Archive for ஒக்ரோபர், 2016

காருக்குள் இளம்பெண்ணுடன் பாதிரியார் செம ஜாலி : பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு – அக்டோபர் 2015 கதை – 2016ல் அலசல்!

ஒக்ரோபர் 28, 2016

காருக்குள் இளம்பெண்ணுடன் பாதிரியார் செம ஜாலி : பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்புஅக்டோபர் 2015 கதை – 2016ல் அலசல்!

thaucalay-pastor-car-sex-october-2015-dinakaran

கன்னியாக்குமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ பாலியல் குற்றங்கள் அடிக்கடி நடப்பதும், பெருகுவதும்: தக்கலை [Thuckalay or Thakkalai] கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம், இது கிருத்துவ பாலியல் விவகாரங்களில் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. நாகர்கோவில், திருவனந்தபுரம் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் தொடர்புகளும் காணப்படுகின்றன. இங்கு பலவித கிருத்துவப் பிரிவுகள் அயல்நாட்டு பணத்தை வைத்துக் கொண்டு சர்ச்சுகளைக் கட்டிக் கொண்டு, மதம் மாற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டு, மற்ற விசயங்களில் தலையிட்டுக் கொண்டு, வேலைகள் செய்து வருவதால், பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. சர்ச்சில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு படிப்பு / கைத்தொழில் சொல்லிக் கொடுக்கிறோம், வேலை வாங்கித் தருகிறோம், கன்னியாஸ்திரி / நர்ஸ் ஆக்குகிறோம் என்றெல்லாம் ஆசைக்காட்டி இளம்பெண்களை பாதிரிகள், போதகர்கள், பாஸ்டர்கள் வளைத்துப் போடுகின்றனர். அயல்நாட்டில் வேலை என்ற ஆசையும் காட்டுகின்றனர். போதாகுறைக்கு பிடோபைல் குற்றங்கள், பாலியல் வன்மங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான், அக்டோபர் 2015ல் காருக்குள் இளம்பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

catholic-diocese-of-thaucalayமண்டைக்காடு காவல்நிலையம் அருகே உள்ள மைதானத்தில் காரில் செக்ஸில் ஈடுபட்ட பாதிரியும், விசுவாச பெண்மணியும்: மண்டைக்காடு காவல்நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதும், டிரைவிங் பழகுவதும் வழக்கம். ஆனால், 19-10-2015 அன்று இரவு 9.30 மணியளவில் மைதானத்தில் கார் வந்து நின்றது. அப்பொழுது வேறுவிதமான கிரிக்கெட் ஆரம்பித்தது போலும். இப்பொழுதெல்லாம் பளிச்சென்று விளக்குகள் போட்டு, மைதானங்களில் நடுஇரவு வரை கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன, மக்கள் கொட்ட-கொட்ட விழித்டுக் கொண்டு பார்க்கின்றனர். அதுபோன்ற கிரிக்கெட் தான் போலும், இந்த கார் விவகாரம். நீண்ட நேரமாக கார் அங்கேயே நின்றதால் சந்தேகம் அடைந்த மக்கள், கார் அருகே சென்று பார்த்தனர். கார் கதவுகள் மூடியிருந்தாலும், உள்ளே ஆட்கள் இருப்பது தெரிந்தது. அதனால், கதவுகளை தட்டினர். முதலில் கதவுகள் ர்கிறக்கப்படவில்லை. பிறகு திறந்தபோது, காருக்குள் ஆணும் பெண்ணும் இருந்தனர். அரைகுறை உடைகளுடன் இருந்ததால், அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததாக தெரிகிறது[1]. இதனால் மண்டைக்காடு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். காரில் இளம்பெண்ணுடன் இருந்தவர் தக்கலை அருகே உள்ள ஒரு ஊர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் என்று தெரியவந்தது[2]. பாதிரியாருடன் இருந்த இளம்பெண் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஆவார்[3].

thaucalay-pastor-car-sex-october-2015-illustrativeஇரவு நேரத்தில் இங்கு என்ன வேலை என்று கேட்டபோது, பாதிரிஇந்த தெரிந்த பெண்ணுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்க அழைத்து வந்தேன்என்றாராம்!: இரவு நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று பாதிரியாரிடம் போலீசார் கேட்டபோது, ‘’ இந்த பெண் எனக்கு தெரிந்தவர். அவருக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுக்க அழைத்து வந்தேன்’ என்றார்[4]. இரவில் தான் கார் ஓட்ட கற்றுக் கொடுப்பார்களா என்ன? இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பதானால், ஆடைகள் எல்லாம் அவிழ்ந்த நிலையில் அவர்கள் மக்களிடம் பிடிபட்டிருக்க மாட்டார்கள். அதனால், மேலும் விசாரித்தனர். இளம் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். குளச்சல் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் அவர் ஏற்கனவே பாதிரியராக இருந்துள்ளார்[5]. அப்போதே அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது[6]. தக்கலை அருகே உள்ள ஆலயத்திற்கு சென்ற பின்னரும் அவர்களுடனான பழக்கம் நீடித்து வந்திருக்கிறது என்பது தெரியவந்தது[7]. இப்படி இறைவனால் உண்டான திருமண பந்தத்தை, ஒரு பாதிரியே கொச்சைப்படுத்தி, அப்பெண்ணை சோரம் போக வைத்துள்ளார் எனும் போது, பரிசுத்த ஆவி, இப்படியெல்லாம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

thaucalay-pastor-car-sex-october-2015-tamil-murasuமண்டைக்காடு போலீசார், உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்: பாதிரியார் தக்கலை அருகே உள்ள ஆலயத்துக்கு சென்ற பின்னரும் அவர்களுடனான பழக்கம் நீடித்து இருக்கிறது. இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மண்டைக்காடு போலீசார், உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த விசயங்களை உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. இருப்பினும், சர்ச்சுகளின் ஆதிக்கம் நன்றாகவே புலப்படுகிறது. அவர்களது உத்தரவின்பேரில் பாதிரியாரையும் இளம் பெண்ணையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர், என்று செய்திகள் விசயத்தை முடித்து வைக்கின்றனர். திருமணமான ஒரு பெண், ஒரு கிறிஸ்தவ பாதிரியிடம் இவ்வாறு செக்ஸில் ஈடுப்பட்டதை எச்சரித்து அனுப்பக் கூடிய விசயமா என்று தெரியவில்லை. இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்[8]. அவர்களது உத்தரவின் பேரில் பாதிரியாரையும், இளம்பெண்ணையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது, என்று கதை முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தங்களது உறவுகளை தொடருவார்களா, இல்லையா என்பதை கர்த்தர், பரிசுத்த ஆவி, மேரி, ஏசுகிறிஸ்து முதலியோர்களில் யாராவது தான் சொல்லவேண்டும்.

pastor-in-sexmaking-inside-car-mandaikadu-20-010-2016பாலியல்செக்ஸ்கற்பழிப்பு விவகாரங்களை மூடி மறைக்க சர்ச்சுகளுக்க்ய் அதிகாரங்கள் உள்ளனவா?: கிருத்துவர்கள் உண்மையிலேயே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்கிறாற்களா இல்லை என்பது தெரிய்வில்லை. தொட்ர்ந்து, இவ்வாறான பாலியல் குற்றங்களில் கிருத்துவர்கள் ஈடுபட்டு வருவது, அவர்களுக்கு பெருமையாக இருக்கிறாதா அல்லது, எங்களது மதத்தில், இறையியல் நம்பிக்கைகள் அல்லது இறையியல் சட்டங்களில் இதெல்லாம் சகஜம் தான், உலகமெல்லாம் இப்படித்தான் நடந்து வருகிறது, எனவே, இந்தியாவில், தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பதில் ஒன்றும் பெஇய ஆச்சரியம் இல்லை. மேலும், இதெல்லாம் சர்ச்சுகளுக்குள், எங்களுக்குள் நடக்கும் விவகாரங்கள், ஆகையால், நாங்கள் எங்களுக்குள் இவ்விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வோம், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களே அமைதியாக இருக்கிறார்கள் அல்லது சர்ச்சுகளின் விதிமுறைகளை மீறி வெளியில் சென்று புகார்கள் கொடுப்பதில்லை. ஆகையால், எங்கள் விவகாரங்களை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம், மற்றவர்கள், இவற்றில் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்களோ என்னமோ? அதனால் தான், இங்கும், போலீஸார் வந்து விசாரிக்கின்றனர். உண்மையை அறிந்த பின்னரும், போலீசார் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்[9]. பிறகு, அவர்களது உத்தரவின் பேரில் பாதிரியாரையும், இளம்பெண்ணையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர் என்றுள்ளது!

© வேதபிரகாஷ்

28-10-2016

Sexy christianity - pastor sex India.5

[1] தினகரன், காருக்குள் இளம் பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார் : எச்சரித்து அனுப்பிய போலீசார், Date: 2015-10-20@ 21:24:29

[2] நெல்லை.ஆன்.லைன், காருக்குள் இளம்பெண்ணுடன் பாதிரியார் செம ஜாலி : பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு, செவ்வாய் 20, அக்டோபர் 2015 3:30:14 PM (IST)

[3] http://nellaionline.net/view/32_103978/20151020153014.html

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=174073

[5] தமிழ்முரசு, காருக்குள் இளம் பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார் : எச்சரித்து அனுப்பிய போலீசார், செவ்வாய் 20, அக்டோபர் 2015.

