திருநெல்வேலி கிருத்துவ டையோசிஸ் – மனோன்மணியம் பல்கலை நடத்திய கால்டுவெல் கருத்தரங்கம் மற்றும் கலந்து கொண்டவர்களில் சிலருடைய பின்னணி! (1)
கால்டுவெல் கருத்தரங்கங்கள் தொடர்ந்த நடைபெற்று வரும் நிலை: கடந்த சில ஆண்டுகளாக கால்டுவெல் நினைவு கருத்தரங்க என்று நடத்தப்பட்டு வருகின்றது. “திராவிட மொழிகளுக்குக் கால்டுவெலின் பங்களிப்பு” என்று தேசிய கருத்தரங்கள் 11-08-2014 மற்றும் 12-08-2014 நாட்களில் மதுரையில், திருமலை நாயக்க்ர் கல்லூரியில் நடைப்பெற்றது[1]. அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி பெசன்ட் அரங்கம், தஞ்சையில் நடைபெற்றது[2]. 10.08.2014 ஞாயிறு எஸ்.எம்.எஸ். கல்யாண மகால், தாணப்ப முதலி தெரு, சென்ட்ரல் தியேட்டர் அருகில்,மதுரை – 1 யில் ராபர்ட் கால்டுவெல் 200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது[3]. 16.08.2014 மாலை 5 மணி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பனகல் பார்க் அருகில்) தியாகராய நகர், சென்னை –17 நடந்தது என்றுள்ளது[4]. 16.08.2014 சனி மாலை 6 மணி நகர அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் நடந்தது என்றுள்ளது[5]. “மோடி அரசின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு தேசிய இன, மொழி அடையாளங்களை அழிக்கும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!, களம் புகுவோம், தமிழறிஞர் கால்டுவெல் என்ற வாள் உயர்த்தி உழைக்கும் மக்களின் தமிழ் மரபைக் காப்போம்!”, என்று கடலூரில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் 25.09.2014 அன்று மாலை 5 மணி அளவில், கருத்தரங்கம் நடைபெற்றது[6].
பிரிவினை, தேசவிரோத போக்குக் கொண்ட கருத்தரங்கங்கள்: இவை ஏதோ தமிழுக்கு ஆதரவாக, மேம்பாட்டிற்காக, உன்னதிக்காக நிகழ்த்தப்படுவது போலக் காட்டிக் கொண்டாலும், பேச்சாளர்கள் “தமிழ் தேசியம்”, பிரிவினைவாதம் என்று ஆரம்பித்து, தேசவிரோத கருத்துகளில் முடிக்கிறார்கள். இன்றைக்கு விவரங்கள், தவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்கள் என்று எல்லாமே ஓரளவிற்கு வெளிப்படையாகக் கிடைக்கின்றன. அதிலும் சமீபகால வரலாற்று நிகழ்வுகளை, விவரங்களை, அவற்றின் உண்மை தன்மையினை, பலமுக நோக்கில் ஆராய்ந்து, பாரபட்சமின்றி முடிவுக்கு வரும் வகையில் விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றை இக்கால இளைஞருக்கு முறைப்படி எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அந்நிலையில், இன்னும் பழைய, கட்டுக்கதை என்று தூக்கியெறியப் பட்ட கருதுகோள்கள், சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கால்டுவெல் ஒன்றும் சரித்திர ரீதியில் புனிதர் அல்ல, மதம் மாற்ற அனுப்பப்பட்ட பாதிரி, தமிழ் கற்று மக்களைப் பிரிக்க முயன்றது, இன்றைக்கு தெரிந்த விசயமாக இருக்கிறது. “திராவிட இனம்” ஒரு கட்டுக்கதை என்ற விசயம் இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயமாக இருக்கிறது. அந்நிலையில், இன்னும் அத்தகைய கட்டுக்கதையினைப் பிடித்துக் கொண்டு, பொருளாதாரம், படிப்பு, முன்னேற்றம் முதலியவற்றில் நாட்டம் கொள்ளாது, மக்களிடையே துவேசம், வெறுப்பு, காழ்ப்பு முதலியவற்றை தூண்டும், ஊக்குவிக்கும் போக்கில், இத்தகைய கருத்தரங்கங்கள் நடத்தப் படுவது கவனிக்கத் தக்கது.
தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?: குணா போன்றோரே, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று முன்னமே எடுத்துக் காட்டினர். இப்பொழுது, இத்தகைய கேள்விகளும் எழுந்துள்ளன. தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது. திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை, “நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை.. …திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை. சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே.…போன்ற உண்மைகளை விவாதிக்க ஆரம்பித்து விட்டனர்[7]. இந்நிலையில், மறுபடி பொய்களை வைத்து கருத்தரங்கள் நடத்துவதினால் என்ன, யாருக்கு பிரயோஜனம் என்பதை கவனிக்க வேண்டும். கால்டுவெல் புராணம் பாடும், அடிமை தமிழர்களுக்கு ஒரு உதாரணம் எடுத்துக் காட்டப்படுகிறது.
