Archive for the ‘வேதபிரகாஷ்’ Category

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? – கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

மார்ச் 30, 2022

எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?

பிரான்சிஸ் கலிஸ்ட் உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டது எஸ்சி கிருத்துவ எதிர்ப்பு: பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) என்ற உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்-புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டிருப்பதால், எஸ்.சி கிருத்துவ அமைப்பினர் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய அறிவித்தனர்[1]. தலித் கிருத்துவ விடுதலை இயக்கம் (Dalit Christian Liberation Movement, DCLM) ஏப்ரல் 11 மற்றும் 29 தேதிகளில் புதுச்சேரியில் ஆர்பாட்டம் செய்யப் போவதாக கூறினர்[2]. ஜார்ஜ் அந்தோனிசாமி அந்தோனி பாப்புசாமி போன்ற பிஷப்புகள் எஸ்சியினர் பிஷப்பாக வரக்கூடாது என்று வேலை செய்து வருகின்றனர்.  வெள்ளாலர், உடையார், வன்னியர், நாடார், மீனவர் என்று மாறி-மாறி  பிஷப் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது, தொடர்ந்து உயர் ஜாதியினரே பிஷப்பாக வந்து கொண்டிருக்கின்றனர். 1980களிலிருந்து போராடி வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடக்கியாண்டு வருகின்றனர்[3]. ஆனால், அவர்கள் மேடைகளில் பேசும் பொழுது, ஏதோ சமத்துவத்தி உண்டாக்கி விட்டது போல பேசுவார்கள்.  இவரை எதிர்த்து சர்ச்சுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்[4]. கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[5]. ஆனால், கத்தோலிக்க சர்ச் கண்டுகொள்ளவில்லை.

வாடிகன் செய்தி கூறுவது 19-03-2022[6]: ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்[7]. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்[8]. 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப் படுத்தப்பட்டார்[9]. 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்.  1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார்.

2020ல் எஸ்.சி கிருத்துவ கூட்டங்கள் கோரிக்கைகள்: மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது[10]. இத்தகைய கூட்டங்கள் 1980களிலிருந்து நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸில் அதிகமாகவே செய்திகள், வஆகர் கடிதங்கள் என்று காரசாரமாக வாத-விவாதங்கள் நடந்தன. அவற்றில் கத்தொலிக்கச் சர்ச்சின் இரட்டை வேடங்கள், பிஷப்புகளின் ஜாதிய நாடகங்கள், “தலித்” போர்வையில் நடந்த பேரங்கள் என்றேல்லாம் வெளி வந்தன. தீவிரமாக போராடிய, அப்படி காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது அமைதியாகி, சந்தோசமாக உள்ளனர்[11]. திருச்சியில் 2020ல் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்[12], தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சார்லஸ் கூறியது: “தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமார் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை. வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி 2020 திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார். பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

1980-2022 காலாட்டங்களில் கிருத்துவ ஜாதியம் மாறவில்லை: “தலித்” என்று சொல்லிக் கொண்டு கிருத்துவர்கள் அதிகமாகவே ஏமாற்றி வருகின்றனர். இப்பொழுதும், ஊடகங்கள் அவ்வார்த்தை பிரயோகம் கூடாது என்றாலும், வேண்டுமென்றே உபயோகித்து வருகின்றது. பிஜேபியும் சில நேரங்களில் இதற்கு ஆதரவு காட்டுவதால், குளிர் விட்டுப் போய், அப்பிரயோகம் மறுபடியும் அதிகமாகி விட்டது. எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்.

அரசியலாக்கப் படும்தலித்பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது,  மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.

©  வேதபிரகாஷ்

30-03-2022


[1]  The Hindu, Dalit Christians to protest appointment of non-Dalit Bishop as Archbishop of Archdiocese of Tamil Nadu and Pondicherry, Udhav Naig, CHENNAI, MARCH 29, 2022 20:52 IST; UPDATED: MARCH 29, 2022 20:52 IS.

[2] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-christians-to-protest-appointment-of-non-dalit-bishop-as-archbishop-of-archdiocese-of-tamil-nadu-and-pondicherry/article65271233.ece

[3] Members of the Dalit Christian Liberation Movement on Tuesday said they would launch a protest against the appointment of non-Dalit Bishop Francis Kalist as the Archbishop of Archdiocese of Cuddalore-Pondicherry in Puducherry on April 11 and April 29, when he would be consecrated as the Archbishop, citing the ‘discriminatory attitude’ against the Dalits by the Catholic Church in India in appointments of Bishops and Archbishops. DCLM claimed that the Tamil Nadu Bishop Council president Archbishop George Antonysamy and former president Archbishop Antony Pappusamy acted in a discriminatory manner against Dalits and demanded they resign from their posts taking responsibility. DCLM State president Mary John alleged the Dioceses in Tamil Nadu are dominated by Vellalar, Udayar, Vanniyar, Nadar and fisherman communities. “Most of the Bishops and Arch Bishops in Tamil Nadu-Pondicherry Dioceses routinely come from Vellalar, Udayar, Vanniyar, Nadar and Fisherman community. This is an injustice despite 75% of the Catholics in Tamil Nadu being Dalits,” he said. He claimed that only 11 out of 180 Bishops are Dalits and only 2 out of 31 Archbishops in India are Dalits. “There are 17 Bishops in Tamil Nadu and Pondicherry but only one is a Dalit. This marginalisation and exclusion is widespread in appointments, education, employment opportunities, financial assistance in the Catholic Church despite Dalits being 64% of Indian catholic population and 75% of Tamil Nadu-Pondicherry Archdiocese. This can be corrected only when Dalits are appointed as Arch Bishops and Bishops,” he said.

[4] தினமலர், பேராயரை எதிர்த்து கறுப்பு கொடி, மார்ச் 21,2022 | 12:07 IST.

[5] https://www.dinamalar.com/video_main.asp?news_id=211048&cat=1585

[6] வத்திகன் செய்தி, பாண்டிச்சேரிகடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர், 19 March 2022, 15:41.

[7] https://www.vaticannews.va/ta/pope/news/2022-03/bishop-francis-kalist-appointed-new-archbishop-pondicherry.html

[8] தினத்தந்தி, புதுவை கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம், பதிவு: மார்ச் 19,  2022 20:46 PM.

[9] https://www.dailythanthi.com/News/State/2022/03/19204631/Francis-Callist-appointed-Archbishop-of-puducherryCuddalore.vpf

[10] தினமணி, பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல், By DIN  |   Published on : 13th October 2020 02:41 AM  |  Last Updated : 13th October 2020 02:41 AM.

[11] 40 ஆண்டுகள் மேலாகி விட்டாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பெயர்களை வைத்து, அவர்களை இன்றைக்கும் அடையாளம் காணலாம். சிலர் காலமாகி விட்டனர். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது.

[12] https://www.dinamani.com/all-editions/edition-trichy/2020/oct/13/insisting-on-nominating-dalit-christians-for-peraya-posts-3484004.html

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

ஓகஸ்ட் 18, 2019

மெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது!

MCC, Zoology dept-Raveen

ரவீன் ராஜாசிங் மற்றும் சாமுவேல் டென்னிஸன்பாலியல் சதாய்ப்புகளில் ஈடுபட்ட துணை பேராசிரியர்கள்: சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ – மாணவிகள், கடந்த 2019 ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு “கல்வி சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டனர்[1]. அப்பொழுது இவர்கள் எல்லைகளை மீறியபோது கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் பல வகைகளில் செக்ஸ்-ரீதியில் தொட்டும்-பேசியும் சதாய்த்துள்ளனர். ஜனவரி 9, 2019 முதல் 14 வரை என்ற சுற்றுலாவில் 46 மாணவிகள் சென்றுள்ளனர், அதில் 34 பேரிடமிருந்து புகார் அளிக்கப் பட்டுள்ளன[2]. அந்த ரவீன் ராஜாசிங் ஒரு மாணவியின் அறையுள் நுழைந்து, அவள் படுக்கையில் படுத்தாரா/னாம்! இந்த லட்சணத்தில் இருக்கிறது படிப்பு/ புரொபசரு! இதனால், சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, இரு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்[3].  கல்லுரியில் அமைக்கப் பட்ட புகார்-விசாரிப்பு கமிட்டி [Internal Complaints Committee (ICC)] மூலம்விசாரிக்கப் பட்டது[4]. சுற்றுலாவின் போது, அவர்கள் தகாத முறையில் பேசியது, நடந்து கொண்டது ஊர்ஜிதம் ஆனது[5]. டென்னிஸன், ரவீனின் சில்மிஷங்களை, அடாவடித்தனங்களை ஊக்குவிக்கும் வகையில் பேசி வந்தான்[6]. முன்னமே குறிப்பிட்டப் படி, ரவீன், ஒரு பெண்ணிம் அறைக்குள் நுழைந்து படுக்கையின் மீது படுத்துத் தூங்கினான்.

Samuel Tennyson

முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்த கல்லூரி: கல்லூரி முதல்வர், முதலில் புகார் கொடுத்த போது, இதெல்லாம், முதன் முதலில் செய்த குற்றம் என்று விசாரிக்க மறுத்து விட்டனராம். அதென்ன “முதன் முதலில்” என்ற சலுகை. ஒரு தடவை கற்பழித்தால் விட்டு விடுவார்களா? ஒருவேளை பரிசுத்த ஆவியோ, கர்த்தனோ, ஏசுநாதனோ[7] வந்து சரிசெய்து விடுமா? இதானால், பெற்றோர்கள் பயந்து விட்டார்கள் போலும்! பிறகு 30 பேர் கையெழுத்துப் போட்டு புகார் கொடுத்தப் பிறகு தான், கல்லூரி அதிகாரம் புகாரை அனுமதித்து, கமிட்டியை அமைத்தது[8].

MCC, Zoology dept-complaint letter

டென்னிஸனே அக்கமிட்டியில் இருந்தது வேடிக்கைதான். இதிலிருந்து, கல்லூரி விவகாரத்தை மறைக்கவே முயன்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு வினாத்தாள்களை தயாரிக்க மற்றும் விடைத்தாள்களை திருத்த ரவீனுக்கு தடை விதித்து கல்லூரி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்தது.[9]. ஏனேனில், இதை மனதில் வைத்துக் கொண்டு, மாணவிகளை பாதிக்க முயலும் என்பதால். மே 24, 2019 அன்று இருவருமே குற்றவாளிகள் என்று கண்டுபிடித்தது ரவீன் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் பட்டான். டென்னிஸன் அதற்குள் நீதி மன்றத்திற்கு சென்று விட்டான். இருப்பினும், கல்லூரி வளகத்திற்குள் வரக்கூடாது என்று ஆணையிடப்பட்டது.

Raveen Rajasigh, Christian Collge, Madras

வழிபாட்டு வளாகத்தில் நடப்பது தெருக்களில் நடந்தால், குற்றங்கள் அதிகமாகும்: வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது[10]. ஆனால், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது[11].  அதாவது, எப்படியாவது, வழக்கை இழுத்தடிக்க, டென்னிஸன் முயன்றுள்ளான். கல்லூரி தரப்பு பதிலை ஏற்று, பேராசிரியர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தன்னுடைய உத்தரவில், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்ச், மசூதி, கோவில் விட்டு, மதம் தெருக்களில் கடைபிடிக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நிகழத்தான் கூடும், அதிகமாகும்- நீதிபதி . அதாவது இப்பொழுதெல்லாம், தெருக்களில் நமாஜ் செய்வது, பிரச்சாரம் செய்வது முதலிய அதிகமாகி விட்டன.

