Archive for the ‘பாலியல் தொல்லை’ Category

மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லை – சூசைப்பிரகாஷம், ஆதிசிவன், மற்றும் போக்சோவில் கைது, சிறை முதலியன!

ஜனவரி 24, 2024

மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லைசூசைப்பிரகாஷம், ஆதிசிவன், மற்றும் போக்சோவில் கைது, சிறை முதலியன!

மாஷா டிரஸ்ட் ஆரம்பிக்கப் பட்டது: MASHA TRUST (தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட எண்.814/2005) – முதன்மையாக ஒரு சமூக சேவை அமைப்பு. இது ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் இயலாமைக்காக செயல்படுகிறது. இது 1996 ஆம் ஆண்டில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்த சில கருணையுள்ள இதயங்களால் நிறுவப்பட்டது. இது ஏழைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, அவர்களின் பிரச்சனைகளை முதலில் உணரவும், அடையாளம் காணவும் செய்கிறது. MASHA இன் இறுதி இலக்கு அவர்கள் தங்களுக்கு உதவ உதவுவதாகும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை அடையாளம் காண கற்றுக்கொண்டவுடன், அதைத் தீர்க்க MASHA அவர்களுக்கு உதவுகிறது. கூட்டு முயற்சிதான் தீர்வு. மாஷா அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறார்கள். இது அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை மாசுபடாமல் வைத்திருப்பது ஆகியவற்றை கற்பிக்கிறது.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

காப்பகம் இல்லம் ஆரம்பிக்கப் பட்ட நோக்கம்: ஆதரவற்ற குழந்தைகள், வெறிச்சோடிய அபல பெண்கள், புறக்கணிக்கப்பட்ட வயதான மூத்த குடிமக்கள் தங்குமிடம் மற்றும் அன்பு, பாசம், அக்கறை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வழிதவறிச் சென்று சமூகவிரோத சக்திகளின் கைகளில் இரையாகக்கூடிய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அது அவர்களை சமூக ரீதியாக பயனுள்ள மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்குகிறது. பலருக்கும் மனவலியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம் என்று ஒரு ஊடகம் பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா அறக்கட்டளையானது நியோமி அன்பு இல்லத்தை நடத்திவருகிறது[1]. 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்[2]. அங்கு ஆதரவற்ற நிலையிலுள்ள 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

சூசைப்பிரகாஷம் காப்பகத்தை ஏன் துவக்கினேன் என்று விளக்கினார்: இப்படி ஒரு இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் தனக்குள் உருவானதன் பின்னணியைச் சொல்கிறார் அதனை நிர்வகித்துவரும் சூசைப்பிரகாசம்[3]. “இந்தியாவில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிவருபவர்களாக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியானது நம் தேசத்தில் பரவலாக உள்ளது. அதனாலேயே, சிறுமிகளுக்காக இப்படி ஒரு இல்லத்தைத் தொடங்கினேன்.” என்கிறார்[4]. அப்படித்தான், பற்பல அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கூநோக்கு இல்லங்கள் என்றெல்லாம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன, படுகின்றன. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்கள் அதிகமாகவே இவற்றை ஆரம்பித்து நடத்துகின்றன. அவை தான் பெரும்பாலான இத்தகைய பாலியல் குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளன. செய்திகளில், ஊடகங்களிலியே நூற்றுக் கணக்கான விவகாரங்கள், கைதுகள், வழக்குகள் என்றெல்லாம் வந்துள்ளன.

ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தது…

ஆதிசிவன் பாலியல் வன்ம குற்றத்தில் கைது மற்றும் சிறை: இந்நிலையில், காப்பகத்தின் அறங்காவலரான கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன், அங்குள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்[5]. இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் காவல் சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்[6]. இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆதிசிவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்[7]. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ எனச் சொல்வதுபோல, நியோமி அன்பு இல்லத்தில், ஏடாகூடமாக என்னென்னவோ நடந்து தொலைத்திருக்கிறது. அதனால்தான், அந்த இல்லத்தின் இன்னொரு நிர்வாகியான ஆதிசிவன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான கிரேஸ் ஷோபியாபாய்[8].  

ஆதிசிவன் கைதான பின்னணி இது: ஆதிசிவன் அவ்வில்லத்தில் படித்துவரும் சிறுமிகள் நால்வரிடம் அத்துமீறி நடந்துகொண்டது, மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரை புகாரானது. உடனே, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், நியோமி அன்பு இல்லத்துக்கே வந்து மாணவிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும், இல்லத்தின் அலுவலகத்தில் வைத்து ஆதிசிவன் தங்களை எவ்வாறு தொந்தரவு செய்தார் என்பதையும்,  வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதையும் அழுதபடி கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்முகம் அளித்த புகாரை விசாரித்து, ஆதிசிவனைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நியோமி அன்பு இல்லத்தின் நிர்வாகி சூசைப்பிரகாசத்திடம் நடந்த அத்துமீறல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த 4 மாணவிகளும் மதுரை – முத்துப்பட்டியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.  

ஆதிசிவனா……..

சூஷைப்பிரகாசமும், ஆதிசிவனும்: சமயநல்லூர் வட்டாரத்தில்  “34 குழந்தைகளின் அப்பா என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சூசைப்பிரகாசம், மற்ற காப்பகங்களிலிலிருந்து இருந்து இது வேறுபட்டது என்பார். எப்படியென்றால், வெளிநாட்டு நிதி உதவியை நம்பாமல், தன் சொந்த முயற்சியால் நடத்தப்படும் இல்லம் எனச் சொல்வார். அன்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்று அப்போது அவர் கூறியதென்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஆதிசிவனால் அங்கு நடந்த செயல் கொடூரமானதாக அல்லவா இருக்கிறது?,” என்கிறார்கள் ஆதங்கத்துடன். அனாதை சிறுமிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில், காப்பக சுவர்களைத் தாண்டி தங்களின் அத்துமீறல் வெளியில் வராது என்ற நினைப்பில், ஒருசிலர் வெறிகொண்ட மனித மிருகங்களாக நடந்துகொள்வது கொடுமையானது! அத்தகையோருக்கு, ‘தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்சத்தை,  இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று நம்புவது மட்டுமே தற்காலிக ஆறுதலாக உள்ளது.

குறிப்பு: இது 2019ல் நடந்த விவகாரம் ஆகும். பொதுவாக, செய்தித் தாள்களைப் படித்து, விவரங்களை சேகரித்து, சரிபார்த்து, எழுதி, ஆதாரங்களைத் தொகுத்து, தேவையான செய்தித்தாள் கட்டிங்ஸ், புகைப் படைங்கள் முதலியவற்றை சேர்த்து, பிளாக் போட சுமார் 3 முதல் 5 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் குறிப்பிட்டல் நாளில், வாரத்தில் அதிகமான முக்கியமான செய்திகள் வரும் பொழுது அவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட, ஏன் தயாராக இருக்கும் கட்டுரையைக் கூட இணைதளத்தில் ஏற்ற முடியாமல் போகிறது. ஏன் சில நாட்கள் ஆனால் மறந்தும் போகிறது. இதனால், திடீரென்று, இணை தளத்தில் எதையோ தேடும் பொழுது, சில செய்திகள் காணப்படுகின்றன. அடடா, இது தெரிந்த விசயமாயிற்றே, நாம் கூட பிளாக் போட்டிருக்கிறோமே என்ற எண்ணம் வரும். ஆனால், தேடிப் பார்த்தால் கிடைக்காது, இருக்காது பிறகு, நாம் போடவில்லை என்பது தெரிய வரும். அவ்வாறு கிடைத்தது தான் இது. நடந்தது 2019 இப்பொழுது 2024, ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் ஆணப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது இன்று பதிவு செய்யப் படுகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2024

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்- கட்டிடம்.


[1]  MASHA TRUST (Tamilnadu Govt. approved No.814/2005) – is primarily a social service organization. It works for the upliftment, progress and enabling of the poor, downtrodden people. https://www.maduraidirectory.com/masha.php

[2] நக்கீரன், ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில்! –அனாதை சிறுமிகளிடம் அத்துமீறல்!, அதிதேஜா, Published on 13/08/2019 | Edited on 13/08/2019, wa

[3] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/under-guise-supporting-orphaned-little-girls

[4] தமிழ்.நியூஸ்.18, ஆதரவற்றோர் காப்பகத்தில் 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நிர்வாகி கைது!, LAST UPDATED : AUGUST 13, 2019, 8:54 PM IST.

[5] https://tamil.news18.com/news/tamil-nadu/orphanage-administrator-arrested-for-raped-girl-children-skd-192979.html

[6] ஜெயா.பிளஸ், காப்பக உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுமதுரை, Aug 13, 2019

[7] https://www.youtube.com/watch?v=HFMC8fUabkQ

[8] மதுரை மாவட்டம் சமூக ஊடகம், Maduraidistrictsocialmedia, 13 ஆகஸ்ட், 2019 ; https://www.facebook.com/photo/?fbid=2793452697350139&set=pb.100068849632048.-2207520000

கணவனை இழந்த பிரின்சி, பாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்தது, அதிக செக்ஸ் சதாய்ப்பால், கொலை செய்தது!

திசெம்பர் 12, 2023

கணவனை இழந்த பிரின்சி, பாஸ்டர் டேனியலுடன் சேர்ந்து வாழ்ந்தது, அதிக செக்ஸ் சதாய்ப்பால், கொலை செய்தது!

டேனியல்பிரின்சி கிறிஸ்தவ ஊழியம்வேலை: பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வேலைக்கார பெண்ணை 07-12-2023 அன்று கைது செய்தனர்[1]. வழக்கம் போல, ஊடகங்கள் இச்செய்தியை பி.டி.ஐ பாணியில் வெளியிட்டுள்ள, ஆனால், நேரில் சென்றோ, விசாரித்தோ, ஆய்ந்தோ மேலும் விவ்ரங்கள் எதையும் வெளியிடவில்லை. இணைதள பதிப்புகள் தலைப்பு மட்டும் மாற்றி-மாற்றி, அரைத்த மாவையே அரைத்துள்ளது. கதிர் செய்தி, தினத்தந்தி-உபயம் என்றே வெளிப்படையாகப் போட்டுள்ளது. கடலூரை சேர்ந்தவர் வீராசாமி (எ) டேனியல் (62)[2]. வழக்கம் போல இவ்வாறு இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வரும் “மைனாரிட்டி” மற்றும் “இந்து” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கும்பலில் இவனும் ஒருவன் என்று தெரிகிறது. மதபோதகரான இவர், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூரில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தார்[3]. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்[4]

செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொலைவெறி தாக்குதல்: இவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவருக்கு டேனியல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[5]. ஆக, பெண்களும் இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு டேனியலுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது[6]. இந்நிலையில் நேற்று முன்தினம் 06-12-2023 நள்ளிரவிலும் டேனியல், மீண்டும் பிரின்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது[7]. அதிகாலை 2 மணிக்கு பாலியல் உறவுக்கு டேனியல் அழைத்தான் என்கிறது தினமலர்[8]. அதாவது, இது தொடர்ந்து நடந்து வரும் விவகாரமாக இருக்கிறது போலும். இதில், ஆத்திரமடைந்த பிரின்சி, டூவீலரில் உள்ள இரும்பு கம்பியை எடுத்து / சைக்கிள் பல் சக்கரத்தால் டேனியலை சரமாரியாக தாக்கினார்[9]. இதில், பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்[10]. வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டார் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸார் வந்து பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பிரின்சியும் அங்கே இருந்துள்ளார்.

