பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியதற்காக தண்டனை கொடுத்த கிருத்துவப் பள்ளி! செக்யூலரிஸ போதையா, சட்டத்தின் அலங்கோலமா அல்லது இந்துக்களை அடக்கியாளும் தன்மையா? (2)
பெற்றோர் புகார், போலீஸார் விவாரணை: இதையடுத்து பெற்றோர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்[1]. இது தொடர்பாக எஸ். சேதுராமன் என்பவராலும் பாலக்கரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது[2]. போலீஸ் அப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியை மீது நோட்டீஸ் [CSR (Community Service Register) ] அனுப்பியுள்ளது[3]. சனிக்கிழமை, 21-10-2017 அன்று அவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டது[4]. தலைமை ஆசிரியை, முன்னர் சொன்னதையே, திரும்பச் சொன்னார். இந்த சம்பவம் 20-10-2017 அன்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது[5]. குழந்தைகளை இவ்வாறு நடத்தலாமா என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. தொடர்ந்து வந்துள்ள புகார் மற்றும் இணைதள இணைதள கருத்துருவாக்க அழுத்தத்தினால், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாசை மறைக்க மாசு கொண்ட தீயர் வேடமிட்டு வந்தது: மாசுக்கட்டுப்பாடு என்ற போர்வையில் சமீபகாலத்தில் தீபாவளியை எதிர்க்கிறேன் என்று பல இயக்கங்கள் கிளம்பியுள்ளன. புகை மற்றும் சப்தம் என்று மட்டும், இவ்விசயத்தை அணுகுவதாக இருந்தால், வருடம் முழுவதும் அத்தகைய சட்டமீறல்களுடன் நடக்கும் நிகழ்வுகள் யாவை என்று அவை கவனித்ததாகத் தெரியவில்லை. பேரூந்துகள், மோட்டார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் தான் அதிக அளவு மாசு உண்டாகிறது. இன்றைய அதிநவீன தொழிற்சாலைகளின் கழிவுகள் – பெயின்ட், தோல், ரசாயனம், முதலியவை – நிலத்தடி நீரை மாசுப்படுத்தி வருகின்றன. ஆஸ்பத்திரி போன்ற நச்சுக்கழிவுகளைப் பற்றி அமுக்கியே வாசிக்கின்றனர். அதைப்பற்றி குறைவாகவே எதிர்ப்பு உள்ளது. பணம் வாங்கிக் கொண்டு அடங்கி விடுகின்றன என்ற புகார் வெளிப்படையாகவே உள்ளது.
தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[6]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[7]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[8]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களமாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகுறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளை வைத்து தீபாவளி தடை மனு போட்டது: சுற்றுப்புறச் சூழ்நிலை, குழந்தைகளை வேலைக்கு வைத்தல் போன்ற காரணங்களைக் காட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் வேடிக்கை என்னவென்றால், மூன்று குழந்தைகள் – அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி மற்றும் ஜோயா ராவ் [Arjun Gopal, Aarav Bhandari and Zoya Rao] தீபாவளிக்கு வெடிகள் வெடிக்க வேண்டாம், ஏனெனில், அது தில்லியின் காற்றின் நச்சுத்தன்மையினை அதிகமாக்குகிறது என்று வழக்குப் போட்டனர் என்பதுதான். இதில் அர்ஜுன் கோபால் மற்றும் ஆரவ் எட்டு மாத குழந்தைகள், பண்டாரி ஜோயா ராவ் 16 மாதங்கள் – ஒன்றரை வயது குழந்தை[9]. அக்குழந்தைகள் தமது வழக்கறிஞர்கள் தந்தைகள் மூலம் இவ்வாறு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்[10]. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். உண்மையிலேயே இப்படி கைக்குழந்தைகள் எல்லாம் வழக்குப் போடலாம் என்றால், குப்பைத்தொட்டிகளில் வீசிய குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று தெரியவில்லை? கிறிஸ்தவ பிடோபைல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் வழக்குப் போடவில்லை என்று புரியவில்லை? இக்குழந்தைகள், இக்குழந்தைகளை விட அந்த அளவுக்கு புத்துசாலிகளாக இல்லை போலும்! இல்லை அப்பெற்றோர்கள், இப்பெற்றோர்கள் போல விழிப்புணர்வுடன், சாதுர்யத்துடன், குழந்தைகள் நலன் பேணும் அளவுக்கு இல்லை போலும்! ஆக இவ்வழக்குகள் போட்டவர்களின் பின்னணியை ஆராய வேண்டும். செக்யூலரிஸ ரீதியில் வழக்குத் தொடுப்பதாக இருந்தால், எல்லா மாசு உண்டாக்கும் செயல்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வழக்குகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், தீபாவளியை மட்டும் எதிர்ப்பது, அவர்களது பாரபட்சத்தைத் தான் காட்டுகிறது, மற்றும் செக்யூலரிஸ போலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, இந்துவிரோத போக்கைக் காட்டுகிறது.
