Posts Tagged ‘தஞ்சாவூர்’

லாவண்யா தற்கொலை வழக்கு – ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

பிப்ரவரி 10, 2022

லாவண்யா தற்கொலை வழக்கு ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மாற்றவா, குற்றவாளிகளைக் காப்பாற்றவா?

ஊடகங்களின் எதேச்சதிகார அழுத்தங்கள்: ஊடகங்களின் பாரபட்சம், இரட்டை வேடங்கள், ஜார்னலிஸ்டி எதிக்ஸ் (Journalistic ethics) இல்லாமை, பத்திரிகா தர்மத்தை குழித் தோண்டி புதைத்த தன்மை, எழுத்து ஒழுக்கம் இல்லாமை,  நிருபர்-தனத்தில்-தோய்வு-அடிமைத்தனம் இப்படி பலவற்றை இப்பொழுது காண முடிகிறது.  நீதிமன்ற தீர்ப்புகளை குழப்பும் வகையில், செய்திகளை ஒருதலைப் பட்சமாக வெளியிட்டு, அழுத்தம் கொடுக்கவும் செயல் பட்டு வருகின்றன. கைது என்றால் உடனடியாக ஜாமீன் என்று கைது செய்யப் பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வந்து விடுகிறார்கள். முன்னர், கைது செய்யப் பட்டவர்கள் அப்பாவிகள், சிக்க வைக்கப் பட்டனர் என்பது போல செய்திகளும் வரச்செய்கிறார்கள். இல்லை, அது சாதகமாக இருக்காது என்றால் அமைதியாக, முன் ஜாமீன் மனு போட்டு, வெளியே கொணர்ந்து, புகார் கொடுத்தவர்களுடன் பேரம் பேசி, வழக்கை வாபஸ் வாங்குதல், தொட்ந்து நடத்தாமல் விட்டு விடுதல், கிடப்பில் கிடக்குமாறு அழுத்தம் கொண்டு வருதல் போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

லாவண்யா, லாவண்யா குடும்பத்தினரின் முகங்களை பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது: மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். லாவண்யா வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி  மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்[1]. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்[2]. ஆனால், ஊடகங்கள், இது வரை அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை. மற்ற வழக்குகளில், கூட்டமாக முன்னரே வளாகத்தில், தெருக்களில் கேமரா, வீடியோ, சகிதம் நின்று காத்துக் கிடப்பார்கள். துரத்திச் சென்று கேள்வி கேட்பாகள், புகைப் படம் எடுப்பார்கள். ஆனால், இவ்வழக்கில், ஒருதலை பட்சமாகவே செயல்பட்டு வருகிறார்கள். லாவண்யா, லாவண்யா அப்பா-அம்மா, சித்தி, தாத்தா-பாட்டி, மாமா என்று எல்லோருடைய முகங்களையும் பார்த்து விடலாம், ஆனால், சகாய மேரியின் முகத்தைப் பார்க்க முடியாது.

ஜெனின் சகாய மேரி, ஹாஸ்டல் வார்டன் 07-02-2022 அன்று பிணையில் வெளியே வந்தார்: இவர் ஜனவரி 21ம் தேதி கைது செய்யப் பட்டார். சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்[3].  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார்[4]. வழக்கம் போல, இவர் வயதானவர், வீடியோ ஆதாரத்தின் மீது கைது செய்யப் பட்டுள்ளார், அதன் உண்மைத் தன்மை அறியப் படவேண்டியுள்ளது, இவரை ஜாமீனில் வெளியே விட்டால், இவர் சாட்சியங்களை ஒன்று செய்ய மாட்டார், அதற்கான பிணையும் கொடுக்கப் பட்டுள்ளது, என்றெல்லாம் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதன் மீது திங்கள்கிழமை 07-02-2022 அன்று நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்[5]. வக்கீல் ஜெயச்சந்திரன் மூலம் மனு தாக்கல் செய்யப் பட்டது[6]. ஜெனின் சகாய மேரி என்று குறிப்பிடுவது திமுக ஊடகங்கள், அந்த அளவுக்கு விவரங்கள் தெரியும் போலிருக்கிறது.

பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி: இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[7]ராக, இதெல்லாம் அவர்களுக்கு அத்துப் படி என்று தெரிகிறது. இதே நேர்த்தில், அந்த கேரளா பிஷப்பும் ஜாமீனுக்கு மனு போட்டுள்ளார். அந்த அளவுக்கு வேகமாக வேலை செய்கின்றன. நீதிமன்றங்களும், இருக்கின்ற எல்லா முக்கிய வழக்குகளையும் விட்டுவிட்டு, இவற்றை எடுத்து உடனடியாக விசாரிக்கின்றன. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது[8].