MCC, Zoology dept-Samuel Tennyson

இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது[12]. எஸ். வைத்தியநாதன், நீதிபதி நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை / சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்தார்[13].  இப்பொழுதுள்ள நவநாகரிகமுள்ள காலத்தில் தான் இவ்வாறான கருத்துச் சொல்லப் பட்டிருக்கிறது என்பனை கவனிக்க வேண்டும்[14]. நிச்சயமாக அத்தகைய கருத்து, திடீரென்று வந்திருக்காது. இந்தியா முழுவதும் தொடர்ந்து சிறுவர் கற்பழிப்பு, கன்னியாஸ்திரிக்கள் கற்பழிப்பு, மற்ற பாலிய அத்துமீறல்கள் நடந்து வருவதை சுட்டிக் காட்டவே அவ்வாறு குறிப்பிட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அவற்றில் சம்பந்தப்பட்டது எல்லாம் கிருத்துவ குருமார்கள், சாமியார்கள், பாஸ்டர்கள், பிஷப்புகள் முதலியோர் தாம்[15]. அதிக அளவில் உள்ள கிருத்துவ மழலையர் பள்ளிகள், கான்வென்டுகள் முதல் மகளிர் கல்லூரிகள் வரை அவர்கள் நிர்வாகத்தில், கட்டுப்பாட்டில் இருப்பதால், அத்தகைய அச்சம்ம் வந்தது நியாயமானது தான்[16]. மதம் மாற்றம் முதலியவற்றையும் மறைக்கத்தான் முயல்கின்றனர். இச்செய்தியும் பிடிஐ மூலம் வெளிவந்துள்ளதால், ஆங்கில ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[17].

Raveen Rajasigh, Christian Collge, Madras.at coorg

பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்கள்: பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், அவை ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்கு வரதட்சணை தடைச் சட்டமே சிறந்த சான்றாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்கும் சட்டங்கள் மீது அரசு கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சில சட்டங்கள் பெண்கள் எளிதாக அணுகும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அப்பாவி ஆண்மகனை சிக்க வைக்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் நிறைய இருக்கின்றன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் போலியான பல வழக்குகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-08-2019

MCC, Zoology dept

[1] Bangalore Mirror, MCC sexual harassment case: Madras HC says there is a general feeling that Christian institutions are unsafe, Gladwin Emmanuel, Uploaded: August 16, 2019, 16:5 IST.

[2] தினமணி, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா? – உயர்நீதிமன்றம், By DIN | Published on : 17th August 2019 04:39 PM.

[3] https://www.dinamani.com/tamilnadu/2019/aug/17/christian-institutions-unsafe-for-girl-students-madras-hc-3215633.html

[4] https://bangaloremirror.indiatimes.com/news/india/mcc-sexual-harassment-case-madras-hc-says-there-is-a-general-feeling-that-christian-institutions-are-unsafe/articleshow/70700615.cms

[5] TheNewsMinute, In a win for students, Madras Christian College dismisses prof found guilty of sexual harassment, Jayarajan, Tuesday, July 16, 2019 – 18:39

[6] https://www.thenewsminute.com/article/win-students-madras-christian-college-dismisses-prof-found-guilty-sexual-harassment-105563

[7] தமிழில் கடவுளை அவன், இவன் என்று பேசுவது, எழுதுவது வழக்கம், அதனால், அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

[8] கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறி – சென்னை உயர்நீதிமன்றம், WebDesk, Aug 16, 2019

[9] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-christian-college-women-students/

[10] தினமலர், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் பாதுகாப்பானதா ?, Updated : ஆக 17, 2019 18:16 | Added : ஆக 16, 2019 17:47

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2345457

[12] The Hindu, Sexual harassment case: HC refuses to interfere in show-cause notice to Madras Christian College staff, Legal Correspondent CHENNAI , AUGUST 17, 2019 01:05 IST. UPDATED: AUGUST 17, 2019 08:18 IST

[13]  https://www.thehindu.com/news/cities/chennai/hc-refuses-to-interfere-in-show-cause-notice-to-mcc-staff-college-took-the-step-against-teacher-after-34-students-levelled-charges-of-harassment/article29114275.ece

[14] Times of India, Christian institutions ‘unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST

[15] https://timesofindia.indiatimes.com/city/chennai/christian-institutions-unsafe-for-girl-students-hc-judge/articleshow/70708267.cms

[16] NDTV.News, Christian Co-Ed schools regarded ‘Highly unsafe’ for girl students: Madras HC judge ,  Chennai News – Updated: Aug 17, 2019, 6:25 IST.

[17] https://www.ndtv.com/india-news/general-feeling-that-christian-co-ed-schools-highly-unsafe-for-girls-future-court-2086209

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

மார்ச் 18, 2019

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் வாடிகனின் பங்கு மற்றும் போப் பால் VIன் அனுமதி [4]

Vatican changedd Bible in 1969-1

1969ல் வாடிகன் தினசரி பிரார்த்தனையில் மேரி மேக்தலீன் பற்றிய விவரங்களை மாற்றியது: இடைகாலத்தில் மேரி மேக்தலீன் கட்டுக் கதை எவ்வாறு பாரிஸில் வளர்க்கப்பட்டது என்பது விவரிக்கப் பட்டது. வாடிகனுக்கு ஆரம்த்திலிருந்தே, மேரி மேக்தலீனை உயர்த்து வைப்பதை குறைத்து வந்தது. மேரி என்ற பெயர் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை விட, ஏசுவின் விறையை பாதுகாத்து, வம்சத்தைப் பெருக்குவாள் போன்ற கதைகள் இடித்தன, பயமூட்டின. ஆனால், பிரான்சில், இதை நம்பும் பக்தர்கள், விசுவாசிகள் அதிகமாகவே இருந்தனர். மேரிக்கு இணையாக வளர்ந்து விடுவாளோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், காலத்தின் கட்டாயம், அவளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. 1969ல் வாடிகன், போப் பால் VIன் அனுமதியுடன்  தனது தினசரி லத்தீனில் செய்யப் படும் பிரார்த்தனையில் சிறிது மாற்றங்களை செய்தது.  லூக் பைபிளில் ஏழாவது அதிகரத்தில், ஒரு பெயர் குறிப்பிடாத பெண் ஏசு இருந்த வீட்டில் நுழைந்தாள் என்ற விவரம் உள்ளது.

Vatican changedd Bible in 1969-2

லூக்கா, அத்தியாயம்.7ல் உள்ளது: முதலில் மேரி மேக்தலீன் ஒரு வேசி, விபச்சாரி என்றெல்லாம் தான் அறியப் பட்டாள், சித்டரிக்கப் பட்டாள்: லூக்கா சொல்வது:

37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,

38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

………………………………………………..

47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;

48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.

இந்த கதையானது ஜான் பைபிளில் உள்ள 20 அத்தியாயத்தில் வரும் கதையை வைத்து மாற்றப் பட்டது. அங்கு அப்பெண் மேரி மேக்தலீன் என்று அடையாளம் காணப்படுகிறாள். அவள் பாவப்பட்டவள் என்பதால் அல்ல உயிர்த்தெழுந்த பின்னர், தன்னை அவளிடம் அடையாளம் காட்டிக் கொண்டதால், முக்கியத்துவம் பெறுகிறாள்.

Mary Magdalelene - raised to GODHEAD

ஜான், அத்தியாயம் 20ல் உள்ள விவரங்கள்: ஜான் அவள், ஏசு உயர்த்தெழுந்ததுடன் தொடர்பு படுத்துகிறது:

11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,

12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.

13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.

16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

18 மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

Mary Magdalene teaching apostles

இதுவரை, மேரி மேதலீனை விபச்சாரி, வேசி என்றெல்லாம் தான் அறியப்பட்டு வந்தது. ஆனால், அவள் தான் முதன்முதலில் உயிர்த்தெழுந்த ஏசுவைக் கண்டவள். அதனால், அவள் மதத்திற்கே மையக்கருவாக இருக்கிறாள். எது எப்படியாக இருந்தாலும், அடுத்த ஆண்டே, 1970ல் “ஜீசஸ் கிரைஸ்ட் சூப்பர் ஸ்டார்” என்ற படம் வந்து ஹிட் ஆனது. அதே போல 1971 மற்றும் 1973 ஆண்டுகளில் பாடல்கள் வெளியிடப் பட்டு பிரபலம் ஆகியது. ஆக இவ்வாறு, பைபிள் மாற்றப் பட்டுக் கொண்ட்தான் வருகிறது[1]. அவள் எப்படி படிப்படியாக உயர்த்தப் பட்டு, கடவுளாகப் பட்டாள் என்பதை பல ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[2].

Jesus in India books manufactured- 1

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை[3]: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறி எழுதப்பட்ட புத்தகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யார்க் பல்கலைக்கழக (கனடா) பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் “The Lost Gospel”. இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை, புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது இந்த புத்தகம். ஆராமெய்க் மொழியில் தங்களிடமிருந்த அந்த புத்தகத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறி பிரிட்டீஷ் நூலகம் இந்த விவகாரத்தில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டுள்ளது[4].

Jesus in India books manufactured- 2

கட்டுக் கதை வளர்க்கும் விதம் – ஆதரவு-எதிர்ப்பு[5]: “வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது” என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும். ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக ‘தி லாஸ்ட் கோஸ்பல்’ புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர். எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[6].

© வேதபிரகாஷ்

17-03-2019

Jesus in India books manufactured- 3

[1] Michael Haag, The Quest For Mary Magdalene: History & Legend, Profile Books, London, 2016.

[2] Beavis, Mary Ann. The Deification of Mary MagdaleneFeminist Theology 21.2 (2012): 145-154.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[4] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை, By Veera Kumar | Published: Tuesday, November 11, 2014, 17:21 [IST]

[6] https://tamil.oneindia.com/news/international/was-jesus-married-mary-magdalene-the-father-two-says-book-the-lost-gospel-214656.html

“வெளிச்சத்தை நோக்கி” என்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்! [2]

மார்ச் 3, 2019

வெளிச்சத்தை நோக்கிஎன்ற கிருத்துவ தூஷண கருத்தரங்கமும், இந்துத்துவ வாதிகளின் புலம்பலும்!  [2]

Christian site criticizing the seminar Feb 18-20 -2019.3

கலவரத்தை உண்டாக்கவே கருத்தரங்கம்ஆனால் ஏசுவின் வருகை காட்டுகிறது[1]: இதனை சமீபத்தில் லயோலா கல்லுாரியில் நடந்த ஓவிய கண்காட்சி, திருச்சி ஜோசப் கல்லுாரியில் தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் கருத்தரங்கம், கோவையில் நடக்க உள்ள வெளிச்சத்தை நோக்கி கருத்தரங்கம் போன்றவை மூலம் உணர முடியும். இவற்றி்ல் இவர்கள் பேசப் போவது அனைத்துமே பேத்தியை போலவே பாட்டி இருக்காங்க என்றுதான். அவர்கள் கருத்தரங்கம் குறித்து மிப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வார்கள்.

