மாஷாடிரஸ்ட்ஆரம்பிக்கப்பட்டது: MASHA TRUST (தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட எண்.814/2005) – முதன்மையாக ஒரு சமூக சேவை அமைப்பு. இது ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் இயலாமைக்காக செயல்படுகிறது. இது 1996 ஆம் ஆண்டில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்த சில கருணையுள்ள இதயங்களால் நிறுவப்பட்டது. இது ஏழைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, அவர்களின் பிரச்சனைகளை முதலில் உணரவும், அடையாளம் காணவும் செய்கிறது. MASHA இன் இறுதி இலக்கு அவர்கள் தங்களுக்கு உதவ உதவுவதாகும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை அடையாளம் காண கற்றுக்கொண்டவுடன், அதைத் தீர்க்க MASHA அவர்களுக்கு உதவுகிறது. கூட்டு முயற்சிதான் தீர்வு. மாஷா அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறார்கள். இது அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை மாசுபடாமல் வைத்திருப்பது ஆகியவற்றை கற்பிக்கிறது.
அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-
காப்பகம்இல்லம்ஆரம்பிக்கப்பட்டநோக்கம்: ஆதரவற்ற குழந்தைகள், வெறிச்சோடிய அபல பெண்கள், புறக்கணிக்கப்பட்ட வயதான மூத்த குடிமக்கள் தங்குமிடம் மற்றும் அன்பு, பாசம், அக்கறை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வழிதவறிச் சென்று சமூகவிரோத சக்திகளின் கைகளில் இரையாகக்கூடிய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அது அவர்களை சமூக ரீதியாக பயனுள்ள மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்குகிறது. பலருக்கும் மனவலியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம் என்று ஒரு ஊடகம் பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா அறக்கட்டளையானது நியோமி அன்பு இல்லத்தை நடத்திவருகிறது[1]. 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்[2]. அங்கு ஆதரவற்ற நிலையிலுள்ள 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-
சூசைப்பிரகாஷம்காப்பகத்தைஏன்துவக்கினேன்என்றுவிளக்கினார்: இப்படி ஒரு இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் தனக்குள் உருவானதன் பின்னணியைச் சொல்கிறார் அதனை நிர்வகித்துவரும் சூசைப்பிரகாசம்[3]. “இந்தியாவில்மிகவும்பாதிப்புக்குஆளாகிவருபவர்களாகபெண்கள்உள்ளனர். பெண்களுக்குஇழைக்கப்படும்சமூகஅநீதியானதுநம்தேசத்தில்பரவலாகஉள்ளது. அதனாலேயே, சிறுமிகளுக்காகஇப்படிஒருஇல்லத்தைத்தொடங்கினேன்.” என்கிறார்[4]. அப்படித்தான், பற்பல அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கூநோக்கு இல்லங்கள் என்றெல்லாம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன, படுகின்றன. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்கள் அதிகமாகவே இவற்றை ஆரம்பித்து நடத்துகின்றன. அவை தான் பெரும்பாலான இத்தகைய பாலியல் குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளன. செய்திகளில், ஊடகங்களிலியே நூற்றுக் கணக்கான விவகாரங்கள், கைதுகள், வழக்குகள் என்றெல்லாம் வந்துள்ளன.
ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தது…
ஆதிசிவன்பாலியல்வன்மகுற்றத்தில்கைதுமற்றும்சிறை: இந்நிலையில், காப்பகத்தின் அறங்காவலரான கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன், அங்குள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்[5]. இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் காவல் சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்[6]. இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆதிசிவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்[7]. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ எனச் சொல்வதுபோல, நியோமி அன்பு இல்லத்தில், ஏடாகூடமாக என்னென்னவோ நடந்து தொலைத்திருக்கிறது. அதனால்தான், அந்த இல்லத்தின் இன்னொரு நிர்வாகியான ஆதிசிவன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான கிரேஸ் ஷோபியாபாய்[8].
ஆதிசிவன்கைதானபின்னணிஇது: ஆதிசிவன் அவ்வில்லத்தில் படித்துவரும் சிறுமிகள் நால்வரிடம் அத்துமீறி நடந்துகொண்டது, மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரை புகாரானது. உடனே, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், நியோமி அன்பு இல்லத்துக்கே வந்து மாணவிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும், இல்லத்தின் அலுவலகத்தில் வைத்து ஆதிசிவன் தங்களை எவ்வாறு தொந்தரவு செய்தார் என்பதையும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதையும் அழுதபடி கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்முகம் அளித்த புகாரை விசாரித்து, ஆதிசிவனைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நியோமி அன்பு இல்லத்தின் நிர்வாகி சூசைப்பிரகாசத்திடம் நடந்த அத்துமீறல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த 4 மாணவிகளும் மதுரை – முத்துப்பட்டியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
ஆதிசிவனா……..
சூஷைப்பிரகாசமும், ஆதிசிவனும்: சமயநல்லூர் வட்டாரத்தில் “34 குழந்தைகளின்அப்பாஎன்றுதன்னைச்சொல்லிக்கொள்ளும்சூசைப்பிரகாசம், மற்றகாப்பகங்களிலிலிருந்துஇருந்துஇதுவேறுபட்டதுஎன்பார். எப்படியென்றால், வெளிநாட்டுநிதிஉதவியைநம்பாமல், தன்சொந்தமுயற்சியால்நடத்தப்படும்இல்லம்எனச்சொல்வார். அன்புஇல்லம்ஆரம்பிக்கப்பட்டதன்நோக்கம்என்றுஅப்போதுஅவர்கூறியதென்னவோநன்றாகத்தான்இருந்தது. ஆனால், ஆதிசிவனால்அங்குநடந்தசெயல்கொடூரமானதாகஅல்லவாஇருக்கிறது?,” என்கிறார்கள் ஆதங்கத்துடன். அனாதை சிறுமிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில், காப்பக சுவர்களைத் தாண்டி தங்களின் அத்துமீறல் வெளியில் வராது என்ற நினைப்பில், ஒருசிலர் வெறிகொண்ட மனித மிருகங்களாக நடந்துகொள்வது கொடுமையானது! அத்தகையோருக்கு, ‘தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்சத்தை, இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று நம்புவது மட்டுமே தற்காலிக ஆறுதலாக உள்ளது.
குறிப்பு: இது 2019ல் நடந்த விவகாரம் ஆகும். பொதுவாக, செய்தித் தாள்களைப் படித்து, விவரங்களை சேகரித்து, சரிபார்த்து, எழுதி, ஆதாரங்களைத் தொகுத்து, தேவையான செய்தித்தாள் கட்டிங்ஸ், புகைப் படைங்கள் முதலியவற்றை சேர்த்து, பிளாக் போட சுமார் 3 முதல் 5 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் குறிப்பிட்டல் நாளில், வாரத்தில் அதிகமான முக்கியமான செய்திகள் வரும் பொழுது அவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட, ஏன் தயாராக இருக்கும் கட்டுரையைக் கூட இணைதளத்தில் ஏற்ற முடியாமல் போகிறது. ஏன் சில நாட்கள் ஆனால் மறந்தும் போகிறது. இதனால், திடீரென்று, இணை தளத்தில் எதையோ தேடும் பொழுது, சில செய்திகள் காணப்படுகின்றன. அடடா, இது தெரிந்த விசயமாயிற்றே, நாம் கூட பிளாக் போட்டிருக்கிறோமே என்ற எண்ணம் வரும். ஆனால், தேடிப் பார்த்தால் கிடைக்காது, இருக்காது பிறகு, நாம் போடவில்லை என்பது தெரிய வரும். அவ்வாறு கிடைத்தது தான் இது. நடந்தது 2019 இப்பொழுது 2024, ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் ஆணப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது இன்று பதிவு செய்யப் படுகிறது.
அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்- கட்டிடம்.
[1] MASHA TRUST (Tamilnadu Govt. approved No.814/2005) – is primarily a social service organization. It works for the upliftment, progress and enabling of the poor, downtrodden people. https://www.maduraidirectory.com/masha.php
[2] நக்கீரன், ஆதரவளிக்கிறோம்என்றபோர்வையில்! –அனாதைசிறுமிகளிடம்அத்துமீறல்!, அதிதேஜா, Published on 13/08/2019 | Edited on 13/08/2019, wa
டேனியல்–பிரின்சிகிறிஸ்தவஊழியம்–வேலை: பாலியல் தொல்லை கொடுத்த மத போதகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வேலைக்கார பெண்ணை 07-12-2023 அன்று கைது செய்தனர்[1]. வழக்கம் போல, ஊடகங்கள் இச்செய்தியை பி.டி.ஐ பாணியில் வெளியிட்டுள்ள, ஆனால், நேரில் சென்றோ, விசாரித்தோ, ஆய்ந்தோ மேலும் விவ்ரங்கள் எதையும் வெளியிடவில்லை. இணைதள பதிப்புகள் தலைப்பு மட்டும் மாற்றி-மாற்றி, அரைத்த மாவையே அரைத்துள்ளது. கதிர் செய்தி, தினத்தந்தி-உபயம் என்றே வெளிப்படையாகப் போட்டுள்ளது. கடலூரை சேர்ந்தவர் வீராசாமி (எ) டேனியல் (62)[2]. வழக்கம் போல இவ்வாறு இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வரும் “மைனாரிட்டி” மற்றும் “இந்து” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கும்பலில் இவனும் ஒருவன் என்று தெரிகிறது. மதபோதகரான இவர், கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூரில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தார்[3]. சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்[4].
செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொலைவெறி தாக்குதல்: இவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவருக்கு டேனியல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[5]. ஆக, பெண்களும் இப்படி இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டு இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு டேனியலுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது[6]. இந்நிலையில் நேற்று முன்தினம் 06-12-2023 நள்ளிரவிலும் டேனியல், மீண்டும் பிரின்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது[7]. அதிகாலை 2 மணிக்கு பாலியல் உறவுக்கு டேனியல் அழைத்தான் என்கிறது தினமலர்[8]. அதாவது, இது தொடர்ந்து நடந்து வரும் விவகாரமாக இருக்கிறது போலும். இதில், ஆத்திரமடைந்த பிரின்சி, டூவீலரில் உள்ள இரும்பு கம்பியை எடுத்து / சைக்கிள் பல் சக்கரத்தால் டேனியலை சரமாரியாக தாக்கினார்[9]. இதில், பலத்த காயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்[10]. வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டார் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸார் வந்து பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பிரின்சியும் அங்கே இருந்துள்ளார்.
