ரஜினிகாந்த், யோகானந்த பரமஹம்சர், ஜீசஸ்: ரஜினி கிருத்துவராகி ஊழியம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?
“கிருஷ்ணர்–ஜீசஸ்” என்றெல்லாம் சேர்த்து பேசி குழப்பத்தை ஏற்படுத்தியது: “‘சினிமா சக்தி வாய்ந்தது. ஆயிரம் சுவாமிகள் சொல்லாத விஷயங்கள் சினிமா மூலம் மக்களை எளிதாக சென்று சேரும். ஆன்மிக விஷயங்களையும் சினிமாவில் சொல்லலாம்’, என்று அறிவுறுத்தினார்.” அதனால், தொடர்ந்து சினிமாவில் நடக்கிறேன் என்றால், நடிகன் இவ்வாறு, “கிருஷ்ணர்-ஜீசஸ்” என்றெல்லாம் சேர்த்து பேசக்கூடாதே? அத்தகைய பேச்சுகளாலும், பொய்யானவற்றை மக்களுக்கு சொல்வதைப் போன்றாகி விடுகிறது. “கிருஷ்ணர்-ஜீசஸ்” ஒப்புமை பேச்சு, தான் கிருத்துவராக மாறினார் என்பதால் பேசினாரா, யோகத சத்சங்கத்தில் அத்தகைய முயற்சி நடப்பதால் பேச வைக்கப் பட்டாரா, அல்லது, இவரே ஒப்புக் கொண்டு அத்தகைய நாடகத்தை, அப்புத்தகம் வெளியீட்டு விழாவில், வேண்டுமென்றே அரங்கேற்றி வைத்தாரா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும், சுவாமி விவேகானந்தர் மறுத்ததை, யோகத சத் சங்கமோ, ரஜினி காந்தோ வேண்டுமென்றே பரப்ப துணிந்தால், அவர்களுக்கு உள்ளூக்குள் ஏதோ திட்டம் இருப்பது உறுதியாகிறது. ஆகையால், இந்துக்கள் சும்மா இருக்க முடியாது.
ரஜினி கிருத்துவராக மதம் மாறினாரா?: 2014ல் ரஜினுக்கு உடம்பு சரியாகவில்லை என்ற நிலையில், அவர் பல கோவில்களுக்கு சென்று வந்தார். அவரது ரசிகர்களும், எல்லா வழிபாட்டு ஸ்தலங்களிலும் பிரார்த்தனை செய்தனர். அந்நிலையில், திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தவுடன், சம்மி தங்கையா என்ற பாஸ்டர், ரஜினி காந்த் வீட்டிற்குச் சென்று, அவரது உடல் நலம் குறித்து பிரார்த்தனை செய்தார் என்று ஒரு வீடீயோ சுற்றில் வந்தது[1]. அந்த பாஸ்டர் ரஜினியின் மார்பின் மீது கை வைத்து, நீண்ட ஆயுளுக்கு பிரார்த்தனை செய்ததாக சொல்லப்பட்டது. இதுதான், ரஜினி மாற்று மதத்தினரிடம் ஆசிர்வாதம் பெற்றது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[2]. அது தவிர சமீபத்தில் “கபாலி” படப்பிடிப்பிற்காக, நியூயார்க் சென்றிருந்தபோது, 50 நாட்கள் தங்கினார் என்றும், அப்பொழுது, ஒரு சர்ச்சிலிருந்து, அவருக்கு அழைப்பு வந்ததால், அங்கு சென்றார் என்றும், அப்பொழுது தற்செயலாக இவ்வாறு நடந்தது என்றும், ஆனால் ரஜினி மதம் மாறவில்லை என்றும் அவரது ரசிகர் சொன்னார் என்று வீடியோ கூறுகிறது[3]. எது எப்படியாகிலும், இது உண்மை என்றோ-பொய் என்றோ யாரும் தெளிவாக, வெளிப்படையாக, உறுதியாக சொல்லவில்லை. கிருத்துவர்களைப் பொறுத்த வரையில் பிரச்சாரத்தில் எத்தர்கள் என்பது தெரிந்த விசயமே. ரஜினுக்கு ஜான ஸ்தானம் செய்விக்கப்பட்டது என்றதற்கு பிறகு, ஏசு ஒரு பிராமணர் என்று ரஜினியை சேர்த்து தமாஷா செய்ய ஆரம்பித்தனர்[4]. மதத்திற்காக அவர்கள் எத்தகைய கீழ்த்தரமான வேலையையும் செய்யக் கூடியவர்கள்[5]. ஆகையால், ரஜினி தெளிவு படுத்தாமல் இருப்பதும் விசித்திரமானதே.
