Archive for the ‘கிரக்கம்’ Category

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சி-தலித் என்றும் கூறி மிரட்டியது (2)

நவம்பர் 7, 2017

எட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சிதலித் என்றும் கூறி மிரட்டியது (2)

Pastor Didde Ebenezer,victim- modus operandi-TV9 video

2015ல் ஜாமீனில் வெளியே வந்து, தனது செக்ஸ்குற்றங்களை தொடர்ந்து செய்தது: தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார். இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். அதாவது, இத்தகைய கற்பழிப்புகளுக்கு, அத்தகைய சட்டங்களும் துர்பிரயோகம் சேய்யப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளது போல காட்டிக் கொண்டதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்,’’ என்றார். மேற்கு கோதாவரி, எஸ்.பி எம். ரவி பிரகாஷ், அந்த பாஸ்டரை உடனடியாக கைது செய்து, அடைத்து வைக்கப் பட்டுள்ள நான்கு பெண்களை விடுவிக்க ஆணையிட்டார். இதனை, ராஜகுமாரி, மக்களிடம் தெரிவித்தார்[1]. உதவி கலெக்டரும் சம்பந்தப் பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்[2].

Pastor Didde Ebenezer, victim complains - many-TV9 video

மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொதுகூட்டத்தில் வெளிவந்த உண்மைகள்: நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொது விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர், உறவினர் வந்து, போலீஸ், அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில், எபனேசர் செய்த செக்ஸ்-குற்றங்களை வெளிப்படையாக கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என்று முறையிட்டனர். ஒரு தாய், தனது மகளின் வாழ்க்கை சீர்ழிந்தது என்று அழுது கொண்டே, ராஜகுமாரியின் கால்களில் விழுந்து முறையிட்டது, காண்பவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது[3]. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், எப்படி தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றினான் என்பதை விவரித்து, புகைப்படங்களையும் காட்டினாள்[4]. அதே போல இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், மற்றும் அவளது தாய், தமது சோகக் கதையினை தெரிவித்தனர்[5]. அவர்களது கூறிய விவரங்களிலிருந்து, அவன் எப்படி, மதபோதனை, பிரச்சாரம், பணம், அதிகாரம், ஆசைக் காட்டுதல், போன்றவற்றால் பெண்களை ஏமாற்றி, தனது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டுள்ளான் என்று தெரிந்தது.

Edde Ebenezer- woman-explains-how-she was cheated-3

இரட்டை வேடம் போட்ட செக்ஸ் குற்றவாளி: இதற்குள், அந்த பாஸ்டருக்கு ஆதரவாக உள்ளவர்கள், அவன் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்படுகிறது, அவன் குற்றமற்றவன் என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருந்தது. அதாவது, அந்நிலையில் கூட தனது பணபலத்தினால், ஆட்களை வைத்து, அத்தகைய அழுத்தத்தை உண்டாக்குவதை அறிந்து கொள்ளலாம். ஆனால், தனது கிருத்துவ மண்டலம் மற்றுமல்லாது, அடுத்தவர் மண்டலத்து பெண்களையும் அவ்வாறு செக்ஸ்-புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளான் என்று “ஏசியா நெட்” என்ற ஊடகம் கூறுகிறது[6]. அதாவது, இதனால், கிருத்துவர்களுக்குள்ளேயே பிரசினை வரும் போன்றுள்ள நிலையை எடுத்துக் காட்டுகிறது[7]. இந்த செக்ஸ்-குற்றவாளி பாஸ்டர், தான் HIV/AIDS போன்றவற்றிற்கு பாடு படுவதாக இணைதளத்தில் பிரலடனப் படுத்திக் கொண்டிருக்கிறான்[8].

Pastor Didde Ebenezer, Tadepalligudem mandal- Nirodh recovered

நிரோத் உபயோகப் படுத்தியது அதனால் போலும். இதையும் கடவுள் ஸொல்லிக் கொடுத்தாரா அல்லது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரா என்று தெரியவில்லை. பல பெண்களைக் கற்பழித்து, வரும் இவன் இத்தகைய பிரச்சாரத்தையும் செய்து வந்தது, தமாசாகத்தான் இருக்கிறது.