சேர்ந்து வாழ்ந்த பிரின்சியும், அதிக செக்ஸ் சதய்ப்பில் ஈடுபட்ட டேனியலும்: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்கே சென்று தங்கிய செல்வி அங்கேயே தங்கியுள்ளார்[11]. சேர்ந்து வாழலாம் என்று உச்சநீதி மன்றமே தீர்ப்புக் கொடுத்துள்ளதால், பாஸ்டர் அமூல் படுத்தியுள்ளார் போலும். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்[12]. அங்கே கொலை செய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர்[13]. அவர்களின் விசாரணையில் செல்வி, “மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார்[14]. அதனால், எனக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார்[15]

பணம் கேட்டுக் கொடுக்காதலால் கொலை: இதுகுறித்து தகவல் அறிந்து நேற்று 07-12-2023 காலை அங்கு வந்த மண்டையூர் போலீசார் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக / உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பிரின்சியை கைது செய்தனர்[16]. இதுபற்றி போலீசார் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக வேலைக்கார பெண் பிரின்சிக்கு, மதபோதகர் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதவிர மதபோதகரிடம், பிரின்சி பணம் கேட்டு கடந்த மூன்று தினங்களாக தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு டேனியல், அடிக்கடி பணம் தரமுடியாது. கொடுக்கும் போது வாங்கி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் பிரின்சி, இரும்பு கம்பியால் டேனியலை தாக்கி கொன்றது தெரியவந்துள்ளது. பாலியல் தொந்தரவால் டேனியலை அடித்து கொன்று விட்டு பணத்துக்காக கொன்றதாக பிரின்சி நாடகமாடுகிறாரா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,” என்றனர்.

மண்டையூரில் ஊழியம் செய்யும் இவனது வேலை என்ன?: மண்டையூர் ஊராட்சி (Mandaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4283 ஆகும். இவர்களில் பெண்கள் 2178 பேரும் ஆண்கள் 2105 பேரும் உள்ளனர். இவ்வாறு 4,000 மக்கள் இருக்குமிடத்தில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தான் என்றால், அவ்வாறு அவனை ஊக்குவிப்பது யார், நிதியுதவி எப்படி கிடைக்கிறது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மேலும், பாலியல்-செக்ஸ், வன்முறை-கொலை என்பதெல்லாம் கிருத்துவர்களுக்கு சகஜமாகியுள்ளது, தொடர்ந்து வரும் செய்திகளும் வெளிப்படுத்துகின்றன.

ஒழுக்கத்தை மீறி, ஒழிங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை தான் கிடைக்கும்: பிரின்சி கணவனை இழந்தது, சமையல் வேலை செய்ய டேனியலிடம் சென்றது; டேனியல் (62) மற்றும் பிரின்சி (46) சேர்ந்து வாழ்ந்தது. சேர்ந்து வாழும் உறவு தொடர்ந்தது; திடீரென்று வெறுப்பு-கொலைவெறி உண்டானது; அந்த அளவுக்கு செக்ஸ்-டார்ச்சர் கொடுத்தது; கொலையில் முடிந்தது..ஆகவே, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் அவ்வாறே புலன்களை அடக்கிக் கொண்டு சேவை செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய கூடா ஒழுக்கம் முதலியன, ஒழிங்கினங்களில் தான் முடியும். கடவுள் தண்டனை கொடுப்பார், மன்னிக்க மாட்டார்.

கிறிஸ்துவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்: கிறிஸ்துவத்தில் தொடர்ந்து எவ்வாறு பாஸ்டர்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் என்று பலர் அடிக்கடி இத்தகைய பாலியல் வன்மங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பற்றி நிறையவே எழுதியாகிவிட்டது. அலசி-ஆய்ந்தும் செய்தாகிவிட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தமிழகத்திலும், பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், கிறிஸ்துவ மேல் இடங்கள் ஏன் இப்பிரச்சனையைப் பற்றி முறையாக ஆய்வு செய்யவில்லை அல்லது இத்தகைய ஒழுங்கினங்களில் ஈடுபடும் பாஸ்டர்கள் பாதிரிகள் முதலியோரை கட்டுப்படுத்த அல்லது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை செய்யாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் இது அடிக்கடி நடக்கின்றன, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. கற்பழிப்பு, பாலியல் சதாய்ப்பு, செக்ஸ்-வன்மம், ஏன் கொலைகளும் நடந்து கொண்டிருப்பதால், போலீஸ்காரர் நடவடிக்கைகளும், நீதிமன்ற தண்டனைகளும் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கின்றன, அபயா கொலை வழக்கு என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் இவை தொடர்ந்து நடந்து வருவது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது அல்லது நடக்கிறது நடந்து விட்டு போய் போகட்டும் என்று தொடர்ந்து இவ்வாறு அமைதியாக இருந்து காலத்தை கழித்து விடுவார்களா என்றெல்லாம் புரியாமல் தான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில்- தமிழகத்தில் பலர் இதனை உன்னிப்பாக பார்க்க கவனித்து கொண்டிருப்பதால், நிச்சயமாக அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களை திருத்தி கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

© வேதபிரகாஷ்

09-12-2023


[1] தினகரன், பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் அடித்து கொலை: வேலைக்கார பெண் கைது, December 8, 2023, 12:31 am.

[2] https://www.dinakaran.com/priest_beaten_death_sexual_harassment_girl_arrested/ – google_vignette

[3] தினமலர், பாலியல் தொல்லை தந்த மத போதகர் கொலை: வேலைக்கார பெண் கைது, பதிவு செய்த நாள்: டிச 08,2023 07:26.

[4] https://m.dinamalar.com/paytm/detail.php?id=3499019

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. 61 வயது மத போதகரை ஆத்திரத்தில் கொலை செய்த 46 வயது பெண்..!, First Published Dec 9, 2023, 1:41 PM IST.

[6] https://tamil.asianetnews.com/gallery/gallery/christian-father-murder-women-arrest-in-pudukottai-tvk-s5e43v

[7] தினமலர், மத போதகர் கொலை வேலைக்கார பெண் கைது, பதிவு செய்த நாள்: டிச 07,2023 23:28.

[8] https://m.dinamalar.com/detail.php?id=3498455

[9] கதிர்.நியூஸ், தகாத முறையில் தொல்லை கொடுத்த மத போதகர் அடித்துக் கொலைபெண் பரபரப்பு வாக்குமூலம், By : Karthiga  |  SOURCE :DAILY THANTHI, 8 Dec 2023 12:15 PM.

[10] https://kathir.news/news/religious-preacher-beaten-to-death-for-harassing-her-inappropriately-woman-sensational-confession-1508412

[11] காமதேனு, தினமும் பாலியல் டார்ச்சர்தாங்க முடியாமல் மத போதகரை கொலை செய்த பெண்!, Updated on : 09 Dec 2023, 9:38 am

[12] https://kamadenu.hindutamil.in/crime-corner/young-woman-arrested-for-murdering-religious-pastor

[13] தமிழ்.ஒன்.இந்தியா, “அதுவிஷயமே வேற.. கடலூரை கலங்கடித்த செல்வி.. வீட்டில் நுழைந்து பார்த்தால்.. ஐய்யயோ சைக்கிள் செயினா?, By Hemavandhana, Updated: Saturday, December 9, 2023, 18:41 [IST].

[14] https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-young-woman-and-who-is-this-young-woman-what-did-she-confessed-to-the-pudukkottai-police-564449.html

[15] தினமணி, மதபோதகா் கொலை: பெண் கைது, By DIN  |   Published On : 08th December 2023 12:23 AM  |   Last Updated : 08th December 2023 12:23 AM.

[16] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2023/dec/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4118750.html

போர்வைக்குள் ஜெபம், ஆடை கழட்டச் சொன்ன பாதிரி, பேய் ஓட்டுகிறேன் என்று உடலுறவு கொண்ட விவகாரம்!

ஒக்ரோபர் 15, 2023

போர்வைக்குள் ஜெபம், ஆடை கழட்டச் சொன்ன பாதிரி, பேய் ஓட்டுகிறேன் என்று உடலுறவு கொண்ட விவகாரம்!

கிருத்துவர்களின் செக்௶ குற்றங்கள் தொடர்வதேன்?: தமிழகத்தில் அடிக்கடி கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் வக்கிரங்கள், பாலியல் சதாய்ப்புகள், கற்பழிப்புகள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், பெண்ணுரிமை என்றெல்லாம் கூவும் எந்த மங்கையும், பெண்ணும், நாரீமணியும் இவற்றைப் பற்றி கவலைப் பட்டதாகவோ, மாநாடு நடத்தியதாகவோத் தெரியவில்லை. சமீபத்தில் கிறிஸ்தவ கல்லூரிகள் உலக அமைதி மாநாடுகள் என்றெல்லாம் நடத்தின. ஆனால், இத்தகைய செக்ஸ் குற்றங்கள் சர்ச்சுகளில் நடைபெறுவதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார்கள். வருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல், ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்ட விவகாரங்களும் நடந்து வருகின்றன. ஆனால், அவ்ர்களைத் திருத்த சர்ச் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

சென்னை ஆசிரியை தூத்துக்குடி பாதிரியிடம் மாட்டிக் கொண்டது: சென்னை ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து ரூ.5 லட்சத்தை அபகரித்த தூத்துக்குடி தியான மைய ஊழியர் மீதும், இதுபற்றி புகார் செய்தபோது தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீதும் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்[1], என்று இப்பொழுது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட ஸ்டீபன் என்பவரது மகள் கேத்தரின் (32). இவர், திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்[2]. இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. கேத்தரினுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்[3]. இதனால் மன அழுத்ததில் இருந்த கேத்தரின், சொந்த ஊரான தூத்துக்குடி வந்துள்ளார்[4]. இங்கு மன ஆறுதலுக்காக தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தியான இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார்.

தியான இல்ல பாதிரி மூலம் அறிமுகமான ஜோஸ்வா: அப்போது தியான இல்ல பாதிரியார் மைக்கேல் என்கிற மகிழன் (62) மூலம் மைய உதவியாளர் ஜோஸ்வா (எ) இசக்கி அறிமுகமாகி உள்ளார். கேத்தரினுக்கு ஆறுதல் கூறி வந்த ஜோஸ்வா, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி கேத்தரினிடம் இருந்து ரூ.5 லட்சத்தையும் ஜோஸ்வா பெற்றுள்ளார். இந்நிலையில் கேத்தரினை ஜோஸ்வா திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து போதகர் மகிழனிடம் கூறியபோது அவரும் கேத்தரினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு வர்ணனையுடன் செய்திகள் வெலியிடப் பட்டுள்ளன. அதே நேரத்தில் இன்னொரு வர்ணனையுடனும் செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன.

பெண்மணிக்கு பேய் பிடித்திருக்கிறது: அதன் படி, அந்த பெண் வந்தபோது, ஜோஸ்வா, “உங்கள் உடலில் பயங்கர பேய் ஒன்று குடிவந்துள்ளது. இந்த பேயை விரட்ட நாம் ஒன்றாக ஜெபம் செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்[5]. இதனால் பயந்துபோன அப்பெண்ணும், ஜோஸ்வா உடன் ஜெபம் செய்ய தொடங்கினார்[6]. சில நாட்கள் கழித்ததும், அந்தப் பேய் உங்கள் உடலை விட்டு போக மாட்டேன் என அடம்பிடிக்கிறது. அதனால் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்த பேய் சென்றுவிடும் என கூறியுள்ளார். இந்நிலையில், நேரில் சென்ற ஆசிரியரிடம் பேசிய பாதிரியார் “உங்க உடம்பில் பயங்கர பேய் ஒன்று இருக்கிறது.. அந்த பேய் உங்கள் உடம்பைவிட்டு போகாது.. அதை விரட்டவேண்டுமானால், என்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்,” என்று கூறியுள்ளார்[7]. இதை நம்பி, அந்த பெண் ஒப்புக் கொண்டு உடலுறவு வைத்துக் கொண்டாள்[8]. அதன்படி, ஆடையைக் கழட்டச் சொல்லி, போர்வைக்குள் ஜெபம் செய்தானாம்[9].  அப்பொழுது பேய் வெளி வந்ததா, இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. எக்ஸார்ஸிஸ்ட் போன்ற புதிய படத்தையே எடுத்து விடலாம் போலிருக்கிறது.

போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள்: போர்வைக்குள் ஜெபம் போன்ற யுத்திகள் எல்லாம் பாஸ்டர்கள் / பாதிரிகள் எப்படி கையாளுகிறார்கள், எந்த செமினரியில் இதெற்கெல்லாம் பயிற்சி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. அந்த பாஸ்டர். பிறகு, உடலுறவிலும் ஈடுபட்டிருக்கிறான். இதைப் பற்றிய வீடியோ செய்திகள் வேறு வெளியிடப் பட்டுள்ளது[10]. ஆனால், பேய் போகவில்லை என்று சொல்லி, அந்த ஆசிரியரும் அவரை நம்பி பலமுறை உறவில் இருந்துள்ளனர்[11]. அடம் பிடிக்கும் பேய் என்று ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ள்து நோக்கத்தக்கது[12].பேய் ஓட்டுவதாக கூறி நடுத்தர வயது பெண்ணை ஏமாற்றி அவரிடம் காமக்களியாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியாரை தூத்துக்குடி போலீஸார் தேடி வருகின்றனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை தேடுவதை விட்டுவிட்டு, கடவுளின் தூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆசாமிகளை தேடி சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு இந்தப் பெண்ணின் கதையே சிறந்த உதாரணம்.

