Archive for the ‘ஆதரவற்றோர் இல்லம்’ Category

மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லை – சூசைப்பிரகாஷம், ஆதிசிவன், மற்றும் போக்சோவில் கைது, சிறை முதலியன!

ஜனவரி 24, 2024

மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லைசூசைப்பிரகாஷம், ஆதிசிவன், மற்றும் போக்சோவில் கைது, சிறை முதலியன!

மாஷா டிரஸ்ட் ஆரம்பிக்கப் பட்டது: MASHA TRUST (தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட எண்.814/2005) – முதன்மையாக ஒரு சமூக சேவை அமைப்பு. இது ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் இயலாமைக்காக செயல்படுகிறது. இது 1996 ஆம் ஆண்டில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்த சில கருணையுள்ள இதயங்களால் நிறுவப்பட்டது. இது ஏழைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, அவர்களின் பிரச்சனைகளை முதலில் உணரவும், அடையாளம் காணவும் செய்கிறது. MASHA இன் இறுதி இலக்கு அவர்கள் தங்களுக்கு உதவ உதவுவதாகும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை அடையாளம் காண கற்றுக்கொண்டவுடன், அதைத் தீர்க்க MASHA அவர்களுக்கு உதவுகிறது. கூட்டு முயற்சிதான் தீர்வு. மாஷா அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறார்கள். இது அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை மாசுபடாமல் வைத்திருப்பது ஆகியவற்றை கற்பிக்கிறது.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

காப்பகம் இல்லம் ஆரம்பிக்கப் பட்ட நோக்கம்: ஆதரவற்ற குழந்தைகள், வெறிச்சோடிய அபல பெண்கள், புறக்கணிக்கப்பட்ட வயதான மூத்த குடிமக்கள் தங்குமிடம் மற்றும் அன்பு, பாசம், அக்கறை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வழிதவறிச் சென்று சமூகவிரோத சக்திகளின் கைகளில் இரையாகக்கூடிய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அது அவர்களை சமூக ரீதியாக பயனுள்ள மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்குகிறது. பலருக்கும் மனவலியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம் என்று ஒரு ஊடகம் பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா அறக்கட்டளையானது நியோமி அன்பு இல்லத்தை நடத்திவருகிறது[1]. 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்[2]. அங்கு ஆதரவற்ற நிலையிலுள்ள 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

சூசைப்பிரகாஷம் காப்பகத்தை ஏன் துவக்கினேன் என்று விளக்கினார்: இப்படி ஒரு இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் தனக்குள் உருவானதன் பின்னணியைச் சொல்கிறார் அதனை நிர்வகித்துவரும் சூசைப்பிரகாசம்[3]. “இந்தியாவில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிவருபவர்களாக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியானது நம் தேசத்தில் பரவலாக உள்ளது. அதனாலேயே, சிறுமிகளுக்காக இப்படி ஒரு இல்லத்தைத் தொடங்கினேன்.” என்கிறார்[4]. அப்படித்தான், பற்பல அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கூநோக்கு இல்லங்கள் என்றெல்லாம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன, படுகின்றன. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்கள் அதிகமாகவே இவற்றை ஆரம்பித்து நடத்துகின்றன. அவை தான் பெரும்பாலான இத்தகைய பாலியல் குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளன. செய்திகளில், ஊடகங்களிலியே நூற்றுக் கணக்கான விவகாரங்கள், கைதுகள், வழக்குகள் என்றெல்லாம் வந்துள்ளன.

ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தது…

ஆதிசிவன் பாலியல் வன்ம குற்றத்தில் கைது மற்றும் சிறை: இந்நிலையில், காப்பகத்தின் அறங்காவலரான கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன், அங்குள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்[5]. இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் காவல் சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்[6]. இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆதிசிவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்[7]. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ எனச் சொல்வதுபோல, நியோமி அன்பு இல்லத்தில், ஏடாகூடமாக என்னென்னவோ நடந்து தொலைத்திருக்கிறது. அதனால்தான், அந்த இல்லத்தின் இன்னொரு நிர்வாகியான ஆதிசிவன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான கிரேஸ் ஷோபியாபாய்[8].  

ஆதிசிவன் கைதான பின்னணி இது: ஆதிசிவன் அவ்வில்லத்தில் படித்துவரும் சிறுமிகள் நால்வரிடம் அத்துமீறி நடந்துகொண்டது, மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரை புகாரானது. உடனே, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், நியோமி அன்பு இல்லத்துக்கே வந்து மாணவிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும், இல்லத்தின் அலுவலகத்தில் வைத்து ஆதிசிவன் தங்களை எவ்வாறு தொந்தரவு செய்தார் என்பதையும்,  வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதையும் அழுதபடி கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்முகம் அளித்த புகாரை விசாரித்து, ஆதிசிவனைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நியோமி அன்பு இல்லத்தின் நிர்வாகி சூசைப்பிரகாசத்திடம் நடந்த அத்துமீறல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த 4 மாணவிகளும் மதுரை – முத்துப்பட்டியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.  

ஆதிசிவனா……..

சூஷைப்பிரகாசமும், ஆதிசிவனும்: சமயநல்லூர் வட்டாரத்தில்  “34 குழந்தைகளின் அப்பா என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சூசைப்பிரகாசம், மற்ற காப்பகங்களிலிலிருந்து இருந்து இது வேறுபட்டது என்பார். எப்படியென்றால், வெளிநாட்டு நிதி உதவியை நம்பாமல், தன் சொந்த முயற்சியால் நடத்தப்படும் இல்லம் எனச் சொல்வார். அன்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்று அப்போது அவர் கூறியதென்னவோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஆதிசிவனால் அங்கு நடந்த செயல் கொடூரமானதாக அல்லவா இருக்கிறது?,” என்கிறார்கள் ஆதங்கத்துடன். அனாதை சிறுமிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில், காப்பக சுவர்களைத் தாண்டி தங்களின் அத்துமீறல் வெளியில் வராது என்ற நினைப்பில், ஒருசிலர் வெறிகொண்ட மனித மிருகங்களாக நடந்துகொள்வது கொடுமையானது! அத்தகையோருக்கு, ‘தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்சத்தை,  இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று நம்புவது மட்டுமே தற்காலிக ஆறுதலாக உள்ளது.

குறிப்பு: இது 2019ல் நடந்த விவகாரம் ஆகும். பொதுவாக, செய்தித் தாள்களைப் படித்து, விவரங்களை சேகரித்து, சரிபார்த்து, எழுதி, ஆதாரங்களைத் தொகுத்து, தேவையான செய்தித்தாள் கட்டிங்ஸ், புகைப் படைங்கள் முதலியவற்றை சேர்த்து, பிளாக் போட சுமார் 3 முதல் 5 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் குறிப்பிட்டல் நாளில், வாரத்தில் அதிகமான முக்கியமான செய்திகள் வரும் பொழுது அவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட, ஏன் தயாராக இருக்கும் கட்டுரையைக் கூட இணைதளத்தில் ஏற்ற முடியாமல் போகிறது. ஏன் சில நாட்கள் ஆனால் மறந்தும் போகிறது. இதனால், திடீரென்று, இணை தளத்தில் எதையோ தேடும் பொழுது, சில செய்திகள் காணப்படுகின்றன. அடடா, இது தெரிந்த விசயமாயிற்றே, நாம் கூட பிளாக் போட்டிருக்கிறோமே என்ற எண்ணம் வரும். ஆனால், தேடிப் பார்த்தால் கிடைக்காது, இருக்காது பிறகு, நாம் போடவில்லை என்பது தெரிய வரும். அவ்வாறு கிடைத்தது தான் இது. நடந்தது 2019 இப்பொழுது 2024, ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் ஆணப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது இன்று பதிவு செய்யப் படுகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2024

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்- கட்டிடம்.


[1]  MASHA TRUST (Tamilnadu Govt. approved No.814/2005) – is primarily a social service organization. It works for the upliftment, progress and enabling of the poor, downtrodden people. https://www.maduraidirectory.com/masha.php

[2] நக்கீரன், ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில்! –அனாதை சிறுமிகளிடம் அத்துமீறல்!, அதிதேஜா, Published on 13/08/2019 | Edited on 13/08/2019, wa

[3] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/under-guise-supporting-orphaned-little-girls

[4] தமிழ்.நியூஸ்.18, ஆதரவற்றோர் காப்பகத்தில் 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நிர்வாகி கைது!, LAST UPDATED : AUGUST 13, 2019, 8:54 PM IST.

[5] https://tamil.news18.com/news/tamil-nadu/orphanage-administrator-arrested-for-raped-girl-children-skd-192979.html

[6] ஜெயா.பிளஸ், காப்பக உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுமதுரை, Aug 13, 2019

[7] https://www.youtube.com/watch?v=HFMC8fUabkQ

[8] மதுரை மாவட்டம் சமூக ஊடகம், Maduraidistrictsocialmedia, 13 ஆகஸ்ட், 2019 ; https://www.facebook.com/photo/?fbid=2793452697350139&set=pb.100068849632048.-2207520000

2005ல் கர்ப்பமடைந்து, 2006ல் குழந்தை பிறந்து, 2020ல் புகார் கொடுத்து, தலைமறைவாகி 2022ல் கைதான ரெவெரென்ட் டி. சார்லஸ் பாதிரி!

செப்ரெம்பர் 17, 2022

2005ல் கர்ப்பமடைந்து, 2006ல் குழந்தை பிறந்து, 2020ல் புகார் கொடுத்து, தலைமறைவாகி 2022ல் கைதான ரெவெரென்ட் டி. சார்லஸ் பாதிரி!

 வாயலூர் காப்பகத்தில் சிருமி கற்பழிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், வாயலூரில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருபவர் பாதிரியார் டி. சார்லஸ் (வயது 59). மேரியால குழந்தைகள் காப்பகம் [Mariela’s Children Home, Vayalur Check Post, ECR, Kalpakkam, 9944505796] மற்றும் Blessing Rock Education and Development Trust (BRED Trust, Kanchipuram) முதலியவை நடத்தி வருவதாகத் தெரிகிறது. ஆக, அந்நிய நாட்டு பணமு வருகிறது[1]. இவர் தனது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார்[2]. இதையறிந்த பாதியார் சார்லஸ் தலைமறைவானார்[3]. இதையடுத்து அச்சிறுமியின் உறவினர் பத்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 1½ வருடங்களாக 2020லிருந்து தலைமறைவாக உள்ள அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாகத்தில் இருந்து வெளியேறிய அவர் போலீசுக்கு பயந்து மீண்டும் தனது காப்பாகத்திற்கு வராமல் பல இடங்களில் பதுங்கி, பதுங்கி வாழ்ந்து வந்துள்ளார். 

