Posts Tagged ‘உடல்’

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

மே 15, 2023

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

கென்யாவில் பட்டினி வழிபாடு நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல்  26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].

பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7].  அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8].  பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

15-05-2023


[1] தினமலர், கென்யாவில் பட்டினி வழிபாட்டில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு, மாற்றம் செய்த நாள்: மே 15, 2023 05:33

[2] https://m.dinamalar.com/detail.php?id=3320972

[3] ஏபிபிலைவ், கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!,By: பாண்டிம்மா தேவி | Updated at : 24 Apr 2023 12:25 PM (IST);  Published at : 24 Apr 2023 12:25 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/world/to-meet-jesus-47-cult-members-in-kenya-allegedly-starve-to-death-5-facts-113425

[5] தினத்தந்தி, கடவுளை காணலாம்கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு, தினத்தந்தி மே 15, 6:32 pm.

[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.

https://theconversation.com/kenya-cult-deaths-a-new-era-in-the-battle-against-religious-extremism-205051

[7] https://www.dailythanthi.com/News/World/god-can-be-found-atrocity-in-kenya-201-bodies-including-children-were-dug-up-and-recovered-964949

[8] தந்தி டிவி, கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு – 201 பேர் பலி, By தினத்தந்தி, 15 மே 2023 2:02 PM.

[9] https://www.thanthitv.com/latest-news/desperate-to-see-god-in-person-201-people-died-186330

[10] குமுதம், கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் – 213 பேரை தேடும் பணி தீவிரம், S. Joseph Raj, மே 15, 2023.

https://www.kumudam.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-213-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

[11]

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாசபடம் பார்க்கின்றனர்” – போப் வேதனை – இன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

ஒக்ரோபர் 31, 2022

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனைஇன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

கத்தோலிக்கக் கிறிஸ்தவம் உலகை ஆட்டிப் படைத்தது: கிருத்துவம், குறிப்பாக, கத்தோலிக்க கிருத்துவம், இடைகாலத்திலிருந்து உலகை ஆட்டி படைத்து வருகிறது. காலனிய ஆதிக்கம் மூலமும் ஆதிக்கத்தை செல்லுத்தி வந்தது. உலக யுத்தங்களிலும் நாசத்தை உண்டாக்கி, பிறகு பிரிந்த நாடுகளில் தனது தாக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. பற்பல தொன்மையான நாகரிகங்களை மக்களை அழித்த வரலாறும் உண்டு. ஏனெனில், கத்தோலிக்கம் தான்தான் உண்மையான மதம் என்ற அகம்பாவம், ஆணவம் கொண்டது. இத்தாலியில், வாடிகன் “ஸ்டேன் வித்தின் ஸ்டேட் ஓரு நாட்டிற்குள் இன்னொரு நாடு என்ற ரீதியில் கோலோச்சி வருகிறது. இத்தகைய அதிகார, ஆதிக்க, ஆளுமை கொண்ட நிலையில், போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே அந்தந்த மயக்கங்களில் பற்பல பாவங்களை செய்து வருகிறார்கள் என்பதை, கடந்த காலங்களில் அவரவர் எழுதி வந்த புத்தகங்கள், அறிக்கைக்கள், வாடிகனின் நடபடிகள் என்று பல ஆவணங்களில் பதிவாகியுள்ளதையும் கவனிக்கலாம்.

கத்தோலிக்கத்தில் திருமணம் கூடாது: திருமணம் செய்து கொள்ளக் கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் போதிக்கப் பட்டாலும், கன்னியாஸ்திரிக்கள் விவகாரங்களில் போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே, பல நிலைகளில், பல காலங்களில் வரம்புகள் மீறி காதலில், காமத்தில் ஆண்-பெண் உறவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது சகஜமாகி விட்ட நிலையில், பற்பல சமரசங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அக்காலத்திலேயே “கான்வென்டுகள்” அதற்காக உருவாக்கப் பட்டன. இந்தியாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாவது, கற்பழிக்கப் படுவது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் மாட்டிக் கொள்வது வாடிக்கையான விவகாரங்களாகி விட்டன.  கேரளாவில், இது தினம்தினம் செய்திகளாகவும் மாறி விட்டன. இருப்பினும், அத்தகைய பாலியல் குற்றங்கள் பல மறைக்கப் படுகின்றன, செய்திகளில் வெளிவந்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாக சரிகட்டப் பட்டு, அமுக்கப் படுகின்றன. சில நாட்களில், பொது மக்களும் அவற்றை மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறது.

வாடிகனே அத்தகைய குற்றங்களில் பாதிக்கப் பட்டுள்ளது: பொருளாதார குற்றங்கள் சாதாரணமாக உள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் பிடோபீலியா, போர்னோகிராபி, ஓரின சேர்க்கை, என்று பலவித உருவங்களில் நவீன காலங்களில் அதிகமாகியுள்ள. இவையெல்லாம், போப் அவ்வப்பொழுது விவாதித்து வருகிறார். அறிக்கை-ஆணைகள் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது, வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது[1]. இத்தகைய கூட்டங்கள், மாநாடுகள், உரையாடல்கள் நடப்பது சாதாரணமான விசயங்கள் ஆகிவிட்டன. அப்போது பேசிய அவர், “இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது[2]. மேலும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகள்,” அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்[3]. செல்போன் உபயோகம் பற்றி வாத-விவாதங்கள் நடந்த போது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரிக்கள் அவற்றில் மூழ்கியுள்ளார்கள் என்றும், போர்னோகிராபி என்கின்ற மோசமான ஆபாசப் படங்களைப் பார்த்து வருகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சாத்தான் இப்பொழுதெல்லாம், ஆப்பிள் கொடுத்து தான் வரவேண்டும் என்பதில்லை, “ஆப்பிள்” மூலமும் வந்டு கொண்டிருக்கிறான். இனைதளம், ஆன்லைனில் வருகிறான், சாபிட வைக்கிறான், ஆதிக்கம் செல்லுத்துகிறான்.

கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை: அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை[4]. ஏனெனில், அடக்கி வைக்கப் பட்ட இயற்கையான பெண்ணின் காமம், இதனால், எளிதில் தூண்டப் படுகிறது. செயல்பாட்டில் இறங்கும் போது, சுய-இன்பம் என்று ஆரம்பித்து, ஒரு ஆடவனுடன் புனைய காமம் தலைத் தூக்குகிறது. இதை இயற்கையாக உண்டாவதால், தடுக்க முடியாது. இதனால், பெண்மை சீரழிகிறது, ஏசுகிறிஸ்துவின் பந்தம் அறுபடுகிறது, சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது[5]. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்றெல்லாம் விளக்கி கூறினார், வருத்தப் பட்டார்[6]. ஆனால், அதே நேரத்தில், பிடோபிலியா, ஓரின சேர்க்கை, கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதனையும் கவனிக்க வேண்டும். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்[7].

இன்டெர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?: தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்[8]. நல்ல இதயங்களில் தினமும் ஏசுவை வரவழைத்துக் கொள்ள வேண்டும், ஆனால், இத்தகைய விவகாரங்களை அல்ல.  மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[9]. கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்கள் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்[10].  ஆபாசப் படங்களை போனிலிருந்து, நீக்கிவிடலாம்,  ஆனால், இன்டர்நெட் இருக்கும் வரை பார்த்துக் கொண்டு தானே இருப்பார்கள். இது போப்பிற்குத் தெரியாடா என்ன, பிறகு, செல்போன் தடை செய்ய முடியுமா. கம்ப்யூட்டர், லாப்டாப், போன்றவை உபயோகப் படுத்தக் கூடாது என்று ஆணையிட முடியுமா?

போர்னோகிராபி சமூகத்தை சீரழிக்கிறது: ரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் அலவித பிரச்சினைகள், விவகாரங்கள் அலசப் படும். குறிப்பாக, உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப் படவேண்டும், மதமாற்றம் செய்யப் படவேண்டும், அதர்கு ஊழியர்கள் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவர். அதற்கான திட்டங்கள், வழிமுறைகள், முதலியவை விவாதிக்கப் படும். ஆனால், இப்பொழுது, கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து வருகிறது. அபார்ஷன் / கருக்கலைப்பு சாதாரணமான விசயமாகி விட்டது. பள்ளி சிறுமிகள், மாணவிகள், திருமணம் ஆகாமலேயே கருவுருகிறார்கள், குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், “கன்னித் தாய்களும்” நிதர்சனமாகி விட்டது. அதாவது, கத்தோலிக்கத்தில் அபார்ஷன் கூடாது. அந்நிலையில், கர்ப்பமுற்ற சிறுமி, மாணவி அல்லது திருமணமாகாத இளம் எண் கருவை ஏற்று குழந்தை பெறவேண்டும். இது குடும்பங்களை பாதிக்கிறது. இப்பொழுது, செல்போன் மூலம், போர்ன் படம் ஆர்த்து வருகிறார்கள் உடலுறவு போன்றவை வெளிப்படையாகப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். அவர் கலந்து கொண்ட போது, செல்போன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு பதிலளித்த போப், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக இருக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளதாக தெரிவித்த போப், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

30-10-2022


[1] தினத்தந்தி,கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனை, By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 12:45 PM

[2] https://www.thanthitv.com/latest-news/priests-also-watching-porn-pope-145113

[3] தமிழ்.நியூஸ்.18, ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க‘.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!, Published by: Janvi, First published: October 27, 2022, 19:06 IST   LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:06 IST.

