Archive for the ‘ஸ்டாலின்’ Category

செக்யூலரிஸ, திராவிடத்துவ, பெரியாரிஸ அரசு கிறிஸ்தவ ஆதரவாகப் பேசிவரும் நிலையில், கிறிஸ்தவ பாதிரிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களை செய்து வருவது ஏன்?

ஒக்ரோபர் 2, 2023

செக்யூலரிஸ, திராவிடத்துவ, பெரியாரிஸ அரசு கிறிஸ்தவ ஆதரவாகப் பேசி வரும் நிலையில், கிறிஸ்தவ பாதிரிகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களை செய்து வருவது ஏன்?

கிறிஸ்தவ சர்ச்சுகள் பெருகுவது, பெருக்குவது அவர்களது பலத்தை அல்லது பலவீனத்தைக் காட்டுகிறதா?: திருநெல்வேலி, கன்யாகுமரி பகுதிகளில் சர்ச்சுகள், சர்ச்சுகளில் பாலியல் விவகாரங்கள், செக்ச் வக்கிரங்கள், பிடோபைல் குற்றங்கள் என்று வகைவகையாக சட்டமீறல்கள் செய்திகளாக வருவது சகஜமாகி விட்டது. இதற்கு சர்ச்சுகளோ, கிறிஸ்தவ உயர் தலைவர்கள், முதலியோரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும், இத்தகைய செக்ஸ் வக்கிரங்களைத் தடுக்க வேண்டும் என்ற அமைப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேன்மேலும் அத்தகைய குற்றங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசிப்பவர் ஜெகன்,39 வயதானவர்[1]. இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். குமரி மாவட்டம் தச்சநல்லுாரில், அருணாச்சலம் என்பவரது இடத்தில், சீயோனின் கோட்டை என்ற பெயரில் சர்ச் நடத்தி வந்தார், போதகம் நடத்தி வருகிறார்[2]. இவ்வாறு ஆளுக்கு ஆள் ஏதோ சர்ச்சை ஆரம்பித்து, தங்களது வேலைகளை செய்யலாம், எந்த கட்டுப்பாடும் இல்லையா போன்ற விவகாரங்களும் புரிவதில்லை.

குறிப்பிட்ட விதவை பெண்ணை தொல்லைக்கு உண்டாக்கியது: இருப்பினும், ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஆட்கள் வருவது, அல்லேலுயா என்று கத்துவது, போன்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தனியாக தொலைவில், ஒரு இடத்தில் நடக்கும் பட்சத்தில் யாரும் கண்டுகொள்வதில்லை. சுற்றிலும் வீடுகள் இருந்து, மற்றர்களுக்கு தொந்தரவு ஆகும் பட்சத்தில் புகார் கொடுக்கப் படுகிறது. இங்கு, வழிபாட்டிற்கு வந்த, 39 வயது / 40 வயது பெண் வந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்பொழுது, அப்பெண்ணின் தொடர்புக்கு என்று மொபைல் போன் எண்ணை பாதிரியார் வாங்கி இருந்தார்[4]. முதலில் சாதாரணமாக பேசி வந்தாராம். அப்பெண்ணும் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற பெண்களை விடுத்து, இந்த பெண்ணை ஏன் குறி வைத்தார் என்பதெல்லாம் கடவுளுக்கும், பாதிரியாருக்கும் தான் தெரியும் போலிருக்கிறது. கடவுளை நம்பும் இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா, எப்படி பெண்களை இவ்வாறு கொடுமைப் படுத்துகின்றனர் என்பதும் புரியவில்லை.

பாதிரி பாலியல் தொல்லை கொடுத்த விதம்: பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை அறிந்த பாதிரியார், தினமும் மொபைல் போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்[5]. அதாவது விதவைகளுக்கு அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பதை சர்ச் ஏற்கிறதா என்பதையும் ஆராய வேண்டியுளளது. “சொசைடி ஆப் ஜீசஸ்” போன்ற பாதிரிகளுக்கு விதவைகளை குறி வைக்க வேண்டும் என்று குறிப்புகள் இருப்பதாக எடுத்துக் காட்டப் படுகிறது. நாளுக்கு நாள் இந்த டார்ச்சர் அதிகமாகிய போது, மனமுடைந்த வாழ்க்கையில் வெறுப்படைந்தாள்[6]. பெண், 30-09-2023 சனிக்கிழமை அன்று 40க்கும் மேற்பட்ட துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்[7]. இந்த அளவுக்கு நடந்திருக்கிறது எனும் பொழுது, அப்பாதிரி எப்படி பொறுப்பற்ற முறையில் இருந்துள்ளான் என்பதும் நோக்கத் தக்கது. வீட்டில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை, உறவினர்கள் மீட்டி, ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்[8]. ஆக, இங்கிருந்து தான் உண்மை வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆனால், முழு செய்திகள் வெளிவராதலால், அவை மறைக்கப் படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.

தேடப் பட்ட பாதிரி மாட்டிக் கொண்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும்: அந்த பாதிரியாரின் பாலியல் தொல்லைப் பற்றி, இது குறித்து தச்சநல்லூர் போலீஸாரிடம் புகார் கொடுக்கப் பட்டது[9]. முதலில் அந்த ஆள் காணவில்லை, போலீசார் தேடி வந்தனர், என்றெல்லாம் செய்திகள் வந்தன[10]. பிறகு, மாட்டிக் கொண்டான், கைது என்று செய்திகள் வெளியிடப் பட்டன[11]. விசாரணை நடத்திய பிறகு, பாதிரியார் ஜெகனை தச்சநல்லுார் தற்கொலைக்குத் தூண்டியதாக, போலீசார் கைது செய்தனர்[12]. அதாவது செல்போன் பரிசோதனை செய்யப் பட்டது, தொந்தரவு செய்தது நிரூபனம் ஆனது, மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டு வந்தது, போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டது எல்லாம் புரிந்து கொள்ளலாம். அதே போல, இந்த பாதிரியாரை குறிப்பிட்ட சர்ச் தள்ளிவைத்ததா இல்லையா, இந்த ஆபாசத்திற்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது என்பதெல்லாம், கர்த்தர், மேரி, ஜோசப் அல்லது எந்த அப்போஸ்தலர் யார் என்று தெரியவில்லை.

செக்யூலரிஸ தமிழகமா, நாத்திக இந்துவிரோதமா, கிறிஸ்தவ ஆதரவா?: சமீபத்தில் வரை தொடர்ந்து தமிழக சபாநாயகர், முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், இந்து அறநிலைய அமைச்சர் உட்பட கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக அதே நேரத்தில் இந்துமதத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். அந்நிலையில், எப்படி கிறிஸ்தவர்கள் இத்தகைய குற்றங்களை செய்து வருகிறார்கள் என்று அவர்களால் விளக்கம் அளிக்க முடியுமா, விளக்கம் அளிப்பார்களா? செக்யூலரிஸம் எனும்பொழுது, அவர்களது நாத்திகம் இந்துவிரோதமாகத் தான் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது, இவ்வாறு மற்ற பல விவகாரங்களிலும் அதே போக்குக் காணப் படுகிறது. நாத்திகம், பெரியாரி\சம் பேசும் தமிழக அரசு, அப்படியே செக்யூலரிஸத்துடன் செயல்பட்டால், எல்லோருக்கும் நல்லது.