சேர்ந்து வாழ்ந்த பிரின்சியும், அதிக செக்ஸ் சதய்ப்பில் ஈடுபட்ட டேனியலும்: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டுக்கே சென்று தங்கிய செல்வி அங்கேயே தங்கியுள்ளார்[11]. சேர்ந்து வாழலாம் என்று உச்சநீதி மன்றமே தீர்ப்புக் கொடுத்துள்ளதால், பாஸ்டர் அமூல் படுத்தியுள்ளார் போலும். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி அழுதுகொண்டு அமர்ந்திருந்திருக்கிறார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், விசாரித்தபோது, மத போதகர் டேனியலை, தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்[12]. அங்கே கொலை செய்யப்பட்டுக் கிடந்த டேனியல் உடலைப் பார்வையிட்டு, அங்கிருந்த செல்வியிடம் விசாரணை நடத்தினர்[13]. அவர்களின் விசாரணையில் செல்வி, “மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார்[14]. அதனால், எனக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டு, அவரைக் கீழே தள்ளியதில் அவர் மயக்கமடைந்தார்[15].
பணம் கேட்டுக் கொடுக்காதலால் கொலை: இதுகுறித்து தகவல் அறிந்து நேற்று 07-12-2023 காலை அங்கு வந்த மண்டையூர் போலீசார் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக / உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பிரின்சியை கைது செய்தனர்[16]. இதுபற்றி போலீசார் கூறுகையில், “கடந்தஒருமாதமாகவேலைக்காரபெண்பிரின்சிக்கு, மதபோதகர்டேனியல்பாலியல்தொல்லைகொடுத்துவந்துள்ளார். இதுதவிரமதபோதகரிடம், பிரின்சிபணம்கேட்டுகடந்தமூன்றுதினங்களாகதகராறில்ஈடுபட்டுள்ளார். அதற்குடேனியல், அடிக்கடிபணம்தரமுடியாது. கொடுக்கும்போதுவாங்கிகொள்ளவேண்டும்எனகூறியுள்ளார். இதனால்ஏற்பட்டதகராறில்பிரின்சி, இரும்புகம்பியால்டேனியலைதாக்கிகொன்றதுதெரியவந்துள்ளது. பாலியல்தொந்தரவால்டேனியலைஅடித்துகொன்றுவிட்டுபணத்துக்காககொன்றதாகபிரின்சிநாடகமாடுகிறாராஎனதொடர்ந்துவிசாரணைநடந்துவருகிறது,” என்றனர்.
மண்டையூரில்ஊழியம்செய்யும்இவனதுவேலைஎன்ன?: மண்டையூர் ஊராட்சி (Mandaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4283 ஆகும். இவர்களில் பெண்கள் 2178 பேரும் ஆண்கள் 2105 பேரும் உள்ளனர். இவ்வாறு 4,000 மக்கள் இருக்குமிடத்தில் வாடகை வீட்டில் தங்கி சுற்றுவட்டார கிராமங்களில் மத போதனையில் ஈடுபட்டு வந்தான் என்றால், அவ்வாறு அவனை ஊக்குவிப்பது யார், நிதியுதவி எப்படி கிடைக்கிறது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மேலும், பாலியல்-செக்ஸ், வன்முறை-கொலை என்பதெல்லாம் கிருத்துவர்களுக்கு சகஜமாகியுள்ளது, தொடர்ந்து வரும் செய்திகளும் வெளிப்படுத்துகின்றன.
ஒழுக்கத்தை மீறி, ஒழிங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை தான் கிடைக்கும்: பிரின்சி கணவனை இழந்தது, சமையல் வேலை செய்ய டேனியலிடம் சென்றது; டேனியல் (62) மற்றும் பிரின்சி (46) சேர்ந்து வாழ்ந்தது. சேர்ந்து வாழும் உறவு தொடர்ந்தது; திடீரென்று வெறுப்பு-கொலைவெறி உண்டானது; அந்த அளவுக்கு செக்ஸ்-டார்ச்சர் கொடுத்தது; கொலையில் முடிந்தது..ஆகவே, மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் அவ்வாறே புலன்களை அடக்கிக் கொண்டு சேவை செய்ய வேண்டும். இல்லையெனில், அத்தகைய கூடா ஒழுக்கம் முதலியன, ஒழிங்கினங்களில் தான் முடியும். கடவுள் தண்டனை கொடுப்பார், மன்னிக்க மாட்டார்.
கிறிஸ்துவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்: கிறிஸ்துவத்தில் தொடர்ந்து எவ்வாறு பாஸ்டர்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் என்று பலர் அடிக்கடி இத்தகைய பாலியல் வன்மங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது பற்றி நிறையவே எழுதியாகிவிட்டது. அலசி-ஆய்ந்தும் செய்தாகிவிட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக தமிழகத்திலும், பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து வந்தாலும், கிறிஸ்துவ மேல் இடங்கள் ஏன் இப்பிரச்சனையைப் பற்றி முறையாக ஆய்வு செய்யவில்லை அல்லது இத்தகைய ஒழுங்கினங்களில் ஈடுபடும் பாஸ்டர்கள் பாதிரிகள் முதலியோரை கட்டுப்படுத்த அல்லது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை செய்யாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் இது அடிக்கடி நடக்கின்றன, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. கற்பழிப்பு, பாலியல் சதாய்ப்பு, செக்ஸ்-வன்மம், ஏன் கொலைகளும் நடந்து கொண்டிருப்பதால், போலீஸ்காரர் நடவடிக்கைகளும், நீதிமன்ற தண்டனைகளும் நிறைவேறிக் கொண்டுதான் இருக்கின்றன, அபயா கொலை வழக்கு என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் இவை தொடர்ந்து நடந்து வருவது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது அல்லது நடக்கிறது நடந்து விட்டு போய் போகட்டும் என்று தொடர்ந்து இவ்வாறு அமைதியாக இருந்து காலத்தை கழித்து விடுவார்களா என்றெல்லாம் புரியாமல் தான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில்- தமிழகத்தில் பலர் இதனை உன்னிப்பாக பார்க்க கவனித்து கொண்டிருப்பதால், நிச்சயமாக அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களை திருத்தி கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நேரம்காலம்பார்க்காமல்ஓயாமல்செக்ஸ்டார்ச்சர்.. 61 வயதுமதபோதகரைஆத்திரத்தில்கொலைசெய்த 46 வயதுபெண்..!, First Published Dec 9, 2023, 1:41 PM IST.
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (2)
Pope sends mesage for FABC 2022
போப்பும், ஆயர்மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில் உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினால்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[1]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[2].
The Chinese cardinal- none attended from China
ஆசியபிஷப்மாநாட்டில்சைனாபிஷப்புகள்கலந்துகொள்ளவில்லை: தொற்று என்றெல்லாம் காரணங்கள் சொல்லப் பட்டாலும், சைனா கிறிஸ்வத்திற்கு ஆதரவாக இல்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் சைனா பொருளாதார விசயங்களில் அதிரடியாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ மேலிடம் அனுமதி இல்லாமல், எந்த பிஷப்பும் ஒன்றும் செய்து விட முடியாது. அதுதான், சைனாவில் உள்ள நிலை. கம்யூனிஸ மாநாடு நடந்து, லி பிங் மறுபடியும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சைனா, மதரீதியிலாக எந்த பிரச்சினையையும் உண்டாக்கவோ, அல்லது அந்நாட்டில் உருவாக்கவோ விரும்புவதில்லை. பௌத்தம், ஷின்டோ போன்ற மதத்தினர் இருந்தாலும், அவை தங்களது இடங்களுக்குள், மடாலங்களுக்குள் பின்பற்ற வேண்டும். தெருக்களில் வரக் கூடாது. ஆகவே, கிறிச்துவர், முஸ்லிம்கள் மற்ற நாடுகளைப் போனூ சைனாவில், பிரச்சாரம் செய்வது, கூட்டங்கள் போடுவது, போன்ற செயல்களில் ஈடுபட முடியாது.
மதம்மாற்றதிட்டம்போடும்கூட்டம்: மாநாட்டின் போது, ஆசியாவில் வளர்ந்து வரும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மத உண்மைகளுக்கு பதிலளிப்பதற்காக ஆசியாவில் உள்ள தேவாலயத்திற்கான ஒரு கிறிஸ்துவ மேய்ப்பு திட்டத்தை – அதாவது மதமாற்றி- ஆடுமாடுகளைப் போன்ற கூட்டத்தை உண்டாக்க – உருவாக்க பங்கேற்பாளர்கள் பல ஆலோசனைகளில் சேர்ந்தனர். ஆசிய இளைஞர்களுக்கான பைபிளின் தனித்துவமான பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது[3]. “அடையாளம்: அடையாளம் கண்டதும், வாழ்க்கையில் உள்ள சவால்களை கடத்தல்” [‘Identity: Identified, Navigating the Challenges of Life] என்ற தலைப்பில் அந்த பைபிள் வெளியிடப் பட்டு, ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் மற்றும் சைமன் போஹ் பிஷப்புகளால் அவைக்குக் கொடுக்கப் பட்டது[4]. முன்பு கூட ஆசியாவிற்கான பைபிள், இந்தியாவிற்கான பைபிள் என்றெல்லாம் வெளியிட்டனர். ஆனால், சர்ச்சை உண்டானதால், அவற்றை சுற்றிலிருந்து அகற்றி விட்டனர். அதை மறந்தும் விட்டனர் எனலாம். கருத்துரிமை பேசுபவர்களுக்கும் கப்சிப் என்று தான் இருக்கிறார்கள்.