பாதிரி சார்லஸ் மற்றும் அவன் மகன் ஜேம்ஸ் – இருவரும் கற்பழித்து வந்தனர்: செங்கல்பட்டு அருகாமை கிராம பெற்றோர், ஆறு வயது மகளை, வளர்க்க இயலாமல், 2005ல், காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு தங்கி படித்து வந்த சிறுமிக்கு, 13 வயதானபோது, பாதிரியார், அவரது மகன் ஜேம்ஸ், 29, ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர்[4]. மேலே ”இருந்த 17 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமானார்,” என்று இன்னொரு ஊடகம் குறிப்பிட்டதை கவனிக்கவும். இதுபற்றி, பிறரிடம் தெரிவிக்க கூடாதென மிரட்டி, அறையில் பூட்டியும் வைத்துள்ளனர்[5]. அவர் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஆண்டு துவக்கத்தில், அங்கிருந்து தப்பி, சென்னை உறவினரிடம் தஞ்சமடைந்தார்[6]. பலாத்காரத்தால் அடைந்த கர்ப்பம் குறித்து, கடந்த ஆண்டு 2021 பிப்ரவரியில் மாமல்லபுரம் மகளிர் போலீசில், உறவினர் பெண் புகார் அளித்தார்[7]. போலீசார், தந்தை, மகன் மீது ‘போக்சோ’ வழக்கு பதிந்து, மகனை கைது செய்தனர். தந்தை, ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாகி, போலீசார் தேடினர். பிறகு மகன் என்னவானான் என்று தெரியவில்லை. இந்நிலையில் நேற்று, 15-09-2022 போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சார்லஸ்ர கைது செய்து, சிறையில் அடைத்தார்.

கைதிலிருந்து தப்பிக்க தலைமறைவான சார்லஸ்: மாமல்லபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்[8]. கல்பாக்கம் வயலூரைச் சேர்ந்தவர் பாதிரியார் சார்லஸ் (58), துரைராஜின் மகன். இவர் கல்பாக்கத்தில் கிறிஸ்துவ பிராட் டிரஸ்ட் (Christian Brad Trust) என்ற விடுதியை 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளார்[9]. வாயலுார் பகுதியில், “மேரியெல்லா குழந்தைகள் காப்பகம்” இயங்குகிறது. இவர் மீது கல்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவர் நடத்தி வந்த விடுதியில் தங்கி இருந்த சிறுமிக்கு பாதிரியார் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீஸார், பாதிரியார் சார்லஸைத் தேடி வந்தனர்[10]. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் சார்லஸ், நேற்று ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்[11].

2005 முதல் 2020 வரை என்ன நடந்தது?: 2005ல் கற்பழிக்கப் பட்ட சிறுமி கர்ப்பமடைந்திருக்க வேண்டும், 2006ல் குழந்தை பிறந்திருக்க வேண்டும். அப்படியென்றால் அப்பொழுதே விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும், ஏனெனில், ஆஸ்பத்திரியில் முறைப்படி பிரசவம் நடந்து, குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனையில் எவ்வாறு பதிவு செய்யப் பட்டு பிரசவம் பார்த்தனர் என்று தெரியவில்லை. உண்மியினை மறைத்து எப்படி பிரசவம் பார்த்தனர், மருத்துவ மனைக்கும், இதில் தொடர்பு இருக்கிறதா? 2006 முதல் 2020 வரை என்ன நடந்தது? பாதிரியார் சார்லஸ் கர்ப்பமாக்கி, 2½ வயதில் குழந்தை உள்ள  அச்சிறுமிக்கு தற்போது 20 வயது பூர்த்தியாகிறது[12]. குழந்தையுடன் உள்ள அச்சிறுமி தற்போது சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது[13], ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஆக, இதில் எல்லா விவரங்களும் மறைக்கப் பட்டுள்ளன. இத்தகைய பெரிய பாலியல் குற்றம், ஏதோ சாதரணமாக, ஒன்றுமே இல்லாதது போல அமைதியாக மூடி மறைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. சிவசங்கர் பாபா விசயத்தில் ஆர்பாட்டமாக செய்திகள் வெளியிட்ட நக்கீரன் போன்றோர் இதில் கண்டுகொள்ளாமல் இருப்பதை கவனிக்கலாம்.

பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு 20 வயதாகிறது, , 2½ வயதில் குழந்தை இருக்கிறது: பிறகு மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு இங்குள்ள அரசு பொதுமருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 1½ வருடமாக மகளிர் போலீசுக்கு டிமிக்கு கொடுத்து வந்த அவரை தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிரியார் சார்லஸ் கர்ப்பமாக்கி, 2½ வயதில் குழந்தை உள்ள  அச்சிறுமிக்கு தற்போது 20 வயது பூர்த்தியாகிறது. குழந்தையுடன் உள்ள அச்சிறுமி தற்போது சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மகளிர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோயம்பேடு போலீஸார் உதவியுடன் அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கிருத்துவ கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் மரத்துப் போல, உணர்ச்சியற்ற நிலைக்கு வந்து விட்டது: தமிழகத்தில் தொடர்ந்து கிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப்புகள் கர்பழிப்பு, காமக் களியாட்டம், சிறுமிகள் பாலியல் சதாய்ப்பு, குழந்தை கற்பழிப்பாளிகள் என்று வளர்ந்து வந்தாலும், கைது செய்யப் படுவது என்று செய்திகள் வருவது குறைவாக உள்ளது. பிறகு, தண்டனைக்கு உள்ளாகிறார்களா என்று தெரியவில்லை. பலர் சிக்கிக் கொண்டாலும், இன்று அவர்கள் தொலைக் காட்சியில் பிரசங்கம் செய்து வருவது திகைப்பாக, அதிர்ச்சியாக, பயமாக இருக்கிறது இவர்களுக்கு என்ன தார்மீகம் இருக்கிறது, அவர்கள் என்ன யோக்கியதையில் அவ்வாறு வெட்கம்-மானம், சூடு-சொரணை எதுவும் இல்லாமல் யோக்கியன் போல, தொலைக் காட்சியில் தோன்றுகின்றனர் என்றும் புரியவில்லை. அவ்வகையில், இது இன்னொரு வழக்காகியுள்ளது. வழக்கம் போல, கைதுடன், எல்லோரும் மறந்து விடப் போகிறார்கள். உணர்ச்சியற்ற, மரத்துப் போன, ஈவு-இராக்கம் எதுவும் இல்லாத நிலையில் இப்பிரச்சினை-குற்றங்கள் உள்ளன. பெண்ணியம் பேசும் பெண்கள் கூட இதைப் பற்றி கவலைப் படுவதில்லை. செய்திகளாக வெளிவந்து மறைந்து விடுகின்றன.

© வேதபிரகாஷ்

16-09-2022


[1] https://ngosindia.org/tamil-nadu-ngos/blessing-rock-education-and-development-trust-bread-trust-kanchipuram/

[2] தமிழ்.ஏபிபி.லைவ், காப்பக சிறுமிக்கு பாலியல் தொல்லை; தலைமறைவாக இருந்த பாதிரியார் சிக்கியது எப்படி..?, By: கிஷோர் | Published at : 16 Sep 2022 10:22 AM (IST); Updated at : 16 Sep 2022 10:22 AM (IST)

[3] https://tamil.abplive.com/crime/chengalpattu-mamallapuram-girl-was-sexually-harassed-by-priest-arrested-tnn-73605

[4] தினமலர், காப்பக சிறுமி பலாத்கார வழக்கு தலைமறைவு பாதிரியார் கைது, Added : செப் 15, 2022  23:38

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3123745

[6] தினமலர், சிறுமி பலாத்கார வழக்குபாதிரியார் பிடிபட்டார், Added : செப் 15, 2022  23:44

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=3123761

[8] தமிழ்.இந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு: மாமல்லபுரம் அருகே பாதிரியார் கைது, செய்திப்பிரிவு, Published : 16 Sep 2022 06:34 AM Last Updated : 16 Sep 2022 06:34 AM.

[9] https://www.hindutamil.in/news/crime/867930-the-girl-was-sexually-harassed-1.html

[10] பாலிமர் செய்தி, ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தேடப்பட்டு வந்த பாதிரியார் கைது, செப்டம்பர் 15, 2021, 12.55.32 PM.

[11] https://www.polimernews.com/dnews/187483

[12] தினத்தந்தி, கல்பாக்கம் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாதிரியார் – 1½ ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது, தினத்தந்தி Sep 16, 2:29 pm

[13] https://www.dailythanthi.com/News/State/priest-who-impregnated-girl-near-kalpakkam-arrested-under-pocso-act-after-1-years-793621

செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பாலியல் சதாய்ப்பு, தொந்தரவு, புகார் ஏன்? பாட்ரிக் மாத்யூஸ் முதல் எபி ஜார்ஜ் வரை ஏன் உண்மைகள் மறைக்கப் படுகின்றன?

மே 29, 2021

செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பாலியல் சதாய்ப்பு, தொந்தரவு, புகார் ஏன்? பாட்ரிக் மாத்யூஸ் முதல் எபி ஜார்ஜ் வரை ஏன் உண்மைகள் மறைக்கப் படுகின்றன?

ஆகஸ்ட் 2017ல் எபி ஜார்ஜ் என்ற ஆசிரியரின் மீது பாலியல் புகார் சொல்லப் பட்டது: பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லுாரிக்கு எதிரே, செஷனாய் நகரில் செயல்படும் அரசு உதவி பெறும் புனித ஜார்ஜ் பள்ளி (St George School) செயல்படுகிறது[1]. ஆசியாவிலேயே முதன்முதலில் ஆரம்பிக்கப் பட்ட பள்ளி அது. அங்கு அனாதை இல்லம் / குழந்தைகள் காப்பகமும் செயல் பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் 2 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக, எபி ஜார்ஜ் என்பவர் பணிபுரிகிறார்[2]. பெண்கள் ஹாஸ்டலுக்கு வாரடனக, விடுதி காப்பாளராகவும் நியமிக்கப் பட்டிருந்தார். இவர், மாணவியர் விடுதி காப்பாளராகவும் உள்ளார்[3]. அந்நேரத்தில் சிறுமிகளிடம் பாலியல் ரீதியில் தொல்லை, தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. நிலைமை மோசமானதால், இவர் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 2017-ல் புகார் எழுந்தது[4].  இவ்விவரங்கள் சுற்றில் உள்ள ஒரு வீடியோ மற்றும் ஊடகக் குறிப்புகள் மீது ஆதாரமாகத் தொகுக்கப் பட்டுள்ளது.

பள்ளி தாளாளர் மன்னிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டு புகாரை மூடி வைத்தது: அப்பொழுது ஜி.கே. பிரான்சிஸ் என்பவர், அப்பள்ளி தாளாளராக இருந்தார். இவர்,ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். ஜி.கே. பிரான்சிஸ், “உங்கள் மீது செக்ஸுவல் ஹராஸ்மென்ட் (sexual harassment) புகார் வந்துள்ளது, ஆகையால், உங்களை ஏன் சஸ்பெண்ட் செய்யக் கூடாது,” என்று காரணம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியர், “ஆமாம், தெரியாமல் தவறு செய்து விட்டேன். இனிமேல் அத்தகைய தவறு செய்யமாட்டேன். எதிகாலத்தில் அத்தகைய நிகழ்வுகள் நடக்காது, என்னை மன்னித்து விடுங்கள்,” என்று மன்னிப்புக்கடிதம் எழுதி கொடுத்தாராம். உடனே, ஜி.கே. பிரான்சிஸ் அக்கடிதத்தை வாங்கிக்கொண்டு, அவ்வாறே மன்னித்து விட்டேன், என்பது போல,  அதே பள்ளியில் எபி ஜார்ஜ் பணியாற்ற அனுமதித்திருக்கிறார்கள். அதாவது, “பாவ மன்னிப்பு” கொடுக்கப் பட்டாகி விட்டது.