© வேதபிரகாஷ்

02-10-2023


[1] தமிழ்.கெட்.லோகலாப், நெல்லை: பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த பாதிரியார், By MEERAN, Oct 02, 2023, 11:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thirunelveli/nellai-city/the-priest-who-disturbed-the-woman-11620865

[3] தினமலர், பாலியல் தொல்லை: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: அக் 02,2023 07:31

[4] https://m.dinamalar.com/detail.php?id=3446649

[5] மாலைமலர், 40 துாக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்ற பெண்போனில் ஆபாச தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது புகார், அக்டோபர் 1, 2023, 4.35 PM

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-teachers-continue-protest-as-talks-with-minister-fail-669754?infinitescroll=1

[7] தமிழ்.இந்தியா.ஒன், தினமும் செல்போனில் அந்த மாதிரி பேசி டார்ச்சர்தூக்கமாத்திரையை போட்ட பெண்.. வசமாக சிக்கிய பாதிரியார், By Velmurugan P Updated: Monday, October 2, 2023, 13:17 [IST]

[8] https://tamil.oneindia.com/news/thirunelveli/harassing-woman-who-came-to-worship-by-talking-on-cell-phone-nellai-priest-arrested-544349.html

[9] தினத்தந்தி, பெண் தற்கொலை முயற்சி; மத போதகருக்கு வலை வீச்சு, அக்டோபர் 2, 2023, .02.53 PM

[10] https://www.dailythanthi.com/News/State/female-suicide-attempt-attack-on-the-religious-teacher-1064475

[11] சமயம், நெல்லையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடும் பெண்!, Curated By அன்னபூரணி L | Samayam Tamil | Updated: 2 Oct 2023, 3:56 pm

[12] https://tamil.samayam.com/latest-news/tirunelveli/the-woman-attempted-suicide-due-to-the-priest-who-sexually-molested-her-in-nellai/articleshow/104106584.cms

‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஜூன் 21, 2022

அறியப்படாத கிறிஸ்தவம்என்ற புத்தகம், நிவேதிதா லூயிஸ், ஸ்டாலின், கவிதா ராமு, கிழக்குப் பதிப்பகம் (1)

ஸ்டாலின், கவிதா ராமு முதலியோர் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கிய ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூல் தொடா்பாக எழுந்த சா்ச்சை 13-06-2022 திங்கள்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது[1]. கடந்த 8ஆம் தேதி (08-06-2022, புதன் கிழமை) புதுக்கோட்டை வந்த முதல்வா் ஸ்டாலினை வரவேற்ற ஆட்சியா் கவிதா ராமு, அவரது தோழி நிவேதிதா லூயிஸ் எழுதிய ’அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைப் பரிசளித்தார்[2]. மேலும் அப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[3]. இதையடுத்து, இதுதொடா்பான சா்ச்சை எழுந்தது. கடந்த 11ஆம் தேதி [11-06-2022] மாவட்ட பாஜக தலைவா் பிஆா். செல்வம் அழகப்பன், முதல்வா் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் மத வேற்றுமையை விதைக்கும் வகையில் செயல்பட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்[4]. ஸ்டாலின் மாலை / சால்வை பதிலாக புத்தகம் கொடுக்கலாம் என்று ஐடியா கொடுத்திருந்தார். ஆனால், அதுவே “திராவிட மாடலில்” சர்ச்சையில் தான் சென்று கொண்டிருக்கிறது[5].

வழக்கம் போல இடதுசாரி போர்வையில் வகையறாக்கள் ஆதரவு: இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், பொதுச்செயலா் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், இந்நூல், கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் உள் முரண்களையும், மோதல்கள் குறித்தும் ஓரச்சார்பின்றிப் பேசுகிறது. எனவே, ஆட்சியா் நடுநிலை தவறிவிட்டார் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனா்[6]. இதேபோல, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து, புத்தகத்தின் அட்டை, தலைப்பை வைத்துக் கொண்டு, அப்புத்தகம் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்கிறது என்ற முடிவுக்கு பாஜகவினா் வர வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்[7]. ஆனால், வலதுசாரி இயக்கத்தினர் வழக்கம் போல, எதிர்மறை பிரச்சாரம் செய்து விளம்பரம் கொடுத்துள்ளனர் எனலாம். அவர்களிடத்தில் இத்தகைய ஆளுமையும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இந்தச் சூழலில், ஆட்சியா் கவிதா ராமு தனது முகநூல் பதிவை அகற்றியுள்ளதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மாவட்ட பாஜக தலைவா் செல்வம் அழகப்பன் திங்கள்கிழமை 13-06-2022 ஆட்சியருக்கு ஒரு கடிதம் அளித்துள்ளார்[8]. அத்துடன் கவிஞா் கண்ணதாசன் எழுதிய ‘அா்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நூலை ஆட்சியருக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்[9]. பரிசளிக்கப்பட்ட நூல் குறித்து எழுந்த சா்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது[10]. இப்படியாக ஊடகங்கள் தலைப்பை மட்டும் மாற்றி, அரைத்த மாவையே அரைத்து ஊற்றியுள்ளன[11]. இதில் யாராவது அப்புத்தகத்தைப் படித்து, எழுதியுள்ளார்களா என்று தெரியவில்லை.

எஸ்.வி.ராஜதுரையின் ஆதரவுபிரீமியம்கட்டுரை[12]: தமிழ்நாட்டின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் என்று பொதுமக்களிடம் நற்பெயர் எடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு முதல்வருக்கு விடுத்துள்ளார், அந்த மாவட்ட பாஜக தலைவர்[13]. ஆட்சியர் செய்த குற்றம் என்ன? – இரு பாகங்கள் கொண்டதும், நிவேதிதா லூயிஸ் எழுதியதுமான ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ என்ற நூலைத் தமிழக முதல்வருக்கு அவர் பரிசாக அளித்ததுடன் அதற்கான காரணத்தை ஆட்சியரின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் என்பதுதான்![14]சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல், அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பில் உள்ள மாவட்ட கலெக்டர், ஒரு மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்,” என்று அத்தலைவர் தன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாகவும், இதனால் ஒரு பெரும் ‘சர்ச்சை’ வெடித்துள்ளதாகவும், ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது[15].

மார்க்சீய காந்தியின் முன்னுரை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீதான பாஜக தலைவரின் குற்றச்சாட்டு, அந்த நூல் மீதும் அதை எழுதியவர் மீதுமான குற்றச்சாட்டுமாகும். .‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், “நேருவின், காந்தியின், போஸின் இந்தியாவின் ஒரு துளிஎன்று அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும், “என் பெயர் நான் விரும்பியோ, விரும்பாமலோ என் அடையாளமாகிவிட்டது. அதை நான் மாற்றுவதற்கில்லை. ஆனால், அது என் மதம், சாதி சார்ந்த அடையாளமல்ல,” என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை, “கிறிஸ்தவம் என்ற மதம் இம்மண்ணில் வெளியிலிருந்து வந்ததே என்பதை மறுப்பதற்கில்லைஇதுதான் என் மண். இந்த நிலம் என் மூதாதையர்களின் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த நிலம். தமிழ் எங்கள் அடையாளம், உயிர் மூச்சு. அந்த உணர்வே முதல். மற்றவை எல்லாம்அது சாதியாகட்டும், மதமாகட்டும், பின்னர்தான்தமிழக தேவாலயங்களுக்கானகைடு புக்அல்ல இந்நூல்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்[16].

© வேதபிரகாஷ்

21-06-2022


[1] தினமணி, முதல்வருக்கு நூல் பரிசளிப்புசா்ச்சைக்கு ஆட்சியா் முடிவு, By DIN  |   Published On : 14th June 2022 12:36 AM  |   Last Updated : 14th June 2022 12:36 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2022/jun/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3861607.html

[3] கதிர்.நியூஸ், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ புத்தகத்தை பரிசளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!, By : Thangavelu  |  12 June 2022 4:30 PM.

[4]https://kathir.news/tamil-nadu/–1373752

[5]  பாலகிருஷ்ணனின் புத்தகம் ஊக்குவிக்கப் பட்டு, வியாபாரம் நடக்கிறது. ஸ்டாலினே, அப்புத்தகத்தை மற்ற அரசியல் தலைவர்களுக்குக் கொடுத்து வருவதை கவனிக்கலாம்.

[6] NEWS18 TAMIL, முதல்வர் ஸ்டாலினிடம் கிறிஸ்தவ புத்தகம் கொடுத்த கவிதா ஐஏஎஸ்அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பாஜக பதிலடி, LAST UPDATED : JUNE 14, 2022, 10:38 IST.

