பாஸ்டர்ஜோயல்ஓஸ்டீன்லேக்வுட்சர்ச்: அமெரிக்காவில் தனிமனிதர்கள் சர்ச்சுகளை ஆரம்பித்து நடத்துவதும், அவற்றில் அவ்வூர் மக்கள் உறுப்பினர்களாகி, செயல்பட்டு வருவதும் தெரிந்த விசயமே. அமெரிக்காவில் இது ஒரு பெரிய வியாபாரம் எனலாம். பொதுவாக அவர்கள் கத்தோலிக்கப் பிரிவு இல்லாதவர்களாக இருப்பார்கள். இவ்வாறு உருவாக்கப் பட்ட, அமெரிக்காவின் ஹூஸ்டன் [Osteen] நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் [pastor Joel Osteen’s Lakewood church[1]] என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது[2]. 1950ல் ஓஸ்டீனின் தந்தையால் ஆரம்பிக்கப் பட்ட சர்ச் ஆகும்[3]. இந்த ஆலயம் நகரில், மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது[4]. நகரில் 6 மைல்கள் பரப்பளவில் அமைந்த மிக பெரிய ஆலயமும் ஆகும்[5]. இதற்கு தனி கட்டிடம், தொலைகாட்சி, என்று எல்லா வசதிகளும் இருக்கின்றன. கோடானு கோடிகளில் நிதியும் பெற்று வருகின்றது. பல சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக, சர்ச்சின் இணைதளம் கூருகிறது.
பலதரப்பட்டஅமெரிக்கமக்களின்பிரச்சினைகள்: யு.எஸ் & மெக்ஸிகோ எல்லையில் குடும்பங்களுக்கு சேவை செய்யும் புலம்பெயர்ந்த தலைவர்களுடன் பணிபுரிதல். எல்லையோர சமூகத்தினருக்கான வாழ்க்கையின் தனித்துவமான அம்சங்களுக்கு குழு அறிமுகப்படுத்தப்படும் மற்றும் கலாச்சார தடைகள் மூலம் வழிகாட்டுதல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தெற்கில், தொடர்ந்து அமெரிக்காவில் மற்றநாட்டவர் உள்ளே நுழைவது சாதாரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. ஏற்கெனவே, அமெரிக்க பூர்வீக மக்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், அமெரிக்க பூர்வீகக் குடிகளான, செவ்விந்தியர்களுக்கு அரசாங்க வேலை, ஆட்சி அதிகாரம் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. ஆப்பிரிக்க மக்கள் இருக்கும் நிலையில் கூட செவ்விந்தியர்கள் இல்லை. அந்நிலையில், மத்திய-தெ அமெரிக்க நாடுகளிலிருந்து, அமெரிக்காவுக்கு வரும் அகதிகளால், அத்தகைய வேறுபாடு அதிகமாக்கும் நிலையும் உள்ளது.
11-02-2024 அன்றுசர்ச்சில்நடந்ததுப்பாக்கிச்சூடு, கொலை: அத்தோலிக்கர் அல்லாத சர்ச்சுகள், ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமாக ஆர்பாட்டத்துடன் நிகழ்சிகளை நடத்துவது சாதாரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் அது, விடுமுறை கொண்டாட்டம் போன்றது. அதனால், குடும்ப்த்துடன் கலந்து கொள்வார்கள். அதிகாளவில் கூட்டமும் இருக்கும். ஆக, இங்கும் அத்தகைய நிலை தான் இருந்தது. இந்நிலையில், 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆலயத்திற்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஆண் குழந்தை ஒன்றுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார்[6]. அவர், ஆலயத்தில் நுழைந்ததும் துப்பாக்கியால் சுட தொடங்கினார்[7]. அதாவது, அப்பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறான பீதியை உண்டாக்க வேண்டும் என்ற ரீதியில் தான் திட்டத்துடன் வந்து காரியத்தைச் செய்திருக்கிறாள். இதனால் பிரார்த்தனைக்காக கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்[8].
பாதுகாப்புபோலீசார்உடனடியாகஅப்பெண்ணைச்சுட்டது: இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார், அதனை கவனித்து, உடனடியாக அவரை நோக்கி சுட்டனர்[9]. உழந்தையுடன் இருந்ததால், ஜாக்கிரதையாகத்தான் செயல்பட்டிருக்கின்றனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார்[10]. அவருடைய கையில் இருந்த 5 வயது கொண்ட குழந்தைக்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது[11]. உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்[12]. இதேபோன்று 57 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்[13]. பாதுகாவலர் உடனடியாக, அப்பெண்ணைச் சுட்டுக் கொன்றதால், பலர் உயிர்களுக்கும் அபாயம் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்படவிருக்கும் அசம்பாவிதம் முதலியன தடுக்கப் பட்டன எனலாம். அந்த பெண் யார், அவளுக்கு, இந்த சர்ச்சுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக சுடுவதற்கும் ஹயாராக துபாக்கியுடன் நுழைந்தாள் போன்ற விவரங்கள் தெரியவில்லை.போலீசாரும் இசாரிப்பதாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.
பாலஸ்தீன ஸ்டிக்கர் ஒட்டப் பட்ட துப்பாக்கி: இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரியான பின்னர் என்பவர் கூறும்போது[14], சம்பவ பகுதியிலேயே அந்த பெண் மரணமடைந்து உள்ளார். குழந்தையை சுட்டது யார் என தெரியவில்லை. ஆண் நபரையும் துப்பாக்கியால் சுட்டது யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இந்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரிய வரவில்லை. குழந்தைக்கும், அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட AR-15 ஐப் பயன்படுத்தி அதில் “பாலஸ்தீனம்” ஸ்டிக்கரைப் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு கூட்டாட்சி சட்ட அமலாக்க ஆதாரம் முன்பு CNN இடம் துப்பாக்கியில் “ஃப்ரீ பாலஸ்தீனம்” என்று எழுதப்பட்டிருந்தது. அவளது பையில் .22 காலிபர் ஆயுதமும் இருந்தது, அது தாக்குதலில் பயன்படுத்தப்படவில்லை என்று மத்திய சட்ட அமலாக்க வட்டாரம் தெரிவித்துள்ளது. புலனாய்வாளர்கள் அவர் அரசியல் உள்நோக்கம் கொண்டவரா அல்லது மன உளைச்சலுக்கு ஆளான நபரா என்பதை கண்டறிய முயன்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடுநடத்தியவர்கிரிமினல்குற்றச்சாட்டுகள்மற்றும்மனநலப்பிரச்சினைகளின்வரலாற்றைக்கொண்டிருந்தார்[15]: மோரேனோவின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தகவல்கள், மனநல சவால்களின் வரலாற்றைக் கொண்ட ஒரு தாயின் உருவப்படத்தை எடுத்துக் காட்டுகின்றன[16]. ஒரு திங்கட்கிழமை செய்தி மாநாட்டின் போது, ஹூஸ்டன் படுகொலைத் தளபதி கிறிஸ்டோபர் ஹாசிக், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆண் மற்றும் பெண் பெயர்கள் உட்பட பல மாற்றுப்பெயர்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார். மோரேனோ 2016 இல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், காவலில் வைக்கப்பட்டார், மேலும் ஹூஸ்டன் காவல்துறையால் ஆவணப்படுத்தப்பட்ட மனநல வரலாறு அவருக்கு உள்ளது என்று ஹாசிக் கூறினார். டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பதிவுகள், கடந்த இரண்டு தசாப்தங்களாக மரிஜுவானா, தாக்குதல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், கைது மற்றும் போலிக் குற்றச்சாட்டு உள்ளிட்ட சிறு குற்றங்களுக்காக மொரேனோ கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனது 30 வயதில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதிச் சேவை நிறுவனத்தை நிறுவியவர் என்று சமூக ஊடகங்களில் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். சமூக ஊடக பக்கங்களில் தனது சொந்த கணக்கின் மூலம், அவர் புதிய குடியிருப்புகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்தின் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். மார்ச் 2020 இல் ஒரு சமூக ஊடக இடுகை, மொரேனோவின் நன்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் லேக்வுட் தேவாலயத்தின் படிவக் கடிதத்தின் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டுகிறது. தவிர, தனது கணவனையும் துன்புருத்தி வருவதாகத் தெரிகிறது ஏனெனில், அவளது கணவர் அத்தகையப் புகாரைக் கொடுத்துள்ளார்..
[2] தினத்தந்தி, அமெரிக்கா: சர்ச்சில்துப்பாக்கிசூடுநடத்தியமர்மபெண்சுட்டுகொலை, தினத்தந்தி பிப்ரவரி 12, 7:25 am (Updated: பிப்ரவரி 12, 2:11 pm).
[3] Its origins were humble. In fact, the first meeting of Lakewood Church was held in a converted feed store on the outskirts of Houston on Mother’s Day, 1959. A caring atmosphere, quality leadership, and community outreach attracted people from all ages, religious backgrounds, races, and walks of life. https://www.lakewoodchurch.com/about/history
[11] Indian TV News, Texas: Woman accompanied by five-year-old boy opens fire at church killed, two injured, Edited By: Raju Kumar , @rajudelhi123, Houston, Updated on: February 12, 2024 8:18 IST
[15] CNN, Shooter at Houston megachurch had lengthy criminal history including weapons charges, police say, By Christina Maxouris, Lauren Mascarenhas and John Miller, Updated 12:46 AM EST, Tue February 13, 2024
பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!