[6] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=83185

[7] சினி.இன்பாக்ஸ்.காம், காருக்குள் இளம் பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார், செவ்வாய் 20, அக்டோபர் 2015.

[8] http://www.cineinbox.com/39175

[9] http://www.cineinbox.com/39175

ஆபாச படம் எடுத்த பாதிரி ஜோஸ்வா இமானுவேல் ராஜ் உள்ளே, ஆனால், வெளியே அவனால் பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருத்தி தற்கொலை!

ஒக்ரோபர் 27, 2016

ஆபாச படம் எடுத்த பாதிரி ஜோஸ்வா இமானுவேல் ராஜ் உள்ளே, ஆனால், வெளியே அவனால் பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருத்தி தற்கொலை!

joshua-imanuel-raj-anusuya-suicide-letter-implicates-him-dinakaran-cutting-25-10-2016

ஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் 23-10-2016 அன்று தற்கொலை செய்து கொண்ட அனுசுயா: நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய அனுசுயா (21) என்ற கல்லூரி மாணவி, இளம்பெண் 23-10-2016 அன்று மாலையில் பாப்பான்குளம் அருகே நெல்லை-மதுரை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் மாலை 4.30 மணியளவில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாசஞ்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்[1] என்று செய்தி, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் வந்துள்ளது கவனிக்கத்தக்கது.   கங்கைகொண்டான் அடுத்த பாப்பான்குளத்தில் தண்டவாளம் அருகே அனுசுயா சடலம் மீட்கப்பட்டது[2]. அனுசுயா, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் என்பவனிடம் ஏமாந்ததால், மனமுடைந்த நிலையில் இருந்தாள். அவன் கைதானதாலும், அவனால், பல பெண்கள் பாதிக்கப் பட்டதாலும் விரக்தியுடன் இருந்தாள்.

anusuya-sexploited-by-joshua-committed-suicide-23-10-2016-livedayதற்கொலை அல்லஎன்று சந்தேகத்தை எழுப்பும் ஊர்மக்கள்: அவரது உடல் தண்டவாளம் அருகே கிடந்தால், அனுசுயா தற்கொலை செய்திருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் ‘தற்கொலை’ என்று கூறி வழக்கை முடிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்[3]. ஆனால், அனுசுயா தற்கொலை செய்யும் கோழை பெண் அல்ல… அவர் தைரியமானவர், அதனால்தான் மத போதகர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார்[4]. அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறினார்கள்[5]. ஆகவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்[6]. மேலும் இச்சம்பவம் குறித்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு மற்றும் நெல்லை ரயில்வே போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்[7].

joshua-imanuel-raj-sexploited-anusuya-at-yercaud-took-photo-committed-suicide-23-10-2016அனுசுயாவை காதலித்து ஏமாற்றிய மதபோதகர்: ஜோஸ்வா இமானுவேல் ராஜ் தன்னுடைய திட்டப்படி தான், அனுசுயாவை வளைத்துப் போட்டுள்ளான். தனக்கு தாழையூத்தில் சொந்த வீடு இருப்பதாக கூறி அவரை அழைத்து வந்தார்[8]. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[9]. தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை வாங்கினார்[10]. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுசுயா கூறியபோது ஜோசுவா மறுத்து விட்டார்[11]. இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது[12]. அனுசுயாவுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த போட்டோக்களை காட்டி அதனை இன்டெர்நெட்டில் வெளியிடுவதாக கூறி அனுசுயாவை மிரட்டினார்[13]. இதுகுறித்து அனுசுயா கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் கைது செய்தார்[14]. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன[15].

joshua-imanuel-raj-sexploited-anusuya-suicide-23-10-2016மதபோதகர் சிறைக்காவலில் இருக்கும் போது தற்கொலை / கொலை என்றால் காரணகர்த்தா யார்?: இது கொலை என்றால், அக்கொலையை செய்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. பாதிரிக்கு இருந்த ஒரு உதவியாள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான். அப்படியென்றால், அவனுக்கு உதவும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. முக்கிய குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் உள்ளேயிருக்கும் போது, அப்பெண்ணைத் தூண்டி விட்டு தற்கொலை செய்ய வைத்தது அல்லது மக்கள் சந்தேகிக்கும் படி கொலைசெய்தது யார் என்று மர்மம் துலக்க வேண்டியுள்ளது. சர்ச்சுகளில், சர்ச் ஆதரவுடன் மற்றும் கிருத்துவ இயக்கங்கள் தொடர்புகளுடன், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பொதுவாக, அவர்கள் கட்டப்ப்பஞ்சாயத்து ரீதியில், அவர்களுக்குள்ளேயே, விசாரித்து, போலீசுக்கு செல்லாமல், மறைத்து விடுகின்றனர். மீறி நீதிமன்றங்களுக்கு சென்றாலும், வாதி-பிரதிவாதிகளை, சாம-தான-தண்ட-பேத வழிகளில் நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்வு காண வற்புருத்தப் படுகின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம், வேலை, போன்றவற்றால் சரிகட்ட பார்க்கிறார்கள். பாதிக்கப் பட்ட பெண்களுக்கும், வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப், கார்டினல்கள் போன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் கிருத்துவ சாமியார்கள் கூட இத்தகைய பாலியல் வன்புணர்ச்சிகள் முதலியவற்றில் ஈடுபடுவதை காணமுடிகிறது.

joshua-imanuel-raj-anusuya-suicide-letter-implicates-him-dinakaran-cuttng-25-10-2016அனுசயா எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது: தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி, மாணவி எழுதிய கடிததத்தை கைப்பற்றினர். அதில் தனது சாவுக்கு போதகர் ஜோஸ்வா உள்பட 4 பேர் தான் காரணம் என்றும் அவர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். மதபோதகரின் செக்ஸ் லீலைகள் குறித்து அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது[16]: “நான் எனது தம்பியை டியூசனில் சோ்க்க தாழையூத்து உஷா என்பவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் ரூ.7 லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார். பின்னர் பாதிரியார் ஜோஸ்வா என்னிடம் பேசினார்என் வீட்டு நிலவரம் பற்றி கூறிய அவர், உனக்கு வீட்டில் இப்படியெல்லாம் துன்பங்கள் நேரிடும் என்றும் தெரிவித்தார். இதை நான் உண்மையென்று நம்பினேன். உஷா என்னிடம்  பாதிரியார் ஜோஸ்வா சேலத்தில் இருப்பதாகவும் அவரை சந்தித்தால் உனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்றார். ஆகஸ்ட் 27ம் தேதி நான் தாழையூத்தில் இருந்து பஸ் ஏறி மதுரை சென்றேன். அங்கிருந்து கரூர் செல்ல பஸ் ஏறினேன். கரூர் பஸ் நிலையத்தில் இறங்கியதும்  ஜோஸ்வா அங்கு காரில் வந்து என்னை லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். நான் அணிந்திருந்த 6 பவுன் நகையை ஜெபம் செய்து தருவதாக கூறி வாங்கினார். ஆனால் நகையை திருப்பி தரவில்லை.

joshua-imanuel-raj-sexploited-anusuya-committed-suicide-23-10-2016போலீசார் உறுதியளித்த பிறகு உடலை வாங்கிச் சென்ற உறவினர்: “பின்னர் என்னை ஏற்காடு அழைத்துச் சென்று லாட்ஜில் நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ எடுத்தார். நான் மறுத்த போது கொன்று விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்தார். 2ம் தேதி அங்கிருந்து தப்பி வந்து தாழையூத்து டிஎஸ்பி,யிடம் புகார் செய்தோம். ஆனால் போலீசார் என்னை அவதூறாக பேசினர். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அனுஷ்யா உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்[17].

© வேதபிரகாஷ்

27-10-2016

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016-dinathanthi

[1] தினகரன், மத போதகர் மீது பாலியல் புகார் கொடுத்த நெல்லை கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை, Date: 2016-10-24@ 00:46:14.

[2] http://tamil.samayam.com/social/young-girls-suicide-near-nellai/articleshow/55020960.cms

[3] பத்ரிகா.காம், கிறிஸ்தவ மதபோதகர்இமானுவேல்மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் தற்கொலை….?, Posted on October 24, 2016 at 10:00 am by A.T.S Pandian

[4] https://www.patrikai.com/chiristian-missionary-emanuel-sexual-harassment-reported-teenager-suicide/

[5] http://m.dinamalar.com/detail.php?id=1633934

[6] தினகரன், நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, Date: 2016-10-23 19:10:45

http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=253994

[7] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=254075

[8] தினகரன், ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, Date: 2016-10-20@ 19:52:56.

