பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன? [4]
ராதாகன்ட நாயக் என்பவரின் வேலை: 2000 தேர்தலில் கூட மாநில பிஜேடிக்கும், காங்கிரஸுக்கும், இவர் விசயத்தில் மோதல் ஏற்பட்டது. மதமாற்றம் பிரச்சினையிலும், ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவோடு பிரசினை கொண்டார். இதே நாதாகன்ட நாயக் தன் மதத்தை மாற்றிக் கொண்டு லாபம் அடைய முதல்வதாக பிஜேடி தெரிவித்தது. மேலும், ஊழல் அதிகாரிகளின் பட்டியலில் நாயக் பெயர் இருப்பதைச் சுட்டிக் காட்டியது [1]. இந்த ராதா கன்ட நாயக், ஒரு பெரிய பணக்கார கிருத்துவர். IAS அதிகாரி, சோனியா காந்திக்கு வேண்டியவர். YMCA, “வார்ல்ட் விஷன்” [World Vision] போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவர், உறுப்பினரும் கூட. இப்பொழுது, விவரங்கள் கொண்ட விசித்திரமாக, காந்தி அமைதி மையத்தின் உதவி-தலைவராகவும் இருந்தார்[2]. காந்தியின் பெயரில் இயங்கும் நிறுவனங்களுக்கு, எப்படி இத்தகைய ஆட்கள் தலைவராக இருக்க முடியும் என்று, எந்த அறிவுஜீவியும் கேட்கவில்லை, செய்திகளும் வெளியிடுவதில்லை. மதம் மாறிய பனோஸ் என்ற குய் மொழி பேசும் எஸ்.டிக்களுக்கு[ST] எஸ்.சி [SC] அந்தஸ்து வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் வேலை செய்தார்[3] என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவ்விசயத்தில் அந்த பிரிவுகளிடையே பதட்டம், மோதல்கள் ஏற்பட்டன. இதனால், ஒரிஸாவுக்கு வருவதையும் தவிர்த்தார், சோனியாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இவையெல்லாம், இவர் இப்பகுதியில் அமைதியைக் குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என்று நன்றகவே புலப்படுகிறது..
இவ்விவரங்கள் மறைகின்றன–மறைக்கப் படுகின்றன: இணைதளங்கள் எல்லாம் மறைய ஆரம்பித்து விட்டன[4]. இதைப் பற்றி, www.indiainteracts.com என்ற இணைதளத்தில் நான் பதிவிட்டிருந்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. www.sulekha.com என்ற தளத்தில் போட்ட கட்டுரைகளும் காணாமல் போய் விட்டன. வலதுசாரி தளங்களில் மட்டும் சில விவரங்கள் காணப்படுகின்றன[5]. குறிப்பாக காங்கிரஸ், World Vision தொடர்புகள் மறைக்க விவரங்கள் மறைகின்றன-மறைக்கப் படுகின்றன என்று தோன்றுகிறது[6]. இப்பொழுது குறிப்பிட்ட இந்த தளங்களில் உள்ள விவரங்களும் முந்தைய ஆண்டுகளில் வெளி வந்த செய்திகளின் மீது ஆதாரமாக எழுதப் பட்டவை. ஆனால், அவையும் மறைய ஆரம்பித்துளன. இனி, ஆதாரங்களைக் காட்டுங்கள் என்றால், அந்தந்த மாநில ஆவண காப்பகங்கள் மற்றும் செய்திதாள் நிறுவனங்களிலிடமிருந்து விவரங்களைப் பெற வேண்டும். ஆகவே, இதைப் பற்றிய உண்மைகளை மறைக்க பார்க்கின்றனர் என்பது புலனாகிறது.
கொலைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரம்: ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லக்ஷ்மானந்தா உட்பட 5 பேர் மர்ம நபர்களால் 23-08-2008 அன்று சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 9 பேருடைய சாவை அரசு தரப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில், பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி நான்காவது நாளாக 27-08-2008 அன்று வன்முறைகளும், கலவரங்களும் தொடர்வதால், கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளதாக மண்டல வருவாய் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். பலிகுடா, உதய்கிரி ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன், பெருமளவில் வந்த “மர்மக் கும்பல்” மோதலில் ஈடுபட்டதாகவும், தடிகளுடன் இரும்புக் கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். ராய்கா போன்ற வனப் பகுதிகளில் பதுங்கியுள்ள “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், இதில் 2 அதிகாரிகள் படுகாயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “மர்மக் கும்பல்” என்பதும், “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், என்றெல்லாம் குறிப்பிடுவது, அது தெரிந்து செய்வது போலிருக்கிறது. இல்லை, நாடகமாகவும் இருக்கலாம்.