அக்டோபர் 12 முதல் 30 வரைபிஷப்மாநாடுநடக்கும்நேரத்தில்உலகம்முழுவதும், பலநாடுகளில்மக்கள்கொல்லப்படுதல்: இம்மாநாடு முடியும் தருவாயில், தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இட்டவோன் நகரில் அக்டோபர் 29 அன்று நடந்த ஹாலோவீன்[5] விழாவில் ஒரு குறுகிய சந்துக்குள் ஒரு பெரிய ஹாலோவீன் பார்ட்டி கூட்டம் அலைமோதியதில் ஊட்ட நெரிசலில் குறைந்தது 151 பேர் கொல்லப்பட்டனர், நூற்றிற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்[6]. பில்லிப்பைன்ஸிலும், பலத்த மழை, வெள்ளத்தினால், 45 பேர் கொல்லப் பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர்[7]. 30-10-2022 அன்று தொங்கு பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 150 பேர் பலியாகினர். உக்ரைனில் தொடர்ந்து போர்; பாலஸ்தீனத்தில் கலவரம் கொலை; ஈரான் ஆர்பாட்டத்தில் 150 பேர் கொலை, என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன-இருக்கின்றன. 29-10-2022 அன்று தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகளில் நூற்றிற்கும் மேலானோர் சோமாலியாவின் தலைநகரான மொகதிஷுவில் கொல்லப் பட்டனர். ஆசியாவின் ஆயர்களின் கூட்டத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்களின் தூதுவர் தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிலிப்பைன்ஸில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்[8]. தாங்கள் எப்பொழுதும், அவர்களுடன் இருந்து, உதவுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்[9].
Traditional Thailand dance – Inculturation
ஆசியசர்ச்ஆசியத்தன்மையுடன்இருக்கவேண்டும், ரோம்–தன்மைகுறைந்திருக்கவேண்டும்: ஆசியாவில் உள்ள தேவாலயங்கள், திருச்சபையின் ஆசியத் தன்மையை வலியுறுத்தும் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் போப் பிரான்சிஸ் திருச்சபை சமூகங்களை, இக்கால இறையியல் மூலம் மேலும் அடித்தளமாக மாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று, ஶ்ரீலங்காவின், ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான விமல் திரிமான்ன கூறுகிறார்[10]. ஆசிய சர்ச் ஆசியத் தன்மையுடன் இருக்க வேண்டும், ரோம்-தன்மை குறைந்திருக்க வேண்டும் என்று பேசுவதும்[11] தமாஷாக இருக்கிறது. எப்படித் தான் வார்த்தைகளை மாற்றி, சுற்றி வளைத்துப் பேசினாலும், வாடிகன் கவுன்சில் -2 என்றெல்லாம் பேசும் பொழுது, அவர்களது திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். உள்-கலாச்சாரமயமாக்கல், உரையாடல் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான். ஏற்கெனவே முரண்பாடுகளுடன் செயல் பட்டு வருகின்றன.
கிருத்துவத்தால்வன்முறையினைக்குறைக்கமுடியவில்லை: இத்தாலியிலிருந்து வரும் ஒரு நாளிதழ், “உதவ மற்றும் நீதி கேட்டு கூக்குரலிடும் மக்களின் குரலுக்கு செவி சாயுங்கள்…..ஆசிய கண்டத்தில் எழுச்சியுறும் மக்களுக்கு உதவுங்கள்……..ஒன்றாக உழைத்து புதிய ஆசியாவை உண்டாக்குவோம்,” என்றெல்லாம் மாநாட்டில் பேசியதாக கூறுகிறது[12]. இதெல்லாம் வழக்கமான கோஷங்கள் தானே தவிர, புதியதாக உன்றும் இல்லை. முதலில் இருக்கும் கிருத்துவர்களை, கிருத்துவர்களாக இருக்க இவர்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால், அதை செய்வதில்லை. இந்த மாநாடு நடக்கும் போதே, தினம்தினம் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர், ஏன் லட்சக்கணக்கில் மக்கள் பல நாடுகளில் கொல்லப் படுகின்றனர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப் படுகின்றனர், தீவிரவாத தாக்குதல்களில் குரூரமாகக் கொல்லப் படுகிறார்கள். கடவுளின் பெயரால் தான் அவர்களும் அத்தகையை குரூர காரியங்களை செய்து வருகிறார்கள்.
மாநாட்டின்திட்டங்களைவிளக்கும்இறுதிஆவணம்தயாராகிறது: பம்பாய் பேராயர் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ், மாநாடு செயல்பட்டு வரும் இறுதி ஆவணத்தை எவாஞ்சலைசேஷன் (மதம் மாற்றுதல்), மேய்ப்புச் சாத்தியங்கள் (மதம் மாற்றும் நடவடிக்கைகள்) தொடர்பான “எதிர்கால” ஆவணமாகவும், அவ்வாறே செயல்பாட்டிற்கு உதவும் வகையிலும் கொன்டு வர ஆவன செய்வதாக விவரித்தார்[13]. மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆசியாவில் உள்ள சமூகத்தின் பல அம்சங்களின் கூகுரல்களைக் கேட்டதாக அவர் விளக்கினார். கூறினார், உதாரணமாக, “எங்கள் ஆயர் பணியில் அதிக சிந்தனைமிக்க ஆன்மீகத்திற்கான பெரும் ஏக்கத்தை நாங்கள் கேட்டோம்”. இந்த ஆவணம், FABC பிரதிநிதிகளின் பொது ஒப்புதலைப் பெற்ற செயல்பாட்டில் உள்ளது என்று அவர் விளக்கினார். இது மற்ற ஆயர்களுடனும், பாமர உறுப்பினர்களுடனும் மேலும் விவாதிக்கப்படும். “இந்த ஆவணம் முழு ஆசியாவிலும் எதிர்கால மேய்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி ஆவணமாக எங்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றெல்லாம் கூறுவதை கவனிக்கலாம்.
வேதபிரகாஷ்
01-11-2022
[1] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM
[5] ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதிக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள் சம்ஹைன் எனக் கொண்டாடப்படும் கெல்ட்டியத் திருவிழாவிலும் மற்றும் கிருத்துவர் புனித நாளான அனைத்து துறவியர் தினத்திலும் இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது.இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.
[6] ஹாலோவீன் காரணமாக பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுவாக இந்த விழாவில் 50 -60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக இந்த விழா வெளியில் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் இதை முன்னிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று 1 லட்சம் பேர் அங்கு கூடினார்கள். அந்த மார்க்கெட் பகுதிகளில் மிக கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க மக்கள் ஓட தொடங்கி உள்ளனர். இதில் ஒருவர் மீது ஒருவர் மோதி.. பலர் கீழே விழுந்து.. அவர்கள் மீது மக்கள் ஏறி மிதித்து பலர் காயம் அடைந்து உள்ளனர். பலரின் கழுத்து, முகம், நெஞ்சில் ஏறி மக்கள் ஓடிய நிலையில் அங்கு மிகப்பெரிய களேபரமே ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அதுதான் திடீரென மக்கள் ஓட காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் நேற்று 150க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இதில் பலியானவர்களில் 100 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
[7] n the Philippines, authorities reported at least 45 deaths so far and millions of damage due to severe Tropical Storm Nalgae, also locally dubbed Paeng.
[8] Pope’s envoy to Asian bishops meeting prays for victims of Seoul stampede, ‘Paeng’
By Roy Lagarde via CBCP News – October 31, 2022 – 5:35 PM .
[12] Agensir, Asia: Fabc’s final message, “let us hear the cry for help and justice” rising from the peoples of the continent. “Together we work for a better Asia”, 31 October 2022 @ 14:20.
[13] Vatican news, Asian Bishops: We wanted to see how our Churches can be agents of change, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 29 October 2022, 10:37.
கத்தோலிக்கக்கிறிஸ்தவம்உலகைஆட்டிப்படைத்தது: கிருத்துவம், குறிப்பாக, கத்தோலிக்க கிருத்துவம், இடைகாலத்திலிருந்து உலகை ஆட்டி படைத்து வருகிறது. காலனிய ஆதிக்கம் மூலமும் ஆதிக்கத்தை செல்லுத்தி வந்தது. உலக யுத்தங்களிலும் நாசத்தை உண்டாக்கி, பிறகு பிரிந்த நாடுகளில் தனது தாக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. பற்பல தொன்மையான நாகரிகங்களை மக்களை அழித்த வரலாறும் உண்டு. ஏனெனில், கத்தோலிக்கம் தான்தான் உண்மையான மதம் என்ற அகம்பாவம், ஆணவம் கொண்டது. இத்தாலியில், வாடிகன் “ஸ்டேன் வித்தின் ஸ்டேட் ஓரு நாட்டிற்குள் இன்னொரு நாடு என்ற ரீதியில் கோலோச்சி வருகிறது. இத்தகைய அதிகார, ஆதிக்க, ஆளுமை கொண்ட நிலையில், போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே அந்தந்த மயக்கங்களில் பற்பல பாவங்களை செய்து வருகிறார்கள் என்பதை, கடந்த காலங்களில் அவரவர் எழுதி வந்த புத்தகங்கள், அறிக்கைக்கள், வாடிகனின் நடபடிகள் என்று பல ஆவணங்களில் பதிவாகியுள்ளதையும் கவனிக்கலாம்.
கத்தோலிக்கத்தில்திருமணம்கூடாது: திருமணம் செய்து கொள்ளக் கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் போதிக்கப் பட்டாலும், கன்னியாஸ்திரிக்கள் விவகாரங்களில் போப், கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் என்று எல்லோருமே, பல நிலைகளில், பல காலங்களில் வரம்புகள் மீறி காதலில், காமத்தில் ஆண்-பெண் உறவுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது சகஜமாகி விட்ட நிலையில், பற்பல சமரசங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அக்காலத்திலேயே “கான்வென்டுகள்” அதற்காக உருவாக்கப் பட்டன. இந்தியாவிலேயே கன்னியாஸ்திரிக்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாவது, கற்பழிக்கப் படுவது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள் மாட்டிக் கொள்வது வாடிக்கையான விவகாரங்களாகி விட்டன. கேரளாவில், இது தினம்தினம் செய்திகளாகவும் மாறி விட்டன. இருப்பினும், அத்தகைய பாலியல் குற்றங்கள் பல மறைக்கப் படுகின்றன, செய்திகளில் வெளிவந்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாக சரிகட்டப் பட்டு, அமுக்கப் படுகின்றன. சில நாட்களில், பொது மக்களும் அவற்றை மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறது.
