Archive for the ‘தேவ சாமர்த்தியம்’ Category

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாசபடம் பார்க்கின்றனர்” – போப் வேதனை – இன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

ஒக்ரோபர் 31, 2022

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனைஇன்டர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?

கத்தோலிக்கக் கிறிஸ்தவம் உலகை ஆட்டிப் படைத்தது: கிருத்துவம், குறிப்பாக, கத்தோலிக்க கிருத்துவம், இடைகாலத்திலிருந்து உலகை ஆட்டி படைத்து வருகிறது. காலனிய ஆதிக்கம் மூலமும் ஆதிக்கத்தை செல்லுத்தி வந்தது. உலக யுத்தங்களிலும் நாசத்தை உண்டாக்கி, பிறகு பிரிந்த நாடுகளில் தனது தாக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. பற்பல தொன்மையான நாகரிகங்களை மக்களை அழித்த வரலாறும் உண்டு. ஏனெனில், கத்தோலிக்கம் தான்தான் உண்மையான மதம் என்ற அகம்பாவம், ஆணவம் கொண்டது. இத்தாலியில், வாடிகன் “ஸ்டேன் வித்தின் ஸ்டேட் ஓரு நாட்டிற்குள் இன்னொரு நாடு என்ற ரீதியில் கோலோச்சி வருகிறது. இத்தகைய அதிகார, ஆதிக்க, ஆளுமை கொண்ட நிலையில், போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே அந்தந்த மயக்கங்களில் பற்பல பாவங்களை செய்து வருகிறார்கள் என்பதை, கடந்த காலங்களில் அவரவர் எழுதி வந்த புத்தகங்கள், அறிக்கைக்கள், வாடிகனின் நடபடிகள் என்று பல ஆவணங்களில் பதிவாகியுள்ளதையும் கவனிக்கலாம்.

கத்தோலிக்கத்தில் திருமணம் கூடாது: திருமணம் செய்து கொள்ளக் கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் போதிக்கப் பட்டாலும், கன்னியாஸ்திரிக்கள் விவகாரங்களில் போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே, பல நிலைகளில், பல காலங்களில் வரம்புகள் மீறி காதலில், காமத்தில் ஆண்-பெண் உறவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது சகஜமாகி விட்ட நிலையில், பற்பல சமரசங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அக்காலத்திலேயே “கான்வென்டுகள்” அதற்காக உருவாக்கப் பட்டன. இந்தியாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாவது, கற்பழிக்கப் படுவது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் மாட்டிக் கொள்வது வாடிக்கையான விவகாரங்களாகி விட்டன.  கேரளாவில், இது தினம்தினம் செய்திகளாகவும் மாறி விட்டன. இருப்பினும், அத்தகைய பாலியல் குற்றங்கள் பல மறைக்கப் படுகின்றன, செய்திகளில் வெளிவந்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாக சரிகட்டப் பட்டு, அமுக்கப் படுகின்றன. சில நாட்களில், பொது மக்களும் அவற்றை மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறது.

வாடிகனே அத்தகைய குற்றங்களில் பாதிக்கப் பட்டுள்ளது: பொருளாதார குற்றங்கள் சாதாரணமாக உள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் பிடோபீலியா, போர்னோகிராபி, ஓரின சேர்க்கை, என்று பலவித உருவங்களில் நவீன காலங்களில் அதிகமாகியுள்ள. இவையெல்லாம், போப் அவ்வப்பொழுது விவாதித்து வருகிறார். அறிக்கை-ஆணைகள் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது, வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது[1]. இத்தகைய கூட்டங்கள், மாநாடுகள், உரையாடல்கள் நடப்பது சாதாரணமான விசயங்கள் ஆகிவிட்டன. அப்போது பேசிய அவர், “இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது[2]. மேலும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகள்,” அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்[3]. செல்போன் உபயோகம் பற்றி வாத-விவாதங்கள் நடந்த போது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரிக்கள் அவற்றில் மூழ்கியுள்ளார்கள் என்றும், போர்னோகிராபி என்கின்ற மோசமான ஆபாசப் படங்களைப் பார்த்து வருகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சாத்தான் இப்பொழுதெல்லாம், ஆப்பிள் கொடுத்து தான் வரவேண்டும் என்பதில்லை, “ஆப்பிள்” மூலமும் வந்டு கொண்டிருக்கிறான். இனைதளம், ஆன்லைனில் வருகிறான், சாபிட வைக்கிறான், ஆதிக்கம் செல்லுத்துகிறான்.

கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை: அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை[4]. ஏனெனில், அடக்கி வைக்கப் பட்ட இயற்கையான பெண்ணின் காமம், இதனால், எளிதில் தூண்டப் படுகிறது. செயல்பாட்டில் இறங்கும் போது, சுய-இன்பம் என்று ஆரம்பித்து, ஒரு ஆடவனுடன் புனைய காமம் தலைத் தூக்குகிறது. இதை இயற்கையாக உண்டாவதால், தடுக்க முடியாது. இதனால், பெண்மை சீரழிகிறது, ஏசுகிறிஸ்துவின் பந்தம் அறுபடுகிறது, சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது[5]. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்றெல்லாம் விளக்கி கூறினார், வருத்தப் பட்டார்[6]. ஆனால், அதே நேரத்தில், பிடோபிலியா, ஓரின சேர்க்கை, கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதனையும் கவனிக்க வேண்டும். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்[7].

