Archive for the ‘அந்தோணியார் சிலை’ Category

என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்!

ஜூலை 3, 2011

என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்

 

ஜெயிலிலிருந்து மருத்துவமனைக்குச் சென்ற சாத்வி பிரக்யா தாகூரும், விடுதலை ஆகி வெளியே வந்த மரியா சூசைராஜும்: காலை 11.35 அளவில், ஊடகக்காரர்கள் மற்றவர்கள் பைகுல்லா ஜெயிலின் வாசலில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று கதவுகள் திறந்து ஒரு ஆம்புலன்ஸ் வெளிவந்ததும், ஏதோ ஒரு “கொள்ளைக்காரன்” வெளியே வரப்போகிறான் என்று பார்த்தனர். ஆனால், சாத்வி பிரக்யா தாகூர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப் பட்டார். பிறகு தான் வெள்ளை நிற காரில் வந்த மரியாவின் சகோதரர் கதவருகில் சென்றபோது, மரியா இனிமேல் தான் வருவார் என்று தெரிய வந்தது.

 

சொகுசு காரில் சர்ச்சிற்குச் சென்ற மரியா: மரியா ஆர்தர் ரோடில் இருக்கும் ஜெயிலிலிருந்து வெளி வந்ததும், போலீஸார் ராஜ உபசாரத்துடன் அதாவது, ஏதோ ஒரு பெரிய விஐபி போன்று அனுப்பி வைத்தனர். வெளியே தயாராக நின்று கொண்டிருந்த ஹோண்டா-சிடி காரில் ஏறி, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். பந்த்ரா-வோர்லி கடற்கரை சாலை வழியாக மாஹியில் இருக்கும் செயின்ட் மைக்கேல் சர்ச்சிற்கு, தனது சகோதரியுடன் சென்றார்[1]. மூன்று வருடங்களாக தான் எந்த சர்ச்சிற்கும் செல்லவில்லை என்று கூறினார். சர்ச்சிற்குள் சென்றதும், உட்கார்ந்து கொண்டார். அருகில் சகோதரரும் இருந்தார். கைகளைக் கூப்பிக் கொண்டு பிரார்த்தனை செய்தார். சுமார் அரைமணி நேரம் அங்கிருந்தபோது, பிரார்த்தனை செய்தபோய்து அழுத நிலையில் இருந்தார்[2]. கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொண்டே இருந்தார். குற்ற உணர்வுடன் இருப்பது முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. இதை ஊடகக்காரர்களும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

 

பேட்டியில் சரீஃப் ‌ஷேய்க், மரியாவின் வக்கீல் கூறியது[3]: “நீரஜின் உடல் 300 துண்டுகள் வெட்டப்பட்டது என்பதெல்லாம் உண்மையில்லை…புலன் விசாரணை செய்த ராவ் ரானே என்பவர் எடுத்த புகைப்படம் இது (ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்). இதில் உடல் 300 துண்டுகளாக இருப்பதைப் பார்க்கிறீர்களா? விலா எலும்புகள், மண்டை ஓடு எல்லாமே ஒழுங்காக இருக்கின்றன[4]. 300 துண்டுகளாக உடல் வெட்டியிருந்தால், எலும்புக்கூடு இவ்வாறு இருக்குமா? போலீஸார் அவ்வாறு பார்த்திருக்க முடியுமா? ஆகவே போலீஸார் அத்தகைய தவறான விஷயத்தை ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள். எங்களுக்கு தீர்ப்பின் நகல் ஜூலை 7ம் தேதி கிடைத்தவுடன், நாங்கள் மேல் முறையீட்டிற்குச் செல்வோம்”, என்று சரீஃப் ஷேய்க் என்ற மரியாவின் வக்கீல் கூறினார். அதற்குப் பிறகு, மரியாக கீழ்கண்டவாறு பேட்டியளித்தார்.

 

மரியாவின் பேட்டியில் சொன்னது[5]: வழக்குப் பற்றிய விவரங்களைக் கேட்ட வினாக்களுக்கு பதில் சொல்ல மறுத்து, “நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் நான் குற்றமற்றவள். என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும்[6] நான் கடந்த காலத்தை பின்னால் விட்டுவிட விரும்புகிறேன். எனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எதையும் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை[7]”, என்றார்.

