கத்தோலிக்கப்பையன்ஹிந்துபெண்ணைதிருமணம்செய்ததைகத்தோலிக்கச்சர்ச்ஏற்ருக்கொள்ளவில்லை: தேனி அருகே உள்ளே கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு 56 வயது ஆகின்றது. இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர்[1]. இவரது மூத்த மகன் அருளானந்தம் (33). ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் ஆரூண் (29). கோட்டூரில் வசித்து வருகிறார்[2]. கோட்டூர் பகுதியில் பெரும்பாலானோர் கிருஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு இருந்து வந்த நிலையில், ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்[3]. மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணத்தை நடத்த குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் அனைவரது கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே திருமணத்தை நடத்த அனுமதிப்பதாக நிர்பந்தித்தனர்[4]. இங்கு அப்பெண் மதம் மாறினாலா-மாற்றப் பட்டளா போன்ற விவரங்கள் கொடுக்கப் படவில்லை. இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்[5].
கத்தோலிக்கபோராளிகள்பெண்னியப்போராளிகள்வாய்திறக்கவில்லை: கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் அத்தகைய மதவெறி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸ், ஈகோ இருதயராஜ் போன்றவர்கள் வக்காலத்து வாங்கி கூட்டங்களில் வாய் கிழிய பேசுவர். ஆனால் உண்மையில் நடப்பது இதுதான். இதற்கெல்லாம் சமத்துவம் என்று எவனும் பேசவில்லை. இந்நிலையில் ஜான் பீட்டர் 16-05-2023 அன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். வழக்கம் போல, அவரது உடலை புதைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன. ஆனால், அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர்[6]. அவ்வாறு செய்வதிலிருந்து, அவர்களுக்கு அத்தகைய அதிகாரம் உள்ளதா, யார் கொடுத்தது என்று தெரியவில்லை. அரசு கோடிகளில் பணத்தை இவர்களுக்கு பல திட்டங்கள் மூலம் அளித்து வருகிறது. போதாகுறைக்கு, அயல்நாடுகளிலிருந்தும் பணம் வருகிறது,. பிறகு, அவர்களிடையே ஏன் இத்தகைய கீழ்த்தரமான மதவெறி, சமய துவேசம், மதம் பெயரால் இத்தகைய தீண்டாமை முதலியவற்றை எப்படி பின்பற்ற முடிகிறது என்பதை எல்லாம் சமூக ஆய்வாளர், ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூதாட்டிஉடலைபுதைக்கமறுப்பு: தேனியில் நடந்தது போன்ற அதே சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே நடந்ததது. சென்பகராய நல்லூரை சேர்ந்த ஜகதாம்பாள் என்ற 85 வயது மூதாட்டி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளார். இவர் உயிரிழந்ததை அடுத்து கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைப்பதற்காக நாகையில் உள்ள ஒரு இடுகாட்டிற்கு வந்துள்ளனர். இதை அறிந்து அங்கு கூடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், உயிரிழந்த இந்துக்களின் உடலை மட்டுமே இங்கு எரிக்கவோ புதைக்கவோ முடியும் எனக்கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் கிறிஸ்தவ முறைப்படி புதைக்க விரும்பினால் கிறிஸ்தவ தோட்டத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்கை செய்யுமாறு அறிவுருத்தினர்.
தொடரும்மதவெறிசெயல்கள்!: கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது. மனிதர்களின் இறப்பிலும் இவ்வாறு மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் சில அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அங்கு பணியில் இருக்கும் துணை நிற்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சம்பவங்கள் குறித்து கேள்வி பட்ட சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
போலீசார்சமரசத்திற்குப்பிறகுஉடல்புதைக்கப்பட்டது: தேனியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை புதைக்க விடுவோம் எனக் கூறியதைத் தொடர்ந்து போலீசாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஆரோன் என்பவர், இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதன் பின் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஜான்பீட்டர் இறந்த நிலையில் ஊர் பெரியவர்கள் மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்[7]. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என சிலர் தகராறில் ஈடுபட்டனர்[8]. இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி தலைமையில் கிறிஸ்தவ மத பெரியவர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்[9]. பின்னர் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உடல் புதைக்கப்பட்டது[10]. இதை தீண்டாமை என்பதா, கத்தோலிக்க ஒதுக்கி வைப்பு என்று சொல்லி மறந்து விடுவதா?
கத்தோலிக்க அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியனவும் ஆராயப் படவேண்டும்: வழக்கம் போல ஊடகங்கள் இதனை தற்சமய செய்தியாக்கி, அந்த உடலை அடக்கம் புரிந்தது போல, இந்த விவகாரத்தையும் மூடி மறைத்துவிடுவர். ஆனால், இத்தகைய அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் பல மக்களிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். முஸ்லிம் அடிப்படைவாதம், மததுவேஷம், சமய காழ்ப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் உலக அளவில் பாதிப்பு இருப்பதால், இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாகப் பேசப் படுகிறது. ஆனால், கத்தோலிக்கத் தீவிரவாதம் பேசப் படவில்லை, விவாதிக்க்கப் படவில்லை. கோவா மற்றும் சில இடங்களில் நடந்த குரூரங்கள், கொடுமைகள், பயங்கரவாத செயல்கள் முதலியன மறக்கப் படுகின்றன, மறைக்கப் படுகின்றன, பிறகு மறுக்கப் படுகின்றன, என்ற நிலைக்கும் வந்து விடும். எனவே இதைப் பற்றி சமூகவியல், மனோதத்துவியல், மதங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும்.
[5] ஜீ.நியூஸ், தேனி: மகன்மதம்மாறியதால்தந்தையின்உடலைஅடக்கம்செய்யமறுத்தகல்லறைபொறுப்பாளர்கள், Written by – Yuvashree | Last Updated : May 17, 2023, 03:09 PM IST
பட்டினி இருந்து கிடந்தால் ஏசுவை சந்திக்கலாம், சுவர்கத்திற்குச் செல்லலாம் – இறுதிகால சர்ச்சின் குறுக்கு வழி!
கென்யாவில்பட்டினிவழிபாடுநடத்திஇறந்தவர்களின்எண்ணிக்கை 201 ஆகஅதிகரித்துள்ளது: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி [Paul Mackenzie Nthenge] என்பவர் வசித்து வந்தார்[1]. அவருக்கு சொந்தமான, 800ஏக்கர் பண்ணையில் ஏராளமானோர் உடல் மெலிந்து உயிரிழந்து கிடப்பதாக, அந்நாட்டு போலீசாருக்கு கடந்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி தகவல் கிடைத்தது[2]. அப்பொழுதே போலீசார் விசாரித்து, சோதனை செய்த பொழுது, 45 உடல்கள் கிடைத்தன[3], 58 புதைக்குழிகள் கண்டெடுக்கப் பட்டன. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. ‘பட்டினி கிடந்தால் இயேசுவை அடையலாம்’ என, பால் மெக்கன்சி கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது[5]. பைபிளில் வரும் இறுதி நாட்கள், இறப்பு, உயிர்த்தெழல் முதலியவற்றை விளக்கி, கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சங்கம் முதலியன சாத்தானின் ஏஜென்டுகள் என்று போதித்து வந்தார்[6].
பட்டினி கிடந்து இறந்தால் ஏசுவை சந்திக்கலாம், சொர்கத்திற்குப் போகலாம்: இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் [the Good News International Church ] பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்[7]. அவரது சீடர்களாகி உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி [Doomsday cult] அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது[8]. பட்டினி கிடந்தால் இறக்கும் நிலை ஏற்படும். ஆனால், இறக்காமல் கர்த்தர் நம்மை காப்பாற்றுவார். உயிர் கொடுப்பார், மீட்பார், சுவர்க்கத்திற்கு கூட்டிச் செல்வார் என்றெக்ல்லாம் போதித்து, அவர்களை மூளை சலவை செய்து வைத்தார். அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்[9]. அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர்[10]. இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்[11]. மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, பண்ணை முழுதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது. இதில், 14-05-2023 அன்று மேலும் 22 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பட்டினி வழிபாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்ந்துள்ளது.
