Archive for the ‘வயிற்று வலி’ Category

லாவண்யா தற்கொலை வழக்கு – மாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

ஜனவரி 31, 2022

லாவண்யா தற்கொலை வழக்குமாணவி விடுதியில் துன்புறுத்தப் பட்டது, ஜனவரி 9ம் தேதி விஷம் குடித்தது, 19ம் தேதி இறந்தது, வழக்கில் முடிந்தது (2)

விடுதி வார்டன்கள் துன்புறுத்தியது: விடுதி வார்டன் சகாயமேரி, சிஸ்டர் ராக்லின்மேரி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம் செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  விடுதிகளில் இவ்வாறு பெண்களை, சிறுமிகளை துன்புறுத்துவது என்பது தெரிந்த விசயமே[1]. அடிக்கடி செய்திகளாகவும் விவரங்கள் வெளிவந்துள்ளன. இதனால், சில பெண்கள் தப்பித்து ஓடிப் போவதும் உண்டு[2], வீட்டிற்கே சென்று விடுவதும் உண்டு. லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்[3]. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது[4].

வீடியோ உரையாடல் விவரம்: தொடர்ந்து, வீடியோ பதிவு செய்தவர், மாணவியிடம் கேள்விகள் கேட்கிறார்[5].

மொபைல் நபர்: சிஸ்டர் பெயர் என்ன?

மாணவி: சகாயமேரி

மொபைல் நபர்: பள்ளி தலைமையாசிரியர் பெயர் என்ன?

மாணவி: தலைமையாசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் பெயர் ஆரோக்கியமேரி.

மொபைல் நபர்: என்ன வேலை செய்ய சொல்லுவார்கள்?

மாணவி: காலையில் எழுந்த பின் கேட் திறப்பது போன்ற வார்டன் செய்ய வேண்டிய எல்லா வேலையும் செய்ய சொல்லுவார்.

மொபைல் நபர்: பள்ளியில் பொட்டு வைக்க கூடாது என கூறினார்களா?

மாணவி: அப்படி எல்லாம் இல்ல.

மொபைல் நபர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தாயா?

மாணவி: இல்லை, படிக்கணும்னு கூறி அனுப்பல.

மொபைல் நபர்: நீ மருந்து சாப்பிட்டது தெரியுமா?

மாணவி: தெரியாது, உடம்பு சரியில்லைனு தான் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இப்படி உரையாடல் நடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அப்படியென்றால், முதலில் சிகிச்சை அளிக்கப் பட்டபோது, ஒருவேளை விசம் / பூச்சி மருந்து சாப்பிட்டதால், மாற்று மருந்து கொடுக்கப் பட்டதா, என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை.

22-01-2022 – ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[7], “தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவி லாவண்யா, விடுதியில் தொடர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்பந்தம்தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பா...வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்[8]. ஏழை மாணவியான லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்ப்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பா...வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.”

அனிதா விசயத்தில் ஆர்பாட்டம், அமர்க்களம் செய்தவர்கள், இப்பொழுது அமைதியாக இருப்பது திகைப்பாக இருக்கிறது: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ், தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் பக்கம்-பக்கமாக எழுதி தள்ளீனார்கள். சமூக ஊடகங்களில் தாராளமாகவே அள்ளி வீசி, ட்ரென்டிங் செய்தனர். அனிதாவுக்கு நீதி கிடைத்ததோ இல்லையோ, இவர்களுக்கு நிதி, விளம்பர, வியாபாரம், பிரபலம் முதலியவை தாராளமாக- அதிகமாகவே கிடைத்தன. ஆளுக்கு ஏற்றபடி ஆதரவு, பிரச்சாரம் செய்வது, செய்திகளை வெளியிடுவது என்றேல்லாம், தமிழகத்தில் சாதாரண விசயமாகி விட்டது. திமுக வந்தவுடன், அதிமுகவையே ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத் தக்கது.

23-01-2022 அன்று பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு: வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்[9]. அது 24-01-2022 அன்று விசாரணைக்கு வருகிறது. இதற்குள் போலீஸார் தமது விசாரணையை துரிதப் படுத்தியுள்ளனர். அதன்படி இன்று 23-01-2022, ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.50 க்கு அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையிலான பாஜகவினர் முருகானந்தம் மற்றும் சரண்யாவை தஞ்சை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தனி அறையில் தனித்தனியாக நீதிபதி பாரதி வாக்குமூலம் பெற்று பதிவு செய்தார்[10].