அது தொடர்பாக கருத்து மோதல் வெடிக்கும், இந்துகள், கிறிஸ்தவர்கள் மோதிக் கொள்வார்கள். தங்கள் பெயர் பிரபலமாகும். திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள். இதனால் ஏசுவின் பெயராலே இந்த சாத்தான்கள் குளிர்காய்வார்கள்.  சமீபத்தில் திரைப்படங்களில் அரசியல் பேசி ஓடாத சினிமாவை ஓட வைப்பதற்கு இணையானது தான் இது

கிருத்துவர்கள் இந்த அளவிற்குத் தெளிவாக இருக்கிறார்கள். “திருச்சியில் நடந்தது போலவே கோவையிலும் கடைசி நிமிடத்தில் கருத்தரங்கை நடத்தாமல் கைவிடுவார்கள்” என்ற அளவிற்கு சிந்தித்து வைத்து செயல்பட்டுள்ளார்கள்! ஆனால், இந்த்துவவாதிகளின் நிலை, திட்டம், குறிக்கோள்? கிருத்துவர்களுக்கு உதவுவது தான்! அப்படியென்றால், இவர்களுக்கு இடையே ஏடாவது கூட்டு இருக்கிறதா?

போன்றவையும். எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது அந்தி கிறிஸ்து வந்து விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து வெளிப்படுத்தின சுவிஷேங்களில் காணப்படும் அடையாளங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து இயேசுவின் 2வது வருகை இருக்கும். இதனால் கிறிஸ்தவர்களே பரலோக ராஜியம் சமீபமாக இருக்கிறது. இந்த உலகை விட்டு செல்ல மூட்டை முடுச்சுகளை கட்டிக் கொள்ளுங்கள்[2].

Pandithurai, Johnson, Baskara, Vijayakanth, Thomas, Ramesh

இந்துத்துவ கிருத்துவஎதிர்ப்பு விற்பன்னர்களின் கூட்டம்: டிசம்பர் 2017ல் “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[3] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[4] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[5] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[6] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[7] நடுவராக இருந்தார்[8]. இதில் குறிப்பாக ஜடாயு மற்றும் ஏ.வி. கோபாலகிருஷ்ணன் கிருத்துவ விசயங்களில் மிக்கத் தேர்ந்த பண்டிதர்கள் என்று அறிமுகப் படுத்தப் பட்டனர்[9]. அவர்களும் அந்த சுவதேசி இந்தியவியல் மாநாட்டில் வெளுத்துக் கட்டினர். யாரும் கேள்விகள் கேட்க அனுமதிக்கப் படவில்லை. இவ்விதமாக இந்துகளின் “சுவதேசி இந்தியவியல் மாநாடுகள்” நடக்கின்றன. இப்பண்டிதர்களில் ஒருவர் தாராளமாக சென்று கலந்து கொண்டிருக்கலாமே. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த ஏழு பேர்களுக்கு பேஸ்புக்கிலகிவர்கள் நண்பர்களாக வேறூ இருக்கிறார்கள்! சரி, இப்பொழுதாவது, யாராவது சென்று கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. விசாரித்தால் மாநாடு நடந்ததா இல்லையா என்று கூட சரியாகத் தெரியவில்லை. கிருத்துவர்கள் தரப்பில், பொய்யான ஆராய்ச்சி என்றாலும், பி.எச்டிக்கள் மூலம் அரைத்த வாவை அரைத்து, பெருக்குகிறார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளோ, அடுத்தவர்களை அமுக்கி, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையில்லாத இவர்களால் இந்துக்களுக்கு லாபமும் இல்லை, பயனும் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், அவர்கள் தொடர்ந்து காரியங்களை செய்து வருகிறார்கள்.

Christian seminar -Pandithurai with Moses Michael

மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” 1989ல் தோன்றியது: கிருத்துவர்களை எதிர்க்க வேண்டுமானால், ஒற்றுமையுடன் இந்துக்கள் செயல்பட வேண்டும். நான் 1989ல் “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” சார்பில், “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை” என்ற சிறு-புத்தகத்தை வெளியிட்டேன். அது ஆராய்ச்சிப் புத்தகம் என்பதால், நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது[10]. “மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம்” என்பது ஒத்தக் கருத்துக் கொண்ட எட்டு நண்பர்கள் மூலம் உருவாக்கப் பட்டது. பல நண்பர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள். ஒரு.ரூ ரூ, 5/- ரூ. 10 ரூ 50/- என்றெல்லாம் கொடுத்தார்கள், அதை வைத்து அப்புத்தகம் வெளியிடப்பட்டது. அதனால் தான் அப்புத்தகம் வெளியானது. அச்சிட்டவரே அதனை பாராட்டினார், ஏனெனில், அவர் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு புத்தகங்களை அசிட்டுக் கொடுத்து வந்தார்[11]. ஆனால், “செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – தொடர்கிறது” என்று சுமார் 180 பக்கங்கள் கொண்ட புத்தகம் தயாரித்து, சிடியில் கொடுத்த போது, வெளியிடுகிறோம் என்று வாக்களித்தவர் 2008ல் வெளியிடவில்லை. மாறாக அவற்றில் உள்ள ஆதாரங்களை வைத்து, மற்றவர்கள் புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்படித்தான், இந்துக்களின், இந்துத்துவவாதிகளின் போக்கும், நடவடிக்கைகளும் இருக்கின்றன. முன்பு பணமில்லை, மனமிருந்தது. இப்பொழுது பணம்-அதிகாரம் இருக்கிறது, ஆனா, மனமில்லை. தங்களது நிலையை, பதவியை, இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார்களே தவிர, கொள்கைக்குப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இங்குதான் கிருத்துவர்கள் மாறுபடுகிறார்கள்.

© வேதபிரகாஷ்

03-03-2019

Ezra, Sundar Singh etc

[1] நியூஸ்.டி.எம், தேவன் வருகை சமீபத்தில் இருக்கிறது !, பாரதி பித்தன் | Last Modified : 09 Feb, 2019 09:33 am.

[2] https://www.newstm.in/news/tamilnadu/55607-jesus-is-coming-soon.html

[3] M.Venkatesan is well known Tamil writer and publisher. He is an original thinker and dharmic activist. He has written books on Ambedkar, EV Ramasamy Naicker, the Dravidian movement and Justice Party. His books such as ஈவே ராமசாமியின் மறுபக்கம் (The Other side of EV Ramasamy), ‘புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? (Why did Ambedkar Convert to Buddhism? ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare? )’, ‘ஹிந்துத்துவ அம்பேத்கர் (Hindutva Ambedkar) ‘ have been making a significant impact on the intellectual climate of Tamil Nadu.

[4]  N.A. Padmanabhan is a Tamil journalist and writer having a very rich experience in both Tamil print and visual media. He has authored books on Indian Philosophy and Hindu spirituality. His books such as ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே (Rejection of God is also Spirituality), தத்துவ தரிசனங்கள் (Indian Philosophical Perspectives: Dharsanas) are widely popular in the state. https://www.facebook.com/padman.anandapadmanaban?fref=ts

[5] Jataayu (R N Sankara Narayanan) is an IT professional. He is a well-known Tamil Writer and Hindutvaite thinker. He has been one of the editors of website Tamil Hindu and Valam magazine. He has a deep interest in Kambaramayanam and knows Sanskrit well. He has written a number of articles in Tamil Hindu and Thinnai websites. His most recent publications include பண்பாட்டைப் பேசுதல் (Talking on Culture), சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம் (இணையாசிரியர் அரவிந்த நீலகண்டன்) – A New Perspective on Jati (with Aravindan Neelakandan), காலம்தோறும் நரசிங்கம் (பண்பாட்டு கட்டுரைகளின் தொகுதி) Narasimham Over the Ages – Compendium of Articles on Culture).

[6] A.V.Gopalakrishnan is an engineer by profession and a passionate historical researcher on Bible and theology. For over fifteen years he has been writing blogs on the historicity of Bible under his pen name Devapriya ji.

[7] Professor, Department of Social Work, Mizoram University, https://www.facebook.com/mekanagaraj

[8] வேதபிரகாஷ், சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்புஅறிக்கைஇந்துஎதிர்ப்பு மனப்பாங்குகலந்துரையாடல்கள் (5), டிசம்பர் 28, 2017.

[9] https://tamilheritage.wordpress.com/2017/12/28/swadeshi-indology-conference-discussion-on-hinduphobia-meyhodology/

[10] ஈஸ்வர் சரண் ஆங்கிலத்தில் விரிவான புத்தகத்தை வெளியியட்டார். இப்பொழுது 2019லும் அதன் விரிவான பதிப்பு வெளியாகி உள்ளது.

[11]  சமூக அறிவியல் புத்தகத்தை அச்சிட அவருக்கும் ஆர்டர் கிடைத்திருந்தது. ஆனால், அந்த விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆகவே, பரிகாரமாக, இதனை அச்சிட்டுத்தருகிறேன் என்ற போது, அவருக்குள்ளும் இருந்த உணர்வு தெரிந்தது.

சாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமென்ட் அடுக்கு கல்லறை: ரகசியமாக குடியிருப்புப் பகுதிகளில் பிணங்கள் புதைக்கப் படுவது!

திசெம்பர் 28, 2018

சாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமென்ட் அடுக்கு கல்லறை: ரகசியமாக குடியிருப்புப் பகுதிகளில் பிணங்கள் புதைக்கப் படுவது!

St Alphonsa Syro-Malabar Catholic Church, Pozhichallur

சாலவாக்கம் பிறகு பொழிச்சலூர் சிமின்ட் அடுக்கு கல்லறை[1]: ஆறு மாதங்களுக்கு முன்புதான் சாலவாக்கத்தில் எலும்பு தாமஸின் இறந்தவர்களின் உடல் கான்கிரீட் கலவைகளில் வைத்து அடக்கம் செய்யப்படுவதாகவும் அவற்றின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் பதிவேடுகளில் குறிப்பிடாமல் இருந்தன போன்ற புகார்கள் எழுந்து, ஊடகங்களில் அதிரடியாக செய்திகளாக வெளிவந்தாலும், அதே வேகத்தில் அவை அமுங்கி விட்டன. ஆனால் இப்பொழுது அதே போன்ற ஒரு காங்கிரீட் அடுக்கு சமாதி அமைப்புகளில் இறந்தவர்களின் உடல்கள் சர்ச்சின் வளாகத்திலேயே அமைக்கப்பட்டு புதைக்கப் படுகின்றன என்று தெரியவந்துள்ளது. செயின்ட் அல்போன்சா சிரிய மலபார் கத்தோலிக்க சர்ச் எனப்படுகின்ற அது பொழிச்சலூரில் உள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பொழிச்சலூர் விநாயகர் கோவில் தெருவில் அந்த சர்ச் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை 26 ஆம் தேதி வளாகத்தில் ஒரு பிணத்தை உள்ளே எடுத்துச் சென்றதை அங்கிருப்பவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால், அவர்களுக்கு திகைப்பு ஏற்பட்டு, போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்த விவரம் சமூக ஊடகங்களில் பரவியதால் அன்று மாலையிலேயே அங்கு கூட்டம் கூடியது.

