Posts Tagged ‘துறவி’

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

ஜூலை 6, 2013

போப்பே பழைய போப்புகளுக்கு துறவி அந்தஸ்து கொடுக்கிறாராம்!

துறவித்துவம் அல்லது துறவி அந்தஸ்து (Sainthood) அளிக்கப்படுவது என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் ஒரு சிறப்பான நிகழ்சியாகக் கருதப் படுகிறது. ஒருவருக்கு அவ்வாறான நிலை, அந்தஸ்து அல்லது பதவி கொடுக்கப்படுவது பிரபலமாக அறிவிக்கப்படுகிறது. போப் 05-07-2013 வெள்ளிக்கிழமை அன்று இரண்டு போப்புகளுக்கு – போப் ஜான் பால் II [Pope John Paul II] மற்றும் போப் ஜான் XXIII [Pope John XXIII] துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கப்பட்டுவதாக அறிவித்தார்.

ஒன்றிற்கு மேற்பட்டஅற்புத / அதிசயநிகழ்சியை நடத்தியிருந்தால் துறவி அந்தஸ்து கொடுக்கப் படும்: அவ்வாறு அவர்கள் அறிவிக்கப்பட வேண்டுமானால், குறைந்த பட்சம் ஏதாவது ஒன்றிற்கு மேற்பட்ட அற்புத / அதிசய நிகழ்சியை நடத்தியிருக்க வேண்டும்[1]. போப் ஜான் XXIII 1958-1963 ஆண்டுகளிலும், போப் ஜான் பால் II 1978-2005 ஆண்டுகளிலும் போப்பாக இருந்தனர்[2]. ஆனால், இவ்விருவரும் இரண்டாவது அற்புத நிகழ்சியை (miracle) நடத்தவில்லையாம். இருப்பினும் போப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்து, சரத்துக்களைத் தளர்த்தி துறவி அந்தஸ்து (Sainthood) கொடுக்கத் தீர்மானித்துள்ளாராம்[3]. இப்பொழுது இரண்டு போப்புகள் இருப்பதால், இருவரும் துறவி அந்தஸ்து கொடுக்கும் நிகழ்சியில் பங்கு கொள்ளலாம். இது கிட்டத்தட்ட, கலைமாமணி விருது கொடுப்பது போல ஆகிவிட்டது எனலாம்.

கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் துறவிகளாகத்தான் அறியப் படுகின்றனர்: கிழக்கத்தைய மதங்களில் துறவிகள் அவர்களுடைய செயல்களால் அவர்கள் அறியப்படுகின்றனர். யாரும் அவர்களுக்கு அத்தகைய பட்டத்தையோ, சான்றிதழையோ, அங்கீகாரத்தையோ அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் அவ்வாறு மதிக்கப்படுகிறார்கள், மரியாதை செய்யப் படுகிறார்கள். சில துறவியர், இறந்த பின்னரும் “ஜீவன் முக்தி” என்ற நிலையில் இறந்தும் இறவாமல், தமது சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். அத்தகைய அனுபவங்களை இந்தியாவில் இன்றும் பக்தர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

ஆதாரங்கள் இல்லையென்றல் உருவாக்கும் கத்தோலிக்கக் கிருத்துவம்: ஆனால், கிருத்துவத்தில் எல்லாவற்றிற்கும், விளம்பரம் செய்யப்படுகிறது, தேவைப்படுகிறது. ஒருவேளை, ஏதாவது இல்லை அல்லது தேவை என்றல் அவற்றை உருவாக்கி விடுகிறார்கள். இதனால் தான் போலிகள், கள்ளத்தனமான ஆவணங்கள், பொய்யான பொருட்கள், முதல்லியன்ன உருவாக்கப்பட்டுகின்றன. ஏனெனில், அவை இல்லையென்றால் நம்பிக்கையாளர்கள் நம்புவதில்லை. ஆரம்பத்திலிருந்து இப்படி பொய்யான விஷயங்கள் மீது ஆதாரமாக கிருத்துவ்ம் தோன்றியதால், உண்மை என்று அறிய முற்படும் போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தங்களது ஆதிக்கப்பலம், செல்வபலம், அரக்கத்தனமான சக்தி முதலியவற்றை வைத்துக் கொண்டு சமாளித்து விடலாம் என்ன்ற எண்ணம் தான் அவர்களை அப்படி தொடர்ந்து குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

இந்தியக் கிருத்துவர்களின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை: இந்தியாவில் இருப்பவர்களுக்கு உண்மை என்னவென்று நன்றாகவே தெரியும். அதனால் தான், தங்களது பொய்களை இங்கு விற்பதற்கு, ஆக்ரோஷமான யுக்திகளைக் கையாளுகின்றனர். புதிய பொருளை விற்பதற்கு எப்படி ஊற்பத்தியாளர் எல்லாவழிகளிலும் பொருளை விற்பதற்கு அதிரடி விளம்பரங்கள் முதலியவற்றை செய்வார்களோ, அதே பாணியில் இவர்களும் செயல்படுகின்றனர். மனம், ஆத்மா, உண்மை, உள்ளுணர்வு என்றெல்லாம் இருக்கும் இந்தியமதக் கொள்கைகளின் முன்பு அதனால்தான், ஒரு காலகட்டத்தில் செய்யலிழக்கிறது. இல்லையென்றால், இடைக்கால இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு, இந்து மதம் ஈடு கொடுத்திருக்க முடியாது. பிறகு வந்த ஐரோப்பிய கிருத்துவ அச்சுரத்தனத்திற்கு முன்பாகவும் நிலைத்திருக்க முடியாது. ஆனால், உலகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு, இரண்டையும் எதிர்த்து இன்றும் இந்திய / இந்து மதம் தழைத்திருப்பதால், அவைகள் தாம், இந்துவேடமிட்டு, இந்துக்களை ஏமாற்ற முயல்கிறதே தவிர, இந்துக்கள் யாரும் அவர்கள் போல வேடமிட்டு ஏமாற்றுவதில்லை.

வேதபிரகாஷ்

© 06-07-2013