Posts Tagged ‘உயிர்’

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

மே 15, 2023

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

கென்யாவில் பட்டினி வழிபாடு நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல்  26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].

பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7].  அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8].  பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

15-05-2023


[1] தினமலர், கென்யாவில் பட்டினி வழிபாட்டில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு, மாற்றம் செய்த நாள்: மே 15, 2023 05:33

[2] https://m.dinamalar.com/detail.php?id=3320972

[3] ஏபிபிலைவ், கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!,By: பாண்டிம்மா தேவி | Updated at : 24 Apr 2023 12:25 PM (IST);  Published at : 24 Apr 2023 12:25 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/world/to-meet-jesus-47-cult-members-in-kenya-allegedly-starve-to-death-5-facts-113425

[5] தினத்தந்தி, கடவுளை காணலாம்கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு, தினத்தந்தி மே 15, 6:32 pm.

[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.

https://theconversation.com/kenya-cult-deaths-a-new-era-in-the-battle-against-religious-extremism-205051

[7] https://www.dailythanthi.com/News/World/god-can-be-found-atrocity-in-kenya-201-bodies-including-children-were-dug-up-and-recovered-964949

[8] தந்தி டிவி, கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு – 201 பேர் பலி, By தினத்தந்தி, 15 மே 2023 2:02 PM.

[9] https://www.thanthitv.com/latest-news/desperate-to-see-god-in-person-201-people-died-186330

[10] குமுதம், கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் – 213 பேரை தேடும் பணி தீவிரம், S. Joseph Raj, மே 15, 2023.

https://www.kumudam.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-213-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

[11]

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

ஜனவரி 4, 2021

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

மனைவி மதம் மாறியதால், பிரிந்து போன கணவர்: திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரசரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா (வயது 38). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கணவர் பால்ராஜ் – இவர்களுக்கு ரட்சகன் (11), மெர்சி (8) என குழந்தைகள் உள்ளனர். 2018ல் இந்திரா, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறார்[1]. இதனால் பால்ராஜுக்கும் அன்னை இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது[2]. கிறிஸ்தவம் எவ்வாறு கணவன்  – மனைவி உறவுகளை உடைக்கிறது என்பது வெளிப்படுகிறது. இந்திராவிடமிருந்து பிரிந்த பால்ராஜ், தேனி மாவட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், அன்னை இந்திரா, தனது இரண்டு குழந்தைகளுடன், திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஷரி காலனியில் வாடகை வீட்டில் வசித்துவந்திருக்கிறார். உடல் நிலை சரியில்லாத அன்னை இந்திராவுக்கு, ஜெபக் கூட்டங்கள் நடத்தி வரும் எரியோடு வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக அன்னை இந்திராவுடன் சுதர்சனனும் தங்கியிருந்துள்ளார்.

பாதிரி ஆன்டர்சன் வாசுகியோடு, வீட்டிற்கு வந்து தங்கியது: இவர்களுடன், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனம் ஆகியோர் அதே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். கணவர் பிரிந்து வாழும் நிலையில், பாதிரியை வீட்டில் தங்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக, 2019ல்  விருப்ப ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் விண்ணப்பித்தார் அன்னை இந்திரா. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, அவரை திண்டுக்கல்லில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்தார்.கடந்த அக்டோபர் / நவம்பர்[3] 16-ம் தேதி 2020 மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு வேற்பட்ட தகவல்களைக் கொடுக்கின்றன. 26-ந்தேதி / 31ம் தேதி பணியில் சேர வேண்டும். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பாத அன்னை இந்திராவைப் பற்றி விசாரிக்க, அவரது வீட்டுக்கு இரண்டு பெண் காவலர்கள் சென்றிருக்கிறார்கள்.

பூட்டிய அறைக்குள் பிணம் இருந்தது: பெண் போலீஸார் வந்த போது, வீட்டில் உள்ளவர்கள் அன்னை இந்திரா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார்கள். வீட்டில் இல்லை எனும் கூறினர். மேலும், வீட்டின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு, அதிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாடிக்கொம்பு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்[4]. அருகில் உள்ளவரும் அவ்வாறே புகார் கொடுத்ததாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார், பூட்டிய அறையைத் திறந்து பார்த்தனர்[5]. அங்கே, இறந்தநிலையில் அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது[6]. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும், அவர் 10 நாள்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது[7]. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது[8]. அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் மத பிரசாரம் செய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன[9]. அதாவது, அந்த அளவுக்கு, மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், பிரார்த்தனை செய்தது – 07-2-2020 அன்று இறந்தது: அதைத் தொடர்ந்து சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கடந்த டிசம்பர் 7-ம் தேதி 2020 அன்று படுக்கையிலிருந்த இந்திரா சுயநினைவை இழந்திருக்கிறார். ஜெபம் சொல்லி சரிசெய்வதாகக் கூறி, மதபோதகர் சுதர்சன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார். கண்விழிக்காத உடலிலிருந்து இரண்டு நாள்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. அப்போதும், அன்னை இந்திரா உயிர்தெழுவார் என்றும், இயேசு ரட்சிப்பார் என்றும் கூறியிருக்கிறார் சுதர்சன். மேலும், இரண்டு குழந்தைகள், சகோதரி வாசுகி ஆகியோர் தினமும் இந்திராவின் உடல் அருகே அமர்ந்து ஜெபம் சொல்லிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குழந்தைகளையும், அவ்வாறு நம்ப வைத்து, தாய் இறந்ததை மறைத்தது, திகைப்பாக இருக்கிறது.

தாய் இறந்ததை அறியாமல் இருந்த பாதிக்கப் பட்ட குழந்தைகள்: உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முயன்றபோது, அதை வாசுகியும் சுதர்சனும் தடுத்திருக்கிறார்கள். இதுவும், அவர்களின் அடிப்படைவாதம் மற்றும் மூடநம்பிக்கையினை எடுத்துக் காட்டியது. “அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் உயிர்தெழுவார்,” எனக் கூறியிருக்கிறார்கள். இருவரையும் சமாதானம் செய்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் தனது தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது[10].  குழந்தைகளையும் அந்த அளவுக்கு மூளைசலவை செய்திருப்பது தெரிகிறது.

