பாஸ்டர்ஜோயல்ஓஸ்டீன்லேக்வுட்சர்ச்: அமெரிக்காவில் தனிமனிதர்கள் சர்ச்சுகளை ஆரம்பித்து நடத்துவதும், அவற்றில் அவ்வூர் மக்கள் உறுப்பினர்களாகி, செயல்பட்டு வருவதும் தெரிந்த விசயமே. அமெரிக்காவில் இது ஒரு பெரிய வியாபாரம் எனலாம். பொதுவாக அவர்கள் கத்தோலிக்கப் பிரிவு இல்லாதவர்களாக இருப்பார்கள். இவ்வாறு உருவாக்கப் பட்ட, அமெரிக்காவின் ஹூஸ்டன் [Osteen] நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் [pastor Joel Osteen’s Lakewood church[1]] என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது[2]. 1950ல் ஓஸ்டீனின் தந்தையால் ஆரம்பிக்கப் பட்ட சர்ச் ஆகும்[3]. இந்த ஆலயம் நகரில், மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது[4]. நகரில் 6 மைல்கள் பரப்பளவில் அமைந்த மிக பெரிய ஆலயமும் ஆகும்[5]. இதற்கு தனி கட்டிடம், தொலைகாட்சி, என்று எல்லா வசதிகளும் இருக்கின்றன. கோடானு கோடிகளில் நிதியும் பெற்று வருகின்றது. பல சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக, சர்ச்சின் இணைதளம் கூருகிறது.
பலதரப்பட்டஅமெரிக்கமக்களின்பிரச்சினைகள்: யு.எஸ் & மெக்ஸிகோ எல்லையில் குடும்பங்களுக்கு சேவை செய்யும் புலம்பெயர்ந்த தலைவர்களுடன் பணிபுரிதல். எல்லையோர சமூகத்தினருக்கான வாழ்க்கையின் தனித்துவமான அம்சங்களுக்கு குழு அறிமுகப்படுத்தப்படும் மற்றும் கலாச்சார தடைகள் மூலம் வழிகாட்டுதல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தெற்கில், தொடர்ந்து அமெரிக்காவில் மற்றநாட்டவர் உள்ளே நுழைவது சாதாரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. ஏற்கெனவே, அமெரிக்க பூர்வீக மக்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், அமெரிக்க பூர்வீகக் குடிகளான, செவ்விந்தியர்களுக்கு அரசாங்க வேலை, ஆட்சி அதிகாரம் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. ஆப்பிரிக்க மக்கள் இருக்கும் நிலையில் கூட செவ்விந்தியர்கள் இல்லை. அந்நிலையில், மத்திய-தெ அமெரிக்க நாடுகளிலிருந்து, அமெரிக்காவுக்கு வரும் அகதிகளால், அத்தகைய வேறுபாடு அதிகமாக்கும் நிலையும் உள்ளது.
11-02-2024 அன்றுசர்ச்சில்நடந்ததுப்பாக்கிச்சூடு, கொலை: அத்தோலிக்கர் அல்லாத சர்ச்சுகள், ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமாக ஆர்பாட்டத்துடன் நிகழ்சிகளை நடத்துவது சாதாரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் அது, விடுமுறை கொண்டாட்டம் போன்றது. அதனால், குடும்ப்த்துடன் கலந்து கொள்வார்கள். அதிகாளவில் கூட்டமும் இருக்கும். ஆக, இங்கும் அத்தகைய நிலை தான் இருந்தது. இந்நிலையில், 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆலயத்திற்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஆண் குழந்தை ஒன்றுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார்[6]. அவர், ஆலயத்தில் நுழைந்ததும் துப்பாக்கியால் சுட தொடங்கினார்[7]. அதாவது, அப்பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறான பீதியை உண்டாக்க வேண்டும் என்ற ரீதியில் தான் திட்டத்துடன் வந்து காரியத்தைச் செய்திருக்கிறாள். இதனால் பிரார்த்தனைக்காக கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்[8].
பாதுகாப்புபோலீசார்உடனடியாகஅப்பெண்ணைச்சுட்டது: இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார், அதனை கவனித்து, உடனடியாக அவரை நோக்கி சுட்டனர்[9]. உழந்தையுடன் இருந்ததால், ஜாக்கிரதையாகத்தான் செயல்பட்டிருக்கின்றனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார்[10]. அவருடைய கையில் இருந்த 5 வயது கொண்ட குழந்தைக்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது[11]. உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்[12]. இதேபோன்று 57 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்[13]. பாதுகாவலர் உடனடியாக, அப்பெண்ணைச் சுட்டுக் கொன்றதால், பலர் உயிர்களுக்கும் அபாயம் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்படவிருக்கும் அசம்பாவிதம் முதலியன தடுக்கப் பட்டன எனலாம். அந்த பெண் யார், அவளுக்கு, இந்த சர்ச்சுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக சுடுவதற்கும் ஹயாராக துபாக்கியுடன் நுழைந்தாள் போன்ற விவரங்கள் தெரியவில்லை.போலீசாரும் இசாரிப்பதாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.
பாலஸ்தீன ஸ்டிக்கர் ஒட்டப் பட்ட துப்பாக்கி: இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரியான பின்னர் என்பவர் கூறும்போது[14], சம்பவ பகுதியிலேயே அந்த பெண் மரணமடைந்து உள்ளார். குழந்தையை சுட்டது யார் என தெரியவில்லை. ஆண் நபரையும் துப்பாக்கியால் சுட்டது யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இந்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரிய வரவில்லை. குழந்தைக்கும், அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட AR-15 ஐப் பயன்படுத்தி அதில் “பாலஸ்தீனம்” ஸ்டிக்கரைப் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு கூட்டாட்சி சட்ட அமலாக்க ஆதாரம் முன்பு CNN இடம் துப்பாக்கியில் “ஃப்ரீ பாலஸ்தீனம்” என்று எழுதப்பட்டிருந்தது. அவளது பையில் .22 காலிபர் ஆயுதமும் இருந்தது, அது தாக்குதலில் பயன்படுத்தப்படவில்லை என்று மத்திய சட்ட அமலாக்க வட்டாரம் தெரிவித்துள்ளது. புலனாய்வாளர்கள் அவர் அரசியல் உள்நோக்கம் கொண்டவரா அல்லது மன உளைச்சலுக்கு ஆளான நபரா என்பதை கண்டறிய முயன்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடுநடத்தியவர்கிரிமினல்குற்றச்சாட்டுகள்மற்றும்மனநலப்பிரச்சினைகளின்வரலாற்றைக்கொண்டிருந்தார்[15]: மோரேனோவின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தகவல்கள், மனநல சவால்களின் வரலாற்றைக் கொண்ட ஒரு தாயின் உருவப்படத்தை எடுத்துக் காட்டுகின்றன[16]. ஒரு திங்கட்கிழமை செய்தி மாநாட்டின் போது, ஹூஸ்டன் படுகொலைத் தளபதி கிறிஸ்டோபர் ஹாசிக், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆண் மற்றும் பெண் பெயர்கள் உட்பட பல மாற்றுப்பெயர்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார். மோரேனோ 2016 இல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், காவலில் வைக்கப்பட்டார், மேலும் ஹூஸ்டன் காவல்துறையால் ஆவணப்படுத்தப்பட்ட மனநல வரலாறு அவருக்கு உள்ளது என்று ஹாசிக் கூறினார். டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பதிவுகள், கடந்த இரண்டு தசாப்தங்களாக மரிஜுவானா, தாக்குதல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், கைது மற்றும் போலிக் குற்றச்சாட்டு உள்ளிட்ட சிறு குற்றங்களுக்காக மொரேனோ கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனது 30 வயதில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதிச் சேவை நிறுவனத்தை நிறுவியவர் என்று சமூக ஊடகங்களில் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். சமூக ஊடக பக்கங்களில் தனது சொந்த கணக்கின் மூலம், அவர் புதிய குடியிருப்புகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்தின் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். மார்ச் 2020 இல் ஒரு சமூக ஊடக இடுகை, மொரேனோவின் நன்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் லேக்வுட் தேவாலயத்தின் படிவக் கடிதத்தின் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டுகிறது. தவிர, தனது கணவனையும் துன்புருத்தி வருவதாகத் தெரிகிறது ஏனெனில், அவளது கணவர் அத்தகையப் புகாரைக் கொடுத்துள்ளார்..
[2] தினத்தந்தி, அமெரிக்கா: சர்ச்சில்துப்பாக்கிசூடுநடத்தியமர்மபெண்சுட்டுகொலை, தினத்தந்தி பிப்ரவரி 12, 7:25 am (Updated: பிப்ரவரி 12, 2:11 pm).
