நிகழ்ச்சி சர்ச்சையும், பாஸ்டரையும் பாதித்தது – பிறகு கொடைக்கானல் பெண் கொலை, மது–எதிர்ப்பு பிரச்சாரமமாகியது ஏன் (2)?
சர்ச்சுகள் தாக்கப்பட்டன என்று முன்னர் அனைத்துலக செய்திகளாக்கப்பட்ட நிலை (2014-15): சர்ச்சுகள் தாக்கப்பட்டன, கிருத்துவர்கள் பாதுகாப்பு இல்லை / ஜாக்கிரதையான நிலையில் இல்லை, அவர்கள் மத-தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் அலறிக்கொண்டிருந்தன. சந்தேகிக்கப்படும் இந்து தேசியவாதிகள் / தீவிரவாதிகள் [suspected Hindu nationalists / The militants] சர்ச்சுகளை தாக்கியதால், கிருத்துவர்கள் அச்சத்தில் உள்ளார்கள்[1]. வாடிகன் ரேடியோவே இதைபொ பற்றி செய்தியில் கூறுகிறது[2]. உனைடெட் கிறிஸ்டியன் நியூஸ்.காம் [UCANEWS.COM] என்ற இணைதளம் இத்தகைய செய்திகளை அப்படியே போட்டுவருகிறது[3]. குறிப்பாக தில்லியில், அது ஒரு பெரிய பிரச்சினையாக்கப் பட்டு, பிறகு அனைத்துலக விசயமாக்கப்பட்டது. தில்லியில் இருக்கும், கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் ஆப் இந்தியா போன்ற கிருத்துவ நிறுவனங்கள் ஆர்பாட்டங்கள் நடத்தின. வழக்கமாக ஜான் தயால்[4] போன்ற அடிப்படைவாதிகள் இதை பெரிதாக்கி கலாட்டா செய்தனர். என்.டி.ஏ தலைமையில் இந்துத்வா கட்சியான வலதுசாரி பி.ஜே.பி கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால், அத்தகைய இந்துத்வ சக்திகள், இவ்வாறு சிறுபான்மையினரைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூட திக்விஜய் சிங்[5], ஜான் தயால்[6] போன்றோர் டிவி-பேட்டிகளில் கருத்துகளை வெளியிட்டனர். பிஷப்புகள் எல்லோரும் பிரதமர் மோடியை சந்திந்து மனு கொடுத்தனர். நூற்றுக்கணக்கான கிருத்துவ, கிருத்துவ-சார்புடைய, இந்திய-விரோத, இந்து-விரோதச் இணைதளங்கள் இவற்றை திரும்ப-திரும்ப போட்டு கலாட்டா செய்து வந்தனர்.
போலீஸார் விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்–விவரங்கள்: இதனால், போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். அப்பொழுது தெரிய வந்த விவரங்கள் கீழ்வருமாறு:
- தில்லியில் வழிபாட்டு ஸ்தலங்கள் நூற்றுக்கணக்கில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இது வழக்கமான நிகழ்வுதான்[7].
- பொதுவாக உண்டி உடைத்து பணம் திருடுதல், காணிக்கைப் பொருட்களைத் திருடுதல், குறிப்பிட்டப் பொருட்களை விற்றால் பணம் கிடைக்கும் என்பதால் அவற்றைத் திருடி விற்றல் போன்ற காரணங்களுக்காக வழிபாட்டு ஸ்தலங்களில் திருட்டு போயிருக்கிறது.
- இத்தகைய திருட்டுக் குற்றங்கள் அவ்வாறே பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளன. திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இவற்றில் மதரீதியிலான விசயமோ, பிரச்சினையோ இல்லை, ஏனெனில், திருடர்கள் சாதாரண, அதாவது ஏழைகள், நடைபாதையில் வாழ்பவர்கள், அன்னாடம் காய்ச்சிகள் போன்ற நிலையில் இருந்து திருடியுள்ளார்கள்.
- இவற்றில் அதிகமாக இந்து கோவில்களில் தான் திருடு போயிருக்கின்றன. மற்ற கிருத்துவ, சீக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் நடந்த விவரங்களையும் தில்லி போலீஸார் கொடுத்தனர் [According to the data, 206 temples, 30 gurdwaras, 14 mosques and three churches were burgled in 2014][8].
- ஆனால், இந்து கோவில்கள் தாக்கப்பட்டன, இந்து வழிபாட்டு ஸ்தலம் என்பதால் உண்டிகள் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டது என்றெல்லாம் யாரும் நினைத்துப் பார்க்கவும் இல்லை, அதனை மதரீதியிலான பிரச்சினியாகவும் பாவிக்கவில்லை. ஊடகங்களும் அவ்வாறு செய்திகளை வெளியிடவில்லை.
