Archive for the ‘ஃபோர்ஜரி’ Category

முந்தைய பாதிரி ஜெபசந்திரன் மீது வழக்கு பதிவு: 2006லிருந்தே ஆரம்பித்த பணமோசடி பிரச்சினை 2014ல் வழக்குப்பதிவில் முடிந்துள்ளது!

மார்ச் 26, 2014

முந்தைய  பாதிரி  ஜெபசந்திரன்  மீது  வழக்கு பதிவு: 2006லிருந்தே  ஆரம்பித்த  பணமோசடி  பிரச்சினை 2014ல்  வழக்குப்  பதிவில் முடிந்துள்ளது!

 

Tutocorin diocese 2003

Tutocorin diocese 2003

வேலியைமேயும்வெள்ளாடுகளும், பயிரைமேயும்கருப்புஆடுகளும், பலியிடும்ஆயர்களும்: பாலாசிங்என்றபிஷப்சார்ஜென்ட்டீச்சர்டெரைனிங்இன்ஸ்டிடியூட் [Bishop Sargent Teacher Training Institute] என்றநிறுவனத்தில்முதல்வர்கொடுத்தபுகாரின்பேரில், மூன்றுபிஷப்புகளின்மீதுபலகோடிரூபாய்களைமோசடிசெய்ததாகவழக்குபதிவுசெய்யப்பட்டது[1].

  1. ஜே. ஜே. கிருஸ்துதாஸ் [against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss],
  2. ஜே. ஏ. டி. ஜெபசந்திரன் [Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran] ,
  3. ஜெயபால்டேவிட் [a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David],
  4. செல்வின்ஜயராஜ் [Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj],
  5. சாமுவேல்செல்வராஜ் [Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj]
  6. ரெத்னராஜ் [retired district judge Retinaraj, a synod member],

 

பொலீஸார்  இந்திய  குற்றவியல்  சட்டத்தின்  பிரிவுகள் / சரத்துகள் 406 – நம்பிக்கை  மோசம், 420 – ஏமாற்றுதல், 464 – போலியான  ஆவணத்தை  உருவாக்குதல்  மற்றும் 465 போர்ஜரிக்கான  தண்டனை  என்று  வழக்குப்பதிவு  செய்யப்பட்டது[2]. டயோசிக்கு  சொந்தமான 5.51 ஏக்கர்நிலத்தை 99 ஆண்டுகளுக்கு  குத்தகைக்குக்  கொடுத்ததால்  பலகோடி  ரூபாய்  மோசடி  நடந்துள்ளது  என்று  புகார்  கொடுக்கப்  பட்டுள்ளது. அதன்படி  வழக்கும்   பதிவாகியுள்ளது[3].

 

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

பிஷப் ஜெபசந்திரனின் நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணாவிரதம் (மார்ச்.2012): 2006 இவர்  பிஷப்பாக  பதவி  ஏற்றுக்கொண்டபோது, “திஹிந்து” நாளிதழில்  செய்தி  வெளிவந்தது[4]. 2007லிருந்தே  உள்ளூர்  மற்றும்  சென்னை  உயர்நீதிமன்றங்களில்  இவர்களுக்குள்  நடந்துவரும்  பணமோசடி விசங்களுக்காக வழக்குகள் நடந்து வருகின்றன[5]. 2007ல்  புகார்  கொடுக்கப்பட்டு, மாநில  கிரைம்  பிரிவில்  வழக்கு  நிலுவையில் உள்ளது[6]. ஆனால்,  “திஹிந்து”  அதைப் பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடவில்லை.  என்னத்தான்  “திஹிந்து”வுக்கு அத்தனை  பாசம்  என்று  தெரியவில்லை.   என்.ராம்  ஏதோ  இன்னொரு  கிருத்துவப்பெண்ணை  திருமணம்  செய்துகொண்டார்  என்கிறார்களே,  அதன்விளைவோ  என்னமோ? 2012லேயே  ஜெபசந்திரனின்  நடவடிக்கைகளை  எதிர்த்து  உண்ணவிரதம், ஆர்பாட்டம்  முதலியவற்றை  செய்துவந்தனனர். அரசுவிதிமுறைகளுக்கு  விரோதமாக, இவர்  கல்லூரிகளுக்கு  ஆசிரியர்களை  நியமனம்  செய்துள்ளார், அந்தவேலைக்கு  வேண்டிய  படிப்பு  முதலிய  தேவைகளை  சரிபார்க்காமல், பணத்தை  வாங்கிக்கொண்டு, வேலை  கொடுத்தத்சாக  குற்றஞ்சாட்டினர்[7]. வருமானம்-செலவு  கணக்குகளை  சரியானமுறையில்  தணிக்கை  செய்யப்படவில்லை  என்றும்  எடுத்துக்காட்டினர்[8]. இது “திஹிந்து”வில்  வந்தது!

 

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

ஆயர்களும் ஆடுகளும் மேய்ப்பும்

பிஷப்ஜெபசந்திரனின்மீதுபுகார்[9]: “CSI உருவாகியது 1947ம்ஆண்டுஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள்  இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, (இலங்கை) ஆகிய  மாநிலங்களில்  உள்ள  அனைத்து  CSI சபைகள்  அடங்கிய  டையோசிஸ்ஸின்  தலைமை  ஸ்தாபனம் CSI சினாட் என்று  அழைக்கப்படுகிறது.  கடந்த 66 ஆண்டு  காலவரலாற்றில்  நடந்திராத   அவமானகரமான  சம்பவம்  கடந்த 2013 பிப்ரவரி  மாதம்   CSI சினாட்  கமிட்டியில்  நடந்தது[10]. தமிழ்நாடு  தூத்துக்குடி – நாசரேத்  டையோசிஸ்ஸின்  பிஷப்.   Rt.Rev.Dr. ஜெபசந்திரன்  அவர்கள்  மேல்  ஏராளமான   ஊழல்குற்றச்சாட்டுகள்   எழும்பியது. ஆனால்  சினாட்  வழக்கம்  போல்  நடவடிக்கையை  எடுக்காமல்  குற்றசாட்டுகளை  ஊறப்போட்டது. அதன்பிறகு  அவர்மேல்  குற்றச்சாட்டுகள்  மிக  அதிகமாகவே CSI சினாட்  செயற்குழு  பிஷப்  மீதுநடவடிக்கை  எடுத்தது.  பிஷப்.ஜெபசந்திரன்  அவர்களை  பிஷப்  பொறுப்பிலிருந்து  நீக்கி  அவரை  சஸ்பெண்ட்  செய்கிறது  என்ற  சினாட்  நிர்வாக  கமிட்டி  எடுத்த  தீர்மானத்தை  மாடரேட்டர். தேவகடாட்சம்  அவர்கள்முன்னிலையிலும்  மற்றும்  சினாட்  கூட்டத்தில்  கலந்துக்கொண்ட  நான்கு  பாஷைகள்  பேசும்  நான்கு  மாநில  பிஷப்மார்கள், மெம்பர்கள்  கூடிய   அக்கூட்டத்தில் CSI சினாட்செயலர்  திரு.பிலிப்  அவர்கள்  சஸ்பெண்ட்  அறிக்கையை  05-02-2013 அன்று  வாசித்தார்”.

 

சி.எஸ்.ஐ.கூட்டத்தில் நடந்த கலாட்டா- படம் ஜாமக்காரன்

சி.எஸ்.ஐ.கூட்டத்தில் நடந்த கலாட்டா- படம் ஜாமக்காரன்

சைனாட்கூட்டத்தில்நடந்தசண்டை (2013)[11]: “உடனே  தூத்துக்குடி  பிஷப். ஜெபசந்திரன்  அவர்கள்  பிலிப்  அவர்களின்  சட்டையைப்  பிடித்து  இழுத்து  அவரை  தாக்கி, அறிக்கையை  படிக்கவிடாமல்  தடுத்ததோடு  மட்டுமல்லாமல்  MLA, MP அரசியல்வாதிகள்  கூட்டத்தில்  வழக்கமாக  நடப்பதைப்போல்  மைக்கை  பிடித்து  எடுத்து  எறிந்தார்[12]. இந்த  சண்டையில்  தூத்துக்குடி  பிஷப்புக்கு  உதவியாக  சினாட்  செயற்குழு  உறுப்பினர்  கோயமுத்தூர்  டையோசிஸ்ஸை  சேர்ந்த  திரு.அமிர்தம்  அவர்களும்  பிஷப்  அவர்களுக்கு  உதவியாக  பிஷப்புடன்  சேர்ந்து  திரு.பிலிப்பை  தாக்கி   அவை நாகரீகம்  இல்லாமல்  கெட்டவார்த்தைகளை  உபயோகித்து  ஏசினார். இவைகள்  வீடியோவில்  பதிவு  செய்யப்பட்டது. தூத்துக்குடி  பிஷப்புடன் சேர்ந்து  பிலிப்  அவர்களை  தாக்கி  கெட்டவார்த்தைகளை  பேசியதாக  கூறப்பட்ட  சகோ.அமிர்தம்  அவர்கள்  உடனே  அங்கேயே  தன்  செயலுக்கு  வருத்தம்  தெரிவித்ததால்  சினாட்  அவருக்கு  உடனே  மன்னிப்பு  கொடுத்தாக  அறிவித்தது. ஆனால்  பிஷப்.ஜெபசந்திரன்  அவர்கள்  மன்னிப்பு  கேட்கவில்லை. எழுத்து  மூலமாகவும்  மன்னிப்பு  கேட்க  ஆலோசனை   அளிக்கப்பட்டது. அதற்கும் அவர்  செவிசாய்க்கவில்லை. ஆகவே  அவர்  பிஷப்  பதவியிலிருந்து  சஸ்பெண்ட்  செய்யப்படுகிறார்  என்று  ஏகமானதாக  தீர்மானம்  எடுக்கப்பட்டதாக  சினாட்டில்  அறிவிக்கப்பட்டது. பிஷப். ஜெபசந்திரன்  அவர்கள்  சண்டைப்போட்டு  கெட்டவார்த்தைகளை  உபயோகித்தது   (சினாடில்) இதுதான்  முதல்முறை  என்று  கூறப்படுகிறது. இந்த  சம்பவம்  மற்ற  மாநில  பிஷப்மார்கள்  முன்னிலையில்  நடந்ததால்   தமிழ்நாட்டு  CSI சபைகளுக்கு  பெரும்  தலைக்குனிவை  உண்டாக்கி  விட்டது”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

CSI. டையோசிஸ்ஸில்  நடக்கும்  அநியாயங்களின்  பட்டியல்: “மிஷனரிமார்கள்,  ஆயர்மார்கள், உபதேசியார்  ஆகியவர்களின்   பிராவிடன்ட்  ஃபண்ட்,  பணம்,  பென்ஷன்  பணம்  ஆகியவற்றை  டையோசிஸ்  நிர்வாகம்  அரசாங்க  வங்கியில்   இதுவரை  சேர்க்காமலும்   டையோசிஸ்  சார்பில்  இவர்கள்  பணத்துடன்  சேர்த்து  மேலே  கூறப்பட்ட  ஊழியர்களுக்காக  சேர்த்து  அடைக்கவேண்டிய  பணமும்  இதுவரை  அரசாங்கவங்கியில்  சேர்க்கப்படாமல், பணம்  பேங்க்கில்  அடைக்காததால்  ஆரம்பகாலத்திலிருந்து  ஊழியர்கள்கணக்கில்  வரவு  வைக்கப்படவேண்டிய  வட்டிபணம்   பலகோடிகள்   ஊழியர்கள்  கணக்கில்  வங்கியில்  இல்லை  என்பதாக CSI சினாடுக்கும்,  பிராவிடன்  ஃபண்ட், பென்ஷன்  அதிகாரிகளுக்கும்  ஊழியர்கள்  சிலராக  புகார்  எழுதி  அனுப்ப  ஏற்பாடுகள்  நடக்கிறது. இது  உண்மையானால்  இது  பெரும் கிரிமினல்  குற்றமாக  கருதப்பட்டு  டையோசிஸ்  அதிகாரிகள்  முதல்   பிஷப்மார்  வரை  ஜெயிலுக்கு  போக  வேண்டி  வரும். இவர்களுக்கு பெரும்  ஆபத்தும், அவமானமும்  காத்துக்  கொண்டிருக்கிறது. இது  டையோசிஸ்  நிர்வாகிகளும்,  பிஷப்மாரும்  டையோசிஸ்  ஊழியர்களுக்கு  செய்யும்  பெருத்த  துரோகம்  ஆகும்”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலை  நியமனத்திலும்  ஊழல்: “டையோசிஸ்   வேலை  நியமனத்தில்  குறிப்பாக  தலைமை  ஆசிரியர்,  ஆசிரியர்  ஆகியோரின்  வேலைநியமனத்தில்  பல  வருடமாக  வரிசையில்  காத்துக்  கிடக்கும்  எத்தனையோ   CSI  டையோசிஸ்ஸில்   CSI  சபை  அங்கத்தினரின்  பிள்ளைகள்,   மனைவிமார்கள்  வரிசைப்படி  காத்துக்கிடக்க   வேலை  நியமான  லிஸ்டில்  இல்லாத   நபருக்கு  பணிநியமனம்  கொடுத்தது  துரோக  குற்றச்சாட்டில்  டையோசிஸ்  நிர்வாகத்தினருடன்   பிஷப்  அவர்களும்  குற்றவாளியாகிறார்.  இந்தவிதமான  அநியாயத்துக்கு  பாதிக்கப்பட்டவர்கள்  நீதிமன்றம்  போக  ஏழைகளுக்கு  பணவசதியில்லை.  ஆனால்  அவர்களின்  ஏமாற்றம்  கண்ணீராக  மாறி  தேவசமூகத்தில்  சென்றால்   கர்த்தரே   இந்தகுற்றச்சாட்டுக்கு  பொறுப்பானவர்களை  தண்டிப்பார்  என்பது  நிச்சயம்.   இந்த  சம்பவங்களும்  சினாட்டில்  குற்றச்சாட்டாக  அனுப்பப்  பட்டுள்ளது.   ஆனால்  நியாயம்  தீர்க்க  வேண்டிய  தலைவரின்  டையோசிஸ்ஸிலேயே  இதே  நியமனம்  குறித்த  குற்றச்சாட்டு  எழும்பியுள்ளது.  அப்படியானால்  சினாடின்  தீர்ப்பு  எப்படியிருக்கும்  என்பது  நம்மால்  யூகிக்க  முடிகிறதே!”.