St Alphonsa -Pozhichallur-concrete vault-News Today

குடியிருப்புப் பகுதியில் ரகசியமாக கல்லறையில் பிணங்கள் புதைத்தது: கடந்த 18-12-2018ம்-தேதி உடல் நலம் இல்லாமல் இறந்த பம்மலை சேர்ந்த லோனப்பன் (வயது72) என்பவர் உடலை இங்கு அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது[2]. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் தாம்பரம் கோட்டாச்சியர் மற்றும் பல்லாவரம் தாசில் தார் அலுவலகத்தில் புகார் செய்தனர்[3]. வீடுகள் நிறைந்த குடியிருப்புப் பகுதியில், அவ்வாறு உடலை புதைக்க எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அதில் இருந்த உடலை போலீசார் வருவாய்துறையினர் அப்புறப்படுத்தினர்[4]. சர்ச்சில் அடுக்கு கல்லறை அமைத்து இறந்தவர் உடலை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 26-12-2018 அன்று மாலை வருவாய்துறையினர் மற்றும் சங்கர் நகர் போலீசார் சர்ச்சிற்கு திடீர் சோதனை நடத்த வந்தனர். அப்போது சர்ச்சின் பின்பகுதியில் உள்ள அறை ஒன்றில் உடல்களை உள்ளே வைத்து அடக்கம் செய்யும் வகையில் அடுக்கு கல்லறை கட்டப்பட்டிருந்தது. அதில் லோனப்பன் உடலை வைத்து சிமெண்டால் பூசியதும் தெரியவந்தது.

St Alphonsa Syro-Malabar Catholic Church, Pozhichallur-concrete vault

அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைப்பது: உரிய அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைக்க கூடாது என வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சர்ச் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த அடுக்கு கல்லறையில் இருந்து லோனப்பன் உடலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் வெளியில் எடுத்து பொழிச்சலூர் பகுதியில் வழக்கமாக கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்யும் கல்லறைக்கு கொண்டு சென்றனர்.  இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய அனுமதி இல்லாமல்அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்க கூடாது எனவும் வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொழிச்சலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

St Alphonsa Syro-Malabar Catholic Church, Pozhichallur- body burried

கத்தோலிக்க கிருத்துவர்கள் தமிழ்மலையாளம் என்று தனித்தனி சர்ச்சுகள் கட்டிக் கொள்வது ஏன்?: அப்போது அங்கே இருக்கும் ஒரு நபர்[5], “இது மலையாளத்து ரோமன் கத்தோலிக்க சர்ச், அவர்களும் ரோமன் கத்தோலிக்கர் என்றாலும் தமிழ் கிறிஸ்தவர்களிருந்து மாறுபட்டு இருக்கிறார்கள் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே சர்ச்சில் வழிபாடு செய்து வந்தார்கள். ஆனால் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் மொழி பேசும் கிருத்துவர்களிடம் கிரியைகள் விஷயமாக வேறுபாடுகள் ஏற்பட்டதும் அவர்கள் தனியாக இந்த சர்ச்சை கட்டிக்கொண்டார்கள். அதன்படி அவர்களில் இறப்பவர்களை சர்ச்வளாகத்திலேயே புதைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்”. கேரளத்தில் கூட அவ்வாறு செய்யப்படுகிறது[6]. ஆனால் இவ்வாறு ரோமன் கத்தோலிக்கர் என்று சொல்லிக்கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து சர்ச்சுகளை கட்டிக்கொண்டு, தனித்தனியாக இறந்தவர்களை புதைத்து கொண்டே போனால், இருக்கும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளில் எவ்வாறு அனைவருக்கும் உடலை புதைக்க இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆகவே இது உண்மையிலேயே நம்பிக்கையின் மீது செய்யப்படுகின்ற செயலா அல்லது மொழியி ரீதியில் அடிப்படைவாதத்தை தோற்றுவித்து மக்களை பிரிக்கும் போக்கா அல்லது இடத்தை ஆக்கிரமிக்கும் திட்டமா என்று உன்னிப்பாக நோக்கவேண்டியுள்ளது.

St Alphonsa -Pozhichallur-concrete vault-Deccan Chronicle

தாசில்தார் புதன் மாலை சோதனை இட்டது: இந்நிலையில் அந்த சர்ச்சின் சேர்மன் ஜூஸ் மற்றும் பொறுப்பாளர் ஜியோ என்ற இருவரும் தலைமறைவாகியுள்ளனர்[7]. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர் உள்ளூர்வாசிகள் காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையாவிடம் மனு கொடுத்தனர். இதனால், தாசில்தார் தலைமையில் தாம்பரம் ஆர் டி மற்றும் இதர அதிகாரிகள் புதன்  மாலை சர்ச்சுக்கு வந்து சோதனையிட்டனர்[8]. சங்கர் நகர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தனர்/ உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர்[9]. உரிய அனுமதி இல்லாமல், அந்த சிமென்ட் புதையிடம் கட்டப் பட்டுள்ளதாக தெரிந்தது[10]. இருப்பினும், இந்த நடவடிக்கை எல்லாம் தொடர்ந்து எடுக்கப்படுனா, அந்த ஜோஸ் மற்றும் ஜியோ கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களிடம் முறையாக விசாரணை கொள்ளப் படுமா அல்லது சாலவாக்கம் எலும்பு தாமஸ் வழக்கு போல, அப்படியே அமுக்கப்படுமா என்று மக்களுக்கு சந்தேகமாகவே உள்ளது.

Christian cremation - orde of the dau 2018

கிருத்துவர்களின் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டு மற்றும் தகனம் செய்யப் படுவது: 1963 ஆம் ஆண்டிலேயே போப் பால் – VI [Pope Paul VI] தகனத்திற்கு எதிராக இருந்த தடையை நீக்கி, ஆணையைப் பிறப்பித்தார்.  இருப்பினும் இந்திய கத்தோலிக்கர் அதனை 56 ஆண்டுகள் ஆகியும், இன்று வரை அதனை பின்பற்றாமல் இருப்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மேனாட்டு கிருத்துவர்கள், தகனத்தை ஏற்றுக்கொண்டு ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. அவர்களின் கணக்குப்படி உடலை புதைப்பதை விட எரிப்பதால் செலவு மிகவும் குறைவாகவே உள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றனர். உதாரணத்திற்கு புதைப்பதற்கு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கிரியைகள் செய்வதற்கு, சுமார் 10,000 டாலர் அதாவது ரூ. ஏழு லட்சம் வரை வெளிநாடுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் தகனம் செய்வதற்கு சுமார் 500 டாலர் முதல் 2000 வரை அதாவது சுமார் ரூ.5 ஆயிரம் முதல் 15,000/- வரை செலவு செய்தால் போதும்[11]. அதனால் உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் கிருத்தவர்கள் எல்லாருமே தங்களுடைய உடல் புதைக்கப்பட வேண்டும் என்றால் அதற்காக எத்தனை செலவாகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இறந்தபிறகு செலவு செய்து பட முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

Dr William Price - On January 23, 1893

எரிக்கும் முறை எப்பொழுது வந்தது?: கிறித்துவத்தில் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது முன்னமே குறிப்பிட்டது படி 1963ல் போப் பால் – VI இந்த தடையை நீக்கினார் என்று தெரிகிறது[12]. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளைப் பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலங்களில் புதைக்கும் பழக்கம் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடல்களை எரிக்கும் பழக்கம்மும் இருந்து வந்தது. எனினும், சட்டரீதியாக குறிப்பிடும்போது, அவர்கள் மருத்துவர் வில்லியம் பிரைஸ் என்பவரின் வழக்கை முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்கள் 1883-84 காலகட்டத்தில் அந்த வில்லியம்ஸ் என்பவர் ஒரு மருத்துவராக இருந்தார். அவர் தனது குழந்தைக்கு ஏசு கிருஸ்து பிரைஸ் என்று பெயரிட்டார். ஆனால் குழந்தை பிறந்த சில காலத்தில் வலிப்பு நோய் வந்து இறந்து விட்டது. இதனால் அக்குழந்தை அவரது கிராமத்தின் அருகில் இருந்த ஒரு மலை மீது இதனை கவனித்த கிராம மக்கள் அதனை தடுத்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனால் நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்பட்ட அவர், தனக்கு தானே வாதாடினார். நீதிமன்றத்தில் குறிப்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன[13]:

  1. ஜனவரி 13 அன்று மத நம்பிக்கைக்கு-சட்டத்திற்கு புறம்பாக, தெரிந்தும் இவ்வாறு தகாத முறையில் ஒரு பிறந்த குழந்தையின் உடலை எரியூட்ட முனைந்துள்ளார்.
  2. இறந்த உடலுக்கு மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
  3. அவர் அவர் உடலை தகனம் செய்ய முற்பட்டபோது அவருக்கு ஒரு தடுப்பாணையும் கொடுக்கப்பட்டது.

 1884 பிப்ரவரி மாதத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது, தன்னுடைய நிலையை தானே விளக்கி வாதிட்டார். இறுதியில் தனது விருப்பத்தை கூற பணித்த போது, அவர் சொன்னது. “நான் இறக்க நேரிடும் போது, என்னுடைய உடலை யாராவது எரிக்க முன்வராவிட்டால், பிறகு ஆண்டவனின் ஆசிவாதத்துடன், நானே உயிர்த்தெழுந்து வந்து, எனது உடலை நானே எரித்துக் கொள்வேன்.” இவ்வாறு சொன்னதும் ஜூரி குழுவில் அமைந்திருந்த நீதிபதிகள்  அமைதியானார்கள். தமக்குள் ஆலோசனை செய்தும் விவாதித்துக் கொண்டார்கள். முடிவில், பிரஸை விட்டுவிட்டார்கள். ஜனவரி 23, 1893 அன்று இறந்தபோது, அவர் முறையாக கிரியைகளுடன் தகனம் செய்யுமாறு ஆங்கில அரசு ஆணையிட்டது, செய்தது[14].

© வேதபிரகாஷ்

28-12-2018.

Dr William Price - On January 23, 1893-2 clear-full photo

[1] ஆங்கிலத்தில் பதிவு செய்த கட்டுரையைத் தழுவியது – Vedaprakash, Catholic burial vault in Chennai: As it is Residential area, Body exhumed and buried again in burial grounds!, https://indiainteracts.wordpress.com/2018/12/28/catholic-burial-vault-in-chennai-as-it-is-residential-area-body-exhumed-and-buried-again-in-burial-grounds/

[2] தமிழ்.ஒன்.இந்தியா, பல்லாவரம் அருகே பரபரப்பு.. சர்ச்சுக்குள் புதைக்கப்பட்ட உடல்.. போலீஸ் குவிப்பு!, By Alagesan | Updated: Thursday, December 27, 2018, 15:59 [IST]

[3] https://tamil.oneindia.com/news/chennai/dig-up-the-body-from-the-grave-near-pallavaram/articlecontent-pf344475-337462.html

[4]இந்த வீடியோவிலும் விவடங்களை காணலாம் –  https://www.youtube.com/watch?v=_oyi2zc36Ew

[5] NewsToday, Corpse found inside Church in Chennai; Chambers built to store bodies, Posted on December 27, 2018 by P T Usha

[6] https://newstodaynet.com/index.php/2018/12/27/corpse-found-inside-church-in-chennai-structures-built-to-store-bodies/

 

[7] Indian Express, Unauthorised multi-tier vault sealed in church premises in Chennai sburbs, by Sahaya Novinston, December 26, 2018 03:35 pm; Updated December 26, 2018 03:35 pm.