வாடிகனேஅத்தகையகுற்றங்களில்பாதிக்கப்பட்டுள்ளது: பொருளாதார குற்றங்கள் சாதாரணமாக உள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் பிடோபீலியா, போர்னோகிராபி, ஓரின சேர்க்கை, என்று பலவித உருவங்களில் நவீன காலங்களில் அதிகமாகியுள்ள. இவையெல்லாம், போப் அவ்வப்பொழுது விவாதித்து வருகிறார். அறிக்கை-ஆணைகள் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது, வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் டிஜிட்டல் மற்றும் சமுக வலைத்தளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது[1]. இத்தகைய கூட்டங்கள், மாநாடுகள், உரையாடல்கள் நடப்பது சாதாரணமான விசயங்கள் ஆகிவிட்டன. அப்போது பேசிய அவர், “இணையத்தில் வரும் ஆபாசப்படங்கள் தீமையை விளைவிக்கிறது[2]. மேலும் அதன் மூலம் ஏற்படும் விளைவுகள்,” அபாயத்தைப் பற்றி எச்சரித்துள்ளார்[3]. செல்போன் உபயோகம் பற்றி வாத-விவாதங்கள் நடந்த போது, கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரிக்கள் அவற்றில் மூழ்கியுள்ளார்கள் என்றும், போர்னோகிராபி என்கின்ற மோசமான ஆபாசப் படங்களைப் பார்த்து வருகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சாத்தான் இப்பொழுதெல்லாம், ஆப்பிள் கொடுத்து தான் வரவேண்டும் என்பதில்லை, “ஆப்பிள்” மூலமும் வந்டு கொண்டிருக்கிறான். இனைதளம், ஆன்லைனில் வருகிறான், சாபிட வைக்கிறான், ஆதிக்கம் செல்லுத்துகிறான்.
கன்னியாஸ்திரீகள், போதர்கள்போன்றவர்கள்கூடதப்பிக்கமுடியவில்லை: அதற்கு கன்னியாஸ்திரீகள், போதர்கள் போன்றவர்கள் கூட தப்பிக்க முடிய வில்லை[4]. ஏனெனில், அடக்கி வைக்கப் பட்ட இயற்கையான பெண்ணின் காமம், இதனால், எளிதில் தூண்டப் படுகிறது. செயல்பாட்டில் இறங்கும் போது, சுய-இன்பம் என்று ஆரம்பித்து, ஒரு ஆடவனுடன் புனைய காமம் தலைத் தூக்குகிறது. இதை இயற்கையாக உண்டாவதால், தடுக்க முடியாது. இதனால், பெண்மை சீரழிகிறது, ஏசுகிறிஸ்துவின் பந்தம் அறுபடுகிறது, சாத்தான் அதிலிருந்து வருகிறது. மனத்திற்குள்ளே செல்கிறது[5]. போதகர்களின் இதயத்தை நலினப்படுத்துக்கிறது என்றெல்லாம் விளக்கி கூறினார், வருத்தப் பட்டார்[6]. ஆனால், அதே நேரத்தில், பிடோபிலியா, ஓரின சேர்க்கை, கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்பதனையும் கவனிக்க வேண்டும். கடந்த வருடங்களாக போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஆபாசப்படங்களினால் ஏற்படும் தீமையைப் பற்றிப் பேசிக்கொண்டு வருகிறார்[7].
இன்டெர்நெட், கம்ப்யூட்டர், செல்போன்போன்றவைதடைசெய்யமுடியுமா?: தொடர்ந்து, டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும், அதில் அதிக நேரம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்[8]. நல்ல இதயங்களில் தினமும் ஏசுவை வரவழைத்துக் கொள்ள வேண்டும், ஆனால், இத்தகைய விவகாரங்களை அல்ல. மேலும் தூண்டுதல்கள் ஏற்படுத்தாத வகையில் ஆபாசப்படங்களை போனில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[9]. கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப்படங்கள் பார்ப்பதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்[10]. ஆபாசப் படங்களை போனிலிருந்து, நீக்கிவிடலாம், ஆனால், இன்டர்நெட் இருக்கும் வரை பார்த்துக் கொண்டு தானே இருப்பார்கள். இது போப்பிற்குத் தெரியாடா என்ன, பிறகு, செல்போன் தடை செய்ய முடியுமா. கம்ப்யூட்டர், லாப்டாப், போன்றவை உபயோகப் படுத்தக் கூடாது என்று ஆணையிட முடியுமா?
போர்னோகிராபி சமூகத்தை சீரழிக்கிறது: ரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் அலவித பிரச்சினைகள், விவகாரங்கள் அலசப் படும். குறிப்பாக, உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப் படவேண்டும், மதமாற்றம் செய்யப் படவேண்டும், அதர்கு ஊழியர்கள் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசுவர். அதற்கான திட்டங்கள், வழிமுறைகள், முதலியவை விவாதிக்கப் படும். ஆனால், இப்பொழுது, கிறிஸ்தவ சமூகம் சீரழிந்து வருகிறது. அபார்ஷன் / கருக்கலைப்பு சாதாரணமான விசயமாகி விட்டது. பள்ளி சிறுமிகள், மாணவிகள், திருமணம் ஆகாமலேயே கருவுருகிறார்கள், குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், “கன்னித் தாய்களும்” நிதர்சனமாகி விட்டது. அதாவது, கத்தோலிக்கத்தில் அபார்ஷன் கூடாது. அந்நிலையில், கர்ப்பமுற்ற சிறுமி, மாணவி அல்லது திருமணமாகாத இளம் எண் கருவை ஏற்று குழந்தை பெறவேண்டும். இது குடும்பங்களை பாதிக்கிறது. இப்பொழுது, செல்போன் மூலம், போர்ன் படம் ஆர்த்து வருகிறார்கள் உடலுறவு போன்றவை வெளிப்படையாகப் பார்த்துத் தெரிந்து கொள்கிறார்கள். அவர் கலந்து கொண்ட போது, செல்போன் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த போப், டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், கிறிஸ்தவர்களிடையே மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக இருக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளதாக தெரிவித்த போப், கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்ப்பதாக வேதனை தெரிவித்தார்.
[3] தமிழ்.நியூஸ்.18, ‘ஆபாசப்படத்தில்சாத்தான்இருக்கு.. டெலிட்பண்ணுங்க‘.. டிஜிட்டல்உலகம்குறித்துபேசியபோப்பிரான்சிஸ்!, Published by: Janvi, First published: October 27, 2022, 19:06 IST LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:06 IST.
[5] தமிழ்.ஏபிபி.லைவ், Pope Francis : ”கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள்கூடஆபாசபடம்பாக்குறாங்க” போப்ஆண்டவர்வேதனை, By : ABP NADU | Updated : 28 Oct 2022 01:56 PM (IST)
[7] தமிழ்.வெப்.இந்தியா, கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள்கூடஆபாசபடங்களைபார்க்கின்றனர்: போப்வேதனை!, Written By Mahendran, Last Modified, வியாழன், 27 அக்டோபர் 2022 (18:52 IST)
ராஜகோபாலனுக்கும், எபி. ஜார்ஜுக்கும்என்னவித்தியாசம்?: “பாலியல் புகாருக்கு ஆளான செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் குறித்த விசாரணைக்குப் பள்ளி நிர்வாகிகள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை,” என்று ஊடகங்கள் குறிப்பிட்டு செய்தியை முடித்துக் கொண்டுள்ளன. ராஜகோபாலனை கவனித்த விதத்தில், இங்கு எபி. ஜார்ஜ் கவனிக்கப் படவில்லை. தொலைக் காட்சிகளும் கண்டுகொள்ளவில்லை, விவாதங்கள் நடத்தவில்லை. பாலியல் விவகாரத்தில், இப்பள்ளி ஆசிரியரின் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது[1]. ஆனால், அந்நிர்வாகம், அசைவதாகத் தெரியவில்லை. மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், இப்பள்ளி சார்பில் யாரும் ஆஜராக வில்லை[2]. கைதும் செய்யப் படவில்லை. இதனையடுத்து, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்துக்குச் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.
07-06-2021 அன்றுசெயின்ட்ஜார்ஜ்பள்ளிநிர்வாகிஜி.கே.பிரான்சிஸ்உள்ளிட்டோர்ஆஜராகவில்லை: முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஶ்ரீதர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (திங்கள் அன்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை[3]. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்[4].
சம்பந்தப்பட்டமாணவியின்சார்பாகவழக்கறிஞர்ஸ்ரீதர்நேரில்ஆஜரானார்: மீண்டும், பள்ளி நிர்வாகிகளிடம் வரும் 15ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது[5]. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவியின் சார்பாக வழக்கறிஞர் ஸ்ரீதர் நேரில் ஆஜராகி, மாணவிகளிடம் இருந்த ஆவணங்களை ஆணையத்தில் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், “பள்ளிநிர்வாகம்மற்றும்பாலியல்குற்றஞ்சாட்டப்பட்டஆசிரியர்ஆகியோருக்குஆணையத்தின்சார்பில்சம்மன்அனுப்பப்பட்டது. இன்றுஅவர்கள்விசாரணைக்குஆஜராகவில்லை. உடல்நிலைசரியில்லைஎன்றகாரணத்தைக்கூறிபள்ளிநிர்வாகிகள், வழக்கறிஞரைஅனுப்பிவைத்திருந்தனர்[6].பள்ளியில்குற்றங்கள்நடந்ததற்குஎன்னிடம்இருந்தஏழுஆதாரங்களைஆணையத்திடம்சமர்ப்பித்துள்ளேன். பள்ளிநிர்வாகம்சம்பந்தப்பட்டஆசிரியருக்குஅனுப்பியவிளக்ககடிதத்தில், ’பள்ளிமாணவிகளுக்குபாலியல்தொல்லைகொடுத்துஉள்ளீர்கள்’ எனகூறியுள்ளது. அதற்காகஅவரின்சம்பளத்தில்மாதம் 2 ஆயிரம்ரூபாய்யைபிடித்தம்செய்துள்ளது. இதுகுறித்துஅவரின்பணிப்பதிவேட்டில்கூறப்பட்டுள்ளது. இந்தஆதாரங்களையும்ஆணையத்திடம்ஒப்படைத்துள்ளேன்[7]. “பள்ளியின்சார்பில், மனுஒன்றுஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனாதொற்றுபாதிப்புகாரணமாகஆஜராகமுடியவில்லை,” என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறது தினமலர்[8]..
