பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

பீட்டர் அல்போன்ஸும், எஸ்ரா சற்குணமும் – மிக்க அடிப்படைவாத கிருத்துவர்கள் – திராவிடத்துவப் போர்வையில் செக்யூலர் வேடம் போடுபவர்கள்! (1)

29-03-2022 அன்று நடந்த சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது[1]. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார்[2]. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது: கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”. அவர்களின் ஜனத்தொகைக்கு மேலாக, விகிதாச்சாரமே இல்லாத அளவுக்கு சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் படவேண்டும் என்று அவர்கள் தான் விளக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி கட்டி விட்டு, பிறகு, இந்துக்களில் விழாக்கள் அங்கு நட்த்தப் படக் கூடாது, ஊர்வலங்கள் செல்லக் கூடாது என்று பிரச்சினை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அத்தகைய கலவரங்கள் உண்டாக்கும் சர்ச்சுகள்-மசூதிகள் ஏன் கட்டப் பட வேண்டும்?

தனிப்பட்ட பிரார்த்தனை, வழிபாடுகளுக்கு பிரச்சினை இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “மேலும், மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ, சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளனர். அதே சமயம், சிறுபான்மையின மக்கள் ஆராதனை, வேண்டுதல் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எந்த அளவுக்கு சமூக அமைதி நிலவுகிறதோ, அந்த அளவுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சமூக அமைதியை சீர்குலைக்கவும், மக்களை மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி”. எல்லாம் சரிதான், ஆனால், மைக்குகள் வைத்து தான் கலாட்டா செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்கள் செய்யும் கலாட்டாக்களை நகர்புறப் பகுதிகள், கிராமங்களில் கவனிக்கலாம். பது பேர் வந்து சப்தம் போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு ஆர்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். ஆளே இல்லாமல் இருந்தாலும், ஒலிப்பெருக்கியில் கத்தல்கள் வந்து கொண்டே இருக்கும்.

29-03-2022 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், வங்கி கிளை வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து கூறியது, “மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். சிறுபான்மை இன மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டும் மேடை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துறந்துவிட்டு தான் செல்ல வேண்டும். முதல்வரின் எண்ணமும் அதுதான். மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம்,” இவ்வாறு அவர் கூறினார். கிருத்துவர் மற்றும் துலுக்கர்களுக்குத் தனியகத் தான் புதைக்க மயானங்கள் உள்ளன. ஆகவே, இதில் சமத்துவம், வெங்காயம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டுமென்றே குழப்பத்தை உண்டாக்க, இல்லை அவ்வாறு இடங்களை ஆக்கிரமிக்க வித்திடுவது போலிருக்கிறது.

 “அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது,”: என, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை வழங்கினார்[3]. அறிவுரை 2002ல் கூறினால் ஏற்றுக் கொள்வார்களா என்ன? 221லும் சொல்லியாகி விட்டது. ஆனால், அதே பிரச்சினைகள் தான் 2022லும் பேசப் படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது[4]. கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது: “சிறுபான்மையின மக்களுக்கு உரிமை இருப்பது போல், கடமைகளும் உள்ளன. மாற்று சமூகத்தினருடன் இணைந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்; நாமும் அவர்களால் வாழ வேண்டும். பிற சமூக மக்களுக்கும் உதவிகளை செய்து, மனிதநேயம் மிகுந்த சமுதாயமாக மாற்ற வேண்டும். ஜாதி, மதத்தை மறந்து, எல்லாரும் தமிழர்களாக ஒன்றிணைந்து, எழுந்து நிற்க வேண்டும்.அரசு புறம்போக்கு நிலத்தில், சர்ச், மசூதி கட்டி, அனுமதி கேட்டால் கிடைக்காது; தனியார் இடத்திலும், கட்டி முடித்த பின் அனுமதி கேட்டு அரசை சங்கடப்படுத்தக் கூடாது. கலெக்டரிடம் முறையான அனுமதி பெற்ற பின் கட்ட வேண்டும். மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, மத பிரசாரம் செய்வது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். சிறுபான்மையின மக்களின் கோரிக்கையின் மீது, மாவட்ட நிர்வாகம், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு, அவர் பேசினார்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி: இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலாக இருந்த இடத்தில் தற்போது கட்டிட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்று கேட்டு புகார் எழுந்தால் மாவட்ட நிர்வாகம் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். புறம்போக்கு நிலத்தில் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் கட்டி விட்டு அதற்கு அனுமதி தாருங்கள் என்று அரசிடம் கேட்டால் இப்போது அனுமதி கொடுக்க அரசு சட்டத்தில் இடமில்லை. புறம்போக்கு இடம், அரசுக்கு சொந்தமான நீர்வழிப்பாதை, நீர்ப்பிடிப்பு பகுதி, மேய்ச்சல் புறம்போக்கு போன்ற நிலங்களில் தனியாருக்கோ, வழிபாட்டுக்கோ கொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நிரந்தர தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நினைத்தால் கூட விதியை தளர்த்த இடமில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதியை தர வேண்டும் என்று கேட்பதே விவகாரமாக உள்ளது. அப்படியென்றால் அதில் பிரச்சினை உள்ளது. “யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வழிபாடு நடத்துவதற்கு சமூக அனுமதி” என்பதே கேலிக் கூத்தானது, அதாவது, அவர்களது சர்ச்-மசூதிகளும் சட்ட் விரோதமானது, போதாக்குறைக்கு அவற்றினுள் வழிபாடு செய்யாமல், பொது இடங்களில், தெருக்களில் செய்வார்கள் போலும், அதற்கும் அனுமதி கேட்பார்கள் போலும், இதெல்லாமா சமத்துவம், சமதமம், செக்யூலரிஸம். பீட்டர் அல்போன்ஸுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

©  வேதபிரகாஷ்

31-03-2022


[1] தமிழ்.இந்து,  மத ரீதியாக மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர்பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு, டி.ஜி.ரகுபதி, Published : 29 Mar 2022 22:04 pm; Updated : 29 Mar 2022 22:04 pm.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/782764-some-are-trying-to-divide-the-people-religiously-and-do-politics-accuses-peter-alphonse.html

[3] தினமலர், அரசு நிலத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாதுசிறுபான்மையினர் ஆணைய தலைவர் அறிவுரை,  Added : மார் 31, 2022  00:52.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2995988

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.