கென்யாவில்பட்டினிவழிபாடுநடத்திஇறந்தவர்களின்எண்ணிக்கை 201 ஆகஅதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].
பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7]. அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8]. பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.
பலசடலங்களில்உள்ளுறுப்புகள்மாயமாகியுள்ளதாகவும்கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.
சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
உடல்உறுப்புகளைதிருடும்கும்பலின்தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.
[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.
விழிஞ்ஞம்துறைமுகம், கேரளகத்தோலிக்கசர்ச், மற்றும்தொடரும்வன்முறைகள் – பின்னணி என்ன? (3)
30க்கும்மேற்பட்டபோலீஸார்காயமடைந்தனர்: இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். காயமடைந்த போலீஸார், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக கத்தோலி்க்க பெரநகர ஆர்ச்பிஷப் தாமஸ் ஜே நெட்டோ மற்றும் பெரேரா உள்பட 15 பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சமரசப் பேச்சு மற்றும் அமைதியை நிலைநாட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நகர் காவல் ஆணையர், மாவட்ட போலீஸார் அதிகாரிகள், தேவாலய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் 28-11-2022 அன்றும் நடந்தது. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எம் ஆர் அஜித்குமார் கூறுகையில் “விழிஞ்சம்காவல்நிலையம்மீதுகும்பல்நடத்தியதாக்குதலில் 36 போலீஸார்காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமைமாலை, சிலரைவிடுவிக்கக்கோரி, அப்பகுதிமக்கள்போராட்டம்நடத்தினர், அதுவாக்குவாதமாகமாறிவன்முறையில்முடிந்தது. காவல்நிலையதுணைஆய்வாளருக்குஅறுவைசிகிச்சைசெய்யும்அளவுகாயம்ஏற்பட்டது, அந்தக்கும்பல்கற்கள், கம்பு, இரும்புகம்பிகளைக்கொண்டுதாக்கியுள்ளனர். காவலர்கள்தரப்பில்மக்களைஆத்திரமூட்டும்வகையில்ஏதும்பேசவில்லை. சட்டம்ஒழுங்கைநிலைநாட்டவேநடவடிக்கைஎடுத்தனர். அப்பகுதியில்கூட்டத்தைக்கலைக்ககுறைந்தஅளவுதடியடிநடத்தப்பட்டது. இந்ததாக்குதல்தொடர்பாகஅடையாளம்தெரியாதவர்கள்என்றஅடிப்படையில் 3ஆயிரம்பேர்மீதுபோலீஸார்வழக்குப்பதிவுசெய்துள்ளனர், ”எனத் தெரிவித்தார்.
கும்பல்கற்கள், கம்பு, இரும்புகம்பிகள்” எல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தன?: “கும்பல்கற்கள், கம்பு, இரும்புகம்பிகள்” எல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தன, யார்-எப்படி கொண்டு வந்தனர் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்யும். போலீஸார் விசாரிக்கும் போது, புலன் விசாரணை மேற்கொள்ளும் போது தெரியத்தான் போகிறது. இதனால் தான், வன்முறை எப்படி ஏற்பட்டது என்று ஆராய வேண்டியுள்ளது. சாதாரண மீனவர்களால் அத்தகைய தாக்குதல்களை நடத்த முடியும் என்றால், அவர்களுக்கு, யார் அவ்வாறு செய்ய சொன்னது? பிஷப், பாஸ்டர்கள் முதலியோர் தூண்டுதல்கள் மூலம் நடந்தது, என்றால், நிச்சயமாக அவர்கள் பொறுப்பாளர்கள் ஆகிறார்கள். இப்பொழுது, எப்.ஐ.ஆர்களும் அவ்வாறே பதிவு செய்யப் பட்டுள்ளன.
பாதிரிகள் வன்முறை போராட்டத்தை ஆதரித்துப் பேசுவது: பாதிரியார் எஜூனே பெரேரா கூறுகையில், “போலீசார்பிஷப்புகளையும்பாதிரியார்களையும்கிரிமினல்வழக்கில்கைதுசெய்துள்ளனர், மேலும்அவர்கள்போராட்டத்தில்பங்குகொள்ளாவிட்டாலும்அவர்கள்மீதுசதிகுற்றம்சாட்டியுள்ளனர். சனிக்கிழமைவன்முறைஅதானி (குழு) ஆட்களால்காவல்துறைமற்றும்பா.ஜ.க.,வின்துணையுடன்கட்டவிழ்த்துவிடப்பட்டது. இப்பிரச்னைக்குஅமைதியானதீர்வைநாங்கள்விரும்புகிறோம்………………மக்களுக்குஎந்தவிதஇடையூறும்இன்றிதான்போராட்டம்நடந்தது. இருப்பினும்எங்கள்பகுதிமக்களைபோலீஸார்கைதுசெய்துள்ளனர். இன்றும்அமைதிப்பேச்சுநடக்கிறது, அதிகாரிகளுடன்பேசிசமரசத்தையும், அமைதியையும்ஏற்படுத்துவோம்,” எனத் தெரிவித்தார்.இந்த சம்பவத்தால் விழிஞ்சம் பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், வன்முறை ஏற்படாமல்தடுக்கவும் கூடுதலாக 300 போலீஸார் அழைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிஷப்–பாஸ்டர்களின்பங்கு, போராட்டம், வன்முறை, வழக்குப்பதிவு: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்த ஒரு நாளுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபையின் திருவனந்தபுரம் பேராயத்தின் (லத்தீன் சடங்குகள்) பாதிரியார்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் ஞாயிற்றுக்கிழமை 27-11-2022 அன்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சபை உறுப்பினர்கள். வன்முறை தொடர்பாக பேராயர் தாமஸ் ஜே.நெட்டோ, துணை ஆயர் கிறிஸ்துதாஸ் மற்றும் விகார் ஜெனரல் யூஜின் பெரேரா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கத்தோலிக்க சர்ச் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது
விழிஞ்சம்சர்வதேசபல்நோக்குதுறைமுகமானதுரூ.7,525 கோடிமதிப்பீட்டில்உருவாக்கப்படுகிறது: விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகமானது ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 5, 2015 அன்று அதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. தற்போது 70% பணிகள் முடிவடைந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர், ஆனால் கடந்த சில மாதங்களாக மீனவர்களின் போராட்டங்களால் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 2,960 மீட்டர் நீளமுள்ள பிரேக்வாட்டரில், சுமார் 1,400 மீட்டர்கள் நீளத்திற்கு 30 லட்சம் டன் கிரானைட் பாறைகளைப் பயன்படுத்தி கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. “பிரேக் வாட்டர் கட்டுமானத்தை முடிக்க மொத்தம் 70 லட்சம் டன் கிரானைட் பாறைகள் தேவை. முன்பு ஒரு நாளைக்கு சுமார் 15,000 டன் கற்பாறைகளை கொட்டினோம், ஆனால் இப்போது அதை ஒரு நாளைக்கு 30,000 டன்கள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று துறைமுகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மீனவர்களுக்குஇழப்பீடுகேட்பது: இந்த கட்டுமானப் பணிகள் காரணமாக, கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றன. எனவே துறைமுகம் அமைக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என போராடும் மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கடல் அரிப்பால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு, கடலோர அரிப்பைத் தணிக்க நடவடிக்கை, வானிலை எச்சரிக்கை விடுக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையான ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மீன்பிடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும், திருவனந்தபுரம் மாவட்டம் அஞ்சுதெங்கு முதலைப்பொழி மீன்பிடி துறைமுகத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடும் மக்கள் வலியுறுத்தினர்.
வகுப்புவாதஅரசியலாக்கப்படும்முறை: எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இந்த விவகாரத்தை அரசு வகுப்புவாதமாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, மதகுருமார்கள் மீதான காவல்துறை நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்[1]. மேலும், “விழிஞ்சத்தில் ஏற்பட்ட பதற்றம் மாநில அரசின் சதி. பேராயர் மற்றும் பிற பாதிரியார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[2]. அப்படியானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடும்போது, முதல்வர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யுமா? இது முன்னெப்போதும் இல்லாதது. அதானியின் நலனைக் காக்க இந்த திட்டத்தில் சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க இணைப்பு உள்ளது,” என்றும் அவர் கூறினார். எதிர்-எதிராக இருக்கும் சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க எவ்வாறு அதானியின் நலனைக் காக்க இந்த திட்டத்தில் இணைகிறது என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாக, இத்தகைய குழப்பவாதங்களை முன் வைப்பது சுலபம். ஆனால், நடப்பது மற்றும் இறுதியாக, மக்களுக்குக் கிடைக்கும் பலன் இவற்றிலிருந்து உண்மையினை அறிந்து கொள்லலாம்.
கத்தோலிக்க சர்ச்சின் எதிர்ப்பு மட்டும் மர்மமாக இருக்கிறது: கேரளா காங்கிரஸ் [மணி] என்ற கட்சி, முழுக்க கிருத்துவர் சார்பான, அடிப்படைவாத அரசியல் கட்சியாகும். ஆனால், இப்பொழுது ஆளும் எல்.டி.எப் கூட்டுடன் இருக்கிறது. பிறகு, அக்கட்சி எப்படி-எவ்வாறு கத்தோலிக்க வன்முறை போராட்டத்தை ஆதரிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க இணைப்பு என்பது அர்த்தமற்றது. துறைமுகம் வரவேண்டும் என்பது, ஆளும் மற்றும் மற்ற அரசியல் கட்சிகளின் விருப்பமும் ஆகும். எனவே, அதை எதிர்ப்பதாக யாரும் இல்லை. எனவே,, கத்தொலிக்க சர்ச் மட்டும் ஏன் எதிர்க்கிறது என்று கவனிக்க வேண்டியுள்ளது. பாதிக்கப் படும் மீனவர்கள் எப்படியும் இழப்பீடு பெரப் போகிறார்கள், மாற்று இடங்கள் கொடுக்கப் படப் போகிறது. பிறகு, இதில் சர்ச்சுக்ளுக்கு என்ன வருத்தம், பொறாமை என்று தெரியவில்லை.