 

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

வேலியை மேயும் வெள்ளாடுகளும், பயிரை மேயும் கருப்பு ஆடுகளும், பலியிடும் ஆயர்களும்

எங்கும்  ஊழல்எதிலும்   ஊழல்  தெய்வபயம்  ஒழிந்துப்  போனது: “இப்போதுதான் CSI சினாட்டுக்கு  பிஷப்மார்கள்  மீது  நடவடிக்கை  எடுக்கும்   புதுதைரியம்  உண்டாகியிருக்கிறது,  அதற்காக  பாராட்டுகிறோம்.  இன்னும்  நடவடிக்கை   எடுக்கப்பட  வேண்டிய  CSI  பிஷப்மார்கள்  பட்டியல்  நீண்டுள்ளது.  சீக்கிரம்  நடவடிக்கை  எடுத்தால்   CSI  சபைகள்  நல்ல  ஒழுங்குக்கு  வரும்.   நடவடிக்கை CSI   சினாட்  தலைமையிலிருந்தும்   ஆரம்பிக்கப்  படவேண்டும்.  ஜெபிப்போம்  சில  வருடங்களுக்கு  முன்   சுனாமியால்   பாதிக்கப்பட்டவர்களுக்கு  அமெரிக்க  உதவி  ஸ்தாபனமான   ERD அனுப்பி  உதவிய  பலகோடிகளில்  ஊழல்  செய்து  களவாடிய  பணத்தை  சுனாமியால்  பாதிக்கப்பட்ட  மீனவ  குடும்பங்களுக்கு  கொடுக்காமல்  பலகோடிகள்   தன்  மகள்   பெயரில்  சினாட்  பொறுப்பாளர்கள்  சிலர்  பலகோடிகளை  வங்கியில்  போட்டு  வைத்ததை  போலீஸ்  கண்டு  பிடித்தது.   சினாடில்  பொதுசெயலர்  இன்னும்  சம்பந்தப்  பட்டவர்கள்  பொது செயலரின்  கர்ப்பிணியான  நிலையில்  இருந்த  மகள்  ஆகியவர்களை  போலீஸ்  கைது  செய்து  சிறையில்  அடைத்தார்கள்.   கடலே  இல்லாத  இடங்களில்  உள்ள   CSI பிஷப்மார்களும்  சுனாமி  உதவிதொகையில்  தங்களுக்கும்  பங்குவேண்டும்  என்று  வாங்கிப்போன  அநியாயங்களும்   CSIயில்  நடந்தது.  சுனாமி  உதவிதொகை  அனுப்பிய  அமெரிக்க  உதவி  ஸ்தாபனமான  ERD, CSI   மீது  வழக்கு  தொடுத்துள்ளது.  ERD உதவிஸ்தாபனம்   CSI   சினாடிடம்  கொடுத்த  பணத்துக்கு  கணக்கு  கேட்கிறது.  பணம்  வாங்கின  எந்த  பிஷப்பும்  திருமண்டலத்தில்  இதுவரை  கணக்கு  ஒப்புவிக்கவில்லை.  பிரதம மந்திரிக்கு ERD தகவல்  அனுப்பியுள்ளது.   நீதிமன்றவழக்கை   CSI  சினாட்  வேண்டுமென்றே  வாய்தா  வாங்கி  வருடகணக்கில்  நீட்டிக்கொண்டு  போகிறார்கள்.   இப்போதுள்ள  சினாட்  புதிய  கமிட்டி    சுனாமி  நிதிகணக்கை  சம்பந்தப்பட்ட  பிஷப்மார்களிடத்தில்  கேட்டு  வாங்குவார்களா?” என்று  ஜாமக்காரன்   முடித்துள்ளார்.

 

J.A.D. Jebachandran taking over as the Bishop of Tuticorin-Nazareth diocese.

J.A.D. Jebachandran taking over as the Bishop of Tuticorin-Nazareth diocese.

தூத்துக்குடி – நாசரேத்திருமண்டலநிர்வாகத்தை  கவனிக்க Rev.ஜேசுசகாயம்  நியமனம்[13]:தூத்துக்குடி – நாசரேத்  திருமண்டல  நிர்வாகத்தை   கவனிப்பதற்காக  பிரதம  பேராயர்   பிரதிநிதியாக  மதுரையை  சேர்ந்த CSI  குருவானவர்.  ஜேசுசகாயம்   நியமிக்கப்  பட்டுள்ளார்.தென்னிந்திய  திருச்சபையின்  பிரதம  பேராயர். தேவகடாசம்   அவர்கள்  தூத்துக்குடி –  நாசரேத்  திருமண்டல  குருவானவர்கள்  மற்றும்  கல்வி  நிறுவனங்களின்  நிர்வாகிகளுக்கு   அனுப்பியுள்ள  கடிதம்:  சென்னையில்  கடந்த  பிப்ரவரி 25ம்  தேதி  நடந்த  தென்னிந்திய  திருச்சபையின்  தலைமை  செயலக  (சினாடு) நிர்வாக  குழுகூட்டத்தில்  எடுக்கப்  பட்ட  முடிவின்படி   தூத்துக்குடி –  நாசரேத்  திருமண்டல  பேராயர்  ஜெபச்சந்திரன்சஸ்  பெண்ட்   செய்யப்பட்டுள்ளார்  என்று  சுற்றறிக்கை   அனுப்பியுள்ளார்.   இப்பொழுது  மார்ச்   2014ல்  வழக்குப்  பதிவு  செய்யப்   பட்டுள்ளது.

 

© வேதபிரகாஷ்

25-03-2014

 

[1] The Tirunelveli police have registered a cheating case against three CSI bishops in Tirunelveli and Tuticorin and a retired district judge for allegedly swindling several crores of rupees from a trust. Based on a complaint by Bala Singh, principal of the Bishop Sargent Teacher Training Institute, which was founded in 1818, the Palayamkottai police registered a case against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss, Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran , a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David, Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj, Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj and retired district judge Retinaraj, a synod member, who has been appointed as the financial administrator for the Tirunelveli CSI diocese.

http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms

[2] Police registered a case under IPC Sections 406 (punishment for criminal breach of trust), 420 (cheating), 464 (making a false document) and 465 (punishment for forgery). Tirunelveli police commissioner Karunasagar said, “We have registered a case based on a court direction. We will pursue the case further.” The complainant has accused the former Bishop and the present Bishops of conniving with each other and bifurcating the diocese into two, which was against the Company Law. “We maintain elaborate and meticulous records,” Tirunelveli CSI diocese Bishop Rev J J Christudoss said. He said the records were proper and there were no malpractices. “Every year we send our account details to the central government through CSI. This year also we had sent it and there was no flaw in the records,” he said.

http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms

[3]தினமலர், மாஜிபிஷப்உட்படநான்குபேர்மீதுவழக்கு, சென்னை, 25-03-2013, பக்கம்,9.

[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/jebachandran-frst-bishop-of-tuticorinnazareth-diocese/article3145638.ece

[5] Madras High Court-Thoothukudi Nazareth Diocese vs The Church Of South India on 23 September, 2008IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS; DATE: 23.9.2008.

[6] http://indiankanoon.org/doc/1420149/

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/parishioners-go-on-hunger-strike-condemn-activities-of-bishop/article3249357.ece

[8] Contravening the rules and regulations formulated by State and Central governments, lecturers were recruited at colleges under his maladministration. Alleging that those with educational qualifications and eligible for recruitment to posts of lecturers against existing vacancies were not considered but on the contrary, recruitments were made for money. Proper auditing was not executed to assess income and expenditure at regular intervals.

[9]இங்குள்ளவிசயங்கள்ஜாமக்காரன்என்றுஒருவர்எழுதிவரும்பதிவுகளினின்றுஎடுத்தாளப்பட்டுள்ளது. இங்குதேவைஎன்பதால்சேர்க்கப்பட்டுள்ளது.

[10] http://newindian.activeboard.com/t34454994/christian-world/?ts=1364740940&page=12&sort=newestFirst&direction=prev&w_r=1381895588

[11] http://jamakaran.com/tam/2013/june/csi.htm

[12] http://tamil.oneindia.in/news/2013/04/04/tamilnadu-tuticorin-nazareth-diocese-bishop-jebachandran-172791.html

[13]தூத்துக்குடி: மே 3-2013, தினகரன்

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)

பிப்ரவரி 20, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (2)

தெயநாயகத்தின் இரட்டை வேடம்

தெயநாயகத்தின் இரட்டை வேடம்

இந்துமதத்தின்  ஆதிக்கோவிலாகிய  கபாலீஸ்வரர்  கோவிலைப்  போப்பாண்டவர்  பிடியிலிருந்து  விடுவிக்கும்  போராட்டம்:  புராதனமாக பல்லவர்கள் காலத்திலிருந்த கபாலீச்சுரம் கோவில் முன்பு கடற்கரையில் இருந்தது என்பதற்கான நாயன்மார்களின் பாசுரங்களிலிருந்து குறிப்புகள் உள்ளன. எனவே, 1543ல் போர்ச்சுகீசியர் அதனை இடித்துவிட்டு, சிறிய சர்ச்சைக் கட்டினர் என்றால், இப்பொழுதிருக்கும் சாந்தாம் சர்ச்சில் தான், தெய்நாயகம் ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும். ஆனால், மயிலையில் கோவிலுக்கு அருகில் நடத்துகிறேன் என்பது கேவலமானது, அர்த்தமற்றது. மேலும், 23-02-2014 அன்று தெய்வநாயகத்திற்கு அனுமதி கொடுத்துள்ள பட்சத்தில், இந்துக்கள், சாந்தோம் சர்ச்சில் அல்லது அருகில், அதனை விட்டு வெளியேறு, இடத்தை கோவிலுக்கு ஒப்படை என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தலாம், பொதுகூட்டமும் நடத்தலாம். இந்துக்கள், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இதனை முக்கியமாகக் கருதி செயல்படவேண்டும்.

Santhome சர்ச் இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்.

Santhome சர்ச் இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்.

இந்து  இயக்கங்களில்  ஒற்றுமை  இல்லாதது: மே. 2010ல், தெய்வநாயகம் இதேபோல ஒரு பொதுகூட்டம் நடத்தினார். அப்பொழுது கோவில் அருகில் அனுமதி மறுக்கப்பட்டதால், ராஜரெத்னம் ஸ்டேடியத்தில் நடத்தினர்[1]. இதற்கு எதிராக இந்து அமைப்புகள் மிக்கக் கஷ்டபட்டு அனுமதி பெற்று 31-07-2010 அன்று  பாரதீய ஜனசக்தி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, ராம்சேனா, ருத்ரசேனா என்ற பல அமைப்புகளின் சார்பாக ஒரு பொதுகூட்டம் நடந்தப்பட்டது[2]. இதற்குள் 13-05-2010 அன்று இ. ஆர். ஹரண் என்பவர் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் இந்து ஜாக்ருதி சமிதி, நந்தனார் பேரவை மற்றும் தேசிய சிந்தனையாளர் பேரவை [Hindu Janajagruthi Samithi, Nandanar Peravai (Nandanar Forum) and Desiya Sinthanaiyalar Peravai (National Thinkers Forum)] முதலியவை, ஏதோ போராட்டத்தில் ஈடுபட்டது போல குறிப்பிட்டிருந்தார்[3]. ஆனால், 31-07-2010 அன்று  நடந்த கூட்டத்திற்கு இவர்கள் – குறிப்பிட்ட இயக்கத்தினர் – வரவில்லை[4].

 

தெய்வநாயகம் கலாட்டா 19-01-2014 தெரியாதது

தெய்வநாயகம் கலாட்டா 19-01-2014 தெரியாதது

கிருத்துவக்  குழப்பவாதிகளில்,   திரிபுவாதிகளில்  மற்றும்  மோசடி  சித்தாந்திகளில்  ஒருவர்: மு. தெய்வநாயகம் கிருத்துவக் குழப்பவாதிகளில், திரிபுவாதிகளில் மற்றும் மோசடி சித்தாந்திகளில் ஒருவர். சிவபிரகாசர், தாயுமானவர் போறோரின் “ஏசுமத நிராகரணம்” போன்ற மறுப்பு நூல்களை எரித்த கேடுகெட்ட கிருத்துவ அடிப்படைவாத, மதவெறி மற்றும் தீவிரவாத கும்பல்களைவிட மோசமானவர். ஆனால், அப்பாவி இந்துக்கள் அதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில்லை. கத்தோலிக்கக் கிருத்துவ ஆதரவுடன் ஊக்குவிக்கப் பட்டு வரும், இவர் தனக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வரும் ஒரு கிருக்கரும் கூட. இவரால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை, அதனால் யாரும் இவரைக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், சமீபகாலத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா என்பவர், இவரைப் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல், யாரோரோ சொன்னதை, எழுதியதை வைத்துக் கொண்டு, எல்லாமே தெரிந்தது போல, “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தின் மூலம் இந்த ஆளை மிகப்பெரிய ஆளாக மாற்றிவிட்டார். அரவிந்த நீலகண்டன் என்ற இணையாசிரியரும் தமிழில் அப்புத்தகத்தை எழுதி, அதைப் பற்றி பேச்சுகளைக் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, திக வீரமணியும் ஒரு கூட்டம் போட்டு இப்புத்தகத்தை, அவருக்கேயுரிய பாணியில் விமர்சித்தார். எது எப்படியாகிலும் தெய்வநாயகம் விசயத்தில் இருப்பினும், அதுவும் எடுபடவில்லை. கண்டுகொள்வார்கள் இல்லை.

