எஸ்.சி பிஷப்பா, தலித் பேராயரா? – கிருத்துவர்களே கிருத்துவர்களை எதிர்ப்பது ஆவியின் தூய்மையா, பெரியாரிஸ சமத்துவமா, திராவிடத்துவ மாடலா?
பிரான்சிஸ் கலிஸ்ட் உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்–புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டது எஸ்சி கிருத்துவ எதிர்ப்பு: பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) என்ற உயர்ஜாதி கிருத்துவர் கடலூர்-புதுச்சேரி பிஷப்பாக நியமிக்கப் பட்டிருப்பதால், எஸ்.சி கிருத்துவ அமைப்பினர் அதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய அறிவித்தனர்[1]. தலித் கிருத்துவ விடுதலை இயக்கம் (Dalit Christian Liberation Movement, DCLM) ஏப்ரல் 11 மற்றும் 29 தேதிகளில் புதுச்சேரியில் ஆர்பாட்டம் செய்யப் போவதாக கூறினர்[2]. ஜார்ஜ் அந்தோனிசாமி அந்தோனி பாப்புசாமி போன்ற பிஷப்புகள் எஸ்சியினர் பிஷப்பாக வரக்கூடாது என்று வேலை செய்து வருகின்றனர். வெள்ளாலர், உடையார், வன்னியர், நாடார், மீனவர் என்று மாறி-மாறி பிஷப் பதவிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இப்பொழுது, தொடர்ந்து உயர் ஜாதியினரே பிஷப்பாக வந்து கொண்டிருக்கின்றனர். 1980களிலிருந்து போராடி வந்தாலும் கண்டுகொள்ளாமல் அடக்கியாண்டு வருகின்றனர்[3]. ஆனால், அவர்கள் மேடைகளில் பேசும் பொழுது, ஏதோ சமத்துவத்தி உண்டாக்கி விட்டது போல பேசுவார்கள். இவரை எதிர்த்து சர்ச்சுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்[4]. கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்[5]. ஆனால், கத்தோலிக்க சர்ச் கண்டுகொள்ளவில்லை.
வாடிகன் செய்தி கூறுவது 19-03-2022[6]: ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்[7]. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்[8]. 1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப் படுத்தப்பட்டார்[9]. 2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட். 1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது. பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார்.
2020ல் எஸ்.சி கிருத்துவ கூட்டங்கள் கோரிக்கைகள்: மறை மாவட்டங்களில் காலியாகவுள்ள பேராயா் உள்ளிட்ட உயா்நிலைப் பதவியிடங்களுக்கு, தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வேண்டுமென தேசிய தலித் கிறிஸ்தவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது[10]. இத்தகைய கூட்டங்கள் 1980களிலிருந்து நடந்து வருகின்றன. இவற்றைப் பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸில் அதிகமாகவே செய்திகள், வஆகர் கடிதங்கள் என்று காரசாரமாக வாத-விவாதங்கள் நடந்தன. அவற்றில் கத்தொலிக்கச் சர்ச்சின் இரட்டை வேடங்கள், பிஷப்புகளின் ஜாதிய நாடகங்கள், “தலித்” போர்வையில் நடந்த பேரங்கள் என்றேல்லாம் வெளி வந்தன. தீவிரமாக போராடிய, அப்படி காட்டிக் கொண்டவர்கள் எல்லோரும் இப்பொழுது அமைதியாகி, சந்தோசமாக உள்ளனர்[11]. திருச்சியில் 2020ல் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்[12], தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் தேசியச் செயலா் ஈ.டி.