Archive for the ‘மசூதி அபகரிப்பு’ Category

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை:  பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய ரூ.3000 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் தற்போது விரைவாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் பேட்டிசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால், ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை. பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் அமைக்காதீர்கள். புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும்போது, அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!

இந்துவிரோதி எஸ்டா சற்குணத்தின் பேச்சு ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது பொன்றிருந்த கூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1]  M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு ! மத போதகர் எஸ்றா சற்குணம் மீது வழக்குப் பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST

https://tamil.asianetnews.com/politics/esra-srgunam-case-file-ptgi8u

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (2)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (2)

சொந்த பட்டா இடங்களில் தேவாலயம் கட்டிவிட்டு தடையின்மை சான்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்பது: சொந்த பட்டா இடங்களில் தேவாலயம் கட்டிவிட்டு அதன்பிறகு தடையின்மை சான்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கிறார்கள். அதுமுறையல்ல[1]. இடம் வாங்கிய உடன் தேவாலயம் கட்டுவதற்கு முன் அதற்கான தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சான்று பெறுவதில் சிக்கல் நீடித்தால் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுங்கள். அதன்பிறகு தீர்வு இல்லை என்றால் ஆணையத்தை அணுகலாம். இதுதொடர்பாக நிரந்தரமான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் உத்தரவு வரும்[2]. சரியில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு வழியையும் சொல்லிக் கொடுக்கிறார் மற்றும் விரைவில் உத்தரவு வரும் என்றும் சொல்வது கவனிக்கத் தக்கது. இதைத்தான், “திராவிடியன் மாடல்,” என்கிறாற் போலும். எஸ்ரா வழியில் நிலத்தை அபகரித்து, சர்ச் கட்டுங்கள், பீட்டர் அல்போன்ஸ் வழியில் சரிசெய்து விடுங்கள். பெரியாரிஸ-இந்துவிரோத முதலமைச்சர் உதவுவார் என்கிறார் போலும். 3000 வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் படப் போகின்றன என்றால், கோவில்கள் தான் இடிக்கப் பட்டு வருகின்றன. ஒரு மசூதி-சர்ச் என்று தொட்டால், அவர்கள் தடுக்கிறர்கள், அதிகாரிகளும் விட்டு விடுகிறார்கள். இதுதான் செக்யூலரிஸ சட்டமாக இருக்கிறது.

நிலம் பிரத்யேகமாக வாங்கி, அனுமதி பெற்று சர்ச்மசூதி கட்ட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “புதிய தேவாலயம், பள்ளிவாசல் கட்டுவதற்கு தடையின்மை சான்று கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தால் அது குறித்து அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு சமத்துவ கல்லறை தோட்டத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தனித்தனி கல்லறை தோட்டம் வேண்டும் என்றால் நிலத்தை வாங்கி தடையின்மை சான்று அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு கல்விக்கடன், பொருளாதார கடன், மகளிர் உதவும் சங்களுக்கான கடன் வழங்குவதை வேகப்படுத்தியுள்ளோம்”. “சமத்துவ கல்லறைத் தோட்டம்,” என்று நில அபகரிப்பு இனி ஆரம்பிக்கும். முன்னர், துலுக்கர், கோவில்கள், காட்டுகள் / படித்துறை, மடங்கள் போன்ற இடங்களில் பிணத்தைப் புதைத்து தான் ஆக்கிரமிப்பை ஆரம்பிப்பர். ஆக, அதே முறையை சொல்லிக் கொடுக்கிறார் போலும்.

தனிவீடுகளில் வழிபாடு, மைக் வைக்கக் கூடாது: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வழிபாடு நடத்த வேண்டும். மைக் வைத்துக்கொண்டு அதிகப்படியான சத்தத்துடன் வழிபாடு நடத்துவதை தவிர்க்க வேண்டும். மத பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். இது சமூக அமைதிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். தனி வீடுகளில் அமைதியாக வழிபாடு, ஜெபம், தொழுகை செய்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. அந்த உரிமை அனைத்து மதத்தினருக்கும் உள்ளது. மைக் வைக்கக்கூடாது. வீட்டில் அமைதியாக 10, 15 பேர் ஜெபம் செய்தால் யாரும் தடுக்க முடியாது. கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களிடம் அளித்த மனுக்கள் தொடர்பாக வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தி முடிவு தெரிவிக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார். “தவிர்க்க வேண்டும்,” “தவிர்க்க வேண்டும்,” என்றுதான் கூறுகிறாரே தவிர, செய்யக் கூடாது, சட்டமீறல் என்று சொல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இத்தகைய கூட்டங்கள் மாமூலாக, சாதாரணமாகி விட்டது போலும். நவம்பர் 2021ல் நடந்த கூட்டத்திலும் இதே தான் பேசப் பட்டது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு நவம்பர் 2021 கூட்டம்: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 2021லும் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செயல்படாமல் இருந்த சிறுபான்மை நல ஆணையத்தை தூசிதட்டி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்[3]. கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட கிறிஸ்தவர்கள் தங்கள் ஆராதனை வழிபாடு நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மையின மக்கள் மிக பாதுகாக்க மிக கண்ணியத்தோடு வாழ கூடிய நிலை உள்ளது. ஜனநாயகத்தில் சிறுபான்மை என்பது ஒரு ஊனம்[4]. ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் உதவித்தொகை குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலையே நின்று விடுகிறது,” என்று கூறினார். பிறகு மற்ற 20க்கும் மேலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்ன நடக்கிறது? ஏதோ பேச வேண்டும் என்று பேசியது போலத்தானே இருக்கிறது.