பாதிரியின் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது: பாதிரி தன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன், மகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து பணத்தையும் பறித்துள்ளான். அதனால், திருமணம் செய்து கொள் என்று வற்புருத்திய போது, அதே போல் வரும் பெண்களை தன்னிடம் சிக்க வைக்க உதவ வேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறான். இதனால் கொதித்துப் போன அப்பெண்  ஒடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறாள். மறுத்ததால், போலீசிடம் புகார் கொடுத்தாள். இதையடுத்து தன்னை ஏமாற்றிய ஜோஸ்வா மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த போதகர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேத்தரின் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் இளம்பெண் கேத்தரினை ஏமாற்றி, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததாக, தியான மைய ஊழியர் ஜோஸ்வா மற்றும் பாதிரியார் மகிழன் மீது 294 (பி), 420, 417, 506 (1) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

15-10-2023


[1] தினகரன், தூத்துக்குடி அருகே தியானத்திற்கு வந்த சென்னை ஆசிரியையுடன் உல்லாசம் தியான மைய ஊழியர் மீது வழக்கு: தவறாக நடக்க முயன்றதாக பாதிரியார் மீதும் புகார், October 15, 2023, 12:17 am

[2] https://www.dinakaran.com/thoothukudi_teacher_ullasam_meditationcenter_employee_case/

[3] ஐபிசி.தமிழ்நாடு, ஜெபத்திற்கு வந்த ஆசிரியை; பேய் விரட்ட பாதிரியார் செய்த காரியம்போலீசார் வழக்கு பதிவு!, By Jiyath, , October 15, 2023, 12:00 am

[4]  https://ibctamilnadu.com/article/the-priest-sexually-assaulted-teacher-thoothukudi-1697347578

[5] சமயம், பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணிடம் காமக்களியாட்டத்தில் ஈடுபட்ட பாதிரியார்.. அலறும் தூத்துக்குடி, Authored By ஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | Updated: 14 Oct 2023, 12:09 am.

[6] https://tamil.samayam.com/latest-news/crime/christian-priest-in-thoothukudi-sexually-abuses-a-woman-in-the-pretext-of-exorcism/articleshow/104408323.cms

[7] ஐபிசி.தமிழ்நாடு, என்னுடன் பாலியல் உறவு வைத்தால் பேய் போய்விடும்.. பாதிரியாரை நம்பி மொத்தமாக இழந்த ஆசிரியர்!, வினோதினி , October 15, 2023, 12:00 am

[8] https://ibctamilnadu.com/article/church-pastor-harrased-and-faked-a-teacher-1697349355

[9] தினத்தந்தி, பெண்ணின் உடலில் குடியிருந்த பேய்ஆடையை கழட்ட சொன்ன பாதிரியார்போர்வைக்குள் ஜெபம்.. அதிர்ச்சி வீடியோ, By தந்தி டிவி 13 அக்டோபர் 2023 10:28 PM.

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/ed-officials-raid-government-sand-quarry-in-cuddalore-219511?infinitescroll=1

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தூத்துக்குடியே திணறுது.. ஓவர் நெருக்கம்.. டீச்சர் உடம்பை விட்டு போக மறுத்து அடம் பிடிக்கும்பேய்“,  By Hemavandhana Updated: Sunday, October 15, 2023, 10:49 [IST].

[12] https://tamil.oneindia.com/news/tuticorin/thoothukudi-priest-and-why-did-the-school-teacher-complaint-against-the-church-pastor-548165.html

செக்யூலரிஸ, திராவிடத்துவ, பெரியாரிஸ அரசு கிறிஸ்தவ ஆதரவாகப் பேசிவரும் நிலையில், கிறிஸ்தவ பாதிரிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களை செய்து வருவது ஏன்?

ஒக்ரோபர் 2, 2023

செக்யூலரிஸ, திராவிடத்துவ, பெரியாரிஸ அரசு கிறிஸ்தவ ஆதரவாகப் பேசி வரும் நிலையில், கிறிஸ்தவ பாதிரிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களை செய்து வருவது ஏன்?

கிறிஸ்தவ சர்ச்சுகள் பெருகுவது, பெருக்குவது அவர்களது பலத்தை அல்லது பலவீனத்தைக் காட்டுகிறதா?: திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதிகளில் சர்ச்சுகள், சர்ச்சுகளில் பாலியல் விவகாரங்கள், செக்ச் வக்கிரங்கள், பிடோபைல் குற்றங்கள் என்று வகைவகையாக சட்டமீறல்கள் செய்திகளாக வருவது சகஜமாகி விட்டது. இதற்கு சர்ச்சுகளோ, கிறிஸ்தவ உயர் தலைவர்கள், முதலியோரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும், இத்தகைய செக்ஸ் வக்கிரங்களைத் தடுக்க வேண்டும் என்ற அமைப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேன்மேலும் அத்தகைய குற்றங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன்,39 வயதானவர்[1]. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். குமரி மாவட்டம் தச்சநல்லுாரில், அருணாச்சலம் என்பவரது இடத்தில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார், போதகம் நடத்தி வருகிறார்[2]. இவ்வாறு ஆளுக்கு ஆள் ஏதோ சர்ச்சை ஆரம்பித்து, தங்களது வேலைகளை செய்யலாம், எந்த கட்டுப்பாடும் இல்லையா போன்ற விவகாரங்களும் புரிவதில்லை.

குறிப்பிட்ட விதவை பெண்ணை தொல்லைக்கு உண்டாக்கியது: இருப்பினும், ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஆட்கள் வருவது, அல்லேலுயா என்று கத்துவது, போன்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தனியாக தொலைவில், ஒரு இடத்தில் நடக்கும் பட்சத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. சுற்றிலும் வீடுகள் இருந்து, மற்றர்களுக்கு தொந்தரவு ஆகும் பட்சத்தில் புகார் கொடுக்கப் படுகிறது. இங்கு, வழிபாட்டிற்கு வந்த, 39 வயது / 40 வயது பெண் வந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்பொழுது, அப்பெண்ணின் தொடர்புக்கு என்று மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார்[4]. முதலில் சாதாரணமாக பேசி வந்தாராம். அப்பெண்ணும் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற பெண்களை விடுத்து, இந்த பெண்ணை ஏன் குறி வைத்தார் என்பதெல்லாம் கடவுளுக்கும், பாதிரியாருக்கும் தான் தெரியும் போலிருக்கிறது. கடவுளை நம்பும் இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா, எப்படி பெண்களை இவ்வாறு கொடுமைப் படுத்துகின்றனர் என்பதும் புரியவில்லை.

பாதிரி பாலியல் தொல்லை கொடுத்த விதம்: பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்[5]. அதாவது விதவைகளுக்கு அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பதை சர்ச் ஏற்கிறதா என்பதையும் ஆராய வேண்டியுளளது. “சொசைடி ஆப் ஜீசஸ்” போன்ற பாதிரிகளுக்கு விதவைகளை குறி வைக்க வேண்டும் என்று குறிப்புகள் இருப்பதாக எடுத்துக் காட்டப் படுகிறது. நாளுக்கு நாள் இந்த டார்ச்சர் அதிகமாகிய போது, மனமுடைந்த வாழ்க்கையில் வெறுப்படைந்தாள்[6]. பெண், 30-09-2023 சனிக்கிழமை அன்று 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்[7]. இந்த அளவுக்கு நடந்திருக்கிறது எனும் பொழுது, அப்பாதிரி எப்படி பொறுப்பற்ற முறையில் இருந்துள்ளான் என்பதும் நோக்கத் தக்கது. வீட்டில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை, உறவினர்கள் மீட்டி, ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்[8]. ஆக, இங்கிருந்து தான் உண்மை வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆனால், முழு செய்திகள் வெளிவராதலால், அவை மறைக்கப் படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.

தேடப் பட்ட பாதிரி மாட்டிக் கொண்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும்: அந்த பாதிரியாரின் பாலியல் தொல்லைப் பற்றி, இது குறித்து தச்சநல்லூர் போலீஸாரிடம் புகார் கொடுக்கப் பட்டது[9]. முதலில் அந்த ஆள் காணவில்லை, போலீசார் தேடி வந்தனர், என்றெல்லாம் செய்திகள் வந்தன[10]. பிறகு, மாட்டிக் கொண்டான், கைது என்று செய்திகள் வெளியிடப் பட்டன[11]. விசாரணை நடத்திய பிறகு, பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் தற்கொலைக்குத் தூண்டியதாக, போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது செல்போன் பரிசோதனை செய்யப் பட்டது, தொந்தரவு செய்தது நிரூபனம் ஆனது, மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டு வந்தது, போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டது எல்லாம் புரிந்து கொள்ளலாம். அதே போல, இந்த பாதிரியாரை குறிப்பிட்ட சர்ச் தள்ளிவைத்ததா இல்லையா, இந்த ஆபாசத்திற்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது என்பதெல்லாம், கர்த்தர், மேரி, ஜோசப் அல்லது எந்த அப்போஸ்தலர் யார் என்று தெரியவில்லை.

செக்யூலரிஸ தமிழகமா, நாத்திக இந்துவிரோதமா, கிறிஸ்தவ ஆதரவா?: சமீபத்தில் வரை தொடர்ந்து தமிழக சபாநாயகர், முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், இந்து அறநிலைய அமைச்சர் உட்பட கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக அதே நேரத்தில் இந்துமதத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். அந்நிலையில், எப்படி கிறிஸ்தவர்கள் இத்தகைய குற்றங்களை செய்து வருகிறார்கள் என்று அவர்களால் விளக்கம் அளிக்க முடியுமா, விளக்கம் அளிப்பார்களா? செக்யூலரிஸம் எனும்பொழுது, அவர்களது நாத்திகம் இந்துவிரோதமாகத் தான் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது, இவ்வாறு மற்ற பல விவகாரங்களிலும் அதே போக்குக் காணப் படுகிறது. நாத்திகம், பெரியாரி\சம் பேசும் தமிழக அரசு, அப்படியே செக்யூலரிஸத்துடன் செயல்பட்டால், எல்லோருக்கும் நல்லது.

© வேதபிரகாஷ்

02-10-2023


[1] தமிழ்.கெட்.லோகலாப், நெல்லை: பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த பாதிரியார், By MEERAN, Oct 02, 2023, 11:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thirunelveli/nellai-city/the-priest-who-disturbed-the-woman-11620865

[3] தினமலர், பாலியல் தொல்லை: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: அக் 02,2023 07:31

[4] https://m.dinamalar.com/detail.php?id=3446649

[5] மாலைமலர், 40 துாக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்ற பெண்போனில் ஆபாச தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது புகார், அக்டோபர் 1, 2023, 4.35 PM

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-teachers-continue-protest-as-talks-with-minister-fail-669754?infinitescroll=1

[7] தமிழ்.இந்தியா.ஒன், தினமும் செல்போனில் அந்த மாதிரி பேசி டார்ச்சர்தூக்கமாத்திரையை போட்ட பெண்.. வசமாக சிக்கிய பாதிரியார், By Velmurugan P Updated: Monday, October 2, 2023, 13:17 [IST]

[8] https://tamil.oneindia.com/news/thirunelveli/harassing-woman-who-came-to-worship-by-talking-on-cell-phone-nellai-priest-arrested-544349.html

[9] தினத்தந்தி, பெண் தற்கொலை முயற்சி; மத போதகருக்கு வலை வீச்சு, அக்டோபர் 2, 2023, .02.53 PM

[10] https://www.dailythanthi.com/News/State/female-suicide-attempt-attack-on-the-religious-teacher-1064475

[11] சமயம், நெல்லையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடும் பெண்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 2 Oct 2023, 3:56 pm

[12] https://tamil.samayam.com/latest-news/tirunelveli/the-woman-attempted-suicide-due-to-the-priest-who-sexually-molested-her-in-nellai/articleshow/104106584.cms

லியோ ஸ்டான்லி பாலியல் விவகாரம் – போக்சோ சட்டம் – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அந்த உதவி பேராசிரியரை சஸ்பெண்ட் செய்தது!

