ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)

Pope sends mesage for FABC 2022

போப்பும், ஆயர் மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில்  உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினால்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[1]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[2].

The Chinese cardinal- none attended from China

ஆசிய பிஷப் மாநாட்டில் சைனா பிஷப்புகள் கலந்து கொள்ளவில்லை: தொற்று என்றெல்லாம் காரணங்கள் சொல்லப் பட்டாலும், சைனா கிறிஸ்வத்திற்கு ஆதரவாக இல்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் சைனா பொருளாதார விசயங்களில் அதிரடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ மேலிடம் அனுமதி இல்லாமல், எந்த பிஷப்பும் ஒன்றும் செய்து விட முடியாது. அதுதான், சைனாவில் உள்ள நிலை. கம்யூனிஸ மாநாடு நடந்து, லி பிங் மறுபடியும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சைனா, மதரீதியிலாக எந்த பிரச்சினையையும் உண்டாக்கவோ, அல்லது அந்நாட்டில் உருவாக்கவோ விரும்புவதில்லை. பௌத்தம், ஷின்டோ போன்ற மதத்தினர் இருந்தாலும், அவை தங்களது இடங்களுக்குள், மடாலங்களுக்குள் பின்பற்ற வேண்டும். தெருக்களில் வரக் கூடாது. ஆகவே, கிறிச்துவர், முஸ்லிம்கள் மற்ற நாடுகளைப் போனூ சைனாவில், பிரச்சாரம் செய்வது, கூட்டங்கள் போடுவது, போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.

மதம் மாற்ற திட்டம் போடும் கூட்டம்: மாநாட்டின் போது, ஆசியாவில் வளர்ந்து வரும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மத உண்மைகளுக்கு பதிலளிப்பதற்காக ஆசியாவில் உள்ள தேவாலயத்திற்கான ஒரு கிறிஸ்துவ மேய்ப்பு திட்டத்தை – அதாவது மதமாற்றி- ஆடுமாடுகளைப் போன்ற கூட்டத்தை உண்டாக்க – உருவாக்க பங்கேற்பாளர்கள் பல ஆலோசனைகளில் சேர்ந்தனர். ஆசிய இளைஞர்களுக்கான பைபிளின் தனித்துவமான பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது[3]. “அடையாளம்: அடையாளம் கண்டதும், வாழ்க்கையில் உள்ள சவால்களை கடத்தல்” [‘Identity: Identified, Navigating the Challenges of Life] என்ற தலைப்பில் அந்த பைபிள் வெளியிடப் பட்டு, ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் மற்றும் சைமன் போஹ் பிஷப்புகளால் அவைக்குக் கொடுக்கப் பட்டது[4]. முன்பு கூட ஆசியாவிற்கான பைபிள், இந்தியாவிற்கான பைபிள் என்றெல்லாம் வெளியிட்டனர். ஆனால், சர்ச்சை உண்டானதால், அவற்றை சுற்றிலிருந்து அகற்றி விட்டனர். அதை மறந்தும் விட்டனர் எனலாம். கருத்துரிமை பேசுபவர்களுக்கும் கப்சிப் என்று தான் இருக்கிறார்கள்.

அக்டோபர் 12 முதல் 30 வரை பிஷப் மாநாடு நடக்கும் நேரத்தில் உலகம் முழுவதும், பல நாடுகளில் மக்கள் கொல்லப் படுதல்: இம்மாநாடு முடியும் தருவாயில், தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் அக்டோபர் 29 அன்று நடந்த ஹாலோவீன்[5] விழாவில்  ஒரு குறுகிய சந்துக்குள் ஒரு பெரிய ஹாலோவீன் பார்ட்டி கூட்டம் அலைமோதியதில் ஊட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர், நூற்றிற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[6]. பில்லிப்பைன்ஸிலும், பலத்த மழை, வெள்ளத்தினால், 45 பேர் கொல்லப் பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர்[7].  30-10-2022 அன்று தொங்கு பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 150 பேர் பலியாகினர். உக்ரைனில் தொடர்ந்து போர்; பாலஸ்தீனத்தில் கலவரம் கொலை; ஈரான் ஆர்பாட்டத்தில் 150 பேர் கொலை, என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன-இருக்கின்றன. 29-10-2022 அன்று தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகளில் நூற்றிற்கும் மேலானோர் சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் கொல்லப் பட்டனர். ஆசியாவின் ஆயர்களின் கூட்டத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்களின் தூதுவர் தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிலிப்பைன்ஸில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்[8]. தாங்கள் எப்பொழுதும், அவர்களுடன் இருந்து, உதவுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்[9].

Traditional Thailand dance – Inculturation

ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்தன்மை குறைந்திருக்க வேண்டும்: ஆசியாவில் உள்ள தேவாலயங்கள், திருச்சபையின் ஆசியத் தன்மையை வலியுறுத்தும் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் போப் பிரான்சிஸ் திருச்சபை சமூகங்களை, இக்கால இறையியல் மூலம் மேலும் அடித்தளமாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று, ஶ்ரீலங்காவின், ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான விமல் திரிமான்ன கூறுகிறார்[10]. ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்-தன்மை குறைந்திருக்க வேண்டும் என்று பேசுவதும்[11] தமாஷாக இருக்கிறது. எப்படித் தான் வார்த்தைகளை மாற்றி, சுற்றி வளைத்துப் பேசினாலும், வாடிகன் கவுன்சில் -2 என்றெல்லாம் பேசும் பொழுது, அவர்களது திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.  உள்-கலாச்சாரமயமாக்கல், உரையாடல் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான். ஏற்கெனவே முரண்பாடுகளுடன் செயல் பட்டு வருகின்றன.