இன்டெர்நெட், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவை தடை செய்ய முடியுமா?: தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்[8]. நல்ல இதயங்களில் தினமும் ஏசுவை வரவழைத்துக் கொள்ள வேண்டும், ஆனால், இத்தகைய விவகாரங்களை அல்ல.  மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[9]. கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்கள் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்[10].  ஆபாசப் படங்களை போனிலிருந்து, நீக்கிவிடலாம்,  ஆனால், இன்டர்நெட் இருக்கும் வரை பார்த்துக் கொண்டு தானே இருப்பார்கள். இது போப்பிற்குத் தெரியாடா என்ன, பிறகு, செல்போன் தடை செய்ய முடியுமா. கம்ப்யூட்டர், லாப்டாப், போன்றவை உபயோகப் படுத்தக் கூடாது என்று ஆணையிட முடியுமா?

போர்னோகிராபி சமூகத்தை சீரழிக்கிறது: ரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் அலவித பிரச்சினைகள், விவகாரங்கள் அலசப் படும். குறிப்பாக, உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப் படவேண்டும், மதமாற்றம் செய்யப் படவேண்டும், அதர்கு ஊழியர்கள் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவர். அதற்கான திட்டங்கள், வழிமுறைகள், முதலியவை விவாதிக்கப் படும். ஆனால், இப்பொழுது, கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து வருகிறது. அபார்ஷன் / கருக்கலைப்பு சாதாரணமான விசயமாகி விட்டது. பள்ளி சிறுமிகள், மாணவிகள், திருமணம் ஆகாமலேயே கருவுருகிறார்கள், குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், “கன்னித் தாய்களும்” நிதர்சனமாகி விட்டது. அதாவது, கத்தோலிக்கத்தில் அபார்ஷன் கூடாது. அந்நிலையில், கர்ப்பமுற்ற சிறுமி, மாணவி அல்லது திருமணமாகாத இளம் எண் கருவை ஏற்று குழந்தை பெறவேண்டும். இது குடும்பங்களை பாதிக்கிறது. இப்பொழுது, செல்போன் மூலம், போர்ன் படம் ஆர்த்து வருகிறார்கள் உடலுறவு போன்றவை வெளிப்படையாகப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். அவர் கலந்து கொண்ட போது, செல்போன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு பதிலளித்த போப், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக இருக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளதாக தெரிவித்த போப், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

30-10-2022


[1] தினத்தந்தி,கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களும் ஆபாச படம் பார்க்கின்றனர்” – போப் வேதனை, By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 12:45 PM

[2] https://www.thanthitv.com/latest-news/priests-also-watching-porn-pope-145113

[3] தமிழ்.நியூஸ்.18, ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க‘.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!, Published by: Janvi, First published: October 27, 2022, 19:06 IST   LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:06 IST.

[4] https://tamil.news18.com/news/international/pope-francis-spoke-about-pornography-826115.html

[5] தமிழ்.ஏபிபி.லைவ், Pope Francis : ”கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் வேதனை, By : ABP NADU | Updated : 28 Oct 2022 01:56 PM (IST)

[6] https://tamil.abplive.com/videos/news/world-pope-francis-gets-worried-watch-video-81515

[7] தமிழ்.வெப்.இந்தியா, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படங்களை பார்க்கின்றனர்: போப் வேதனை!, Written By Mahendran, Last Modified, வியாழன், 27 அக்டோபர் 2022 (18:52 IST)

[8] https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/pope-says-about-porn-movie-122102700050_1.html

[9] புதியதலைமுறை, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆபாச படம் பாக்குறாங்கபோப் ஆண்டவர் பேச்சு,  ஞானி கோவிந்தன்,  Published; 27 October 2022 10;41 PM.

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/149774/Pornography-is-a-vice–even-nuns-and-priests-watch–Pope-Francis

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும், ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! –மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

ஓகஸ்ட் 19, 2022

சி.எஸ்.ஐ / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆனதும் ஜாதியப் பிரச்சினையைத் தூக்கிப் பிடிப்பதும்! – மதமா, ஜாதியமா, இறையியலா, எது?

