சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? பிரிப்பது பணமா, அந்தஸ்தா, இறையியலா எது? (2)
துரைமுருகன் நோட்டீஸ் கண்டுகொள்ளாத எம்.பி: சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடக்கும் விவகாரங்கள் குறித்த தகவல் தி.மு.க தலைமைக்குச் சென்றது[1]. அதனால் கட்சித் தலைமை ஞானதிரவியம் எம்.பி மீது அதிருப்தியடைந்துள்ளது[2]. அதனால் அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்[3]. அதில், கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஏழு தினங்களுக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது[4], இதனிடையே, சி.எஸ்.ஐ திருமண்டலத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்[5]. அத்துடன், ஞானதிரவியம் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட சிலர் பேர் மீது கொடுங்காயம் ஏற்படுத்துதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[6]. காட்ப்ரே நோபுள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த பாளையங்கோட்டை காவல்துறையினர், ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்[7]. அவர்கள்மீது 147 (கலகம் செய்தல்), 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 323 (காயப்படுத்துதல்), 109 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 506 (2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது[8]. விகடன் கேட்டபோது[9], “சி.எஸ்.ஐ அலுவலகத்தில் மோதல் நடந்தபோது நான் சம்பவ இடத்திலேயே கிடையாது. ஆனாலும் என்னையும் திட்டமிட்டு அந்த வழக்கில் சேர்த்திருக்கின்றனர். விசாரணையின்போது உண்மை தெரியவரும். என்னிடம் விளக்கம் கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுப்பேன்” என்று ஞானதிரவியம் முடித்துக் கொண்டார்[10].
ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமான லாரிகளில் கனிமங்கள் கடத்தல்: சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக நெல்லை திருமண்டலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் சி.எஸ்.ஐ உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஞானதிரவியம் எம்.பி செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தி.மு.க தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றவண்ணம் இருப்பதால் கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. 21-06-2023 கடிதத்தின் படி அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியானது. அதைத் தொடர்ந்து கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி கனிம கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த டாரஸ் லாரிகள் இரண்டும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது[11]. அதனால் போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, பிடிபட்டது 9 லாரிகள் என்றும் அவற்றை விடுவிக்குமாறு தி.மு.க-வின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால் ஏழு லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்[12]. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்>
பின்னணியில் அ.தி.மு.க.,திமுக எம்.பி குற்றச்சாட்டு: இவ்வழக்கு குறித்து எம்.பி., ஞான திரவியம் கூறியதாவது[13]: “காட்ப்ரே நோபுள், அடியாட்களுடன், டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கும், சி.எஸ்.ஐ., சபையினருக்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ கிடையாது. திருமண்டலத்தைச் சேர்ந்த ஜானிடம் தகராறு செய்யும் நோக்கத்தோடு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெனி தலைமையில், 30 பேருடன் டயோசீஸ் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கேள்விப்பட்டேன். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் நான், சம்பவ இடத்தில் இல்லை. அப்படி இருந்தும், காட்ப்ரே நோபுள் புகார் அடிப்படையில் காவல் துறையினர்.
எந்தவித விசாரணையும் இன்றி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, அதில் என்னையும் சேர்த்துள்ளனர். இது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்ப்ரே நோபுள், அ.தி.மு.க.,வுக்கு மிகவும் சாதகமானவர். அவர் ஏற்கனவே, ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் மற்றும் 2021 சட்டசபை பொது தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பணியாற்றிஉள்ளார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவரை, தற்போதைய பிஷப்பும், அ.தி.மு.க, ஒன்றிய செயலருமான, கே.பி.கே.செல்வராஜ், அ.தி.மு.க., பகுதி செயலர் ஜெனி ஆகியோர், பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர். பிஷப்பும், இவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தான் உண்மை,”இவ்வாறு தெரிவித்து உள்ளார்[14]..
2022லிருந்துதொடரும்கனிமவளகொள்ளைபுகார்: அனுமதியின்றி கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளம் கடத்திய தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் மகன் தினகரன் கைதாவாரா என, கேள்வி எழுந்துள்ளது[15]. ஏற்கனவே, பொதுமேடையில் கலெக்டருடன் மோதல் ஏற்படுத்திய தி.மு.க., – எம்.பி., மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லாரிகளின் உரிமையாளர் திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் தினகரன் என்பதால், போலீசார் ஆவணங்களை காண்பித்துவிட்டு எடுத்துச் செல்லும்படி கூறினர்[16]. லாரி உரிமையாளர் தினகரன் உடனடியாக வரவில்லை. அவர் மீது, 379 பிரிவில் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். தற்போது டிரைவர்கள் இருவரும் கைதாகி சிறையில் உள்ளனர். தி.மு.க., – எம்.பி., மகன் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மாவட்ட நிர்வாகம் மீது கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சமீபத்தில் திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்தும், பிரச்னை அவருக்கு எதிராகவே திரும்பியது.அவரது மற்றொரு மகன் ராஜா மீதும் லாரி மணல் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது தினகரன் மீதும் மணல் திருட்டு வழக்கு, போலீஸ் தேடல் என, சர்ச்சை தொடர்கிறது.
[1] தமிழ்.நியூஸ்.18, பாதிரியார்மீதுதாக்குதல்… திமுகஎம்பிமீது 5 பிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவு, Published By :Arunkumar A, TIRUNELVELI, First published: June 27, 2023, 10:30 IST, LAST UPDATED : JUNE 27, 2023, 10:30 IST.
[3] தமிழ்.இந்து, சிஎஸ்ஐதிருமண்டலமோதல்விவகாரம் | திமுகஎம்.பிஞானதிரவியம்உள்ளிட்ட 33 பேர்மீதுவழக்குப்பதிவு, செய்திப்பிரிவு, Published : 27 Jun 2023 11:52 AM, Last Updated : 27 Jun 2023 11:52 AM
[5] தமிழ்.ஒன்.இந்தியா, சிஎஸ்ஐமதபோதகர்மீதுதாக்குதல்.. நெல்லைஎம்.பிஞானதிரவியம்மீதுதிமுகநடவடிக்கை.. பாய்ந்தவழக்கு, By Jeyalakshmi C Updated: Tuesday, June 27, 2023, 12:01 [IST]
ஆசியஆயர்பேரவைமாநாட்டில்கலந்துகொண்டஆறுபெண்கள்: பாங்காக்கில் நடந்த ஆசிய பிஷப் பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்[1]என்று வாடிகன் செய்தி கூறுகிறது. அவர்கள் கலந்து கொண்டது முக்கியமாகக் கருதப் படுகிறது. ஏனெனில் அவர்கள் பிராந்தியத்தில் உள்ள ஏழைகள், சிறுபான்மையினர், பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்[2], என்று தொடர்கிறது. முன்பு “எட்டு கன்னியாஸ்திரிகள்” கலந்து கொண்டார்கள் என்று செய்தி வந்தது. அதாவது ஐந்து / ஆறு கண்டங்களுக்கு ஒரு பெண் அல்லது அவ்வாறான ஆசிய கண்டத்தது நிலைக்கு, என்று எதோ, ஒப்புக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப் பட்டார்கள் போலிருக்கிறது. பாங்காக்கில் நடைபெறும் ஆசிய ஆயர்களின் பொது மாநாட்டில் (FABC) கலந்துகொள்ள அழைக்கப்பட்ட விருந்தினர்களில் பல மதப் பெண்களும் உள்ளனர்[3], என்றாலும், யார் கலந்து கொண்டனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் பாஸ்டர், பிஷப் போன்றெல்லாம் ஆக முடியாது என்று தான் உள்ளது.
முந்தைய செய்தி – போப்பும், ஆயர்மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில் உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். அக்டோபர் 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினல்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[4]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[5]. ஆக நூற்றுக்கணக்கில் ஆண்-பாதிரி-பிஷப்புகள் கலந்து கொண்டபோது, இப்பொழுது, “பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்,” என்று செய்தி வந்துள்ளது.
