இந்த மாநாடு நடக்கும் போதே, தினம்தினம் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கில் மக்கள் பல நாடுகளில் கொல்லப் படுகின்றனர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப் படுகின்றனர், தீவிரவாத தாக்குதல்களில் குரூரமாகக் கொல்லப் படுகிறார்கள். கடவுளின் பெயரால் தான் அவர்களும் அத்தகையை குரூர காரியங்களை செய்து வருகிறார்கள்.
மாநாட்டின்திட்டங்களைவிளக்கும்இறுதிஆவணம்தயாராகிறது: பம்பாய் பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ், மாநாடு செயல்பட்டு வரும் இறுதி ஆவணத்தை எவாஞ்சலைசேஷன் (மதம் மாற்றுதல்), மேய்ப்புச் சாத்தியங்கள் (மதம் மாற்றும் நடவடிக்கைகள்) தொடர்பான “எதிர்கால” ஆவணமாகவும், அவ்வாறே செயல்பாட்டிற்கு உதவும் வகையிலும் கொன்டு வர ஆவன செய்வதாக விவரித்தார்[13]. மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆசியாவில் உள்ள சமூகத்தின் பல அம்சங்களின் கூகுரல்களைக் கேட்டதாக அவர் விளக்கினார். கூறினார், உதாரணமாக, “எங்கள் ஆயர் பணியில் அதிக சிந்தனைமிக்க ஆன்மீகத்திற்கான பெரும் ஏக்கத்தை நாங்கள் கேட்டோம்”. இந்த ஆவணம், FABC பிரதிநிதிகளின் பொது ஒப்புதலைப் பெற்ற செயல்பாட்டில் உள்ளது என்று அவர் விளக்கினார். இது மற்ற ஆயர்களுடனும், பாமர உறுப்பினர்களுடனும் மேலும் விவாதிக்கப்படும். “இந்த ஆவணம் முழு ஆசியாவிலும் எதிர்கால மேய்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி ஆவணமாக எங்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றெல்லாம் கூறுவதை கவனிக்கலாம்.
வேதபிரகாஷ்
01-11-2022
[1] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM
[5] ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
[6] ஹாலோவீன் காரணமாக பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவாக இந்த விழாவில் 50 -60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக இந்த விழா வெளியில் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் இதை முன்னிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 1 லட்சம் பேர் அங்கு கூடினார்கள். அந்த மார்க்கெட் பகுதிகளில் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் ஓட தொடங்கி உள்ளனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி.. பலர் கீழே விழுந்து.. அவர்கள் மீது மக்கள் ஏறி மிதித்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பலரின் கழுத்து, முகம், நெஞ்சில் ஏறி மக்கள் ஓடிய நிலையில் அங்கு மிகப்பெரிய களேபரமே ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அதுதான் திடீரென மக்கள் ஓட காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் நேற்று 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இதில் பலியானவர்களில் 100 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
[7] n the Philippines, authorities reported at least 45 deaths so far and millions of damage due to severe Tropical Storm Nalgae, also locally dubbed Paeng.
[8] Pope’s envoy to Asian bishops meeting prays for victims of Seoul stampede, ‘Paeng’
By Roy Lagarde via CBCP News – October 31, 2022 – 5:35 PM .
[12] Agensir, Asia: Fabc’s final message, “let us hear the cry for help and justice” rising from the peoples of the continent. “Together we work for a better Asia”, 31 October 2022 @ 14:20.
[13] Vatican news, Asian Bishops: We wanted to see how our Churches can be agents of change, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 29 October 2022, 10:37.
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].
ஆசியஆயர்பேரவைக்கூட்டமைப்பின்உறுப்பினர்நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].
கொரோனாகாலத்தில்கிருத்துவம்படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.
இந்தியாவைகுறிவைக்கிறதா, ஆயர்மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரியசக்திகளின்கைகளில்அகப்பட்டுச்சிக்கிதவிக்கிறதுஆசியா. குடியரசுதீயசக்திகளின்கைகளில்உள்ளது. நோய், பஞ்சம், பட்டினிஎன்றுமனிதசமுதாயம்அழுதுவருகின்றது. மனிதர்களால்உண்டாக்கப்பட்டுவரும்அழிவுகளிலிருந்துவிடுபடவேண்டும். சர்ச்இதற்காகஎழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.
