Archive for the ‘விசுவாசம்-நம்பிக்கை’ Category

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! திராவிடியன் மாடலில் சட்டமீறல்கள் சரிசெய்யப்படும் போலிருக்கிறது! (3)

கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை:  பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய ரூ.3000 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் தற்போது விரைவாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது. பீட்டர் அல்போன்ஸ் பேட்டிசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால், ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை. பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் அமைக்காதீர்கள். புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும்போது, அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை சொல்வது எஸ்ரா சற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!

இந்துவிரோதி எஸ்டா சற்குணத்தின் பேச்சு ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது பொன்றிருந்த கூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1]  M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு ! மத போதகர் எஸ்றா சற்குணம் மீது வழக்குப் பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST

https://tamil.asianetnews.com/politics/esra-srgunam-case-file-ptgi8u

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? – கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

மார்ச் 30, 2022

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

பிரான்சிஸ் கலிஸ்ட் உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டது எஸ்சி கிருத்துவ எதிர்ப்பு: பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) என்ற உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்-புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டிருப்பதால், எஸ்.சி கிருத்துவ அமைப்பினர் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய அறிவித்தனர்[1]. தலித் கிருத்துவ விடுதலை இயக்கம் (Dalit Christian Liberation Movement, DCLM) ஏப்ரல் 11 மற்றும் 29 தேதிகளில் புதுச்சேரியில் ஆர்பாட்டம் செய்யப் போவதாக கூறினர்[2]. ஜார்ஜ் அந்தோனிசாமி அந்தோனி பாப்புசாமி போன்ற பிஷப்புகள் எஸ்சியினர் பிஷப்பாக வரக்கூடாது என்று வேலை செய்து வருகின்றனர்.  வெள்ளாலர், உடையார், வன்னியர், நாடார், மீனவர் என்று மாறி-மாறி  பிஷப் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது, தொடர்ந்து உயர் ஜாதியினரே பிஷப்பாக வந்து கொண்டிருக்கின்றனர். 1980களிலிருந்து போராடி வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடக்கியாண்டு வருகின்றனர்[3]. ஆனால், அவர்கள் மேடைகளில் பேசும் பொழுது, ஏதோ சமத்துவத்தி உண்டாக்கி விட்டது போல பேசுவார்கள்.  இவரை எதிர்த்து சர்ச்சுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்[4]. கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[5]. ஆனால், கத்தோலிக்க சர்ச் கண்டுகொள்ளவில்லை.

வாடிகன் செய்தி கூறுவது 19-03-2022[6]: ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்[7]. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்[8]. 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப் படுத்தப்பட்டார்[9]. 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்.  1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார்.

2020ல் எஸ்.சி கிருத்துவ கூட்டங்கள் கோரிக்கைகள்: மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது[10]. இத்தகைய கூட்டங்கள் 1980களிலிருந்து நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸில் அதிகமாகவே செய்திகள், வஆகர் கடிதங்கள் என்று காரசாரமாக வாத-விவாதங்கள் நடந்தன. அவற்றில் கத்தொலிக்கச் சர்ச்சின் இரட்டை வேடங்கள், பிஷப்புகளின் ஜாதிய நாடகங்கள், “தலித்” போர்வையில் நடந்த பேரங்கள் என்றேல்லாம் வெளி வந்தன. தீவிரமாக போராடிய, அப்படி காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது அமைதியாகி, சந்தோசமாக உள்ளனர்[11]. திருச்சியில் 2020ல் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்[12], தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சார்லஸ் கூறியது: “தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமார் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை. வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி 2020 திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார். பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

1980-2022 காலாட்டங்களில் கிருத்துவ ஜாதியம் மாறவில்லை: “தலித்” என்று சொல்லிக் கொண்டு கிருத்துவர்கள் அதிகமாகவே ஏமாற்றி வருகின்றனர். இப்பொழுதும், ஊடகங்கள் அவ்வார்த்தை பிரயோகம் கூடாது என்றாலும், வேண்டுமென்றே உபயோகித்து வருகின்றது. பிஜேபியும் சில நேரங்களில் இதற்கு ஆதரவு காட்டுவதால், குளிர் விட்டுப் போய், அப்பிரயோகம் மறுபடியும் அதிகமாகி விட்டது. எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்.

அரசியலாக்கப் படும்தலித்பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.

©  வேதபிரகாஷ்

30-03-2022


[1]  The Hindu, Dalit Christians to protest appointment of non-Dalit Bishop as Archbishop of Archdiocese of Tamil Nadu and Pondicherry, Udhav Naig, CHENNAI, MARCH 29, 2022 20:52 IST; UPDATED: MARCH 29, 2022 20:52 IS.