- குறிப்பாக கிருத்துவ வழிபாட்டு ஸ்தலங்கள், சர்ச்சுகள் முதலியவற்றைத் தாக்கியது, திருடியது கிருத்துவர்களாகவே இருக்கின்றனர்[9].
- மேலும், அவர்களில் சிலருக்கும், சர்ச்சில் உள்ளவர்களுக்கும் மற்ற விசயங்களில் சண்டை-சச்சரவு இருந்துள்ளது. இதனால், பழி வாங்கும் போக்கில் திருடு நடந்துள்ளது.
- சர்ச்-திருட்டு-தாக்குதல் பொருத்த வரையில், அவர்களில் சிலர் சர்ச்சுகளில் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்து வந்து, ஏதோ காரணங்களுக்காக, வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
- பிறகு மேலும் விசாரித்தபோது, சில பிரிவுகள் கலட்டா செய்தபோது, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட போது, கற்களை எரிந்திருக்கிறார்கள். கிருத்துவர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, வேறெந்த பிரிவினருக்கும் தொடர்பில்லை என்று தில்லி போலீசார் தெரிவித்தனர்[10].
- தில்லி போலீஸார், இவ்வாறு உண்மைகளை ஆதாரங்களுடன், எடுத்துக் காட்டியதும், கிருத்துவர்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் அமைதியாகி விட்டன.
- ஆனால், அவர்களால் செய்யப்பட்ட துர்பிரச்சாரம், வெறுப்பையுண்டாக்கும் ஆர்பாட்டங்கள், மதரீதியில் திரிபு விளக்கம் கொடுத்து ஊர்வலங்கள் நடத்தியது முதலியன இணைதளங்களில் அப்படியே இருக்கின்றன.
- அதனால் ஏற்பட்ட தாக்கம், பாதிப்பு, எதிர்மறை விளைவுகள் இன்றும் இருந்து கொண்டே இருக்கின்றன[11].
கொடைக்கானலில் சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது (ஜூலை.2015): இந்நிலையில், கொடைக்கானலில் ஒரு சர்ச் தாக்கப்பட்டது, ஜன்னல் கண்ணாடிகள்-விளக்குகள் உடைக்கப்பட்டது, பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது, பொருட்கள் சேதமடைந்தது முதலியவை அப்படியே அமுக்கப்பட்டன எனலாம். “தி இந்து” (ஆங்கிலம்) இச்செய்தியை, “கொலைக்காக இருவர் கைது” என்று சுருக்கமாக அமுக்கிவிட்டது. சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது, பாஸ்டரின் மகன் தான் கொலையாளி போன்ற விவரங்களும் செய்தியில் மறைக்கப்பட்டன. மற்ற ஊடகங்கள், இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. அப்படியென்றால், ஊடகங்களின், சர்ச்சுகளின் நிலைப்பாடு என்ன? எவ்விதத்தில், இத்தாக்குதல் மாறுபட்டிருக்கிறது அல்லது அதே மாதிரி செய்திகளை வெளியிடக் கூடாது, ஆர்பாட்டங்கள் செய்யக் கூடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது பற்றி புதிராக, மர்மமாகத்தானே உள்ளது?
சர்ச்சுகள்–டையோசிஸ்கள் முதல் அரசியல்வாதிகள்–ஊடகங்கள் வரை அமைதியாக இருத்தல்: சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது குறித்து டையோசிஸ்கள், பிஷப்புகள், பாதிரிகள் மற்ற கிருத்துவ இயக்கங்கள், நிறுவனங்கள் அமைதியாக இருந்து விட்டன.
- மெழுகு வர்த்திகள் ஏற்றுவது,
- கன்னியாஸ்திரிக்களை முன்வைத்து,
- பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர்களைக் கூட்டி வைத்து,
- ஊர்வலங்கள் நடத்துவது,
- ஆர்பாட்டங்கள் செய்வது முதலியவை நடக்கவில்லை.
- கவர்னர்-முதலமைச்சர் முதலியோரை சந்தித்து மனு கொடுக்கவில்லை.
- எதிர்கட்சிகள் அறிக்கைகள் கொடுக்கவில்லை, ஆர்பாட்டங்கள் நடத்தவில்லை.
அப்படியென்றால், இவர்களின், சர்ச்சுகளின் நிலைப்பாடு என்ன? ஏன் மௌனம் சாதிக்கின்றனர்? அனைத்துலக கிருத்துவ இணைதளங்கள் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை?