கமல்ஹஸன்தெரிவித்தகருத்து[9]: சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் புகார் குறித்து இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்[10]. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“ஆசிரியரேமாணவிகளிடம்அத்துமீறியபத்மாசேஷாதரிபள்ளிவிவகாரம்மிகுந்தஅதிர்ச்சியையும்வருத்தத்தையும்ஏற்படுத்துகிறது. முன்னரேபுகார்அளித்தும்பள்ளிஇவ்விவகாரத்தில்போதியகவனம்செலுத்தவில்வைஎனும்குற்றச்சாட்டுநமதுகல்விநிறுவனங்களின்மீதானநம்பிக்கையைக்குலைக்கிறது . தமிழகஅரசுஇந்தவிவகாரத்தில்மிகுந்தஅக்கறைசெலுத்தவேண்டும். வழக்குவிசாரணைக்குபள்ளிநிர்வாகமும்முழுமையாகஒத்துழைக்கவேண்டும்.இந்தவிவகாரம்வெடித்ததைஅடுத்துவேறுசிலபள்ளிகளில்திகழ்ந்தநிகழும்பாலியல்துன்பறுத்தல்குற்றச்சாட்டுகள்அடுத்தடுத்துவெளிவந்தவண்ணம்உள்ளன. தமிழகஅரசுஉடனடியாகபிரத்யேகவிசாரணைக்குழுவினைஅமைத்துஇந்தக்குற்றச்சாட்டுகளைப்போர்க்காலஅவசரத்தில்விராரிக்கவேண்டும்.
ஜாதியம்–மதம்என்றுசொல்லிசெக்யூலரிஸமாக்கப்படும்பாலியல்விவகாரங்கள்: ஊடகங்கள் இவற்றை செக்யூலரிஸமாக்க முயற்சிக்கின்றன, அதாவது, ஜாதியம், மதம் என்று இரண்டிலும் இணைத்து, அதன் மூலம் திரிபு விளக்கம் கொடுத்து திசைத் திருப்பப் பார்க்கின்றனர். சிக்கியுள்ள எல்லா பள்ளிகளும் சாதி அடிப்படையிலானது, அல்லது மத அடிப்படையிலான பள்ளிகளாகவே இருக்கிறது[13]. செயின்ட் ஜார்ஜ் போன்றவை மத அடிப்படையிலான பள்ளிகளாகவும், பிஎஸ்பிபி போன்ற பள்ளிகள் சாதி அடிப்படையிலானதாகவும் இருக்கிறது[14]. இன்று வரையில், இதனை, ஜாதி ரீதியில், குறிப்பாக “பிராமண எதிர்ப்பு” முறையில் கடுமையாக, சாடி விமர்சங்கள், சமூக மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. 09-06-2021 அன்று “டைம்ஸ்.நௌ” தொலைக்காட்சி பேட்டியில், முதலில் பேசிய பெண்-வழக்கறிஞர் குறிப்பிட்ட பள்ளியை விமர்சித்தேப் பேசி முடித்தார். பிறகு சின்மயி, “செக்யூலரிஸ” முறையில் விமர்சித்தாலு,ம், அரசியலாக்குவதைக் கண்டித்தார். வைரமுத்துவை பெயர் சொல்லியே தாக்கினார். அவர் எவ்வாறு பெரிய ஆட்களால் காப்பாற்றப் பட்டு வருகிறார் என்று எடுத்துக் காட்டினார். இதனால், கடையாக பேசிய சுப்ரமணியன் சுவாமி எவ்வாறு லயோலா கல்லூரி ஏழு பாலியல் புகார்களை மூடி மறைக்கப் பார்க்கிறது, கிருத்துவ சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்று கனிமொழியையம் குறிப்பிட்டு பேசினார். நேரியாளர் திடீரென்று பேட்டியை முடித்துக் கொண்டதிலிருந்து, மற்ற கருத்துகள், உண்மைகள் வெளி வர ஊடகங்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
[3] தமிழ்.இந்து, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை, Published : 08 Jun 2021 03:13 am; Updated : 08 Jun 2021 06:35 am..
[9] ஏசியா.நெட்.நியூஸ், தப்புசெஞ்சவங்கஎந்தஜாதியாகஇருந்தாலும்தண்டிக்கணும்… இரண்டுபெண்களின்தகப்பனாகபொங்கிஎழுந்தகமல்…!, Kanimozhi Pannerselvam, Chennai, First Published May 26, 2021, 3:08 PM IST.
12-04-2021 புகார் கொடுத்தப் பிறகு மறைவான உறவின-மதபோதகர்கள்: பிரபல பாடகி தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தன் சகோதரி, சகோதரின் கணவர், மைத்துனன் மற்றும் இன்னொரு மதபோதர் மீது புகார் கொடுக்கப் பட்டது. ஆக, அச்சிறுமி விவகாரத்தில் – கிறிஸ்தவ மதபோதகா் ஹென்றி (38), சித்தியின் கணவா் ஜான்ஜெசில் (47), அவரது தம்பி ஹிலாரோ (23), ஜான்ஜெசிலின் மனைவி ஷகினா ஜான் (38) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது[1]. தலைமறைவாக பதுங்கி இருந்த இந்த நான்கு பேரையும் போலீஸார் திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை 23-04-2021 அன்று கைது செய்தனா்[2]. வெள்ளிக்கிழமை 23-04-2021 அன்று கைது செய்யப் பட்டு, மாலையில் சென்னைக்கு வரவழைக்கப் பட்டாலும், காலை பதிவுகளில், ஒரு வரி செய்தியாகத்தன் போட்டுள்ளன. மற்றப்படி, பழைய விவரங்களையே 99% போட்டுள்ளன. 12-04-2021 அன்று புகார் கொடுக்கப் பட்டது. ஆகவே, அந்த நால்வரும் ஏன் தலைமறைவாயினர் என்ற கேள்வியும் எழுகிறது.
திண்டிவனம் பண்ணை வீட்டில் மறைந்து தங்கியிருந்தது: மதபோதகர் ஹென்றி உள்பட குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போனை கண்காணித்தபோது, அவர்கள் திண்டிவனத்தில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது[3]. திண்டிவனத்தில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கி இருந்தனர். ஹென்றி உள்பட நான்கு பேரையும் தனிப்படை போலீசார் 23-04-2021 அன்று கைது செய்தனர். ஊடகக்காரர்களும் அங்கிருந்திருக்கின்றனர், வீடியோ எடுத்திருக்கின்றனர். அந்த வீடியோக்கள் யூ-டியூப்பில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. போலீஸார் அவர்களை கைது செய்த பிறகு, கார்களில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சொத்துப்பிரச்சினை காரணமாக எனது அக்கா பொய்ப் புகார் கொடுத்துள்ளார். அதை சட்டப்படி கோர்ட்டில் சந்திப்பேன், என்று பின்னணி பாடகியின் தங்கை கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[4]. இது இவ்விசத்தில் தேவையா என்று தெரியவில்லை.
கைது செய்யப் பட்ட பாஸ்டர்கள் – மூன்று உறவினர்கள்: கைது செய்யப் பட்ட நால்வருமே, ஒருவரையொருவர் நன்றாக அறிந்தவர்கள். கிருத்துவர்கள் மற்றும் மத போதப் பிரச்சாரமும், தங்களது பாடல்கள், பிரசங்கங்கள் மூலம் செய்து வருகின்றனர்:
கிறிஸ்தவ மதபோதகா் ஹென்றி (38),
சித்தியின் கணவா் ஜான்ஜெசில் (47),
அவரது தம்பி ஹிலாரோ (23),
ஜான்ஜெசிலின் மனைவி ஷகினா ஜான் (38)
அதாவது, புகார் கொடுத்த பாடகியும் ஷகினா ஷானும் சகோதரிகள், ராகவேந்திரா-சுலோசனா தம்பதியரின் மகள்கள். பிரசன்னாவாக இருந்த மூத்தப் பெண், ஷான் ஜெஷிலைத் திருமணம் செய்து கொண்டு, ஷகின ஷான் என்றானார். இதில் ஹென்றி பால் எவ்வாறு நெருக்கமாக வந்தார் என்று தெரியவில்லை. ராகவேந்திரா இறந்த போது, ஹென்றி பால் தான், ஷகினாவுடன் வந்திருந்தார். அவரது உடலுக்கு நேராக நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது, ஷகினா அடிக்கடி பைபிளை திறப்பதும், மூடுவதுமாக இருப்பதை, வீடியோவில் காணலாம். இதெல்லாம், அவர்களது குடும்ப விவகாரம் என்றால், அப்படியே இருந்து போகலாம். ஆனால், மதரீயிலாக, மர்தம் மாற்றுவது, குடும்பத்தைப் பிரிப்பது, பாரம்பரியம்-நாகரிகங்களை மாற்றுவது, முதலியனவும் சேர்ந்திருப்பதும், ஊடகங்களிலவர்களைப் பற்றி, அதிகமான விளம்பர ரீதியில் செய்திகள் வரும் போதும், அவனிக்கப் படுகிறார்கள்.
சொத்துப் பிரச்சினை என்று திடீரென்று திசைத் திருப்பும் போக்கு: விசாரணையில், சிறுமியின் சித்தப்பா, உறவினர், மத போதகர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுப்பதை சிறுமியின் சித்தி அறிந்தும், அதனை தடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நான்கு பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்[5]. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் பாட்டி, சொத்து தகராறு காரணமாக மூத்த மகளான பின்னணி பாடகி, தனது இரண்டாவது மகளின் குடும்பத்தாரை பழிவாங்கி விட்டதாக குற்றம்சாட்டினார்[6]. சொத்து தகராறு காரணமாக பாடகி பொய் புகார் அளித்துள்ளதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். அப்படியென்றால், இதனை புகார் கொடுத்த அன்றே சொல்லியிருக்கலாம். ஒரு தாய் இவ்வாறு ஒரு மகளுக்கு ஒரு மாதிரி, இன்னொரு மகளுக்கு இன்னொரு மாதிரி பேசுவதும் திகைப்பாக இருக்கிறது. இங்கு பாட்டி என்றால், சுலோசனா என்றாகக் கொண்டால், அதே பாட்டி, பேத்தியின் நிலையினையும் கவனிக்க வேண்டுமே? பேத்தி அந்த அளவுக்கு பொய்யா சொல்வாள்?