01-01-2021 அன்று பாதிரி மற்றும் ஆதரித்த வாசுகி கைது: இதனையடுத்து வாசுகி மற்றும் சுதர்சனை போலீசார் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகியையும் மதபோதகர் சுதர்சனையும் போலீஸார் 01-01-2021 அன்று கைதுசெய்தனர்[11]. மேலும், 176வது பிரிவு பொது ஊழியருக்கு தெரிவிக்க வேண்டிய கருத்தை தெரிவிக்காமல் மறைத்தது, பிரிவு 304 (A) (கொலை ஆகாத மரணம்) சிகிச்சை அளித்தால் உயிர் பிழைத்து விடுவார் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தது, பிரிவு 406 நம்பிக்கை துரோகம் செய்தல், பிரிவு 420 ஏமாற்றி பொருளைப் பறிப்பது ஆகிய நான்கு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்[12]. அன்னை இந்திராவின் குழந்தைகளைத் தற்காலிகமாக காப்பத்தில் சேர்ந்த போலீஸார், அவர்களின் தந்தை பால்ராஜுக்குத் தகவல் தெரிவித்தனர். உயிர்தெழுவார் என்று கூறி, இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில்வைத்து ஜெபம் சொன்ன சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்டர்சன் பாதிரி குடும்பத்தைக் கெடுத்து, குழந்தைகளையும் பாதித்துள்ளான்: இறந்த பிறகும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு இருந்தது கவனிக்கத் தக்கது. தங்களது நம்பிக்கை தவறு என்பதை அறிந்தும், மத-அடிப்படைவாத சிந்தனைகளால் குடும்பத்தை ஆன்டர்சன் பாதிரி பிரித்துள்ளான். அந்த வீட்டிலேயே வாழ்ந்து, குழந்தைகளை மூளைசலவை செய்துள்ளான். அதனால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது “தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்தோடு, தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காமல், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். வீட்டு வாசலில் பைபிள் வசனங்களை எழுதி வைத்து, அந்த வீட்டை ஒரு ஜெபகூடம் போல மாற்ற முயற்சித்துள்ளான். இவ்வாறு தம்பதியரைப் பிடித்து, குழந்தைகளை பாதித்து, மருத்துவமனையில் சேர்க்காமல், ஜெபம் என்று சொல்லி வீட்டிலேயே வைத்து, ஒரு பெண்ணை சாகடித்து, குழந்தைகளிடமும் “தாய் உயிர்த்தெழுவாள்,” என்று நமிக்கையை வளர்த்து, ஒரு குடும்பத்தையே நாசமாக்கியுள்ளான். மூடநம்பிக்கை என்று பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள் இந்துமத நம்பிக்கைகளைக் கடுமையாக, கொடுமையாக, ஏன் குரூரமாக்க விமர்சித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய குரூரங்களைக் கண்டு கொள்வதில்லை. இங்கெல்லாம் பகுத்தறிவு மழுங்கி விடுகிறது, நாத்திகம் நமைத்து போய் விடுகிறது, விஞ்ஞான சிந்தனை உளுத்து விடுகிறது. இதைப் பற்றி யாரும் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. ஆகவே, இந்துக்கள் இத்தகைய அடிப்படைவாத கிறிஸ்தவர்கள், கிருக்கு-பாதிரிகள் முதலியோருட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2021


[1] மாலைமலர், பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை, பதிவு: ஜனவரி 01, 2021 08:56 IST.

[2]  https://www.maalaimalar.com/news/district/2021/01/01085655/2212939/Tamil-News-police-investigation-to-female-police-body.vpf

[3]  “நவம்பர் 16-ந் தேதி” என்கிறது தினத்தந்தி. 

[4] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலுயா“.. பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் ஜெபம்.. மொத்தம் 20 நாள்.. அலறி அடித்து ஓடிய போலீஸ், By Hemavandhana

| Updated: Friday, January 1, 2021, 15:34 [IST]

[5] https://tamil.oneindia.com/news/dindigul/dindigul-female-police-deadbody-inside-locked-room/articlecontent-pf511963-407579.html

[6] தினமணி, 20 நாள்களுக்கு முன்பு இறந்த பெண் காவலர் சடலத்துடன் வீட்டிற்குள் ஜெபம்: திண்டுக்கல்லில் பரபரப்பு, By DIN | Published on : 31st December 2020 07:23 PM

[7] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/dec/31/prayer-inside-the-house-with-the-body-of-a-female-police-who-died-20-days-ago-3534963.html

[8] தினத்தந்தி, திண்டுக்கல் அருகே பரபரப்பு; பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்; உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை; பாதிரியாரிடம் விசாரணை, பதிவு: ஜனவரி 01, 2021 09:59 AM

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/01/01095932/Unrest-near-Dindigul-Female-police-corpse-inside-locked.vpf

[10] விகடன், `ஓய்வில் இருக்கிறார், உயிர்த்தெழுவார்’ –இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர், எம்.கணேஷ், ஈ.ஜெ.நந்தகுமார், Published: 02-01-2021 at 11 AM, Updated: 02-01-2021 at 11 AM.

[11] https://www.vikatan.com/social-affairs/crime/female-police-was-kept-in-home-after-she-lost-consciousness-dies

[12]  பிபிசி.தமிழ், உயிர்த்தெழுவார்என்று நம்பி சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்தவர்கள் கைது, 3 ஜனவரி 2021

https://www.bbc.com/tamil/india-55519884

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

ஜனவரி 1, 2021

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

தலைமை பெண் காவர், குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தது: தேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ் (நக்கீரன்) /  பால்ராஜ் (என்கிறது NEWS18 TAMIL)[1]. இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்தார்[2]. மகளின் பெயர் மெர்சி என்று குறிப்பிட்டு, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடப் படவில்லை. குழ்ந்தைகளின் பெயர்கள் இந்து0கிறிஸ்தவ பெயர்களாக இருப்பதனால், ஒருவேளை மாற்றுமத திருமணத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு த்னித்து வாழ்கிறார்கள் போலும். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[3] என்று நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.


கிறிஸ்தவரான இந்திரா நோய்வாய்ப்பட்டது, சிகிச்சைப் பெற்றது, விடுமுறையில் சென்றது: இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்திராவின் சகோதரியான வாசுகியும் இவர்களுடனேயே தங்கிவிட்டார். ஏற்கனவே சிறுநீரகத் தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த காவலர் இந்திரா, காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், அவர் விருப்ப ஓய்வு பெறுவது குறித்து எந்தத் தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 16.10.20 முதல் அன்னை இந்திரா மெடிக்கல் விடுமுறையில் சென்றுள்ளார். 25.12.20 அன்று அவர் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும்[4]. ஆனால் அவர் 31ஆம் தேதி வரை பணிக்கு திரும்பாததால், அவர் அடிக்கடி விடுப்பு எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த 8-ஆம் தேதி இந்திராவின் வீட்டிற்கு, போலீஸார் / இரு பெண் காவலர்கள் சென்றுள்ளனர்[5].


விசாரிக்க வந்த போலீஸார், இந்திராவின் பிணத்தைக் கண்டது: ஆனால், இந்திரா வீட்டில் இல்லை எனக்கூறி இந்திராவின் குழந்தைகளும் அவரது சகோதரியும் போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகிலிருந்தோர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார், இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழுகிய உடல் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள் என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், ‘எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்’ என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார். உடல் மிகவும் அழுகிய காரணத்தினால் வீட்டிலேயே டாக்டர்கள் உடற்கூறாய்வு செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


சர்ச் பாதிரியாரிடம் ஏன், எப்படி பழக்கம் ஏற்பட்டது, யார் அந்த பாதிரி?: கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[6]. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த இந்திராவை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்துள்ளனர். சர்ச் பாதிரியாரின் இந்தத் தொடர் நடவடிக்கையின் காரணமாக, இந்திராவின் இரு குழந்தைகளும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்[7]. தந்தைக்குப் பதிலாக, பாதிரியுடன் பழகும் தாயைக் கண்டு, குழந்தைகள் குழம்பி, மனம் பாதிக்கப் பட்டிருக்கலாம். அந்நிலையில், பாதிரி வந்து அவர்களுக்கு போதனை செய்து, மூளை சலவை செய்ததால், இறந்தவர் உயிர்த்தெழுவர் போன்ற நம்பிக்கைகளைப் பெற்றிருக்கலாம். அப்படியென்றால், இறந்த தமது தந்தை ஏன் உயிரோடு வரக்கூடாது என்றும் நினைத்திருக்கலாம், பாதிரியாரிடம் கேட்டிருக்கலாம்.