 

ஜெரோமுடன் எந்த உறவும் இல்லை, பேசியதே இல்லை[8]: நீரஜ் மற்றும் ஜேரோம் இவர்களுடனான உறவுகளைப் பற்றிக் கேட்டபோது, நீரஜுடனான உறவை முக்கியத்துவப் படுத்தாமல் மழுப்பினார். “நான் அவருடன் (ஜெரோமுடன்) எதையும் பேசவில்லை………”, மறுபடியும் கேட்டபோது, “அவருடன் (ஜெரோமுடன்) எனக்கு நட்பு கூட இல்லை………”, என்று சொன்னது வியப்பாகத்தான் இருந்தது.

 

ஊடகக்காரர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மழுப்பலக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தபோது, இதுவரை நான் இத்தனை பேர்களை எதிர்கொண்டதில்லை….”, என்றெல்லாம் சொல்லி,  “நான் தண்டனைக்குட்பட்டுள்ளேன். என்மீது ஏற்பட்டுள்ள நான் சிறையில் மூன்று வருடம் 41 நாட்கள் இருந்தேன். சிறையில் இருந்ததால் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் கடவுளுக்ககருகில் சென்றுள்ளேன், கடவுளை நம்புகிறேன்[9]. களங்கத்தை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லை. என்னுடைய குடும்பத்தார் என்ன செய்வது என்று தீர்மானிப்பார்கள். எனக்கு நான் கடவுளுக்கு அருகில் இருந்ததாக உணர்ந்தேன். கடவுளை உணர்ந்தேன், அவர் தான் என்னை வெளியே அழைத்து வந்துள்ளார்.

சித்திரங்கள் வரைந்து கொண்டிருந்தேன், பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்………”. என்றெல்லாம் சொன்னார்.

 

எங்களுடைய மகனின் கொலையை தமாஷா ஆக்கிவிடாதீர்கள்: எங்களுடைய மகனின் கொலைகயை தமாஷா ஆக்கிவிடாதீர்கள் என்று நீரஜின் தந்தை அமர்நாத் வருத்தத்துடன் தெரிவித்தார். “ஏதேதோ பேசுகிறார்கள். ஆனால், எங்களுடைய மகனின் பிணத்தைக் கூட போலீஸார் எங்களுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது தான் வெள்ளிக்கிழமை – 01-07-2011 அன்று கொடுப்பதாகக் கூறினார்கள்[10]. ஏற்கெனவே எரித்துவிட்டார்கள் என்றால் எப்படி பிணத்தைக் கொடுக்க முடியும்? நாங்கள் வாங்கமுடியாது என்று கூறிவிட்டோம்”. மரியா மற்றும் ஜெரோம் கொடுத்த ரூ. 1.5 லட்சங்களைப் பெற குரோவர் தம்பதியர் மறுத்துவிட்டனர்[11]. மே 2008ல் கொலை செய்யப்பட்ட பிணம் எப்படி இப்பொழுது கொடுக்க முடியும்? இதுவே முழு பொய் என்று நன்றகவே தெரிகிறது.

 