Nude worship allowed in Christianity - Mail online

கிருத்துவத்தில் ஏன் நிர்வாண பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது?: ஆகவே, இந்த 21ம் நூற்றாண்டிலும், “நிர்வாண பிரார்த்தனை” எல்லாம், எப்படி கிருத்துவத்தில் அனுமதிக்கப் படுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். பாஸ்டர் ஆலன் பார்கர் [Pastor Allen Parker, the leader of White Tail Chapel in the town of Southampton, Virginia, USA], “முற்றும் துறந்த நிலை வேண்டுமானால், உடைகளையும் துறக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்[9]. கிருதுவைறையியலின் படி பார்த்தால் கூட, ஏசு நிர்வாணமாகத்தான் பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், அப்படியே நிர்வாணமாகத்தான் உயிர்த்தெழுந்து மேலே சென்றார், ஆகவே கடவுள் தவறு செய்தார் என்று சொல்லமுடியாது, என்று மேலும் விளக்கினார்[10]. ஆதாம்-ஏவாள் நிர்வாணமாகத்தான் இருந்தனர், தங்களுடைய நிர்வாணத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை, ஆனால், பிறகு உடை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக ராபர்ட் மற்றும் கட்டே என்பவர்கள் சொன்னதும் கவனிக்கத்தக்கது, “சமீபத்தில் திருமணமான சில தம்பதியர் இந்த நிர்வாண பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினரும் உடைகளை விட ஊக்குவிக்கிறோம். இந்த தம்பதியர், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்புகின்றனர், கடவுளின் வர்த்தையை பேச விரும்புகின்றனர்”, [Several couples have recently been married in fully nude services, in which all members of both families are encouraged to shed their clothing before the couple take their vows. Robert and Katie Church were one couple to have a naked wedding at the White Tail Chapel, with Mr Church saying attendees were far more interested in ‘hearing the word of God and speaking the word of God’ than analysing the naked bodies on display] என்று விளக்கம் கொடுத்தனர். ஆகவே, இவனும் அதே நிர்வாணப் பாதையினை பின்பற்றி, சுகமாக பெண்களை கற்பழித்து வருகிறான் போலும்!

Nude worship allowed in Christianity - theology

எட்டி எபனேசர். தான் எஸ்.சி / தலித் என்ற ஆயுதத்தையும் பிரயோகித்தது: முன்பு, கர்நாடகாவில், சிமோகா மாவட்டத்தில், பல்லாண்டுகளாக “நிர்வாண வழிபாட்டை” பெண்கள் செய்து வந்தபோது, 1984ல் அதற்கு தடை விதிக்கப் பட்டது[11]. சொராப் தாலுக்கா, சந்திரகுட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு, வருடா வருடம், மார்ச் 9 முதல் 14 வரையிலான காலத்தில், ஜாத்ரா செல்வது வழக்கம். அப்பொழுது, பெண்கள் நிர்வாணமாக பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. ஊடகங்களில் அதிக அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது[12]. ஆனால், இந்த “நிர்வாண பிரார்த்தனை” பற்றி எந்த ஊடகமோ, செக்யூலரிஸ / பெண்ணிய எழுத்தாளரோ புகைப்படம் எடுத்து, நாளிதழில் / சஞ்சிகையில் புகைப் படம் போட்டு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, எதையும் எழுதவில்லை. அந்த ஜாத்ராவில் பங்கு கொண்டவர்களும், எஸ்.சி / தலித்துகள் தாம். இதில் – “நிர்வாண பிரார்த்தனை”யில் பங்கு கொண்டவர்கள் அல்லது பாஸ்டரால் மானபங்கம் படுத்தப் பட்டவர்களும் எஸ்.சி / தலித்துகள் தாம். அவனே ஒரு எஸ்.சி / தலித் என்பதால் தான், அதை வைத்தும், மிரட்டினான் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது, “கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன்ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார்”.