இறையியல் ரீதியாக கிருத்துவ மதமாற்றம் தோற்றது: கிருத்துவ மிஷினரிகள் இந்தியர்களை / இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற போக்கு, கொள்கை மற்றும் சமூக அடக்குமுறை போர்ச்சுகீசியர் காலத்திலேயே கொடியமுறையில் பின்பற்றப் பட்டு வந்தது. சுதந்திரம் பெற்றப் பிறகு, கோடிக் கணக்கில் இருக்கும் சொத்துக்களை அனுபவிக்க, கத்தோலிக்கம் மற்றும் கத்தோலிக்கர் அல்லாத என்ற பிரிவுகளாகப் பிரிந்து, ஆளுமையை, அதிகாரத்தை, கட்டுப்பாடுகளை தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டனர். பெரும்பாலும், வெள்ளைக்காரர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள், உயர்ஜாதி-கிருத்துவர்கள் என்று தான் பெரிய பதவிகளில் தங்களை நிலைநிறுத்துக் கொண்டு, அனுபவித்து வந்தனர். எஸ்.சி, எஸ்.டி போன்றோரை ஏமாற்றி மதம் மாற்றினாலும், மறுபடியும், சர்ச்சிற்குள் இருக்கும் இறையியல் சித்தாந்த ரீதியில், இருக்க வேண்டிய கட்டுப் பாட்டை அறிந்து-புரிந்து கொண்டனர். “விடுதலை இறையியல்” எல்லாம் பொய்த்துப் போய், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் முடிந்தன. இதனால், சர்ச்சில் இருக்கும் அத்தகைய இறையியல்-ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தனர்.  கத்தோலிக்கக் கிருத்துவ ஆதிக்கத்தினர் மட்டும் ஆதிக்கம், பணம், அதிகாரம் முதலியவற்றை ஐத்துக் கொண்டு, இந்திய ஜாதியம், வர்ணாஷ்ரமம் என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. ஆனால், உண்மை வெளிவந்தது. சூசை தீர்ப்புக் கூட அவர்களது முகமூடியைக் கிழித்தது. இருப்பினும், அம்பேத்கரின் ஆணையினையே எதிர்க்க முற்பட்டனர்.

பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு வர முயற்சி: பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் உள்ள பிரிவை மாற்ற வேண்டும் என்று போலித் தனமாக போராட்டங்களை நடத்தி, திசைத் திருப்பப் பார்த்தது. ஆனால், அது இந்துக்களுக்கு என்பது சட்டரீதியாக எல்லோருக்கும் தெரியும். இதனால், எஸ்.சி மற்றும் மதம் மாறிய எஸ்.சி-கிருத்துவர்களிடையே துவேசம், எதிர்ப்பு, மோதல்கள் கூட ஏற்பட்டன.  இருப்பினும், ஆகஸ்ட் 10 அன்றை கருப்புநாள் என்று கொண்டாடுவோம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். இதனை, பொதுவாக யாரும் கண்டுகொள்வதில்லை என்றாலும், தங்களது அரசியல், பலம், பணம், அனைத்துலக சக்தி முதலியவற்றின் மூலம், இந்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.. பட்டியல் ஜாதியினர் ஜனாதிபதி ஆணை 1950ல் திருத்தம் கொண்டு 2/3 எம்.பிக்களின் ஆதரவு தேவை. ஒரு முறை, பிஜேபி எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து, கையெழுத்துப் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.  எஸ்ரா சற்குணத்திற்குப் பிறகு, இன்னொரு எஸ்.சி கிருத்துவர் பிஷப் ஆவது, அடக்கித் தான் வாசிக்கப் பட்டுள்ளது.

சி.எஸ். / தென்னிந்திய திருச்சபைக்கு எஸ்சி / தலித் ஆயர் / பிஷப் ஆகியுள்ளார்: தென்னிந்திய திருச்சபையின் அங்கமாக மதுரை- இராமநாதபுரம் மண்டல 7வது பேராயராக பாதிரியார் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் 17-07-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டார்[1]. மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பேராயா் ஜோசப்பின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவா் அண்மையில் ஓய்வு பெற்றார்[2]. இதைத்தொடா்ந்து புதிய பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் []Jeyasingh Prince Prabhakaran தோ்ந்தெடுக்கப்பட்டார்.  இவ்விழாவில், சிறப்புத் திருப்பலி ஆராதனையைத் தொடா்ந்து மதுரை-ராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார்[3]. தென்னிந்திய திருச்சபையின் தலைமைப் பேராயா் ஏ.தா்மராஜ் ரசலம் புதிய பேராயருக்கு அருட்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார்[4]. முன்னதாக மதுரை நரிமேடு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தென்னிந்திய திருச்சபையின் மதுரை இராமநாதபுரம் மண்டல பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் முறைப்படி ஆராதனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து திருச்சபையின் பேராயர்கள் அவருக்கு வெள்ளி செங்கோல் மற்றும் மோதிரத்தை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பிற மாநிலங்களை சேர்ந்த 11 பேராயர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்சி / தலித் பிரச்சினை கிருத்துவமத உள்விவகாரம் ஆகிவிட்டது: வின்சென்ட் மனோஹரன் ஒரு தலித் பிஷப்பாக பதவி ஏற்பதை பாராட்டி, அதே நேரத்தில், சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்[5]. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இவ்விசயத்தில் போராட வேண்டும் என்று வற்புருத்தி பேசினார்[6]. ஏற்கெனவே மற்ற சர்ச்சுகளிலும் இப்பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. மதம் மாறி எஸ்சி அந்தஸ்து இழப்பதால், பல கிருத்துவர்கள் அதம் மாறியும், சலுகைக்காக, இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், அடிக்கடி அவர்களுக்குள் பிரச்சினை ஏர்ப்ட்டு மோதல்களில் முடிகின்றன. கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், ஏற்கெனவே எண்ணிக்கை ரீதியில் சலுகைப் பெற்று வருவதால், “உள்-ஒதுக்கீடு” கூட தேவையில்லை என்று அறிவித்துள்ளதை ஞாபகத்தில் கொள்ளலாம். எனவே, இந்துக்களாக இருந்தே எஸ்சி சலுகைகளை அனுபவிக்கலாம், சமூகப் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம் என்ற கருத்து கூட வலுப்பட்டு வருகிறது.