24—01-2022 மதுரை கிளையில் நீதிபதி முன் வந்த வழக்கு: இந்நிலையில் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 24-01-2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி லாவண்யா பேசியதை வீடியோ பதிவு செய்த முத்துவேல் நாளை காலை 10 மணிக்கு வல்லம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நாளை 25-01-2022 அன்று அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நீதிபதி முறையாக விசாரித்து ஆணையிட்டது வரவேற்கப்பட்டது.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] India Today, 6 schoolgirls flee school hostel after being forced to clean toilets, Asian News International, New Delhi, July 23, 2019UPDATED: July 23, 2019 14:32 IST

[2] https://www.indiatoday.in/education-today/news/story/6-schoolgirls-flee-school-hostel-after-being-forced-to-clean-toilets-1572592-2019-07-23

[3] டாப்.தமிழ்.நியூஸ், மாணவி மரணத்தில் பெண் வார்டன் கைது,  By KATHIRAVAN T R Thu, 20 Jan 202211:54:46 AM.

[4] https://www.toptamilnews.com/thamizhagam/female-warden-arrested-in-student-death/cid6275911.htm

[5] தினமலர், பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு; மற்றொரு வீடியோ கசிந்தது எப்படி?, Added : ஜன 28, 2022  06:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2947480

[7] தினமணி, மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்ற சாயம் பூசுபவர்கள் மீது நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன், பதிவு: ஜனவரி 23,  2022 03:01 AM.

[8] https://www.dailythanthi.com/News/State/2022/01/23030110/Action-against-Religion-in-the-death-of-student-Lavanya.vpf

[9] நக்கீரன், மாணவி லாவண்யாவின் பெற்றோர் நீதிபதியிடம் தனித்தனியாக வாக்குமூலம் அளிப்பு!, பகத்சிங்  நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 23/01/2022 (20:21) | Edited on 23/01/2022 (20:49).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/student-lavanyas-parents-give-separate-confession-judge

“சர்ச் ஆப் பெதஸ்தா”வின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது – கிருத்துவ செக்ஸ்-தீவிரவாதமும் ஆபத்தானது!

பிப்ரவரி 11, 2016

சர்ச் ஆப் பெதஸ்தாவின் பாஸ்டர் ஐஸக் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, கைதானது – கிருத்துவ செக்ஸ்-தீவிரவாதமும் ஆபத்தானது!

Church priest arrested for harassing wown - TOI - 1

பலாத்காரம் நடந்த அடுத்த நாளில் பெண் போலீஸாரிடம் புகார் அளித்தது: இரவானபடியால், வீட்டிற்கு சென்று, அடுத்த நாள் செவ்வாய் கிழமை 09-02-2016 அன்று மதியம் போலீஸில் புகார் கொடுத்தார். இச்செய்தி அறிந்ததும், சுமார் 100 இந்து முன்னணியினர் கூடி, அந்த பாதிரியைத் தாக்க சர்ச்சிற்கு சென்றுள்ளனர்[1]. பலாத்காரம் செய்த பிறகு, மக்கள் வந்து தாக்க வேண்டும் என்ற அளவுக்கு நிலைமை உருவானது ஏன் என்று தெரியவில்லை. “தி இந்து” அப்பெண் இந்து முன்னணியினரிடம் சொல்லி, அவர்கள் ஆர்பாட்டம் செய்ய வந்தனர் என்றுள்ளது. ஆனால், விவரம் அறிந்த போலீஸார் உடனடியாக வந்து, ஐஸக்கை போலீஸ் ஷ்டேசனுக்கு கூட்டிச் சென்று, வழக்கைப் பதிவு செய்தனர். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்டி வெளியிடுகிறது. அப்படியென்றால், போலீஸாருக்கு தகவல் கொடுத்தது யார் என்ற கெள்வி எழுகின்றது.

Church priest arrested for harassing wown - TOI - 2

இந்து முன்னணியரின் ஆர்பாட்டம், போலீஸார் ஐஸக்கை பத்திரமாக கொண்டு சென்றனர்: தமிழ்.ஒன்.இந்தியா இவ்வாறு கூறுகிறது, “அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது[2]. இதையடுத்து பாதிரியார் ஐசக் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பொதுமக்கள் மற்றும் இந்து முண்ணனியினர் ஜபகூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது[3]. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாதிரியாரை பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்[4]. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்[5]. இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், அனுமதியின்றி இயங்கி வரும் ஜப கூடங்களை தடை விதிக்க வேண்டுமெ னவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்[6]. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது”.