[9] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=253994

[10] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=253413

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தூத்துக்குடி: மதபோதகர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, By: Mayura Akilan, Published: Monday, October 24, 2016, 7:53 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/young-woman-commits-suicide-near-tirunelveli-265547.html

[13] தினமலர், மத போதகர் மீது பாலியல் புகார்:அளித்த இளம்பெண் தற்கொலை, பதிவு செய்த நாள்: அக் 23,2016 22:47

[14] லைவ்டே, மதபோதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை !!, Oct 24, 2016 at 6:38 AM : By LIVEDAY

[15] http://liveday.in/tamilnadu-live-headline-news/young-girl-suicide/

[16] தினகரன், நெல்லை அருகே ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை மதபோதகரின் லீலைகள் குறித்து கடிதம், Date: 2016-10-25@ 00:17:06.

[17] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=254256

உதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை!

ஒக்ரோபர் 23, 2016

உதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை!

anthony-kishore-panjampatty-church

தமிழகத்தில் மறுபடியும் இன்னொரு இளம்பெண் கற்பழிப்பு: திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ததாக பாதிரியாரை (உதவி பங்குத் தந்தை) திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர் என்று மறுபடியும் வழக்கம்போல செய்திகளை வெளியிட்டுள்ளன. டிவிசெனல்கள் விவாதங்கள் நடத்தவில்லை, மெழுகு வர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை, பெண்ணிய வீராங்கனைகள் பொங்கியெழவில்லை. தமிழகத்தில் கற்பழிப்பு அந்நிலையில் மரத்துப் போய்விட்டது போலும். அதிலும், கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் என்று வந்து விட்டால், இருட்டடிப்பு, மறைப்பு, மறதி எல்லாமே வந்து விடும் போலும்! முதலில் இந்த செய்தியைப் படித்தார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. “தி இந்து” கூட இதனை திண்டுக்கல் செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளது.

anthony-kishore-arrested-for-making-girl-pregnant

உதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர்: திண்டுகல் டையோசிஸ் பிஷப் தாமஸ் பால்சாமிக்கு [Dindigul Diocese Bishop Thomas Paulsamy] உதவியாளாராக வேலை செய்து வந்தான்[1]. திண்டுக்கல் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு (ஏப்ரல் மாதத்தில்) பஞ்சம்பட்டி, திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் [Sacred Heart ChurchPanjampatty, Dindigul] உதவி பங்குத்தந்தையாக திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணி கிஷோர் (31 / 32) பணிபுரிந்துள்ளார்[2]. இது  நிலக்கோட்டை பஞ்சம்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது[3]. அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி சென்று வந்தார்[4]. பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற இறை வகுப்பிலும் மாணவி சேர்ந்தார். அப்போது மாணவியை ஏமாற்றி, உதவி பாதிரியார் ஜோசப்அந்தோணி கிஷோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[5]. ஊர் மக்கள் அவனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதால், பிஷப் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டான்.

most-rev-thomas-paulsamy-d-d

ஏப்ரல் 2016ல் காதல், இப்பொழுது 5 மாத கர்ப்பிணிவேகமாக வேலைசெய்த பாதிரி: கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழகியுள்ளார். அச்சிறுமி திண்டுக்கல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பாதிரியார், அவரை காதலிப்பதாக கூறியதால், மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்[6] என்று மாலைமலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. “காதலித்தால் 5 மாத கர்ப்பிணியாகி” விடுவாள் என்பது சுருக்கமாக சொன்னது போலும். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சில்மிஷ பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தார்.

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4

கற்பழித்தால்குருகுல இல்லத்திற்குமாறுதல் என்பது கொள்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது போலும்: இவர், அதே ஊரைச் சேர்ந்த திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது[7]. இதையடுத்து இவரை திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப் பாடி பிஷப் ஹவுஸுக்கு (குரு குல இல்லம்) பணியிட மாற்றம் செய்துள்ளனர்[8] என்று “தி.இந்து” கூறுகிறது. பிஷப் தாமஸ் பால்சாமி முன்னரே அவனை ஒழுங்காக வைத்திருந்தால், இப்பிரச்சினை வந்திருக்காதே? இதெல்லாம் ஊட்டி பாதிரி விவகாரம் போலவே இருக்கிறது. குற்றம் புரிந்தால், பிஷப் வீட்டில் சௌகரியமாக இருக்கலாம் என்ற தத்துவம் மர்மமாக இருக்கிறது. இந்நிலையில் மாணவி பள்ளிக்கு வரும்போது சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்தோணி கிஷோர். அதாவது “ருசி கண்ட பூனை” அவ்வப்போது பால் குடிக்க ஆசைப்பட்டது போலும். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அந்தோணி கிஷோர் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்[9].

anthony-kishore-panjampatty-church-loved-and-made-girl-pregnant

பெண்ணின் மாமா கோபத்தில் சர்ச்சிற்கு வந்து கலாட்டா செய்து கைதானது: இதற்கிடையே என்.பஞ்சம்பட்டியில் உள்ள சர்ச்சில் பாதிரியார் சேசுராஜ், 22-10-2016 அன்று காலை வழக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென ஒருவர் மரக்கட்டை, அரிவாளுடன் ஆவேசமாக புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மின்விசிறி, பலி பீடம், நாற்காலி போன்றவற்றை சேதப்படுத்திய பின் அவர் சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன், இங்கு உதவி பாதிரியாராக இருந்த கிஷோர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார். தற்போது மாணவி கருவுற்றதாகக் கூறப்படுவதால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் ஒருவர் சர்ச்சில் புகுந்து ரகளை செய்துள்ளார்,” என்றனர். அவர் அப்பெண்ணின் மாமா பிரபு என்று இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஊர்தலைவர் புகார் கொடுத்ததின் பேரில், சர்ச்சின் பொருட்களை சேதம் விளைவித்தற்காக கைது செய்யப்பட்டார்[10]. இந்த கைது மட்டும் உடனடியாக நடக்கிறது, ஆனால், கற்பழித்தவனை கைது செய்ய இத்தனை மாதங்கள் ஆகின்றன!

anthony-kishore-arrested-for-making-girl-pregnant-23-10-2016

கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு என்று கேட்ட சிலர்: மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க ஸ்டேஷன் வந்தனர். கூடவே வந்த சிலர், மாணவியின் பெற்றோரிடம் புகாரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதிரியார் கைது செய்யப்பட உள்ளார் என்பதை அறிந்ததும் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதுவும் திகைப்பாக இருக்கிறது. பள்ளி மாணவியைக் கற்பழித்து கர்ப்பிணியாக்கிய பிறகு, புகாரை பெற்றோர் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? கத்தோலிக்க சர்ச் அத்தகையை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா? ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதிக்கும் விசயமாக இருக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நடப்பதும், சர்ச் மூடிமறைக்கப் பார்ப்பதும், மிக்க கவலை அடைவதாகச் செய்கிறது.

© வேதபிரகாஷ்

23-10-2016

anthony-kishore-panjampatty-church-the-hinu-23-10-2016

[1] Antony Kishore, Secretary to Dindigul Diocese Bishop Thomas Paulsamy, was arrested here on Saturday on charges of sexually abusing a minor girl, while he was serving as assistant parish priest at N. Panjampatti village.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/dindigul-bishops-secretary-arrested-for-sexual-assault/article9257427.ece?ref=tpnews

[2] தினமலர், மாணவி கர்ப்பம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: அக்டோப்பர்.22, 2016: 22.30.

[3] https://www.youtube.com/watch?v=Z5dFBotY6z0

[4] மாலைமலர், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது, பதிவு: அக்டோபர் 23, 2016 07:45.

[5] http://www.maalaimalar.com/News/District/2016/10/23074505/1046593/Priest-arrested-for-school-student-molested.vpf

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1633191

[7] தி.இந்து, பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார் கைது, Published: October 23, 2016 10:35 ISTUpdated: October 23, 2016 10:36 IST

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9258196.ece

[9] Acting on a complaint lodged by the girl’s parents with the all women police station, the police arrested him and produced him before the Judicial Magistrate Court I, which remanded him in 15 days judicial custody. A case was registered against him under Protection of Children from Sexual Offences Act.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/dindigul-bishops-secretary-arrested-for-sexual-assault/article9257427.ece?ref=tpnews

[10] Meanwhile, the girl’s uncle Prabhu barged in to the parish with a sickle this morning and damaged Bali Peetam and other furniture. Acting on a complaint lodged by the village head, the Chinnalapatti police have registered a case and arrested Prabhu on the charges of damaging parish property.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/dindigul-bishops-secretary-arrested-for-sexual-assault/article9257427.ece?ref=tpnews

 

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, ஜெபித்து, எண்ணை தேய்த்து, பாலியல் பலாத்காரம் செய்து, மோசம் செய்தது!