[8]  http://www.newindianexpress.com/cities/chennai/2018/dec/27/unauthorised-multi-tier-vault-sealed-in-church-premises-in-chennai-suburbs-1917220.html

[8] https://thefrisky.com/burial-or-cremation-what-is-the-right-choice/

[9]  DECCAN CHRONICLE, Chennai: Church officials in spot for illegal disposal of dead, Published Dec 27, 2018, 4:39 am IST, Updated Dec 27, 2018, 4:39 am IST

[10] https://www.deccanchronicle.com/nation/current-affairs/271218/chennai-church-officials-in-spot-for-illegal-disposal-of-dead.html

[11] The Frisky, Burial or Cremation – What is the Right choice, Danielle Granger, December 17, 2018.

[12]  https://thefrisky.com/burial-or-cremation-what-is-the-right-choice/

[13] Times of Malta, The trial that led to cremation’s legalisation in the UK,  Sunday, December 9, 2018, 11:34.

[14] https://www.timesofmalta.com/articles/view/20181209/life-features/the-trial-that-led-to-cremations-legalisation-in-the-uk.696309

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (4)

பிப்ரவரி 22, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (4)

John Samuel colluding with Deivanayagam

John Samuel colluding with Deivanayagam

வாங்க,   வாங்க  என்  கிட்டே  வந்து  மோதுங்க”   என்ற  ரீதியில்  கலாட்டா  செய்யும்  தெய்வநாயகம்  ஒதுங்குவது  ஏன்?: 8o வயதை எட்டப்போகும் தெயவநாயகம், டார்லிங் சாந்தமணியை திருமணம் செய்து கொண்டார். தேவவரம் மற்றும் தேவகலா ஜோதிமணி என்ற மகனும் மகளும் இருக்கிறார்கள். குடும்பமே “மெய்ப்பொருள் அச்சகம் / பதிப்பகம்” அச்சுக்கூடத்தை வைத்துக் கொண்டு வளர்ந்துள்ளார். ஆர்ச் பிஷப் ஆதரவு இருந்ததால், தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள் அச்சடிப்பு, பலதரப்பட்ட கிருத்துவ அமைப்புகளின் அச்சுவேலைகள் என்று குவிந்தபோது பணமும் சேர்ந்தது. இன்றைக்கு ரூ.20 கோடிகளுக்கு அதிபதியாக சென்னையில் இருந்து வருகிறார். தெய்வநாயகத்திற்கு, கீழ்கண்ட பதிவுகளின் குறிப்புகளைக் கொடுத்து கருத்தைக் கேட்டிருந்தேன். வழக்கம் போல பதிலில்லை:

https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/

https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/

எப்பொழுதும் “வாங்க, வாங்க என்கிட்டே வந்து மோதுங்க” என்ற ரீதியில் கலாட்டா செய்து கொண்டிருப்பார். ஆனால், யாராவது நேரிடையாக விசயத்திற்கு வந்து மோத ஆரம்பித்தால் ஓடிவிடும் வழக்கத்தை இப்பொழுது கடைபிடித்து வருகிறார். திருக்குறள், தாமஸ் என்றெல்லாம் போய், இப்பொழுது “ஆன்மா”வைப் பிடித்துக் கொண்டு விட்டார். வயதாகி விட்டபடியால், இப்படி மனதுக்கு இறப்புப் பற்றிய சிந்தனைகள் வந்துவிட்ட நேரத்தில், மனிதனுக்கும் அத்தகைய எண்ணங்கள் வருவது இயல்புதான். ஆக, அதை வைத்துக் கொஞ்சம் குழப்பலாமே என்று குழப்பி வருகிறார்[1].

கிருத்துவத்தில் உருவ வழிபாடு ஆயிரம் தெய்வங்கள்

கிருத்துவத்தில் உருவ வழிபாடு ஆயிரம் தெய்வங்கள்

கிருத்துவத்தில்  கோடிக்  கணக்கான  தேவர்கள், தேவதைகள்: கிருத்துவத்தில் கூட கத்தோலிக்கம், புரொடெஸ்டென்ட், புரிடன்ஸ், டிரினிடேரியன்ஸ் என்று ஆயிரக்கணக்கானப் பிரிவுகள் இறையியல் ரீதிரில், மற்ற சடங்கு-கிரியை வேறுபாடுமுறைகளில் பிரிந்து கிடக்கின்றன. பிறகு இவை நாட்டுக்கு நாடு, வித்தியாசமாக மேன்மேலும் பற்பல பிரிவுகளை உண்டாக்கியுள்ளது. அவர்களிலும் ஆவி, ஜோசப், மேரி, ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, பால் முதலிய அப்போலஸ்தர்கள், மற்ற மரியாதைக்குரியவர்கள் என்று வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது தேவர்கள்-தேவதைகள் என்று பற்பல வகை வழிபாடுகள் உண்டு. இவற்றிற்கெல்லாம் சர்ச்சுகள் உண்டு. இந்தியாவிலேயே, இவற்றின் சிலைகளை, விக்கிரங்களை, பொம்மகளை வைத்துக் கொண்டு கும்பிட்டு வருகிறார்கள். அவற்றை விற்கவும் செய்கிறார்கள். இந்நிலையில், இவர்கள் இந்துக்கள் அவ்வாறே செய்கிறார்களே என்ற விமர்சனம் செய்யத் தேவையில்லை. இருப்பினும், ஏதோ உள்நோக்கத்துடன், மற்றவர்களுக்காக வேலை செய்வது போல தெரிகிறது.

M P Somasundaram refuting MD

M P Somasundaram refuting MD

தேசத்திற்குள்  தேசம்”, “நாட்டிற்குள்  நாடுஎன்ற  வாடிகன்  கொள்கையைப்  பின்பற்றும்  இந்திய  சர்ச்சுகள்: கத்தோலிக்க சர்ச், இந்தியாவின் கட்டுக்காப்பில் இருந்தாலும், வாடிகன் போல தனித்து ஆட்சி நடத்துகிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது “தேசத்திற்குள் தேசம்”, “நாட்டிற்குள் நாடு” என்ற சித்தாந்தத்தில் செயல்படுகின்றனர். அதனால் தான் இன்றைளவில் வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல் குற்றங்கள், நிலமோசடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை மறைத்து வருகின்றது. குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, இவர்கள் இவ்வாறு கிருத்துவத்திற்குள்ளேயே மதமாற்றம் செய்து கொள்கின்றனர். அருளாப்பா கணேஷ் ஐயரை வைத்துக் கொண்டு போலி ஆராய்ச்சி, மோசடிகள் எல்லாம் செய்தார். மாட்டிக் கொண்டதால், இப்பொழுது தெயநாயகத்திடம் வேறுமுறையைப் பின்பற்றுகிறார்கள். சின்னப்பா அதனால் தான், அவரை வேறுபிரிவு கிருத்துவர் என்றார்! ஆக, சௌகரியமாக போய் விட்டது, மாட்டிக் கொண்டால், “அவர் வேறு, நாங்கள் வேறு” என்று சொல்லிக் கொள்ளலாம்.

Krishnaswamy Reddiar refuted MD

Krishnaswamy Reddiar refuted MD

தெய்வநாயகம்சென்னை  ஆர்ச்  பிஷப்பு  கூட்டு, கூட்டில்லை  என்ற  மாற்றங்கள்: 1968லேயே, இந்த போலி-மோசடி- ஆராய்ச்சி கள்ள ஆவணங்களை உருவாக்கி, அதன்மீது ஆதாரமாகத் துவங்கி விட்டதை ஒப்புக்கொள்கிறார் போலும். கிருத்துவர்கள் தமது “கட்டுக்கதைகள்” வெளிப்பட்டு அஸ்திவாரம் ஆட்டங்கண்டு விடுமோ என பயந்து, தமது பிரசாரங்களை முடுக்கி விட்டனர். கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறும்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள். மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார். ஆர்ச் பிஷப் அருளப்பா இதற்கு பெருமளவில் உதவி வெய்துள்ளதாக, தெய்வநாயகமே ஓப்புக்கொண்டுள்ளதை அவர்கள் வெளியுட்டுள்ள குறும்புத்தகங்கள் மூலம் அறியலாம். தெய்வநாகம் கிருத்துவ தீவீரவாத பிரச்சாரம், கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவோடு வலுவாக நடந்து வருகிறது. ஆகஸ்த்து 2008ல் நடந்த தமிழர் சமயம் மாநாடு முழுக்க-முழுக்க பிஷப்புகள் மாநாடுதான். அவர்கள் பங்கு கொண்டது மட்டுமன்றி அங்கேயே இருந்து, பாடி-ஆடி மற்றவர்களை மகிழ்வித்தனர். அதுமட்டுமல்லாது, அவர்களின் வேண்டுகோள்களுக்கு இணந்த பணமும் தாராளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இலயோலா கல்லூரி நிறுவனமே லட்சக்கணக்கில் கொடுத்துள்ளது, மற்றக் கிருத்துவ நிறுவனங்களின் கொடை அந்த மாநாட்டு நினைவுமலரில் உள்ள விளம்பரங்களினின்றே அறிந்து கொள்ளலாம்.

Sarojini varathappan and others MD

Sarojini varathappan and others MD

கத்தோலிக்க பிஷப் மீது வழக்குப் போடுவேன் என்று மிரட்டுகிறாரா?: தெய்வநாயகம் இப்படி பிஷப்பின் மீது வழக்குப் போடுவேன் என்று மிரட்டுவார், கடிதங்கள் எழுதுவார், பிட்நோட்டீஸ் போட்டு ஊரெல்லாம் விநியோகிப்பார் என்றால், அவர்கள் பணம் கொடுத்திருப்பார்களா? நாளைக்கு சட்டரீதியில் ஏதாவது பிரச்சினை வந்தால் தப்பித்துக் கொள்ள செய்துள்ள ஏற்பாடு என்று நன்றாகத் தெரிகின்றது. அருளப்பா மாதிரி சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, தேவையற்ற விளம்பரத்தைத் தர விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகின்றது. அதனால், சின்னப்பா வேறு, தெய்வநாயகம் வேறு ஆகிவிட்டனர்[2]. ஆனால், இவருக்கும் அவருக்கும் ஒப்பந்தம் இருக்கிறது என்கிறார். அதாவது அருளப்பா மோசடிகள் இந்த சின்னப்பா காலத்திலும் தொடருகின்றன, அதற்கான எல்லா உதவிகளையும் கத்தோலிக்க சர்ச் செய்து வருகின்றது என்ற உண்மை இங்கு வெளிப்படுவதைக் காணலாம். மேலும் இதுதான் முக்கியமான விசயம் என்பதனை இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

Nagaswamy ecposed the fraud of MD

Nagaswamy ecposed the fraud of MD

தருமபுர  ஆதினத்தை  ஏமாற்றியது (1985-86): தருமபுர ஆதீனத்தில் நடந்த கருத்தரங்கத்தில், தெய்வநாயகம் மூக்கறுப்பட நேர்ந்தது. அவரது கருத்துகள் தவறு என்று தமிழ் பண்டிதர்களும், சைவ சித்தாந்த அறிஞர்களும் எடுத்துக் காட்டினர்[3]. ஆனால், “1986 டிசம்பர் 6, 7 தேதிகளில் புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ்தவத்தின் கிளைகளே சைவ, வைணவ சமயங்கள் (இன்றைக்குஇந்துமதம் எனப்படுகிறது) என்பது, தருமபுர ஆதீனத்தில் நடந்த ஆய்வரங்கில் நிலை நாட்டப்பட்டது[4]”, என்று இன்றும் தம்பட்டம் அடித்துக் கொள்வது அப்பட்டமான பொய்யாகும். அப்பொழுது அருணை வடிவேலு முதலியார் அங்கிருந்தார். தெய்வநாகத்தின் “தமிழ் மொழி” அறியாமை, சொற்பிரயோகப் பிழைகள், விளக்கக் கோளாறுகள், இலக்கணம் அறியாமை முதலியவற்றை எடுத்துக் காட்டினார். ஆனால், அவரது பேச்சை, இந்த சிடியில் மறைத்து விட்டார்[5]. பிறகு, மறுப்பு நூலில் விவரங்களைக் கொடுத்துள்ளார். இதையெல்லாம் தெய்வநாயகம் மறைக்கிறார். இப்படி கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பொய் சொல்லி பிழைப்பது மிகக்கேவலமாக இருக்கிறது.