ஒரிசாவில் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்!: இதற்கிடையில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலைமையை ஆராய்வதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் [மன்மோஹன் சிங் கீழ், காங்கிரஸ் கட்சி] ஒரிசா விரைந்தார். கந்தமால் மாவட்டத்தில் பரவிவரும் வன்முறைகள் குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் கவலை தெரிவித்துள்ளதாக புவனேஷ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வி.எச்.பி. தலைவர் லக்ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்ட மூன்று நாட்களாகியும் கந்தமால் மாவட்டத்தில் கலவரங்கள் கட்டுக்குள் வரவில்லை என்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குழுவினருடன் அங்க செல்லவுள்ளதாகத் தெரிவித்தார். முன்னதாக, ஒரிசா மாநில ஆளுநர் எம்.சி.பந்தாரே, தலைமைச் செயலர் அஜித் குமார் திரிபாதி, உள்துறைச் செயலர் டி.கே.மிஸ்ரா, டி.ஜி.பி. கோபால் நந்தா ஆகியோருடன் அமைச்சர் ஜெஸ்வால் ஆலோசனை நடத்தினார்.
கிரிமினல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கமுடியாது என்று சட்டம் இருக்கவேண்டும்: காங்கிரஸின் The National Herald[7], மற்றும் கம்யூனிஸ The wire[8] போன்ற “முற்போக்கு முகமூடி” ஊடகங்கள் அரைத்த மாவையே அரைத்து, ஏதோ கொலைசிகாரன் மந்திரியாகி விட்டான் என்பது போல, கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்கின்றன! இவை ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியைத் தான் திரித்து, தமிழ் ஊடகங்கள் வெளியிடுள்ளன. நேஷனல் ஹெரால்ட் கூட, சாரங்கியின் தேர்தல் மனுவில் உள்ள விசயங்களை வைத்து தான், “செய்தி” வெளியிட[9] மற்றவை ஊதி பெரிதாக்கி இருக்கிறது. பிரதாப் சாரங்கி மீது வழக்கு ஜோடிக்கப் பட்டுள்ளன என்றால், முறைப்படி அதை எதிர்த்திருக்க வேண்டும். எம்,எல்.ஏவாக இருந்து, மத்திய அமைச்சராக வருபவருக்கு அது தெரியாமல் இருக்காது. அரசியல்வாதிகள் கைதாவது,, வெளியே வருவது என்பது சகஜமாக இருக்கிறது. ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலந்து கொண்டு கைதானவர்கள், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” என்ற ரீதியில் தான் நடந்து வந்துள்ளது. இதேபோல, வழக்குகள் நிலுவையில் உள்ளவர் என்று பல பிரபலங்கள் உள்ளன. அவர்களைப் பற்றியும், இதே போல செய்திகளை வெளியிடலாம். ஆனால், எல்ல்லோரையும் விடுத்து சாரங்கியை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பதால், அவரது பெயரை களங்கப் படுத்தவே, அவ்வாறு செய்கின்றனர் என்று தெரிகிறது.
இந்துத்துவ வாதிகளால் எதிர்கொள்ள முடியாத, எதிர்பிரச்சாரம் செய்யலாகாத, மறுக்க முயலாத பொய்–பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று: ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு தீ வைத்து கொளுத்திய பிரதாப் சாரங்கி இப்பொழுது பாஜகவின் மத்திய அமைச்சர், என்ற பிரச்சாரத்தை, இந்துத்துவவாதிகள் எதிர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருக்கின்றனர். சுவாரஜ்யா[10] ஓரளவிற்கு மறுத்தாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஜே.என்.யூ எழுத்தாளர் போல, “உள்குத்து” குத்துகிறார்[11]. மேலும், இதே பிரிவுகளில் அருந்ததீ ராய், ஜே.என்.ஏ “டுக்டே-டுக்டே” கும்பல், பிரபல “அர்பன் நக்ஸல்கள்,” தமிழக நாத்திக-தேசவிரோத வகையறாக்கள் என்று பலர் உள்ளனர். அவர்கள் மீதும் இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், இந்துத்துவவாதிகள் முறையாக செய்யாதலால், தமிழ் ஊடகங்கள் அள்ளி வீசுகின்றன. தமிழக பத்திரிகா தர்மம், ஊடக நாகரிகம், கருத்துரிமை குரூரம், விபச்சார ரசனை, சிந்தனா-அசிங்கம், இவ்வாறு வெளிப்படுகிறது! உண்மையில் 1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலை மற்றும் ஆகஸ்டு 23, 2008 சுவாமி லக்ஷமணானந்த கொலை, தனிதனியாக அலச வேண்டும். இரண்டிலும் மாவோயிஸ்ட்-கிருத்துவர்களின் தொடர்புகள் இருக்கின்றன.