20-22 நாட்களாக பிணத்துடன் இருந்ததால், போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருவது: அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டிசம்பர் 7ம் தேதி இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக (நக்கீரன்) / 20 நாட்கள் (தினமலர்) வீட்டில் இருந்த சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8]. உயிரிழந்த காவலர் இந்திரா, கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[9]. தினமலர், வாசுகி, ஆன்டர்சனிடம் / சுதர்சன் என்று மற்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர், என்று முடிக்கிறது[10]. திடீரென்று “ஆன்டர்சன்,” வந்தது என்று தெரியவில்லை. தினமலர் நிருபர், ஏதோ அடக்கி வாசிக்கின்றாரா அல்லது மறைக்கிறாரா என்று தெரியவில்லை[11]. ஊடகங்களும், உண்மையினை சொல்லாமல், மூடநம்பிக்கை என்றால், இதையும் விமர்சிக்காமல், கிறிஸ்தவ நம்பிக்கை என்பதால், அடக்கி வாசிப்பதுப் போலத் தெரிகிறது.

30 நாட்களுக்குப் பிறகு, உயிர்த்தெழுவார்களா?: இதே போல, கிறிஸ்தவ குடும்பத்தில் வயதான பெண் ஒருவர் இறந்து விட்டார். குடும்பத்தினர், இந்தத் தகவலை வெளியே சொல்லவில்லை. மாறாகச் சிறிய அறைக்குள் இறந்து போனவரின் சடலத்தை வைத்தனர். தினமும் சடலத்தின் அருகே மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தி வந்துள்ளனர்.  சடலத்தின் மீது  வாசனைத் திரவியங்களையும் தொடர்ந்து அடித்து வந்துள்ளனர்.  முப்பது நாள்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால்  இறந்தவர் உயிருடன் வந்து விடுவார் என்பது அவர்களின் நம்பிக்கை[12]. ஐ.பி.எஸ் அதிகாரியே மூடநம்பிக்கையில் தந்தையின் உடலைப் பாதுகாத்து வந்ததைக் கண்டு போபால் நகரம் அதிர்ந்து போய் கிடக்கிறது. மத்தியப் பிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பியாக இருப்பவர் ராஜேந்திரக் குமார். இவரின் தந்தை 84 வயது கல்முனி மிஷ்ராவின் இறந்த உடலை வைத்து பிரார்த்தனை செய்தார்[13]. இத்தகைய நம்பிக்கைக் கொள்வது, திகைப்பாக இருக்கிறது.

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?:

இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு,ணவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

01-01-2021


[1] நியூஸ்.18.தமிழ், உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக பெண் காவலர் சடலத்தை வைத்திருந்த உறவினர், NEWS18 TAMIL, LAST UPDATED: DECEMBER 31, 2020, 10:11 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/dindigul-women-police-died-police-started-investigation-riz-387813.html

[3] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[4] நியூஸ்.டி.எம், மரணமடைந்த பெண் உயிர்த்தெழுவார் என சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்த கொடூரம்!, By Aruna NewsTM | Fri, 1 Jan 2021.

[5] https://newstm.in/tamilnadu/the-cruelty-of-keeping-the-corpse-for-22-days-as-the-dead/cid1954389.htm

[6] நக்கீரன், அம்மா உயிருடன் வருவார்…!” தாயின் சடலத்தோடு 22 நாட்கள் இருந்த குழந்தைகள்!, சக்தி, Published on 31/12/2020 (19:23) | Edited on 31/12/2020 (19:58)

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shocking-incident-dindigul

[8] தினகரன், திண்டுக்கல்லில் சடலத்தை வைத்து 22 நாட்களாக பிரார்த்தனை, 2020-12-31@ 16:39:22.

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[10] தினமலர், சடலத்துடன் 20 நாள் பிரார்த்தனை, Added : ஜன 01, 2021 00:26.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2681276

[12] விகடன், “தந்தை உயிருடன் எழுவார்”- சடலத்துக்கு வீட்டில் ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்த .பி.எஸ் அதிகாரி, எம்.குமரேசன், Published:15 Feb 2019 8 PMUpdated:17 Feb 2019 3 PM

[13] https://www.vikatan.com/social-affairs/controversy/149796-father-dies-in-hospital-ips-officer-takes-body-home-starts-ayurveda-treatment-in-bhopal

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன? ஒரு இந்து எப்பொழுது கொலைகாரன் ஆகமுடியும்! [3]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன? ஒரு இந்து எப்பொழுது கொலைகாரன் ஆகமுடியும்!  [3]

Lakhsmananada assassinated by Christian-maoists

கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன?: கிராம் ஸ்டைன் கொல்லப்பட்டது 1999ல், அதில், சிக்கியது தாராசிங். சுவாமி லக்ஷமணானந்த மற்றும் அவரது சீடர்கள் நான்கு பேர், ஒரு சிறுவன் உட்பட, ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று “பஜ்ரங் தள்” பற்றி ஊளையிடும் ஊடகங்கள், பிரச்சார கும்பல்கள் 82 வயது கிழவர் ஏன் கொல்லப் பட வேண்டும் என்று கட்டுரைகள் எழுதுவது இல்லை. நடு இரவில் அவ்வாறு, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ள வேண்டும் என்று விவாதிப்பது இல்லை. அவர் மதமாற்றத்திற்கு இடையூராக இருந்தார், வனவாசிகளை, SC-STக்களை இணைத்தார் என்பதால் கொல்லப்பட்டார் என்பது கண்கூடு, ஏனெனில், இவையெலாம் கிருத்துவர்களுக்கு-மாவோயிஸ்டுகளுக்கு இடைஞ்சலாக இருந்தன. ஆனால், கிராம் ஸ்டைன் கொல்லப்பட்டது புதிரானது. மதமாற்றம் மட்டும் காரணமாகாது. இன்றுவரை வெளிவந்துள்ள ஆங்கில ஊடகங்களில் ஆதாரமாக ஒன்றைகூடக் குறிப்பிடாமல், விஷமத் தனமாக தலைப்பிட்டுள்ளனர். ஆனால், இவற்றையே இணைத்து, அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி மீது அவதூறான செய்திகளை இப்பொழுது வெளியிடுகின்றன.

Naveen Patnaik at the Jalespata ashram, the site of the murder of Swami Lakshmanananda Saraswati, on August 31, 2008.

வன்முறை / ஹிம்சை மற்றும் அஹிம்சை பற்றிய மனோதத்துவம்[1]: கொலை என்பது, வன்முறையை மனோதத்துவ ரீதியில் அபடித்துப் பார்த்தால், மனிதன் தனது பொறுமையின் எல்லைகளை எல்லாம் கடந்து, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை அல்லது ஏதாவது ஒன்று செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஊக்குவிக்கப்பட்டு அவன் தள்ளப்படுகின்ற நிலையில், அவன் அத்தகைய முடிவுக்குத்  தள்ளப்படுகிறான். கொலை செய்வதற்கான எண்ணம், உத்தேசம், நோக்கம், செயல் படவேண்டும் என்ற தூண்டுதல் உணர்ச்சி முதலிவற்றைப் பற்றி மனோதத்துவ ரீதியில் ஆராயவேண்டும்.  குறிப்பாக அகிம்சையை போதிக்கும் தத்துவம் நாட்டில், எவனும் கொலை செய்ய மாட்டான். அந்நிலையில், அஹிம்சையை மீறி, மறுபடியும் அவன் ஹிம்சை / வன்முறை செயலில் ஈடுபடுவது செய்யத் தூண்டுவது எது என்று தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் 600 வருடங்களாக, முகமதிய படையெடுப்பு, அநியாயங்கள் கொலைகள், முதலியவற்றை கண்டும், அனுபவித்தும், வருத்தப்பட்டும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல 300 வருடங்களாக ஐரோப்பிய-ஆங்கிலேய ஆட்சிகளால், நேராகவும் மறைமுகமாகவும்  பற்பல குரூரங்களை, சட்ட விதி முறைகள் மூலமும், பட்டினி வரி விதிப்பது போன்ற அடாவடித்தனங்களைம் அனுபவித்திருக்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் அவர்கள் வன்முறை என்ற நிலைகுத் தள்ளப்பட்டுள்ளனர். சௌரி-சௌரா வன்முறை பற்றி அதிகமாகவே அலசப்பட்டுள்ளது இது சமீப கால நிகழ்வு என்பதனால் குறிப்பிடப்படுகிறது அதேபோலத்தான் இந்த ஸ்டைன்ஸ் கொலை வழக்கும்.