[4] https://tamil.news18.com/news/international/pope-francis-spoke-about-pornography-826115.html

[5] தமிழ்.ஏபிபி.லைவ், Pope Francis : ”கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் வேதனை, By : ABP NADU | Updated : 28 Oct 2022 01:56 PM (IST)

[6] https://tamil.abplive.com/videos/news/world-pope-francis-gets-worried-watch-video-81515

[7] தமிழ்.வெப்.இந்தியா, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படங்களை பார்க்கின்றனர்: போப் வேதனை!, Written By Mahendran, Last Modified, வியாழன், 27 அக்டோபர் 2022 (18:52 IST)

[8] https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/pope-says-about-porn-movie-122102700050_1.html

[9] புதியதலைமுறை, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் பேச்சு,  ஞானி கோவிந்தன்,  Published; 27 October 2022 10;41 PM.

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/149774/Pornography-is-a-vice–even-nuns-and-priests-watch–Pope-Francis

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

ஜனவரி 4, 2021

இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!

மனைவி மதம் மாறியதால், பிரிந்து போன கணவர்: திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரசரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா (வயது 38). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கணவர் பால்ராஜ் – இவர்களுக்கு ரட்சகன் (11), மெர்சி (8) என குழந்தைகள் உள்ளனர். 2018ல் இந்திரா, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறார்[1]. இதனால் பால்ராஜுக்கும் அன்னை இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது[2]. கிறிஸ்தவம் எவ்வாறு கணவன்  – மனைவி உறவுகளை உடைக்கிறது என்பது வெளிப்படுகிறது. இந்திராவிடமிருந்து பிரிந்த பால்ராஜ், தேனி மாவட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், அன்னை இந்திரா, தனது இரண்டு குழந்தைகளுடன், திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஷரி காலனியில் வாடகை வீட்டில் வசித்துவந்திருக்கிறார். உடல் நிலை சரியில்லாத அன்னை இந்திராவுக்கு, ஜெபக் கூட்டங்கள் நடத்தி வரும் எரியோடு வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக அன்னை இந்திராவுடன் சுதர்சனனும் தங்கியிருந்துள்ளார்.

பாதிரி ஆன்டர்சன் வாசுகியோடு, வீட்டிற்கு வந்து தங்கியது: இவர்களுடன், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனம் ஆகியோர் அதே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். கணவர் பிரிந்து வாழும் நிலையில், பாதிரியை வீட்டில் தங்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக, 2019ல்  விருப்ப ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் விண்ணப்பித்தார் அன்னை இந்திரா. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, அவரை திண்டுக்கல்லில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்தார்.கடந்த அக்டோபர் / நவம்பர்[3] 16-ம் தேதி 2020 மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு வேற்பட்ட தகவல்களைக் கொடுக்கின்றன. 26-ந்தேதி / 31ம் தேதி பணியில் சேர வேண்டும். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பாத அன்னை இந்திராவைப் பற்றி விசாரிக்க, அவரது வீட்டுக்கு இரண்டு பெண் காவலர்கள் சென்றிருக்கிறார்கள்.

பூட்டிய அறைக்குள் பிணம் இருந்தது: பெண் போலீஸார் வந்த போது, வீட்டில் உள்ளவர்கள் அன்னை இந்திரா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார்கள். வீட்டில் இல்லை எனும் கூறினர். மேலும், வீட்டின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு, அதிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாடிக்கொம்பு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்[4]. அருகில் உள்ளவரும் அவ்வாறே புகார் கொடுத்ததாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார், பூட்டிய அறையைத் திறந்து பார்த்தனர்[5]. அங்கே, இறந்தநிலையில் அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது[6]. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும், அவர் 10 நாள்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது[7]. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது[8]. அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் மத பிரசாரம் செய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன[9]. அதாவது, அந்த அளவுக்கு, மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், பிரார்த்தனை செய்தது – 07-2-2020 அன்று இறந்தது: அதைத் தொடர்ந்து சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கடந்த டிசம்பர் 7-ம் தேதி 2020 அன்று படுக்கையிலிருந்த இந்திரா சுயநினைவை இழந்திருக்கிறார். ஜெபம் சொல்லி சரிசெய்வதாகக் கூறி, மதபோதகர் சுதர்சன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார். கண்விழிக்காத உடலிலிருந்து இரண்டு நாள்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. அப்போதும், அன்னை இந்திரா உயிர்தெழுவார் என்றும், இயேசு ரட்சிப்பார் என்றும் கூறியிருக்கிறார் சுதர்சன். மேலும், இரண்டு குழந்தைகள், சகோதரி வாசுகி ஆகியோர் தினமும் இந்திராவின் உடல் அருகே அமர்ந்து ஜெபம் சொல்லிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குழந்தைகளையும், அவ்வாறு நம்ப வைத்து, தாய் இறந்ததை மறைத்தது, திகைப்பாக இருக்கிறது.

தாய் இறந்ததை அறியாமல் இருந்த பாதிக்கப் பட்ட குழந்தைகள்: உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முயன்றபோது, அதை வாசுகியும் சுதர்சனும் தடுத்திருக்கிறார்கள். இதுவும், அவர்களின் அடிப்படைவாதம் மற்றும் மூடநம்பிக்கையினை எடுத்துக் காட்டியது. “அன்னை இந்திரா இறக்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் உயிர்தெழுவார்,” எனக் கூறியிருக்கிறார்கள். இருவரையும் சமாதானம் செய்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் தனது தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது[10].  குழந்தைகளையும் அந்த அளவுக்கு மூளைசலவை செய்திருப்பது தெரிகிறது.

01-01-2021 அன்று பாதிரி மற்றும் ஆதரித்த வாசுகி கைது: இதனையடுத்து வாசுகி மற்றும் சுதர்சனை போலீசார் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகியையும் மதபோதகர் சுதர்சனையும் போலீஸார் 01-01-2021 அன்று கைதுசெய்தனர்[11]. மேலும், 176வது பிரிவு பொது ஊழியருக்கு தெரிவிக்க வேண்டிய கருத்தை தெரிவிக்காமல் மறைத்தது, பிரிவு 304 (A) (கொலை ஆகாத மரணம்) சிகிச்சை அளித்தால் உயிர் பிழைத்து விடுவார் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தது, பிரிவு 406 நம்பிக்கை துரோகம் செய்தல், பிரிவு 420 ஏமாற்றி பொருளைப் பறிப்பது ஆகிய நான்கு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்[12]. அன்னை இந்திராவின் குழந்தைகளைத் தற்காலிகமாக காப்பத்தில் சேர்ந்த போலீஸார், அவர்களின் தந்தை பால்ராஜுக்குத் தகவல் தெரிவித்தனர். உயிர்தெழுவார் என்று கூறி, இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில்வைத்து ஜெபம் சொன்ன சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்டர்சன் பாதிரி குடும்பத்தைக் கெடுத்து, குழந்தைகளையும் பாதித்துள்ளான்: இறந்த பிறகும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு இருந்தது கவனிக்கத் தக்கது. தங்களது நம்பிக்கை தவறு என்பதை அறிந்தும், மத-அடிப்படைவாத சிந்தனைகளால் குடும்பத்தை ஆன்டர்சன் பாதிரி பிரித்துள்ளான். அந்த வீட்டிலேயே வாழ்ந்து, குழந்தைகளை மூளைசலவை செய்துள்ளான். அதனால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது “தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்தோடு, தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காமல், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். வீட்டு வாசலில் பைபிள் வசனங்களை எழுதி வைத்து, அந்த வீட்டை ஒரு ஜெபகூடம் போல மாற்ற முயற்சித்துள்ளான். இவ்வாறு தம்பதியரைப் பிடித்து, குழந்தைகளை பாதித்து, மருத்துவமனையில் சேர்க்காமல், ஜெபம் என்று சொல்லி வீட்டிலேயே வைத்து, ஒரு பெண்ணை சாகடித்து, குழந்தைகளிடமும் “தாய் உயிர்த்தெழுவாள்,” என்று நமிக்கையை வளர்த்து, ஒரு குடும்பத்தையே நாசமாக்கியுள்ளான். மூடநம்பிக்கை என்று பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள் இந்துமத நம்பிக்கைகளைக் கடுமையாக, கொடுமையாக, ஏன் குரூரமாக்க விமர்சித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய குரூரங்களைக் கண்டு கொள்வதில்லை. இங்கெல்லாம் பகுத்தறிவு மழுங்கி விடுகிறது, நாத்திகம் நமைத்து போய் விடுகிறது, விஞ்ஞான சிந்தனை உளுத்து விடுகிறது. இதைப் பற்றி யாரும் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. ஆகவே, இந்துக்கள் இத்தகைய அடிப்படைவாத கிறிஸ்தவர்கள், கிருக்கு-பாதிரிகள் முதலியோருட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2021


[1] மாலைமலர், பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை, பதிவு: ஜனவரி 01, 2021 08:56 IST.