Refutation work of Vadivelu Mudaliar - tamil-book

Refutation work of Vadivelu Mudaliar – tamil-book

அக்டோபடர் 24, 1991ல் மறுப்பு நூல் வெளியிடப்பட்டது, தெய்வநாயகத்தின் முகத்திரைக் கிழிந்தது: இது மட்டுமல்லாது, அக்டோபர் 24, 1991 அன்று “விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்” வெளியிடப்பட்டபோது, மீ.ப. சோமசுந்தரம், ஜஸ்டிஸ் ஜே. கிருஷ்ணசாமி ரெட்டியார், சரோஜினி வரதப்பன், சுவாமிநாத தம்பிரான், என். நாகசாமி, வித்வான் அம்பை சங்கரனார், வித்வான் சுந்தர மூர்த்தி, டி.என். ராமச்சந்திரன், வன்னியர் அடிகள் முதலியோர் தெய்வநாயகத்தின் போலி ஆராய்ச்சியை, முழுவதுமாகி வெளிப்படுத்திக் காட்டினர். தெய்வநாயகத்தினால் ஒன்றும் பேச முடியவில்லை. முகத்தில் ஈயாடவில்லை, சிரித்துக் கொண்டிருப்பது போன்று முகபாவத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். நிகழ்சி முடிந்ததும், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டார். இவ்விவரங்களையும் இவர் சொல்லிக் கொள்வதில்லை.

TNR exposed the chronology MD

TNR exposed the chronology MD

இடைக்காலத்தில்  தான்  கிருத்துவமதமே  முழுநிலையில்  உருவாக்கப்  பட்டது: இடைக்காலத்தில் இறையில் ரீதியாக வளர ஆரம்பித்த கிருத்துவம் உள்ளுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தது. இதனால் பலமுறை அவர்கள் பலப்பிரிவுகளாக சிதறுண்டனர். மேற்கத்தைய கத்தோலிக்கம் (Westerb Catholics) மற்றும் கிழக்கத்தைய ஆசாரமதம் (Eastern Orthodoxy) என்ற பிளவுண்ட அவை, மறுபடியும் தொடர்ந்து 1378 மற்றும் 1417 ஆண்டுகளில் மேற்கத்தைய கத்தோலிக்கத்தில் சண்டை ஏற்பட்டபோது, போப் அர்பன் IV (Pope Uraban IV) ரோமுக்கு போப்பாகவும், இன்னொரு போப் அவிக்னான் (Avignon), பிரான்ஸிலும் நியமிக்கப்பட்டனர். இவ்விதமாக வளர்ந்த கிருத்துவம், ஐரோப்பியர்கள் இந்தியாவில், முதலி வியாபாரம், பொருள் உறபத்தி பிறகு ஆட்சி செய்யும் உரிமை என்று பெற்று வளர்ந்த நிலையில், கிருத்துவமதத்தினையும் பர்டப்ப ஆரம்பித்தனர். முகமதிய-முகலாய இந்துவிரோதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்துக்களை சதாய்த்துக் கொடுமைப்படுத்தி வந்தனர். அந்நிலையில் தான், முகமதிய மதத்துடன் கிருத்துவமும் அறியப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், கிருத்துவம் எதிர்க்கப்பட்டது தான், தாயுமானவர், சிவப்பிரகாசர் போன்றோரின் மறுப்பு நூல்களினின்று தெரிகிறது. ஆகவே, சரித்திரரீதியில் கிருத்துவம் இடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக 17ம்-18ம் நூற்றாண்டுகளில் தான் மதமாக அறியப்பட்டது.

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்

கிருத்துவர்களே,   கிருத்துவர்கள்   என்று அறியப்படாத   நிலையில், இந்துக்கள்   எவ்வாறு   அழைக்கப்  பாட்டர்கள் என்று   அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை: பொதுவாக சரித்திர ரீதியில் ஆட்சியில் / அதிகாரத்தில் இருப்பவர்கள், ஒன்றை எப்படி, எந்தவிதமாகப் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மற்றவர்களை எப்படி அறிந்து கொள்கிறார்களோ, அவ்வாறுதான் பெயர்கள் எழுதப் பட்டு வருவதால், இந்தியர், ஹிந்தியர், ஹிந்துக்கள் எல்லாமே ஒன்றுதான். கிரேக்கர்கள் “இந்தியா” என்றதால், “இந்தியர்” ஆனார்கள், பாரசீகத்தவர் “ஹிந்த்” என்றதால் “ஹிந்துக்கள்” ஆனார்கள், அரேபியர் “ஹிந்த்-சிந்த்” என்றும் சொன்னார்கள், ஆனால், எல்லாம் ஒன்றுதான். துருக்கியர் (Turks), துரக்ஸா, துரக்ஷா, துலுக்கன், அரவர் என்று பலபெயர்களில் அரேபியர் அறியப்பட்டனர். ஃபெருங்கி (Frenghi), பிரிங்கு, பறங்கி, பிராங்க் (Frank), பறங்கி நோய்காரர் என்றுதான் ஐரோப்பியர்கள் அறியப்பட்டனர். கிருத்துவர்களே, கிருத்துவர்கள் என்று அறியப்பட்டத நிலையில், இந்துக்கள் எவ்வாறு அழைக்கப்பாட்டார்கள் என்று அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

Arunai Vadivelu Mudaliar MD

Arunai Vadivelu Mudaliar MD

பாலின்  கிருத்துவம்”, “தாமஸின்  கிருத்துவம்”, ஐரோப்பியக்  கிருத்துவம்முதலியன: இன்று ஐரோப்பியக் கம்பெனிகளுக்குப் பதிலாக, அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அவற்றுடன், அவற்றின் கிருத்துப் பிரிவுகளும் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றப்படித்தான், பிடோபைல், கற்பழிப்புகள், குடி, கூத்து முதலிவைப் பெருகி வருகின்றன. டச்சு, டேனிஸ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர் என்று வந்தபோது அவற்றின் கிருத்துப் பிரிவுகளு, வந்தன, சண்டைப் போட்டுக் கொண்டே வேலை செய்தன. அது ஜீஜன்பால்கு விசயத்தில் அதிகமாகவே தெரிகிறது. அதாவது, அப்பொழுதே கத்தோலிக்கக் கிருத்துவத்தை எதிர்த்து மற்ற கிருத்துவங்கள் வேலை செய்து வந்தன. ஆகவே, இவர்களுக்குள் பலவிதங்களில் ஒற்றுமை இல்லாமல் மதப்பிரிவுகளை, இனரீதியிலும் வைத்துக் கொண்டு சமூகக் குற்றங்களை செய்து வந்த நிலையில், கிருத்துவங்கள் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், இவர் உளறல்களான “பாலின் கிருத்துவம்”, “தாமஸின் கிருத்துவம்” என்றெல்லாம் கிருத்துவர்கள் படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில், கத்தோலிக்கர் அல்லாத கிருத்துவப் பிரிவுகள் ஏற்காது. இங்குதான் இவரது ஆந்தைப் போன்ற இரட்டை வேடம் வெளிப்படுகிறது. அதாவது, இவர் கத்தோலிக்கக் கிருத்துவரா, கத்தோலிக்க எதிரி கிருத்துவரா என்ற பிரச்சினை அவர்கள் தாம் வைத்துக் கொள்ளவேண்டும்.

Deivanayagam issues letter to himself from his home

Deivanayagam issues letter to himself from his home

தனக்குத்  தானே  சான்றிதழ்  கொடுத்துக்  கொள்ளும் போக்கு: புனித தோமா வழி தமிழ்க் கிறிஸ்தவத்தின் மணிமுடி ‘தமிழர் ஆன்மவியல்’ எனும் உண்மையும் நிலைநாட்டப்பட்டது, மாநாட்டில் நிலை நாட்டப்பட்ட வரலாற்று உண்மைகள் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்டன என்று இவர் இப்படி தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்வது, அதற்காக ஆவணங்களை [போர்ஜரி செய்து கள்ள ஆவணங்களை] உருவாக்குவது முதலியன, இவரைப் போன்றவர்களுக்கு கைவந்த கலை. ஏனெனில், மாநாட்டில் மற்றவர்களது ஆய்வுக்கட்டுரைகளை, இவர் அனுமதிக்கவும் இல்லை, போதாகுறைக்கு, இவரே நுழைந்து-நுழைந்து பேசுவதும், படிப்பதுமாக இருந்தார். தமிழறிஞர்கள் இவரது பொருள்கொள்ளும் முறை தவறு, ஏற்புடையதல்ல என்று வெளிப்படையாகக் கூறினர். ஆகமொத்தம் இது ஒரு கிருத்துவ மாநாடு, கிறிஸ்த சமயத்தை, திராவிட சமயம் என்று சொல்வதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டனர்.

வேதபிரகாஷ்

© 22-02-2014


[3] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991, பதிப்புரை, v-vii.

[4]  மு. தெய்வநாயகம் (ஆசிரியர்), தமிழர் சமயம்,  2011 ஆகத்து திங்கள் இதழ், பக்கம் -2.

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)

பிப்ரவரி 20, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)

தெயநாயகத்தின் இரட்டை வேடம்

தெயநாயகத்தின் இரட்டை வேடம்

இந்துமதத்தின்  ஆதிக்கோவிலாகிய  கபாலீஸ்வரர்  கோவிலைப்  போப்பாண்டவர்  பிடியிலிருந்து  விடுவிக்கும்  போராட்டம்:  புராதனமாக பல்லவர்கள் காலத்திலிருந்த கபாலீச்சுரம் கோவில் முன்பு கடற்கரையில் இருந்தது என்பதற்கான நாயன்மார்களின் பாசுரங்களிலிருந்து குறிப்புகள் உள்ளன. எனவே, 1543ல் போர்ச்சுகீசியர் அதனை இடித்துவிட்டு, சிறிய சர்ச்சைக் கட்டினர் என்றால், இப்பொழுதிருக்கும் சாந்தாம் சர்ச்சில் தான், தெய்நாயகம் ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், மயிலையில் கோவிலுக்கு அருகில் நடத்துகிறேன் என்பது கேவலமானது, அர்த்தமற்றது. மேலும், 23-02-2014 அன்று தெய்வநாயகத்திற்கு அனுமதி கொடுத்துள்ள பட்சத்தில், இந்துக்கள், சாந்தோம் சர்ச்சில் அல்லது அருகில், அதனை விட்டு வெளியேறு, இடத்தை கோவிலுக்கு ஒப்படை என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தலாம், பொதுகூட்டமும் நடத்தலாம். இந்துக்கள், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இதனை முக்கியமாகக் கருதி செயல்படவேண்டும்.