பலசடலங்களில்உள்ளுறுப்புகள்மாயமாகியுள்ளதாகவும்கூறப்படுகிறது: பெரும்பாலான சடலங்கள் பட்டினியால் உடல் மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பட்டினி, மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணங்களால் இறந்தது தெரிய வந்துள்ளது. பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழிபாட்டில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போதகர் மெக்கன்சி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி உட்பட 16 பேர் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைளை குறி வைக்கும் இந்த குரூரக் கூட்டம்: கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி [Interior Cabinet Secretary Kithure Kindiki] சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார். தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர். அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.
சீடர்களை, பக்தகளை துன்புறுத்திய விதம்: இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார். இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார். அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார். மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
உடல்உறுப்புகளைதிருடும்கும்பலின்தொடர்பு உள்ளதா?: சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதனால், தண்டனையாக அவ்வாறு செய்திருக்கலாம். ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் 19-04-2023 அன்று செய்து கைது உள்ளனர். விசாரணை, தேடும் படலங்களும் தொடர்கின்றன.
[6] Mackenzie’s apocalyptic narratives focused on the end of times, and were against the modern or western ways of life such as seeking medical services, education or music. His conspiracy theories emphasised the Catholic Church, the US and the United Nations as “agents of Satan.
இறந்தவர் உயிர்த்தெழுவார் என்று நம்பிக்கையுடன் ஜெபித்து வந்த கிறிஸ்தவ குடும்பத்தினர்! தமிழகத்தில் இன்னொரு சம்பவம்!!
இந்துகுடும்பம்மதம்மாறியது: மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவருடைய மனைவி மாலதி (55)[1]. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்[2]. அதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. படித்து வருகிறார்[3]. மற்றொருவர் தேனி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்[4]. பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்[5]. சமீபத்தில் அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள்[6]. போதகர்களாக பணி செய்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்[7]. இப்படி எல்லாமே ஒருவரியில் செய்திகளில் வெளியிடப் பட்டுள்ளன. . “போலீஸார்விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதிமற்றும்அவரதுஇருமகன்களும்குடும்பத்துடன்சிலஆண்டுகளுக்குமுன்னர்இந்துமதத்திலிருந்துகிறிஸ்தவமதத்திற்குதங்களைமதமாற்றம்செய்துகொண்டுள்ளது….” என்று ஒரு ஊடகம் குறிப்பிடுகிறது. திடீரென்று அவ்வாறு ஏற்பட்ட மாற்றம், மனமாற்றம், மதமாற்றம் ஏன் இவ்வாறு செய்ய மாற்றியது என்று தெரியவில்லை.
பெண் இறந்ததால், உடலை குளிரூட்டப்பட்டபெட்டியில்வைத்தது: உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த மாலதியை சில தினங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்[8]. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 8-ந் தேதி இரவு 08-11-2022 அன்று அவர் இறந்ததாக கூறப்படுகிறது. சில கிறிஸ்தவப் பிரிவுகள் மருந்துகள் கூட உட்கொள்ளாமல், கடவுளே காப்பாற்றுவார் என்று கூட, ஜெபம் செய்து கொண்டே இருந்து விடுவர். இருப்பினும், இவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், இரு மகன்களுமே டாக்டர்கள் மற்றும் படித்து வருகிறார்கள் என்பதால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பர். இதையடுத்து அவரது உடலை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தனர். முதலில் அடக்கம் செய்ய தீர்மானித்திருப்பர். இருப்பினும், ஒரு வேளை அவர்களுக்கு “உயித்தெழுதல்” மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். ஒருவேளை தந்தைக்கு அத்தகைய நம்பிக்கை அதிகமாக இருந்த நிலையில், மகன்கள் உதவியிருக்கலாம். பின்னர் தகவல் அறிந்து அவர்களது மகன்கள் வீட்டிற்கு வந்தனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி வந்து போலீஸார் விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதம் ஆவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மூன்றாவது நாளாக இன்றும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில் சந்தேகம் உறுதியானது.
உயிர்ப்பிக்கும்முயற்சியில்அவரதுகுடும்பத்தினர்ஈடுபட்டுஇருப்பதாகபக்கத்துவீட்டினர்புகார்: அவர்கள் கிருத்துவ மதம் மாறியது, குடும்பமே விசுவாசமாக இருப்பது, கூட்டங்களுக்குச் செல்வது முதலியவற்றை அக்கம்-பக்கத்தினர் பார்த்திருப்பர்-றிந்திருப்பர். இருப்பினும், இத்தகைய சூழல் வரும் போது, அதிர்ச்சியடையச் செய்வர். அதனால், விசாரித்துத் தெரிந்து கொண்ட போது, திகைத்திருப்பர், இந்த நிலையில் அவரை ஜெபம் செய்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கொடுத்தனர். மருத்துவம் படித்த இளைஞர்களே இத்தகைய நம்பிக்கை மற்றும் செயல்களில் ஈடுபட்டதை கவனிக்க வேண்டும். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மாலதியின் உடலை அடக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பாலகிருஷ்ணன் கூறினாராம். ஆக, மதநம்பிக்கை எனும் போது, தயக்கம் காட்டியதும், அதே நேரத்தில் சீரியஸான விசயம் என்பதும் தெரிகிறது.
மூன்று நாள் ஆகியும் அடக்கம் செய்யாதலால், மறுபடியும் புகார்: ஊன்று நாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் ஜெபித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒன்றும் நட்டக்கவில்லை. அக்குடியிருப்பில் இருப்பவர்களுக்கோ சங்கடம், பீதி அதிகமாகியுள்ளதுதீதனால், மறுபடியும் போலீசாருக்குத் தெர்வித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, மனைவியின் உடலை நெல்லை மாவட்டம் களக்காட்டில் அடக்கம் செய்ய கொண்டு செல்வதாக கூறி பாலகிருஷ்ணன் உறவினர்களுடன் அங்கிருந்து சென்றார். அதாவது, போலீசார் கூட இவ்விசயங்களில் இவ்வாறு “பேச்சு வார்த்தை” நடத்த வேண்டியது போலிருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “உறவினர்கள் வந்தவுடன் உடலை எடுத்து செல்வதாக கூறினர்[9]. அதற்குள் அங்கிருந்தவர்கள் வேறுமாதிரி நினைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டனர் என்றனர். “வேறு மாதிரி,” என்றால் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. “போலீஸார்விசாரணையில், பாலகிருஷ்ணன், மாலதிமற்றும்அவரதுஇருமகன்களும்குடும்பத்துடன்சிலஆண்டுகளுக்குமுன்னர்இந்துமதத்திலிருந்துகிறிஸ்தவமதத்திற்குதங்களைமதமாற்றம்செய்துகொண்டுள்ளதும், அதன்படியே, பிரார்த்தனையின்மூலமாகஇறந்துபோனமாலதியைஉயிர்ப்பிக்கமுடியும்என்றநம்பிக்கையில்அவரதுஉடலைவீட்டிலேயேவைத்திருந்ததும்தெரியவந்தது.வீட்டிலிருந்துதுர்நாற்றம்வந்ததால்இதுவெளியேதெரிந்ததாகவும்தகவல்வெளியாகியுள்ளது,” என்று இன்னொரு ஊடகம் கூறுகிறது[10].
2021ல் தேனியில் நடந்ட சம்பவம்[11] – இறந்தவர் உயிர்த்தெழுவார்களா? குழந்தைகளுக்கு அவ்வாறு போதிக்கலாமா? இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைக்கலாமா?: இறந்தவர் உயிர்த்தெழுவார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கையாக இருக்கலாம், ஆனால் புதைத்து, உடல் மண்ணோடு மண்ணாகி விட்டப் பிறகு, அவர்கள் அவ்வாறேத் திரும்பி வருவர் என்பது சரியில்லை. குழந்தைகளுக்கு அவ்வாறு போதிப்பது சரியில்லை, ஆபத்தானது. இறந்த தாய் திரும்ப வருவாள் என்று நம்பவைப்பது, கொடூரமானது. அவ்வாறு நம்ப வைத்ததினால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, “தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், “எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார், என்ற செய்திகள், இப்பிரச்சினையின் ஆழத்தை, தீவிரத்தை மற்றும் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது. மதநம்பிக்கைகள் இருக்கலாம், ஆனால், இவ்வாறு பிஞ்சு மனங்களை பாதிக்கும் முறையில் இருக்கக் கூடாது[12]. இங்கும், அது பொறுந்தும்..