வேதபிரகாஷின் பிரார்த்தனை

வேதபிரகாஷின் பிரார்த்தனை

கிறிஸ்தவக்  கிருக்குக்  குழந்தை, இப்படி  குறும்பு  செய்ய  முற்பட்டுள்ளது: குழந்தைகள் நிறைய பேர் இருக்கும் போது, சில குழந்தைகள் விஷமம் செய்து கொண்டிருக்கும். அவற்றில் சில மற்றவர்களின் கவனத்தை இழுக்க சேட்டைகளை செய்ய ஆரம்பிக்கும். அந்த சேட்டைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், அளவுகளை மீறி, அசிங்கமான, ஆபாசமான, அருவருப்பான சேட்டைகளையும் செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது, வக்கிரம் பிடித்த சில ரசிகர்கள் ஆதரித்து மகிழலாம். ஆனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கே, அவை வெறுத்துவிடும். உடனே, அந்த சேட்டைக் குழந்தைகளை அடக்கி வைப்பர், அல்லது அடித்தும் ஒடுக்கி வைப்பர். அதுபோலிருக்கும் கிருக்குக் குழந்தையைப் போன்றது தான் இந்த தெய்வநாயகம். இது தொடர்ந்து சென்னை பிஷப்புகளினால் ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. கணேஷ் ஐயர் வழக்கில் சிக்கிக் கொண்ட அருளாப்பாவிலிருந்து, நிலமோசடி வழக்குகளில் சிக்கிக்கொண்ட சின்னப்பா வரை, இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை ஆதரிக்கப் பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிறிது கலாட்டா செய்தால், யாதாவது ஆதாயக் கிடைக்கும், கொஞ்மாவது கவனம் தன் பால் திரும்பும் என்று எதிர்பார்த்துதான், இந்த ஆர்பாட்டம் என்றும் தோன்றுகிறது. ஏனெனில், “ஏசு அழைக்கிறார்” கூட்டமே, மோடியை ஆதரிக்கும் நேரத்தில், இந்த கிறிஸ்தவக் கிருக்குக் குழந்தை, இப்படி குறும்பு செய்ய முற்பட்டுள்ளது வினோதமாக உள்ளது.

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்-நேரடிப் பதிவு 2009

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்-நேரடிப் பதிவு 2009

இந்துவிரோதிகளின்  பின்னணியைக்  கூட  அறியாமல்  இருக்கும்  இந்து  போராளிகள்: இந்து இயக்கங்கள், தமிழகத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்து முன்னணி (ராம கோபாலன்), இந்து முன்னணி (இரண்டு, மூன்று உதிரிகள்), இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத்), இந்து மக்கள் கட்சி (இரண்டு, மூன்று உதிரிகள்), சிவ சேனா (தமிழ் நாடு), இந்து மஹா சபா (ஆளாளுக்கு ஒன்று, இப்பொழுதோ ஐதாறு பேர்கள் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டுள்ளர்கள்)……………….இப்படி பலவுள்ளன. ஆனால், இவை சுதந்திரமாக செயல்படாமல், ஏதோ ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தங்களுக்கு உட்பட்டுக் கிடப்பதால், இத்தகைய இந்து-விரோத காரியங்களை எதிர்ப்பதில் தாமதம், தொய்வு, முரண்பாடுகள் மற்றும் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில், இதில் பலருக்கு விசயம் என்னவென்றே தெரியாது. அவ்விசயத்தில் விஷமம் செய்து வரும் வேடதாரிகளும் தெரியாது; அவர்கள் யார், பின்னணி என்ன என்றும் தெரியாது; ஏன் அவர்களை அடையாளம் காணக் கூட தெரியாது. ஆனால், சில நேரங்களில், பத்து-இருபது பேர் “பாரத் மாதா கீ ஜே” என்று கத்திவிட்டு சென்று விடுகின்றனர். வேதநாயகம் விசயத்திலும் அப்படித்தான் இருந்து வருகிறது.

S Gurumurthuy and RSN

S Gurumurthuy and RSN

தெய்வநாயகம்  இந்து  சாமியார்  போல  வந்து  தர்ம  ரக்ஷ்ண  சமிதி  மாநாட்டிற்கு  வந்தது: தர்ம ரக்ஷ்ண சமிதியின் சார்பில், காமராஜர் அரங்கத்தில் மாநாடு நடந்த போது, தெய்நாயகம் ரூ.20/- செல்லுத்து, பதிவு செய்து கொண்டு, அரங்கத்தில் நண்பர்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு விட்டார். பெரிய சாமியார் போல காவியுடை, தாடி என்று வந்ததால், இந்துக்கள் அவருக்கு நமஸ்காரம் செய்து, வாங்க ஜி, உள்ளே வாங்கஜி, உட்காருங்கள் ஜி என்ற உபசாரம் வேறு. இதைப் பார்த்தவுடன் தான் எனக்கு விசயம் தெரிந்தது, அவர்களுக்கு, அதாவது மாநாட்டை நடத்தும் யாருக்கும், இந்த அப்பாவி தொண்டர்களுக்கும், தெய்வநாயகம் யார், அந்த ஆளின் பின்னணி என்ன என்ற விசயங்கள் ஒன்றும் தெரியாது என்று தெரிய வந்தது. ஆனால், தெரிந்தது போல பேசுவார்கள்!

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்

தமிழ் நூல்களை அழித்த கிருத்துவர்கள்

கிறிஸ்தவர்  என்று  தெரிந்த  பிறகு  தெய்வநாயகம்  வெளியேற்றப்  பட்டது: குருமூர்த்தியிடம் மெல்ல விசயத்தை சொன்ன போது, “என்ன, இவர் என்ன சொல்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லையே”, என்றுதான் பதிலுக்குப் பேசினார். உடனே, ஆர். எஸ். நாராயணசாமியைக் கூப்பிட்டு விசயத்தைச் சொன்னேன். அவர் சொன்ன பிறகுதான், குருமூர்த்திக்கு புரிந்தது போலும். உடனே, “யாரது, அவரைக் காட்டுங்கள்” என்று வேகமாக என்னிடம் வந்தார். நான் நாராயணசாமியிடம் அடையாளம் காட்டி, அவரிடம் காட்டுமாறு சொல்லி விலகிவிட்டேன். குருமூர்த்தி, இரு போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு, அரங்கத்தில் உட்கார்ந்திருந்த “இந்து சாமியார்” போல உட்கார்ந்திருந்த தெய்நாயகத்தை வெளியேற்ற சொன்னார். காரணம், ஒரு கிருத்துவர், இந்து மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார், என்பதுதான். போலீசார், அவரை வெளியே வரச் சொன்னார்கள். தெய்நாயகம் வெளியே வந்ததும், அவரை யார் என்று விசாரித்தனர். உண்மையினை சொன்னதும், கிருத்துவர் என்பதால், “அது அவங்க கூட்டம், நீங்க ஏன் கலந்துக்கிறீங்க?” என்று கேட்டனர். “I have paid delegate fees, I have every right to attend the conference”, என்று ஆங்கிலத்தில் கூட கத்த ஆரம்பித்தார். ஆனால், போலீசார் வெளியே அழைத்துச் சென்று, சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

Swami Vivekananda pamphlet

இந்துக்கள்  விழிப்புடன்  தயார்  நிலையில்  இருக்க  வேண்டிய  அவசியம்: இந்துக்களுக்குப் புரிய வேண்டும் என்றுதான் இதனை பதிவு செய்கிறேன். இந்துக்கள் அந்த அளவிற்கு விசயங்களைப் புரிந்து கொள்ளாமல், தயார் நிலையில் இல்லாமல், யாராவது விசயங்களைத் தமக்குக் கொடுத்தால், பழைய புத்தகங்கள், செய்திதாள் துண்டுகள் கொடுத்தால், அவற்றை வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாம் தெரிந்தது போல எழுதுவது, பேசுவது என்றி திராவிட சித்தாந்திகளைப் போன்றே, இன்றைய இந்து சித்தாந்திகள், இந்துத்வவாதிகள் தாயாராகி இருக்கிறார்கள். உண்மையினை சொன்னால், அவரை மதிக்காமல் இருப்பது, ஒதுக்கி வைப்பது என்ற நிலையிலும் உள்ளார்கள். ஆனால், இந்துவிரோதிகள் இவற்றை தாராளாமாகவே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 23-02-2014க்குள் இந்துக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்துப் பார்ப்போம்!

வேதபிரகாஷ்

© 19-02-2014


[4] திருமதி ராதாராஜன் என்பவர் வந்தார், ஆனால், தனக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்றதும் சென்றுவிட்டார். முதலில் அவர், இவ்வியக்கங்களுடன் தொடர்பும் வைத்துக் கொண்டிருக்கவில்லை, எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென்று, மேடையில் ஏறி நானும் பேசுகிறேன் என்றபோது, அமைப்பாளர்களின் முடிவுக்கேற்பத்தான் செயல்பட  வேண்டிருக்கும் என்பது தெரிந்த விசயமே. அதாவது கொள்கைக்காக போராட வேண்டுமே தவிர, தனிமனித முக்கியத்துவம், புகழ், யார் அதிகமாக போராடியுள்ளார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டு காரியங்களை செய்யலாகாது.

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

பிப்ரவரி 19, 2014

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (1)

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

போப் –  மற்றும்  சங்கராச்சாரியார்போஸ்டரும்  தெய்வநாயகத்தின்  குறும்பும்: நான் 19-01-2014 அன்று அம்பத்தூருக்குச் செல்லும் வழியில், முகப்பேர் பகுதியில் “போப்-மற்றும் சங்கராச்சாரியார்” போஸ்டரைப் பார்த்தேன். ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வண்டியும் வேகமாக சென்றுவிட்டத்தால், விவரங்களைப் படிக்கமுடியவில்லை. பிறகு நண்பர் தேவபிரியா சாலமன்[1] அதைப் பற்றி 16-02-2014 அன்று விசாரித்தார். நானும் அதனைப் பார்த்ததாக சொன்னேன். அவர், “நீங்கள் சரியாக பார்த்திருக்க மாட்டீர்கள், 23-02-2014 அன்று மயிலை மாங்கொல்லையில் பொதுகூட்டத்தை தெய்வநாயகம் நடத்துகிறார், அந்த போஸ்டரை மெயிலில் அனுப்பி வைக்கிறேன் பாருங்கள்”, என்று அனுப்பிவைத்தார். 17-02-2014 அன்று தான் பார்த்தேன். “இந்து மதத்தின் ஆதிக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலைப் போப்பாண்டவர் பிடியிலிருந்தும் மற்றக் கோவில்களை சங்கரச்சாரியார் பிடியிலிருந்தும் விடுவிக்கும் 2ம் கட்டப் பிரார்த்தனைப் போராட்டம்” என்று அதில் இருந்தது. “சிந்தனையாளர்களின் இதன் தொடர்பான கேள்விகளுக்குக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டு, இடம்: கபாலீஸ்வரர் கோவில் அருகில் மாங்கொல்லை, காலம் 23-02-2014, ஞாயிறு மாலை 6 மணி தொடர்பு முகவரி: பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எம்.ஏ., பி.எச்டி, ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு, 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை – 23; தொலைபேசி எண்; 044-2674 3842 / 94448 17394; மின்னஞ்சல் – tamilarsamayam2010@gmail.com, thamizharsamayam2010@gmail.com, இணையதளம் – www.soulologyofthetamils.com, என்றும் கொடுக்கப்பட்டுள்ளன.  சரி, தெய்வநாயகம் பழையபடி, ஒரு நாள் கூத்து நடத்த தீர்மானித்துள்ளர் என்று தெரிந்து கொண்டேன்.

வேதபிரகாஷின் பிரார்த்தனை

வேதபிரகாஷின் பிரார்த்தனை

தெய்வநாயகத்தின்  குழப்புவாதம்  அவரது  கருத்துகளிலேயே  காணலாம்: உதாரணத்திற்கு, “வழிபோக்கன்” என்ற புனைப்பெயரில் தெய்வநாயகத்தின் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்[2]. அதிலிருந்து ஒன்று, “இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில்  கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களதுஒன்றே குலம் ஒருவனே தேவன்‘ ‘தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க”.

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

Santhome_Basilica-இந்துக்கள் இதனை விடுவிக்கலாம்

கேள்விகள்எழுப்பப்படுவதில்மறைக்கப்படும்அடிப்படைவாதம்: இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. என்று கேள்விகளைக் கேட்டுள்ளார். அதிலுள்ள பொய்மை வலதுபக்கத்தில் எடுத்துக் காட்டப் படுகிறது.

 

எண் தெய்வநாயகத்தின் கேள்வி அதிலுள்ள பொய்மை / திரிபுவாதம்
1)  கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன்? போர்ச்சுகீசியர் மதவெறியினால், ஆக்கிரமித்துக் கொண்டு, இடித்தனர்.
2)  அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன்? இது பொய். ஒருகாலம் வரை, பழைய தூண்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் இருந்து வந்துள்ளன.
3)  ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது? இது கத்தோலிக்கர்களின் திட்டமே தவிர, வேறொன்றும் இல்லை.
4)  கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன? இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா? இதற்கும், கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.கத்தோலிக்கர் இந்த கோவிலை இடித்தது, மதவெறியேயன்றி, வேறொன்றும் இல்லை.
5)  கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை…அது ஏன்? பலிபீடம், கொடிக்கம்பம் என்றெல்லாம் கோவிலில் இருப்பதும், சர்ச்சிற்கும் சம்பந்தம் இல்லை.
6)  காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன்? தடையெல்லாம் ஒன்றும் விதிக்கவில்லை. காசி போன்ற இடங்களில் உள்ள மூல விக்கிரகம் கத்தோலிக்கர் போன்ற முகமதிய வெறியர்களால் உடைக்கப்பட்டன. இப்பொழுதுள்ளவை, கோவிலும் இல்லை, அவை உண்மையான விக்கிரங்களும் இல்லை.
7)  உருவ வழிபாட்டை ஏற்காத ‘நான் தான் கடவுள்’ என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன? இதெல்லாம், இந்த ஆளின் பித்தலாட்டமேயன்றி, அதில் எந்த விசயமும் இல்லை. “ஸ்மார்த்த சமயம்” என்று ஒன்றில்லை, அது சம்பிரதாயம், அது நாத்திகம் இல்லை.

 

என்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும், உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின் உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும். தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்”, என்று இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம், இவரிடம் தான் வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பேதமையும் வெளிப்படுகிறது.