15-08-2022 முதல் 23-08-2022 வரை: 15-08-2022 அன்று மீனவர்கள் தங்களது விழிஞ்ஞம் துறைமுகம்-எதிர்ப்புப் போராட்டத்தைத் துவங்கியதாகத் தெரிகிறது. கேரள கத்தோலிக்க சர்ச், இதற்கு கொடுக்கும் அதரவு பிரமிப்பதாக உள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தின் வரவிருக்கும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் முள்ளூர் கிராமத்தில் உள்ள துறைமுக நுழைவாயிலில் இரவு பகலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் எட்டாவது நாளாகப் போராட்டம் நடத்தினர். . மக்கள் வாயில்களில் இருந்த தடுப்புகளைத் தாண்டி, அணிவகுத்துச் சென்று கௌதம் அதானியின் உருவ பொம்மையை எரித்தனர்; இதற்கிடையில், மற்ற மீனவர்கள் தங்கள் சிறிய மீன்பிடி படகுகளில் தங்கள் எதிர்ப்பை கடலுக்கு எடுத்துச் சென்றனர்.
சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்த கத்தோலிக்க சர்ச், வன்முறையில் ஈடுபடுவது ஏன்?: கேரள கத்தோலிக்க சர்ச், விழிஞ்ஞம் துறைமுகம் விசயத்தில், இந்த அளவுக்குத் தீவிரமாக ஏன் செயல்பட்டு, மீனவர்களைத் தூண்டி விட்டி, வன்முறையிலும் இறங்கி போராடி வருகின்றது என்பது திகைப்பாக இருக்கிறது. முன்பு, “விடுதலை இறையியல்,” என்ற சித்தாந்தத்தை பின்பற்றுகிறேன் என ஆரம்பித்து, கொலை, கொள்ளை என்று மிகுந்த வன்முறை, குற்றங்கள் என்றாகி, அதில் கத்தோலிக்க பிஷப்புகள், பாஸ்டர்கள் கைதாகி, சிறைக்குச் சென்ற நிலையில், வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது. ஆனால், இப்பொழுது நடக்கும் வன்முறைகளைக் கவனிக்கும் பொழுது, ஒரு வேளை, மறுபடியும் அந்த “விடுதலை இறையியல்,” சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்த ஆரம்பித்து விட்டனரா அல்லது சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னொரு “அத்தகைய சித்தாந்தத்தை” உருவாக்கி செயல்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது. சௌரி-சௌரா வன்முறைக்குப் பிறகு, ஒரு போலீஸ் ஷ்டேசன் தாக்கப் பட்ட பிறகு, மஹாத்மா காந்தியே, தனது “ஒத்துழையாமை” இயக்கத்தை நிறுத்தி வைத்தார். ஏனெனில், அது அஹிம்சையை மீறி, வன்முறையில் முடிந்தது. ஆனால், இங்கோ சுதந்திர தினத்தன்று போராட்டத்தை ஆரம்பித்தாலும், ஆர்ச்-பிஷப் முதல் மற்ற பிஷப்புகள் அகம்பாவத்துடன், ஆணவத்துடன் மற்றும் உறுதியாக போராட்டத்தைத் தொடருவோம் என்று தான் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, நடத்தப் படும் போராட்டம்: ஆரம்பம் முதல் உன்னிப்பாக கவனித்தாலோ, செய்திகளை படித்து வந்தாலோ, சர்ச்சின் பின்னணியை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். கேரளவாவில், பல சர்ச்சுகள் [கத்தோலிக்கர் அல்லாத] இருந்தாலும், கத்தோலிக்கர் தமது ஆதிக்கத்தை செல்லுத்த விரும்புகின்றனர். இதற்கு, அவ்வப்பொழுது, ஏதாவது விவகாரம் கிடைத்தால், அதனை அரசியல் ஆக்கி, லாபம் பெற முயல்கின்றனர். வெற்றி பெறுகின்றனர், ஒதுங்கி விடுகின்றனர். இப்பொழுது பிஷப்புகள் முதல், பாஸ்டர்கள் வரை தீவிரமாக இருப்பது இதனை உறுதியாக்குகிறது. சர்ச்சிற்குள் இருந்து, பலி, போதனை என்றில்லாமல், தெருக்களில் இறங்கி, வன்முறைகளில் ஈடுபடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாது, குழந்தைகள், பெண்கள், கன்னியாஸ்திரிக்களை முன்னிலை வைத்து, ஊர்வலம் செல்வது, போராட்டம் நடத்துவது, மற்ற தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைக்களை ஞாபகப் படுத்துகிறது, ஒத்துப் போகிறது.
அதானிகுழுமத்தின்கேரளஅரசுசார்பில்கட்டப்பட்டுவரும்துறைமுகத்தைஎதிர்த்துபோராட்டம்: திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான விழிஞ்ஞத்தில் அரசு-தனியார் பங்களிப்புடன் கேரள அரசு சார்பில் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. அதானி குழுமம் இதற்கான கட்டுமானப் பணிகளைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. துறைமுக பணிகளில் இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடிவடைந்துள்ளன. கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்[1]. கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவ்வித தடையையும் ஏற்படுத்த மாட்டோம் என கடந்த நவம்பா் 22-ஆம் தேதி கேரள உயா்நீதிமன்றத்தில் போராட்டக்காரா்கள் உறுதியளித்திருந்த நிலையில்[2], சனிக்கிழமை கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை அவா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும் துறைமுக திட்ட ஆதரவாளா்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கம்:
கத்தோலிக்க சர்ச் விழிஞம் துறைமுக திட்டத்தை எதிர்த்து நேரிடையாக வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது…
குழந்தைகள், பெண்கள் உட்பட…………………….மீனவர்களை முன்னிருத்தி நடத்துகிறது.
கன்னியாஸ்திரிக்கள், பாஸ்டர்கள் …………………………………………..பிஷப் உடன் போராட்டம் நடத்தப் படுகிறது………………………..
நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது……………….
நீதிமன்ற சட்டம்-ஒழுங்குமுறை ஏன் இல்லை…….என்றெல்லாம் கேட்கிறது…………………….
அஹமது தேவர்கோவில், துறைமுக அமைச்சர், இவ்விசயம் மதரீதியில் எடுத்துச் செல்லக் கூடாது என்று உறுதியாகக் கூறுகிறார்………………………………….
கத்தோலிக்கச் சர்ச் இப்போராட்டம் தொடரும் என்கிறது…………………
26-11-2022 மற்றும் 27-11-2022 அன்று நடந்தேறிய வன்முறை சம்பவங்கள்: திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் அதானி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அங்குள்ள மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் துறைமுகம் கட்ட ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. அதானி துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். விழிஞ்சம் துறைமுகத்தில் நடைபெறும் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து நடத்த, 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆயர் கடிதம் அனுப்பப்பட்டு, லத்தீன் பேராயர் வலுப்படுத்த வலியுறுத்தி முடிவு செய்துள்ளது. போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த சமர சமிதி முடிவு செய்துள்ளது[3]. லத்தீன் மறைமாவட்ட முன்னாள் பேராயர் எம்.சூசபாக்கியம் எதிர்வரும் திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் பல்வேறு ஆயர்களும், மதத் தலைவர்களும் இணைந்து கொள்வார்கள். அதானி குழுமத்துடன் கைகோர்த்து போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக சமர சமிதியின் பொது அழைப்பாளர் யூஜின் எச் பெரேரா தெரிவித்துள்ளார்.
[1] தினமணி, விழிஞ்ஞம்துறைமுகஎதிர்ப்புபோராட்டவன்முறை:15 பாதிரியார்கள்மீதுவழக்கு, By DIN | Published On : 28th November 2022 05:49 AM | Last Updated : 28th November 2022 05:49 AM.
[3] The Samara Samithi has also decided to hold an indefinite hunger strike from Monday as part of intensifying the protest measures. Former archbishop of Latin archdiocese M Soosapakyam will undergo a hunger strike on Monday 28-11-2022 and various bishops and religious leaders will join in the coming days. The general convener of Samara Samithi, Eugine H Pereira said that some people have made attempts to sabotage the stir by joining hands with the Adani Group
கலைவாணர்அரங்கத்தில் இந்து மத மாநாடு,தமிழகசபாநாயகர்அப்பாவுகலந்துகொள்ளஇருக்கிறார் – இப்படிதடாலடியாககிருத்துவர்நடத்தும்நிகழ்ச்சி! (1)
கிருத்துவர்நடத்தும்இந்துமதமாநாடு: “இந்து மதத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[1]. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் தாக்கல் செய்துள்ள வழக்கில்[2], தனக்கு சம்பந்தமே இல்லாத விவகாரங்களைக் குறிப்பிட்டு வழக்கு போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது. இதுவரை, அவர் மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் கிருத்துவ பிஷப்புகள் கத்தோலிக்க நிறுவனங்கள் மற்ற இயக்கங்களின் செயல்பாடுகளை கவனித்தால், வேண்டுமென்றே பிரபலம் பெற வேண்டும், நீதிமன்றம் வைத்துக் கொண்டு விளம்பரம் பெற வேண்டும், என்ற நோக்கத்தில் தொடரப் பட்ட வழக்கு என்பதனை தெரிந்து கொள்ளலாம். முன்பே இவ்வாறு பலமுறை பல இடங்களில் மாநாடு நடத்துகிறேன் என்று கலாட்டா செய்திருக்கிறார்[3].