[2]  https://www.maalaimalar.com/news/district/2021/01/01085655/2212939/Tamil-News-police-investigation-to-female-police-body.vpf

[3]  “நவம்பர் 16-ந் தேதி” என்கிறது தினத்தந்தி. 

[4] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலுயா“.. பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் ஜெபம்.. மொத்தம் 20 நாள்.. அலறி அடித்து ஓடிய போலீஸ், By Hemavandhana

| Updated: Friday, January 1, 2021, 15:34 [IST]

[5] https://tamil.oneindia.com/news/dindigul/dindigul-female-police-deadbody-inside-locked-room/articlecontent-pf511963-407579.html

[6] தினமணி, 20 நாள்களுக்கு முன்பு இறந்த பெண் காவலர் சடலத்துடன் வீட்டிற்குள் ஜெபம்: திண்டுக்கல்லில் பரபரப்பு, By DIN | Published on : 31st December 2020 07:23 PM

[7] https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/dec/31/prayer-inside-the-house-with-the-body-of-a-female-police-who-died-20-days-ago-3534963.html

[8] தினத்தந்தி, திண்டுக்கல் அருகே பரபரப்பு; பூட்டிய அறைக்குள் பெண் போலீஸ் பிணம்; உயிர்த்தெழுவார் என பிரார்த்தனை; பாதிரியாரிடம் விசாரணை, பதிவு: ஜனவரி 01, 2021 09:59 AM

[9] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/01/01095932/Unrest-near-Dindigul-Female-police-corpse-inside-locked.vpf

[10] விகடன், `ஓய்வில் இருக்கிறார், உயிர்த்தெழுவார்’ –இறந்த பெண் காவலர் உடலை வீட்டில் வைத்திருந்த சகோதரி, மதபோதகர், எம்.கணேஷ், ஈ.ஜெ.நந்தகுமார், Published: 02-01-2021 at 11 AM, Updated: 02-01-2021 at 11 AM.

[11] https://www.vikatan.com/social-affairs/crime/female-police-was-kept-in-home-after-she-lost-consciousness-dies

[12]  பிபிசி.தமிழ், உயிர்த்தெழுவார்என்று நம்பி சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்தவர்கள் கைது, 3 ஜனவரி 2021

https://www.bbc.com/tamil/india-55519884

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன? ஒரு இந்து எப்பொழுது கொலைகாரன் ஆகமுடியும்! [3]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன? ஒரு இந்து எப்பொழுது கொலைகாரன் ஆகமுடியும்!  [3]

Lakhsmananada assassinated by Christian-maoists

கிராம் ஸ்டைன் மற்றும் சுவாமி லக்ஷமணானந்த கொலைகளின் நோக்கம், பின்னணி என்ன?: கிராம் ஸ்டைன் கொல்லப்பட்டது 1999ல், அதில், சிக்கியது தாராசிங். சுவாமி லக்ஷமணானந்த மற்றும் அவரது சீடர்கள் நான்கு பேர், ஒரு சிறுவன் உட்பட, ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று “பஜ்ரங் தள்” பற்றி ஊளையிடும் ஊடகங்கள், பிரச்சார கும்பல்கள் 82 வயது கிழவர் ஏன் கொல்லப் பட வேண்டும் என்று கட்டுரைகள் எழுதுவது இல்லை. நடு இரவில் அவ்வாறு, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ள வேண்டும் என்று விவாதிப்பது இல்லை. அவர் மதமாற்றத்திற்கு இடையூராக இருந்தார், வனவாசிகளை, SC-STக்களை இணைத்தார் என்பதால் கொல்லப்பட்டார் என்பது கண்கூடு, ஏனெனில், இவையெலாம் கிருத்துவர்களுக்கு-மாவோயிஸ்டுகளுக்கு இடைஞ்சலாக இருந்தன. ஆனால், கிராம் ஸ்டைன் கொல்லப்பட்டது புதிரானது. மதமாற்றம் மட்டும் காரணமாகாது. இன்றுவரை வெளிவந்துள்ள ஆங்கில ஊடகங்களில் ஆதாரமாக ஒன்றைகூடக் குறிப்பிடாமல், விஷமத் தனமாக தலைப்பிட்டுள்ளனர். ஆனால், இவற்றையே இணைத்து, அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி மீது அவதூறான செய்திகளை இப்பொழுது வெளியிடுகின்றன.

Naveen Patnaik at the Jalespata ashram, the site of the murder of Swami Lakshmanananda Saraswati, on August 31, 2008.

வன்முறை / ஹிம்சை மற்றும் அஹிம்சை பற்றிய மனோதத்துவம்[1]: கொலை என்பது, வன்முறையை மனோதத்துவ ரீதியில் அபடித்துப் பார்த்தால், மனிதன் தனது பொறுமையின் எல்லைகளை எல்லாம் கடந்து, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை அல்லது ஏதாவது ஒன்று செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஊக்குவிக்கப்பட்டு அவன் தள்ளப்படுகின்ற நிலையில், அவன் அத்தகைய முடிவுக்குத்  தள்ளப்படுகிறான். கொலை செய்வதற்கான எண்ணம், உத்தேசம், நோக்கம், செயல் படவேண்டும் என்ற தூண்டுதல் உணர்ச்சி முதலிவற்றைப் பற்றி மனோதத்துவ ரீதியில் ஆராயவேண்டும்.  குறிப்பாக அகிம்சையை போதிக்கும் தத்துவம் நாட்டில், எவனும் கொலை செய்ய மாட்டான். அந்நிலையில், அஹிம்சையை மீறி, மறுபடியும் அவன் ஹிம்சை / வன்முறை செயலில் ஈடுபடுவது செய்யத் தூண்டுவது எது என்று தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் 600 வருடங்களாக, முகமதிய படையெடுப்பு, அநியாயங்கள் கொலைகள், முதலியவற்றை கண்டும், அனுபவித்தும், வருத்தப்பட்டும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல 300 வருடங்களாக ஐரோப்பிய-ஆங்கிலேய ஆட்சிகளால், நேராகவும் மறைமுகமாகவும்  பற்பல குரூரங்களை, சட்ட விதி முறைகள் மூலமும், பட்டினி வரி விதிப்பது போன்ற அடாவடித்தனங்களைம் அனுபவித்திருக்கிறார்கள். அதனால்தான் சில நேரங்களில் அவர்கள் வன்முறை என்ற நிலைகுத் தள்ளப்பட்டுள்ளனர். சௌரி-சௌரா வன்முறை பற்றி அதிகமாகவே அலசப்பட்டுள்ளது இது சமீப கால நிகழ்வு என்பதனால் குறிப்பிடப்படுகிறது அதேபோலத்தான் இந்த ஸ்டைன்ஸ் கொலை வழக்கும்.