ஊடகங்கள் ஏன் செக்யூலரிஸக் கொள்கையினை, தத்துவத்தைப் பின்பற்றுவதில்லை?: பொதுவாக, தமிழகத்தில் கிருத்துவர்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால், அவை அவர்களது நிலைமைகளை பாதித்தால், கெட்ட பெயர் வரும் என்ற நிலையிருந்தால், அத்தகைய விவரங்களை அமுக்கி வாசித்து மறைத்து விடுகின்றன. முஸ்லிம்கள் விசயங்கள் என்றால் வெளியிடுவதே இல்லை எனலாம். செய்திகளை வெளியிடுதல் என்ற தார்மீக முறையிலிருந்து பிறழ்ந்து விடுகின்றனர். இதே, இந்து சாமியார்கள் என்றால், எல்லாம் ஒன்றாக திரண்டு, ஒரு வாரம், ஒரு மாதம், ஏன் நிரந்தரமாக செய்திகள், கிண்டல்-கட்டுரைகள், நக்கல்-ஜோக்குகள், ஆபாச-விபர்சனங்கள், தூஷணங்கள் என்று வாரிக்கொட்டிக் கொண்டிருப்பர். இதனால், அவர்களது பாரபட்ச போக்கு வெளியாகிறது. ஏன் அவர்கள் இவ்வாறு, ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். “செக்யூலரிஸம்” என்றாலும், குற்றங்கள் அவ்வாறு தானே கருதப்பட வேண்டும், குற்றவாளிகள் நடத்தப் படவேண்டும், சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அதன்படி செய்திகள் வெளியிட வேண்டும்.
“சர்ச் தாக்கப்படுதல்” ஏன் தமிழகத்தில் வித்தியாசமாகக் கருதப்படுகிறது?: பாஸ்டர் மகன் கொலை செய்துள்ளான் என்றதால் சர்ச், பாஸ்டர் வீடு தாக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கத்தான் இத்தனை போலித்தனமான, ஊடக-நாகரிகமில்லாத, பத்திரிகா-தார்மீகத்தையும் மீறி ஊடகங்கள் செயல்படுகின்றனவா? அப்படியென்றால், அவை ஏன் கிருத்துவ-சார்புடையதாக எப்பொழுதும் செயல்படவேண்டும். எவ்வாறு ஊடகங்களை, ஊடகத்துறையை, நிருபர்கள், பேட்டியாளர்கள் முதலியோர்களை கிருத்துவர்கள் அடக்கியாள வேண்டும்? சர்ச் தாக்கப்படுதல் மாபெரும் குற்றம், அனைத்துல ரீதியில் அறியப்படுத்தப்பட வேண்டிய செய்தி என்றிருக்கும் போது, இதையும் தெரியப்படுத்தியிருக்க வேண்டுமே?
© வேதபிரகாஷ்
06-08-2015
[1] http://www.christiantoday.com/article/india.five.attacks.on.christians.in.the.last.week/54168.htm
[2] http://en.radiovaticana.va/news/2015/04/16/india_vandals_attack_church_in_agra/1137323
[3] http://www.ucanews.com/news/indian-christians-express-shock-over-agra-church-attack/73414
[4] கந்தமால் “கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் புகழ்” ஜான் தயால், பரபரப்புடன் பேட்டியளித்து ஆர்பாட்டம் செய்தார். ஆனால், அந்த கன்னியாஸ்திரி ஏற்கெனவே கன்னித்தன்மையினை இழந்துள்ளதாக ம்மருத்துவ அறிக்கை வெளிவந்தவுடன், அப்படியே அமைதியாகி விட்டனர் என்று குறிப்பிடப்படுகிறது.
[5] http://timesofindia.indiatimes.com/india/Digvijaya-Singh-lambastes-central-government-for-attack-on-Delhi-church/articleshow/46098309.cms
[6] The United Christian Forum has recorded 168 cases of violence of various sorts against the community in the first 300 days of Mr. Modi forming the government in New Delhi. These include two murders. Six of the cases have been in the national capital, New Delhi. Statues of Mary and Christ seem a particular target in many places for vandals. http://johndayal.com/
[7] http://www.firstpost.com/india/police-call-delhi-church-attack-stray-case-community-slams-pm-modis-sabka-saath-sabka-vikas-2081479.html
[8] http://indianexpress.com/article/india/india-others/in-report-on-church-attacks-bassi-told-centre-theft-in-206-temples-last-year/
2 இவ்விசயம் தெரிந்தவுடன் ஊடகங்கள் முதல் கிருத்துவ தலைவர்கள் வரை அப்படியே 1800 திரும்பி ஜகா வாங்கி விட்டனர்.
[10] Delhi Police has told the Union Home Ministry that no church in the city was attacked by any group and the recent incidents were of either theft, short circuit or stone-pelting after petty clashes that had nothing to do with the Christian community.http://www.dnaindia.com/india/report-no-church-attacked-in-city-delhi-police-tell-home-ministry-2082174
[11] அதாவது, அதே இணதளங்கள் அர்த்தகைய பொய்யான செய்திகள், அறிக்கைகள், ஆர்பாட்ட நிகழ்சிகள் முதலியவற்றை நீக்கவும் இல்லை. தாக்குதலுக்கு காரணம் கிருத்துவ விரோதிகள் இல்லை என்று உண்மையினை வெளியிடவும் இல்லை.