ஜோசுவாவின் கற்பழிப்புகளும், பெண் பாவம் தொடர்ந்து இன்னொரு பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது! பாவம் தொடர்கிறது, ரத்தம் சிந்துகிறது!
நெல்லை அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்த சர்க்கிள் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த பண்டாரத்தின் மனைவி பூரணவள்ளி (55) [1]. 28-05-2017 அன்று சர்ச்சுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது[2], அப்பகுதியிலுள்ள பாலத்தின் அருகே வைத்து பைக்கில் வந்த மர்ம நபர் பூரணவள்ளியின் கழுத்தில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்[3]. அதாவது, அவள் கிருத்துவர் என்றாகிறது[4]. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூரணவள்ளி இறந்தார். தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் தாழையூத்து அருகேயுள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவநீதகிருஷ்ணன் (25) பூரணவள்ளியை கொலை செய்தது தெரியவந்தது[5]. இதையடுத்து அவரை கைது செய்தனர்[6] / சரணடைந்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன[7]. சரணடைந்த பிறகு கைது செய்தார்கள் போலும். இங்கு ஜோசுவாவுக்கும், பூரணவல்லிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி கூறப்படவில்லை. அவள் ஏன் இளம்பெண்களை ஜோசுவாவிடம் அழைத்துச் சென்றாள் என்பதும் விளக்கப்படவில்லை. கிருத்துவர்கள் எப்படி பண்டாரம், பூரணவல்லி என்றெல்லாம் பெயர்களை வைத்திருக்கின்றனர், ஊடகங்கள் அவர்களை கிருத்துவர்கள் என்று குறிப்பிடாமல் இருக்கின்றனர் என்றும் புரியவில்லை. கடந்த அக்டோபர் 2016லேயே, ஜோசுவா பல பெண்களை கற்பழித்த விவகாரம் பற்றி செய்திகள் வந்தன. ஆனால், போலீஸார் ஒன்றும் தெரியாதது போல, ஊடகங்கள், இப்பொழுது செய்தியை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது.
நவநீதகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது, “தூத்துக்குடி எட்டையபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜோசுவா என்ற இம்மானுவேல்ராஜ் (39 / 40). மனைவி, குழந்தைகளை பிரிந்து வந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்தில் ஒரு வீட்டில் ஜெபகூட்டம் நடத்தி வந்தார். இதில் நவநீதகிருஷ்ணனின் தங்கையான அனுசுயாவை, உனக்கு அரசு வேலை கிடைக்கும். சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள் என்று பூரணவள்ளி கூறி, ஜோசுவா வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். ஜோசுவா, அனுசுயாவை வெளியூர்களுக்கு அழைத்துச்சென்று நாசமாக்கி விட்டார். இந்நிலையில் நவநீத கிருஷ்ணனின் தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் தாழையூத்து போலீசில் எங்களது வாழ்க்கையை போதகர் ஜோசுவா பாழ்படுத்தி விட்டதாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரின் பேரில் போலீசார், ஜோசுவை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நவநீதகிருஷ்ணனின் தங்கையை (அனுசூயா), சிலர் அவதூறாக பேசியதால் அவமானம் அடைந்த அவர் தாழையூத்து அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது தங்கையின் வாழ்வை சீரழித்த ஜோசுவாவை கொல்ல திட்டமிட்டதாகவும். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதால், இதற்கு காரணமான பூரணவள்ளியை 28-05-2017 அன்று சர்ச்சுக்கு சென்றுவிட்டு வரும்போது வெட்டி கொலை செய்தேன்”, என்று நவநீதகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பூரணவள்ளிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மறுபடி–மறுபடி கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்டது, செய்தி வெளியீடு: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[8]. அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[9]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[10]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[11]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.
கற்பழிப்பு விவகாரம் கூட இடத்திற்கு இடம், சித்தாந்தவாதிகள் மாற்றிக் கொள்வது சமூக பிரஞை இல்லாததையே காட்டுகிறது: மார்க்சியக் கொள்கைக் கொண்ட “தீக்கதிர்” கூட “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது” என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[12]. “பாலியல் வன்கொடுமை” என்பது என்ன அந்த அளவுக்கு சாதாரணமாகி விட்டதா? இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா? மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[13]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா? “பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது”, என்று நிறுத்திக் கொண்டது[14]. உள்ளூரில் இப்படி இளம்பெண்கள் சோரம் போகிறார்களே, போதகர்கள், பாதகம் செய்கிறார்களே என்று கவலைப்படவில்லை[15]. தினகரனும் முதலில் சிறியதாக செய்தி வெளியிட்டு[16], பிறகு விவரங்களைக் கொடுத்தது[17]. இதனை, மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், சித்தாந்தவாதிகள் பாரபட்சத்துடன் செய்திகளை வெளியிடுவது, சமூகப்பிரச்சினைகளை விதவிதமாக அணுகுவது, விவாதிப்பது அல்லது அமைதியாக இருந்து விடுவது முதலியன, அவர்களது உள்நோக்கத்தைத் தான் காட்டுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதைப் பற்றி கொண்டுகொள்ளவே இல்லை.
© வேதபிரகாஷ்
03-06-2017
[1] தினகரன், நெல்லை அருகே தங்கை தற்கொலைக்கு காரணம் பாதிரியாரிடம் அழைத்துச்சென்ற பெண் சரமாரி வெட்டிக்கொலை, 2017-05-29@ 00:16:13
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=306747
[3] தினமணி, தாழையூத்தில் பெண் வெட்டிக் கொலை, பதிவு செய்த நாள்.மே.2017.
[4] http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/may/29/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2710623.html
[5] தினமலர், பெண் வெட்டி கொலை : போலீசில் வாலிபன் சரண், பதிவுசெய்த நாள். : மே 29,2017 00:11.
[6] http://www.dinamalar.com/M/elec_detail.php?id=1779380
[7] தினமலர், தங்கையின் சாவுக்கு காரணமான பெண்ணை நடுரோட்டில் வெட்டி சாய்த்த வாலிபர் சரண், பதிவு செய்த நாள்.மே.2017, 02.42.
http://www.dinamalar.com/special_detail.asp?id=1779569&Print=1
[8] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகை–பணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.
[9] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/19184213/Go-pick-up-latjuFrights-pornographyRecreation-intimidate.vpf
[10] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.
[11] http://www.onetamilnews.com/News/arrested-KTRAF7
[12] தீக்கதிர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது, அக்டோபர்.19, 2016.
[13]http://theekkathir.in/2016/10/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/
[14] நெல்லை.ஆன்லைன்.நெட், பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது, புதன் 19, அக்டோபர் 2016 4:16:36 PM (IST).
[15] http://www.nellaionline.net/view/31_127073/20161019161636.html
[16] தினகரன், நெல்லை அருகே பாலியல் வன்கொடுமை புகாரில் மதபோதகர் கைது, Date: 2016-10-19 10:25:57