[3] Its origins were humble. In fact, the first meeting of Lakewood Church was held in a converted feed store on the outskirts of Houston on Mother’s Day, 1959. A caring atmosphere, quality leadership, and community outreach attracted people from all ages, religious backgrounds, races, and walks of life. https://www.lakewoodchurch.com/about/history
[11] Indian TV News, Texas: Woman accompanied by five-year-old boy opens fire at church killed, two injured, Edited By: Raju Kumar , @rajudelhi123, Houston, Updated on: February 12, 2024 8:18 IST
[15] CNN, Shooter at Houston megachurch had lengthy criminal history including weapons charges, police say, By Christina Maxouris, Lauren Mascarenhas and John Miller, Updated 12:46 AM EST, Tue February 13, 2024
மாஷாடிரஸ்ட்ஆரம்பிக்கப்பட்டது: MASHA TRUST (தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட எண்.814/2005) – முதன்மையாக ஒரு சமூக சேவை அமைப்பு. இது ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் இயலாமைக்காக செயல்படுகிறது. இது 1996 ஆம் ஆண்டில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்த சில கருணையுள்ள இதயங்களால் நிறுவப்பட்டது. இது ஏழைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, அவர்களின் பிரச்சனைகளை முதலில் உணரவும், அடையாளம் காணவும் செய்கிறது. MASHA இன் இறுதி இலக்கு அவர்கள் தங்களுக்கு உதவ உதவுவதாகும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை அடையாளம் காண கற்றுக்கொண்டவுடன், அதைத் தீர்க்க MASHA அவர்களுக்கு உதவுகிறது. கூட்டு முயற்சிதான் தீர்வு. மாஷா அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறார்கள். இது அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை மாசுபடாமல் வைத்திருப்பது ஆகியவற்றை கற்பிக்கிறது.
அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-
காப்பகம்இல்லம்ஆரம்பிக்கப்பட்டநோக்கம்: ஆதரவற்ற குழந்தைகள், வெறிச்சோடிய அபல பெண்கள், புறக்கணிக்கப்பட்ட வயதான மூத்த குடிமக்கள் தங்குமிடம் மற்றும் அன்பு, பாசம், அக்கறை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வழிதவறிச் சென்று சமூகவிரோத சக்திகளின் கைகளில் இரையாகக்கூடிய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அது அவர்களை சமூக ரீதியாக பயனுள்ள மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்குகிறது. பலருக்கும் மனவலியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம் என்று ஒரு ஊடகம் பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா அறக்கட்டளையானது நியோமி அன்பு இல்லத்தை நடத்திவருகிறது[1]. 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்[2]. அங்கு ஆதரவற்ற நிலையிலுள்ள 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-
சூசைப்பிரகாஷம்காப்பகத்தைஏன்துவக்கினேன்என்றுவிளக்கினார்: இப்படி ஒரு இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் தனக்குள் உருவானதன் பின்னணியைச் சொல்கிறார் அதனை நிர்வகித்துவரும் சூசைப்பிரகாசம்[3]. “இந்தியாவில்மிகவும்பாதிப்புக்குஆளாகிவருபவர்களாகபெண்கள்உள்ளனர். பெண்களுக்குஇழைக்கப்படும்சமூகஅநீதியானதுநம்தேசத்தில்பரவலாகஉள்ளது. அதனாலேயே, சிறுமிகளுக்காகஇப்படிஒருஇல்லத்தைத்தொடங்கினேன்.” என்கிறார்[4]. அப்படித்தான், பற்பல அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கூநோக்கு இல்லங்கள் என்றெல்லாம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன, படுகின்றன. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்கள் அதிகமாகவே இவற்றை ஆரம்பித்து நடத்துகின்றன. அவை தான் பெரும்பாலான இத்தகைய பாலியல் குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளன. செய்திகளில், ஊடகங்களிலியே நூற்றுக் கணக்கான விவகாரங்கள், கைதுகள், வழக்குகள் என்றெல்லாம் வந்துள்ளன.
ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தது…
ஆதிசிவன்பாலியல்வன்மகுற்றத்தில்கைதுமற்றும்சிறை: இந்நிலையில், காப்பகத்தின் அறங்காவலரான கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன், அங்குள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்[5]. இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் காவல் சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்[6]. இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆதிசிவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்[7]. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ எனச் சொல்வதுபோல, நியோமி அன்பு இல்லத்தில், ஏடாகூடமாக என்னென்னவோ நடந்து தொலைத்திருக்கிறது. அதனால்தான், அந்த இல்லத்தின் இன்னொரு நிர்வாகியான ஆதிசிவன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான கிரேஸ் ஷோபியாபாய்[8].
ஆதிசிவன்கைதானபின்னணிஇது: ஆதிசிவன் அவ்வில்லத்தில் படித்துவரும் சிறுமிகள் நால்வரிடம் அத்துமீறி நடந்துகொண்டது, மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரை புகாரானது. உடனே, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், நியோமி அன்பு இல்லத்துக்கே வந்து மாணவிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும், இல்லத்தின் அலுவலகத்தில் வைத்து ஆதிசிவன் தங்களை எவ்வாறு தொந்தரவு செய்தார் என்பதையும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதையும் அழுதபடி கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்முகம் அளித்த புகாரை விசாரித்து, ஆதிசிவனைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நியோமி அன்பு இல்லத்தின் நிர்வாகி சூசைப்பிரகாசத்திடம் நடந்த அத்துமீறல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த 4 மாணவிகளும் மதுரை – முத்துப்பட்டியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
ஆதிசிவனா……..
சூஷைப்பிரகாசமும், ஆதிசிவனும்: சமயநல்லூர் வட்டாரத்தில் “34 குழந்தைகளின்அப்பாஎன்றுதன்னைச்சொல்லிக்கொள்ளும்சூசைப்பிரகாசம், மற்றகாப்பகங்களிலிலிருந்துஇருந்துஇதுவேறுபட்டதுஎன்பார். எப்படியென்றால், வெளிநாட்டுநிதிஉதவியைநம்பாமல், தன்சொந்தமுயற்சியால்நடத்தப்படும்இல்லம்எனச்சொல்வார். அன்புஇல்லம்ஆரம்பிக்கப்பட்டதன்நோக்கம்என்றுஅப்போதுஅவர்கூறியதென்னவோநன்றாகத்தான்இருந்தது. ஆனால், ஆதிசிவனால்அங்குநடந்தசெயல்கொடூரமானதாகஅல்லவாஇருக்கிறது?,” என்கிறார்கள் ஆதங்கத்துடன். அனாதை சிறுமிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில், காப்பக சுவர்களைத் தாண்டி தங்களின் அத்துமீறல் வெளியில் வராது என்ற நினைப்பில், ஒருசிலர் வெறிகொண்ட மனித மிருகங்களாக நடந்துகொள்வது கொடுமையானது! அத்தகையோருக்கு, ‘தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்சத்தை, இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று நம்புவது மட்டுமே தற்காலிக ஆறுதலாக உள்ளது.
குறிப்பு: இது 2019ல் நடந்த விவகாரம் ஆகும். பொதுவாக, செய்தித் தாள்களைப் படித்து, விவரங்களை சேகரித்து, சரிபார்த்து, எழுதி, ஆதாரங்களைத் தொகுத்து, தேவையான செய்தித்தாள் கட்டிங்ஸ், புகைப் படைங்கள் முதலியவற்றை சேர்த்து, பிளாக் போட சுமார் 3 முதல் 5 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் குறிப்பிட்டல் நாளில், வாரத்தில் அதிகமான முக்கியமான செய்திகள் வரும் பொழுது அவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட, ஏன் தயாராக இருக்கும் கட்டுரையைக் கூட இணைதளத்தில் ஏற்ற முடியாமல் போகிறது. ஏன் சில நாட்கள் ஆனால் மறந்தும் போகிறது. இதனால், திடீரென்று, இணை தளத்தில் எதையோ தேடும் பொழுது, சில செய்திகள் காணப்படுகின்றன. அடடா, இது தெரிந்த விசயமாயிற்றே, நாம் கூட பிளாக் போட்டிருக்கிறோமே என்ற எண்ணம் வரும். ஆனால், தேடிப் பார்த்தால் கிடைக்காது, இருக்காது பிறகு, நாம் போடவில்லை என்பது தெரிய வரும். அவ்வாறு கிடைத்தது தான் இது. நடந்தது 2019 இப்பொழுது 2024, ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் ஆணப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது இன்று பதிவு செய்யப் படுகிறது.
அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்- கட்டிடம்.
[1] MASHA TRUST (Tamilnadu Govt. approved No.814/2005) – is primarily a social service organization. It works for the upliftment, progress and enabling of the poor, downtrodden people. https://www.maduraidirectory.com/masha.php
[2] நக்கீரன், ஆதரவளிக்கிறோம்என்றபோர்வையில்! –அனாதைசிறுமிகளிடம்அத்துமீறல்!, அதிதேஜா, Published on 13/08/2019 | Edited on 13/08/2019, wa
பிரதமரின்கிறிஸ்துமஸ்வாழ்த்துஅட்டைகளைக்கொண்டுநாங்கள்அனைத்துவீடுகளுக்கும்செல்கிறோம்: கேரள மாநில பா.ஜ.க சார்பில் `சினேக யாத்திரை’ என்ற பெயரில் கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் சர்ச்சுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து செல்லும் நிகழ்ச்சி 21-12-2023அன்று தொடங்கியது[1]. சீரோ மலபார் சபையின் செயின்ட் தாமஸ் மவுன்ட்டிலிருந்து இந்த யாத்திரையை பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தொடங்கினார்[2]. இது போன்று அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கிறிஸ்தவ மத தலைவர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். இது குறித்து கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேவாலயங்களுக்கும் சென்று சந்திக்கும் சினேக யாத்திரை என்ற மிகப்பெரிய கேம்பைன் தொடங்கிவிட்டது. பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் கொண்டு நாங்கள் அனைத்து வீடுகளுக்கும் செல்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனைத்து வீடுகளுக்கும் சொல்வது மட்டும்தான், இந்த சினேக யாத்திரையின் லட்சியம்.