சர்ச்சிற்குள் இருக்கும் ஜாதியப் பிரச்சினைமே 2022: தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் மருத்துவர் மேரிஜான் தலைமையில் மே 15, 2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இயக்கத்தைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான் கூறியதாவது[7]:- “தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திருச்சபையில் இந்த இயக்கம் சமத்துவம் சம உரிமை பெற போராடிக் கொண்டிருக்கிறது. திருச்சபை அதிகாரிகள் இதுவரை தீர்வு காணவில்லை. இந்திய ஆயர் பேரவை, இந்திய கத்தோலிக்க பேரவையும் அறிவித்த கொள்கைப்படி தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர் பதவிகளில் 64% வழங்காமல் இன்றும் ஏமாற்றி வருகின்றனர். சமீபத்தில் தலித் கிறிஸ்தவர்கள் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போது கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மன்ற மாவட்டத்தில் காலியாக உள்ள ஆயர் பதவிக்கு தலித் ஆயிரை நியமனம் செய்யவேண்டும், தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் அரசியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது,” இவ்வாறு கூறினார்[8].

மதமா, ஜாதியமா, இறையியலா, எது?: இந்நிலையில் தான், ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருமவளவனை ஆதரித்துப் பேசியதை வைத்து, “குமுதம் ரிப்போர்ட்டர்”  இக்கதையினை உருட்டியுள்ளது[9]. கிருத்துவ மதத்தில் மாறியும் சமத்துவம் ஏற்படவில்லை என்றால், அது அம்மதத்தின் பிரச்சினை ஆகிறது. ஏனெனில், பைபிளின் படி சமத்துவம் கிடையாது, எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. மரம் வெட்டுகிறவன், மாம் வெட்ட வேண்டும்; தண்ணீர் இழுத்த்க் கொட்டுகிறவன், அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன………. ஆரம்பத்திலிருந்தே, கிருத்துவத்தில் வேறுபாடுகள், சமூகக் கட்டமைப்புகள், இந்திய-ஜாதியத்தை விட இறுக்கமாக கட்டமைக்கப் பட்டுள்ளன. இதனை உலகெங்கும், எல்லா கண்டங்களிலும் பார்க்கலாம். வெள்ளையர் மற்றவர்களை அல வழிகளில் அடக்கி ஆண்டுதான், வருகிறார்கள். கருப்பினத்தவர்கள் தங்களது உழைப்பினை கடினமான காரியங்களில் காட்டித்தான் முன்னேறியுள்ளனர், பிரபலமாகியுள்ளனர். தங்களது, சமூக நிலை அல்லது சலுகை வைத்து முன்னேறி விடவில்லை. இன்று ஐ.டி-தொழிற்நுட்பம் என்றெல்லாம் பார்த்தாலும், வெள்ளையர் அல்லாதவர்கள் முதலாளிகளாக இருப்பவர் சிலரே. எனவே, இந்திய, அதிலும், தமிழகத்து நிலையில், இப்பிரச்சினையை திசைத் திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. சமூக முன்னேற்றத்திற்கு எது தேவை என்பதை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஜாதிதான், எஸ்சி-அந்தஸ்து தான், இல்லை மதம் தான் என்றால், அவ்வாறே நேர்மையாக நம்பிக் கொண்டு இருக்கலாம். கடவுளை, முன்னோர்களை, பெற்றோர்களை, சொந்தக்காரர்களை, சமூகத்தினரை ஏமாற்ற வேண்டாம்.

© வேதபிரகாஷ்

19-08-2022


[1] டாப்.நியூஸ்.தமிழ், மதுரை ராமநாதபுரம் தென்னிந்திய திருச்சபையின் ஏழாவது பேராயராக ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், By admin, July 18, 2022

[2] https://www.topnewsthamizh.com/jayasinghe-prince-prabhakaran-assumed-office-today-as-the-seventh-archbishop-of-madurai-ramanathapuram-church-of-south-india/

[3] தினமணி, தென்னிந்திய திருச்சபையின் மதுரைராமநாதபுரம் திருமண்டல பேராயா் பதவியேற்பு, By DIN  |   Published On : 17th July 2022 11:08 PM  |   Last Updated : 17th July 2022 11:08 PM. 

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jul/17/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3881887.html

[5] First Dalit Bishop is appointed for Madurai – Ramnad, CSI Diocese, Tamilnadu< By Dalit Christian Digest -July 18, 2022.

[6] The National Dalit Christian Watch (NDCW), a National Platform which is committed to cleanse the Church and Society by annihilating caste and its inhuman oppressive dynamics mainly to ensure equality, justice and rightful space for Dalit Christians within Church and its Institutions, looks forward to the serious interventions by the newly appointed Bishop, who held several positions in this Diocese already, not only to perform his pastoral services but also through his prophetic voice and deeds to uphold justice and peace both within Church and Society, especially for the dignified life and rightful space of the Dalit Christians.

[7] சமயம்.தமிழ், ஆயர் நியமனத்தில் ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்துவர்கள்பகீர் தகவல்!, Govindaraji Rj | Samayam Tami, Updated: 16 May 2022, 5:21 pm

[8] https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/dalit-christian-liberation-movement-slams-for-the-bishop-appointment-in-trichy/articleshow/91572892.cms

[9]  டி. பாலமுருகன், சர்ச்சையில் மதுரை பேராயர்மதம் கசக்குது, சலுகை இனிக்கிதா?, குமுதம் ரிப்போர்ட்டர், 19-08-2022, பக்கங்கள்.14-15.