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists-2

இந்து என்பவன் எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான்: ஒரு இந்து என்பவன், பொதுவாக எந்த உயிரையும் கொல்ல நினைக்கமாட்டான். ஈ.,எறும்பு போன்றவற்றை கூட நசுக்க தயங்குவான். குறிப்பாக தாவர உணவு உண்பவன் எத்தகைய உயிர்கொலை அல்லது துன்புறுத்தலுக்கும் உடன்பட மாட்டான். அந்நிலையில் ஸ்டென்ஸை தீவைத்து கொளுத்தி கொன்றனர் எனும்பொழுது அவ்வாறு ஏன் நடந்தது என்பதையும் உன்னிப்பாக ஆராய வேண்டும். அவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள் என்பது மட்டும் முக்கியமான காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. அதாவது அந்த காரணம் கொல்வதற்கு ஊக்குவிக்கும் அல்லது தூண்டும்முறையில் உள்ளது என்று சொல்ல முடியாது.  உடல், உயிர், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம், முதலிய சித்தாந்தங்களை நம்புகின்ற ஒரு பாமர மனிதன், அதாவது ஒரு சாதாரண இந்து, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொள்ளமாட்டான். ஆகவே அங்கிருந்த வனவாசிகள் மற்றும் எஸ்சி மக்கள் எதற்காக இவரரை கொல்ல வேண்டும் என்பது பற்றி, நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists

ஸ்டைன்ஸை கொல்லும் அளவிற்கு மனப்பாங்கு எவ்வாறு உண்டாகி இருக்கும்?: நமக்கு தெரியும் விவரங்களிலிருந்து,

  1. இவன் ST-SC மக்களுக்கு இடையே வேறுபாடுகளை உண்டாக்கினான்,
  2. எஸ்.டி.யை, எஸ்சியாக மாற்றுவேன் என்று செயல்பட்டிருக்கிறான்
  3. பாரம்பரிய விழாக்கள் சடங்குகள் நடப்பது தடுத்திருக்கிறான்,
  4. ஒருவேளை அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் எதிராக எதையாவது சொல்லி பிரச்சாரம் செய்திருக்கலாம்
  5. குறிப்பாக நீ வணங்கும் தெய்வங்கள் எல்லாம் போய்
  6. அவை உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது,
  7. இப்பொழுது உங்களை பலர் பாதித்து வருகின்றனர் ஆனால், அவர்களை உங்கள் தெய்வங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை

 என்ற பாணியில் அவன் போதித்திருக்கலாம். இவை அவர்களை பெருமளவில் மங்களை பாதித்து இருக்கும்; மனங்களிலும் குழப்பம் ஏற்படுத்தியிருக்கும்; பிறப்பில் இருந்து இறக்கும் வரை அவர்களது குல தெய்வங்களை நம்பி வாழ்ந்தவர்கள், இத்தகைய போதனை அல்லது பிரச்சாரம் மனதளவில் வெகுவாக பாதித்து இருக்க வேண்டும். அவர்களுக்குள்ளேயே மோதல்கள், சண்டைகள், கலவரங்கள் ஏற்படசெய்து, ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது, கொல்வது என்ற நிலையில் இருக்கின்ற நிலையில் இத்தகைய தூண்டுதல், அவன் மீது அதிக அளவில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்

August 23, 2008 - assassinated by Maoist-christian terrorists-4

ஸ்வாமி லக்ஷ்மானந்தா முன்னரே பலமுறை தாக்கப் பட்டுள்ளார்: முன்னர் கிருத்துவர்களால், இவர் பலமுறை தாக்கப் பட்டுள்ளார். பேரூந்தில் சென்று கொண்டிருந்த பிரம்மநிகாவ் கிராமத்திற்குச் செல்லும் போது, பன்னாவைச் சேர்ந்த சுக்ரிபா சிங் என்ற  கிருத்துவத் தலைவர், வழி மறித்து, தாக்கினர். அதில் டிரைவர், பாதுகாவளி மற்றும் இவர் காயமடைந்தனர். தாக்கியவர்களில் ஒருவரை, காங்கிரஸ் ராஜ்ய சபா எம்பி, ராதா கன்ட நாயக் [Radhakant Nayak[2] ] என்று அடையாளம் கண்டு, விசாரணையில் தெரிவித்தார். இதுவரை, ஏழு முறை அவர்கள் தாக்கியதாகத் தெரிவித்தார். ஸ்வாமி கொலையுண்ட பிறகு, இவர் மீது குற்றம் ச்ச்ச்பட்டது[3]. எஸ்சிக்களை மதம் மாற்றும் திட்டங்களில் நாயக் கிருத்துவர்களுக்கு உதவினார். மதம் மாறிய பனோஸ் என்ற குய் மொழி பேசும் எஸ்.டிக்களுக்கு[ST] எஸ்.சி [SC] அந்தஸ்து வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் வேலை செய்தார்[4]. அதாவது எஸ்.டி தான் எஸ்.சிஐ விட இடவொதிக்கீட்டு விசயத்தில் நல்லது, சீக்கிரம் வேலை பலன் கிடைக்கும். ஆனால், எஸ்சி ஆக்குகிறேன் என்பதில் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. இருப்பினும், இவர் மற்றும் கிருத்துவர்கள் என்ன திட்டம் போட்டார்கள் என்று தெரியவில்லை. மதம் மாறிய எஸ்.சி கிருத்துவர்களுக்கு சலுகை இல்லை என்பதால், எஸ்.சி கிருத்துவ ஜனத்தொகையைப் பெருக்கி, அதை வைத்து, எஸ்சி கிருத்துவர்களுக்கு, இந்து-எஸ்சி இடவொதிக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக்க, இந்த திட்டத்தை பின்பற்றினார் என்ரும் ஊகிக்கலாம். இருப்பினும், அம்மகளிடையே வெறுப்பை உண்டாக்கி, பிரிவுகள் ஏற்படுத்தி, கலவரங்களை உண்டாக்க திட்டம் போட்டது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Radhakant Nayak IAS, Congress

[1] Vedaprakash, Psychology of violence and non-violence,

[2] Radhakant Nayak is an Indian politician belonging to the Indian National Congress party. He is a Member of the Parliament of India representing Orissa in the Rajya Sabha, the upper house of the Indian Parliament. Radhakant Nayak, a 1962 batch IAS officer. Nayak is also connected with the Young Men’s Christian Association (YMCA) and is one of the most high-profile Christians in Orissa.

In October 2007, the Kandhamal district Kui Samaj Coordination Committee demanded his resignation. The rationale for the demand was Nayak’s support for classifying Panas as Kui tribals, a move that the KSCC opposed. In October 2008, Nayak was accused by local Hindu groups, including the chapters of the BJP and VHP, of being behind the murder of Swami Laksmanananda Saraswati, and police have been investigating persons close to him.

Nayak is under investigation by the Orissa Police as of December 2008. Nayak has termed the allegations “defamation and maligning of my character”.

[3] http://archive.indianexpress.com/news/net-closes-in-on-cong-mp-for-orissa-swami-s-murder/403507/

[4] The Mumbai Mirror, Congress MP fears slain VHP leader’s followers may target him, By Lakshmi Iyer | Updated: Aug 29, 2008, 03:25 IST .

Congress Rajya Sabha MP from Orissa Radhakant Nayak, who is known to have openly crossed swords with slain VHP leader Swami Lakshmananda Saraswati on the conversion issue, is staying put in Delhi as he fears for his life. According to the Kandhamal police website, the conversion of tribal population has been a major source of trouble in the area. The numbers of Christians in the district has been increasing steadily and, as per 1991 Census, account for 15 per cent of the population. There is opposition to the activities of missionaries in some areas such as Kotagarh, Balliguda, Sarangada, Phiringia PS areas. Due to this recent development, there is ill-feeling and tension on communal lines in villages. Sources said Nayak’s efforts to get ST status for Kui-speaking Panos who have converted to Christianity has been one of

 the causes for communal friction. Nayak is a Dalit who  belongs to the Pano caste. Congress sources said Nayak refuses to visit Orissa fearing for his life. On Wednesday, he reportedly met Congress president Sonia Gandhi and sought extra security cover for himself, stating that he feared a revenge attack.

https://mumbaimirror.indiatimes.com/news/india/Congress-MP-fears-slain-VHP-leaders-followers-may-target-him/articleshow/15846789.cms?

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

பிப்ரவரி 26, 2018

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

Joseph Hospise- Vaiko statement - 25-02-2018

2018ல் முழித்துக் கொண்ட அரசியல்வாதிகள்: இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்  பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “பாலேஸ்வரம் கருணை இல்லம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை  எடுக்க வேண்டும்”என்று வலியுறுத்தி உள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜூன் சம்பத் தலைமையில் செங்கல்பட்டு டிஎஸ்பியிடம் நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  இதுகுறித்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் கருணாகரன் என்பவர் கூறும்போது, இந்தக் கருணை இல்லம் மர்மமாகவே இருக்கிறது.  இறந்தவர்களின் உடல்களை எரிக்காமல், புதைக்காமல் அப்படியே அழுக விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக புகார்  அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்போதாவது அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்[1].

Joseph Hospise- Vaiko - seeman, statement - 25-02-2018

வைகோ அறிக்கை – 25-02-2018: வைகோ[2], “இந்தச் செய்தியை அறிந்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர். இதை அறிந்து, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட .தி.மு.. அவைத் தலைவர் ஜி.கருணாகரன், காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.. தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர். ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்ம பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது[3]. எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பிணக்குவியல்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; மேலும் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”, என்று கூறியுள்ளார் [4].

bones-sold-from-dead-bodies-dinakaran-21-02-2018

நாம் தமிழர் கட்சி சீமானின் அறிக்கை: இதே போன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[5]:- பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடிவிடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்து இருக்கிறது. அங்குள்ள முதியவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறைகளில் வைக்கப்பட்டு, எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும். நடைபெற்ற மரணங்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளை போல தமிழக அரசே முதியோர் இல்லங்களை நிறுவ வேண்டும்[6]. சரி அப்படி என்ன எலும்புகளில் விசயம் உள்ளது என்று பார்த்தால், கீழ்கண்ட விவரங்கள் வெளிவருகின்றன.