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].
ஆசியஆயர்பேரவைக்கூட்டமைப்பின்உறுப்பினர்நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].
கொரோனாகாலத்தில்கிருத்துவம்படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.
இந்தியாவைகுறிவைக்கிறதா, ஆயர்மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரியசக்திகளின்கைகளில்அகப்பட்டுச்சிக்கிதவிக்கிறதுஆசியா. குடியரசுதீயசக்திகளின்கைகளில்உள்ளது. நோய், பஞ்சம், பட்டினிஎன்றுமனிதசமுதாயம்அழுதுவருகின்றது. மனிதர்களால்உண்டாக்கப்பட்டுவரும்அழிவுகளிலிருந்துவிடுபடவேண்டும். சர்ச்இதற்காகஎழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.
மாநாட்டின்குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion வெறும் 8 percent ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.
1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:
நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news],
ஞானஸ்தானம்பெற்றவிசுவாசிகளின்நம்பிக்கைகளுக்குஏற்றமுறையில்நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized]; மற்றும்
மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]
அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..
செய்யவேண்டியதிட்டப்பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.
[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.
[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022
[10] Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.
The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.
[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said
Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor
கோவாகடற்கரைமாநிலம்எல்லாமேஉண்டுபோலும்: நாடு முழுவதும் பரவலாக மதமாற்றம் நடந்து வருகிறது என்பது தெரிந்த விசயமே. குறிப்பாக, கடற்கரை ஏரியாக்களில் வசிக்கும் கிராம மக்களை குறிவைத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவது கோவா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர்கிறது. இதேபோல, இஸ்லாமிய அடிப்படைவாத சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனால், அவர்களது வழிமுறை அதிரடியாக, வேறு முறைகளிலும் இருக்கும். இதன் காரணமாக, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது, ஆனால் மத்திய-மாநில அரசுகள் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆகவே, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது, சில மாநிலங்களில் சட்டமும் அமூலில் உள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடை தொடர்பாக, சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
கத்தோலிக்கப்பாதிரியின்பிரச்சாரங்கள்: கோவா மாநிலம் கத்தோலிக்கக் கிருத்துவத்திற்குப் பெயர் போனது. இடைக்காலத்தில், போர்ச்சுகீசியர் கைப் பற்றிக் கொண்டு, இந்துக்களை மதம் மாற்றினர். அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் அவர்கள் உள்ளனர். அரசியல், அதிகாரம் முதலியவற்றிலும் ஆதிக்கம் கொண்டுள்ளனர். பனாஜியைச் சேர்ந்தவர் டோமினிக் டிசோசா (Dominic D’Souza ). கிறிஸ்தவ பாதிரியாரான இவரது மனைவி ஜோன் மார்கெரினாஸ் (Joan Mascarenhas). இருவரும் வடக்கு கோவாவிலுள்ள சியோலிம் கிராமத்தில் கிருத்துவ பிரச்சாரம் செய்து வருகிறார். எப்பொழுதும் பாடல்கள், கொண்டாங்கள் என்று அதிரடி ஆர்பாட்டங்களுடன் பிரச்சார செய்வது வழக்கம்[1]. ஒலிபெருக்கிகளை வைத்து செய்யும் அட்டகாசங்களினால், அங்கிருக்கும் கிருத்துவர்களாலேயே பொறுக்க முடியாமல், புகார் கொடுத்துள்ளனர்[2]. அதற்காக முறையாக அனுமதியும்பெறுவதில்லை. முந்தைய முதலமைச்சருடன் தொடர்பு இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டார்.
பேயோட்டிய தம்பதியர்: ரோமன் கத்தோலிக்க சமய மரபில் பேயோட்டுதல் ஒரு சடங்காகும் ஆனால் ஆனால் பாப்டிசம் அல்லது கன்ஃபெஷன் போலின்றி புனிதமானது கிடையாது ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவது கிடையாது. இப்பொழுது இது வியாபாரம் ஆகிவிட்டது. நம்புகிறவர்கள் வரத்தான் செய்கிறார்கள். புனிதச் சடங்கைப் போலின்றி பேயோட்டுதலின் “ஒருங்கிணைப்பும் விளைவுத் திறனும் மாறாத சூத்திரம் அல்லது அறிவுறுத்தப்படும் வரிசை முறையான செயல்களைப் பயன்படுத்துவதைப் பின்பற்றுல்லை. தகுதியுடைய, சட்டரீதியான தேவாலய அதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் பெறுவது மற்றும் பேயோட்டுபவரின் நம்பிக்கை”ஆகியவையாகும். இப்போதும் கூட தற்போதைய அனைத்து பேயோட்டல் சடங்குகளிலும் கத்தோலிக்க பேயோட்டல் மிகக் கடுமையான, ஒழுங்கமைந்துள்ள ஒன்று என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம். தேவாலயத்தின் கெனான் சட்டப்படி, அதிகாரப்பூர்வமான பேயோட்டல் செயல்களை அதற்கென நியமிக்கப்பட்ட பாதிரியார் (அல்லது உயர் மதகுரு) மட்டுமே செய்ய முடியும் என்றாலும், பாதிரிகள் செய்து வருவதை கவனிக்கலாம், வீடியோக்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவரும் வெளுத்து வாங்குகிறார்.
சாம–தான–பேத–தண்டமுறைகள்கையாண்டது: பாதிரி மற்றும் மனைவி, ஜோடியாக அட்டகாசமாக, பாடல்களைப் பாடிக் கொண்டு கிராம சர்ச்சில் ஊழியம் செய்வார். கூட்டம் கூட்டுவார். இலவசமாகப் பொருட்களை கொடுப்பார். பேஸ்புக் போன்றவற்றிலும் அத்தகையப் புகைப்படங்களைப் போட்டுக் கொண்டு, விளம்பரம் செய்து கொள்வார். பலவித உடைகளை அணீந்து வலம் வருவார். சாமியார் போன்றூ தலைமுடி வளர்த்து, தொங்க விடுவார். சலிகோவா கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாகவும் கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர்[3]. டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாக கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக இரண்டு பேர் மபுசா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்[4]. குறிப்பாக பிரகாஷ் கோப்ரேகர் (Prakash Khobrekar) என்பவர், ஜோன் மார்கெரினாஸ், பலவிதமாக பேசி, ஆசை வார்த்தைகள் பேசி, சைகைகள் காட்டி ஏமாற்றி மதம் மாற்றினார் என்று விளக்கினார்[5]. அந்த நபரின் பெயர் வெளிப்படுத்தப் படவில்லை. மேலும் இந்துமதம் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளார். புகார் கொடுத்தால் ……..தகாத வார்த்தைகள் சொல்லி என்று மிரட்டியும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்[6]. இப்பொழுதெல்லாம், புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை என்று போலீஸார் கொள்கை பின்பற்றுவது தெரிகிறது. குற்றமே செய்தாலும், யாரும் புகார் செய்யவில்லை என்றால் அமைதியாக இருப்பார்கள் போலும்.
புகாரின்பேரில்கைதுசெய்யப்பட்டது: இதனையடுத்து அவர்கள் மீது முறையற்ற மருந்துகள் பிரயோகம் மற்றும் விளம்பரசட்டப் பிரிவுகளின் கீழ் [the Drugs and Magic Remedies (Objectionable Advertisement) Act.] இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன[7]. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் மத உணர்வுகளை சீண்டும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது[8]. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பனாஜி அருகேயுள்ள சலிகோவா கிராமத்தில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்[9]. பிறகு முறையாக நீதிபதியின் முன்பாக ஆஜர் படுத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[10]. ஆனால் 27-05-2022 அன்று பெயிலில் வெளியே வந்து விட்டதாகத் தெரிகிறது. முதலமைச்சரும் எச்சரிக்கை விட்டுள்ளார். ஆக அரசியல் நெருக்கடியும் வெளிப்படுகிறது. பிறகு என்ன, அல்லேலுய்யா என்று கத்திக் கொண்டு, வேலையை ஆரம்பித்து விடுவார்.