மாநாட்டில்பெண்கள்மதம்சார்ந்தவர்கள்கலந்துகொள்வதுஏன்முக்கியம்: வாடிகன் செய்திக்கு அளித்த பேட்டியில், மாநாட்டில் பெண்கள் மதம் சார்ந்தவர்கள் கலந்து கொள்வது ஏன் முக்கியம் என்று பேசினர்[6]. தலிதா கும் (Talitha Kum) பிரதிநிதியாக, தாய்லாந்தின் செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரி, ஸ்ரீ பவுலா, மதம் சார்ந்த பெண்கள் இங்கு இருப்பது முக்கியம், எனவே மனித கடத்தல் பகுதியில் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆயர்கள் அறிவார்கள்[7]. “நாங்கள்மக்களுக்குஉதவுகிறோம், மேலும்அவர்கள்எங்கள்குரலைக்கேட்கவேண்டும்மற்றும்எங்கள்செயல்பாட்டில்ஈடுபடவேண்டும்மற்றும்எங்களுக்குஆதரவளிக்கவேண்டும்என்றுநாங்கள்விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்[8]. தாய்லாந்தில் உள்ள தலிதா கும் உடன் தொடர்புடைய செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரியான சீனியர் பிரான்சுவா, “ஆயர்கள்இதைப்பற்றிதெரிந்துகொள்ளவும், அவர்களின்மறைமாவட்டங்களில்எங்கள்பணியைஏற்றுக்கொள்ளவும்நான்விரும்புகிறேன்“, எனவேஅவர்கள்மனிதகடத்தலால் “காயமடைந்தவர்களுக்கு” உதவிவழங்கமுடியும்,” என்று ஒப்புக்கொள்கிறார். “மனித கடத்தல்,” என்று குறிப்பிட்டாலும் அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதும், அவர்களை வைத்து நடக்கும் குற்றங்கள், குறிப்பாக, கத்தோலிக்க சர்ச்சுகள், கான்வென்டுகள் மற்றும் மடாலயங்களில் நடக்கும் பாலியல் வன்மங்கள் பற்றி மூச்சு விடவில்லை. போப்பே, பலமுறை அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிகிறது.
மதம்சார்ந்தபெண்கள், மதப்பிரச்சாரத்தில்முக்கியபங்குவகிக்கிறார்கள்: தாய்லாந்தில் உள்ள அனுமானத்தின் மதவாதியும், பிலிப்பைனா மிஷனரியுமான டியன்னா (Sr Deanna), அவர்களின் அருகை “அங்குமிகவும்முக்கியமானது…….”எனதுபிரசன்னம்நமதுபிஷப்புகளுக்கு, மதம், குறிப்பாகமதம்சார்ந்தபெண்கள், மதப்பிரச்சாரத்தில்முக்கியபங்குவகிக்கிறார்கள்என்பதைநினைவூட்டுவதாகநான்உணர்கிறேன்,” என்றுஅவர்கூறினார்.” என்று கூறுகிறார். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அலுவலகத்தின் நிர்வாகச் செயலாளரின் பங்கு காரணமாக தனிப்பட்ட அளவில் இது முக்கியமானது. இங்கு “மதம்சார்ந்தபெண்கள், மதப்பிரச்சாரத்தில்முக்கியபங்குவகிக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். அதாவது, பெண்கள் இக்காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவார்கள், ஆனால், ஆண்களுக்கு நிகராக அந்தஸ்து, சர்ச்சில் பதவிகள் கொடுக்கப் பட மாட்டாது என்படு உறுதியாகிறது.
இந்தியபெண்மணிஇந்தியகன்னியாஸ்த்திரிக்களின்பிரச்சினைகள்பற்றிபேசவில்லை: இந்தியாவிலுள்ள செயின்ட் பாலின் மகளான சகோதரி ஜோயன்னா டிசோசா (Sr Joeyanna D’Souza, a Daughter of St Paul), “ஊடகங்கள் மூலம் நற்செய்தியை அறிவிப்பதில் முழு ஈடுபாடு கொண்டதால் தான் பவுலின் ஆக அழைக்கப்பட்டதாகக் கூறினார். இங்கே இருப்பது,” அவள் தொடர்ந்தாள், “நான் இங்கு இருப்பது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் FABC இன் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் கோணத்தில் என்னால் சிறந்த பங்களிப்பை வழங்குகிறேன்,” எனும் போது, இந்தியாவில் எவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் பிஷப்புகளால், பாஸ்டர்களால் பாலியல் சதாய்ப்புகளுக்கு உள்ளாகிறார்கள், கற்பழிக்கப் படுகிறார்கள், கருவுற்று குழந்தை பெறுகிறார்கள் போன்றவற்றைப் பற்றி பேசாமல் இருந்ததையும் கவனிக்கலாம். சமீபத்தில் மூலக்கல் கற்பழிப்பு எல்லோருக்கும் அறிந்த விசயமாயிற்று, ஆனால், நடவடிக்கை எடுக்கப் படாமல் தப்பித்துக் கொண்டார்.
மதநம்பிக்கையுள்ளபெண்கள் FABC இல்கலந்துகொள்வதுமுக்கியம்: சகோதரி வெல் (Sr Whel) சிஸ்டர்ஸ் ஆஃப் தி டிவைன் சேவியர், பிலிப்பைன்ஸ், “எனக்கு குரல் இருப்பதால், மத நம்பிக்கையுள்ள பெண்கள் FABC இல் கலந்துகொள்வது முக்கியம் என்று தான் நம்புவதாகக் கூறினார். பிறகு ஏன் ஆறு பெண்கள் மட்டுமே கலந்து கொன்டார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் யதார்த்தம் என்ன என்பதை நான் வெளிப்படுத்த வேண்டும், சூழ்நிலைகளில் மட்டுமல்ல, FABC ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆனால் நாங்கள் பங்களிக்க முடியும், எங்களுக்கு யோசனைகள் உள்ளன. வெல் தலிதா கும் உடன் இணைந்து பணியாற்றுகிறார். “அவர்களும் நாமும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்க வேண்டும் என்பதும் கவலை அளிக்கிறது. அனைத்து மதத்தினரையும், குறிப்பாக பெண்கள் கேட்க வேண்டியது முக்கியம்.
ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… தரையில்உள்ளமக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும்எங்கள்குரல்: “தலிதா கும் மற்றும் சிறுபான்மையினருடன் பணிபுரியும் குட் ஷெப்பர்ட் பிரதிநிதித்துவப்படுத்தும் FABC உடன் இங்கு வந்திருப்பதை நான் தனிப்பட்ட முறையில் ஆசீர்வதித்ததாக உணர்கிறேன்” என்று தாய்லாந்தில் உள்ள எங்கள் அறக்கட்டளையின் சகோதரியான Sr Sutisa தொடங்கினார். இது நேரம், “ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… தரையில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் குரல் FABC இன் மேஜையில் கேட்கப்படும்” என்று அவர் தொடர்ந்தார். “இதுவும் ஒரு சேனலாகும்,” அவள் தொடர்ந்தாள், “அது மாற்றத்தை கொண்டு வரும்…எதிர்காலத்தில்…மிக சமீப எதிர்காலத்தில் FABC ஒரு சேனலாகும் .” முதலில் அவர்களது பாதிப்புக் குரலே இதில் கேட்காமல் இருக்கிறது. ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… என்றெல்லாம் பேசினாலும், இவர்கள் கைப்பாவைகளாக வேலை செய்கிறார்கள் என்று தான் தெரிகிறது. தனித்து, சுதந்திரமாக, தமது கருத்தை, ஏன் உண்மையான நிலைமையைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை என்பது தான் நிதர்சனமாகிறது.