தர்கா-கோவில் செல்ல விரும்பிய மரியாவும் ஏசுவிடன் நெர்க்கமாகி விட்ட மரியாவும்[12]: மாஹிமில் உள்ள தர்கா மற்றும் சித்தி வினாயகர் கோவில் முதலிய இடங்களுக்கு செல்வதாக இருந்ததாம். ஆனால், பிறகு அவற்றை தவிர்த்து, நேராக சீக்கிரமாக வக்கீலைப் பார்க்க பந்த்ரா-குர்லா பாதையில் சென்று விட்டாராம்[13]. சரீஃப் ஷேய்க் அங்கு என்ன பேசலாம், கூடாது என்பது பற்றி விவாதித்தப் பிறகு, பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாம். அதனால்தான், சர்ச்சிற்குள் நுழையும் போதே, ஊடகக்காரர்கள் கேள்வி கேட்டபோது, மரியாவின் சகோதர், பிறகு இதற்கெல்லாம் பதில் சொல்லப்படும் என்று கூறி, மரியாவை அணைத்துக் கொண்டு சர்ச்சிற்குள் சென்றுவிட்டனர். ஆக மிகவும் தீர்மானித்து செயல்படுவதைக் காணலாம், இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் இவ்வாறு ராஜ மரியாதையுடன் நடத்தப் பட வேண்டும் என்று தெரியவில்லை. திடீரென்று, இப்பொழுது மதரீதியிலான பதில்கள், நியாயப்படுத்தப்படும் முறைகள் முதலியவற்றை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு பெண் இரு ஆண்களை காதலிப்பது, உறவு வைத்துக் கொள்வது ……………………முதலியவற்றை கிருத்துவம் ஆமோதிக்கிறதா, கர்த்தர் ஆதரிக்கிறாரா அல்லது ஏசு ஏற்றுக் கொள்கிறாரா என்று தெரியவில்லை. இப்பொழுது மரியா கர்த்தர் / ஏசுவின் அருகில் மிகவும் நெருக்கத்தில் இருப்பதால், ஒருவேளை, அவரே பதில் சொல்லக்கூடும்! குற்றவாளிகள் இப்படி தொடர்ந்து மதரீதியில் பேசுவது, தங்களை அவ்வாறு காட்டிக் கொள்வது, “எங்கள் கடவுள் எங்களுடன் இருக்கிறார்”, என்னுடைய கடவுளுக்கு நான் குற்றமற்றவள் என்று தெரியும், என்றெல்லாம் சொல்வது நீதித்துறையை பாதிக்கக் கூடும். மேலும், இது அரசியல் ஆக்கப்படும் படும்போது, சாதாரண மக்களும், இப்பிரச்சினையால் அவதிப்பட நேரிடலாம். ஏற்கெனவே, செக்யூலரிஸ இந்தியா, இஸ்லாம் அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பனவற்றால், அதிகமாகவே அவஸ்தைப் பட்டு, வருந்திவரும் வேளையில், இத்தகதைய கிருத்துவமத வாதங்கள் தேவையில்லை. அந்தந்த கடவுளின் நம்பிக்கை அவரவர்களுக்கு, இதனால் என் கடவுள் என்னை காப்பாற்றினார், உன் கடவுள் உன்னை காப்பாற்றவில்லை என்பது போலெல்லாம் பேசவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், பிறகு, உனது கடவுள் தான் அத்தகைய உறவு முறைகளை வைத்துக் கொள்ள சொன்னாரா, அவ்வாறு கொலை செய்யச் சொன்னாரா, குரூரமாக உடலை வெட்டச் சொன்னாரா…………….என்றெல்லம் கேள்விகள் எழுந்தால், நன்றக இருக்காது.

 

வேதபிரகாஷ்

03—07-2011


[5] டிவிக்களில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டவைகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

“All I know is that I am innocent. I have left my past behind. I haven’t realised what is happening. I have not digested the fact that I am convicted. That is a big stigma for me.” [7] http://www.hindustantimes.com/Maria-free-says-she-is-innocent/Article1-716664.aspx

[8] The 30-year-old refused to comment on her relationship with Grover, and played down the importance of her fiancee, Jerome, in her life. “I have not had a word with him…” She insisted that she shared “no friendship” with Jerome.

http://timesofindia.indiatimes.com/city/mumbai/I-have-left-my-past-behind-says-Maria-Susairaj/articleshow/9078189.cms

[9] “I have spent three years and 41 days in the jail. I should say I was blessed. I got close to God and believed in God, and (it is) He who has got me out today. I did a lot of paintings and prayer meets and lot of activities inside the jail,”….. http://www.telegraphindia.com/1110703/jsp/nation/story_14191089.jsp

[13] She was also scheduled a visit to the Mahim Dargah and Siddhivinayak temple, but decided against it and took the Western Express Highway to Thane in an attempt to shake off the media. Once the coast was clear, she quickly headed to her lawyer’s office at Bandra Kurla Express.