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists-2

இந்து என்பவன் எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான்: ஒரு இந்து என்பவன், பொதுவாக எந்த உயிரையும் கொல்ல நினைக்கமாட்டான். ஈ.,எறும்பு போன்றவற்றை கூட நசுக்க தயங்குவான். குறிப்பாக தாவர உணவு உண்பவன் எத்தகைய உயிர்கொலை அல்லது துன்புறுத்தலுக்கும் உடன்பட மாட்டான். அந்நிலையில் ஸ்டென்ஸை தீவைத்து கொளுத்தி கொன்றனர் எனும்பொழுது அவ்வாறு ஏன் நடந்தது என்பதையும் உன்னிப்பாக ஆராய வேண்டும். அவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள் என்பது மட்டும் முக்கியமான காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. அதாவது அந்த காரணம் கொல்வதற்கு ஊக்குவிக்கும் அல்லது தூண்டும்முறையில் உள்ளது என்று சொல்ல முடியாது.  உடல், உயிர், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம், முதலிய சித்தாந்தங்களை நம்புகின்ற ஒரு பாமர மனிதன், அதாவது ஒரு சாதாரண இந்து, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொள்ளமாட்டான். ஆகவே அங்கிருந்த வனவாசிகள் மற்றும் எஸ்சி மக்கள் எதற்காக இவரரை கொல்ல வேண்டும் என்பது பற்றி, நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists

ஸ்டைன்ஸை கொல்லும் அளவிற்கு மனப்பாங்கு எவ்வாறு உண்டாகி இருக்கும்?: நமக்கு தெரியும் விவரங்களிலிருந்து,

  1. இவன் ST-SC மக்களுக்கு இடையே வேறுபாடுகளை உண்டாக்கினான்,
  2. எஸ்.டி.யை, எஸ்சியாக மாற்றுவேன் என்று செயல்பட்டிருக்கிறான்
  3. பாரம்பரிய விழாக்கள் சடங்குகள் நடப்பது தடுத்திருக்கிறான்,
  4. ஒருவேளை அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் எதிராக எதையாவது சொல்லி பிரச்சாரம் செய்திருக்கலாம்
  5. குறிப்பாக நீ வணங்கும் தெய்வங்கள் எல்லாம் போய்
  6. அவை உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது,
  7. இப்பொழுது உங்களை பலர் பாதித்து வருகின்றனர் ஆனால், அவர்களை உங்கள் தெய்வங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை

 என்ற பாணியில் அவன் போதித்திருக்கலாம். இவை அவர்களை பெருமளவில் மங்களை பாதித்து இருக்கும்; மனங்களிலும் குழப்பம் ஏற்படுத்தியிருக்கும்; பிறப்பில் இருந்து இறக்கும் வரை அவர்களது குல தெய்வங்களை நம்பி வாழ்ந்தவர்கள், இத்தகைய போதனை அல்லது பிரச்சாரம் மனதளவில் வெகுவாக பாதித்து இருக்க வேண்டும். அவர்களுக்குள்ளேயே மோதல்கள், சண்டைகள், கலவரங்கள் ஏற்படசெய்து, ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது, கொல்வது என்ற நிலையில் இருக்கின்ற நிலையில் இத்தகைய தூண்டுதல், அவன் மீது அதிக அளவில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists-4

ஸ்வாமி லக்ஷ்மானந்தா முன்னரே பலமுறை தாக்கப் பட்டுள்ளார்: முன்னர் கிருத்துவர்களால், இவர் பலமுறை தாக்கப் பட்டுள்ளார். பேரூந்தில் சென்று கொண்டிருந்த பிரம்மநிகாவ் கிராமத்திற்குச் செல்லும் போது, பன்னாவைச் சேர்ந்த சுக்ரிபா சிங் என்ற  கிருத்துவத் தலைவர், வழி மறித்து, தாக்கினர். அதில் டிரைவர், பாதுகாவளி மற்றும் இவர் காயமடைந்தனர். தாக்கியவர்களில் ஒருவரை, காங்கிரஸ் ராஜ்ய சபா எம்பி, ராதா கன்ட நாயக் [Radhakant Nayak[2] ] என்று அடையாளம் கண்டு, விசாரணையில் தெரிவித்தார். இதுவரை, ஏழு முறை அவர்கள் தாக்கியதாகத் தெரிவித்தார். ஸ்வாமி கொலையுண்ட பிறகு, இவர் மீது குற்றம் ச்ச்ச்பட்டது[3]. எஸ்சிக்களை மதம் மாற்றும் திட்டங்களில் நாயக் கிருத்துவர்களுக்கு உதவினார். மதம் மாறிய பனோஸ் என்ற குய் மொழி பேசும் எஸ்.டிக்களுக்கு[ST] எஸ்.சி [SC] அந்தஸ்து வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் வேலை செய்தார்[4]. அதாவது எஸ்.டி தான் எஸ்.சிஐ விட இடவொதிக்கீட்டு விசயத்தில் நல்லது, சீக்கிரம் வேலை பலன் கிடைக்கும். ஆனால், எஸ்சி ஆக்குகிறேன் என்பதில் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. இருப்பினும், இவர் மற்றும் கிருத்துவர்கள் என்ன திட்டம் போட்டார்கள் என்று தெரியவில்லை. மதம் மாறிய எஸ்.சி கிருத்துவர்களுக்கு சலுகை இல்லை என்பதால், எஸ்.சி கிருத்துவ ஜனத்தொகையைப் பெருக்கி, அதை வைத்து, எஸ்சி கிருத்துவர்களுக்கு, இந்து-எஸ்சி இடவொதிக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக்க, இந்த திட்டத்தை பின்பற்றினார் என்ரும் ஊகிக்கலாம். இருப்பினும், அம்மகளிடையே வெறுப்பை உண்டாக்கி, பிரிவுகள் ஏற்படுத்தி, கலவரங்களை உண்டாக்க திட்டம் போட்டது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Radhakant Nayak IAS, Congress

[1] Vedaprakash, Psychology of violence and non-violence,

[2] Radhakant Nayak is an Indian politician belonging to the Indian National Congress party. He is a Member of the Parliament of India representing Orissa in the Rajya Sabha, the upper house of the Indian Parliament. Radhakant Nayak, a 1962 batch IAS officer. Nayak is also connected with the Young Men’s Christian Association (YMCA) and is one of the most high-profile Christians in Orissa.