மாநாட்டின்குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion வெறும் 8 percent ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.
1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:
நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news],
ஞானஸ்தானம்பெற்றவிசுவாசிகளின்நம்பிக்கைகளுக்குஏற்றமுறையில்நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized]; மற்றும்
மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]
அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..
செய்யவேண்டியதிட்டப்பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.
[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.
[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022
[10] Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.
The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.
[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said
Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor
சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும் ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! – மதமா, ஜாதியமா, இறையியலா, எது?
இறையியல்ரீதியாககிருத்துவமதமாற்றம்தோற்றது: கிருத்துவ மிஷினரிகள் இந்தியர்களை / இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற போக்கு, கொள்கை மற்றும் சமூக அடக்குமுறை போர்ச்சுகீசியர் காலத்திலேயே கொடியமுறையில் பின்பற்றப் பட்டு வந்தது. சுதந்திரம் பெற்றப் பிறகு, கோடிக் கணக்கில் இருக்கும் சொத்துக்களை அனுபவிக்க, கத்தோலிக்கம் மற்றும் கத்தோலிக்கர் அல்லாத என்ற பிரிவுகளாகப் பிரிந்து, ஆளுமையை, அதிகாரத்தை, கட்டுப்பாடுகளை தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டனர். பெரும்பாலும், வெள்ளைக்காரர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், உயர்ஜாதி-கிருத்துவர்கள் என்று தான் பெரிய பதவிகளில் தங்களை நிலைநிறுத்துக் கொண்டு, அனுபவித்து வந்தனர். எஸ்.சி, எஸ்.டி போன்றோரை ஏமாற்றி மதம் மாற்றினாலும், மறுபடியும், சர்ச்சிற்குள் இருக்கும் இறையியல் சித்தாந்த ரீதியில், இருக்க வேண்டிய கட்டுப் பாட்டை அறிந்து-புரிந்து கொண்டனர். “விடுதலை இறையியல்” எல்லாம் பொய்த்துப் போய், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் முடிந்தன. இதனால், சர்ச்சில் இருக்கும் அத்தகைய இறையியல்-ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தனர். கத்தோலிக்கக் கிருத்துவ ஆதிக்கத்தினர் மட்டும் ஆதிக்கம், பணம், அதிகாரம் முதலியவற்றை ஐத்துக் கொண்டு, இந்திய ஜாதியம், வர்ணாஷ்ரமம் என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால், உண்மை வெளிவந்தது. சூசை தீர்ப்புக் கூட அவர்களது முகமூடியைக் கிழித்தது. இருப்பினும், அம்பேத்கரின் ஆணையினையே எதிர்க்க முற்பட்டனர்.
பட்டியல்ஜாதியினர்ஜனாதிபதிஆணை 1950ல்திருத்தம்கொண்டுவரமுயற்சி: பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் உள்ள பிரிவை மாற்ற வேண்டும் என்று போலித் தனமாக போராட்டங்களை நடத்தி, திசைத் திருப்பப் பார்த்தது. ஆனால், அது இந்துக்களுக்கு என்பது சட்டரீதியாக எல்லோருக்கும் தெரியும். இதனால், எஸ்.சி மற்றும் மதம் மாறிய எஸ்.சி-கிருத்துவர்களிடையே துவேசம், எதிர்ப்பு, மோதல்கள் கூட ஏற்பட்டன. இருப்பினும், ஆகஸ்ட் 10 அன்றை கருப்புநாள் என்று கொண்டாடுவோம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். இதனை, பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை என்றாலும், தங்களது அரசியல், பலம், பணம், அனைத்துலக சக்தி முதலியவற்றின் மூலம், இந்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.. பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு 2/3 எம்.பிக்களின் ஆதரவு தேவை. ஒரு முறை, பிஜேபி எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து, கையெழுத்துப் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எஸ்ரா சற்குணத்திற்குப் பிறகு, இன்னொரு எஸ்.சி கிருத்துவர் பிஷப் ஆவது, அடக்கித் தான் வாசிக்கப் பட்டுள்ளது.