மனுவில்என்னசொல்லப்பட்டிருக்கிறது?: மனுவில் சொல்லப் பட்டுள்ளதாவது, “இந்துராஷ்ட்ராஎன்றபெயரில்புதியவரைவுஅரசியலமைப்புசட்டத்தைஉருவாக்குவதுகுறித்துஆர்எஸ்எஸ்திட்டமிடுவதாகசெய்திவெளியாகியுள்ளதுஅதிர்ச்சியளிக்கிறது[4]. இந்தியவிடுதலைப்போராட்டத்தில்எவ்விதபங்கையும்அளிக்காதஆர்எஸ்எஸ்அமைப்பு, இந்துமக்களுக்குமட்டுமேவாக்குரிமைஅளிக்கும்வகையிலும், கிறிஸ்துவமற்றும்இஸ்லாமியமதத்தினரின்வாக்குரிமையைபறிக்கும்வகையில்வரைவுஅரசியலமைப்பைஉருவாக்கிஇருக்கிறது[5]. மதசார்பின்மை, சமூகநல்லிணக்கம்ஆகியவற்றிற்குகேடுவிளைவிக்கும்வகையிலும், யாரும்ஒற்றுமையாகஇருக்கக்கூடாதுஎன்றநோக்கத்துடனும்ஆர்எஸ்எஸ்செயல்படுகிறது[6]. இதுதொடர்பாகசென்னைசேப்பாக்கத்தில்உள்ளகலைவாணர்அரங்கத்தில் “கபாலீஸ்வரர்கோவிலின்கல்வெட்டிலிருந்துஇந்துமதத்தைதெரிந்துகொள்வோம்” என்றதலைப்பில்மாநாடுநடத்தஅரங்கம்முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில்தமிழகசபாநாயகர்அப்பாவுகலந்துகொள்ளஇருக்கிறார். கூட்டத்திற்குதமிழகஅரசிடம்அனுமதிகோரியவிண்ணப்பத்தின்மீதுமுடிவெடுக்காமல்காலம்தாழ்த்தப்படுகிறது. எனவேஎனதுமனுவைபரிசீலித்து, மாநாட்டிற்குஅனுமதிவழங்கஉத்தரவிடவேண்டும்,” என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தினசரி,” என்ற இணைதளம் அதை அப்படியே காப்பியடித்து செய்தியாகப் போட்டுள்ளது[7]. இந்த செய்தி ஏன், இதன் பின்னணி என்ன, போன்ற விசயங்களை ஆய்வதில்லை, படிப்பவர்களுக்குத் தெரிவிப்பது இல்லை. இணைதளத்தில் என்ன கிடைத்தாலும், காப்பியடித்து போட்டு விடவேண்டும் என்ற ஒருவிதமான வெறியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனை இந்துத்துவவாதிகளும் செய்து வருகிறார்கள்.
“இந்துமதத்தைதெரிந்துகொள்வோம்” என்றதலைப்பில்மாநாடு: என்று அந்த தன்னை “ஆராய்ச்சியாளர்” என்று சொல்லிக் கொண்டு உலா வரும் அந்த நபர், அடிப்படைவாத கிருத்துவர், இந்துமத துவேசி மற்றும் ஓப்பீட்டு ஆராய்ச்சி போர்வைவில் அரைகுறை வேக்காட்டுகளை புத்தகங்களாக போட்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார், போன்றவை விவாதத்தில் இருந்து வருகின்றன. “கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர்” என்று பிரகடனப் படுத்திக் கொள்வதால், அவருக்கு – தெய்வநாயகம்- ஏதாவது லாபம் கிட்டுமே தவிர, அக்கல்லூரிக்கு இழுக்கு தான் ஏற்படும்[8]. ஒருவேளை அக்கல்லூரியே அத்தகைய, போலி ஆராய்ச்சிகளை ஊக்குவித்தால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், அங்கிருந்து தான் “மோசஸ் மைக்கேல் பாரடே,” என்ற பெயரில், ஒருவர் “சித்தர் ஆராய்ச்சி” என்று புரட்டி வருகிறார். “அகத்தியர் ஞானம்” மோசடி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[9]. இப்படி இத்தகைய கிருத்துவர்கள், இந்து மதத்தை தெரிந்து கொள்வோம் என்று மாநாடு நடத்துகிறேன் என்று கிளம்பியுள்ளதை கவனிக்க வேண்டும்.
இந்துவிரோதிகள்–இந்துத்துவவாதிகள்ஒத்துழைப்பதுஏன்?: அரசியல் காரணங்களுக்காக, இந்துத்துவவாதிகளும், கிருத்துவர்களுடன் சேர்ந்து வேலை செய்கிறார்களோ என்று கூட சந்தேகிக்க வேண்டியுள்ளது[10]. முழு விவரங்களை புகைப்படங்களுடன் ஐந்து பாகங்களாக பதிவு செய்துள்ளேன்[11]. 2017ல் எல்லீஸர் விருது கொடுக்கும் விழா என்று, அவர்கள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்[12]. இதைப் பற்றிய முழு விவரங்களை புகைப்படங்களுடன் 17 பாகங்களாக பதிவு செய்துள்ளேன். கடந்த நவம்பர் 2021லும் இவர்களும் தெய்வநாயகத்திற்கு ஜால்றா அடித்ததும் திகைப்பாக இருக்கிறது. மதம் மாறிய கிருத்துவர் மற்றும் முஸிம் எஸ்.சி / பட்டியல் ஜாதியினருக்கும் இந்துக்களைப் போன்றே இடவொதிக்கீடு கொடுக்க கமிஷனை அரசு உண்டாக்கியுள்ளது. இந்துத்துவவாதிகள் அரசியலில் ஊறி விட்டதாலும், பலன்களை அனுபவிக்க ஆரம்பித்து விட்டதாலும், சித்தாந்தம் நீர்த்துப் போக ஆரம்பித்து விட்டது. இதை இந்துவிரோதிகள் நன்றாக அறிந்து கொண்டுள்ளார்கள். இதனால் தான் திருமாவளவன், சீமான் போன்றோரும், திக-திமுகவினரும் தொடந்து இந்துமதத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பல நேரங்களில் சேர்ந்தும் செயல்படுகிறார்கள். ஆனால், இந்து-இந்துத்துவம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தான் பிரிந்து கிடக்கிறார்கள். அதனால், மற்ற இந்துக்கள் இவர்கள் அனைவராலும் பாதிக்கப் படுகின்றனர்.
திராவிடத்துவம் நோக்கிச் செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது: திராவிடம் நோக்கி செல்லும் இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. கிருத்துவர்கள் மதங்களுக்கு இடையிலான உரையாடல், உள்-கலச்சாரமயமாக்கல், போன்ற திட்டங்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு இவைப் பற்றி தெரியாமலேயே இருக்கின்றனர் (இதைப் பற்றியெல்லாம் நிறைய பதிவு செய்துள்ளேன்). இப்பொழுது பணம், பதவி, விருது போன்றவற்றிற்கு ஆசைப் பட்டு வேலை செய்யும் இந்துத்துவவாதிகளை “அரசியல் இந்துத்துவவாதிகள்” என்று அடையாளம் காண வேண்டியுள்ளது. நிச்சயமாக இவர்கள் அரசியல் ரீதியில் பல விசயங்களில் கொள்கைகளை விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்கிறார்கள்(compromise, negotiate and / or surrender), உடன்படிக்கை ஏற்பட்டால் சரண்டரும் ஆகி விடுகின்றனர். சில குறிப்பிட்ட மனிதர்களை ஊக்குவிக்கும் பொழுது, மற்றவர்கள் அவர்களுக்கு துணையாக விவரங்களை சேகரித்துக் கொடுக்க வேண்டும். அப்பொழுது, ஏஜென்டுகளாகவும் செயல்படுகின்றனர். இங்கும் இந்துத்துவா நீர்த்து விடுகிறது. போதாகுறைக்கு, சில இந்துக்கள் தெரிந்தும்-தெரியாமலும் இத்தகைய திட்டங்களுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ உதவி வருகின்றனர். தெரிந்த சில இந்துக்களும் ஒன்றாக செயல்படாமல், தனித்தனியாக வேலை செய்கின்றனர். ஒருவேளை கிருத்துவர்களே அத்தகைய நிலை உருவாக, வேலைசெய்து, பிரிக்கிறார்கள் எனலாம். ஏனெனில், அவர்கள் பைபிளை குறைகூறுகிறேன், என்று விமர்சித்து, அடங்கி விடுகின்றனர். இதனால் தான் திராவிடத்துவம் நோக்கிச் செல்லும், இந்துத்துவம், அரசியல் இந்துத்துவவாதிகளால் இந்துக்கள் பாதிக்கப் படுவது நடந்து கொண்டிருக்கிறது. மறுபடியும் இன்னொரு அரசியல் நாடகம் அரங்கேறப் போகிறது. பாதிக்கப் படப் போவது அப்பாவி ஆனால் உண்மையான இந்துக்கள் தான்!