கால்டுவெல்லின் 800 கி.மீ தீர்த்தயாத்திரை? உண்மையில் கால்டுவெல் ஒன்றும் நடந்தே சென்றுவிடவில்லை. சாதாரணமாக ஐரோப்பியர்கள் எல்லோருமே பல்லக்கு அல்லது மாட்டுவண்டிகளில் தான் சொகுசாக உட்கார்ந்து கொண்டு செல்வார்கள். இந்திய கூலிகள் / வேலையாட்கள் அதற்கென பிரத்யேகமாக இருந்தனர். அவர்கள் தாம் கஷ்டப்பட்டு அந்த வேலைகளை செய்வார்கள். கால்டுவெல்லிற்கு, ஒரு குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டதால், அதன்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அவர்களது சிந்தனைகள், பழக்க-வழக்கங்கள் முதலியவற்றை ஆராயச் சொன்னதால்தான் அவ்வாறு பல ஊர்களின் வழியாக சென்ன்னையிலிருந்து தனது ஆராய்ச்சி-பயணத்தை ஆரம்பித்தான். அதுதான், அவன் நாஜுக்காகச் சொல்கிறான் , “to get acquainted with the people and their ideas, manners, and to talk in a way in which I could never expect to do if I travelled in a palanquin or even a cart” ! எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவ்வாறுத்தான் பிரயாணம் செய்தான் என்பது உண்மையான விஷயம். நீலகிரி மலையில் சென்னை பிஷப்பான ஜியார்ஜ் ஸ்பென்ஸர் என்பரைப் பார்த்து விவரங்களைக் கேட்டுக் கொள்கிறான். ஒரு விசுவாச ஊழியனாக (Deacon) உறுதிமொழி எடுத்துக் கொள்கிறான். பிறகுதான், தனது ஊழியத்தைச் செய்வதாற்காக இடையன்குடிக்கு அனுபப்படுகிறான். 1841ல் வந்து சேர்கிறான். 1844ல் கல்யாணம்! பிறகு எப்படி கால்டுவெல், தமிழுக்கு சேவை செய்திருக்க முடியும்? பிரௌனிடம் சமஸ்கிருதம் படித்து, மற்ற ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தியர்களை எப்படிப் பிரிக்கலாம் என்ற நோக்கத்துடந்தான், வேலை செய்தவன் கால்டுவெல். இவனைத் தூக்கி வைத்துக் கொண்டு தமிழர்கள் ஆடுவதை என்னவென்று சொல்வது? தமிழர்கள், “திராவிடர்கள்” என்று நினைக்கும் வரையில், இத்தகைய அடிமை சிந்தனை மற்றும் கூலி மனப்பாங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், தமிழாராய்ச்சியாளர்கள் மூலங்களைப் படிக்காமலேயே, கால்டுவெல், எல்லீஸ் முதலியோரைப் புகழ்ந்து தள்ளுகின்றனர்!
கால்டுவெல் குடும்பத்தினரின் கலவர வேலைகள்: தமிழரது அடிமைத்தனம், கூலிமனப்பாங்கு, வெள்ளையனுக்கு இன்றும் அடிவருடும் தன்மைதான் இதில் வெளிப்படுகிறது, ஏனெனில், இங்கிலாந்திலேயே, இன்று இவர்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. பிரிவினைவாத, தேசவிரோத கூட்டங்கள் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. சாணர்களை தூஷித்து எழுதியதனால், இவரது புத்தகம் கண்டனத்திற்கு உள்ளாகியது. அதனால், அப்புத்தகம் பின்வாங்கப்பட்டு தடை செய்யப்பட்டது. சட்டவிரோதமாக, இவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளும் கண்டிக்கப்பட்டன. தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் கால்டுவெல் ரீல் விட்டதை சரித்திரம் என்று நம்ப முடியுமா? கால்டுவெல் மாமனார்-மாமியார்- மௌல்ட் தம்பதியர் பல பிரச்சினகளுக்குக் காரணம் என்று தெரிகிறது[8]. சாணர்களை மதம் மாற்றி, ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டதில் இவர்களது பங்கு புலப்படுகிறது. 1821ல் தமிழ் பேசப்பட்ட பகுதிகள் கொச்சிற்கு மற்றாப்பட்டபோதும், 1828-30களில் நடந்த ஜாதிக் கலவரங்களுக்கும் இவர்களே காரணம். ஆனால், கீழ்ஜாதி மக்கள், மேல்ஜாதி மக்களுக்குண்டான உரிமைகளை பெற்றபோது, இந்துக்கள் தங்களுடைய வீடுகளையெல்லாம் கொள்ளையெடித்தனர் என்று எழுதிவைத்துள்ளனர்! அதாவது, இந்துக்களுக்கிடையில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டால், ஏன் இவர்கள் வீடுகள் கொள்ளையடிக்கப்படவேண்டும்? அதுமட்டுமல்லாது, கொவிலுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற வேலைகளும், இந்துக்களை கோபமடையச் செய்துள்ளன[9].
© வேதபிரகாஷ்
29-08-2017
[1] http://govt-tdd-en.s3.amazonaws.com/UTS/Caldwell_Seminar_Invitation.pdf
[2] http://www.vinavu.com/2014/07/30/robert-caldwell-200th-anniversary-in-thanjavur/
[3] http://www.vinavu.com/2014/08/07/robert-caldwell-200th-anniversary-in-madurai/
[4] http://www.vinavu.com/2014/08/14/robert-caldwell-200th-anniversary-in-chennai/
[5] http://www.vinavu.com/2014/08/13/robert-caldwell-200th-anniversary-in-vellore/
[6] http://www.vinavu.com/2014/10/01/robert-caldwell-200th-anniversary-in-cuddalore/
[7] http://www.tamilcanadian.com/article/tamil/875
[8] https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/
[9] http://www.britishempire.co.uk/article/faithandfamily.htm