2022ல்ஆரம்பித்தயாத்திரை 2023லும்தொடர்வது: சமுதாய சமத்துவம், சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்த யாத்திரை மேற்கொள்கிறோம். கடந்த ஆண்டும் சினேக யாத்திரை நடத்தினோம். ஆனால் எல்லா வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்ல முடியவில்லை. இந்த முறை அனைத்து வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்லவிருக்கிறோம். 21-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் சொல்ல உள்ளோம். காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் சொல்வதுபோல நாங்கள் இதில் எந்த அரசியலும் பார்க்கவில்லை. தேர்தலுக்காக இந்த யாத்திரையை நடத்தவில்லை. அரசியல் லாபம், நஷ்டம் குறித்த கணக்குகளை நாங்கள் பார்க்கவில்லை. எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல தான் இப்பேச்சு இருக்கிறது. ஏனெனில் கேரளாவில் சிபிஎம், காங்கிரஸ் முதல் கட்சிகள் எல்லாம் ஏமாந்த சோனகிரிகள் இல்லை. அவர்கள் நிச்சயமாக பிஜேபிக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். மேலும் சிபிஎம், காங்கிரஸ் எல்லாம் ஆட்சியில் இருந்து அதிகாரத்துடன் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அங்கு பிஜேபி இப்பொழுது தான் வளர்ந்து வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்சியை பிடிக்க முடியாது என்றாலும் அவர்கள் இத்தகைய முறைகளை எல்லாம் கையாண்டு வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயமே. ஆகையால் இது நிச்சயமாக அரசியல் தான், சர்ச்சுக்கும் பாஜக பரஸ்பர உறவுகள் என்பது மாநிலத்தில் அந்த அளவுக்கு இல்லாமல் இருந்தாலும், தேசிய அளவில் மற்றும் உலக ரீதியில் நிறைய சந்தர்ப்பங்கள், உரையாடல்கள் முதலியவை நடந்து வருகின்றன என்பதை மற்றவற்றிலிருந்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின்வடகிழக்குமற்றும்தென்–மேற்குதிசைகளில்கிறிஸ்துவர்கள்பிஜேபிக்குசாதகமாகஇருப்பார்களா?: மணிப்பூர் பிரச்சனையை மிசோரம் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய பிரசாரமாக முன்னெடுத்து சென்றது. ஆனால், காங்கிரஸுக்கு கடந்த முறை இருந்த சீட்டுகளும் பறிபோனது. கிறிஸ்தவ சமூகத்தை, பொய் பிரச்சாரம் மூலம் திசை திருப்ப முடியாது. 99 சதவிகித கிறிஸ்தவ மக்கள் உள்ள மிசோராமில் எங்களுக்கு இரண்டு மடங்கு சீட்டுகள் கிடைத்தன. ஓட்டும் இரட்டிப்பாகி உள்ளது. காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. அவர்களின் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த சினேக யாத்திரை பயனுள்ளதாக இருக்கும். காங்கிரஸைவிட சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சதீசனை யாராவது நம்புவார்களா. சதீசன் அகங்காரமாக செயல்படுகிறார். இது அனைவரும் சேர்ந்த ஒரு நாடு. காங்கிரஸை விட நம்பிக்கையும் ஆதரவும் பா.ஜ.க-வுக்கு சிறுபான்மை சமூகம் மத்தியில் உள்ளது” என்றார்.
உலகஅளவில்மோடிமற்றும்இந்தியாவின்முக்கியத்துவம்அமரச்த்துடன்தான்நடந்துவருகிறது: மோடி உலக அளவில் பிரபலம் பெற்று வருகிறார் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த தலைவராகவும் உருவாகி அறியப்பட்டு வருகிறார். அதே முறையில் இந்தியாவும் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்பதை எல்லாம் கவனிக்கும் பொழுது, நிச்சயமாக உலக அளவில் கிறிஸ்தவர்களின் ஆதரவு இல்லாமல் அவ்வாறு நடக்க முடியாது, என்பதையும் உலக அளவில் அறிந்து கொள்ளலாம். இதனால் தான் வடகிழக்கில் பொதுவாக கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் இடையில் பர்மா பிரச்சனை, மற்றும் வங்காள முஸ்லிம்களின் ஊடுருவல் பிரச்சினை இவையெல்லாம் சேர்ந்து வரும் நிலையில், அது இந்தியர்களுக்கு மட்டுமல்ல இது அதாவது இந்து மதத்தினருக்கு மட்டும் இல்லை, அது அங்கிருக்கும் பெரும்பான்மையான கிறிஸ்துவர்களையும் பாதிக்கப்பட்ட வருகிறது என்பது முக்கியமான விஷயமாகிறது.
மணிப்பூர்பிரச்சினையின்தீவிரம்மற்றும்தாக்கம்உலகஅளவில்இருப்பதால், எதிர்கட்சிகளின்விமர்சனம்குறைந்துவிட்டது: மணிப்பூர் பிரச்சினை மிகவும் தீவிரமான மற்றும் அதே நேரத்தில் எவரையும் பாதிக்க கூடிய மிகவும் மென்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சனையாகவும் உள்ளது. அங்கு மத பிரச்சனை என்பதைவிட பல இடங்களில் எல்லைகளை மீறிய தீவிரவாத செயல்கள், தீவிரவாதிகளின் போக்குவரத்து, போதை மருந்து விநியோகம், வியாபாரம் முதலியவை நடந்து வருவதால், அச்செயல்களில் ஈடுபட்டு இருக்கின்ற எல்லா குழும்பங்களுமே மிகவும் ஜாக்கிரதையாக, உக்கிரமாக என்ன நிகழும் அல்லது என்ன நிகழக் கூடாது என்று கணக்குப் போட்டுக் கொண்டு செயல்பாடுகளை நடத்தி வருகின்றன. அதனால் தான், முரண்பட்ட செய்திகள் வருகின்றன, சம்பந்தப் பட்ட எல்லோருமே அடக்கி வாசிக்கின்றன. ஆகையால், அரசியல் கட்சிகளும், முன்பு ஏதோ பெரிய அளவில் கேள்விகள் கேட்டு கலாட்டா-ஆர்பாட்டம் செய்தாலும், விலைவுகளை அறிந்து மௌனமாகி விட்டன.
இந்தியவம்சாவளியினருக்குமுக்கியத்துவம்கொடுக்கப்படுவதுஅரசியலா, அல்லதுவேறுஉள்நோக்கம்உள்ளதா?: ஒரு பக்கம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதார இணைப்புகள், உறவுகள், பரஸ்பர ஏற்றுமதி இறக்குமதிகள் முதலிய எல்லாம் பேசப்படுகின்றன. பொருளாதார ரீதியில் உலக வங்கியின் கடன், அமெரிக்கா ஐரோப்பிய நாட்டு தொழிலதிபர்களின் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள், எல்லாமே மற்ற அயல்நாடுகளில் திடீரென்று இந்திய நாட்டு வம்சாவளியினரின் ஆதிக்கம் அரசியல் ரீதியிலும் வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. ஏனெனில் பொதுவாக முன்னரெல்லாம் இந்தியர்களுக்கு அத்தகைய உயர்ந்த பதவிகள் எல்லாம் கொடுக்கப்பட்டது இல்லை. இப்பொழுதும் இதில் குறிப்பாக அமெரிக்க பிரதி இங்கிலாந்து பிரஜை என்ற முறையில் தான் இவர்கள் அந்த பதவிகளை ஜனநாயக ரீதியில் பெற்றடைந்து உள்ளார்கள். முன்னால் எப்படி எவ்வாறு திடீரென்று இந்தியர்களுக்கு உலக அழகி பட்டங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு, ஊக்கிவிக்கப் பட்டார்களோ அதே போல இப்பொழுது இந்த விதமான அரசியல் மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்க-ஐயோப்பிய உறவுகளுக்கு காரணம் பொருளாதாரமா, மதமா?: இல்லை இத்தகைய மாற்றங்களை மதரீதியில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால், இதே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் இந்திய இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள் ஏற்படும் நிலை, இந்திய வம்சாவளியினருக்கு உயர்ப்பகுதியில் அழிக்கப்படும் போக்கு மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமான ஏற்படும் உறவுகள், இவற்றையெல்லாம் கவனிக்கும் பொழுது நிச்சயமாக கிறிஸ்துவ-இந்து உரையாடல்கள் பல நிலைகளில் ஏற்பட ஊக்குவிக்கப்படுகிறது என்பதனை புரிந்து கொள்ளலாம். எப்படி இருந்தாலும், ஒரு பக்கம் உலக அளவில் இஸ்லாமிய தீவிரவாதம், அதன் மூலமாக ஏற்படுகின்ற பொருளாதாரத் தாக்கம், குறிப்பாக எண்ணை வர்த்தகம் பாதிப்பு மூலம் எவ்வாறு உலகம் கஷ்டப்பட போகிறது என்ற கோணத்திலும் இப்பிரச்சனை அணுக வேண்டியுள்ளது. ஒருவேளை இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் இருப்பதாலும், அதனை சுற்றி உள்ள நாடுகளில் இஸ்லாம் மதம் தாக்கம் கொண்ட நாடுகள் சூழ்ந்திருப்பதினாலும், நிச்சயமாக மற்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஆனால் ஒருவேளை பொருளாதார ரீதியில் அரசியல் ரீதியில் உலக சமரசங்களுடன் இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்றும் சொல்லலாம்.