Joseph Hospise- Vaiko - seeman, statement - 26-02-2018-DT

எலும்பு, எலும்பு பவுடர் முதலியவற்றின் உபயோகம்: தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது. படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள “பகீர்’ தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது[7].

Bone export- illustrative figure

எலும்பு பவுடரின் விலை, ஏற்றுமதி: மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[8].

Joseph Hospise- banner with names

ஜோசப் எலும்பு வளாகத்தை பாராட்டி எழுதியுள்ள கட்டுரைகள், எடுக்கப் பட்டுள்ள வீடியோக்கள்: இத்தனை விவகாரங்கள் இருந்தாலும், உண்மையினை அறியாமல், பாராட்டி “கீற்று” போன்ற இணைதளத்தில், கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன[9]. புலன் விசாரணை ஜார்னலிஸம் என்றெல்லாம் பேசுகின்ற காலத்தில், “மனிதநேயம்” போர்வையில் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது[10]. இன்றைக்கு மாற்றி எழுதப்படுமா என்று பார்க்க வேண்டும். அதேபோல பாராட்டும் வீடியோக்களும் உள்ளன. இப்பொழுது தான், இந்த விவகாரங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சேர்ந்துள்ளன. இன்றைக்கு, மறுபடியும் விஜயம் செய்து வீடியோவை எடுத்து உண்மையினை காட்டுவார்களா அல்லது மாற்றுவார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

26-02-2018

Human skeleton parts - rate fixed

[1] தி.இந்து, பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல், எலும்புக்கூடு விற்பனை; பாதாள அறையை சோதிக்க வேண்டும்: வைகோ, Published :  25 Feb 2018  18:07 IST; Updated :  25 Feb 2018  18:34 IST.

[2]

http://tamil.thehindu.com/tamilnadu/article22850402.ece

[3] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[4] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[5] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[6] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[7] தினமலர், எலும்பு பவுடர் ஏற்றுமதி, Jan 3, 2010.

[8]http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?print=1&news_id=6152&ncat=&archive=1&showfrom=1/3/2010

[9] கலிவரதன்,ஒரு இல்லம்அதில் வாரத்திற்கு 5 மரணம், 02 நவம்பர் 2012.

[10] http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/21855–5-

 

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வது – கிருத்துவ மரண திருவிளையாடல்கள் (1)

பிப்ரவரி 22, 2018

சாகும் தருவாயில் உள்ள கிழங்களை சாக வைப்பது, பிணங்களைப் பெட்டிகளில் அடைப்பது, அழுக வைப்பது, எலும்புப் பொடியை ஏற்றுமதி செய்வதுகிருத்துவ மரண திருவிளையாடல்கள் (1)

Saint Joseph,oldage-Thomas and two

ஜெயின் ஜோசப் ஹாஸ்பிக்ஸ் அல்லது செயின்ட் ஜோசப் ஹாஸ்பிக்ஸ்: செங்கல்பட்டு அருகே சென்ற காய்கறி வண்டி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த வண்டியில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என ஒரு பெண் குரல் கேட்டு உள்ளது[1]. உடனடியாக  பொதுமக்கள் சந்தேகம் அடைந்து  வாகனத்தை  பிடித்தனர். அப்போது வண்டியின் காய்கறிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆண் பிணத்தை, பொதுமக்கள் கைப்பற்றினர்[2]. உயிருடன் இருந்த 2 முதியவர்களும் மீட்கப்பட்டனர்[3].  சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அந்த முதிய பெண்ணும் மீட்கப்பட்டார்[4]. வயதானவர்களை கொன்று எலும்புகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பல் என  தெரியவந்து உள்ளது. அந்த மினி லாரியில் இருந்த ராஜேஷ் என்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்[5]. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்[6].  வாகனம் திண்டுக்கல்  ரிஜிஸ்ரேஷன் வாகனம். இரண்டு முதியவர்களும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஆதரவு அற்றவர்கள். என தெரியவந்து உள்ளது. அந்த வாகனம் ஜெயின் ஜோசப் ஹாஸ்பிக்ஸ்[7] [St. Joseph’s Hospice] என்ற தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த அமைப்பு ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள முதியவர்களை  பராமறிக்கும் நிறுவனமாகும். இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் 7 ஆண்டுகளாக புகார் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Saint Joseph, Paleswaram

இறப்பவர்களை வைத்து செய்யும் ஊழியமும், குரூர வியாபாரமும்: ஹோஸ்பைஸ் என்ற அமைப்பு முதலில் 2006ல் மேட்டூர் கேட், கோடை ரோடு அருகில், திண்டுகல் மாவட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு இறக்கும் தறுவாயில் சுமார் 325 பேர் [140 பெண்கள், 185 ஆண்கள்] இருக்கிறார்கள். வாரத்திற்கு எழு பேர், அதாவது தினமும் ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார்[8]. இரண்டாவதாக, செங்கல்பட்டில், பாலேஸ்வரத்தில் 2011ல், ஆரம்பிக்கப்பட்டது[9]. மூன்றாவது, 2014ல் தாம்பரத்தில், இரும்புலியூரில் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு 30 பேர் தங்கலாம்[10], அதாவது, தங்கி சாகலாம். நான்காவதாக, வேலூரில் தொடங்குவதாக திட்டம் உள்ளது. இவ்வாறு இறக்கும் தருவாயில் கைவிடப் பட்டவர்களை ஆதரித்து, வைத்து, பிறகு, இறந்த பிறகு, காரியங்கள் செய்வது நன்றாகத் தான் உள்ளது. ஆனால், அதன் பின்னணியில், இவ்வளவு குரூரம் இருப்பதை, யாரும் எதிர்பார்ந்திருக்க முடியாது. கிருத்துவர்கள் இவ்வாறெல்லாம் யோசிப்பார்களா என்று நினைத்துப் பார்க்கவே திகைப்பாக இருக்கிறது. இந்த அளவுக்கு குரூரம் வருகிறது என்றால், அவர்களுடைய வன்மம், ஆரம்பித்திலிருந்தே, அவ்வாறு வளர்த்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதனால் அவ்வாறு- அத்தகைய அரக்கத் தனமான காரியத்தை செய்யவே முடியாது.

Saint Joseph, Tambaram, Irumbiliyur

இரும்புலியூரிலிருந்து பாலேஸ்வரத்திற்கு பிணம் சென்றதேன்?: சாப்பாடு, தங்க இடம் மற்றும் பாதுகாப்பு அளிப்பதாக கூறி அழைத்து வந்து, பட்டினிப்போட்டு கொலை செய்து, அவர்களின் உடலில் உள்ள எலும்பு உள்பட பல உடல் பாகங்களை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைக்கு கடத்தப்படுவதாக கருணை இல்லத்தின் மீது புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், கருணை இல்லத்தில் 8 மணி நேரம் ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராம மலையடிவார பகுதியில் தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் கடந்த 7 வருடங்களாக செயின்ட் ஜோசப் கருணை இல்லம் /  செயின்ட் ஜோசப் ஹாஸ்பைப் எனும் முதியோர் கருணை இல்லம், 16 ஏக்கர் பரப்பளவில் தாமஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள், தெருக்களில் பிச்சை எடுப்பவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த கருணை இல்லத்தில் ஆண்கள், பெண்கள் என 369 பேர் தங்கியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இங்கு தங்கி வருகின்றனர். இதுதவிர, சமையல் செய்பவர்கள், முதியவர்களை பராமரிப்பவர்கள் உள்பட 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கருணை இல்லத்தின் கிளை தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் உள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் கருணை இல்லத்தில் விஜயகுமார் (75) என்பவர் இறந்ததாக கூறப்படுகிறது. இவரது சடலத்தை பாலேஸ்வரம் கொண்டு செல்ல கருணை இல்லத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸில் ஏற்றி செல்லப்பட்டது.

