செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளிக்கு போலீஸார், அரசு அதிகாரிகள் ஏன் சலுகைக் காட்டுகின்றனர்? மற்ற பள்ளிகளை விரட்டி–விரட்டி கைது–விசாரணை என்றெல்லாம் நடக்கும் போது, இங்கு ஏன் மெத்தனம்?
ராஜகோபாலனுக்கும், எபி. ஜார்ஜுக்கும் என்ன வித்தியாசம்?: “பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை,” என்று ஊடகங்கள் குறிப்பிட்டு செய்தியை முடித்துக் கொண்டுள்ளன. ராஜகோபாலனை கவனித்த விதத்தில், இங்கு எபி. ஜார்ஜ் கவனிக்கப் படவில்லை. தொலைக் காட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, விவாதங்கள் நடத்தவில்லை. பாலியல் விவகாரத்தில், இப்பள்ளி ஆசிரியரின் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது[1]. ஆனால், அந்நிர்வாகம், அசைவதாகத் தெரியவில்லை. மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், இப்பள்ளி சார்பில் யாரும் ஆஜராக வில்லை[2]. கைதும் செய்யப் படவில்லை. இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
07-06-2021 அன்று செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை: முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஶ்ரீதர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (திங்கள் அன்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை[3]. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்[4].
சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜரானார்: மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது[5]. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், “பள்ளி நிர்வாகம் மற்றும் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஆகியோருக்கு ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி பள்ளி நிர்வாகிகள், வழக்கறிஞரை அனுப்பி வைத்திருந்தனர்[6]. பள்ளியில் குற்றங்கள் நடந்ததற்கு என்னிடம் இருந்த ஏழு ஆதாரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளேன். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பிய விளக்க கடிதத்தில், ’பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளீர்கள்’ என கூறியுள்ளது. அதற்காக அவரின் சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய்யை பிடித்தம் செய்துள்ளது. இது குறித்து அவரின் பணிப்பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளேன்[7]. “பள்ளியின் சார்பில், மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஜராக முடியவில்லை,” என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறது தினமலர்[8]..
கமல் ஹஸன் தெரிவித்த கருத்து[9]: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாதரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்வை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது . தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் திகழ்ந்த நிகழும் பாலியல் துன்பறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விராரிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வது[11]: “இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’ இன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்வைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நமது பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும். இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலை நாட்ட வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[12].
ஜாதியம்–மதம் என்று சொல்லி செக்யூலரிஸமாக்கப் படும் பாலியல் விவகாரங்கள்: ஊடகங்கள் இவற்றை செக்யூலரிஸமாக்க முயற்சிக்கின்றன, அதாவது, ஜாதியம், மதம் என்று இரண்டிலும் இணைத்து, அதன் மூலம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பப் பார்க்கின்றனர். சிக்கியுள்ள எல்லா பள்ளிகளும் சாதி அடிப்படையிலானது, அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளாகவே இருக்கிறது[13]. செயின்ட் ஜார்ஜ் போன்றவை மத அடிப்படையிலான பள்ளிகளாகவும், பிஎஸ்பிபி போன்ற பள்ளிகள் சாதி அடிப்படையிலானதாகவும் இருக்கிறது[14]. இன்று வரையில், இதனை, ஜாதி ரீதியில், குறிப்பாக “பிராமண எதிர்ப்பு” முறையில் கடுமையாக, சாடி விமர்சங்கள், சமூக மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 09-06-2021 அன்று “டைம்ஸ்.நௌ” தொலைக்காட்சி பேட்டியில், முதலில் பேசிய பெண்-வழக்கறிஞர் குறிப்பிட்ட பள்ளியை விமர்சித்தேப் பேசி முடித்தார். பிறகு சின்மயி, “செக்யூலரிஸ” முறையில் விமர்சித்தாலு,ம், அரசியலாக்குவதைக் கண்டித்தார். வைரமுத்துவை பெயர் சொல்லியே தாக்கினார். அவர் எவ்வாறு பெரிய ஆட்களால் காப்பாற்றப் பட்டு வருகிறார் என்று எடுத்துக் காட்டினார். இதனால், கடையாக பேசிய சுப்ரமணியன் சுவாமி எவ்வாறு லயோலா கல்லூரி ஏழு பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறது, கிருத்துவ சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்று கனிமொழியையம் குறிப்பிட்டு பேசினார். நேரியாளர் திடீரென்று பேட்டியை முடித்துக் கொண்டதிலிருந்து, மற்ற கருத்துகள், உண்மைகள் வெளி வர ஊடகங்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
© வேதபிரகாஷ்
10-06-2021
[1] பாலிமர் செய்தி, பள்ளியல் பாலியல் தொந்தரவு: 900 முன்னாள் மாணவர்கள் கூட்டாக புகார், மே.30, 2021 06:06:19:18 PM. https://www.polimernews.com/dnews/147236
[2] https://www.polimernews.com/dnews/147236
[3] தமிழ்.இந்து, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை, Published : 08 Jun 2021 03:13 am; Updated : 08 Jun 2021 06:35 am..
[4] https://www.hindutamil.in/news/tamilnadu/679722-st-george-school-teacher.html
[5] ஈநாடு.டிவி.செய்தி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான பாலியல் புகாரின் விசாரணை ஒத்திவைப்பு, Published on: Jun 7, 2021, 4:01 PM IST.
[6] தினமலர், பள்ளி நிர்வாகிகளுக்கு மீண்டும், ‘சம்மன்‘, Added : ஜூன் 08, 2021 10:07
[7] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/scpcr-postponed-investigation-of-sexual-abuse-allegations-on-st-george-school/tamil-nadu20210607160138357?fbclid=IwAR0BeGRkB498q_4hAg7oXF4shfqhv48iyQImxbH0–kXSwE-KNU4wE0Gilc
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2780932
[9] ஏசியா.நெட்.நியூஸ், தப்பு செஞ்சவங்க எந்த ஜாதியாக இருந்தாலும் தண்டிக்கணும்… இரண்டு பெண்களின் தகப்பனாக பொங்கி எழுந்த கமல்…!, Kanimozhi Pannerselvam, Chennai, First Published May 26, 2021, 3:08 PM IST.
[10] https://tamil.asianetnews.com/politics/makkal-needhi-maiam-leader-kamal-hassan-condemnation-to-psbb-sexual-harassment-complaint-qtpk4q
[11] மாலைமலர், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும்– தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை, பதிவு: மே 27, 2021 10:05 IST.
[12] https://www.maalaimalar.com/news/district/2021/05/27100546/2675385/Tamil-News-Kamal-Haasan-request-to-TN-government-to.vpf
[13] ஏசியாவில், ‘அமைச்சர்கள் கலந்துகொள்ளும் குழந்தை திருமணங்கள்‘ நாம் மறந்து கடந்து செல்கிறோம்! நினைவில் கொள்ளுங்கள், By Abisha Bovas • 03/06/2021 at 11:03AM
[14] https://www.asiaville.in/article/women-and-child-against-issue-in-recent-time-detail-interview-with-shalin-maria-lawrence-71708