பிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கிராஹ்ம் ஸ்டைன்ஸ் கொலைவழக்கு விவரங்கள் [2]
மோடிக்கு எதிராக தமிழகத்தில் ஊடகக் கூட்டணி: இதுவரை தமிழகத்தில் யாருக்கும் தெரியாத சாரங்கியைப் பற்றி, தமிழ் ஊடகங்கள், ஏன் போட்டிப் போட்டுக் கொண்டு, எதிர்-எதிரான செய்திகளை, திரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன? குறிப்பாக கவனித்தால், அதே திக-திமுக-கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட்-காங்கிரஸ் ஊடகங்கள் தான் இவற்றில் இறங்கியுள்ளன. வினவு[1], “ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங். கிறித்துவ மிஷனரி குடும்பத்தின் படுகொலைக்கு பஜ்ரங் தளமும், தாரா சிங்கும்தான் காரணம் என வெளிப்படையாக தெரிந்த பின்பும் இந்தப் படுகொலைக்கு எந்தவித ஆதாரம் இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணை தெரிவித்தது,” திரிக்கிறது[2]. உண்மைகளை மறைத்து, திரித்து, பொய்யாக எழுதுவதில், இவர்களுக்கு இணை, இவர்கள் தான் – “உண்மையிலேயே குஜராத்தில் 2000 பேர் கொல்லப்படுவதற்குப் பின்னணியில் நின்றது குஜராத்தின் நரேந்திர மோடி என்றால், ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை மட்டுமல்லாமல் ஒடிசாவில் நடந்த பல்வேறு இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்திற்குக் காரணமான சாரங்கியை, ’ஒடிசாவின் நரேந்திர மோடி’ என்று அழைப்பதில் மிகை ஏதும் இல்லை.” இவர்களுக்கு உச்சநீதி மன்றம், தீர்ப்புகள் எதுவும் தேவையில்லை. அவர்கள் சொல்வது தான் செய்தி!
பத்தாண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்த போது, ஏன் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை?: 2004-2014 வரை பத்தாண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்தபோது, அவர் செய்த சேவைகளை ஊடகங்கள் சொல்வதில்லை. தன்னுடைய எம்.எல்.ஏ வருமானத்தை வைத்து வனவாசிகளுக்கு பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் பள்ளிகளை திறந்து, நடத்தி வருகிறார். ஊழல், மது, சமூக அநீதி முதலியவற்றை எதிர்த்து போராடி வருகிறார். இந்த விவரங்களை, முதலமைச்சர் இணைதளம் கொடுக்கிறது[3]. இவற்றை எதிர்த்தால், பணக்காரர்கள், குறிப்பாக அந்த வியாபாரம் செய்பவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். போதாகுறைக்கு, வனவாசிகள், எஸ்.சி / எஸ்.டிகளுக்கும் சேவை செய்து வருவதாலும், மதம் மாற்றத்தைத் தடுப்பதாலும், கிருத்துவ மிஷனரிகளும் இவருக்கு எதிராகின. ஆக, இந்த உண்மைகளை விடுத்து, இப்பொழுது பொய் செய்திகளை வெளியிட்டு கேவலமான வேலையில் இறங்கியுள்ளன ஊடகங்கள்.
கிராம் ஸ்ட்ரௌட் ஸ்டைன்ஸ் புனிதமானவனா?: ஸ்டைன்ஸ் எல்லோரையும் போல, மதம் மாற்றத் தான் வந்துள்ளான். அதை யாரும் மறுக்கவில்லை. மயூர்பஞ்ச் எவாஞ்செலிகல் சொசைடி [The Evangelical Missionary Society of Mayurbhanj (EMSM)[4]] என்று ஆஸ்திரேலியாவில் 1982ல் பதிவு செய்து கொண்டு, ஸ்டைன்ஸ் வந்துள்ளார். தொழு நோயாளிகள் இல்லத்தில் சேவை செய்ய வந்தவர் போல, இந்துக்களை மதம் மாற்ற ஈடுபட்டார். வனவாசிகளை, பிரிப்பதில், குழப்பத்தை உண்டாக்குவதில் ஈடுபட்டார். அவர்களது பாரம்பரிய கொண்டாட்டங்கள், சடங்குகள், கலச்சாரம் முதலியவற்றை மாற்ற முயன்றார். இதற்கு “வோர்ல்ட் விஷன்” [World Vision] போன்ற இயக்கத்தினர் உதவியாக இருந்தனர். காங்கிரஸுக்கும் இதில் பங்குண்டு. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, காங்கிரஸ் தலைவர் பங்குமுள்ளது. இதைப் பற்றி கீழே விவரிக்கப் படுகிறது. சங்கராந்தி சமயத்தில், வனவாசிகளுக்கு இடையில் பிரிவை உண்டாக்க, வேண்டுமென்றே, ஸ்டைன்ஸ், ஒரு விழாவை அங்கு ஏற்பாடு செய்கிறான். இதனால், வழக்கமாக மயூர்பஞ்ச், பாலசோர், கியோஞ்சர், சுந்தர்கர் மாவட்டங்களில் சங்கராந்தி முதல் நாளில் போகி கொண்டாடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. நடனம் ஆடுவதிலும் போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் தான்கீழ்கண்டவை நடந்தேறின[5]:
- ஸ்டைன்ஸ் கொலைவழக்கு – 22.01.1999, ஜீப்பிற்கு 60-70 கும்பலால் தீவைக்கப்பட்டது! 23-01-1999 தான் போலீஸுக்கு தெரிவிக்கப் பட்டது!