© வேதபிரகாஷ்
05-06-2019
[1] …..the Naveen Patnaik-led party has accused Radhakanta Nayak – an Independent candidate backed by the Congress – of changing his religion twice to reap “undue benefits”. According to the BJD, Nayak’s name also figures on a list of “corrupt officials” prepared by the Central Vigilance Commission and posted on its website on February 24. Nayak is a retired IPS officer…………. the Congress is also believed to have convinced the other Independent legislators to back Nayak.
The Telegraph, CONGRESS, BJD LOCK HORNS , By FROM OUR SPECIAL CORRESPONDENT, Published 28.03.00
https://www.telegraphindia.com/india/congress-bjd-lock-horns/cid/901880
[2] VICE CHAIRPERSON, GANDHI PEACE CENTRE, Founder-Coordinator (Honorary) NISWAS 3
Chandrasekharpur Bhubneshwar, Orissa – 751023; Mob No. 08018265276:
E-Mail: rknayak2007@googlemail.com ; Dr. Radhakant Nayak associated with GPC since 2007. He also runs a reputed NGO –NISWAS at Bhubaneswar , Orissa. In addition to many social welfare activities it is also managing a School for Social Welfare which conducts 2-year MSW course. He retired as Secretary, Ministry of Rural Development, Govt. of India.
[3] The Mumbai Mirror, Congress MP fears slain VHP leader’s followers may target him, By Lakshmi Iyer | Updated: Aug 29, 2008, 03:25 IST .
Congress Rajya Sabha MP from Orissa Radhakant Nayak, who is known to have openly crossed swords with slain VHP leader Swami Lakshmananda Saraswati on the conversion issue, is staying put in Delhi as he fears for his life. According to the Kandhamal police website, the conversion of tribal population has been a major source of trouble in the area. The numbers of Christians in the district has been increasing steadily and, as per 1991 Census, account for 15 per cent of the population. There is opposition to the activities of missionaries in some areas such as Kotagarh, Balliguda, Sarangada, Phiringia PS areas. Due to this recent development, there is ill-feeling and tension on communal lines in villages. Sources said Nayak’s efforts to get ST status for Kui-speaking Panos who have converted to Christianity has been one of the causes for communal friction. Nayak is a Dalit who belongs to the Pano caste. Congress sources said Nayak refuses to visit Orissa fearing for his life. On Wednesday, he reportedly met Congress president Sonia Gandhi and sought extra security cover for himself, stating that he feared a revenge attack.
[4] http://yatratatrasarvatra.blogspot.com/2008/12/radha-kant-nayak-sonia-mainos-right.html
[5] http://indiafacts.org/laxmanananda-saraswati-unmourned-yet-again/
[6] https://www.scribd.com/document/16843413/a-Nayak-Murdered-Swami-a-Saraswati
[7] National Herald, Minister Pratap Sarangi has blood on his hands; an austere life is not a life without crime, Ashlin Mathew, Updated: 31 May 2019, 11:20 PM.
[8] The Wire, NDA 2.0: Social Media ‘Hero’ Pratap Sarangi Faces Serious Criminal Cases, the Wire staff, June.1, 2019.
https://thewire.in/politics/minister-of-state-pratap-sarangi-criminal-cases
[9] https://www.nationalheraldindia.com/india/minister-pratap-sarangi-has-blood-on-his-hands-an-austere-life-is-not-a-life-without-crime?fbclid=IwAR2bTlEHBXi0cgwc6snjEOjTcajc-pvNXF10ydSYmXGeFSb2ZGWFC4TL2pE
[10] Pratyasha Rath, Pratap Sarangi And The Slander Fest Around Him, Jun 02, 2019, 4:44 pm
https://swarajyamag.com/politics/pratap-sarangi-and-the-slander-fest-around-him
[11] இதனை நான் பதிவு செய்து வெளிகாட்டியுள்ளேன்.