Archive for the ‘இறத்தல்’ Category

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்தி யபெண்- உடனடியாகக் கொல்லப் பட்டது, பின்னணி என்ன?

பிப்ரவரி 14, 2024

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய பெண்உடனடியாகக் கொல்லப் பட்டது, பின்னணி என்ன?

பாஸ்டர் ஜோயல் ஓஸ்டீன் லேக்வுட் சர்ச்: அமெரிக்காவில் தனிமனிதர்கள் சர்ச்சுகளை ஆரம்பித்து நடத்துவதும், அவற்றில் அவ்வூர் மக்கள் உறுப்பினர்களாகி, செயல்பட்டு வருவதும் தெரிந்த விசயமே. அமெரிக்காவில் இது ஒரு பெரிய வியாபாரம் எனலாம். பொதுவாக அவர்கள் கத்தோலிக்கப் பிரிவு இல்லாதவர்களாக இருப்பார்கள். இவ்வாறு உருவாக்கப் பட்ட, அமெரிக்காவின் ஹூஸ்டன் [Osteen] நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில் ஜோயல் ஆஸ்டீன் லேக்வுட் [pastor Joel Osteen’s Lakewood church[1]] என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் (சர்ச்) ஒன்று உள்ளது[2]. 1950ல் ஓஸ்டீனின் தந்தையால் ஆரம்பிக்கப் பட்ட சர்ச் ஆகும்[3]. இந்த ஆலயம் நகரில், மக்கள் பரவலாக கூடும் மற்றும் அதிக பரபரப்பு நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது[4]. நகரில் 6 மைல்கள் பரப்பளவில் அமைந்த மிக பெரிய ஆலயமும் ஆகும்[5]. இதற்கு தனி கட்டிடம், தொலைகாட்சி, என்று எல்லா வசதிகளும் இருக்கின்றன. கோடானு கோடிகளில் நிதியும் பெற்று வருகின்றது. பல சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருவதாக, சர்ச்சின் இணைதளம் கூருகிறது.

பலதரப்பட்ட அமெரிக்க மக்களின் பிரச்சினைகள்: யு.எஸ் & மெக்ஸிகோ எல்லையில் குடும்பங்களுக்கு சேவை செய்யும் புலம்பெயர்ந்த தலைவர்களுடன் பணிபுரிதல். எல்லையோர சமூகத்தினருக்கான வாழ்க்கையின் தனித்துவமான அம்சங்களுக்கு குழு அறிமுகப்படுத்தப்படும் மற்றும் கலாச்சார தடைகள் மூலம் வழிகாட்டுதல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தெற்கில், தொடர்ந்து அமெரிக்காவில் மற்றநாட்டவர் உள்ளே நுழைவது சாதாரணமாக இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. ஏற்கெனவே, அமெரிக்க பூர்வீக மக்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், அமெரிக்க பூர்வீகக் குடிகளான, செவ்விந்தியர்களுக்கு அரசாங்க வேலை, ஆட்சி அதிகாரம் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. ஆப்பிரிக்க மக்கள் இருக்கும் நிலையில் கூட செவ்விந்தியர்கள் இல்லை. அந்நிலையில், மத்திய-தெ அமெரிக்க நாடுகளிலிருந்து, அமெரிக்காவுக்கு வரும் அகதிகளால், அத்தகைய வேறுபாடு அதிகமாக்கும் நிலையும் உள்ளது.

11-02-2024 அன்று சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொலை: அத்தோலிக்கர் அல்லாத சர்ச்சுகள், ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமாக ஆர்பாட்டத்துடன் நிகழ்சிகளை நடத்துவது சாதாரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் அது, விடுமுறை கொண்டாட்டம் போன்றது. அதனால், குடும்ப்த்துடன் கலந்து கொள்வார்கள். அதிகாளவில் கூட்டமும் இருக்கும். ஆக, இங்கும் அத்தகைய நிலை தான் இருந்தது. இந்நிலையில், 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆலயத்திற்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஆண் குழந்தை ஒன்றுடனும், மற்றொரு கையில் துப்பாக்கியுடனும் நுழைந்துள்ளார்[6]. அவர், ஆலயத்தில் நுழைந்ததும் துப்பாக்கியால் சுட தொடங்கினார்[7]. அதாவது, அப்பெண் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறான பீதியை உண்டாக்க வேண்டும் என்ற ரீதியில் தான் திட்டத்துடன் வந்து காரியத்தைச் செய்திருக்கிறாள். இதனால் பிரார்த்தனைக்காக கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்[8].