வேதபிரகாஷ்
28-05-2022
[1] Times of India, Siolim couple arrested for ‘conversions’, TNN / Updated: May 27, 2022, 07:46 IST.
[2] Domnic is not new to controversy and locals at Sodiem have been objecting to his activities frequently at the 5 Pillars Christian Church. The villagers had earlier alleged that Domnic was using loudspeakers without permission and was disturbing peace in the village. He would disturb prayer services at the local Catholic church, villagers had said. Loudspeakers and other sound system equipment had subsequently been seized by police from Domnic’s prayer house. He had, however, maintained that he had been running prayer activities for nearly two decades at his church.
[5] The Hindutan Times, Preacher couple arrested for alleged religious conversion in Goa, Published on May 26, 2022 11:22 PM IST.
[6] According to the complaint filed by one Prakash Khobrekar, D’Souza and Mascarenhas had induced an unnamed person to give up his religious belief and convert to the religion professed and propagated by them. “All the accused persons deliberately made gestures by uttering words, acts, threatened the complainant with the intention to hurt his religious sentiments and lured the complainant to accept the religion professed and propagated by them,” Khobrekar said in his complaint.
கடந்த 10 ஆண்டுகளில்ஆணையம்செயல்படாத்தால், சிறுபான்மையினருக்குஎதிரானநடைபெற்றகுற்றங்கள்குறித்ததரவுகளைஎதுவும்இல்லை: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசியது, “சென்னையில்கடந்தஇரண்டுஆண்டுகள்மட்டும்நீர்நிலைகளைசரிசெய்யரூ.3000 கோடிசெலவுசெய்துள்ளனர். ஆனால்தற்போதுவிரைவாகமீட்புப்பணிகள்நடைபெறுகிறதுஎன்றால்கடந்தஐந்துமாதத்தில்திமுகஅரசுஎடுக்கப்பட்டநடவடிக்கைகள்தான்தேர்தலுக்குமுந்தையஇரண்டுஆண்டுகள்ஒதுக்கப்பட்ட 3000 கோடிரூபாய்சென்னையில்எங்குசெலவழிக்கப்பட்டது. பீட்டர்அல்போன்ஸ்பேட்டிசாத்தான்குளம்தந்தைமகன்கொலைவழக்கில்நீதிமன்றத்தில்வழக்குசென்றுகொண்டிருப்பதால், ஆணையம்விசாரணையைதொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில்ஆணையம்செயல்படாத்தால், சிறுபான்மையினருக்குஎதிரானநடைபெற்றகுற்றங்கள்குறித்ததரவுகளைஎதுவும்இல்லை. பொதுவாகஎந்தமதங்களிலும்புறம்போக்குஇடங்களில்தேவாலயங்களையும், வழிபாட்டுக்கூடங்களையும்அமைக்காதீர்கள். புறம்போக்குஇடத்தில்கட்டிவிட்டுஅனுமதிகேட்கும்போது, அரசால்அனுமதிகொடுக்கமுடியாது. பட்டாஇடங்களில்வழிபாட்டுத்தலங்கள்கட்டுவதாகஇருந்தால், அதற்கானஅனுமதியைமாவட்டஆட்சியர்கள்விரைந்துஅளிக்கவேண்டும்,” என்று தெரிவித்தார். இனி, எஸ்ரா சற்குணம் பற்றி கவனிப்போம்.
நிலமோசடி, ஆக்கிரமிப்புசெய்வதில்ஒன்றும்தவறில்லை–சொல்வதுஎஸ்ராசற்குணம்!: சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காகஒருசிறியசர்ச்சைக்கட்டஇப்படிபுறம்போக்குநிலத்தைவளைத்துப்போடுவதில்தவறுஇல்லை,” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்! கருணாநிதி நூறான்டுகள் வாழ்வார் என்று நற்செய்தியாக, தீர்க்கதரிசனம் சொன்னவர்.
திமுகசர்ச்சுகளைபெருக்குவதற்கு–அதாவதுஅதிகமாக்குவதற்குஉதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்[4]. திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது! ஆக, எஸ்ரா சற்குணம் 1974ல் சொல்லிய திட்டத்தை வைத்துக் கொண்டு தான் 50 ஆண்டுகளாக கிருத்துவர்கள் இத்தகைய நில ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலத்தை அபகரித்தல், சர்ச் கட்டுதல், பிறகு பட்டா வாங்குதல், முதலியன நடந்து வருகின்றன. பீட்டர் அல்போன்ஸும், நாஜுக்காக, “திராவிடியன் மாடல்,” எறு சொல்லியிருக்கிறார், ஆகவே, அட்த்தகைய சட்டமீறல்கள் எல்லாமே ஒழுங்குப் படுத்தப் படும். இடிக்கப் பட்ட கோவில்கள் அம்பேல், இந்து நம்பிக்கையாளர்கள் முட்டாள்கள்!
இந்துவிரோதிஎஸ்டாசற்குணத்தின்பேச்சு–ஜூன் 2029: ஜூன் 2019ல் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்[5], கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 16-ந் தேதி 2019 அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். பிறகு என்னவாயிற்று என்று யாரும் கவலைப்படுவதில்லை, மன்னிப்பு கேட்டார், என்று வழக்கு முடிக்கப் பட்டிருக்கும். ஆனால், தூஷணங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.
கிருத்துவர்களுக்கு“பயிற்சிபட்டறை”நடத்தியதுபொன்றிருந்தகூட்டம்: தமிழகத்தில் சிறுபான்மையினர் / மைனாரிடி என்றால் துலுக்கர் மற்றும் கிருத்துவர் என்றுதான் உள்ளனர் போலும். ஜெயின், பௌத்தர், பார்சி என்றெல்லாம் இருந்தாலும், அவர்கள் உறுப்பினர்கள் இருந்தாலும், கூட்டத்தில் பங்கு கொண்டாலும், அவர்கள் பிரச்சினை, அவர்கள் நலன், அவர்கள் பேசியது பற்றி செய்திகளில் ஒன்றையும் காணோம். ஏதோ, சர்ச்சுகளை எப்படி கட்டுவது, நிலத்தை எப்படி வாங்குவது, சட்டப்படி ஸ்வீகாரம் செய்து கொள்வது, பட்டா பெறுவது, கட்டிய சர்ச்சை சட்டப் படி முறைப் படுத்துவது, அதற்கு முதலமைச்சர் ஆணை பிறப்பிப்பார் என்பது…… என்று தான் “அறிவுரை” ஆலோசனையாக இருந்ததே தவிர, கண்டிப்பாக, சட்டப் படி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. ஆகவே, இது ஏதோ கிருத்துவர்களுக்கு “பயிற்சி பட்டறை” நடத்தியது போன்றிருந்தது. 1974ல் எஸ்றா சற்குணம் குறிப்பிட்டதற்கும், இப்பொழுது 2022ல் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாடல், பெரியாரிஸ போதையில், இந்துவிரோதத்துடன் ஊறி நன்றாகவே வேலை செய்கிறது போலும்!
[1] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.
[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!
M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.
[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.
[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!
[4] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்துமதம்குறித்துஅவதூறுபேச்சு ! மதபோதகர்எஸ்றாசற்குணம்மீதுவழக்குப்பதிவு !!, Last Updated Jun 21, 2019, 9:40 PM IST
சொந்தபட்டாஇடங்களில்தேவாலயம்கட்டிவிட்டுதடையின்மைசான்றைமாவட்டநிர்வாகத்திடம்கேட்பது: சொந்த பட்டா இடங்களில் தேவாலயம் கட்டிவிட்டு அதன்பிறகு தடையின்மை சான்றை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கிறார்கள். அதுமுறையல்ல[1]. இடம் வாங்கிய உடன் தேவாலயம் கட்டுவதற்கு முன் அதற்கான தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சான்று பெறுவதில் சிக்கல் நீடித்தால் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுங்கள். அதன்பிறகு தீர்வு இல்லை என்றால் ஆணையத்தை அணுகலாம். இதுதொடர்பாக நிரந்தரமான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று ஆணையத்தின் சார்பில் முதல்-அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் உத்தரவு வரும்[2]. சரியில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு வழியையும் சொல்லிக் கொடுக்கிறார் மற்றும் விரைவில் உத்தரவு வரும் என்றும் சொல்வது கவனிக்கத் தக்கது. இதைத்தான், “திராவிடியன் மாடல்,” என்கிறாற் போலும். எஸ்ரா வழியில் நிலத்தை அபகரித்து, சர்ச் கட்டுங்கள், பீட்டர் அல்போன்ஸ் வழியில் சரிசெய்து விடுங்கள். பெரியாரிஸ-இந்துவிரோத முதலமைச்சர் உதவுவார் என்கிறார் போலும். 3000 வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் படப் போகின்றன என்றால், கோவில்கள் தான் இடிக்கப் பட்டு வருகின்றன. ஒரு மசூதி-சர்ச் என்று தொட்டால், அவர்கள் தடுக்கிறர்கள், அதிகாரிகளும் விட்டு விடுகிறார்கள். இதுதான் செக்யூலரிஸ சட்டமாக இருக்கிறது.