ஸ்ரீ அய்யப்ப சங்கம், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எல்லாம் இதை எதிர்க்க வேண்டிய அவசியம் வந்தது: சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. மேலும், இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தனது வாதத்தை, “பட்டாசுகள் தீபாவளி, சுதந்திர தினம், புத்தாண்டு, கிருஸ்துமஸ், தேர்தல் வெற்றி, கிரிக்கெட்போன்ற விளையாட்டு வெற்றி, திருமணங்கள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடிக்கப் படுகின்றன. இவற்றிற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. மேலும் இத்தொழில் மூன்று லட்சம் மக்களுக்கு நேரிடையாகவும், 10 லட்ச மக்களுக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்து வருகிறது. இதனால், பல லட்சம் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். பட்டாசுகளின் மேலான தடை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். …..இந்து இந்துமத பாரம்பரியம் மற்றும் மத உணர்வுகளையும் பாதிக்கும்”, என்று வைத்தது. உள்ள உரிமைகளை இப்படித்தான் வந்து சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனால், இப்பொழுது 2017ல் – இவர்கள் ஏன் அடங்கி விட்டார்கள் என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
23-10-2017
[1] The Hindu, Tiruchi school faces probe over ‘Deepavali punishment’, Special Correspondent, Tiruchi, October 23, 2017 07.49 IST, Updated: , October 23, 2017 07.52 IST.
[2] http://www.thehindu.com/news/national/tamil-nadu/tiruchi-school-faces-probe-over-deepavali-punishment/article19904505.ece
[3] The Palakkarai police station under whose jurisdiction the school falls has issued a CSR (Community Service Register) upon receiving the complaint from S. Sethuraman against the school headmaster and physical education teacher.
[4] The Times of India, School makes kids apologize for setting off crackers, TNN, October.22, 2017 IST.
[5] https://timesofindia.indiatimes.com/city/trichy/school-makes-kids-apologise-for-setting-off-fireworks/articleshow/61169124.cms
[6] http://scroll.in/article/764796/would-banning-diwali-crackers-really-infringe-religious-rights-as-the-supreme-court-has-ruled
[7] http://articles.economictimes.indiatimes.com/2011-10-23/news/30310755_1_firecracker-sivakasi-child-labour
[8] http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=22160
[9] http://www.thehindu.com/news/national/three-toddlers-move-sc-against-delhis-peaking-pollution-graph/article7703036.ece
[10] In late October, the Supreme Court deferred to February the request by two eight-month-olds, Arjun Gopal and Aarav Bhandari, and 16-month-old Zoya Rao Bhasin, to ban firecrackers during Diwali. In September, “the toddlers”, as they are referred to, had filed a writ petition in the Supreme Court (SC) through their advocate fathers, seeking measures to control air pollution in the Capital and exercise their right to clean air, guaranteed under Article 21 of the Constitution.
http://www.livemint.com/Leisure/fwznyZ9bJVLnMwUFpL3KSO/Clean-air-for-our-children.html