Bones sold from dead bodies - Dinakaran ----21-02-2018

வேனில் இருந்து அலறல் சத்தம் கேட்டதும், பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர்:  ஆம்புலன்ஸ் உத்திரமேரூர் அருகே எடையார்பாக்கம் காட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது, வேனில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வேனை துரத்தி மடக்கி பிடித்தனர். வேனில் விஜயகுமார் சடலத்துடன் காய்கறி மூட்டைகளும், திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ்(72), திருவள்ளூரை சேர்ந்த அன்னம்மாள்(74) ஆகியோர் இருந்தனர். பிணத்துடன் பயணம் செய்ததால் பயத்தில் அலறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, கிராம மக்கள் சாலவாக்கம் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.  இதை தொடர்ந்து, போலீசார் மூதாட்டி அன்னாம்மாளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அன்னம்மாள்”  எனக்கு பயமாக உள்ளது. உடனே, எனது உறவினர் வீட்டிக்கு அனுப்பி விடுங்கள்’’ என்று அழுதப்படி கூறினார். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அன்னாம்மாளின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் அன்னாம்மாளை நேற்று முன்தினம் இரவே அழைத்து சென்றனர்.

Old-men-Dead bodies smuggled -Dainakaran, 20-02-2018

ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டது: செல்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ராஜேஷ் சடலத்தை பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, அங்கு கூடியிருந்த மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலவாக்கம்- உத்தரமேரூர் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில், ஆம்புலன்சின் முன் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.  சம்பவ இடத்துக்கு வந்த சாலவாக்கம் எஸ்ஐ கண்ணன், தாசில்தார் அகிலா தேவி மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து. அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து, ஆம்புலன்சில் பிணமாக இருந்த விஜயக்குமார், எலும்பு கூடுக்காக சாகடிக்கப்பட்டாரா, இயற்கையாக இறந்தாரா என்பது குறித்து ஆய்வு  செய்ய சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

22-02-2018

Dead bodies smuggled. elder released -Hindu tamil, 21-02-2018

[1] தினத்தந்தி, செங்கல்பட்டு அருகே காய்கறிக்குள் வைத்து பிணம் கடத்தல் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர், பிப்ரவரி 20, 2018, 03:47 PM.

[2] https://www.dailythanthi.com/News/State/2018/02/20154714/Near-Chengalpattu-Keep-it-in-the-vegetable-Corpse.vpf

[3] தமிழ்.வெப்துனியா, மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!, புதன், 21 பிப்ரவரி 2018.

[4] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/8th-international-womens-conference-by-the-art-of-living-118022000064_1.html

[5] தினகரன், செங்கல்பட்டு அருகே காய்கறி வண்டியில் முதியவர் பிணம் கடத்தல்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர், 2018-02-20@ 15:26:11

[6] http://www.dinakaran.com/latest_Detail.asp?Nid=377679

[7] St. Joseph’s Hospice, Paleswaram Village, Salavakkam(via), Uthirameroor (Tk), Kancheepuram District, Tamilnadu 603107;  +91­ 9360376678/+91­ 9976211721 /+91 9684307554;  fatherthomas1950@gmail.com

[8] Our first Hospice situated at Mettur Gate, near Kodai Road , in Dindigul District was started in 2006 and has now 325 dying destitute of which 140 are women and 185 men. Every week there is an average of 7 persons who die here in human dignity .

http://www.stjosephshospices.com/web/index.php?r=site%2Fabout

[9] We started a second Hospice not far from Chingleput, only 90 minutes drive away from Chennai airport in 2011. 16 acres of land was donated by a kind soul where 500 patients from the cities of Chennai,Pondichery,Vellore etc. can be accommodated. Situated 16kms.close to Vedanthangal, a world famous bird sanctuary, the second Hospice is a sanctuary for ill and homeless destitute who otherwise die on the pavements and gutters, uncared, unloved and unmourned.

http://www.stjosephshospices.com/web/index.php?r=site%2Fabout

[10] A third, small Hospice at Tambaram near the Chennai airport was started as a collection centre in December 2014 where only about 30 patients are accommodated. When the traffic is a bit calm,during the wee hours of the morning, we bring them to our bigger second Hospice in batches of 6 to 8 patients. We are looking forward to starting similar holding Hospices in the North Chennai area and the city of Pondichery. Our good news is that the Salesians of Chennai Province has come forward to give us a 3.75 acre plot of land with a building near Vellore. We hope to start a 4th Hospice there in April 2016 for about 150 dying destitute.

http://www.stjosephshospices.com/web/index.php?r=site%2Fabout

ஏசுவின் உடல் அல்லது சரீரம் எது சரி – திருப்பலிப் புத்தகம் தடை அல்லது தடை நீக்கம் எது சட்டப்படி சரியானது – முதலிய விவாதங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வது – செக்யூலிரஸ இந்தியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது (1)

திசெம்பர் 22, 2013

ஏசுவின் உடல் அல்லது சரீரம் எது சரி – திருப்பலிப் புத்தகம் தடை அல்லது தடை நீக்கம் எது சட்டப்படி சரியானது – முதலிய விவாதங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வது – செக்யூலிரஸ இந்தியர்கள் கவனிக்க  வேண்டியுள்ளது (1)

A brief history of Roman Missal

ஒருவேளை தமிழ் மக்களுக்கு முதன்முறையாக கிருத்துவ இறையியலில் எவ்வாறு வேறுபாடுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.  “யூகாரிஸ்ட்” / திருப்பலி பற்றி எப்பொழுதுமே கிருத்துவத்தில் பிரச்சினைதான், விவாதம் தான், சண்டைதான். உடல் உயிர்பெற்று எழுந்ததா இல்லையா என்பதிலிருந்தே அந்த சண்டை ஆரம்பித்துள்ளது. அதனை “கல் நகர்ந்ததா, இல்லையா?” என்றும் விவாதிப்பர். பிறகு “யூகாரிஸ்ட்” / திருப்பலியில் உண்மையிலேயனப்பமும் / ரொட்டியும் மற்றும் சாராயம் / மது உண்மையிலேயே தினம்-தினம் ஏசுவின் சதையாகவும் ரத்தமாகவும் மாறுகிறதா இல்லையா என்ற விவாதங்களும் உண்டு. இது கத்தோலிக்க உள்-சண்டையில்லை, கிருத்துவத்திலேயே உள்ள சண்டை[1]. நடுவில் முஸ்லிம்களும் “ஏசு சிலுவையில் இறக்கவில்லை” என்றும் தமக்கேயுரிய தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

Christian row over Missal

செக்யூலிரஸ இந்தியர்கள், நம்பிக்கையுள்ள இந்துக்கள் கவனிக்கவேண்டியது என்ன?: இது உண்மையான கிருத்துவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையாக இருப்பின், நம்பிக்கையுள்ள இந்துக்களும் அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இரண்டாவது வாடிகன் சங்கம், இந்தியாவில் உள்கலாச்சார மயமாக்கல், அதற்கு வாடிகன் ஒப்புதல், பிறகு சில கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு, ஆனால், பெரும்பாலான அதாவது பிஷப் மற்றும் இந்திய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கார்டினல் இவர்கள் ஒப்புக் கொள்வது என்ற ரீதியில் 1960களிலிருந்து செயல்படும் விவகாரங்கள் இந்துக்களைப் பாதித்து வருவதால், அவர்களும் இந்த இறையியல் மோதல்களை கவனிக்க வேண்டியுள்ளது. கிருத்துவர்களுக்கிடையே பேசித் தீர்க்க முடியவில்லை என்பதினால் கோர்ட்டுகளுக்குச் சென்று விட்டதால், அவை செய்திகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.  எனவே ஏசுவின் உடல் அல்லது சரீரம் எது சரி – திருப்பலிப் புத்தகம் தடை அல்லது தடை நீக்கம் எது சட்டப்படி சரியானது – முதலிய விவாதங்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வது – முதலியவற்றை செக்யூலிரஸ இந்தியர்கள் கவனிக்க  வேண்டியுள்ளது.

A brief history of Roman Missal-G. Alex Benziger

திருப்பலி புத்தகத்திற்கு எதிராக அலெக்ஸ் பென்ஷிகர் மற்றும் டாக்டர் லியோனார்டு வசந்த் தாக்கல் செய்த மனு (1995): சென்னை 4–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் மண்ணடியை சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர் மற்றும் டாக்டர் லியோனார்டு வசந்த், பெர்னாண்டோ [G. Alex Benziger[2], Leonard Vasanth[3] and J.V. Fernando] ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘ கத்தோலிக்க திருச்சபை வாடிகன் நகரில் உள்ள போப் ஆண்டவரின் கட்டுப்பாட்டிலும் அதிகாரத்தின் கீழும் செயல்படுகிறது. போப் ஆண்டவர், அந்தந்த பகுதிகளுக்கு பேராயர்களை நியமிப்பார். ஒவ்வொரு பேராயத்தின் கீழும் பங்குகள் உருவாக்கப்பட்டு, அந்தந்த பங்குகளில் உள்ள ஆலங்களில் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன[4].  இவர்கள் முன்னர் ஒரு பைபிள் வெளியிட்டதை எதிர்த்தும் வழக்குத் தொடர்ந்தனர்[5].