பாதுகாப்பு போலீசார் உடனடியாக அப்பெண்ணைச் சுட்டது: இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார், அதனை கவனித்து, உடனடியாக அவரை நோக்கி சுட்டனர்[9]. உழந்தையுடன் இருந்ததால், ஜாக்கிரதையாகத்தான் செயல்பட்டிருக்கின்றனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார்[10]. அவருடைய கையில் இருந்த 5 வயது கொண்ட குழந்தைக்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது[11]. உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்[12]. இதேபோன்று 57 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்[13]. பாதுகாவலர் உடனடியாக, அப்பெண்ணைச் சுட்டுக் கொன்றதால், பலர் உயிர்களுக்கும் அபாயம் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்படவிருக்கும் அசம்பாவிதம் முதலியன தடுக்கப் பட்டன எனலாம். அந்த பெண் யார், அவளுக்கு, இந்த சர்ச்சுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக சுடுவதற்கும் ஹயாராக துபாக்கியுடன் நுழைந்தாள் போன்ற விவரங்கள் தெரியவில்லை.போலீசாரும் இசாரிப்பதாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.

பாலஸ்தீன ஸ்டிக்கர் ஒட்டப் பட்ட துப்பாக்கி: இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரியான பின்னர் என்பவர் கூறும்போது[14], சம்பவ பகுதியிலேயே அந்த பெண் மரணமடைந்து உள்ளார். குழந்தையை சுட்டது யார் என தெரியவில்லை. ஆண் நபரையும் துப்பாக்கியால் சுட்டது யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இந்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி பற்றிய விவரம் எதுவும் தெரிய வரவில்லை. குழந்தைக்கும், அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட AR-15 ஐப் பயன்படுத்தி அதில் “பாலஸ்தீனம்” ஸ்டிக்கரைப் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு கூட்டாட்சி சட்ட அமலாக்க ஆதாரம் முன்பு CNN இடம் துப்பாக்கியில் “ஃப்ரீ பாலஸ்தீனம்” என்று எழுதப்பட்டிருந்தது. அவளது பையில் .22 காலிபர் ஆயுதமும் இருந்தது, அது தாக்குதலில் பயன்படுத்தப்படவில்லை என்று மத்திய சட்ட அமலாக்க வட்டாரம் தெரிவித்துள்ளது. புலனாய்வாளர்கள் அவர் அரசியல் உள்நோக்கம் கொண்டவரா அல்லது மன உளைச்சலுக்கு ஆளான நபரா என்பதை கண்டறிய முயன்று வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனநலப் பிரச்சினைகளின் வரலாற்றைக் கொண்டிருந்தார்[15]: மோரேனோவின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தகவல்கள், மனநல சவால்களின் வரலாற்றைக் கொண்ட ஒரு தாயின் உருவப்படத்தை எடுத்துக் காட்டுகின்றன[16]. ஒரு திங்கட்கிழமை செய்தி மாநாட்டின் போது, ஹூஸ்டன் படுகொலைத் தளபதி கிறிஸ்டோபர் ஹாசிக், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆண் மற்றும் பெண் பெயர்கள் உட்பட பல மாற்றுப்பெயர்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார். மோரேனோ 2016 இல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், காவலில் வைக்கப்பட்டார், மேலும் ஹூஸ்டன் காவல்துறையால் ஆவணப்படுத்தப்பட்ட மனநல வரலாறு அவருக்கு உள்ளது என்று ஹாசிக் கூறினார். டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பதிவுகள், கடந்த இரண்டு தசாப்தங்களாக மரிஜுவானா, தாக்குதல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், கைது மற்றும் போலிக் குற்றச்சாட்டு உள்ளிட்ட சிறு குற்றங்களுக்காக மொரேனோ கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனது 30 வயதில், ரியல் எஸ்டேட் மற்றும் நிதிச் சேவை நிறுவனத்தை நிறுவியவர் என்று சமூக ஊடகங்களில் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார். சமூக ஊடக பக்கங்களில் தனது சொந்த கணக்கின் மூலம், அவர் புதிய குடியிருப்புகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்தின் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். மார்ச் 2020 இல் ஒரு சமூக ஊடக இடுகை, மொரேனோவின் நன்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் லேக்வுட் தேவாலயத்தின் படிவக் கடிதத்தின் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டுகிறது. தவிர, தனது கணவனையும் துன்புருத்தி வருவதாகத் தெரிகிறது ஏனெனில், அவளது கணவர் அத்தகையப் புகாரைக் கொடுத்துள்ளார்..

© வேதபிரகாஷ்

14-02-2024


[1] https://www.lakewoodchurch.com/

[2] தினத்தந்தி, அமெரிக்கா: சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை, தினத்தந்தி பிப்ரவரி 12, 7:25 am (Updated: பிப்ரவரி 12, 2:11 pm).