நிலம்பிரத்யேகமாகவாங்கி, அனுமதிபெற்றுசர்ச்–மசூதிகட்டவேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “புதியதேவாலயம், பள்ளிவாசல்கட்டுவதற்குதடையின்மைசான்றுகேட்டுமாவட்டநிர்வாகத்திடம்விண்ணப்பித்தால்அதுகுறித்துஅதிகபட்சமாகஒருமாதத்துக்குள்முடிவைதெரிவிக்கவேண்டும். கிறிஸ்தவர்களுக்குசமத்துவகல்லறைதோட்டத்துக்குஇடம்ஒதுக்கீடுசெய்யப்படும். அதற்குமுன்னுரிமைவழங்கப்படுகிறது. தனித்தனிகல்லறைதோட்டம்வேண்டும்என்றால்நிலத்தைவாங்கிதடையின்மைசான்றுஅனுமதிமாவட்டநிர்வாகத்திடம்கேட்கவேண்டும். சிறுபான்மைமக்களுக்குகல்விக்கடன், பொருளாதாரகடன், மகளிர்உதவும்சங்களுக்கானகடன்வழங்குவதைவேகப்படுத்தியுள்ளோம்”. “சமத்துவ கல்லறைத் தோட்டம்,” என்று நில அபகரிப்பு இனி ஆரம்பிக்கும். முன்னர், துலுக்கர், கோவில்கள், காட்டுகள் / படித்துறை, மடங்கள் போன்ற இடங்களில் பிணத்தைப் புதைத்து தான் ஆக்கிரமிப்பை ஆரம்பிப்பர். ஆக, அதே முறையை சொல்லிக் கொடுக்கிறார் போலும்.
தனிவீடுகளில்வழிபாடு, மைக்வைக்கக்கூடாது: பீட்டர் அல்போன்ஸ் தொடர்ந்து பேசுகிறார், “பொதுமக்களுக்குஇடையூறுஇல்லாமல்வழிபாடுநடத்தவேண்டும். மைக்வைத்துக்கொண்டுஅதிகப்படியானசத்தத்துடன்வழிபாடுநடத்துவதைதவிர்க்கவேண்டும். மதபிரசாரம்செய்வதைதவிர்க்கவேண்டும். இதுசமூகஅமைதிக்குநாம்செய்யவேண்டியகடமையாகும். தனிவீடுகளில்அமைதியாகவழிபாடு, ஜெபம், தொழுகைசெய்வதற்குயாருடையஅனுமதியும்தேவையில்லை. அந்தஉரிமைஅனைத்துமதத்தினருக்கும்உள்ளது. மைக்வைக்கக்கூடாது. வீட்டில்அமைதியாக 10, 15 பேர்ஜெபம்செய்தால்யாரும்தடுக்கமுடியாது. கலெக்டர், மாவட்டபோலீஸ்அதிகாரிகளுக்கும்தெரிவித்துக்கொள்கிறோம். எங்களிடம்அளித்தமனுக்கள்தொடர்பாகவருகிற 28-ந்தேதிகாலை 10 மணிக்குதிருப்பூர்கலெக்டர்தலைமையில்விசாரணைநடத்திமுடிவுதெரிவிக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார். “தவிர்க்கவேண்டும்,” “தவிர்க்கவேண்டும்,” என்றுதான் கூறுகிறாரே தவிர, செய்யக் கூடாது, சட்டமீறல் என்று சொல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இத்தகைய கூட்டங்கள் மாமூலாக, சாதாரணமாகி விட்டது போலும். நவம்பர் 2021ல் நடந்த கூட்டத்திலும் இதே தான் பேசப் பட்டது.
சிறுபான்மையினருக்குபாதுகாப்புநவம்பர் 2021 கூட்டம்: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 2021லும் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “கடந்தஏழுஆண்டுகளாகதமிழ்நாட்டில்செயல்படாமல்இருந்தசிறுபான்மைநலஆணையத்தைதூசிதட்டிசரிசெய்யும்பணியில்ஈடுபட்டுவருகிறோம்[3]. கர்நாடகமாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமைகளில்கூடகிறிஸ்தவர்கள்தங்கள்ஆராதனைவழிபாடுநடத்தமுடியாதசூழல்உள்ளது. ஆனால், இந்தியாவிலேயேதமிழ்நாட்டில்தான்சிறுபான்மையினமக்கள்மிகபாதுகாக்கமிககண்ணியத்தோடுவாழகூடியநிலைஉள்ளது. ஜனநாயகத்தில்சிறுபான்மைஎன்பதுஒருஊனம்[4]. ஒன்றியஅரசுசிறுபான்மைமக்களுக்குவழங்கும்உதவித்தொகைகுஜராத், உத்திரப்பிரதேசம்போன்றவடமாநிலங்களிலையேநின்றுவிடுகிறது,” என்று கூறினார். பிறகு மற்ற 20க்கும் மேலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்ன நடக்கிறது? ஏதோ பேச வேண்டும் என்று பேசியது போலத்தானே இருக்கிறது.
நவம்பர் 2021 – புறம்போக்குநிலங்களில்கட்டியசர்ச்சுகளுக்குஅனுமதிகிடையாது: குறிப்பாக புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கு அனுமதி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும்போது[5], பலர் அரசு புறம்போக்கு இடத்தில் தேவாலயங்களை கட்டிவிட்டு அனுமதி கேட்பதாகவும், அது போன்ற இடங்களுக்கு யார் நினைத்தாலும் அனுமதி கொடுக்க முடியாது என்றும் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார்[6]. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர், சுமார் 18 லட்சம் மதிப்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. அத்தகைய சட்டமீறல் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு கட்டப் பட்ட சர்ச்சுகள் இடிக்கப் படும் என்று சொல்லவில்லை.
சமத்துவகல்லறைத்தோட்டம்பலஇடங்களில்கல்லறைகளில், மதவேறுபாடுகள்இருப்பதால், சிலபேரைஅடக்கம்செய்யஅனுமதிமறுக்கின்றனர்: அதனையடுத்து ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடுபாஜகதலைவர்அண்ணாமலை, முல்லைபெரியாறுஅணையில்குறிப்பிட்டஅளவுநீரைபெருக்கவில்லைஎன்றுபெரியபோராட்டம்நடத்துகிறார். அவருக்குஎன்பாராட்டுக்கள். இதேபோல்தயவுசெய்துமதுரையில்எய்ம்ஸ்மருத்துவமனைபிரதமரேஅடிக்கல்நாட்டியபிறகும்கட்டப்படாமல்இருக்கிறது. அதற்காகவும்அவர்ஒருஆர்ப்பாட்டத்தைசென்னையில்நடத்தவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில்தூர்வாருகிறோம்என்றபெயரில்ஆண்டுக்குஆயிரம்கோடிரூபாய்செலவுசெய்துள்ளனர். சமத்துவகல்லறைத்தோட்டம்பலஇடங்களில்கல்லறைகளில், மதவேறுபாடுகள்இருப்பதால், சிலபேரைஅடக்கம்செய்யஅனுமதிமறுக்கின்றனர்[7]. எனவே, சாதிமதவேறுபாடின்றிசமத்துவகல்லறைகளைஉருவாக்கித்தரமுதலமைச்சருக்குகோரிக்கைவைத்துள்ளோம்.”. அப்படியென்றால் அது கிருத்துவப் பிரச்சினை ஆகிறது, அதற்கு எப்படி நாத்திக திமுக அரசு தலைவர் உதவுவார் என்று தெரியவில்லை. போப், கார்டினல், பிஷப் சொல்வதை எல்லாம் மதிக்காத கிருத்டுவர்கள் ஸ்டாலின் சொல்லிக் கேட்பார்களா? பிறகு, ஸ்டாலின் தான் கிருத்துவர்களின் தலைவரா? வழக்கம் போல ஜெயின், பௌத்த உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்று சொல்லப்படவில்லை.