 

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

மே 19, 2010

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

வேதபிரகாஷ்

கிருத்துவர்களின் அபகரிப்பு திட்டம்: கிருத்துவர்கள் திட்ட்டமிட்டுத்தான் மலைகளை முழுங்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது. தமிழகம் மற்றுமல்லாது மற்ற மாநிலங்களிலும், இப்படி சின்னஞ்சிறிய மலைகள், குன்றுகளின் மீது சிலுவையை வைப்பது, வழிபடுவது, இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, சர்ச் கட்டிக்கொள்வது, பிறது அப்படியே அபகரித்துக் கொண்டு தமதாக்கிக்கொள்வது………………..என்ற வித்தை அமூல் படுத்துகின்றனர். திண்டிவனத்தில், அச்சரப்பாக்கம் அருகில் ஒரு மலைக்குன்றை அபகரித்து, அதை, ஒரு “அனைத்துலக கிருத்துவ சுற்றலா மையமாக” மாற்றியுள்ளது[1]. செஞ்சியில் அவர்களது அடாவடித்தனம் கோவில் நிலங்களை மோசடி செய்து கபளீகரம் செய்யும் அளவிற்கு வந்துள்ளது[2]. போதாக் குறைக்கு கோதண்டராம கோவிலே எங்களுக்கு சொந்தம்[3] என்று கிளம்பிவிட்டது கண்டும், யாரும் அதை கவனிக்காமல் இருப்பது, மோசடி கிருத்துவர்களுக்கு ஊக்கமளிப்பதாக தெரிகிறது. இது ஏதோ இந்து முன்னணி பிரச்சினைப் போல சாயம் பூசப்பட்டு[4] இந்துக்களை ஏமாற்ற கருணாநிதி அரசு எந்திரங்களைப் பயன்படுத்துவது தெரிகிறது.

கிருத்துவர்கள் கலட்டா, சாலை மறியல்[5]: செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அந்தோணியார் சிலைகள், போலீஸ் “பாதுகாப்புடன்” அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த கிறிஸ்தவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை உள்ளது. கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். இதே குன்றின் மறுபகுதியில், ஏப்., 14ம் தேதி இந்துக்கள் திடீரென பிள்ளையார் சிலை வைத்தனர். இதனால், சில நாட்களாக செஞ்சியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இதை பராமரித்து வருகின்றனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கிருத்துவர்களை அனுமதித்துவிட்டு இந்துக்களை அவமானப்படுத்துவது: நேற்று அதிகாலை 5 மணிக்கு செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார், குன்று அருகே குவிக்கப்பட்டனர். செஞ்சிக்கோட்டை முதுநிலை பராமரிப்பு அதிகாரி ஜெயகரன் தலைமையிலான கோட்டை ஊழியர்களும், கூலி தொழிலாளர்களும் குன்றின் மீதிருந்த பிள்ளையார், அமலோற்பவமேரி, அந்தோணியார் சிலைகளையும், மூன்று சிலுவைகளையும் அகற்றினர்.

ஒலிப்பெருக்கிகளில் கிருத்துவர்களின் “அபாய அறிப்பு”! கிறிஸ்தவ சிலைகள் அகற்றப்படுவதை அறிந்து, அருகில் இருந்த புனித மிக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களை திரட்ட, தொடர்ந்து அவசர மணி ஒலிக்கப்பட்டது. ஒலிபெருக்கியில் கிறிஸ்தவ தெய்வ சிலைகளை பாதுகாக்க உடனே தேவாலயத்திற்கு வர வேண்டும் என, அவசர அழைப்பு விடுத்தனர். இதெல்லாமே அவஎர்களது கபட நாடகத்தை காண்பிக்கிறது. இவர்களுக்கும் அந்த ஜீஹாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை. இன்று ஒலிப்பெருக்கிகளில் “அபாயம்” என்று கத்துபவர்கள், நாளைக்கு இந்தியாவிற்கு தொரோகம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? “இஸ்லாம் அபாயத்தில் உள்ளது” என்ற கூப்பாடு போடும் அந்த கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் என்ன மாறுபாடு?

கிருத்துவர்கள் சாலைகளில் கற்களைப் போட்டு மறியல்: இதனால் காலை 7.30 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே திரண்டனர். இவர்கள் சிலைகளை அகற்றும் இடத்திற்கு வேகமாக முன்னேறி வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் குழுவினர், சிலைகளை மட்டும் அகற்றிவிட்டு பீடத்தை இடிக்கும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.போலீசாரின் ஒருபகுதியினர் மட்டும் குன்றின் கீழே காவலுக்கு இருந்தனர். அங்கு வந்த கிறிஸ்தவர்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின், புனித மிக்கேல் தேவாலயம் எதிரில் சிங்கவரம் சாலையில் கற்களை போட்டு மறியல் செய்தனர். இத்தகைய அடாவடித் தனத்திற்கு யார் தையம் கொடுப்பது?