செப்ரெம்பர் 10, 2023

லியோ ஸ்டான்லி பாலியல் விவகாரம் – போக்சோ சட்டம் – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அந்த உதவி பேராசிரியரை சஸ்பெண்ட் செய்தது!

செயின்ட் ஜோசப் கல்லூரி லியோ ஸ்டான்லி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது: திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபலமான தனியார் கல்லூரி – செயின்ட் ஜோசப் கல்லூரி – ஒன்று செயல்பட்டு வருகிறது. இச்செய்தியை சில ஊடகங்களே வெளிட்டன என்றாலும், கல்லூரி பெயரைக் குறிப்பிடாமல், தனது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது, அந்த ஊடகத்தின் பின்னணியும் காட்டுகிறது எனலாம். ஆனால், வெளியில் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். போக்சோ சட்டத்தைப் பொறுத்த வரையில், பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள் தான் வெளியிடக் கூடாது. ஆனால், குற்றம் சாட்டப் பட்ட, குற்றவாளிகளின் அடையாளங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக லியோ ஸ்டான்லி / லியோ ஸ்டான்டலி / லியோ ஸ்டாண்டலி என்பவர் ரசாயனவியல் துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது படிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள், திறமைகள் என்று ஆறு பக்கங்களுக்கு விவரங்களைக் கொடுத்திருப்பதை, அக்கல்லூரி இணைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இருப்பினும்,  இவன் தான் இத்தகைய குற்றத்தை செய்திருக்கிறான்.

கிறிஸ்தவ ஊழியம் செய்தேன் என்று பெருமை பேசும் இவன் இத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது: கிறிஸ்தவ ஊழியம் செய்தேன், குழந்தைகளுடன் வேலை செய்தேன் என்றெல்லாம் பெருமைப் பீழ்த்திக் கொள்ளும் இந்த ஆள்[1] இத்தகைய பெண்டாளும் வேலைகளிலும் வல்லவன் என்பது போல பாலியலில் ஈடுபட்டுள்ளான். “இக்னேசிய கல்விமுறைகள் மூலம் எனது கற்பித்தலில் இக்னேசிய மதிப்பைக் கொண்டிருப்பதன் மூலம் இளம் மாணவர்களை மற்றவர்களுக்கு ஆண்களாகவும் பெண்களாகவும் உருவாக்குவதில் ஜேசுயிட்களின் பணியில் நான் பங்கேற்கிறேன்.”. ஒருவேளை “பீடோபைல்”  வகையறாவும் இருக்குமோ என்று தெரியவில்லை. கிறிஸ்தவ இறையியல் இவர்களுக்கு நல்ல ஒழுக்கம் முதலியவற்றைக் கொடுக்காமல், இவ்வாறு பாலியல் குற்றங்களை செய்ய எவ்வாறு ஊக்குவித்தது என்று தெரியவில்லை. இன்றைக்கு பெரும்பாலான கிறிஸ்தவ கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று பலர் அடிக்கை செக் குற்றங்களில் மாட்டிக் கொள்வது, செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பாலியல் விவகாரங்களால் புகார் எழுந்தது: இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் லியோ ஸ்டான்லி பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[2]. ஏதோ இன்னும் நிரூபிக்கப் படவில்லை போன்ற ரீதியில் காமதேனு செய்தி வெளியிட்டுள்ளது[3]. தாயும்-மகளும் எப்படி மாட்டிக் கொண்டனர் என்பதும் புதிராக உள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார்[4]. ஆக, இப்பிரச்சினை எத்தனை காலமாக இருந்தது என்று ஊடகங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது[5]. இது பிரச்சினை வெளியே வரக்கூடாது என்பதாலா அல்லது கிறிஸ்தவ நிறுவனம் தனது பாலியல் குற்ரங்களை மறைக்க போட்ட திட்டமா என்றும் கவனிக்க வேண்டியுள்ளது.

மாணவி தற்கொலை முயற்சியால், விசாரணை நடந்தது, பாலியல் சதாய்ப்பு மெய்ப்பிக்கப் பட்டது: இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார்[6]. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி காப்பாற்றப்பட்டார்[7]ஆக, ஆஸ்பத்திரி ஆவணங்களில் சிகிச்சை, சிகிச்சை  விவரங்கள் முதலியனவும் பதிவாகி இருக்கும். அந்நிலைகளிலும் செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அதாவது, ஊடகஙளுக்குத் தெரியாமல் மறைத்தனரா அல்லது சரிகட்டினரா என்று தெரியவில்லை. சிவசங்கர் பாபா, கலாக்ஷேத்திரா போன்ற விசயங்கள், ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக தினம்-தினம் செய்திகள் வெளியிட்டு வந்தன. டிவிசெனல்களில் விவாதங்களையும் நடத்தின. ஆனால், இவ்விசயத்தில் ஒன்றும் தெரியாதது போல அமைதியாக இருந்த போலும். அக, இங்கு, மாணவி தற்கொலை முயற்சிக்குச் சென்று, ஆஸ்பத்திரியில் அனுமதி செய்யப் பட்டு, சிகிச்சை பெற்றதால், விவகாரம் வெளிவந்து விட்டது என்று தெரிகிறது.

தாய்மகள் என்று பாராமல், இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தது: இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டியினர் விசாரணை நடத்தினர்[8]. அப்படியென்றால் கமிட்டி உறுப்பினர்களும் தெரிந்திருக்கிறது. கல்லூரி கோப்புகளிலும் பதிவாகி இருக்கிறது. அப்போது, மாணவிக்கும், அவரது தாயாருக்கும், உதவி பேராசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்தது உண்மை என தெரியவந்தது[9]. இவையெல்லாம் எத்தனை மாதங்களாக நடந்தன என்பதையும் ஊடகங்கள் குறிப்பிடவில்லை. மேலும் அவன் மற்ற மாணவிகளிடமும் அவ்வாறு நடத்திருக்கிறான் என்று தெரிய வருகிறது[10]. ஆனால், அவ்விவகாரங்கள், விவரங்கள் தெரியவில்லை, கொடுக்கப் படவில்லை. இதையடுத்து உதவி பேராசிரியர் லியோ ஸ்டான்லியை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து[11]  பணியிட நீக்கம் செய்து கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது[12] என்று இப்பொழுது செய்தி வந்துளளது. சரி, அவன் ஏன் கைது செய்யப் படவில்லை என்றும் தெரியவில்லை. பாலியல் குற்றங்கள் கூட பாரபட்சமாகத்தான் போலீசாற், நீதிமன்றங்கள் முதலியவை கையாண்டு வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்லலாம். மேலும் சாதி ரீதியில் செல்லும் இப்பிரச்சினை விசிக மற்றும் பாமக கையில் எடுத்திருப்பதால், அரசியல் மயமாக்கப் படும் என்றும் தெரிகிறது.

இவ்விவகாரத்தில் ஊடகங்கள் அமைதியாக இருப்பது: இக்கல்லூரி பாலியல் குற்றங்களில் சிக்குவது சகஜமாகி விட்டது போலிருக்கிறது. 2011ல் கன்னியாஸ்திரி கற்பழிப்பு விவகாரம், பூதாகாரமாகி, பிஷப்பு, பாஸ்டர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டனர். ஆதிக்கம், அரசியல், தாக்கம் முதலியவை இருப்பதனால் பிரச்சினைகளை மறைத்து விடுகின்றனர் போலும். இவ்விசயத்தில் கூட, எல்லைகளை மீறி வெளிவ்ந்த நிலையில், சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. இருப்பினும், முதன்மை ஊடகங்கள் அமைதியாகவே இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

10-09-2023


[1] I take part the mission of the Jesuits in forming the young students as men and women for others by having Ignatian value in my teaching through Ignatian pedagogies. xhttps://www.sjctni.edu/Department/StaffProfile/F12CH90.pdf

[2] காமதேனு, திருச்சி : கல்லூரி மாணவி, தாயாருக்கு பாலியல் தொல்லைபேராசிரியர் சஸ்பெண்ட்!, Updated on : 09 Sep 2023, 5:31 pm

[3] https://kamadenu.hindutamil.in/news/college-student-sex-torture-professor-suspend

[4] இ.தமிழ்.நியூஸ், மாணவிக்கு பாலியல் தொல்லைதிருச்சி ஜோசப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்!, Senthil, September 9, 2023.

[5] https://etamilnews.com/sexsual-harrasement-trichy-professor-suspend/

[6] செய்திப்புனல், திருச்சி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்புகாரால் சிக்கிய அவலம், Kaviya, 09-09-2023 06:01:33 PM.

[7] https://www.seithipunal.com/tamilnadu/professer-arrested-for-harassment-case-in-trichy-sathiram

[8] தினமலர், மாணவிக்கு தொல்லை பேராசிரியர்சஸ்பெண்ட், Added : செப் 10, 2023  01:18.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=3427603

[10]  இதை, “தமிழக அரசியல்” என்ற வார சஞ்சிகை வெளியிட்டுள்ளது. 14-09-2023, பக்கம்.42-43.

[11] தினகரன், திருச்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்..!!, September 9, 2023, 11:49 am .

[12] https://www.dinakaran.com/trichy_student_sexualharassment_collegeprofessor_suspended/

வினோத் ஜோஸ்வா பாதிரி சிறுமியை வன்கொடுமை செய்து வந்திருக்கிறான், சில ஆண்டுகளுக்குப் பிறகு புகாரின் மீது கைதாகி இருக்கிறான்!

ஜூன் 21, 2023

வினோத் ஜோஸ்வா பாதிரி சிறுமியை வன்கொடுமை செய்து வந்திருக்கிறான், சில ஆண்டுகளுக்குப் பிறகு புகாரின் மீது கைதாகி இருக்கிறான்!

பெந்தகோஸ்தே சர்ச்சில் இன்னொரு செக்ஸ் விவகாரம்: மறுபடியும் இன்னொரு பாதிரி, கற்பழிப்பு, தொடர்ந்து வரும் செய்தி, இதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை என்றாகி விட்டது போலும். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ளது கீழக்கோட்டை கிராமம். இங்கு ஆசிர்வாத சகோதர சபை என்கிற பெயரில் பெந்தேகோஸ்தே தேவாலயம் செயல்பட்டு வருகிறது[1]. பெந்தகோஸ்தே செக்ஸ் கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்து வருகிறது போலும். இப்படி ஆளுக்கு ஆள் ஒரு சர்ச்சைக் கட்டிக் கொண்டு, வருகின்ற பெண்களிடம் இவ்வாறு பாலியல் லீலைகளை செய்து வரருவது வாடிக்கையாகி விட்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் உள்ள வழக்குகளை வைத்து, ஆராய்ச்சி செய்தால், ஒருவேளை இவர்களது எண்ணிக்கை கத்தோலிக்க செக்ஸ் வழக்குகளை மிஞ்சி விடும் போலிருக்கிறது. “ரேப்” பாதிரிகள் ஜாலியாகத் தான் உள்ளனர். பிஷப்புகள் கூட எப்படியோ தப்பித்துக் கொள்கின்றனர்.

2018 முதல் ஜோஸ்வா பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்: இந்த தேவாலயத்தில் வேலூர் மாவட்டம்- எழில்நகர் பகுதியைச்  சேர்ந்த வினோத் ஜோஸ்வா (40) என்பவர் பாதிரியாராக இருந்து வந்தார்[2]. இங்கு கூட, இன்னும் “தேவாலயம்” மாதா கோவில், என்றெல்லாம் குறிப்பிடுவது தமாஷாக இருக்கிறது, சர்ச் என்றே சொல்லி விடலாம். ஏனெனில், கிருத்துவர்களுக்கு மற்றவர்களுக்கு இப்பொழுதெல்லாம் எல்லா விவரங்களும் தெரிந்திருக்கின்றன. 40 வயதாகும் இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்[3]. ஏசு இதையெல்லாம் கண்டுகொள்லவில்லை போலும். “விடுதலை” போன்ற நாளிதழ்களும் அவ்வாறு தலைப்பிட்டு செய்திகள் வெலியிடவில்லை. ஏனெனில், அத்தகைய நாத்திக-இந்துவிரோதிகளுக்கு கிருத்துவர்-துலுக்கர் செய்யும் குற்றங்கள் கண்களுக்குத் தெரியாது, தெரிந்தாலும் கண்டு கொள்ல மாட்டார்கள்.

வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், பயந்துகொண்டு சிறுமி யாரிடமும் சொல்லவில்லை: அதே தேவாலயத்திற்கு அடிக்கடி பிரார்த்தனைக்கு செல்வது அப்பெண்ணின் வழக்கம்[4]. பிறகு, அப்பெண் எப்படி மாட்டிக் கொண்டாள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை இறையியல் சொல்லிக் கொடுக்கிறேன், ஏசுமகிமையைக் காட்டுகிறேன் என்று வசியம் செய்திருப்பான் போலிருக்கிறது. பாவம், சிறிய பெண் மாட்டிக் கொண்டு விட்டாள். மேலும், சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை உடலுறவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது[5]. ஆக, விருப்பப் பட்டு உடலுறவு கொண்டாள் என்றெல்லாம் கூட கதை விடுவார்கள். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால், பயந்துகொண்டு சிறுமி யாரிடமும் சொல்லவில்லை[6]. இதுவும் வழக்கம் போல, மற்ற கற்பழிப்புகளில் வருகின்ற விவகாரம் தான். அப்படியே சொல்லி வைத்தால் போல, செய்தி. தொடர்ந்து நடந்து வருகிறது எனும்பொழுது, எப்படி கொஞ்சம் கூட பெற்றோர், உற்றோர், மற்றவர்களுக்கு தெரியாமல் போனது என்பதும் விசித்திரமாக இருக்கிறது.

கல்யாணம் ஆன பிறகும் தொல்லை கொடுத்ததால் புகார் கொடுத்த பெண்: இந்த நிலையில், 18 வயது பூர்த்தியடைந்த அப்பெண்ணுக்கு கடந்தாண்டு திருமணமானது[7]. எப்பொழுது 18 வயது வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது போல இருக்கிறது. இப்படி இந்த ரத்தின சுருக்கமான செய்தி, பல விவரங்கள், விவகாரங்கள், உண்மைகளை மறைக்கின்றது என்பது நன்றாகவே தெரிகிறது. தொடர்ந்து நடக்கும் இத்தகைய குற்றங்களை போலீசார் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதோ கிருத்துவர்-மைனாரிடி சமாசாரம் என்று இருப்பதால் தான், இத்தகைய குறறங்கள் தொடர்ந்த நடக்கின்றன. அதிலும், கிருத்துவர்கள் தான் அவ்வாறு ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 2022ல் திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது[8]. தற்போது, 2023ல் அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்[9]. ஆனாலும் விடாத பாதிரியார் வினோத் ஜோஸ்வா, அப்பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்[10]. ருசி கண்ட பூனை விடவில்லை போலும். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்[11].

ஓடிப் போன பாதிரியைத் தேடிப் பிடித்த போலீஸ்: அப்பாடா, இப்பொழுதாவது, தைரியம் வந்து புகார் கொடுத்திருக்கிறார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[12]. இதில் பாதிரியார் வினோத் ஜோஸ்வா, பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான பாதிரியாரை போலீஸார் தேடி வந்தனர்[13]. அதாவது, உடனே, பாதிரி ஓடிவிட்டான் போலும். இதுவும் வழக்கம் போல நடப்பது தான். பாவம், எத்தனை நாட்கள் தேடி வந்தனரோ தெரியவில்லை. ஒரு வேளை இவனைப் பிடிக்க நான்கு போலீஸ் படைகள் ஏற்படுத்தப் பட்டன என்றெல்லாம் செய்திகள் வரவில்லை போலும். இந்த சூழலில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வைத்து பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர்[14]. அதென்ன தொடர்ந்து, “நிலையம் முன்பு வைத்து” கைது செய்வது என்பதும் புரியவில்லை[15]. அதாவது, கோர்ட்டுக்குக் கூட்டிச் சென்று, உத்தரவுடன் செய்திருப்பர் போலும். பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்[16].

சிறையில் அடைக்கப் பட்ட வினோத் ஜோஸ்வா: இப்படியாக, வினோத் ஜோஸ்வா செக்ஸ் விவகாரம் முடிந்து, சிறையில் அடைக்கப் பட்டது. வழக்கம் போல, எல்லா நாளிதழ்களும், இணைதளங்களும் அப்படியே பிடிஐ பாணியில் இச்செய்தியை வெளியிட்டு அடங்கி விட்டன. நக்கீரன் போன்ற அதிரடி புலன் விசாரணைக் காரர்கள் கண்டுகொள்லளவில்லை போலும். தெரிந்திருந்தால், வீடியோ எல்லாம் எடுத்திருப்பர். சன் குழுமத்தில் தினம்-தினம் செய்தியாக போட்டிருப்பர். முன்பு நித்தியானந்தா விவகாரத்தை மிஞ்சும் வகையில் லெனின் வீடியோ எடுத்திருப்பார். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை.

© வேதபிரகாஷ்

21-06-2023


[1] தினமலர், சிறுமிக்கு தொந்தரவு: பாதிரியார் கைது, Added : ஜூன் 20, 2023  01:19

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3352561

[3] டிவி.பாரத், பாலியல் வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?, Published: 23 hours ago

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thoothukudi/a-priest-was-arrested-for-sexually-harassing-a-woman-at-keezhakottai-near-ottapidaram-thoothukudi/tamil-nadu20230619214847881881272

[5] பாலிமர் செய்தி, தேவாலயத்துக்கு வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ர்த பாதிரியார் போக்சோவில் கைது, ஜூன்.19, 2023, 03;18:30 மாலை

[6] https://www.polimernews.com/dnews/204478

[7] தமிழ்.சமயம், 15 வயதிலிருந்து பாலியல் தொல்லை.. விடாது துன்புறுத்திய பாதிரியார்.. தூத்துக்குடி பெண் பரபரப்பு புகார்!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 19 Jun 2023, 4:15 pm

[8] https://tamil.samayam.com/latest-news/thoothukudi/priest-arrested-for-sexually-harassing-woman-in-thoothukudi-has-created-a-stir/articleshow/101107092.cms

[9] காமதேனு, 5 வருடம் பாலியல் பலாத்காரம்; தொல்லை தாங்காமல் இளம்பெண் புகார்: சிக்கிய பாதிரியார், காமதேனு, Updated on : 19 Jun, 2023, 8:50 pm

[10] https://kamadenu.hindutamil.in/crime-corner/pastor-arrested-for-threatening-and-sexually-assaulting-a-young-girl

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஒரு பாதிரியார் செய்யுற வேலையா இது? கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.., Ramya s, First Published Jun 19, 2023, 6:46 PM IST, Last Updated Jun 19, 2023, 6:46 PM IST

https://tamil.asianetnews.com/crime/a-priest-gives-sexual-torcher-to-pregnant-woman-arresed-rwi4uv

[12] https://tamil.asianetnews.com/crime/a-priest-gives-sexual-torcher-to-pregnant-woman-arresed-rwi4uv

[13] தினகரன், இளம்பெண்ணை மிரட்டி 5 ஆண்டாக பலாத்காரம் பாதிரியார் கைது, June 20, 2023, 12:31 am

[14] https://www.dinakaran.com/teenager_bully_rape_priest_arrest/

[15] மீடியான், 14 வயது சிறுமியில் இருந்து தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் போக்ஸோவில் கைது!, Karthikeyan Mediyaan News, 9.10 மாலை

[16] https://mediyaan.com/priest-arrested-pocso-sexually-harassing-woman/

சென்னைஆதம்பாக்கத்தில் இன்னொரு கிறிஸ்தவபிடோபைல் அல்லது சிறுமிகற்ப்பழிப்பாளி கைது!

நவம்பர் 9, 2022

சென்னை-ஆதம்பாக்கத்தில்இன்னொருகிறிஸ்தவ-பிடோபைல்அல்லதுசிறுமி-கற்ப்பழிப்பாளிகைது!

ஶ்ரீலங்கா பாதிரி ஆதம்பாக்கத்தில் 2007ல் சர்ச் ஆரம்பித்தது: ஆதம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அதாவது சர்ச்சில் கடந்த 4 வருடங்களாக இலங்கையை சேர்ந்த ஷெரால்டு மனோகர் / பாஸ்டர் ஷெர்ரார்டு மனோகர் (55), பாதிரியாராக இருந்துள்ளார்[1].  லங்கையைச் சேர்ந்தவர் எப்படி இங்கேயே தங்கிவிட்டதுடன், பாஸ்டராகவும் இருக்கிறார் என்று தெரியவில்லை. இவரது பேஸ்புக், தான் வசிக்கும் ஊர்: சென்னை, இந்தியா சொந்த ஊர்: Nuwara Eliya Town, Sri Lanka; திருமணமானவர்; பேஸ் புக்கில் சேர்ந்தது: அக்டோபர் 2009[2] மற்றும் “ஜீசஸ் மைரிகள்ஸ் மினிஸ்ட்ரி” என்ற சர்ச்சை 2007ல் நிறுவி தனது மனைவி ஹெலன் மூலம் ஆதம்பாக்கம், சென்னையில் நடத்தி வருவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது[3]. ஆக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச் நடத்தி வருவது தெரிகிறது. தவிர ஏகப் பட்ட வீடியோக்களும் காணக் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் தினத்தந்தி – ஆங்கிலத்தில் டிடி.நெக்ஸ்ட் என்ற இணைதளம் செய்தியை வெளியிட்டுள்ளது[4]. இதையெடுத்து மற்ற ஆங்கில இணைதளங்கள் வெளியிட ஆரம்பித்துள்ளன[5]. அதாவது, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் விவகாரங்கள் என்றால், முடிந்த வரையில் அமுக்கலாக, அமைதியாக இருந்து விட வேண்டும் என்று தான் ஊடகங்கள் விரும்புகின்றன. பிரேமானந்தா முதல் நித்தியானந்தா, சிவசங்கர் பாபா வரை குதித்த ஊடகங்கள் இப்பொழுது என்ன செய்து கொன்டிருக்கின்றன என்று தெரியவில்லை.

கடந்த 6 மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது: இவர் தனது கிறிஸ்துவ சபைக்கு வரும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன் அவரது வாட்ஸ் அப்பிற்கு ஆபாச படம் அனுப்பியுள்ளார்[6]. கடந்த 6 மாதங்களாக, அதாவது மே 2022லிருந்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த நிலையில் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து வந்துள்ளார்[7]. அவரின் இந்த செயலுக்கு அவரது மனைவி ஹெலன், கார் ஓட்டுநர் ஜீவாஜேக்கப், வீட்டு வேலைக்காரப்பெண் விஜயலட்சுமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்[8]. ஆதலால், முதலில் இவர் மீது புகார் கொடுக்க யாரும் முன்வரவில்லை[9] என்று டிடினெக்ஸ்ட் தெரிவிக்கிறது. மிரட்டப் பட்டது, உடனடியாக அடங்கி விட்டனர் என்றால், பிரதிபலன் என்ன என்பது ஆராயலாமே? அவ்வாறு அமைதியாகி விடுவார்களா. சேத்துப் பட்டு கிருத்துவ பள்ளி வழக்கிலும் இதே மாதிரி நடந்துள்ளதை கவனிக்கலாம். இதிலிருந்து, வழக்கம் போல, இத்தகைய கிருத்துவக் கும்பல்கள் பாலியலை திட்டமிட்டே செய்து வருகின்றன என்பது புலனாகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி செய்வதறியாது திகைத்து நின்றது, சிறுமியின் பாட்டி புகார் கொடுக்க முடிவு எடுத்தது: இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில் கிறிஸ்துவசபை ஊழியர் மூலம் இந்த தகவல் சிறுமியின் பாட்டிக்கு தெரிய வந்தது. பிறகு பெற்றோர் இல்லையா, அவர்கள் என்ன செய்தனர், பாதிரியை ஏன் கேட்கவில்லை போன்ற விவரங்களு தெரியவில்லை. இதனையடுத்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிரியார் ஷெர்ரார்டு மனோகர் மீது சிறுமியின் பாட்டி புகார் அளித்தார். பாதிரியார் ஷெரால்டு மற்றும் அவரது மனைவி மீது மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்[10] என தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல, பிடிஐ. பாணியில் கட்-அன்ட்-பேஸ்ட், அல்லது ஒரு-சில வரிகளில் செய்திகளை வெளியிட்டு அமைதியாகின்றன அல்லது அமுக்கி விடுகின்றன. 

