Posts Tagged ‘ஒரிஸா’

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்துவிரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]

Jhabua 3 nubs raped 1998

1998 – ஜாபுவா [Jhabua] கற்பழிப்பு நாடகம்: 1998ல், இதைப்பற்றி, வாடிக்கையாக, ஊடகங்களில் “ஜாபுவா கற்பழிப்பு” என்று அதிகமாக செய்திகளை, விதவிதமாக வெளிவந்தன, டிவிக்களில் விவாதங்களும் நடந்தன[1]. மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று ஜாபுவா, இங்கு நான்கு / மூன்று கன்னியாஸ்திரிகள், 24 வனவாசிகளால் கற்பழிக்கப்பட்டதாக, முதலில் செய்திகள் வந்தன[2]. உண்மையில் பில் என்ற வனவாசிகள் சம்பந்தப் பட்டதால்[3] / இவர்கள் “கிரிமினல் டிரப்ஸ்” [Criminal Tribes] என்பதால் அமைதியாகினர்[4]. பிறகு இந்துக்கள் கற்பழித்தனர், இந்து இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்களால் கற்ழிக்கப் பட்டனர் என்று செய்திகள் மாறின. அதற்கு, முதலமைச்சர் திக்விஜய் சிங் தான் காரணம், ஏனெனில், அவர்தான் அப்படி சொல்லி பிரச்சினையை திசைத் திருப்பப் பார்த்தார்[5]. ஆனால், இது பொய் என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தனது அதிகாரத்தை வைத்து தப்பித்துக் கொண்டார். ஆனால், அத்தகைய பொய் செய்திகள் உலகம் முழுவது பரவின. இதற்குள் விசாரணையில், கற்பழித்த வனவாசிகள் எல்லோருமே கிருத்துவர்கள் என்று தெரிய வந்தது. அதவாது, கிருத்துவர்களே, கன்னியாஸ்திரிக்களை கற்பழித்தார்கள் என்றாயிற்று[6]. இதனால் இந்தியாவிற்காக அவப்பெயர் தான் உண்டாக்கப்பட்டது. இந்துக்கள் செய்தார்கள் என்ற பிரச்சரத்தால், இந்துக்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், உண்மை வெளிவந்த பிறகு, ஊடகங்கள், பழைய செய்திகளை மறக்கவில்லை.

Jhabua 4 nubs raped 1998

Jabua nun case 2003

40 raped nun, Australian press 2008

The Nun, reportedly raped in Kandhamal

2008 – கந்தமால் கன்னியாஸ்திரீ கற்பழிப்பு: ஸ்வாமி லக்ஷ்மணானந்த 23-08-2008 அன்று கிருத்துவ-மாவோயிற்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில் வனவாசிகள், எஸ்சிக்கள் முதலியோர் ஈடுபட்டதால், வன்முறை அதிகமாகவே இருந்தது. இதற்குள், “40 பேர் சேர்ந்து என்னை கற்பழித்தனர்,” என்று ஒரு கன்னியாஸ்திரீ டிவியில் பேட்டி கொடுத்தாள் என்று உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகின. 25-08-2008 அன்று கற்பழிக்கப் பட்டாள் என்று 30-09-2008லிருந்து செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டதை தெரிவிக்கப் பட்டது. அதாவது, கற்பழிப்பு நடந்தது உறுதியாக சொல்லமுடியாது என்றாகிறது. பிறகு 12 பேர் கற்பழித்தனர் என மாறியது. அதற்கும் பிறகு 9 என்றாகியது. மார்ச் 2014ல், தான் கற்பழிக்கப்படவில்லை என்று பேட்டி கொடுத்தாள். 12 போஈஸ்காரர்கள் முன்பாக தன்னை நடத்திச் சென்றனர் என்றாள். போலீஸாரே தாமதப் படுத்தினர் என்றனர். “துரித நீதிமன்றம்” உண்டாக்கப் பட்டு வழக்கு விசார்க்கப்படவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 29-06-2010 அன்று, நீதிமன்றம் மூன்று பேருக்கு தண்டனை அளித்து மற்ற ஆறுபேரை, ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது.  அந்த மூன்று பேர் – ம்துவா என்கின்ற சந்தோஷ் பட்நாயக், கஜேந்திர திகல், சரோஜ் பன்டேய் என்று குறிப்பிடப்பட்டது. இவர்கள் கிருத்துவரா, இந்துக்களா என்று தெரியவில்லை.