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தெய்வநாயகம் கலாட்டா மயிலாப்பூர்.2014

தொடர்ந்து  பரப்பப்பட்டு  வரும்  கட்டுக்கதை: கிருத்துவர்கள், நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளுடன் செயல்படுவதால், அடிக்கடி,  இதைப் பற்றிய செய்திகள் எங்காவது வரசெய்து கொண்டிருக்கிறார்கள். வருடாவருடம், செய்திதாள்கள், டிவி போன்ற ஊடகங்களில் இக்கட்டுக்கதைகள் – குறிப்பாக தாமஸ் கட்டுக்கதை – தவறாமல் வந்து விடும். அதனைப் பார்க்கும் போது, கவனத்திற்கு வரும் போது மறுப்புக் கடிதம் அனுப்புவது அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அத்தகைய தவாறான விசயங்களை எடுத்துக் காட்டுவது போன்ற வேலைகள் நடந்து வருகின்றன[3]. உண்மையினை அறிந்தவர்கள், கிருத்துவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் ஒப்புக் கொண்டு, அத்தகைய செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்கிறார்கள். இருப்பினும் இன்னொரு பக்கம், அதனைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வருடம், ஜனவரியில் முந்தைய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வரவழைத்து, “செயின்ட் தாமஸின் சரித்திர சுருக்கம்” என்ற சிடியை வெளியிட வைத்துள்ளனர்[4]. தவிர, அவர் சின்னமலையில் பல வருடங்களாக தாமஸ் வாழ்ந்ததாகக் கருதப் படும் இடம் [ visited the cave in Little Mount in which St Thomas is believed to have lived for many years] மற்றும் அவரது பாதங்கள் என்று கருதப்படும் இடம் முதலியவற்றைப் பார்த்தார் [He also viewed the bleeding cross carved by the apostle himself and the footprints, believed to be that of the saint himself, at the foot of the hillock.] என்று செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்[5]. இது முழுக்க கிருத்துவர்களின் சிறப்பான திட்டம் என்று தெரிகிறது.

கபாலீஸ்வரர்  கோவில்  கருவறை  நுழைவு  போராட்டம் (2010): 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஏசு வருகிறார்!!!!!!!!!!

ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார்[6]. “காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”. என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். 04-05-2010 அன்று, இந்துக்களுக்கு சூடுசொரணை இருந்தால், கிருத்துவர்களை சாந்தோம் சர்ச்சிலிருந்து வெளியேற்ற போராட்டம் நடத்த வேண்டும், என்று ஒரு பதிவை செய்திருந்தேன்[7].

 NCB

கபாலீஸ்வரர்  கோயிலை  இடித்துவிட்டு  நாடகம் ஆடும்  கிருத்துவக்  கயவர்கள்!: முதலில் கபாலீஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்ததற்கான ஆதரங்கள் பல இருக்கின்றன[8]. இவையெல்லாம், உதாரணத்திற்காக கொடுக்கப் படுகிண்ரன. பல விசயங்கள் தெரிந்தவை என்பதால், அவை மறுபடியும் சொல்லப்படவில்லை.

கார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்

ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்!

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………

மயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில்,  மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….

  • அப்படியென்றால் எங்கே அந்த கோயில்?

கயிலைப் பதிஅரன் முருகோனே

கடலக் கரை திரை அருகேசூழ்

மயிலைப் பதிதனில் உறைவோனே

என்று அருணகிரிநாதர் மாடியுள்ளார்.

  • பிறகு எங்கே அந்த கோயில்?

இப்படி முன்னரே பல பதிவுகள் செய்யப்பட்டுள்ளன[9]. அதாவது, இப்படிப் பட்ட நாயன்மார்கள், அடியார்கள், பெரியோர்களை விட வேறு யாரும், இதற்கான ஆதாரத்தைக் கொடுத்திருக்க முடியாது. ஆனால், இவற்றையும் மீறி தமிழ், தமிழர் என்ற பெயர்களில் ஒரு கிருத்துவன் கலாட்டா செய்து வருகிறான் என்றால், அந்த போக்கைத்தான், தமிழர்கள், தமிழ் பேசும் இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

19-02-2014


[1] இணைதளங்களில் தாமஸ் கட்டுக்கதை பற்றி சமீபகாலமாக நிறைய எழுதிவருகிறார். அதனைப் பரப்புபவர்களை எதிர்கொள்கிறார். அடிக்கடி அதைப் பற்றிய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

[3] இப்பொழுதைக்கு நான், ஈஸ்வர் சரண் மற்றும் தேவபிரியா சாலமன் தவறாமல் அனுப்பி வருகிறோம், தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சமீபத்தில் இதில் பிரபாகரன், ஹர்ஷ வர்த்தன் முதலியோர் சேர்ந்துள்ளார்கள். முன்பு திரு நாச்சியப்பன் என்பவரும் கலந்து கொள்வதுண்டு. இப்பொழுது அவரைக் காணவில்லை.

[5] Express News Service – CHENNAI, After Pep Talk, Quiz, Kalam Gives His E-mail ID to Kids, Published: 07th January 2014 07:40 AM; Last Updated: 07th January 2014 07:40 AM ; Martin Louis

[6] தெய்வநாயகம், தமிழர்சமயம், மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10.

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (2)?

ஒக்ரோபர் 22, 2013

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (2)?

Girl missing from Hasthampatti

அஸ்தம்பட்டியில் பிஷப்புகள், பாஸ்டர்கள் மற்ற கிருத்துவர்களின் வழக்குகள், புகார்கள், சண்டைகள் எல்லாமே வருகின்றன. முதல் பதிவிற்குப் பிறகு[1] தொடர்கின்றது “அஸ்தம்பட்டி புராணம்”!

Police personnel warning footboard travellers in a private bus at Hasthampatti Roundtana in Salem

அரசுக்கு சொந்தமான நிலத்தை “புறம்போக்கு” என்ற சாக்கில் வளைத்துப் போட்டு கட்டிய சிஎஸ்ஐ சர்ச்சின் சுவர் இடிக்கப்பட்டது (ஜூன் 2013):. சிஎஸ்ஐ அஸ்தம்பட்டியில் மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு என்று ஒரு பள்ளி நடத்துவதற்காக அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. இதனால், சிஎஸ்ஐ மீது புகார் செய்யப்பட்டது. சேலம் தாசில்தார் சுரேஷ், சர்ச் அதிகாரிகளை நில ஆவணங்களைக் காட்டுமாறு ஆணையியட்டார். ஆனால், அவர்களால் தகுந்த ஆவணங்களைக் காட்ட முடியவில்லை. மேலுமனவை கோயம்புத்தூர் டையூசிஸில் உள்ளது, தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், அரசுக்கு சொந்தமான நிலத்தை “புறம்போக்கு” என்ற சாக்கில் வளைத்துப் போட்டு கட்டிய சிஎஸ்ஐ சர்ச்சின் சுவர் வருவாய்துறை அதிகாரிகளின் பார்வையில் இடிக்கப்பட்டது. உடனே கிருத்துவர்கள் இதனை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர்[2]. கிருத்துவர்கள் விசயம் என்றதும், அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர்.

பிஷப் மாணிக்கம் பிரார்த்தனை நடத்த வந்தபோது அனுமதிக்கப் படவில்லை 2012

பிஷப் மாணிக்கம் பிரார்த்தனை நடத்த வந்தபோது அனுமதிக்கப் படவில்லை 2012

ஓரினசேர்க்கைகிறிஸ்தவபாதிரிகைது (04-12-2004): சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மாணவரைக் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியாரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த “பீடோபைல்கள்” பற்றியும் அதிகமாகவே பதிவு செய்துள்ளேன். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் கிறிஸ்தவ மிஷன் மையம் உள்ளது. இதன் இயக்குநராக பாதிரியார் “ஜெயராஜ் கிருஷ்ணன்” என்பவர் உள்ளார். கேடுகெட்டவர்களுக்கு இப்படியெல்லாம் பெயர்கள் வேறு! இந்த மையத்திற்குச் சொந்தமாக மாணவர் விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பாதிரியார் தன்னை மிரட்டியும், வற்புறுத்தியும் கடந்த 4 ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கை நடத்தி வருகிறார். மறுத்தால் உடலில் சூடு போட்டு கொடுமைப்படுத்துகிறார் என்று கூறியிருந்தார். இதையடுத்து பாதிரியார் ஜெயராஜ் கிருஷ்ணன், அவரது விடுதிக் காப்பாளர் மகாலிங்கம் மற்றும் பாதிரியாரின் உதவியாளர் அன்பு ஆகியோரிடம் போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் இறுதியில் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர். 3 பேரும் பின்னர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்[3]. இதற்கு பிறகு மறுபடி இவரே அல்லது இன்னொரு பாதிரி / பாஸ்டர் சிக்குவார், இதே முறை பின்பற்றப் படும்.

பிஷப் மாணிக்கம் துரை மீது அஸ்தம்பட்டியில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

பிஷப் மாணிக்கம் துரை மீது அஸ்தம்பட்டியில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

சேலம் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு தள்ளுமுள்ளு[4] (செப்டம்பர் 2009): சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள அடைக்கல நகரில் சிஎஸ்ஐ இம்மானுவேல் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் போதகராக ஜெயபாலன் இருந்து வந்தார். இவரை சில நாட்களுக்கு முன்பு கோவை திருமண்டல பேராயரின் பிரதிநிதி தாமஸ் கே. ஓமன் தர்மபுரிக்கு மாற்றி விட்டார், சர்ச்சுகளில் இடம் மாற்றம் என்பது பணம் கையாடல், செக்ஸ், கற்பழிப்பு போன்ற ஏடாகூடமான குற்றங்களை மறைக்கத்தான் என்று கடந்த ஆண்டு நிகழ்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் ஜெயபாலன் தர்மபுரிக்கு செல்லவில்லை. அட்ஹாவது இடமாற்றம் ஆணை வந்தாலும்,ஆங்கேதான் வேலை செய்வேன் என்று அடம் பிடித்தார் போலும்! இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த பர்னபாஸ், ஸ்டீபன் மற்றும் சிலர் இதுபற்றி ஜெயபாலனிடன் சென்று ஏன் இன்னும் தர்மபுரிக்கு செல்லவில்லை என கேட்டனர். அப்போது அவர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயபாலனும், அவரது ஆட்களும் சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் சென்று சிலர் மீது புகார் கொடுத்தனர். கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து இருந்த முக்கிய ஆவணங்களை சிலர் எடுத்து சென்று விட்டனர் என்றும் புகார் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினார். பிறகு இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Hastham patti location map

இடமாற்றம் செய்யப் பட்ட போதகர் பிரார்த்தனை செய்தாராம் (செப்டம்பர் 2012): இந்த நிலையில் 09-2012 அன்று காலை சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் போதகர் ஜெயபாலன் வந்து சிறப்புரையாற்றினார். இதனால் சிலர் ஆத்திரம் அடைந்து உங்களைத்தான் தர்மபுரிக்கு மாற்றி விட்டார்களே  பிறகு ஏன் சிறப்புரையாற்றுகிறீர்கள் என கேட்டு அவரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். பின்னர் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தள்ளிக்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, குணசேகரன் மற்றும் போலீசார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானம்செய்து வைத்தனர். பின்னர் கூட்டம் அமைதியாக நடந்தது. வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க கிறிஸ்தவ தேவாலயம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Complaints on-line in Salem City Police say

காணிக்கை வசூலுக்காக பாதிரிகள் சண்டை: இந்த சம்பவம் குறித்து பர்னபாஸ் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறியதாவது[5]: “போதகர் ஜெயபாலனும், அவரது ஆட்களும் ஆலயத்திற்கு வரும் வருமானத்தை எடுத்து கொள்கிறார்கள். இதை பொதுமக்கள் கேட்டனர். பின்னர் ஜெயபாலன் தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் தர்மபுரிக்கு செல்லாமல் இங்கேயே இருந்து ஆலயத்தை கைப்பற்ற பார்க்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரூ.50ஆயிரம் ரூ.60ஆயிரம் வரை பொதுமக்கள் காணிக்கையாக தருகிறார்கள். இந்த பணத்திற்கு கணக்கு ஏதும் இல்லை. நாங்கள் இதுபற்றி கேட்டால் எங்கள் மீது போலீசில் பொய் புகார் தருகிறார். சேலம் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் இனியும் தவறு நடக்க விடமாட்டோம். ஆலயத்தை காப்பாற்றி பழையபடி ஆராதனை செய்வோம்”, இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி இவர்கள் ஆர்டிஓ கோர்ட்டில் பேசி தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

21-10-2013


[2] The compound wall of a church near here was on Saturday partially demolished by revenue officials, triggering protests by people. Revenue officials said they demolished the wall of the Church of South India at Hasthampatty as it was constructed on ‘poramboke’ (government) land. However, church officials said the wall was constructed on land belonging to the church.  About 50 feet of the wall was demolished using an earth mover, but the operations were stopped following protests by people. In addition to a church, the CSI is running a school for the mentally challenged, teachers’ training school and a home for poor in the area. Officials led by Salem Tahsildhar Suresh demanded they be shown the land records, to which church authorities said they needed few days’ time as documents were at the Coimbatore diocesan office.

http://zeenews.india.com/news/tamil-nadu/compound-wall-of-church-partially-demolished_855330.html

[4] மாலை மலர், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2009, 6:26 PM IST

போப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவரின் இயக்கம்.

ஏப்ரல் 6, 2013

போப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவரின் இயக்கம்.

Two-popes-anti-pope

புதிய போப்பிற்கு பிறந்த ஞானம்: ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜெண்டினாவை சேர்ந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்வளவு நாட்கள் ஏன் அமைதியாக இருந்தார் என்று தெரியவில்லை.

  • சிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இழைக்கும் பாதிரியார்களுக்கு கடுமையான நடவடிக்கை வேண்டும்,
  • இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்[1] என்று தனது முதல் பொது அறிக்கையில் கூறியுள்ளார்.
  • இதுபோன்று தவறு இழைக்கும் துஷ்டர்கள், தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வாடிகன் கண்காணிப்பு தலைவராக உள்ள பிஷப் ஜெரால்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்ச்சுகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கோரி வந்த வேண்டுகோளை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்[2]. தான் போப்பாண்டவரான பின்னர் ஃபிரான்ஸிஸ் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை தொடர்பில் கருத்து சொல்வது இதுவே முதல்முறை, என்று கிருத்துவர்களே வியக்கிறார்கள்.

Weybild Catholic porn

தனக்கு முன் இருந்தவர் வழிமுறைகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்[3]: இப்படி கூறியிருப்பது நகைப்பிற்குரிய விஷயம் என்று சமூகவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், முந்தைய போப் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வாடிகனின் செக்ஸ் மற்றும் பணம் கையாடல் விஷயங்கள் அவருக்குத் தெரிந்தே இருந்தது[4]. அவர் பதிவி விலகவும் அது காரணமாக இருந்தது. முதலில் இவ்விவகாரங்களைப் பற்றி தனக்கு சரியாக சொல்லப்படவில்லை என்றார்[5]. ஆனால், இங்கிலாந்தில், பெரிய கூட்டம் கூடி ஆர்பாட்டம் செய்தபோது, மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடக்கை எடுக்க தயக்கம் காட்டினார் அல்லது எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை[7]. இந்நிலையில், இவர் சொல்வது வெறும் வார்த்தைகளா அல்லது உண்மையிலேயே ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் கேட்கிறார்கள்.

