லாவண்யா அப்பா-அம்மா-தாத்தா-பாட்டி-மாமா விசாரணை, சரி, பிறகு ஏன் பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் என்றெல்லாம் விசாரிக்கவில்லை? செக்யூலரிஸம் வேலை செய்யவில்லையா? (4)

லாவண்யா அப்பா-அம்மா-தாத்தா-பாட்டி-மாமா விசாரணை, சரி, பிறகு ஏன் பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் என்றெல்லாம் விசாரிக்கவில்லை? செக்யூலரிஸம் வேலை செய்யவில்லையா? (4)

யூடியூப் சேனலுக்கு பேட்டி பாட்டி பேட்டி: இந்தநிலையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மாணவியின் பாட்டி நித்யானந்த சரஸ்வதி என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.அந்த பேட்டியில் அவர், “லாவண்யாவின் தாய் 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு தஞ்சையில் உள்ள பள்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவரது சித்தி லாவண்யாவின் கன்னத்தில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக மாணவியின் தோழிகள் தனக்கு தெரிவித்தார்கள். எனவே நான் சம்பவம் குறித்து சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவித்தேன். சைல்டுலைன் ஊழியர்கள் சிறுமியை சந்தித்தபோது சித்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்,” என தெரிவித்து இருந்தார். இவ்வாறு, இப்பொழுது, இந்த யு-டியூப் கலாச்சாரமும் பெருகிவிட்டது. பேட்டி கொடுக்கவும் மக்கள் தயாராகி விடுகின்றானர். நாங்கள் இப்படி கேள்வி கேட்போம், நீங்கள் இப்படி பதில் சொல்லுங்கள் என்ற தொரணையில் தான் வீடியோ-பேட்டி நடக்கின்றன.

29-01-2022 – லாவண்யா தாத்தாபேட்டியிடம் போலீஸார் விசாரணை: இந்த பேட்டியை தொடர்ந்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் சரவணம்பட்டி எழில் நகருக்குச் சென்று நித்யானந்த சரஸ்வதியையும், அவரது கணவரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். 30 நிமிடங்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவின் உறவினர் திருப்பூர் பனியன் கபெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், அவர் மாணவி இறப்பதற்கு முன்பு அவரை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவர் யூடியூப் சேனலில் கூறியதை போலீசார் வாக்குமூலமாக வீடியோ எடுத்தனர்[1]. அப்போது நித்யானந்த சரஸ்வதி தனக்கு தலைசுற்றுவதாக அதிகாரிகளிடம் கூறினார். உடனடியாக, அவரது மகன் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து போலீசார் தேவை பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என அவரிடம் தெரிவித்தனர்[2].

சிறுமியின் தாய்மாமா பிரபாகரனிடம் விசாரணை: சிறுமி விஷம் குடித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ​​திருப்பூரில் வசிக்கும் சிறுமியின் தாய்மாமா பிரபாகரன் தங்களை அழைத்து பேசியதையும் போலீஸ் விசாரணையில் தாத்தா பாட்டி தெரிவித்தனர்[3]. இதனையடுத்து திருப்பூரில் உள்ள மாணவியின் தாய்மாமா பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 30-1-2022 அன்று காலை பிரபாகரனிடம், டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்[4].