2022 – அக்டோபர்பிரச்சினை, நவம்பரிலும்தொடர்கிறது: அக்டோபரில் இம்மாநாடு நடந்து முடிந்தாலும், வாடிகனில், அப்பிரச்சினை அலசப் படத்தான் செய்கிறது. ஜெர்மனியின் மூத்த கத்தோலிக்க பிஷப் 19-11-2022 சனிக்கிழமையன்று, பெண் பாதிரியார்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதங்கள் மூடப்பட்டுவிட்டன என்ற வாடிகனின் கருத்தை எதிர்த்து, அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசினார்[9]. போப் பிரான்சிசுக்கும் வத்திக்கான் அதிகாரிகளுக்கும் ஒரு பக்கம், மற்றும் ஜெர்மனியின் பிஷப்கள் அனைவரும் இன்னொரு பக்கம் என அடத்திய ஒரு வார உரையாடல் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் பிஷப் ஜியார்ஜ் பேட்ஜிங் (Georg Baetzing) இவ்வாறு பேசினார்[10].
[9] Reuters, Women priests, homosexuality, not closed debate in Church, German bishop says, By Philip Pullella November 19, 20225:49 PM GMT+5:30; Last Updated 4 hours ago
இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!
இந்துகுடும்பம்மதம்மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5]. சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6]. போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார்விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதிமற்றும்அவரதுஇருமகன்களும்குடும்பத்துடன்சிலஆண்டுகளுக்குமுன்னர்இந்துமதத்திலிருந்துகிறிஸ்தவமதத்திற்குதங்களைமதமாற்றம்செய்துகொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.
பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்டபெட்டியில்வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8]. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது. சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர். இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.
உயிர்ப்பிக்கும்முயற்சியில்அவரதுகுடும்பத்தினர்ஈடுபட்டுஇருப்பதாகபக்கத்துவீட்டினர்புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.
மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார்விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதிமற்றும்அவரதுஇருமகன்களும்குடும்பத்துடன்சிலஆண்டுகளுக்குமுன்னர்இந்துமதத்திலிருந்துகிறிஸ்தவமதத்திற்குதங்களைமதமாற்றம்செய்துகொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின்மூலமாகஇறந்துபோனமாலதியைஉயிர்ப்பிக்கமுடியும்என்றநம்பிக்கையில்அவரதுஉடலைவீட்டிலேயேவைத்திருந்ததும்தெரியவந்தது.வீட்டிலிருந்துதுர்நாற்றம்வந்ததால்இதுவெளியேதெரிந்ததாகவும்தகவல்வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].
2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12]. இங்கும், அது பொறுந்தும்..
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)
Pope sends mesage for FABC 2022
போப்பும், ஆயர்மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில் உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினால்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[1]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[2].
The Chinese cardinal- none attended from China
ஆசியபிஷப்மாநாட்டில்சைனாபிஷப்புகள்கலந்துகொள்ளவில்லை: தொற்று என்றெல்லாம் காரணங்கள் சொல்லப் பட்டாலும், சைனா கிறிஸ்வத்திற்கு ஆதரவாக இல்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் சைனா பொருளாதார விசயங்களில் அதிரடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ மேலிடம் அனுமதி இல்லாமல், எந்த பிஷப்பும் ஒன்றும் செய்து விட முடியாது. அதுதான், சைனாவில் உள்ள நிலை. கம்யூனிஸ மாநாடு நடந்து, லி பிங் மறுபடியும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சைனா, மதரீதியிலாக எந்த பிரச்சினையையும் உண்டாக்கவோ, அல்லது அந்நாட்டில் உருவாக்கவோ விரும்புவதில்லை. பௌத்தம், ஷின்டோ போன்ற மதத்தினர் இருந்தாலும், அவை தங்களது இடங்களுக்குள், மடாலங்களுக்குள் பின்பற்ற வேண்டும். தெருக்களில் வரக் கூடாது. ஆகவே, கிறிச்துவர், முஸ்லிம்கள் மற்ற நாடுகளைப் போனூ சைனாவில், பிரச்சாரம் செய்வது, கூட்டங்கள் போடுவது, போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.
மதம்மாற்றதிட்டம்போடும்கூட்டம்: மாநாட்டின் போது, ஆசியாவில் வளர்ந்து வரும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மத உண்மைகளுக்கு பதிலளிப்பதற்காக ஆசியாவில் உள்ள தேவாலயத்திற்கான ஒரு கிறிஸ்துவ மேய்ப்பு திட்டத்தை – அதாவது மதமாற்றி- ஆடுமாடுகளைப் போன்ற கூட்டத்தை உண்டாக்க – உருவாக்க பங்கேற்பாளர்கள் பல ஆலோசனைகளில் சேர்ந்தனர். ஆசிய இளைஞர்களுக்கான பைபிளின் தனித்துவமான பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது[3]. “அடையாளம்: அடையாளம் கண்டதும், வாழ்க்கையில் உள்ள சவால்களை கடத்தல்” [‘Identity: Identified, Navigating the Challenges of Life] என்ற தலைப்பில் அந்த பைபிள் வெளியிடப் பட்டு, ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் மற்றும் சைமன் போஹ் பிஷப்புகளால் அவைக்குக் கொடுக்கப் பட்டது[4]. முன்பு கூட ஆசியாவிற்கான பைபிள், இந்தியாவிற்கான பைபிள் என்றெல்லாம் வெளியிட்டனர். ஆனால், சர்ச்சை உண்டானதால், அவற்றை சுற்றிலிருந்து அகற்றி விட்டனர். அதை மறந்தும் விட்டனர் எனலாம். கருத்துரிமை பேசுபவர்களுக்கும் கப்சிப் என்று தான் இருக்கிறார்கள்.
அக்டோபர் 12 முதல் 30 வரைபிஷப்மாநாடுநடக்கும்நேரத்தில்உலகம்முழுவதும், பலநாடுகளில்மக்கள்கொல்லப்படுதல்: இம்மாநாடு முடியும் தருவாயில், தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் அக்டோபர் 29 அன்று நடந்த ஹாலோவீன்[5] விழாவில் ஒரு குறுகிய சந்துக்குள் ஒரு பெரிய ஹாலோவீன் பார்ட்டி கூட்டம் அலைமோதியதில் ஊட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர், நூற்றிற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[6]. பில்லிப்பைன்ஸிலும், பலத்த மழை, வெள்ளத்தினால், 45 பேர் கொல்லப் பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர்[7]. 30-10-2022 அன்று தொங்கு பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 150 பேர் பலியாகினர். உக்ரைனில் தொடர்ந்து போர்; பாலஸ்தீனத்தில் கலவரம் கொலை; ஈரான் ஆர்பாட்டத்தில் 150 பேர் கொலை, என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன-இருக்கின்றன. 29-10-2022 அன்று தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகளில் நூற்றிற்கும் மேலானோர் சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் கொல்லப் பட்டனர். ஆசியாவின் ஆயர்களின் கூட்டத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்களின் தூதுவர் தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிலிப்பைன்ஸில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்[8]. தாங்கள் எப்பொழுதும், அவர்களுடன் இருந்து, உதவுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்[9].
Traditional Thailand dance – Inculturation
ஆசியசர்ச்ஆசியத்தன்மையுடன்இருக்கவேண்டும், ரோம்–தன்மைகுறைந்திருக்கவேண்டும்: ஆசியாவில் உள்ள தேவாலயங்கள், திருச்சபையின் ஆசியத் தன்மையை வலியுறுத்தும் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் போப் பிரான்சிஸ் திருச்சபை சமூகங்களை, இக்கால இறையியல் மூலம் மேலும் அடித்தளமாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று, ஶ்ரீலங்காவின், ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான விமல் திரிமான்ன கூறுகிறார்[10]. ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்-தன்மை குறைந்திருக்க வேண்டும் என்று பேசுவதும்[11] தமாஷாக இருக்கிறது. எப்படித் தான் வார்த்தைகளை மாற்றி, சுற்றி வளைத்துப் பேசினாலும், வாடிகன் கவுன்சில் -2 என்றெல்லாம் பேசும் பொழுது, அவர்களது திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். உள்-கலாச்சாரமயமாக்கல், உரையாடல் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான். ஏற்கெனவே முரண்பாடுகளுடன் செயல் பட்டு வருகின்றன.