[7] https://tamil.news18.com/news/pudukkottai/kavita-ias-who-gave-christian-book-to-chief-minister-stalin-rather-bjp-gave-arthamulla-indhumadham-sur-758015.html

[8] ஏசியாநெட்.நியூஸ், முதல்வருக்கு கிறிஸ்தவ மத புத்தகம் வழங்கிய கலெக்டர்.. அர்த்த முள்ள இந்து மதம் புத்தகம் கொடுத்து அலறவிட்ட பாஜக.Ezhilarasan Babu, Chennai, First Published Jun 14, 2022, 1:32 PM IST; Last Updated Jun 14, 2022, 1:32 PM IST.

[9] https://tamil.asianetnews.com/politics/the-collector-who-gave-a-christian-religious-book-to-the-chief-minister-the-bjp-who-gave-a-meaningful-hindu-religious-book–rdgjo1

[10] தமிழ்.ஒன்.இந்தியா, ஸ்டாலினிடம்கிறிஸ்துவபுத்தகத்தை தந்த கவிதா ஐஏஎஸ்! சீறிய பாஜக.. அர்த்தமுள்ள இந்துமதம் தந்து பதிலடி, By Shyamsundar I Published: Monday, June 13, 2022, 13:40 [IST]

[11] https://tamil.oneindia.com/news/chennai/bjp-opposes-pudukottai-ias-kavitha-ramu-for-giving-a-christian-book-cm-stalin-462035.html

[12] அதாவது, காசு கொடுத்து தான், இந்த செய்தியைப் படிக்க முடியும். அவர் / அவாள் பொதுவுடமை எல்லாம் பேசலாம், ஆனால் காசில்லை என்றால், கம்யூனிஸம்-மார்க்சிஸம் எல்லாம் பேசாது.

[13] தமிழ்.இந்து, அறிவுத் தளத்தின் மீது இன்னொரு தாக்குதல், எஸ்.வி.ராஜதுரை, Published : 15 Jun 2022 07:56 AM; Last Updated : 15 Jun 2022 07:56 AM

[14] https://www.hindutamil.in/news/opinion/columns/814163-knowledge-base.html

[15] தமிழ்நாடு.லைவ்.நியூஸ், முதல்வருக்கு பரிசாக அளிக்கப்பட்ட நூலை முன்வைத்து பாஜகசர்ச்சை‘ – அறியாமையா, அரசியல் ஆதாயமா? – Hindu Tamil, சனி, ஜூன் 18 2022

[16]http://tnlivenews.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

மார்ச் 31, 2022

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

29-03-2022 அன்று நடந்த சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?

தனிப்பட்ட பிரார்த்தனை, வழிபாடுகளுக்கு பிரச்சினை இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ, சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளனர். அதே சமயம், சிறுபான்மையின மக்கள் ஆராதனை, வேண்டுதல் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எந்த அளவுக்கு சமூக அமைதி நிலவுகிறதோ, அந்த அளவுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சமூக அமைதியை சீர்குலைக்கவும், மக்களை மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.

29-03-2022 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், வங்கி கிளை வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். சிறுபான்மை இன மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டும் மேடை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துறந்துவிட்டு தான் செல்ல வேண்டும். முதல்வரின் எண்ணமும் அதுதான். மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.

 “அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையின மக்களுக்கு உரிமை இருப்பது போல், கடமைகளும் உள்ளன. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்; நாமும் அவர்களால் வாழ வேண்டும். பிற சமூக மக்களுக்கும் உதவிகளை செய்து, மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். ஜாதி, மதத்தை மறந்து, எல்லாரும் தமிழர்களாக ஒன்றிணைந்து, எழுந்து நிற்க வேண்டும்.அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி, அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது. கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின் கட்ட வேண்டும். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, மத பிரசாரம் செய்வது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தமிழ்.இந்து,  மத ரீதியாக மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர்பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு, டி.ஜி.ரகுபதி, Published : 29 Mar 2022 22:04 pm; Updated : 29 Mar 2022 22:04 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/782764-some-are-trying-to-divide-the-people-religiously-and-do-politics-accuses-peter-alphonse.html

[3] தினமலர், அரசு நிலத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாதுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் அறிவுரை,  Added : மார் 31, 2022  00:52.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2995988

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

மார்ச் 22, 2022

ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்? – நடந்து முடிந்த பிரச்சினையைப் புரட்டுவது என்?

நசரேத் சிஎஸ்ஐ சர்ச் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் சளைத்தது அல்ல: நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் பிரச்சினை நடந்து முடிந்து விட்ட நிலையில், இப்பொழுது “குமுதம் ரிப்போர்ட்டர்” செய்தி-கட்டுரை வெளியிட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது[1]. குளோபல் மிஷனரி சொசைடி நடத்தி வருவதாகவும், அதில் பிரச்சினையுள்ளதாகவும் எஸ்.அண்ணாதுரை நிருபர் விளக்குகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கீதா ஜீவன் மூலம், கனிமொழி உதவியுடன் பிரச்சினையை சுமுகமாக்கி விட்டது போலிருக்கிறது. பிஷப்பும் ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிதி கொடுப்பது போல சந்தித்தாகி விட்டது. ஆக தேவசஹாயமும், சஹாயமாகி விட்டார், சமரசமாகி விட்டார் போலும். பல கோடிகள் சொத்துக்கள் உள்ள சிஎஸ்ஐ மற்றும் அதன் பிஷப்புகள், பாதிரிகள், அதிகாரிகள் கோர்ட்டுகளிலும், வெளியிலும் அடித்துக் கொள்வது புதியதல்ல. நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் முதலியவற்றில் பற்பல பிரச்சினைகள் வெளி வந்துள்ளன. நசரேத் சிஎஸ்ஐ சர்ச் எதற்கும் கவலைப்படுவதாக இல்லை.

குடும்பப் பிரச்சினை சர்ச் பிரச்சினை ஆகலாம்: நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல பேராயரின் துணைவியார் சாந்தினிதேவசகாயம், திருமண்டல உபதலைவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ காரியதரிசி மோசஸ் ஜெபராஜ், திருமண்டல ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ், திருமண்டல சமூக நலத்துறை இயக்குநர் மைக்கேல்ராஜ், பாலியர் நண்பன் இயக்குநர் கிளாட்சன், வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜான்சன், ஜிஎம்எஸ் செயலாளர் டேனியல், குருமார்கள் கோல்டுவின், தாமஸ், லூர்துராஜ்,  ஆல்வின், ரவி, நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ்,  ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முன்னாள் தாளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ரூஸ், பில்லிகிராம்,  மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ் மற்றும் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள்.

நாசரேத் சிஎஸ்ஐ தேர்தல் மிகவும் பரபரப்புடன் நடந்தது: தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு 2021-ல் நடைபெறும் தேர்தல் குறித்து மகாகனம் பேராயர் தேவசகாயம் அவர்களால் தேர்தல் கால ஒழுங்கு முறைகள் வெளியிடப்பட்டு கடந்த ஜுன் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி 2021 அன்று நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நிர்வாகஸ்தர் தேர்தலோடு நிறைவு பெற்றது[2]. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி மற்றும் எஸ்டிகே ராஜன் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்[3]. தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் இருந்து முதல் கட்டம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பொழுது பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் என புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் சேகரத்தின் முக்கிய ஆவணமான ‘சபை டாப்’ திருத்தப்பட்டதாக வந்தப் புகார்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற பிரச்சினைகளால் கொதித்தெழுந்த சபையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது[4].

வெற்றி பெற்றப் பிறகும் தொடர்ந்த பிரச்சினைகள்: டிஎஸ்எப் அணியில் போட்டியிட்ட லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் அருட்திரு தமிழ்செல்வன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டக் ஆகிய அனைவரும் வெற்றிபெற்றதாக பேராயரே அறிவித்து, அவர்களுக்கு ஜெபித்து ஆசியும் வழங்கியதாக, வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பலர் தெரிவித்தனர்[5]. 21.10.2021 அன்று செயற்குழுவை கூட்டி பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கூறிச் சென்ற பேராயர் தேவசகாயம் திடீரென தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கூறி அன்றைய தினமே (21.10.2021) நடைபெற்ற தேர்தலை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்[6]. பேராயர் தேவசகாயம் தனது அலுவலகத்திற்கோ, இல்லத்திற்கோ வராமல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகத்தில் வைத்து கடந்த 23.10.2021 அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து, வருகிற 1.11.2021 அன்று மறுதேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்து, பத்திரிகையில் விளம்பரமாக பொதுஅறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார்[7].