ஒக்ரோபர் 22, 2016

 

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, ஜெபித்து, எண்ணை தேய்த்து, பாலியல் பலாத்காரம் செய்து, மோசம் செய்தது!

joshua-immanuel-raj-christin-oil-massage

இம்மூன்று பெண்கள் தவிர இன்னும் பல பெண்களை சீரழித்துள்ளான் என்று தெரிய வந்தது: போலீசார் தொடர்ந்து நடத்தி விசாரணையில் மதபோதகர் ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பண மோசடி செய்து உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது[1]. மத போதகரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும், அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று தாழையூத்து போலீசார் தெரிவித்துள்ளனர்[2]. மேலும் பல புகார்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஜோசுவா இமானுவேல் ராஜ் நெல்லை கோர்ட்டில் ஜேஎம் 5 மாஜிஸ்திரேட் கார்த்திகேயனின் வீட்டில் நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர்[3]. இருவரையும் வருகிற நவ.2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[4]. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

joshua-immanuel-raj-oil-massage-priestபெண்களை மிரட்டி நிர்வாணப்படம் எடுத்து நகைகளைஅபேஸ்செய்த மதபோதகர் கைது: தினமலர் இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5]. அதாவது, அவன் பெண்களை அந்த அளவுக்கு செய்திருக்கிறான் என்பதும் திகைப்பாக இருக்கிறது.  ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவான் என்று முன்னரே பார்த்தோம். பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார், லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது என்றும் பார்த்தோம். லாட்ஜில் தனியாக இருக்க அப்பெண்கள் எப்படி ஒப்புக் கொண்டனர். திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றியிருக்கிறான் என்றால், ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக வலைவீசியிருக்க வேண்டும். பிறகு பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி கவனிக்காமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை. நிர்வாண படம் எடுத்தான் என்றால், விவகாரங்கள் அளவுக்கு மீறி சென்றுள்ளன என்றாகிறது.

joshua-immanuel-raj-christin-holy-oil-massageஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது: தினகரன்[6] மற்றும் தமிழ்முரசு[7] மட்டும் உதவியாளர் வினோத்குமார் கைது என்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியென்றால், இவன் இந்த காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்திருக்கிறான் என்றாகிறது. ஒருவேளை, ஜோசுவா இமானுவேல் ராஜ், அப்பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் போது, போட்டோக்களை எடுத்திருக்கலாம். அவ்விதத்தில், அவனுக்கு, இவ்விவகாரங்கள் தெரிந்திருக்கின்றன. பெண்கள் சீரழிகின்றனரே, என்று அவன் கவலைப்பட்டிருந்தால், அவனே, ஒருநிலையில் பெண்களுக்கு எச்சரித்திருக்கலாம், போலீசாரிடமும் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், அவன் செய்யவில்லை என்பதால், அவனது அய்யோக்கியத் தனமும் வெளிப்படுகிறது.

christian-oil-massageஉடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்தது[8]: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர். “உடலில் எண்ணெய் பூசி ” என்றுள்ளதால், அது ஒருவேளை புனித எண்ணை, பிரத்யேகமாக ஜெருசலேமிலிருந்து வந்த எண்ணை, அதனை தடவிக் கொண்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும், அதனை தானே, ஜெபித்து, மந்திரத்துக் கொண்டே உடலில் தடவி விட்டால் தான் வேலை செய்யும், பலன் கொடுக்கும். கர்த்தர், ஏசு அல்லது பரிசுத்த ஆவி வந்து அதிசயம் செய்யும் என்றேல்லாம் ஒருவேளைக் கூறி உசுப்பேற்றி விட்டிருப்பான் போலும். பிறகு, தடவும் போது, தனது சில்மிஷங்களையும் செய்திருப்பான். தனியாக, லாட்ஜில் அவ்வாறு செய்யும் போது, ஒருநிலையில் பெண் மயங்கத்தான் செய்வாள். அவனும் அப்படியே சல்லாபித்து, உடலுறவு கொண்டு ஜாலியாக இருந்திருப்பான். அப்பொழுதோ, அல்லது முன்னரோ, பின்னரோ, இவனும், இவனது உதவியாளனும் தகுந்த நேரத்தில் புகைப்படங்கள் எடுத்திருப்பார்கள். அந்நிலைகளில் எடுக்கப்படும் படங்கள் ஆபாசப்படங்களாகத்தான் இருக்கும். மாலைமலர் இவ்வாறு கூறியுள்ளதிலிருந்து, உண்மையினை அறிந்து கொள்ளலாம்[9]:

christian-oil-for-all-purposes

  1. அடிக்கடி தனிமையில் அழைத்து ஜெபம் செய்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் தொட்டு சில்மி‌ஷம் செய்துள்ளார்.
  2. ‘என்னுடன் வெளியூரில் நடக்கும ஜெப கூட்டத்துக்கு வா உடனே உனக்கு வேலை கிடைக்கும்’ என்று சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார்.
  3. இளம் பெண்களை மயக்கி அவர்களது கற்பை சூறையாடியது மட்டும் அல்லாமல் அவர்களிடம் இருந்து ஏராளமான நகை-பணத்தை ஏமாற்றிய ‘திடுக்’ தகவல்கள் தெரிய வந்தது.
  4. கணவருடன் சேர்ந்து வாழ ஜெபிப்பதாக கூறி அந்த பெண்ணையும் மயக்கி ஆபாச படம் எடுத்து 15 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்.
  5. மற்றொரு பெண் மிகவும் ஏழ்மையான பெண். அந்த பெண்ணிடம் உன்னை வசதியாக வாழ வைப்பேன் என்று கூறி ஏமாற்றி ஆபாச படம் எடுத்து 3 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்[10].

joshua-immanuel-raj-oil-massage-priest-theekkathirகற்பழிப்பு விவகாரம் கூட இடத்திற்கு இடம், சித்தாந்தவாதிகள் மாற்றிக் கொள்வது சமூக பிரஞை இல்லாததையே காட்டுகிறது: மார்க்சியக் கொள்கைக் கொண்ட “தீக்கதிர்” கூட “பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது” என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[11]. “பாலியல் வன்கொடுமை” என்பது என்ன அந்த அளவுக்கு சாதாரணமாகி விட்டதா? இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா? மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[12]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா? “பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது”, என்று நிறுத்திக் கொண்டது[13]. உள்ளூரில் இப்படி இளம்பெண்கள் சோரம் போகிறார்களே, போதகர்கள், பாதகம் செய்கிறார்களே என்று கவலைப்படவில்லை[14]. தினகரனும் முதலில் சிறியதாக செய்தி வெளியிட்டு[15], பிறகு விவரங்களைக் கொடுத்தது[16]. இதனை, மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், சித்தாந்தவாதிகள் பாரபட்சத்துடன் செய்திகளை வெளியிடுவது, சமூகப்பிரச்சினைகளை விதவிதமாக அணுகுவது, விவாதிப்பது அல்லது அமைதியாக இருந்து விடுவது முதலியன, அவர்களது உள்நோக்கத்தைத் தான் காட்டுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதைப் பற்றி கொண்டுகொள்ளவே இல்லை.

© வேதபிரகாஷ்

22-10-2016

holy-oil-massage-truly-biblical-with-holy-spirit-touch

[1] LIVEDAY, 3 பெண்களை சீரழித்த மதபோதகர் நெல்லையில் கைது..!, Oct 19, 2016 at 11:40 AM.

[2] http://liveday.in/tamilnadu-live-headline-news/cleric-arrested/

[3] தமிழ்முரசு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, 10/20/2016 2:18:06 PM

[4] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=99242

[5] தினமலர், பெண்களை மிரட்டி நிர்வாணப்படம் எடுத்து நகைகளைஅபேஸ்செய்த மதபோதகர் கைது, அக்டோபர்.19, 2016: 01.49.

http://www.dinamalarnellai.com/web/districtnews/5877

[6] தினகரன், ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, Date: 2016-10-20@ 19:52:56

[7] தமிழ்முரசு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, 10/20/2016 2:18:06 PM

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=253413

[9] மாலைமலர், ஆபாசபடம் எடுத்து மிரட்டி இளம்பெண்களுடன் உல்லாசம்: எட்டயபுரம் போதகர் பற்றி பரபரப்பு தகவல், பதிவு: அக்டோபர் 19, 2016 16:21

[10] http://www.maalaimalar.com/News/State/2016/10/19162122/1045837/Young-women-threat-porn-film-cleric-arrested.vpf

[11] தீக்கதிர், பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது, அக்டோபர்.19, 2016.

[12]http://theekkathir.in/2016/10/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/

[13] நெல்லை.ஆன்லைன்.நெட், பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது, புதன் 19, அக்டோபர் 2016 4:16:36 PM (IST).