[3] பிறகு ரம்ஜான் கஞ்சிக்கு டன் – டன்னாக அரிசி எப்படி கிடைத்தது, ஹஜ்-ஜெருசலேம் மானியங்கள் எப்படி கிடைத்தன என்பனவெல்லாம் தெரியவில்லை.
[4] ஆனால் நாட்டையே துண்டாடி, இன்றும் ஆட்டிப் படைத்து வருகின்றனர். தீவிரவாதம் தொடர்ந்து நடக்கிறது. பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றனர். இதையெல்லாம் ஏன் விவாதிக்க்ப் படவில்லை.
[5] இ.டிவி.பாரத், புறம்போக்குநிலங்களில்தேவாலயங்கள்கட்டஅனுமதிகோரவேண்டாம் – பீட்டர்அல்போன்ஸ்எச்சரிக்கை!, Published on: Nov 10, 2021, 6:29 PM IST
[7] அது கிருத்துவ மதப் பிரச்சினையேயன்றி, பொதுப் பிரச்சினை அல்ல. இத்தனை மெத்தப் படித்த, அதிகாரம் கொண்ட அரசியல் தலைவர்கள் எல்லாம் இருந்தும் அப்படி நடக்கிறது என்றால், அது கிருத்துவத்தின் அடக்கு முறையே ஆகும்.
கிறிஸ்தவத்துக்குஎதிரானசெயல்களைச்செய்ததற்காகஇறுதித்தீர்ப்புநாளின்போதுமனுதாரரைகடவுள்கண்டிப்பார்எனகருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].
அரசியல், அரசியலாக்கப்பட்டநீதித்துறை, திராவிடத்துவகுழப்பங்கள்–சமரசங்கள்முதலியவ்ற்றின்தக்கம்காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே. ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.
நீதிபதிகள்விமர்சனத்திற்குஉள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக்கூச்சநாச்சமில்லாமல்ஒருநீதிபதியேகுற்றவாளியின்வழக்கறிஞராகமாறிப்பேசியநிகழ்வுதமிழகநீதிமன்றவரலாற்றில்நிகழ்ந்துள்ளது. இதற்குமுன்புகாஞ்சிசங்கராச்சாரியார்தமிழ்த்தாய்வாழ்த்தைஅவமதித்தாகத்தொடரப்பட்டவழக்கிலும்தன்சார்புநிலையைபட்டவர்த்தனமாகவெளிப்படுத்தினார்இதேநீதிபதிஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையானவிமர்சனங்களுக்கோமாற்றுக்கருத்துகளுக்கோஇடமின்றிதடாலடியாகஅவதூறுபரப்புவதும், மதத்துவேஷக்கருத்துக்களைவிதைப்பதும், குறிப்பிட்டஒருஅரசியல்இயக்கத்தைஅழிப்பதேஎன்நோக்கம்எனப்பிரகடனப்படுத்திஇயங்குவதும்மாரிதாஸின்இயல்பாகஉள்ளது. மாரிதாஸுக்காகமத்தியஅரசின்கூடுதல்சொலிசிடர்ஜெனரல்அலுவலகத்திலிருந்துவக்கீல்நோட்டீஸ்எப்படிபோகிறது? மாரிதாஸுக்காகவழக்காடும்வழக்கறிஞரின்பின்னணிஎன்ன? வழக்கைநடுநிலையோடுபரிசீலிக்கவேண்டியநீதிபதிமாரிதாஸின்கட்சிக்காராகவெளிப்படும்அவலத்தைஎன்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].
தீர்ப்பைப்பற்றியஎன்னுடையகமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:
1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!
2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!
3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!
4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!
5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!
6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..
7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!
8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!
9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….
10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.
மோசமானமுன்–உதாரணதீர்ப்பா, செக்யூலரிஸசமரசமா, கர்த்தரின்பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!
[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.
[6] ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
[7] சமயம்.தமிழ், மாரிதாஸ்மீதானவழக்குரத்து; மாறுபட்டபார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.
மோசன் மாவுங்கல் – “கடவுளின்சொந்ததேசமான” கேரளாவில் பழங்காலப் பொருட்கள், அருங்காட்சியகம் என்றெல்லாம் சொல்லி கோடிகளில் மோசடி செய்த அகழாய்வு நிபுணர்! (1)
“கடவுளின்சொந்ததேசமான” கேரளாவில், கடவுள்பெயரைச்சொல்லிக்கொண்டுசெய்யப்பட்டுவரும்மோசடிகள், குற்றங்கள்முதலியன: “கடவுளின் சொந்த தேசமான” கேரளாவில், கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு செய்யப் பட்டு வரும் மோசடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆனால், மெத்தப் படித்த மாநிலமானத்தவர்கள், பெரும்பாலான விசயங்களை மறைத்து விடுகின்றனர். திடீரென்று ஏதாவது பிரச்சினை எழும் போது, பல விவகாரங்கள் வெளி வருகின்றன. இருப்பினும் அவை சில நாட்களில் அடங்கி விடுகின்றன, மறைக்கப் படுகின்றன. கேரளாவின் என்ன போலி புராதனப் பொருட்கள், டுபாகூர் கலைப் பொருட்கள், பழமையான கருவிகள், 200-300 ஆண்டுகளுக்கு முற்பட்ட புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் தயாரிக்க, உருவாக்க முடியுமா? அத்துனை சரித்திராசிரியர்கள், அகழாய்வு நிபுணர்கள், தொல்லியல் வல்லுனர்கள் என்றேல்லாம் இருக்கும் போது, அவர்களையும் மீறி அவ்வாறு ஆயிரக் கணக்கானப் பொருட்களை உருவாக்கி, எல்லோரும் நம்பும் படி, அருங்காட்சியகம் வைத்து விட முடியுமா?
“ஆல்இன்ஆல்அழகுராஜாமோன்சன்மாவுன்கல்”: ஒரே சம்பவத்தால் ஒட்டுமொத்த மலையாளிகளும் உச்சரிக்கும் பெயர் ஆகிவிட்டார் மோன்சன் மாவுங்கல்[1], என்று தி இந்து.தமிழ் சொல்வது தமாஷாக இருக்கிறது. நூதனமுறையில் இவர் நடத்திய மோசடிகளும், சினிமா ப்ரியரான இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன[2]. கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். தன்னம்பிக்கை பேச்சாளர், ஆயுர்வேத மருத்துவர், அழகியல் வல்லுனர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர், தெலுங்கு நடிகர், உலக அமைதி போற்றுபவர், யு-டியூப் வெளியிடுபவர் என பலதளங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர். சரி, அதிகமான படிப்பு-எழுத்தறிவு கொண்டவர்கள் என்ற கேரளத்தவர்கள் இவற்றையெல்லாம் எப்படி நம்பினர், ஒப்புக் கொண்டனர்? சேர்த்தலா, எர்ணாகுளத்தில் இவருக்கு பிரம்மாண்ட இல்லமும் இருக்கிறது. இந்த இல்லத்தில் பழம்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமும் வைத்துள்ளார். இதனை மையமாக வைத்தே மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றி வந்திருக்கிறார் மாவுங்கல்.