[1] தமிழ்.இந்து, ‘இந்துமதத்தைதெரிந்துகொள்வோம்’ மாநாடுநடத்தஅனுமதிகோரிஉயர்நீதிமன்றத்தில்மனு, ஆர்.பாலசரவணக்குமார், Published : 20 Oct 2022 06:26 PM; Last Updated : 20 Oct 2022 06:26 PM
[3] இதுபோல, சில ஆண்டுகளுக்கு முன்னர், மயிலை மாங்கொல்லை என்ற இடத்தில் கூட்டம் போடுகிறேன் என்று கலாட்டா செய்தபோது, போலீஸ் இவருக்கு அனுமதி மறுத்து, சிவகாமிக்கு இடம் கொடுத்தனர்.
[4] தினசரி, இந்துமதத்தைதெரிந்துகொள்வோம்–மாநாடுந்டத்தஉயர்நீதிமன்றத்தில்மனு, சக்தி பரமசிவம், 21-10-2022, 9.00 PM IST.
[8] இவர் லயோலா கல்லூரியில் வேலை செய்ததாகவும் உள்ளது, பிறகு அங்கு எப்படி, எந்த பதவியில் இருந்தார் என்று தெரிவிக்கப் படவில்லை.
[9] ஆச்சார்யா பாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், அருளப்பாவின், “”புனித தோமையார்” என்ற புத்தகம் “குட் பாஸ்டர் பிரஸ்”, சென்னை – 600 001 என்ற அச்சகத்தினரால் வெளியிடப்படுகிறது[8]. உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, “முதல் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு” என்று திருச்சியில் டிசம்பர் 28 முதல் 30 வரை 1981ல் நடத்தியது. ஞானசிகாமணி “அகத்தியர் ஞானம் [விளக்கவுரை]” என்ற புத்தகத்தை அங்கு வெளியிடுகிறார். அதற்கு “பாராட்டுரை” எழுதியது, பொன்னு ஆ. சத்திய சாட்சி! ஞானசிகாமணி வேதாகம மாணவர் பதிப்பகம் என்று வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை முடிக்கி விட்டார். திடீரென்று பிராமண எதிர்ப்பும் வெளிப்படுகிறது. எஸ். இம்மானுவேல் நரசுராமன் எழுதியதாக, “ஒரு பிராமணன் கண்ட பரப்பிரம்மம்” என்ற பிரச்சாரப் பிரசுரம் (ஏப்ரல் 1983) இவரது அறிமுகத்துடன் வெளியிடப்படுகின்றது. தெய்நாயகமும் தீவிரமாக செயல்பட்டார். 1984ல் சென்னை பல்கலைக்கழகத்தில் “கிறிஸ்தவ படிப்பிற்காக” ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆரவாரமாக, தெரஸா அம்மையாரை வைத்தே திறந்து வைக்கப்பட்டது[10]. இதற்கும் அருளப்பா தான் நிதியுதவி அளித்தார். பிப்ரவரி 5, 1986ல் போப் ஜான் பால் II சென்னைக்கு விஜயம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அருளப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
[10] வேதபிரகாஷ், கிறிஸ்துவகிருக்கர்கள், மோசடிவாதிகள்மற்றும்ஏமாற்றுப்பேர்வழிகள்ஒருபக்கம், இந்துபேதைகள், அப்பாவிகள்மற்றும்நம்பிக்கையாளர்கள்மறுபக்கம் (1), பிப்ரவரி 19, 2009.
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].
ஆசியஆயர்பேரவைக்கூட்டமைப்பின்உறுப்பினர்நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].
கொரோனாகாலத்தில்கிருத்துவம்படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.
இந்தியாவைகுறிவைக்கிறதா, ஆயர்மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரியசக்திகளின்கைகளில்அகப்பட்டுச்சிக்கிதவிக்கிறதுஆசியா. குடியரசுதீயசக்திகளின்கைகளில்உள்ளது. நோய், பஞ்சம், பட்டினிஎன்றுமனிதசமுதாயம்அழுதுவருகின்றது. மனிதர்களால்உண்டாக்கப்பட்டுவரும்அழிவுகளிலிருந்துவிடுபடவேண்டும். சர்ச்இதற்காகஎழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.
மாநாட்டின்குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion வெறும் 8 percent ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.
1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:
நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news],
ஞானஸ்தானம்பெற்றவிசுவாசிகளின்நம்பிக்கைகளுக்குஏற்றமுறையில்நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized]; மற்றும்
மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]
அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..
செய்யவேண்டியதிட்டப்பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.
[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.
[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022
[10] Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.
The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.
[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said
Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor
லாவண்யா அப்பா-அம்மா-தாத்தா-பாட்டி-மாமா விசாரணை, சரி, பிறகு ஏன் பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் என்றெல்லாம் விசாரிக்கவில்லை? செக்யூலரிஸம் வேலை செய்யவில்லையா? (4)
யூடியூப்சேனலுக்குபேட்டிபாட்டிபேட்டி: இந்தநிலையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மாணவியின் பாட்டி நித்யானந்த சரஸ்வதி என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.அந்த பேட்டியில் அவர், “லாவண்யாவின்தாய் 8 ஆண்டுகளுக்குமுன்புதற்கொலைசெய்துகொண்டார். அதன்பிறகுதஞ்சையில்உள்ளபள்ளிவிடுதியில்தங்கவைக்கப்பட்டார். கடந்தஆண்டுஅவரதுசித்திலாவண்யாவின்கன்னத்தில்சூடுவைத்துசித்ரவதைசெய்ததாகமாணவியின்தோழிகள்தனக்குதெரிவித்தார்கள். எனவேநான்சம்பவம்குறித்துசைல்டுஹெல்ப்லைனுக்குதகவல்தெரிவித்தேன். சைல்டுலைன்ஊழியர்கள்சிறுமியைசந்தித்தபோதுசித்திமீதுசுமத்தப்பட்டகுற்றச்சாட்டுகளைஅவர்மறுத்தார்,” என தெரிவித்து இருந்தார். இவ்வாறு, இப்பொழுது, இந்த யு-டியூப் கலாச்சாரமும் பெருகிவிட்டது. பேட்டி கொடுக்கவும் மக்கள் தயாராகி விடுகின்றானர். நாங்கள் இப்படி கேள்வி கேட்போம், நீங்கள் இப்படி பதில் சொல்லுங்கள் என்ற தொரணையில் தான் வீடியோ-பேட்டி நடக்கின்றன.
29-01-2022 – லாவண்யாதாத்தா–பேட்டியிடம்போலீஸார்விசாரணை: இந்த பேட்டியை தொடர்ந்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் சரவணம்பட்டி எழில் நகருக்குச் சென்று நித்யானந்த சரஸ்வதியையும், அவரது கணவரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். 30 நிமிடங்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவின் உறவினர் திருப்பூர் பனியன் கபெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அவர் மாணவி இறப்பதற்கு முன்பு அவரை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவர் யூடியூப் சேனலில் கூறியதை போலீசார் வாக்குமூலமாக வீடியோ எடுத்தனர்[1]. அப்போது நித்யானந்த சரஸ்வதி தனக்கு தலைசுற்றுவதாக அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக, அவரது மகன் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து போலீசார் தேவை பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என அவரிடம் தெரிவித்தனர்[2].
சிறுமியின்தாய்மாமாபிரபாகரனிடம்விசாரணை: சிறுமி விஷம் குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, திருப்பூரில் வசிக்கும் சிறுமியின் தாய்மாமா பிரபாகரன் தங்களை அழைத்து பேசியதையும் போலீஸ் விசாரணையில் தாத்தா பாட்டி தெரிவித்தனர்[3]. இதனையடுத்து திருப்பூரில் உள்ள மாணவியின் தாய்மாமா பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 30-1-2022 அன்று காலை பிரபாகரனிடம், டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்[4].
செக்யூலரிஸம் இப்படித் தான் வேலை செய்யும் போலிருக்கிறது: லாவண்யா அப்பா-அம்மா பிறகு, இப்படி லாவண்யா தாத்தா-பாட்டி-மாமா என்று அனைவரையும் விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். 20-01-2022 அன்று கன்னியாஸ்திரி சஹாய மேரி சிறார் கொடுமை சட்டத்தின் கீழ் கைதானது பற்றி கத்தோலிக்கக் குழுக்கள் விவாதிக்கின்றனர்[5]. கத்டோலிக்க ஆயர் குழு அறிக்கைப் பற்றி முன்னமே குறிப்பிடப் பட்டது. மோடி போப்பை சந்தித்து, உரையாடல் ஆரம்பித்துள்ள போது, கேரளாவில் கிருத்துவர்கள்-ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சுமுகமாக இருக்கும் பொழுது, தமிழக கத்தோலிக்கர் ஏன் இப்படி, திராவிடத்துவ நாத்திகர்-இந்துவிரோதிகளுடன் சேர்ந்து கொண்டு பணியாற்றுகின்றனர் என்பது புதிராக இருக்கிறது. இதைப் பற்றி கிருத்துவர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்[6]. பிறகு, பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் . [the Franciscan Sisters of the Immaculate Heart of Mary (FIHM])[7], என்று எல்லோரையும் விசாரிக்கவில்லை. சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்றால், அவ்வாறு செய்யலாமே?