In October 2007, the Kandhamal district Kui Samaj Coordination Committee demanded his resignation. The rationale for the demand was Nayak’s support for classifying Panas as Kui tribals, a move that the KSCC opposed. In October 2008, Nayak was accused by local Hindu groups, including the chapters of the BJP and VHP, of being behind the murder of Swami Laksmanananda Saraswati, and police have been investigating persons close to him.

Nayak is under investigation by the Orissa Police as of December 2008. Nayak has termed the allegations “defamation and maligning of my character”.

[3] http://archive.indianexpress.com/news/net-closes-in-on-cong-mp-for-orissa-swami-s-murder/403507/

[4] The Mumbai Mirror, Congress MP fears slain VHP leader’s followers may target him, By Lakshmi Iyer | Updated: Aug 29, 2008, 03:25 IST .

Congress Rajya Sabha MP from Orissa Radhakant Nayak, who is known to have openly crossed swords with slain VHP leader Swami Lakshmananda Saraswati on the conversion issue, is staying put in Delhi as he fears for his life. According to the Kandhamal police website, the conversion of tribal population has been a major source of trouble in the area. The numbers of Christians in the district has been increasing steadily and, as per 1991 Census, account for 15 per cent of the population. There is opposition to the activities of missionaries in some areas such as Kotagarh, Balliguda, Sarangada, Phiringia PS areas. Due to this recent development, there is ill-feeling and tension on communal lines in villages. Sources said Nayak’s efforts to get ST status for Kui-speaking Panos who have converted to Christianity has been one of

 the causes for communal friction. Nayak is a Dalit who  belongs to the Pano caste. Congress sources said Nayak refuses to visit Orissa fearing for his life. On Wednesday, he reportedly met Congress president Sonia Gandhi and sought extra security cover for himself, stating that he feared a revenge attack.

https://mumbaimirror.indiatimes.com/news/india/Congress-MP-fears-slain-VHP-leaders-followers-may-target-him/articleshow/15846789.cms?

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

பிப்ரவரி 26, 2018

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

Joseph Hospise- Vaiko statement - 25-02-2018

2018ல் முழித்துக் கொண்ட அரசியல்வாதிகள்: இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்  பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “பாலேஸ்வரம் கருணை இல்லம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை  எடுக்க வேண்டும்”என்று வலியுறுத்தி உள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜூன் சம்பத் தலைமையில் செங்கல்பட்டு டிஎஸ்பியிடம் நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  இதுகுறித்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் கருணாகரன் என்பவர் கூறும்போது, இந்தக் கருணை இல்லம் மர்மமாகவே இருக்கிறது.  இறந்தவர்களின் உடல்களை எரிக்காமல், புதைக்காமல் அப்படியே அழுக விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக புகார்  அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்போதாவது அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்[1].

Joseph Hospise- Vaiko - seeman, statement - 25-02-2018

வைகோ அறிக்கை – 25-02-2018: வைகோ[2], “இந்தச் செய்தியை அறிந்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர். இதை அறிந்து, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட .தி.மு.. அவைத் தலைவர் ஜி.கருணாகரன், காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.. தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர். ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்ம பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது[3]. எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பிணக்குவியல்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; மேலும் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”, என்று கூறியுள்ளார் [4].

bones-sold-from-dead-bodies-dinakaran-21-02-2018

நாம் தமிழர் கட்சி சீமானின் அறிக்கை: இதே போன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[5]:- பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடிவிடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்து இருக்கிறது. அங்குள்ள முதியவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறைகளில் வைக்கப்பட்டு, எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும். நடைபெற்ற மரணங்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளை போல தமிழக அரசே முதியோர் இல்லங்களை நிறுவ வேண்டும்[6]. சரி அப்படி என்ன எலும்புகளில் விசயம் உள்ளது என்று பார்த்தால், கீழ்கண்ட விவரங்கள் வெளிவருகின்றன.

Joseph Hospise- Vaiko - seeman, statement - 26-02-2018-DT

எலும்பு, எலும்பு பவுடர் முதலியவற்றின் உபயோகம்: தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது. படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள “பகீர்’ தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது[7].

Bone export- illustrative figure

எலும்பு பவுடரின் விலை, ஏற்றுமதி: மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[8].

Joseph Hospise- banner with names

ஜோசப் எலும்பு வளாகத்தை பாராட்டி எழுதியுள்ள கட்டுரைகள், எடுக்கப் பட்டுள்ள வீடியோக்கள்: இத்தனை விவகாரங்கள் இருந்தாலும், உண்மையினை அறியாமல், பாராட்டி “கீற்று” போன்ற இணைதளத்தில், கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன[9]. புலன் விசாரணை ஜார்னலிஸம் என்றெல்லாம் பேசுகின்ற காலத்தில், “மனிதநேயம்” போர்வையில் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது[10]. இன்றைக்கு மாற்றி எழுதப்படுமா என்று பார்க்க வேண்டும். அதேபோல பாராட்டும் வீடியோக்களும் உள்ளன. இப்பொழுது தான், இந்த விவகாரங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சேர்ந்துள்ளன. இன்றைக்கு, மறுபடியும் விஜயம் செய்து வீடியோவை எடுத்து உண்மையினை காட்டுவார்களா அல்லது மாற்றுவார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

26-02-2018

Human skeleton parts - rate fixed

[1] தி.இந்து, பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல், எலும்புக்கூடு விற்பனை; பாதாள அறையை சோதிக்க வேண்டும்: வைகோ, Published :  25 Feb 2018  18:07 IST; Updated :  25 Feb 2018  18:34 IST.

[2]

http://tamil.thehindu.com/tamilnadu/article22850402.ece

[3] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[4] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[5] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[6] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[7] தினமலர், எலும்பு பவுடர் ஏற்றுமதி, Jan 3, 2010.

[8]http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?print=1&news_id=6152&ncat=&archive=1&showfrom=1/3/2010

[9] கலிவரதன்,ஒரு இல்லம்அதில் வாரத்திற்கு 5 மரணம், 02 நவம்பர் 2012.

[10] http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/21855–5-

 

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வது – கிருத்துவ மரண திருவிளையாடல்கள் (2)

பிப்ரவரி 22, 2018

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வதுகிருத்துவ மரண திருவிளையாடல்கள் (2)

Dead bodies smuggled -enquiry-Thomas

பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு: இதை தொடர்ந்து, கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட குரும்பறை கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (50), தாஸ் (42), சிலம்பரசன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுனர் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு அவரை அனுப்பினர். இந்நிலையில் 21-02-2018 அன்று காலை 8 மணியளவில் ஆர்டிஒ ராஜூவ், மதுராந்தகம் டிஎஸ்பி மதிவாணன், மருத்துவ அலுவலர் உமாதேவி, மாசு கட்டுபாட்டு வாரியம், வருவாய் துறை, போலீசார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணை மாலை 4 மணியளவில் முடிவடைந்தது.  விசாரணைக்கு பிறகு, ஆர்டிஓ ராஜூ கூறுகையில், “துறைரீதியான அலுவலர்கள் 3 நாட்களுக்கு விசாரணை செய்து அறிக்கை தயார் செய்வார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.  இச்சம்பவத்தால், கலெக்டர் பொன்னையா உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