Weltbild - Catholic porn novels-newspaper

“The Holy Father in a special way urged that the Congregation, following the line sought by Benedict XVI, act decisively in sex abuse cases, above all promoting measures to protect minors, assistance for all those who in the past suffered such violence, necessary measures against the guilty,” the statement said of Francis’ meeting with Bishop Gerhard Ludwig Mueller[8]. வெள்ளிக் கிழமை (050-04-2013) தனக்கு முன் இருந்த பெனிடிக்ட் XVI   வழிமுறையிலேயே செக்ஸ்-மீறல்கள், சிறுவர்-சிறுமியர் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று புனித்த் தந்தை பிரான்சிஸ் சொன்னதாக, பிஷப் ஜெர்ஹார்ட் லுட்விக் முல்லர் ஊடகக்காரர்களுக்குக் கூறியுள்ளார்.

அப்படியென்றால், நானும் அதேபோல இருந்து விடுவேன் என்கிறார் போலும். சும்மா சொல்வதுபோல சொல்வேன், ஊடகங்கள் உலகம் முழுவதும் செய்தியைப் பரப்பும், ஆனால், செக்ஸில் ஜாலியாக இருக்கும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள் அப்படியே இருந்து விட்டு போவார்கள் என்பது போல உள்ளது.

Catholic sex fugitives

குற்றத்தைச் செய்த குற்றவாளியை அக்கூட்டாத்தாரே எப்படி விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியும்?: ஒரு கத்தோலிக்க பிஷப் மற்றொரு கத்தோலிக்க பிஷப்பின் செக்ஸ் குற்றங்களை ஆய்வு செய்வார், தண்டனை அளிப்பார் என்பது பெரிய பேரம், வியாபாரம் மற்றும் பேசி அமுக்கும் விஷயமாகும் என்று பார்பாரா டோரிஸ் என்ற சேவகி கூறியுள்ளார்[9]. எவ்விதத்திலும் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமது செயலுக்கு பதில் சொல்லும் நிலை உருவாக வேண்டும் என்று தான் விரும்புவதாக வத்திகானத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு அறிக்கையில் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார். ஆனால், அக்குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்று குறிப்பிடவில்லை[10]. போப்பாண்டவரிடம் இருந்து கருத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக நடவடிக்கையை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறார்களுக்காகப் போராடும் ஸ்நாப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தனக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் பெனெடிக்டின் பாணியையே ஃபிரான்சிஸும் பின்பற்றுவதாகத் தெரிகிறது என்றும், போப்பாண்டவரின் கருத்து தெளிவில்லாமல் இருக்கிறது என்றும் அமெரிக்காவில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது[11]. செக்ஸ் மற்றும் பொர்னோகிராபி புத்தங்களை வெளியிடும் கிருத்துவ பிஷப்புகள், பாதிரியார்கள்[12], அதில் கோடிகளை அள்ளும் கிருத்துவ ஞானிகள் எப்படி ஒழுக்கத்தைப் பற்றி பேசமுடியும்..

வேதபிரகாஷ்

06-04-2013


[3] His instructions to move decisively, “continuing along the lines set by Benedict XVI,” came in an audience with Archbishop Gerhard Ludwig Muller, the prefect of the Congregation for the Doctrine of the Faith — or the Vatican’s main doctrinal enforcer.

[9] Barbara Dorris, victims outreach director for SNAP, said there was a need for action rather than words. “Once again, as has happened hundreds of times already, a top Catholic official says he’s asking another top Catholic official to take action about pedophile priests and complicit bishops,” she said in a statement. “Big deal.”

போப்பினால் தடைசெய்யப்பட்ட ஏசு சங்கத்தின் உறுப்பினர் எப்படி போப் ஆனார்?

மார்ச் 23, 2013

போப்பினால் தடைசெய்யப்பட்ட ஏசு சங்கத்தின் உறுப்பினர் எப்படி போப் ஆனார்?

இத்தாலிய நாட்டவர் என்பது தான் முக்கியமான காரணி: ஜோர்ஜ் பேரியோ பொர்கோகிலியோ (Jorge Mario Bergoglio) போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பல கிருத்துவ வல்லுனர்களுக்கு வியப்பாக இருந்தது. மூன்று விஷயங்களில் முதலாக உள்ளார்[1] என்றெல்லாம் ஏதோ புதியதாகக் கண்டு பிடித்துச் சொன்னது போல பட்டியல் இட்டார்கள்:

  1. அமெரிக்கக் கண்டங்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் போப்.
  2. முதல் ஜெசுவைட் – அதாவது ஏசு சங்கத்தின் உறுப்பினர்.
  3. பிரான்ஸிஸ் என்ற பெயர் கொண்ட முதல் போப்.

இவையெல்லாம் இருந்தாலும், அவர் இத்தாலியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியிலிருந்து, அர்ஜென்டினாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

அமெரிக்கக் கண்டங்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் போப்: கார்டினெல்கள் நிறைய எண்ணிக்கைக் கொண்ட நாடுகளில் முன்னிலையில் இருப்பவை இத்தாலியும்(28), அமெரிக்காவும்(11) தான். ஆகவே இவ்விரு நாடுகளின் கார்டினெல்களின் ஓட்டுகள் மற்றும் தாக்கம் மிகவும் முக்கியம் என்று தெரிகிறது. ஒவ்வொரு கார்டினலையும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புறுத்துவது, மற்ற காரணிகளால், காரணங்களால் அழுத்தங்களுக்கு உட்படுத்துவது என்பன இயல்பான சாத்தியங்கள் தாம். ஆகவே, இம்முறை அமெரிக்காவிற்கு சாதகமாக ஒரு போப் வேண்டும் என்றால், அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

முதல் ஜெசுவைட்  –  அதாவது ஏசுசங்கத்தின் உறுப்பினர்: போப் கிளெமென்ட் – XIV (Pope Cement XIV) ஜெசுவைட்டுகள் பற்பல சர்ச்சைக்களில் சிக்கியதாலும், ஒருநிலையில் வாடிகனுக்கே எதிராக வேலை செய்கிறார்கள் என்ற பிரச்சினை வந்தபோது, தடை செய்தார்[2]. 1773 முதல் 1814 வரை ஜெசுவைட்டுகள் ரஷ்யா, பிரஷ்யா போன்ற கத்தோலிக்கர் அல்லாத நாடுகளுக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இந்தியாவிலும் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்பர்து கவனிக்கத்தக்கதாகும். சமீபகாலத்தில், ஜெசுவைட்டுகள் பல நாடுகளுக்குச் சென்று பொருளாதார, சமூக, சமய விஷயங்களை அதிகமாக சேகரித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக இருந்து கொண்டு அத்தகைய வேலையை செய்து வருகின்றனர். அதனால், அவர்களது தேவை வேண்டப்படுகிறது. ஆனால், கொள்கையின் படி, ஜெசுவைட்டுகளாக இருப்பவர்கள் உயர்ந்த பதவிகளை வகிக்கக் கூடாது[3].

பிரான்ஸிஸ் என்ற பெயர் கொண்ட முதல் போப்: வல்லரசு மற்றும் முதலாளித்துவங்களுக்கு துணைபோகவிருக்கும் இப்போப்பை இப்படி ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு தோற்றமளிக்கச் செய்தால், அவர் தாராளமாக வரவேற்கப்படுவார். அதாவது, அத்தகைய உருவம், தோற்றம், பிரச்சாரம் பொருளாதார ரீதியில் அவர்களை ஏமாற்ற சுலபமாகும். எப்படி தெரசாவை வைத்துக் கொண்டு இந்தியர்களை ஏமாற்றினார்களோ, அதேபோல, இவரை வைத்துக் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய குழுமம் வியாபாரம் செய்யும். வாடிகன் வங்கியும் லாபங்களைப் பெருக்கும்.

கார்டினெல்களுக்கு போப்பின் எச்சரிக்கை: போப் புதியவராக இருந்தாலும் உள்ளப் பிரச்சினகள் பழயவைதாம், அவை இன்றும் உள்ளன, தொடர்ந்து வருகின்றன[4]. போப் தேர்ந்தெடுப்பிலும் அவ்விஷயங்கள் முக்கிய பங்கு வகித்தது. போப் செஸ்டைன் ஆலயத்தில் கார்டினெல்களுக்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்[5]. ஏசுகிருஸ்துவை வணங்காதவன், சாத்தானை வழிபடுகிறவன் ஆகிறான், ஏசுகிருஸ்துவை நாம் உலகத்திற்கு அறிவிக்கவில்லை என்றால், சாத்தானை அரக்கனை அறிமுகப்படுத்துகிறவர்கள் ஆகிறோம், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஒரு அரசு சாரா நிறுவனம் போல செயல்பட்டால், நாம் அபாயத்தை நோக்கிப் போகிறோம் என்றாகிறது[6], என்றெல்லாம் பேசியுள்ளார். வாடிகன் நிர்வாகத்தில் களையெடுக்கும் வேலையிலும் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பொழுது பல தலைகள் உருளும்[7]. கடந்த போப்பின் ஆவணங்கள் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டதால், வாடிகன் வங்கியின் ஊழல் விவகாரங்கள்[8] பல வெளிவந்தன[9].

ஒரு பெண் ஏன் போப்பாகக் கூடாது?: இப்படி யாரும் கேட்வில்லையே? பெண்கள், பெண்களின் சுதந்திரம், பெண்ணியம், பெண்களின் உரிமைகள் என்றெல்லாம் பேசுனம் வீராங்கனைகள், முதலியோர் மௌனமாக இருக்கின்றனரே? மேனாட்டு கலாச்சாரத்தி ஊறியவர்கள், எல்லோருக்கும் எல்லாவற்றையும் கற்ருக் கொடுத்தவர்கள், பெண்களை முன்னேற்றியவர்கள், எல்லா பதவிகளிலும் அமர்த்தியவர்கள் என பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, ஒரு பெண் ஏன் போப்பாக முடியவில்லை? பிரச்சினை என்னவென்றால், முதலில் ஒரு பெண் கூட கார்டினெலாக இல்லை, ஏன் ஒரு பெண் கூட பிஷப்பாக இல்லை, ஏன் பாஸ்டராக இல்லை. ஆனால், கன்னியாஸ்திரீக்கள் ஏராளம்; இவர்கள் என்னத்தான் செய்து கொண்டிருக்கிறர்கள்? உண்மையென்னவென்றால், ஒரு பெண் கன்னியாஸ்திரீயைத் தவிர வேறு எதுவாகவும் ஆகமுடியாது. கிருத்துவத்தில் அவ்வாறுதான் அவள் நிலை வைக்கப்பட்டுளளது.

© வேதபிரகாஷ்

23-03-2013


[1] Argentine Cardinal Jorge Mario Bergoglio’s election on March 13 is a triple first. He’s the first pope from the Americas. He’s the first Pope Francis. He’s the first pope to be a Jesuit, an order suppressed by Pope Cement XIV and an order held in suspicion by many other popes. He’s also a rarity as the first pope in centuries who should give pause to elitists, financial oligarchs, and self-serving politicians.

[2] Dominus ac Redemptor is the papal brief promulgated on 21 July 1773 by which Pope Clement XIV suppressed the Society of Jesus.

The document is forty-five paragraphs long.

In the introductory paragraph Clement XIV gives the tone: Our Lord has come on earth as “Prince of peace”. This mission of peace, transmitted to the apostles is a duty of the successors of Saint Peter, a responsibility the pope fulfils by encouraging institutions fostering peace and removing, if need be, others that impede peace. Not just if guilty, even on the broader ground of harmony and tranquillity in the Church, it may be justified to suppress a religious order.

What follows is a long section in which Clement XIV reviews the reasons which, in his judgment, are calling for the ‘extinction’ of the Society of Jesus.

  1. A long list of charges against the Society is enumerated (but no judgment is passed on the validity of the charges).
  2. He recalls that, in its history, the Society encountered severe criticism (but he remains silent on whether the criticism is justified).
  3. The distress occasioned to earlier popes by clashes among Catholics with regard to Jesuit doctrine is evoked (but the Society is not explicitly blamed for that).

In a final, more technical section Clement XIV pronounces the actual sentence of suppression of the Society of Jesus. Some provisions are dictated for the implementation of the brief.

In effect, the brief suppresses the Society without condemning it.

[5] Stressing the power of prayer, Francis told the cardinals, “He who does not pray to the Lord prays to the devil. When we don’t proclaim Jesus Christ, we proclaim the worldliness of the devil, the worldliness of the demon.”

http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-pope-francis-cardinals-20130314,0,5869496.story

[6] Francis issued a strong warning to the cardinals, telling them the Catholic Church risks becoming a compassionate nongovernment organization unless it sticks to its spiritual path.

http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-pope-francis-cardinals-20130314,0,5869496.story

[7] On the eve of a mass that inaugurates his reign, Pope Francis has served notice that heads may roll at the Vatican’s troublesome bureaucracy. http://www.thestar.com/news/world/pope/2013/03/18/pope_warns_that_heads_may_roll_at_vatican_bureaucracy.html

[9] Under Bertone’s watch, documents belonging to Benedict XVI were stolen and leaked to the media. There were also widespread suspicions of corruption in the awarding of contracts, and fraud at the Vatican bank. Curia infighting seemed the norm.

போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?

பிப்ரவரி 28, 2013

போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?

sexy-pope-john-paul-2

sexy-pope-john-paul-2

600 ஆண்டுகளில் முதன் முறையாக போப் தானாக பதவி விலகுகிறார்: இது ஏதோ பெரிய விஷயம் போல இந்திய ஊடகளில் செய்திகள் இப்படி வெளிவர ஆரம்பித்துள்ளன. வாடினனைப் பற்றி, போப்பைப் பற்றி, கார்டினல்களைப் பற்றி, வாடிகன் அரசாங்கத்தைப் பற்றி ஒன்றும் அறியாத இந்தியர்கள் – ஊடக ரசிகர்களாக ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் போப் “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்களால் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளன[1]. அத்தகைய “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்கள் என்னவென்றும் விளக்கியுள்ளன, அதாவது 2005ல் அவர் பதவிக்கு வந்ததிலிருந்து, செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்கள், பிஷப்புகள், மதகுருமார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மறைத்து விட்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளார்[2]. 200க்கும் மேற்பட்ட செவிட்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்திய ஒரு அமெரிக்க பாதிரியை பாதுகாத்ததாக கார்டினெல் ரெட்சிங்கர் அல்லது போப் பெனிடிக்ட் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்[3]. ஆனால், நம்மவர்கள் கண்டுகொள்ளவில்லை அல்லது அமுக்கிவிட்டார்கள். முழு விவரங்கள்-வீடியோ முதலியவற்றை இங்கே காணவும்[4].