Eucharist medieval or modern depiction

திருப்பலி புத்தகம் உருவான வரலாறு: மனுதாரர்கள், அப்புத்தகம் எப்படி உருவானது என்று கீழ்கண்டமுறையில் விளக்கினார்கள்:

  1. 1.       “போப் ஆண்டவர் 5ம் பத்திநாதர் 1570ல் கத்தோலிக்க ஆலயங்களில் நடைபெறும் திருப்பலியை உருவாக்கி லத்தீன் மொழியில் உலகெங்கும் ஒரே முறையில் திருப்பலி நடத்த வழிவகை செய்தார்.
  2. 2.       கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலிகள் அனைத்தும் 1917-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருச்சபை சட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன.
  3. 3.       பின்னர் 2ம் வாடிகன் கவுன்சில் படி,  1965-ஆம் ஆண்டு முதல் [Pope Paul VI granted local translation of the Missal] சம்பந்தப்பட்ட பிராந்திய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்று வருகிறது[6].

கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி பூஜை லத்தீன் மொழியில் நடைபெற்று வந்தது. இந்த நடைமுறை 15–ம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1968–ம் ஆண்டு போப் ஆண்டவர் லத்தீன் மொழியில் உள்ள திருப்பலி புத்தகத்தை பல்வேறு நாடுகளில் பேசப்படும் உள்ளூர் வட்டார மொழிகளில் மொழிபெயர்த்து கொள்ள அனுமதி அளித்தார். அதன்படி 1977–ம் ஆண்டு தமிழகத்தில் திருப்பலி புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதற்கு போப் ஆண்டவரும் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இந்நிலையில் இப்புத்தகத்தில் சில வாசகங்கள் மற்றும் வார்த்தைகள் திருத்தி அமைக்கப்பட்டு 1993–ம் ஆண்டு புதிய புத்தகத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் வெளியிட்டுள்ளனர். உதாரணமாக  திருப்பலியில் ‘இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் சரீரம் என்ற வாக்கியம் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல் என்று மாற்றப்பட்டுள்ளது. உடலுக்கும் சரீரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன[7]

 

இந்த திருப்பலிப் புத்தகத்திற்கு போப் அனுமதி வழங்கவில்லை: இந்த திருத்தி அமைக்கப்பட்ட புத்தகத்துக்கு போப் ஆண்டவர் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்த புத்தகத்தின் அடிப்படையில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி நடந்து வருகிறது. எனவே அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாமல் திருத்தி அமைக்கப்பட்ட இந்த திருப்பலி புத்தகத்தை கத்தோலிக்க தேவாலயங்களில் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட இப்புத்தகம் கத்தோலிக்க திருச்சபை சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும்’’, இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்[8]. இந்த வழக்கு கடந்த 1995–ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வந்தது.

போப் ஆண்டவரின் அனுமதி பெறாத திருப்பலி புத்தகத்தை பயன்படுத் தடை:  ‘ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், 1993ல், வெளியிடப்பட்ட திருப்பலி புத்தகத்தை [ ‘Missal’ (‘Thiruppali book’)[9]] வாடிகனிடமிருந்து அனுமதி வரும்வரை பயன்படுத்தக் கூடாது’ என, சென்னை, சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது[10]. கடந்த, 1995ல், இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை மற்றும் புதுச்சேரி பிஷப்புகள் மனுதாரர்கள் இவ்வழக்கில் எந்த தகுதியும் இல்லை என்றும், மொழிபெயர்ப்புகள் பற்றி வினா எழுப்பவும் அவர்களுக்கு தகுதியில்லை என்றும் வாதிட்டனர்[11]. திருப்பலிப் புத்தகம் ஆன்மீகம் மற்றும் மதவிசயங்களைக் கொண்டுள்ளதால், அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டிருப்பின், அவர்களுக்கு மேலான மத-அதிகாரிகளிடம் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினர்.

இவ்வழக்கை விசாரித்த, சென்னை, நான்காவது, உதவி நீதிபதி, டி.சந்திரசேகர் பிறப்பித்த உத்தரவு: “மொழிபெயர்க்கப்பட்ட, திருப்பலி புத்தகத்தைப் பார்க்கும் போது, அதிர்ச்சியளிக்கிறது. திசை திருப்பும் விதத்தில், மொழி பெயர்ப்பு உள்ளது. மொழிபெயர்ப்புக்கு, போப் ஆண்டவரின் ஒப்புதல் கிடைத்தது என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை[12]. சட்டவிரோத நடவடிக்கையில், கோர்ட் குறுக்கிடவில்லை என்றால், தங்கள் விருப்பப்படி, மொழிபெயர்த்து வெளியிடும் எண்ணம், ஒவ்வொருவருக்கும் வரும். எனவே, ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், 1993ல் வெளியிடப்பட்ட, திருப்பலி புத்தகத்தை பயன்படுத்த, பிஷப் மற்றும் பாதிரியார்களுக்கு தடை விதிக்கப்படுகிறது”, இவ்வாறு, நீதிபதி டி.சந்திரசேகர் உத்தரவிட்டுளளார்[13]. தினமலரின் படி இப்படியிருக்கும் போது, மாலை மலரில் இவ்வாறுள்ளது: இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.சந்திரசேகர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ‘‘1993–ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட திருப்பலி தமிழ் மொழி புத்தகத்துக்கு முறையான அனுமதி பெறவில்லை. மேலும் பல வாசகங்கள், வார்த்தைகள் முறையாக மொழி பெயர்க்கப்படவில்லை. எனவே, திருத்தி அமைக்கப்பட்ட இந்த புத்தகத்தை திருப்பலி பூஜைக்கு பயன் படுத்த கூடாது. இந்த புத்தகம் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை சட்டத்துக்கு எதிரானது. இப்புத்தகம் திருத்தியமைக்கப்பட்டது செல்லாது’’, என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விதிக்கப் பட்ட தடைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு[14]:. இதை எதிர்த்து, சென்னை முதலாவது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், 14 பிஷப்கள் முறையிட்டனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “மத விவகாரங்களில், சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது’ என, குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்[15]. கடந்த 1995–ம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது[16].

பாதிரிகள் வேறுபட்ட கருத்துகளைக் கூறுவது: பாதிரிகள் இப்புத்தக உபயோகம், வார்த்தைப் பிரயோகம் பற்றி மாற்றுக் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். இது அடிப்படைவாதிகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும்ஐடையே நடக்கும் யுத்தமாகும் என்றும் விளக்கியுள்ளார்கள்.

  • மதுரை பாதிரி எல். ஆனந்தம்[17], “திருப்பலி புத்தகங்களில் மூன்று வகையான மொழிப்பெயர்ப்புகள் உள்ளன. போபொ பயஸின் புத்தகம் 16ம் நுற்றாண்டைச் சேர்ந்தது. 1969ல் போப் பால் அனுமதி கொடுத்தது லத்தீனில் உள்ளது. 2010-11 ஆண்டுகளில் போப் பெனிடிக்ட் சமீபத்தைய புத்தகத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். உடல் என்ற வார்த்தை பிரயோகம் தவறென்று சொல்ல முடியாது”, என்று சரித்திரத்தை விளக்கினார்.
  • பாதிரி ஜோ அருண், “மனுதாரர்கள் கிரேக்கக் காலத்திற்கும், அதற்கு முன்னரும் செல்ல விரும்புகிறார்கள். பைபிள் பல மொழிகளில் இருந்து வந்துள்ளது. காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளது. இது அடிப்படைவாதிகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும்ஐடையே நடக்கும் யுத்தமாகும். காலத்த்ற்கேற்ப மக்களுடைய மொழியில் ஒப்புக்கொள்ளும் முறையில் இருக்கும் மொழிபெயர்ப்புத்தான் தேவைப்படுகிறது”, என்று தமக்கேயுரிய முறையில் விளக்கம் அளித்தார்[18].
  • பாதிரி வின்சென்ட் சின்னதுரை கூறும் போது, “சிலர்தான் இந்த மொழிபெயர்ப்பை எதிர்க்கின்றனர். முன்னர் எப்படி லத்தீனிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கக் கூடாது என்று எதிர்த்தனரோ அதேப்போன்ற அடிப்படைவாதிகள் தாம் இப்பொழுதும் எதிர்க்கின்றனர்”, என்று விளக்கம் கொடுத்தார். இவர் கத்தோலிக் பிஷப் காம்பரன்ஸின் செயலாளர்களில் ஒருவர்[19].

