Archive for the ‘பாவி’ Category

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

மே 18, 2023

21ம் நூற்றாண்டிலும் கத்தோலிக்க மதம் பெயரில் தீண்டாமை, மதவெறி, சமய துவேசம் முதலியவற்றை இறப்பிலும் பின்பற்ற யார் சொல்லிக் கொடுத்தது?

கத்தோலிக்கப் பையன் ஹிந்து பெண்ணை திருமணம் செய்ததை கத்தோலிக்கச் சர்ச் ஏற்ருக் கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே  கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது.  இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த  நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].  

கத்தோலிக்க போராளிகள் பெண்னியப் போராளிகள் வாய் திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூதாட்டி உடலை புதைக்க மறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு  முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர். 

தொடரும் மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது.  மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

போலீசார் சமரசத்திற்குப் பிறகு உடல் புதைக்கப் பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?

கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன,  பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-05-2023


[1] இ.டிவி.பாரத், மதம் மாறி திருமணம் செய்த மகன்தந்தையின் சடலத்தை புதைக்க காலில் விழக் கூறிய ஊர்மக்கள், May 17, 2023, 07:09 PM IST

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/theni/christians-refused-to-bury-father-dead-body-since-his-son-married-inter-religious-at-theni/tamil-nadu20230517193953468468449

[3] மீடியான்.நியூஸ், ஹிந்து பெண்ணுடன் காதல் திருமணம்இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்து அராஜகம்!, Karthikeyan, Mediyaan News, 18 மே 2023 11:07 AM.

[4] https://mediyaan.com/theni-christian-youth-love-marriage-hindu-girl-objection-burial-dead-body/

[5] ஜீ.நியூஸ், தேனி: மகன் மதம் மாறியதால் தந்தையின் உடலை அடக்கம் செய்ய மறுத்த கல்லறை பொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST

[6] https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-christians-refused-to-bury-dead-body-since-his-son-changed-his-religion-444804

[7] தினத்தந்தி, காலில் விழுந்தால் தான் புதைக்க விடுவோம்..” இறந்தவர்கள் உடலை புதைக்க எதிர்ப்புசர்ச் விட்டு ஒதுக்கி வைத்து அராஜகம், By தந்தி டிவி, 18 மே 2023 8:07 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/if-you-fall-on-our-feet-we-will-allow-to-bury-objection-to-burial-of-the-dead-186876

[9] தினமாலை, தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!, By MALA RAJ Thu, 18 May 2023

[10] https://www.dinamaalai.com/news/the-son-who-converted-and-married-monsters-who-fell-on-his/cid10956003.htm

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

ரவுடி ஆசீர்வாதத்தின் மீது, முதல் கல்லை எரிந்தது பாஸ்டர் இம்மானுவேல் பிரகாஷா – இறையியல் பிரச்சினையை எழுப்பிய ஆங்கில ஊடகங்கள்!

ஜூலை 8, 2016

ரவுடி ஆசீர்வாதத்தின் மீது, முதல் கல்லை எரிந்தது பாஸ்டர் இம்மானுவேல் பிரகாஷா – இறையியல் பிரச்சினையை எழுப்பிய ஆங்கில ஊடகங்கள்!

Ashirvadam killed - TOI- pastor hurled the first stone

பாஸ்டர் முதல் கல்லை எரிந்தாரா, பெரிய கல்லை எரிந்தாரா?: முதல் கல்லை விட்டெறிந்தது பாஸ்டர்தான் என்றது டைம்ஸ் ஆப் இந்தியா. அதாவது, பைபிளில், பாவம் செய்யாமலிருப்பவன் முதல் கல்லை எரிவானாக, [“May he who has no sin cast the first stone” ] என்கிறது[1]. அதுபோல, இந்த பாஸ்டர், முதல் கல்லை எரிந்துள்ளார்[2]. பின்னர், தனக்கு முன்னால், எல்லாமே கட்டுக்குள் அடங்காமல் போகும் வேளையில் ஒரு பெரிய கல்லை எடுத்து, அந்த புண்ணியமற்ற பாவி நம்பிக்கையாளர்களை வாட்டி வதைக்கும் போது, அவன் மீதி எரிந்தார் [Things had by now passed the preacher’s threshold. He looked about him, saw a big stone and hurled it at the sacrilegious one attempting to fleece the faithful] என்று விவரித்தார்[3]. இந்த நிருபருக்கு பைபிள் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. இல்லை, இவ்விசயத்தில் மதம் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒருவேளை அவ்வாறு சூசகமாக சொல்லப்பட்டதோ என்னமோ. மேற்கத்தை மதங்களில் கற்களால் அடித்து கொல்வது என்பது சகஜமான விசயம். மோசஸ்அப்படித்தான் போதித்துள்ளார். ஆனால், ஏசு உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர் முதல் கல்லை எரியுங்கள் என்றாராம். அக்கதையின் படி, ஒரு விபச்சாரியே பிழைத்துக் கொண்டாள் என்றுள்ளது. இங்கோ, இந்த மாமூல் கேட்ட ரௌடி கொல்லப்பட்டான். ஆனால், தி இந்து, மிரட்டி பணம் கறக்கும் விசயத்தில் ஒரு ரவுடி ஒலைசெய்யப்பட்டான் என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டது[4].