சார்லஸ் கூறியது: “தமிழகத்தில் தலித் கிறிஸ்வ மக்கள் சுமார் 80 சதவிகிதம் போ் கிறிஸ்தவ அமைப்பில் அங்கம் வகிக்கின்றனா். தேசிய அளவில் கத்தோலிக்க திருச்சபையை நிர்வாகம் செய்யும் 188 (பிஷப்) பேராயா்களில், 11 போ் மட்டுமே தலித் கிறிஸ்தவ இனத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். அதேபோல தமிழகத்திலுள்ள பேராயா்களில் (பிஷப்) களில் ஒரேயொரு தலித் கிறிஸ்தவா் மட்டுமே பதவி வகித்து வருகிறாா். கடந்த 14 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவா்களில், ஒரு தலித் கிறிஸ்தவா்கூட பேராயராக நியமிக்கப்படவில்லை. வெற்றிடமான பேராயா் பதவிகளுக்காக வாடிக்கனிலுள்ள போப்புக்கு பெயா் பரிந்துரைக்கும் போது, தீண்டாமை அடிப்படையில் தலித் குழுக்கள் பெயா்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் கூறிவருகின்றன. மேலும் வர இருக்கின்ற கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்யவும், புதுச்சேரி மற்றும் கடலூா் மறை மாவட்டங்களில் உயா் பதவிக்கு தலித் சமூகத்தினரை நியமனம் செய்ய பரிந்துரைக்க வேண்டும். சாதி, தீண்டாமை அடிப்படையில் பேராயா் பணிக்குழுக்களுக்கு பெயா்களைப் பரிந்துரை செய்வதைக் கண்டித்தும், தற்போது வெற்றிடமாக உள்ள ஆறு இடங்களில் 2 இடங்களில் தலித்துகளை பேராயராக நியமனம் செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபா் 27-ஆம் தேதி 2020 திருச்சியில் அனுமதி கிடைக்கும் இடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார். பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனா்- தலைவா் குடந்தை அரசன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, தமிழ்நாடு தேசிய தலித் கிறிஸ்தவப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. ஜான்சன், மாநிலத் தலைவா் சி. ஆரோக்கியதாஸ், கிறிஸ்தவ மக்கள் களத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ.பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
1980-2022 காலாட்டங்களில் கிருத்துவ ஜாதியம் மாறவில்லை: “தலித்” என்று சொல்லிக் கொண்டு கிருத்துவர்கள் அதிகமாகவே ஏமாற்றி வருகின்றனர். இப்பொழுதும், ஊடகங்கள் அவ்வார்த்தை பிரயோகம் கூடாது என்றாலும், வேண்டுமென்றே உபயோகித்து வருகின்றது. பிஜேபியும் சில நேரங்களில் இதற்கு ஆதரவு காட்டுவதால், குளிர் விட்டுப் போய், அப்பிரயோகம் மறுபடியும் அதிகமாகி விட்டது. எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்.
அரசியலாக்கப் படும் “தலித்” பிரச்சினை: தலித் போர்வையில் மதம் மாறிய பிறகும், கிருத்துவர், முகமதியர் குழப்பத்தை ஏற்படுத்தி, கலவரம் உண்டாக்கி வருகின்றனர். “தலித் கிருத்துவர்,” மற்றும் “தலித் முஸ்லிம்” என்று கூறிக் கொண்டு ஏமாற்றி வருகின்றனர். உண்மையிலேயே கிருத்துவம் மற்றும் இஸ்லாம்/ முகதியம் அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுக்கவில்லை என்றால், அந்த ஜேஹோவா, ஏசு, மேரி, அல்லா, முகமது கடவுளர்கள் அவர்களை ஏமாற்றி விட்டன என்றாகிறது. அதேபோல, “ஏல்லோரும் ஒன்று, எந்தவித வேறுபாடும் இல்லை” என்பதெல்லாம் பொய் என்றாகிறது. 2008லேயே எஸ்-எஸ்டி ஆணையம், தலித் என்ற பிரயோகம் சட்டப்படியும், இந்திய அரசியல் நிர்ணய சட்டப்படியும் செல்லாது என்று அறிவித்தது. சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயமாகி விட்டது. செப்டம்பர் 30, 1985ல் உச்சநீதி மன்றம், தள்ளுபடி செய்தபோது, மதம் மாறிய கிருத்துவர்களுக்கு எஸ்.சி சலுகைக் கொடுக்க முடியாது, ஏனெனில், அது இந்துக்களுக்கு மட்டும் தான் பொருந்தும், கிருத்துவமதத்திலும் தீண்டாமை உள்ளது, மதம் மாறிய பிறகும் அவர்கள் நிலை எதுவும் மாறவில்லை என்று நிருபிக்கவில்லை என்று விளக்கியது. இதனால், உண்மையினை மறைத்து, கிருத்துவ இயக்கங்கள் இந்துமதத்தினைத் தாக்கி வர்கின்றன.