[3] Its origins were humble. In fact, the first meeting of Lakewood Church was held in a converted feed store on the outskirts of Houston on Mother’s Day, 1959. A caring atmosphere, quality leadership, and community outreach attracted people from all ages, religious backgrounds, races, and walks of life. https://www.lakewoodchurch.com/about/history

[4] https://www.dailythanthi.com/News/World/prime-minister-modi-launched-upi-in-abu-dhabi-1093720?infinitescroll=1

[5] மக்கள் குரல், அமெரிக்கா சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை, Posted on February 12, 2024

[6]https://makkalkural.net/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/

[7] தமிழ்.ஒன்.இந்தியா,

[8] https://www.oneindia.com/international/houston-megachurch-shooting-woman-killed-child-injured-gen-3748655.html

[9] செய்திசோலை, குழந்தையுடன் வந்த பெண்…. திடீரென செய்த கொடூரம்…. சுட்டு தள்ளிய போலீஸ்….!!,  February 12, 2024

[10]https://www.seithisolai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4/

[11] Indian TV News, Texas: Woman accompanied by five-year-old boy opens fire at church killed, two injured, Edited By: Raju Kumar , @rajudelhi123, Houston, Updated on: February 12, 2024 8:18 IST

[12] https://www.indiatvnews.com/news/world/texas-shooting-woman-accompanied-by-five-year-old-boy-opens-fires-at-church-killed-two-injured-2024-02-12-916385

[13] ANI News, US: Woman gunned down after shooting at Lakewood church in Houston, ANI | Updated: Feb 12, 2024 05:00 IST

[14] https://www.aninews.in/news/world/us/us-woman-gunned-down-after-shooting-at-lakewood-church-in-houston20240212050048/

[15] CNN, Shooter at Houston megachurch had lengthy criminal history including weapons charges, police say, By Christina Maxouris, Lauren Mascarenhas and John Miller,  Updated 12:46 AM EST, Tue February 13, 2024

[16] https://edition.cnn.com/2024/02/12/us/joel-osteen-lakewood-church-shooting-monday/index.html

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

மே 15, 2023

பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!

கென்யாவில் பட்டினி வழிபாடு நடத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல்  26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].

பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7].  அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8].  பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.

பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

15-05-2023


[1] தினமலர், கென்யாவில் பட்டினி வழிபாட்டில் பலி எண்ணிக்கை 201 ஆக உயர்வு, மாற்றம் செய்த நாள்: மே 15, 2023 05:33

[2] https://m.dinamalar.com/detail.php?id=3320972

[3] ஏபிபிலைவ், கென்யாவில் ஏசு கிறுஸ்துவை காண உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த 47 பேர்!,By: பாண்டிம்மா தேவி | Updated at : 24 Apr 2023 12:25 PM (IST);  Published at : 24 Apr 2023 12:25 PM (IST)

[4] https://tamil.abplive.com/news/world/to-meet-jesus-47-cult-members-in-kenya-allegedly-starve-to-death-5-facts-113425

[5] தினத்தந்தி, கடவுளை காணலாம்கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு, தினத்தந்தி மே 15, 6:32 pm.

[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.

https://theconversation.com/kenya-cult-deaths-a-new-era-in-the-battle-against-religious-extremism-205051

[7] https://www.dailythanthi.com/News/World/god-can-be-found-atrocity-in-kenya-201-bodies-including-children-were-dug-up-and-recovered-964949

[8] தந்தி டிவி, கடவுளை நேரில் பார்க்க ஆசைப்பட்டு – 201 பேர் பலி, By தினத்தந்தி, 15 மே 2023 2:02 PM.

[9] https://www.thanthitv.com/latest-news/desperate-to-see-god-in-person-201-people-died-186330

[10] குமுதம், கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் – 213 பேரை தேடும் பணி தீவிரம், S. Joseph Raj, மே 15, 2023.

https://www.kumudam.com/news/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-213-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

[11]

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

நவம்பர் 11, 2022

இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!

இந்து குடும்பம் மதம் மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5].  சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6].  போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.

பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8].  அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது.  சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர்.  இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.

உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.

மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதி மற்றும் அவரது இரு மகன்களும் குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு தங்களை மதமாற்றம் செய்து கொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததும் தெரியவந்தது.வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் இது வெளியே தெரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].

2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12].  இங்கும், அது பொறுந்தும்..