Santhome சர்ச் இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்.

Santhome சர்ச் இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்.

இந்து  இயக்கங்களில்  ஒற்றுமை  இல்லாதது: மே. 2010ல், தெய்வநாயகம் இதேபோல ஒரு பொதுகூட்டம் நடத்தினார். அப்பொழுது கோவில் அருகில் அனுமதி மறுக்கப்பட்டதால், ராஜரெத்னம் ஸ்டேடியத்தில் நடத்தினர்[1]. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் மிக்கக் கஷ்டபட்டு அனுமதி பெற்று 31-07-2010 அன்று  பாரதீய ஜனசக்தி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, ராம்சேனா, ருத்ரசேனா என்ற பல அமைப்புகளின் சார்பாக ஒரு பொதுகூட்டம் நடந்தப்பட்டது[2]. இதற்குள் 13-05-2010 அன்று இ. ஆர். ஹரண் என்பவர் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் இந்து ஜாக்ருதி சமிதி, நந்தனார் பேரவை மற்றும் தேசிய சிந்தனையாளர் பேரவை [Hindu Janajagruthi Samithi, Nandanar Peravai (Nandanar Forum) and Desiya Sinthanaiyalar Peravai (National Thinkers Forum)] முதலியவை, ஏதோ போராட்டத்தில் ஈடுபட்டது போல குறிப்பிட்டிருந்தார்[3]. ஆனால், 31-07-2010 அன்று  நடந்த கூட்டத்திற்கு இவர்கள் – குறிப்பிட்ட இயக்கத்தினர் – வரவில்லை[4].

 

தெய்வநாயகம் கலாட்டா 19-01-2014 தெரியாதது

தெய்வநாயகம் கலாட்டா 19-01-2014 தெரியாதது

கிருத்துவக்  குழப்பவாதிகளில்,   திரிபுவாதிகளில்  மற்றும்  மோசடி  சித்தாந்திகளில்  ஒருவர்: மு. தெய்வநாயகம் கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர். சிவபிரகாசர், தாயுமானவர் போறோரின் “ஏசுமத நிராகரணம்” போன்ற மறுப்பு நூல்களை எரித்த கேடுகெட்ட கிருத்துவ அடிப்படைவாத, மதவெறி மற்றும் தீவிரவாத கும்பல்களைவிட மோசமானவர். ஆனால், அப்பாவி இந்துக்கள் அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில்லை. கத்தோலிக்கக் கிருத்துவ ஆதரவுடன் ஊக்குவிக்கப் பட்டு வரும், இவர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வரும் ஒரு கிருக்கரும் கூட. இவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, அதனால் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், சமீபகாலத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர், இவரைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், யாரோரோ சொன்னதை, எழுதியதை வைத்துக் கொண்டு, எல்லாமே தெரிந்தது போல, “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தின் மூலம் இந்த ஆளை மிகப்பெரிய ஆளாக மாற்றிவிட்டார். அரவிந்த நீலகண்டன் என்ற இணையாசிரியரும் தமிழில் அப்புத்தகத்தை எழுதி, அதைப் பற்றி பேச்சுகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, திக வீரமணியும் ஒரு கூட்டம் போட்டு இப்புத்தகத்தை, அவருக்கேயுரிய பாணியில் விமர்சித்தார். எது எப்படியாகிலும் தெய்வநாயகம் விசயத்தில் இருப்பினும், அதுவும் எடுபடவில்லை. கண்டுகொள்வார்கள் இல்லை.

வேதபிரகாஷின் பிரார்த்தனை

வேதபிரகாஷின் பிரார்த்தனை

கிறிஸ்தவக்  கிருக்குக்  குழந்தை, இப்படி  குறும்பு  செய்ய  முற்பட்டுள்ளது: குழந்தைகள் நிறைய பேர் இருக்கும் போது, சில குழந்தைகள் விஷமம் செய்து கொண்டிருக்கும். அவற்றில் சில மற்றவர்களின் கவனத்தை இழுக்க சேட்டைகளை செய்ய ஆரம்பிக்கும். அந்த சேட்டைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அளவுகளை மீறி, அசிங்கமான, ஆபாசமான, அருவருப்பான சேட்டைகளையும் செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது, வக்கிரம் பிடித்த சில ரசிகர்கள் ஆதரித்து மகிழலாம். ஆனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கே, அவை வெறுத்துவிடும். உடனே, அந்த சேட்டைக் குழந்தைகளை அடக்கி வைப்பர், அல்லது அடித்தும் ஒடுக்கி வைப்பர். அதுபோலிருக்கும் கிருக்குக் குழந்தையைப் போன்றது தான் இந்த தெய்வநாயகம். இது தொடர்ந்து சென்னை பிஷப்புகளினால் ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. கணேஷ் ஐயர் வழக்கில் சிக்கிக் கொண்ட அருளாப்பாவிலிருந்து, நிலமோசடி வழக்குகளில் சிக்கிக்கொண்ட சின்னப்பா வரை, இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிறிது கலாட்டா செய்தால், யாதாவது ஆதாயக் கிடைக்கும், கொஞ்மாவது கவனம் தன் பால் திரும்பும் என்று எதிர்பார்த்துதான், இந்த ஆர்பாட்டம் என்றும் தோன்றுகிறது. ஏனெனில், “ஏசு அழைக்கிறார்” கூட்டமே, மோடியை ஆதரிக்கும் நேரத்தில், இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்-நேரடிப் பதிவு 2009

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்-நேரடிப் பதிவு 2009

இந்துவிரோதிகளின்  பின்னணியைக்  கூட  அறியாமல்  இருக்கும்  இந்து  போராளிகள்: இந்து இயக்கங்கள், தமிழகத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்து முன்னணி (ராம கோபாலன்), இந்து முன்னணி (இரண்டு, மூன்று உதிரிகள்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்து மக்கள் கட்சி (இரண்டு, மூன்று உதிரிகள்), சிவ சேனா (தமிழ் நாடு), இந்து மஹா சபா (ஆளாளுக்கு ஒன்று, இப்பொழுதோ ஐதாறு பேர்கள் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டுள்ளர்கள்)……………….இப்படி பலவுள்ளன. ஆனால், இவை சுதந்திரமாக செயல்படாமல், ஏதோ ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தங்களுக்கு உட்பட்டுக் கிடப்பதால், இத்தகைய இந்து-விரோத காரியங்களை எதிர்ப்பதில் தாமதம், தொய்வு, முரண்பாடுகள் மற்றும் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில், இதில் பலருக்கு விசயம் என்னவென்றே தெரியாது. அவ்விசயத்தில் விஷமம் செய்து வரும் வேடதாரிகளும் தெரியாது; அவர்கள் யார், பின்னணி என்ன என்றும் தெரியாது; ஏன் அவர்களை அடையாளம் காணக் கூட தெரியாது. ஆனால், சில நேரங்களில், பத்து-இருபது பேர் “பாரத் மாதா கீ ஜே” என்று கத்திவிட்டு சென்று விடுகின்றனர். வேதநாயகம் விசயத்திலும் அப்படித்தான் இருந்து வருகிறது.

S Gurumurthuy and RSN

S Gurumurthuy and RSN

தெய்வநாயகம்  இந்து  சாமியார்  போல  வந்து  தர்ம  ரக்ஷ்ண  சமிதி  மாநாட்டிற்கு  வந்தது: தர்ம ரக்ஷ்ண சமிதியின் சார்பில், காமராஜர் அரங்கத்தில் மாநாடு நடந்த போது, தெய்நாயகம் ரூ.20/- செல்லுத்து, பதிவு செய்து கொண்டு, அரங்கத்தில் நண்பர்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு விட்டார். பெரிய சாமியார் போல காவியுடை, தாடி என்று வந்ததால், இந்துக்கள் அவருக்கு நமஸ்காரம் செய்து, வாங்க ஜி, உள்ளே வாங்கஜி, உட்காருங்கள் ஜி என்ற உபசாரம் வேறு. இதைப் பார்த்தவுடன் தான் எனக்கு விசயம் தெரிந்தது, அவர்களுக்கு, அதாவது மாநாட்டை நடத்தும் யாருக்கும், இந்த அப்பாவி தொண்டர்களுக்கும், தெய்வநாயகம் யார், அந்த ஆளின் பின்னணி என்ன என்ற விசயங்கள் ஒன்றும் தெரியாது என்று தெரிய வந்தது. ஆனால், தெரிந்தது போல பேசுவார்கள்!

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்

கிறிஸ்தவர்  என்று  தெரிந்த  பிறகு  தெய்வநாயகம்  வெளியேற்றப்  பட்டது: குருமூர்த்தியிடம் மெல்ல விசயத்தை சொன்ன போது, “என்ன, இவர் என்ன சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லையே”, என்றுதான் பதிலுக்குப் பேசினார். உடனே, ஆர். எஸ். நாராயணசாமியைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னேன். அவர் சொன்ன பிறகுதான், குருமூர்த்திக்கு புரிந்தது போலும். உடனே, “யாரது, அவரைக் காட்டுங்கள்” என்று வேகமாக என்னிடம் வந்தார். நான் நாராயணசாமியிடம் அடையாளம் காட்டி, அவரிடம் காட்டுமாறு சொல்லி விலகிவிட்டேன். குருமூர்த்தி, இரு போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு, அரங்கத்தில் உட்கார்ந்திருந்த “இந்து சாமியார்” போல உட்கார்ந்திருந்த தெய்நாயகத்தை வெளியேற்ற சொன்னார். காரணம், ஒரு கிருத்துவர், இந்து மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார், என்பதுதான். போலீசார், அவரை வெளியே வரச் சொன்னார்கள். தெய்நாயகம் வெளியே வந்ததும், அவரை யார் என்று விசாரித்தனர். உண்மையினை சொன்னதும், கிருத்துவர் என்பதால், “அது அவங்க கூட்டம், நீங்க ஏன் கலந்துக்கிறீங்க?” என்று கேட்டனர். “I have paid delegate fees, I have every right to attend the conference”, என்று ஆங்கிலத்தில் கூட கத்த ஆரம்பித்தார். ஆனால், போலீசார் வெளியே அழைத்துச் சென்று, சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

Swami Vivekananda pamphlet

இந்துக்கள்  விழிப்புடன்  தயார்  நிலையில்  இருக்க  வேண்டிய  அவசியம்: இந்துக்களுக்குப் புரிய வேண்டும் என்றுதான் இதனை பதிவு செய்கிறேன். இந்துக்கள் அந்த அளவிற்கு விசயங்களைப் புரிந்து கொள்ளாமல், தயார் நிலையில் இல்லாமல், யாராவது விசயங்களைத் தமக்குக் கொடுத்தால், பழைய புத்தகங்கள், செய்திதாள் துண்டுகள் கொடுத்தால், அவற்றை வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாம் தெரிந்தது போல எழுதுவது, பேசுவது என்றி திராவிட சித்தாந்திகளைப் போன்றே, இன்றைய இந்து சித்தாந்திகள், இந்துத்வவாதிகள் தாயாராகி இருக்கிறார்கள். உண்மையினை சொன்னால், அவரை மதிக்காமல் இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற நிலையிலும் உள்ளார்கள். ஆனால், இந்துவிரோதிகள் இவற்றை தாராளாமாகவே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 23-02-2014க்குள் இந்துக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்துப் பார்ப்போம்!