Raped nun,medical report, NDTV 2008

26-03-2015 – ரனாகட், நாடியா, மேற்கு வங்காள 71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு:  மார்ச் 2015ல் “71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு” என்று அதிரடியாக செய்தி வெளியாகியது. இந்தியாவில், கிருத்துவர்களுக்கு பாதுகாப்பே இல்லை, கன்னியாஸ்திரீக்கள் தினம் – தினம் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று ஆரம்பித்தனர்….இருவர் கைது செய்யப் பட்டனர், சந்தேகத்தின் மீது இருவர் கைது செய்யப் பட்டனர் என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிறகு, அவர்கள்ன்முகில் ஆலம் [வயது 28] மற்றும் மொஹம்மது மஜித் [29], பங்களாதேச முஸ்லிம்கள் என்று தெரிய வந்தது. உடனே எல்லோரும் அடங்கி விட்டனர். அதாவது, இந்திய ஊடகக்காரர்கள் நிலை என்பது கேள்விக்குறியாகிறது. “இந்துக்கள்” என்றால், புல்லரிக்கிறது, குஷியாக இருக்கிறது, முஸ்லிம்கள் / கிருத்துவர்கள் என்றால், அவை இல்லாமல் போகிறதா? அப்படியென்றால், கற்பழிப்புகளிலும், மதம் பார்க்கப் படுகிறதா? இந்த எண்ணம் என்ன, மனப்பாங்கு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

John Dayal and the Nun, reportedly raped in Kandhamal

பாரபட்சம் கொண்ட ஊடகங்கள், எழுத்தாளர்கள்: எழுத்தாளர்களும் பாரபட்சத்துடன் எழுதி வருகிறார்கள். ஸ்டைஸின் கொலை, ஒரு பெரிய தியாகம் போன்று வர்ணிக்கப் படுகிறது[7]. கிருத்துவர்கள் ஏன் தண்டிக்கப் படுகிறார்கள் என்று கேள்வி கேட்ப்ச்தை விட, அந்த அளவிற்கு அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். பொதுவாக இந்தியர்கள் மற்றவர்கள போலில்லாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்று தான் வாழ்ந்து கொண்டிருப்பான். கடந்த 900 ஆண்டுகளாக அவன் தான் மற்றவகளால் பாதிக்கப் பட்டுள்ளான். இந்த பிரச்சாரம் உலகம் முழுவதும் இன்றும் செய்யப் படுகிறது[8]. “கிருத்துவ-விரோத வன்முறை” என்று சொல்லப் படுவதே தவறானடாகும், ஏனெனில், எந்த கலவரம் நடந்தாலும், அதிகமாக பாதிக்கப் படுவது இந்துக்கள் தாம். ஆனால், அதைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை. கிளாடிஸ், ஏதோ, பெண்தேய்வம் போன்று போற்றப் படுவதும் தெரிகிறது. வாத்வா கமிஷன் விமர்சிக்கப் படுகிறது. லக்ஷமணானந்தரின் கொலையை சிறுமைப் படுத்தி, கிருத்துவர்கள் தண்டிக்கப் பட்டனர் என்று கிருத்துவ பிரச்சாரகர்கள் எழுதி தள்ளியுள்ளர்[9]. இந்துத்துவத்தைத் தாக்கும் கொள்கை கொண்ட, ஜே.என்.யூ கோஷ்டிகள், மற்றவர்களுக்குத் தீனி போடும் வேலையை செய்து வருகின்றன[10]. அவை இந்துக்களின் நலன், உரிமைகள் முதலியவற்றைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.

Vinavu against Sarangi-1

Vinavu against Sarangi-2

Vinavu against Sarangi-3

கருத்திற்கொள்ள வேண்டிய விசயங்கள்: இனி, மேற்குறிப்பிடப் பட்ட விசயங்களுடன், சேர்த்து, இந்த விசயங்களையும் படித்தால், உண்மை விளங்கும்:

  1. சுவாமி லக்ஷமணானந்த ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  2. 82 கிழவர் என்று பாராமல், நடு இரவில், கிருஷ்ணாஸ்டமி பூஜையின் போது, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ளின.
  3. பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், பழங்குடிகளுக்கு சேவை செய்தார், கிருத்துவராக மாற்றமுடியவில்லை என்றது தான் பிரச்சினை.
  4. 1999ல் கிராம் ஸ்டைன்ஸ் கொலை செய்யப்பட்டபோது, இவர் பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், அதனால், இவர் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
  5. இப்பொழுது, ஊடகங்கள் சம்பந்தம் இல்லாமல், பிரச்சாரம் செய்கின்றன, ஆனால், என்ன குற்றம் என்று சொல்லவில்லை.
  6. 2002 கலவர வழக்கில் மட்டும் தான், நிலுவையில் உள்ளது, அதனை, தன்னுடைய தேர்தல் படிவத்தில் குரிப்பிட்டுள்ளார்.
  7. ஆனால், அந்தகைய குரூர-கொலைகார கிருத்துவ-மோவோயிஸ்டுகள் பற்றி, இந்த நவீன ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன!
  8. ஷாம்நாத் பகல் கொலைவழக்கில் நந்தினி சுந்தர், அர்ச்சன பிரசாத், வினீத் திவாரி, ஜோஷி அதிகார் சன்ஸ்தான், சஞ்சய் பரதே சிக்கினர்.
  9. நந்தினி சுந்தர் – தில்லி பல்கலை Prof, பார்ச்சன பிரசாத் JNU-Prof, சஞ்சய் பரதே CPI[M] தலைவர் – இவர்களை கொலைகாரர்கள்[11] என்று என்னென்றும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?
  10. இந்து விரோதத் தனத்தைத் தான், ஆங்கில ஊடகங்கள், இவ்வாறு, பொய்மையுடன் கொட்டித் தீர்க்கின்றன! மற்றவை பின்தொடரும்.