© வேதபிரகாஷ்

11-11-2022


[1] மாலைமலர், இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர , Byமாலை மலர்11 நவம்பர் 2022 8:01 AM.

[2] https://www.maalaimalar.com/news/district/tamil-news-police-search-youth-for-harassment-case-535220?infinitescroll=1

[3] தினத்தந்தி, இறந்த பெண்ணின் உடலுடன் 2 நாளாக இருந்த டாக்டர் குடும்பத்தினர், தினத்தந்தி நவம்பர் 11, 1:29 am.

[4] https://www.dailythanthi.com/News/State/the-doctors-family-was-with-the-dead-womans-body-for-2-days-834297

[5] விகடன், மதுரை: உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் பெண்ணின் உடல் 3 நாளாக வைக்கப்பட்டிருந்ததா?!, செ.சல்மான் பாரிஸ், Published: 11-11-2022- Today at 10 AM; Updated: Today at 10 AM

[6] https://www.vikatan.com/news/tamilnadu/family-members-kept-body-for-three-days-hoping-that-she-will-come-back-in-prayers

[7] பாலிமர் செய்தி, இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்…! மதுரையில் சம்பவம், நவம்பர்.11, 2022 06:28:51 AM; https://www.polimernews.com/dnews/191621

[8] https://www.polimernews.com/dnews/191621

[9] தமிழ்.ஒன்.இந்தியா, அல்லேலூயா சொல்லு.. அம்மா வந்துருவாங்க! 3 நாட்களாக சடலத்துடன் ஜெபம்! டாக்டர் மகன்களை நம்ப வைத்த பாலு!, By Rajkumar R, Published: November 11 2022, 12:07 [IST].

[10] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/the-husband-prayed-for-3-days-that-the-dead-woman-would-come-back-to-life-484738.html

[11] வேதபிரகாஷ், இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?, ஜனவரி 1, 2021.

[12] https://christianityindia.wordpress.com/2021/01/01/would-the-dead-raise-again-christians-keeping-dead-bodies-tamilnadu-case/

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].

அரசியல், அரசியலாக்கப் பட்ட  நீதித்துறை, திராவிடத்துவ குழப்பங்கள்சமரசங்கள் முதலியவ்ற்றின் தக்கம் காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே.  ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.

நீதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாகத் தொடரப்பட்ட வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையான விமர்சனங்களுக்கோ மாற்றுக் கருத்துகளுக்கோ இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மதத் துவேஷக் கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் எனப் பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மாரிதாஸுக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது? மாரிதாஸுக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன? வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].

தீர்ப்பைப் பற்றிய என்னுடைய கமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:

1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!

3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!

4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!

5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!

6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..

7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!

8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!

9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….

10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.

மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] ஏபிபிலைவ், கிறிஸ்தவத்திற்கு எதிரான செயல்களை செய்ததற்காக ஜார்ஜ் பொன்னையாவை கடவுள் தண்டிப்பார்நீதிபதி, By: மனோஜ் குமார் | Updated : 08 Jan 2022 02:19 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/god-will-punish-george-ponniah-for-committing-acts-against-christianity-madurai-high-court-judge-gr-swaminathan-34339

[3] சமயம்.தமிழ், பிரதமர் குறித்து அவதூறு பேச்சுஜார்ஜ் பொன்னையாவிற்கு ஜாமீன் கிடைக்குமா?, Josephraj V | Samayam Tamil, Updated: 6 Jan 2022, 5:22 pm.

[4] https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-madurai-bench-adjourns-judgment-on-george-ponnaya-petition-till-7th/articleshow/88735042.cms

[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.

[6]  ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

[7] சமயம்.தமிழ், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து; மாறுபட்ட பார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/the-case-against-maridhas-and-the-verdict-have-triggered-a-lot-of-controversies/articleshow/88298429.cms

மகன்– மகள்கள் கிறிஸ்தவர்கள் ஆகியதால், மனம் நொந்து விரக்தி அடைந்த தந்தை ரூ. 2 கோடி மதிப்புள்ள வீட்டை கோவிலுக்கு தானமாக அளித்தது!

ஜனவரி 2, 2022

மகன்– மகள்கள் கிறிஸ்தவர்கள் ஆகியதால், மனம் நொந்து விரக்தி அடைந்த தந்தை ரூ. 2 கோடி மதிப்புள்ள வீட்டை கோவிலுக்கு தானமாக அளித்தது!