போலீஸார் வந்து சமரசம் செய்து வைத்தது: வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர் வந்தால் தான் திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்[8]. பின்னர், நாசரேத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர்[9].

போலீஸாரையே மதிக்காத சர்ச் விசுவாசிகள்: பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர். லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.

©  வேதபிரகாஷ்

22-03-2022


[1]  குமுதம் ரிப்போர்ட்டர், ரவுடி பாதிரியார், பூட்டு உடைப்பு, கார் கடத்தல், கைது செய்யப் படுவாரா பிஷப்?, மார்ச்.11-03-2022, பக்கங்கள்.28-29.

[2] Policeseithitv, பிரதம பேராயரின் உத்தரவை மதித்த தூத்துக்குடிநாசரேத் திருமண்டல குருமார்கள், by policeseithitv  October 30, 2021

policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[3] https://policeseithi.com/?p=8324

[4] policeseithitv, தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு!! திருமண்டல மக்கள் மகிழ்ச்சி!, by policeseithitv  October 31, 2021

[5] https://policeseithi.com/?p=8327

[6] Onetamil News, தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து பணியாற்ற முடிவு, லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மகிழ்ச்சி ,  Oct 31, 2021

[7] http://www.onetamilnews.com/News/thoothukudi-nazareth-csi-bishop-devasakayam-new-executi

[8] தமிழ்.இந்து, தூத்துக்குடிநாசரேத் திருமண்டல தேர்தல்புதிய நிர்வாகிகள் பதவியேற்க சென்றபோது அலுவலகம் பூட்டு : இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், செய்திப்பிரிவு, Published : 22 Oct 2021 03:07 AM; Last Updated : 22 Oct 2021 03:07 AM.

[9] https://www.hindutamil.in/news/todays-paper/regional02/728923–1.html

லாவண்யா தற்கொலை வழக்கு – ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

பிப்ரவரி 10, 2022

லாவண்யா தற்கொலை வழக்கு ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை,  நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது.  நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

லாவண்யா, லாவண்யா குடும்பத்தினரின் முகங்களை பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி  மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.

ஜெனின் சகாய மேரி, ஹாஸ்டல் வார்டன் 07-02-2022 அன்று பிணையில் வெளியே வந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3].  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.

பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

பச்ச முத்து பாரி வேந்தர் ஆனது போல, அவரது ஊடகங்களும் மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14].  அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தினத்தந்தி, கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பதிவு: பிப்ரவரி 08,  2022 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08031304/bail-for-hostel-warden.vpf

[3] தீக்கதிர், மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன், நமது நிருபர் பிப்ரவரி 8, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/in-the-case-of-student-suicide-bail-for-the-caretaker-of-the-inn

[5]விகடன், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு, கே.குணசீலன், Published: 09-02-2022, at 7 AM; Updated: 09-02-2022 at 7 AM.

[6] https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden

[7] தமிழ்.ஏபிபி.நியூஸ், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன், By: சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | Updated : 08 Feb 2022 12:15 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/thanjavur/hostel-warden-sakayamari-granted-bail-in-thanjavur-student-suicide-case-39078

[9] விகாஷ்பீடியா, ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

[10] https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abc7bb5bc8b95bb3bcd/b9cbbebaebc0ba9bcd-bail-baebc1ba9bcd-b9cbbebaebc0ba9bcd-anticipatory-bail

[11] கலைஞர் செய்தி, அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா... அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM

[12] https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2022/01/28/murasoli-editorial-questions-bjp-for-politicizing-student-death

[13] சமயம், தஞ்சை மாணவி: விடுதியில் இந்து முறைப்படி நடந்த பூப்படைதல் சடங்கு! எங்கே பிழை..?, Divakar M | Samayam TamilUpdated: 8 Feb 2022, 1:22 pm

[14] https://tamil.samayam.com/latest-news/crime/more-important-information-has-come-out-in-the-lavanya-suicide-case/articleshow/89425114.cms

[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022

[16] The Federal is a digital platform disseminating news, analysis and commentary. It seeks to look at India from the perspective of the states. We are a division of New Generation Media Private Limited. https://thefederal.com/states/south/tamil-nadu/warden-performed-puberty-rituals-of-tn-teen-as-per-hindu-customs-witnesses/

லாவண்யா வழக்கு – வீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

ஜனவரி 31, 2022

லாவண்யா வழக்குவீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

22-01-2022 – பெற்றோர் மதமாற்றம் பற்றி உறுதியாகச் சொன்னது: விசாரணை முடிந்ததும் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் சித்தி மற்றும் தந்தை, ‘எங்க பொண்ணை கட்டாயமா மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி இருக்காங்க. பாத்ரூம் கழுவுறதுன்னு ரொம்ப துன்புறுத்திட்டாங்க. எங்க பொண்ணுக்கு நியாயம் வேணும். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணாதான், நாங்க உடலை வாங்குவோம். எங்க பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க பொண்ணு தான் முதலும், முடிவா இருக்கணும்.வேற எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கவே கூடாது. கடந்த 2 வருடமாக இந்த கொடுமை நடந்துருக்கு. மதமாற சொன்ன ராக்லின் மேரி, சகாயமேரி இருவரையும் கைது செய்யனும்’ என்று கூறினார்கள்.  ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு வலுக்கட்டாயமாக வேண்டுமென்றே, அநாவசிய கேள்விகளை மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குள் மதுரை பிஷப் அறிக்கை விட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது.

23—01-2022 – கத்தோலிக் பிஷப் அமைப்பு தலைவர்அந்தோணி பாப்புசாமி அறிக்கை: தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது என்று தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவைத் தலைவா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்[1]. இதுதொடா்பாக அவா் 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மிக்கேல்பட்டியில் நடைபெற்ற மாணவியின் மரணத்துக்கு கத்தோலிக்க ஆயா் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாணவியின் மரணத்துக்கு மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டது தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. மாணவியின் மரணத்துக்கு மதத்சாயம் பூசக்கூடாது. மாணவியின் இறப்புக்கு காரணமாக யார் இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. மாணவியின் மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எடுத்துள்ள துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினா் ஆற்றிவரும் கல்விப் பணிகளை அனைவரும் அறிவா். இந்த பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பெண்களுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ மறை சார்ந்த பெண் துறவியரால் அா்ப்பணிப்பு உணா்வோடு நடத்தப்படும் பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பிலும் அவா்களின் வளா்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தப்படுவதையும் அனைவரும் அறிவா். …….”

23—01-2022 – பிஷப் அந்தோணி பாப்புசாமி அறிக்கை: அந்தோணி பாப்புசாமி தொடர்ந்து கூறியது, கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினரால் நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையினா் மதப்பெரும்பான்மையினா் என்பதையும் ஊரறியும். பள்ளிகளை நிர்வகிக்கும் துறவிகள் எப்போதும் மதமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை என்பதே உண்மை. ஆனால் உண்மைக் காரணத்தை காண முயலாத மதவாத அரசியல் சக்திகள்மதமாற்றம்என்ற பொய்யான குற்றச்சாட்டைக் கையிலெடுத்து பிரச்னையை திசை திருப்பி சமய நல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்கின்றன. மேலும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மாணவியின் மரணம் தொடா்பாக உரிய சட்டப்பூா்வ விசாரணையைத் தேடாமல் மதமாற்றம் எனும் முழக்கத்தை கையில் எடுத்திருப்பது வேடிக்கையானது. எனவே மாணவி மரண விவகாரத்தில் அரசும், காவல்துறையும் வழக்கை நடுநிலையோடு நடத்தி முடிக்க வேண்டும்,” என்றார்.

திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு கத்தோலிக்க தமிழக ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி[3]: 2016ல் வெளியிட்ட அறிக்கை: “கிறிஸ்தவ மதச் சிறுபான்மை யினர் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து ஏற்கும் கட்சிக்கு ஆதரவு தருவதென முடிவெடுக்கும்.இந்த தேர்தலில் இக்கோரிக் கைகளுக்கான ஒப்புதல் தமிழக ஆயர்களிடம் இருந்து பெறப்பட் டன. திமுக பொருளாளர்ஸ்டாலின் தொடர்புகொண்டு எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்கும் படி கோரினார். அதன்படி கோரிக்கைகளை முன்வைத் தோம். மத சார்பின்மையைக் காக்கவும், ஜனநாயக மதிப்பீடு களை வளர்க்கவும் திமுககாங் கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் அறிந்த கூட்டணிக் கட்சிகளில் குறைவான தீங்குகளை உடையன என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்[4]. இப்பொழுதைய 2021 தேர்தலிலும், ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஜார்ஜ் பொன்னையாவும் வெட்ட வெளிச்சமாக எல்லாவற்றையும் தெரிவித்தாகி விட்டது. பிறகு என்ன மதசாயம், வெங்காய எல்லாம். ஏற்கெனவே திட்டம் போட்டுதான் நடந்து கொள்கின்றனர் என்றாகிறது.

ஊடகக் காரர்களின் அடாவடித்தனம்: தற்கொலை செய்த மாணவியின் சித்தி பேசும் போது, மதமாற்றம் நடந்து 2வருசமா பன்றாங்கன்னு சொல்றீங்க, அப்போ ஏன் கேட்கல ? நீங்க ஏன் கேட்கல? மதமாற்றம் பண்ணாங்கன்னு சொல்றீங்களே டிசி வாங்கியிருக்கலாம்ல’ என்று மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஊடகக் காரகளுக்கு, இதெல்லாம் பொழுது போக்கு அம்சமாகி விட்டது. டிவிக்களில், இதைப் பற்றி ஒலி-ஒளிபரப்புவது மூலம், அவர்கள் பணம் பெறுகிறார்கள், அதே நேரத்தில், இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து, மக்களுக்கும் மரத்து போகிறது. சமூக பிரக்னை / உணர்வு குறைந்து போகிறது. இதைத்தான், இக்காலத்து, ஊடகங்கள் செய்து வருகின்றன. சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள் என்று, மக்கள் இறப்பது, குற்றங்கள் நடப்பது இவற்றை வைத்தே, கதைகளை உருவாக்கி, நேரத்தை விரயமாக்கி வருகின்றனர். அதாவது மக்களின் மனங்களை கெடுத்து வருகின்றனர்.

24-01-2022 – வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது[5]. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை 25-01-2022 காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்[6], வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[7]. அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்[8]. மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

27-01-2022 போலீஸார் ஆதாரங்கள் தாக்கல் செய்தனர்: மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார். இவ்வாறு ஆட்சியாளர், போலீஸார் முதலியவர்களிடமும், இருநிலை தெரிந்தது. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அவ்வாறான இரட்டைத் தன்மை இருந்திருக்காது. இதிலிருந்தே, அவர்களும் ஆட்சியளர்களின் அழுத்தத்தில்-தாக்கத்தில் இருக்கின்றனர் என்றாகிறது. முதலமைச்சர்-அமைச்சர் ஒருமாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், இவர்கள் அதற்கு மாறான காரியங்களை செய்ய முடியாது. இங்குதான், பின்னணியில் உள்ள கிருத்துவர்களின் தாக்கத்தை அறியலாம். அதற்கேற்ற போல, பீட்டர் அல்போன்ஸும், விசயத்தை விட்டு, பிஜேபி அரசியல் செய்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] தினமணி, தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது, By DIN |   Published on : 23rd January 2022 10:32 PM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jan/23/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3778894.html

[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணிக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவு,  செய்திப்பிரிவு, Published : 05 May 2016 09:29 AM; Last Updated : 05 May 2016 09:30 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/82860-.html

[5] தினத்தந்தி, மாணவி தற்கொலை விவகாரம்: வீடியோ பதிவு செய்தவர் நாளை விசாரணைக்கு ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜனவரி 24,  2022 18:23 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/24182323/Student-suicide-case-Madurai-High-Court-orders-video.vpf

[7] மாலைமலர், மாணவி லாவண்யா தற்கொலை வழக்குவீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு, பதிவு: ஜனவரி 24, 2022 17:47 ISTமாற்றம்: ஜனவரி 24, 2022 18:10 IST.  

[8] https://www.maalaimalar.com/news/district/2022/01/24174738/3414176/Lavanya-committed-suicide-The-person-who-recorded.vpf

லாவண்யா தற்கொலை வழக்கு – மாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

ஜனவரி 31, 2022

லாவண்யா தற்கொலை வழக்குமாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

விடுதி வார்டன்கள் துன்புறுத்தியது: விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  விடுதிகளில் இவ்வாறு பெண்களை, சிறுமிகளை துன்புறுத்துவது என்பது தெரிந்த விசயமே[1]. அடிக்கடி செய்திகளாகவும் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனால், சில பெண்கள் தப்பித்து ஓடிப் போவதும் உண்டு[2], வீட்டிற்கே சென்று விடுவதும் உண்டு. லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்[3]. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது[4].

வீடியோ உரையாடல் விவரம்: தொடர்ந்து, வீடியோ பதிவு செய்தவர், மாணவியிடம் கேள்விகள் கேட்கிறார்[5].

மொபைல் நபர்: சிஸ்டர் பெயர் என்ன?

மாணவி: சகாயமேரி

மொபைல் நபர்: பள்ளி தலைமையாசிரியர் பெயர் என்ன?

மாணவி: தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பெயர் ஆரோக்கியமேரி.

மொபைல் நபர்: என்ன வேலை செய்ய சொல்லுவார்கள்?

மாணவி: காலையில் எழுந்த பின் கேட் திறப்பது போன்ற வார்டன் செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்ய சொல்லுவார்.

மொபைல் நபர்: பள்ளியில் பொட்டு வைக்க கூடாது என கூறினார்களா?

மாணவி: அப்படி எல்லாம் இல்ல.

மொபைல் நபர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தாயா?

மாணவி: இல்லை, படிக்கணும்னு கூறி அனுப்பல.

மொபைல் நபர்: நீ மருந்து சாப்பிட்டது தெரியுமா?

மாணவி: தெரியாது, உடம்பு சரியில்லைனு தான் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இப்படி உரையாடல் நடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அப்படியென்றால், முதலில் சிகிச்சை அளிக்கப் பட்டபோது, ஒருவேளை விசம் / பூச்சி மருந்து சாப்பிட்டதால், மாற்று மருந்து கொடுக்கப் பட்டதா, என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.

22-01-2022 – ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[7], “தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவி லாவண்யா, விடுதியில் தொடர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்பந்தம்தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்[8]. ஏழை மாணவியான லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்ப்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பா...வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”

அனிதா விசயத்தில் ஆர்பாட்டம், அமர்க்களம் செய்தவர்கள், இப்பொழுது அமைதியாக இருப்பது திகைப்பாக இருக்கிறது: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ், தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் பக்கம்-பக்கமாக எழுதி தள்ளீனார்கள். சமூக ஊடகங்களில் தாராளமாகவே அள்ளி வீசி, ட்ரென்டிங் செய்தனர். அனிதாவுக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ, இவர்களுக்கு நிதி, விளம்பர, வியாபாரம், பிரபலம் முதலியவை தாராளமாக- அதிகமாகவே கிடைத்தன. ஆளுக்கு ஏற்றபடி ஆதரவு, பிரச்சாரம் செய்வது, செய்திகளை வெளியிடுவது என்றேல்லாம், தமிழகத்தில் சாதாரண விசயமாகி விட்டது. திமுக வந்தவுடன், அதிமுகவையே ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத் தக்கது.

23-01-2022 அன்று பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்[9]. அது 24-01-2022 அன்று விசாரணைக்கு வருகிறது. இதற்குள் போலீஸார் தமது விசாரணையை துரிதப் படுத்தியுள்ளனர். அதன்படி இன்று 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார்[10].