© வேதபிரகாஷ்

05-06-2019

Kadhmal rape etc falsified - outlook, Balbir Punj

[1] The Frontline, Communal outrages in M.P., V. VENKATESAN, Vol. 15 :: No. 21 :: Oct. 10 – 23, 1998

[2] https://frontline.thehindu.com/static/html/fl1521/15210300.htm

[3] Rediff.com, ‘I never thought something like this could happen in our village. The nuns were so good to us’, Syed Firdaus Ashraf in Jhabua, September 28, 1998

[4]  https://m.rediff.com/news/1998/sep/28jhab.htm

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironic that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians.

[6]  At that time the incident had caused a lot of outrage with many prominent Christians and human rights activists appealing to UK for sanctions against India. Many Hindu organisations were blamed without proof and the whole country was maligned. The incident captured much front space on newspapers. Later on rapists were found to be Christians themselves and tribals (whom Indian Christians don’t consider as Hindus); this news was not covered so prominently as now Hindu organisations could not be blamed and was found in inside pages of very few newspapers. Madhya Pradesh Chief Minister Digvijay Singh insinuated that Hindus were responsible for the gang-rape. However, later reports found that there were just six families of tribal converts in the two villages. Arun Shourie in his book Harvesting our Souls writes that false allegations were made to malign Hindus.

[7] Hoefer, Herbert. Why are Christians persecuted in India? Roots, reasons, responsesInternational Journal of Frontier Missions 18.1 (2001): 7-12.

[8] Trapnell, Judson B. The Controversy and its Theological ImplicationsJournal of Hindu-Christian Studies 15.1 (2002): 7.

[9] Malec, Joanna. Anti-Christian violence in the Indian State of Orissa in 2008 in the reports of non‑governmental organizations, Orientalia Christiana Cracoviensia 3 (2011): 91-106.

[10] Sarkar, Tanika. Who Rules India? A Few Notes on the Hindu Right. (2018).

[11] In FIR, the following were mentioned accused”

  1. Shamnath Baghel, a resident of Nama village in Sukma district, who was allegedly killed by Maoists on November 4, 2016.
  2. Delhi University professor Nandini Sundar
  3. Jawaharlal Nehru University professor Archana Prasad,
  4. Vineet Tiwari from Delhi’s Joshi Adhikar Sansthan,
  5. Chhattisgarh Communist Party of India (Marxist) leader Sanjay Parate
  6. local sarpanch Manju Kawasi
  7. a villager, Mangla Ram Verma,

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன? [4]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ், ராதாகன்ட நாயக், இவர்களின் வேலை என்ன? [4]

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-1

ராதாகன்ட நாயக் என்பவரின் வேலை: 2000 தேர்தலில் கூட மாநில பிஜேடிக்கும், காங்கிரஸுக்கும், இவர் விசயத்தில் மோதல் ஏற்பட்டது. மதமாற்றம் பிரச்சினையிலும், ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவோடு பிரசினை கொண்டார். இதே நாதாகன்ட நாயக் தன் மதத்தை மாற்றிக் கொண்டு லாபம் அடைய முதல்வதாக பிஜேடி தெரிவித்தது. மேலும், ஊழல் அதிகாரிகளின் பட்டியலில் நாயக் பெயர் இருப்பதைச் சுட்டிக் காட்டியது [1]. இந்த ராதா கன்ட நாயக், ஒரு பெரிய பணக்கார கிருத்துவர். IAS அதிகாரி, சோனியா காந்திக்கு வேண்டியவர். YMCA, “வார்ல்ட் விஷன்” [World Vision] போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவர், உறுப்பினரும் கூட. இப்பொழுது, விவரங்கள் கொண்ட விசித்திரமாக, காந்தி அமைதி மையத்தின் உதவி-தலைவராகவும் இருந்தார்[2]. காந்தியின் பெயரில் இயங்கும் நிறுவனங்களுக்கு, எப்படி இத்தகைய ஆட்கள் தலைவராக இருக்க முடியும் என்று, எந்த அறிவுஜீவியும் கேட்கவில்லை, செய்திகளும் வெளியிடுவதில்லை. மதம் மாறிய பனோஸ் என்ற குய் மொழி பேசும் எஸ்.டிக்களுக்கு[ST] எஸ்.சி [SC] அந்தஸ்து வாங்கிக் கொடுக்கிறேன் என்றும் வேலை செய்தார்[3] என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவ்விசயத்தில் அந்த பிரிவுகளிடையே பதட்டம், மோதல்கள் ஏற்பட்டன. இதனால், ஒரிஸாவுக்கு வருவதையும் தவிர்த்தார், சோனியாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இவையெல்லாம், இவர் இப்பகுதியில் அமைதியைக் குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என்று நன்றகவே புலப்படுகிறது..