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)[9]: பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும்[10]. குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது.

பச்ச முத்து பாரி வேந்தர் ஆனது போல, அவரது ஊடகங்களும் மாறியுள்ளன: ஒரு பக்கம் அரசியலாக்கப் படுகிறது என்று திமுக ஊடகங்கள் பிஜேபியைக் குற்றஞ்சாட்டுகின்றன[11]. கலைஞர் டிவி, முரசொலி என்று வெளுத்து வாங்குகின்றன. இன்னொரு புறம், இதுவரை தெரியாத ஊடகங்கள் கிளம்பியுள்ளன[12]. லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[13]. மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் பிரபல செய்தி நிறுவனமான ‘த ஃபெடெரல்’ இடம் தெரிவித்துள்ளனர்[14].  அந்த வகையில் சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது” என பவுலின் கூறினார்[15]. மேலும், லாவண்யாவுக்காக சகோதரி சகாய மேரி நடத்திய பூப்படைதல் சடங்குக்கான புகைப்பட ஆதாரங்களும் உள்ளதாக ‘த ஃபெடெரல்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது[16]. இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. உள்கலாச்சாரமயமாக்கல் என்ற திட்டத்துடன் செயல்படும் வாடிகன், வாடிகன் அடிவருடி சர்ச்சுகள், இந்தியாவில்-தமிழகத்தில் வேடம் போடும் கூட்டங்கள் பல காரியங்களை, இந்துமுறைப்படித் தான் செய்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

09-02-2022


[1] தினத்தந்தி, கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பதிவு: பிப்ரவரி 08,  2022 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/08031304/bail-for-hostel-warden.vpf

[3] தீக்கதிர், மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன், நமது நிருபர் பிப்ரவரி 8, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/in-the-case-of-student-suicide-bail-for-the-caretaker-of-the-inn

[5]விகடன், அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: விடுதி வார்டனுக்கு ஜாமீன் வழங்கி தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு, கே.குணசீலன், Published: 09-02-2022, at 7 AM; Updated: 09-02-2022 at 7 AM.

[6] https://www.vikatan.com/news/crime/in-student-suicide-case-court-granted-bail-to-the-hostel-warden

[7] தமிழ்.ஏபிபி.நியூஸ், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன், By: சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | Updated : 08 Feb 2022 12:15 PM (IST).

[8]  https://tamil.abplive.com/news/thanjavur/hostel-warden-sakayamari-granted-bail-in-thanjavur-student-suicide-case-39078

[9] விகாஷ்பீடியா, ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

[10] https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b9abc7bb5bc8b95bb3bcd/b9cbbebaebc0ba9bcd-bail-baebc1ba9bcd-b9cbbebaebc0ba9bcd-anticipatory-bail

[11] கலைஞர் செய்தி, அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா... அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?” : முரசொலி கடும் தாக்கு!, Lenin, Updated on : 28 January 2022, 08:56 AM

[12] https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2022/01/28/murasoli-editorial-questions-bjp-for-politicizing-student-death

[13] சமயம், தஞ்சை மாணவி: விடுதியில் இந்து முறைப்படி நடந்த பூப்படைதல் சடங்கு! எங்கே பிழை..?, Divakar M | Samayam TamilUpdated: 8 Feb 2022, 1:22 pm

[14] https://tamil.samayam.com/latest-news/crime/more-important-information-has-come-out-in-the-lavanya-suicide-case/articleshow/89425114.cms

[15] The Federal, Warden performed puberty rituals of TN teen as per Hindu customs: witnesses, Prabhakar Tamilarasu, 4:34 PM, 7 February, 2022Updated 5:37 PM, 7 February, 2022

[16] The Federal is a digital platform disseminating news, analysis and commentary. It seeks to look at India from the perspective of the states. We are a division of New Generation Media Private Limited. https://thefederal.com/states/south/tamil-nadu/warden-performed-puberty-rituals-of-tn-teen-as-per-hindu-customs-witnesses/

லாவண்யா வழக்கு – வீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

ஜனவரி 31, 2022

லாவண்யா வழக்குவீடியோ ஆதாரம், மதமாற்ற வலுகட்டாயம், பெற்றோரின் உறுதியான வாக்குமூலம், நீதிமன்ற ஆணை, போலீஸார் விசாரணை (3)