[14] http://www.nellaionline.net/view/31_127073/20161019161636.html

[15] தினகரன், நெல்லை அருகே பாலியல் வன்கொடுமை புகாரில் மதபோதகர் கைது, Date: 2016-10-19 10:25:57

[16] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=253033

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

ஒக்ரோபர் 22, 2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

joshua-immanuel-raj-raper-and-priest

மறுபடியும் கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்டதும், செய்தி வெளியீடும்: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[1].  அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[2]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[3]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[4]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.

joshua-immanuel-raj-xian-problem-or-social

கல்யாணம் ஆகாமல் இருந்து, பைபிள் படித்து, மதபோதகர் ஆகி, அறக்கட்டளை வைப்பது: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கருப்பூரை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் ஜோசுவா இமானுவேல் ராஜ் (வயது 35). திருமணமாகாத இவர் பைபிள் வகுப்பு படித்தார் என்று ஒரு நாளிதழ் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  பைபிள் படிப்பதற்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டுமா அல்லது கல்யாணம் ஆகாத கிருத்து பையன்கள் பைபிளைப் படிக்கலாமா என்று தெரியவில்லை கிறிஸ்தவ மத போதகரான இவர், தனியாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். ஆக, பைபிள் படித்து மதபோதகர் என்றாகி விட்டால், நல்ல காசு-பணம்-துட்டு எல்லாம் கிடைக்கும் போல, உடனடியாக, அறக்கட்டளை வைத்து விடலாம் போல! பிறகு, இவர் ஊர், ஊராக சென்று கிறிஸ்தவ பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்து வருகிறார், என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஊர்-ஊராக செல்வது எதற்கு என்றால், அவர்களே இப்படி செய்திகளைக் கொடுத்துள்ளாற்கள்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016-dinathanthi

இவர் ஊர், ஊராக சென்றுஅழகான இளம் பெண்களை காதல் விலையில் வீழ்த்தி கற்பழிப்பழிக்கும் போதகர்: ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவார். மதபோதகர் இப்படி செய்யலாமா அல்லது கிருத்துவ இளம் பெண்கள் அப்படி மாட்டலாமா என்று தெரியவில்லை. பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார். எப்படி அப்பெண்களின் பெற்றோர் ஒப்புக் கொள்வர், ஒப்புக் கொண்டனர் என்று தெரியவில்லை. சென்று விட்டனர் என்பதால், சம்பதித்துள்ளனர் என்றாகிறது. பின்னர் லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அப்பெண்கள் எப்படி ஜோசுவா இமானுவேல் ராஜுடன் ஒத்துழைப்பார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. ஆக, அப்பெண்கள் காமத்திற்கு, கொக்கோக இச்சைக்கு, உடலுறவு கொள்ளும் அளவுக்கு, இவன் எப்படி ஊக்க்குவிக்கிறான் என்பது தெரியவில்லை. ஆபாசப்படம் எடுக்கிறான் என்றால், கேமரா எல்லாம் இருக்க வேண்டும். பிறகு, அப்பெண்களுக்கு அறிவில்லாமல், அந்த அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்றால், என்ன விசயம் அது?

joshua-immanuel-raj-xian-porn-dangerous-trend-in-tamilnadu

மானம் கெட்டப் பிறகு புகார் கொடுத்த பெண்கள்: மத போதகரால் பாதிக்கப்பட்ட தாழையூத்து சேர்ந்த ஒரு இளம் பெண், கொடியன்குளத்தில் கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண், பாப்பாக்குளத்தை சேர்ந்த ஒரு பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் தீன்குமார் ஆகியோர் மத போதகரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர் ஆசை வார்த்தை காட்டி பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஜோசுவா இமானுவேல் ராஜை போலீசார் 17-10-2016 அன்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:

  1. “தாழையூத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் வீட்டுக்கு அடிக்கடி ஜெபம் செய்வதற்காக செல்வேன். [அதே பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அவரை திருமணம் செய்வதாக 10 சவரன் நகையை வாங்கி மோசடி செய்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளார் என்கிறது நக்கீரன்[5]] உனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும். வெளியூர்களில் நடக்கும் கூட்டங்களை வந்தால் அரசு வேலை கிடைக்கும் என அந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி வெளியூருக்கு அழைத்து சென்றேன். வெளியூர்களில் வைத்து பல முறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தேன். அதை செல்போன் மூலம் படம் எடுத்தேன். என்னை பற்றி வெளியே கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர் நெட்டில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவோன் என்று மிரட்னேன். பயந்த போன அந்த இளம் பெண் நடந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை ஏமாற்றி அபகரித்து கொண்டேன்.
  2. கொடிங்குளத்தில் ஒரு பெண் [கொடியன்குளத்தை சார்ந்த அனுஷ்யாவிடமும் பணம் மற்றும் நகைகளை பறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி  உள்ளார் என்கிறது நக்கீரன்] தனது கணவரை பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்ட நான், அவர் வீட்டுக்கு சென்றேன். சிறப்பு ஜெயம் மூலம் கணவனுடன் சேர்ந்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை மயங்கி உல்லாசம் அனுபவித்தேன். அந்த பெண்ணையும் செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி, அவரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியையும் அபகரித்தேன்.
  3. பாப்பான்குளத்ரை சேர்ந்த ஒரு பெண்ணை [நெல்லை மாவட்டம் பாப்பன்குளம் பகுதியை சார்ந்த சீமாகுமாரியிடம் கணவரை சேர்த்துவைப்பதாக கூறி மத போதனை செய்து. சேர்த்து வைப்பதற்கு நகை மற்றும் பணம் பெற்றுள்ளார் என்கிறது நக்கீரன்[6]] வசதியாக வாழ வைப்பதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தேன். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்து கொண்டேன்,” இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

22-10-2016

joshua-immanuel-raj-xian-porn-dangerous-way

[1] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகைபணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/19184213/Go-pick-up-latjuFrights-pornographyRecreation-intimidate.vpf

[3] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.

[4] http://www.onetamilnews.com/News/arrested-KTRAF7

[5] நக்கீரன்,  இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : 19, அக்டோபர் 2016 (20:11 IST); மாற்றம் செய்த நாள் :19, அக்டோபர் 2016 (22:34 IST)

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=175723

15-19ம் நூற்றாண்டு ஓவியத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருவுருவம் என்று பொய் சொல்லி பிரச்சாரம் செய்யும் கிருத்துவர்கள்!

ஒக்ரோபர் 17, 2016

15-19ம் நூற்றாண்டு ஓவியத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருவுருவம் என்று பொய் சொல்லி பிரச்சாரம் செய்யும் கிருத்துவர்கள்!

blessed-virgin-mary-by-pope-pius-ix-associated-with-a-celebrated-byzantine-icon-of-the-same-name-dating-from-the-15th-century

blessed-virgin-mary-by-pope-pius-ix-associated-with-a-celebrated-byzantine-icon-of-the-same-name-dating-from-the-15th-century

கிருத்துவர்களைப் பொறுத்த வரையில், எதையாவது ஒன்றை வைத்துக் கொண்டு, பெரிய கலாட்டா செய்து விடுவர். பொய் சொல்வதிலும், கள்ள ஆவணங்களை உற்பத்தி செய்வதிலும், மோசடிகளை செய்வதிலும், சரித்திர புரட்டல்களூக்கும் அவர்களூக்கு இணை அவர்கள் தான். ஆட்பலம், பணபலம், அரசியல்-செல்வாக்கு, ஆதரவு என்று எல்லாம் இருப்பதால், எதனையும் செய்யும் வேகமும் காணப்படுகிறது. தேவையென்றால், அனைத்துலக ரீதியிலும் அழுத்தத்தை ஏற்படுத்தி சாதித்துக் கொள்கின்றனர். அத்தகைய அதிரடி வேலைகளுக்கு, பிரச்சார சாமர்த்தியங்களுக்கு, இந்துக்கள் ஈடாக மாட்டார்கள். இப்பொழுது, சமூக வளைதளங்களில் மட்டும் ஏதோ, சில பதிவுகளை செய்து அடங்கி விடுகிறார்கள். ஆனால், கிருத்துவர்களோ தமது விசமத்தனமான, சரித்திர மோசடிகளை பலவழிகளில் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்த வகையில், இப்பொழுது “சகாயமாதாவின் திருஉருவம்” என்று ஒன்று முளைத்துள்ளது.

our-lady-of-perpetual-help-1866-and-modified-painting

our-lady-of-perpetual-help-1866-and-modified-restored-painting

நகல், போலி, மாதிரி சித்திரம் வலம் வருவது: “சகாயமாதாவின் திருஉருவம் – 150வது ஆண்டு விழா” [150th year of Our Lady of Perpetual Succour icon] என்று உலகம் முழுவதும் கொண்டாட வாடிகன் முடிவெடுத்தது[1]. அதாவது 1325-1480 காலத்தில் கண்டெடுக்கப்பட்ட, இந்த ஓவியம், திருடப்பட்டு 1499ல் ரோமுக்கு எப்படியோ வந்து சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு மறுபடியும் காணாமல் போய் விட்டது, அல்லது அங்கேயே இருந்தது, போர்களில் அழிந்தது என்றெல்லாம் கதைகள் இருந்தாலும், அங்கேயே இருந்தது என்று வாடிகன் சொல்கிறது. 1866ல் அது பொது மக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டது[2]. இப்பொழுது 150 ஆண்டுகள் ஆகியுள்ளதால், அதனை, உலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு, அனுப்பி காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பிரதிகள் எடுத்து அனுப்பப்பட்டன. ஜூன் 2016ல் முன்னோட்டமாக, மும்பையில் இது பற்றிய விழா நடத்தி உம்பை ஆர்ச்பிஷம் மூலம் டிவிடிகளும் வெளியிடப்பட்டன[3]. அத்தகைய 19ம் நூற்றண்டு சித்திரத்தின் நகல்கள் தான் அனுப்பப்பட்டன. அதில் ஒன்று, திருச்சி, மதுரை, கோவை என்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