[1] விகடன், கேரளா `கிறிஸ்தவர்களுக்குகாங்கிரஸைவிடபாஜகமீதுதான்அதிகநம்பிக்கை‘- சினேகயாத்திரைசென்றபாஜக–வினர், சிந்து ஆர், Published: 22-12-2023 at 7 AM; Updated: @2-12-2023 at 7 AM.
தமிழகஇந்துத்துவவாதிகளால்இந்துகளுடனேஉரையாடல்வைத்துக்கொள்ளமுடிவதில்லை: தமிழகத்தில் இருக்கும் இந்துத்துவவாதிகள் இரட்டை வேடம் போடுகிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்ததுண்டு. அடிக்கடி அவர்களது குழுக்கள், கோஷ்டிகள், கும்பல்கள் திடீரென்று வருடாவருடம் அல்லது காலத்திற்கு ஏற்றபடி மாறுவதும் கவனிக்கப் படுகிறது. ஏதோ கொள்கை, நியாயம், தர்மம் எண்றெல்லாம் பெரிய யோக்கியர்கள் போல பேசினாலும், சிலரின் போக்கு, நடத்தை முதலியவை நிச்சயமாக அவ்வாறில்லை. துரோகம் செய்வதிலும் வல்லவர்களாகி விட்டனர். அரசியல் ஒருவேளை அவர்களை அவ்வாறு செய்து விட்டது போலும். “குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று தமிழக அரசியலில் சொல்வதைப் போல, இப்பொழுது, இவர்களும் மாறத்தான் மாறியிருக்கிறார்கள். அரசியலில் சேர்ந்த பிறகு ஒழுக்கத்தை எல்லாம் பற்றி பேச முடியாது, பேசக் கூடாது என்றால், பிறகு அவ்வாறே அரசியல்வாதியாக இருந்து விட்டுப் போகலாம். பிறகு, ஏதோ “ரிஷி-முனி-மகான்” போன்றெல்லாம் பேசக் கூடாது. தமிழக இந்துத்துவவாதிகளால் இந்துகளுடனே உரையாடல் வைத்துக் கொள்ள முடிவதில்லை, நண்பர்களாக இருக்க முடிவதில்லை. பிறகு, கிறிஸ்தவர்களின் மீது எப்படி பாசம் கிளம்புகிறது?
கிறிஸ்தவ–இந்துத்துவஉரையாடல்கள்: இந்த “கிறிஸ்துவ” உறவுகள், பாசங்கள், நேசங்கள் விவகாரங்களில் அவர்களது போக்கு விசித்திரமாக, வினோதமாக, முரண்பாடாக, திகைப்பாகத்தான் இருக்கிறது. நட்பு ரீதியில் நண்பர்களாக எல்லோருடனும் இருக்கலாம், அந்த நட்பைப் போற்றலாம், வாழலாம். ஆனால், ஒரு பக்கம் இப்படி- இன்னொரு பக்கம் அப்படி என்று இருக்கக் கூடாது- முடியாது. அப்படி இருக்க முடியும், இருக்கிறார்கள் என்றால், நிச்சயாமாக அவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தான் முடிவாகிறது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,” என்று சொல்லிவிட்டால், யாரும் கேட்கப் போவதில்லை. மற்ற நம்பிக்கையாளர்களுடன், மதத்தவர்களுடன் “உரையாடல்” என்று வைத்துக் கொள்வது, கிறிஸ்தவர்களின் திட்டங்களுள் ஒன்றாகும். அவர்கள் அதை மறைத்ததில்லை, தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கேரளாவில்கிறிஸ்தவ–இந்துத்துவஉரையாடல்கள்: கேரளாவைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் கிறிஸ்துவர்கள் அல்லது சர்ச்சுகளிடையே மோதல்கள் இருந்து கொண்டிருந்தன. அதனால், அவ்வப்பொழுது, அவர்கள் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீசுதர்சன்ஜி இருக்கும் பொழுது, அத்தகைய உரையாடல்கள் நடந்துள்ளன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பலமுறை உரையாடல்கள் நடந்துள்ளன. மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பொழுதும், அத்தகைய சந்திப்புகள் நடந்துள்ளன. இஸ்ரேலுடனான உறவும் அவ்வாறே கவனிக்கப் படுகிறது. மணிப்பூர் விவகாரம் விரிசலை ஏற்படுத்தியது. அதனால், இந்துத்துவவாதிகள் கிறிஸ்துவர்களுடன் “உரையாடல்” வைத்துக் கொள்வது அரசியல் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது, ஏனெனில், அவர்களுக்கு ஒன்றும் “’இறையியல்” உரையாடல் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இறையியலில் எல்லாமே உண்டு. ஆக, அந்ந்நிலையில் “சிநேக யாத்திரை” கவனிக்கப் படுகிறது.
05-12-2023 அன்றுநடைபெற்றகேரளாமாநிலபா.ஜ.கஉயர்மட்டக்குழுக்கூட்டம்: ஐந்து மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிவருகிறது பா.ஜ.க. இந்த நிலையில் கேரளா மாநில பா.ஜ.க உயர்மட்டக்குழுக் கூட்டம் 05-12-2023 அன்று கோட்டயத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்த திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. மக்களவைத் தோ்தல் நெருங்கிவரும் சூழலில், கேரள மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகிக்கும் கிறிஸ்தவா்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில், இந்த ஆண்டு ஈஸ்டா் திருநாளையொட்டி முதன்முதலாக இந்தப் பரப்புரை தொடங்கி நடத்தப்பட்டது[1]. தற்போது ‘கிறிஸ்துமஸ்’ மற்றும் ‘ஆங்கிலப் புத்தாண்டு’ பண்டிகை காலத்தையொட்டி, ஸ்நேக யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது[2].
டிசம்பர் 20-ம்தேதிமுதல் 30-ம்தேதிவரைஸ்நேஹயாத்ரா: மேலும், கிறிஸ்தவ மக்களை நெருங்கிச் செல்லும்விதமாக ‘சினேக யாத்திரை’ என்ற திட்டத்தை செயல்படுத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[3]. அதன்படி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிறிஸ்துவ மக்களின் வீடுகளுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் செல்ல வேண்டும் எனவும், கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது[4]. இந்த “சகஜமான” யாத்திரை, மேலிடம் ஆசிர்வாதத்துடன் தான் நடைபெறுகிறது என்றும் உறுதியாகத் தெரிகிறது. ஏனெனில், கார்டினலிடம், “சுரேந்திரன், அவரிடம்பிரதமா்நரேந்திரமோடியின்கிறிஸ்துமஸ்வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொண்டார்,” என்றதிலிருந்து தெரிகிறது.
21-12-2023 கார்டினல்ஜார்ஜ்ஆலன்செரியைசுரேந்திரன்சந்தித்தது: அன்று ஸ்நேக யாத்திரையின் தொடக்கமாக காக்காநாடு பகுதியின் பிரபல சீரோ மலபார் தேவாலயத்தின் முன்னாள் தலைவா் கார்டினல் ஜார்ஜ் ஆலன்செரியை 21-12-2023 வியாழக்கிழமை நேரில் சென்று சந்தித்த பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், அவரிடம் பிரதமா் நரேந்திர மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்[5]. தேவாலயப் பிரதிநிதிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் சுரேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்[6]. தேவாலயப் பிரதிநிதிகளுடன் 45 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை[7]. இது நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே எனத் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.ஸாய்ஜு மேலும் கூறுகையில், ‘பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவா்களிடம் தெரிவித்தோம்[8]. மணிப்பூா் விவகாரத்துக்குப் பிறகு தேவாலயத்துக்கும் பாஜகவுக்கும் மோதல் நிலவுவதாகப் பரவிய செய்தியில் உண்மையில்லை. எங்களுக்கிடையே எப்போதும் நல்லுறவு நீடித்து வருகிறது. டிசம்பா் 30-ஆம் தேதி வரை கிறிஸ்தவா்களின் வீடுகளுக்குச் சென்று பாஜக நிர்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வார்கள்’ என்றார்.