சாலைமறிப்பவர்களிடம் கொஞ்சி சல்லாபம் செய்யும் அதிகாரிகள்: அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சியாமளா, டி.எஸ்.பி., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படாமல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை விரட்டி அடித்தனர். பதட்டமான நிலை இருப்பதால் கோட்டை அருகே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் கெஞ்சல், பிறகு கைது என்பதெல்லாமே, அவர்கள் எந்த அளவிற்கு இடம் கொடடத்துள்ளனர், மற்றும் கிருத்துவர்கள் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி சட்டத்திற்கு எதிராக வேலை செய்கின்றன என்பதையும் காட்டுகிறது.

செஞ்சியில் இந்து கோவில்கள் சூறையாடப் படுதல்: செஞ்சி கோட்டையில் இந்து அமைப்பினர் அம்மன் சிலை வைக்க இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள பல கோவில்களில் சாமி சிலைகள் இல்லை. சாமி சிலைகள் உள்ள சில கோவில்களிலும் இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்த போது வழிபாடு இல்லாமல் இருந்ததால், அதே நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கட்ரமணர் கோவிலில், சாமி சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்குமாறு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.,வினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்துக்கள் என்றால் ரோந்து வருவார்களாம். கிருத்துவர்கள் என்றால் கொன்சுவார்களாம்: இந்நிலையில், செஞ்சி கோட்டை வளாகத்தில் ஒன்பது அம்மன் சிலைகளை, இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி கோட்டை, வெங்கட்ரமணர் கோவில் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார், கோட்டை வளாகத்தில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஏப்., 14ம் தேதி இரவு செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான குன்றின் மீது சிலர் திடீரென பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்துவர்களும், போலீஸாரும், அதிகார வர்க்கத்தினரும் சும்மா இருந்ததினால்தானே கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். அப்பொழுது ஏன் சட்டங்கள் செயல்படவில்லை?

2005 லிருந்து கிருத்துவர்களுக்கு உடந்தையாகி 2010ல் பிள்ளையார் வந்ததும் விழித்துக் கொள்கிறார்களா? கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கிருத்துவர்களுக்குத் துணைபானதுக் கண்டிக்கத் தக்கது: உடனடியாக நாத்திகம் பேசும் அரசு இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களுக்குப் புறம்பாக மலைகள், மலைக்குன்றுகள் மீது வைக்கப் பட்டுள்ள சிலுவைகள், கிருத்துவச் சிலைகள் முதலியவற்றை உடனடியாக அகற்றப் படவேண்டு. அத்தகைய மத வெறியர்கள், அவர்களை ஊக்குவிக்கும் திண்டிவனம், திருவண்ணாமலை, சி.எஸ்.ஐ அதிகார வர்க்கங்கள் முதலிவற்றோர் மீதும் இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

19-05-2010


[1] இதற்காக வேண்டுமென்றே அயல்நாட்டவர்களை பேருந்துகளில் அழைத்துவந்து, புதிய கதைகளை அளந்து, அவர்களிடமிருந்து பணத்தையும் பெறுகிகிறார்கள். குறைந்த காலத்தில், அவர்கள் அத்தகைய வேலையை செய்து முடித்துள்ளார்கள்.

[2] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை, பிப்ரவரி 08, 2010,00:00  IST,  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538

[3] தினமலர், கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில், பிப்ரவரி 03,2010,00:00  IST, http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6486

[4] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் , மார்ச் 18,2010,00:00  IST, http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17237

[5] தினமலர், செஞ்சிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைத்திருந்த சிலைகள் அகற்றத்தால் பதட்டம்: போலீஸ் குவிப்பு , மே 19,2010,00:00  IST, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18648

[6] தினமலர், செஞ்சி கோட்டை வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம், மே 15,2010,00:00  IST, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25067