Dead bodies smuggled -Dainakaran, 20-02-2018

எலும்பை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் சொல்கின்றனர்:  இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜிக்கு மனநல பிரிவு டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட கருணாகரன் கூறியதாவது: “சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் மலையடிவாரப் பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதன் செயல்பாடு மர்மமாக உள்ளது.  இந்த கருணை இல்லத்தில் இறந்தவர்களின் உடல்களை கிடங்கில் அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் வைத்துவிட்டு அழுகி உடல் பாகங்கள் சிதைந்த பிறகு எலும்பை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் சொல்கின்றனர்[1]எங்கிருந்தோ அழைத்துவரப்படும் முதியவர்களை சில காலம் வைத்திருந்து இறந்தவுடன் இங்கேயே அழுக விடப்படுகிறது[2]நோய்வாய்ப் பட்டவர்கள் உடல்கள் எரிக்கப்படுவதாலும், அழுக விடப்படுவதாலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவி சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுபோன்று அதிக அளவில் நடைபெறுவதால் சுற்றுச் சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்மந்தமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே, உடனடியாக ஆய்வு செய்து இந்தக் கருணை இல்லத்தை தடை செய்வதுடன், நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

Dead bodies smuggled -Jain Joseph

கருணை இல்லத்தை நிர்வகித்து வரும் தாமஸ் தலைமறைவு: இதையடுத்து இன்று காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜீவ், உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி மற்றும் சமூக நலத்துறையினர் என சுமார் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்[3]. அசம்பாவிதம் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அங்குள்ள முதியவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா, சரியான உணவுகள் வழங்கப்படுகின்றனவா, இறந்து விட்டால் அவர்களை எப்படி புதைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன[4]. மேலும் கருணை இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகிறார்கள்[5]. மனநலம் பாதிக்கப்படாதவர்களை வேறு இல்லத்திற்கு கொண்டு செல்ல ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்[6]. இந்த நிலையில் கருணை இல்லத்தை நிர்வகித்து வரும் தாமஸ் தலைமறைவாகி இருப்பதாக சொல்கிறார்கள்.

Dead bodies smuggled -enquiry-Daily Thanthi, 21-02-2018

தொண்டு நிறுவனத்தின் தாளாளர் பாதிரியார் கூறியதாவது[7]: கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்றோர், முதியோர்களுக்காக தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு.  பொருளாதார சிக்கலால் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வண்டியில், காய்கறி மூட்டைகள், முதியவர்கள்  ஏற்றிவரப்பட்டனர் என பாதிரியார்  கூறினார்[8]. இவர் சப்பைக் கட்டுவது, அவர்களது கொடிய செயலே காட்டி விட்டது. தாமஸ் தலைமறைவானது அதனை மெய்ப்பிக்கிறது. அங்கிருக்கும் பிணம் பாதுகாக்கும் பெட்டி-போன்ற-அறை [ multi-tier vault] வங்கி லாக்கர் / அடுக்கறை போன்று இருக்கிறது[9]. அவை மறுபடியும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. அதை வைத்திருக்க அனுமதி உள்ளதா என்று தெரியவில்லை.

Saint Joseph,oldage-cremation-vault

இந்த இல்லத்திற்கு உண்டான லைசென்ஸே சில மாதங்களுகு முன்னர் காலாவதி ஆகியிருந்தது. 13 வருடங்களுக்கு ஒரு முறை, அந்த பிணப்பாதுகாப்பு பெட்டிகள் அப்புறப்படுத்தப் படவேண்டும் என்றுள்ளது. ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இறந்த பிணங்களுக்கு “இறப்பு சான்றிதழ்” பெறப்பட்டதா என்று கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது[10]. இவையெல்லாம் செய்யப்படவில்லை என்றால், சம்பந்தப் பட்ட தமிழக அரசு துறைகள் அவற்றில் வேலை செய்யும் ஊழியர்கள், அதிகாரிகள் முதலியோரின் ஊழல் தனமும் வெளியாகிறது. ஆக, கிருத்துவக் கொலை குரூரமும், ஊழல் பயங்கரமும் சேர்ந்து, நூற்றுக்கணக்கான பிணங்களுடன் விளையாடிருக்கிறது என்று தெரிகிறது. பிறகு, மனித உறுப்புகள், எலும்புகள், துகள்கள் எங்கு பிரிக்கப்படுகின்றன, தயாரிக்கப் படுகின்றன, என்று தெரியவில்லை. ஆக, இதற்கெல்லாம் காரணமாக இருப்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்வது சாதாரணமான விசயம் என்றாலும், சட்டம் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். வழக்கம் போல, சில நாட்களில் அச்செய்தியை அப்படியே மறந்தும் விடுவார்கள்.

© வேதபிரகாஷ்

22-02-2018

Dead bodies smuggled. enquiry -Vikatan, 21-02-2018

[1] தினகரன், உத்திரமேரூர் கருணை இல்லத்தில் ஆதரவளிப்பதாக தெரிவித்து முதியவர்களை கொன்று எலும்புகள் விற்பனை, 2018-02-22@ 01:43:16.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=378110

[3] விகடன், முதியவர்கள் கடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை! தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!, பி.ஜெயவேல், Posted Date : 19:20 (21/02/2018); Last updated : 19:20 (21/02/2018)

[4] https://www.vikatan.com/news/tamilnadu/117110-state-revenue-department-officials-raid-at-kanchipuram-orphanage-over-various-allegations.html

[5] தி.இந்து.தமிழ், இறந்தவர் சடலத்துடன் முதியவர்களை அழைத்துச் சென்றதால் சர்ச்சையில் சிக்கிய கருணை இல்லம்: 6 துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு, Published :  22 Feb 2018  07:23 IST; Updated :  22 Feb 2018  07:23 IST.

[6] http://tamil.thehindu.com/tamilnadu/article22821834.ece

[7] தினத்தந்தி, காய்கறி வண்டியில் சடலம் கொண்டு செல்லப்பட்டது தற்செயலாக நடந்த நிகழ்வு பாதிரியார் விளக்கம் , பிப்ரவரி 21, 2018, 04:39 PM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/02/21163922/Vegetable-cart-The-body-was-taken-awayAccidental-event.vpf

 

[9] Indian Express, Questions over hospice with room for dead, By Express News Service  |   Published: 22nd February 2018 04:06 AM;  Last Updated: 22nd February 2018 04:06 AM

[10] They were surprised to find that the hospice did not just take care of the destitute elderly, but also had a multi-tier vault for storing corpses. The vaults appeared like bank lockers. After a certain number of years, the vaults were reused. While it is unclear if the hospice management obtained permission to build the vault, what raised concern among officials was the lack of monitoring on whose bodies were deposited there and how the remains were processed. The home’s licence expired a few months ago and its application for renewal has not yet been approved. “We raised concern about the absence of supervision on how the home handles bodies. We don’t even know if they obtain death certificates before depositing the corpses in the vault,” said a health department official. While rules mandate that the remains in the vault be cleared only once in 13 years, local residents claimed the management had been clearing them every few months. A representative of the home said they were open to a probe.

http://www.newindianexpress.com/cities/chennai/2018/feb/22/questions-over-hospice-with-room-for-dead-1777033.html