‘கிறிஸ்துவுக்குத்துரோகம்’-காங். விமா்சனம்: பாஜகவின் பரப்புரையை விமா்சித்து கேரள காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரள கிறிஸ்தவ மதத்தினரைச் சந்தித்து பாஜகவினா் வாழ்த்து தெரிவிப்பது ‘ஸ்நேக யாத்திரை’ அல்ல, ‘கிறிஸ்துவுக்கு இழைக்கப்பட்ட துரோகம்’. நாடு முழுவதும் சிறுபான்மையினரை ஏமாற்றும் வரலாறு கொண்ட பாஜகவினா், கேரளத்தில் மட்டும் அவா்கள் மீது அன்பைப் பொழிகின்றனா்’ எனக் குறிப்பிட்டார். ஒருவேளை கிறிஸ்தவ மதத்திற்கு நெருக்கமாக நாங்கள் தான் இருக்கிறோம் என்பதனை காட்டுவதற்காக காங்கிரஸ்காரர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள் போலும். ஏனெனில், சோனியா மைனோ என்கின்ற சோனியா காந்தி கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்த விஷயமே. அதே போல அவர்களது குடும்பமும் சர்ச்சுடன் மிகுந்த நெருக்கத்தை கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆகையால் இப்பொழுது திடீரென்று பாஜககாரர்கள் கிறிஸ்தவர்களுடன் நெருக்கத்துடன் வரும் போக்கை பார்க்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு வேலை ஏற்பட்ட பொறாமையால் இவ்வாறு சொல்கிறார்களோ என்றும் கவனிக்கலாம். எப்படி இருந்தாலும் “கிறிஸ்துவுக்கு செய்த துரோகம்” என்று சொல்லும் பொழுது இது மேலும் விசித்திரமாக தான் இருக்கிறது. எனவே அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தும், இவ்வாறு நடக்கிறதே என்று திகைத்து விட்டார்கள் போலும்!
[3] விகடன், சினேகயாத்திரை: கிறிஸ்தவர்களைச்சந்திக்கச்செல்லும்பாஜக – சிறுபான்மைவாக்குகளைவளைக்கதிட்டம்!, சிந்து ஆர், Published:06 Dec 2023 10 AM; Updated:06 Dec 2023 10 AM.
[5] தினமணி, பாஜக: கேரளத்தில்மீண்டும்தொடங்கும் ‘ஸ்னேகயாத்திரை’, By DIN | Published On : 21st December 2023 03:22 PM | Last Updated : 21st December 2023 03:48 PM |
[7] தினமணி, கிறிஸ்தவா்களுக்குவாழ்த்துதெரிவிக்கும்கேரளபாஜகவின்யாத்திரைமீண்டும்தொடக்கம், By DIN | Published On : 22nd December 2023 12:00 AM | Last Updated : 22nd December 2023 12:00 AM.
டேனியல்–பிரின்சிகிறிஸ்தவஊழியம்–வேலை: பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வேலைக்கார பெண்ணை 07-12-2023 அன்று கைது செய்தனர்[1]. வழக்கம் போல, ஊடகங்கள் இச்செய்தியை பி.டி.ஐ பாணியில் வெளியிட்டுள்ள, ஆனால், நேரில் சென்றோ, விசாரித்தோ, ஆய்ந்தோ மேலும் விவ்ரங்கள் எதையும் வெளியிடவில்லை. இணைதள பதிப்புகள் தலைப்பு மட்டும் மாற்றி-மாற்றி, அரைத்த மாவையே அரைத்துள்ளது. கதிர் செய்தி, தினத்தந்தி-உபயம் என்றே வெளிப்படையாகப் போட்டுள்ளது. கடலூரை சேர்ந்தவர் வீராசாமி (எ) டேனியல் (62)[2]. வழக்கம் போல இவ்வாறு இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வரும் “மைனாரிட்டி” மற்றும் “இந்து” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கும்பலில் இவனும் ஒருவன் என்று தெரிகிறது. மதபோதகரான இவர், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூரில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தார்[3]. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்[4].
செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொலைவெறி தாக்குதல்: இவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவருக்கு டேனியல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[5]. ஆக, பெண்களும் இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு டேனியலுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது[6]. இந்நிலையில் நேற்று முன்தினம் 06-12-2023 நள்ளிரவிலும் டேனியல், மீண்டும் பிரின்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது[7]. அதிகாலை 2 மணிக்கு பாலியல் உறவுக்கு டேனியல் அழைத்தான் என்கிறது தினமலர்[8]. அதாவது, இது தொடர்ந்து நடந்து வரும் விவகாரமாக இருக்கிறது போலும். இதில், ஆத்திரமடைந்த பிரின்சி, டூவீலரில் உள்ள இரும்பு கம்பியை எடுத்து / சைக்கிள் பல் சக்கரத்தால் டேனியலை சரமாரியாக தாக்கினார்[9]. இதில், பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்[10]. வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டார் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸார் வந்து பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பிரின்சியும் அங்கே இருந்துள்ளார்.
சேர்ந்து வாழ்ந்த பிரின்சியும், அதிக செக்ஸ் சதய்ப்பில் ஈடுபட்ட டேனியலும்: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்கே சென்று தங்கிய செல்வி அங்கேயே தங்கியுள்ளார்[11]. சேர்ந்து வாழலாம் என்று உச்சநீதி மன்றமே தீர்ப்புக் கொடுத்துள்ளதால், பாஸ்டர் அமூல் படுத்தியுள்ளார் போலும். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்[12]. அங்கே கொலை செய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர்[13]. அவர்களின் விசாரணையில் செல்வி, “மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார்[14]. அதனால், எனக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார்[15].
பணம் கேட்டுக் கொடுக்காதலால் கொலை: இதுகுறித்து தகவல் அறிந்து நேற்று 07-12-2023 காலை அங்கு வந்த மண்டையூர் போலீசார் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக / உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பிரின்சியை கைது செய்தனர்[16]. இதுபற்றி போலீசார் கூறுகையில், “கடந்தஒருமாதமாகவேலைக்காரபெண்பிரின்சிக்கு, மதபோதகர்டேனியல்பாலியல்தொல்லைகொடுத்துவந்துள்ளார். இதுதவிரமதபோதகரிடம், பிரின்சிபணம்கேட்டுகடந்தமூன்றுதினங்களாகதகராறில்ஈடுபட்டுள்ளார். அதற்குடேனியல், அடிக்கடிபணம்தரமுடியாது. கொடுக்கும்போதுவாங்கிகொள்ளவேண்டும்எனகூறியுள்ளார். இதனால்ஏற்பட்டதகராறில்பிரின்சி, இரும்புகம்பியால்டேனியலைதாக்கிகொன்றதுதெரியவந்துள்ளது. பாலியல்தொந்தரவால்டேனியலைஅடித்துகொன்றுவிட்டுபணத்துக்காககொன்றதாகபிரின்சிநாடகமாடுகிறாராஎனதொடர்ந்துவிசாரணைநடந்துவருகிறது,” என்றனர்.
மண்டையூரில்ஊழியம்செய்யும்இவனதுவேலைஎன்ன?: மண்டையூர் ஊராட்சி (Mandaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4283 ஆகும். இவர்களில் பெண்கள் 2178 பேரும் ஆண்கள் 2105 பேரும் உள்ளனர். இவ்வாறு 4,000 மக்கள் இருக்குமிடத்தில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தான் என்றால், அவ்வாறு அவனை ஊக்குவிப்பது யார், நிதியுதவி எப்படி கிடைக்கிறது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மேலும், பாலியல்-செக்ஸ், வன்முறை-கொலை என்பதெல்லாம் கிருத்துவர்களுக்கு சகஜமாகியுள்ளது, தொடர்ந்து வரும் செய்திகளும் வெளிப்படுத்துகின்றன.
ஒழுக்கத்தை மீறி, ஒழிங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை தான் கிடைக்கும்: பிரின்சி கணவனை இழந்தது, சமையல் வேலை செய்ய டேனியலிடம் சென்றது; டேனியல் (62) மற்றும் பிரின்சி (46) சேர்ந்து வாழ்ந்தது. சேர்ந்து வாழும் உறவு தொடர்ந்தது; திடீரென்று வெறுப்பு-கொலைவெறி உண்டானது; அந்த அளவுக்கு செக்ஸ்-டார்ச்சர் கொடுத்தது; கொலையில் முடிந்தது..ஆகவே, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் அவ்வாறே புலன்களை அடக்கிக் கொண்டு சேவை செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய கூடா ஒழுக்கம் முதலியன, ஒழிங்கினங்களில் தான் முடியும். கடவுள் தண்டனை கொடுப்பார், மன்னிக்க மாட்டார்.
கிறிஸ்துவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்: கிறிஸ்துவத்தில் தொடர்ந்து எவ்வாறு பாஸ்டர்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் என்று பலர் அடிக்கடி இத்தகைய பாலியல் வன்மங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பற்றி நிறையவே எழுதியாகிவிட்டது. அலசி-ஆய்ந்தும் செய்தாகிவிட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தமிழகத்திலும், பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், கிறிஸ்துவ மேல் இடங்கள் ஏன் இப்பிரச்சனையைப் பற்றி முறையாக ஆய்வு செய்யவில்லை அல்லது இத்தகைய ஒழுங்கினங்களில் ஈடுபடும் பாஸ்டர்கள் பாதிரிகள் முதலியோரை கட்டுப்படுத்த அல்லது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை செய்யாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் இது அடிக்கடி நடக்கின்றன, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. கற்பழிப்பு, பாலியல் சதாய்ப்பு, செக்ஸ்-வன்மம், ஏன் கொலைகளும் நடந்து கொண்டிருப்பதால், போலீஸ்காரர் நடவடிக்கைகளும், நீதிமன்ற தண்டனைகளும் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கின்றன, அபயா கொலை வழக்கு என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் இவை தொடர்ந்து நடந்து வருவது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது அல்லது நடக்கிறது நடந்து விட்டு போய் போகட்டும் என்று தொடர்ந்து இவ்வாறு அமைதியாக இருந்து காலத்தை கழித்து விடுவார்களா என்றெல்லாம் புரியாமல் தான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில்- தமிழகத்தில் பலர் இதனை உன்னிப்பாக பார்க்க கவனித்து கொண்டிருப்பதால், நிச்சயமாக அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களை திருத்தி கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நேரம்காலம்பார்க்காமல்ஓயாமல்செக்ஸ்டார்ச்சர்.. 61 வயதுமதபோதகரைஆத்திரத்தில்கொலைசெய்த 46 வயதுபெண்..!, First Published Dec 9, 2023, 1:41 PM IST.
