நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!

 

நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரியாரை கண்டித்து பல்வேறு அமைப்பினரின் போராட்டத்தால் பரபரப்பு[1]: நள்ளிரவில், கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த பாதிரியாரை கண்டித்து, இந்து முன்னணியினரும், பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குருசுக்குப்பம் சர்ச் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. கிருத்துவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் உள்ள தொடர்பும் வெளிப்பட்டுள்ளது. மார்ச் 13, 2003 அன்று ஜோஸப் என்பவன், திருமாவளவன் குரலில் பேசி பணம் கேட்டதும், இந்த சர்ச்சிலிருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது[2]. பிறகு அது மோசடி என்று தெரியவந்தது. இருப்பினும், திருமாவளவன் என்று கேட்டால் பணம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. திருமாவளவன் கிருத்துவர் என்று அவர் நண்பர்கள் கூறுவதுண்டு. கிருஸ்துமஸ் கொண்டாடி விட்டு, குல்லா போட்டு கஞ்சி கொடுக்கும் போது, கிருஸ்துவர்களுக்கு பலமுறை சங்கடமாகியுள்ளது. இருப்பினும், திருமாவளவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்.

152 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் சர்ச்: புதுச்சேரி, குருசுக்குப்பத்தில், 152 ஆண்டுகள்[3] பழமை வாய்ந்த புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் உள்ளது. 2009ல் 150 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது[4]. இங்கு, திண்டிவனத்தை சேர்ந்த பெர்க்மான்ஸ் பீட்டர்[5]  (45), பாதிரியாராக உள்ளார். நேற்று முன்தினம் (16-02-2012), நள்ளிரவு 12 மணியளவில், கல்லூரி மாணவியுடன், பாதிரியார் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்க்லள் அம்மாணவி உள்ளே சென்றதை பார்த்து விட்டு மற்றவர்களிடத்தில் சொன்னதால், கையும் களவுமாக பிடிபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், ஆலயம் எதிரே திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பாதிரியார் பெர்க்மான்ஸ்[6], பேராயர் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில், மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆலயத்தில், நேற்று காலை திருப்பலி நடக்கவில்லை.

இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்: இந்நிலையில், கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பாதிரியாரை கைது செய்ய வேண்டும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், திருச்சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணியினர், முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குவிந்தனர். தலைவர் சனில்குமார், பொதுச் செயலர் முருகையன் ஆகியோர் தலைமையில், இந்து முன்னணியினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, இன்ஸ்பெக்டர் அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். அதற்குள் விஷயம் அறிந்த மற்ற இயக்கத்தினர் வந்துவிட்டனர்.

பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பிய மற்ற இயக்கங்கள்: தகவலறிந்த அனைந்திந்திய மாணவர் கூட்டமைப்பு, பெற்றோர்-ஆசிரியர் கழகம், இந்திய மாணவர் சங்கம், மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், புனித பிரான்சிஸ் அசிசிஸ் தேவாலயம் அருகில் உள்ள பள்ளி முன் திரண்டனர். பாதிரியாரை கண்டித்து கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லம் முன், நாம் தமிழர் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மோனிகா பரத்வாஜ் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிரியார் மீதான குற்றத்தை, கல்லூரி மாணவி மறுத்தார். இதனால், அனைவருக்கும் வியப்பானது.

புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு நள்ளீரவில் மாணவி வந்துள்ளாராம்: இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., சந்திரன் கூறுகையில், “தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தனிமையில் இருந்த பாதிரியார் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்பெண், புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், எம்.சி.ஏ., படித்து வருகிறார். அந்தப் பெண்ணிற்கு, பாதிரியார் தான் பாதுகாவலராக உள்ளார். ஹாஸ்டலில் கணிப்பொறி வசதி இல்லாததால் எம்.சி.ஏ., புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க, சர்ச் பாதர் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை என, எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால், பகலில் கூட சென்றிருக்கலாம், ஆனால் நள்ளிரவில் ஏன் செல்ல வேண்டும் என்று தான் மக்களுக்கு புரியவில்லை. இல்லை, பாதிரியாரே காலையில் வரசொல்லி திருப்பி அனுப்பியிருக்கலாம். அவ்வாறில்லாதலால், மக்களுக்கு சந்தேகம் வந்தத்தில் வியப்பில்லை. மேலும் சமீபகாலங்களில் கிருத்துவப் பாதிரிகள் இத்தகைய பாலியல், செக்ஸ் விஷயங்களில் ஈடுபட்டுள்ளது, மாட்டிக் கொண்டுள்ளது சகஜமாகி விட்டதாலும், டிவி-நாளிதழ்களில் சில விஷயங்கள் வெளிவந்து விட்டதாலும் மக்கள் அவ்வாறே நினைத்திருக்கலாம்.  குருசுகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தேவலாயத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு என்று “இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” அறிவித்ததும் ஆச்சரியமான விஷயம் தான்!


[2] Chennai youth held for `cheating’ Pondy Church heads By Our Staff Reporter, Saturday, Mar 15, 2003

Pondicherry March 14. Joseph alias Ravi (32) of Vyasarpadi, Chennai, was arrested here yesterday for allegedly cheating heads of a few churches in Pondicherry. The youth had allegedly spoken over phone to the church authorities mimicking the voice of the DPI convener, Tirumavalavan.

The Superintendent of Police, V.J. Chandran, said today that the youth had allegedly called the Bishop House on February 24 over phone mimicking the tone of the DPI leader. He told them that he wanted to hold a function to present tricycles to the handicapped children. Hence, he sought their contribution. Believing that it was only the DPI leader contacting them, the Bishop House assured that Rs. 10,000 would be given for the project. As requested, a cheque was prepared in the name of Ravi and handed over to the youth.

The same youth contacted the head of another church at Kurusukuppam on March 3 seeking Rs. 5,000 for the same project. This time also he spoke in the voice of Mr. Tirumavalavan. The head of the church reportedly gave Rs. 5,000 to the youth. When the Bishop House contacted Mr. Tirumavalavan, the cheating came to light. The management of the Bishop House filed a police complaint

http://www.hindu.com/2003/03/15/stories/2003031504890300.htm

[3] Peace meet to mark 150th year of church Staff Reporter, The Hindu, Thursday, Sep 24, 2009

PUDUCHERRY: A three-day conference on peace will launch the 150th year celebrations of the St. Francis of Assisi church at Kurusukuppam. The feast will start on September 25 and will go on till October 4. Parish Priest Fr. P. Arul Dass said the church was built in 1858 in honour of St. Francis of Assisi. The feast will seek to spread his spiritual views of love, peace and harmony and it is with this objective that the conference on peace has been organised from September 25 to 27, he said. Archbishop of Pondicherry-Cuddalore Anandarayar will celebrate the mass at 11 a.m on Sunday, September 27. He said about 500 persons from Puducherry,

http://www.hindu.com/2009/09/24/stories/2009092451090200.htm

[4] St.Francis of Assisi Church, Kurusukuppam, Pondicherry, Pin : 605 012,Tel.Ph: 0413- 2227626.

[6] இந்த பெர்க்மான்ஸ் வேறு மற்றும் பாட்டுப் பாடி ஆடும் பெர்க்மான்ஸ் வேறு என்று தெரிகிறது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “நள்ளிரவில் கல்லூரி மாணவியுடன் இருந்த பாதிரி – புராஜக்ட் விஷயமாக பிரிண்ட் எடுக்க சென்றாராம்!”

  1. 14 / 16 வயது கன்னியை கற்பழித்ததை, குழந்தையைக் கற்பழித்ததாக செய்திகளைப் போடுகிறார்கள், ஏன்? « இந்த Says:

    […] [8] https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midn… […]

  2. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [15] https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midn… […]

  3. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [15] https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midn… […]

  4. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] [15] https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midn… […]

  5. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midn… […]

  6. கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்த Says:

    […] [6] https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midn… […]

  7. கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்? | Says:

    […] [7] https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midn… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.