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? – கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

மார்ச் 30, 2022

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

பிரான்சிஸ் கலிஸ்ட் உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டது எஸ்சி கிருத்துவ எதிர்ப்பு: பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) என்ற உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்-புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டிருப்பதால், எஸ்.சி கிருத்துவ அமைப்பினர் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய அறிவித்தனர்[1]. தலித் கிருத்துவ விடுதலை இயக்கம் (Dalit Christian Liberation Movement, DCLM) ஏப்ரல் 11 மற்றும் 29 தேதிகளில் புதுச்சேரியில் ஆர்பாட்டம் செய்யப் போவதாக கூறினர்[2]. ஜார்ஜ் அந்தோனிசாமி அந்தோனி பாப்புசாமி போன்ற பிஷப்புகள் எஸ்சியினர் பிஷப்பாக வரக்கூடாது என்று வேலை செய்து வருகின்றனர்.  வெள்ளாலர், உடையார், வன்னியர், நாடார், மீனவர் என்று மாறி-மாறி  பிஷப் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது, தொடர்ந்து உயர் ஜாதியினரே பிஷப்பாக வந்து கொண்டிருக்கின்றனர். 1980களிலிருந்து போராடி வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடக்கியாண்டு வருகின்றனர்[3]. ஆனால், அவர்கள் மேடைகளில் பேசும் பொழுது, ஏதோ சமத்துவத்தி உண்டாக்கி விட்டது போல பேசுவார்கள்.  இவரை எதிர்த்து சர்ச்சுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்[4]. கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[5]. ஆனால், கத்தோலிக்க சர்ச் கண்டுகொள்ளவில்லை.

வாடிகன் செய்தி கூறுவது 19-03-2022[6]: ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்[7]. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்[8]. 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப் படுத்தப்பட்டார்[9]. 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்.  1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார்.

2020ல் எஸ்.சி கிருத்துவ கூட்டங்கள் கோரிக்கைகள்: மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது[10]. இத்தகைய கூட்டங்கள் 1980களிலிருந்து நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸில் அதிகமாகவே செய்திகள், வஆகர் கடிதங்கள் என்று காரசாரமாக வாத-விவாதங்கள் நடந்தன. அவற்றில் கத்தொலிக்கச் சர்ச்சின் இரட்டை வேடங்கள், பிஷப்புகளின் ஜாதிய நாடகங்கள், “தலித்” போர்வையில் நடந்த பேரங்கள் என்றேல்லாம் வெளி வந்தன. தீவிரமாக போராடிய, அப்படி காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது அமைதியாகி, சந்தோசமாக உள்ளனர்[11]. திருச்சியில் 2020ல் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்[12], தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சார்லஸ் கூறியது: “தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமார் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை. வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி 2020 திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார். பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

1980-2022 காலாட்டங்களில் கிருத்துவ ஜாதியம் மாறவில்லை: “தலித்” என்று சொல்லிக் கொண்டு கிருத்துவர்கள் அதிகமாகவே ஏமாற்றி வருகின்றனர். இப்பொழுதும், ஊடகங்கள் அவ்வார்த்தை பிரயோகம் கூடாது என்றாலும், வேண்டுமென்றே உபயோகித்து வருகின்றது. பிஜேபியும் சில நேரங்களில் இதற்கு ஆதரவு காட்டுவதால், குளிர் விட்டுப் போய், அப்பிரயோகம் மறுபடியும் அதிகமாகி விட்டது. எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்.

அரசியலாக்கப் படும்தலித்பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.

©  வேதபிரகாஷ்

30-03-2022


[1]  The Hindu, Dalit Christians to protest appointment of non-Dalit Bishop as Archbishop of Archdiocese of Tamil Nadu and Pondicherry, Udhav Naig, CHENNAI, MARCH 29, 2022 20:52 IST; UPDATED: MARCH 29, 2022 20:52 IS.

[2] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-christians-to-protest-appointment-of-non-dalit-bishop-as-archbishop-of-archdiocese-of-tamil-nadu-and-pondicherry/article65271233.ece

[3] Members of the Dalit Christian Liberation Movement on Tuesday said they would launch a protest against the appointment of non-Dalit Bishop Francis Kalist as the Archbishop of Archdiocese of Cuddalore-Pondicherry in Puducherry on April 11 and April 29, when he would be consecrated as the Archbishop, citing the ‘discriminatory attitude’ against the Dalits by the Catholic Church in India in appointments of Bishops and Archbishops. DCLM claimed that the Tamil Nadu Bishop Council president Archbishop George Antonysamy and former president Archbishop Antony Pappusamy acted in a discriminatory manner against Dalits and demanded they resign from their posts taking responsibility. DCLM State president Mary John alleged the Dioceses in Tamil Nadu are dominated by Vellalar, Udayar, Vanniyar, Nadar and fisherman communities. “Most of the Bishops and Arch Bishops in Tamil Nadu-Pondicherry Dioceses routinely come from Vellalar, Udayar, Vanniyar, Nadar and Fisherman community. This is an injustice despite 75% of the Catholics in Tamil Nadu being Dalits,” he said. He claimed that only 11 out of 180 Bishops are Dalits and only 2 out of 31 Archbishops in India are Dalits. “There are 17 Bishops in Tamil Nadu and Pondicherry but only one is a Dalit. This marginalisation and exclusion is widespread in appointments, education, employment opportunities, financial assistance in the Catholic Church despite Dalits being 64% of Indian catholic population and 75% of Tamil Nadu-Pondicherry Archdiocese. This can be corrected only when Dalits are appointed as Arch Bishops and Bishops,” he said.