கிருத்துவத்தால்வன்முறையினைக்குறைக்கமுடியவில்லை: இத்தாலியிலிருந்து வரும் ஒரு நாளிதழ், “உதவ மற்றும் நீதி கேட்டு கூக்குரலிடும் மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள்…..ஆசிய கண்டத்தில் எழுச்சியுறும் மக்களுக்கு உதவுங்கள்……..ஒன்றாக உழைத்து புதிய ஆசியாவை உண்டாக்குவோம்,” என்றெல்லாம் மாநாட்டில் பேசியதாக கூறுகிறது[12]. இதெல்லாம் வழக்கமான கோஷங்கள் தானே தவிர, புதியதாக உன்றும் இல்லை. முதலில் இருக்கும் கிருத்துவர்களை, கிருத்துவர்களாக இருக்க இவர்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால், அதை செய்வதில்லை. இந்த மாநாடு நடக்கும் போதே, தினம்தினம் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கில் மக்கள் பல நாடுகளில் கொல்லப் படுகின்றனர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப் படுகின்றனர், தீவிரவாத தாக்குதல்களில் குரூரமாகக் கொல்லப் படுகிறார்கள். கடவுளின் பெயரால் தான் அவர்களும் அத்தகையை குரூர காரியங்களை செய்து வருகிறார்கள்.
மாநாட்டின்திட்டங்களைவிளக்கும்இறுதிஆவணம்தயாராகிறது: பம்பாய் பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ், மாநாடு செயல்பட்டு வரும் இறுதி ஆவணத்தை எவாஞ்சலைசேஷன் (மதம் மாற்றுதல்), மேய்ப்புச் சாத்தியங்கள் (மதம் மாற்றும் நடவடிக்கைகள்) தொடர்பான “எதிர்கால” ஆவணமாகவும், அவ்வாறே செயல்பாட்டிற்கு உதவும் வகையிலும் கொன்டு வர ஆவன செய்வதாக விவரித்தார்[13]. மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆசியாவில் உள்ள சமூகத்தின் பல அம்சங்களின் கூகுரல்களைக் கேட்டதாக அவர் விளக்கினார். கூறினார், உதாரணமாக, “எங்கள் ஆயர் பணியில் அதிக சிந்தனைமிக்க ஆன்மீகத்திற்கான பெரும் ஏக்கத்தை நாங்கள் கேட்டோம்”. இந்த ஆவணம், FABC பிரதிநிதிகளின் பொது ஒப்புதலைப் பெற்ற செயல்பாட்டில் உள்ளது என்று அவர் விளக்கினார். இது மற்ற ஆயர்களுடனும், பாமர உறுப்பினர்களுடனும் மேலும் விவாதிக்கப்படும். “இந்த ஆவணம் முழு ஆசியாவிலும் எதிர்கால மேய்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி ஆவணமாக எங்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றெல்லாம் கூறுவதை கவனிக்கலாம்.
வேதபிரகாஷ்
01-11-2022
[1] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM
[5] ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
[6] ஹாலோவீன் காரணமாக பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவாக இந்த விழாவில் 50 -60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக இந்த விழா வெளியில் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் இதை முன்னிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 1 லட்சம் பேர் அங்கு கூடினார்கள். அந்த மார்க்கெட் பகுதிகளில் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் ஓட தொடங்கி உள்ளனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி.. பலர் கீழே விழுந்து.. அவர்கள் மீது மக்கள் ஏறி மிதித்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பலரின் கழுத்து, முகம், நெஞ்சில் ஏறி மக்கள் ஓடிய நிலையில் அங்கு மிகப்பெரிய களேபரமே ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அதுதான் திடீரென மக்கள் ஓட காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் நேற்று 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இதில் பலியானவர்களில் 100 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
[7] n the Philippines, authorities reported at least 45 deaths so far and millions of damage due to severe Tropical Storm Nalgae, also locally dubbed Paeng.
[8] Pope’s envoy to Asian bishops meeting prays for victims of Seoul stampede, ‘Paeng’
By Roy Lagarde via CBCP News – October 31, 2022 – 5:35 PM .
[12] Agensir, Asia: Fabc’s final message, “let us hear the cry for help and justice” rising from the peoples of the continent. “Together we work for a better Asia”, 31 October 2022 @ 14:20.
[13] Vatican news, Asian Bishops: We wanted to see how our Churches can be agents of change, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 29 October 2022, 10:37.
கோவாகடற்கரைமாநிலம்எல்லாமேஉண்டுபோலும்: நாடு முழுவதும் பரவலாக மதமாற்றம் நடந்து வருகிறது என்பது தெரிந்த விசயமே. குறிப்பாக, கடற்கரை ஏரியாக்களில் வசிக்கும் கிராம மக்களை குறிவைத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவது கோவா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர்கிறது. இதேபோல, இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனால், அவர்களது வழிமுறை அதிரடியாக, வேறு முறைகளிலும் இருக்கும். இதன் காரணமாக, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது, ஆனால் மத்திய-மாநில அரசுகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆகவே, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது, சில மாநிலங்களில் சட்டமும் அமூலில் உள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடை தொடர்பாக, சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கத்தோலிக்கப்பாதிரியின்பிரச்சாரங்கள்: கோவா மாநிலம் கத்தோலிக்கக் கிருத்துவத்திற்குப் பெயர் போனது. இடைக்காலத்தில், போர்ச்சுகீசியர் கைப் பற்றிக் கொண்டு, இந்துக்களை மதம் மாற்றினர். அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் அவர்கள் உள்ளனர். அரசியல், அதிகாரம் முதலியவற்றிலும் ஆதிக்கம் கொண்டுள்ளனர். பனாஜியைச் சேர்ந்தவர் டோமினிக் டிசோசா (Dominic D’Souza ). கிறிஸ்தவ பாதிரியாரான இவரது மனைவி ஜோன் மார்கெரினாஸ் (Joan Mascarenhas). இருவரும் வடக்கு கோவாவிலுள்ள சியோலிம் கிராமத்தில் கிருத்துவ பிரச்சாரம் செய்து வருகிறார். எப்பொழுதும் பாடல்கள், கொண்டாங்கள் என்று அதிரடி ஆர்பாட்டங்களுடன் பிரச்சார செய்வது வழக்கம்[1]. ஒலிபெருக்கிகளை வைத்து செய்யும் அட்டகாசங்களினால், அங்கிருக்கும் கிருத்துவர்களாலேயே பொறுக்க முடியாமல், புகார் கொடுத்துள்ளனர்[2]. அதற்காக முறையாக அனுமதியும்பெறுவதில்லை. முந்தைய முதலமைச்சருடன் தொடர்பு இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டார்.
பேயோட்டிய தம்பதியர்: ரோமன் கத்தோலிக்க சமய மரபில் பேயோட்டுதல் ஒரு சடங்காகும் ஆனால் ஆனால் பாப்டிசம் அல்லது கன்ஃபெஷன் போலின்றி புனிதமானது கிடையாது ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவது கிடையாது. இப்பொழுது இது வியாபாரம் ஆகிவிட்டது. நம்புகிறவர்கள் வரத்தான் செய்கிறார்கள். புனிதச் சடங்கைப் போலின்றி பேயோட்டுதலின் “ஒருங்கிணைப்பும் விளைவுத் திறனும் மாறாத சூத்திரம் அல்லது அறிவுறுத்தப்படும் வரிசை முறையான செயல்களைப் பயன்படுத்துவதைப் பின்பற்றுல்லை. தகுதியுடைய, சட்டரீதியான தேவாலய அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மற்றும் பேயோட்டுபவரின் நம்பிக்கை”ஆகியவையாகும். இப்போதும் கூட தற்போதைய அனைத்து பேயோட்டல் சடங்குகளிலும் கத்தோலிக்க பேயோட்டல் மிகக் கடுமையான, ஒழுங்கமைந்துள்ள ஒன்று என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம். தேவாலயத்தின் கெனான் சட்டப்படி, அதிகாரப்பூர்வமான பேயோட்டல் செயல்களை அதற்கென நியமிக்கப்பட்ட பாதிரியார் (அல்லது உயர் மதகுரு) மட்டுமே செய்ய முடியும் என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம், வீடியோக்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவரும் வெளுத்து வாங்குகிறார்.