[2] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-christians-to-protest-appointment-of-non-dalit-bishop-as-archbishop-of-archdiocese-of-tamil-nadu-and-pondicherry/article65271233.ece

[3] Members of the Dalit Christian Liberation Movement on Tuesday said they would launch a protest against the appointment of non-Dalit Bishop Francis Kalist as the Archbishop of Archdiocese of Cuddalore-Pondicherry in Puducherry on April 11 and April 29, when he would be consecrated as the Archbishop, citing the ‘discriminatory attitude’ against the Dalits by the Catholic Church in India in appointments of Bishops and Archbishops. DCLM claimed that the Tamil Nadu Bishop Council president Archbishop George Antonysamy and former president Archbishop Antony Pappusamy acted in a discriminatory manner against Dalits and demanded they resign from their posts taking responsibility. DCLM State president Mary John alleged the Dioceses in Tamil Nadu are dominated by Vellalar, Udayar, Vanniyar, Nadar and fisherman communities. “Most of the Bishops and Arch Bishops in Tamil Nadu-Pondicherry Dioceses routinely come from Vellalar, Udayar, Vanniyar, Nadar and Fisherman community. This is an injustice despite 75% of the Catholics in Tamil Nadu being Dalits,” he said. He claimed that only 11 out of 180 Bishops are Dalits and only 2 out of 31 Archbishops in India are Dalits. “There are 17 Bishops in Tamil Nadu and Pondicherry but only one is a Dalit. This marginalisation and exclusion is widespread in appointments, education, employment opportunities, financial assistance in the Catholic Church despite Dalits being 64% of Indian catholic population and 75% of Tamil Nadu-Pondicherry Archdiocese. This can be corrected only when Dalits are appointed as Arch Bishops and Bishops,” he said.

[4] தினமலர், பேராயரை எதிர்த்து கறுப்பு கொடி, மார்ச் 21,2022 | 12:07 IST.

[5] https://www.dinamalar.com/video_main.asp?news_id=211048&cat=1585

[6] வத்திகன் செய்தி, பாண்டிச்சேரிகடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர், 19 March 2022, 15:41.

[7] https://www.vaticannews.va/ta/pope/news/2022-03/bishop-francis-kalist-appointed-new-archbishop-pondicherry.html

[8] தினத்தந்தி, புதுவை கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம், பதிவு: மார்ச் 19,  2022 20:46 PM.

[9] https://www.dailythanthi.com/News/State/2022/03/19204631/Francis-Callist-appointed-Archbishop-of-puducherryCuddalore.vpf

[10] தினமணி, பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல், By DIN  |   Published on : 13th October 2020 02:41 AM  |  Last Updated : 13th October 2020 02:41 AM.

[11] 40 ஆண்டுகள் மேலாகி விட்டாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பெயர்களை வைத்து, அவர்களை இன்றைக்கும் அடையாளம் காணலாம். சிலர் காலமாகி விட்டனர். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது.

[12] https://www.dinamani.com/all-editions/edition-trichy/2020/oct/13/insisting-on-nominating-dalit-christians-for-peraya-posts-3484004.html

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

திசெம்பர் 24, 2021

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

முன்னுக்கு முரணான தேதிகள் குறிப்பிட்டு ஆக்கிரமிப்பை நியாயபடுத்தும் போக்கு: இந்த சர்ச்சின் பேஸ்புக் குறிப்பிடுவது, திருவண்ணாமலை மாவட்டம் வேளாங்கண்ணி[1] கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கார்மேல் மலை மாதா கோயில் ரோமன் கத்தோலிக்க வேலூர் மறைமாவட்டத்தின் வழிபாட்டில் இயங்கி வருகின்றது[2]. இளையாங்கண்ணி கிராமத்தை பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி உள்ளனர்[3]. ஏபிபி செய்தி குறிப்பிடுவது, இந்த கிராமத்தில் வனத் துறைக்கு சேர்ந்த மலையை இணைத்தவாறு 160 ஏக்கர், பரப்பளவில் 150 அடி உயர, மலை ஒன்று உள்ளது[4]. இவை அனைத்தும்  வருவாய்த்துறை ஆவணத்தில் கல்லாங்குத்து என குறிப்பிடப்பட்டுள்ளது[5]. இந்த மலையின் மீது கடந்த 1961 ஆம் அந்தபகுதி மக்கள் மூலம் மலையில் சிலுவை நட செய்துள்ளது சர்ச் நிர்வாகம். பொதுமக்கள் முன்னிறுத்தி மலைமீது இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து 1982ஆம் ஆண்டு சர்ச் கட்டப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து மலைமீது செல்வதற்கு படிக்கட்டுகள் அமைத்து, 2014ஆம் ஆண்டில்  மலையை குடைந்து மண் சாலை அமைத்து, மலை மீது மேலும் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாற்றி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த மண் சாலையை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையாக அமைக்க செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரி தலைமையில் பூமிபூஜை நடந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கடந்த 19ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்.

