Archive for the ‘அணு’ Category

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஒக்ரோபர் 17, 2022

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாதாய்லாந்தில் நடப்பது – கொள்கை, குறிக்கோள் மற்றும் திட்டம் பற்றிய உரையாடல் (1)

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழா தாய்லாந்தில் நடப்பது: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)[1] ] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடியுள்ளார்கள். தாய்லாந்து கலாச்சார அமைச்சர் இத்திபோல் குன்ப்லோம் [Itthiphol Kunplome] வரவேற்று, பாங்காக்கின் ஆர்ச் பிஷப் பிரான்சிஸ் சேவியர் கிரியாங்சக் [Cardinal Francis Xavier Kriengsak Kovitvanich, archbishop of Bangkok] மற்றும் ஜோசப் சுசாக் சிரிசுத், தாய்லாந்தின் பிஷப் கான்பரன்ஸ் தலைவர் [Joseph Chusak Sirisuth, president of the Catholic Bishops’ Conference of Thailand] பங்கு கொள்கின்றனர்[2]. ஆசியாவிலுள்ள சர்ச்சுகளின் நிலைப்பாடு, மதமாற்றம், அதை எப்படி செயல் படுத்துவது போன்ற விவகாரங்களை வெளிப்படையாகவே பேசி விவாதிக்கப் பட்டது. அக்டோபர் 14 இவ்வெள்ளியன்று பாங்காக்கில் உள்ள புனித மைக்கேல் அரங்கத்தில், பான் பூ வான் இறையியல் மையத்தில் [Baan Phu Waan Pastoral Center] மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது[3]. இது நகோன் பதோம் மாகாணத்தில், சாம் பரன் என்ற இடத்தில், பாங்காக்கிற்கு அருகில் [Sam Phran district of Nakhon Pathom, which is adjacent to Bangkok] உள்ளது. தமிழில் இச்செய்தி இன்னும் வெளிவரவில்லை, வாடிகன் செய்தி சுருக்கமாக வெளியிட்டுள்ளது[4].

ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகள்: கார்டினல் சார்லஸ் முவாங் போ (Chales Muang Bo) என்பவர் இதன் தலைவர் ஆவார்[5]. இது அக்டோபர் 12 முதல் 30 வரை நடைபெறுகிறது[6]. போப் பால்VI [Pope St. Paul VI] 2020ம் ஆண்டில் நடைபெறவிருந்த இம்மாநாடு COVID-19 பிரச்சினையால் தள்ளி வைக்கப் பட்டு, இப்பொழுது நடைபெறுகிறது[7]. இதில் 29 ஆசிய நாடுகளின் 17 கார்டினல்கள், 150 ஆசிய பிஷப்புகள், 270 பிரதிநிதிகள் மற்றும் 50 அழைக்கப் பட்டுள்ள விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்[8]. குறிப்பாக வாடிகனிலிருந்த வந்துள்ள முக்கியஸ்தர்களும் இதில் அடங்குவர். FABC உறுப்பினர் நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், புரூனெய், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், கொரியா, கிரிகிஸ்தான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தைவான், சிங்கப்பூர், ஶ்ரீலங்கா, தைமூர்-லெஸ்தே, தாய்லாந்து, சீனா மற்று சிறப்பு அந்தஸ்தில் இருக்கும் மக்கவோ மற்றும் ஹாங்காங் முதலியவை[9].

கொரோனா காலத்தில் கிருத்துவம் படுத்தது: கொரோனா காலத்தில் நிறைய கிருத்துவர்கள் சர்ச்சை முழுவதுமாக மறந்து விட்ட நிலை, வாடிகனுக்கு பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனனில் அக்கால கட்டத்தில் சர்ச் உதவியது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. மாறாக, கிருத்துவப் பிரசிங்கிகள் “ஏசு காப்பாற்றுவார்” என்று கூவிக் கொண்டிருந்தனர். கேரளாவில் நடந்த கிருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்ட ஆயர்கள் தொற்றினால் இறந்தனர். அதாவது, அவர்களையே ஏசு காப்பாற்றவில்லை. 2020-2022 காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளே பெருமளவில் பாதிக்கப் பட்டது. சீனா அந்த தொற்றுக்கு காரணம் என்று எடுத்துக் காட்டப் பட்டது. அதே நேரத்தில் 130 கோடி மக்கள் தொகை கொன்ட இந்தியா, அத்தொற்றிலிருந்து மீண்டது. அதுமட்டுமல்லாது, மற்ற நாடுகளுக்கு தொற்று-தடுப்பு மருந்து கொடுத்து, பெருந்தொண்டாற்றியது.

இந்தியாவை குறி வைக்கிறதா, ஆயர் மாநாடு?: இதனை -FABCஐ 1970ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஆரம்பித்தார். “பெரிய சக்திகளின் கைகளில் அகப் பட்டுச் சிக்கி தவிக்கிறது ஆசியா. குடியரசு தீய சக்திகளின் கைகளில் உள்ளது. நோய், பஞ்சம், பட்டினி என்று மனித சமுதாயம் அழுது வருகின்றது. மனிதர்களால் உண்டாக்கப் பட்டு வரும் அழிவுகளிலிருந்து விடுபட வேண்டும். சர்ச் இதற்காக எழும்புமா?,” என்று போ வினா எழுப்பியுள்ளார்[10]. நிச்சயமாக, இந்தியாவின் எழுச்சி, உலக நாடுகளை பாதிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, வாடிகன் எச்சரிக்கையுடன் அணுக முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கம் போல, உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] என்ற பழைய பல்லவிகளை மீட்டியுள்ளது.

மாநாட்டின் குறிக்கோள், திட்டம்: ஆசியாவில் இப்பொழுது 383 million கிருத்துவர்கள் இருப்பதாகவும், அது மொத்த ஆசிய ஜனத்தொகையான 4.56 billion  வெறும்  8 percent  ஆகும் என்று உலக கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [Center for Global Christianity at Gordon Conwell Theological Seminary] எடுத்துக் காட்டுகிறது. பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகள் மட்டும் தான் பெருமளவில் கத்தோலிக்க நாடுகளாக இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும், சர்ச்சுகள் தங்களுடைய மிஷினரி செயல்பாடுகளை முடுக்கி விடவேண்டும் என்று போ தொடர்ந்து பேசினார்.