சி.எஸ்.ஐ / தென்னிந்தியதிருச்சபைக்குஎஸ்சி / தலித்ஆயர் / பிஷப்ஆகியுள்ளார்: தென்னிந்திய திருச்சபையின் அங்கமாக மதுரை- இராமநாதபுரம் மண்டல 7வது பேராயராக பாதிரியார் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் 17-07-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்[1]. மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜோசப்பின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவா் அண்மையில் ஓய்வு பெற்றார்[2]. இதைத்தொடா்ந்து புதிய பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் []Jeyasingh Prince Prabhakaran தோ்ந்தெடுக்கப்பட்டார். இவ்விழாவில், சிறப்புத் திருப்பலி ஆராதனையைத் தொடா்ந்து மதுரை-ராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார்[3]. தென்னிந்திய திருச்சபையின் தலைமைப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசலம் புதிய பேராயருக்கு அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார்[4]. முன்னதாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் மதுரை இராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் முறைப்படி ஆராதனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சபையின் பேராயர்கள் அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் மோதிரத்தை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்த 11 பேராயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்சி / தலித்பிரச்சினைகிருத்துவமதஉள்–விவகாரம்ஆகிவிட்டது: வின்சென்ட் மனோஹரன் ஒரு தலித் பிஷப்பாக பதவி ஏற்பதை பாராட்டி, அதே நேரத்தில், சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[5]. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இவ்விசயத்தில் போராட வேண்டும் என்று வற்புருத்தி பேசினார்[6]. ஏற்கெனவே மற்ற சர்ச்சுகளிலும் இப்பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் மாறி எஸ்சி அந்தஸ்து இழப்பதால், பல கிருத்துவர்கள் அதம் மாறியும், சலுகைக்காக, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சினை ஏர்ப்ட்டு மோதல்களில் முடிகின்றன. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், ஏற்கெனவே எண்ணிக்கை ரீதியில் சலுகைப் பெற்று வருவதால், “உள்-ஒதுக்கீடு” கூட தேவையில்லை என்று அறிவித்துள்ளதை ஞாபகத்தில் கொள்ளலாம். எனவே, இந்துக்களாக இருந்தே எஸ்சி சலுகைகளை அனுபவிக்கலாம், சமூகப் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம் என்ற கருத்து கூட வலுப்பட்டு வருகிறது.
சர்ச்சிற்குள்இருக்கும்ஜாதியப்பிரச்சினை– மே 2022: தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் மருத்துவர் மேரிஜான் தலைமையில் மே 15, 2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இயக்கத்தைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான் கூறியதாவது[7]:- “தலித்கிறிஸ்தவர்கள்பிரச்சனைதமிழகத்தில்தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாகதிருச்சபையில்இந்தஇயக்கம்சமத்துவம்சமஉரிமைபெறபோராடிக்கொண்டிருக்கிறது. திருச்சபைஅதிகாரிகள்இதுவரைதீர்வுகாணவில்லை. இந்தியஆயர்பேரவை, இந்தியகத்தோலிக்கபேரவையும்அறிவித்தகொள்கைப்படிதலித்கிறிஸ்தவர்களுக்குகல்விநிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர்பதவிகளில் 64% வழங்காமல்இன்றும்ஏமாற்றிவருகின்றனர். சமீபத்தில்தலித்கிறிஸ்தவர்கள்இதுவரையாரையும்நியமிக்கவில்லைஅதைஎதிர்த்துப்போராடிக்கொண்டிருக்கிறோம். தற்போதுகும்பகோணம்மற்றும்தஞ்சாவூர்மன்றமாவட்டத்தில்காலியாகஉள்ளஆயர்பதவிக்குதலித்ஆயிரைநியமனம்செய்யவேண்டும், தலித்கிறிஸ்தவர்விடுதலைஇயக்கம்அரசியல்சார்ந்தநடவடிக்கையில்ஈடுபடுவதுஎனமுடிவுசெய்யப்பட்டது,” இவ்வாறு கூறினார்[8].
