மதவெறி பிடித்த ஜான் பிரிட்டோ இந்து படங்களை எரித்ததும், கைதானதும், ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதும்!
ஓசூரைச் சுற்றி சர்ச்சுகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருவது: கடந்த 25 ஆண்டுகளில் ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சர்ச்சுகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகின்றன. கூகுள் வரைபடத்தில் சர்ச் என்று தேடிப் பார்த்தால், புற்றீசல் போன்று பல சர்ச்சைகள் தென்படுவது திகைப்பாக இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் மற்றும் 60 வழிபாட்டு ஸ்தலங்களையும் எண்ணிக்கை விகிதம் வைத்துப் பார்த்தால், சம்பந்தமே இல்லாமல் அப்பகுதியில் ஏன் இத்தனை சர்ச்சுகள் எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. எல்லோரையும் மதம் மாற்றி அவர்கள் சாதிக்கப் போவது என்ன? மதமாற்றம் மட்டுமல்லாது மற்ற ஒவ்வாத காரியங்களுக்காக இவர்கள் இங்கு கூடியுள்ளனரோ என்ற சந்தேகமும் எழுகின்றது. இங்கிருக்கும் சீதோஷ்ண நிலை ணாமெரிக்க-ஐரோப்பியர்களுக்கு உகந்ததாக இருக்கின்றது. இதனால் ஓசூரில் செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழிற்சாலைகளில் இருக்கும் பல அமெரிக்க ஐரோப்பியர்களுக்கு வசதியாக இருந்து வருகிறது. குறிப்பாக தள்ளிக்கு அருகில், “லிட்டில் இங்கிலாந்து,” அதாவது சிறிய இங்கிலாந்து என்ற பகுதியே உள்ளது. இவர்க:உக்கும், தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இருக்கின்ற சாதாரண உறவு மட்டுமில்லாது மத ரீதியிலான மற்ற சம்பந்தம் தொடர்புகள் என்னவென்று அலச வேண்டியுள்ளது
பென்னி ஹின், ரோனால்ட் வாட்ஸ் / ரோன் வாட்ஸ் – ஓசூர் தொடர்புகள்[1]: அமெரிக்கக் கிருத்துவ மிஷனரிகளின் கொட்டம் தாங்கமுடியவில்லை. ஹோசூரில் “செவன்ந்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்” என்ற மிஷனரியின் அனைத்துல தலைமையகம் உள்ளது. இங்குஅவர்கள் செய்யும் வேலைகள் ரகசியமாகவே உள்ளன. முதலில் இந்த பிரிவைச் சேர்ந்த சாமுவேல் ராஜசேகர ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக்கப் பட்டார். பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் கவர்னரோ பென்னி ஹின் (Benny Hinn) என்ற கிருத்துவ மதமாற்றுபரின் நிகழ்ச்சியை பங்களூரில் நடத்த அனுமதித்தார். தமிழகத்திலும் சுனாமியை சாக்காக வைத்துக் கொண்டு கோடிகளை அள்ளினர். ஒரு குறிப்பிட்ட வழக்கில் சுனாமி வீடுகளை திறன்படக் கட்டித்தராமல் ஏமாற்றினர் என்று சென்னை நீதிமன்றமே நன்றாகத் திட்டியது.இந்நிலையில்தான் ரோனால்ட் வாட்ஸ் / ரோன் வாட்ஸ் மற்றும் அவரது மனைவி டி ராபர்ட் டோரதி / டோரதி ஏடன் வாட்ஸ் மதம் மாற்றம், குழந்தையகம், மற்றைய விஷயங்களில் மாட்டிக் கொண்டனர். சுற்றுலா விசாவில் வந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு நன்றாக மாட்டிக் கொண்டதால், நாடு கடத்தப் பட்டனர். ஆனால், உடனடியாக டில்லிக்குச் சென்று, சோனியா மைனோவைப் பார்த்து, தாமாகவே நாட்டை விட்டுச் செல்வது மாதிரி சென்றுவிட்டனர்.ஆனால், அவர்களுடைய கூட்டாளிகள் அவ்வேளையை விடுவதாக இல்லை என்பது சமீபத்தை குழந்தைக் கடத்தல் முதலிய நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.
சமூக வளைதளத்தில் விவகாரம் வெளிப் பட்டதால் மாட்டிக் கொண்ட பாதிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தேகோஸ்தே திருச்சபை இயங்கி வருகிறது[2]. இங்கு மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ (53) மதபோதகராக உள்ளார்[3]. பெயருக்கு ஏற்றப் படி மதவெறி பிடித்தவனாக இருந்திருக்கிறான் போலும். கடந்த நவம்பர்.2ல் திருச்சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஹிந்து கடவுளின் படங்களை எரித்துள்ளான்[4]. அதாவது, அவனது வக்கிரம் அந்த அளவுக்கு, உச்சிக்கு ஏறியது போலும். சகிப்புத் தன்மை பேசும் நாட்டி, இவனது, சகிப்புத் தன்மையற்ற வெறி இவ்வாறு செய்யத் தூண்டியுள்ளது. கடவுளின் அனுக்கிரகம் என்று எரித்தான் போலும். இது தொடர்பான ‘வீடியோ’ மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது[5]. இதை பார்த்த எஸ்.குருபட்டி பகுதி ஹிந்து முன்னணி செயலர் மாதேஷ், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்தார்[6].