குமரகோட்டம் பகுதியில் வசித்து வரும் 85 வயதான முருக பக்தர் வேலாயுதம்: மு.வேலாயுதம் காஞ்சிபுரம் குமரகோட்டம் பகுதியில்  முனுசாமி முதலியார் அவின்யூவில்  வசித்து வரும் முருகன் பக்தர் ஆவார். முருகன் குலதெய்வமும் ஆகும். கோவிலுக்கு அருகில் இருப்பதாலும், முருக பக்தர் என்பதாலும், சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமது மகன் மகள்களையும் படிக்க வைத்தார். அவர்களும் படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், இரண்டு மகள்கள் மற்றும் மகன் கிருத்துவர்களைக் காதலித்து, மதம் மாறி திருமணம் செய்து கொண்டனர். முன்னர் பெற்றோருக்கும், இவர்களுக்கும் வாதங்கள் ஏற்பட்டன, ஆனால் இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒப்புக் கொள்ளவில்லை. இரக்கமும் படவில்லை, வயதான பெற்றோர் பற்றியும் கவலைப்படவில்லை. இதனால், மனம் நொந்து, விரக்தியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். 85 வயதான அவரை பிள்ளைகள் பாதுகாக்க வேண்டியநிலையில், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. 

கிறிஸ்துவர்களாக மாறிய பின் நான் இறந்தாலும், எனக்கு அவர்கள் இறுதி சடங்கு செய்ய மாட்டார்கள்: முனுசாமி முதலியார் அவின்யூவில்  2,860 சதுர அடி பரப்பளவு கொண்ட 2 அடுக்கு மாடிக் குடியிருப்புக்குரிய சுய சம்பாத்திய கட்டிடம் உள்ளது. இது குறித்து வேலாயுதம் கூறியதாவது[1]: “நான் சம்பாதித்து வீட்டை கட்டினேன். ஹிந்து மதத்தை சேர்ந்த எனக்கு, கடைசி காலத்தில் பிள்ளைகள் இறுதி சடங்கு செய்வர் என இருந்தேன். இரு மகள்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும், அரசு பணியில் உள்ளனர். ஒரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும் கிறிஸ்துவ மதத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூன்று பிள்ளைகளும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டனர். எனவே, எனக்கு ஹிந்து முறைப்படி அவர்கள் இறுதி சடங்குகள் செய்யப்போவது இல்லை. எனக்கு சொந்தமான 2,680 ச. அடி பரப்பளவு வீடு, தற்போது 2 கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த வீட்டை மதம் மாறியஎன் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை. ஆகையால், என் குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு தானமாக எழுதி வைத்து விட்டேன். கிறிஸ்துவர்களாக மாறிய பின் நான்  இறந்தாலும், எனக்கு அவர்கள்  இறுதி சடங்கு செய்ய மாட்டார்கள்[2]. இதனால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு என் சொத்தை கொடுக்க விருப்பம் இல்லை. தற்போது என் மூத்த மகளும், இரண்டாவது மகனும் என் வீட்டில் ஒரு பகுதியில் வசிக்கின்றனர்”.

கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு என் சொத்தை கொடுக்க விருப்பம் இல்லை.: முன்னர் பத்திரங்களை முறையாக பதிவும் செய்தார்[3]. பிள்ளைகள் மதம் மாறியதால் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக்கினேன் என்று தெரிவித்தார்[4]. அவர் கூறியதாவது: “எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். 3 பேரும் அரசுப்பணியில் நன்றாகவே உள்ளனர். 3 பேருக்கும் திருமணமும் ஆகி விட்டது. ஆனால் 3 பிள்ளைகளும் மதம் மாறியதால் வருத்தமடைந்து எனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமிக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கியுள்ளேன். இச்சொத்தின் மதிப்பு ரூ.2 கோடியாகும். நானும் என் மனைவியும் தற்போது அந்த சொத்தில் ஒரு பகுதியில் குடியிருந்து வருகிறோம். மீதப்பகுதியை அதாவது 2 அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தை காணிக்கையாக கொடுத்துள்ளோம். 3 பிள்ளைகளும் என் சொல் பேச்சு கேட்கவே இல்லை[5]. பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்க வேண்டும். இந்தச் சொத்து நான் காஞ்சிபுரம் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய போது  சுயமாக சம்பாதித்த சொத்தாகும்[6]. இந்தச் சொத்தினை தானமாக செய்யும் முழு உரிமையும் எனக்கு உள்ளது. கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்திருக்கோயிலில் உள்ள மண்டபத்தில் எனது சொத்தை முருகனுக்கு காணிக்கையாக கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது,” எனவும் மு.வேலாயுதம் தெரிவித்தார்.