history-of-icon-1866-2016

history-of-icon-1866-2016

இதற்கான இணைதளம் கூறும் விவரங்கள்[4]: ஜனவரி 19, 1866 – அருட்தந்தை மைக்கேல் Marchi மற்றும் எர்னஸ்டோ Bresciani இடைவிடாத உதவி எங்கள் தாய் ஐகான் சேகரிக்க எஸ் மரியா டி Posterula சென்றார். ஏப்ரல் 21, 1866 – சுப்பீரியர் பொது போப் பியஸ் IX ஒரு பரிசு வழங்கினார். ஏப்ரல் 26, 1866 – அதற்கான மீட்பு, போலிஷ் ஓவியர் லியோபோல்ட் Nowotny நடத்திய பிறகு, அதை மீண்டும் காட்சி,, மதிப்புப்பெறும் சர்ச் சாண்ட் என்ற ‘அல்போன்சோ உள்ள Esquiline மலை வைக்கப்பட்டது. ஜூன் 23, 1867 – நிலைத்த உதவி நம் தாய் படத்தை வலியுறுத்தி வத்திக்கான் அத்தியாயத்தின் டீன் மூலம் முடிசூட்டப்பட்டார். அதன் தேவாலயங்களில் ஒன்று இருந்து ஒரு அதிசயமான படம் திருடியது கிரீட் தீவு இருந்து ஒரு வணிகர் பற்றி நமக்கு சொல்கிறது என்று 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு பாரம்பரியம் உள்ளது. ஒரு வருடம் கழித்து, அவர் தனது திருடப்பட்ட படம் ரோம் வந்து. 1798 ஆம் ஆண்டு, போர் ரோம் லட்சம் மற்றும் மடங்களின் மற்றும் சர்ச் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.

perpetual help our lady graphic

perpetual help our lady graphic

2016 செப்டம்பரில் திருச்சிக்கு வந்தது: திருச்சி பாலக்கரையில் உலக மீட்பர் சகாயமாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதாவின் திருஉருவம் நேற்று கொண்டு வரப்பட்டது. அதில் சகாயமாதாவின் கையில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் அச்சத்தில் இருப்பது போன்றும், மாதா அவரது பயத்தை போக்கி அரவணைத்து கொள்வது போலவும் வரையப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் லூக்கா இந்த படத்தை வரைந்துள்ளார்[5]. பழமை வாய்ந்த மற்றும் அரிய ஓவியத்தை பார்வையிட கிறிஸ்தவர்கள் 28-09-2016 அன்று காலை முதலே ஆலயத்திற்கு வரத்தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர். மக்கள் செல்வதற்கு வசதியாக ஆலயத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தன. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.

mary-painting-2000-years-old-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-17-10-2016

mary-painting-2000-years-old-Daily-thanthi-17-10-2016

2000 வருட ஓவியம் என்று திருச்சி பாதிரிகள் சொன்னது: இந்த அரிய திருஉருவ ஓவியம் குறித்து உலகமீட்பர் பசிலிக்கா ஆலயத்தின் பாதிரியார்கள் கூறியதாவது: “இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் இருந்த போது தாய் மாதா அவரை கையில் வைத்திருக்கும் போது நற்செய்தியாளர் லூக்கா நேரில் கண்டு வரைந்துள்ளார். இந்த திருஉருவம் வரையப்பட்டு 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இயற்கையான மூலிகைகளால் வரையப்பட்ட இந்த திருஉருவம் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது[6]. சகாயமாதாவின் இந்த தோற்றம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மேலும் இந்த தோற்றத்தால் மாதா இடைவிடா சகாயமாதா அன்னை என அழைக்கப்படுகிறார். இந்த தோற்றத்தில் இருக்கும் சகாயமாதாவை கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வழிபட தொடங்கினர்[7]. திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இடைவிடா சகாயமாதாவின் பக்தி முயற்சி தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும், திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் 60-வது ஆண்டையொட்டியும் இடைவிடா சகாயமாதாவின் திருஉருவம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருஉருவத்தை ரோம் நகரில் இருந்து ரட்சகர்கள் சபை குருக்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ஆலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மதுரையில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவை ஆகிய ஊர்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது”. இவ்வாறு அவர்கள் கூறினர்[8].

mary-painting-150-years-old-the-church-where-it-is

mary-painting-150-years-old-the-church-where-it-is

கோவையிலும் அதே பொய்யைச் சொல்வது: அக்டோபரில் கோவைக்கு வந்தபோதும், அங்குள்ள பாதிரிகள் அதே பொய்யைக் கூறியுள்ளார்கள். ஊடகங்களும் தாராளமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. முட்டாள் இந்துக்கள் உண்மை அறியாமல், அந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டுள்ளனர். முகநூல் இந்துக்களைப் பற்றி சொல்ல வேண்டும். உண்மையை சொல்லாமல், ஷேர் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் படிப்பதில்லை, அறிந்து கொள்வதில்லை. அதனால் தான், அசட்டுத்தனமான அவர்களது எதிர்ப்பும் வீணாகிறது. வாடிகன் எதை செய்தாலும், திட்டமிட்டு செய்கிறது. ஆனால், எதிற்கும் இந்துக்கள் கண்மூடித்தனமாகத்தான் எதிர்க்கிறார்களே தவிர, அவர்களை போன்று முறையாக செய்வதில்லை. அதனால், தான் வாய் கூசாமல், மும்பை பிஷப் கூறியதை கூட யாருக்கு தெரியாது என்பது போல, தமிழகத்தில் உள்ள பாதிரிகள் கதை விடுகிறார்கள். ஊடகங்களும் அப்படியே செய்திகளை வெளியிட்டு வருகின்றது. அவர்களும், உண்மை என்ன, சரித்திரம் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை போலும். கவரை வாங்கிக் கொண்டு, கொடுத்த விவரத்தை அப்படியே செய்தியாகப் போட்டு விடுவார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

17-10-2016

holy-ghost-church-bangalore

holy-ghost-church-bangalore

[1] http://www.iconoflove.org/; http://www.iconoflove.org/asia-oceania.html

[2] Believed to have originated between 1325-1480 in Rome, the icon was stolen by a merchant and subsequently returned to Rome where it was first venerated by the public in 1499, and remained there for three centuries. Later, in 1866, Pope Pius IX — who had seen and prayed before the icon as a young boy — entrusted it to the Church of St. Alphonsus, ordered its public display and veneration at the church. It remain there since the past 150 years and attracts millions of pilgrims and tourists from all over the world.

Times of India, DVD marks 150th year of Our Lady of Perpetual Succour icon, IANS | Jun 27, 2016, 04.15 PM IST

[3] http://timesofindia.indiatimes.com/city/mumbai/DVD-marks-150th-year-of-Our-Lady-of-Perpetual-Succour-icon/articleshow/52938752.cms

[4] http://www.iconoflove.org/history-of-the-icon.html

[5] மாலைமலர், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருஉருவம்: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, பதிவு: செப்டம்பர் 29, 2016 08:57.

[6] http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/09/29085732/1042010/2-thousand-years-ago-painted-sagaya-matha-image-Christian.vpf

[7] தினத்தந்தி, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருஉருவம் கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 11:07 PM IST, மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 29,2016, 4:15 AM IST.

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/09/28230754/2-thousand-years-ago-drawn-by-visiting-Christians.vpf

அன்பு ஸ்டெல்லா கொலை வழக்கும், சம்பந்தப்பட்ட நரிப்பையூர் பாதிரி மிலன் சிங்கும், மனைவி ஜீவிதாவும்!

ஒக்ரோபர் 8, 2016

அன்பு ஸ்டெல்லா கொலை வழக்கும், சம்பந்தப்பட்ட நரிப்பையூர் பாதிரி மிலன் சிங்கும், மனைவி ஜீவிதாவும்!

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-1

அன்பு ஸ்டெல்லாவுக்கு ரசு மருத்துவ மனையில் வேலை வாங்கித் தருவதாக வாக்களித்த பாதிரி: திருநெல்வேலியை குருவிகுளம் அருகே உள்ள செவல்குளம் ஜோசப் தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் ஞானையா [Gnaniah], ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன தனது மகள், அன்பு ஸ்டெல்லாவை [Anbu Stella (24)] கண்டுபிடித்து தரக்கோரி, ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்[1].  ஸ்டெல்லா, 24. பெருமாள்புரத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டே, லேப் டெக்னிஷியன் படிப்பு படித்து வந்த இவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் 10, 2015 அன்று மாயமானார். அன்பு ஸ்டெல்லா, அரசு மருத்துவ மனையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக சொன்ன மிலன் சிங் என்பவனுக்கு ரூ.2.75 லட்சம் கொடுக்கச் சென்ற அவள் திரும்ப வரவில்லை என்றார்.

milan-singh-pastor-murdered-stella-hc-summons-tirunelveli-sp-the-hindu-06-10-2016அன்பு ஸ்டெல்லா தந்தை ஞானய்யையாவை அலைய வைத்த போலீசார்: குருவிகுளம் போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது, திருநெல்வேலியியிலிருந்து மகள் காணவில்லை என்பதால், அங்குசென்று புகார் கொடுக்குமாறு சொல்லி அனுப்பினர். அங்கு சென்று புகார் கொடுத்த பிறகும், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதற்குள் மார்ச்.6, 2016 அன்று தான் கடத்தப் பட்டதாக அன்பு ஸ்டெல்லாவிடமிருந்து தொலைபேசி வந்தது. மார்ச்.8, 2016 அன்று தான் வீட்டில்  டைத்து வைக்கப் பட்டிருப்பதாக அன்பு ஸ்டெல்லாவிடமிருந்து தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என்று தி இந்து கூறுகிறது[2].  தேதிகளில் எப்படி வித்தியாசம் வரும் என்றூ தெரியவில்லை. ஆனால், அது உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. பிறகு விசாரித்த போது, பாதிரி கணேசன் மற்றும் ஜெயகுமார் என்பவர்களுடன் சேர்ந்து கொண்டு தன் மகளை அடைத்து வைத்ததாக தெரிந்து கொண்டார். அதனால் தான், ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்தார்.