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-2

இவ்விவரங்கள் மறைகின்றனமறைக்கப் படுகின்றன: இணைதளங்கள் எல்லாம் மறைய ஆரம்பித்து விட்டன[4]. இதைப் பற்றி, www.indiainteracts.com என்ற இணைதளத்தில் நான் பதிவிட்டிருந்த கட்டுரைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. www.sulekha.com என்ற தளத்தில் போட்ட கட்டுரைகளும் காணாமல் போய் விட்டன. வலதுசாரி தளங்களில் மட்டும் சில விவரங்கள் காணப்படுகின்றன[5]. குறிப்பாக காங்கிரஸ், World Vision தொடர்புகள் மறைக்க விவரங்கள் மறைகின்றன-மறைக்கப் படுகின்றன என்று தோன்றுகிறது[6]. இப்பொழுது குறிப்பிட்ட இந்த தளங்களில் உள்ள விவரங்களும் முந்தைய ஆண்டுகளில் வெளி வந்த செய்திகளின் மீது ஆதாரமாக எழுதப் பட்டவை. ஆனால், அவையும் மறைய ஆரம்பித்துளன. இனி, ஆதாரங்களைக் காட்டுங்கள் என்றால், அந்தந்த மாநில ஆவண காப்பகங்கள் மற்றும் செய்திதாள் நிறுவனங்களிலிடமிருந்து விவரங்களைப் பெற வேண்டும். ஆகவே, இதைப் பற்றிய உண்மைகளை மறைக்க பார்க்கின்றனர் என்பது புலனாகிறது.

Radhakant Nayak IAS, Congress behind Laxamanananda murder, India Today-3

கொலைக்குப் பிறகு ஏற்பட்ட கலவரம்: ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லக்ஷ்மானந்தா உட்பட 5 பேர் மர்ம நபர்களால் 23-08-2008 அன்று சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களில் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 9 பேருடைய சாவை அரசு தரப்பு உறுதி செய்துள்ளது.  இந்நிலையில், பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி நான்காவது நாளாக 27-08-2008 அன்று வன்முறைகளும், கலவரங்களும் தொடர்வதால், கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளதாக மண்டல வருவாய் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். பலிகுடா, உதய்கிரி ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுடன், பெருமளவில் வந்த “மர்மக் கும்பல்” மோதலில் ஈடுபட்டதாகவும், தடிகளுடன் இரும்புக் கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருந்ததாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். ராய்கா போன்ற வனப் பகுதிகளில் பதுங்கியுள்ள “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், இதில் 2 அதிகாரிகள் படுகாயமடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “மர்மக் கும்பல்” என்பதும், “மர்மக் கும்பல்” அவ்வப்போது காவல் அதிகாரிகளைத் தாக்கி வருவதாகவும், என்றெல்லாம் குறிப்பிடுவது, அது தெரிந்து செய்வது போலிருக்கிறது. இல்லை, நாடகமாகவும் இருக்கலாம்.

Jayswal visits Kandhamal

ஒரிசாவில் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்!: இதற்கிடையில் கலவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலைமையை ஆராய்வதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் [மன்மோஹன் சிங் கீழ், காங்கிரஸ் கட்சி] ஒரிசா விரைந்தார்.  கந்தமால் மாவட்டத்தில் பரவிவரும் வன்முறைகள் குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் கவலை தெரிவித்துள்ளதாக புவனேஷ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வி.எச்.பி. தலைவர் லக்ஷ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்ட மூன்று நாட்களாகியும் கந்தமால் மாவட்டத்தில் கலவரங்கள் கட்டுக்குள் வரவில்லை என்பது கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஒரு குழுவினருடன் அங்க செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.  முன்னதாக, ஒரிசா மாநில ஆளுநர் எம்.சி.பந்தாரே, தலைமைச் செயலர் அஜித் குமார் திரிபாதி, உள்துறைச் செயலர் டி.கே.மிஸ்ரா, டி.ஜி.பி. கோபால் நந்தா ஆகியோருடன் அமைச்சர் ஜெஸ்வால் ஆலோசனை நடத்தினார்.

Naveen Patnaik at the Jalespata ashram,after the murder of Swami Lakshmanananda Saraswati, on August 31, 2008.

கிரிமினல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கமுடியாது என்று சட்டம் இருக்கவேண்டும்: காங்கிரஸின் The National Herald[7], மற்றும் கம்யூனிஸ The wire[8] போன்ற “முற்போக்கு முகமூடி” ஊடகங்கள் அரைத்த மாவையே அரைத்து, ஏதோ கொலைசிகாரன் மந்திரியாகி விட்டான் என்பது போல, கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்கின்றன!  இவை ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியைத் தான் திரித்து, தமிழ் ஊடகங்கள் வெளியிடுள்ளன. நேஷனல் ஹெரால்ட் கூட, சாரங்கியின் தேர்தல் மனுவில் உள்ள விசயங்களை வைத்து தான், “செய்தி” வெளியிட[9] மற்றவை ஊதி பெரிதாக்கி இருக்கிறது. பிரதாப் சாரங்கி மீது வழக்கு ஜோடிக்கப் பட்டுள்ளன என்றால், முறைப்படி அதை எதிர்த்திருக்க வேண்டும். எம்,எல்.ஏவாக இருந்து, மத்திய அமைச்சராக வருபவருக்கு அது தெரியாமல் இருக்காது. அரசியல்வாதிகள் கைதாவது,, வெளியே வருவது என்பது சகஜமாக இருக்கிறது. ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலந்து கொண்டு கைதானவர்கள், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” என்ற ரீதியில் தான் நடந்து வந்துள்ளது. இதேபோல, வழக்குகள் நிலுவையில் உள்ளவர் என்று பல பிரபலங்கள் உள்ளன. அவர்களைப் பற்றியும், இதே போல செய்திகளை வெளியிடலாம். ஆனால், எல்ல்லோரையும் விடுத்து சாரங்கியை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பதால், அவரது பெயரை களங்கப் படுத்தவே, அவ்வாறு செய்கின்றனர் என்று தெரிகிறது.