22-01-2022 – பெற்றோர் மதமாற்றம் பற்றி உறுதியாகச் சொன்னது: விசாரணை முடிந்ததும் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் சித்தி மற்றும் தந்தை, ‘எங்க பொண்ணை கட்டாயமா மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி இருக்காங்க. பாத்ரூம் கழுவுறதுன்னு ரொம்ப துன்புறுத்திட்டாங்க. எங்க பொண்ணுக்கு நியாயம் வேணும். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணாதான், நாங்க உடலை வாங்குவோம். எங்க பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க பொண்ணு தான் முதலும், முடிவா இருக்கணும்.வேற எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கவே கூடாது. கடந்த 2 வருடமாக இந்த கொடுமை நடந்துருக்கு. மதமாற சொன்ன ராக்லின் மேரி, சகாயமேரி இருவரையும் கைது செய்யனும்’ என்று கூறினார்கள்.  ஏற்கனவே மகள் இறந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு வலுக்கட்டாயமாக வேண்டுமென்றே, அநாவசிய கேள்விகளை மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குள் மதுரை பிஷப் அறிக்கை விட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது.

23—01-2022 – கத்தோலிக் பிஷப் அமைப்பு தலைவர்அந்தோணி பாப்புசாமி அறிக்கை: தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது என்று தமிழக கத்தோலிக்க ஆயா் பேரவைத் தலைவா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்[1]. இதுதொடா்பாக அவா் 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மிக்கேல்பட்டியில் நடைபெற்ற மாணவியின் மரணத்துக்கு கத்தோலிக்க ஆயா் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாணவியின் மரணத்துக்கு மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டது தான் காரணம் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. மாணவியின் மரணத்துக்கு மதத்சாயம் பூசக்கூடாது. மாணவியின் இறப்புக்கு காரணமாக யார் இருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. மாணவியின் மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எடுத்துள்ள துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினா் ஆற்றிவரும் கல்விப் பணிகளை அனைவரும் அறிவா். இந்த பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பெண்களுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ மறை சார்ந்த பெண் துறவியரால் அா்ப்பணிப்பு உணா்வோடு நடத்தப்படும் பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பிலும் அவா்களின் வளா்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தப்படுவதையும் அனைவரும் அறிவா். …….”

23—01-2022 – பிஷப் அந்தோணி பாப்புசாமி அறிக்கை: அந்தோணி பாப்புசாமி தொடர்ந்து கூறியது, கிறிஸ்தவ மதச்சிறுபான்மையினரால் நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையினா் மதப்பெரும்பான்மையினா் என்பதையும் ஊரறியும். பள்ளிகளை நிர்வகிக்கும் துறவிகள் எப்போதும் மதமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை என்பதே உண்மை. ஆனால் உண்மைக் காரணத்தை காண முயலாத மதவாத அரசியல் சக்திகள்மதமாற்றம்என்ற பொய்யான குற்றச்சாட்டைக் கையிலெடுத்து பிரச்னையை திசை திருப்பி சமய நல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்கின்றன. மேலும் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மாணவியின் மரணம் தொடா்பாக உரிய சட்டப்பூா்வ விசாரணையைத் தேடாமல் மதமாற்றம் எனும் முழக்கத்தை கையில் எடுத்திருப்பது வேடிக்கையானது. எனவே மாணவி மரண விவகாரத்தில் அரசும், காவல்துறையும் வழக்கை நடுநிலையோடு நடத்தி முடிக்க வேண்டும்,” என்றார்.

திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு கத்தோலிக்க தமிழக ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி[3]: 2016ல் வெளியிட்ட அறிக்கை: “கிறிஸ்தவ மதச் சிறுபான்மை யினர் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து ஏற்கும் கட்சிக்கு ஆதரவு தருவதென முடிவெடுக்கும்.இந்த தேர்தலில் இக்கோரிக் கைகளுக்கான ஒப்புதல் தமிழக ஆயர்களிடம் இருந்து பெறப்பட் டன. திமுக பொருளாளர்ஸ்டாலின் தொடர்புகொண்டு எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்கும் படி கோரினார். அதன்படி கோரிக்கைகளை முன்வைத் தோம். மத சார்பின்மையைக் காக்கவும், ஜனநாயக மதிப்பீடு களை வளர்க்கவும் திமுககாங் கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் அறிந்த கூட்டணிக் கட்சிகளில் குறைவான தீங்குகளை உடையன என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்[4]. இப்பொழுதைய 2021 தேர்தலிலும், ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஜார்ஜ் பொன்னையாவும் வெட்ட வெளிச்சமாக எல்லாவற்றையும் தெரிவித்தாகி விட்டது. பிறகு என்ன மதசாயம், வெங்காய எல்லாம். ஏற்கெனவே திட்டம் போட்டுதான் நடந்து கொள்கின்றனர் என்றாகிறது.