போஸ்கோ சட்ட விதிமுறைகளை மீறியது: போஸ்கோ சட்டப் படி, பள்ளி நிர்வாகம் அத்தகைய பாலியல் புகார் வந்து, விசாரித்து, உண்மை அறிந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அறிவிக்க வேண்டும், அது அவர்களின் பொறுப்பாகும். திரைப்படம் ஒன்றில் வரும் ‘மைனர் குஞ்சு’ காட்சிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.  இரு சாராருக்கும் காம்பிரமைஸ் செய்து கொண்டாகி விட்டது, சமாதானம் ஆகிவிட்டது என்று டிபிஐக்கு தவறன தகவல் கொடுத்து, மூடி மறைக்கப் படுகிறது. போஸ்கோ சட்டத்தில் அத்தகைய “சமாதானம்” நிலையே இல்லை. சம்பளத்தில் ரூ.2000/- குறைத்து விட்டோம் என்று, தாளாளரே நீதிபதி போன்று, இந்த தண்டனையே போதுமானது என்று முடிவு எடுக்கிறார்.  “No one can sit on his own judgement,” என்பார்கள், ஆனால், ஜி.கே. பிரான்சிஸ் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை ஓலும்.

சைல்ட் அப்யூஸர்” (Child Abuser) தொடர்ந்து பணியில் இருப்பது: அதனால், அதே ஆசிரியர், “சைல்ட் அப்யூசாராக இருந்தும்” அதே பள்ளியில் இன்னும் அதே வேளையில் இருந்து கொண்டிருக்கிறார். இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கின்றது. இந்த விசயம் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், ஒரு நிர்வாகி, அந்த ஆசிரியரின் சர்வீஸ் ரிகார்டில் அவர் ஒரு “சைல்ட் அப்யூஸர்” என்று குறிப்பிட்டுள்ளதை கவனித்துள்ளார். ஆனால், யாரும் அந்த ஆசிரியரைப் பற்றி புகார் கொடுக்க முன்வருவதில்லை. ஏனெனில், ஜி.கே.பிரான்சிஸ் தனது அதிகாரத்தில் எல்லோரையும் வைத்துக் கொண்டுள்ளார். இப்பொழுது பிப்ரவரி 2021 வீடியோ மற்றும் ராஜகோபாலன் பிரச்சினை இதனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், ஜாஜகோபாலன் புராணம் போல, இந்த எபி ஜார்ஜ் புராணம் யாருக்கும் தெரியவில்லை. சில நாட்களில்ளூடகக்காரர்கள் ராஜகோபாலனை தமிழகம் முழுவதும் பிரபலப் படுத்தி விட்டார்கள்.

ஜி.கே.பிரான்சிஸ் முன்னாள் எம்.எல். எதேச்சதிகாரமாக முடிவு எடுத்துள்ளது: ஜி.கே. பிரான்சிஸ் என்பவர் முன்னாள் எம்.எல்.ஏவும் ஆவர், அதனால், தனது செல்வாக்கை பயன்படுத்தி, இதனை மூடிமறைக்கப் பார்க்கிறார். அதுமட்டுமல்லாது, தேசிய மனித உரிமை ஆணையத்திடமும், இச்சாறான நிகழ்சியே நடக்கவில்லை என்று அறிக்கைக் கொடுத்து, அந்த ஆசிரியரைக் காப்பாற்றியுள்ளார். கைது செய்து விசாரித்தால் தான், எத்தனை குழந்தைகள் பாதிக்கப் பட்டன, என்ற உண்மை வெளிவரும். இவ்விசயங்கள் எல்லாமே அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கின்றன. நாங்கள் எல்லோரும் இப்பள்ளியின் முந்தைய மாணவியர், நானும் முந்தைய மாணவன் தான். இப்பள்ளியில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. ஆங்கிலோ-இன்டியன் பள்ளி என்ற முறையில் இலவச கல்வி கொடுக்கப் படுகிறது. பல ஏழை மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளியில் பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது என்பது தான் கவலையளிக்கும் விசயம். இன்றைக்கு ஆணையரை சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளேன். பாஸ்கோ சட்டத்தில் ஆதாரங்கள் இல்லாமல் புகார் கொடுத்தால், அது எங்கள் மீதே பாயும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால், அவ்ர் செய்த தவறு, அவரது வாக்குமூலம், Internal Enquiry Report, என்று எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்.

எபி ஜார்ஜின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிப்ரவரி 2021ல் கொடுத்துள்ள புகார்: ஆசிரியர் எபி ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[5]. இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தரப்பட்டது[6]. பின், பல கட்டங்களில் பேச்சு நடந்து, இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது[7]. இது குறித்து போலீசாரும், கல்வித்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்[8]. இந்தியன் எக்ஸ்பிரஸில், இதைப் பற்றிய செய்தி, மிகச் சிறியதாக வந்தது[9]. பள்ளி பெயர், குற்றம் புரிந்த பி.டி ஆசிரிய பெயர் எதுவும் குறிப்பிடாமல், “மொட்டைத் தாத்தா, குட்டையில் விழுந்தார் என்பது போல” அச்செய்தி இருந்தது[10]..மற்ற ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

எபி ஜார்ஜுக்கு முன்னர் பாட்ரிக் மாத்யூஸின் முந்தகைய பாலியல் சதாய்ப்பு: இதே போல, இதே பள்ளியைச் சேர்ந்த பாரிக் மாத்யூஸ் (Patrick Matthews) என்ற ஆங்கிலேயரும் இத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார்[11]. கோவளத்தில் இடம் வாங்கி, விடும் கட்டிக் கொண்டுள்ளார். அங்கு குழந்தைகளைக் கூட்டிச் சென்று, பாலியனல் வன்மத்தில் ஈடுபட்டுள்ளார். பல புகைப்படங்கள், விவிடிக்கள் என்று ஆதாரங்கள் கிடைத்தன[12]. ஆனால், அந்த புகாரும் என்னவாயிற்றுத் தெரியவில்லை.  பிறகு, இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இவனை கைது செய்து கொண்டு சென்று விட்டது என்றதோடு கதை முடிந்தது!

2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[13]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராக வேலை செய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[14] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது. இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[15]. சென்னை போலீஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்றதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இவனை கைது செய்து கொண்டு சென்று விட்டது[16]. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது. ஊடகங்கள் இவனைப் பற்றி ஒன்றும் வெளியிடவில்லை. தமிழ் ஊடகங்கள் மௌனமாகவே இருந்தன.

© வேதபிரகாஷ்

29-05-2021


[1] விகடன், சிக்காத ராட்சசன்களுக்கு வலை எப்போது?, எஸ்.மகேஷ், வி.ஶ்ரீனிவாசுலு, Published: 29-05-2021 at 6 AM; Updated:29-05-2021 at 6 AM.

[2] https://www.vikatan.com/social-affairs/crime/chennai-k-k-nagar-psbb-school-issue

[3] தினமலர், பாலியல் தொல்லை: ‘போக்சோவில் ஆசிரியர் கைது, Updated : மே 27, 2021  04:13 |  Added : மே 25, 2021  22:19.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2773635

[5] RedPix, complaint against chennai shenoy nagar st george school teacher, Feb 1, 2021

[6] https://www.youtube.com/watch?v=0izRV7hO3AI

[7] தினமலர், பாலியல் தொல்லை: ‘போக்சோவில் ஆசிரியர் கைது, Updated : மே 27, 2021  04:13 |  Added : மே 25, 2021  22:19.

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2773635&Print=1

[9] Indian Express, Teacher sexually harassed girl students?,  Published: 02nd February 2021 05:14 AM  |   Last Updated: 02nd February 2021 05:14 AM.

https://www.newindianexpress.com/cities/chennai/2021/feb/02/teacher-sexually-harassed-girl-students-2258281.html

A lawyer and an MNM functionary have levelled series of allegations against a private school claiming that girls staying in the hostel in Shenoy Nagar have been sexually harassed. M Sridhar, secretary of MNM’s legal wing and also an alumna of the same private school, on Monday submitted a petition at City police Commissionerate seeking action against a PE teacher for misbehaving with girl students and school’s chancellor, for burying the issues.  In his complaint, Sridhar alleged that a school staff had shared proof of the abuse the girls underwent and the same was submitted before the Commissioner.

[10]  A lawyer and an MNM functionary have levelled series of allegations against a private school claiming that girls staying in the hostel in Shenoy Nagar have been sexually harassed. M Sridhar, secretary of MNM’s legal wing and also an alumna of the same private school, on Monday submitted a petition at City police Commissionerate seeking action against a PE teacher for misbehaving with girl students and school’s chancellor, for burying the issues.  In his complaint, Sridhar alleged that a school staff had shared proof of the abuse the girls underwent and the same was submitted before the Commissioner.

https://www.newindianexpress.com/cities/chennai/2021/feb/02/teacher-sexually-harassed-girl-students-2258281.html

[11] Times of Indis, Child sexual abuse: Children’s photos, DVDs found, Arun Ram / TNN / Jun 20, 2009, 05:13 IST.

[12] https://timesofindia.indiatimes.com/city/chennai/Child-sexual-abuse-Childrens-photos-DVDs-found/articleshow/4678154.cms

[13] Abuser of city school kids held in UK  – http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[14] http://www.batemans.org.uk/

[15] Times of India, Whistle-blower, victims missing in child abuse case, Arun Ram / TNN / Jun 18, 2009, 02:01 IST.

[16] https://timesofindia.indiatimes.com/city/chennai/whistle-blower-victims-missing-in-child-abuse-case/articleshow/4668752.cms

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

பிப்ரவரி 26, 2018

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (2)

Joseph Hospise- Vaiko statement - 25-02-2018

2018ல் முழித்துக் கொண்ட அரசியல்வாதிகள்: இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்  பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “பாலேஸ்வரம் கருணை இல்லம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நடவடிக்கை  எடுக்க வேண்டும்”என்று வலியுறுத்தி உள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜூன் சம்பத் தலைமையில் செங்கல்பட்டு டிஎஸ்பியிடம் நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  இதுகுறித்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் கருணாகரன் என்பவர் கூறும்போது, இந்தக் கருணை இல்லம் மர்மமாகவே இருக்கிறது.  இறந்தவர்களின் உடல்களை எரிக்காமல், புதைக்காமல் அப்படியே அழுக விடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமாக புகார்  அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்போதாவது அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்[1].

Joseph Hospise- Vaiko - seeman, statement - 25-02-2018

வைகோ அறிக்கை – 25-02-2018: வைகோ[2], “இந்தச் செய்தியை அறிந்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர். இதை அறிந்து, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட .தி.மு.. அவைத் தலைவர் ஜி.கருணாகரன், காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.. தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர். ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்ம பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது[3]. எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பிணக்குவியல்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; மேலும் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”, என்று கூறியுள்ளார் [4].

bones-sold-from-dead-bodies-dinakaran-21-02-2018

நாம் தமிழர் கட்சி சீமானின் அறிக்கை: இதே போன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[5]:- பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடிவிடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்து இருக்கிறது. அங்குள்ள முதியவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறைகளில் வைக்கப்பட்டு, எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும். நடைபெற்ற மரணங்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளை போல தமிழக அரசே முதியோர் இல்லங்களை நிறுவ வேண்டும்[6]. சரி அப்படி என்ன எலும்புகளில் விசயம் உள்ளது என்று பார்த்தால், கீழ்கண்ட விவரங்கள் வெளிவருகின்றன.