நவம்பர் 2021 – புறம்போக்கு நிலங்களில் கட்டிய சர்ச்சுகளுக்கு அனுமதி கிடையாது: குறிப்பாக புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கு அனுமதி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும்போது[5], பலர் அரசு புறம்போக்கு இடத்தில் தேவாலயங்களை கட்டிவிட்டு அனுமதி கேட்பதாகவும், அது போன்ற இடங்களுக்கு யார் நினைத்தாலும் அனுமதி கொடுக்க முடியாது என்றும் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார்[6]. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர், சுமார் 18 லட்சம் மதிப்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. அத்தகைய சட்டமீறல் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு கட்டப் பட்ட சர்ச்சுகள் இடிக்கப் படும் என்று சொல்லவில்லை.

சமத்துவ கல்லறைத் தோட்டம்பல இடங்களில் கல்லறைகளில், மத வேறுபாடுகள் இருப்பதால், சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர்: அதனையடுத்து ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவு நீரை பெருக்கவில்லை என்று பெரிய போராட்டம் நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள். இதேபோல் தயவுசெய்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமரே அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டப்படாமல் இருக்கிறது. அதற்காகவும் அவர் ஒரு ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சமத்துவ கல்லறைத் தோட்டம்பல இடங்களில் கல்லறைகளில், மத வேறுபாடுகள் இருப்பதால், சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர்[7]. எனவே, சாதி மத வேறுபாடின்றி சமத்துவ கல்லறைகளை உருவாக்கித் தர முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.”. அப்படியென்றால் அது கிருத்துவப் பிரச்சினை ஆகிறது, அதற்கு எப்படி நாத்திக திமுக அரசு தலைவர் உதவுவார் என்று தெரியவில்லை. போப், கார்டினல், பிஷப் சொல்வதை எல்லாம் மதிக்காத கிருத்டுவர்கள் ஸ்டாலின் சொல்லிக் கேட்பார்களா? பிறகு, ஸ்டாலின் தான் கிருத்துவர்களின் தலைவரா? வழக்கம் போல ஜெயின், பௌத்த உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்று சொல்லப்படவில்லை.

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தினத்தந்தி, தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்தால் 1 மாதத்தில் முடிவை தெரிவிக்க வேண்டும், மார்ச் 30, 06:07 PM.

[2] https://www.dailythanthi.com/amp/News/Districts/2022/03/30180716/If-you-apply-for-proof-of-inviolability-you-will-be.vpf

[3]  பிறகு ரம்ஜான் கஞ்சிக்கு டன் – டன்னாக அரிசி எப்படி கிடைத்தது, ஹஜ்-ஜெருசலேம் மானியங்கள் எப்படி கிடைத்தன என்பனவெல்லாம் தெரியவில்லை.

[4]  ஆனால் நாட்டையே துண்டாடி, இன்றும் ஆட்டிப் படைத்து வருகின்றனர். தீவிரவாதம் தொடர்ந்து நடக்கிறது. பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றனர். இதையெல்லாம் ஏன் விவாதிக்க்ப் படவில்லை.

[5] இ.டிவி.பாரத், புறம்போக்கு நிலங்களில் தேவாலயங்கள் கட்ட அனுமதி கோர வேண்டாம்பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை!, Published on: Nov 10, 2021, 6:29 PM IST

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/thirunelveli/do-not-ask-permission-to-build-churches-on-poramboke-land-says-peter-alphonse/tamil-nadu20211110182918719

[7]  அது கிருத்துவ மதப் பிரச்சினையேயன்றி, பொதுப் பிரச்சினை அல்ல. இத்தனை மெத்தப் படித்த, அதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்கள் எல்லாம் இருந்தும் அப்படி நடக்கிறது என்றால், அது கிருத்துவத்தின் அடக்கு முறையே ஆகும்.