24—01-2022 மதுரை கிளையில் நீதிபதி முன் வந்த வழக்கு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை 25-01-2022 அன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நீதிபதி முறையாக விசாரித்து ஆணையிட்டது வரவேற்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] India Today, 6 schoolgirls flee school hostel after being forced to clean toilets, Asian News International, New Delhi, July 23, 2019UPDATED: July 23, 2019 14:32 IST

[2] https://www.indiatoday.in/education-today/news/story/6-schoolgirls-flee-school-hostel-after-being-forced-to-clean-toilets-1572592-2019-07-23

[3] டாப்.தமிழ்.நியூஸ், மாணவி மரணத்தில் பெண் வார்டன் கைது,  By KATHIRAVAN T R Thu, 20 Jan 202211:54:46 AM.

[4] https://www.toptamilnews.com/thamizhagam/female-warden-arrested-in-student-death/cid6275911.htm

[5] தினமலர், பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு; மற்றொரு வீடியோ கசிந்தது எப்படி?, Added : ஜன 28, 2022  06:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2947480

[7] தினமணி, மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்ற சாயம் பூசுபவர்கள் மீது நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன், பதிவு: ஜனவரி 23,  2022 03:01 AM.

[8] https://www.dailythanthi.com/News/State/2022/01/23030110/Action-against-Religion-in-the-death-of-student-Lavanya.vpf

[9] நக்கீரன், மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!, பகத்சிங்  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 23/01/2022 (20:21) | Edited on 23/01/2022 (20:49).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/student-lavanyas-parents-give-separate-confession-judge

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

திசெம்பர் 24, 2021

இளையாங்கண்ணியில் மலையை ஆக்கிரமித்துள்ள கிருத்துவ சட்டவிரோதிகள், கிறிஸ்துவ அடிப்படைவாதிகள்! (1)

முன்னுக்கு முரணான தேதிகள் குறிப்பிட்டு ஆக்கிரமிப்பை நியாயபடுத்தும் போக்கு: இந்த சர்ச்சின் பேஸ்புக் குறிப்பிடுவது, திருவண்ணாமலை மாவட்டம் வேளாங்கண்ணி[1] கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கார்மேல் மலை மாதா கோயில் ரோமன் கத்தோலிக்க வேலூர் மறைமாவட்டத்தின் வழிபாட்டில் இயங்கி வருகின்றது[2]. இளையாங்கண்ணி கிராமத்தை பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி உள்ளனர்[3]. ஏபிபி செய்தி குறிப்பிடுவது, இந்த கிராமத்தில் வனத் துறைக்கு சேர்ந்த மலையை இணைத்தவாறு 160 ஏக்கர், பரப்பளவில் 150 அடி உயர, மலை ஒன்று உள்ளது[4]. இவை அனைத்தும்  வருவாய்த்துறை ஆவணத்தில் கல்லாங்குத்து என குறிப்பிடப்பட்டுள்ளது[5]. இந்த மலையின் மீது கடந்த 1961 ஆம் அந்தபகுதி மக்கள் மூலம் மலையில் சிலுவை நட செய்துள்ளது சர்ச் நிர்வாகம். பொதுமக்கள் முன்னிறுத்தி மலைமீது இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து 1982ஆம் ஆண்டு சர்ச் கட்டப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து மலைமீது செல்வதற்கு படிக்கட்டுகள் அமைத்து, 2014ஆம் ஆண்டில்  மலையை குடைந்து மண் சாலை அமைத்து, மலை மீது மேலும் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து பார்க்கிங் இடமாக மாற்றி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த மண் சாலையை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலையாக அமைக்க செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரி தலைமையில் பூமிபூஜை நடந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கடந்த 19ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்.

19-12-2021 அன்று மரக்கன்றுகள் நடுவதற்காக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மலைமீது சென்றார்: அதாவது செங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ மு.பே.கிரியை வைத்து எப்படி பூமிபூஜை நடத்தினரோ, அதுபோல, இவரையும் வரவழைத்து மரக்கன்று நட சொல்லியிருப்பர் போலும். அப்போது  5 ஏக்கர் பரப்பளவில் மலையில் சர்ச் மற்றும் சிலுவை அமைக்கப்பட்டதையும்  மேலும் சில கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை  அகற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு துறையினர் அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் அரசு ஆவணத்தில் உள்ளது என்றும்  அந்த இடம் யாருக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் மக்களை முன்னிறுத்தி சர்ச்   நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பைக் கண்டு பிடித்து நோட்டீஸ் கொடுத்த ஆட்சியாளர்: இதையடுத்து சர்ச் கட்டப்பட்டுள்ளது இடத்தை விட்டு மற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றகோரி சர்ச் நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் வசப்பட்டு பஞ்சாயத்துக்குட்பட்ட சவேரியார் பாளையத்தில் உள்ள மலை மீது சிலுவை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம்  இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயளாலர்  அருண்குமார் நிர்வாகிகள் அளித்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக கிறிஸ்துவ  ஜெபகூட்டங்கள் மற்றும் சர்ச் கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஏழை பொது மக்களையும் குழந்தைகளையும் மனதை மாற்றி மதத்தை மாற்றி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் கொடுத்த புகார் மனு: திருவண்ணாமலை மாவட்டத்தில், அனுமதியின்றி தொற்றுநோய் போல் வளர்ந்து வரும் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடங்களை அகற்றக்கோரி, இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமையில், கலெக்டர் முருகேசிடம் மனு அளிக்கப்பட்டது[7]. அதில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தேவாலயங்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதில், ஏழை இந்துக்களும், குழந்தைகளும் ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுகின்றனர். ஒரு கும்பல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிகிறது, முக்கியமாக நோய்வாய்ப்பட்ட இந்துக்களுக்காக பிரார்த்தனை செய்து, உங்கள் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ராமகிருஷ்ணா ஓட்டல் முன், வீடு என ஆவணப்படுத்தப்பட்டு, கீழ்பென்னாத்தூரை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில், நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, இளையாங்கண்ணி பஞ்சாயத்துக்கு சொந்தமான மலை ஆக்கிரமித்துள்ளது. ந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அனுமதியற்ற பிரார்த்தனை கூடங்களை அரசு தடை செய்ய வேண்டும்.

தினமலரில் வெளியான செய்தி[8]: செங்கம் அருகே, மலையை ஆக்கிரமித்து சர்ச் விஸ்தரிப்பு செய்வது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் – தனி தொகுதிக்கு உட்பட்ட, இளையாங்கண்ணி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, 150 அடி உயர மலை மீது கார்மேல் மாதா சர்ச், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு உள்ளது. தற்போது, மலை உச்சியை சமன் செய்து, சர்ச் விரிவாக்கம் செய்யும் பணியை, நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதற்காக, மலை மீது சாலை அமைக்கும் பணியை மூன்று மாதங்களுக்கு முன், செங்கம் தி.மு.க., – எம்.எல்.ஏ., கிரி துவக்கி வைத்தார். இந்நிலையில், அக்கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணியை, நேற்று முன்தினம் கலெக்டர் முருகேஷ் துவங்கி வைத்தார். தொடர்ந்து, மலை மாதா சர்ச் பகுதியை ஆய்வு செய்ததில், மலையை சமன் செய்து விரிவாக்கம் செய்யும் பணி நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனிருந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம், ‘மலையை ஆக்கிரமிப்பு செய்து விரிவாக்கம் செய்ய யார் அனுமதி கொடுத்தது’ என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மலை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, மலை மாதா சர்ச் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து, உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்[9].