19-12-2021 அன்று மரக்கன்றுகள் நடுவதற்காக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்: அதாவது செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரியை வைத்து எப்படி பூமிபூஜை நடத்தினரோ, அதுபோல, இவரையும் வரவழைத்து மரக்கன்று நட சொல்லியிருப்பர் போலும். அப்போது  5 ஏக்கர் பரப்பளவில் மலையில் சர்ச் மற்றும் சிலுவை அமைக்கப்பட்டதையும்  மேலும் சில கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை  அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு துறையினர் அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் அரசு ஆவணத்தில் உள்ளது என்றும்  அந்த இடம் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் மக்களை முன்னிறுத்தி சர்ச்   நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பைக் கண்டு பிடித்து நோட்டீஸ் கொடுத்த ஆட்சியாளர்: இதையடுத்து சர்ச் கட்டப்பட்டுள்ளது இடத்தை விட்டு மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி சர்ச் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வசப்பட்டு பஞ்சாயத்துக்குட்பட்ட சவேரியார் பாளையத்தில் உள்ள மலை மீது சிலுவை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம்  இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயளாலர்  அருண்குமார் நிர்வாகிகள் அளித்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக கிறிஸ்துவ  ஜெபகூட்டங்கள் மற்றும் சர்ச் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஏழை பொது மக்களையும் குழந்தைகளையும் மனதை மாற்றி மதத்தை மாற்றி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் கொடுத்த புகார் மனு: திருவண்ணாமலை மாவட்டத்தில், அனுமதியின்றி தொற்றுநோய் போல் வளர்ந்து வரும் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடங்களை அகற்றக்கோரி, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில், கலெக்டர் முருகேசிடம் மனு அளிக்கப்பட்டது[7]. அதில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தேவாலயங்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதில், ஏழை இந்துக்களும், குழந்தைகளும் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுகின்றனர். ஒரு கும்பல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிகிறது, முக்கியமாக நோய்வாய்ப்பட்ட இந்துக்களுக்காக பிரார்த்தனை செய்து, உங்கள் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ராமகிருஷ்ணா ஓட்டல் முன், வீடு என ஆவணப்படுத்தப்பட்டு, கீழ்பென்னாத்தூரை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில், நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, இளையாங்கண்ணி பஞ்சாயத்துக்கு சொந்தமான மலை ஆக்கிரமித்துள்ளது. ந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அனுமதியற்ற பிரார்த்தனை கூடங்களை அரசு தடை செய்ய வேண்டும்.

தினமலரில் வெளியான செய்தி[8]: செங்கம் அருகே, மலையை ஆக்கிரமித்து சர்ச் விஸ்தரிப்பு செய்வது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் – தனி தொகுதிக்கு உட்பட்ட, இளையாங்கண்ணி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, 150 அடி உயர மலை மீது கார்மேல் மாதா சர்ச், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, மலை உச்சியை சமன் செய்து, சர்ச் விரிவாக்கம் செய்யும் பணியை, நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதற்காக, மலை மீது சாலை அமைக்கும் பணியை மூன்று மாதங்களுக்கு முன், செங்கம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கிரி துவக்கி வைத்தார். இந்நிலையில், அக்கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியை, நேற்று முன்தினம் கலெக்டர் முருகேஷ் துவங்கி வைத்தார். தொடர்ந்து, மலை மாதா சர்ச் பகுதியை ஆய்வு செய்ததில், மலையை சமன் செய்து விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ‘மலையை ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது’ என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மலை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, மலை மாதா சர்ச் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்[9].

© வேதபிரகாஷ்

24-12-2021


[1] வேளங்கண்ணி என்று தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறிப்பிடப் படுவது தெரிகிறது. இளங்கண்ணி என்ற சொல்லும் விசமத்தனமானது. கண்ணிக்கும் கன்னிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா அல்லது கண்ணி வைத்து இடத்தை அக்கிரமிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

[2] Elayankanni, is a village in Tiruvannmalai District, Tamil Nadu, South India. It is one of the big parishes in the Catholic Diocese of Vellore. https://www.facebook.com/MountCarmelElayankanni/

[3] Most of the people (90%) are traditional and God fearing Catholics and the rest are Hindus. More than 1200 families are living here. Each and every day these people are growing in their spirituality. Most of the people are farmers. Nearly 30 Catholic priests and more than 60 nuns are called from here to render their service to God and to the Catholic Church. They are working in different parts of India and also in many other countries. This village is abundantly blessed and protected by Our Lady of Mount Carmel, our patroness, in a special way.

https://www.facebook.com/MountCarmelElayankanni/

[4] ஏபிபி.நியூஸ், மலை மீது சிலுவை நட்டு 5 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்புசர்ச் கட்டடத்தை தவிர்த்து மற்றவற்றை அகற்ற உத்தரவு, By: V.வினோத் | Updated : 22 Dec 2021 07:58 PM (IST).

[5] https://tamil.abplive.com/crime/the-investigation-revealed-that-the-church-was-built-by-occupying-the-cross-on-the-mountain-31678

[6] அதிபன்.டிவி, முதலில் சிலுவை, பிறகு தேவாலயத்தை கட்டுங்கள்…! ஆக்கிரமிப்பு மலை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!, By athibantv -டிசம்பர் 22, 2021.

[7]https://athibantv.com/political/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/

[8] தினமலர், மலையை ஆக்கிரமித்து சர்ச்; நடவடிக்கை எடுக்க உத்தரவு, Updated : டிச 20, 2021  06:51 |  Added : டிச 20, 2021  06:49.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2917897

ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் – IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர் – நிலைமாறி பேசியது, நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (2)

ஓகஸ்ட் 4, 2021

ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால்IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர்நிலைமாறி பேசியது, நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (2)

சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) மீது குற்றஞ்சாட்டியது: இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது. FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), இந்தியாவின் கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் (CMAI) ‘மருத்துவ அறிவியலை’ தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக மதமாற்றத்தை பரப்ப 83.95 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. சமூக சேவை என்ற பெயரில் இவை நடந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ஜெயலால் இதன் ட்ரஸ்டீ ஆவார். CMAI வெளிப்படையாகவே சர்ச் மூடநம்பிக்கைகளை பரப்பிய போதும் இவட் அமைதியாகவே இருந்தார். இந்த அமைப்பின் அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கம், இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் ஜானரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மற்றும் பலரை முன்னணி படுத்துகிறது. இவர்கள் அனைவரும் தங்களுடைய மதமாற்ற நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் பற்றி மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்தை வைத்து அறுவடை செய்ய திட்டம் போட்ட கிறிஸ்தவக் கூட்டங்கள்: இந்த அமைப்பின் சார்பாக நடந்த தேசிய மாநாட்டில் அருள் அங்கெட்டல் கூறுகையில், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம். நாம் பலவித சாதனைகள் செய்து வெற்றிகளை கொண்டு வருவோம். நாம் அனைவரும் இணைந்து ஒருமனதாக சுகாதார அமைப்பின் கடவுளாக இயேசு கிறிஸ்துவை ஆக்குவோம் என்று தெரிவித்திருந்தார். படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு மேலும் மருத்துவ அறிவியலை பயன்படுத்தி மதமாற்றங்கள் செய்வதற்கு பயிற்சிகளையும் நடத்துகிறது. அவர்கள் மத சுதந்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதாவது கிறிஸ்தவ மதமாற்றம். தற்பொழுது புதிதாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து வகுப்புகளையும் இந்த அமைப்பு நடத்துகிறது. இந்த அமைப்பின் நோக்கம் மத மாற்றம், அதற்கு பாதுகாப்பு அளிப்பது, இளம் தன்னார்வலர்களும் உதவியாளர்களையும் ஒன்றிணைத்து ஆன்மீக பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆன்லைன் டிரெயினிங் நடத்தப்படுகிறது. பல வெளிநாட்டு நன்கொடை நிறுவனங்களுக்கு பினாமி போல செயல்பட்டு, மருத்துவ விஷயங்கள் மூலமாக மத மாற்றங்களை நடத்திவருகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 (1) மற்றும் FCRA சட்டங்கள் 2010-ன் கீழும் குற்றமாகும்.

கொரோனா தொற்றுக்காக என்ற போர்வையில் நிதி பெறுவது: சமூக சேவை நடவடிக்கையாக நன்கொடை பெறுவதாக கூறி சர்ச்சுகளுடனும், எவாஞ்சலிஸ்ட்களுடனும் கூட்டணி வைத்து மருத்துவ அறிவியலை பயன்படுத்தி வருவதாக LRO அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவர்கள் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு 116 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்து, விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நீதிமன்றத்திற்கு செல்லவும் தயார் என எல்லாரும் அறிவித்துள்ளனர். கிறிஸ்தவ மூடநம்பிக்கைகளையும் நவீன அலோபதி மருத்துவத்தை கலந்து தவறான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த அமைப்பின் வெளிநாட்டு நன்கொடை பதிவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது[1].

ஜூலை 11 2021: ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்[2]. அந்த வீடியோவில் அவர், “பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது போல் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். பெருங்கூட்டங்களைத் தவிர்ப்போம். அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு நாம் மூன்றாவது அலையை வரவேற்கும் எவ்வித ஆபத்தான செயலையும் செய்யாமல் இருப்போம்,” என்று கூறியுள்ளார்[3]. அதாவது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் மக்கள் ஊரடங்கு முறையில் இருக்கலாம் என்பது போல குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம். “பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது போல் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்,” என்கிறார். ஆனால், அங்கோ, அரசை மற்றும் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளதை கவனிக்கலாம்.

06-08-2021 – ஆகஸ்டில் குமுதம் ரிப்போர்ட்டரின் கதை: இப்பொழுது, “குமுதம் ரிப்போர்ட்டர்,” நடந்துள்ள சில விவகாரங்களை சுருக்கி, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பற்றி விவரத்தைக் கொடுத்துள்ளது[4]. இது அலோபதிக் மற்றும் ஆயுர்வேத முறைகள் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைகள் போன்று சித்தரித்து, செய்தியை வெளியிட்டுள்ளது. நிருபர், ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும், அதற்கு தான் சொன்ன கருத்தை திரும்ப வாங்க மாட்டேன் என்றும், வழக்கு நிலுவையில் உள்ளதான், மேற்கொண்டு எதையும் சொல்லவிரும்பவில்லை என்றாராம். இருப்பினும், முழு விவரங்களைக் கொடுக்கவில்லை. மற்ற ஆங்கில-தமிழ் ஊடகங்களும், இதைப் பற்றி அமைதியாகவே இருக்கின்றன. ஆகவே,  எவ்வாறு, கொரோனா காலங்களிலும், மருத்துவர்கள், மருத்துவ அமைப்புகள், மதம், மதப்பிரச்சாரம் போன்றவற்றை வைத்துக் கொண்டு, அரசியல் செய்கின்றன, குழப்பத்தை ஏற்படுகின்றன, சாதாரண மக்களின் நலத்தை விடுத்து, தமது கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை வைத்துக் கொண்டு செயல்படுகின்றன என்பதனை கவனிக்கலாம்.