Evangelical sex

பாலியல் குற்றங்களினால், இந்திய சமூகம் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்படுவது: இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் உள்ளவர்கள் செக்ஸ் விசயத்தில் தாராளமாக இருப்பதினால், அவர்களுக்கு அத்தகைய உணர்ச்சிகள் 60-80 வயதுகளில் கூட இருப்பது தெரிகிறது. இதனால், தங்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அறியாத பருவத்தில் உள்ள குழந்தைகளை, சிறுவர்களை, சிறுமிகளை தங்களது காமப்பசிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலும். வயதுக்கு வராத சிறுமியை புணர்வதினால், கர்ப்பம் ஏற்படாது என்ற நிலையில் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறர்கள் போலும். வயதுக்கு வந்த நிலையில், கர்ப்பம் ஆனாலும், பணம், வேலை மற்ற உதவிகளை செய்து கர்ப்பத்தைக் கலைத்து விடுகின்றனர். சிறுவர்கள் என்று வரும்போது, பெரும்பாலும் ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்கிறார்கள். அறியாத வயதில், அவர்கள் அது ஏதோ விளையாட்டாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நாளாக-ஆக, மனத்தளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், குற்றவாளிகளாகக் கூட மாறுகிறார்கள். மனோதத்துவரீதியில் அவர்கள் அடையும் கொடுமைகளை, வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது, விவாதிக்கப்படுவதும் இல்லை. மேலும், இத்தகைய காமப்பிறழ்ச்சிகள், கொக்கோக கோணாங்கித்தனங்கள் இந்திய சமூகத்திற்கு புதியதாக இருக்கிறது எனலாம்.

Victor Arden Barnards reign of sexual terror dates back to 2000, when, as the head of a religious community in Minnesota

இடைக்காலத்திலிருந்து, ஐரோப்பியர் ஆட்சியில் தொடர்ந்து, சுதந்திர இந்தியாவிலும் நடந்து கொண்டிருப்பது: இடைக்காலத்தில், முகமதியர்களின் காமத்தொல்லையால், கொக்கோகக் குற்றங்களினால், இந்திய சமூகம் அதிகமாகவே பாதிக்கப்பட்டது. போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் சரியாக ஆராயப்படவில்லை. ஆனால், விளைவுகள் மூலம் சமூகப்பிறழ்ச்சிகளை அறிய நேர்கிறது. “ஆங்கிலோ-இந்திய சமூகம்” என்று சொல்லிக் கொண்டாலும், அது அத்தகைய கலவையினால் உண்டாக்கப்பட்டதேயாகும். போர்ச்சுகீசியர்களின் குரூரம் அவர்களது அடிமை வியாபாரம், செக்ஸ்-விவகாரங்கள் முதலியவற்றின் மூலம் தெரிய வருகின்றது. இப்பொழுது, செக்ஸ்-டூரிஸம், போன்ற போர்வைகளை வைத்துக் கொண்டு அதேபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைக்கு, எம்.என்.சி கம்பெனிகளில் உள்ள அந்நியநாட்டவர்களுக்கு எல்லாவற்றையும் சப்ளை செய்யவேண்டியுள்ளது.

sexual atheism and christianity

நவீனகாலத்தில் நடந்து வரும் கொக்கோக விவகாரங்கள், மறைக்கப்படும் முறைகள்: பெங்களூரு, புனே, மும்பை அவர்களுக்கு மாறியுள்ளது போல, எல்லா இடங்களும் மாறவில்லை. அதனால், மிஷினரிகளின் பள்ளிகள், கல்லூரிகள், அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கான்வென்டுகள் முதலியவை, இவர்களது இச்சைகளுக்கு பூர்த்திசெய்ய அனுப்பும் இடங்களாக மாறியுள்ளன. ஏதோ பொதுப்படையாக, எல்லாவற்றையும் ஒன்றாக பாவிப்பது போல, எந்தவித தப்பெண்ணத்தினால், இவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து நடந்து வரும் செக்ஸ் குற்றங்களின் ஆதாராமாக, அதன் பின்னணியை வைத்துக் கொண்டு சொல்லப்படுகிறது. சம்பந்தப்பட்ட உச்சநீதி மற்றும் உயர்நீதி மன்றங்களின் வழக்குகள் மற்றும் தீர்ப்ப்புகளில் இவ்விவரங்கள் பதிவாகியுள்ளன. அதனால் தான், அத்தீர்ப்புகளில் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; தீர்ப்புகள் அச்சில் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்; மறைக்கப்படுகின்றன; சில காலத்தில் மறைக்கப்படுகின்றன; பிறகு மறக்கப்படுகின்றன. இவ்வாறு உண்மை குழித்தோண்டிப் புதைக்கப்படுகிறது.