சிறுமியின் பாட்டி புகார் கொடுத்ததால் இப்பொழுது நடவடிக்கை: புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாதிரியாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்[11].  விசாரணையில் கடந்த 6 மாதங்களாக சிறுமிக்கு செல்போன் மூலமாகவும் நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது[12]. செல்போனை போலீசார் எப்படி ஆராய்ந்தனர், சைபர் கிரைம் குழுவினர் மேலும் என்ன தகவல்களை கண்டறிந்னர் போன்ற விவரங்களும் தெரியவில்லை. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கிறிஸ்தவ பாதிரியாரின் மனைவியையும் போலீசார் போக்சோ சட்டத்தில் திங்கட்கிழமை 07-11-2022 அன்று கைது செய்தனர்[13]. போக்சோ சட்டத்தில் கைதான இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்[14]. தலைமறைவாக உள்ள கார் ஓட்டுநர் ஜீவாஜேக்கப், வேலைக்காரப் பெண்மணி விஜயலட்சுமி ஆகியோரை தேடிவருகின்றனர்[15].

மேலும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வரும் பல சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதற்கு மேலாக விவரங்கள் தெரியவில்லை. ஆக பலமுறை, பல ஆண்டுகளாக இப்பிரச்சினை பாலியல் குற்றம், இறுமியர் கற்பழிப்பு, பிடோபைல் போன்ற வக்கிரங்களை எடுத்துக் காட்டியும், தொடர்ந்து அவை நடந்துக் கொண்டிருக்கின்றன. இதுவும் மிகக் கொடுமையான சமூகத் தீவிரவாதம் ஆகும். ஜிஹாதி, தாலிபான், அல்-கொய்தா போன்ற பயங்கரவாத-தீவிரவாதங்கள் குண்டுவெடிப்பு வன்முறைகள் மூலம், அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றன. இந்த கிருத்துவ செக்ஸ்-கற்பழிப்பாளி தீவிரவாதிகளோ உலகம் முழுவதும் பல, ஒருவேளை லட்சக் கணக்கான சிறுமியர், சிறுவர், இளைஞர்களை அத்தகைய பாலியல் தொல்லை, சதாய்ப்பு மற்றும் குற்றங்களுக்கு ஈடுபடுத்தி வருகிறார்கள். இது என்று சரிசெய்யப் படும் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

09-11-2022


[1] தினமலர், சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியார் மனைவியுடன் கைது Added : நவ 07, 2022 23:38…

[2] https://m.facebook.com/sherrard.manohar/

[3] Founded in 2007 by Sherrard Manohar assisted by his wife Helen Sherrard, Jesus Miracles Ministries, No: 14b , south sector, 4th street, adambakkam, Chennai, India, Tamil Nadu

[4] A pastor and his wife from Sri Lanka who allegedly sexually assaulted a 16-year-old girl in Adambakkam, Chennai were arrested on Monday (07-11-2022). The accused Sherod Manohar (58) and his wife Helen (55) hailing from Sri Lanka came to Chennai a few years ago and ran a church in Adambakkam. Sources said the pastor used to misbehave with young women and children, who are visiting the church, and his wife, Helen, would also favour him. However, no one was coming forward to file a complaint against the pastor. A few days ago, the grandmother of the 16-year-old girl filed a complaint at the Madipakkam all-women police station accusing the pastor of sexually assaulting the girl. The police who visited the spot held inquires on Monday. After confirming that Manohar has sexually assaulted children, the police arrested him. His wife Helen was also arrested for supporting him in the crime. The police registered a case under Pocso Act and during the inquiry, they found that the couple has misbehaved with many women and children. Police is also investigating an allegation that a 24-year-old woman was sexually harassed by pastor.

Dt.Next, Pastor, wife from Lanka held for sexually assaulting Chennai girl, Dt Next Bureau, Published on : 8 Nov, 2022, 10:54 am

https://www.dtnext.in/city/2022/11/08/pastor-wife-from-lanka-held-for-sexually-assaulting-chennai-girl

[5] Tech poter, Lanka pastor and wife detained for sexually assaulting Chennai girl | Tech Spoter, November 9, 2022 by Tech Spoter

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3164649

[7] காமதேனு, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியார், மனைவியுடன் கைது, Updated on : 8 Nov, 2022, 10:37 am.

[8] https://kamadenu.hindutamil.in/national/sexual-harassment-of-16-year-old-girl-priest-along-with-wife-arrested-in-poxo

[9] . Sources said the pastor used to misbehave with young women and children, who are visiting the church, and his wife, Helen, would also favour him. However, no one was coming forward to file a complaint against the pastor.

Dt.Next, Pastor, wife from Lanka held for sexually assaulting Chennai girl, Dt Next Bureau, Published on : 8 Nov, 2022, 10:54 am

https://www.dtnext.in/city/2022/11/08/pastor-wife-from-lanka-held-for-sexually-assaulting-chennai-girl

[10] நியூஸ்.18.தமிழ், சிறுமியிடம் அத்துமீறிய கிறிஸ்தவ மதபோதகர்! – உடந்தையாக இருந்த மனைவியும் போக்சோவில் கைது!, செய்தியாளர்: வினோத், LAST UPDATED : NOVEMBER 07, 2022, 17:41 IST

https://tamil.news18.com/news/chennai/chruch-father-and-his-wife-arrested-in-pocso-for-harassing-girl-child-832308.html

நியூஸ்.டிஎம்.தமிழ், சிறுமியிடம் அத்துமீறிய பாதிரியார் கைது!! , By அருணா 8 Nov 2022 6:30 AM.

https://newstm.in/tamilnadu/–511046?infinitescroll=1

ஜனநேசன், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவுகிறிஸ்தவ மதபோதகரும் அவரது மனைவியும் போக்சோவில் கைது..!, November 8, 2022 Jananesan

[11] https://tamil.news18.com/news/chennai/chruch-father-and-his-wife-arrested-in-pocso-for-harassing-girl-child-832308.html

[12] நியூஸ்.டிஎம்.தமிழ், சிறுமியிடம் அத்துமீறிய பாதிரியார் கைது!! , By அருணா 8 Nov 2022 6:30 AM.

[13] https://newstm.in/tamilnadu/–511046?infinitescroll=1

[14] ஜனநேசன், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவுகிறிஸ்தவ மதபோதகரும் அவரது மனைவியும் போக்சோவில் கைது..!, November 8, 2022 Jananesan

[15] https://www.jananesan.com/27292/

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாசபடம் பார்க்கின்றனர்” – போப் வேதனை – இன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

ஒக்ரோபர் 31, 2022

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனைஇன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

கத்தோலிக்கக் கிறிஸ்தவம் உலகை ஆட்டிப் படைத்தது: கிருத்துவம், குறிப்பாக, கத்தோலிக்க கிருத்துவம், இடைகாலத்திலிருந்து உலகை ஆட்டி படைத்து வருகிறது. காலனிய ஆதிக்கம் மூலமும் ஆதிக்கத்தை செல்லுத்தி வந்தது. உலக யுத்தங்களிலும் நாசத்தை உண்டாக்கி, பிறகு பிரிந்த நாடுகளில் தனது தாக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. பற்பல தொன்மையான நாகரிகங்களை மக்களை அழித்த வரலாறும் உண்டு. ஏனெனில், கத்தோலிக்கம் தான்தான் உண்மையான மதம் என்ற அகம்பாவம், ஆணவம் கொண்டது. இத்தாலியில், வாடிகன் “ஸ்டேன் வித்தின் ஸ்டேட் ஓரு நாட்டிற்குள் இன்னொரு நாடு என்ற ரீதியில் கோலோச்சி வருகிறது. இத்தகைய அதிகார, ஆதிக்க, ஆளுமை கொண்ட நிலையில், போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே அந்தந்த மயக்கங்களில் பற்பல பாவங்களை செய்து வருகிறார்கள் என்பதை, கடந்த காலங்களில் அவரவர் எழுதி வந்த புத்தகங்கள், அறிக்கைக்கள், வாடிகனின் நடபடிகள் என்று பல ஆவணங்களில் பதிவாகியுள்ளதையும் கவனிக்கலாம்.

கத்தோலிக்கத்தில் திருமணம் கூடாது: திருமணம் செய்து கொள்ளக் கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் போதிக்கப் பட்டாலும், கன்னியாஸ்திரிக்கள் விவகாரங்களில் போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே, பல நிலைகளில், பல காலங்களில் வரம்புகள் மீறி காதலில், காமத்தில் ஆண்-பெண் உறவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது சகஜமாகி விட்ட நிலையில், பற்பல சமரசங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அக்காலத்திலேயே “கான்வென்டுகள்” அதற்காக உருவாக்கப் பட்டன. இந்தியாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாவது, கற்பழிக்கப் படுவது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் மாட்டிக் கொள்வது வாடிக்கையான விவகாரங்களாகி விட்டன.  கேரளாவில், இது தினம்தினம் செய்திகளாகவும் மாறி விட்டன. இருப்பினும், அத்தகைய பாலியல் குற்றங்கள் பல மறைக்கப் படுகின்றன, செய்திகளில் வெளிவந்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாக சரிகட்டப் பட்டு, அமுக்கப் படுகின்றன. சில நாட்களில், பொது மக்களும் அவற்றை மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறது.

வாடிகனே அத்தகைய குற்றங்களில் பாதிக்கப் பட்டுள்ளது: பொருளாதார குற்றங்கள் சாதாரணமாக உள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் பிடோபீலியா, போர்னோகிராபி, ஓரின சேர்க்கை, என்று பலவித உருவங்களில் நவீன காலங்களில் அதிகமாகியுள்ள. இவையெல்லாம், போப் அவ்வப்பொழுது விவாதித்து வருகிறார். அறிக்கை-ஆணைகள் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது, வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது[1]. இத்தகைய கூட்டங்கள், மாநாடுகள், உரையாடல்கள் நடப்பது சாதாரணமான விசயங்கள் ஆகிவிட்டன. அப்போது பேசிய அவர், “இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது[2]. மேலும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகள்,” அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்[3]. செல்போன் உபயோகம் பற்றி வாத-விவாதங்கள் நடந்த போது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரிக்கள் அவற்றில் மூழ்கியுள்ளார்கள் என்றும், போர்னோகிராபி என்கின்ற மோசமான ஆபாசப் படங்களைப் பார்த்து வருகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சாத்தான் இப்பொழுதெல்லாம், ஆப்பிள் கொடுத்து தான் வரவேண்டும் என்பதில்லை, “ஆப்பிள்” மூலமும் வந்டு கொண்டிருக்கிறான். இனைதளம், ஆன்லைனில் வருகிறான், சாபிட வைக்கிறான், ஆதிக்கம் செல்லுத்துகிறான்.

கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை: அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை[4]. ஏனெனில், அடக்கி வைக்கப் பட்ட இயற்கையான பெண்ணின் காமம், இதனால், எளிதில் தூண்டப் படுகிறது. செயல்பாட்டில் இறங்கும் போது, சுய-இன்பம் என்று ஆரம்பித்து, ஒரு ஆடவனுடன் புனைய காமம் தலைத் தூக்குகிறது. இதை இயற்கையாக உண்டாவதால், தடுக்க முடியாது. இதனால், பெண்மை சீரழிகிறது, ஏசுகிறிஸ்துவின் பந்தம் அறுபடுகிறது, சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது[5]. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்றெல்லாம் விளக்கி கூறினார், வருத்தப் பட்டார்[6]. ஆனால், அதே நேரத்தில், பிடோபிலியா, ஓரின சேர்க்கை, கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதனையும் கவனிக்க வேண்டும். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்[7].