1984 முதல் 2017 வரைஸ்கிராப்டீலராகஇருந்துகோடீஸ்வரன்ஆனகதை: 1969ல் சாக்கோ தம்பதியருக்குப் பிறந்த மோன்சன் கிறிஸ்தவன். ஆரம்ப பள்ளியில் படித்த அவன், 1984ல் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தான். தந்தை இறந்தவுடன், அவ்வேலை, மோன்சனின் சகோதருக்குக் கிடைத்தது. இதனால், முதலில் ஸ்கிராப் வியாபாரம் செய்து,பிறகு மின்னணு பொருட்களை, கேரள-தமிழ்நாடு எல்லையில் கடை வைத்து, விற்று வந்தான். பிறகு பழைய கார்களை வாங்கி விற்க ஆரம்பித்தான். 1990களில் இவ்வியாபாரத்தில் கணிசமாக சம்பாதித்தான். அப்பொழுதே, பழங்காலப் பொருட்களையும் வாங்கி, விற்க ஆரம்பித்தான். ஆனால், மாட்டிக் கொண்டான். ஆனால், விவரங்கள் தெரியவில்லை. அதனால் செர்தாலாவுக்கு திரும்பினான். கொச்சியில், தேவாராவில் ஒரு அடுக்குமாடி வீடு வாங்கி தங்கினான். பிறகு கலோரில், விலோபிள்ளித் தெருவில், ஒரு தனி வீட்டை வாங்கிக் கொண்டு குடியேறினான். 2000களில், காஸ்மோஸ் அழகு கிளினிக் ஆரம்பித்தான். அப்பொழுது சினிமா நடிகைகள்-நடிகர்கள் மற்றவர்கள் வந்து சென்றனர். அப்படித்தான், காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தோல் வியாதி சிகிச்சைக்காக அங்கு சென்றதாக கூறுகிறார்.
ஆயிரக்கணக்கானதொல்லியல்பொருட்கள்கொண்டஅருங்காட்சியகம்வைத்தது: கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த மோன்சன் மாவுங்கல் என்பவர், பழங்கால பொருட்கள் வைத்திருப்பதாக கூறி அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வந்தார்[3], என்று விகடன் குறிப்பிட்டாலும், விவரங்கள் ஒன்றையுயும் கொடுக்கவில்லை. அரிய பொருட்கள் என்பதால் இதனை அதிக விலை கொடுத்து வாங்க பிரபலங்கள் உட்பட பலரும் முன்வந்தனர்[4], என்கிறது, ஆனால், யார், எவ்வாறு அவ்வாறு வந்தனர் என்று குறிப்பிடவில்லை. இதை வைத்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மோன்சன், கேரளாவில் ஒரு விஐபி போலவே வந்தார். இதனிடையே அவர் விற்ற பொருட்கள் அனைத்தும் போலி என தெரியவந்த நிலையில் மோன்சனை போலீசார் கைது செய்தனர். இத்தனை போலித் தனம் பற்றி பேசாமல், இப்பொழுது, எல்லாமே போலி என்பதும் வேடிக்கையான விசயம் தான். இவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மோன்சனின் பங்குதாரரான சரத் என்பவர் துன்புறுத்தி வந்ததாகவும் அது தொடர்பான புகாரை திரும்பப் பெறுமாறு மோன்சன் தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் புகார் அளித்தார்[5]. இதன்பேரில் போலீசார் மோன்சன் மீது வழக்குப்பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்[6].
வட்டியில்லாமல்தொழில்செய்யகடன்தருவதாகவும், இதற்குரூ.10 கோடிதரவேண்டும்எனவும்மோசடி செய்தது: இந்த நிலையில் இவர் விற்பனை செய்த பல பொருட்கள் போலியானது என தெரியவந்தது இது பற்றி பலரும் போலீசில் புகார் செய்தனர், என்று ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம், வேறு விதமான, நிதி மோசடி விவகாரமும் வெளிப்படுகிறது. இதுபோல மோன்சன் மாவுங்கல் பற்றி கோழிக்கோடு பகுதியை சேர்ந்த யாக்கோபு, சித்திக், சலீல், சமீர், அனீஸ், அகமது, சானிமோன் ஆகியோர் முதல் மந்திரி பினராய் விஜயன் அலுவலகத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினர்[7]. அதில் மோன்சன் மாவுங்கல் தங்களுக்கு வட்டியில்லாமல் தொழில் செய்ய கடன் தருவதாகவும், இதற்கு ரூ.10 கோடி தரவேண்டும் எனவும் கூறினார். அதனை நம்பி நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால் அவர் கூறியபடி தங்களுக்கு தொழில் செய்ய கடன் தரவில்லை. மேலும் தாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்[8]. போலீஸுக்கு புகார் கொடுக்காமல், முதல் மந்திரி பினராய் விஜயன் அலுவலகத்துக்கு ஏன் புகார் கொடுத்தனர் என்பதனை க்வனிக்க வேண்டும். ஒருவேளை, போலீஸார் புகாரை பதிவு செய்யவில்லையா?
புருனேசுல்தான்கிரீடம்என்றுஆரம்பித்துபணம்வசூல்செய்தது: புருனே சுல்தானின் கிரீடத்தை தான் விற்றதாகவும், அதில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் கோடி பணம் வர உள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்டார்[9]என்கிறது நியூஸ்.18. அவ்வாறு சொல்லி பணம் திரட்ட முயற்சித்தார்[10]. வளைகுடா நாடுகளில் உள்ள மன்னர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பழங்கால பொருட்களை விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் டெல்லியில் உள்ள அரசு வங்கியில் ரூ. 2,62,000 கோடி மாட்டிக்கொண்டதாகவும், ரூ.10 கோடி தந்தால், பணத்தை மீட்டு, வட்டியில்லாமல் தொழில் செய்ய கடன் தருவதாவும் கூறினார்[11]. அந்தப் பணத்திற்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால்தான் தன் கணக்கிற்கு பணம்வரும் என்றெல்லாம் சொல்லி, ஷாஜி என்பவர் உள்பட பலரிடமும் ரூ.10 கோடி மோசடி செய்திருக்கிறார்[12]. இப்படி சுருக்கமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. கோடிகளில் பணத்தை கேரளத்தவர்கள் கொடுத்தார்கள் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் காசு விவகாரத்தில் அவ்வளவு கச்சிதமாக இருப்பர். அவர்கள் ஏன் கொடுத்தனர் என்பதும் ஆராயத் தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இப்போது சிறையில் இருக்கிறார் மோன்சன் மாவுங்கல். ஆனால் இந்த நூதன மோசடியை அவர் அரங்கேற்றிய விதமே அவரைக் கேரளாவின் பேசுபொருள் ஆக்கியுள்ளது.
[9] NEWS18 TAMIL, புருனேமன்னனுக்குகிரீடம்விற்பனை…ரூ.70,000 கோடிக்குவரிகட்டணும்: ஹைடெக்மோசடிமன்னன்சிக்கியதுஎப்படி?, LAST UPDATED: SEPTEMBER 29, 2021, 17:15 IST.
இறந்த தாய் உயிர்த்தெழுவாள் என்று குழந்தைகளை நம்ப வைத்து, பாதித்து, ஒரு இந்து-குடும்பத்தைக் கெடுத்து, சீரழித்த ஆன்டர்சன் பாதிரி!
மனைவிமதம்மாறியதால், பிரிந்துபோனகணவர்: திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரசரி காலனியில் வசித்து வந்தவர் அன்னை இந்திரா (வயது 38). இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கணவர் பால்ராஜ் – இவர்களுக்கு ரட்சகன் (11), மெர்சி (8) என குழந்தைகள் உள்ளனர். 2018ல் இந்திரா, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருக்கிறார்[1]. இதனால் பால்ராஜுக்கும் அன்னை இந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது[2]. கிறிஸ்தவம் எவ்வாறு கணவன் – மனைவி உறவுகளை உடைக்கிறது என்பது வெளிப்படுகிறது. இந்திராவிடமிருந்து பிரிந்த பால்ராஜ், தேனி மாவட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில், அன்னை இந்திரா, தனது இரண்டு குழந்தைகளுடன், திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஷரி காலனியில் வாடகை வீட்டில் வசித்துவந்திருக்கிறார். உடல் நிலை சரியில்லாத அன்னை இந்திராவுக்கு, ஜெபக் கூட்டங்கள் நடத்தி வரும் எரியோடு வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக அன்னை இந்திராவுடன் சுதர்சனனும் தங்கியிருந்துள்ளார்.