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

பிப்ரவரி 19, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

போப் –  மற்றும்  சங்கராச்சாரியார்போஸ்டரும்  தெய்வநாயகத்தின்  குறும்பும்: நான் 19-01-2014 அன்று அம்பத்தூருக்குச் செல்லும் வழியில், முகப்பேர் பகுதியில் “போப்-மற்றும் சங்கராச்சாரியார்” போஸ்டரைப் பார்த்தேன். ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வண்டியும் வேகமாக சென்றுவிட்டத்தால், விவரங்களைப் படிக்கமுடியவில்லை. பிறகு நண்பர் தேவபிரியா சாலமன்[1] அதைப் பற்றி 16-02-2014 அன்று விசாரித்தார். நானும் அதனைப் பார்த்ததாக சொன்னேன். அவர், “நீங்கள் சரியாக பார்த்திருக்க மாட்டீர்கள், 23-02-2014 அன்று மயிலை மாங்கொல்லையில் பொதுகூட்டத்தை தெய்வநாயகம் நடத்துகிறார், அந்த போஸ்டரை மெயிலில் அனுப்பி வைக்கிறேன் பாருங்கள்”, என்று அனுப்பிவைத்தார். 17-02-2014 அன்று தான் பார்த்தேன். “இந்து மதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்தும் மற்றக் கோவில்களை சங்கரச்சாரியார் பிடியிலிருந்தும் விடுவிக்கும் 2ம் கட்டப் பிரார்த்தனைப் போராட்டம்” என்று அதில் இருந்தது. “சிந்தனையாளர்களின் இதன் தொடர்பான கேள்விகளுக்குக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டு, இடம்: கபாலீஸ்வரர் கோவில் அருகில் மாங்கொல்லை, காலம் 23-02-2014, ஞாயிறு மாலை 6 மணி தொடர்பு முகவரி: பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எம்.ஏ., பி.எச்டி, ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு, 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை – 23; தொலைபேசி எண்; 044-2674 3842 / 94448 17394; மின்னஞ்சல் – tamilarsamayam2010@gmail.com, thamizharsamayam2010@gmail.com, இணையதளம் – www.soulologyofthetamils.com, என்றும் கொடுக்கப்பட்டுள்ளன.  சரி, தெய்வநாயகம் பழையபடி, ஒரு நாள் கூத்து நடத்த தீர்மானித்துள்ளர் என்று தெரிந்து கொண்டேன்.

வேதபிரகாஷின் பிரார்த்தனை

வேதபிரகாஷின் பிரார்த்தனை

தெய்வநாயகத்தின்  குழப்புவாதம்  அவரது  கருத்துகளிலேயே  காணலாம்: உதாரணத்திற்கு, “வழிபோக்கன்” என்ற புனைப்பெயரில் தெய்வநாயகத்தின் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்[2]. அதிலிருந்து ஒன்று, “இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில்  கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களதுஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ ‘தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க”.

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

கேள்விகள்எழுப்பப்படுவதில்மறைக்கப்படும்அடிப்படைவாதம்: இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. என்று கேள்விகளைக் கேட்டுள்ளார். அதிலுள்ள பொய்மை வலதுபக்கத்தில் எடுத்துக் காட்டப் படுகிறது.

 

எண் தெய்வநாயகத்தின் கேள்வி அதிலுள்ள பொய்மை / திரிபுவாதம்
1)  கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன்? போர்ச்சுகீசியர் மதவெறியினால், ஆக்கிரமித்துக் கொண்டு, இடித்தனர்.
2)  அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன்? இது பொய். ஒருகாலம் வரை, பழைய தூண்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் இருந்து வந்துள்ளன.
3)  ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது? இது கத்தோலிக்கர்களின் திட்டமே தவிர, வேறொன்றும் இல்லை.
4)  கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன? இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா? இதற்கும், கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.கத்தோலிக்கர் இந்த கோவிலை இடித்தது, மதவெறியேயன்றி, வேறொன்றும் இல்லை.
5)  கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை…அது ஏன்? பலிபீடம், கொடிக்கம்பம் என்றெல்லாம் கோவிலில் இருப்பதும், சர்ச்சிற்கும் சம்பந்தம் இல்லை.
6)  காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன்? தடையெல்லாம் ஒன்றும் விதிக்கவில்லை. காசி போன்ற இடங்களில் உள்ள மூல விக்கிரகம் கத்தோலிக்கர் போன்ற முகமதிய வெறியர்களால் உடைக்கப்பட்டன. இப்பொழுதுள்ளவை, கோவிலும் இல்லை, அவை உண்மையான விக்கிரங்களும் இல்லை.
7)  உருவ வழிபாட்டை ஏற்காத ‘நான் தான் கடவுள்’ என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன? இதெல்லாம், இந்த ஆளின் பித்தலாட்டமேயன்றி, அதில் எந்த விசயமும் இல்லை. “ஸ்மார்த்த சமயம்” என்று ஒன்றில்லை, அது சம்பிரதாயம், அது நாத்திகம் இல்லை.

 

என்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும், உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின் உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும். தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்”, என்று இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம், இவரிடம் தான் வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேதமையும் வெளிப்படுகிறது.

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தொடர்ந்து  பரப்பப்பட்டு  வரும்  கட்டுக்கதை: கிருத்துவர்கள், நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளுடன் செயல்படுவதால், அடிக்கடி,  இதைப் பற்றிய செய்திகள் எங்காவது வரசெய்து கொண்டிருக்கிறார்கள். வருடாவருடம், செய்திதாள்கள், டிவி போன்ற ஊடகங்களில் இக்கட்டுக்கதைகள் – குறிப்பாக தாமஸ் கட்டுக்கதை – தவறாமல் வந்து விடும். அதனைப் பார்க்கும் போது, கவனத்திற்கு வரும் போது மறுப்புக் கடிதம் அனுப்புவது அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்தகைய தவாறான விசயங்களை எடுத்துக் காட்டுவது போன்ற வேலைகள் நடந்து வருகின்றன[3]. உண்மையினை அறிந்தவர்கள், கிருத்துவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் ஒப்புக் கொண்டு, அத்தகைய செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்கிறார்கள். இருப்பினும் இன்னொரு பக்கம், அதனைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வருடம், ஜனவரியில் முந்தைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வரவழைத்து, “செயின்ட் தாமஸின் சரித்திர சுருக்கம்” என்ற சிடியை வெளியிட வைத்துள்ளனர்[4]. தவிர, அவர் சின்னமலையில் பல வருடங்களாக தாமஸ் வாழ்ந்ததாகக் கருதப் படும் இடம் [ visited the cave in Little Mount in which St Thomas is believed to have lived for many years] மற்றும் அவரது பாதங்கள் என்று கருதப்படும் இடம் முதலியவற்றைப் பார்த்தார் [He also viewed the bleeding cross carved by the apostle himself and the footprints, believed to be that of the saint himself, at the foot of the hillock.] என்று செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்[5]. இது முழுக்க கிருத்துவர்களின் சிறப்பான திட்டம் என்று தெரிகிறது.

கபாலீஸ்வரர்  கோவில்  கருவறை  நுழைவு  போராட்டம் (2010): 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார்[6]. “காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”. என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். 04-05-2010 அன்று, இந்துக்களுக்கு சூடுசொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும், என்று ஒரு பதிவை செய்திருந்தேன்[7].

 NCB

கபாலீஸ்வரர்  கோயிலை  இடித்துவிட்டு  நாடகம் ஆடும்  கிருத்துவக்  கயவர்கள்!: முதலில் கபாலீஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்ததற்கான ஆதரங்கள் பல இருக்கின்றன[8]. இவையெல்லாம், உதாரணத்திற்காக கொடுக்கப் படுகிண்ரன. பல விசயங்கள் தெரிந்தவை என்பதால், அவை மறுபடியும் சொல்லப்படவில்லை.

கார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்!

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………

மயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில்,  மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

கயிலைப் பதிஅரன் முருகோனே

கடலக் கரை திரை அருகேசூழ்

மயிலைப் பதிதனில் உறைவோனே

என்று அருணகிரிநாதர் மாடியுள்ளார்.