27-01-2022 லாவண்யாஇறப்புபற்றிவிசாரிக்கபிஜேபிகுழுஅமைக்கப்பட்டது: இந்நிலையில், தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது[8]. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்த கொண்டது கவலையும் வருத்தமும் அளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார்[9].
தஞ்சாவூர்மாணவிதற்கொலைவழக்கில்தமிழகஅரசுஒத்துழைக்கவில்லை – நேரடியாகதமிழகம்விரையும்தேசியகுழந்தைகள்உரிமைகள்பாதுகாப்புஆணையம்![12]: தஞ்சாவூர் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பி உள்ளது. இதுகுறித்து என்சிபிசிஆர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு[13]: “தமிழகத்தில்தஞ்சாவூர்மாவட்டத்தில்உள்ளமைக்கேல்பட்டில்உள்ளசேக்ரட்ஹார்ட்மேல்நிலைப்பள்ளியின்மைனர்சிறுமிதற்கொலைசெய்துகொண்டசம்பவம்குறித்தபுகாரை, குழந்தைகள்உரிமைஆணையம்பெற்றுக்கொண்டது. இதுகுறித்துவிசாரிக்கதலைவர்பிரியங்க்கனோங்கோதலைமையிலானகுழுதமிழகத்துக்குவருகைதரவுள்ளது”.
என்சிபிசிஆர்வரவு, விசாரணைஅரசியல்தாக்கம்: எனவே, வழக்கின் உண்மைகளை அறிய என்சிபிசிஆர் ஜனவரி 30 மற்றும் 31 க்கு இடையில் சம்பவ இடத்திற்கு வருகை தருகிறது. மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே விசாரணைக்கு ஆணையமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றும் என்சிபிசிஆர் தெரிவித்துள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புலனாய்வு அதிகாரி அவர்களின் இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெற்றோரைச் சந்திப்பது, இறந்தவரின் வகுப்புத் தோழர்களுடன் உரையாடல், இறப்பதற்கு முன் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் இறந்தவரின் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் விசாரணை, பள்ளி அதிகாரிகளைச் சந்தித்தல் மற்றும் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை, என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையம் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில்மதம்தொடர்பானபரப்புரை / மதரீதியிலானபிரச்சாரம்எதுவும்இல்லை: அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என்றும்[14] மதரீதியிலான பிரச்சாரம் தலைமையாசிரியராலோ அல்லது ஆசிரியராலோ பள்ளியில் செய்யப்படவில்லை என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சரும் அதற்கான விளக்கத்தை வெளியிட்டார்[15]. ஆக, இந்நிலையில், இப்பிரசினை அரசியலாக்கப் பட்டு விட்டது. இனி, இந்திய ரீதியில், இப்பிரச்சினை அலசப்படும். மாணவி தற்கொலை, மதமாற்றம் விசயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நல்லது, ஆனால், அதே நேரத்தில் அரசியல் செய்வது கண்டிக்கத் தக்கது. செக்யூலரிஸம், சிறுபான்மையினர், கிருத்துவர் என்ற ரீதியில் தான், திமுக இவ்வாறான மோசமான அரசியில் செய்து வருகின்றது.
[5] Sister Sahaya Mary, the 62-year-old hostel warden, was arrested under the Juvenile Act apart from charges of abetting suicide. The place is near Poondi Madha shrine that comes under the diocese of Kumbakonam. Jesuit Father Arockiasamy Santhanam, spokesperson for the National Lawyers Forum of Religious and Priests, says the First Information Report does not mention conversion. “It is the cook up story by the Hindutva elements,” he told Matters India January 21.
Matters India, Nun arrested after hostel girl dies by suicide in Tamil Nadu, By Matters India Reporter, ON: JANUARY 22, 2022
[6] Father Kudanthai Gnani, editor of Namvazhvu, a Church weekly, says the girl, who died January 19, was a twelfth grader in Sacred Heart of Jesus Higher Secondary School in Kumbakonam diocese. The century-old school is situated in Michaelpatti near Thirukattuppalli in Thanjavur district. The girl had been staying in St. Michael’s Hostel from the eighth grade. The hostel is attached to the school and managed by the Congregation of the Franciscan Sisters of the Immaculate Heart of Mary, or the Pondicherry Blues, for the poor and the abandoned girls.
[7] The Congregation of the Franciscan Sisters of the Immaculate Heart of Mary (FIHM), was founded in Pondicherry, India, on 16th October 1844 by Rev. Fr. Louis Savinien Dupuis, Missions Etrangeres de Paris (Paris Foreign Mission Society, MEP). http://www.fihm.org/aboutus.html
[8] தினமணி, தஞ்சைமாணவிதற்கொலைவிவகாரத்தைகையில்எடுத்தபாஜகமேலிடம், By DIN | Published on : 27th January 2022 05:14 PM.
[12] கதிர்.செய்திகள் தஞ்சாவூர்மாணவிதற்கொலைவழக்கில்தமிழகஅரசுஒத்துழைக்கவில்லை – நேரடியாகதமிழகம்விரையும்தேசியகுழந்தைகள்உரிமைகள்பாதுகாப்புஆணையம்!, By : Anand T Prasad | 30 Jan 2022 11:16 AM
[14] தமிழ்.ஆசியாநெட்.நியூஸ், Girl suicide: பள்ளியில்மதபிரச்சாரம்செய்யப்படவில்லை..அப்படிஎந்தபுகாரும்இதுவரைவரவில்லை – பள்ளிகல்வித்துறை, Thanalakshmi V, Tamilnádu, First Published Jan 27, 2022, 7:26 PM IST, Last Updated Jan 27, 2022, 7:26 PM IST.
கிறிஸ்துவத்திற்குவிரோதமானசெயலைச்செய்ததற்காக, கடவுள்அவரைகண்டிப்பார்[1]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[2]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[3]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[4]. இதனால், என்ன அந்ட்த இறுதி நாள், எப்பொழுது அந்ததண்டனை கிடைக்கும் போன்ற கேள்விகள் எழுகின்றன.
யூத, கிருத்துவமற்றும்முகமதியமதங்கள்குறிப்பிடுவதுஎன்ன?: கடைசி தீர்ப்பு, முடிவான தீர்ப்பு, கடைசி தீர்ப்பு நாள், முடிவான தீர்ப்பு கொடுக்கப் படும் நாள், குறிக்கப் படும் நாள், தீர்ப்பின் நாள், தீர்ப்புக் கொடுக்கப் படும் நாள், உலகம் அழியப் போகின்ற நாள், கடவுளின் நாள், ஏசு கிறிஸ்துவின் வருகை நாள், பாவத்திற்கு உரிய தண்டனைக் கொடுக்கப் படும் நாள், உயிர்த்தெழும் நாள் …… என்றெல்லாம் யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மதங்கள் குறிப்பிட்டு வருகின்றன[5]. மனிதன் / நம்பிக்கையாளன் மட்டும் கடவுளால் காக்கப் படுவான்[6]. ஜென்டைல், இன்பைடெல், ஹெதன், பாகன், விக்கிர ஆராதனையாளன், காபிர் ….. (Gentile, Infidel, Heathen, Pagan, Idolator, Kafir, Non-Believer of Judaism, Christianism and Mohammedanism) முதலியோர் தண்டிக்கப் படுவர்[7]. நரகத்தீயுக்குள் தள்ளப் படுவர். இப்படியெல்லாம் தாம் யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மத நூல்களில் விவரிக்க, வர்ணிக்க மற்றும் விளக்கப் படுகின்றன[8]. பொருளாதார ரீதியில் இம்மதங்கள் எப்படி உலகத்தை ஆட்டிப் படைக்கின்றன என்பதை 2019ல் விளக்கியுள்ளேன்[9].
கிருத்துவபைபிள்மற்றபுராணங்கள்கொடுக்கும்விவரங்கள்: கிருத்துவர்களின் நம்பிக்கைகளின் படி (கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லாத…………பிரிவுகள் உட்பட) இவ்வாறுள்ளது:
கிருத்துவ மதம், கிருத்துவின் இரண்டாவது வருகையை அந்த இறுதி நாளாகக் கருதுகிறது. முதலாம் ஆதாம் செய்த பாவத்திற்கு இரண்டாம் ஆதாம் சரிசெய்து தீர்ப்பு அளிப்பார்.
அன்றைக்கு கடவுள் மக்களின் பாவத்திற்கு ஏற்ப சம்பளம் / தண்டனை கொடுப்பார். இதனால், நம்பிக்கையாளர்கள் சொர்க்கத்திற்கும், நம்பிக்கையில்லாத பாவிகள் நரகத்திற்கும் போவார்கள்.
இடைக்காலத்தில் இதற்கான இறையியல், சித்திரங்கள், பதுமைகள் முதலியன உருவக்கப் பட்டன.
உயிர்த்தெழும் நாள் என்றும் நம்பப்படும் அந்நாளில் புதைக்கப் பட்ட மனிதர்கள் எல்லோரும், அதே உடலுடன் உயிர்த்தெழுவார்கள். அவர்களின் பாவங்களுக்கு ஏற்ப தண்டனை பெறுவார்கள்.
பிறகு மக்களை அச்சுருத்த அந்த இறுதி நாளுக்கு அடையாளமாக சில அறிகுறிகள், சின்னங்கள், அடையாளங்கள் ஏற்படும், வெளிப்படும் என்றெல்லாம் விளக்கம் அளிக்கப் பட்டது.