வேதபிரகாஷ்

© 22-12-2013


[2] St. Francis Xavier’s Church, Broadway Parish.  http://www.blogger.com/profile/01601552370997415024

[3] Dr. S. Leonard Vasanth, Advocate, St. Fatima Church, Kodambakkam Parish, http://alexbenziger.blogspot.in/

[6] தினமணி, 1993-ஆம்ஆண்டுதிருத்தப்பட்டதிருப்பலிபுத்தகம்:  பயன்படுத்த நீதிமன்றம்தடை, By dn, சென்னை, First Published : 07 November 2013 03:34 AM IS

[9] A civil court here has banned the use of a 1993 Tamil translation of Catholic prayer book ‘Missal’ (‘Thiruppali book’) until prior approval is obtained from the Vatican. Noting that some words had been wrongly translated and some others removed in the Tamil version, the court recently declared the translation as incorrect and against the canonical law.

http://articles.timesofindia.indiatimes.com/2013-11-07/chennai/43773705_1_tamil-version-vatican-translation

[11] In their reply, the archbishops of Chennai and Puducherry said the petitioners did not have a locus standi as under the tenets of the religion, they did not have a right to question the translations. The prayers “involved spiritual and religious aspects of the church” and “the court did not have jurisdiction to go into the veracity of church’s authority.” If there was a doubt, “superiors and doctors of church” could be approached, they said.

http://articles.timesofindia.indiatimes.com/2013-11-07/chennai/43773705_1_tamil-version-vatican-translation

[13] தினமலர், போப்ஆண்டவரின்அனுமதிபெறாததிருப்பலிபுத்தகத்தைபயன்படுத்ததடை, பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2013,22:41 IST

[15] தினமலர், திருத்தப்பட்டதிருப்பலிபுத்தகம்: கீழ்கோர்ட்உத்தரவுக்குத்தடை, பதிவு செய்த நாள் : டிசம்பர் 21, 2013,23:34 IST

[17] When asked about the history of translation, Rev. Fr. L. Anandam, Rector, St Peters Seminary, Madurai, said there were three translations of the Missal in the past. After the Second Vatican Council in 1965, Pope Paul VI granted local translation of the Missal, which was in Latin and belonged to the period of Pope Pius V (16th century). Again, Pope Benedict XVI sanctioned the latest translation, which is in use since 2011-12. He said theologically there was nothing wrong with the word “udal”.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/court-restrains-bishops-from-using-liturgy-book/article5322683.ece

[18] Rev. Fr. Joe Arun, a cultural anthropologist, said the argument of the petitioners would turn the clock to the days of Hellenisation when the Bible was translated from Aramaic – the language Jesus and his disciples spoke – and Hebrew into Greek and symbolises the supremacy of the language of the conqueror and dispensing with culture specific translations. “Here, the battle is between conservatives and reformists. We need a culture specific Missal that accommodates the people’s language,” he said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/court-restrains-bishops-from-using-liturgy-book/article5322683.ece

[19] Fr. Vincent Chinnadurai, one of the secretaries of the All India Catholic Bishops Conference, said only a microscopic minority opposed the Missal 1993 and it was the same conservatives who opposed translation of Missal from Latin to Tamil.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/court-restrains-bishops-from-using-liturgy-book/article5322683.ece

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

ஜூலை 6, 2013

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

துறவித்துவம் அல்லது துறவி அந்தஸ்து (Sainthood) அளிக்கப்படுவது என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் ஒரு சிறப்பான நிகழ்சியாகக் கருதப் படுகிறது. ஒருவருக்கு அவ்வாறான நிலை, அந்தஸ்து அல்லது பதவி கொடுக்கப்படுவது பிரபலமாக அறிவிக்கப்படுகிறது. போப் 05-07-2013 வெள்ளிக்கிழமை அன்று இரண்டு போப்புகளுக்கு – போப் ஜான் பால் II [Pope John Paul II] மற்றும் போப் ஜான் XXIII [Pope John XXIII] துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கப்பட்டுவதாக அறிவித்தார்.

ஒன்றிற்கு மேற்பட்டஅற்புத / அதிசயநிகழ்சியை நடத்தியிருந்தால் துறவி அந்தஸ்து கொடுக்கப் படும்: அவ்வாறு அவர்கள் அறிவிக்கப்பட வேண்டுமானால், குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றிற்கு மேற்பட்ட அற்புத / அதிசய நிகழ்சியை நடத்தியிருக்க வேண்டும்[1]. போப் ஜான் XXIII 1958-1963 ஆண்டுகளிலும், போப் ஜான் பால் II 1978-2005 ஆண்டுகளிலும் போப்பாக இருந்தனர்[2]. ஆனால், இவ்விருவரும் இரண்டாவது அற்புத நிகழ்சியை (miracle) நடத்தவில்லையாம். இருப்பினும் போப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்து, சரத்துக்களைத் தளர்த்தி துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கத் தீர்மானித்துள்ளாராம்[3]. இப்பொழுது இரண்டு போப்புகள் இருப்பதால், இருவரும் துறவி அந்தஸ்து கொடுக்கும் நிகழ்சியில் பங்கு கொள்ளலாம். இது கிட்டத்தட்ட, கலைமாமணி விருது கொடுப்பது போல ஆகிவிட்டது எனலாம்.

கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் துறவிகளாகத்தான் அறியப் படுகின்றனர்: கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் அவர்களுடைய செயல்களால் அவர்கள் அறியப்படுகின்றனர். யாரும் அவர்களுக்கு அத்தகைய பட்டத்தையோ, சான்றிதழையோ, அங்கீகாரத்தையோ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் அவ்வாறு மதிக்கப்படுகிறார்கள், மரியாதை செய்யப் படுகிறார்கள். சில துறவியர், இறந்த பின்னரும் “ஜீவன் முக்தி” என்ற நிலையில் இறந்தும் இறவாமல், தமது சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். அத்தகைய அனுபவங்களை இந்தியாவில் இன்றும் பக்தர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

ஆதாரங்கள் இல்லையென்றல் உருவாக்கும் கத்தோலிக்கக் கிருத்துவம்: ஆனால், கிருத்துவத்தில் எல்லாவற்றிற்கும், விளம்பரம் செய்யப்படுகிறது, தேவைப்படுகிறது. ஒருவேளை, ஏதாவது இல்லை அல்லது தேவை என்றல் அவற்றை உருவாக்கி விடுகிறார்கள். இதனால் தான் போலிகள், கள்ளத்தனமான ஆவணங்கள், பொய்யான பொருட்கள், முதல்லியன்ன உருவாக்கப்பட்டுகின்றன. ஏனெனில், அவை இல்லையென்றால் நம்பிக்கையாளர்கள் நம்புவதில்லை. ஆரம்பத்திலிருந்து இப்படி பொய்யான விஷயங்கள் மீது ஆதாரமாக கிருத்துவ்ம் தோன்றியதால், உண்மை என்று அறிய முற்படும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தங்களது ஆதிக்கப்பலம், செல்வபலம், அரக்கத்தனமான சக்தி முதலியவற்றை வைத்துக் கொண்டு சமாளித்து விடலாம் என்ன்ற எண்ணம் தான் அவர்களை அப்படி தொடர்ந்து குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

இந்தியக் கிருத்துவர்களின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை: இந்தியாவில் இருப்பவர்களுக்கு உண்மை என்னவென்று நன்றாகவே தெரியும். அதனால் தான், தங்களது பொய்களை இங்கு விற்பதற்கு, ஆக்ரோஷமான யுக்திகளைக் கையாளுகின்றனர். புதிய பொருளை விற்பதற்கு எப்படி ஊற்பத்தியாளர் எல்லாவழிகளிலும் பொருளை விற்பதற்கு அதிரடி விளம்பரங்கள் முதலியவற்றை செய்வார்களோ, அதே பாணியில் இவர்களும் செயல்படுகின்றனர். மனம், ஆத்மா, உண்மை, உள்ளுணர்வு என்றெல்லாம் இருக்கும் இந்தியமதக் கொள்கைகளின் முன்பு அதனால்தான், ஒரு காலகட்டத்தில் செய்யலிழக்கிறது. இல்லையென்றால், இடைக்கால இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு, இந்து மதம் ஈடு கொடுத்திருக்க முடியாது. பிறகு வந்த ஐரோப்பிய கிருத்துவ அச்சுரத்தனத்திற்கு முன்பாகவும் நிலைத்திருக்க முடியாது. ஆனால், உலகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு, இரண்டையும் எதிர்த்து இன்றும் இந்திய / இந்து மதம் தழைத்திருப்பதால், அவைகள் தாம், இந்துவேடமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறதே தவிர, இந்துக்கள் யாரும் அவர்கள் போல வேடமிட்டு ஏமாற்றுவதில்லை.

வேதபிரகாஷ்

© 06-07-2013