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

இந்திய ஊடகங்களின் ஜனரஞ்சகமான செய்திகள்: போப் பதவி விலகுகிறார், விலகி விட்டார், இன்னொரு போப் தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தெடுக்கப்படுகிறார் என்றுதான் இந்திய ஊடகங்களில் செய்திகள் ஜனரஞ்சகமாக, விசேசமாக, விசேசிக்கப்பட்டதாக, நம்பிக்கையாளர்களுக்கு அள்ளித்தரும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும், குறிப்பாக படித்த மேல்தட்டுக்காரர்களும் ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னணி என்ன, கடந்த ஒரு-இருவாரங்களில் என்ன நடந்தது என்பதனை எந்த துப்பறியும் செய்தியாளரும், நாணயமான நிருபரும் கன்னியமான ஆசிரியரும் எடுத்துக் காட்டவில்லை. நித்யானந்தாவை துருவி-துருவி கேள்வி கேட்ட நிருபர்கள், வீடியோ எடுத்த வித்தகர்கள், தருமபுர ஆதினத்தையும் தூஷித்தவர்கள் ஏன் இப்படி கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் சிந்தனையற்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று கர்த்தருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது!

Gay and Lesbian priests

பாலியல் வன்முறை – செக்ஸ் விவகாரங்களில் நாறிப்போன வாடிகன்: ஆனால், உண்மையில் கத்தோலிக்கச் சர்ச் செக்ஸ் விஷயத்தில் நிரம்பவும் ஆடிபோயுள்ளது. உலகமுழுவதும், குறிப்பாக கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள், மடலாயக் காப்பாளர்கள் என்று பொறுப்புள்ளவர்களே பற்பல கன்னியாஸ்தீரிக்களை, பெண்களை, சிறுவர்-சிறுமியர்களை பாலியன் வன்புணர்ச்சி, கற்பழிப்பு, பலமுறை புணர்தல், பலர் புணர்தல் என்று ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு பாவமூட்டைகளின் பாரம் தாங்காமல் கர்த்தரே காப்பாற்ற முடியாத நிலையில் போய் விட்டது. இதனால் அத்தகைய பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, ஒரு கூட்டத்தார் வியாழக்கிழமை (28-02-2013), போப்பிடம், “தாங்கள் விலகுவதற்கு முன்னர், அத்தகைய பிஷப்புகளை பாதிரிகளை மற்றும் அவர்களை பாதுகாத்து வரும் அதிகாரிகளை களையடுக்குமாறு” முறையிட்டுள்ளனர்[5].

Vatican sex

போப்பை தேர்ந்தெடுக்க வேண்டியவரே செக்ஸ் விவகாரத்தால் பதவி விலகியது: சர்ச்சுகளின் செக்ஸ் விவகாரம் எந்த அளவிற்கு போய் விட்டதென்றால், கார்டினல் கேய்த் ஓபிரியன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர், தன்னுடைய்ச் செக்ஸ் காமக்களியாட்டங்களினால் எடின்பர்க்கின் ஆர்ச்பிஷப் பதவிலிருந்து 25-02-2013 அன்று விலக நேர்ந்து,  அவர் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் தகுதியையும் இழந்தபோது, பெரிய விவகாரமாகி விட்டது[6]. இதனால், கார்டினல்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு உதாரணம் தான். இதைப் பற்றி ஏற்கெனவே செய்துள்ள பல பதிவுகளை இதே இணைதளத்தில் பார்க்கவும் – http://www.christianityindia.wordpress.com

Cardinal  Keith OBrien involved in sex

செக்ஸ்-குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்களைப் பற்றி விசாரிக்க மூன்று கார்டினல்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது[7]: கார்டினல்கள் என்பவர்கள் கத்தோலிக்க சர்ச்சுகளில் பெரிய தலைமைப் பதவியில் இருப்பவர்கள். இவர்கள் தாம் கூடி, தமக்குள் ஒருவரை போப்பாகத் தேர்ந்தெடுப்பர். அத்தகைய தேர்ந்தெடுப்பு விவகாரம் மிகவும் ரகசியமாக இருக்கும். அத்தைகைய தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சிகள் எப்படியிருக்கும் என்று பல ஹாலிவுட் படங்கள் தத்ரூபமாகக் காட்டியுள்ளன[8]. ஆகையால், மூன்று கார்டினெல்களின் காமலீலைகள் பற்றி விஷயங்கள் வெளிவந்ததுடன், வாடிகன் வழக்கம் போல அதனை அமுக்கிவிடப் பார்த்தது. ஆனால், எப்படியோ அக்கடிதம் வெளியே கசிந்து விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே அல்லது அதற்குத் துணை போனவர்களே விசாரிக்கும் போது என்ன நியாயம், நீதி கிடைக்கும், எதிர்பார்க்க முடியும்?

Vatican sex  Pope resignation 2013

“வாடிலீக்” – வாடிகன் கசிவு என்றால் என்ன?: “வாடிகன்லீக்” – வாடிகனில் கசிவு – அதாவது பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அவற்றில் இருந்தன. அவையாவும், குருமார்களின் கடித போக்குவரத்திலிருந்தே பெறப்பட்டதாகும்[9]. குறிப்பாக காபிரியல் என்பவர் “திருட்டுக் குற்றத்திற்காக” வாடிகன் போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[10]. வாடிகனில் எல்லாமே போப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், எவ்விதத்தில் இக்குற்றங்கள் உண்மையாக விசாரிக்கப்படும், உண்மைகள் வெளிவரும், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்விகளை எழுப்பி, கடிதங்களையும் போப்பிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கம் போல ஆடிகன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார்கள்[11].

காப்ரியல் யார் – அவன் என்னத்தான் அப்படி குற்ரம் செய்துவிட்டான்?: காப்ரியல் ஒரு பட்லெர் (butler) அதாவது வேலைக்காரன், அவன், வாடிகன் பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அடங்கிய குருமார்களின் கடிதங்களை வெளியே புழக்கத்தில் விட்டதால், கடந்த அக்டோபர் 2012லிருந்து ஒன்றரை ஆண்டு சிறைவாசத் தண்டனைக் கொடுக்கப் பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளான்[12]. புனித பரிசுத்த ஆவியின் தூதனாக இருந்து தான் வாடிகனில் இருக்கும் தீய சக்திகள், ஊழல் முதலியன எங்கும் இருப்பதைக் கண்டு அவற்றை கசியவிட்டதால் அத்தண்டனை அளிப்பதாக, விசாரித்த நீதிபதி 20 பக்கங்களில் விளக்கமும் அளித்துள்ளார்[13].

வாடிகன் வங்கியின் ஊழலுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: 2011 ஆண்டில் வாடிகன் வங்கிற்கு 19 மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் ரூ.100 கோடி [$19 million (15 million euros) in 2011] நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் உலக வர்த்தக மார்கெட் சரிவுதானாம்[14]. அப்படியென்றால், வாடிகன் என்ன வியாபாரம் செய்கிறது, எப்படி பணத்தைப் பெறுகிறது? பிறகு வாடிகன் வங்கியில் ஏன் ஊழல் நடக்கிறது, கார்டினல்கள், பிஷப்புகள் கையாடல்கள் செய்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன? இப்பொழுது கிருத்துவர்கள் இந்திய அரசாங்கத்தில் பிகப் பெரிய பதவிகளில் உள்ளதால் அவர்கள் இந்தியர்களாக இந்திய நலன்களுக்காக வேலை செய்வார்களா அல்லது சிவுவாசமிக்க கிருத்துவர்களாக, சோனியா மெய்னோ தலைமையில் வாடிகனுக்கு சாதகமாக வேலை செய்வார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

vatican-bank-scandal

© வேதபிரகாஷ்

28-02-2013


[1] Citing failing strength of “mind and body,” Pope Benedict XVI stunned his closest aides and more than 1 billion Catholics by resigning on Monday, becoming the first pope to do so in nearly 600 years and ending the tenure of a formidable theologian who preached a gospel of conservative faith to a fast-changing world.

http://articles.washingtonpost.com/2013-02-11/national/37027069_1_georg-ratzinger-paolo-gabriele-pope-benedict-xvi

[2] The Vatican is confronting what observers describe as its gravest test in years, with officials fending off allegations that Pope Benedict XVI mismanaged abuse cases that occurred years before he ascended to the papacy in 2005. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/03/25/AR2010032500477.html

[3] Yet the scope of the abuse cases emerging in Europe and new allegations this week that a Vatican office led by Benedict — then known as Cardinal Joseph Ratzinger — failed to defrock an American priest who had allegedly molested as many as 200 deaf boys have again shed a spotlight on Vatican secrecy over such sensitive issues as church finances and abuse cases.

[5] A leading support group for victims of clerical sexual abuse also made what it called a “last-ditch plea” to Pope Benedict to use his authority before resigning on Thursday to discipline bishops who have protected predatory priests in their dioceses.

http://www.reuters.com/article/2013/02/26/us-pope-resignation-abuse-idUSBRE91P0P820130226

[6] The abuse issue took on new urgency after Scotland’s Cardinal Keith O’Brien, accused of improper behavior with young priests, quit as Edinburgh archbishop on Monday and pulled out of the Sistine Chapel conclave to elect a new pope.

[7] The officials also commented on Benedict’s meeting that morning with three cardinals he had appointed to investigate a papal letter-leaking scandal that cast a shadow over his last year in office. The probe into the “VatiLeaks­” affair has prompted months of speculation, including thinly sourced recent reports in the Italian media claiming that the trio discovered a faction of gay Vatican priests who were being blackmailed by laymen with whom they had had “worldly” relations.

[8] டான் பரௌனின் “ஏஞ்செல்ஸ் அண்ட் டெமென்ஸ்” படத்திலும் காணலாம். அதில் பங்குக் கொள்ளும் கார்டினெல்கள் எப்படி புகைப் பிடித்துக் கொண்டு, மது அருந்தி கொண்டு………………….வருகிறார்கள், இருக்கிறார்கள்………………முதலிய விவகாரங்கள் எடுத்துக் காட்டப் படுகின்றன.

[9] VatiLeaks, as the scandal came to be known, dragged the fusty institution into the wild WikiLeaks era. It exposed the church bureaucracy’s entrenched opposition to Benedict’s fledgling effort to carve out a legacy as a reformer against the backdrop of a global child sex abuse scandal and the continued dwindling of his flock.

http://articles.washingtonpost.com/2013-02-16/world/37131414_1_benedict-xvi-vatican-insiders-vatican-city

[10] Gabriele has been charged with “aggravated theft” and is now held in custody by the Vatican police.

http://articles.washingtonpost.com/2012-05-29/national/35458342_1_vatican-archbishop-angelo-becciu-paolo-gabriele

[11] Despite Gabriele’s arrest, Lombardi said that a cardinals’ commission appointed by Benedict to investigate the leaks is still working on the case, with the authority to “hear anyone they think might have information in this case.”

http://articles.washingtonpost.com/2012-05-29/national/35458342_1_vatican-archbishop-angelo-becciu-paolo-gabriele

[13] According to a 20-page indictment issued by a Vatican judge, the former butler told prosecutors that he started the leaks because he was convinced that “evil and corruption” were “everywhere” in the church, and that he acted as an “infiltrator” of the Holy Spirit.

[14] The Vatican posted a record loss of $19 million (15 million euros) in 2011, its worst deficit in more than a decade. Vatican officials blamed the loss on the “negative trend of global financial markets, which made it impossible to achieve the goals laid down in the budget,” in an announcement on Thursday (July 5, 2012).

http://articles.washingtonpost.com/2012-07-09/national/35486567_1_vatican-city-vatican-bank-vatican-radio

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?

ஒக்ரோபர் 24, 2012

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?

“திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “பெரியார்” பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு, வைகோக் கட்சிக் கொடியை தலைகீழாக வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் வேலையில், இந்து சாமியார் போல அல்லது நித்யானந்தா போல, தெய்வநாயகம் என்ற குழப்பவாதி, கிருத்துவ வெறியன், இந்த குட்டையில் மீன் பிடிக்க வந்துள்ளது வியப்பாக உள்ளது. “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார். இப்படி தருணம் வரும் என்று முன்னமே அச்சிட்டு தயாராக வைத்திருக்கிறார் போலும்! கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாஸ்திரீக்களையும், சிறுமிகள், சிறுவர்களை பாலியல் ரீதியில், வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி, குரூரமாக கொடுமைப் படுத்தி வரும் வேளையில், அவர்களை விடுத்து இந்த ஆல் எதற்கு ஸ்ரீரங்கத்தில் சுற்றி வர வேண்டும்? அந்த பிட்நோட்டீஸைப் படித்துப் பார்த்தால், அந்த “தாமஸ் கட்டுக்கதை”யை விட படு அபத்தமாக இருக்கிறது. “தமிழ்” பெயரை வைத்துக் கொண்டு இந்த ஆள் செய்யும் கலாட்டாவில் பல இந்துக்களும் ஏமாந்துள்ளனர்[1]. நக்கிரனின் “மாட்டிறைச்சி மாமி நான்” என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது[2].

வேதபிரகாஷ்

24-10-2012


[1] “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் தேவையில்லாமல், இந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்துக்கள் எழுதியிருப்பது ஒரு தகவல். அது மட்டுமல்லாது, முன்பு, தருமபுர ஆதீனத்தில் இந்த ஆளுக்கு கூட்டத்தை நடத்தி, அதில் இவர் சொன்னதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டியப்பிறகுக் கூட, அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிய பிறகும் கூட, சில சைவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

[2]முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.

http://www.periyarthalam.com/2012/01/13/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம் – கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாட்கன் ஊடகங்கள்!

பிப்ரவரி 24, 2012

மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம் – கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாட்கன் ஊடகங்கள்!