Joseph Hospise- Vaiko - seeman, statement - 26-02-2018-DT

எலும்பு, எலும்பு பவுடர் முதலியவற்றின் உபயோகம்: தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது. படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள “பகீர்’ தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது[7].

Bone export- illustrative figure

எலும்பு பவுடரின் விலை, ஏற்றுமதி: மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[8].

Joseph Hospise- banner with names

ஜோசப் எலும்பு வளாகத்தை பாராட்டி எழுதியுள்ள கட்டுரைகள், எடுக்கப் பட்டுள்ள வீடியோக்கள்: இத்தனை விவகாரங்கள் இருந்தாலும், உண்மையினை அறியாமல், பாராட்டி “கீற்று” போன்ற இணைதளத்தில், கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன[9]. புலன் விசாரணை ஜார்னலிஸம் என்றெல்லாம் பேசுகின்ற காலத்தில், “மனிதநேயம்” போர்வையில் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது[10]. இன்றைக்கு மாற்றி எழுதப்படுமா என்று பார்க்க வேண்டும். அதேபோல பாராட்டும் வீடியோக்களும் உள்ளன. இப்பொழுது தான், இந்த விவகாரங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சேர்ந்துள்ளன. இன்றைக்கு, மறுபடியும் விஜயம் செய்து வீடியோவை எடுத்து உண்மையினை காட்டுவார்களா அல்லது மாற்றுவார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

26-02-2018

Human skeleton parts - rate fixed

[1] தி.இந்து, பாலமேஸ்வரத்தில் முதியவர்கள் பிணக்குவியல், எலும்புக்கூடு விற்பனை; பாதாள அறையை சோதிக்க வேண்டும்: வைகோ, Published :  25 Feb 2018  18:07 IST; Updated :  25 Feb 2018  18:34 IST.

[2]

http://tamil.thehindu.com/tamilnadu/article22850402.ece

[3] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[4] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[5] மாலைமலர், முதியோர் இல்லத்தில் பிணங்கள்நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்வைகோ, சீமான் வலியுறுத்தல், பதிவு: பிப்ரவரி 26, 2018 08:17

[6] https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/26081742/1147767/Vaiko-and-Seeman-assertion-Murders-in-the-mercy-home.vpf

[7] தினமலர், எலும்பு பவுடர் ஏற்றுமதி, Jan 3, 2010.

[8]http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?print=1&news_id=6152&ncat=&archive=1&showfrom=1/3/2010

[9] கலிவரதன்,ஒரு இல்லம்அதில் வாரத்திற்கு 5 மரணம், 02 நவம்பர் 2012.

[10] http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/21855–5-

 

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (1)

பிப்ரவரி 26, 2018

ஜோசப் சாகும் வளாகத்திலிருந்து பிரேதங்கள் எலும்பு கூடானது, மனித எலும்புகள் வெளியேறியது, ஏற்றுமதி ஆனது எவ்வாறு? (1)

Bone export- Dinakaran- report submitted 26-02-2018

எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம்: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து இறந்துபோன மனிதர்களின் உடல்களை புதைக்காமல் மக்க வைத்து அதன் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பி. பொன்னையா தெரிவித்தார்[1]. இதிலிருந்து, அரசு முறையில் இவ்வுண்மையினை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், அது பற்றிய விவரங்கள் வெளியிடப் படாதது, விசித்திரமாக உள்ளது. பிணம் கடத்தல் முதலிய விவகாரங்கள், வெளிவந்த பிறகு, தொடர்ந்து வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத் துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட ஆறு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கலெக்டரிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றனர்[2]. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டபோது, பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பாக அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவத்துறை உள்ளடக்கிய வல்லுநர் குழு  மூலம் முழுமையான விசாரணை நடத்தி அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு அதே இல்லத்தில் குறைகளை சரிசெய்து  தொடர்ந்து பராமரிப்பது, அங்கு உள்ள ஆதரவற்றவர்களை வேறு இடத்துக்கு மாற்றி பராமரிப்பது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தார்.

Joseph Hospise- Tikkathir 2015

2012 புகார் கொடுத்தும் 2015 வரை கண்டுகொள்ள வில்லை – 2018லும் அதே புகார் தான் எழுந்துள்ளது: எலும்புகளை  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரம் 2015ல் கூட எழுப்பட்டது[3], “பின்னர் அந்ததொட்டிக்குள் நிற்கும் எலும்பு கூட்டை எடுத்து பாலிஸ் செய்துவெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக இந்த இல்லத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது………… வெளிநாடுகளில் இருந்து இவர்களுக்கு வரும் நன்கொடை குறித்தும் முழு விவரம்தெரியவில்லை…... இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே..சண்முகத்திடம் கேட்டதற்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அந்த இல்லத்தில் நடைபெறுமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே 2012 ல் தெரியவந்தபோது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் மாவட்ட சமூகநலத்துறையும் இல்லத்தில் இறப்பவர்களை பொது சுடுகாட்டில் தான் புதைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது..[4]. ஆக, 2012, 2015 மற்றும் 2018 – முந்தைய காலகட்டத்தில் இருந்தவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. அரசு அதிகாரிகளின் மெத்தனம், ஒத்துழைப்பு, அல்லது உடந்தை எது வேலை செய்தது என்று கண்டறியப்பட வேண்டும். ஏனெனில், –

  1. எலும்புகள் ஓரளவிற்கு சுத்தப் படுத்தி வண்டிகளில் ஏற்றப்பட்டது,
  2. வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது [வழியில் எங்கும் அகப்படாமல்],
  3. தொழிற்சாலைகளில் சுத்தப்படுத்தியது [மனித எலும்புகளை],
  4. பொடியாக்கியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள்],
  5. மூட்டைக் கட்டியது [அதற்கான மிஷினரிகள், தேர்ந்த வேலையாட்கள், பாக்கிங் சிலிப்புகள், விலைப்பட்டிகள்],
  6. துறைமுகத்திரற்கு அனுப்பியது [தொழிற்சாலையிலிருந்து],
  7. அதற்கான ஆவணங்களை ஏஜென்ட் மூலமாக பதிவு செய்தது,
  8. ஏற்றுமதி ஆனது [வெளியூர் வாங்குபவரின் விவரங்கள், பணம் கொடுத்தது…..],

என்றெல்லாம் ஆராய்ந்தால், நிச்சயமாக இவ்வேலைவ் தெரியாமல் போயிருக்க முடியாது. இல்லை, எல்லாமே பொய்யான விவரங்களுடன் சென்றிருக்க வேண்டும். ஆக எப்படியாகிலும், சட்டமீறல்களை மறைக்க முடியாது.

Export of Bones- Josepg Hospice

2011ல் கண்டெடுத்த எலும்பு கூடு, 2012ல் நடத்தப் பட்ட சோதனை முதலியன: சாலவாக்கம் அடுத்த, பரமேஸ்வரம் நாகமலை அருகே, புதர் ஒன்றிலிருந்து, மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடந்தது[5]. இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் சசிகலாதேவி, சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்[6]. அதாவது அந்த ஊரில் சாதாரணமாக அவ்வாறு 2011ல் மண்டை ஓடு, முதுகுத் தண்டு வடம், கால் எலும்பு ஆகியவை கிடைப்பதும், அருகில் எலும்புகள் ஏற்றுமதி ஆவதும், அறிந்து அரசு அதிகாரிகள் அமைதியாக இருந்தனர் என்பதும் திகைப்பாக இருக்கிறது. அவர்களை சாலவாக்கம் அருகே, ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்த, 50 பேர் உடல்கள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சாலவாக்கம் அடுத்த, பாலேஸ்வரம் கிராமத்தில், லைட் பார் தி பிலைண்டு என்ற தனியார் அறக்கட்டளை சார்பில், செயின்ட் ஜோசப் இறக்கும் தருவாயில் உள்ள அனாதைகள் கருணை இல்லம் செயல்படுகிறது. இதை, தாமஸ் என்பவர் நிர்வகிக்கிறார். கடந்த மார்ச்-2011-ல் துவக்கப்பட்ட கருணை இல்லத்தில், 46 பெண்கள் உட்பட, 86 பேர் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருந்து இறந்த, 50 பேர் உடல்கள், சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

Notice to Josepg Hospice - 26-02-2018

அரசு அதிகாரிகள், போலீஸ் சென்று பார்வையிடல்– 2012: மாவட்ட சமூகநல அலுவலர் சற்குணா, மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி., ஸ்ரீதேவி ஆகியோர், நேரில் சென்று விசாரித்தனர். அவர்களிடம் தாமஸ் கூறுகையில், “நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாத, ஆதரவற்ற அனாதைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். நோயால் இறப்பவர்களின் உடல்களை, இங்கேயே அடக்கம் செய்கிறோம். பூமியில் புதைத்தால், சுகாதாரக் கேடு ஏற்படும் என்பதால், கான்கிரீட் கட்டடத்திற்குள் அடக்கம் செய்கிறோம். இதனால், சூரிய வெப்பத்தில் தசைகள் அழிந்து, எலும்பு மட்டும் மிஞ்சும். இம்முறை கேரளாவில் பின்பற்றப்படுகிறது. நாங்கள் திண்டுக்கலில் நடத்தும் கருணை இல்லத்திலும், இதேமுறையில் தான் அடக்கம் செய்கிறோம்” என்றார். “இல்லத்தில் தங்கியிருப்பவர்கள் இறந்தால், எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, விதிமுறையில் குறிப்பிட்டுள்ளோம். தகவல் தெரிவித்தீர்களா’ என, சமூகநல அலுவலர் கேட்டார். அதற்கு, கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவித்து விடுவதாக, தெரிவித்தார்.  அதாவது, அதுவரை அறிவிக்கவில்லை என்றாகிறது. அறிந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும் கவனிக்கத் தக்கது.

Paleswaram, dead bodies - news cutting-21-02-2018.DM

2012ல் எலும்புக்கூட்டை கண்ட அதிகாரிகள்: பின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இல்லத்தின் பின்புறம் உள்ள, 20 அடி உயர கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, சதுர வடிவில், 18 அறைகள் கொண்ட இரண்டு அடுக்குகளில், இறந்தவர்களின் உடல்கள் கான்கிரீட் சிலாப் மீது வைக்கப்பட்டு, சிலாப் போட்டு மூடப்பட்டிருந்தது. அதில், ஒரு சிலாப்பை உடைத்து காண்பித்தனர். அதில், ஒரு உடல் காகிதத்தில் சுற்றப்பட்டு, எலும்புக்கூடாக காணப்பட்டது. அதிகாரிகள், இல்லத்தில் தங்கியிருந்தவர்களிடம், அவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து, டி.எஸ்.பி., ஸ்ரீதேவி கூறும்போது, “இல்லம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. இறந்தவர்கள் குறித்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்து, முறையாக இறப்பு சான்றிதழ் பெற வேண்டும்; அப்படி செய்யவில்லை. ஆவணங்கள் மட்டும் இல்லத்தில் உள்ளன. அவற்றை சமூக நல அலுவலர், ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளார். அவர், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை கொடுப்பார்,” என்றார். எலும்பு கூட்டைப் பார்த்தார். இறப்பு சான்றிதழ் பெறவில்லை என்றால், இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை என்றாகிறது. அப்படியென்றால், இது மிகக்கொடுமையான சட்டமீறல் என்று கருதாததும், நடவடிக்கை எடுக்காததும் திகைப்பாக உள்ளது.