© வேதபிரகாஷ்

24-12-2021


[1] வேளங்கண்ணி என்று தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ குறிப்பிடப் படுவது தெரிகிறது. இளங்கண்ணி என்ற சொல்லும் விசமத்தனமானது. கண்ணிக்கும் கன்னிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா அல்லது கண்ணி வைத்து இடத்தை அக்கிரமிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

[2] Elayankanni, is a village in Tiruvannmalai District, Tamil Nadu, South India. It is one of the big parishes in the Catholic Diocese of Vellore. https://www.facebook.com/MountCarmelElayankanni/

[3] Most of the people (90%) are traditional and God fearing Catholics and the rest are Hindus. More than 1200 families are living here. Each and every day these people are growing in their spirituality. Most of the people are farmers. Nearly 30 Catholic priests and more than 60 nuns are called from here to render their service to God and to the Catholic Church. They are working in different parts of India and also in many other countries. This village is abundantly blessed and protected by Our Lady of Mount Carmel, our patroness, in a special way.

https://www.facebook.com/MountCarmelElayankanni/

[4] ஏபிபி.நியூஸ், மலை மீது சிலுவை நட்டு 5 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்புசர்ச் கட்டடத்தை தவிர்த்து மற்றவற்றை அகற்ற உத்தரவு, By: V.வினோத் | Updated : 22 Dec 2021 07:58 PM (IST).

[5] https://tamil.abplive.com/crime/the-investigation-revealed-that-the-church-was-built-by-occupying-the-cross-on-the-mountain-31678

[6] அதிபன்.டிவி, முதலில் சிலுவை, பிறகு தேவாலயத்தை கட்டுங்கள்…! ஆக்கிரமிப்பு மலை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!, By athibantv -டிசம்பர் 22, 2021.

[7]https://athibantv.com/political/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/

[8] தினமலர், மலையை ஆக்கிரமித்து சர்ச்; நடவடிக்கை எடுக்க உத்தரவு, Updated : டிச 20, 2021  06:51 |  Added : டிச 20, 2021  06:49.

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2917897

கிறிஸ்தவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சைதான் தி.மு.க., வெற்றி, பூமா தேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவமாக செருப்பு கொடுத்தது, அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும்…! கிருத்துவப் பாதிரியின் குரூரப் பேச்சு !!(2)

ஜூலை 23, 2021

கிறிஸ்தவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சைதான் தி.மு.., வெற்றி, பூமா தேவியால் நமக்கு சொறி, சிரங்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவமாக செருப்பு கொடுத்தது, அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும்…! கிருத்துவப் பாதிரியின் குரூரப் பேச்சு !!(2)

பகுத்தறிவு தூங்கும் நேரம்: இதே மாதிரியான பேச்சை ஒரு பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பினர் பேசியிருந்தால், என்னவாகியிருக்கும்? ஆனால், திக வீரமணி, சுப.வீரப்பாண்டியன், விடுதலை ராஜேந்திரன், வைகோ, போன்ற பகுத்தறிவு ரத்தினங்கள், பெரியார் அடிப்பொடிகள், ஈவேர கைத்தடிகள், உடன் பிறப்புகள், கழகக் கண்மணிகள் என்று எல்லோருமே அமைதியாக இருப்பது ஆச்சரியமே. கவி, கவிக்கோ, பெருங்கவிக்கோக்கள், தளபதியை, திமுக தலைமையினை பிச்சைக்காரர் என்று ஒப்பிட்டதையும் கண்டுகொள்ளவில்லை போலும். பிச்சையை ஒப்புக் கொண்டு சந்தோசமாக இருக்கின்றனர் போலும். மைனாரிடி என்றதால், கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்று உத்தரவு இட்டது போல அமைதி காக்கின்றனர்; பகுத்தறிவு மழுங்கி விட்டது, சுயமரியாதை தூங்க ஆரம்பித்து விட்டது. எழுப்புவதற்கும் யாரும் தயாக இல்லை. இதைப் பற்றி செய்திகளும் வரவில்லை, எந்த டிவி-விவாதமும் நடக்கவில்லை. இணைதளங்களில் அந்த வீடியோ உலா வருவதோடு சரி. எல்லா வீடியோக்களையும் பார்த்து ரசித்து, மறந்து விடுவது போன்று, இதுவும் சில நாட்களில் மறக்கப் படும்.

பாதிரியார் மீது குவியும் புகார்கள்: அமைதியையும், அன்பையும் போதிக்கும் நிறைய பாதிரியார்கள் மத்தியில், இவர் போல இப்படி மததுவேஷம் பேசுபவர்களால் தான், நாட்டில் மத சண்டைகள் வந்து இப்படி கஷ்டப்படுகிறது. மதவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சர்ச்சை பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டாலும், வெளிப்படையாக யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை, புகார் அளிக்கவில்லை. ஆனால், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் கொதித்துப் போய் உள்ளனர். மாவட்டத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டு வருகிறது, என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்களை அளித்துள்ளனர்.

விகடன் நிருபர் விசாரித்தது, வருத்தத்தைத் தெரிவித்தது: இது குறித்து பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம் பேசினோம்[1]. “அந்த வீடியோ எடிட் செய்து போடப்பட்டிருக்கிறது. யாருடைய மத உணர்வும் புண்படும்படி பேசவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறோம். இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்[2]. பாதிரியே அப்படி பேசிவிட்டு, “இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்,” என்பது வேடிக்கையாக இருக்கிறது. கனடா நாட்டு பள்ளிக் குழந்தைகள் கொலை விசயத்தில் / நூற்றுக் கணக்கான பிணங்கள் புதைந்து கிடந்த விவகாரத்தில் போப் சொன்னதைவிட கேவலமாக இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தை மற்றும் பேசிய விதம், அகம்பாவம், ஆணவம், காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் என்று எல்லாவற்றையும் மீறிய விஷத்தைக் கக்கியுள்ள நிலை வெளிப்பட்டுள்ளது. திமுக அமைதியாக இருப்பதும், திகைப்பாக இருக்கிறது. “மைனாரிட்டி,” மற்றும் அதையும் மீறியுள்ள நிலைகள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆக, பிஜேபி, இது அமைப்பினர் புகார் கொடுத்தனர் என்றால், அது வழக்கம் போன்ற நிலையாகி, மறக்கப் பட்டு விடும்.

பாதிரியார் மீது மதுரையில் புகார்: ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், ஹிந்து கிறிஸ்தவ, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும், மதகலவரத்தை துாண்டும் விதமாகவும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ஹிந்து மக்கள் கட்சி மதுரை தலைவர் சோலைகண்ணன், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹாவிடம் புகார் அளித்துள்ளார். இங்கும், திமுகவினர், திராவிடத்துவ வாதிகள் யாருக்கும் ரோஷம் வரவில்லை போலும். யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், வேண்டுமென்றே, திமுக-கிருத்துவர்கள் சேர்ந்து நாடகமாடும் திட்டமா? இப்படி நன்றாக திட்டிவிட்டு, ஒரு ஒத்திகைப் பார்த்து, வழக்கும் பதிவு செய்யப் பட்டு, வருத்தம் தெரரிவித்ததும், மூடிவிட்டால், மறுபடியும் இதே போல திட்டலாம், வீடியோக்களை சுற்றில் விடலாம் போன்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்த போட்ட ஒத்திகை போலும் ஆகிறது போலும். காலை கைது-மாலை விடுதலை போன்ற போலீஸ் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றாகி விடப் போகின்றது. அவ்வளவே தான் போலும்.

பீட்டர் அல்போன்ஸும், ஜார்ஜ் பொன்னையாவும்: “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் பேசிய பேச்சு, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியிருப்பதும் நோக்கத் தக்கது. இவர் ஸ்டாலினால், இப்பொழுது, மைனாரிடி கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இவருக்கு, ஜார்ஜ் பொன்னையாவை தெரிந்திருக்கலாம். இனிகோ இருதயராஜின் நண்பராகவும் இருக்கலாம். நிலைமையை சமாளிக்க, சப்பைக் கட்டுவது போல, இவ்வாறு பேசியிருக்கிறாரா, இல்லை, வழக்குப் பதிவு செய்யப் பட்டு விட்டதால், மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்.

7 பிரிவுகளில் வழக்கு: ஜார்ஜ் பொன்னையா மீது கீழ் காணும் 7 பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[3].