கிருத்துவ மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம்: “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்பது வாடிகனின் ஊடகப்பிரிவில், உலகம் முழுவதும் செய்திகளை வெளியிடும் பிரிவாகும். வாடிகனிலிருந்து வெளியிடுவதால், அதிகாரப்பூர்வமாக அது கருதப்படுகிறது. ஜியார்ஜ் மார் அலென்சேரி வாடிகனுக்கு கேரள கிருத்துவ அமைச்சர்களுடன், கார்டினல் பதவியேற்க வந்தார். அந்நிலையில், இரு கிருத்துவ மீனவர்கள் இத்தாலிய கப்பல் ஊழியர்களால் கொல்லப்பட்டதால், பிரச்சினையாகியது. வாடிகனைப் பொறுத்த வரையிலும், இந்தியாவில் எது நடந்தாலும் சந்தோஷம் தான், அதாவது, குறிப்பாக கிறித்துவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் “மதத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள்” என்று செய்திகளைத் திரித்து வெளியிடுவதில் வல்லவர்கள்.

கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாடிகன் ஊடகங்கள்!: ஆனால், இங்கு கொல்லப்பட்டவர்கள், கொன்றவர்கள் எல்லோருமே கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்றதும், முன்னுக்கு முரணான செய்திகள், நிலைமை, பேச்சுகள் என்று வர ஆரம்பித்தன. முதலில் வாடிகன் சார்பாக புதியதாக தேர்ந்தெடுக்கப் பட்ட கார்டினல் சுமுகமாகப் பேசி விஷயத்தை அமுக்கிவிடுவார் என்ற கோணத்தில் செய்தியை வெளியிட்டது. ஆனால், அது சாதகமாக இருக்காது என்றதும், அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து விட்டு, நீக்கி, மாற்றி, வேறுவிதமாக வெளியிட்டுள்ளது[1]. உடனே, “தி ஹிந்து” அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. ராமின் மனைவி, மிரியம் சாண்டி ஒரு கத்தோலிக்கப் பெண்மணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, முன்னர் ராம் பிரத்யேகமாக, கத்தோலிக்க பிஷப் மாநாட்டிற்கு வரவேற்க்கப் பட்டு, அங்கு ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, ஒருவேளை ராம் கிருத்துவராகி விட்டார் போலும்!

வாடிகன் வெளியிட்ட செய்திகள்: 20-02-2012, 21-02-2012, மற்றும் 23-02-2012 அன்று வெளியிடப்பட்ட வாடிகன் செய்திகள் இதோ:

2012-02-20

ASIA/INDIA – “Enrica Lexie” case: the two fishermen killed are Christians, the community wants justice[2]

Kollam (Agenzia Fides) – “The two fishermen killed in the incident where Italian soldiers are involved were both Christians from Moothakara. The family of one of them lives in our diocese of Quilon. With Bishop, Mgr. Stanley Roman, we went to give the family our condolences, overwhelmed with grief. It is a tragedy for our small community, where fishing is the primary means of subsistence ” says to Fides Fr. John Jerry Issac, Chancellor of the Diocese of Quilon, the ancient name of Kollam. The incident happened off the coast of the port of Kollam on February 15 where the Italian oil tanker “Enrica Lexie” and the two Italian soldiers on board were involved, accused of killing two local fishermen on a fishing boat, mistaking them for pirates. The two who were killed were Ajesh Binki 25 and Jalastein 45, both natives of Tamil Nadu but residing in Kerala. Kerala is the Indian state with the highest percentage of Catholics (more than 20%) and is home of the new Indian Cardinal, His Exc. George Alencherry Em, as well as the heart of the Catholic community of the Syro-Malabar Church.

Fr. Issac told Fides that “the community is very upset, because this is not the first incident in which local fishermen have been victims: victims in several cases in recent months of large commercial vessels. This is why public opinion expresses its strong demand for justice to the civil authorities. One does not want this episode to remain unpanished”. On the other hand, notes the priest, “in front of our coasts piracy is widespread: it is much more elsewhere.”

Fr. Issac emphasizes a danger: “There is a risk, on the other hand, that some political leaders want to exploit the incident for propaganda purposes, given that in the coming months there will be elections in the state. As a local Church, we hope all the procedures are carried out within the respect of the law and justice, to render good service to the truth”. (PA) (Agenzia Fides 20/2/2012)

2012-02-21

ASIA/INDIA – The murder of the fishermen in Kerala seen as a “national outrage”, but “religion has nothing to do with it”[3]

 invia articolo  printable version  preferiti

Cochin (Agenzia Fides) – The death of two innocent Indian fishermen took place off the coast of Kerala on February 15, the accident with an Italian oil tanker, is considered a “national outrage”, but this story should “hold off nationalism and religion, to ensure truth and justice”: is what brother Raphael Paliakkara, OFM Cap, Provincial Minister of the Capuchin Monks of the Province of St. Thomas the Apostle said to Fides, based in Cochin.
The Friar tells Fides what the atmosphere in Cochin is like: “People are pretty angry, but it is also stirred up by the media and politicians. The problem in public opinion is that this murder was seen as a national outrage. In any case it seems that the public outcry is decreasing. The fishermen killed were Catholics and the Catholic community feels touched. But this story has nothing to do with religion, one must not stimulate nationalism or religious sentiments. The only thing we hope is that the Church can bring a word of peace. I think that, after questioning, the case can be clarified and the Italian soldiers can be freed. It is only a matter of justice.”
The Friar reminds Fides that there are several dioceses, schools and Catholic groups, like the Franciscans, who are engaged in pastoral care of the fishing communities in the ‘”AOS”- Apostolate of the Sea . Fishermen, he underlines ” earn a living from the sea, in a daily life full of dangers, going to sea for weeks.”
In Kerala, the fishing industry occupies an important place in the economy. Its share in the domestic production of marine fish touches 25%. There are over 100,000 people involved in fishing in Indian territorial waters and nearly 350,000 fishermen are engaged in fishing operations off the territorial waters. The coast of Kerala is 590 km long, includes nine ports with an extensive fishing activity and 17 major sorting centers of fish. In 2010-2011, the export earnings of fish and seafood from Kerala exceeded $ 2.8 billion. (PA) (Agenzia Fides 21/2/2012)

2012-02-22

ASIA/INDIA-Fishermen killed in Kerala: Cardinal Alencherry defends “truth and justice”[4]

invia articolo  printable version  preferiti

Rome (Agenzia Fides) – “Truth and Justice” on the case of the fishermen killed in Kerala on February 15: this is what Cardinal George Alencherry, Major Archbishop of the Syro-malabrese Church, based in Kerala asks for in an interview with Fides.
The Cardinal today released the following statement to Fides: “I would like to precise my views reported by the news agency “Fides” regarding the incident in which two fishermen were killed in the sea. This event has to be investigated and if there is a culpable action it has to be dealt with legally and the culprits have to be punished. Truth and justice have to be established. What I said the other day parenthetically was that this event shall not become a cause for conflicts and enemity in the communities and between nations. I have no intention to take a mediatory role in the setting of this matter”. (PA) (Agenzia Fides 22/2/2012)

கார்டினல் வாடிகனின் மத்தியஸ்தராக செயல்படுகிறாரா? கார்டினல் ஜியார்ஜ் மார் அலென்சேரியின் தலையீடு கிருத்துவர்களின் இரட்டை வேடம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் குணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. கொல்லப்பட்ட மீனவர்களில் கூட மதத்தைப் பார்த்து வேலை செய்யும் போக்கைக் காணும் போது, அவர்களின் மத-அடிப்படைவாத பாரபட்ச போக்கும் வெளிப்படுகிறது. “நான் கத்தோலிக்க அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளேன். அவர்கள் இந்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக கே.வி. தாமஸ் கத்தோலிக்க கார்டினகளுக்கு நடந்த வழிப்பாடு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் அவர் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளார். ஆதலால், அவர் மிகுந்த முயற்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்”, என்றெல்லாம் அந்த கத்தோலிக்க கார்டினல் கூறியிருந்தார்[5]. லத்தீன் கத்தோலிக்கர்களும், மீனவர்களும் கிருத்துவர்கள் என்றாலும், கார்டினலின் இத்தகைய பேச்சு, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்[6]. பிறகு, “நான் அப்படி சொல்லவில்லை, பிரச்சினை சுமூகமாக முடியும் என்றுதான் சொன்னேன், ஆனால், வாடிகன் தரப்பில் மத்தியஸ்த்தம் செய்ய தான் ஈடுபடவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[7]. உடனே “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, கார்டினல் மாற்றிச் சொன்னதை வெளியிட்டுள்ளது[8]. ஆகவே –

  • ஒன்று அவர் பாதி உண்மையை சொல்லியிருக்க வேண்டும்
  • அல்லது பாதி பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • ஒன்று அவர் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது வாடிகன் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
  • இல்லை வாடிகன் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;

எது எப்படியாகிலும், பொய் சொல்வதில் கிருத்துவர்கள் போப் வரையில் கூட வல்லவர்கள் என்று தெரிகிறது.

வாடிகன் இந்திய சட்டத்துறையில், நீதிமன்ற வழக்குகளில் தலையிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டே கொலையாளிகளுக்கு “உயர்வான தண்டனை” கொடுக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து என்ன என்று புரியவில்லை:   கேரள கத்தோலிக்க பிஷப் பேரவை கொலைகாரக் கிருத்துவர்களுக்கு “உயர்வான தண்டனை” (exemplary punishment) அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது[9]. “உயர்வான தண்டனை” என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் “விடுதலை” என்பதுதான் என்பது தெரிந்த விஷயம். பிறகு முன்னமே எடுத்துக் காட்டியபடி, கொலையுண்டவர்கள் “கிருத்துவ மதத்திற்காக உயிர்த் தியாகம் செய்த போராளிகள்” என்று பட்டம் கொடுக்கப் பட்டு, திருட்டுத்தனமான, பொய்யான சரித்திரம் எழுதப்படும். திருவனந்தபுரம் ஆர்ச்-பிஷப்போ, “வாடிகன் இந்திய நீதித்துறையில் தலையிடுகிறது என்பது தவறான விஷயம் ஆகும். கார்டினல் சொன்னதை சற்று மிகுதிபடுத்தப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன, அவ்வளவே”, என்று சப்பைக் கட்டியுள்ளார்[10]. ஆனால், கொலையுண்ட மீனவரின் மனைவி தோரம்மா என்பவர், கார்டினல் கொலையாளிகளுக்கு சாதகமாக வேலை செய்ட்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[11].

சோனியா மெய்னோ கிருத்துவர்களுக்கு உதவி வரும் நிலை: கிருத்துவர்களுக்கு சோமினா மெய்னோ என்ற கத்தோலிக்கர் அதிகாரத்தில் உள்ளார், இந்தியாவை மறைமுகமாக ஆண்டு வருகிறார் என்பது நன்றாகவேத் தெரியும். அதனால்தான், அவர்கள் அந்த அளவிற்கு அதிகமான சட்டமீறல்கள், குற்றங்கள் செய்து வருகிறார்கள்.

  1. மும்பை வெடிகுண்டு 26/11 வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு கிருத்துவப் பாதிரியை, அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திரும்ப அழைத்துக் கொண்டது.
  2. அமெரிக்க ஜிஹாத் – இஸ்லாமியத் தீவிரவாதத்தை மறைக்க, தாவூத் ஜிலானி என்ற முக்கிய தீவிரவாதியை, டேவிட் கோல்மென் ஹெட்லி என்ற பெயரில் குறிப்பிட்டு மறைத்து வருகிறது.
  3. ஒசாமா பின் லேடனை வளர்த்தது மாதிரி, தாவூத் ஜிலானியை ஏஜென்டாக வேலைக்கு வைத்துக் கொண்டது அமெரிக்கா.
  4. மெட்டாலிக்கா பாதிரி கைது செய்யப் பட்டும், அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது கேரளா போலீசார்.
  5. ஓசூரில் டோரதி வாட்ஸ் தம்பதியினர் அடாவடியில் ஈடுபட்டு, நீதிபதியால் நாடுகடத்தியபோது, நேராக சோனியா காந்தியை சந்தித்து பேசி, ஏதோ ஒன்றும் குற்றமே செய்யாதவர்கள் போன்று காண்பித்துக் கொண்டு சென்று விட்டனர்.
  6. இது போன்று ஆயிரக்கணக்கான பாதிரிகள், மதப்பிரசாரகர்கள் இந்தியாவில் (வககிழக்கு மாநிலங்கள், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா முதலியன) அப்படியே தங்கி விடுகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

 

வேதபிரகாஷ்

23-02-2012


[1] Cardinal Mar Alencherry, who is Major Archbishop of the Syro-Malabar Church, said that Fides, the information service of the Pontifical Mission Societies, had withdrawn its version of the interview with him and put out a new report.

http://www.thehindu.com/news/states/kerala/article2920951.ece

[5] “I am and will remain in close contact with the Catholic ministers of Kerala and I hope that they will help to pacify the situation. In particular, I trust in the work of the Tourism Minister, the Catholic KV Thomas, who participated in the consistory in Rome in past days and attended the mass with the Holy Father and the new cardinals: he is a man of great moral stature and of significant influence, both in the local and central government, and he assured me his maximum effort. I guarantee, in the next few days, my constant involvement with the Indian authorities on the matter”.

http://www.firstpost.com/india/why-is-keralas-newest-cardinal-batting-for-italian-killers-221271.html

[6] This controversy is likely to amplify the socio-political divide between the two communities, although both are Catholics.

[9] In a statement in Kochi, the Kerala Catholic Bishops Council (KCBC) also sought to clear the air, saying that the Italian marines should be given exemplary punishment within the Indian legal system.

[10] Metropolitan Archbishop of the Latin Archdiocese of Thiruvananthapuram Susai Pakiam said that there was no question of the Vatican interfering with the Indian legal processes or its being allowed to do so. The Cardinal’s reported statement was blown out of proportion, he felt.

[11] Doramma, wife of Valentine, one of the two fishermen shot dead by the marines, feared that high-level attempts were on to whisk the ship away from Kochi. Her son said the Cardinal seemed to be taking sides with his father’s killers

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)

ஜனவரி 1, 2012

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (2)


இந்தியாவில் இருந்து கொண்டு, ஆங்கில நாளிதழுக்கு திரித்து செய்திகளைக் கொடுத்து வெளியிடும் போக்கு: “தி டெலிகிராப்” என்ற இங்கிலாந்து நாளிதழில், டீன் நெல்சன் என்ற, புது தில்லியைச் சேர்ந்த நிருபர் தான் அவ்வாறான, செய்தியை வெளியிட்டிருந்தார்[1].