1970ல் போப் பால்VI ஆரம்பித்தபோது, கூறிய மூன்று அறிவுரைகள்[11]:

  1. நற்செய்தியை அறிவிப்பது [ proclaiming the Good news], 
  2. ஞான ஸ்தானம் பெற்ற விசுவாசிகளின் நம்பிக்கைகளுக்கு ஏற்ற முறையில் நற்செய்தியை அறிவிப்பது [ad gentes; deepening the faith of the baptized];  மற்றும்
  3. மதம் ஆறுபவர்களை மதம் மாற்றுபவர்களாக மாற்ற சக்தியூட்டுவது [energizing the evangelized to become evangelizers]

அதாவது உள்-கலாச்சாரமயமாக்கல் [inculturation], மதங்களுக்குள் இடையிலான உரையாடல் [inter-religious dialogue] போன்ற முறைகளால், தீவிரமாக உழைத்து மதம் மாற்ற வேண்டும் என்று கூறுவது கவனிக்கத் தக்கது. ஆசிய அத்தோலிக்க சர்ச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பொதுவான தன்மை, நாடுகளுக்கு இடையேயுள்ள வேற்றுமகளைக் கணடறிதல், ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுதல் போன்றவற்றின் அடிப்படையில்  ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்றன. அதன் படி, ஆசிய சர்ச்சுககளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப் பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களை இரண்டாம் நாள் பகிர்ந்து கொண்டனர். ஒன்றுகூடி இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர்..

செய்ய வேண்டிய திட்டப் பணிகள்: ஆசிய சந்திப்பு என்னும் கருத்தில் ஆசிய அவைகளின் பிரதிநிதிகள் தங்களது மேய்ப்புப்பணிகளில் நிலவும் ஒற்றுமை வேற்றுமை மற்றும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணித்தல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து CCEE என்னும் ஐரோப்பிய ஆயர் பேரவையின் பேராயர் Gintaras Linas Grusas அவர்கள், ஐரோப்பிய சர்ச்சுகள் குறித்த ஒப்புமை, அதன் நம்பிக்கைகள், முன்னோக்கிய பயணத்திற்காக மேற்கொள்ளும் பணிகள், தூண்டுதல் தரும் ஆசிய ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை எடுத்துரைத்தார். இந்தியாவின் Daughters of St. Paul   என்னும் புனித பவுலின் புதல்வியர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை வழிபாடு, கர்தினால் Cleemis அவர்களின் தலைமையில் திருப்பலி, என தொடங்கப்பட்ட இரண்டாம் நாள் கூட்டமானது, கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் [Oswald Gracias, Convener of FABC 50] அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

© வேதபிரகாஷ்

17-10-2022.


[1]  ஆசிய பிஷப் கான்பரன்ஸ்களின் கூட்டமைப்பின் இணை தளம் –https://fabc.org/

[2] https://businessmirror.com.ph/2022/10/16/asias-catholic-bishops-open2-week-conference-in-bangkok/

[3] வாடிகன்.செய்தி, ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் இரண்டாம் நாள், மெரினா ராஜ் – வத்திக்கான், 15 October 2022, 14:16.

[4] https://www.vaticannews.va/ta/church/news/2022-10/fabc-info-and-material-relating-to-the-general-conference-of-t.html

[5] Bangkok Post, Asia’s bishops gather, Published; 12 October 2022, at 04:00.

[6] https://www.bangkokpost.com/thailand/general/2412288/asias-bishops-gather

[7] Agentia.fides, ASIA – The jubilee assembly of the Federation of Asian Bishops’ Conferences: “And they took another path”, Tuesday, 11 October 2022.

[8] http://www.fides.org/en/news/72916-ASIA_The_jubilee_assembly_of_the_Federation_of_Asian_Bishops_Conferences_And_they_took_another_path

[9] Business Mirror, Asia’s Catholic bishops open 2-week conference in Bangkok, BY JOSE TORRES JR . / LICAS.NEWS VIA CBCP NEWS, OCTOBER 16, 2022

[10]  Crux.now, Asian Church ‘exists to evangelize,’ cardinal tells bishops, By Nirmala Carvalho, Contributor, Oct 14, 2022“.

The Asian church stands in front of the burning bush of existential problems of Asia: Exploitation, nuclear winter, big power rivalry, despotic evil displacing democracy, the commodification of human tears, ecological holocaust, pandemic, millions in distress, migration, wars and displacement, natural and man-made disasters. Will the Asian church rise to the occasion?” Bo asked during his homily.

https://cruxnow.com/church-in-asia/2022/10/asian-church-exists-to-evangelize-cardinal-tells-bishops

[11] “The FABC started with the visit of Pope Paul VI who insisted: The church exists to evangelize. That is her core mission and identity. Pope Benedict articulated the New Evangelization with three objectives: proclaiming the Good news, ad gentes; deepening the faith of the baptized; and energizing the evangelized to become evangelizers,” the cardinal said

Crux.now, Cardinal says Asian church must remain prophetic, relevant, responsive, By Catholic News Service, Oct 14, 2022, Contributor

https://cruxnow.com/church-in-asia/2022/10/cardinal-says-asian-church-must-remain-prophetic-relevant-responsive

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (3)!

அணு-உலை எதிர்ப்பு விஷயத்தில் இரட்டை வேடம்[1] போட்டு மக்களை ஏமாற்றியது தெரியவதுள்ள வேலையில்[2], அரசு கிருத்துவர்களுக்கு எதிராக செயல்படுகிறது, என்றெல்லாம் கூக்குரலிடுகிறார்கள் பிஷப்புகள்[3]. வேடிக்கையென்னவென்றால், இவர்கள் மீதே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன[4]. ஆனால், அவற்றைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

  1. பற்பல பாதிரிகள், பாலியல் குற்றங்கள், சிறுவர் வன்புணர்ச்சி அக்கிரமங்கள், சிறுமியர் வன்புணர்ச்சி குரூரங்கள், கற்பழிப்பு பாதகங்கள், நிலமோசடிக:ள், பணக்கையாடல்கள் என மிகவும் அதிகமாக சட்டமீறல்களில் மாட்டியிருந்தாலும், அதைக் கண்டிப்பதில்லை. அரசு கண்டுக்கொள்வதே இல்லை. அப்படியென்றால், அரசு ஆதரிக்கிறதா?
  2. அப்படியென்ன இந்திய நாட்டில் கிருத்துவ சாமியார்களுக்கு சிறப்பு சலுகைகள்?
  3. அப்படிப்பட்ட விலக்கு இந்தியாவில் எப்படி கிருத்துவ குற்றவாளிகளுக்கு இருக்கிறது?
  4. இப்பொழுது கூட, இந்திய மீனவர்களை இலங்கையர் சுட்டால், ஒரு மாதிரி பிரச்சினையை கையாளுகிறார்கள். ஆனால், இத்தாலிய கிருத்துவர்கள் சுட்டுக் கொன்றாலும், வாடிகன் வரை விஷயம் செல்கிறது[5]. இந்திய கார்டினல்களே, வவடிகனுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்[6], தாய்நாட்டுச் சட்டங்களையோ, கிருத்துவ மீனவர்களையோ மதிப்பதில்லை, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
  5. அப்படியென்றால், தமிழ் மீனவர்கள் மலையாளத்து மீனவர்களை விட குறைந்தவர்களா?
  6. அதிலும், இந்து மீனவர்கள் கிருத்துவ மீனவர்களை விட குறைந்தவர்களா?
  7. இந்தியாவில் சுட்டுக் கொலைசெய்து விட்டு, தங்கள் நாட்டு சட்டப்படி, தண்டனைக் கொடுப்போம் என்றால் என்ன?
  8. எல்லோருக்கும் ஒரு சட்டம் எனும்போது, கிருத்துவர்களுக்கு மட்டும், ஏன் சட்டங்கள் மாறுகின்றன? நாங்கள் ஊர்வலமாகச் செல்வோம் என்கின்றனர்.