மதமா, ஜாதியமா, இறையியலா, எது?: இந்நிலையில் தான், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருமவளவனை ஆதரித்துப் பேசியதை வைத்து, “குமுதம் ரிப்போர்ட்டர்” இக்கதையினை உருட்டியுள்ளது[9]. கிருத்துவ மதத்தில் மாறியும் சமத்துவம் ஏற்படவில்லை என்றால், அது அம்மதத்தின் பிரச்சினை ஆகிறது. ஏனெனில், பைபிளின் படி சமத்துவம் கிடையாது, எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. மரம் வெட்டுகிறவன், மாம் வெட்ட வேண்டும்; தண்ணீர் இழுத்த்க் கொட்டுகிறவன், அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன………. ஆரம்பத்திலிருந்தே, கிருத்துவத்தில் வேறுபாடுகள், சமூகக் கட்டமைப்புகள், இந்திய-ஜாதியத்தை விட இறுக்கமாக கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனை உலகெங்கும், எல்லா கண்டங்களிலும் பார்க்கலாம். வெள்ளையர் மற்றவர்களை அல வழிகளில் அடக்கி ஆண்டுதான், வருகிறார்கள். கருப்பினத்தவர்கள் தங்களது உழைப்பினை கடினமான காரியங்களில் காட்டித்தான் முன்னேறியுள்ளனர், பிரபலமாகியுள்ளனர். தங்களது, சமூக நிலை அல்லது சலுகை வைத்து முன்னேறி விடவில்லை. இன்று ஐ.டி-தொழிற்நுட்பம் என்றெல்லாம் பார்த்தாலும், வெள்ளையர் அல்லாதவர்கள் முதலாளிகளாக இருப்பவர் சிலரே. எனவே, இந்திய, அதிலும், தமிழகத்து நிலையில், இப்பிரச்சினையை திசைத் திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு எது தேவை என்பதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜாதிதான், எஸ்சி-அந்தஸ்து தான், இல்லை மதம் தான் என்றால், அவ்வாறே நேர்மையாக நம்பிக் கொண்டு இருக்கலாம். கடவுளை, முன்னோர்களை, பெற்றோர்களை, சொந்தக்காரர்களை, சமூகத்தினரை ஏமாற்ற வேண்டாம்.
[3] தினமணி, தென்னிந்தியதிருச்சபையின்மதுரை–ராமநாதபுரம்திருமண்டலபேராயா்பதவியேற்பு, By DIN | Published On : 17th July 2022 11:08 PM | Last Updated : 17th July 2022 11:08 PM.
[5] First Dalit Bishop is appointed for Madurai – Ramnad, CSI Diocese, Tamilnadu< By Dalit Christian Digest -July 18, 2022.
[6] The National Dalit Christian Watch (NDCW), a National Platform which is committed to cleanse the Church and Society by annihilating caste and its inhuman oppressive dynamics mainly to ensure equality, justice and rightful space for Dalit Christians within Church and its Institutions, looks forward to the serious interventions by the newly appointed Bishop, who held several positions in this Diocese already, not only to perform his pastoral services but also through his prophetic voice and deeds to uphold justice and peace both within Church and Society, especially for the dignified life and rightful space of the Dalit Christians.