Hindutwavadis has to counter such false propaganda 01-06-2019

இந்துத்துவ வாதிகளால் எதிர்கொள்ள முடியாத, எதிர்பிரச்சாரம் செய்யலாகாத, மறுக்க முயலாத பொய்பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று: ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு தீ வைத்து கொளுத்திய பிரதாப் சாரங்கி இப்பொழுது பாஜகவின் மத்திய அமைச்சர், என்ற பிரச்சாரத்தை, இந்துத்துவவாதிகள் எதிர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருக்கின்றனர். சுவாரஜ்யா[10] ஓரளவிற்கு மறுத்தாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஜே.என்.யூ எழுத்தாளர் போல, “உள்குத்து” குத்துகிறார்[11]. மேலும், இதே பிரிவுகளில் அருந்ததீ ராய், ஜே.என்.ஏ “டுக்டே-டுக்டே” கும்பல், பிரபல “அர்பன் நக்ஸல்கள்,” தமிழக நாத்திக-தேசவிரோத வகையறாக்கள் என்று பலர் உள்ளனர். அவர்கள் மீதும் இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், இந்துத்துவவாதிகள் முறையாக செய்யாதலால், தமிழ் ஊடகங்கள் அள்ளி வீசுகின்றன. தமிழக பத்திரிகா தர்மம், ஊடக நாகரிகம், கருத்துரிமை குரூரம், விபச்சார ரசனை, சிந்தனா-அசிங்கம், இவ்வாறு வெளிப்படுகிறது! உண்மையில் 1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலை மற்றும் ஆகஸ்டு 23, 2008 சுவாமி லக்ஷமணானந்த கொலை, தனிதனியாக அலச வேண்டும். இரண்டிலும் மாவோயிஸ்ட்-கிருத்துவர்களின் தொடர்புகள் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

05-06-2019

Radhakant Nayak IAS, with church

[1] …..the Naveen Patnaik-led party has accused Radhakanta Nayak – an Independent candidate backed by the Congress – of changing his religion twice to reap “undue benefits”. According to the BJD, Nayak’s name also figures on a list of “corrupt officials” prepared by the Central Vigilance Commission and posted on its website on February 24. Nayak is a retired IPS officer…………. the Congress is also believed to have convinced the other Independent legislators to back Nayak.

The Telegraph, CONGRESS, BJD LOCK HORNS , By FROM OUR SPECIAL CORRESPONDENT, Published 28.03.00

https://www.telegraphindia.com/india/congress-bjd-lock-horns/cid/901880

[2] VICE CHAIRPERSON, GANDHI PEACE CENTRE, Founder-Coordinator (Honorary) NISWAS 3
Chandrasekharpur Bhubneshwar, Orissa – 751023; Mob No. 08018265276:

E-Mail: rknayak2007@googlemail.com ; Dr. Radhakant Nayak associated with GPC since 2007. He also runs a reputed NGO –NISWAS at Bhubaneswar , Orissa. In addition to many social welfare activities it is also managing a School for Social Welfare which conducts 2-year MSW course. He retired as Secretary, Ministry of Rural Development, Govt. of India.

[3] The Mumbai Mirror, Congress MP fears slain VHP leader’s followers may target him, By Lakshmi Iyer | Updated: Aug 29, 2008, 03:25 IST .

Congress Rajya Sabha MP from Orissa Radhakant Nayak, who is known to have openly crossed swords with slain VHP leader Swami Lakshmananda Saraswati on the conversion issue, is staying put in Delhi as he fears for his life. According to the Kandhamal police website, the conversion of tribal population has been a major source of trouble in the area. The numbers of Christians in the district has been increasing steadily and, as per 1991 Census, account for 15 per cent of the population. There is opposition to the activities of missionaries in some areas such as Kotagarh, Balliguda, Sarangada, Phiringia PS areas. Due to this recent development, there is ill-feeling and tension on communal lines in villages. Sources said Nayak’s efforts to get ST status for Kui-speaking Panos who have converted to Christianity has been one of the causes for communal friction. Nayak is a Dalit who  belongs to the Pano caste. Congress sources said Nayak refuses to visit Orissa fearing for his life. On Wednesday, he reportedly met Congress president Sonia Gandhi and sought extra security cover for himself, stating that he feared a revenge attack.

https://mumbaimirror.indiatimes.com/news/india/Congress-MP-fears-slain-VHP-leaders-followers-may-target-him/articleshow/15846789.cms?