சாம–தான–பேத–தண்டமுறைகள்கையாண்டது: பாதிரி மற்றும் மனைவி, ஜோடியாக அட்டகாசமாக, பாடல்களைப் பாடிக் கொண்டு கிராம சர்ச்சில் ஊழியம் செய்வார். கூட்டம் கூட்டுவார். இலவசமாகப் பொருட்களை கொடுப்பார். பேஸ்புக் போன்றவற்றிலும் அத்தகையப் புகைப்படங்களைப் போட்டுக் கொண்டு, விளம்பரம் செய்து கொள்வார். பலவித உடைகளை அணீந்து வலம் வருவார். சாமியார் போன்றூ தலைமுடி வளர்த்து, தொங்க விடுவார். சலிகோவா கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாகவும் கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர்[3]. டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாக கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக இரண்டு பேர் மபுசா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்[4]. குறிப்பாக பிரகாஷ் கோப்ரேகர் (Prakash Khobrekar) என்பவர், ஜோன் மார்கெரினாஸ், பலவிதமாக பேசி, ஆசை வார்த்தைகள் பேசி, சைகைகள் காட்டி ஏமாற்றி மதம் மாற்றினார் என்று விளக்கினார்[5]. அந்த நபரின் பெயர் வெளிப்படுத்தப் படவில்லை. மேலும் இந்துமதம் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். புகார் கொடுத்தால் ……..தகாத வார்த்தைகள் சொல்லி என்று மிரட்டியும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்[6]. இப்பொழுதெல்லாம், புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை என்று போலீஸார் கொள்கை பின்பற்றுவது தெரிகிறது. குற்றமே செய்தாலும், யாரும் புகார் செய்யவில்லை என்றால் அமைதியாக இருப்பார்கள் போலும்.
புகாரின்பேரில்கைதுசெய்யப்பட்டது: இதனையடுத்து அவர்கள் மீது முறையற்ற மருந்துகள் பிரயோகம் மற்றும் விளம்பரசட்டப் பிரிவுகளின் கீழ் [the Drugs and Magic Remedies (Objectionable Advertisement) Act.] இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன[7]. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் மத உணர்வுகளை சீண்டும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[8]. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பனாஜி அருகேயுள்ள சலிகோவா கிராமத்தில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்[9]. பிறகு முறையாக நீதிபதியின் முன்பாக ஆஜர் படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[10]. ஆனால் 27-05-2022 அன்று பெயிலில் வெளியே வந்து விட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சரும் எச்சரிக்கை விட்டுள்ளார். ஆக அரசியல் நெருக்கடியும் வெளிப்படுகிறது. பிறகு என்ன, அல்லேலுய்யா என்று கத்திக் கொண்டு, வேலையை ஆரம்பித்து விடுவார்.
வேதபிரகாஷ்
28-05-2022
[1] Times of India, Siolim couple arrested for ‘conversions’, TNN / Updated: May 27, 2022, 07:46 IST.
[2] Domnic is not new to controversy and locals at Sodiem have been objecting to his activities frequently at the 5 Pillars Christian Church. The villagers had earlier alleged that Domnic was using loudspeakers without permission and was disturbing peace in the village. He would disturb prayer services at the local Catholic church, villagers had said. Loudspeakers and other sound system equipment had subsequently been seized by police from Domnic’s prayer house. He had, however, maintained that he had been running prayer activities for nearly two decades at his church.
[5] The Hindutan Times, Preacher couple arrested for alleged religious conversion in Goa, Published on May 26, 2022 11:22 PM IST.
[6] According to the complaint filed by one Prakash Khobrekar, D’Souza and Mascarenhas had induced an unnamed person to give up his religious belief and convert to the religion professed and propagated by them. “All the accused persons deliberately made gestures by uttering words, acts, threatened the complainant with the intention to hurt his religious sentiments and lured the complainant to accept the religion professed and propagated by them,” Khobrekar said in his complaint.
கடந்த 10 ஆண்டுகளில்ஆணையம்செயல்படாத்தால், சிறுபான்மையினருக்குஎதிரானநடைபெற்றகுற்றங்கள்குறித்ததரவுகளைஎதுவும்இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில்கடந்தஇரண்டுஆண்டுகள்மட்டும்நீர்நிலைகளைசரிசெய்யரூ.3000 கோடிசெலவுசெய்துள்ளனர். ஆனால்தற்போதுவிரைவாகமீட்புப்பணிகள்நடைபெறுகிறதுஎன்றால்கடந்தஐந்துமாதத்தில்திமுகஅரசுஎடுக்கப்பட்டநடவடிக்கைகள்தான்தேர்தலுக்குமுந்தையஇரண்டுஆண்டுகள்ஒதுக்கப்பட்ட 3000 கோடிரூபாய்சென்னையில்எங்குசெலவழிக்கப்பட்டது. பீட்டர்அல்போன்ஸ்பேட்டிசாத்தான்குளம்தந்தைமகன்கொலைவழக்கில்நீதிமன்றத்தில்வழக்குசென்றுகொண்டிருப்பதால், ஆணையம்விசாரணையைதொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில்ஆணையம்செயல்படாத்தால், சிறுபான்மையினருக்குஎதிரானநடைபெற்றகுற்றங்கள்குறித்ததரவுகளைஎதுவும்இல்லை. பொதுவாகஎந்தமதங்களிலும்புறம்போக்குஇடங்களில்தேவாலயங்களையும், வழிபாட்டுக்கூடங்களையும்அமைக்காதீர்கள். புறம்போக்குஇடத்தில்கட்டிவிட்டுஅனுமதிகேட்கும்போது, அரசால்அனுமதிகொடுக்கமுடியாது. பட்டாஇடங்களில்வழிபாட்டுத்தலங்கள்கட்டுவதாகஇருந்தால், அதற்கானஅனுமதியைமாவட்டஆட்சியர்கள்விரைந்துஅளிக்கவேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.
நிலமோசடி, ஆக்கிரமிப்புசெய்வதில்ஒன்றும்தவறில்லை–சொல்வதுஎஸ்ராசற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காகஒருசிறியசர்ச்சைக்கட்டஇப்படிபுறம்போக்குநிலத்தைவளைத்துப்போடுவதில்தவறுஇல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.
திமுகசர்ச்சுகளைபெருக்குவதற்கு–அதாவதுஅதிகமாக்குவதற்குஉதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!
இந்துவிரோதிஎஸ்டாசற்குணத்தின்பேச்சு–ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.
கிருத்துவர்களுக்கு“பயிற்சிபட்டறை”நடத்தியதுபொன்றிருந்தகூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!
[1] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.
[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!
M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.
[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.
[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!
[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்துமதம்குறித்துஅவதூறுபேச்சு ! மதபோதகர்எஸ்றாசற்குணம்மீதுவழக்குப்பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST
பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)
29-03-2022 அன்றுநடந்தசிறுபான்மையினர்நலன்தொடர்பானகலந்தாய்வுக்கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வழிபாட்டுத்தலங்களுக்குஅனுமதிவேண்டும்என்பதேபெரும்பாலானசிறுபான்மையினமக்களின்கோரிக்கையாகஉள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர்மக்கள்நலனுக்காக, கோவைஉள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குதனியாகஅதிகாரிகள்நியமிக்கப்படஉள்ளனர். வழிபாட்டுத்தலங்களுக்குஅனுமதிவேண்டும்என்பதேபெரும்பாலானசிறுபான்மையினமக்களின்கோரிக்கையாகஉள்ளது. இந்தகோரிக்கைமுதல்வரின்கவனத்துக்குஎடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில்நடந்தமாவட்டஆட்சியர்கூட்டத்தில்மதமோதல்களைஏற்படுத்தும்நபர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கமுதல்வர்அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?