கோவாகடற்கரைமாநிலம்எல்லாமேஉண்டுபோலும்: நாடு முழுவதும் பரவலாக மதமாற்றம் நடந்து வருகிறது என்பது தெரிந்த விசயமே. குறிப்பாக, கடற்கரை ஏரியாக்களில் வசிக்கும் கிராம மக்களை குறிவைத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவது கோவா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர்கிறது. இதேபோல, இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனால், அவர்களது வழிமுறை அதிரடியாக, வேறு முறைகளிலும் இருக்கும். இதன் காரணமாக, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது, ஆனால் மத்திய-மாநில அரசுகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆகவே, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது, சில மாநிலங்களில் சட்டமும் அமூலில் உள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடை தொடர்பாக, சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கத்தோலிக்கப்பாதிரியின்பிரச்சாரங்கள்: கோவா மாநிலம் கத்தோலிக்கக் கிருத்துவத்திற்குப் பெயர் போனது. இடைக்காலத்தில், போர்ச்சுகீசியர் கைப் பற்றிக் கொண்டு, இந்துக்களை மதம் மாற்றினர். அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் அவர்கள் உள்ளனர். அரசியல், அதிகாரம் முதலியவற்றிலும் ஆதிக்கம் கொண்டுள்ளனர். பனாஜியைச் சேர்ந்தவர் டோமினிக் டிசோசா (Dominic D’Souza ). கிறிஸ்தவ பாதிரியாரான இவரது மனைவி ஜோன் மார்கெரினாஸ் (Joan Mascarenhas). இருவரும் வடக்கு கோவாவிலுள்ள சியோலிம் கிராமத்தில் கிருத்துவ பிரச்சாரம் செய்து வருகிறார். எப்பொழுதும் பாடல்கள், கொண்டாங்கள் என்று அதிரடி ஆர்பாட்டங்களுடன் பிரச்சார செய்வது வழக்கம்[1]. ஒலிபெருக்கிகளை வைத்து செய்யும் அட்டகாசங்களினால், அங்கிருக்கும் கிருத்துவர்களாலேயே பொறுக்க முடியாமல், புகார் கொடுத்துள்ளனர்[2]. அதற்காக முறையாக அனுமதியும்பெறுவதில்லை. முந்தைய முதலமைச்சருடன் தொடர்பு இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டார்.
பேயோட்டிய தம்பதியர்: ரோமன் கத்தோலிக்க சமய மரபில் பேயோட்டுதல் ஒரு சடங்காகும் ஆனால் ஆனால் பாப்டிசம் அல்லது கன்ஃபெஷன் போலின்றி புனிதமானது கிடையாது ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவது கிடையாது. இப்பொழுது இது வியாபாரம் ஆகிவிட்டது. நம்புகிறவர்கள் வரத்தான் செய்கிறார்கள். புனிதச் சடங்கைப் போலின்றி பேயோட்டுதலின் “ஒருங்கிணைப்பும் விளைவுத் திறனும் மாறாத சூத்திரம் அல்லது அறிவுறுத்தப்படும் வரிசை முறையான செயல்களைப் பயன்படுத்துவதைப் பின்பற்றுல்லை. தகுதியுடைய, சட்டரீதியான தேவாலய அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மற்றும் பேயோட்டுபவரின் நம்பிக்கை”ஆகியவையாகும். இப்போதும் கூட தற்போதைய அனைத்து பேயோட்டல் சடங்குகளிலும் கத்தோலிக்க பேயோட்டல் மிகக் கடுமையான, ஒழுங்கமைந்துள்ள ஒன்று என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம். தேவாலயத்தின் கெனான் சட்டப்படி, அதிகாரப்பூர்வமான பேயோட்டல் செயல்களை அதற்கென நியமிக்கப்பட்ட பாதிரியார் (அல்லது உயர் மதகுரு) மட்டுமே செய்ய முடியும் என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம், வீடியோக்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவரும் வெளுத்து வாங்குகிறார்.
சாம–தான–பேத–தண்டமுறைகள்கையாண்டது: பாதிரி மற்றும் மனைவி, ஜோடியாக அட்டகாசமாக, பாடல்களைப் பாடிக் கொண்டு கிராம சர்ச்சில் ஊழியம் செய்வார். கூட்டம் கூட்டுவார். இலவசமாகப் பொருட்களை கொடுப்பார். பேஸ்புக் போன்றவற்றிலும் அத்தகையப் புகைப்படங்களைப் போட்டுக் கொண்டு, விளம்பரம் செய்து கொள்வார். பலவித உடைகளை அணீந்து வலம் வருவார். சாமியார் போன்றூ தலைமுடி வளர்த்து, தொங்க விடுவார். சலிகோவா கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாகவும் கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர்[3]. டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாக கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக இரண்டு பேர் மபுசா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்[4]. குறிப்பாக பிரகாஷ் கோப்ரேகர் (Prakash Khobrekar) என்பவர், ஜோன் மார்கெரினாஸ், பலவிதமாக பேசி, ஆசை வார்த்தைகள் பேசி, சைகைகள் காட்டி ஏமாற்றி மதம் மாற்றினார் என்று விளக்கினார்[5]. அந்த நபரின் பெயர் வெளிப்படுத்தப் படவில்லை. மேலும் இந்துமதம் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். புகார் கொடுத்தால் ……..தகாத வார்த்தைகள் சொல்லி என்று மிரட்டியும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்[6]. இப்பொழுதெல்லாம், புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை என்று போலீஸார் கொள்கை பின்பற்றுவது தெரிகிறது. குற்றமே செய்தாலும், யாரும் புகார் செய்யவில்லை என்றால் அமைதியாக இருப்பார்கள் போலும்.