கிருத்துவர்களின்செக்௶குற்றங்கள்தொடர்வதேன்?: தமிழகத்தில் அடிக்கடி கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் வக்கிரங்கள், பாலியல் சதாய்ப்புகள், கற்பழிப்புகள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், பெண்ணுரிமை என்றெல்லாம் கூவும் எந்த மங்கையும், பெண்ணும், நாரீமணியும் இவற்றைப் பற்றி கவலைப் பட்டதாகவோ, மாநாடு நடத்தியதாகவோத் தெரியவில்லை. சமீபத்தில் கிறிஸ்தவ கல்லூரிகள் உலக அமைதி மாநாடுகள் என்றெல்லாம் நடத்தின. ஆனால், இத்தகைய செக்ஸ் குற்றங்கள் சர்ச்சுகளில் நடைபெறுவதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள். வருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல், ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்ட விவகாரங்களும் நடந்து வருகின்றன. ஆனால், அவ்ர்களைத் திருத்த சர்ச் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
சென்னைஆசிரியைதூத்துக்குடிபாதிரியிடம்மாட்டிக்கொண்டது: சென்னை ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து ரூ.5 லட்சத்தை அபகரித்த தூத்துக்குடி தியான மைய ஊழியர் மீதும், இதுபற்றி புகார் செய்தபோது தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீதும் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[1], என்று இப்பொழுது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட ஸ்டீபன் என்பவரது மகள் கேத்தரின் (32). இவர், திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்[2]. இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. கேத்தரினுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்[3]. இதனால் மன அழுத்ததில் இருந்த கேத்தரின், சொந்த ஊரான தூத்துக்குடி வந்துள்ளார்[4]. இங்கு மன ஆறுதலுக்காக தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தியான இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார்.
தியானஇல்லபாதிரிமூலம்அறிமுகமானஜோஸ்வா: அப்போது தியான இல்ல பாதிரியார் மைக்கேல் என்கிற மகிழன் (62) மூலம் மைய உதவியாளர் ஜோஸ்வா (எ) இசக்கி அறிமுகமாகி உள்ளார். கேத்தரினுக்கு ஆறுதல் கூறி வந்த ஜோஸ்வா, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி கேத்தரினிடம் இருந்து ரூ.5 லட்சத்தையும் ஜோஸ்வா பெற்றுள்ளார். இந்நிலையில் கேத்தரினை ஜோஸ்வா திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து போதகர் மகிழனிடம் கூறியபோது அவரும் கேத்தரினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு வர்ணனையுடன் செய்திகள் வெலியிடப் பட்டுள்ளன. அதே நேரத்தில் இன்னொரு வர்ணனையுடனும் செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன.
பெண்மணிக்குபேய்பிடித்திருக்கிறது: அதன் படி, அந்த பெண் வந்தபோது, ஜோஸ்வா, “உங்கள் உடலில் பயங்கர பேய் ஒன்று குடிவந்துள்ளது. இந்த பேயை விரட்ட நாம் ஒன்றாக ஜெபம் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்[5]. இதனால் பயந்துபோன அப்பெண்ணும், ஜோஸ்வா உடன் ஜெபம் செய்ய தொடங்கினார்[6]. சில நாட்கள் கழித்ததும், அந்தப் பேய் உங்கள் உடலை விட்டு போக மாட்டேன் என அடம்பிடிக்கிறது. அதனால் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்த பேய் சென்றுவிடும் என கூறியுள்ளார். இந்நிலையில், நேரில் சென்ற ஆசிரியரிடம் பேசிய பாதிரியார் “உங்கஉடம்பில்பயங்கரபேய்ஒன்றுஇருக்கிறது.. அந்தபேய்உங்கள்உடம்பைவிட்டுபோகாது.. அதைவிரட்டவேண்டுமானால், என்னுடன்பாலியல்உறவுவைத்துக்கொள்ளவேண்டும்,” என்று கூறியுள்ளார்[7]. இதை நம்பி, அந்த பெண் ஒப்புக் கொண்டு உடலுறவு வைத்துக் கொண்டாள்[8]. அதன்படி, ஆடையைக் கழட்டச் சொல்லி, போர்வைக்குள் ஜெபம் செய்தானாம்[9]. அப்பொழுது பேய் வெளி வந்ததா, இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. எக்ஸார்ஸிஸ்ட் போன்ற புதிய படத்தையே எடுத்து விடலாம் போலிருக்கிறது.
போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள்: போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள் எல்லாம் பாஸ்டர்கள் / பாதிரிகள் எப்படி கையாளுகிறார்கள், எந்த செமினரியில் இதெற்கெல்லாம் பயிற்சி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த பாஸ்டர். பிறகு, உடலுறவிலும் ஈடுபட்டிருக்கிறான். இதைப் பற்றிய வீடியோ செய்திகள் வேறு வெளியிடப் பட்டுள்ளது[10]. ஆனால், பேய் போகவில்லை என்று சொல்லி, அந்த ஆசிரியரும் அவரை நம்பி பலமுறை உறவில் இருந்துள்ளனர்[11]. அடம் பிடிக்கும் பேய் என்று ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ள்து நோக்கத்தக்கது[12].பேய் ஓட்டுவதாக கூறி நடுத்தர வயது பெண்ணை ஏமாற்றி அவரிடம் காமக்களியாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியாரை தூத்துக்குடி போலீஸார் தேடி வருகின்றனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை தேடுவதை விட்டுவிட்டு, கடவுளின் தூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளை தேடி சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு இந்தப் பெண்ணின் கதையே சிறந்த உதாரணம்.
பாதிரியின்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டது: பாதிரி தன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன், மகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து பணத்தையும் பறித்துள்ளான். அதனால், திருமணம் செய்து கொள் என்று வற்புருத்திய போது, அதே போல் வரும் பெண்களை தன்னிடம் சிக்க வைக்க உதவ வேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறான். இதனால் கொதித்துப் போன அப்பெண் ஒடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறாள். மறுத்ததால், போலீசிடம் புகார் கொடுத்தாள். இதையடுத்து தன்னை ஏமாற்றிய ஜோஸ்வா மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த போதகர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேத்தரின் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் இளம்பெண் கேத்தரினை ஏமாற்றி, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததாக, தியான மைய ஊழியர் ஜோஸ்வா மற்றும் பாதிரியார் மகிழன் மீது 294 (பி), 420, 417, 506 (1) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
[1] தினகரன், தூத்துக்குடிஅருகேதியானத்திற்குவந்தசென்னைஆசிரியையுடன்உல்லாசம்தியானமையஊழியர்மீதுவழக்கு: தவறாகநடக்கமுயன்றதாகபாதிரியார்மீதும்புகார், October 15, 2023, 12:17 am
[5] சமயம், பேய்ஓட்டுவதாககூறிபெண்ணிடம்காமக்களியாட்டத்தில்ஈடுபட்டபாதிரியார்.. அலறும்தூத்துக்குடி, Authored By ஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | Updated: 14 Oct 2023, 12:09 am.
[9] தினத்தந்தி, பெண்ணின்உடலில்குடியிருந்தபேய்… ஆடையைகழட்டசொன்னபாதிரியார் – போர்வைக்குள்ஜெபம்.. அதிர்ச்சிவீடியோ, By தந்தி டிவி 13 அக்டோபர் 2023 10:28 PM.
கிறிஸ்தவசர்ச்சுகள்பெருகுவது, பெருக்குவதுஅவர்களதுபலத்தைஅல்லதுபலவீனத்தைக்காட்டுகிறதா?: திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதிகளில் சர்ச்சுகள், சர்ச்சுகளில் பாலியல் விவகாரங்கள், செக்ச் வக்கிரங்கள், பிடோபைல் குற்றங்கள் என்று வகைவகையாக சட்டமீறல்கள் செய்திகளாக வருவது சகஜமாகி விட்டது. இதற்கு சர்ச்சுகளோ, கிறிஸ்தவ உயர் தலைவர்கள், முதலியோரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும், இத்தகைய செக்ஸ் வக்கிரங்களைத் தடுக்க வேண்டும் என்ற அமைப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேன்மேலும் அத்தகைய குற்றங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன்,39 வயதானவர்[1]. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். குமரி மாவட்டம் தச்சநல்லுாரில், அருணாச்சலம் என்பவரது இடத்தில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார், போதகம் நடத்தி வருகிறார்[2]. இவ்வாறு ஆளுக்கு ஆள் ஏதோ சர்ச்சை ஆரம்பித்து, தங்களது வேலைகளை செய்யலாம், எந்த கட்டுப்பாடும் இல்லையா போன்ற விவகாரங்களும் புரிவதில்லை.