© வேதபிரகாஷ்
30-03-2022
[1] The Hindu, Dalit Christians to protest appointment of non-Dalit Bishop as Archbishop of Archdiocese of Tamil Nadu and Pondicherry, Udhav Naig, CHENNAI, MARCH 29, 2022 20:52 IST; UPDATED: MARCH 29, 2022 20:52 IS.
[2] https://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-christians-to-protest-appointment-of-non-dalit-bishop-as-archbishop-of-archdiocese-of-tamil-nadu-and-pondicherry/article65271233.ece
[3] Members of the Dalit Christian Liberation Movement on Tuesday said they would launch a protest against the appointment of non-Dalit Bishop Francis Kalist as the Archbishop of Archdiocese of Cuddalore-Pondicherry in Puducherry on April 11 and April 29, when he would be consecrated as the Archbishop, citing the ‘discriminatory attitude’ against the Dalits by the Catholic Church in India in appointments of Bishops and Archbishops. DCLM claimed that the Tamil Nadu Bishop Council president Archbishop George Antonysamy and former president Archbishop Antony Pappusamy acted in a discriminatory manner against Dalits and demanded they resign from their posts taking responsibility. DCLM State president Mary John alleged the Dioceses in Tamil Nadu are dominated by Vellalar, Udayar, Vanniyar, Nadar and fisherman communities. “Most of the Bishops and Arch Bishops in Tamil Nadu-Pondicherry Dioceses routinely come from Vellalar, Udayar, Vanniyar, Nadar and Fisherman community. This is an injustice despite 75% of the Catholics in Tamil Nadu being Dalits,” he said. He claimed that only 11 out of 180 Bishops are Dalits and only 2 out of 31 Archbishops in India are Dalits. “There are 17 Bishops in Tamil Nadu and Pondicherry but only one is a Dalit. This marginalisation and exclusion is widespread in appointments, education, employment opportunities, financial assistance in the Catholic Church despite Dalits being 64% of Indian catholic population and 75% of Tamil Nadu-Pondicherry Archdiocese. This can be corrected only when Dalits are appointed as Arch Bishops and Bishops,” he said.
[4] தினமலர், பேராயரை எதிர்த்து கறுப்பு கொடி, மார்ச் 21,2022 | 12:07 IST.
[5] https://www.dinamalar.com/video_main.asp?news_id=211048&cat=1585
[6] வத்திகன் செய்தி, பாண்டிச்சேரி–கடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர், 19 March 2022, 15:41.
[7] https://www.vaticannews.va/ta/pope/news/2022-03/bishop-francis-kalist-appointed-new-archbishop-pondicherry.html
[8] தினத்தந்தி, புதுவை கடலூர் மறைமாவட்ட பேராயராக பிரான்சிஸ் கலிஸ்ட் நியமனம், பதிவு: மார்ச் 19, 2022 20:46 PM.
[9] https://www.dailythanthi.com/News/State/2022/03/19204631/Francis-Callist-appointed-Archbishop-of-puducherryCuddalore.vpf
[10] தினமணி, பேராயா் பதவிகளுக்கு தலித் கிறிஸ்தவா்களைப் பரிந்துரைக்க வலியுறுத்தல், By DIN | Published on : 13th October 2020 02:41 AM | Last Updated : 13th October 2020 02:41 AM.
[11] 40 ஆண்டுகள் மேலாகி விட்டாலும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பெயர்களை வைத்து, அவர்களை இன்றைக்கும் அடையாளம் காணலாம். சிலர் காலமாகி விட்டனர். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது.
[12] https://www.dinamani.com/all-editions/edition-trichy/2020/oct/13/insisting-on-nominating-dalit-christians-for-peraya-posts-3484004.html