[4] தினமலர், பேராயரை எதிர்த்து கறுப்பு கொடி, மார்ச் 21,2022 | 12:07 IST.

[5] https://www.dinamalar.com/video_main.asp?news_id=211048&cat=1585

[6] வத்திகன் செய்தி, பாண்டிச்சேரிகடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர், 19 March 2022, 15:41.

[7] https://www.vaticannews.va/ta/pope/news/2022-03/bishop-francis-kalist-appointed-new-archbishop-pondicherry.html

[8] தினத்தந்தி, புதுவை கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம், பதிவு: மார்ச் 19,  2022 20:46 PM.

[9] https://www.dailythanthi.com/News/State/2022/03/19204631/Francis-Callist-appointed-Archbishop-of-puducherryCuddalore.vpf

[10] தினமணி, பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல், By DIN  |   Published on : 13th October 2020 02:41 AM  |  Last Updated : 13th October 2020 02:41 AM.

[11] 40 ஆண்டுகள் மேலாகி விட்டாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பெயர்களை வைத்து, அவர்களை இன்றைக்கும் அடையாளம் காணலாம். சிலர் காலமாகி விட்டனர். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது.

[12] https://www.dinamani.com/all-editions/edition-trichy/2020/oct/13/insisting-on-nominating-dalit-christians-for-peraya-posts-3484004.html

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்!

திசெம்பர் 30, 2015

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு, அத்துமீறல், மற்றும் சரிசெய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள்!

Indian pentacostal mission, Tambaram google map

Indian pentacostal mission, Tambaram google map

இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷனின் அக்கிரமிப்பு: பென்டகோஸ்டல் மிஷன் என்ற கிருத்துவ நிறுவனம் தாம்பரம் இரும்புலியூரில்,  உள்ள ஏரியின் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த ஆண்டுகளில் கன்வென்ஷன் என்று கூட்டத்தை நடத்தி வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான கிருத்துவர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். முதலில் தற்காலிகமாக கூரைப் பந்தல் போட்டுக் கொண்டு இக்கூட்டம் நடந்து வந்தது. கூரை ஓடக்கூடாது என்ற தடை வந்தவுடன், கட்டிடம் கட்ட ஆரம்பித்தது. அப்பொழுதும், சிறுபான்மையினர் என்றதாலும் அப்பகுதி ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நிலத்தை விற்க ஈடுபட்டவர்களுக்கும் இதில் லாபம் பெற விருப்பம் இருந்ததினால் மறைமுகமாக அமைதியாக அதரவு கொடுத்து வந்தனர்.

Pentacostal mission, Irumpuliyur, Tambaram - flooded Dec.2015

Pentacostal mission, Irumpuliyur, Tambaram – flooded Dec.2015

ஆனால், வழக்கு தொடரப்பட்டதினால், பென்டகோஸ்டல் மிஷன் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு சி.எம்.டி.ஏ மூலம் ஆணையிட பரிந்துரைக்கப்பட்டது[1]. இருப்பினும் பென்டகோஸ்டல் மிஷன் தடை உத்தரவு வாங்கி இழுத்து வந்தது. பாஸ்டர் மானஸா இதற்கு ஈடுபடுத்தப் பட்டிருந்தார். அவர் தரப்பில் ஆஜரான வக்கீல், உரிய அனுமதி இல்லாமல் கட்டுமான வேலை நடப்பதை ஒப்புக்கொண்டு, பிறகு அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அது நிலுவையில் உள்ளதாகவும் எடுத்துக் காட்டினார்[2]. சென்னை உயர்நீதி மன்றம் இரண்டு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட்.27, 2014 அன்று ஆணையிட்டது[3].

Pentacostal mission, Irumpuliyur, Tambaram

Pentacostal mission, Irumpuliyur, Tambaram

பலசர்ச்சைகளில் சிக்கியுள்ள இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: இந்த சர்ச் கடந்த ஆண்டுகளில் பலவித சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள், இவர்களால் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுகின்றன என்று புகார் அளித்தாலும், போல்லீஸார் மற்றும் இதர ஊராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். கன்வென்ஷன் நேரத்தில் வரும் கிருத்துவர்கள் பலவிதங்களில் இடைஞ்சல், இடையூறு மற்றும் தொந்தரவுகள் ஏற்படுத்தி வருகிறார்கள். போதகுறைக்கு அந்நேரங்களில் தெருக்களை ஆக்கிரமித்துக் கொண்டு கடைகளை வைத்து இடைஞ்சல் செய்கின்றனர். இதனால், கலைஞர் கருணாநிதி நகர் குடியிருப்போர் நலசங்கம் வழக்கும் தொடர்ந்தது. ஏற்கெனவே வழக்குகளில் சிக்கியுள்ள  பென்டகோஸ்டல் மிஷன், சட்டப்படி, தனது அந்தஸ்த்தைத் ஸ்திரப்படுத்திக் கொள்ள, இதிலும் ஈடுபட்டு வருகிறது. சுதர்சன் ராஜ் என்பவருக்கு 11.03.2015லிருந்து 15.03.2015 வரை கடைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால், வழக்கு போடப்பட்டது[4]. ஆனால், இவ்வழக்கைப் பொறுத்த வரையில், ஏற்கெனவே கன்வென்ஷன் நடந்து முடிந்து விட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து விட்டது[5]. பிரதிவாதிகளையும் மனுக்களை வாபஸ் பெற ஆணையிட்டது[6].