இன்டெர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?: தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்[8]. நல்ல இதயங்களில் தினமும் ஏசுவை வரவழைத்துக் கொள்ள வேண்டும், ஆனால், இத்தகைய விவகாரங்களை அல்ல.  மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[9]. கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்கள் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்[10].  ஆபாசப் படங்களை போனிலிருந்து, நீக்கிவிடலாம்,  ஆனால், இன்டர்நெட் இருக்கும் வரை பார்த்துக் கொண்டு தானே இருப்பார்கள். இது போப்பிற்குத் தெரியாடா என்ன, பிறகு, செல்போன் தடை செய்ய முடியுமா. கம்ப்யூட்டர், லாப்டாப், போன்றவை உபயோகப் படுத்தக் கூடாது என்று ஆணையிட முடியுமா?

போர்னோகிராபி சமூகத்தை சீரழிக்கிறது: ரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் அலவித பிரச்சினைகள், விவகாரங்கள் அலசப் படும். குறிப்பாக, உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப் படவேண்டும், மதமாற்றம் செய்யப் படவேண்டும், அதர்கு ஊழியர்கள் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவர். அதற்கான திட்டங்கள், வழிமுறைகள், முதலியவை விவாதிக்கப் படும். ஆனால், இப்பொழுது, கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து வருகிறது. அபார்ஷன் / கருக்கலைப்பு சாதாரணமான விசயமாகி விட்டது. பள்ளி சிறுமிகள், மாணவிகள், திருமணம் ஆகாமலேயே கருவுருகிறார்கள், குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், “கன்னித் தாய்களும்” நிதர்சனமாகி விட்டது. அதாவது, கத்தோலிக்கத்தில் அபார்ஷன் கூடாது. அந்நிலையில், கர்ப்பமுற்ற சிறுமி, மாணவி அல்லது திருமணமாகாத இளம் எண் கருவை ஏற்று குழந்தை பெறவேண்டும். இது குடும்பங்களை பாதிக்கிறது. இப்பொழுது, செல்போன் மூலம், போர்ன் படம் ஆர்த்து வருகிறார்கள் உடலுறவு போன்றவை வெளிப்படையாகப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். அவர் கலந்து கொண்ட போது, செல்போன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு பதிலளித்த போப், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக இருக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளதாக தெரிவித்த போப், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

30-10-2022


[1] தினத்தந்தி,கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனை, By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 12:45 PM

[2] https://www.thanthitv.com/latest-news/priests-also-watching-porn-pope-145113

[3] தமிழ்.நியூஸ்.18, ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க‘.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!, Published by: Janvi, First published: October 27, 2022, 19:06 IST   LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:06 IST.

[4] https://tamil.news18.com/news/international/pope-francis-spoke-about-pornography-826115.html

[5] தமிழ்.ஏபிபி.லைவ், Pope Francis : ”கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் வேதனை, By : ABP NADU | Updated : 28 Oct 2022 01:56 PM (IST)

[6] https://tamil.abplive.com/videos/news/world-pope-francis-gets-worried-watch-video-81515

[7] தமிழ்.வெப்.இந்தியா, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படங்களை பார்க்கின்றனர்: போப் வேதனை!, Written By Mahendran, Last Modified, வியாழன், 27 அக்டோபர் 2022 (18:52 IST)

[8] https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/pope-says-about-porn-movie-122102700050_1.html

[9] புதியதலைமுறை, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் பேச்சு,  ஞானி கோவிந்தன்,  Published; 27 October 2022 10;41 PM.

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/149774/Pornography-is-a-vice–even-nuns-and-priests-watch–Pope-Francis

ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் கணக்கு ஆசிரியரா, தலைமை ஆசிரியரா, மதப்பிரச்சாரகரா, தலைமறைவாகும் கோழையா, செக்ஸ்-பாலியல் குற்ற வல்லுனரா?

திசெம்பர் 30, 2021

ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் கணக்கு ஆசிரியரா, தலைமை ஆசிரியரா, மதப்பிரச்சாரகரா, தலைமறைவாகும் கோழையா, செக்ஸ்-பாலியல் குற்ற வல்லுனரா?

கோரோனாவை விட கொடிய நோயைக் கொண்டுள்ள கிருத்துவ பாலியல் குற்றங்கள்-குரூரங்கள்: இது ஏதோ, ஒரு மதத்தைக் குறைகூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் பல நிலைகளில் தமிழகத்திலேயே அதிகமாக நடந்து கொண்டிருப்பதால் எடுத்துக் காட்டப் படுகிறது. கிருத்துவ சர்ச்சுகள், கான்வென்டுகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று எங்கு பார்த்தாலும், பிஷப் முதல் ஆசிரியர் வரை பெண்களைக் குறிவைத்து, பாலியல் தொல்லை செய்வது, காமக் களியாட்டங்களில் ஈடுபடுவது, கற்பழிப்பது என்றெல்லாம் தொடர்ந்து நடந்து வரும் குற்றங்களாக இருக்கின்றன. கேரள ஊதாரங்கள் எல்லைகளைக் கடந்தவை. அவற்றை மிஞ்சுவதாக தமிழக கோக்கோகங்கள் முந்துகின்றன. ஆனால், பொறுப்புள்ள கிருத்துவப் பெரியவர்கள், இவற்றைப் பற்றி கண்டிப்பதாக, விவாதிப்பதாக அல்லது சரிசெய்ய முயற்சிகள் செய்வதாக, தடுப்பதாக தெரியவில்லை. மாறாக அவற்றை மறைப்பது, ஊடகங்களில் கூட செய்திகள் வராமல் காப்பது, வந்தால் சீக்கிரம் அவற்றை அமுக்கி விடுவது, போலீஸ்-வழக்கு வராமல் தடுப்பது, நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் சரிகட்டுவது, என்ற திட்டங்களுடன் செயல்ப்ச்டுவதாகத் தெரிகிறது.

Photo courtesy: https://thennadu.com/?p=14461

தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் ஆசிரியரின் காமலீலைகள், பாலியல் சில்மிஷங்கள்: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு நிதியுதவி பெறும் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது[1]. முன்பு குறிப்பிட்ட சென்னைப் பள்ளிக்கு குதித்தவர்கள், இப்பொழுது மௌனிகளாக இருக்கின்றனர். இங்கு திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் சிறப்பு வகுப்பு எடுத்துள்ளார். அப்போது அவர் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறுப்படுகிறது[2]. மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். மேலும், செல்போனிலும் அரட்டை அடிக்க முயன்றுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி தலைமையாசிரியர் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர், கிறிஸ்டோபர் ஜெயக்குமார் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இவையே, பொதுமானவை. பெண்கள் ஆணையம், பெண்ணிய அமைப்புகள், வீராங்கனைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது, செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வழக்கம் போல மிரட்டி, பணம் கொடுத்து சரிகட்டப் பார்த்தது: ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைமையாசிரியரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்[3]. இந்த சூழலில் 28-12-2021 அன்று மாணவியின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[4].  மேலும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவிகளின் பெற்றோர் கூறியுள்ளனர். சூதாரித்துக் கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அணுகி  இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் இதனை அப்படியே வெளியே தெரியாமல் மறைக்குமாறும் கூறியதாக கூறப்படுகிறது[5].  இது எபிதாஸ் விவகாரம் போன்றே உள்ளது. அவனும் இன்று வரை கைதாகாமல் இருப்பது அதிசயமான நிலைதான். இதையடுத்து   மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி நிர்வாகம் திருநெல்வேலி திருமண்டலம் டயோசீசனுக்கு புகார் தெரிவித்து உள்ளனர்[6]. புகாரின் அடிப்படையில் டயோசீசன் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ்  தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்[7]. தென்னாடு என்ற இணைதளம் தனது செய்தியால் தான் சஸ்பென்ட் என்பது போல போட்டுள்ளது[8]. இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.

Photo courtesy: https://thennadu.com/?p=14461

பள்ளியில் புகார் அளித்து, டையோசீஸ் நடவடிக்கை எடுத்து, பிறகு போலீஸிடம் புகார் கொடுத்து, நீட்டித்தப் படலம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநெல்வேலி சி.எஸ்.ஐ., பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் 51, மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது[9]. உடனே அவர் தலைமறைவானார்[10]. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ டயோசிஷன் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியாகும்.தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார். இவர் பிளஸ் -2 மாணவிகளை செப்டம்பர் முதல் சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளிக்கு வரச் செய்து எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் லட்சக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளார். இதையடுத்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபட போவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி புகாரின்பேரில், கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது திசையன்விளை போலீசார் போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

போலீஸிடம் புகார் கொடுத்தப் ஜெபா என்ற கிறிஸ்டோபர் ஜெயக்குமார் தலைமறைவு: பிறகு 29-12-2021 அன்று அவரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அவர் தலைமறைவானார்[11]. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது[12]. ஆக, இது எதோ வழக்கமான உப்பு-சப்பில்லாத விவகாரம் போலாகி விட்டது என்ற தோறத்தை உண்டாக்குகிறது. கடவுள் நம்பிக்கை, விசுவாசம், சேவை என்றெல்லாம் கிருத்துவர்கள் பறைச்சாற்றிக் கொள்ளும் போது, ஓடி மறைய வேண்டிய அவசியம் என்ன? சமீபத்தில் பிரபல பாடகி புகார் வழக்கில் கூட அந்த மைத்துனர்-கிருத்துவ பிரச்சாரகர் திண்டிவனத்தில் மறைந்து கொள்ள போலீஸார் சென்று கைது செய்தனர். இத்தகைய நிகழ்வுகள் காலந்தாழ்த்தவா, அத்தாட்சிகளை மறைக்கவே, வேறுவிதமான பேரங்கள் பேசவா, அழுத்தம் எடுத்துவர வேற்கொள்ளும் செயல்களா என்பதெல்லாம் அவர்கள் தாம் சொல்லவேண்டும்.

சி.எஸ்.., சர்ச்சுகள் தொடர் சர்ச்சைகளில் ஈடுபட்டுள்ளது: சி.எஸ்.ஐ., பலவிதமான குற்றங்கள், வழக்குகள் என்பதெல்லாம் சாதாரணமான விசயகள் ஆகிவிட்டன. நீதிமன்றங்களில் அறிவிக்கப் பட்ட தீர்ப்புகளை வைத்தே, எந்த அளவுக்கு பிஷப் முதல் மற்றவ்ர்கள் குற்றங்களை செய்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. திருநெல்வேலி டவுன் சி.எஸ்.ஐ., சாப்டர் மேல் நிலைப் பள்ளியில் டிச.17ல் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியாயினர். அதில் கைதான தலைமையாசிரியை உள்ளிட்டவர்கள் உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாலியல் புகாரில் தலைமை ஆசிரியர் தலைமறைவாக உள்ளார், என்று செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன. கைதானாலும் ஜாமீன், வழக்கு இழுப்பு, என்று சில நாட்களில் மறக்கடிக்கப் படும், மறக்கப் படும். பாதிக்கப் பட்ட மாணவிகளும் அவ்வாறே தெரியாமல் மறக்கப் படுவர். ஆனால், அவர்களின் மன-அழுத்தம், பாதிப்பு, தொல்லை முதலிவற்றை அவர்கள் தாம் அனுபவிக்க வேண்டும். மிருகங்கள் வேறு இறையைத் தேடிச் சென்று விடுகின்றன.

© வேதபிரகாஷ்

30-12-2021


[1] நியூஸ்7தமிழ், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் பணியிடை நீக்கம், by Arivazhagan CMDecember 29, 202

[2] https://news7tamil.live/sexual-harassment-of-a-school-student-headmaster-dismissed.html

[3] ஏபிபிலவ், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் தலைமறைவு , By: ரேவதி | Updated : 29 Dec 2021 05:55 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/tirunelveli/sexual-harassment-of-students-3-lakh-to-cover-up-wrongdoing-undercover-headmaster-32809

[5] புதியதலைமுறை, நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் தலைமறைவு, குற்றம், Durai Published :29,Dec 2021 12:45 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/125867/The-headmaster-of-a-government-aided-high-school-who-sexually-harassed-students-has-been-fired–The-headmaster-has-disappeared

[7] தென்னாடு, தென்னாடு செய்தி எதிரொலி: திசையன்விளை பள்ளி ஆபாச தலைமையாசிரியர் சஸ்பெண்ட், By Thennadu -29th December 2021.