இந்து அறநிலையத் துறை இதற்கு விழா எடுத்தது: மேலும், அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார்[7]. அப்போது, வேலாயுதத்திற்கு சால்வையும் மாலையும் அணிவித்து கவுரவித்தத அமைச்சர் சேகர்பாபு நன்றி தெரிவித்தார்[8]. “கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்திருக்கோயிலில் உள்ள மண்டபத்தில் எனது சொத்தை முருகனுக்கு காணிக்கையாக கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என சொல்லியிருக்கும் போது, எந்த அளுக்கு கஷ்டப் பட்டிருப்பார் என்று கவனிக்கலாம். இந்நிகழ்விற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்[9]. காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பொன். ஜெயராமன் வரவேற்று பேசினார்[10]. 2 கோடி மதிப்பிலான சொத்தை தானமாக வழங்கிய மு.வேலாயுதத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு சால்வையும், மாலையும் அணிவித்து கௌரிவித்ததுடன் நன்றியும் தெரிவித்தார். நிறைவாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்  செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் நன்றி கூறினார்.

நடிகர்பாடகர் ராகவேந்திரன் மகள்கள் விவகாரமும் இவ்வாறே இருந்தது: சென்ற ஏப்ரல் 2021ல், நடிகர்-பாடகர் ராகவேந்திரன் மகள்கள் விசயங்களிலும், இத்தகைய விவகாரம் வெளிப்பட்டது[11]. அவர் இறந்த போது கிருத்துவராக மாறிய மகள் தனது மதபோத-நண்பனுடன் வந்து ஆட்டிப் படைக்க முயன்றதை வீடியோக்கள் அப்பட்டமாக எடுத்துக் காட்டின. அந்த ஹென்றி பைபிளோடு தயராக நிறு கொண்டிருந்தான். “இந்துவாக” இருக்கும் இன்னொரு மகளைக் காணவில்லை. யார் கொள்ளி வைத்தார்கள் என்று தெரியவில்லை. பிரசன்னா, கல்பனா என்று இரு மகள்கள் பிரசன்னா கிருத்துவ மதம் மாறி ஷகினா ஷான் ஆனார். இவரது கணவர், தன் மனைவியின் சகோதரி மகளை பாலியல் வன்மத்தில் ஈடுபடுத்தியதால், புகார் கொடுத்து, கைது நடவடிக்கையும் நடந்தது. ஆனால், பாட்டி சுலோசனா கதையை சொத்து விவகாரம் என்று மாற்றினார்.

சொத்துப் பிரச்சினை என்று திடீரென்று திசைத் திருப்பும் போக்கு: விசாரணையில், சிறுமியின் சித்தப்பா, உறவினர், மத போதகர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுப்பதை சிறுமியின் சித்தி அறிந்தும், அதனை தடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நான்கு பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்[12]. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் பாட்டி, சொத்து தகராறு காரணமாக மூத்த மகளான பின்னணி பாடகி, தனது இரண்டாவது மகளின் குடும்பத்தாரை பழிவாங்கி விட்டதாக குற்றம்சாட்டினார்[13]. சொத்து தகராறு காரணமாக பாடகி பொய் புகார் அளித்துள்ளதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். அப்படியென்றால், இதனை புகார் கொடுத்த அன்றே சொல்லியிருக்கலாம். ஒரு தாய் இவ்வாறு ஒரு மகளுக்கு ஒரு மாதிரி, இன்னொரு மகளுக்கு இன்னொரு மாதிரி பேசுவதும் திகைப்பாக இருக்கிறது. இங்கு பாட்டி என்றால், சுலோசனா என்றாகக் கொண்டால், அதே பாட்டி, பேத்தியின் நிலையினையும் கவனிக்க வேண்டுமே? பேத்தி அந்த அளவுக்கு பொய்யா சொல்வாள்? ஆனால், இந்த காஞ்சிபுரம் தாத்தா உறுதியாக, தெளிவாக இருக்கிறார்!

© வேதபிரகாஷ்

02-01-2022


[1] தினமலர், பிள்ளைகள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் விரக்தி, பதிவு செய்த நாள்: ஜன 01,2022 20:16. https://m.dinamalar.com/detail.php?id=2927282

[2] https://m.dinamalar.com/detail.php?id=2927282

[3] நியூஸ்.டி.எம், பெற்ற பிள்ளைகள் மதம் மாறியதால், கோடி கணக்கான சொத்தை கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர்.., By Karthik Gupta | Sat, 1 Jan 2022

[4] https://newstm.in/tamilnadu/the-old-man-who-wrote-crores-of-property-to-the-temple/cid6154447.htm

[5] தினமணி, பிள்ளைகள் மதம் மாறியதால் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக்கினேன்: மு.வேலாயுதம், By DIN  |   Published on : 30th December 2021 02:58 PM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2021/dec/30/as-the-children-converted-i-presented-the-property-to-murugan-velayutham-3764796.html

[7] மாலைமுரசு, மதம் மாறிய பிள்ளைகள் : ரூ.2கோடி சொத்தை கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர்…! பெற்ற பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காததால் நடந்த சம்பவம்…!, webteam, Dec 31, 2021 – 07:44.