PAS MANASSEH or Pastor Maanasa, Roja Street, Irumbuliyur

PAS MANASSEH or Pastor Maanasa, Roja Street, Irumbuliyur

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மதம் மாற்ற முயற்சி[7] (மார்ச்.2014): வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் அண்மையில் பெற்றோருக்கு தெரியாமல் தலைமறைவாகி மதம் மாறி தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்தார். இதையடுத்து பெற்றோர் புகாரின் பேரிலும், இந்து முன்னணி இயக்கத்தினரின் போராட்டத்தாலும் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரியை மீட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். விஜயகுமாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இந்து முன்னணி வக்கீல் ரத்தினகுமார் ஆஜராகி, மதம் மாற்றப்பட்ட பெண் மனநிலை சரியின்றி சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். அவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பரிசோதனை செய்ய வேண்டும் என மனு அளித்தார். பெண்ணின் தரப்பில் சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஆஜரானார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி, அப்பெண் சுயமாக முடிவு எடுக்கக்கூடிய வயதுடையவர் என்பதால் அவர் பெற்றோரிடமோ அல்லது விருப்பப்படி எங்கு தங்க விரும்புகிறாரோ அதை எழுத்துப் பூர்வமாக எழுதித்தந்து செல்லலாம் என உத்தரவிட்டார்[8]. அதைத் தொடர்ந்து விஜயகுமாரி தனது விருப்பத்தை எழுதிக் கொடுத்ததை அடுத்து இரும்புலியூர், பெந்தகொஸ்தே தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் ரத்தினகுமார், மதம் மாற்றப்பட்ட பெண் மனநலம் பாதித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. கட்டாயமாக அப்பெண் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே நாங்கள் பெண்ணின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இவ்வழக்கில் ஐகோர்ட்டை நாடவுள்ளோம் என்றார்[9]. 2012ல் லட்சுமி பிரியா என்ற ஆந்திர மாநிலத்து பெண்ணை மதம் மாற்றியதில், சர்ச்சையில் சிக்கியது[10].

hindu-girl-forcefully-converted

hindu-girl-forcefully-converted

சி.எம்.டி.., ‘நோட்டீஸ் மதிக்காத இரும்புலியூர் பென்டகோஸ்டல் மிஷன்: தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், அனுமதி இன்றி கட்டப்பட்ட, தேவாலய கட்டடத்தை வரன்முறை செய்ய, எட்டு நிபந்தனைகள் விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், கிறிஸ்தவ மத பிரசார அமைப்பு இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பிரம்மாண்டமான தேவாலயம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிக்கு, சி.எம்.டி.ஏ.,விடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சில ஆண்டுகளுக்கு முன், சி.எம்.டி.ஏ., ‘நோட்டீஸ்’ அனுப்பியது. ஆனால், அதன்பின், எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை[11].

Irumpuliyur map

Irumpuliyur map

தமிழக அரசு வரன்முறை செய்து பிறப்பித்த உத்தரவும், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளும்: சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகம் சார்பில், கட்டடத்தை வரன்முறை செய்ய, தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, மேல் முறையீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல்வேறு அரசுத்துறைகள் வரன்முறை செய்ய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தேவாலய கட்டடத்தை, நகரமைப்பு சட்டத்தின், 113வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு வரன்முறை செய்து உள்ளது.

இரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்

இரும்புலியூர் சர்ச் கட்டுமானத்தை நிறுத்த நோட்டீஸ்

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்[12]:

  1. பத்து சதவீத நிலத்தை, திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்க வேண்டும்.
  1. அந்த நிலத்துக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாத, பொதுப்பாதை அமைக்க வேண்டும்.
  1. கட்டுமான பகுதி, விமானப் படை தளத்தை ஒட்டி உள்ளது. எனவே, விமானப் படையிடம் ஆட்சேபனை இல்லை என, சான்று பெற வேண்டும்.
  1. இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர், நீர் வழியான கால்வாய் மேல் கட்டப்பட்டு உள்ளது. உடனடியாக அந்த கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும்.
  1. அதற்கு திட்ட அனுமதி வழங்கும் முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
  1. மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, புதிதாக ஒப்புதல் பெற்ற பிறகே, திட்ட அனுமதி அளிக்க வேண்டும்.
  1. வளாகத்தில், தேவையான இடங்களில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, போதுமான பக்கவாட்டு இடைவெளி விடப்பட வேண்டும்.
  1. திட்ட அனுமதி வழங்கும் முன், சம்பந்தப்பட்ட திட்டம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

irumpuliyuur church encroachment

irumpuliyuur church encroachment

இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டு வசதி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்து உள்ளார் அதாவது, ஏரி ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு என்றெல்லாம் நடந்த பிறகும், பென்டகோஸ்டல் மிஷனுக்கு சாதகமாக இத்தகைய உத்தரவு வந்துள்ளது வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-12-2015