தனிப்பட்டபிரார்த்தனை, வழிபாடுகளுக்குபிரச்சினைஇல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள்அவர்களின்இல்லங்களிலிருந்தோ, சிலதனிஇடத்தில்இருந்தோவேண்டுதல்கள்செய்வதற்குஎவ்விதஇடையூறுகளும்இருக்காதுஎன்றஉறுதியைமாவட்டஆட்சியரும்காவல்கண்காணிப்பாளரும்அளித்துள்ளனர். அதேசமயம், சிறுபான்மையினமக்கள்ஆராதனை, வேண்டுதல்என்றபெயரில்ஒலிப்பெருக்கிவைப்பதைதவிர்க்கவேண்டும். சமூகஅமைதிக்குஇடையூறுசெய்யவேண்டாம்என்றஆலோசனையும்அவர்களுக்குவழங்கப்பட்டுள்ளது. கோவைமாவட்டத்தில்எந்தஅளவுக்குசமூகஅமைதிநிலவுகிறதோ, அந்தஅளவுக்குஇம்மாவட்டத்தின்பொருளாதாரமும்வளர்ச்சிபெறும். சமூகஅமைதியைசீர்குலைக்கவும், மக்களைமதரீதியாகபிளவுஏற்படுத்திஅரசியல்செய்யவும்சிலர்முயற்சிக்கின்றனர். அவர்களுக்குமுதல்வர்எச்சரிக்கைவிடுத்துள்ளார். தமிழகத்தில்நடப்பதுதிராவிடமாடல்ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.
29-03-2022 அன்றுநடந்தஆலோசனைக்கூட்டத்தில்சிறுபான்மையினமக்கள்வசிக்கும்பகுதிகளில்அடிப்படைவசதிகள், பள்ளிக்கூடம், வங்கிகிளைவேண்டும்என்றகோரிக்கைகள்வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்டஆட்சியர், மாநகராட்சிஆணையாளர்அதற்கானநடவடிக்கைகளைமேற்கொள்வர். சிறுபான்மைஇனமக்களுக்காகமத்தியஅரசுசெயல்படுத்தவேண்டியதிட்டங்களில்சிறுபான்மையினமக்கள்வசிக்கக்கூடியசிலபகுதிகள்விடுபட்டுஉள்ளது. அரசுசார்பில்அமைக்கப்பட்டுள்ளமயானம்மற்றும்எரியூட்டும்மேடைஆகியவைஅனைவருக்கும்பொதுவானது. இங்குசெல்கின்றவர்கள்மதஅடையாளங்களைதுறந்துவிட்டுதான்செல்லவேண்டும். முதல்வரின்எண்ணமும்அதுதான். மதத்தின்அடிப்படையில்சடங்குகளைசெய்யவேண்டும்எனவிரும்புபவர்கள்அவர்கள்சொந்தசெலவில்கல்லறைகளைவைத்துக்கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.
“அரசுபுறம்போக்குநிலத்தில், சர்ச், மசூதிகட்டிஅனுமதிகேட்டால்கிடைக்காது; தனியார்இடத்திலும், கட்டிமுடித்தபின்அனுமதிகேட்டுஅரசைசங்கடப்படுத்தக்கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையினமக்களுக்குஉரிமைஇருப்பதுபோல், கடமைகளும்உள்ளன. மாற்றுசமூகத்தினருடன்இணைந்துஅவர்களைவாழவைக்கவேண்டும்; நாமும்அவர்களால்வாழவேண்டும். பிறசமூகமக்களுக்கும்உதவிகளைசெய்து, மனிதநேயம்மிகுந்தசமுதாயமாகமாற்றவேண்டும். ஜாதி, மதத்தைமறந்து, எல்லாரும்தமிழர்களாகஒன்றிணைந்து, எழுந்துநிற்கவேண்டும்.அரசுபுறம்போக்குநிலத்தில், சர்ச், மசூதிகட்டி, அனுமதிகேட்டால்கிடைக்காது; தனியார்இடத்திலும், கட்டிமுடித்தபின்அனுமதிகேட்டுஅரசைசங்கடப்படுத்தக்கூடாது. கலெக்டரிடம்முறையானஅனுமதிபெற்றபின்கட்டவேண்டும். மற்றமதத்தினர்வசிக்கும்பகுதிகளுக்குசென்று, மதபிரசாரம்செய்வதுபோன்றபணிகளைதவிர்க்கவேண்டும். சிறுபான்மையினமக்களின்கோரிக்கையின்மீது, மாவட்டநிர்வாகம், 30 நாட்களுக்குள்நடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்யாருக்கும்இடைஞ்சல்இல்லாமல்வழிபாடுநடத்துவதற்குசமூகஅனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?
நசரேத்சிஎஸ்ஐசர்ச்பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும்சளைத்ததுஅல்ல: நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் பிரச்சினை நடந்து முடிந்து விட்ட நிலையில், இப்பொழுது “குமுதம் ரிப்போர்ட்டர்” செய்தி-கட்டுரை வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[1]. குளோபல் மிஷனரி சொசைடி நடத்தி வருவதாகவும், அதில் பிரச்சினையுள்ளதாகவும் எஸ்.அண்ணாதுரை நிருபர் விளக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கீதா ஜீவன் மூலம், கனிமொழி உதவியுடன் பிரச்சினையை சுமுகமாக்கி விட்டது போலிருக்கிறது. பிஷப்பும் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிதி கொடுப்பது போல சந்தித்தாகி விட்டது. ஆக தேவசஹாயமும், சஹாயமாகி விட்டார், சமரசமாகி விட்டார் போலும். பல கோடிகள் சொத்துக்கள் உள்ள சிஎஸ்ஐ மற்றும் அதன் பிஷப்புகள், பாதிரிகள், அதிகாரிகள் கோர்ட்டுகளிலும், வெளியிலும் அடித்துக் கொள்வது புதியதல்ல. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றில் பற்பல பிரச்சினைகள் வெளி வந்துள்ளன. நசரேத் சிஎஸ்ஐ சர்ச் எதற்கும் கவலைப்படுவதாக இல்லை.
குடும்பப்பிரச்சினைசர்ச்பிரச்சினைஆகலாம்: நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ் ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல், குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ், ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ், ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம், மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள்.
நாசரேத்சிஎஸ்ஐதேர்தல்மிகவும்பரபரப்புடன்நடந்தது: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி 2021 அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது[2]. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்[3]. தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[4].
வெற்றி பெற்றப் பிறகும் தொடர்ந்த பிரச்சினைகள்: டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்[5]. 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்[6]. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்[7].
போலீஸார்வந்துசமரசம்செய்துவைத்தது: வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர் வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்[8]. பின்னர், நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர்[9].
போலீஸாரையே மதிக்காத சர்ச் விசுவாசிகள்: பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர். லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.
[1] குமுதம் ரிப்போர்ட்டர், ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்?, மார்ச்.11-03-2022, பக்கங்கள்.28-29.