[4] http://yatratatrasarvatra.blogspot.com/2008/12/radha-kant-nayak-sonia-mainos-right.html

[5] http://indiafacts.org/laxmanananda-saraswati-unmourned-yet-again/

[6] https://www.scribd.com/document/16843413/a-Nayak-Murdered-Swami-a-Saraswati

[7] National Herald, Minister Pratap Sarangi has blood on his hands; an austere life is not a life without crime, Ashlin Mathew, Updated: 31 May 2019, 11:20 PM.

[8] The Wire, NDA 2.0: Social Media ‘Hero’ Pratap Sarangi Faces Serious Criminal Cases, the Wire staff, June.1, 2019.

https://thewire.in/politics/minister-of-state-pratap-sarangi-criminal-cases

[9] https://www.nationalheraldindia.com/india/minister-pratap-sarangi-has-blood-on-his-hands-an-austere-life-is-not-a-life-without-crime?fbclid=IwAR2bTlEHBXi0cgwc6snjEOjTcajc-pvNXF10ydSYmXGeFSb2ZGWFC4TL2pE

[10]  Pratyasha Rath, Pratap Sarangi And The Slander Fest Around Him, Jun 02, 2019, 4:44 pm

https://swarajyamag.com/politics/pratap-sarangi-and-the-slander-fest-around-him

[11] இதனை நான் பதிவு செய்து வெளிகாட்டியுள்ளேன்.

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

ஜூன் 5, 2019

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர ஊடகங்களின் தாக்கு ஏன்? [1]

Nakkeeran against Sarangi

பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: பிரதாப் சந்திர சாரங்கி மே 30, 2019 அன்று பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற போது, பிரதாப் சந்திர சாரங்கி என்பவர் சிறுகுறு தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு துறை இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். கரகோஷத்துடன் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, யார் இவர் என்ற கேள்வி எழுந்தது. அடுத்த நாளே அவரைப் பற்றிய செய்திகள் வெளியாகின. ஆனால், உடனே, அவருக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. அவரது தேர்தல் விண்ணப்பத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்றதை நேஷனல் ஹெரால்ட் என்ற காங்கிரஸ் நாளிதழ்  வெளியிட அதை வைத்து, மற்ற ஆங்கில நாளிதழ்கள், ஊதி பெரிதாக்கி செய்திகள் வெளியிட்டன. பிறகு, தமிழ் ஊடகங்களும் பிடித்துக் கொண்டன. உதாரணத்திற்கு “நக்கீரன்”…. “அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது, என்று “நக்கீரன்” பீடிகையுடன் ஆரம்பித்தது[1]. மற்றதை கீழே படிக்கலாம்.

Nakkeeran against Sarangi-2

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன: நக்கீரன் தொடர்கிறது, “64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது. அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்,” என்று வர்ணித்தது[2]..

Samayam against Sarangi

1999 கிராம் ஸ்டைன்ஸ் கொலையுடன் முடிச்சு போடுதல்: கமல்குமார் என்ற பெயரில், நக்கீரன் தொடர்கிறது[3], “இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர். இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுமேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன,” என்று முடிக்கிறது[4]

LankaSri- false propaganda against Sarangi.

சமயம் [Times of India, Tamil] இவ்வாறு வர்ணிக்கிறது[5], “ஆனால் சாரங்கியின் மறுபக்கம் மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. ஒடிசாவில் நடந்த பல்வேறு மத மோதல், வன்முறை சம்பவங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. …..இந்த கொலை வழக்கில் போலீசாரின் சந்தேகம் முழுக்க பிரதாப் சாரங்கியின் மீது தான் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் பலமுறை விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் எப்படியோ அந்த வழக்கிலிருந்து அவர் வெளியே வந்துவிட்டார். …..2002ம் ஆண்டு ராமர் கோயில் பிரச்னை எழுந்த போது, சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒடிசாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது ஏற்பட்ட வன்முறையில், ஒடிசா சட்டசபை கட்டிடத்தை அடித்து சேதப்படுத்தியதாக சாரங்கி கைது செய்யப்பட்டுள்ளார் மேலும், ஒடிசாவின் மோடி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் சாரங்கி மீது வன்முறை, சூறையாடல், தீ வைப்பு, மத மோதல் என மொத்தம் 7 கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அதன் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது…..,” மேலும், “ஆனால் பிரதாப் சாரங்கி அமைச்சரான உடன் அவர் தொடர்புடைய குற்ற வழக்குகள் ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் இதெல்லாம் நீர்த்து போகச் செய்யப்படும் என ஒடிசாவின் முக்கிய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர் ,” என்று முடிக்கிறது[6]. ஆனால், பின்னணி, முதலியவை எதுவும் சொல்லப் படவில்லை.