  1. இ.பி.கோ. 143 (சட்ட விரோத கும்பலில் உறுப்பினராக இருத்தல்),
  2. இ.பி.கோ. 153 எ (மத, இன, ஜாதி விரோத உணர்வுகளை துாண்டுதல்),
  3. இ.பி.கோ. 295 எ (இரண்டு சமூகங்களுக்கிடையே ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து அதன் மூலம் மோதல் ஏற்படுத்தி கலவரம் உருவாக்குதல்),
  4. இ.பி.கோ. 505(2) (மதமோதல்களை உருவாக்குதல்),
  5. இ.பி.கோ. 506 (1) (கொலை மிரட்டல்),
  6. இ.பி.கோ. 269 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்பும் கவனமற்ற செயல்)
  7. தொற்றுநோய் சட்டம் 1897-3 (உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவல் சட்டம்)[4].

இத்தனைப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாகி விட்டது. ஆனால், மேலே என்ன நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியே அமைதியாக இருந்து விட்டு விடுவார்கள் போலும்.

© வேதபிரகாஷ்

23-07-2021


[1] விகடன், பாரத மாதா குறித்த சர்ச்சைப் பேச்சு‘ ; இந்து இயக்கங்கள் எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த பாதிரியார்!, சிந்து ஆர், Published:Yesterday at 5 PMUpdated:Yesterday at 5 PM.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/in-kanyakumari-christian-priest-speech-makes-controversy

[3] பாலிமர் செய்தி, ஜாதி, மதம், மத்திய அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்தவ பங்குத் தந்தை மீது இந்து அமைப்புகள் புகார், July 22, 2021 05:17:31 PM.

[4] https://www.polimernews.com/dnews/151063/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டி-விரட்டி கைது-விசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ஜூன் 10, 2021

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டிவிரட்டி கைதுவிசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?

ராஜகோபாலனுக்கும், எபி. ஜார்ஜுக்கும் என்ன வித்தியாசம்?: “பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை,” என்று ஊடகங்கள் குறிப்பிட்டு செய்தியை முடித்துக் கொண்டுள்ளன. ராஜகோபாலனை கவனித்த விதத்தில், இங்கு எபி. ஜார்ஜ் கவனிக்கப் படவில்லை. தொலைக் காட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, விவாதங்கள் நடத்தவில்லை.  பாலியல் விவகாரத்தில், இப்பள்ளி ஆசிரியரின் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது[1]. ஆனால், அந்நிர்வாகம், அசைவதாகத் தெரியவில்லை. மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், இப்பள்ளி சார்பில் யாரும் ஆஜராக வில்லை[2]. கைதும் செய்யப் படவில்லை. இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

07-06-2021 அன்று செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை: முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஶ்ரீதர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (திங்கள் அன்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை[3]. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்[4].

சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜரானார்: மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது[5]. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், “பள்ளி நிர்வாகம் மற்றும் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளி நிர்வாகிகள், வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தனர்[6]. பள்ளியில் குற்றங்கள் நடந்ததற்கு என்னிடம் இருந்த ஏழு ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளேன். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில், ’பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளீர்கள்என கூறியுள்ளது. அதற்காக அவரின் சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய்யை பிடித்தம் செய்துள்ளது. இது குறித்து அவரின் பணிப்பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளேன்[7]. பள்ளியின் சார்பில், மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஜராக முடியவில்லை,” என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறது தினமலர்[8].. 

கமல் ஹஸன் தெரிவித்த கருத்து[9]: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாதரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்வை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது . தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் திகழ்ந்த நிகழும் பாலியல் துன்பறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விராரிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வது[11]: “இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தமகாநதிஇன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்வைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நமது பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும். இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலை நாட்ட வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[12].

ஜாதியம்மதம் என்று சொல்லி செக்யூலரிஸமாக்கப் படும் பாலியல் விவகாரங்கள்: ஊடகங்கள் இவற்றை செக்யூலரிஸமாக்க முயற்சிக்கின்றன, அதாவது, ஜாதியம், மதம் என்று இரண்டிலும் இணைத்து, அதன் மூலம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பப் பார்க்கின்றனர். சிக்கியுள்ள எல்லா பள்ளிகளும் சாதி அடிப்படையிலானது, அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளாகவே இருக்கிறது[13]. செயின்ட் ஜார்ஜ் போன்றவை மத அடிப்படையிலான பள்ளிகளாகவும், பிஎஸ்பிபி போன்ற பள்ளிகள் சாதி அடிப்படையிலானதாகவும் இருக்கிறது[14]. இன்று வரையில், இதனை, ஜாதி ரீதியில், குறிப்பாக “பிராமண எதிர்ப்பு” முறையில் கடுமையாக, சாடி விமர்சங்கள், சமூக மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 09-06-2021 அன்று “டைம்ஸ்.நௌ” தொலைக்காட்சி பேட்டியில், முதலில் பேசிய பெண்-வழக்கறிஞர் குறிப்பிட்ட பள்ளியை விமர்சித்தேப் பேசி முடித்தார். பிறகு சின்மயி,  “செக்யூலரிஸ” முறையில் விமர்சித்தாலு,ம், அரசியலாக்குவதைக் கண்டித்தார். வைரமுத்துவை பெயர் சொல்லியே தாக்கினார். அவர் எவ்வாறு  பெரிய ஆட்களால் காப்பாற்றப் பட்டு வருகிறார் என்று எடுத்துக் காட்டினார். இதனால், கடையாக பேசிய சுப்ரமணியன் சுவாமி எவ்வாறு லயோலா கல்லூரி ஏழு பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறது, கிருத்துவ சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்று கனிமொழியையம் குறிப்பிட்டு பேசினார். நேரியாளர் திடீரென்று பேட்டியை முடித்துக் கொண்டதிலிருந்து, மற்ற கருத்துகள், உண்மைகள் வெளி வர ஊடகங்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

10-06-2021


[1] பாலிமர் செய்தி, பள்ளியல் பாலியல் தொந்தரவு: 900 முன்னாள் மாணவர்கள் கூட்டாக புகார், மே.30, 2021 06:06:19:18 PM. https://www.polimernews.com/dnews/147236

[2] https://www.polimernews.com/dnews/147236

[3] தமிழ்.இந்து, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை, Published : 08 Jun 2021 03:13 am; Updated : 08 Jun 2021 06:35 am..

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/679722-st-george-school-teacher.html

[5] ஈநாடு.டிவி.செய்தி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான பாலியல் புகாரின் விசாரணை ஒத்திவைப்பு, Published on: Jun 7, 2021, 4:01 PM IST.

[6] தினமலர், பள்ளி நிர்வாகிகளுக்கு மீண்டும், ‘சம்மன், Added : ஜூன் 08, 2021  10:07

[7] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/scpcr-postponed-investigation-of-sexual-abuse-allegations-on-st-george-school/tamil-nadu20210607160138357?fbclid=IwAR0BeGRkB498q_4hAg7oXF4shfqhv48iyQImxbH0–kXSwE-KNU4wE0Gilc

[8]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2780932

[9] ஏசியா.நெட்.நியூஸ், தப்பு செஞ்சவங்க எந்த ஜாதியாக இருந்தாலும் தண்டிக்கணும்இரண்டு பெண்களின் தகப்பனாக பொங்கி எழுந்த கமல்…!, Kanimozhi Pannerselvam, Chennai, First Published May 26, 2021, 3:08 PM IST.

[10] https://tamil.asianetnews.com/politics/makkal-needhi-maiam-leader-kamal-hassan-condemnation-to-psbb-sexual-harassment-complaint-qtpk4q

[11] மாலைமலர், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும்தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை, பதிவு: மே 27, 2021 10:05 IST.

[12] https://www.maalaimalar.com/news/district/2021/05/27100546/2675385/Tamil-News-Kamal-Haasan-request-to-TN-government-to.vpf

[13] ஏசியாவில், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் குழந்தை திருமணங்கள்நாம் மறந்து கடந்து செல்கிறோம்! நினைவில் கொள்ளுங்கள், By Abisha Bovas • 03/06/2021 at 11:03AM

[14] https://www.asiaville.in/article/women-and-child-against-issue-in-recent-time-detail-interview-with-shalin-maria-lawrence-71708

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,