© வேதபிரகாஷ்

26-02-2018

St Joseph Hospice- Vault broken- dead body inside

[1] தினகரன், பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து மனித எலும்பு ஏற்றுமதி செய்தது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல், 2018-02-26@ 00:26:19

[2] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=379161

[3] தீக்கதிர், ஆதரவற்றோர் இல்லத்தில் இறந்தவர்களை சட்டத்திற்கு புறம்பாக வளாகத்திலேயே புதைப்புஎலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பதாக புகார், ஆகஸ்ட் 2015.

[4]https://theekkathir.in/2015/08/09/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/

[5] தினமலர், எலும்புக் கூடு கண்டெடுப்பு,  Added : நவ 12, 2011  23:47.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=348219

 

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)

நவம்பர் 7, 2017

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது (1)

Ebenezaer, nude worship - AP Dinakaran

இந்தியாவில் கிருத்துவ சாமியார்களின் செக்ஸ் குற்றங்கள், கொலைகள் முதலியன[1]: இந்தியாவில் கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் மற்றும் பிஷப்புகளின் பாலியல் வன்புணர்ச்சிகள், செக்ஸ்-மீறல்கள் மற்றும் காம-கொக்கோக லீலைகள் அதிகமாகிக் கொணிருக்கின்றன. இவை திகைப்படைய செய்வது மட்டுமல்லாது, சமூகத்தை அதிகமாக பாதித்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்து வருகின்றன. மேலும், இந்த கற்பழிப்புகளில், செக்ஸ்-குற்றங்களில் கொலைகள் கூட நடந்து வருகின்றன. இருப்பினும், சிலவற்றிலேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றங்களுக்குச் சென்று, தண்டனை பெறும் நிலைவரை செல்கின்றன, ஆனால், பெரும்பான்மையான வழக்குகள், நடக்காமல் கிடக்கின்றான அல்லது கிடப்பில் போடப்பட்டு மறக்கப்படுகின்றன. சில நேரங்களில், அவர்களின் அங்கிகள் அவிழ்க்கப்பட்டன (பதவி நீக்கம் செய்யப்பட்டனர்) என்று அறிவித்தாலும், வேறு வண்ண உடைகளில் உலா வந்து கொண்டிருக்கின்றனர். ராம்-ரஹீம் பற்றி சமீபத்தில் அதிகமான செய்திகள் வெளியிடப் பட்டன, இருப்பினும், அவர் “செக்யூலார் சாமியார்” போல சித்தரிக்கப் பட்டு, அடங்கி விட்டன. ஆனால், அவனே ஒரு “இந்து சாமியார்” என்றிருந்தால், உலகம் முழுவதும் முக்கியமான செய்திகளாகி இருக்கும். அவனுக்குப் பிறகு தான் இந்த எட்டி எபநேசர் நிர்வாண பிரார்த்தனை, கற்பழிப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவில், உள்ளூர் செய்திகளில் இவ்விவரங்கள் வந்தாலும், அவன், கைதாகாமல் உலா வந்து கொண்டிருக்கிறான். ஏனெனில், அவனுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்றாகிறது[2].

Pastor Didde Ebenezer, women commission chief

தீபாவளி அன்று ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி போலீஸாரிடம் புகார் பதிவு செய்தார்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடேபல்லிக்கூடம் அடுத்த ஜெகன்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டிட்டி எபனேசர் [Didde Ebenezer]. இவர் அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். மேலும் பிரகாஷ்ராவ்பாளையம், ஜெக்கன்னாபேட்டை, மஸ்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சர்ச்சுகளுக்கு காப்பாளராகவும் உள்ளார். எபிநேசர் நிச்சயமாக பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து துன்புருத்தியதால், அவனால் பாதிக்கப் பட்ட பெண்கள் அவனை வெளிப்படுத்தினர். நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, 18-10-2017, புதன்கிழமை, மேற்கு கோதாவரி மாவட்டம், தாடெபள்ளிகுடம் மண்டலம், ஜகன்னாதபுரம் கிராமத்திற்கு சென்று நிலையை நேரிடையாக அறிந்தார்[3]. பிறகு, தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் எனக்கூறி பாலியல் தொல்லை செய்த பாதிரியார் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப் பட்ட பெண்கள் கூறியது[4], “முதலில் தனியாக வா என்பார், பிறகு, சிறுசிறு வேலைகளை செய்ய வைத்தார். நாளாடைவில் கை-கால்களை பிடித்து விடு என்றார்….அதற்கும் பிறகு, மார்பு தோள் …..தேய்த்து விடு என்றார்….அந்நிலையில் எங்களை கட்டிபிடித்து …….படுக்கையில்……இவ்வாறாக எங்களை பயன்படுத்திக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்…..,” என்று விளக்கியது பரிதாபகரமாக இருந்தது.

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal

மனம் மற்றும் உடல் ரீதியில், பெண்களை வசியப் படுத்தி வைத்திருந்தது: கடவுளிடம் நேரிடையாக பேச வைக்கிறேன் என்று ஆசைக் காட்டி, அவ்வாறான கிருபை கிடைக்க வேண்டுமானால், ஆதாம்-ஏவாள் போன்று நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்தால் தான் நடக்கும் என்று வந்த பெண்களிடம் தொடர்ந்து சொல்லி வந்தான். நடு இரவில், மெழுகு வர்த்தி ஏற்றிவைத்து, அத்தகைய பிரார்த்தனையை செய்தால், பலன் கிடைக்கும் என்று நம்பவைத்து அவ்வாறே செய்து வந்தான். அல்லேலுயா, அல்லேலுயா,  என்று அத்திக் கொண்டும், இதோ வந்து விட்டார், அருகில் வந்து விட்டார், பேசப் போகிறார்…… என்றெல்லாம் கத்தி, உணர்ச்சிப் பூர்வமான இலையை உண்டாக்கினான். அவனது செக்ஸ்-சில்மிஷத்தை அப்பொழுது ஆரம்பிப்பான். நிர்வாணம், அவனது கொக்கோக விளையாட்டுகள் படுக்கையில் பெண்களை வீழ்த்தி விடும். இவ்வாறு மனோரீதியில் மற்றும் உடல்ரீதியில் அவர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தான். பெற்றோர் அழைத்தும் அவர்கள் செல்லாமல் இருந்தனராம். ஒருமுறை அவன் பெண்களுடம் இருக்கும் வீட்டை சோதனையிட்ட போது, “நிரோத்” பாக்கெட்டுகள் கிடைத்தன. தவிர, ஏதோ மருந்தும் கொடுத்து கட்டுக்குள் வைத்திருந்தான் என்று மருத்துவர் கூறுகிறார்[5].

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- TV9 video

ஊரை மாற்றினாலும், செக்ஸ்சில்மிஷத்தை மாற்றாத பாஸ்டர்: 2015ல் கைதுக்குப் பிறகு, நீதிமன்றம் வரை வழக்கு சென்றபோது, தனது ஆதிக்கத்தினால், அதிலிருந்தும் விடுபட்டான் என்று, டிவி-9 கூறுகிறது[6]. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று புகாரை வாபஸ் வாங்கச் செய்தான். ஆனால், பிறகு, அவளை வேறு மாதிரி சரிசெய்தான். ஜகன்னாதபுரத்திலிருந்து, தனனு வீட்டை மதூர் என்ற இடத்திற்கு மாற்றினான். இதுவும் சட்டரீதியாக “போலீஸ் கட்டுப்பாட்டு எல்லைகளை” கடக்கத்தான் செய்தான். அங்கும் தனது வேலையை ஆரம்பித்தான் என்று பெண்கள் கூறினர்[7]. இளம் பெண்கள் மற்றும் விதவைகளைத் தான் உறி வைத்தான். தமிழில், தினகரன் மட்டும் தான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது[8]. இது “டெக்கான் ஹெரால்டு” நாளிதழிலிருந்து தொகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால், மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை[9]. மேலும், “நிர்வாண பூஜை” ஏன் என்றும், அதன் மகத்துவத்தையும் விளக்கவில்லை.

Pastor Didde Ebenezer, a victim complains-TV9 video

கணவனின் அடாவடி, அநியாய செக்ஸ்குற்றங்களைத் தாங்காமல் மனைவி புகார் கொடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும்: இவரது மனைவி ஜீவன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எபிநேசர் நடவடிக்கை சரியில்லை எனக்கூறி அவரது மனைவி ஜீவன் தனியாக வசித்து வருகிறார். எபிநேசர் தேவாலயத்திற்கு வரும் விதவைகள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் உள்ளிட்டவர்களை சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறி இரவு நேரத்தில் தனியாக வரும்படி கூறி, அவ்வாறு வருபவர்களை நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொள்வார் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுப்பதை அறிந்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டி உள்ளனர். அதனால் இவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதுபற்றி தகவலறிந்த அவரது மனைவியே பெத்தையாபேட்டை போலீசில் புகார் செய்தார்.  ஆனால், அவன் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- Police enquiry

2015ல் புகாரின் மீது, வழக்குப் பதிவு செய்து, கைதாகி, ஜாமீனில் வெளிவந்த காமுகன்: எபினேசர் தனது பணபலத்தினால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்தான். நிலையை அறிந்து, எப்படியாவது, அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், புகார் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்ததால், பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து, புகார் கொடுக்க ஊக்குவித்தார். போலீசார் எபிநேசர் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநில மகளிர் நல ஆணைய தலைவி நன்னப்பநேனி ராஜகுமாரியிடம் புகார் செய்தனர். இந்த புகாரை பெற்ற அவர், இது போன்றவர்களை சமூகத்தில் விட்டு வைக்கக்கூடாது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, எபிநேசரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஐந்து பெண்கள் எபிநேசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், எபிநேசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எபிநேசர் மீது ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால்,முன்னர் குறிப்பிட்ட படி, பிணையில் வெளியே வந்துவிட்டான்.

© வேதபிரகாஷ்

07-11-2017

Didde Ebenezer case, AP pastor sex- 22-10-2017

[1]  இது அக்டோபர் 20, 2017 அன்று ஆங்கிலத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

Vedaprakash, Didde Ebenezer, pastor sexploits women from 2015 onwards – Victims come out, complaint filed, but escaped, secular media, women activists and tolerant groups keep quite!, October 20, 2017.

[2] https://indiainteracts.wordpress.com/2017/10/20/didde-ebenezer-pastor-sexploits-women-from-2015-onwards-victims-come-out-complaint-filed-but-escaped-secular-media-women-activists-and-tolerant-groups-keep-quite/

[3] DECCAN CHRONICLE. Rajahmundry: Arrest pastor for abusing girls, Published Oct 19, 2017, 6:32 am IST; UpdatedOct 19, 2017, 6:32 am IST.

[4] http://www.deccanchronicle.com/nation/crime/191017/rajahmundry-arrest-pastor-for-abusing-girls.html

[5] Rapist Pastor || Victims demands stringent action || TV9 Effect, for details, see at: https://www.youtube.com/watch?v=lkhL41mu3d8

[6] AP Pastor’s dirty secrets exposed || TV9 Special Focus, For details, see at: https://www.youtube.com/watch?v=kNE4bkt6B44

[7] Church Pastor sexual harassment on Women at West Godavari | CVR News, for details se at:  https://www.youtube.com/watch?v=CkWfPFiwQZ8

[8] தினகரன், ந்திர மாநிலத்தில் பரபரப்பு நிர்வாண பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏற்பார் என பாலியல் தொல்லை, 2017-10-20@ 00:59:03.