27-07-2021 செவ்வாய் கிழமை இவரது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்டது: மேலே குறிப்பிடப் பட்ட [(Ajay Goel) Vacation Judge/ADJ-04/Dwarka Courts/SW New Delhi/03.06.2021…..] நீதிமன்ற தீர்ப்புக்கு, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மேல் முறையீடு செய்ததாகத் தெரிகிறது[5]. இருப்பினும், IMA அந்தஸ்த்தை துர்பிரயோகம் செய்து, ஆயுர்வேத முறையை விமர்சிக்கவோ, கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கோ உபயோகப் படுத்தக் கூடாது என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி 27-07-2021 அன்று செய்தது[6]. ஆகவே, இவ்வாறு விவரங்கள் வெளிவரும் பொழுது, ஊடகங்கள் வேண்டுமென்று மறைக்கலாம், ஆனால், இருக்கின்ற ஆவணங்கள் சம்பந்தப் பட்டவர்களை வெளிப்படுத்திக் காட்டி விடும். ஒரு சாதாரண பார்வையாளர், செய்திகளைப் படிப்பவர் அல்லது என்ன நடக்கிறது என்று கவனிப்பவர்களுக்கு, இதெல்லாம் விசித்திரமாகத் தான் இருக்கிறது. மெத்தப் படித்த, பொறுப்புள்ள மருத்துவர்களின் சங்கம் IMA ஆகும். அதன் தலைவர் பொறுப்பில் இருப்பவர், தான் IMA-தலைவர், மருத்துவர், IMA – உறுப்பினர், இந்திய குடிமகன், கிறிஸ்துவர் என்றெல்லாம் இருக்கும் போது, எந்நிலையில், எங்கு, அதை பேசுகிறார் என்பதை அவர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தனது நிலை மாறி பேசும் போது, அதற்கு அவர் பொறுப்பாகிறார். இங்கு, அதுதான் நடந்துள்ளது.

© வேதபிரகாஷ்

04-08-2021


[1] கதிர்.செய்தி, மதமாற்றத்திற்கு 80 கோடி? கிறிஸ்டியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆப் இந்தியா மீது புகார்!, Wednesday, 02 Jun, 9.20 am, Kathir News.

[2] தமிழ்.இந்து, சுற்றுலா, ஆன்மிக பயணத்தை தற்காலிகமாக தவிர்க்கலாம்: கரோனா மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கும் இந்திய மருத்துவக் கழகம், செய்திப்பிரிவு, Published : 12 Jul 2021 04:43 PM; Last Updated : 12 Jul 2021 04:50 PM.

[3] https://www.hindutamil.in/news/india/692335-3rd-wave-imminent-doctors-body-ima-says-tourism-pilgrimage-can-wait-2.html

[4] குமுதம் ரிப்போர்ட்டர், இந்து மருத்துவ முறைகளுக்கு ஆபத்து…? வம்பிழுக்கும் கிறிஸ்தவ அலோபதி, 06-08-2021, ப.18-19.

[5] ANI,  Delhi HC dismisses IMA President’s plea against trial court order criticising his Ayurveda remarks as ‘propagating Christianity’,  Updated: Jul 27, 2021 12:14 IST

[6] The Delhi High Court on Tuesday dismissed the appeal filed by Indian Medical Association (IMA) president Dr Johnrose Austin Jayalal challenging a trial court order that criticised his remarks on Ayurveda in an interview as allegedly “propagating Christianity“.

https://www.aninews.in/news/national/general-news/delhi-hc-dismisses-ima-presidents-plea-against-trial-court-order-criticising-his-ayurveda-remarks-as-propagating-christianity20210727121414/

கிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது கைதானது!

திசெம்பர் 1, 2019

கிறிஸ்து தாஸ் மகன், ஜான் வெஸ்லி, குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்தது, கலாட்டா செய்தது  கைதானது!

Gobi orphanage owner son created havoc with his nudity Nov.2019

ஜான் வெஸ்லி குடித்துக் கொண்டே, சிறுவர்சிறுமியர் காப்பகத்தில் நுழைந்தது: கோபி, பாரியூர் சாலையில், நஞ்சகவுண்டன்பாளையத்தில், ‘கருணை இல்லம்’ என்ற பெயரில், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது[1]. இங்கு 2 முதல் 9 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இங்கு, 25 ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்[2]. நிர்வாகியாக கிறிஸ்தாஸ், 70, உள்ளார். இவரின் மகன் ஜான் வெஸ்லி, 28; காப்பகத்துக்கு இவர், 25-11-2019 அன்று மாலை, குடிபோதையில் ஆட்டோவில்  வந்ததாக தெரிகிறது. ஜான் வெஸ்லினி என்று தினகரன் குறிப்பிடுகிறது[3]. குழந்தைகள் காப்பகம் நடத்துபவரின் மகன் எப்படி குடிக்கலாம், அவ்வாறு அவர் மகன் வளர்ந்தானா, வளர்க்கப் பட்டானா என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், ஒருவன் திடீரென்று குடிக்க மாட்டான். அது பழக்கமாகத்தான் இருக்கும். ஆட்டோவில் வந்து இறங்கினான் என்பது, அவனது பழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. ஆட்டோவில் இருந்து இறங்கும்போதே அவர் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் குழந்தைகள் அலறியடித்து ஓடினர்.

Gobi orphanage - Tamil Murasu, Nov.2019

குடிபோதையில் யாரும் இல்லை என மற்றொரு காப்பக நிர்வாகி கூறினார்: இதுகுறித்து கோபி டி.எஸ்.பி., தங்கவேல், தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் போனது. இருவரும் அங்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் ரெஜிகுமார் காப்பகத்திற்கு வந்து விசாரணை செய்தபோது, குடிபோதையில் யாரும் இல்லை என மற்றொரு காப்பக நிர்வாகி கூறினார்[4]. இது பொய் என்று நன்றாகவே தெரிகிறது. ஒருவேளை அந்த “இன்னொரு நிர்வாகி” வக்காலத்து வாங்கினார் என்று தெரிகிறது. இதற்கிடையே, தகவல் அறிந்து 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காப்பகம் முன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்து முன்னணியினர், பாஜகவினரும் அதில் இருந்தனர் என்று தினகரன் எடுத்துக் காட்டுகிறது. சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காப்பக நிர்வாகியின் மகனை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்[5].