[8] https://www.malaimurasu.com/posts/tamilnadu/A-person-who-has-written-off-property-worth-Rs-2-crore-to-the-temple-by-children-who-have-converted

[9] ஏபிபி.நியூஸ், பிள்ளைகள் அனைவரும் மதம் மாறி திருமணம் செய்ததால் அதிருப்தி – 2 கோடி மதிப்புள்ள வீட்டை முருகன் கோயிலுக்கு எழுதி வைத்த முதியவர், By: கிஷோர் | Updated : 31 Dec 2021 08:20 AM (IST).

[10] https://tamil.abplive.com/news/chennai/kanchipuram-dissatisfied-with-the-conversion-of-all-children-to-marriage-an-old-man-who-wrote-a-house-worth-rs-2-crore-to-the-murugan-temple-33029

[11] டி. எஸ். ராகவேந்திரா (T. S. Raghavendra, இறப்பு: சனவரி 30, 2020) என்பவர் தமிழ் நடிகரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார்

[12]  நியூஸ்.ஜே, பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை – 4 பேர் கைது!, Apr 24, 2021 09:52 AM.

[13]  https://www.newsj.tv/view/4-Arrested-for-sexual-abuse-42789

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

ஜனவரி 1, 2021

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?

தலைமை பெண் காவர், குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தது: தேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ் (நக்கீரன்) /  பால்ராஜ் (என்கிறது NEWS18 TAMIL)[1]. இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்து வந்தார்[2]. மகளின் பெயர் மெர்சி என்று குறிப்பிட்டு, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடப் படவில்லை. குழ்ந்தைகளின் பெயர்கள் இந்து0கிறிஸ்தவ பெயர்களாக இருப்பதனால், ஒருவேளை மாற்றுமத திருமணத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு த்னித்து வாழ்கிறார்கள் போலும். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[3] என்று நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.


கிறிஸ்தவரான இந்திரா நோய்வாய்ப்பட்டது, சிகிச்சைப் பெற்றது, விடுமுறையில் சென்றது: இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்திராவின் சகோதரியான வாசுகியும் இவர்களுடனேயே தங்கிவிட்டார். ஏற்கனவே சிறுநீரகத் தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த காவலர் இந்திரா, காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், அவர் விருப்ப ஓய்வு பெறுவது குறித்து எந்தத் தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 16.10.20 முதல் அன்னை இந்திரா மெடிக்கல் விடுமுறையில் சென்றுள்ளார். 25.12.20 அன்று அவர் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும்[4]. ஆனால் அவர் 31ஆம் தேதி வரை பணிக்கு திரும்பாததால், அவர் அடிக்கடி விடுப்பு எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த 8-ஆம் தேதி இந்திராவின் வீட்டிற்கு, போலீஸார் / இரு பெண் காவலர்கள் சென்றுள்ளனர்[5].


விசாரிக்க வந்த போலீஸார், இந்திராவின் பிணத்தைக் கண்டது: ஆனால், இந்திரா வீட்டில் இல்லை எனக்கூறி இந்திராவின் குழந்தைகளும் அவரது சகோதரியும் போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகிலிருந்தோர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார், இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழுகிய உடல் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள் என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், ‘எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்’ என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார். உடல் மிகவும் அழுகிய காரணத்தினால் வீட்டிலேயே டாக்டர்கள் உடற்கூறாய்வு செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


சர்ச் பாதிரியாரிடம் ஏன், எப்படி பழக்கம் ஏற்பட்டது, யார் அந்த பாதிரி?: கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[6]. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த இந்திராவை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்துள்ளனர். சர்ச் பாதிரியாரின் இந்தத் தொடர் நடவடிக்கையின் காரணமாக, இந்திராவின் இரு குழந்தைகளும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்[7]. தந்தைக்குப் பதிலாக, பாதிரியுடன் பழகும் தாயைக் கண்டு, குழந்தைகள் குழம்பி, மனம் பாதிக்கப் பட்டிருக்கலாம். அந்நிலையில், பாதிரி வந்து அவர்களுக்கு போதனை செய்து, மூளை சலவை செய்ததால், இறந்தவர் உயிர்த்தெழுவர் போன்ற நம்பிக்கைகளைப் பெற்றிருக்கலாம். அப்படியென்றால், இறந்த தமது தந்தை ஏன் உயிரோடு வரக்கூடாது என்றும் நினைத்திருக்கலாம், பாதிரியாரிடம் கேட்டிருக்கலாம்.