ஊடகக் காரர்களின் அடாவடித்தனம்: தற்கொலை செய்த மாணவியின் சித்தி பேசும் போது, மதமாற்றம் நடந்து 2வருசமா பன்றாங்கன்னு சொல்றீங்க, அப்போ ஏன் கேட்கல ? நீங்க ஏன் கேட்கல? மதமாற்றம் பண்ணாங்கன்னு சொல்றீங்களே டிசி வாங்கியிருக்கலாம்ல’ என்று மீடியாக்கள் கேட்கும் இந்த காணொளி இணையத்தில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஊடகக் காரகளுக்கு, இதெல்லாம் பொழுது போக்கு அம்சமாகி விட்டது. டிவிக்களில், இதைப் பற்றி ஒலி-ஒளிபரப்புவது மூலம், அவர்கள் பணம் பெறுகிறார்கள், அதே நேரத்தில், இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்த்து, மக்களுக்கும் மரத்து போகிறது. சமூக பிரக்னை / உணர்வு குறைந்து போகிறது. இதைத்தான், இக்காலத்து, ஊடகங்கள் செய்து வருகின்றன. சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள் என்று, மக்கள் இறப்பது, குற்றங்கள் நடப்பது இவற்றை வைத்தே, கதைகளை உருவாக்கி, நேரத்தை விரயமாக்கி வருகின்றனர். அதாவது மக்களின் மனங்களை கெடுத்து வருகின்றனர்.

24-01-2022 – வீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது[5]. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை 25-01-2022 காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்[6], வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்[7]. அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்[8]. மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

27-01-2022 போலீஸார் ஆதாரங்கள் தாக்கல் செய்தனர்: மேலும், அந்த வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார். இவ்வாறு ஆட்சியாளர், போலீஸார் முதலியவர்களிடமும், இருநிலை தெரிந்தது. முறையாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அவ்வாறான இரட்டைத் தன்மை இருந்திருக்காது. இதிலிருந்தே, அவர்களும் ஆட்சியளர்களின் அழுத்தத்தில்-தாக்கத்தில் இருக்கின்றனர் என்றாகிறது. முதலமைச்சர்-அமைச்சர் ஒருமாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், இவர்கள் அதற்கு மாறான காரியங்களை செய்ய முடியாது. இங்குதான், பின்னணியில் உள்ள கிருத்துவர்களின் தாக்கத்தை அறியலாம். அதற்கேற்ற போல, பீட்டர் அல்போன்ஸும், விசயத்தை விட்டு, பிஜேபி அரசியல் செய்கிறது என்று பேட்டி கொடுக்கிறார்.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] தினமணி, தஞ்சை மாணவியின் மரணத்துக்கு மதச்சாயம் பூசக்கூடாது, By DIN |   Published on : 23rd January 2022 10:32 PM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/jan/23/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3778894.html

[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணிக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவு,  செய்திப்பிரிவு, Published : 05 May 2016 09:29 AM; Last Updated : 05 May 2016 09:30 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/82860-.html

[5] தினத்தந்தி, மாணவி தற்கொலை விவகாரம்: வீடியோ பதிவு செய்தவர் நாளை விசாரணைக்கு ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு: ஜனவரி 24,  2022 18:23 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/24182323/Student-suicide-case-Madurai-High-Court-orders-video.vpf

[7] மாலைமலர், மாணவி லாவண்யா தற்கொலை வழக்குவீடியோ பதிவு செய்தவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு, பதிவு: ஜனவரி 24, 2022 17:47 ISTமாற்றம்: ஜனவரி 24, 2022 18:10 IST.  

[8] https://www.maalaimalar.com/news/district/2022/01/24174738/3414176/Lavanya-committed-suicide-The-person-who-recorded.vpf

லாவண்யா தற்கொலை வழக்கு – மாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

ஜனவரி 31, 2022

லாவண்யா தற்கொலை வழக்குமாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

விடுதி வார்டன்கள் துன்புறுத்தியது: விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  விடுதிகளில் இவ்வாறு பெண்களை, சிறுமிகளை துன்புறுத்துவது என்பது தெரிந்த விசயமே[1]. அடிக்கடி செய்திகளாகவும் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனால், சில பெண்கள் தப்பித்து ஓடிப் போவதும் உண்டு[2], வீட்டிற்கே சென்று விடுவதும் உண்டு. லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்[3]. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது[4].