© வேதபிரகாஷ்

07-11-2017

Pastor Didde Ebenezer,makes publicity himself.

[1] TheNewsMinute, Women tell tales of abuse by village church pastor to Andhra women’’s commission chief, Thursday, October 19, 2017. 09.16 IST.

[2] http://www.thenewsminute.com/article/women-tell-tales-abuse-village-church-pastor-andhra-womens-commission-chief-70211

[3] https://www.youtube.com/watch?v=5p3ckYfGaXE

 

[4] https://www.youtube.com/watch?v=vCIHBMqY2zw

[5] https://www.youtube.com/watch?v=lbIgpYe75PQ

[6] Asianet-newsable, Andhra pastor sexually abused women in the name of church, By Team Asianet Newsable | 01:47 PM October 19, 2017.

[7] http://newsable.asianetnews.com/andhra-pradesh/andhra-pastor-sexually-abused-women-in-the-name-of-evil-church

[8] https://in.linkedin.com/in/pastor-d-ebenezer-didde-5796a414

[9] Mail.online, ‘And they were naked – and not ashamed’: Church allows nude worship, by John Hall, Published: 09:34 BST, 11 Feb.2014, updated: 13.46 BST, March 6, 2016.

[10]  http://www.dailymail.co.uk/news/article-2556548/And-naked-not-ashamed-Church-allows-nude-worship.html

[11] The Hindu,  Nude worship banned, By Our Special Correspondent, Wednesday, Mar 05, 2003

SHIMOGA March 4. The Deputy Commissioner and District Magistrate, Tushar Girinath, has imposed ban orders in connection with the annual jatra of Renukamba at Chandragutti in Sorab taluk. The jatra is scheduled to be held from March 9 to 14. The ban has been imposed to prevent “bettale seve” (worship in the nude). The order bans the congregation of people during the jatra within a radius of 5 km. of the temple under the provisions of the Section 35 of the Karnataka Police Act. Mr. Girinath has allowed the performance of rites during the jatra. He has passed an order banning sale of liquor during the jatra time in a radius of 5 km. of the temple. The Chandragutti jatra was marred in 1986 when enthusiastic activists tried to stop the devotees from worshipping in the nude. The angry devotees retaliated. In the melee, volunteers and police personnel were attacked and paraded naked.

[12] http://www.thehindu.com/2003/03/05/stories/2003030501410400.htm

கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்?

ஒக்ரோபர் 11, 2013

கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்?

வருடம் போறும், மாதம்-மாதம் இவ்வாறு கிறிஸ்தவ மதபோதர்கள் பலவித குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது[1]. பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தல், கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், உடலுறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்கிறேன் என்று அனுபவித்து விட்டு ஏமாற்றுதல்[2], ஏன் கற்பழித்தல் என்றெல்லாம் ஈடுபட்டுள்ளனர். 2012ல் பிரபலமான ஏஞ்சல் டிவியின் வின்சென்ட் செல்வக்குமார் மீது பாலியல் புகார்கள் செய்யப்பட்டன[3]. சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடக்கும் பாலியல் வன்மங்களைப் பற்றி இங்கே படிக்கவும்[4].

பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை[5]: சிறுவர்சிறுமியர்களைவன்புணர்தல், ஓரினபுணர்ச்சிமுதலியன[6], நள்ளிரவில் பாதிரியுடன் இருந்த கல்லூரி மாணவி[7], பி.பி. ஜாப்[8] போன்றோர்களின் காம லீலைகள்[9], உறவு கொள்ள மறுத்தவளை கொலை செய்த பாதிரி[10], பலதார[11] திருமணங்கள்[12], செய்து வைத்த பாஸ்டர்கள்[13] என்று நீண்டு கொண்டே போகின்றன.