மற்ற பாதிரிகள் சொன்னால், இந்த பாதிரிகள் கேட்பார்களா என்ன? அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை!

பாதிரிகள்       அணு உலை எதிர்ப்பு கூட்டம் / குழு போராட்டம் வேதபிரகாஷ்
11-03-2012


[4]  இதைபற்றி இந்த இணைதளத்தில் பல இடுகைகளை விவரங்களுடன் வெளியிட்டுள்ளேன்: https://christianityindia.wordpress.com/

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

மார்ச் 11, 2012

கிருத்துவ பிஷப்புகள் பலகுரல்களில் பேசுவது: கூடங்குள நாடகம் (2)!

வங்கிக் கணக்குளை முடக்குவது கிருத்துவர்களை அவமதிப்பதாகும்: சின்னப்பா தொடர்கிறார். “அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சோதனை நடத்தினார்கள். நாங்கள் கணக்கு காட்டினோம்[1]. அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மறைமாவட்ட சங்கத்தின் எப்.சி.ஆர்.ஏ. எண்ணை தடை

இடிந்தகரை கிராம மக்கள் போராடியது முதலில் அச்சத்திற்ககத்தான். ஆனால், ஒஇஷப்புகள் அதில் புகுந்து மதத்தை நுழைத்தனர். அய்யா-வழி பின் பற்றும் மக்களை மதம் மாற்றலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட்டது கிராம மக்களுக்கு தெரியும்.

செய்து, வங்கி கணக்கை முடக்கிவிட்டனர்[2]. தற்போது ரூ.1 கோடியே 60 லட்சம் பணம் வங்கியில் முடங்கி கிடக்கிறது. வங்கி கணக்கை முடக்கிய நடவடிக்கையால் ஆயர் பேரவை, பேரதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்துள்ளது. இந்த நடவடிக்கை, சிறுபான்மை கிறிஸ்தவர்களை இழிவுபடுத்துவது போல் ஆகும். தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு எதிராக வழக்குகள் போடும்படி சி.பி.ஐ.யையும், தமிழக அரசையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி இருக்கிறார்[3]. கூடங்குளம் அணுஉலை குறித்து உருவாகி உள்ள விவாதங்களையும், போராட்டங்களையும் மனதில் கொண்டுதான் மத்திய அரசு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கும், பிற கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இந்த அணுஉலை, கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழும் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அணுஉலை தங்கள் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதால்தான் ஆட்சேபணை தெரிவித்து போராடி வருகிறார்கள்.

பிரச்சினை வந்ததும் செக்யூலார் சாயம் பூசப்பார்க்கிறார்கள் போலும்!: சின்னப்பா மேலுன் தொடர்கிறார், “அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் 217 இந்து பெண்கள் அணுஉலை திட்டத்தை நிறுத்த உதவி செய்ய வேண்டி உள்ளூர் பிள்ளையார் கோவிலுக்கு பால்குடம் சுமந்து வந்து சென்றனர். போராட்டத்தில்

பால் குடங்களை எடுத்து வந்தவர்களுக்கு, கோடிக்கணக்கில் அந்நியாநாடுகளிலிருந்து பணம் வரவில்லை. ஆனால், கிருத்துவ அமைப்புகளுக்கு வந்துள்ளது. இதுதான் முக்கியமான வித்தியாசம். அம்மக்கள் உண்மையாக போராடினர். ஆனால், கிருத்துவர்கள் அந்த போராட்டத்தை “ஹைஜேக்” செய்து, ஏதோ அவர்கள் தாம் உண்மையான போராளிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ள நாடகம் ஆடுகின்றனர். மக்கள் இதனை புரிந்து கொண்டு விட்டனர்.

ஈடுபட்டு வரும் மக்களுக்கு திருச்சபை எவ்வித பொருளாதார உதவியும் செய்யவில்லை[4]. எனவே, கிறிஸ்தவர்கள்தான் அணுஉலை திட்டத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிராக உள்ளனர் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. மக்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அந்த போராட்டத்திற்கு நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை அளிக்கிறோமே தவிர, போராட்டத்திற்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மின்சாரம் தேவை. அதற்கு நாங்கள் தடைபோடவில்லை[5].

பணப் போக்குவரத்து இல்லை என்பதை முன்னரே சொல்லியிருக்கலாமே, சரியான கணக்கைக் காட்டியிருக்கலாமே?: சின்னப்ப விடுவதாக இல்லை, மற்ற விவகாரங்களையும் கூறுகிறார், “அணுஉலை தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் தங்கள் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் பேராபத்து ஏற்படும் என்ற பயத்தில் உள்ளனர். பயத்திலும், துன்பத்திலும் உள்ள மக்களுடைய உணர்வுகளை மதிப்பது

முடியும் வரை சேதத்தை ஏற்படுத்திவிட்டு, இப்பொழுது நல்ல பேரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாடகம் ஆடுகின்றனர். சர்ச்சிற்கு சம்பந்தம் இல்லை என்றால், அவர்கள் விலகியிருக்கலாம். ஆனால், மக்களின் போராட்டை, தொஇசைத் திருபியது தான், மகளுக்கே சந்தேகம் வந்து, கிராம மக்கள் தனியாக சென்று வ்ட்டனர். கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யலாம் என்று மமதையில் உள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர்.

திருச்சபையின் இயல்பு மற்றும் தார்மீக கடமை[6]. அந்த வகையில்தான் போராட்டத்திற்கும், திருச்சபைக்கும் உள்ள தொடர்பே தவிர வேறு எவ்விதமான நிதி பரிவர்த்தனையோ இல்லை. மக்களின் பயத்தை போக்கி அணுலை திட்டம் குறித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று அரசு முடிவு எடுக்குமானால் அதற்கு திருச்சபை குறுக்கே வராது. இதை தவிர்த்து, நாட்டு மக்களை அரசு தவறான வழியில் திசைதிருப்பும் வகையில் தேசிய மற்றும் பொதுநலனுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து திருச்சபை செயல்படுகிறது என்றும், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்பு வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை யாருக்கும் சொல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றி இருக்கிறது என்றும் சொல்வது விஷமத்தனமானது. இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம்”.