புகாரின்பேரில்கைதுசெய்யப்பட்டது: இதனையடுத்து அவர்கள் மீது முறையற்ற மருந்துகள் பிரயோகம் மற்றும் விளம்பரசட்டப் பிரிவுகளின் கீழ் [the Drugs and Magic Remedies (Objectionable Advertisement) Act.] இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன[7]. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் மத உணர்வுகளை சீண்டும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[8]. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பனாஜி அருகேயுள்ள சலிகோவா கிராமத்தில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்[9]. பிறகு முறையாக நீதிபதியின் முன்பாக ஆஜர் படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[10]. ஆனால் 27-05-2022 அன்று பெயிலில் வெளியே வந்து விட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சரும் எச்சரிக்கை விட்டுள்ளார். ஆக அரசியல் நெருக்கடியும் வெளிப்படுகிறது. பிறகு என்ன, அல்லேலுய்யா என்று கத்திக் கொண்டு, வேலையை ஆரம்பித்து விடுவார்.
வேதபிரகாஷ்
28-05-2022
[1] Times of India, Siolim couple arrested for ‘conversions’, TNN / Updated: May 27, 2022, 07:46 IST.
[2] Domnic is not new to controversy and locals at Sodiem have been objecting to his activities frequently at the 5 Pillars Christian Church. The villagers had earlier alleged that Domnic was using loudspeakers without permission and was disturbing peace in the village. He would disturb prayer services at the local Catholic church, villagers had said. Loudspeakers and other sound system equipment had subsequently been seized by police from Domnic’s prayer house. He had, however, maintained that he had been running prayer activities for nearly two decades at his church.
[5] The Hindutan Times, Preacher couple arrested for alleged religious conversion in Goa, Published on May 26, 2022 11:22 PM IST.
[6] According to the complaint filed by one Prakash Khobrekar, D’Souza and Mascarenhas had induced an unnamed person to give up his religious belief and convert to the religion professed and propagated by them. “All the accused persons deliberately made gestures by uttering words, acts, threatened the complainant with the intention to hurt his religious sentiments and lured the complainant to accept the religion professed and propagated by them,” Khobrekar said in his complaint.
கடந்த 10 ஆண்டுகளில்ஆணையம்செயல்படாத்தால், சிறுபான்மையினருக்குஎதிரானநடைபெற்றகுற்றங்கள்குறித்ததரவுகளைஎதுவும்இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில்கடந்தஇரண்டுஆண்டுகள்மட்டும்நீர்நிலைகளைசரிசெய்யரூ.3000 கோடிசெலவுசெய்துள்ளனர். ஆனால்தற்போதுவிரைவாகமீட்புப்பணிகள்நடைபெறுகிறதுஎன்றால்கடந்தஐந்துமாதத்தில்திமுகஅரசுஎடுக்கப்பட்டநடவடிக்கைகள்தான்தேர்தலுக்குமுந்தையஇரண்டுஆண்டுகள்ஒதுக்கப்பட்ட 3000 கோடிரூபாய்சென்னையில்எங்குசெலவழிக்கப்பட்டது. பீட்டர்அல்போன்ஸ்பேட்டிசாத்தான்குளம்தந்தைமகன்கொலைவழக்கில்நீதிமன்றத்தில்வழக்குசென்றுகொண்டிருப்பதால், ஆணையம்விசாரணையைதொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில்ஆணையம்செயல்படாத்தால், சிறுபான்மையினருக்குஎதிரானநடைபெற்றகுற்றங்கள்குறித்ததரவுகளைஎதுவும்இல்லை. பொதுவாகஎந்தமதங்களிலும்புறம்போக்குஇடங்களில்தேவாலயங்களையும், வழிபாட்டுக்கூடங்களையும்அமைக்காதீர்கள். புறம்போக்குஇடத்தில்கட்டிவிட்டுஅனுமதிகேட்கும்போது, அரசால்அனுமதிகொடுக்கமுடியாது. பட்டாஇடங்களில்வழிபாட்டுத்தலங்கள்கட்டுவதாகஇருந்தால், அதற்கானஅனுமதியைமாவட்டஆட்சியர்கள்விரைந்துஅளிக்கவேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.