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - உடல் - 19-06-2016சண்டை, கைகலப்பு, கட்டி வைத்து அடித்தல், கொலையில் முடிந்த நிலை: அப்படியென்றால், ஆசீர்வாதத்தின் போக்கு அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எல்லோரும் கிருத்துவர்கள் என்ற பட்சத்தில் அவனை மனம் மாற்றம் ஏன் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. எதோ தீராத நோய்கள் எல்லஆம் தீர்க்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது, ஆசீர்வாதத்தின் குடியை நிறுத்தி, அவனது மனதை மாற்றி, பாவத்தைப் போக்கி, நல்லவனாக திருத்த ஏன் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. வாய்பேச்சு, சண்டை, அடிக்க வருவது என்ற நிலை ஏற்பட்டது. உடனே, போதகர் இம்மானுவேல் பிரகாஷின் மகன் மணப்பால் பிரகாஷ், அவரை தடுத்துள்ளார். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் மற்றும் சபை ஊழியர் கருணாகரன், லோகிதாசன் ஆகியோர் போதகருக்கு ஆதரவாக ஆசீரிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரவுடி ஆசீரை அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்து, அங்கிருந்த சிமென்ட் கல் மற்றும் செங்கற்களை கொண்டு முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கினர்.

Ashirvadam killed - NIE- unforgiving church dramaபோலீஸாரிடம் புகார் கொடுக்காமல், இவர்களே அவனை கட்டிப்போட்டு அடித்ததேன்?: அதுதான் மரத்தில் கட்டி வைத்து விட்டார்களே, உடனே போலீஸுக்கு புகார் கொடுத்து, அவனை அங்கிருந்து எளிதாக அப்புறப்படுத்தியிருக்கலாமே. மேலும், இப்பொழுதுதான், சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறான், வந்தவுடன், வேலையை ஆரம்பித்து வுட்டான் என்றால், உடனே போலீஸார் அள்ளிக் கொண்டு போயிருப்பார்களே? பிறகு ஏன் அத்தகைய வன்முறையில் ஈடுபடவேண்டும்? இதில் ரவுடி ஆசீர் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் என்கிறது தினகரன். ஆத்திரமடைந்த பாதிரியார் மற்றும் அவர் மகன், தம்பி ஆகியோர், ஆசீரை மரத்தில் கட்டிப்போட்டு, தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது என்கிறது தினமலர்[5]. ஆசீரை கடுமையாக தாக்கி, மரத்தில் கட்டிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது, என்று பிறகு முடிக்கிறது[6]. ஆனால், ஆங்கில ஊடகங்களின் படி, ஜெபகூடத்தவர், அவனை சூழ்ந்து கொண்டு பிடிக்க முயன்றனர், ஆனால், அவன், கத்தியை வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டிருந்ததால், கல்லெடுத்து அடிக்க ஆரம்பித்தனர், பாஸ்டர் தான் முதல் கல் எரிந்தது, ஒரு பெரிய கல்லை எரிந்தார் என்றெல்லாம் அவை விவரித்தது எடுத்துக் காட்டப் பட்டது.

 Zion church, Chengalpattuபோலீஸார் வந்து விசாரணை செய்தது, பாதிரி மற்றும் இதர நபர்களை கைது செய்தது முதலியன: இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசீர் தாய் சுசீலா அளித்த புகாரை அடுத்து, தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜ் ஜோர்ஜ், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்[7]. அங்கு முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த ரவுடி ஆசீரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[8]. இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடியை கொலை செய்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் (50), மகன் மணப்பால் / மனோபால் பிரகாஷ் (21), போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் (44) மற்றும் சபை ஊழியர் கருணாகரன் (32), லோகிதாசன் (29) ஆகியோரை கைது செய்தனர்[9]. பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போதகர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

May he who has no sin cast the first stone -Ashirvadam killedபட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை ![11]: செங்கல்பட்டு நகரில் பிரபல ரவுடி ஆசிர்வாதம் என்பவர் இன்று பட்டப்பகலில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்[12]. கொல்லப்பட்ட ஆசிர்வாதம் மீது பல கொலை,கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். “வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்”, என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்தம் மூன்றுவிதங்களில் அவன் இறந்தான் / கொலைசெய்யப்பட்டான் என்றுள்ளது:

  1. மரத்தில் கட்டி வைத்து கற்களால் அடித்ததால் இறந்தான்.
  2. ஜெபகூடத்திலிருந்து விரட்டிய போது, வெளியே அவனைச் சுற்றிப் பிடிக்க முயன்றனர். அப்பொழுது, கற்களால் அடித்த போது இறந்தான்.
  3. ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்.