[8] https://thennadu.com/?p=14461

[9] தினமலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சி.எஸ்.., பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு, பதிவு செய்த நாள்: டிச 29,2021 23:15

[10] https://m.dinamalar.com/detail.php?id=2925129

[11] தமிழ்.மின்ட், நெல்லை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் தலைமறைவு…!, 29/12/2021

[12] https://tamilmint.com/school-head-master-abscond-after-suspended-from-school-for-sexually-harasssing-students/

மதபோதகர் பெயரில் கொடிகட்டி பறந்த விபச்சாரம், வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம், தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில்?

ஜூலை 14, 2021

மதபோதகர் பெயரில் கொடிகட்டி பறந்த விபச்சாரம், வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம், தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில்?

நித்திரவிளை இருப்பிடம் – நன்றி – கூகுள்

தென்னந்தோப்பில் அமைந்துள்ள ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா: நித்திரவிளை[1] தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு நாகரிகமான நகரமாகும். “ஏசுதேசம்” பகுதியில் உள்ளது என்றும் தெரிகிறது. இது ஒரு வியாபார நகரம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் கேரளா அமைந்துள்ளது. இது மார்த்தாண்டத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவிலும் களியக்காவிளையிலிருந்து 9 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு சாதி மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். லால் என்.எஸ்.ஷைன் சிங்[2] மற்றும் லால் என்.எஸ். சுந்தர் சிங் என்ற இருவரும், “ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா” (Federal Churh of India[3]) என்பதை நடத்தி வருகின்றனர். முந்தையவர் இந்த சர்ச்சை தோற்றுவித்தவரும், தலைவரும் ஆவர். பிந்தையவர் காரியதரிசி மற்று காசாளர் ஆவர். இது இந்திய ஆங்கிலிகன் சர்ச்சுடன் (Diocese of Christ Anglican Church of India) இணைந்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. நித்தியவிளை கேரள மாநில எல்லையில், இர்ய் வர்த்தக ஊராக உள்ளது. பெரும்பாலான பகுதி தென்னந்தோப்புகளாக இருக்கின்றன. மண்காடு போஸ்ட், என்ற இடத்தில் உள்ள ஜோதி காட்டேஜ் என்ற அந்த சர்ச்சின் இருப்பிடமும், ஒரு தென்னந்தோப்பில் அமைந்துள்ளது. மண்காடு என்பது மாங்காடு என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தோட்டத்திற்குள் பிரார்த்தனை கூடம், காட்டேஜ், வீடு முதலியவை அமைந்துள்ளன.

அந்த சர்ச்சைப் பற்றி புகார்கள் எழுந்தது: தனியாக, தென்னந்தோட்டத்தில் குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதி எஸ்டி மாங்காடு பகுதியில் பிரார்த்தனை கூடம், காட்டேஜ், வீடு முதலியவை அமைந்துள்ளன. அங்கு நடக்கும் விசயங்கள் எல்லாம், பொது மக்களுக்கு வினோதமாகத் தான் இருந்திருக்கின்றன. யாரோ யாரோ கார்களில் வந்து போவது தெரிந்தது. ஆனால், ஏன் வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்நிலையில் தான், இந்த வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[4]. இதனையடுத்து நித்திரவிளை போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை மேற்கொண்டனர்[5]. அப்போது, மதப் போதகர் என்ற பெயர் பலகை  வைத்திருந்த வீட்டில் 4 பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் இருந்தனர்[6].  இந்தப் பிரார்த்தனைக் கூடத்துக்கு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து சொகுசு கார்களில் இளம் பெண்களும், ஆண்களும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி வந்து சென்றனர்[7]. அங்கு, தவறான செயல்கள் நடப்பதாக நித்திரைவிளை போலீஸாருக்கு தகவல்களும் ஏற்கெனவே கிடைத்தன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தப் பிரார்த்தனைக்கூடத்தை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்[8]. பிறகு தான் நடவடிக்கையில் இறங்கினர். வீட்டை சோதனை செய்தபோது 19 வயது இளம் பெண், கேரளாவை சேர்ந்த இளம் பெண், நடுத்தர வயது பெண், சிறுவயது பெண் என அறைகுறை ஆடைகளுடன் படுக்கை அறைகளில் ஆண்களுடன் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்[9]. விசாரித்த போது, விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது.




இந்த “ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா” (Federal Churh of India), இந்திய ஆங்கிலிகன் சர்ச்சுடன் (Diocese of Christ Anglican Church of India) இணைந்துள்ளது

போலீஸ் ஷ்டேசனுக்குக் கூட்டிச் சென்று விசாரணை: உடனே அவர்களையும், போதகரான லால் ஷைன் சிங்கையும் நித்திரவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்[10]. அப்போது அவர்கள், களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியை சேர்ந்த ஷைன் 34, மேக்காடு பகுதியை சேர்ந்த ஷிபின் 34, ஞாறான்விளை பகுதியை சேர்ந்த ராணி 55, சுகந்தி 40 என்று தெரிய வந்தது[11]. இந்த வீட்டில் போதகத்திற்கு வருவதுபோல் அடிக்கடி வந்து இளம்பெண்கள், ஆண்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டு செல்வதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சர்ச் வளாகதில், இவ்வாறு விபச்சாரம் நடத்தப் பட்டது, திட்டமிட்டு செய்யப் பட்ட செயலாகவே தெருகிறது. கேரளாவுக்கு அருகில் இருப்பதால், அங்கிருப்பவர், இங்கு ஜாலியாக இருக்க வந்துள்ளதும் தெரிகிறது.  வியாபார நிமித்தம் வந்து செல்பவர்களும் அங்கு தங்கிச் செல்வதும் புலப்படுகிறது.

கையுங்களவுமாக பிடிபட்டு, விசாரணையில் உறுதியானதால் சம்பந்தப் பட்டவர்கள் கைது செய்யப் பட்டனர்: தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் லால் ஷைன்சிங் (43) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. பின்னர் விபச்சாரத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து மேலே குறிப்பிட்டபடி, போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். மேலும் விபச்சாரத்திற்கு பயன்படுத்திய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அக்கார் கேரள பதிவுடன் காணப் பட்டது. சாதரணமாக, கேரள வண்டிகள் வந்து செல்வது சகஜமாக இருந்தாலும், இது விபச்சாரத்திற்கு வந்ததாக இருப்பதனால், போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் நேரடி விசாரணை மேற்கொண்டார். கைது செய்யப்பட்ட 7பேரில் இரண்டு பெண்கள் தாயும் மகளும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 19 வயதுபெண்கள் இருவரும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி என்.எஸ். சைன் சிங் இருந்தது: பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது[12]. தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. நிறுவனர் பழவார் தங்கப்பன், மாநிலத்தலைவர் டிக்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி கிளமன்சியா மேரி, லால் ஷைன்சிங், சுரேஷ், பால்ராஜ், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்[13]. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நிறுவனர் பழவார் தங்கப்பன் போட்டியிட வேண்டும். குமரி மாவட்டம் முழுவதும் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அரசியல் சார்பு, தாக்கம், முதலியவையும் தேவை என்ற போக்கில் இருந்து, செயல் பட்டது தெரிகிறது.

தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில், மதபோதனைபெயரில் பாலியல் தொழில், வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம்என்றெல்லாம் தலைப்பிட்டு செய்திகள் வெளியிடப் பட்டன[14]: இப்படியெல்லாம் தலைப்பிட்டு, செய்திகள் வெளிவந்தாலும், சிறிய அளவில் செய்தி வெளியிடப்பட்டு, பி.டி.ஐ பாணியில், அதே செய்தி தினமலர், தினத்தந்தி, என்று எல்லாம் வெளியிட்டுள்ளன[15]. புதிய தலைமுறை, தினத்தந்தி, வீடியோ வெளியிட்டுள்ளன[16]. ஆனால், விசயம் ஒன்றேதான்[17]. எவ்வாறு சர்ச் வைத்துக் கொண்டு அவ்வாறு நடத்த முடியும், மதபோதனை பெயரில் / தேவாலத்தின் போர்வையில் பாலியல் தொழில் செய்ய முடியும் என்று விளக்கவில்லை[18].  வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம் என்றாலும், திகைப்பாக இருக்கிறது[19].  இப்பகுதிகளில், கிருத்துவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது, மற்றும் பலவித டினாமினேஷன் / இறையியல்-சடங்கு-ஜாதி முறையில் சர்ச் பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த “ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா” (Federal Churh of India), இந்திய ஆங்கிலிகன் சர்ச்சுடன் (Diocese of Christ Anglican Church of India) இணைந்துள்ளது என்று முன்பே குறிப்பிடப் பட்டது. ஆகவே, இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினையா, வேறுவிதமான விவகாரமா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

14-07-2021


[1] Nithiravilai is a small metro city in Kanyakumari district, in Ezhudesam panchayat Tamil Nadu, India. It is a business city which caters its day to day needs and borders the state of Kerala. The Kerala border from the village is approximately 3 km. It is about 14 km from Marthandam and 9 km south to Kaliyakkavilai. The Laccadive sea coast of Arabian Sea is bordering through the coastal fishing towns of Chinnathurai and Thoothur. It is well connected to other nearby towns through roadways.

[2] The founder and the Parish Priest of Federal Church of India in 2009 and it is Registered in 14th September 2015.It is locted in Jyothi Nagar, S T Mangad, Kanyakumari Dist, TamilNadu.

[3] The Federal Church of India which became a Prayer Hall in 2009 had a history of over 6 years before it was upgraded to what it is now – one of the largest Churches in the Kanyakumari, Tamilnadu. To propogate the knowledge of the Bible and Gospel of Jesus Christ among people especially in the Gospel through Literature, Radio, Television, Internet personal Evangelism and such other means which are conductive to attain the objects.

http://www.federalchurchofindia.online/

[4] 360.செய்தி, மதபோதகர் பெயரில் கொடிகட்டி பறந்த விபச்சாரம் : தாய்மகள் உள்பட 7 பேர் கைது, 13 July 2021, 11:01 am.

[5] https://www.updatenews360.com/tamilnadu/kanniyakumari-mother-and-daughter-arrest-for-illegal-sex-work-130721/

[6] சமயம்.காம், ச்சீமதபோதகர் வீட்டில் இப்படியா? –சர்ச் என்ற பேரில் தவறான செயலில் ஈடுபட்டவர்கள் கைது!, Giridharan N | Samayam TamilUpdated: 13 Jul 2021, 05:49:00 PM.

[7] தமிழ்.இந்து, குமரியில் பிரார்த்தனைக் கூடத்தில் பாலியல் குற்றம்: மத போதகர், 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 14 Jul 2021 03:13 AM; Last Updated : 14 Jul 2021 06:24 AM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/692994-pastor-arrested.html

[9] https://tamil.samayam.com/latest-news/kanyakumari/brothel-in-preacher-house-in-the-name-of-church-in-kanyakumari-district/articleshow/84376759.cms

[10] டாப்.தமிழ்.நியூஸ், வெளியே மதபோதகர் போர்டு உள்ளே விபச்சாரம்: ஆண்களுடன் இருந்த தாயும், மகளும் சிக்கினர், By Kathiravan, 13/07/2021 12:22:58 PM.

[11] https://www.toptamilnews.com/282099outside-pastor-board-inside-brothel-mother-and-daughter-caught-up-with-men/

[12] தினமலர், பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட மகாத்மா காந்தி மக்கள் கட்சி முடிவு, பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2020 18:18

[13] http://www.dinamalarnellai.com/web/districtnews/45323

[14] தந்தி.டிவி, தேவாலயத்தின் போர்வையில் பாலியல் தொழில் – 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது, பதிவு : ஜூலை 13, 2021, 10:58 AM.

[15] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/07/13105806/2558393/Kanyakumari-7-arrest.vpf

[16] புதிய.தலைமுறை,மதபோதனைபெயரில் பாலியல் தொழில்: குமரியில் மதபோதகர் உட்பட 7 பேர் கைது,   Web Team Published :13,Jul 2021 12:47 PM.

[17] https://www.puthiyathalaimurai.com/newsview/109398/Including-a-pastor-7-arrested-in-the-skin-trade-at-Kanniyakumari

[18] தினந்தந்தி, வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம்; போதகர் உட்பட 5 பேர் கைது, Added : ஜூலை 14, 2021  08:25.

[19] https://www.dinamalar.com/news_detail.asp?id=2802268