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=344197

கத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனது – கன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது!

ஏப்ரல் 4, 2017

கத்தோலிக்க பாதர் தான் அப்பா என்று நிரூபனம் ஆனதுகன்னியாஸ்திரிக்களின் பங்கு வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது என்ற நிலையை உண்டாக்கியுள்ளது!

Rape Robin case -

பாதர்எனப்படுகின்ற கத்தோலிக்க பாதிரியே கற்பழித்து, கர்ப்பமாக்கியது: கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூரில் 16 வயது பிளஸ் 1 மாணவி, கத்தோலிக்க பாதிரியாரால் சர்ச்சில் வைத்து மே 2016ல் பலாத்காரம் செய்யப்பட்டார். கர்ப்பம் அடைந்ததால், முதலில் அதனை சரிகட்டப் பார்த்தனர். ஆனால், ஒப்புக் கொள்ளாததால், அந்த பெண்ணின் தந்தையே, அக்கர்ப்பத்திற்கு காரணம் என்ற ரீதியில், அப்பெண்ணின் குடும்பத்தை வற்புருத்தி விசயத்தை மறைக்க முயன்றனர். ஆனால், ஏதோ காரணத்திற்காக உண்மை வெளி வந்து விட்டது. ஒரு நிலையில் அந்த ரேப் ராபின் பாதிரி, நாட்டை விட்டு தப்பியோடவும் முயற்சித்துள்ளான். கர்ப்பம் நிறைமாதம் அடைந்த நிலையில், அப்பெண்ணை குத்துபரம்பாவிற்கு அருகில் உள்ள “கிருஸ்து ராஜ்” கத்தோலிக்க ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு, ரகசியமாக டெலிவரிக்கு ஏற்பாடு செய்தனர். அந்த மாணவிக்கு வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி 7, 2017 அன்று குழந்தை பிறந்தது.

Robin rape case - two nuns surrendered - Dinakaran - 18-03-2017

குழந்தையைப் பெற்றதும் பச்சிளம் குழந்தை மற்றும் தாய் முதலியோரைப் பிரித்தது: குழந்தை பிறந்த இரண்டே நாளில் குழந்தையை கிறிஸ்தவ சபையின் கட்டுப்பாட்டில் உள்ள, வைநாடில் உள்ள வைத்ரி ஒரு “கான்வென்ட்” நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சின் மேலிடத்தின் ஆணையினால், எந்த விவரமும் வெளியிடப்படவில்லை[1]. அக்குழந்தையைக் கூட அனாதைக் காப்பகத்தில் சேர்த்து, பெண்ணை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். தாய்-குழந்தை பிரிக்கப்பட்டதால், விசயம் கசிய ஆரம்பித்தது. இவ்விகாரத்தில் கத்தோலிக்க சர்ச்சின் பல கன்னியாஸ்த்ரிகள், சாமியார்கள் என சம்பந்தப் பட்டனர். எப்படியாவது, இவ்விசயத்தை அமுக்கவே அவர்கள் பல வழிகளில் வேலை செய்தனர். தங்களது பணம், மற்றும் அதிகாரங்களையும் பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால், சில பெண்கள் அமைப்புகளால் விசயம் வெளிவந்தது. போலீஸாரிடமும் புகார் கொடுக்கப் பட்டது. அழுத்தத்தின் காரணமாக போலீஸாரும் மூன்று வாரங்கள் கழித்து நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Rape Robin case - accused Nuns surrendered 22-03-2017

கன்னியாஸ்திரிக்களும் குற்றத்தை மறைக்க முயன்றது: சம்பவம் தொடர்பாக ராபின் [Catholic priest Fr Robin Vadakkumchery] என்ற பாதிரியாரை போலீசார் 28-02-2017 அன்று கைது செய்தனர்[2]. அந்த ஆள் சாமியாராக மட்டுமல்லாது, பள்ளிக்கு பொறுப்பாளர், சர்ச் திட்டங்களுக்கு வழிகாட்டி என்று பல பொறுப்புகளில் இருந்தான். போதா குறைக்கு, பெண்களின் உரிமைகளுக்காக வேறு போராடுவதைப் போலக் காட்டிக் கொண்டான். இதனால், அவனைத் தேட வேண்டியதாயிற்று. இதற்கும் போலீஸார் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று. கடவுளுக்கு தமது வாழ்க்கையினையே அர்பணித்து விட்டனர் என்ற நிலையில் உள்ள கன்னியாஸ்திரிக்களும் இக்கற்பழிப்பு, ஆஸ்பத்திரி அனுமதி, டெலிவரி, தாய்-சேய் பிரிப்பு, அனாதை-காப்பங்களில் சேர்ப்பு போன்ற விவகாரங்களில் உதவியதாலும், குற்றத்தை மறைக்க முயன்றதலும், அவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. சாம-தான-தண்ட-பேத முறைகளைக் கையாண்டாலும், இறுதியில் கத்தோலிக்க சர்ச்சுக்கு, வேறு வழியில்லாமல், சம்பந்தப் பட்டவர்கள் சரணடைய வைத்து, பிறகு சட்டப் படி, பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர் போலும். அதன்படியே, பலாத்கார சம்பவத்தை மறைக்க, பாதிரியார் ராபினுக்கு உதவிய 5 கன்னியாஸ்திரிகள், மற்றொரு பாதிரியார் உள்பட 8 பேர் போலீசில் ஒவ்வொருவராக சரணடைந்தனர்[3].

Rape Robin case - Nuns surrendered 22-03-2017

இதுவரை கைது / சரண்டர் ஆனவர்கள்[4]: குழந்தை நல கமிட்டியின் சேர்மேன், அதைச் சேர்ந்த உறுப்பினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என்று சரண்டர் / கைதானவர்களின் விவரங்கள் கீழ்வருமாறு[5]:

  1. Fr RobinVadakkumchery, the first accused.
  2. Thankamma Nelliyani, who aided the survivor during her pregnancy and childbirth- second accused
  3. Joseph Therakam, Sr. Ophilia, the Superintendent of Holy infant Mary orphanage at Wayanad, Former Wayanad Child Welfare Committee (CWC) chairman.
  4. Betty of CWC another nun
  5. Tessy Jose, a nun and gynaecologist at Christu Raj Hospital Thokkilangadi, who delivered the survivor’s child,
  6. Hyderali, paediatrician in the hospital and
  7. Sr Ancy Mathew, nun and hospital administrator, surrendered before the Peravoor Circle Inspector Sunil Kumar after the Kerala High Court rejected their anticipatory bail plea.
  8. Maria, a nun from a convent in Thonichal who helped the priest hide the crime and
  9. Sr Aneesha, a nun at Holy infant Mary orphanage.

சரண்டர் ஆகும் நிலையில் அந்த கன்னியாஸ்திரிக்கள் முதலியோர் கொஞ்டசம் கூட வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக சிரித்துக் கொண்டிருப்பது, புன்னகைப்பது போன்ற நிலை வெறுப்பை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தது என்றதை விட, நிலமே, பயிரை உண்டது எனலாம் என்ற விதத்தில் விவகாரங்கள் நடந்துள்ளன. இவ்வாறு பெண்களே, பெண்களின் கற்பை சூரையாடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனும் போது, படுகேவலமாக இருக்கிறது. இவர்கள் தாம் நியாயம், நீதி, நேர்மை, குடும்ப ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி பேசும் போது, பள்ளி-கல்லூரிகளில் பாட்ம் எடுக்கும் போது, அதைவிட படுமோசமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.

Rape Robin case - laughing Nun surrendered 22-03-2017

டி.என். சோதனை செய்தது, இவன் தான் தந்தை என்றது நிரூபனம் ஆனது: இதற்கிடையே குழந்தைக்கு தந்தை பாதிரியார் ராபின் தானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர்[6]. இதற்கும் முதலில் சர்ச் எதிர்ப்புத் தெரிவித்தது. பிறகு ஒப்புக் கொண்டது. இதற்காக பாதிரியார் ராபின், மாணவி மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன[7]. அவை, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் மற்றும் அறிவியல் பரிசோதனை கூடத்திற்கு [the forensic lab in Thiruvananthapuram] அனுப்பி வைக்கப்பட்டன[8].  டி.என்.ஏ என்ற மரமணு பரிசோதிக்கும் சோதனை நடத்தப் பட்டது[9]. தயாரிக்கப்பட்ட முடிவு “சீல்ட் கவரில்” போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது[10]. இந்த பரிசோதனை முடிவு 31-03-2017 அன்று தலச்சேரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது[11]. அதில், குழந்தையின் தந்தை பாதிரியார் ராபின் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[12]. இதன் மூலம் உயிரியல் ரீதியிலான தந்தை அந்த கத்தோலிக்க சாமியார் என்று உறுதி செய்யப்பட்டது[13]. பாதர் தான் அப்பா என்று உறுதி செய்யப்பட்டது[14]. இதனால், இனி முறைப்படி நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[15]. நம்பிக்கையாளர்களை திகைப்படைய செய்துள்ளது. தன் மகள் வயதில் / மகளைப் போன்றிருக்கின்ற பெண்ணையே உறவாடி கெடுத்துள்ளான் என்பதும், அதனை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளும், தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கத்தோலிக்கர்கள் வருத்தப் படுகின்றனர்.

Sister Liz Maria and Sister Anitta, the sixth and seventh accused respectively surrendered

மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுவது உண்மையா?: இந்த சூழ்நிலையில், பாதிரியார் ராபின் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன.  இவர் மேலும் சிறுமிகள் உட்பட பல இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எந்த தகவலும் வளிவராமல் மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.  கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்ணூர் கொட்டியூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்தார். அவரை பாதிரியார் ராபின் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தற்கொலை குறித்து போலீசிற்கு தகவல் கிடைத்தது. விசாரிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு பாதிரியார் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப தகராறுதான் காரணம் என்று போலீசார் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

robin-smuggled-many-girls-out-of-india-03-03-2017-dinakaran

ரேப் ராபின் பாதிரி எப்படி கனடாவில் சொத்து வைத்திருக்க முடியும்?: பாதிரியார் ராபினுக்கு கனடாவில் பெரும் முதலீடு இருப்பது தெரிய வந்துள்ளது[16]. அங்கு பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி  தோட்டமும் பண்ணையும் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 100க்கு மேற்பட்ட சிறுமிகளை விசிட்டிங் விசாவிலும் தொழில் விசாவிலும் கனடா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, பெண்களை மட்டும் இவர் கனடா அனுப்பி வைத்துள்ளார்[17]. தற்போது அந்த சிறுமிகளின் நிலை என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிரியாக இருக்கும் அவனிடம் அவ்வாறு கோடிக் கணக்கில் சொத்து எப்படி இருக்க முடியும் என்பதெல்லாம் புதிராக உள்ளன. மேலும், அயல்நாட்டில் சொத்து வைத்திருந்தால், இந்திய அரசு ஆவணங்கள் பலவற்றில் அவ்விவரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆக, இவற்றையெல்லாம் மீறி அதாவது, சட்டப்படியே செய்திருக்கிறான் என்றால், இதற்குப் பிறகு, பலர் இருப்பது புலப்படுகிறது.