Gobi orphanage - public protest, Nov.2019

பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது: வெஸ்லிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த மக்களிடம் சமாதானம் பேசினர். பின், காப்பகத்தில் இருந்த வெஸ்லியை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் விஜயகுமார், அங்குள்ள குழந்தைகளிடம் விசாரணை நடத்தினார். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார், காப்பக நிர்வாகியின் மகனை பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பின்னர், பொது இடத்தில் தகராறு செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர் என்கிறது தினகரன். குழந்தைகள் வன்கொடுமை போக்ஸோவில் பதிவு செய்யாதது கவனிக்கத் தக்கது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “பெண் குழந்தைகள் உள்ள காப்பகத்திற்குள் குடிபோதையில் தினமும் காப்பக நிர்வாகியின் மகன் வருவது பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக காப்பக அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’’ என்றனர்.

Half naked drunkard entered Children home 27-11-2019

குழந்தை ஆபாசப் படம் அதிகம் பார்ப்பது தமிழ்நாட்டில் தான்: உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது[6]. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன[7]. இதனையடுத்து, ஆய்வில் இறங்கிய அந்த அமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது[8]. அந்த அறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்கும் அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் என கூறப்பட்டுள்ளது[9].

Child porn India Tamilnadu, Nov.2019

இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது[10]. அதன் படி, மத்திய உள்துறை தமிழக போலீசுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது[11].  முன்னர் அதிக அளவில் அமெரிக்க பிடோபைல்கள் சென்னையிலிருந்து கைதாகினர். குழந்தைகள் காப்பகங்கள் அவகளுக்கு தீனி போட்டது. பாலியல் வன்மையுன் புணர்ந்து அனுபவித்து, ஆபாசப் படங்களையும் எடுத்தனர். வில்ஹியூம் அதற்கு சிறந்த உதாரணம். அந்நிலையில், சென்னை இதில் சிக்கியுள்ளது கவனிக்கத் தக்கது. ஒரு வேளை, அவர்கள் பிடோபைல் ஆனதற்கு சென்னை தான் காரணம், சென்னையில் அத்தகைய வசதிகள் உள்ளன அல்லது ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றன என்றும் குற்றஞ்சாட்டப்படும் போலிருக்கிறது.

YC Dass and John Wesley Mercy Home Gobi

ஒரு குழந்தைகள் காப்பகம் நடத்துகின்றனர் மகன் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது சாத்தியமான குற்றமே: மறுபடியும் குழந்தைகள் காப்பகங்கள் விவகாரத்தில், ஒருவர் நிர்வாண கோலத்தில் உள்ளே நுழைந்தான், பெண் குழந்தைகள் பயந்து ஓடினார்கள், என்று செய்திகள் கூறுகின்றன. இதிலும் சம்பந்தப்பட்டவர்கள் கிருத்துவர்களாகவே இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் சேவை செய்கிறார்களா அல்லது இத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. கருணை இல்லத்தை பற்றிய செய்திகள் முன்னர் நல்ல விதமாகவே இருக்கின்றன. ஆதரவற்றவர்களுக்கு உதவியதாக தெரிய வருகிறது. ஆனால், இப்படி திடீரென்று பாலியல் சதாய்ப்பு, போன்ற கோணத்தில் செய்தி வருவது திகைப்பாக இருக்கிறது. மேலும் தமிழ் ஊடகங்களில், சில இதனை செய்தியாக வெளியிட்டு இருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் செய்தி வரவில்லை என்று தெரிகிறது. எது எப்படியாகிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இங்கு கூட சிலர் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் அவரது ஜாமீன் பெற்று வெளியில் வரலாம் அல்லது வழக்கை நீர்த்துப் போகுமாறும் செய்யலாம். ஆகவே, இத்தகைய பாலியல் ரீதியான குற்றங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிய தண்டனைக்கு குற்றவாளிகள் உள்ளாக்கப்பட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் திருந்த மாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

01-12-2019

Gobi orphanage - Dass Nov.2019

[1] தினமலர், குடிபோதையில் வந்த காப்பக நிர்வாகியின் மகனுக்கு எதிர்ப்பு, Added : நவ 26, 2019 08:16

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2420021

[3] தினகரன், குழந்தைகள் காப்பகத்திற்குள் குடிபோதையில் அரை நிர்வாணமாக நுழைந்த நிர்வாகி மகன் கைது, புதன், நவம்பர் 27, 2019.

[4] தமிழ்.முரசு, மது போதையில் அரைகுறை ஆடையுடன் காப்பகத்தில் புகுந்த வாலிபர்: பெண் குழந்தைகள் அலறியடித்து ஓட்டம், 11/26/2019 3:30:51 PM

[5] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126891

[6] தினத்தந்தி, குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் பட்டியல் : சென்னை முதலிடம், பதிவு : நவம்பர் 30, 2019, 03:04 AM

[7] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/30030458/1059753/Most-viewed-list–child-pornography-Chennai-First.vpf

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஆபாச வீடியோக்கள் பார்ப்பதில் முதலிடம் பிடித்த சென்னை..!! வீடு தேடி வந்து அலேக்காக தூக்க தயாராகும் போலீஸ்..!!, By Ezhilarasan Babu, Chennai, First Published 30, Nov 2019, 5:39 PM IST..