குறிப்பிட்டவிதவைபெண்ணைதொல்லைக்குஉண்டாக்கியது: இருப்பினும், ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஆட்கள் வருவது, அல்லேலுயா என்று கத்துவது, போன்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தனியாக தொலைவில், ஒரு இடத்தில் நடக்கும் பட்சத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. சுற்றிலும் வீடுகள் இருந்து, மற்றர்களுக்கு தொந்தரவு ஆகும் பட்சத்தில் புகார் கொடுக்கப் படுகிறது. இங்கு, வழிபாட்டிற்கு வந்த, 39 வயது / 40 வயது பெண் வந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்பொழுது, அப்பெண்ணின் தொடர்புக்கு என்று மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார்[4]. முதலில் சாதாரணமாக பேசி வந்தாராம். அப்பெண்ணும் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற பெண்களை விடுத்து, இந்த பெண்ணை ஏன் குறி வைத்தார் என்பதெல்லாம் கடவுளுக்கும், பாதிரியாருக்கும் தான் தெரியும் போலிருக்கிறது. கடவுளை நம்பும் இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா, எப்படி பெண்களை இவ்வாறு கொடுமைப் படுத்துகின்றனர் என்பதும் புரியவில்லை.
பாதிரிபாலியல்தொல்லைகொடுத்தவிதம்: பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்[5]. அதாவது விதவைகளுக்கு அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பதை சர்ச் ஏற்கிறதா என்பதையும் ஆராய வேண்டியுளளது. “சொசைடி ஆப் ஜீசஸ்” போன்ற பாதிரிகளுக்கு விதவைகளை குறி வைக்க வேண்டும் என்று குறிப்புகள் இருப்பதாக எடுத்துக் காட்டப் படுகிறது. நாளுக்கு நாள் இந்த டார்ச்சர் அதிகமாகிய போது, மனமுடைந்த வாழ்க்கையில் வெறுப்படைந்தாள்[6]. பெண், 30-09-2023 சனிக்கிழமை அன்று 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்[7]. இந்த அளவுக்கு நடந்திருக்கிறது எனும் பொழுது, அப்பாதிரி எப்படி பொறுப்பற்ற முறையில் இருந்துள்ளான் என்பதும் நோக்கத் தக்கது. வீட்டில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை, உறவினர்கள் மீட்டி, ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்[8]. ஆக, இங்கிருந்து தான் உண்மை வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆனால், முழு செய்திகள் வெளிவராதலால், அவை மறைக்கப் படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.
தேடப்பட்டபாதிரிமாட்டிக்கொண்டதும், சிறையில்அடைக்கப்பட்டதும்: அந்த பாதிரியாரின் பாலியல் தொல்லைப் பற்றி, இது குறித்து தச்சநல்லூர் போலீஸாரிடம் புகார் கொடுக்கப் பட்டது[9]. முதலில் அந்த ஆள் காணவில்லை, போலீசார் தேடி வந்தனர், என்றெல்லாம் செய்திகள் வந்தன[10]. பிறகு, மாட்டிக் கொண்டான், கைது என்று செய்திகள் வெளியிடப் பட்டன[11]. விசாரணை நடத்திய பிறகு, பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் தற்கொலைக்குத் தூண்டியதாக, போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது செல்போன் பரிசோதனை செய்யப் பட்டது, தொந்தரவு செய்தது நிரூபனம் ஆனது, மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டு வந்தது, போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டது எல்லாம் புரிந்து கொள்ளலாம். அதே போல, இந்த பாதிரியாரை குறிப்பிட்ட சர்ச் தள்ளிவைத்ததா இல்லையா, இந்த ஆபாசத்திற்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது என்பதெல்லாம், கர்த்தர், மேரி, ஜோசப் அல்லது எந்த அப்போஸ்தலர் யார் என்று தெரியவில்லை.
செக்யூலரிஸதமிழகமா, நாத்திகஇந்துவிரோதமா, கிறிஸ்தவஆதரவா?: சமீபத்தில் வரை தொடர்ந்து தமிழக சபாநாயகர், முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், இந்து அறநிலைய அமைச்சர் உட்பட கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக அதே நேரத்தில் இந்துமதத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். அந்நிலையில், எப்படி கிறிஸ்தவர்கள் இத்தகைய குற்றங்களை செய்து வருகிறார்கள் என்று அவர்களால் விளக்கம் அளிக்க முடியுமா, விளக்கம் அளிப்பார்களா? செக்யூலரிஸம் எனும்பொழுது, அவர்களது நாத்திகம் இந்துவிரோதமாகத் தான் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது, இவ்வாறு மற்ற பல விவகாரங்களிலும் அதே போக்குக் காணப் படுகிறது. நாத்திகம், பெரியாரி\சம் பேசும் தமிழக அரசு, அப்படியே செக்யூலரிஸத்துடன் செயல்பட்டால், எல்லோருக்கும் நல்லது.
[7] தமிழ்.இந்தியா.ஒன், தினமும்செல்போனில்அந்தமாதிரிபேசிடார்ச்சர்… தூக்கமாத்திரையைபோட்டபெண்.. வசமாகசிக்கியபாதிரியார், By Velmurugan P Updated: Monday, October 2, 2023, 13:17 [IST]
[11] சமயம், நெல்லையில்பாலியல்சீண்டலில்ஈடுபட்டபாதிரியார்! தூக்கமாத்திரைசாப்பிட்டுஉயிருக்குபோராடும்பெண்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 2 Oct 2023, 3:56 pm
லியோஸ்டான்லிபாலியல் விவகாரம் – போக்சோ சட்டம் – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அந்த உதவி பேராசிரியரை சஸ்பெண்ட் செய்தது!
செயின்ட்ஜோசப்கல்லூரிலியோஸ்டான்லிபாலியல்குற்றங்களில்ஈடுபட்டது: திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபலமான தனியார் கல்லூரி – செயின்ட் ஜோசப் கல்லூரி – ஒன்று செயல்பட்டு வருகிறது. இச்செய்தியை சில ஊடகங்களே வெளிட்டன என்றாலும், கல்லூரி பெயரைக் குறிப்பிடாமல், தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது, அந்த ஊடகத்தின் பின்னணியும் காட்டுகிறது எனலாம். ஆனால், வெளியில் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். போக்சோ சட்டத்தைப் பொறுத்த வரையில், பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள் தான் வெளியிடக் கூடாது. ஆனால், குற்றம் சாட்டப் பட்ட, குற்றவாளிகளின் அடையாளங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக லியோ ஸ்டான்லி / லியோ ஸ்டான்டலி / லியோ ஸ்டாண்டலி என்பவர் ரசாயனவியல் துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது படிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், திறமைகள் என்று ஆறு பக்கங்களுக்கு விவரங்களைக் கொடுத்திருப்பதை, அக்கல்லூரி இணைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இருப்பினும், இவன் தான் இத்தகைய குற்றத்தை செய்திருக்கிறான்.
கிறிஸ்தவஊழியம்செய்தேன்என்றுபெருமைபேசும்இவன்இத்தகையபாலியல்குற்றங்களில்ஈடுபட்டது: கிறிஸ்தவ ஊழியம் செய்தேன், குழந்தைகளுடன் வேலை செய்தேன் என்றெல்லாம் பெருமைப் பீழ்த்திக் கொள்ளும் இந்த ஆள்[1] இத்தகைய பெண்டாளும் வேலைகளிலும் வல்லவன் என்பது போல பாலியலில் ஈடுபட்டுள்ளான். “இக்னேசியகல்விமுறைகள்மூலம்எனதுகற்பித்தலில்இக்னேசியமதிப்பைக்கொண்டிருப்பதன்மூலம்இளம்மாணவர்களைமற்றவர்களுக்குஆண்களாகவும்பெண்களாகவும்உருவாக்குவதில்ஜேசுயிட்களின்பணியில்நான்பங்கேற்கிறேன்.”. ஒருவேளை “பீடோபைல்” வகையறாவும் இருக்குமோ என்று தெரியவில்லை. கிறிஸ்தவ இறையியல் இவர்களுக்கு நல்ல ஒழுக்கம் முதலியவற்றைக் கொடுக்காமல், இவ்வாறு பாலியல் குற்றங்களை செய்ய எவ்வாறு ஊக்குவித்தது என்று தெரியவில்லை. இன்றைக்கு பெரும்பாலான கிறிஸ்தவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று பலர் அடிக்கை செக் குற்றங்களில் மாட்டிக் கொள்வது, செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பாலியல்விவகாரங்களால்புகார்எழுந்தது: இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் லியோ ஸ்டான்லி பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[2]. ஏதோ இன்னும் நிரூபிக்கப் படவில்லை போன்ற ரீதியில் காமதேனு செய்தி வெளியிட்டுள்ளது[3]. தாயும்-மகளும் எப்படி மாட்டிக் கொண்டனர் என்பதும் புதிராக உள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார்[4]. ஆக, இப்பிரச்சினை எத்தனை காலமாக இருந்தது என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது[5]. இது பிரச்சினை வெளியே வரக்கூடாது என்பதாலா அல்லது கிறிஸ்தவ நிறுவனம் தனது பாலியல் குற்ரங்களை மறைக்க போட்ட திட்டமா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.