sexual baptismand christianity

செக்ஸ்தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும்: செக்ஸ் இறையியல், ஆன்மீக பாலியல், செக்ஸுவல் எவாஞ்சலிஸம் அதாவது பாலியல் மூலம் மதப்பிரச்சாரம் மற்றும் மதமாற்றம், என்றெல்லாம் கிருத்துவர்கள் ஆரம்பித்திருப்பது தெரிகிறது[7]. இதெல்லாம் முஸ்லிம்களின் “லவ்-ஜிஹாத்”, “செக்ஸ்-ஜிஹாத்” போன்றவற்றிற்கு சமமாகும். கடந்த ஆண்டுகளில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள், செக்ஸ்-வன்மங்கள் முதலியவற்றை கூர்ந்து கவனித்து வந்தால், கிருத்துவர்கள் வேண்டுமென்றே அத்தகைய பாவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ரு தெரிகிறது. கிருத்துவர்கள் எப்பொழுதுமே பற்பல இயக்கங்களை வைத்துக் கொண்டு பலவழிகளில் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படு, அந்நாடுகளை சீர்குலைப்பதில் ஈடுபட்டிருப்பதால், அவர்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உச்லிம்களைப் போல, இத்தகைய செக்ஸ்-தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள கிருத்துவர்கள் “ஸ்லீப்பர்-செல்” போல வேலை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், அத்தகைய தீவிரவாதங்களை எந்த காரணத்திற்கும், எந்நிலையிலும் நியாயப்படுத்தப் முடியாது. மனிதத்துவத்தை, மனிதத்தன்மையினை, மனித சமுதாயத்தை அழிவுக்குக் கூட்டி செல்வதால், அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். எந்தவித ஆதரவும், கிருத்துவர்கள் கொடுக்கக் கூடாது. இன்று “எயிட்ஸ்”க்குப் பிறகு, “சிகா” அச்சுறுத்தும் போது, போப்பே, காண்டம் உபயோகித்து அதனை எதிர்த்து போராட வேண்டும் என்கிறார்[8]. கத்தோலிக்கச் சர்ச் பொறுத்த வரையில் கான்டம் உபயோகிப்பது, அபார்ஸன் முதலிய விவகாரங்களில் இறையியல் உதைப்பதால், “வழவழ-கொழகொழ” நிலையில் உபதேசம் செய்து வருகிறது[9]. ஒரு நிலையில் இதெல்லாம் கத்தோலிக்க-கத்தோலிக்கர் அல்லாத இறையியல் போராட்டம் என்று கூட விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், உலகத்தில் உள்ள மற்ற மக்கள் அத்தகைய போலித்தனத்தை ஒப்புக் கொள்ள முடியாது. இவர்களது இறையியல் சோதனை, பரிசோதனைகளுக்காக, மனிதர்கள் பலிக்கடா ஆக்க முடியாது.

© வேதபிரகாஷ்

11-02-2016

[1] More than 100 Hindu Munnani members had gone to the church to attack the priest on Tuesday. However, Thudiyalur police got information and rushed to the spot. Immediately, the police escorted the priest to the police station and registered a case against him under section 354 A (sexual harassment) of the Indian Penal Code. He was arrested and later remanded to judicial custody. Further investigation is on. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Church-priest-arrested-for-harassing-woman/articleshow/50926323.cms

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/young-woman-sexual-harassment-compliant-on-christian-priest-246504.html

[3] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=195225

[4] நக்கீரன், சிறப்பு பிரார்த்தனை என்று இளம்பெண்ணிடம் பலாத்காரம்:கோவை பாதிரியாரிடம் போலீசார் விசாரணை, பதிவு செய்த நாள் : 9, பிப்ரவரி 2016 (21:12 IST) ; மாற்றம் செய்த நாள் :9, பிப்ரவரி 2016 (21:12 IST).

[5] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=160397

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=160397

[7] http://www.christianitytoday.com/ct/2014/december-web-only/evangelical-sex-talk-about-much-more-than-sex.html

[8] http://www.ndtv.com/world-news/catholic-group-urges-pope-to-allow-contraception-to-fight-zika-1276094

[9] http://www.cruxnow.com/church/2016/02/06/like-aids-before-it-zika-virus-exposes-weakness-in-catholic-moral-teaching/