  • பிறகு எங்கே அந்த கோயில்?

இப்படி முன்னரே பல பதிவுகள் செய்யப்பட்டுள்ளன[9]. அதாவது, இப்படிப் பட்ட நாயன்மார்கள், அடியார்கள், பெரியோர்களை விட வேறு யாரும், இதற்கான ஆதாரத்தைக் கொடுத்திருக்க முடியாது. ஆனால், இவற்றையும் மீறி தமிழ், தமிழர் என்ற பெயர்களில் ஒரு கிருத்துவன் கலாட்டா செய்து வருகிறான் என்றால், அந்த போக்கைத்தான், தமிழர்கள், தமிழ் பேசும் இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

19-02-2014


[1] இணைதளங்களில் தாமஸ் கட்டுக்கதை பற்றி சமீபகாலமாக நிறைய எழுதிவருகிறார். அதனைப் பரப்புபவர்களை எதிர்கொள்கிறார். அடிக்கடி அதைப் பற்றிய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

[3] இப்பொழுதைக்கு நான், ஈஸ்வர் சரண் மற்றும் தேவபிரியா சாலமன் தவறாமல் அனுப்பி வருகிறோம், தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சமீபத்தில் இதில் பிரபாகரன், ஹர்ஷ வர்த்தன் முதலியோர் சேர்ந்துள்ளார்கள். முன்பு திரு நாச்சியப்பன் என்பவரும் கலந்து கொள்வதுண்டு. இப்பொழுது அவரைக் காணவில்லை.

[5] Express News Service – CHENNAI, After Pep Talk, Quiz, Kalam Gives His E-mail ID to Kids, Published: 07th January 2014 07:40 AM; Last Updated: 07th January 2014 07:40 AM ; Martin Louis

[6] தெய்வநாயகம், தமிழர்சமயம், மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10.

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

ஜூலை 6, 2013

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

துறவித்துவம் அல்லது துறவி அந்தஸ்து (Sainthood) அளிக்கப்படுவது என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் ஒரு சிறப்பான நிகழ்சியாகக் கருதப் படுகிறது. ஒருவருக்கு அவ்வாறான நிலை, அந்தஸ்து அல்லது பதவி கொடுக்கப்படுவது பிரபலமாக அறிவிக்கப்படுகிறது. போப் 05-07-2013 வெள்ளிக்கிழமை அன்று இரண்டு போப்புகளுக்கு – போப் ஜான் பால் II [Pope John Paul II] மற்றும் போப் ஜான் XXIII [Pope John XXIII] துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கப்பட்டுவதாக அறிவித்தார்.

ஒன்றிற்கு மேற்பட்டஅற்புத / அதிசயநிகழ்சியை நடத்தியிருந்தால் துறவி அந்தஸ்து கொடுக்கப் படும்: அவ்வாறு அவர்கள் அறிவிக்கப்பட வேண்டுமானால், குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றிற்கு மேற்பட்ட அற்புத / அதிசய நிகழ்சியை நடத்தியிருக்க வேண்டும்[1]. போப் ஜான் XXIII 1958-1963 ஆண்டுகளிலும், போப் ஜான் பால் II 1978-2005 ஆண்டுகளிலும் போப்பாக இருந்தனர்[2]. ஆனால், இவ்விருவரும் இரண்டாவது அற்புத நிகழ்சியை (miracle) நடத்தவில்லையாம். இருப்பினும் போப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்து, சரத்துக்களைத் தளர்த்தி துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கத் தீர்மானித்துள்ளாராம்[3]. இப்பொழுது இரண்டு போப்புகள் இருப்பதால், இருவரும் துறவி அந்தஸ்து கொடுக்கும் நிகழ்சியில் பங்கு கொள்ளலாம். இது கிட்டத்தட்ட, கலைமாமணி விருது கொடுப்பது போல ஆகிவிட்டது எனலாம்.

கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் துறவிகளாகத்தான் அறியப் படுகின்றனர்: கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் அவர்களுடைய செயல்களால் அவர்கள் அறியப்படுகின்றனர். யாரும் அவர்களுக்கு அத்தகைய பட்டத்தையோ, சான்றிதழையோ, அங்கீகாரத்தையோ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் அவ்வாறு மதிக்கப்படுகிறார்கள், மரியாதை செய்யப் படுகிறார்கள். சில துறவியர், இறந்த பின்னரும் “ஜீவன் முக்தி” என்ற நிலையில் இறந்தும் இறவாமல், தமது சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். அத்தகைய அனுபவங்களை இந்தியாவில் இன்றும் பக்தர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

ஆதாரங்கள் இல்லையென்றல் உருவாக்கும் கத்தோலிக்கக் கிருத்துவம்: ஆனால், கிருத்துவத்தில் எல்லாவற்றிற்கும், விளம்பரம் செய்யப்படுகிறது, தேவைப்படுகிறது. ஒருவேளை, ஏதாவது இல்லை அல்லது தேவை என்றல் அவற்றை உருவாக்கி விடுகிறார்கள். இதனால் தான் போலிகள், கள்ளத்தனமான ஆவணங்கள், பொய்யான பொருட்கள், முதல்லியன்ன உருவாக்கப்பட்டுகின்றன. ஏனெனில், அவை இல்லையென்றால் நம்பிக்கையாளர்கள் நம்புவதில்லை. ஆரம்பத்திலிருந்து இப்படி பொய்யான விஷயங்கள் மீது ஆதாரமாக கிருத்துவ்ம் தோன்றியதால், உண்மை என்று அறிய முற்படும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தங்களது ஆதிக்கப்பலம், செல்வபலம், அரக்கத்தனமான சக்தி முதலியவற்றை வைத்துக் கொண்டு சமாளித்து விடலாம் என்ன்ற எண்ணம் தான் அவர்களை அப்படி தொடர்ந்து குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

இந்தியக் கிருத்துவர்களின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை: இந்தியாவில் இருப்பவர்களுக்கு உண்மை என்னவென்று நன்றாகவே தெரியும். அதனால் தான், தங்களது பொய்களை இங்கு விற்பதற்கு, ஆக்ரோஷமான யுக்திகளைக் கையாளுகின்றனர். புதிய பொருளை விற்பதற்கு எப்படி ஊற்பத்தியாளர் எல்லாவழிகளிலும் பொருளை விற்பதற்கு அதிரடி விளம்பரங்கள் முதலியவற்றை செய்வார்களோ, அதே பாணியில் இவர்களும் செயல்படுகின்றனர். மனம், ஆத்மா, உண்மை, உள்ளுணர்வு என்றெல்லாம் இருக்கும் இந்தியமதக் கொள்கைகளின் முன்பு அதனால்தான், ஒரு காலகட்டத்தில் செய்யலிழக்கிறது. இல்லையென்றால், இடைக்கால இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு, இந்து மதம் ஈடு கொடுத்திருக்க முடியாது. பிறகு வந்த ஐரோப்பிய கிருத்துவ அச்சுரத்தனத்திற்கு முன்பாகவும் நிலைத்திருக்க முடியாது. ஆனால், உலகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு, இரண்டையும் எதிர்த்து இன்றும் இந்திய / இந்து மதம் தழைத்திருப்பதால், அவைகள் தாம், இந்துவேடமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறதே தவிர, இந்துக்கள் யாரும் அவர்கள் போல வேடமிட்டு ஏமாற்றுவதில்லை.

வேதபிரகாஷ்

© 06-07-2013