[9] https://tamil.asianetnews.com/crime/tamilnadu-have-no-1-for-child-porn-video-viewership-particularly-chennai-has-been-lead-in-list-q1s74c

[10] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், .’சென்னைக்கு முதலிடம்‘…’ஆபாச படம் பாக்குறவங்க லிஸ்ட் ரெடி‘…’ஐபி அட்ரஸ் வந்தாச்சு‘…அதிரடி நடவடிக்கை!, By Jeno | Nov 30, 2019 03:52 PM

[11] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-tops-globally-in-child-pornography-viewers-says-report.html

மார்ட்டீன் சௌரியப்பன், ரசாயனத்தில் பிஎச்டி செய்யும் மாணவன், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” கிருத்துவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது நல்லது!

ஒக்ரோபர் 23, 2019

மார்ட்டீன் சௌரியப்பன், ரசாயனத்தில் பிஎச்டி செய்யும் மாணவன், தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” கிருத்துவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது நல்லது!

Pastor -Martin, committed suicide vyasar padi, 22-10-2019.

இன்னொரு பாஸ்டர் தற்கொலை செய்து கொள்வது: மறுபடியும், இன்னொரு பாஸ்டர் சர்ச்சில், சர்ச்-வளாகத்தில் இறந்திருக்கிறார். இது இயற்கையாகவே இருக்கலாம், தனிப்பட்ட விசயமாகக் கூட இருக்கலாம். ஆனால், அடிக்கடி நடப்பது கவலையாக, திகைப்பாக மற்றும் வித்தியாசமாக இருக்கிறது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் புனித அந்தோணியார் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது[1]. இந்த தேவாலயத்தில் கிளிம்டன் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார்[2]. இவருக்கு உதவியாக ஸ்ரீபெரும்புதூர் பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான மார்ட்டின் சௌரியப்பன் (Fr C Martin Sowriyappan வயது 37), என்பவர் உதவி பாதிரியாராக இருந்து வந்தார்[3]. M.Sc chemistry பட்டம் கொண்டவர், சென்னை பல்கலைக் கழகத்தில் மேற் படிப்பு பிஎச்.டி படித்து வந்தார்[4]. சர்ச்சில் உள்ள ஒரு அறையில் தங்கி படித்து வந்தார்.  விஞ்ஞானம் படிக்கும் மாணவனுக்கு, இறையியலில் நம்பிக்கையா அல்லது, சர்ச்சில் அறை இருக்கிறது என்று தங்கி இருந்தாரா என்று தெரியவில்லை.

Pastor -Martin, committed suicide vyasar padi, 22-10-2019.News7

இரவு தூங்கச் சென்றவர் எழவில்லை: அக்டோபர் 21, 2019 அன்று இரவு தேவாலயத்தில் வழக்கம்போல் பிரார்த்தனை முடிந்து, அனைவரும் சென்ற பிறகு தேவாலய வளாகத்தில் உள்ள அறையில் மார்ட்டின் தூங்கச்சென்றார்[5]. இதையடுத்து 22ம் தேதி காலை சர்ச்சில் நடக்கும் பூஜைக்கு வரவில்லை[6]. ஆக சர்ச்சில் இருப்பதால், துணை பாதிரியாராக இருப்பதால், எல்லா சடங்குகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கடமை இருப்ப்சது தெரிகிறது. நீண்டநேரமாகியும் மார்ட்டின் அறையை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த கிளிம்டன் அறைக்கு சென்று பார்த்தார். கதவு உட்பக்கமாக தாழிடப் பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த கிளிம்டன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். வேறு ஒரு சாவியை வைத்து / மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தனர் என்று “புதிய தலைமுறை” கூறுகிறது[7]. அங்கு மார்ட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கிளிம்டன் வியாசர்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாகவே மார்டின் அனைவரிடத்திலும் சகஜமாக பேசாமல் மனச்சோர்வுடன் இருந்ததாகவும், எதனால் இந்த முடிவுக்கு வந்தார் என தெரியவில்லை எனவும் அவருடன் பழகியவர்கள் தெரிவித்தனர்[8]. உடல் ஆரோக்கிய விசயமாக என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” கூறுகிறது. தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன் பின்னர், மார்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[9]. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மார்ட்டின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. உதவி பாதிரியார் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Pastor committed suicide vyasar padi, 22-10-2019

எல்லா வசதிகளையும் கொண்ட கிருத்துவர்கள் எப்படி மாணவர்களை இந்நிலைக்கு செல்ல விடுகிறார்கள்?: கிருத்துவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், போன்ற இடங்களில் மனோதத்துவ ரீதியில் செயல்பட்டு வருகிறார்கள். சர்ச்ச்சுகளிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்- ஆலோசனை கூறுதல் போன்ற காரியங்களில் கிருத்துவ மதக்குருக்கள், பாஸ்டர்கள் மற்றும் பாதிரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அது போன்றே மற்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பாவமன்னிப்பு விஷயங்களிலும் அவர்கள் ஆலோசனை என்ற பெயரில் அறிவுரை வழங்கி வருகிறார்கள். ஆரோக்கியம், உடல்நிலை அல்லது மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து இருந்தாலும் அவர்களுக்கு பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இருப்பதாலும், அவர்களே பெரிய மருத்துவர்களாகவும் இருப்பதால், அம்மாணவனுக்கு, உரிய ஆலோசன, மர்ய்த்துவ சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி தற்கொலை கொண்டான் என்பது விசித்திரமாக இருக்கிறது.