கிருத்துவத்தால் வன்முறையினைக் குறைக்க முடியவில்லை: இத்தாலியிலிருந்து வரும் ஒரு நாளிதழ், “உதவ மற்றும் நீதி கேட்டு கூக்குரலிடும் மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள்…..ஆசிய கண்டத்தில் எழுச்சியுறும் மக்களுக்கு உதவுங்கள்……..ஒன்றாக உழைத்து புதிய ஆசியாவை உண்டாக்குவோம்,” என்றெல்லாம் மாநாட்டில் பேசியதாக கூறுகிறது[12]. இதெல்லாம் வழக்கமான கோஷங்கள் தானே தவிர, புதியதாக உன்றும் இல்லை. முதலில் இருக்கும் கிருத்துவர்களை, கிருத்துவர்களாக இருக்க இவர்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால், அதை செய்வதில்லை. இந்த மாநாடு நடக்கும் போதே, தினம்தினம் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கில் மக்கள் பல நாடுகளில் கொல்லப் படுகின்றனர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப் படுகின்றனர், தீவிரவாத தாக்குதல்களில் குரூரமாகக் கொல்லப் படுகிறார்கள். கடவுளின் பெயரால் தான் அவர்களும் அத்தகையை குரூர காரியங்களை செய்து வருகிறார்கள்.

மாநாட்டின் திட்டங்களை விளக்கும் இறுதி ஆவணம் தயாராகிறது: பம்பாய் பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ், மாநாடு செயல்பட்டு வரும் இறுதி ஆவணத்தை எவாஞ்சலைசேஷன்  (மதம் மாற்றுதல்), மேய்ப்புச் சாத்தியங்கள் (மதம் மாற்றும் நடவடிக்கைகள்) தொடர்பான “எதிர்கால” ஆவணமாகவும், அவ்வாறே செயல்பாட்டிற்கு உதவும் வகையிலும் கொன்டு வர ஆவன செய்வதாக விவரித்தார்[13]. மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆசியாவில் உள்ள சமூகத்தின் பல அம்சங்களின் கூகுரல்களைக் கேட்டதாக அவர் விளக்கினார். கூறினார், உதாரணமாக, “எங்கள் ஆயர் பணியில் அதிக சிந்தனைமிக்க ஆன்மீகத்திற்கான பெரும் ஏக்கத்தை நாங்கள் கேட்டோம்”. இந்த ஆவணம், FABC பிரதிநிதிகளின் பொது ஒப்புதலைப் பெற்ற செயல்பாட்டில் உள்ளது என்று அவர் விளக்கினார். இது மற்ற ஆயர்களுடனும், பாமர உறுப்பினர்களுடனும் மேலும் விவாதிக்கப்படும். “இந்த ஆவணம் முழு ஆசியாவிலும் எதிர்கால மேய்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி ஆவணமாக எங்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றெல்லாம் கூறுவதை கவனிக்கலாம்.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM

[2] https://www.ucanews.com/news/bishops-regret-lack-of-chinese-presence-at-asian-gathering/99252

[3] Maters India, Bible youth edition released at Asian bishops’ meet, BY: FELIX ANTHONY  ON: OCTOBER 22, 2022

[4] https://mattersindia.com/2022/10/bible-youth-edition-released-at-asian-bishops-meet/

[5] ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

[6] ஹாலோவீன் காரணமாக பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவாக இந்த விழாவில் 50 -60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக இந்த விழா வெளியில் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் இதை முன்னிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 1 லட்சம் பேர் அங்கு கூடினார்கள். அந்த மார்க்கெட் பகுதிகளில் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் ஓட தொடங்கி உள்ளனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி.. பலர் கீழே விழுந்து.. அவர்கள் மீது மக்கள் ஏறி மிதித்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பலரின் கழுத்து, முகம், நெஞ்சில் ஏறி மக்கள் ஓடிய நிலையில் அங்கு மிகப்பெரிய களேபரமே ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அதுதான் திடீரென மக்கள் ஓட காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் நேற்று 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இதில் பலியானவர்களில் 100 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

[7] n the Philippines, authorities reported at least 45 deaths so far and millions of damage due to severe Tropical Storm Nalgae, also locally dubbed Paeng.

[8] Pope’s envoy to Asian bishops meeting prays for victims of Seoul stampede, ‘Paeng’

By Roy Lagarde via CBCP News – October 31, 2022 – 5:35 PM .

[9] https://interaksyon.philstar.com/trends-spotlights/2022/10/31/233087/tagle-prays-for-victims-of-seoul-stampede-philippines-storm/

[10] Island News, Asian Church should become ‘more Asian, less Roman’, Published 2 days ago on 2022/10/30.

[11] https://island.lk/asian-church-should-become-more-asian-less-roman/

[12] Agensir, Asia: Fabc’s final message, “let us hear the cry for help and justice” rising from the peoples of the continent. “Together we work for a better Asia”, 31 October 2022 @ 14:20.

[13] Vatican news, Asian Bishops: We wanted to see how our Churches can be agents of change, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 29 October 2022, 10:37.

https://www.vaticannews.va/en/church/news/2022-10/press-conference-fabc-50-bangkok-asia-tagle-gracias-charles-bo.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.