முகங்கள் நன்றாகத் தெரிந்துள்ள போது, மறைக்க வேண்டிய அவசியம் என்ன?: அப்படியிருக்கும் போது, இவ்வாறு சில இணைதள ஊடகங்கள் இப்பொழுது செய்தி வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. தினத்தந்தி, யூ-டியூப் மூலம் செய்தி வெளியிட்டாலும், விவரங்கள், புகைப்படங்கள் எதுவும் இல்லை[7]. ஏற்கெனவே தெரிந்த செய்தியைச் சொல்லி விட்டு, கைது செய்யப் பட்டனர் என்று ஒரே வரியில் முடித்திருப்பது தமாஷாக இருக்கிறது. கீழே வாசகர்களே, படங்களை வெளியிடுங்கள் என்று பதிவு செய்துள்ளார்கள். “தயவுசெய்துஃபோட்டோபோடுங்கஇருக்கும்எல்லாரும்இனிமேஉஷாராஇருப்பாங்கஇந்தமாதிரிபோதகர்இனிமேஉருவாககூடாது” இதனால், சம்பந்தப் பட்டவர்கள், ஊடகங்களில் முழு விவரங்கள் வௌவதை விரும்பவில்லை அல்லது தடுக்கிறார்கள் என்றே தெரிகிறது.
பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் உட்பட நான்கு பேர் கைது[8]
பின்னணி பாடகி மகளுக்கு பாலியல் வன்கொடுமை- தலைமறைவாக இருந்த மதபோதகர் உட்பட 4 பேர் கைது[9]
பிரபல பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் உள்பட 4 பேர் கைது![10],
பிரபல பாடகி மகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் உள்பட 4 பேர் கைது!,
இப்படித்தான், தலைப்பிட்டு செய்திகள் வெளியிடப் பட்டுள்ளன. பாலியல் வன்மத்திற்கு உட்பட்ட பெண்ணின் அடையாளம் மறைக்கப் படவேண்டும். அதனால், ஒருவேளை, புகார் கொடுத்தவர், மற்றும் சம்பந்தப் பட்டவர்களின் அடையாளங்களையும் மறைக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், யூ-டியூப் செய்திகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் அவர்களின் படங்களை போட்டுள்ளன.
அக்னி ஆராதனையா, காம ஜெபமா – பிரார்த்தனைக் கூப்பிட்ட பெண்ணைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பேராயர்! கைது-சிறையில் அடைப்பு!
சுயாதின சர்ச்சிற்கு பேராயர் ஸ்காட் டேவிட்: சென்னை ஆவடி அருகே சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்தனர்[1]. ஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் 53; மத போதகர்[2]. அதே பகுதியில் உள்ள சர்ச்சில் ஜெபம் நடத்தி மதபோதனை செய்து வந்தார். திருமலை நகரில் சர்ச் ஒன்றை நடத்தி வருகிறார் சென்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், ஸ்காட் டேவிட் ,ஸ்பிக் டையோசிஸ் (SPIC diocese) என்ற சர்ச் நடத்துவதாகத் தெரிகிறது. கல்வாரி அன்பு திருச்சபை, பிரான்ஸ் [Cavalry Love Church, leclerc, lebourget france] என்பதுடன் தொட்ச்ர்பு இருப்பது போலவும் விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. சுயாதீன வகையில் உள்ள சர்ர்ச்சிற்கு, பேராயர் என்றும் விளம்பரப் படுத்திக் கொண்டுள்ளார். இது பிரெஞ்சு தேசத்து, சர்ச்சின் பிரிவு என்று தெரிகிறது. தீராத குடும்ப பிரச்னைகளை தீர்க்க வீடுகளுக்கு சென்று அங்கு ஜெபம் செய்வார். தவிர தனது சர்ச்சிலும் கூட்டங்களை நடத்தி, ஆராதனை செய்துள்ளார். வழக்கம் போல, இவரது சர்ச், மற்றும் இதர தலைவர்களின் பெயரில் வீடியோ, பாடல்கள் சிடி முதலியவை வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றி, தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். இவ்வாறான சுயாதீன சர்ச்சுகள் பெருக-பெருக பாலியல் தொல்லைகளும் அதிகமாகி வருகின்றன.
குடும்பப்பிரச்சினைதொல்லைகளால்ஒருபெண்வந்துசொல்லிவேதனைபட்டது: கிருத்துவ மதத்தில் “தானாக வந்து செய்த தவறுகளை சொல்லி முறையிடுவது,”, “பாவ மன்னிப்பு” போன்றவை உள்ளன. இங்குதான், பாதிரிகள், பாஸ்டர்கள், கிருத்துவ மத போதகர்கள், விவகரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அவற்றை வைத்து, பெண்களை வளைத்துப் போட்டு, பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுப்பது, வன்புணர்ச்சிக்கு வற்புருத்துவது என்று ஆரம்பித்து, செக்ஸ் குற்றங்களில் முடிந்துள்ளன, முடிகின்றன. இருப்பினும், இவை ஊக்குவிக்கப் படுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆரிக்கமேடு பகுதியில், சாலோம் நகரைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கும் ஸ்காட் டேவிட்டுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது[3]. அப்பொழுது அப்பெண் தனது குடும்ப கஷ்டங்களை கூறி வேதனை பட்டுள்ளார். இதையெடுத்து, அவளது கஷ்டங்களைப் போக்க, அடிக்கடி சென்று ஜபம் செய்து வந்தார்[4]. இப்படி, ஜபம் போர்வையில், அப்பெண்ணிடம் நம்பிக்கையினை வளர்த்துள்ளார். அதுபோல சர்ச்சுக்கு வந்து ஜெபம் செய்ய ஏஞ்சலினை 42 (வழக்கம் போல வயது 48, 42 என்றெல்லாம் குறிப்பிடுகின்றன) அழைத்துள்ளார். அந்த பெண்ணிடம் வாரம்தோறும் தவறாமல் தன் சபையில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகளில் கலந்துகொண்டால் துரத்தும் கஷ்டங்கள் எல்லாமே காணாமல் போகும் என்று டேவிட் ஆறுதலாகப் பேசி நம்ப வைத்திருக்கிறார்.
பாதிரிஅழைப்பில்சர்ச்சுக்குச்சென்றதுஜெபம்செய்தது 17-04-2021: பாதிரி அழைத்ததால், ஏஞ்சல் சர்ச்சுக்குச் செல்ல தயாரானாள். அதாவது, பாஸ்டரின் மீதான நம்பிக்கையில் சென்றுள்ளாள். ஆனால், தனியாகச் சென்றது, பிரச்சினையில் முடிந்துள்ளது. இதன்படி 17ம் தேதி சர்ச்சில் ஏஞ்சலின் ஜெபம் செய்து கொண்டிருந்தார்[5]. சர்ச்சில் அப்பொழுது யாரும் இல்லை. அங்கு முட்டியிட்டு மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்[6]. அவ்வாறு மண்டியிட்டு ஜபம் செய்வது, கிருத்துவர்களின் வழக்கம். அப்போது சபலக்கார மதபோதகர் ஸ்காட் டேவிட் பின்னால் வந்து, ஏஞ்சலினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்[7]. இதனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை[8]. முதலில் தடுக்க முயற்சித்துள்ளாள். ஆனால், பலவந்தமாக, அணைத்ததால், அதிர்ச்சியடைந்த ஏஞ்சலின் சப்தம் போட்டு அலறியுள்ளார்[9]. சர்ச்சிலிருந்து கத்தியனாறே வெளியே ஓடியுள்ளார்[10]. அங்கிருந்து தப்பி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்[11]. அதாவது, அவரைத் தடுக்க முயற்சிகள் நடந்துள்ளன போலும்.
போலீஸாரிடம்புகார், விசாரணை, நீதிபதிமுன்புஆஜர், சிறையில்அடைப்பு: பாதிக்கப் பட்ட பெண், போலீஸிடம் நேரிடையாக புகார் கொடுத்ததால், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து, போலீஸார் வந்து ஸ்காட் டேவிட்டிடம் விசாரணை செய்துள்ளனர். சர்ச் மற்றும் அதன் பக்கது இடங்களில் விசாரித்துள்ளனர். நடந்த உண்மை உறுதியானதால், இதைத்தொடர்ந்து மதபோதகரை 19=-04-2021 அன்று போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜர்படுத்தினர்[12]. விசாரணையில், உண்மைத் தன்மை தெரிந்ததால், அவரை சிறையில் வைத்து, தொடர்ந்து சட்டப் பட்டி நடவடிக்கை எடுக்க ஆணையிடப் பட்டது. நீதிபதியின் உத்தரவின் பேரில், ஸ்காட் டேவிட்டை திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.