 செக்யூலரிஸம் இப்படித் தான் வேலை செய்யும் போலிருக்கிறது: லாவண்யா அப்பா-அம்மா பிறகு, இப்படி லாவண்யா தாத்தா-பாட்டி-மாமா என்று அனைவரையும் விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். 20-01-2022 அன்று கன்னியாஸ்திரி சஹாய மேரி சிறார் கொடுமை சட்டத்தின் கீழ் கைதானது பற்றி கத்தோலிக்கக் குழுக்கள் விவாதிக்கின்றனர்[5]. கத்டோலிக்க ஆயர் குழு அறிக்கைப் பற்றி முன்னமே குறிப்பிடப் பட்டது. மோடி போப்பை சந்தித்து, உரையாடல் ஆரம்பித்துள்ள போது, கேரளாவில் கிருத்துவர்கள்-ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சுமுகமாக இருக்கும் பொழுது, தமிழக கத்தோலிக்கர் ஏன் இப்படி, திராவிடத்துவ நாத்திகர்-இந்துவிரோதிகளுடன் சேர்ந்து கொண்டு பணியாற்றுகின்றனர் என்பது புதிராக இருக்கிறது. இதைப் பற்றி கிருத்துவர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்[6]. பிறகு, பள்ளி, விடுதி, பிரான்சிஸ்கன் சிஸ்டர்ஸ் . [the Franciscan Sisters of the Immaculate Heart of Mary (FIHM])[7], என்று எல்லோரையும் விசாரிக்கவில்லை. சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்றால், அவ்வாறு செய்யலாமே?

27-01-2022 லாவண்யா இறப்பு பற்றி விசாரிக்க பிஜேபி குழு அமைக்கப் பட்டது: இந்நிலையில், தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது[8]. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்த கொண்டது கவலையும் வருத்தமும் அளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட  குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார்[9].

குழு உறுப்பினர்கள் விவரங்கள்[10]:

  1. சந்தியா ரே, எம்.பி – மத்திய பிரதேசம்
  2. விஜயசாந்தி – தெலங்கானா
  3. சித்ரா தாய் வாக் – மகாராஷ்டிரா
  4. கீதா விவேகானந்தா – கர்நாடகா

இக்குழு 31-01-2022 அன்று தமிழகம் வருகிறது[11].

தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லைநேரடியாக தமிழகம் விரையும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்![12]: தஞ்சாவூர் மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சாவூருக்கு குழுவை அனுப்பி உள்ளது. இதுகுறித்து என்சிபிசிஆர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு[13]: “தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளியின் மைனர் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த புகாரை, குழந்தைகள் உரிமை ஆணையம் பெற்றுக்கொண்டது. இது குறித்து விசாரிக்க தலைவர் பிரியங்க் கனோங்கோ தலைமையிலான குழு தமிழகத்துக்கு வருகை தரவுள்ளது”.

என்சிபிசிஆர் வரவு, விசாரணை அரசியல் தாக்கம்: எனவே, வழக்கின் உண்மைகளை அறிய என்சிபிசிஆர் ஜனவரி 30 மற்றும் 31 க்கு இடையில் சம்பவ இடத்திற்கு வருகை தருகிறது. மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே விசாரணைக்கு ஆணையமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்றும் என்சிபிசிஆர் தெரிவித்துள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புலனாய்வு அதிகாரி அவர்களின் இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெற்றோரைச் சந்திப்பது, இறந்தவரின் வகுப்புத் தோழர்களுடன் உரையாடல், இறப்பதற்கு முன் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் இறந்தவரின் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் விசாரணை, பள்ளி அதிகாரிகளைச் சந்தித்தல் மற்றும் உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை, என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையம் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை / மதரீதியிலான பிரச்சாரம் எதுவும் இல்லை: அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என்றும்[14] மதரீதியிலான பிரச்சாரம் தலைமையாசிரியராலோ அல்லது ஆசிரியராலோ பள்ளியில் செய்யப்படவில்லை என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சரும் அதற்கான விளக்கத்தை வெளியிட்டார்[15]. ஆக, இந்நிலையில், இப்பிரசினை அரசியலாக்கப் பட்டு விட்டது. இனி, இந்திய ரீதியில், இப்பிரச்சினை அலசப்படும். மாணவி தற்கொலை, மதமாற்றம் விசயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நல்லது, ஆனால், அதே நேரத்தில் அரசியல் செய்வது கண்டிக்கத் தக்கது. செக்யூலரிஸம், சிறுபான்மையினர், கிருத்துவர் என்ற ரீதியில் தான், திமுக இவ்வாறான மோசமான அரசியில் செய்து வருகின்றது.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] மாலைமலர், தஞ்சையில் தற்கொலை செய்த மாணவி லாவண்யாவின் தாத்தாபாட்டியிடம் கோவையில் விசாரணை, பதிவு: ஜனவரி 30, 2022 17:31 IST.