Pastor -Martin,preventing pastor suicide

கிருத்துவர் தங்களை சரிசெய்து கொண்டு கட்டுக் கோப்பாக இருக்கலாம்: கிருத்துவர்கள் தங்களுக்கு இவ்வாறான சகல வசதிகளும், வாய்ப்புகளும், இருக்கின்ற நிலையில் மெத்தப் படித்லொரு மாணவனை காப்பாற்ற முடியவில்லை என்ற நிலையில், அவர்கள் மற்ற மதத்தினரை மாற்ற வேண்டும், மதமாற்ற வேண்டும் என்ற செயல்களில் ஈடுபடுவது எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவர்கள் தமது கொள்கைகளில் விசுவாசம், நம்பிக்கை கொண்டவர்களை, அவர்களது மனநிலை உடல்நிலை முதலியவற்றை அவர்களால் சரி செய்ய முடியவில்லை அல்லது கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்று நிலையில், மற்றவர்களை மதமாற்றி, மேலும் தங்களது ஜனத்தொகையை பெருக்கிக் கொள்வதில் என்ன பலன், இதனால் அவர்களது விசுவாசம்-நம்பிக்கை வளர்கிறதா அல்லது வெறெந்த பலன் உள்ளதா போன்ற கேள்விகள் எழுகின்றன. அவர்களுக்கு வேறு திட்டம் ஏதாவது இருக்கின்றதா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆகவே, தன்களது நம்பிக்கை-விசுவாசத்தைக் காப்பது தான் நல்லது என்று தெரிகிறது. இது எல்லா மதங்களிலும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. உலகம் முழுவதும் அதிகம் ஆதிக்கம், பண-பலம் கொண்ட கிருத்துவர்கள், தங்களது மத நிறுவனங்கள், மடாலயங்கள் மற்ற அவற்றின் நிர்வாகத்தில் உள்ளவர்களை. ஒழுக்கமாக வைத்துக் கொள்வது தான் சால சிறந்தது என்று தெரிகிறது.

Pastor -Martin,preventing pastor suicide-2

சர்ச்சுகளுக்கு, பாஸ்டர்களின் தற்கொலையை தடுக்க பொறுப்புள்ளது: இதை பற்றி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, அவர்கள் தற்கொலை தடுக்க வழிமுறைகள் என்ன என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர் அவற்றிலும் சில முக்கியமான முடிவுகள் எடுத்துக் காட்டப் படுகின்றன-

  1. முதலில் விசுவாசம் என்று எப்படி தனக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோமோ, அதேபோல அந்த பாஸ்டருக்கும் அவனுடைய குடும்பத்தினர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  2. ஏதாவது விமர்சனம் வந்தால் அதை உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
  3. குறைந்த பட்சம் மூன்று வாரம் ஒரு முறை அதாவது சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஒரு வருடத்தில் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவன் தனியாகவோ அல்லது தனது குடும்பத்தாருடனோ பொழுதை கழிக்க முடியும்.
  4. அதேபோல ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நான்கு மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்பட வேண்டும்.
  5. அவர்களுக்கும் ஆலோசனை கொடுக்கப் பட வேண்டும் அதாவது மனம்-உடல் ரீதியில் ஆலோசன மற்றும் ஆஹரவு கொடுக்கப் படவேண்டும்.
  6. சடங்குகள் முதலியவற்றில் அவருக்கே உரித்தான பணம் கிடைக்க வழிசெய்ய வேண்டு.

மேலே கூறியபடி சர்ச்சுகள் தங்களது விசுவாசிகளை ஒழுங்காக வைத்துக் கொண்டால் போதும்.  இந்தியாவில் மற்ற பிரச்சனைகளை தலையிட வேண்டிய அவசியமில்லை.

 

© வேதபிரகாஷ்

23-10-2019.

Pastor -Martin,preventing pastor suicide-3

[1] தினத்தந்தி, வியாசர்பாடியில் தேவாலய வளாகத்தில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை, பதிவு: அக்டோபர் 23, 2019 04:00 AM

[2] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/23005728/At-the-church-complex-in-Vyasarpadi-The-priest-commits.vpf

[3] Times of India, Pastor found hanging on church premises, tnn | Updated: Oct 23, 2019, 4:13 IST.

[4] https://timesofindia.indiatimes.com/city/chennai/pastor-found-hanging-on-church-premises/articleshow/71712356.cms

[5] News7, தேவாலய வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட பாதிரியார் !, October 22, 2019, By : Niruban.

[6] https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/22/10/2019/suicide

[7] புதியதலைமுறை, பாதிரியார் தூக்கிட்டு தற்கொலைபோலீசார் விசாரணை, Web Team Published : 22 Oct, 2019 08:11 pm.

[8] http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73714-chennai-based-church-father-commits-suicide.html

[9] தினகரன், சர்ச் அறையில் தூக்கிட்டு பாதிரியார் தற்கொலை: போலீஸ் விசாரணை, 2019-10-23@ 00:32:31

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535498