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-205-10-2016 அன்று விசாரணைக்கு வந்த மனு: அந்த மனு தொடர்பான விசாரணை, கடந்த அக்டோபர் 5ம் தேதி 2016 அன்று நீதிபதிகள் நாகமுத்து [S. Nagamuthu] மற்றும் முரளிதரன் [M.V. Muralidaran] அடங்கிய அமர்வு முன்பு நடந்தது[3].  அப்போது, தன் மகள் அன்புஸ்டெல்லா, கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டணம் அருகே கொலை செய்யப்பட்டதாகவும், தன் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, பாதிரியார் மிலன் என்பவர் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாகவும் ஞானையா கூறியிருந்தார். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

millan-singh-confession-about-killing-stella-06-10-2016-dtஎரித்துக் கொலை சேய்யப்பட்டது யார்? காவேரிப்பட்டணம் அருகே, எர்ர அள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில், கடந்த ஆண்டு 2015 செப்டம்பரில்,  இளம் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்[4]. அவர் யார்? எந்த விவரத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், காவேரிப்பட்டணம் அருகே தன் மகள் கொலை செய்யப்பட்டதாக ஞானையா நீதிமன்றத்தில் கூறியுள்ளதால், எர்ரஹள்ளியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது அன்பு ஸ்டெல்லாவாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடந்த இடத்தை, நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையையும், திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி., போலீசார், காவேரிப்பட்டணம் போலீசாரிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது[5].

millan-singh-arrested-by-police-nakkeeran-photo-3கொலை செய்யப்பட்டது யார் என்று ஊர்ஜிதம் செய்யப்படவில்லை: வழக்கில் பல குளறுபடிகள் இருப்பதை அறிந்த நீதிபதிகள் திருநெல்வேலி எஸ்பியை ஆஜராகும் படி உத்தரவிட்டனர்[6]. அப்போது, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் [Tirunelveli SP Vikraman] நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மிலன் சிங் மற்றும் ஜீவிதா ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளதாகவும், விசாரணைவின் போது ஜனவரி 4, 2016 அன்று காவேரிப் பட்டினத்தைல் எரித்துக் கொலை செய்ததாக அவர்கள் கொண்டதாக கூறினர்[7]. மேலும், காணாமல் போனதாக கூறப்படும் அன்பு ஸ்டெல்லா கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான மத போதகர் மிலன் சிங்கை கைது செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று நியூஸ்.7.டிவி கூறுகிறது[8]. கண்டு பிடத்த உடல் பரிசோதிக்கப்பட்டதா, அவ்வுடல் அன்பு ஸ்டெல்லாயுடையது என்று உறுதி செய்யப்பட்டதா என்று கேட்டபோது, இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்[9]. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசார் மிக மெத்தனமாக நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்[10]. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், உரிய சோதனைகள் இருந்தாலும், அவற்றை மேற்கொள்ளாமல் இருப்பது போலீஸாரின் மெத்தனத்தையேக் காட்டுகிறது. தனால் தான் 90 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர் என்று கடிந்து கொண்டனர்[11]. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனவும், விசாரணை அறிக்கையை நவம்பர் 14-ஆம் தேதி 2016 நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்[12]. மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசாரும் நெல்லைக்கு சென்றுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-10-2016

millan-singh-confession-about-killing-stella-06-10-2016

[1] தினத்தந்தி, காவேரிப்பட்டணத்தில் பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.சி..டி. விசாரணை தொடங்கியது, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 3:02 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 3:30 AM IST.

[2] The petitioner also said that he received a phone call from his daughter from an unknown mobile number on March 8 and she complained of having been kept under house arrest by the pastor. Though she did not disclose the location, Mr. Gnanaiah said that enquiries made by him revealed that she was kept under illegal detention in collusion with two other people named Ganesan and Jeyakumar.

http://www.thehindu.com/news/cities/Madurai/hc-summons-tirunelveli-commissioner-sp/article9190524.ece

[3] http://www.dailythanthi.com/News/Districts/Krishnagiri/2016/10/08030229/In-the-case-of-woman-burned-to-deathCB-Started-investigation.vpf

[4] தினமலர், காவேரிப்பட்டணம் பெண் கொலையில் விசாரணை தீவிரம், பதிவு செய்த நாள்: அக் 08,2016 07:48

[5] http://m.dinamalar.com/detail.php?id=1623681

[6] The Hindu, HC summons Tirunelveli Commissioner, SP, Madurai, October 6, 2016, Updated: October 6, 2016 05:45 IST

[7] When the petition was taken up for hearing on Thursday [06-10-2016] Tirunelveli SP Vikraman informed the court that Millan and his wife Geevitha were arrested in connection with the case and Geevitha in the inquiry had informed that they had murdered Stella by torching her on January 4, 2016, at Kaveripattinam in Krishnagiri district. When the body was found, it resembled the body of Stella, claimed SP.

[8] நியூஸ்.7.டிவி, மதபோதகர் ஒருவர் இளம்பெண்ணை ஏமாற்றி படுகொலை செய்த வழக்கை சி.பி.சி..டி. விசாரிக்க உத்தரவு!, October 06, 2016

[9] dtNEXT, Shift girl missing case to CB-CID: High Court Bench, Published: Oct 07,201606:00 AM.

[10] http://www.thehindu.com/news/cities/Madurai/hc-summons-tirunelveli-commissioner-sp/article9190524.ece

[11] On hearing his replay, judges became infuriated and blamed police’s lacklustre in their investigation though there were several techniques available to ascertain identity. “Owing to this, more than 90 percent cases are not investigated properly and accused in most of the cases get acquitted. People with power and influence use the lacklustre attitude of cops to escape from such offences,” observed the judges.

http://www.dtnext.in/News/City/2016/10/07011646/Shift-girl-missing-case-to-CBCID-High-Court-Bench.vpf

[12] http://ns7.tv/ta/religious-man-arrested-nellai-killing-woman.html

நரிப்பையூரில் நரி போல நுழைந்த “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, 30 பெண்களை பலாத்காரம் செய்த கொலைகார பாதிரி!

ஒக்ரோபர் 6, 2016

நரிப்பையூரில் நரி போல நுழைந்த “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, 30 பெண்களை பலாத்காரம் செய்த கொலைகார பாதிரி!

narippaiyur-ramanathapuram-tamilnadu

நரிப்பையூரில் நரி போல நுழைந்த மில்லன் சிங்: நரிப்பையூர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இராமநாதபுரம் தெற்கு பகுதியில் கடைசியில் இருக்கின்ற கடற்கரையை ஒட்டிய ஒரு கிராமம். இது காலாடி வட்டாரத்தைச் சேர்ந்த ஊராட்சியாகும். இங்கு மீன் பிடித்தல் மற்றும் பனைத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான கடல் நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை இங்கு செயல்பட்டு வருகிறது. இப்படி அமைதியாக இருந்த ஊரில் தான், “ஜீவனுள்ள தேவ சபை” சர்ச்சை ஆரம்பித்து, மில்லன் சிங் என்பவன் பிரச்சினையை ஆரம்பித்தான் போலும். இந்த ஆள் இப்பொழுது, சங்கரன்கோவில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சங்கரன்கோவில் பகுதி இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உடலை எரித்ததாக பாதிரியார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்[1]. இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. இருவரும் காவேரிபாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்கிறது தி.இந்து[3].