© வேதபிரகாஷ்

04-04-2017

Rape Robin case - three Nuns surrendered 22-03-2017

[1] Upon investigation, the police found the baby in an orphanage run by nuns at Vythiri in Wayanad.   Police doubt that all the matters were concealed due to top level intervention.

http://english.mathrubhumi.com/news/kerala/peravoor-sexual-abuse-case-priest-confesses-to-crime-1.1764063

[2] Manorama.online, Fr Robin fathered baby of minor girl, DNA test confirms, Friday 31 March 2017 10:04 AM IST.

[3] http://english.manoramaonline.com/news/kerala/2017/03/31/kottiyoor-rape-case-dna-test-father-robin-minor-girl.html

[4]  The News Minute, Kerala priest rape case: 3 more accused including two nuns surrender, March 22, 2017, 18.09.

[5] http://www.thenewsminute.com/article/kerala-priest-rape-case-3-more-accused-including-two-nuns-surrender-59061

[6] Indian Express, DNA test proves that Kottiyoor rape accused Fr. Robin Vadakkancheril is biological father of minor victim’s baby, By Express News Service  |   Published: 31st March 2017 01:41 PM  |  Last Updated: 31st March 2017 01:41 PM.

[7] http://www.newindianexpress.com/states/kerala/2017/mar/31/dna-test-proves-that-kottiyoor-rape-accused-fr-robin-vadakkancheril-is-biological-father-of-minor-v-1588175.html

[8] Mathrubhumi, Kottiyoor: DNA test results reveal Robin is newborn’s father, by Nasar Valiyedath, Published: Mar 30, 2017, 10:37 PM IST.

[9] http://english.mathrubhumi.com/news/kerala/kottiyoor-dna-test-results-reveal-robin-is-newborn-s-father-1.1837061

[10]Kamudhi.com, Child’s father is Fr. Robin, shows DNA test result, Posted on :23:33:29 Mar 30, 2017;  Last edited on:23:33:29 Mar 30, 2017.

[11]  http://www.kaumudi.com/innerpage1.php?newsid=89571

[12] தினகரன், கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு பாதிரியார் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி, 2017-04-01@ 01:04:46.

[13] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=291479

[14] The Quint News, DNA Test Confirms Kerala Priest Fathered Infant of Minor Girl, March 31, 2017, 4:54 pm

[15] https://www.thequint.com/india/2017/03/31/kerala-kannur-priest-rape-case-dna-test-confirms-priest-fathered-infant-of-minor-girl

[16] தினகரன், கண்ணூரில் சிறுமி பலாத்கார வழக்கு பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை: தோண்டத் தோண்ட பகீர் தகவல்கள், 2017-03-02@ 02:31:15.

[17] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=284115

TELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது!

திசெம்பர் 26, 2014

TELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது!

Veeran alias V. Veerasamy, convicted in Pollachi twin rape case, being brought out of the Mahila Court in Coimbatore on Wednesday 24-12-2014.

Veeran alias V. Veerasamy, convicted in Pollachi twin rape case, being brought out of the Mahila Court in Coimbatore on Wednesday 24-12-2014.

தமிழ் எவஞ்செலிகல் லூத்தரன் சர்ச் காப்பகத்தில் நடந்த கற்பழிப்புகள் (ஜூன்.2014): பொள்ளாச்சி காப்பக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு வேலை வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே டி.இ.எல்.சி. என்ற கிறிஸ்தவ நிறுவனத்துக்கு சொந்தமான காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்துக்குள் வால்பாறையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வீராச்சாமி (வயது 23) என்பவர் கடந்த 11-6-2014 அன்று இரவில் புகுந்தார். பின்னர் அவர், அங்கு தங்கி இருந்த 11 மற்றும் 8 வயதான 2 சிறுமிகளை அந்த காப்பகத்தின் அருகே உள்ள மாடிக்கு கடத்திச்சென்று அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்றார். இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் அத்துமீறி நுழைதல், கடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வீராச்சாமியை (வயது 23) கடந்த 15-6-2014 அன்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

TELC rape orphanage pollachi

TELC rape orphanage pollachi

வழக்கு விரைவாக நடத்த மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது: இந்த வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வகையில் கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது[1]. இந்த வழக்கில், 64 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அத்துமீறி நுழைதல், கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது[2]. நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், விடுதியில் தங்கிய 1௦ வயது மாணவர், பள்ளி தலைமை ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியரின் உறவினர்கள், அரசு டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்தார். அதன்படி குற்ற சாட்டப்பட்ட வீராச்சாமி நேற்று காலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியம் நேற்று மாலை தீர்ப்பு கூறினார்[3].

A view of the TELC Children's Home in Pollachi

A view of the TELC Children’s Home in Pollachi

காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சிறுமிகளை கடத்தியதற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆக மொத்தம் 44 ஆண்டுகள் தண்டனையை ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்[4].  இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

Police make enquiries at the hostel of the Tamil Evangelical Lutheran Church in Pollachi.

Police make enquiries at the hostel of the Tamil Evangelical Lutheran Church in Pollachi.

காப்பகத்தின் மீது தண்டம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி: காப்பகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததாலும், குற்றச்செயல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளி அத்துமீறி நுழைந்ததற்கு டி.இ.எல்.சி., சர்ச் நிர்வாகம் பொறுப்பு ஏற்கும் வகையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் இழப்பீடாக டி.இ.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை இதற்கான உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினார்[5]. இந்த தொகையை டி.இ.எல்.சி. நிர்வாகம் சிறுமிகளுக்கு வழங்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து அந்த தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்[6]. அதுபோன்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன்கருதி, அவர்கள் படிப்பதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், 18 வயது முடிந்ததும், அவர்களின் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் படிப்பு மற்றும் உதவிகளை ஆய்வு செய்வதற்காக வக்கீல் சண்முக நாதன் என்பவரை நியமித்து ஒவ்வொரு மாதம் 31-ந்தேதி ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ந்தேதி அதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வக்கீலுக்கான செலவை சட்ட உதவி ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்[7].

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்

கிருத்துவர்கள் நடத்தும் காப்பகம் என்பதால் அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது[8]: பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாயத்தின் நிர்வாகிகளுக்கும், பாதிரியாருக்கும் நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருவதாகவும், குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே ஜாதிப் பிரச்சினை இருந்து வருவதாகவும் முன்பு சொல்லபட்டது. எல்லாம் நடந்த பிறகு பொது மக்கள், ஐட்வா போன்ற மகளிர் சங்கம் மற்றவர்கள் மீது குறைகூறுகிறார்கள்[9]. கிருத்துவர்கள் பரஸ்பர புகார்கள் அளித்தது இக்குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் போலும்[10]. அகில இந்திய ஜனநாயக மகளிர் மன்றம் மற்ற விசயங்களில் அதிகமாக சப்தம் போடும் போது, இவ்விசயத்தில் எல்லாம் நடந்த பிறகு கூப்பாடு போடுவது கிருத்துவ காப்பகம் என்றதால் பாரபட்சம் பார்க்கிறது என்று தெரிகிறது. கற்பழிப்பிற்குப் பிறகு, அனுமதி இல்லாமல் நடத்தப் பட்டு வந்த மற்ற இரு இல்லங்களும் மூடப்பட்டன[11], என்று வந்துள்ள செய்தியும் வேடிக்கையாக இருக்கின்றது. தொடர்ந்து பிடோபைல் மற்றும் இத்தகைய பாலியல் குற்றங்களில் கிருத்துவ காப்பகங்கள் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளது பற்றிய செய்திகள் வந்துள்ளன. கன்யாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என்று நூற்றுக்கணக்கில் குற்றங்கள் புரிந்தது வெளிவந்தன. பிறகு எப்படி இங்கு மட்டும் மெத்தனமாக செயல்பட்டார்கள் என்று தெரியவில்லை.

டி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு

டி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு

TELC சுத்தமாகத் தப்பித்துக் கொண்டது சட்டத்தின் வினோதமே: ஆனால் ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்ட இ.பி. சுரேஷ்குமார் எப்படி விடிவிக்கப்பட்டார் என்று தெரியவில்லை[12]. பாஸ்டர் பி. ஏ. பாக்கியநாதன் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் என்னவாயிற்று என்று புரியவில்லை[13]. அத்தகைய குற்றங்கள் ஏற்படவே TELC கதவுகளை திறந்து வைத்திருந்தது என்று முன்னர் விவரிக்கப்பட்டது[14] [The first impression one gets at looking at the surroundings of the Tamil Evangelical Lutheran Church (TELC) home and the nearby shopping complex is that this is a place where a transgression was waiting to happen][15]. இப்பொழுது கூட தீர்ப்பில் 20 வருடங்களாக அனுமதி இல்லாமலேயே, சர்ச் நிர்வாகம் அந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளது என்று எடுத்துக் காட்டப் பட்டுள்ளது [The court held the management of the Tamil Evangelical Lutheran Church Children’s Home responsible for the crime as they had been running the home without a valid licence for the last 20 years and for allowing anti-social elements to enter the campus][16]. அது சமூகவிரோதிகளுக்கு வசதியாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது போன்றுள்ளது என்றும் கூறியுள்ளது. தி ஹிந்து முன்னர் TELC ரேப் / டி.இ.எல்.சி கற்பழிப்பு [TELC Rapes] என்று தலைப்பிட்டு ஜூன் 2014ல் [TELC rapes] செய்தியை ஆர்பாட்டமாக வெளியிட்டது[17]. ஆனால், இன்றோ “பொள்ளாச்சி ரேப் / கற்பழிப்பு” [Pollachi rape case] என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிடுகிறது[18]. அதாவது TELCக்கும் இந்த கற்பழிப்பிற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஊடகங்கள் மாற்றிக் காட்டுகின்றன. TELC லட்சங்கள் பாதிக்கப் பட்ட பெண்கௐளுக்குக் கொடுப்பது, ஏதோ விவேக் ஜோக்கில் வரும் “மைனர் குஞ்சு ஜோக்” போலத்தான் உள்ளது. இந்திய குற்றாவியல் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம், பட்டியல் ஜாதியினர் மற்றும் குடிகள் மீது கொடுமைகள் த்அடுக்கும் சட்டம் என்ற சட்டங்களின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாலும், வீராசாமி மாட்டிக் கொண்டான், மற்ற சர்ச் அதிகாரிகள் தப்பித்துக் கொண்டார்கள்[19].

© வேதபிரகாஷ்

25-12-2014

[1] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/pollachi-girls-rape-double-life-sentence-114122500003_1.html

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1146206

[3] http://www.maalaimalar.com/2014/12/25060326/Girl-molested-case-building-wo.html

[4] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=134891

[5] நக்கீரன், சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு, புதன்கிழமை, 24, டிசம்பர் 2014 (22:20 IST)

[6] தினமலர், , பொள்ளாச்சி சிறுமியர் பலாத்கார வழக்கு; காமுகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 25-12-2014.