Satyam TV - on Sarangi-disappeared-full

பசுத்தோல் போர்த்திய புலியின் கதை: “பசுத்தோல் போர்த்திய புலியின் கதை,” என்று தலைப்பிட்டு, சத்திய டிவி செய்தி வெளியிட்டுள்ளது. “கிளிக்” செய்தால் காணவில்லை. 9962311611 / 9500 60660 எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசினாலும், சொல்லத் தயங்குகின்றனர். பிறகு எடுக்காமலேயே தவிர்த்தனர். லங்கஶ்ரீ என்ற இணைதளமும், “கிறிஸ்தவமத போதகரை குடும்பத்துடன் எரித்துக் கொன்றவர்……………….மோடி அரசில் அமைச்சர் பொறுப்பு….” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதெல்லாமே, அந்த ஜாபுவா, கந்தமால் கற்பழிப்பு செய்திகள் போலவே இருக்கின்றன. அதாவது, அந்த கற்பழிப்புகளில் ஈடுபட்டவர்கள் கிருத்துவர்கள் தான் என்றதும் மூடிக்கொண்டு அமைதியானார்கள். அதேபோல, கந்தமால் கன்னியாஸ்திரீயின் முரண்பட்ட செய்திகள், வாக்குமூலம், சோதனைக்கூட அறிக்கை எல்லாம் வந்தவுடன், மறுபடியும் மௌனியானார்கள். ஏனெனில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டாள் என்று தெரிந்தது. மேலும், முதலில் தன்னை யாரும் கற்பழிக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தாள். ஆனால், இன்றைய தேதியில், இவையெல்லாமே இணைதளங்களிலிருந்து மறைந்து விட்டன. ஆனால், உலகம் முழுவதும், இந்துக்கள் கன்னியாஸ்திரீக்கள் தினம் தினம் கற்பழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது போல செய்திகளை வெளியிட்டனர்!

Sathyam TV news on Sarangi suppressed

தமிழ்.இந்து வக்காலத்து வாங்குவது: தி.இந்து.தமிழ் குறிப்பிடுவதாவது, “இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் கூறும்போது[7], “என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்னானவை. போலீஸ் வேண்டும் என்றே செய்துள்ளது ஏனென்றால் நான் லஞ்சத்தை எதிர்த்து போராடினேன். சமூகத்தில் நடந்த அநீதிகளுக்கு எதிராக போராடினேன். அதனால் ஊழல் நிறைந்த அரசு அதிகாரிகள் நான் எதிரியாகி உள்ளேன். அதனால் எனக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்தனர். என் மீதான பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. மீதமுள்ளவையும் தள்ளுபடி செய்யப்பட்டன” என்றார். சாரங்கி ஒரு காலத்தில் ஒடிசா பஜ்ரங் தல் தலைவராகவும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா சட்டப்பேரவைக்கு இரண்டு முறை தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது[8]. தி.இந்து மற்றும் பிரென்ட் லைன் விசுவாசத்துடன் மற்ற விவரங்களை வெளியிடும் போது, இந்துக்கள் விசயத்தில் மட்டும், எதிரான விசயங்களை மட்டும், முக்கியத்துவம் கொடுத்து போடுவதேன் என்ற கேள்வியை, இந்துக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்பொழுதும், முழு விவரங்களை வெளியிடாமல், சாரங்கி சொன்னார் என்று தான் செய்தி வெளியிட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

05-06-2019

Sarangi playing cricket on the road

[1] நக்கீரன், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), கமல்குமார்

[2] https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[3] கமல்குமார், என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும், Published on 01/06/2019 (13:04) | Edited on 01/06/2019 (14:11), நக்கீரன்.

[4]  https://www.nakkheeran.in/special-articles/special-article/back-story-pratap-chandra-sarangi-odisha-modi

[5] சமயம், ஏழை பங்காளன் பிரதாப் சாரங்கி மீது ஏழு கிரிமினல் வழக்குகள்அதிர்ச்சியூட்டும் பின்னணி..!, Samayam Tamil | Updated:Jun 1, 2019, 02:53PM IST

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/union-minister-odissa-s-pratap-singh-has-another-face-which-has-7-criminal-records-all-been-on-investigation/articleshow/69609653.cms

[7] தி.இந்து.தமிழ், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை; லஞ்சத்தை எதிர்த்து போராடினேன்பிரதாப் சந்திர சாரங்கி, Published : 31 May 2019 18:29 IST; Updated : 01 Jun 2019 10:59 IST.

[8] https://tamil.thehindu.com/india/article27378851.ece

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

ஜூலை 16, 2013

மறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன!

அந்நிய ஊடகங்களின் இந்திய விரோத பிரச்சாரம்: மறுபடியும் கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். “கூட்டு கற்பழிப்பு” [gange rape] செய்யப்பட்டிருக்கிறாள்[1]. அந்நிய நாளிதழ்களில் வழக்கம் போல பிரபலமாக, அதிரடி பாணியில் செய்திகளைக் கொடுத்துள்ளன:

ஒரு கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டுள்ளது[2]:

Catholic nun kidnapped, raped in India

Catholic Culture-9 hours ago

A Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubled Orissa state earlier this month. The 28-year-old victim 

The Orissa state has a history of recent turmoil, much of it pitting Hindus against Christians.

இந்துக்களை கிருத்துவர்களுக்கு எதிராக மோத வைத்து கலவரங்களை ஏற்படுத்துவதில் ஒரிசா மாநிலம் தனக்கென சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தை நிகழ்சிகள் கூட அவற்றைக் காட்டுகின்றன என்று முடித்துள்ளது.

உடனே கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் இது பெண்களின் மீதான தீவிரவாதம். நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். “இது ஒரு திட்டமிட்ட செயல்”, என்றும் கூறியிருக்கிறார்.