[2] https://www.maalaimalar.com/news/district/2022/01/30173109/3436229/Tamil-news-Lavanyas-grandparents-interrogated-in-Coimbatore.vpf

[3] நியூஸ்.18.தமிழ், மாணவி தற்கொலை வழக்கு: கோவையில் உள்ள தாத்தா பாட்டியிடம் விசாரணை, NEWS18 TAMIL, LAST UPDATED : JANUARY 30, 2022, 05:24 IST.

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-police-investigated-the-grand-parents-of-ariyalur-girl-mur-678465.html

[5] Sister Sahaya Mary, the 62-year-old hostel warden, was arrested under the Juvenile Act apart from charges of abetting suicide. The place is near Poondi Madha shrine that comes under the diocese of Kumbakonam. Jesuit Father Arockiasamy Santhanam, spokesperson for the National Lawyers Forum of Religious and Priests, says the First Information Report does not mention conversion. “It is the cook up story by the Hindutva elements,” he told Matters India January 21.

Matters India, Nun arrested after hostel girl dies by suicide in Tamil Nadu, By Matters India Reporter,  ON: JANUARY 22, 2022

[6] Father Kudanthai Gnani, editor of Namvazhvu, a Church weekly, says the girl, who died January 19, was a twelfth grader in Sacred Heart of Jesus Higher Secondary School in Kumbakonam diocese. The century-old school is situated in Michaelpatti near Thirukattuppalli in Thanjavur district. The girl had been staying in St. Michael’s Hostel from the eighth grade. The hostel is attached to the school and managed by the Congregation of the Franciscan Sisters of the Immaculate Heart of Mary, or the Pondicherry Blues, for the poor and the abandoned girls.

[7] The Congregation of the Franciscan Sisters of the Immaculate Heart of Mary (FIHM), was founded in Pondicherry, India, on 16th October 1844 by Rev. Fr. Louis Savinien Dupuis, Missions Etrangeres de Paris (Paris Foreign Mission Society, MEP). http://www.fihm.org/aboutus.html

[8] தினமணி, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மேலிடம், By DIN  |   Published on : 27th January 2022 05:14 PM.

[9] https://www.dinamani.com/india/2022/jan/27/bjp-forms-committee-to-assess-ariyalur-suicide-3781253.html

[10] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தஞ்சை மாணவி மரணம்: நேரில் விசாரித்து அறிக்கை தர பா.. மேலிட குழு நியமனம், Written by WebDesk, January 27, 2022 3:37:30 pm.

[11] https://tamil.indianexpress.com/india/jp-nadda-formed-4-member-committee-to-investigate-thanjavur-girl-suicide-case-402959/

[12] கதிர்.செய்திகள் தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லைநேரடியாக தமிழகம் விரையும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!, By : Anand T Prasad  |  30 Jan 2022 11:16 AM

[13] https://kathir.news/tamil-nadu/ncpcr-says-tamil-nadu-govt-not-cooperating-in-probe-of-m-lavanya-suicide-case-chairperson-led-team-to-visit-the-state-for-inquiry-1351506

[14] தமிழ்.ஆசியாநெட்.நியூஸ், Girl suicide: பள்ளியில் மத பிரச்சாரம் செய்யப்படவில்லை..அப்படி எந்த புகாரும் இதுவரை வரவில்லைபள்ளிகல்வித்துறை, Thanalakshmi V, Tamilnádu, First Published Jan 27, 2022, 7:26 PM IST, Last Updated Jan 27, 2022, 7:26 PM IST.

[15] https://tamil.asianetnews.com/politics/school-education-statement-about-girl-suicide-r6dg1o

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.