[7] மாலைமலர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 25, 6:03 AM IST

[8] இதை எனது முந்தைய ஜூன் பதிவிலேயே சுட்டிக் காட்டிருந்தேன்.

https://christianityindia.wordpress.com/2014/06/15/another-gang-rape-in-telc-orphanage-child-home-in-pollachi/

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/people-seething-with-anger-at-lack-of-basic-norms-in-the-home/article6114179.ece?ref=relatedNews

[10] https://christianityindia.wordpress.com/2014/06/24/pollachi-telc-rape-turned-into-mutualaccusation-among-the-pastors-priesrs-etc/

[11] Two more homes for children have been closed as they were in a poor condition, and children from these homes have also shifted to the reception units, says P. Samson, chairman, Child Welfare Committee.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/with-two-more-homes-closed-parents-take-wards-home/article6123955.ece?ref=relatedNews

[12] A day after securing the accused in the rape of two minors of a home run by theTamil Evangelical Lutheran Church (TELC) here, the police on Saturday (14-06-2014) arrested the home’s warden E.B. Suresh Kumar and registered a case against pastor S.A. Packianathan.

[13] http://www.thehindu.com/news/national/tamil-nadu/pollachi-rape-telc-home-warden-arrested/article6115220.ece

[14] The Hindu, TELC rapes: Transgressions were waiting to happen, POLLACHI, June 14, 2014

[15] http://www.thehindu.com/news/national/tamil-nadu/telc-rapes-transgressions-were-waiting-to-happen/article6114065.ece?ref=relatedNews

[16] http://timesofindia.indiatimes.com/city/chennai/Man-sentenced-to-imprisonment-for-kidnap-rape-of-minor-girls-at-Pollachi-childrens-home/articleshow/45632049.cms

[17] http://www.thehindu.com/news/national/tamil-nadu/telc-rapes-transgressions-were-waiting-to-happen/article6114065.ece?ref=relatedNews

[18] http://www.thehindu.com/news/national/tamil-nadu/pollachi-rape-case-legal-commissioner-to-take-care-of-minor-girls/article6723570.ece

[19] The Pollachi All Women Police Station invoked Sections 450 (house-trespass in order to commit offence punishable with imprisonment for life), 366(A) (procuration of minor girl), 376 (rape) of the Indian Penal Code (IPC) read with Sections 5(4)(l)(m) of the Protection of Children from Sexual Offences Act (POCSO), 2012, besides Section 506 (ii) (criminal intimidation) of the IPC. As one of the girls belonged to a Dalit community, sections of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act have also been invoked.

கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்?

ஒக்ரோபர் 11, 2013

கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்?

வருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது[1]. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல்[2], ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்டுள்ளனர். 2012ல் பிரபலமான ஏஞ்சல் டிவியின் வின்சென்ட் செல்வக்குமார் மீது பாலியல் புகார்கள் செய்யப்பட்டன[3]. சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடக்கும் பாலியல் வன்மங்களைப் பற்றி இங்கே படிக்கவும்[4].

பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை[5]: சிறுவர்சிறுமியர்களைவன்புணர்தல், ஓரினபுணர்ச்சிமுதலியன[6], நள்ளிரவில் பாதிரியுடன் இருந்த கல்லூரி மாணவி[7], பி.பி. ஜாப்[8] போன்றோர்களின் காம லீலைகள்[9], உறவு கொள்ள மறுத்தவளை கொலை செய்த பாதிரி[10], பலதார[11] திருமணங்கள்[12], செய்து வைத்த பாஸ்டர்கள்[13] என்று நீண்டு கொண்டே போகின்றன.

பணம் கேட்டு மிரட்டுகிறார்: மதபோதகர் மீது மனைவி புகார்[14] (அக்டோபர் 2013): வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மதபோதகர் மீது, அவர் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர், பியூலா மெர்சி பிரீத்தி, 25. இவர், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் விவரம்: அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த, ஜெசுரன் ராய் நைட். சென்னை “சர்ச் ஆப் கிரைஸ்டில்’, மதபோதகராக உள்ளார். கடந்த, 2007ல், எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 18 சவரன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும், எங்கள் தரப்பில் இருந்து வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. குழந்தை இல்லாததால், கடந்த, 2009ல், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தோம்.

பல பெண்களுடன் தொடர்பு: பின், என் கணவருக்கு, செல்வியா என்ற பெண் உட்பட, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதை நான் கண்டித்தது முதல், என்னை கொடுமைப்படுத்த துவங்கினார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள், அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில், மேலும், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, என்னை அடித்து கொடுமைப்படுத்தி, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். என்னை கொடுமைப்படுத்திய கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது[15].

முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி விட்டார்: கிறிஸ்தவ மதபோதகர் மீது  2-வது மனைவி புகார்[16](செப்டம்பர் 2012) : வளசரவாக்கம் சாஸ்திரி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் கிறிஸ்தவ மத போதகர் ஒருவருக்கும் 9.2.96-ல் மதுரையில் திருமணம் நடந்தது. முதலில் சென்னையில் அவர் நடத்தி வந்த இல்லத்தில் தங்கி குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாக கூறி என்னையும் குழந்தைகளையும் லாட்ஜில் தங்க வைத்தார்.

ஏற்கெனவே திருமணமானர், பல பெண்களுடன் தொடர்பு: அதன் பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் திலகவதி என்ற மனைவியும், குழந்தையும் இருப்பதும் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். தனி அறையில் பூட்டி வைத்தார். 9 வருடமாக சைக்கோ போல் நடந்து கொண்டார். அவர் என் பெயரில் கூட்டாக சொத்துக்களும் பல நிறுவனத்தில் பங்குதாரராகவும் சேர்த்துள்ளார். இந்த சொத்துக்களை அடைய அவர் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்[17]. ஆட்களை வைத்தும் மிரட்டுகிறார். அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டேன். எனக்கு பாதுகாப்பு வழங்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்[18].

இந்தியா முழுவதும் இவர்களின் தொடரும் லீலைகள்: தமிழகத்தில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களில் கிறிஸ்தவ போதகர்கள் இப்படுத்ட்ர்ஹான் நடந்து கொண்டு வருகின்றனர்.  ஆகஸ்ட் 2011ல் சந்தனராஜு என்ற பாஸ்டரை, இதே காரணங்களுக்காகக் கைது செய்யப் பட்டான்.

Dowry harassment: pastor held[19]: A pastor of a Jalahalli church, who had been absconding after his wife filed a dowry harassment complaint with the police, was arrested on Saturday evening. Police arrested K. Shantaraju (45) of the Bethel Church and Bethel Student Centre in Siddharthanagar, near Jalahalli Cross.Priyanka, his wife, had filed charges of harassment and criminal intimidation against him at the Gangammagudi Police Station. She had also accused her husband of sexually exploiting young girls of his parish and that he and his family had threatened her into silence.Meanwhile, police said as no girl had come forward with a complaint against Shantaraju, they were not investigating that angle[20].

புகார், கைது என்ற நிலையோடு செய்திகள் நின்று விடுகின்றன. படித்தவர்களும் மறந்து விடுகின்றனர். ஆனால், பிறகு என்னவாயிற்று, பாதிக்கப் பட்ட பெண்களின், சிறூமிகளின் கதி என்ன என்பவற்றைப் பற்றி ஊடகங்கள் கவலைப்படுவதாக இல்லை.

© வேதபிரகாஷ்

11-10-2013


[14] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2013,23:49 IST

[16] மாலைமலர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 24, 2012, 4:03 PM IST

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

ஏப்ரல் 21, 2013

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

Sexy speaking Christian priest arrested 19-04-2013

2013  – மூன்று மாதங்களில் பல பாதிரிகளின் சட்ட மீறல்கள்,  கைதுகள்: ஆபாசபேச்சு பேசி வீட்டுக்க்கு அழைக்கும் பாதிரி, பணத்தைக் கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – இப்படி பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும் தமிழகத்தில் உலா வருவதும், குற்றங்களை செய்வதும், கைதாவதும், அதற்குப் பிறகு என்னாவாகிறது என்று ஒன்ற்ம் தெரியாத நிலையில் செய்திகள் வந்துள்ளன. இவர்களுக்கெல்லாம் எப்படி இந்த அளவிற்கு தைரியம் வருகிறது, துணிச்சலாக குற்றங்களை செய்து வருகிறார்கள், செய்தும் மறுபடியும் பணிகளில் வந்து அமர்ந்து விடுகிறார்கள், எப்படி வெளியே வருகிறார்கள், சட்டங்களின்று எப்படித் தப்பிக்கின்றனர் அல்லது அவர்கள் உண்மையிலேயே புனிதர்களாக இருந்து வெளியே வந்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் போது, பாதிப்புக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கர்த்தர் ஒருவேளை மன்னித்து விடுவார் என்று, அவர்கள் மறுபடியும் பாவமன்னிப்புப் பெற்று, பாவங்களை செய்ய வருகிறார்கள் போலும். இதோ வந்துள்ள செய்திகளைப் படிக்கவும்:

Jogn Mark hristian priwst arrested

 

சர்ச்சிற்கு வரும் பெண்களிடம் ஆபாசப் பேச்சு பேசும்  பாதிரி கைது  (16-03-2013): கோவை, மார்ச். 17, 2013 கோவை ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் மார்க் (வயது 63). இவர் ஏற்கனவே கோபி, ஈரோடு, பெருந்துறை, கோவை கணபதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த பெண்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார்.  பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார். எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார்.  மேலும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார்[1] என்றும் குறிப்பிட்டிருந்தனர். புகார் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஜார்மார்க்கை கைது செய்தார். அவர் மீது 509 (பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டு அழைப்பு விடுவது), 506(1) கைகள் மூலம் சைகையால் கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கைதான பாதிரியார் ஜான் மார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்[2].

Sexy christianity - pastor sex India.2

பாதிரி வீட்டில் கொள்ளையடித்த பாதிரி கைது  (25-02-2013): புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. இந்த வழக்கில் இன்னொரு பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “என் அண்ணன் ஜெயராஜ், திண்டுக்கல் டி..எல்.சி. சர்ச்சில் பாதிரியாராகவும், .டி.. நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். ஜனவரி 30ம் தேதி, உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்ல 1.5 லட்சம் ரூபாய் கொண்டு வருமாறும் கூறினார். பணத்தை நான் கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்தேன். அவரது உடல் நிலை மோசமானது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை தஞ்சாவூரில் அடக்கம் செய்தோம். மீண்டும் திண்டுக்கல் வந்த போது என் அண்ணன் வீட்டின் பூட்டை .டி.., ஊழியர் அல்போன்ஸ், அம்மாபட்டி பாதிரியார் மார்கஸ் ஆகியோர் உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை திருடிவிட்டு புது பூட்டு போட்டதும், இதற்கு டி..எல்.சி., செயலர் சார்லஸ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது”, என்று தெரிவித்திருந்தார்[4]. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Christian priest loot money

பெண் எஸ்..,க்கு கொலை மிரட்டல்பாதிரியார் கைது  (07-01-2013): ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், பெண் எஸ்.ஐ., சாந்தி ராணிக்கு கொலைமிரட்டல் விடுத்த, பாதிரியார் ஞானபிரகாசம் கைது செய்யப்பட்டார். தங்கச்சிமடம் வலசை தெரு சேர்ந்த பாதிரியார் ஞானபிரகாசம், 62. ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ., சாந்தி ராணியிடம் தகவல் கேட்டுள்ளார்[5]. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை அவதூறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எஸ்.ஐ., சாந்தி ராணி புகார் கொடுத்தார். அவரது புகாரின்படி, பாம்பன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோசப் செல்வராஜ் வழக்கு பதிந்து, பாதிரியாரை கைது செய்தார்[6].

 

வேதபிரகாஷ்

21-04-2013