[2] Policeseithitv, பிரதமபேராயரின்உத்தரவைமதித்ததூத்துக்குடி –நாசரேத்திருமண்டலகுருமார்கள், by policeseithitv October 30, 2021
policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதமபேராயர்உத்தரவைமதித்துபிஷப்தேவசகாயம்புதியநிர்வாகிகளானடி.எஸ்.எப். அணியோடுஇணைந்துபணியாற்றமுடிவு!! திருமண்டலமக்கள்மகிழ்ச்சி!, by policeseithitv October 31, 2021
Onetamil News, தூத்துக்குடிநாசரேத்சிஎஸ்ஐபிஷப்தேவசகாயம்புதியநிர்வாகிகளானடி.எஸ்.எப். அணியோடுஇணைந்துபணியாற்றமுடிவு, லேசெயலாளர்வேட்பாளர்நீகர்பிரின்ஸ்கிப்ட்சன்மகிழ்ச்சி, Oct 31, 2021
[4] policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதமபேராயர்உத்தரவைமதித்துபிஷப்தேவசகாயம்புதியநிர்வாகிகளானடி.எஸ்.எப். அணியோடுஇணைந்துபணியாற்றமுடிவு!! திருமண்டலமக்கள்மகிழ்ச்சி!, by policeseithitv October 31, 2021
[8] தமிழ்.இந்து, தூத்துக்குடி – நாசரேத்திருமண்டலதேர்தல் – புதியநிர்வாகிகள்பதவியேற்கசென்றபோதுஅலுவலகம்பூட்டு : இருதரப்பினர்இடையேவாக்குவாதம், செய்திப்பிரிவு, Published : 22 Oct 2021 03:07 AM; Last Updated : 22 Oct 2021 03:07 AM.
ஜூலை 2021ல்மனுதாக்கல்செய்யப்பட்டது: சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க மணல் குவாரிகள், மணல் சேகரிப்பு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் ஆராய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[1]. நெல்லை அம்பை அருகே பொட்டலைச் சேர்ந்த வி.கிறிஸ்டி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு[2]: ”பொட்டல்கிராமத்தில்எம்சாண்ட்என்றபெயரில்சட்டவிரோதமாகஆற்றுமணல்அள்ளப்பட்டுகேரளாவுக்குக்கடத்தப்படுகிறது. தினமும் 50க்கும்மேற்பட்டடிப்பர்லாரிகளில்ஆற்றுமணல்கேரளாவுக்குக்கடத்தப்படுகிறது. வருவாய்அதிகாரிகள்மற்றும்போலீஸார்உதவியுடன்இந்தசட்டவிரோதச்செயலில்பூமிஎம்சாண்ட்நிறுவனம்ஈடுபட்டுவருகிறது. இதுதொடர்பாககிராமமக்கள்மாவட்டஆட்சியரிடம் 14.3.2020-ல்புகார்அளித்தோம். இருப்பினும்பூமிஎம்சாண்ட்நிறுவனம்மீதுஅதிகாரிகள்நடவடிக்கைஎடுக்கவில்லை. இதையடுத்துஉயர்நீதிமன்றமதுரைக்கிளையில்வழக்குத்தொடர்ந்தோம். கிராமமக்கள்அளித்தபுகார்மனுவைவிசாரிக்கஉயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இந்நிலையில்கல்லிடைக்குறிச்சிபோலீஸார்எங்கள்கிராமத்தைச்சேர்ந்தஜான்பீட்டர், பால்ராஜ், சங்கரநாராயணன்லெட்சுமணன்ஆகியோரைக்கைதுசெய்தனர். இவர்களுக்கும்மணல்கடத்தலுக்கும்எந்தசம்பந்தமும்இல்லை. பூமிஎம்சாண்ட்நிறுவனஉரிமையாளரைத்தப்பிக்கவைக்கஇவர்களைக்கைதுசெய்துள்ளனர். இந்தவழக்கைசிபிசிஐடிக்குமாற்றவேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிஉத்தரவு: இதேபோல் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கர், ”வண்டால ஓடை அணை அருகே கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு எம் சாண்ட் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஓடை அணைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி வருகிறார். தினமும் சுமார் 300 லாரி வரை மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அணை பலம் இழந்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுத்தாக்கல் செய்தார். இவ்விரு மனுக்களையும் விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: ”மணல் சேகரிப்பு மையம் நடத்த மனுவேல் ஜார்ஜுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துள்ளார். இது தொடர்பாக மனுவேல் உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 243 அரசு ஹாலோ கிராம், அதிகாரிகள் கையெழுத்து இல்லாத போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றவாளிகளிடம் இருந்து சட்டவிரோத மணல் கடத்தலுக்காக அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரம் அடங்கிய பதிவேடு கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து விசாரிக்கவில்லை. கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் சரியாக விசாரணை நடத்தியுள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் வருவாய், வேளாண், கனிமவளத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது. இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது”.
தமிழகத்தில்மணல்தட்டுப்பாடுகாரணமாகஅபரிமிதமாகமணல்விலைஉயர்ந்துள்ளது: தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்[3]. விருதுநகரில் வெம்பக்கோட்டை அணையிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு பகுதியில் அயல்ராஜாபட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது திருட்டு மணலுக்கு அரசு கெடுபிடி செய்வதால் அரசு குவாரிகளில் மணல் விற்பனை அதிகரித்து வருகிறது[4]. அரசு குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் ரூ.660 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் இரண்டு யூனிட் மணல் 14ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தூரங்களுக்கு தகுந்தாற் போல் டீசல் செலவு சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு பலர் பணிகளை நிறுத்தியுள்ளனர். அரசு குவாரிகளில் மணல் வாங்குவதற்கு உள்ளூர்காரர்களுக்கும், வெளியூர்காரர்களுக்கும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில்உள்ளமண்வளத்தைகேரளமாநிலம்கொள்ளையடித்துகொண்டிருக்கிறது: பல அரசு குவாரிகளில் உள்ளூர் லாரிகளுக்கு காலை 6 முதல் 11 மணி வரையிலும், மற்ற நேரங்களில் வெளியூர் லாரிகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. தேவை அதிகம் உள்ள நிலையில் வெளி மாநிலமான கேரளாவுக்கு அதிகம் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மண் வளத்தை கேரள மாநிலம் கொள்ளையடித்து கொண்டிருக்கிறது. வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும். கணபதிராமன், தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்க தலைவர்: உள்ளூரில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. அரசு குவாரிகளில் மணல் விதி முறைகளுக்கு மீறி எடுத்து வருகின்றனர். வைப்பாறு பகுதியில் மூன்று இடங்களில் அரசு குவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேரளமாநிலத்திற்குமணல்கொண்டுசெல்லதடைவிதிக்கவேண்டும்: இதில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. கேரள மாநிலத்திற்கு மணல் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். அரசு குவாரிகளை குறைத்து விதிகளுக்குட்பட்டு மணல் எடுப்பதை குழு நியமித்து கண்காணிக்க வேண்டும். பாறைகளை உடைத்து மணலாக்கி கட்டுமான பணிகள் செய்யும் புதிய தொழில் நுட்பத்தை அரசு கடைபிடிக்க வேண்டும். திருவேங்கட ராமானுஜம், சிவகாசி பாசன சங்க தலைவர்: வெம்பக்கோட்டை அரசு குவாரியில் உள்ளூர், வெளியூர் லாரிகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து மணல் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல அரசு தடை விதிக்க வேண்டும்.
தமிழக எல்லைகள் மூலம் கேரளாவுக்கு மணல் தொடர்ச்சியாகக் கடத்தப் படுகிறது: கேரளாவுக்கு கன்னியாகுமரி மற்றும் கரூர் எல்லைகள் மூலம், தொடர்ச்சியாக ஆற்று மணல், கேரளாவுக்குக் கடத்தப் பட்டு வருகின்றது. இது பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. இப்பொழுது, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பொது மக்களும், இந்த மணல் திருட்டைத் தடுத்து வருகிற்ர்கள். இருப்பினும், அரசு அதிகாரிகள். அவர்களது அரசியல் பலம், கோடிகளில் பணப்புழக்கம் என்றெல்லாம் வரும் போது, கண்ணை மூடிக் கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான லாரிகள் ஆற்று மணலுடன் எல்லைகளைக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கின்றன. நியாயம், தர்மம், நீதி, சட்டம், ஒழ்க்கம் எல்லாம் இதில் யாரும் பார்ப்படில்லை. அதனால் தான், பிஷப்பே கைதாகியுள்ளார். ஆனால், கேரளாவில் அதுவும் சகஜமாகி விட்டது. அபயா கொலை, மூலக்கல் கற்பழிப்பு என்ற பல வழக்குகளில் பிஷப்புகள் சிக்கியுள்ளனர். நிதி மோசடி விவகாரங்களில், ஒரு கார்டினலே சிக்கியுள்ளார்.