பணம் கேட்டு மிரட்டுகிறார்: மதபோதகர் மீது மனைவி புகார்[14] (அக்டோபர் 2013): வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மதபோதகர் மீது, அவர் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர், பியூலா மெர்சி பிரீத்தி, 25. இவர், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் விவரம்: அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த, ஜெசுரன் ராய் நைட். சென்னை “சர்ச் ஆப் கிரைஸ்டில்’, மதபோதகராக உள்ளார். கடந்த, 2007ல், எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 18 சவரன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும், எங்கள் தரப்பில் இருந்து வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. குழந்தை இல்லாததால், கடந்த, 2009ல், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தோம்.

பல பெண்களுடன் தொடர்பு: பின், என் கணவருக்கு, செல்வியா என்ற பெண் உட்பட, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதை நான் கண்டித்தது முதல், என்னை கொடுமைப்படுத்த துவங்கினார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள், அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில், மேலும், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, என்னை அடித்து கொடுமைப்படுத்தி, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். என்னை கொடுமைப்படுத்திய கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது[15].

முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி விட்டார்: கிறிஸ்தவ மதபோதகர் மீது  2-வது மனைவி புகார்[16](செப்டம்பர் 2012) : வளசரவாக்கம் சாஸ்திரி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் கிறிஸ்தவ மத போதகர் ஒருவருக்கும் 9.2.96-ல் மதுரையில் திருமணம் நடந்தது. முதலில் சென்னையில் அவர் நடத்தி வந்த இல்லத்தில் தங்கி குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாக கூறி என்னையும் குழந்தைகளையும் லாட்ஜில் தங்க வைத்தார்.

ஏற்கெனவே திருமணமானர், பல பெண்களுடன் தொடர்பு: அதன் பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் திலகவதி என்ற மனைவியும், குழந்தையும் இருப்பதும் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதை தட்டிக்கேட்ட என்னை அடித்து துன்புறுத்தினார். தனி அறையில் பூட்டி வைத்தார். 9 வருடமாக சைக்கோ போல் நடந்து கொண்டார். அவர் என் பெயரில் கூட்டாக சொத்துக்களும் பல நிறுவனத்தில் பங்குதாரராகவும் சேர்த்துள்ளார். இந்த சொத்துக்களை அடைய அவர் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்[17]. ஆட்களை வைத்தும் மிரட்டுகிறார். அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டேன். எனக்கு பாதுகாப்பு வழங்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்[18].

இந்தியா முழுவதும் இவர்களின் தொடரும் லீலைகள்: தமிழகத்தில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களில் கிறிஸ்தவ போதகர்கள் இப்படுத்ட்ர்ஹான் நடந்து கொண்டு வருகின்றனர்.  ஆகஸ்ட் 2011ல் சந்தனராஜு என்ற பாஸ்டரை, இதே காரணங்களுக்காகக் கைது செய்யப் பட்டான்.

Dowry harassment: pastor held[19]: A pastor of a Jalahalli church, who had been absconding after his wife filed a dowry harassment complaint with the police, was arrested on Saturday evening. Police arrested K. Shantaraju (45) of the Bethel Church and Bethel Student Centre in Siddharthanagar, near Jalahalli Cross.Priyanka, his wife, had filed charges of harassment and criminal intimidation against him at the Gangammagudi Police Station. She had also accused her husband of sexually exploiting young girls of his parish and that he and his family had threatened her into silence.Meanwhile, police said as no girl had come forward with a complaint against Shantaraju, they were not investigating that angle[20].

புகார், கைது என்ற நிலையோடு செய்திகள் நின்று விடுகின்றன. படித்தவர்களும் மறந்து விடுகின்றனர். ஆனால், பிறகு என்னவாயிற்று, பாதிக்கப் பட்ட பெண்களின், சிறூமிகளின் கதி என்ன என்பவற்றைப் பற்றி ஊடகங்கள் கவலைப்படுவதாக இல்லை.

© வேதபிரகாஷ்

11-10-2013


[14] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2013,23:49 IST

[16] மாலைமலர், பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 24, 2012, 4:03 PM IST