பாரம்பரியம் இருந்தால், அதனைக் கட்டிக் காக்க வேண்டியது தானே?: தடை செய்யப்பட்டு வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மறைமாவட்ட சங்கமானது 90 ஆண்டு பாரம்பரியம் கொண்ட அமைப்பு. பதிவு செய்யப்பட்ட ஒரு

உண்மையை மறைக்க இப்படியல்லாம் கதையளப்பது வேடிக்கையாக உள்ளது. அந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஓவ்வொரு பிஷப்பும் தனியாக சங்கங்கள், நிறுவனங்கள் வைத்துக் கொண்டு, கம்பெனிகள் போன்று நடத்திக் கொண்டு, அதில் கோடிகளை அள்ளுவதுதான், பிரச்சினையில் முடிந்துள்ளது.

தொண்டு நிறுவனம். எந்த ஒரு சூழ்நிலையிலும், இந்த அமைப்பு பொதுநலனுக்கு எதிராக செயல்படுகிறது என்று யாருமே குற்றம் சுமத்த முடியாது. ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் 2,100 ஆசிரியர்கள், 2 லட்சம் மாணவ-மாணவிகளை கொண்டுள்ள 230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1,200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

கிருத்துவப் பாதிரிகளே அரசியல் செய்யும் போது, காங்கிரஸ் அரசியல் செய்யாதா என்ன?: சின்னப்பா அரசியலையும் விட்டு வைக்கவில்லை, “அரசியலில் கிறிஸ்தவர்கள் மதசார்பற்ற கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். மதசார்பற்ற காங்கிரஸ் கட்சி இப்போது தன்னுடைய முகத்தை காட்ட

இப்படியெல்லாம், பொய்களை அள்ளி வீசியுள்ளார். பிறகு சன் டிவியில் ஏன் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டும்[7] என்று இதே பாதிரிகள் பேசினர்? காங்கிரஸின் மதசார்பற்ற நிலை என்ற பொய்யை அனைவரும் அறிவர். சோனிசா மெய்னோ ஜெயித்தவுடன், கிருத்து ஆட்சி வந்து விட்டது என்று ஜெபகூட்டங்கள் நடத்தி வ்ட்டு, இப்பொழுது இப்படி வேடம் பேசுகின்றனர்.

தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஆகும். நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கும்போது, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை மட்டும் மத்திய அரசு குறிவைத்து தாக்குவது ஏன்? இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றனர்.

மற்ற கிராமத்து மக்களை ஒதுக்கி விட்டு, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு பிஷப்புகள் போடும் நாடகம்: கடந்த அக்டோபர் 2011ல் மன்மோஹன் சிங், கூடங்குள திட்டத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்[8]. ஆனால், கிருத்துவகள் அமெரிக்க மற்றும் இதர அந்நிய நாட்டு கிருத்துவர்கள் மூலம், ஜெயலலிதாவை எதிர்க்க செய்தியை அனுப்பினர். இவர்கள் தாம் முன்பு “தங்கத் தாரகை” பட்டத்தை அளித்து, மதமாற்றச் சட்டத்தை வாபஸ் வாங்கச் செய்தனர். இதனால் மைத்ரேயன் தலைமையில், அந்த திட்டத்தை நிறுத்துமாறு ஒரு குழு அனுப்பப்பட்டது. அப்பொழுதே, சர்ச்சுகள் / கிருத்துவர்கள், மக்கள் போராட்டத்தை அவர்கள் “ஹைஜாக்” செய்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது[9]. “அய்யா-வழி” என்ற இயக்கத்தைச் சேர்ந்த  பாலப்பிரஜாபதி அடிகளார், கிருத்துவர்கள் தமது போராட்டத்தை கவந்து விட்டார்களே என்று வருத்தத்துடன் சொல்லியிருந்தார்[10]. அரசு உத்திரவாதம் கொடுத்தப் பிறகுக் கூட, போராட்டத்தை நடத்துவதை, இவர் குறை கூறினார். தில்லிக்கு சென்ற குழுவில் இவரும் இருந்தார். ஏனெனில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தாம். ஆனால், பிறகு வந்த கூட்டங்களில், இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. கிருத்துவர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்[11]. மீனவர்களை வைத்துக் கொண்டு கிறுத்துவர்கள் இத்தகைய நாகத்தை ஆடி வருகின்றனர். ஆனால், மீனவர்களைத் தவிர மற்ற மக்கள், பல கிராமங்களில் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள், கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்றவர்களை தனிமைப்படுத்தி, கிருத்துவ மீனவர்களை வைத்துக் கொண்டு தாங்கள்தாம், இப்போராடத்திற்கு முக்கியஸ்தர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யா, ராஜிவ், சோனியா, ராஹுல், கிருத்துவம்: சோனியா-ராஜிவ் கத்தோலிக்க பிணைப்பினால், ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூடங்குளம் அணுவுலை ஒப்பந்தம் நவம்பர் 20, 1988ல் ராஜிவ் காந்தி, மிக்காயில் கொர்பஷேவ் இவர்களால் கையெழுத்தானது. இருப்பினும் 10 வருடங்களாக 1998 வரை, 1991லிருந்து ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல்-பொருளாதரப் பிரச்சினைகள், பிறகு ரஷ்யாவே துண்டானது, அமெரிக்காவின் எதிர்ப்பு என பல காரணங்களினால் கிடப்பில் கிடந்தது. அமெரிக்கா இந்தியாவின் மீதான தடையைத் தளர்த்திய பிறகு, 2004ல் வேலை ஆரம்பித்தது, 2008ல் கூடுதலாக நான்கு உலைகள் வாங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது. அமெரிக்க எதிர்ப்பு முதலியவற்றைக் கடந்து இந்தியாவிற்கு ரஷ்யா அணுவுலைகளை அனுப்ப ஆரம்பித்ததே பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனலாம்[12].