வேதபிரகாஷ்

© 19-02-2014


[4] திருமதி ராதாராஜன் என்பவர் வந்தார், ஆனால், தனக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்றதும் சென்றுவிட்டார். முதலில் அவர், இவ்வியக்கங்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கவில்லை, எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென்று, மேடையில் ஏறி நானும் பேசுகிறேன் என்றபோது, அமைப்பாளர்களின் முடிவுக்கேற்பத்தான் செயல்பட  வேண்டிருக்கும் என்பது தெரிந்த விசயமே. அதாவது கொள்கைக்காக போராட வேண்டுமே தவிர, தனிமனித முக்கியத்துவம், புகழ், யார் அதிகமாக போராடியுள்ளார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டு காரியங்களை செய்யலாகாது.

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

பிப்ரவரி 19, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

போப் –  மற்றும்  சங்கராச்சாரியார்போஸ்டரும்  தெய்வநாயகத்தின்  குறும்பும்: நான் 19-01-2014 அன்று அம்பத்தூருக்குச் செல்லும் வழியில், முகப்பேர் பகுதியில் “போப்-மற்றும் சங்கராச்சாரியார்” போஸ்டரைப் பார்த்தேன். ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வண்டியும் வேகமாக சென்றுவிட்டத்தால், விவரங்களைப் படிக்கமுடியவில்லை. பிறகு நண்பர் தேவபிரியா சாலமன்[1] அதைப் பற்றி 16-02-2014 அன்று விசாரித்தார். நானும் அதனைப் பார்த்ததாக சொன்னேன். அவர், “நீங்கள் சரியாக பார்த்திருக்க மாட்டீர்கள், 23-02-2014 அன்று மயிலை மாங்கொல்லையில் பொதுகூட்டத்தை தெய்வநாயகம் நடத்துகிறார், அந்த போஸ்டரை மெயிலில் அனுப்பி வைக்கிறேன் பாருங்கள்”, என்று அனுப்பிவைத்தார். 17-02-2014 அன்று தான் பார்த்தேன். “இந்து மதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்தும் மற்றக் கோவில்களை சங்கரச்சாரியார் பிடியிலிருந்தும் விடுவிக்கும் 2ம் கட்டப் பிரார்த்தனைப் போராட்டம்” என்று அதில் இருந்தது. “சிந்தனையாளர்களின் இதன் தொடர்பான கேள்விகளுக்குக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டு, இடம்: கபாலீஸ்வரர் கோவில் அருகில் மாங்கொல்லை, காலம் 23-02-2014, ஞாயிறு மாலை 6 மணி தொடர்பு முகவரி: பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எம்.ஏ., பி.எச்டி, ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு, 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை – 23; தொலைபேசி எண்; 044-2674 3842 / 94448 17394; மின்னஞ்சல் – tamilarsamayam2010@gmail.com, thamizharsamayam2010@gmail.com, இணையதளம் – www.soulologyofthetamils.com, என்றும் கொடுக்கப்பட்டுள்ளன.  சரி, தெய்வநாயகம் பழையபடி, ஒரு நாள் கூத்து நடத்த தீர்மானித்துள்ளர் என்று தெரிந்து கொண்டேன்.

வேதபிரகாஷின் பிரார்த்தனை

வேதபிரகாஷின் பிரார்த்தனை

தெய்வநாயகத்தின்  குழப்புவாதம்  அவரது  கருத்துகளிலேயே  காணலாம்: உதாரணத்திற்கு, “வழிபோக்கன்” என்ற புனைப்பெயரில் தெய்வநாயகத்தின் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்[2]. அதிலிருந்து ஒன்று, “இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில்  கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களதுஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ ‘தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க”.

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

கேள்விகள்எழுப்பப்படுவதில்மறைக்கப்படும்அடிப்படைவாதம்: இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. என்று கேள்விகளைக் கேட்டுள்ளார். அதிலுள்ள பொய்மை வலதுபக்கத்தில் எடுத்துக் காட்டப் படுகிறது.

 

எண் தெய்வநாயகத்தின் கேள்வி அதிலுள்ள பொய்மை / திரிபுவாதம்
1)  கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன்? போர்ச்சுகீசியர் மதவெறியினால், ஆக்கிரமித்துக் கொண்டு, இடித்தனர்.
2)  அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன்? இது பொய். ஒருகாலம் வரை, பழைய தூண்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் இருந்து வந்துள்ளன.
3)  ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது? இது கத்தோலிக்கர்களின் திட்டமே தவிர, வேறொன்றும் இல்லை.
4)  கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன? இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா? இதற்கும், கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.கத்தோலிக்கர் இந்த கோவிலை இடித்தது, மதவெறியேயன்றி, வேறொன்றும் இல்லை.
5)  கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை…அது ஏன்? பலிபீடம், கொடிக்கம்பம் என்றெல்லாம் கோவிலில் இருப்பதும், சர்ச்சிற்கும் சம்பந்தம் இல்லை.
6)  காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன்? தடையெல்லாம் ஒன்றும் விதிக்கவில்லை. காசி போன்ற இடங்களில் உள்ள மூல விக்கிரகம் கத்தோலிக்கர் போன்ற முகமதிய வெறியர்களால் உடைக்கப்பட்டன. இப்பொழுதுள்ளவை, கோவிலும் இல்லை, அவை உண்மையான விக்கிரங்களும் இல்லை.
7)  உருவ வழிபாட்டை ஏற்காத ‘நான் தான் கடவுள்’ என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன? இதெல்லாம், இந்த ஆளின் பித்தலாட்டமேயன்றி, அதில் எந்த விசயமும் இல்லை. “ஸ்மார்த்த சமயம்” என்று ஒன்றில்லை, அது சம்பிரதாயம், அது நாத்திகம் இல்லை.

 

என்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும், உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின் உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும். தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்”, என்று இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம், இவரிடம் தான் வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேதமையும் வெளிப்படுகிறது.

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தொடர்ந்து  பரப்பப்பட்டு  வரும்  கட்டுக்கதை: கிருத்துவர்கள், நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளுடன் செயல்படுவதால், அடிக்கடி,  இதைப் பற்றிய செய்திகள் எங்காவது வரசெய்து கொண்டிருக்கிறார்கள். வருடாவருடம், செய்திதாள்கள், டிவி போன்ற ஊடகங்களில் இக்கட்டுக்கதைகள் – குறிப்பாக தாமஸ் கட்டுக்கதை – தவறாமல் வந்து விடும். அதனைப் பார்க்கும் போது, கவனத்திற்கு வரும் போது மறுப்புக் கடிதம் அனுப்புவது அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்தகைய தவாறான விசயங்களை எடுத்துக் காட்டுவது போன்ற வேலைகள் நடந்து வருகின்றன[3]. உண்மையினை அறிந்தவர்கள், கிருத்துவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் ஒப்புக் கொண்டு, அத்தகைய செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்கிறார்கள். இருப்பினும் இன்னொரு பக்கம், அதனைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வருடம், ஜனவரியில் முந்தைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வரவழைத்து, “செயின்ட் தாமஸின் சரித்திர சுருக்கம்” என்ற சிடியை வெளியிட வைத்துள்ளனர்[4]. தவிர, அவர் சின்னமலையில் பல வருடங்களாக தாமஸ் வாழ்ந்ததாகக் கருதப் படும் இடம் [ visited the cave in Little Mount in which St Thomas is believed to have lived for many years] மற்றும் அவரது பாதங்கள் என்று கருதப்படும் இடம் முதலியவற்றைப் பார்த்தார் [He also viewed the bleeding cross carved by the apostle himself and the footprints, believed to be that of the saint himself, at the foot of the hillock.] என்று செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்[5]. இது முழுக்க கிருத்துவர்களின் சிறப்பான திட்டம் என்று தெரிகிறது.

கபாலீஸ்வரர்  கோவில்  கருவறை  நுழைவு  போராட்டம் (2010): 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார்[6]. “காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”. என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். 04-05-2010 அன்று, இந்துக்களுக்கு சூடுசொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும், என்று ஒரு பதிவை செய்திருந்தேன்[7].

 NCB

கபாலீஸ்வரர்  கோயிலை  இடித்துவிட்டு  நாடகம் ஆடும்  கிருத்துவக்  கயவர்கள்!: முதலில் கபாலீஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்ததற்கான ஆதரங்கள் பல இருக்கின்றன[8]. இவையெல்லாம், உதாரணத்திற்காக கொடுக்கப் படுகிண்ரன. பல விசயங்கள் தெரிந்தவை என்பதால், அவை மறுபடியும் சொல்லப்படவில்லை.

கார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்!

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………

மயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில்,  மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

கயிலைப் பதிஅரன் முருகோனே

கடலக் கரை திரை அருகேசூழ்

மயிலைப் பதிதனில் உறைவோனே

என்று அருணகிரிநாதர் மாடியுள்ளார்.

  • பிறகு எங்கே அந்த கோயில்?

இப்படி முன்னரே பல பதிவுகள் செய்யப்பட்டுள்ளன[9]. அதாவது, இப்படிப் பட்ட நாயன்மார்கள், அடியார்கள், பெரியோர்களை விட வேறு யாரும், இதற்கான ஆதாரத்தைக் கொடுத்திருக்க முடியாது. ஆனால், இவற்றையும் மீறி தமிழ், தமிழர் என்ற பெயர்களில் ஒரு கிருத்துவன் கலாட்டா செய்து வருகிறான் என்றால், அந்த போக்கைத்தான், தமிழர்கள், தமிழ் பேசும் இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

19-02-2014


[1] இணைதளங்களில் தாமஸ் கட்டுக்கதை பற்றி சமீபகாலமாக நிறைய எழுதிவருகிறார். அதனைப் பரப்புபவர்களை எதிர்கொள்கிறார். அடிக்கடி அதைப் பற்றிய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

[3] இப்பொழுதைக்கு நான், ஈஸ்வர் சரண் மற்றும் தேவபிரியா சாலமன் தவறாமல் அனுப்பி வருகிறோம், தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சமீபத்தில் இதில் பிரபாகரன், ஹர்ஷ வர்த்தன் முதலியோர் சேர்ந்துள்ளார்கள். முன்பு திரு நாச்சியப்பன் என்பவரும் கலந்து கொள்வதுண்டு. இப்பொழுது அவரைக் காணவில்லை.

[5] Express News Service – CHENNAI, After Pep Talk, Quiz, Kalam Gives His E-mail ID to Kids, Published: 07th January 2014 07:40 AM; Last Updated: 07th January 2014 07:40 AM ; Martin Louis

[6] தெய்வநாயகம், தமிழர்சமயம், மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10.