பாபாஜியைப் பற்றிய வாதங்கள், விவாதங்கள்: பிற மதங்கள் என்று வரும் போது, அவர்களில் பெரும்பாலோர் மிகவும் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது; அவர்களுக்கு அம்மதங்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளே தெரியாமல் இருந்தது; இருப்பினும் தெரிந்தது போல அடித்து பேசிக் கொண்டிருந்தார்கள்; தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் வாதித்து / சாதித்துக் கொண்டிருந்தார்கள்; குறிப்பாக ஏசு இந்தியாவிற்கு வந்தார் போன்ற கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருந்தது விசித்திரமாக இருந்தது. யோகானந்தரே, “ஏசுவின் இரண்டாவது வருகை” போன்ற புத்தகங்கள், சிடி முதலியவற்றை வெளியிட்டுள்ளார்[6]. கிருத்துவர்களும், முகமதியர்களும் இந்துக்களை புனைந்த மாயைகளால் பெருமளவில் பாதித்திருந்தாலும், பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருப்பது வருத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்துக்கள் இவ்விசயத்தில் அப்பாவிகளாக, ஏமாளிகளாக, சாதுக்களாக இருப்பதுதான் நிதர்சனமாக உள்ளது. பாபாஜி விசயத்தில் ஏசுவை இணத்து கட்டிவிட்ட கதைகள் உள்ளன என்றும், அவைத்தான் இவர்களின் வாதங்களுக்கு காரணம் என்றும் பிறகு புரிந்தது. யுக்தேஸ்வர் கிரி என்பவர் எழுதிய அத்தகைய புத்தகத்தை யோகத சத்சங்கமே வெளியிட்டுள்ளது[7]. அதை எடுத்துக் காட்டினாலும், அவர்கள் ஒப்புக்கொள்வதாக்ல இல்லை. யோகானந்தரே சொல்லியிருக்கிறார் என்று அடித்து பேசுகிறார்கள். விவேகானந்தர் தவறு என்றதை படிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தெரிந்தும், தெரியாதது போல நடிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏசு மாயை, கிருஸ்து கட்டுக்கதை, மற்றும் ஏசுகிருஸ்து புனைப்பு பரப்பப்படும் விதம்: ஏசு, கிருஸ்து மற்றும் ஏசு கிருஸ்து என்பன வெவ்வேறான மூன்று விதமான தத்துவங்கள். “ஏசு” என்பது வருபவர், காப்பவர், எதிர்பார்க்கப்படுபவர் என்று யூதர்கள் நம்பிக்கையில் இருந்தது. “கிருஸ்து” என்றால், எண்ணை வார்க்கப்பட்டவர், எண்ணையினால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று கிரேக்கத்தில் பொருள். கிரேக்கர்களைப் பொறுத்தவரையில், ஆசிரியன், அரசன், ஊருக்குப் பெரியவன் என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர், குருவினால், எண்ணையினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அறிவிக்கப்படுகிறான். பிறகு தான், மக்களால் அவன் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அதனால், பால் என்பவர் பிறகு வந்தபோது, ஒரு சமூகங்களில், பிரபலமாக இருந்த இந்த இரு தத்துவங்களையும் சேர்த்து “ஏசு கிருஸ்து” என்ற நபரை, கற்பனையில் உருவாக்கினார். அதுதான், கிருஸ்துவ மதத்தின் கடவுளாக மாற்றப்பட்டார். ஆனால், 18-19ம் நூற்றான்டுகளில், கிருஸ்துவை, கிருஸ்துவ மதத்தை ஆராய்ச்சி செய்வர்கள், இதெற்கெல்லாம் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை என்று கண்டறிந்து, அவையெல்லாம் மாயை, கட்டுக்கதை மற்றும் புனையப்பட்டவை என்று நிரூபித்தனர். எனினும், வாடிகன் விடாமல், அவற்றை மெய்யாக்க, அவ்வபோது, முன்னுக்கு முரணான புதிய கட்டுக்கதைகளை உருவாக்கி, பரப்பி, புழங்கவிட்டு ஆராய்ச்சி செய்து வருகிறது. அம்முறையில் தான் “இந்தியாவில் ஏசு” என்ற கட்டுக்கதை உருவாக்கப் பட்டது.