The Indian preacher and the fake orphan scandal

An Indian missionary charity falsely portrayed young Buddhist girls from Nepal as “orphans” of murdered Christians in a global fund-raising operation involving British and American churches.

தல் பஹதூர் பதேரா என்ற நேபாளி தான் அவ்வாறு குழந்தைகளை தவறாக, ஜாபின் அனாதை இல்லத்திற்கு விற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, டீன் நெல்சன் எழுதியுள்ளார். ஆனால், நேபாளத்தில், கிருத்துவ மிஷனரிகள் தாம் தங்களை ஏமாற்றி, குழந்தைகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். எஸ்தர் பெஞ்சமின் நினைவு அமைப்பு [Esther Benjamins Memorial Foundation (EBMF)] என்ற நேபாள அரசு-சாரா நிறுவனம்[2] கொடுத்த தகவலின் படி, மாநில சமூதத்துறை, போலீஸ் உதவியுடன், கோயம்புத்தூரில் உள்ள பி.பி.ஜாப் அனாதை இல்லத்தை ரெயிட் செய்த போது, 23 நேபாள சிறுமிகளை கண்டு பிடித்து காப்பாற்றினர். 40 சிறுமிகள் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது[3]. கோவை அருகே, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த, நேபாள சிறுமியர் 23 பேர் மீட்கப்பட்டதன் பின்னணி குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை: சூலூர், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில், 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில், 23 சிறுமியர் நேபாள நாட்டைச் சேசர்ந்தவர்கள் என்றும், அறக்கட்டளை ஒன்றின் மூலமாக, இவர்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாகவும்[4], மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது[5]. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை நடத்திய மாவட்ட நிர்வாகம், நேபாளத்தைச் சேசர்ந்த 23 சிறுமியரை மீட்டு பீளமேடு, காந்திமாநகரில் உள்ள, அரசு பெண்கள் மற்றும் குழுந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது.

   


சிறுமிகளை அலைக்கழித்த விதம் சந்தேகத்தை எழுப்பியது: கோவையில் மீட்கப்பட்ட நேபாள சிறுமிகள் 23 பேர் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக இடம் மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். ÷கோவை மாவட்டம், சூலூரில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கான மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருந்த 23 நேபாள சிறுமிகள் மீட்கப்பட்டனர். லண்டனில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், நேபாளத்தில் உள்ள தன்னார்வ நிறுவனம் ஒன்று இந்தச் சிறுமிகளை மீட்டுள்ளது. கோவையில் உள்ள குழந்தைகள் நல கமிட்டி மற்றும் வருவாய்த்துறை உதவியுடன் சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனிடையே நேபாளத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்திடம் சிறுமிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது[6]. ஆனால், நேபாள நாட்டு தூதரகத்தின் மூலம் சிறுமிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேபாள சிறுமிகள் கணபதி மாநகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஆகியவை சரியில்லை என்று கூறப்படுகிறது. அங்கு நேபாள சிறுமிகள் யாரும் சாப்பிடாமல் இருந்தனர். ÷இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை, கணபதி- அத்திபாளையத்தில் உள்ள ஒரு தன்னார்வ நிறுவனத்துக்கு அனைவரும் மாற்றப்பட்டனர். நேபாள சிறுமிகள் 23 பேரும் தொடர்ந்து ஒவ்வொரு காப்பகமாக மாற்றி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

விதிகளை-சட்டத்தை மீறி செயல்பட்ட ஜாபின் அனாதை இல்லம்: அனுமதி இல்லாமலே அந்த அனாதை இல்லம் நடப்பதோடு, எத்தனை சிறுமிகள் உள்ளார்கள், போன்ற விவரங்கள், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதனையும் கண்டு பிடிக்கப் பட்டது. போதிய அவகாசம் கொடுத்தும், அவர்களால், எந்த ஆவணத்தையும் காண்பிக்க முடியவில்லை[7]. நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தொல்லைத் தாங்காமல் தான், சிறுமிகளை அவ்வாறு விற்று விடுகிறார்கள் அல்லது இந்தியாவிற்கு அனுப்பி விடுகிறார்கள், அவர்களுக்கு வாழ்வு கொடுக்கத்தான், நாங்கள் அனாதை இல்லத்தில் சேர்க்கிறோம் என்று கிருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள், பிறகு விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இதுவரை (நவம்பர் மாதம் வரை), 43 சிறுமிகள், அவர்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார்கள்[8].

   

கிருத்துவ பெயர்களில் இந்து சிறுமிகள் சேர்ப்பு: உண்மையில் மாவோயிஸ்ட்டுகளின் கொடுமைகளினின்று தப்பிக்கத்தான் பெற்றோர்கள் ரூ.20,000/- வரை பணத்தையும் கொடுத்து, பெற்றோகள் அனுப்பியுள்ளார்கள்[9]. ஆனால், அவர்களுக்கு கிருத்துவ அனாதை இல்லங்களில் அத்தகைய குற்றங்கள் நடப்பதை அறியவில்லை[10]. இந்து சிறுமிகளுக்கு கிருத்துவ பெயர்கள் வைக்கப் பட்டு[11], அவ்வாறு சேவை செய்கிறோம் என்று அந்நிய நாடுகளிடமிருந்து, நிதிகளையும் பெற்று வருகிறார்கள்[12]. ஆனால், அப்பணத்தை வைத்துக் கொண்டு தான், மதமாற்றம் போன்ற வேலைகளை கிருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

  • உண்மையிலேயே சேவை செய்கிறார்கள் என்றால், இரண்டு வழிகளிலும் பணத்தை ஏன் பெறுகிறார்கள்?
  • இந்து பெயர்களை ஏன் மாற்றுகிறார்கள்?
  • கிருத்துவர்கள், அவர்களை மதம் மாற்றியுள்ளோம் என்று சொல்லி ஏன் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்குறார்கள்?
  • இவ்வளவையும் செய்து விட்டு, அவர்கள் இருப்பதை ஏன் ஆவணங்களில் பதிவு செய்யாமல் மறைக்கிறார்கள்?
  • செக்ஸ்-டூரிஸம், எம்.எம்.சி கம்பெனிகளுக்கு ஏன் அனுப்பி வைக்கிறார்கள்?
  • ஒரு அனாதை இல்லத்திலிருந்து மறு அனாதை இல்லத்திற்கு ஏன் அனுப்பி வைக்கப் படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், கிருத்துவர்கள் தங்களுடைய பணம், அதிகாரம்,

An anti-trafficking charity run by Lt Col Philip Holmes, a retired British Army officer, assisted Indian officials in a raid on the Coimbatore centre last month, when 23 children were rescued.His group, the Esther Benjamins Trust, discovered that none of the children were from Christian families, very few were, in fact, orphans and some of the girls had been kept apart from their families for up to 10 years. Among those rescued were six girls from one extended Buddhist family in Humla district in northern Nepal who were all renamed on their first day at the Michael Job Centre.

அரசியல் செல்வாக்குகளினால், அனைவற்றையும் மூடி மறைக்கிறர்கள். மேலும், மாவோயிஸ்ட்டுகளுக்கும், கிருத்துவர்களுக்கும் அதிகமாகவே தொடர்புகள் உள்ளன. கந்தமாலில் 90 வயது இந்திய சாமியாரை மற்ற அப்பாவி சாதுக்களுடன் கிருத்துவர்கள் திட்டமிட்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று படுகொலை செய்தபோது, அவ்விவரங்கள் அதிகமாக வெளி வந்தன. கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே கிருத்துவர்கள். இதனால், கலவரம் ஏற்பட்டது. ஆனால், உண்மையை மறைக்க, அந்த கிருத்துவர்கள் எல்லோரும் “மாவோயிஸ்ட்டுகள்” என்று முத்திரைக் குத்தி, திசைத்திருப்ப முயன்றனர். பிறகு ஒரு கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று கதையைக் கட்டி விட்டனர். ஆனால், இன்றும் வழக்கு நடந்து வருகிறது, அதில் கன்னியாஸ்திரியையே மாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, கற்பழிக்கப்பட்டவள் என்ற கன்னியாஸ்திரி சோதனையிட்டபோது, அவள் கற்பழிக்கப் படவில்லை என்று சோதனை முடிவில் தெரிந்தவுடன், கன்னியயஸ்ட் ஹிரியையே மாற்றி விட்டனராம். இதை பி.பி.ஜாபின் இணைத்தளமே சான்றாக, வக்காலத்து வாங்கிக் கொண்டு வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று (30-12-2011) இத்தளம் வேலை செய்யவில்லை[13].

குழந்தை கடத்தல் என்றாகிய விவகாரம்: கோவை மாவட்டம், சூலூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட, நேபாளத்தை சேர்ந்த 23 சிறுமியர், நேற்று ரயில் மூலம் கோரக்பூர் புறப்பட்டனர். நேபாளத்தை சேர்ந்த சிறுமியர் பலர், சூலூரில் செயல்படும் மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருப்பதாக, புகார் எழுந்தது. “அனாதைகள்’ என்று தவறான தகவலைக்கூறி, சிறுமியரை இந்தியாவுக்கு கடத்தி வந்து விட்டதாகவும், உண்மையில் அவர்களது பெற்றோர் நேபாளத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து வந்த தொண்டு நிறுவனத்தினர் கூறினர். இதையடுத்து, கோவை கலெக்டர் கருணாகரன் தலைமையில், ஆர்.டி.ஓ., சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, காப்பகத்தில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த 23 சிறுமியரை மீட்டனர். அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. “கோவையில் இருந்து, சிறுமியரை உ.பி., மாநிலம் கோரக்பூர் அனுப்பு வது’ என்றும், “அந்த மாவட்ட கலெக்டர் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பது’ என்றும், முடிவு செய்யப்பட்டது. “”சிறுமியர் 23 பேரும், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று பகல் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டனர். அவர்களுடன், போலீசார் எட்டு பேரும், சமூக பாதுகாப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் இருவரும் செல்கின்றனர்,” என்று கோவை ஆர்.டி.ஓ., சாந்தகுமார் தெரிவித்தார். நேபாளத்தில் இருந்து சிறுமியரை தேடி வந்த தொண்டு நிறுவனத்தினரும் உடன் செல்கின்றனர்[14].

பத்துவருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர்: சுமார் பத்து-பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் சிறுமிகள், இப்பொழுது வயது வந்த இளைஞிகள் பெற்றொரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தங்களது துயரங்களை

Sabita Kadel, 14, from Nawalparasi has finally came back home after five years of living as an orphan in Michael Job Centre in Coimbatore in India. After the rescue, her aunt Mina Paudel came to receive her in Kathmandu.”I can’t explain my happiness. For five years, I looked all over for her, two years ago I travelled to Coimbatore but I was humiliated at the Centre and they refused to give me back my daughter.”

They did not even let Mina talk to Sabita over the phone for all these years. In the Centre’s newsletter, Tortured For Christ, July 2009 issue, Sabita aka Fay has been mentioned as the child of a murdered Christian mother whose other relatives were also slaughtered in a killing rampage by Maoists.

வெளியிட்டு உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். இணைதளத்திலேயே, அப்பெண்களிம் புகைப்படங்களை வெளியிட்டதில் தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இப்பொழுது, அத்தளத்தையே மூடிவிட்டனர் என்பதிலிருந்து, அவர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்[15]. ஏனென்றால், அநியாயமாக அப்பெண்கள் எல்லோரும், உயிர்தியாகம் செய்த கிருத்துவர்களின் பெண்கள் / அனாதைகள் என்று இணைத்தளத்தில் அறிவித்து பணத்தை வசூல் செய்துள்ளனராம். அதுமட்டுமல்லாது, எங்கே உண்மையை அறிந்து வெளியே சொல்லிவிடுவார்களோ என்று, அவர்களை பூட்டியும் வைத்துள்ளனராம். மீனா பௌதல் என்ற பெண்மணி, தன்னுடைய மைத்துனியான, சபிதா காடில் (14 வயது) என்ற சிறுமியைப் பார்க்க கோயம்புத்தூருக்குச் சென்றிருந்த போது, பார்க்க விடாமல் தடுத்ததோடு, அவமானம் படுத்தினர் என்கிறார். கடந்த ஆண்டுகளில் தொலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு அனுப்பும் போது, எல்லா உத்திரவாதங்களையும் கொடுத்தனர் என்று அவர் விளக்கினார்.

   

உரிமைகள் பேசும் ஆர்வலர்கள் எங்கே இருக்கிறார்கள்? மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சிறுமியர் உரிமைகள், என்றெல்லாம் வாய் கிழிய பேசுபவர்கள், கொடி பிடிப்பவர்கள் இவ்வளவு நடந்தும் எதுவும் பேசாமல், எந்த போராட்டமும் நடத்தாமல், எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருப்பதைக் காணும் போது, அவர்களது தார்மீகத்தை நினைத்து உடம்பு சிலிர்க்கத்தான் செய்கிறது.

வேதபிரகாஷ்

30-12-2011


[2] இந்நிறுவனம் 2004கிலும், இதே போல சிறுமிகளைக் காபாற்றியுள்ளது:

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1461314/Nepal-children-sold-into-a-life-of-slavery-and-abuse-in-Indian-circuses.html

[10] “Poor countries are turning into a missionary haven for religious zealots and this has led to a new form of trafficking,” says Philip Holmes of Esther Benjamins Memorial Foundation. The girls are now on their way home by train via Gorakhpur.

[11] In one of the pages of the website was where we first saw pictures of Anna Bella, Daniela, Persius and Jael (Christian names given by the centre, original names withheld).

[12] The charity Love in Action raised around £18,000 for the Michael Job Centre between 2007 and 2010, but Tom Reeves, churchwarden at St Mary’s, declined to comment on whether he and his colleagues had been duped.

[13] Dr Jobs Mission – This site is down for maintenance. Please check back again soon.

http://www.drjobsmission.org/home/

[15] There is not a shred of doubt that the Humla girls were trafficked to India to make money for the Michael Job Centre. The people who have objected to their children being embarrassed in public by the rescue might do well to remember that their girls were being advertised globally as orphans in the centre’s website. The images and profiles of the girls were displayed online for sponsors to choose from. The centre has removed its website after being exposed. (See archived webpage of the centre)

http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/ThisIsIt/18594