[1] Petition filed under Article 226 of the Constitution of India praying for issue of Writ of Mandamus directing the 1st respondent [The Member Secretary, Chennai Metropolitan Development Authority, Gandhi Irwin Road, Egmore, Chennai] to enforce the stop work notice dated 17.09.2013 and further direct the 1st respondent to seal and demolish the unauthorised constructions being carried out by the 3rd respondent [The Pentecostal Mission, Rep. By Pastor Maanasa, Roja Street, Irumbuliyur, Tambaram (East), Chennai] in Survey No.84 situate in Irumbuliyur, Tambaram Taluk, Chengalpet District. http://indiankanoon.org/doc/23860348/

[2] Learned counsel for respondent no.3, thus, concedes that a part of the construction is without planning permission obtained, though application is pending consideration for regularization before the concerned authority. http://indiankanoon.org/doc/23860348/

[3] Madras High Court, C.V.Ramadas vs The Member Secretary on 27 August, 2014; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, DATED: 27.08.2014 – CORAM – THE HON’BLE MR.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and THE HON’BLE MR. JUSTICE M.SATHYANARAYANAN, W.P.No.28655 of 2013 and  M.P.No.1 of 2013

[4] Madras High Court, Kalaignar Karunanidhi Nagar … vs The District Collector on 30 June, 2015,

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS, Dated: 30..06..2015 Coram: The Honourable Mr.SANJAY KISHAN KAUL, CHIEF JUSTICE and The Honourable Mr.Justice T.S.SIVAGNANAM, W.P.No.6693 of 2015.

[5] Petition filed under Article 226  of the Constitution of India praying for the issue of a writ of Mandamus, forbearing the 2nd respondent from permitting the fifth respondent to put up shops in the Roja Street, K.K.Nagar, Peerkankarani, Srinivasan Nagar (Post), Chennai 600 063, from 11.03.2015 to 15.03.2015 during the period of convention conducted by the fourth respondent. http://indiankanoon.org/doc/168574778/

[6] The Order of the Court was made by The Hon’ble The Chief Justice) Learned counsel for the petitioner states that since the convention is over, though the problem is repeatedly created, in order to ensure that in future, such a situation does not come to pass, he will file a fresh petition specifically raising the plea that there cannot be any construction on the roadside, in view of the provisions of the Tamil Nadu District Municipalities Act, 1920. He thus submits that the issue is not one of not adhering to the terms of the license, but absence of any provision in law, whereby the respondent can do so. He seeks to withdraw the petition. http://indiankanoon.org/doc/168574778/

[7] மாலைமலர், மதம் மாறிய பெண் விருப்பப்படி செல்லலாம்: வேலூர் கோர்ட்டு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 27, 3:44 PM IST

[8]http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/03/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/article2133233.ece?service=print

[9] http://www.maalaimalar.com/2014/03/27154434/woman-can-optionally-converted.html

[10] https://christianityindia.wordpress.com/2012/11/06/1206-christian-missioneries-targeting-indian-women-for-conversion/

[11] தினமலர்,தேவாலய வரன்முறைக்கு 8 நிபந்தனைகள், டிசம்பர்.28,2015.00.30.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1420374

பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!

ஜூலை 9, 2010

பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35531

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=10043&id1=11

தினமலர் “தேவசாமித்தியம்” என்றும் தினகரன் “தேவசுவாமித்துவம்” என்ற அந்த புனிதமான ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் அது தேவ சாமர்த்தியமா, மனித சாமர்த்தியமா என்று தெரியவில்லை. காலத்தின் அலங்கோலம்தான் அது. அந்த காமுகனிடத்தில், மனிதத்துவமே இல்லதபோது, இப்படி பெயரை வைத்துள்ளதே கொடுமையான விஷயம்தான்.

சில்மிஷம் என்றால் என்ன? தூத்துக்குடி அருகே பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இங்குகூட என்னடா அது சில்மிஷம் என்று தெரியவில்லை. “ஷ”வை வெறுக்கும்  தமிழ்வெரியர்கலுக்குக் கூட இந்த “ஷ”, இந்த “ஷம்”, இந்த “மிஷம்”, இந்த “சில்மிஷம்” நிறையவே பிடித்திருக்கிறது. என்ன கல்மிஷமோ தெரியவில்லை!

தேவசாமித்தியமத்தின் காம விளையாடல்கள்: தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதில் ஆசிரியராக பணிபுரியும் தேவசாமித்தியம் (43), அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே வைத்து மதிய நேரத்தில், மாணவியரை அழைத்து சில்மிஷம் செய்வாராம். எத்தனை மாணவியர் என்று கணக்கு சொல்லவில்லை.

எத்தனை மாணவியர் என்று கணக்கு சொல்லவில்லை. இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மற்ற மாணவியர்கள் ஏன் சொல்லவில்லை என்று தெரிவவில்லை. அந்தமாணவியின் தாய் உமா, செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் தேவசாமித்தியத்தை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், மேல்விசாரணை நடந்துவருகிறது.