ஜானின் வெளிப்பாட்டில் / மத்தேயு, உலக முடிவின் அறிகுறிகள் போரில் தொடங்கும். சிவப்பு குதிரையின் மீது சவாரி செய்யும் நபர் உலகத்தில் உள்ள பாவிகளை அழித்து, நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவார். குறிக்கப்படுகிறது, அவர் பூமியிலிருந்து உலகை எடுத்துக்கொள்கிறார்.
உலகின் முடிவின் போது, ஒரு கருப்பு குதிரையில் ஒருவன் வருவான், பூமிக்கு பசி, கொள்ளைநோய் வரும். மக்களில் சிலர் இறந்துவிடுவார்கள். எஞ்சியிருக்கும் அனைவரும் ஆவியில் பலவீனமடைவார்கள். அவர்கள் “சோதனைக்குள்ளாகி ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பார்கள்.” இந்த நேரத்தில், கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்படும், தவறான தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள்.
யோவானின் வெளிப்பாட்டின்படி, பசி மற்றும் மரணத்திற்குப் பிறகு, ஒரு தேவதை வந்து, மக்களைத் தண்டிக்க பெரிய பூகம்பம், இரத்தக்களரி நிலவு, சூரிய கிரகணம் முதலியவற்றை உண்டாக்கும்.
இருப்பினும், உலகம் அழியத்தான் செய்யும். அர்கமத்தான் என்ற பெரிய உலக மஹா யுத்தத்தில், கடவுளை எதிர்த்துப் போராடுகிறவர்கள் அழிவார்கள். நம்பிக்கையாளர்கள் பிழைப்பார்கள்.
பிறகு உண்டாகும் அமைதியில், உயிர்த்தெழும் நாள் என்றும் நம்பப்படும் அந்நாளில் புதைக்கப் பட்ட மனிதர்கள் எல்லோரும், அதே உடலுடன் உயிர்த்தெழுவார்கள். அவர்களின் பாவங்களுக்கு ஏற்ப தண்டனை பெறுவார்கள்.
ஆகஇந்நீதிமன்றதீர்ப்பில்எழுன்சிலகேள்விகள்: ஆக இந்து ஜென்டைல், இன்பைடெல், ஹெதன், பாகன், விக்கிர ஆராதனையாளன், காபிர் ….. (Gentile, Infidel, Heathen, Pagan, Idolator, Kafir, Non-Believer of Judaism, Christianism and Mohammedanism) என்றெல்லாம் இன்றும் அழைக்கப் படுகிறான். அந்நிலையில் கீழ்கண்டவற்றிற்கு பதில் தேவை:
1. நியாயத் தீர்ப்பு இறுதி நாளில், மனுதாரர், கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்! அதனால், என்னாகும் என்று தெரிந்து கொள்ள விருவிருப்பாக உள்ளது.
2. சரிங்க, அதென்ன இறுதி நாள் தீர்ப்பு, அது எப்பொழுது வரும்? ஜார்ஜ் பொன்னையாவிற்கு என்ன தண்டனையை கடவுள் கொடுப்பார்?
3. பாவத்திற்கு உரிய தண்டனைக் கொடுக்கப் படும் நாள், உயிர்த்தெழும் நாள் …… என்றெல்லாம் யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மதங்கள் குறிப்பிட்டு வருகின்றன..
4. கிருத்துவ மதம், கிருத்துவின் இரண்டாவது வருகையை அந்த இறுதி நாளாகக் கருதுகிறது. முதலாம் ஆதாம் செய்த பாவத்திற்கு இரண்டாம் ஆதாம் சரிசெய்து தீர்ப்பு அளிப்பார்.
5. உயிர்த்தெழும் நாளில் புதைக்கப் பட்ட மனிதர்கள் எல்லோரும், அதே உடலுடன் உயிர்த்தெழுவார்கள். பாவங்களுக்கு
ஏற்ப தண்டனை பெறுவார்கள்.
6. இதெல்லாம் இப்பொழுது நடக்கும், என்று கர்த்தர் தோன்றுவது, கண்டிப்பது, தண்டனைக் கொடுப்பது எல்லாம் உறுதியான நம்பிக்கையா?
7. இதே போல இந்துக்களுக்கும் தீர்ப்பு கொடுக்கப் படுமா, நீதிபதிகள் செக்யூலரிஸமாக நடந்து கொள்வார்களா?கிரிமினல் கோட் சிவிலாகிறதா?
8. கருத்துரிமை என்று இதே போல நான்கு சுவர்களுக்குள், சர்ச்-மசூதிகளுக்குள் இந்து துவேஷ, காழ்ப்பு, வெறுப்பு பேசி தப்பித்துக் கொள்ளலாமா?
9. இந்துத்துவ வாதிகளில் பெரிய, மிகப்பெரிய நீதிமான், சட்டமேதை, நியாயவான், தர்மவான் என்றெல்லாம் இருக்கிறார்களே, பதில் சொல்வீரா?
[5] he Last Judgment, Final Judgment, Day of Reckoning, Day of Judgment, Judgment Day, Doomsday or The Day of the Lord (Hebrew: יום הדין, romanized: Yom ha-din, Arabic: یوم القيامة, romanized: Yawm al-qiyāmah, lit. ’Day of Resurrection’ or Arabic: یوم الدین, romanized: Yawm ad-din, lit. ’Day of Judgement’) is part of the Abrahamic religions and in the Frashokereti of Zoroastrianism.
கிறிஸ்தவத்துக்குஎதிரானசெயல்களைச்செய்ததற்காகஇறுதித்தீர்ப்புநாளின்போதுமனுதாரரைகடவுள்கண்டிப்பார்எனகருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].
அரசியல், அரசியலாக்கப்பட்டநீதித்துறை, திராவிடத்துவகுழப்பங்கள்–சமரசங்கள்முதலியவ்ற்றின்தக்கம்காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே. ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.
நீதிபதிகள்விமர்சனத்திற்குஉள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக்கூச்சநாச்சமில்லாமல்ஒருநீதிபதியேகுற்றவாளியின்வழக்கறிஞராகமாறிப்பேசியநிகழ்வுதமிழகநீதிமன்றவரலாற்றில்நிகழ்ந்துள்ளது. இதற்குமுன்புகாஞ்சிசங்கராச்சாரியார்தமிழ்த்தாய்வாழ்த்தைஅவமதித்தாகத்தொடரப்பட்டவழக்கிலும்தன்சார்புநிலையைபட்டவர்த்தனமாகவெளிப்படுத்தினார்இதேநீதிபதிஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையானவிமர்சனங்களுக்கோமாற்றுக்கருத்துகளுக்கோஇடமின்றிதடாலடியாகஅவதூறுபரப்புவதும், மதத்துவேஷக்கருத்துக்களைவிதைப்பதும், குறிப்பிட்டஒருஅரசியல்இயக்கத்தைஅழிப்பதேஎன்நோக்கம்எனப்பிரகடனப்படுத்திஇயங்குவதும்மாரிதாஸின்இயல்பாகஉள்ளது. மாரிதாஸுக்காகமத்தியஅரசின்கூடுதல்சொலிசிடர்ஜெனரல்அலுவலகத்திலிருந்துவக்கீல்நோட்டீஸ்எப்படிபோகிறது? மாரிதாஸுக்காகவழக்காடும்வழக்கறிஞரின்பின்னணிஎன்ன? வழக்கைநடுநிலையோடுபரிசீலிக்கவேண்டியநீதிபதிமாரிதாஸின்கட்சிக்காராகவெளிப்படும்அவலத்தைஎன்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].
தீர்ப்பைப்பற்றியஎன்னுடையகமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:
1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!
2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!
3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!
4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!
5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!
6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..
7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!
8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!
9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….
10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.
மோசமானமுன்–உதாரணதீர்ப்பா, செக்யூலரிஸசமரசமா, கர்த்தரின்பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!
[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.
[6] ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
[7] சமயம்.தமிழ், மாரிதாஸ்மீதானவழக்குரத்து; மாறுபட்டபார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.
26/11 நேரத்தில்வரும்செய்தியும், கிருத்துவமிஷினைகளும்: சமீபத்தில் ஒரு லிருத்துவ மிஷனரி இளைஞன் சென்டினல் தீவில், அத்துமீறி நுழைந்ததால், கொல்லப்பட்டதைக் குறித்த செய்திகள், உலகம் மற்றும் இந்திய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளக வெளிவந்தன. முழு விவரங்கள் தெரியாமல் இருந்தாலும், ஆங்கில ஊடகங்களில் வந்தவற்றை வைத்து அரைகுறை விசயங்களை செய்திகளாக போட்டன.கிருத்துவ ஊடகங்கள் அவன் ஏதோ ஒரு பெரிய தியாகத்தை செய்து விட்டான், மதத்திற்காக உயிர் துறந்தான் என்ற ரீயிலிருந்து, இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள், பலியிடப் படுகிறார்கள் என்ற வரை நீட்டிக்க முயன்றனர்.. ஆனால், திடீரென்று வேகமாக எழுந்த அதே நிலையில், அப்படியே அடங்கி விட்டது. இதுதான் வியப்பாக இருக்கிறது. 26/11 விவகாரத்தில் கூட, ஒரு அமெரிக்க கிருத்துவ மிஷினரி மாட்டிக் கொண்டான். அதாவது, ஊடக அலுவலகங்களுக்கு, தாங்கள் இங்கெல்லாம் தாக்கப் போகிறோம் என்ற இ-மெயில்கள் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மூலம் அனுப்பப் பட்டது அறிந்து சென்றபோது, அது அந்த அமெரிக்க கிருத்துவ மிஷினரியின் இடமாக இருந்தது. உடனே, அமெரிக்க அரசு அவனை அப்படியே தூக்கிச் சென்று விட்டது, அச்செய்தியும் அமுக்கப் பட்டது. இப்பொழுதும் அதெ 26/11 நேரத்தில், இச்செய்தி வந்து அடங்கி விட்டது போல தோன்றுகிறது.