ஜான் பிரிட்டோ மதவெறியோடு படங்களை எரித்தது: தேன்கனிக்கோட்டை எனக்கும் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துராஜ் என்பவர் கடந்த ஆண்டு அதாவது 2018 இல் கிறிஸ்துவராக மதம் வழங்கினார், அதாவது மாற்றப் பட்டார். சர்ச்சுக்கு சென்று வரும் நிலையில், பாதிரியார், “வீட்டில் இன்னும் இந்து கடவுளர்கள் படங்களை வைத்திருக்கிறாயா, பூஜிக்கிறாயா?” என்று கேள்விகளை எழுப்பினார். இதனால் முத்துராஜ் தனது வீட்டில் இருக்கும் இந்து கடவுள்களின் படங்களை எல்லாம் ஜான் பீட்டரிடம் வந்து கொடுத்துள்ளான், மதவெறி பிடித்த ஜான் பிரிட்டோ, பிரேம்களை கழட்டி, எல்லா படங்களையும் / போட்டோகளையும் எடுத்துள்ளான். பிறகு அவற்றை எரித்துள்ளான். இதை யாரோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளனர் இதை பார்த்தவர்கள், இந்து அமைப்புகளிடம் சென்று விவகாரத்தை தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகி மாதேஷ், செங்கோட்டை டி.எஸ்.பியிடம் புகார் அளித்தார்[7]. இதனால் அங்கு இருக்கும் சங்கீதா, டிஎஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்[8]. போலீஸார் அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரித்ததில், இந்து படங்களை எரித்ததை ஒப்புக் கொண்டுள்ளான்[9]. அந்த பாதிரி. இதையடுத்து பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத போதகர் ஜான் பிரிட்டோவை கைது செய்தனர்[10]. ஒசூர் அருகே இந்து கடவுள்களின் உருவ படங்களை தீயிட்டு எரித்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தி இவ்வாறு சுருக்கமாகத் தான் இருக்கிறது[11]. ஆங்கிலத்தில் “தி இந்து” மட்டும், கோயம்புத்தூர் பதிப்பில், சிறியதாக வெளியிட்டுள்ளது[12].
இரட்டை வேடம் போடும் கிருத்துவர்கள்: பென்டகோஸ்ட் கிருத்துவனைப் பொறுத்தவரைக்கும், உருவ வழிபாட்டை எதிர்க்கும் விசுவாசி, அதனால் உருவங்களை எரித்தேன், என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். இதனால் அவரன் கர்த்தருடைய சந்தோசத்திப் பெற்று, உடனடியாக சொர்க்கத்திற்குச் சென்று தன் அந்த இடத்தை அடையலாம் என்று கூட கனவு கண்டிருக்கலாம். ஆனால், இந்தியா போன்ற செக்யூலரிஸ நாட்டில் இத்தகைய மத வெறி கொண்ட கிருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் வியப்பாக உள்ளது. மேலும் நாகரீகத்தில் மற்ற எல்லாவற்றிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் கிருத்துவர்கள். இத்தகைய மிக மோசமான மனப்பாங்குடன் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு வருவது மிகவும் கேவலமானதாகும். மேலும், அவர்களே, பல உருவங்களை வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள், இந்து கடவுளர் போன்றே, மாற்றி வருகிறார்கள். ஆகவே, இவர்களது இரட்டை வேடமும், அசிங்கமானதே ஆகும்.
© வேதபிரகாஷ்
07-11-2019
[1] வேதபிரகாஷ், சோனியா மெய்னோவின் கிருத்துவத் தொடர்புகள், மே.25 2010. https://christianityindia.wordpress.com/2010/05/25/sonia-maino-christian-connections/
[2] தினமலர், ஹிந்து கடவுளின் படங்களை எரித்த மதபோதகர், Added : நவ 07, 2019 00:10.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2405756
[3] தமிழ்.வெப்.துனியா, இந்து கடவுள் படங்களை எரித்து கழிவறையில் போட்ட மதபோதகர் கைது, Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (09:37 IST)
[4] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/christian-priest-arrested-at-krishnagiri-119110700013_1.html
[5] பத்திரிக்கை.காம், இந்துக்கடவுள் படங்கள் எரிப்பு: கிருஷ்ணகிரி கிறிஸ்தவ மதபோதகர் கைது!, Posted on November 7, 2019 at 1:31 pm by A.T.S Pandian.
[6] https://www.patrikai.com/krishnagiri-christian-missionary-arrested-who-burned-hindu-god-photos/
[7] தினசரி. ஹிந்து கடவுள்களின் படங்களை எரித்த பாதிரியார் கைது, 07-11-2019, காலை.11.15
[8] https://dhinasari.com/latest-news/115800-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E.html
[9] தினத்தந்தி, இந்து கடவுள்களின் படங்களை எரித்த பாதிரியார் கைது, பதிவு : நவம்பர் 07, 2019, 10:16 AM.
[10] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/07101626/1057255/Priest-Arrested-hosur.vpf
[11] The Hindu, Church priest arrested for burning images of Hindu deities, SPECIAL CORRESPONDENTNOVEMBER 07, 2019 00:17 IST’ UPDATED: NOVEMBER 07, 2019 09:44 IST.
[12] https://www.thehindu.com/news/cities/Coimbatore/church-priest-arrested/article29903024.ece