சர்ச்சுகளில், பிரார்த்தனைகளில்பாஸ்டர்கள்முத்தம்கொடுப்பது: அயல்நாடுகளில் பாஸ்டர்கள் பெண்களுக்கு முத்தம் கொடுக்கின்றனர் என்று அடிக்கடி செய்திகள் வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில், அவ்வாறு முத்தமிட்டு, பேய்களை ஓட்டுவதாக, பாஸ்டர்கள் கூறிக் கொள்கிறார்கள். இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில், இது ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. இருப்பினும், இது அத்தகைய முத்தம் இல்லை, மதபோதகர், பாஸ்டர் திட்டத்துடன், அப்பெண்ணை தனியாக வரச் சொல்லியுள்ளார். அதன்படி, வந்தவுடன், சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாலியலில் ஈடுபட்டுள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட பெண், உடனடியாக போலீஸிடம் புகார் கொடுத்ததால், நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஸ்காட்டேவிட்பேய்ஓட்டும்பாதிரியா? பகுத்தறிவுவாதிகள் ஒன்றும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை!: விகடன், இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது[13], “ஞாயிற்றுக்கிழமைமற்றும்செவ்வாய்க்கிழமைகளில்பில்லி, சூனியம், பேய், பிசாசுஎனஅனைத்துபிரச்னைகளையும்தீர்ப்பதற்காகத்தனதுசபையில்அக்னிஆராதனைநடத்திவந்துள்ளார்[14]. டேவிட்டின்அக்னிஆராதனையில்கலந்துகொண்டால்தங்கள்பிரச்னைகளுக்குதீர்வுகிடைக்கும்என்றநம்பிக்கையில்ஆவடிமட்டுமின்றிஅம்பத்தூர் , திருநின்றவூர்எனப்பலபகுதிகளைச்சேர்ந்தஏராளமானபெண்கள்இவரதுசபைக்குவந்துகொண்டிருக்கின்றனர்”. நவநாகரிகமாக கிருத்துவ மதத்தில், எப்படி இத்தகைய நம்பிக்கைகள் இருக்கின்றன, என்று பகுத்தறிவு வாதிகள் கேட்படில்லை. பெரியாரிஸவாதிகள் தீச்சட்டிகள் ஏந்தி அக்கினி சடங்குகளை செய்து, இந்துக்களை கிண்டல் செய்வது போல, “அக்கினி ஆராதனைகளை” நடத்துவதில்லை. ஆனால், ஏஞ்சலைக் கூப்பிட்டது 17-04-2021, சனிக்கிழமை. அப்படியென்றால், ஸ்காட் டேவி, ஏதாவது, விஷேசமான ஆராதனைக்குக் கூப்பிட்டாரா என்று தெரியவில்லை. நடந்தது, பாலியல் அத்துமீறலாகத்தான் இருந்துள்ளது.
இன்னுமொரு கிருத்துவ பிடோபைல் – சிங்காரச் சென்னையில், மற்றுமொரு டீன்-ஏஜ் பெண்ணிற்கு-சிறுமிக்கு பாலியல் தொல்லை!
தொடர்ந்துகிருத்துவமதத்தலைவர்கள்மறுபடியும், “பிடோபைல்” பிரசங்கிகள்பிடோபைல்பாலியல்குற்றங்களில்ஈடுபடுவதுஏன்?: பிரச்சினை வந்துள்ளது, பலதடவை எடுத்துக் காட்டியுள்ளது போல, இது எதற்கு கிருத்துவ மத சம்பந்தப் பட்ட கார்டினல், பிஷப், பாஸ்டர் என்ற மதத் தலைவர்கள், பிரசங்கிகள் என்று தொடர்ந்து ஈடுபட வேண்டும், சிக்க வேண்டும் என்று பார்க்கும் போது, திகைப்பாக இருக்கிறது. இது வாடிகன் மற்றும் இதர கிருத்துவப் பிரிவுகளின் மேலிடங்களுக்குத் தெரிந்தும், நடந்து வருகின்றன. அயல்நாட்டினர் செய்த பிடோபைல் குற்றங்கள் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளன, இந்தியாவில் சிலர் தண்டிக்கப் பட்டுள்ளனர், பெரும்பாலோர், சில விசேஷமான அனைத்துலக உடன்படிக்கைகள் போன்றவற்றால், தத்தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர். அவை அத்துடன் மறக்கப் படுகின்றன. ஏனெனில், இந்திய ஊடகங்கள் அவைப் பற்றி கவலைப் படுவதில்லை.
பிரபலபாடகிமகள்பாலியலுக்குஉட்பட்டது: சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் ஒருவரும் அவரது நண்பர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. ஹைதராபாத்தில் வசிக்கும் தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றும், ஒரு பிரபல பின்னணி பாடகி அவரது 15 வயது மகளை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தங்கை வீட்டில் விடுமுறையை கழிக்க விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது[2]. அவ்வீடு கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில்[3], “நடிகர்விக்ரம்பிரபுநடித்தபடத்தில்பிரபலபாடகிபாடியிருக்கிறார். அவரின்மகளைசாலிகிராமத்திலுள்ளதங்கைவீட்டில்விட்டுவிட்டுபாடகிவேலைக்குச்சென்றிருக்கிறார்”. இந்த நிலையில் சிறுமியின் சித்தி கணவரான ஜான் ஜெஷில் (Shawn Jazeel), சிறுமியின் சித்தி ஷகீனா ஷான் (Shakhinah Shawn[4]), உறவினரின் மகன் கிளாரோ (Claro) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்[5].
மகள்தாயிடம்அறிவித்தது, உறவினர்கள்மறைத்த்து: தொடர்ந்து பாலியல் வன்மங்களுக்கு உட்பட்டதால், மிகுந்த வேதனை அடைந்துள்ளாள். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மகள், தாயிடம் மொபைல் போனில் விவகாரத்தைத் தெரிவித்தார்[6]. அதிர்ச்சி அடைந்த தாய், உடனே சென்னைக்கு புறப்பட்டு வந்தார். அப்பொழுது, இந்தச் சூழலில் 15 வயது சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தனியாக இருந்தபோது நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதார்[7]. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாடகி, என்ன நடந்தது என்று தங்கையிடம் கேட்டார்[8]. ஆனால் அவர் சரியான பதிலளிக்கவில்லை. மற்றவர்களும் ஒத்துழைக்கவில்லை. மதச்சாயலுடன் ஒருவேளை விவகாரத்தை மறைக்க முயன்றனர் போலும். அவர்களுடைய கூட்டங்களில் அதிகம் 18-வயதிற்கு கீழுள்ள சிறுவர்-சிறுமியர்கள் வருவது, ப்பங்கு கொள்வது, பாடுவது முதலியவை தெரிகிறது. அவற்றை அவர்களே, முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பெருமையாகப் போட்டுக் கொண்டுள்ளனர்.
தாய்போலீஸாரிடம்புகார்கொடுத்தது: இதையடுத்து ஆத்திரமடைந்த பாடகி, மகளை அழைத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார்[9]. இன்ஸ்பெக்டர் அமுதவள்ளியைச் சந்தித்து மகளுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறினார்[10]. இதையடுத்து போலீஸாரும் பாடகியின் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்[11]. அப்போது அவர், தன்னுடைய உறவினர்கள் கீழ்ப்பாக்கத்திலுள்ள சர்ச்சுக்கு (Alive Church located in Kilpauk) அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பாதிரியார் (Henry Paul), தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதை உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.
அலைவ்சர்ச்என்றஜெபக்கூடத்தில்பாடல், பிரசங்கம், கூட்டங்கள்: அங்கு சிறுமியின் சித்தி ஷெகினா ஷான், சித்தப்பா ஷான் ஜசீல் மற்றும் உறவினர் மகன் கிளாரோ ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஷெகினா ஷான் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அலைவ் சர்ச் என்ற ஜெபக் கூடத்தில் மத போதனை மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் பாடும் வழக்கம் உள்ளது. எனவே சிறுமியை அடிக்கடி அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மத போதகர் ஹென்றி பால் என்பவர் சிறுமியுடன் பழகியதாக தெரிகிறது. அவரும் சர்ச்சுக்கு வரும்போது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்[12]. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க சென்னை வந்த அவர் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஷெகினா ஷான், அவரது கணவர் ஷான் ஜசீல், கிளாரோ மற்றும் மத போதகர் ஹென்றி பால் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[13].
ஷெகினாஷான் – பிராமணராகஇருந்துகிறுத்துவராகமதம்மாறினாராம்: ஷெகினா ஷான் அலைவ் சர்ச்சில் பாடல்கள் பாடி மத போதனை செய்பவர். ஓபரா பாடகியாக இருக்கும் இவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்ததாகவும் பின்னர் கணவர் ஷான் ஜசீலை சந்தித்த பின்னர் இயேசுவின் ‘நற்செய்தியைக்’ கேட்டு கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும், பின்னர் வெகு நாட்களாக அவரை வாட்டி வந்த நோய் ‘அற்புதத்தால்’ குணமான போது இயேசுவின் மீது நம்பிக்கை உறுதியாகி மதம் மாறியதாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பைபிள் கல்லூரியில் பயின்ற இவர் தற்போது சுகமளிக்கும் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் பலர் குணமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது கணவர் ஒரு இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது. இருவரும் இணைந்து கிறிஸ்தவ மாணவர்களுக்கு இசை கற்பிக்க ஷெகினா ஷான் மினிஸ்ட்ரியின் கீழ் இசைப்பள்ளி தொடங்க திட்டமிட்டு வருகின்றனர்[14]. ஹென்றியின் பாடல்கள் யூ-டியூபில் வலம் வருகின்றன[15].
பேயோட்டுகிறேன் என்று கட்டிப் பிடித்தாராம்!: தினத்தந்தி, பே விரட்டுவதாகக் கூறி கட்டிப் பிடித்த மதபோதகர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆங்கில ஊடகங்கள் வழக்கம் போல அமுக்கி வாசித்துள்ளனதிந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் “சர்ச் பிரீஸ்ட்” அதாவது, கிருத்துவ பாதிரி, என்று குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்தவ மத போதகர்கள், மத மாற்றத்தில் ஈடுபடுபவர்கள் இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது தொடர்ந்து வரும் நிலையில், சொந்த அக்காவின் மகள் என்று கூட பாராமல் ஒரு பெண்ணே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதும், தனது கணவரையும் ஈடுபட வைத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அத்தகைய குற்றங்களின் மூலம் என்ன என்பதை ஆய்வதில்லை. டிவிசெனல்களில் எதையதையோ தினம்-தினம் வீம்புக்கு நான்கு-ஐந்து-ஆறு பேர், எல்லா விசயங்களும் தமக்குத் தெரியும் என்று கொரோனா முதல் விமானம் வரை விவாதிக்கின்றனர். ஆனால், வருடத்தில் ஆயிரக் கணக்கான, இத்தகைய குழந்தை பாலியல் குற்றங்கள், குழந்தை கற்ப்பழிப்பு போன்றவற்றைப் பற்றி, எந்த செனலும் விவாதிப்பதில்லை. ஆகவே, இவற்றை ஏதோ செய்திகளாக வெளியிட்டு, அத்துடன் விட்டு விடுகின்றன, மறந்து அல்லது மறைத்து விடுகின்றன என்றே தெரிகிறது.