அமெரிக்கக் கம்பெனிகள்- கிருத்துப் பிஷப்புகள் கூட்டு: ராபர்ட்-டி-நொபிலி[13] என்ற பாதிரி, வெடியுப்பு சப்ளை செய்ய கமிஷன் பெற்று வந்தார். அதே முறையைத்தான் இப்பொழுதுள்ளவர்களும் செய்து வருகின்றனர். உண்மையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு அந்த வியாபார ஆணைகள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டன. அவ்வாறுதான் ரகசியமாக திட்டமிட்டன. சோனியாவிடமும் பேரம் பேசப்பட்டது. ஆனால், வியாபார ஒப்பந்தம் ரஷ்யாவுடன் தொடர்ந்தது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ர்ஷ்யா போன்றே, இந்நாட்டுகளுக்கு உதிரி பாகங்களைச் செய்யத் தெரிரியும், இந்தியாவிற்கு சம்ளை செய்யவும் தெரியும். அதற்கான கமிஷனையும் இந்த பிஷப்புகள் பெற்றுக் கொள்வர். இருப்பினும் உண்மையறிந்து அமைதியாயின. ஆயினும், எதிர்ப்பைக் காட்டி நாடகம் ஆட தீர்மானித்தனர். அதன் விளைவுதான், கிருத்துவர்களின் எதிர்ப்பும்-ஆதரவும்! இந்து-குழும ஊடகத்தினரும் அவ்வாறே செய்திகளை எதிர்த்தும்-ஆதரித்தும் வெளியிட்டனர். இப்பொழுது காங்கிரஸும் அதைத்தான் செய்கிறது. ஆக மொத்தம், ஒரு சில லட்சங்களை செலவு செய்து கோடிகளை அள்ளலாம் என்றால், யாருக்குத் தான் ஆசை வராது. அதனால் அவ்வாறு லட்சங்களை அள்ளி வீச முடிந்தவர்கள் இந்த நாடகத்தில் பங்கேற்றனர். மற்றவர்கள் நாளுக்கு இவ்வளவு என்று வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். அதனால்தான், 12-11-2011 அன்று இந்து-என்டிடிவி நிருபர் சென்றபோது, கொட்டகை காலியாக இருந்தது என்று காட்டி, பிறகு அணுவுலை எவ்வளவு பிரமாதமாக உள்ளது, ஆபத்தேயில்லாமல் இருக்கிறது, நான் டன் கணக்கில் உள்ள யுரேனியம் மீதே நின்று கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி காட்டினார்.

இனி ஜெருசலேம் பிரயாணம் தான் பாக்கி: இப்பொழுது இந்த பிஷப்புகள் தங்களது நாடகத்தை ஆரம்பித்துள்ளனர். சோனியாவைப் பொறுத்த வரைக்கும், உபியில் பருப்பு வேகாததால், பட்ஜெட் ஒன்று தான் பாக்கி. அதன் பிறகு, முஸ்லீம் பிரச்சினையை ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனெவே காங்கிரஸ் இல்லாத எல்ல மாநிலங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டாகியாயிற்று. இதனால், எதிர்கட்சிகளும், வழக்கம் போல மூன்றாவது அணி / இடைதேர்தல் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர். பிஜேபியை செக்-செய்து விட்டதால், மற்ற கட்சிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் சோனியா. ஜெயலலிதாவை மடக்கியவுடன், கூடங்குளம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இந்த பிஷப்புகள் வேறுவிதமாக பாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். முதல் கிருத்துவ கூட்டம், ஜெருசலேம் பிரயாணத்திற்கு தயாராகி விடுவர்!

வேதபிரகாஷ்
11-02-2012


[1] இதுவும் பொய்யான வாதம், அந்நியாநாட்டுப் பணம், தனியா நிறுவனங்களுக்கு திருப்பியனுப்பப் பட்டு, அதிலிருந்து, இந்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பணம் கொடுப்பதால்தான், அத்தகய வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன. அவற்றிற்கும், கிருத்துவகளுக்கும் சம்பந்தம் உள்ளது என்றால், உண்மையை ஒப்புக்க்கொண்டது போலாடிற்று.

[2] எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார்!

[3] திருவாளர் சிதம்பரம் அவ்வாறு செய்து விடுவாரா என்ன, இதெல்லாம் நாடகம் என்பது எஸ்ரா சற்குணமே ஒரு மாதிரியாக சொல்லியிருக்கிறாரா?

[4] ஆமாம், அவர்கள் தாம் சாத்தானை வழிபடும் இந்துக்கள் ஆயிற்றே, எப்படி பணம் கொடுப்பாய்? கிருத்துவனாக மாறினால் கொடுப்பாய். அதனை சொல்லாமல் சொல்லும் விதம் தான் இது.

[5] ஆஹா, அம்மாதிரியான அதிகாரங்கள் கூட அவர்களுக்கு உண்டு என்று மறைமுகமாக சொல்கிறார்கள் போலும். அப்படியென்றால், இவ்வளவு நாட்களாக, இவர்கள் தாம் இம்மாதிரி கலாட்டா செய்து மக்களை கடுமையாக பாதித்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[6] அதனால்தான், அய்யா-வழி மக்களை துச்சமாக மதித்து, அவர்கள் தலைவரையும் அவமானப் படுத்தி, இந்த போராட்டத்திலிருந்தே, விலகிக்கொள்ளும் படி, தந்திரமாக நரித்தன வேலையை, இந்த பிஷப்புகள் செய்தனர்.

[10] Though the poster boy of the agitation, S P Udayakumar, does not belong to the fisherman community and hails from Nagercoil, Balaprajathipathi Adigalar, the head priest of the Ayyavazhi cult in Kanyakumari district, feels that the church leaders have appropriated the protests.

[11] He criticises the present leaders for resuming the protest even after the government gave an assurance that it would look into the issue. Initially, Adigalar had addressed the crowds in Idinthakarai when the indefinite fast was held. He was also invited to be part of the delegation that went to meet the Prime Minister in New Delhi.

[13] காவி உடைகளைப் போட்டுக் கொண்டு, மதுரைக்கு வந்து, பிராமணன் போல நடித்து, சில இந்தியர்களை மதம் மாற்றிய, போலிக் கிருத்துவ சாமியார்.

கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?

மார்ச் 1, 2012

கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?

கிருத்துவர்களின் நாடகம்: தூத்துக்குடி பிஷப்புகளின் அரசு சாரா நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தைப் பெறுவது பற்றி அமைச்சர் நாராயணசாமி தகவலை வெளியிட்டார். கிருத்துவ அமைப்புகளும் தங்களுள்ள நிலையை மறைக்கவில்லை[1]. மேலும் இறையியல் ரீதியில் அவ்வாறான ஒரு உலக முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அடிப்படைவாத கிருத்துவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது[2]. இதில் அமெரிக்க, பிரெஞ்சு, ஸ்வீடன் முதலிய நாடுகளின் பண வரவு, அவைகளின் வியாபார யுக்தி முதலியவை மற்றும் சோனியாவின் ரஷ்ய ஆதரவு முதலியன, இவையெல்லாம் ஒரு நாடகம் ஆடுகின்றன என்பதனையும் எடுத்துக் காட்டின[3]. ஏனெனில் அத்தகைய அரசியலில் ஆதாயம் அடையப் போகிறவர்கள் இவர்கள் தாம், மக்கள் இல்லை. கோடிகளில் பணம் வரும்போது, அவர்களின் வியாபாரம், அரசியல் பலம், அதிகாரம் இன்னும் அதிகமாகும்[4]. இந்நிலையில் இதில் சம்பந்தப் பட்டுள்ள பாத்திரங்களின் நடிப்பும் அதிகமாகி உள்ளன.

கிருத்துவ பிஷப்புகளின் நிறுவனங்கள் பணம் பெறும் விவரங்கள்: நாராயணசாமி, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறும் நிறுவனங்கள் என்று கீழ்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்[5]:

  1. தூத்துக்குடி ஆயர் சங்கம் [Tuticorin Diocese Association (TDA)]
  2. தூத்துக்குடி பல காரணங்களுக்காக அமைக்கப் பட்ட சேவை சங்கம் [Tuticorin Multipurpose Social Service Society]
  3. செயல்பாடு மற்றும் விடுதலைக்காக மக்கள் கல்வி இயக்கம் [ Madurai-based People’s Education for Action and Liberation ]
  4. பெயர் குறிப்பிடப்படவில்லை.

உதயகுமாரின் ஜெர்மன் நண்பர் தூத்துக்குடியில் செய்வது என்ன?: உள்துறை அமைச்சகம், இந்த நிறுவனங்கள் / அமைப்புகள் அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் நாடுகளிலிருந்து பெற்றப் பணத்தை, கூடங்குள எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு செலவழிக்கிறன்றன[6]. ஆர்.கே.சிங் என்ற உள்துறை அமைச்சக செயலர், அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்காக வழக்குகள் இந்நிருவனங்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்[7]. அதுமட்டுமல்லாது, உதயகுமாரின் நண்பரான சோன்னேக் ரெய்னர் ஹெர்மான் [Sonnteg Reiner Hermann (49)] என்ற ஜெர்மானியர் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து, சந்தேகம் ஏற்படும் முறையில், அவ்விடங்களில் சுற்றி வந்துள்ளார் மற்றும் உதய குமாரின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது[8]. உதயகுமாரும் இதனை மறுக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களாக அவரைத்தெரியும் மற்றும் தமது

கிருத்துவ இயக்கங்கள் / சங்கங்கள் பெறும் பணம்: பல நாடுகளிலிருந்து பெற்ற பணம் கீழ் கண்ட அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது[9]:

வரிசை  எண் பணம் பெற்ற கிருத்துவ இயக்கம் / சங்கம் கொடுத்த நாடு கொடுத்த பணம் கோடிகளில்

1

தூத்துக்குடி ஆயர் சங்கம் ரூ.20.60 கோடி

2

சமூக சேவை சங்கம் ரூ. 44.14 கோடி

3

பிரான்ஸ் கொடுத்தது ரூ. 10.30 கோடி

4

இத்தாலி கொடுத்தது ரூ. 5.15 கோடி

சமூக சேவைக்கு என்று தான், இப்பணத்தைப் பெறுகிறது. ஆனால்;, இவ்வாறு தேசிய திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகிறது என்று உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது[10].

கிருத்துவ நிறுவனங்கள், இயக்கங்கள், கோடிகளில் அந்நிய நாடுகளினின்று பணம் பெருவது ஒன்றும் புதிய செய்தி இல்லை. பொதுவாக, ஆயர்கள் / பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள் என்றுள்ளவர்கள்  அப்பணத்தை செலவழிப்பது போல காட்டி, தூத்துக்குடி கிருத்துவ சர்ச் பல சங்கங்களை வைத்துள்ளது:

  • மீனவர்கள் நல்வாழ்வு சங்கம் (1992),
  • வின்சென்ட் டி பால் சங்கம்,
  • நமது பெண்மணியின் லிஜென்,
  • நமது பெண்மணியின் நிரந்தர உதவி சங்கம்
  • தூய்மையாக பெற்றெடுத்த கருவுற்ற சங்கம்,
  • ஏசுவின் போராளிகள் சங்கம்,
  • புண்ணிய குழந்தைகள் சங்கம்,
  • கருவறை சேவை சங்கம்,
  • இளைஞர் இயக்க சங்கம்,

என்று சங்கங்கள் உள்ளன[11]. இவற்றின் பெயர்களே விசித்திரமாக உள்ளன. இவை என்ன செய்கின்றன என்று கர்த்தருக்குதான் தெரியும். வரவு, செலவு, கணக்கு, தணிக்கை என்றெல்லாம் வரும்போது தான், கிருத்துவ இயக்கங்கள் தங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று ஊளையிடுகிறார்கள். பிறகு அவர்கள் தங்களது கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளலாமே. சாதாரண தரும காரியங்களுக்கு ஏன் இப்படி கோடிகளில் அந்நிய பணத்தை வாங்குகிறார்கள்?

வேதபிராகாஷ்

01-03-2012


[6] Reports gathered by the home ministry showed that funds received from the US and Sweden were diverted by local NGOs, including some church groups, to fuel the stir.

http://timesofindia.indiatimes.com/city/chennai/N-stir-NGOs-booked-for-diverting-funds/articleshow/12078533.cms

[7] “Cases have been registered against four NGOs for violation of the Foreign Contribution Regulation Act (FCRA),” home secretary R K Singh said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/N-stir-NGOs-booked-for-diverting-funds/articleshow/12078533.cms

[8] Cases have been registered against four NGOs for violation the Foreign Contribution Regulation Act,” Union home secretary RK Singh told reporters in New Delhi, hours after the German, Sonnteg Reiner Hermann (49), was packed off. Hermann’s tourist visa was cancelled and he was put on a flight to Germany, after he was brought to Chennai on Monday night from Nagercoil.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/kudankulam-row-cases-against-ngos-german-expelled/articleshow/12077009.cms

[9] The returns filed by the two NGOs under the Foreign Contribution Regulation Rules for the past five years show that they received foreign funds to the tune of Rs.64.75 crore. While the Diocesan Association received Rs.20.60 crore between 2006 and March 31, 2011, the Social Service Society received Rs.44.14 crore as foreign funds in the same period. rance was the biggest donor to the first NGO, contributing half of the total amount it received. France-based entities gave Rs.10.30 crore while Rs.5.15 crore came from Italy. The group got Rs.3.22 crore from Germany and Rs.83 lakh from the US, the FCRA returns show. Read more at: http://indiatoday.intoday.in/story/kudankulam-row-government-lodges-criminal-cases-against-ngos/1/175745.html

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

பிப்ரவரி 27, 2012

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (4)!

மறுபடியும் நாராயணசாமியின் குற்றச்சாட்டு: கூடங்குளம் பிரச்சினையில், கிருத்துவர்களின் தேவையற்ற தலையீடு[1] பலவழிகளில், அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது[2]. தமக்கு அனைத்துலக ஆதரவு உள்ளது என்ற மமதையில் பிஷப்புகள் வேலை செய்வதும் தெரிகிறது[3]. இதில் வியாபார நோக்கம் அதிகமாக உள்ளதாகத்தான் தெரிகிறது என்று முன்னமே விளக்கப்பட்டது[4]. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணத்தின் மதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அமைப்புக்கு 54 கோடி நிதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் 11 நிதிநிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது. இப்படி சொன்னதையே திரும்பத்திரும்ப ஏன் சொலிறார் என்றும் தெரியவில்லை.