மாணவிதற்கொலைமுயற்சியால், விசாரணைநடந்தது, பாலியல்சதாய்ப்புமெய்ப்பிக்கப்பட்டது: இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார்[6]. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி காப்பாற்றப்பட்டார்[7]ஆக, ஆஸ்பத்திரி ஆவணங்களில் சிகிச்சை, சிகிச்சை விவரங்கள் முதலியனவும் பதிவாகி இருக்கும். அந்நிலைகளிலும் செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அதாவது, ஊடகஙளுக்குத் தெரியாமல் மறைத்தனரா அல்லது சரிகட்டினரா என்று தெரியவில்லை. சிவசங்கர் பாபா, கலாக்ஷேத்திரா போன்ற விசயங்கள், ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக தினம்-தினம் செய்திகள் வெளியிட்டு வந்தன. டிவிசெனல்களில் விவாதங்களையும் நடத்தின. ஆனால், இவ்விசயத்தில் ஒன்றும் தெரியாதது போல அமைதியாக இருந்த போலும். அக, இங்கு, மாணவி தற்கொலை முயற்சிக்குச் சென்று, ஆஸ்பத்திரியில் அனுமதி செய்யப் பட்டு, சிகிச்சை பெற்றதால், விவகாரம் வெளிவந்து விட்டது என்று தெரிகிறது.
தாய்–மகள்என்றுபாராமல், இருவருக்கும்பாலியல்தொந்தரவுகொடுத்தது: இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டியினர் விசாரணை நடத்தினர்[8]. அப்படியென்றால் கமிட்டி உறுப்பினர்களும் தெரிந்திருக்கிறது. கல்லூரி கோப்புகளிலும் பதிவாகி இருக்கிறது. அப்போது, மாணவிக்கும், அவரது தாயாருக்கும், உதவி பேராசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்தது உண்மை என தெரியவந்தது[9]. இவையெல்லாம் எத்தனை மாதங்களாக நடந்தன என்பதையும் ஊடகங்கள் குறிப்பிடவில்லை. மேலும் அவன் மற்ற மாணவிகளிடமும் அவ்வாறு நடத்திருக்கிறான் என்று தெரிய வருகிறது[10]. ஆனால், அவ்விவகாரங்கள், விவரங்கள் தெரியவில்லை, கொடுக்கப் படவில்லை. இதையடுத்து உதவி பேராசிரியர் லியோ ஸ்டான்லியை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து[11] பணியிட நீக்கம் செய்து கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது[12] என்று இப்பொழுது செய்தி வந்துளளது. சரி, அவன் ஏன் கைது செய்யப் படவில்லை என்றும் தெரியவில்லை. பாலியல் குற்றங்கள் கூட பாரபட்சமாகத்தான் போலீசாற், நீதிமன்றங்கள் முதலியவை கையாண்டு வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்லலாம். மேலும் சாதி ரீதியில் செல்லும் இப்பிரச்சினை விசிக மற்றும் பாமக கையில் எடுத்திருப்பதால், அரசியல் மயமாக்கப் படும் என்றும் தெரிகிறது.
இவ்விவகாரத்தில் ஊடகங்கள் அமைதியாக இருப்பது: இக்கல்லூரி பாலியல் குற்றங்களில் சிக்குவது சகஜமாகி விட்டது போலிருக்கிறது. 2011ல் கன்னியாஸ்திரி கற்பழிப்பு விவகாரம், பூதாகாரமாகி, பிஷப்பு, பாஸ்டர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டனர். ஆதிக்கம், அரசியல், தாக்கம் முதலியவை இருப்பதனால் பிரச்சினைகளை மறைத்து விடுகின்றனர் போலும். இவ்விசயத்தில் கூட, எல்லைகளை மீறி வெளிவ்ந்த நிலையில், சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. இருப்பினும், முதன்மை ஊடகங்கள் அமைதியாகவே இருக்கின்றன.
சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)
துரைமுருகன் நோட்டீஸ் கண்டுகொள்ளாத எம்.பி: சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடக்கும் விவகாரங்கள் குறித்த தகவல் தி.மு.க தலைமைக்குச் சென்றது[1]. அதனால் கட்சித் தலைமை ஞானதிரவியம் எம்.பி மீது அதிருப்தியடைந்துள்ளது[2]. அதனால் அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்[3]. அதில், கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஏழு தினங்களுக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது[4], இதனிடையே, சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்[5]. அத்துடன், ஞானதிரவியம் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட சிலர் பேர் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. காட்ப்ரே நோபுள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்[7]. அவர்கள்மீது 147 (கலகம் செய்தல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 506 (2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது[8]. விகடன் கேட்டபோது[9], “சி.எஸ்.ஐ அலுவலகத்தில் மோதல் நடந்தபோது நான் சம்பவ இடத்திலேயே கிடையாது. ஆனாலும் என்னையும் திட்டமிட்டு அந்த வழக்கில் சேர்த்திருக்கின்றனர். விசாரணையின்போது உண்மை தெரியவரும். என்னிடம் விளக்கம் கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுப்பேன்” என்று ஞானதிரவியம் முடித்துக் கொண்டார்[10].
ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான லாரிகளில் கனிமங்கள் கடத்தல்: சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நெல்லை திருமண்டலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் சி.எஸ்.ஐ உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஞானதிரவியம் எம்.பி செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தி.மு.க தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றவண்ணம் இருப்பதால் கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. 21-06-2023 கடிதத்தின் படி அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியானது. அதைத் தொடர்ந்து கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி கனிம கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த டாரஸ் லாரிகள் இரண்டும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது[11]. அதனால் போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, பிடிபட்டது 9 லாரிகள் என்றும் அவற்றை விடுவிக்குமாறு தி.மு.க-வின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால் ஏழு லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்[12]. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்>
பின்னணியில் அ.தி.மு.க.,திமுக எம்.பி குற்றச்சாட்டு: இவ்வழக்கு குறித்து எம்.பி., ஞான திரவியம் கூறியதாவது[13]: “காட்ப்ரே நோபுள், அடியாட்களுடன், டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கும், சி.எஸ்.ஐ., சபையினருக்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ கிடையாது. திருமண்டலத்தைச் சேர்ந்த ஜானிடம் தகராறு செய்யும் நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெனி தலைமையில், 30 பேருடன் டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டேன். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் நான், சம்பவ இடத்தில் இல்லை. அப்படி இருந்தும், காட்ப்ரே நோபுள் புகார் அடிப்படையில் காவல் துறையினர்.
எந்தவித விசாரணையும் இன்றி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, அதில் என்னையும் சேர்த்துள்ளனர். இது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்ப்ரே நோபுள், அ.தி.மு.க.,வுக்கு மிகவும் சாதகமானவர். அவர் ஏற்கனவே, ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் மற்றும் 2021 சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பணியாற்றிஉள்ளார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவரை, தற்போதைய பிஷப்பும், அ.தி.மு.க, ஒன்றிய செயலருமான, கே.பி.கே.செல்வராஜ், அ.தி.மு.க., பகுதி செயலர் ஜெனி ஆகியோர், பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர். பிஷப்பும், இவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தான் உண்மை,”இவ்வாறு தெரிவித்து உள்ளார்[14]..
2022லிருந்துதொடரும்கனிமவளகொள்ளைபுகார்: அனுமதியின்றி கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளம் கடத்திய தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் மகன் தினகரன் கைதாவாரா என, கேள்வி எழுந்துள்ளது[15]. ஏற்கனவே, பொதுமேடையில் கலெக்டருடன் மோதல் ஏற்படுத்திய தி.மு.க., – எம்.பி., மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லாரிகளின் உரிமையாளர் திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பதால், போலீசார் ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லும்படி கூறினர்[16]. லாரி உரிமையாளர் தினகரன் உடனடியாக வரவில்லை. அவர் மீது, 379 பிரிவில் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். தற்போது டிரைவர்கள் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர். தி.மு.க., – எம்.பி., மகன் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாவட்ட நிர்வாகம் மீது கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சமீபத்தில் திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும், பிரச்னை அவருக்கு எதிராகவே திரும்பியது.அவரது மற்றொரு மகன் ராஜா மீதும் லாரி மணல் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது தினகரன் மீதும் மணல் திருட்டு வழக்கு, போலீஸ் தேடல் என, சர்ச்சை தொடர்கிறது.
[1] தமிழ்.நியூஸ்.18, பாதிரியார்மீதுதாக்குதல்… திமுகஎம்பிமீது 5 பிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவு, Published By :Arunkumar A, TIRUNELVELI, First published: June 27, 2023, 10:30 IST, LAST UPDATED : JUNE 27, 2023, 10:30 IST.
[3] தமிழ்.இந்து, சிஎஸ்ஐதிருமண்டலமோதல்விவகாரம் | திமுகஎம்.பிஞானதிரவியம்உள்ளிட்ட 33 பேர்மீதுவழக்குப்பதிவு, செய்திப்பிரிவு, Published : 27 Jun 2023 11:52 AM, Last Updated : 27 Jun 2023 11:52 AM
[5] தமிழ்.ஒன்.இந்தியா, சிஎஸ்ஐமதபோதகர்மீதுதாக்குதல்.. நெல்லைஎம்.பிஞானதிரவியம்மீதுதிமுகநடவடிக்கை.. பாய்ந்தவழக்கு, By Jeyalakshmi C Updated: Tuesday, June 27, 2023, 12:01 [IST]