நிலமோசடி, ஆக்கிரமிப்புசெய்வதில்ஒன்றும்தவறில்லை–சொல்வதுஎஸ்ராசற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காகஒருசிறியசர்ச்சைக்கட்டஇப்படிபுறம்போக்குநிலத்தைவளைத்துப்போடுவதில்தவறுஇல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.
திமுகசர்ச்சுகளைபெருக்குவதற்கு–அதாவதுஅதிகமாக்குவதற்குஉதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!
இந்துவிரோதிஎஸ்டாசற்குணத்தின்பேச்சு–ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.
கிருத்துவர்களுக்கு“பயிற்சிபட்டறை”நடத்தியதுபொன்றிருந்தகூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!
[1] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.
[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!
M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.
[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.
[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!
[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்துமதம்குறித்துஅவதூறுபேச்சு ! மதபோதகர்எஸ்றாசற்குணம்மீதுவழக்குப்பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST
பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)
29-03-2022 அன்றுநடந்தசிறுபான்மையினர்நலன்தொடர்பானகலந்தாய்வுக்கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வழிபாட்டுத்தலங்களுக்குஅனுமதிவேண்டும்என்பதேபெரும்பாலானசிறுபான்மையினமக்களின்கோரிக்கையாகஉள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர்மக்கள்நலனுக்காக, கோவைஉள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குதனியாகஅதிகாரிகள்நியமிக்கப்படஉள்ளனர். வழிபாட்டுத்தலங்களுக்குஅனுமதிவேண்டும்என்பதேபெரும்பாலானசிறுபான்மையினமக்களின்கோரிக்கையாகஉள்ளது. இந்தகோரிக்கைமுதல்வரின்கவனத்துக்குஎடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில்நடந்தமாவட்டஆட்சியர்கூட்டத்தில்மதமோதல்களைஏற்படுத்தும்நபர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கமுதல்வர்அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?
தனிப்பட்டபிரார்த்தனை, வழிபாடுகளுக்குபிரச்சினைஇல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள்அவர்களின்இல்லங்களிலிருந்தோ, சிலதனிஇடத்தில்இருந்தோவேண்டுதல்கள்செய்வதற்குஎவ்விதஇடையூறுகளும்இருக்காதுஎன்றஉறுதியைமாவட்டஆட்சியரும்காவல்கண்காணிப்பாளரும்அளித்துள்ளனர். அதேசமயம், சிறுபான்மையினமக்கள்ஆராதனை, வேண்டுதல்என்றபெயரில்ஒலிப்பெருக்கிவைப்பதைதவிர்க்கவேண்டும். சமூகஅமைதிக்குஇடையூறுசெய்யவேண்டாம்என்றஆலோசனையும்அவர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. கோவைமாவட்டத்தில்எந்தஅளவுக்குசமூகஅமைதிநிலவுகிறதோ, அந்தஅளவுக்குஇம்மாவட்டத்தின்பொருளாதாரமும்வளர்ச்சிபெறும். சமூகஅமைதியைசீர்குலைக்கவும், மக்களைமதரீதியாகபிளவுஏற்படுத்திஅரசியல்செய்யவும்சிலர்முயற்சிக்கின்றனர். அவர்களுக்குமுதல்வர்எச்சரிக்கைவிடுத்துள்ளார். தமிழகத்தில்நடப்பதுதிராவிடமாடல்ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.