ஜெபாஎன்றகிறிஸ்டோபர்ஜெயக்குமார்கணக்கு ஆசிரியரா, தலைமை ஆசிரியரா, மதப்பிரச்சாரகரா, தலைமறைவாகும் கோழையா, செக்ஸ்-பாலியல் குற்ற வல்லுனரா?
கோரோனாவை விட கொடிய நோயைக் கொண்டுள்ள கிருத்துவ பாலியல் குற்றங்கள்-குரூரங்கள்: இது ஏதோ, ஒரு மதத்தைக் குறைகூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் பல நிலைகளில் தமிழகத்திலேயே அதிகமாக நடந்து கொண்டிருப்பதால் எடுத்துக் காட்டப் படுகிறது. கிருத்துவ சர்ச்சுகள், கான்வென்டுகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எங்கு பார்த்தாலும், பிஷப் முதல் ஆசிரியர் வரை பெண்களைக் குறிவைத்து, பாலியல் தொல்லை செய்வது, காமக் களியாட்டங்களில் ஈடுபடுவது, கற்பழிப்பது என்றெல்லாம் தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களாக இருக்கின்றன. கேரள ஊதாரங்கள் எல்லைகளைக் கடந்தவை. அவற்றை மிஞ்சுவதாக தமிழக கோக்கோகங்கள் முந்துகின்றன. ஆனால், பொறுப்புள்ள கிருத்துவப் பெரியவர்கள், இவற்றைப் பற்றி கண்டிப்பதாக, விவாதிப்பதாக அல்லது சரிசெய்ய முயற்சிகள் செய்வதாக, தடுப்பதாக தெரியவில்லை. மாறாக அவற்றை மறைப்பது, ஊடகங்களில் கூட செய்திகள் வராமல் காப்பது, வந்தால் சீக்கிரம் அவற்றை அமுக்கி விடுவது, போலீஸ்-வழக்கு வராமல் தடுப்பது, நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் சரிகட்டுவது, என்ற திட்டங்களுடன் செயல்ப்ச்டுவதாகத் தெரிகிறது.
தலைமையாசிரியர்ஜெபாஎன்றகிறிஸ்டோபர்ஜெயக்குமார்ஆசிரியரின் காமலீலைகள், பாலியல் சில்மிஷங்கள்: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு நிதியுதவி பெறும் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது[1]. முன்பு குறிப்பிட்ட சென்னைப் பள்ளிக்கு குதித்தவர்கள், இப்பொழுது மௌனிகளாக இருக்கின்றனர். இங்கு திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் சிறப்பு வகுப்பு எடுத்துள்ளார். அப்போது அவர் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறுப்படுகிறது[2]. மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். மேலும், செல்போனிலும் அரட்டை அடிக்க முயன்றுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி தலைமையாசிரியர் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர், கிறிஸ்டோபர் ஜெயக்குமார் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இவையே, பொதுமானவை. பெண்கள் ஆணையம், பெண்ணிய அமைப்புகள், வீராங்கனைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது, செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
வழக்கம்போலமிரட்டி, பணம்கொடுத்துசரிகட்டப்பார்த்தது: ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைமையாசிரியரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்[3]. இந்த சூழலில் 28-12-2021 அன்று மாணவியின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[4]. மேலும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவிகளின் பெற்றோர் கூறியுள்ளனர். சூதாரித்துக் கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அணுகி இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் இதனை அப்படியே வெளியே தெரியாமல் மறைக்குமாறும் கூறியதாக கூறப்படுகிறது[5]. இது எபிதாஸ் விவகாரம் போன்றே உள்ளது. அவனும் இன்று வரை கைதாகாமல் இருப்பது அதிசயமான நிலைதான். இதையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி நிர்வாகம் திருநெல்வேலி திருமண்டலம் டயோசீசனுக்கு புகார் தெரிவித்து உள்ளனர்[6]. புகாரின் அடிப்படையில் டயோசீசன் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்[7]. தென்னாடு என்ற இணைதளம் தனது செய்தியால் தான் சஸ்பென்ட் என்பது போல போட்டுள்ளது[8]. இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.
பள்ளியில்புகார்அளித்து, டையோசீஸ்நடவடிக்கைஎடுத்து, பிறகுபோலீஸிடம்புகார்கொடுத்து, நீட்டித்தப்படலம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநெல்வேலி சி.எஸ்.ஐ., பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் 51, மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது[9]. உடனே அவர் தலைமறைவானார்[10]. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ டயோசிஷன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார். இவர் பிளஸ் -2 மாணவிகளை செப்டம்பர் முதல் சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளிக்கு வரச் செய்து எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் லட்சக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளார். இதையடுத்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபட போவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி புகாரின்பேரில், கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது திசையன்விளை போலீசார் போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
போலீஸிடம் புகார் கொடுத்தப் ஜெபாஎன்றகிறிஸ்டோபர்ஜெயக்குமார்தலைமறைவு: பிறகு 29-12-2021 அன்று அவரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அவர் தலைமறைவானார்[11]. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது[12]. ஆக, இது எதோ வழக்கமான உப்பு-சப்பில்லாத விவகாரம் போலாகி விட்டது என்ற தோறத்தை உண்டாக்குகிறது. கடவுள் நம்பிக்கை, விசுவாசம், சேவை என்றெல்லாம் கிருத்துவர்கள் பறைச்சாற்றிக் கொள்ளும் போது, ஓடி மறைய வேண்டிய அவசியம் என்ன? சமீபத்தில் பிரபல பாடகி புகார் வழக்கில் கூட அந்த மைத்துனர்-கிருத்துவ பிரச்சாரகர் திண்டிவனத்தில் மறைந்து கொள்ள போலீஸார் சென்று கைது செய்தனர். இத்தகைய நிகழ்வுகள் காலந்தாழ்த்தவா, அத்தாட்சிகளை மறைக்கவே, வேறுவிதமான பேரங்கள் பேசவா, அழுத்தம் எடுத்துவர வேற்கொள்ளும் செயல்களா என்பதெல்லாம் அவர்கள் தாம் சொல்லவேண்டும்.
சி.எஸ்.ஐ.,சர்ச்சுகள்தொடர்சர்ச்சைகளில்ஈடுபட்டுள்ளது: சி.எஸ்.ஐ., பலவிதமான குற்றங்கள், வழக்குகள் என்பதெல்லாம் சாதாரணமான விசயகள் ஆகிவிட்டன. நீதிமன்றங்களில் அறிவிக்கப் பட்ட தீர்ப்புகளை வைத்தே, எந்த அளவுக்கு பிஷப் முதல் மற்றவ்ர்கள் குற்றங்களை செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. திருநெல்வேலி டவுன் சி.எஸ்.ஐ., சாப்டர் மேல் நிலைப் பள்ளியில் டிச.17ல் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியாயினர். அதில் கைதான தலைமையாசிரியை உள்ளிட்டவர்கள் உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாலியல் புகாரில் தலைமை ஆசிரியர் தலைமறைவாக உள்ளார், என்று செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன. கைதானாலும் ஜாமீன், வழக்கு இழுப்பு, என்று சில நாட்களில் மறக்கடிக்கப் படும், மறக்கப் படும். பாதிக்கப் பட்ட மாணவிகளும் அவ்வாறே தெரியாமல் மறக்கப் படுவர். ஆனால், அவர்களின் மன-அழுத்தம், பாதிப்பு, தொல்லை முதலிவற்றை அவர்கள் தாம் அனுபவிக்க வேண்டும். மிருகங்கள் வேறு இறையைத் தேடிச் சென்று விடுகின்றன.