பாதிரிஆன்டர்சன்வாசுகியோடு, வீட்டிற்குவந்துதங்கியது: இவர்களுடன், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனம் ஆகியோர் அதே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். கணவர் பிரிந்து வாழும் நிலையில், பாதிரியை வீட்டில் தங்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக, 2019ல் விருப்ப ஓய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் விண்ணப்பித்தார் அன்னை இந்திரா. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, அவரை திண்டுக்கல்லில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்தார்.கடந்த அக்டோபர் / நவம்பர்[3] 16-ம் தேதி 2020 மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். ஊடகங்கள் இவ்வாறு வேற்பட்ட தகவல்களைக் கொடுக்கின்றன. 26-ந்தேதி / 31ம் தேதி பணியில் சேர வேண்டும். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பாத அன்னை இந்திராவைப் பற்றி விசாரிக்க, அவரது வீட்டுக்கு இரண்டு பெண் காவலர்கள் சென்றிருக்கிறார்கள்.
பூட்டிய அறைக்குள் பிணம் இருந்தது: பெண் போலீஸார் வந்த போது, வீட்டில் உள்ளவர்கள் அன்னை இந்திரா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார்கள். வீட்டில் இல்லை எனும் கூறினர். மேலும், வீட்டின் ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு, அதிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாடிக்கொம்பு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்[4]. அருகில் உள்ளவரும் அவ்வாறே புகார் கொடுத்ததாகத் தெரிகிறது. தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார், பூட்டிய அறையைத் திறந்து பார்த்தனர்[5]. அங்கே, இறந்தநிலையில் அன்னை இந்திராவின் உடல் துணியால் மூடப்பட்டு அழுகிய நிலையில் இருந்திருக்கிறது. மேலும் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது[6]. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் குழுவும், அவர் 10 நாள்களுக்கு முன்னதாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது[7]. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது[8]. அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் மத பிரசாரம் செய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன[9]. அதாவது, அந்த அளவுக்கு, மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப் பட்டுள்ளது.
மருத்துவமனைக்குஅழைத்துச்செல்லாமல், பிரார்த்தனைசெய்தது – 07-2-2020 அன்றுஇறந்தது: அதைத் தொடர்ந்து சகோதரி வாசுகி மற்றும் மதபோதகர் சுதர்சனிடம் விசாரித்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கடந்த டிசம்பர் 7-ம் தேதி 2020 அன்று படுக்கையிலிருந்த இந்திரா சுயநினைவை இழந்திருக்கிறார். ஜெபம் சொல்லி சரிசெய்வதாகக் கூறி, மதபோதகர் சுதர்சன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார். கண்விழிக்காத உடலிலிருந்து இரண்டு நாள்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது. அப்போதும், அன்னை இந்திரா உயிர்தெழுவார் என்றும், இயேசு ரட்சிப்பார் என்றும் கூறியிருக்கிறார் சுதர்சன். மேலும், இரண்டு குழந்தைகள், சகோதரி வாசுகி ஆகியோர் தினமும் இந்திராவின் உடல் அருகே அமர்ந்து ஜெபம் சொல்லிவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குழந்தைகளையும், அவ்வாறு நம்ப வைத்து, தாய் இறந்ததை மறைத்தது, திகைப்பாக இருக்கிறது.
தாய்இறந்ததைஅறியாமல்இருந்தபாதிக்கப்பட்டகுழந்தைகள்: உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் முயன்றபோது, அதை வாசுகியும் சுதர்சனும் தடுத்திருக்கிறார்கள். இதுவும், அவர்களின் அடிப்படைவாதம் மற்றும் மூடநம்பிக்கையினை எடுத்துக் காட்டியது. “அன்னைஇந்திராஇறக்கவில்லை. அவர்ஓய்வுஎடுத்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம்உயிர்தெழுவார்,” எனக் கூறியிருக்கிறார்கள். இருவரையும் சமாதானம் செய்த போலீஸார், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் தனது தாய் உயிர்தெழுவார் என்ற நம்பிக்கையோடு வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது[10]. குழந்தைகளையும் அந்த அளவுக்கு மூளைசலவை செய்திருப்பது தெரிகிறது.
01-01-2021 அன்றுபாதிரிமற்றும்ஆதரித்தவாசுகிகைது: இதனையடுத்து வாசுகி மற்றும் சுதர்சனை போலீசார் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில், அன்னை இந்திராவின் சகோதரி வாசுகியையும் மதபோதகர் சுதர்சனையும் போலீஸார் 01-01-2021 அன்று கைதுசெய்தனர்[11]. மேலும், 176வது பிரிவு பொது ஊழியருக்கு தெரிவிக்க வேண்டிய கருத்தை தெரிவிக்காமல் மறைத்தது, பிரிவு 304 (A) (கொலை ஆகாத மரணம்) சிகிச்சை அளித்தால் உயிர் பிழைத்து விடுவார் என்று தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் வைத்திருந்தது, பிரிவு 406 நம்பிக்கை துரோகம் செய்தல், பிரிவு 420 ஏமாற்றி பொருளைப் பறிப்பது ஆகிய நான்கு பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்[12]. அன்னை இந்திராவின் குழந்தைகளைத் தற்காலிகமாக காப்பத்தில் சேர்ந்த போலீஸார், அவர்களின் தந்தை பால்ராஜுக்குத் தகவல் தெரிவித்தனர். உயிர்தெழுவார் என்று கூறி, இறந்த பெண் காவலரின் உடலை 22 நாள்கள் வீட்டில்வைத்து ஜெபம் சொன்ன சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆன்டர்சன்பாதிரிகுடும்பத்தைக்கெடுத்து, குழந்தைகளையும்பாதித்துள்ளான்: இறந்த பிறகும் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு இருந்தது கவனிக்கத் தக்கது. தங்களது நம்பிக்கை தவறு என்பதை அறிந்தும், மத-அடிப்படைவாத சிந்தனைகளால் குடும்பத்தை ஆன்டர்சன் பாதிரி பிரித்துள்ளான். அந்த வீட்டிலேயே வாழ்ந்து, குழந்தைகளை மூளைசலவை செய்துள்ளான். அதனால் தான், குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது “தாய்தூங்கிக்கொண்டிருக்கிறார். மாலைஎழுந்துவிடுவார். அவர்தூக்கத்தையாரும்கெடுக்காதீர்கள்,” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்தோடு, தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காமல், “எனதுதாயைத்தொந்தரவுசெய்பவர்களுக்குஇயேசுதண்டனைகொடுப்பார்,” என மிரட்டியுள்ளனர். வீட்டு வாசலில் பைபிள் வசனங்களை எழுதி வைத்து, அந்த வீட்டை ஒரு ஜெபகூடம் போல மாற்ற முயற்சித்துள்ளான். இவ்வாறு தம்பதியரைப் பிடித்து, குழந்தைகளை பாதித்து, மருத்துவமனையில் சேர்க்காமல், ஜெபம் என்று சொல்லி வீட்டிலேயே வைத்து, ஒரு பெண்ணை சாகடித்து, குழந்தைகளிடமும் “தாய் உயிர்த்தெழுவாள்,” என்று நமிக்கையை வளர்த்து, ஒரு குடும்பத்தையே நாசமாக்கியுள்ளான். மூடநம்பிக்கை என்று பகுத்தறிவுவாதிகள், நாத்திகவாதிகள் இந்துமத நம்பிக்கைகளைக் கடுமையாக, கொடுமையாக, ஏன் குரூரமாக்க விமர்சித்து வருகின்றனர். ஆனால், இத்தகைய குரூரங்களைக் கண்டு கொள்வதில்லை. இங்கெல்லாம் பகுத்தறிவு மழுங்கி விடுகிறது, நாத்திகம் நமைத்து போய் விடுகிறது, விஞ்ஞான சிந்தனை உளுத்து விடுகிறது. இதைப் பற்றி யாரும் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. ஆகவே, இந்துக்கள் இத்தகைய அடிப்படைவாத கிறிஸ்தவர்கள், கிருக்கு-பாதிரிகள் முதலியோருட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
[6] தினமணி, 20 நாள்களுக்குமுன்புஇறந்தபெண்காவலர்சடலத்துடன்வீட்டிற்குள்ஜெபம்: திண்டுக்கல்லில்பரபரப்பு, By DIN | Published on : 31st December 2020 07:23 PM