29-03-2022 அன்றுநடந்தஆலோசனைக்கூட்டத்தில்சிறுபான்மையினமக்கள்வசிக்கும்பகுதிகளில்அடிப்படைவசதிகள், பள்ளிக்கூடம், வங்கிகிளைவேண்டும்என்றகோரிக்கைகள்வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்டஆட்சியர், மாநகராட்சிஆணையாளர்அதற்கானநடவடிக்கைகளைமேற்கொள்வர். சிறுபான்மைஇனமக்களுக்காகமத்தியஅரசுசெயல்படுத்தவேண்டியதிட்டங்களில்சிறுபான்மையினமக்கள்வசிக்கக்கூடியசிலபகுதிகள்விடுபட்டுஉள்ளது. அரசுசார்பில்அமைக்கப்பட்டுள்ளமயானம்மற்றும்எரியூட்டும்மேடைஆகியவைஅனைவருக்கும்பொதுவானது. இங்குசெல்கின்றவர்கள்மதஅடையாளங்களைதுறந்துவிட்டுதான்செல்லவேண்டும். முதல்வரின்எண்ணமும்அதுதான். மதத்தின்அடிப்படையில்சடங்குகளைசெய்யவேண்டும்எனவிரும்புபவர்கள்அவர்கள்சொந்தசெலவில்கல்லறைகளைவைத்துக்கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.
“அரசுபுறம்போக்குநிலத்தில், சர்ச், மசூதிகட்டிஅனுமதிகேட்டால்கிடைக்காது; தனியார்இடத்திலும், கட்டிமுடித்தபின்அனுமதிகேட்டுஅரசைசங்கடப்படுத்தக்கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையினமக்களுக்குஉரிமைஇருப்பதுபோல், கடமைகளும்உள்ளன. மாற்றுசமூகத்தினருடன்இணைந்துஅவர்களைவாழவைக்கவேண்டும்; நாமும்அவர்களால்வாழவேண்டும். பிறசமூகமக்களுக்கும்உதவிகளைசெய்து, மனிதநேயம்மிகுந்தசமுதாயமாகமாற்றவேண்டும். ஜாதி, மதத்தைமறந்து, எல்லாரும்தமிழர்களாகஒன்றிணைந்து, எழுந்துநிற்கவேண்டும்.அரசுபுறம்போக்குநிலத்தில், சர்ச், மசூதிகட்டி, அனுமதிகேட்டால்கிடைக்காது; தனியார்இடத்திலும், கட்டிமுடித்தபின்அனுமதிகேட்டுஅரசைசங்கடப்படுத்தக்கூடாது. கலெக்டரிடம்முறையானஅனுமதிபெற்றபின்கட்டவேண்டும். மற்றமதத்தினர்வசிக்கும்பகுதிகளுக்குசென்று, மதபிரசாரம்செய்வதுபோன்றபணிகளைதவிர்க்கவேண்டும். சிறுபான்மையினமக்களின்கோரிக்கையின்மீது, மாவட்டநிர்வாகம், 30 நாட்களுக்குள்நடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்யாருக்கும்இடைஞ்சல்இல்லாமல்வழிபாடுநடத்துவதற்குசமூகஅனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
ஊடகங்களின்எதேச்சதிகாரஅழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை, நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது. நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
லாவண்யா, லாவண்யாகுடும்பத்தினரின்முகங்களைபார்த்துவிடலாம், ஆனால், சகாயமேரியின்முகத்தைப்பார்க்கமுடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.
ஜெனின்சகாயமேரி, ஹாஸ்டல்வார்டன் 07-02-2022 அன்றுபிணையில்வெளியேவந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3]. இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.
பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].
ஜாமீன் (Bail) முன்ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.
பச்சமுத்துபாரிவேந்தர்ஆனதுபோல, அவரதுஊடகங்களும்மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14]. அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.
[11] கலைஞர் செய்தி, “அண்ணாமலையின்அசிங்கஅரசியல்.. பா.ஜ.க. அரசியல்செய்யமாணவிமரணம்தான்கிடைத்ததா?” : முரசொலிகடும்தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM
[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022