- ஒரிஸா போலீஸ் ஒழுங்காக விசாரணை மேற்கொள்ளாதலால், 04.1999 அன்று மாநில குற்றப்பிரிவுக்கு [State Crime Branch] ஒப்படைக்கப் பட்டது.
- 29-01-1999 – டி.பி.வாத்வா கமிஷனை, இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கை வெளியிட, இந்திய அரசு நியமித்தது.
- 25-03-1999 அன்று இரண்டு மாதங்கள் என்பதை ஐந்து மாதங்கள் என்று திருத்தி ஆணையிட்டது.
- ஒரிஸா மாநில குற்றப்பிரிவும் முறையாக புலன் விசாரணை மேற்கொள்ளாதலால், 05.1999 அன்று, சிபிஐக்கு ஒப்படைக்கப் பட்டது.
- 21-06-1999 கமிஷன் தாரா சிங் தான் குற்றவாளி என்றும், வேறெந்த இயக்கத்திற்கும், இதில் தொடர்பில்லை என்று அறிவித்தது.
- சிபிஐ விசாரித்து 06.1999 அன்று 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது, ஒரு சிறுவன் ஜுவினைல் கோர்ட்டில் விசாரிக்கப் பட்டான்.
- 31-06-1999 அன்று மயூர்பஞ்ச் காட்டிலிருந்து, தாராசிங் கைது செய்யப் பட்டான்.
- 04-09-2000 அன்று குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப் பட்டது.
- 01-03-2001 – சிபிஐயால் அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பித்தது.
- 18-08-2003 – அன்று விசாரணை முடிவுற்றது.
- குர்தா செசன்ஸ் நீதிபதி, 09.2003 மற்றும் 22.09.2003 தேதிகளில் அளித்த தீர்ப்பில், 14 பேருக்கும் தண்டனை வித்தித்தார், தாரா சிங்கிற்கு மரணம்!
- கண்சாட்சிகள் சொல்வதெல்லாம் நம்புகின்ற மாதிரி இல்லை, ஒப்புதல் வாக்குமூலங்களும் மிரட்டி, வற்புருத்தி வாங்கப்பட்டுள்ளன.
- தாராசிங்கிற்கு ஆயுட்தண்டனையாகக் குறைத்து, மஹேந்திர ஹெம்ப்ரமுக்கும் ஆயுட்தண்டனை கொடுத்து, மற்றவரை விடுவித்தது.
- கண்சாட்சிகள், ஆவணங்கள் முதலியவற்றை விசாரித்து, 05.2005 அன்று ஒரிஸா உயர்நீதிமன்றம், இவ்வாறு தீர்ப்பு மாற்றி அளித்தது.
- மே 2005 – கிளாடிஸ் ஸ்டைன்ஸுக்கு பத்மஶ்ரீ விருது கொடுக்கப்பட்டது.
- அக்டோபர் 2005ல் இரு தரப்பிலும் தாராசிங்-மஹேந்திர ஹெம்ப்ரம் மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்யப் பட்டது.
- 23-08-2008 – இந்நிலையில் தான், ஸ்வாமி லக்ஷ்மணானந்தர், மாவோயிஸ்ட்-கிருத்துவர்களால் கொலைசெய்யப் பட்டார்.