[1] NEWS18 TAMIL, பிரபலபாடகியின்மகளுக்குபாலியல்தொல்லை – பாதிரியார்உள்ளிட்டநால்வர்மீதுபோக்சோசட்டத்தில்வழக்குப்பதிவு, LAST UPDATED : APRIL 13, 2021, 13:06 IST.
[3] கதிர் நியூஸ், பாலியல்துன்புறுத்தலுக்குஆளாக்கியமதபோதகரின்தோழி!, Yendhizhai Krishnan, 13 April 2021 2:36 PM
[4] Shekhinah Shawn was born in a Brahmin Hindu family. An acclaimed vocalist and perhaps the best Opera singer in India, Ms Shawn achieved excellence in Western and Classical Music at an early age. She has received numerous accolades and awards and is the only Indian to receive a Fellow of Trinity School of London (FTCL) – the highest examination offered in Western Classical for vocal. She has performed at various Mega Music Concerts and has been playback singer in some Tamil movies. Gifted with a mellifluous voice cadence, Ms Shawn has successfully performed in languages like Tamil, Telugu, Hindi, English and Spanish. She has been published in the National Daily ‘The Hindu’ a number of times. https://m.facebook.com/Shekhinah-Shawn-Ministries-359614157415494/
30 பெண்களுடன்தஞ்சை 27 வயதுபாதிரியார்கேரளாவைமிஞ்சும்அதிர்ச்சிசம்பவம்: ஊடகங்களின் உசுப்பு செய்தியா, உண்மை என்ன?
தஞ்சைப் பகுதிகளில் அதிகமாகி வரும் சர்ச்சுகள், மதமாற்றங்கள் முதலியன: தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை, நிர்மலாநகர், ஶ்ரீராம்நகர், பார்வதி நகர் என்று பல பகுதிகளில் சர்ச்சுகள் அதிகமாகியுள்ளன. மதமாற்றமும் அதிகமாகியுள்ளது, 30 வருடங்களுக்கு, இப்பொழுது இருக்கும் சர்ச்சுகளும் இல்லை, கிருத்டுவர்களும் அதிகமாக இல்லை. பெந்தகோஸ்தே சர்ச்சுகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கின்றன. அதில், “இம்மானுவேல் பெந்தகோஸ்தே” என்று புதியதாக ஆரம்பித்துள்ளதாக இருக்கிறது. அதை ஸ்டான்லி பென்னி ராபர்ட், என்பவன், சொந்தமாக ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்பொழுது, ஒரு கிருத்துவப் பிரிவிலிருந்து, இன்னொரு கிருத்துவப் பிரிவுக்கு மாற்றும் வேலை நடந்து வருகிறது. அயல்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க, இத்தகைய, முறை கையாளப் படுகிறது என்பதும் புலனாகிறது. இதனால், அந்நிய செலாவனி சட்டத்திலும் மாட்டாமல் இருக்கலாம் என்று இம்முறையினை கையாளுகின்றனர் என்று தெரிகிறது. ஒன்று-இரண்டு என்று இப்படி செய்து விட்டு, மற்றபடி, பழைய வழியைத் தான் பின்பற்றுகிறார்கள்.
பாஸ்டர்ஸ்டீபன்பென்னிராபர்ட் – அபிராமி காதல்: தஞ்சை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் -காந்திமதி தம்பதியினரின் மகள் அபிராமி (வயது 21). பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார்[1]. மாதாகோட்டை வைரம் நகரில் வசித்து வரும் ஜான் மில்டன் ராபட் மகன், ஸ்டீபன் பென்னி ராபர்ட் இமானுவேல் பெந்தகோஸ்தே திருச்சபை சொந்தமாக நடத்தி வரும் மதபோதகர்[2]. அப்படியென்றால், சர்ச் ஆரம்பிக்கிறது என்பது, ஏதோ கடை வைப்பது போல ஆகிவிட்டது போலும். கடந்த 2017 ம் ஆண்டு முதல் அபிராமி திருச்சபைக்கு சென்று வரும் போது ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது[3]. அபிராமிடம், ராபர்ட் திருமண செய்துக்கொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பிய, அபிராமி, ராபர்ட்டுடன் பல முறை தனிமையில் இருந்துள்ளனர்[4]. கல்யாணம் ஆகாமலேயே, புருஷந்பெண்டாட்டி போல இருந்திருக்கின்றனர்.
பாஸ்டர்ஸ்டீபன்பென்னிகல்யாணஏற்பாடு – அபிராமி காதல் ஏமாற்றம்: இந்நிலையில், ராபர்ட்டிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அபிராமி, அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு ராபர்ட் திருமண செய்ய மறுத்ததுடன், தான் பெந்தகேஸ்டை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அப்படியென்றால், அபிராமி வேறு பிரிவு கிருத்துவர் போலும். இதனால் ஏமாற்றம் அடைந்த அபிராமி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நவம்பர் 2019ல் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலையம் வந்த ராபர்ட், தான் வேலை தேடிக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுவதாக உறுதியளித்து விட்டு சென்றான்[5]. அதாவது, ஏதோ பொய் சொல்லி சென்றிருக்கிறான். அந்நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை அறிந்த அபிராமி, பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்[6].
மகளிர் போலீஸ் விசாரணை, உண்மை அறிதல்: தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் இடம் புகார் மனு அளித்தார். அதில் தஞ்சை மாதா கோட்டை வைரம் நகரைச் சேர்ந்த மத போதகரான ஸ்டான்லி பென்னி ராபர்ட் (27) என்பவரை தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறியிருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்தப்பெண்ணை அழைத்துக் கொண்டு 12-11-2019 இரவு அந்த மத போதகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த அவரின் பெற்றோர் ராபர்ட் வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளனர். அதாவது, விவரம் அறிந்து அவன் சென்று விட்டான் என்றாகிறது. இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். பின்னர் ராபர்ட்டின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணிற்கும் தங்கள் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பெண் பொய் சொல்கிறார் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என்பது, அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது: அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் மதபோதகர் ராபர்ட்டை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அபிராமியை ராபர்ட் காதலித்ததும் அந்தப் பெண்ணுடன் அவர் சுற்றி திரிவதை பலமுறை பார்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது பெற்றோரிடம் ராபர்ட் எங்கு உள்ளார்? அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மறுத்து உள்ளனர். இதனை அடுத்து இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த தஞ்சை ஆற்றுப்பாலம் மானம்புச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரித்தபோது மதபோதகர் ராபர்ட்ஸ்க்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தது தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இதனால் இன்று நடைபெற இருந்த மதபோதகர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது[7].
30 பெண்களுடன்தஞ்சை 27 வயதுபாதிரியார்கேரளாவைமிஞ்சும்அதிர்ச்சிசம்பவம்: தமிழ்நாடு நியூஸ்24, “30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது[8]. பாதிக்கப் பட்ட பெண்ணிடம் மட்டுமல்லாது, சர்ச்சிற்கு வரும் மற்ற பெண்களிடமும், இதே மாதிரியான ஆசை வார்த்தைகள் கூறியுள்ளான் என்று தெரிகிறது. பாதிரிக்கு மொத்தம் 30 பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது[9]. அவனது செல்போன் கால்களை ஆராய்ந்தால், அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள். இப்படி ஏதோ “என்று தெரிகிறது,” “அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள்,” போன்ற செய்திவெளியீடு, ஏதோ உசுப்பி விடும் போக்கில் உள்ளது. உண்மையில் விசாரித்து செய்தி வெளீட வேண்டும். கேரளாவில் 5 பாதிரிகள் குடும்ப பெண்ணை ஏமாற்றி நாசம் செய்த அவலத்தில் இருந்தே மீலாத நிலையில் தமிழகத்தில் தஞ்சையில் பாதிரியின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இது குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்துமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்[10]. இத்தகைய விவகாரங்களை, தொடர்ந்து, கிருத்துவ மேலிடங்கள் அமுக்கியே வருகின்றன.
[1] மாலைமலர், காதலித்தபெண்ணைகர்ப்பமாக்கிவிட்டுவேறொருபெண்ணுடன்நடக்கவிருந்தமதபோதகரின்திருமணம்தடுத்துநிறுத்தம், பதிவு: நவம்பர் 13, 2019 10:29 IST; மாற்றம்: நவம்பர் 13, 2019 10:42 IST
ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை கற்பழிக்கத் துணிந்தான்.
பாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில்கிருத்துவசெக்ஸ்குற்றங்கள்அதிகமாகிவருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐந்தல்ல, எட்டுபாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனதுமனைவியைமிரட்டிபலாத்காரம்செய்ததுஐந்துபாதிரியார்கள்எனகருதினேன். ஆனால்மேலும்மூன்றுபாதிரியார்கள்மிரட்டிபலாத்காரம்செய்ததுஇப்போதுதான்தெரியவந்தது[6]. இ–மெயில்பரிமாற்றத்தைவைத்துபார்க்கும்போதுஎட்டுபாதிரிகளின்தொடர்புகள்இருப்பதுதெரியவருகிறது[7]…..இதற்கானஅனைத்துஆதாரங்களும்என்னிடம்உள்ளன. பாதிரியார்கள்மீதுநடவடிக்கைஎடுக்காவிட்டால்தகுந்தஇடத்தில்புகார்செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்ச்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.
உணர்ச்சியற்றஆங்கிலஊடகங்களின்செய்திவெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”!] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்!
செக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ? கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.
[7] Business Stanard, Man alleges priests sexually abused wife; church orders probe, Press Trust of India | Kottayam (Ker), Last Updated at June 26, 2018 18:15 IST
Although the man, who came to know about the alleged sexual abuse and blackmailing by priests after checking his wife’s e-mail account, has levelled allegations against eight priests, he has reportedly named only five priests as the role of three others in the incident could not be established.