sayalkudi-bus-standமாற்று திறனாளி பாதிரியார்[4]: நெல்லை அருகில் உள்ள மானூர் உக்கிரன்கோட்டையை சேர்ந்த பாண்டியன் மகன் மிலன்சிங் (Millan Singh  வயது 46). மாற்றுத் திறனாளியான இவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் உள்ள நரிப்பையூரில் ஜீவனுள்ள தேவ சபையின் பாஸ்டராக / பாதிரியாராக இருந்து வந்தார். ஒரு சர்ச் நடத்தி வருகிறார் என்கிறது தி.இந்து[5]. இவருடைய மனைவி ஜீவிதா (40). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த காசிநாராயணன் மகள் காந்திமதி (30) என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.4½ லட்சம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அவருக்கு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளார். பல நாள்களாகியும் அவர் வேலை வாங்கித்தரவில்லையாம். “அப்பாய்ன்ட்பென்ட் ஆர்டர்” இல்லையென்றால், காந்திமதி பாஸ்டர் மிலன்சிங்கிடம் பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டாராம்[6]. அப்போது அவர் சங்கரன்கோவில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வருமாறும், அங்கு வைத்து பணத்தையும், நகையையும் தருவதாகவும் கூறினாராம். இதையடுத்து 5-10-2016 புதன்கிழமை அன்று காலை காந்திமதி சார் பதிவாளர்அலுவலகம் அருகே வந்து நின்றாராம்[7]. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காந்திமதியை தொடர்பு கொண்ட பாதிரியார் மிலன்சிங், சங்கரன்கோவிலில் வேலைக்கான ஏற்பாடு செய்திருப்பதாக கூறி காரில் அவரை அழைத்து சென்றார். அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு காரில் இருந்த காந்திமதியை சாலையில் உருட்டி விட்டு மிலன்சிங் தப்பிச் சென்றார்[8]. மாற்றுத் திறனாளி என்றால், இத்தகைய மாற்றுத் திறமைகள் எல்லாம் அதிகமாக இருக்கின்றன போலும்.

m-singh-christian-priest-raped-30-women-tamil-murasu-06-10-2016சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைப்பு: காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிலன்சிங்கை கைது செய்து, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் குறித்து போலீசார் நடத்தியபோது, பல்வேறு பெண்களிடம் அவர் பழகி வேலை வாங்கித் தருவதாக பலகோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாகவும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்கோவில் டவுன் போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுச் செய்தனர். அவரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு, அவரை போலீஸ் காவலில் எடுத்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

m-singh-christian-priest-raped-30-women-dinakaran-06-10-2016கிருஷ்ணகிரி கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்ததாக திடுக்தகவல்கள்: அப்போது, கடந்த ஜனவரி மாதம் வேலை தேடி வந்த இளம்பெண்ணிடம் நகை, பணத்தை பெற்றுக் கொண்டு, அவரை கிருஷ்ணகிரி கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்ததாக ‘திடுக்’ தகவலை மிலன் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக மிலன்சிங் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஜெ.டி. நகரை சேர்ந்த ஞானம் மகள் அன்புச்செல்லம் (24). ஜி. அன்பு ஸ்டெல்லா [ G. Anbu Stella] என்கிறது தி.இந்து இவர், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, வீரிருப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் தனியார் மில்லில் காவலாளியாக இருந்துள்ளார். காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறியதை நம்பி, 2 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை அன்புச்செல்லம் கொடுத்தாராம். அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம்.

millan-singh-christian-priest-raped-30-women-the-hindu-06-10-2016அன்பு ஸ்டெல்லா இளம்பெண் கர்ப்பம்: படிப்பை முடித்த அன்புச்செல்லம் நெல்லை அருகில் உள்ள தருவையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, ஜே.டி.நகர் பகுதிக்கு மத பிரசாரத்துக்கு சென்றபோது, என்னை தனியாக சந்தித்த அன்புச்செல்வம், தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை தெரிவித்தார். அந்த வாலிபரிடம் பணம், நகையை வாங்கித் தருமாறு என்னிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய நான், அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றதை நம்பி, ரூ.2 லட்சம் கொடுத்தார். பின்னர், அவரை எனது மனைவி ஜீவிதாவுடன் தர்மபுரி பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு முயற்சி செய்வதாக கூறினேன். என்னிடம் நெருங்கி பழகினார். அவருடன் உல்லாசமாக இருந்தேன். அவர் கர்ப்பிணியானார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், தனனை திருமணம் செய்து கொள்ளுமாறு நச்சரிக்கத் தொடங்கினார். ஆனால் அவர், மறுத்ததோடு அன்புசெல்லத்தை கொலை  செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு பாதிரியார் மனைவி ஜீவிதாவும் உடந்தையாக இருந்தார்[9].

milam-singh-christian-priest-raped-30-women-tamil-murasu-06-10-2016அன்பு ஸ்டெல்லா கடத்திக் கொலை: இதனால், அவரை நானும், எனது மனைவியும் காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து, உடலை எரித்தோம். முகத்தை தவிர உடல் பகுதி முழுவதும் எரிந்து விட்ட நிலையில் காவேரிபாக்கம் நான்குவழிச்சாலையில் உடலை வீசிவிட்டு, சங்கரன்கோவில் பகுதிக்கு திரும்பி வந்து விட்டோம். இதனிடையே அன்புசெல்லத்தை காணவில்லை என அவரது தந்தை ஞானம், குருவிகுளம் போலீசில் புகார் செய்தார்.  இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு  குருவிகுளம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சங்கரன்கோவில் வந்து மிலன்சிங் மனைவி ஜீவிதாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை  காவேரிபாக்கத்திற்கு அழைத்து சென்றனர்[10]. இதனால், காந்திமதியை மோசடி செய்த வழக்கில் இப்போது சிக்கி கொண்டுள்ளேன், என தெரிவித்துள்ளார். இளம்பெண்ணை எரித்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக, மிலன்சிங்கின் மனைவி ஜீவிதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில், கடந்த 3.1.2016–ம் தேதி அன்புச்செல்லத்தை காணவில்லை என, தந்தை ஞானம் நெல்லை மாவட்டம் குருவிகுளம் போலீசாரிடம் புகார் செய்திருந்தது தெரிய வந்தது. அந்த போலீசார் மூலம் அன்புச்செல்லம் புகைப்படத்தை பெற்று, காவேரிபாக்கம் போலீசாருக்கு சங்கரன்கோவில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

milam-singh-christian-priest-raped-30-women-dinakaran-06-10-2016மனைவியிடம் விசாரணை: 05-10-2016 அன்று அந்த புகைப்படத்தையும், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் முகமும் ஒத்துப் போனதாக காவேரிபாக்கம் போலீசார் தெரிவித்தனர். பின்னர், அந்த போலீசார் சங்கரன்கோவில் வந்து நேற்று 05-10-2016 அன்று மாலையில் மிலன்சிங்கின் மனைவி ஜீவிதாவை விசாரணைக்காக காவேரிபாக்கம் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் அன்பு ஸ்டெல்லாவை கொன்றது, இத்தம்பதியர் தான் என்று ஊர்ஜிதம் ஆனது. ஜீவிதா, தன் கணவனுக்கு துணையாக இருந்ததும் தெரிய வந்தது. இப்படி ஒரு பெண்ணே பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது திகைப்பாக இருக்கிறது. மேலும், சர்ச், பாஸ்டர், ஊழியம் போன்றவற்றையும், இதற்காக உபயோகப்படுத்தியது, மேலும் ஆச்சரியமாக இருக்கிறது.

30–க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி[11]: பாதிரியார் மிலன்சிங், இதே போல், நெல்லை, பாளை, அம்பை, வி.கே.புரம் பகுதியில்  வேலை வாங்கித் தருவதாக 30–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகள், பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நெல்லை மாவட்டம் குருவிகுளம் போலீசார், பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மிலன்சிங்கை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவரிடம் ஏமாந்த பெண்கள் குறித்த பட்டியலும் தாயாரிக்கப்பட்டு வருவதாகவும், வேறு எந்த பெண்ணையாவது அவர் கொலை செய்திருக்கிறாரா? என்றும் தீவிர விசாரணையில் தான் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[12].

© வேதபிரகாஷ்

06-10-2016

[1] நெல்லை.ஆன்லைன், சங்கரன்கோவில் பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் கைது : 30 பெண்களை ஏமாற்றியது அம்பலம், புதன் 5, அக்டோபர் 2016 6:52:26 PM (IST)

[2] http://www.nellaionline.net/view/31_126301/20161005185226.html

[3]  Kaveripakkam police arrested Millan Singh and Jeevitha.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pastor-arrested-for-sexual-assault-murder-of-woman/article9190369.ece

[4] தினத்தந்தி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சங்கரன்கோவில் இளம்பெண்ணை கடத்தி கொலை செய்து உடலை எரித்த பாதிரியார் உடந்தையாக இருந்த மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை, பதிவு செய்த நாள்: செவ்வாய், அக்டோபர் 04,2016, 9:44 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 1:00 AM IST.

[5] Millan Singh (46), a differently abled preacher from Ukkirankottai near Manur, was running a church at Narippaiyur in Ramanathapuram district.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/pastor-arrested-for-sexual-assault-murder-of-woman/article9190369.ece

[6] தினமணி, மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பணம், நகை மோசடி: சங்கரன்கோவிலில் பாஸ்டர் கைது , By DIN  |   Last Updated on : 22nd September 2016 07:47 AM.

[7] http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/sep/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2568829.html?pm=378

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/04214414/Kidnapped-young-woman-KillPastor-burnt-body.vpf

[9] தினகரன், பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30 பேரை ஏமாற்றி பலாத்காரம்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல், Date: 2016-10-05@ 16:55:45.

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=250496

[11] தமிழ்முரசு, வேலை வாங்கி தருவதாக மோசடிபெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30 பேரை ஏமாற்றி பலாத்காரம்; போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல், 10/5/2016,  3:09:39 PM.

http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98760

[12] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98760