- 25-08-2008ல் கன்னியாஸ்திரீ கற்பழிக்கப் பட்டதாக செய்தி வந்தது. இது பிறகு, ஜோடிக்கப்பட்டது என்றாகியது.
- 2010-11ல் உச்சநீதி மன்றத்திற்கு மேல்முறையீட்டில். இவ்வழக்கு விசாரிக்கப் பட்ட போதும், நீதிபதிகள் பல முரண்பாடுகளை கண்டனர்.
- 21-01-2011 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கும் போது, இந்த இருவரும் குற்றவாளிகள் என்று மெய்ப்பிக்க ஆதாரங்கள் எதுவுமில்லை என்றனர்.
உச்சநீதி மன்றம் கண்ட முரண்பாடுகள்: விசாரணையின் போது, உச்சநீதி மன்ற பல முரண்பாடுகளைக் கண்டது:
- கூட்டம் 40/50. 50/60, 60/70 என்று பலவாறு கூறப்பட்டது
- வைக்கோல் ஜீப்பின் கீழ்/ மேல், வைக்கப் பட்டது என்பதிலும் முரண்பாடு
- நடுஇரவில் பனி பொழிந்ததா-இல்லையா, பனி மூட்டமாக இருந்ததா-இல்லையா என்றெல்லாம் தெளிவாக சொல்ல முடியாது – சில கண்சாட்சிகள்
- நெருப்பு வைக்கப் பட்டது பற்றியும் முரண்பட்ட விவரங்கள் – ஒருவரா, இருவரா, கூட்டமா,
- நெருப்பு வைக்கப் பட்டது, மேலா-கீழா
- நாகின் நடனம் நடு இரவு முழுவதும் நடந்தது, முடிந்து விட்டது, தெரியாது…
- நாகின் நடனம் மற்றும் கண்சாட்சிகள் பார்த்த தூரமும் முரண்பாடாக கூறினர்.
- அருகில் வசதியான இடம் இருக்கும் போது, வைக்கோலை பரப்பி, காரில் ஏன், படுத்து உறங்க வேண்டும்?
- கிளாடிஸ் ஏன் தனியாக படுக்க வேண்டும்?
- இப்படி முரண்பட்ட சாட்சியங்கள், ஒப்புதல் வாக்குமூங்கள் தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை.
இருப்பினும், கண்சாட்சிகள் மற்றும் மஹேந்திர ஹெம்ப்ரமின் ஒப்புதல் வாக்குமூலம் வைத்து, குற்றவாளிகள் என்று முடிவு செய்ததையும், தண்டனையும் ஒப்புக் கொண்டது. இவையெல்லாம் போதாது என்று எத்தனையோ உச்சநீதி மன்ற திர்ப்புகள் எடுத்துக் காட்டியுள்ளன. இருப்பினும், இத்தகைய தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனும் போது, அரசிய தாக்கம், நிர்பந்தம், சுமை முதலியவை இருந்தன என்று தெரிகிறது. இதற்கு மறு-சீராய்வு மனு, மேல்முறையீடு செய்யவில்லை, அதனால், இருவரும் சிறையில் உள்ளனர்! இதைவைத்து இப்பொழுது அரசியல்..கீழ்நிலையில் இறங்கியுள்ள அந்த அரசியல் மற்றும் ஊடக பிரச்சாரத்தில் தூஷிக்கப் படுகின்றவர் பிரதாப் சந்திர சாரங்கி!
© வேதபிரகாஷ்
05-06-2019
[1] வினவு, ‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி!, By அனிதா – June 4, 20193
[2] https://www.vinavu.com/2019/06/04/real-face-of-pratap-sarangi-is-simple-but-cruel-murder-of-graham-staines-and-he-lead-violence/
[3] SOCIAL ACTIVITIES:Opened schools Samrkara Kendra in hundreds of tribal village under Gana Shiksha Mandir Yojana in Balasore in Mayurbhanj district inspired social awareness and agitational programme against liquor corruption social injustice and police atrocity hundreds of patients were served
http://www.naveenpatnaik.com/MLA-Pratap-Chandra-Sarangi-of-NILAGIRI-constituency-1219.html
[4] registered in Australia, and has run the Mayurbhanj Leprosy Home since 1982
[5] உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்ற தீர்ப்புக்ளிலிருந்து தொகுத்து, புரிந்து கொள்வதற்கு சுலபமாக, காலக் கிரயமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.