ஐடியாஸ், ஸவீடன் அமைப்பிலிருந்து உதயகுமாருக்குப் பணம்: வெளிநாட்டு நிதி பெற 9 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. முறையாக கணக்கு பராமரிக்காததால் 3 நிறுவனங்களின் உரிமர் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்துள்ளதாகவும், “ஐடியாஸ்” என்ற ஸ்வீடன் தொண்டு அமைப்பிலிருந்து[5] உதயகுமார் அமைப்பிற்கு நிதி பெறப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சாக்கர் என்ற அமைப்பில் உதயகுமார் மற்றும் அவரது மனைவி உறுப்பினர்களாக உள்ளனர்[6]. சாக்கர் அமைப்பிற்கு ரூ.5 கோடியே 32 லட்சம் நிதி வந்துள்ளது. சாக்கர் என்ற நிறுவனத்திற்கு சுவீடன் நாட்டிலிருந்து முதற்தவணையாக ரூ. 38 லட்சமும், மற்றொரு முறையாக ரூ. 5.2 கோடியும் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[7]. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பணம் பற்றி கணக்கு கேட்டால் சோனியாவின் வருவாய் பற்றி உதயகுமார் கேட்கிறார் என்றும் தனி நபர் வருவாய் பற்றி கணக்கு கேட்க வருமான வரித்துறைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்[8].

உதயகுமார் வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசியுள்ள பிரதமர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், போராட்டக் குழுவினருக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருவதாகவும், அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்ற அர்த்தத்திலும் பிரதமர் மன்மோகன் சிங் கொச்சை படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்[9]. மேலும், எனக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமியும், போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அமெரிக்காவில் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். இதுபோன்று உண்மைக்குப் புறம்பாக எனக்கு எதிராகவும், போராடும் மக்களை அவதூறாகவும் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்[10].

டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி ஜனவரியில் ரெய்டாம்!: கடந்த டிசம்பர் 17ம் தேதியே ஆறு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி, எப்படி அயல்நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாம்[11]. ஆனால், அந்த நிறுவனங்களின் பெயர்களை[12] மட்டும் சொல்ல மறுகிறதாம்! இதுவே சரியான கூத்து, ஏனெனில், உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் பணம் வருவதில்லை[13]. வந்த பணத்தை எப்படி, எவ்வாறு, எங்கே, ஏன் செலவழிக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. பைபிளை அச்சடித்து, இலவசமாக விநியோகிக்கிறேன் என்று பணம் வருகிறது, ஆனால், அப்பணம் வேறு செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. அவர்களது கணக்குகளை அரசு தணிக்கை செய்ய முடியாது. பிறகு அவர்களிடமே, “அப்பா எப்படியப்பா பணத்தை செலவழிக்கிறாய்”, என்று கேட்டால் சொல்லி விடுவார்களா என்ன?

சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது?  கிருத்துவர்கள் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற நிலையில், சோனியாவின் வருவாய் பற்றி கேட்க உதயகுமாருக்கு எப்படி தைரியம் வருகிறது? ஒன்று அவருக்கு உண்மையிலேயே அத்தகைய தைரியம் / அதிகாரம் இருக்க வேண்டும் அல்லது எல்லோருமே சேர்ந்து போடும் நாடகமாக இது இருக்க வேண்டும். யார் பணம் பெருகிறார்களோ இல்லையோ, தேவையில்லாமல், தமிழக மக்கள் மின்சாரம் இல்லாமல் மூன்று மாதங்களாக அவதிப் படுகிறர்கள். இதில் கூட்டணி மாறப்போகிறதா, அணுஉலை உதிரிகள், பராமரிப்பு முதலியவற்றிற்கு ரஷ்யா அல்லது அமெரிக்கா சப்ளை செய்யப் போகிறதா, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் போது, யாருக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கப் போகிறது என்றெல்லாம் இருக்கும் நிலையில் நாடகம் தொடரத்தான் போகிறது.

வேதபிரகாஷ்

27-02-2012


[5] The International Institute for Democracy and Electoral Assistance (International IDEA) is an intergovernmental organization that supports sustainable democracy worldwide. International IDEA’s mission is to support sustainable democratic change by providing comparative knowledge, and assisting in democratic reform, and influencing policies and politics.  http://www.idea.int/

[6] Mr. Narayanasamy sent the reply after Mr. Udayakumar threatened to sue him for the allegations that the NGO run by him had received funds. He stated that Mr. Udayakumar and his wife Meena, the trustees of SACCER, an NGO, had registered with IDEA’s Reconciliation Resource Network as its organisation.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2932944.ece

[13] The Home Ministry has sent notices to six NGOs, based in Tuticorin, asking them to explain the utilisation of the funds received under Foreign Contribution (Regulation) Act, the source said without identifying these NGOs.

ரூ. 54 கோடி – இவான் அம்ப்ரோஸ் நடத்தும் இரண்டு நிறுவனங்கள் அமெரிக்கா உட்பட பணம் பெற்றது தெரிய வந்துள்ளது!

ஜனவரி 19, 2012

ரூ. 54 கோடி – இவான் அம்ப்ரோஸ் நடத்தும் இரண்டு நிறுவனங்கள் அமெரிக்கா உட்பட பணம் பெற்றது தெரிய வந்துள்ளது!

கிருத்துவர்கள் அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவதது வெளிப்படையான ரகசியம்: கிருத்துவர்கள் அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவதது என்பது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. ஒவ்வொரு வருடமும் பாராளுமன்றத்தில் யாராவது கேள்வி கேட்டால், உள்துறை அமைச்சகம், அந்நிய செலாவணி கட்டுப்படுத்துதல்

இதற்கு முன்னர் கூட இஸ்லாமிய தீவிரவாதிகள் அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தது என்று ஒன்றும் தெரிவிக்கவில்லை.

சட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில், கிருத்துவ நிறுவனங்கள் எப்படி  கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றனர் என்று, பட்டியலையே கொடுக்கிறது, ஆனால், விவாதத்தை மட்டும் கட்டுப்படுத்துகிறது. இதைப் பற்றிய செய்திகள் ஆங்கில நாளிதழ்களுடன் நின்று விடுகின்றன. தமிழில் எந்த விவரமும் வரவிடுவதில்லை. கிருத்துவர்களுக்கு அந்த அளவிற்கு பக்கபலம், பத்திரிக்கைபலம், பணபலம் என்று எல்லாமே இருக்கின்றன.