20-22 நாட்களாக பிணத்துடன் இருந்ததால், போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருவது: அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். டிசம்பர் 7ம் தேதி இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக (நக்கீரன்) / 20 நாட்கள் (தினமலர்) வீட்டில் இருந்த சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8]. உயிரிழந்த காவலர் இந்திரா, கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது[9]. தினமலர், வாசுகி, ஆன்டர்சனிடம் / சுதர்சன் என்று மற்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர், என்று முடிக்கிறது[10]. திடீரென்று “ஆன்டர்சன்,” வந்தது என்று தெரியவில்லை. தினமலர் நிருபர், ஏதோ அடக்கி வாசிக்கின்றாரா அல்லது மறைக்கிறாரா என்று தெரியவில்லை[11]. ஊடகங்களும், உண்மையினை சொல்லாமல், மூடநம்பிக்கை என்றால், இதையும் விமர்சிக்காமல், கிறிஸ்தவ நம்பிக்கை என்பதால், அடக்கி வாசிப்பதுப் போலத் தெரிகிறது.

30 நாட்களுக்குப் பிறகு, உயிர்த்தெழுவார்களா?: இதே போல, கிறிஸ்தவ குடும்பத்தில் வயதான பெண் ஒருவர் இறந்து விட்டார். குடும்பத்தினர், இந்தத் தகவலை வெளியே சொல்லவில்லை. மாறாகச் சிறிய அறைக்குள் இறந்து போனவரின் சடலத்தை வைத்தனர். தினமும் சடலத்தின் அருகே மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தி வந்துள்ளனர்.  சடலத்தின் மீது  வாசனைத் திரவியங்களையும் தொடர்ந்து அடித்து வந்துள்ளனர்.  முப்பது நாள்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தால்  இறந்தவர் உயிருடன் வந்து விடுவார் என்பது அவர்களின் நம்பிக்கை[12]. ஐ.பி.எஸ் அதிகாரியே மூடநம்பிக்கையில் தந்தையின் உடலைப் பாதுகாத்து வந்ததைக் கண்டு போபால் நகரம் அதிர்ந்து போய் கிடக்கிறது. மத்தியப் பிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பியாக இருப்பவர் ராஜேந்திரக் குமார். இவரின் தந்தை 84 வயது கல்முனி மிஷ்ராவின் இறந்த உடலை வைத்து பிரார்த்தனை செய்தார்[13]. இத்தகைய நம்பிக்கைக் கொள்வது, திகைப்பாக இருக்கிறது.

இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?:

இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு,ணவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

01-01-2021


[1] நியூஸ்.18.தமிழ், உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் 22 நாட்களாக பெண் காவலர் சடலத்தை வைத்திருந்த உறவினர், NEWS18 TAMIL, LAST UPDATED: DECEMBER 31, 2020, 10:11 PM IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/dindigul-women-police-died-police-started-investigation-riz-387813.html

[3] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[4] நியூஸ்.டி.எம், மரணமடைந்த பெண் உயிர்த்தெழுவார் என சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்த கொடூரம்!, By Aruna NewsTM | Fri, 1 Jan 2021.

[5] https://newstm.in/tamilnadu/the-cruelty-of-keeping-the-corpse-for-22-days-as-the-dead/cid1954389.htm

[6] நக்கீரன், அம்மா உயிருடன் வருவார்…!” தாயின் சடலத்தோடு 22 நாட்கள் இருந்த குழந்தைகள்!, சக்தி, Published on 31/12/2020 (19:23) | Edited on 31/12/2020 (19:58)

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shocking-incident-dindigul

[8] தினகரன், திண்டுக்கல்லில் சடலத்தை வைத்து 22 நாட்களாக பிரார்த்தனை, 2020-12-31@ 16:39:22.

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=643464

[10] தினமலர், சடலத்துடன் 20 நாள் பிரார்த்தனை, Added : ஜன 01, 2021 00:26.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2681276

[12] விகடன், “தந்தை உயிருடன் எழுவார்”- சடலத்துக்கு வீட்டில் ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்த .பி.எஸ் அதிகாரி, எம்.குமரேசன், Published:15 Feb 2019 8 PMUpdated:17 Feb 2019 3 PM

[13] https://www.vikatan.com/social-affairs/controversy/149796-father-dies-in-hospital-ips-officer-takes-body-home-starts-ayurveda-treatment-in-bhopal