சட்டங்களைமீறிஜான்ஆலன்சௌசென்டினல்தீவுக்குசென்றது: அந்தமானில் உள்ள பல்வேறு தீவுகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் தனிமையாக வசிக்கும் 29 தீவுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட யாரும் செல்லக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்திய அரசே அந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், அங்கே சுற்றூலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது[1]. இந்நிலையில் சாகசங்களில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவை சேர்ந்த ஜான் அலன் சாவ் [John Allen Chau] என்ற இளைஞன் அந்தமான் சென்றுள்ளான். பலமுறை இந்தியா வந்துள்ள அவன், அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு தடையை மீறி ரகசியமாக செல்ல விரும்பினான். உள்ளூர் மீனவர்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்கள் உதவியுடன் படகில் கடந்த நவம்பர் 14 ந்தேதி 2018, புதன் கிழமை அன்று வடக்கு சென்டினல் தீவுக்கு செல்ல முயன்றான். பணத்திற்கு ஆசைப்பட்டு, மீனவர்கள் அலனை தீவில் இறக்கி விட்டு சென்று விட்டனர். அதற்கு பிறகு நடந்தது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
கிருத்துவமிஷனரிக்குசெல்வதற்குவேறுஇடம்கிடைக்கவில்லையா?: ஜான் ஆலன் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று கிறித்துவ மதத்தை போதித்து வந்திருக்கிறான். மூன்று ஆண்டுகளில் அந்தமான் தீவுக்கு நான்கைந்து முறை சென்றிருக்கிறான் ஆலன். நவீன கொலம்பஸ் என தன்னைக் கருதிக்கொண்ட ஆலன், செண்டினல் பழங்குடிகளுக்கு கிறித்தவ மதத்தை போதித்து, ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யப் போவதாக தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறான்.’கிறிஸ்டியன் கர்சன்’ என்ற மத அமைப்பு, ஜான் ஆலன் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜான் ஆலன் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருக்கிறது. ஜான் ஆலனோ, தான் கொல்லப்பட்டால் பழங்குடிகளை மன்னிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளான். அவனுடைய குடும்ப அங்கத்தினர்கள் உலகம் முழுக்க கிறித்தவ மதத்தைப் பரப்பச் சென்ற போதகர்களே. அத்தகையோர், பின்னாளில் காலனி ஆட்சிகளுக்கு வழிவகுத்தார்கள். இயற்கை மற்றும் இறந்தவர்களை வணங்குவதை சாத்தானை வணங்குவதாகச் சொல்லி ஜீசஸை அறிமுகப்படுத்தி, அவர்களை ‘விடுவிக்க’ பார்த்திருக்கிறான் ஆலன்[2]. அப்படித்தான் கொலம்பஸ் அமெரிக்கா சென்று செவ்விந்தியர்களை திருத்துவதாகச் சொல்லி இன்று வெள்ளையர்கள் அப்பழக்குடி மக்களை கிட்டத்தட்ட அழிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்[3].
அமெரிக்கமிஷினரிகளுக்குஇந்தியாவில்என்னவேலை?: முன்னர் பிடோபைல், குழந்தை கற்ப்பழிப்பாளி விவகாரங்களில் நிறை பேர் மாட்டிக் கொண்டதில் அமெரிக்கர் இருந்தனர். அதாவது, மனித உரிமை, சிறுவர் உரிமை பேசும் நாட்டிலிருந்து வந்தவர் தாம் அத்தகைய நீச குற்றங்களை செய்தது. இப்பொழுது, திருட்டுத் தனமாக ஊழியம் செய்ய, சாட்டங்களை மீறி இவன் நுழைந்திருக்கிறான். உலகில் அமெரிக்காதான் கடுங்கோட்பாட்டு கிறித்தவ மத பிற்போக்கு நம்பிக்கைகளுக்கு இன்றும் தலைமையகமாக திகழ்கிறது. கிராமத்தில், ஊரில் இருக்கும் பெந்தகோஸ்தே, ஆவிஎழுப்பு கூட்டங்கள் அனைத்திற்கும் ட்ரெண்ட் செட்டர் அமெரிக்காதான். அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பு மக்களிடையே தோற்றுவித்திருக்கும் பதட்டம் காரணமாக அங்கே அடிக்கடி துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன. இன்னொரு புறம் இத்தகைய மதவாதிகள் மக்களை பிடித்து பிற்போக்காய் வைத்திருக்கின்றனர். தனது சொந்த நாட்டின் சாத்தானாகிய முதலாளித்துவத்தை பார்க்க இயலாத ஆலன் இங்கே அப்பாவியான பழங்குடிகளை சாத்தானாக பார்த்து பரலோகம் சென்றிருக்கிறான்.
சென்டினல்மக்களின்தனியுரிமைமீறிநடக்கதைரியம்எப்படிவந்தது?: அந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956ன் கீழ் இம்மக்களின் தனியுரிமையை பாதுகாத்து வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் அனுமதியின்றி இப்பகுதியில் யாரும் செல்லக் கூடாது. அப்படி செல்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அவர்களை சந்திக்க விரும்புதல், உணவு, உடைகள் போன்றவற்றை தர முயற்சித்தல் போன்றவை சட்ட விரோதமாகும். மேலும் வடக்கு செண்டினல் தீவுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் உள் நுழையக் கூடாது என்று 1990களில் மத்திய அரசு அறிவித்தது. அப்படியிருக்க அவனே பெருமையாக சொல்லிக் கொண்டபடி, கப்பற்படை, கடற்பாதுகாப்பு போலீஸார்-ராணுவம், சுங்கம் முதலியவற்றைடெல்லாம் மீறி, எப்படி, ஏன் அவன் திருட்டுத் தனமாக நுழைந்தான்? ஆனால், அவன் நுழைந்தது, போர்ட் பிளையரில் இருக்கும் மிஷினரி, சென்னை அமெரிக்கத் தூதரகம், நண்பகள், மீனவர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆக, அத்தகைய சட்டமீறல் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?
ஏழுமீனவர்கள்கைதுஎன்றால், அவன்அங்குசென்றுள்ளான்என்றறிந்தமற்றவ்ர்களைஏன்வீட்டுவைத்தார்கள்?: அமெரிக்காவில் இருக்கும் வாசிங்கடனைச் சேர்ந்த 26 வயது இளைஞரன் ஆலன். சாகச பயணங்களை அதிகம் விரும்புவன். ஓரல் ரோபர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றான். வடக்கு செண்டினல் தீவில் கிருத்துவ மதத்தை பரப்பும் நோக்கில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக அவரின் நண்பர்களிடம் கூறியிருக்கிறான். அந்த தீவிற்கு செல்லும் போது வாட்டர் ப்ரூஃப் பைபிள் வைத்திருந்தான். அப்பொழுது அங்குள்ள பழங்குடியின மக்கள் அம்புகளை எய்து தாக்கியதாக கூறப்படுகிறது[4]. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அலனை அங்கேயே விட்டு விட்டு தப்பி வந்துள்ளனர்[5]. மூன்று நாட்கள் கழித்து 17-11-2018 சனிக்கிழமை அன்று மீனவர்கள் மீண்டும் சென்று பார்த்த போது பழங்குடியின மக்கள் அலனை கொன்று மணலில் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தமான் திரும்பிய அந்த மீனவர்கள் அலனின் நண்பரான உள்ளூர் மதபோதகரிடம் கூறியுள்ளனர். அவர் அமெரிக்காவில் உள்ள அலனின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளார். அலனின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், அந்தமான் – நிகோபர் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளது. அதன் பேரில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி அலனுக்கு உதவிய ஏழு மீனவர்களை கைது செய்துள்ளனர்.
[1] விகடன், அந்தமான்பழங்குடியினமக்களால்கொல்லப்பட்டஅமெரிக்கசுற்றுலாப்பயணி!, சா.ஜெ.முகில் தங்கம் வெளியிடப்பட்ட நேரம்:21:20 (21/11/2018), கடைசி தொடர்பு:21:20 (21/11/2018)
[2] தமிழ்.ஒன்.இந்தியா, யார்இந்தசென்டினல்பழங்குடியினர்.. ஆச்சரியம்தரும்அந்தமான்தீவுஅதிசயமனிதர்கள்!, By Vishnupriya R Updated: Tuesday, November 27, 2018, 9:54 [IST]
[4] தினத்தந்தி, அந்தமான்தீவில்அமெரிக்கஇளைஞர்கொலை : உள்துறைஅமைச்சகம்அறிக்கைஅளிக்கபழங்குடியினத்தவர்தேசியஆணையம்கோரிக்கை, பதிவு : நவம்பர் 23, 2018, 07:15 AM மாற்றம் : நவம்பர் 23, 2018, 10:19 AM