நிக்கோலஸ் நோட்டோவிசின் கட்டுக்கதையும், யோகானந்தரும்: நிக்கோலஸ் நோடோவிட்ச் என்ற ரஷ்ய பிரயாணி தான், ஹிமி புத்த மடாலயத்தில் ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு இந்தியாவிற்கு வந்தார், பிராமணர்களில் வேதங்களைக் கற்றுக் கொண்டார், வேதங்களை போதித்தார்…பொன்ற விவரங்கள் இருந்ததாக குறிப்பிட்டான். “யாருக்கும் தெரியாத ஏசுகிருஸ்துவின் மர்மமான வாழ்க்கை” என்ற புத்தகத்தை எழுதி நன்றாகவே பணம் சம்பாதித்தான்[8]. ஆனால், மாக்ஸ்முல்லர் இதை ஆராயுமாறு ஆணையிட்டார். அதன்படியே, ஆங்கில அதிகாரிகள், அந்த மடாலயத்திற்கு சென்று விசாரித்தபோது, அத்தகைய ஓலைச்சுவடி அங்கில்லை என்றும், ஆனால், நிக்கோலஸ் நோடோவிட்ச், அடிபட்டதால் அங்கு வந்து தங்கினான் என்று மடத்தில் அறிவித்தனர். இதனால், மாக்ஸ்முல்லர், அப்புத்தகத்தை ஒரு மோசடி என்று அறிவித்தார். சுமாமி விவேகானந்தரும் இதனை எடுத்துக் காட்டினர். ஆனால், முன்னர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்து சாமியார், இதனை விடாமல் பரப்பி வந்தார்[9]. அப்புத்தகத்தை வெளியிடவும் செய்தார். யோகானந்தர் தனது புத்தகத்தில் இக்கட்டுக்கதையை சேர்த்ததால், மறுபடியும், இது பிரபலமாகியது. கிருத்துவர்களுக்கோ கொண்டாட்டம் தான்[10]. இப்பொழுது ரஜினிகாந்த, அந்த கும்பலோடு சேர்ந்திருப்பதால், அந்த ஈர்ப்பில், இக்கட்டுக்கதைக்ககுதவுவது போன்று தெரிகிறது.
© வேதபிரகாஷ்
05-02-2017
[1] Kolly-talk, Rajini gets blessed by Christian priests at residence, Jan 30, 2014
[2] A special prayer was conducted at the residence of superstar Rajinikanth by Sammy Thangaiah, a noted Christian priest. Rajini,A believer in all faiths, was spotted at the holy abode of Lord Venkateshwara at the Tirupathi Tirumala Hills along with eldest daughter Aishwarya last week. Mean while Rajini is said to have senta message for Samimy Thangaiah, a noted Christian priest, soon after his return from Tirupathi. Thangaiah met the superstar at his Poes Garden residence. The priest conducted special prayers and prayed to the Almighty for Rajini’s healthy long life. He placed his hands on Rajini’s chest and chanted biblical lyrics. Rajini did appear to be deeply involved in those prayers. It may be noted that this is not the first time that Rajini is seeking blessings from priests of other religions.
[3] https://www.youtube.com/watch?v=RXNzAKXrHdk
[4] Mid-day.com, Rahul Da Cunha: Jesus was a Tam-Brahm, By Rahul Da Cunha | Posted 27-Feb-2016.
[5] http://www.mid-day.com/articles/rahul-da-cunha-jesus-was-a-tam-brahm/16993192
[6] In his book The Second Coming of Christ, Yogananda states that Jesus Christ went to India and conferred with Mahavatar Babaji.
Yogananda, Paramahansa (2004). The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You, p. Los Angeles, CA: Self-Realization Fellowship.
[7] Yukteswar Giri, The Holy Science, Yogoda Satsanga Society, 1949.
[8] Nicholas Notovitch, The unknown life of Jesus Christ. Vol. 4. Health Research Books, 1996.
[9] Abhayananda, Swami. “Journey Into Kashmir and Tibet: With the Life of Jesus by Nicolas Notovitch.”, Advaida Ashrama, Calcutta, (1987).
[10] Prophet, Elizabeth Clare. The Lost Years of Jesus: On the Discoveries of Notovitch, Abhedananda, Roerich, and Caspari. Summit University Press, 1984.