வீடியோ உரையாடல் விவரம்: தொடர்ந்து, வீடியோ பதிவு செய்தவர், மாணவியிடம் கேள்விகள் கேட்கிறார்[5].

மொபைல் நபர்: சிஸ்டர் பெயர் என்ன?

மாணவி: சகாயமேரி

மொபைல் நபர்: பள்ளி தலைமையாசிரியர் பெயர் என்ன?

மாணவி: தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பெயர் ஆரோக்கியமேரி.

மொபைல் நபர்: என்ன வேலை செய்ய சொல்லுவார்கள்?

மாணவி: காலையில் எழுந்த பின் கேட் திறப்பது போன்ற வார்டன் செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்ய சொல்லுவார்.

மொபைல் நபர்: பள்ளியில் பொட்டு வைக்க கூடாது என கூறினார்களா?

மாணவி: அப்படி எல்லாம் இல்ல.

மொபைல் நபர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தாயா?

மாணவி: இல்லை, படிக்கணும்னு கூறி அனுப்பல.

மொபைல் நபர்: நீ மருந்து சாப்பிட்டது தெரியுமா?

மாணவி: தெரியாது, உடம்பு சரியில்லைனு தான் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இப்படி உரையாடல் நடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அப்படியென்றால், முதலில் சிகிச்சை அளிக்கப் பட்டபோது, ஒருவேளை விசம் / பூச்சி மருந்து சாப்பிட்டதால், மாற்று மருந்து கொடுக்கப் பட்டதா, என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.

22-01-2022 – ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[7], “தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவி லாவண்யா, விடுதியில் தொடர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்பந்தம்தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்[8]. ஏழை மாணவியான லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்ப்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பா...வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”

அனிதா விசயத்தில் ஆர்பாட்டம், அமர்க்களம் செய்தவர்கள், இப்பொழுது அமைதியாக இருப்பது திகைப்பாக இருக்கிறது: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ், தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் பக்கம்-பக்கமாக எழுதி தள்ளீனார்கள். சமூக ஊடகங்களில் தாராளமாகவே அள்ளி வீசி, ட்ரென்டிங் செய்தனர். அனிதாவுக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ, இவர்களுக்கு நிதி, விளம்பர, வியாபாரம், பிரபலம் முதலியவை தாராளமாக- அதிகமாகவே கிடைத்தன. ஆளுக்கு ஏற்றபடி ஆதரவு, பிரச்சாரம் செய்வது, செய்திகளை வெளியிடுவது என்றேல்லாம், தமிழகத்தில் சாதாரண விசயமாகி விட்டது. திமுக வந்தவுடன், அதிமுகவையே ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத் தக்கது.

23-01-2022 அன்று பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்[9]. அது 24-01-2022 அன்று விசாரணைக்கு வருகிறது. இதற்குள் போலீஸார் தமது விசாரணையை துரிதப் படுத்தியுள்ளனர். அதன்படி இன்று 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார்[10].

24—01-2022 மதுரை கிளையில் நீதிபதி முன் வந்த வழக்கு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை 25-01-2022 அன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நீதிபதி முறையாக விசாரித்து ஆணையிட்டது வரவேற்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] India Today, 6 schoolgirls flee school hostel after being forced to clean toilets, Asian News International, New Delhi, July 23, 2019UPDATED: July 23, 2019 14:32 IST

[2] https://www.indiatoday.in/education-today/news/story/6-schoolgirls-flee-school-hostel-after-being-forced-to-clean-toilets-1572592-2019-07-23

[3] டாப்.தமிழ்.நியூஸ், மாணவி மரணத்தில் பெண் வார்டன் கைது,  By KATHIRAVAN T R Thu, 20 Jan 202211:54:46 AM.

[4] https://www.toptamilnews.com/thamizhagam/female-warden-arrested-in-student-death/cid6275911.htm

[5] தினமலர், பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு; மற்றொரு வீடியோ கசிந்தது எப்படி?, Added : ஜன 28, 2022  06:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2947480

[7] தினமணி, மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்ற சாயம் பூசுபவர்கள் மீது நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன், பதிவு: ஜனவரி 23,  2022 03:01 AM.

[8] https://www.dailythanthi.com/News/State/2022/01/23030110/Action-against-Religion-in-the-death-of-student-Lavanya.vpf

[9] நக்கீரன், மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!, பகத்சிங்  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 23/01/2022 (20:21) | Edited on 23/01/2022 (20:49).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/student-lavanyas-parents-give-separate-confession-judge