நூறு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த பணம் எப்படி கிடைக்கிறது?:  நூறு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது என்றால், குறைந்த பட்சம் ரூ 50 லட்சம் செலவழித்திருக்க வேண்டுமாம், இப்படி கணக்குப் போட்டுதான், ரெய்டு நடக்கிறதாம். அதாவது, நூற்றுக்கணக்கில் கூட்டத்தைக் கூட்டி, பந்தல் போட்டு, ஊடகங்களை வரவழைத்து அதிரடியாக போராட்டத்தை நடத்தி வருவதால், அந்த அளவிற்கு பணம் செலவழிக்கப் படுகிறது என்றாகிறது. ஒரு பெரிய அரசியல் கட்சி கூட அந்த அளவிற்கு, பணத்தை வாரியிறைக்கத் தயங்குகிறது. அந்நிலையில் தான் கிருத்துவர்கள் அப்படி எங்கிருந்து பணத்தைப் பெற்று இவ்வாறு செலவழிக்கிறார்கள் என்று சந்தேகம் வந்துள்ளாதாம்[1].

டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி ஜனவரியில் ரெய்டாம்!: கடந்த டிசம்பர் 17ம் தேதியே ஆறு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி, எப்படி அயல்நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று கேட்டதாம்[2]. ஆனால், அந்த நிறுவனங்களின் பெயர்களை[3] மட்டும் சொல்ல மறுகிறதாம்! இதுவே சரியான கூத்து, ஏனெனில், உள்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் பணம் வருவதில்லை[4]. வந்த பணத்தை எப்படி, எவ்வாறு, எங்கே, ஏன் செலவழிக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது. பைபிளை அச்சடித்து, இலவசமாக விநியோகிக்கிறேன் என்று பணம் வருகிறது, ஆனால், அப்பணம் வேறு செயல்களுக்கு செலவழிக்கப் படுகிறது. அவர்களது கணக்குகளை அரசு தணிக்கை செய்ய முடியாது. பிறகு அவர்களிடமே, “அப்பா எப்படியப்பா பணத்தை செலவழிக்கிறாய்”, என்று கேட்டால் சொல்லி விடுவார்களா என்ன?

தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் ரெய்டு: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானவர்களுடன் தொடர்புடைய, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது,

அணுவுலையை தடுக்கப் போராடுகிறார்களோ இல்லையோ, இப்பணத்தை வைத்துக் கொண்டு, சிறுவர்-சிறுமிகளை கடத்துதல், அனாதை இல்லங்கள் என்ற பெயரில் செக்ஸ்-டூரிஸம் நடத்துதல், சிறார்-பாலியல் போன்ற வக்கிரங்களில் ஈடுபடுதல் முதலியவற்றைப் பற்றி சோதனை செய்தால் நன்றாக இருக்கும். இந்திய சமுதாயமும் காப்பாற்றப் படும்.

டெல்லியிலிருந்து வந்துள்ள, மத்திய அரசு அதிகாரிகள் கணக்குக்கேட்டு, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர். தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களில், மத்திய அரசு அதிகாரிகள், நேற்று ரெய்டு நடத்தினர். டெல்லியிலிருந்து ரகசியமாக வந்துள்ள சிறப்பு படையினர், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனம் (டீ.எம்.எஸ்.எஸ்) மற்றும் அதன் கிளை நிறுவன நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்[5].

இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுடில்லியிருந்து, மத்திய அரசில் பணியாற்றும் துணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள, ஜோகிந்தர் பிரசாத் மற்றும் கணக்குப்பிரிவு அதிகாரி, சுக்கிந்தர் சிங் ஆகியோர் கொண்ட சிறப்பு படையினர், தூத்துக்குடி தன்னார்வ நிறுவனங்களிடம் ரகசிய விசாரணை நடத்துகின்றனர்[6]. அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர், இவான் அம்ப்ரோஸ் (Rt. Rev. Ambroise, who is heading the 88-year-old Diocese since 2005) அலுவலக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இரவு வரை, தொண்டு நிறுவன ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த பணம், அதற்கான முறையான செலவுக்கணக்கு மற்றும் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் ரெய்டில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அணுஉலை எதிர்ப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்[7].

சோதனை நான்காவது நாளாக தொடர்கிறது: இந்த விசாரணை தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள 6 நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.

சோனியா கிருத்துவர்களின் ஆதரவாக செயல்படுவதால், இது ஒரு கண்துடைப்பு நாடகமே எனலாம்[8]. அமெரிக்கா இதற்கு பணம் கொடுக்கிறது எனும்போது, அந்த பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யும் கிருத்துவ கைக்கூலிகளின் துரோகத்தனத்தையும் கண்டு கொள்ளலாம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை வழிநடத்தும் நபர்கள் நடத்திவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு குழு ஒன்று கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்திவருகிறது. இந்த குழுவின் விசாரணை நாளை முடிவடையும் என கூறப்படுகிறது. 

சோனியாவின் பங்கு இருப்பது, மன்மோஹனின் ரஷ்யப் பயணத்தில் தெரியவருகிறது[9]. அதற்கேறார்போலவே அவரும் பேசி வருகிறார்.அதுமட்டுமல்லாது, அமெரிக்காவிற்கு அறுவை சிகிச்சைக்கு சோனியா சென்றிருந்தபோது, கிருத்துவ இயக்க பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்[10]. நவம்பரில் சில கிருத்துவர்களின் மீது வழக்குத் தொடரப்பட்டது[11]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே இவ்விவகாரத்தில் பல கேள்விகள் ந்ழுகின்றன:

  • கூடங்குள நாடகம் எதற்கு?
  • கூடங்குளம் நாடகம் எதற்கு இப்படி லட்சங்கள் செலவழித்து நடத்துகிறார்கள்?
  • அரசியலாக்குகிறார்களா? அல்லது திசைத்திருப்புகிறார்களா?
  • அமெரிக்காவிற்கு சாதகமாக போராடுகிறார்களா?
  • ரஷ்யாவை எதிர்க்கிறார்களா?

வேதபிரகாஷ்

19-01-2012


[1] “Money has been flowing into the protests. We have been inquiring this aspect for some time now,” a source told PTI. “Without money, how can they sustain the agitation for 100 days?” the source asked.  http://news.outlookindia.com/items.aspx?artid=744761

[4] The Home Ministry has sent notices to six NGOs, based in Tuticorin, asking them to explain the utilisation of the funds received under Foreign Contribution (Regulation) Act, the source said without identifying these NGOs.

[5] தொண்டு நிறுவனங்களில் ரெய்டு : அணு எதிர்ப்பாளர்கள் பீதி, பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2012,, http://www.dinamalar.com/News_detail.asp?Id=387528