இந்த நிருபர்கள் எல்லாம், எப்படி செய்திகளை சேகரிக்கின்றனர், பிறகு செய்தியாக வெளியிடுகின்றனர் என்பதே வியப்பாக இருக்கின்றது. ஒன்று-இரண்டு வித்தியாசங்கள் இருந்தால் பரவாயில்லை ஆனால், இப்படி பல வித்தியாசங்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது. உண்மையிலேயே அத்தகைய வேறுபாடுகள் பிழையா, அல்லது வேண்டுமென்றே திசைத்திருப்ப அவ்வாறு பதிவு செய்கின்றனரா அல்லது குற்றவாளிகளுக்கு உதவுவதற்கான, அத்தகைய மாறுபட்ட, முரண்பாடான செய்திகளை வெளியிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

08-07-2016

Zion church - Immanuel Prakash- The Hindu way of reporting

[1] The Times of India, Pastor hurls first stone, goon dies, TNN | Jun 20, 2016, 04.51 AM IST.

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/Pastor-hurls-first-stone-goon-dies/articleshow/52825585.cms

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/Thug-tried-to-extort-money-from-pastor/articleshow/52825565.cms

[4] The Hindu, Man killed after extortion bid, Chennai, June 20, 2016.

A person who allegedly tired to extort money from a religious preacher was reportedly killed by residents in the neighbourhood. Asirvatham, a resident of Thirumani near Chengalpattu, tried to extort money from Immanuel Prakash, who is a preacher in the neighbourhood. Asirvatham was reportedly attacked by a few residents. The police have registered a case and are investigating.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/man-killed-after-extortion-bid/article8750137.ece

[5] தினமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்து கொலை:பாதிரியார் உட்பட 5 பேர் கைது

பதிவு செய்த நாள். ஜூன் 19,2016 23:04; மாற்றம் செய்த நாள். ஜூன் 19,2016. 04:11.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1546384&

[7] பத்திரிக்கை.காம், ரவுடி கொலை:பாதிரியார் கைது!, டி.வி.எஸ்.சோமு, ஜூன்.20, 2016. 11.24.

[8] https://www.patrikai.com/rowdy-killed-christian-priest-arrested/

[9] தமிழ்.நியூஸ்.களஞ்சியம், பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த பொது மக்கள் !, By தொகுப்பாளினி நலினி, June 19, 2016.

[10]http://news.southdreamz.in/1/2016/06/19/%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B5/

[11] லைவ்டே, பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை !, Jun 19, 2016 at 3:06 PM : By LIVEDAY

[12] http://liveday.in/chennai-online-tamil-news/criminal-murder/

இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீது புகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்!

ஒக்ரோபர் 19, 2013

இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீது புகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்!

Manikandan-Rekha-complained about Christian teacher

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கிருத்துவ மதபோதகர்களுக்கு இதே வேலையாகி விட்டது போலும்!

Hasthampatti sex pastor Jeyaseelanசேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி.இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18-10-2013 காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் கார்-செட்டுக்கு அழைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது[1]. பள்ளியின் முதல்வர், ஏன் அவரும் ஒரு கிருத்துவப் பாதிரியாகத்தானே இருப்பார், அவர் இப்படி கருப்பு ஆடுகளை வளர்த்து, வைத்துக் கொண்டு, மேய விடலாமா?

ஏறெகெனவே, இப்படி ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று மேய ஆரம்பித்து விட்டார்களே? ஏன் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை?

முன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்

முன்னர் பெங்களூரு கிருத்துவ மதபோதகரும் இதே மாதிரி செய்து வந்தான்

பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். பிறகு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்[2]. அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].

இது ஏதோ சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், கற்பழிப்புகளில் ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்[4]. illegal-adoptionவழக்கம் போல புகார்கள் கொடுக்கப் படுகின்றன. சில விசயங்களில் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. தில்லி-மும்பை போன்று, இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை.

Christian-priest-sex-Ayanavaram

Christian-priest-sex-Ayanavaram

பலமுறை இத்தகைய புகார்கள் வந்துள்ளன

Pastor-sexploitation-Ayanavaram

Pastor-sexploitation-Ayanavaram