“I condemn this gang rape of this young nun in the strongest possible terms.  This is gang rape is physical and emotional terrorism against our woman” Card. Oswald Gracias, president of the Bishops’ Conference of India (CBCI) tells AsiaNews reacting to the attack on a nun in Orissa. The religious of the Franciscan Missionaries of St. Joseph, lived in Chennai (Tamil Nadu) to continue her studies.

“This violation of our young woman religious – said the cardinal – is evil act inflicted on this woman religious who has consecrated  her life to God Rape is an abhorrent crime and an abominable transgression against the honour of women and reflects abysmal state of women in  our society, community and nation”.

Considering the dynamics of the attack, the cardinal stressed that “this wasn’t a random act of barbarism, it was meticulously planned allegedly as an act of retaliation and this heightens the gravity of the deplorable and utterly reprehensible crime.”

லண்டனிலிருந்து வெளிவரும் “டெயிலி மெயில்”, “ஒரிசாவில் கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக மைத்துனனும், நண்பனும் கைது” என்று அறிவிக்கிறது[3]. சம்பந்தமே இல்லாமல் சென்ற வருடத்தைய ஒரு புகைப்படத்தையும் போட்டுள்ளது.

சென்னையிலிருந்து கந்தமால் வரை: சென்னையில், செயின்ட் மேரீஸ் கான்வென்டில் [St Mary Convent] கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மூவருள் இருவரை, போலீசார் கைது செய்தனர்[4]. இதில் ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder ] இருவரும் மைத்துனர்கள் ஆவர்[5]. மூன்றாமவன் தப்பித்து விட்டான், ஆனால், போலீஸார் தேடி வருகின்றனர்[6].

கன்னியாஸ்திரியின் உறவினர்கள் அழைத்தது: ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி (05-07-2013, வெள்ளிக்கிழமை), ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[7]. பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி (11-07-2013, வியாழக்கிழமை) இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.

கன்னியாஸ்திரி புகார் கொடுத்தது: ஜூலை 13 அன்று தப்பித்துச் சென்று, வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர்[8]. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது[9]: “கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, section, கடத்தல் -366 (kidnapping), நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு -376 (rape), பலாத்காரம் செய்யவேண்டி தாக்குதல்355 (assault to dishonour person), குற்றம் செய்ய சதிதிட்டம் தீட்டுதல் 120(B) (criminal conspiracy) of the IPC. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு MKCG மருத்துவமனையில் [MKCG Medical College Hospital in Berhampur] மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[10].

கிருத்துவர்களின் இந்தியாவிற்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரங்கள்: கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கிருத்துவர்கள் தாமே, பிறகு ஏன் கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டு ஊளையிடுகிறது[11]. ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder] என்று பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் இந்துக்கள் ஆவார்களா, இல்லை அவர்கள் ஏன் அப்படி இந்துபெயர்களை வைத்திருக்கின்றன என்று கேட்டால், அதற்குக் காரணமே, கத்தோலிக்க வாடிகனின் மோசடி வேலைகளே. முன்பு ஜபுவாவில் இதே போல “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று உலகம் முழுவதும் அலறி ஓலமிட்டன. ஆனால், கற்பழித்ததில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் என்றும் அடங்கி விட்டன. பிறகு “கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று கலாட்டா செய்தனர். மருத்துவ அறிக்கைகளில் அவள் ஏற்கெனவே உடலுறவுக் கொண்டிருப்பதால், கற்பழிக்கப் பட்டாளா என்று சொல்லமுடியாது என்று தெரிய வந்தது. தில்லியைச் சேர்ந்த அதிகாரம், செல்வாக்குக் கொண்ட ஒரு கத்தோலிக்க பாதிரி வேறு பெண்ணை முகமூடி இட்டு கொண்டு வந்து பேட்டியளிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவர்களே அதனை அமுக்கிவிட்டனர்.

  • முன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[12].
  • அதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[13].

கிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிலே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன! கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான்! ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க? இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கற்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[14]. இப்பொழுது இப்பிரச்சினை எழுந்துள்ளது.

பெண்களை கற்பழிக்கத் தூண்டும் காரணிகள்,  சக்திகள்,  காரணங்கள் யாவை?: பெண்கள் கற்பழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில், இளைஞர்களை அவ்வாறு சீரழிய வைத்து, மனங்களைக் கெடுத்து, பெண்களை காமப் பொருட்களாக பாவிக்க வைத்து, அவர்களை கற்பழிக்கத் தூண்ட வைக்கும் சக்திகள் யாவை, அவை ஏன் அவ்வாறு செய்து வருகின்றன, இந்திய சமூகத்தின் மீது அவை எப்படி அத்தகைய செயல்களை செய்து வருகின்றன என்பதனையும் ஆராய வேண்டும்.

வேதபிரகாஷ்

© 16-07-2013


[6] The two cousins — Jatindra Subhasunder and Jogendra Subhasunder — were arrested, while the third accused was still at large, Kandhamal district Additional Superintendent of Police Gobind Chandra Mallick said. Trainee nun gang-raped by 3; 2 arrested, PTI | Jul 15, 2013, 07.01 PM IST.

[12] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[13] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece