முந்தைய பாதிரி ஜெபசந்திரன் மீது வழக்கு பதிவு: 2006லிருந்தே ஆரம்பித்த பணமோசடி பிரச்சினை 2014ல் வழக்குப் பதிவில் முடிந்துள்ளது!
வேலியைமேயும்வெள்ளாடுகளும், பயிரைமேயும்கருப்புஆடுகளும், பலியிடும்ஆயர்களும்: பாலாசிங்என்றபிஷப்சார்ஜென்ட்டீச்சர்டெரைனிங்இன்ஸ்டிடியூட் [Bishop Sargent Teacher Training Institute] என்றநிறுவனத்தில்முதல்வர்கொடுத்தபுகாரின்பேரில், மூன்றுபிஷப்புகளின்மீதுபலகோடிரூபாய்களைமோசடிசெய்ததாகவழக்குபதிவுசெய்யப்பட்டது[1].
- ஜே. ஜே. கிருஸ்துதாஸ் [against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss],
- ஜே. ஏ. டி. ஜெபசந்திரன் [Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran] ,
- ஜெயபால்டேவிட் [a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David],
- செல்வின்ஜயராஜ் [Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj],
- சாமுவேல்செல்வராஜ் [Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj]
- ரெத்னராஜ் [retired district judge Retinaraj, a synod member],
பொலீஸார் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் / சரத்துகள் 406 – நம்பிக்கை மோசம், 420 – ஏமாற்றுதல், 464 – போலியான ஆவணத்தை உருவாக்குதல் மற்றும் 465 போர்ஜரிக்கான தண்டனை என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது[2]. டயோசிக்கு சொந்தமான 5.51 ஏக்கர்நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுத்ததால் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்று புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அதன்படி வழக்கும் பதிவாகியுள்ளது[3].
பிஷப் ஜெபசந்திரனின் நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணாவிரதம் (மார்ச்.2012): 2006 இவர் பிஷப்பாக பதவி ஏற்றுக்கொண்டபோது, “திஹிந்து” நாளிதழில் செய்தி வெளிவந்தது[4]. 2007லிருந்தே உள்ளூர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் இவர்களுக்குள் நடந்துவரும் பணமோசடி விசங்களுக்காக வழக்குகள் நடந்து வருகின்றன[5]. 2007ல் புகார் கொடுக்கப்பட்டு, மாநில கிரைம் பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது[6]. ஆனால், “திஹிந்து” அதைப் பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடவில்லை. என்னத்தான் “திஹிந்து”வுக்கு அத்தனை பாசம் என்று தெரியவில்லை. என்.ராம் ஏதோ இன்னொரு கிருத்துவப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்கிறார்களே, அதன்விளைவோ என்னமோ? 2012லேயே ஜெபசந்திரனின் நடவடிக்கைகளை எதிர்த்து உண்ணவிரதம், ஆர்பாட்டம் முதலியவற்றை செய்துவந்தனனர். அரசுவிதிமுறைகளுக்கு விரோதமாக, இவர் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளார், அந்தவேலைக்கு வேண்டிய படிப்பு முதலிய தேவைகளை சரிபார்க்காமல், பணத்தை வாங்கிக்கொண்டு, வேலை கொடுத்தத்சாக குற்றஞ்சாட்டினர்[7]. வருமானம்-செலவு கணக்குகளை சரியானமுறையில் தணிக்கை செய்யப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டினர்[8]. இது “திஹிந்து”வில் வந்தது!
பிஷப்ஜெபசந்திரனின்மீதுபுகார்[9]: “CSI உருவாகியது 1947ம்ஆண்டுஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள் இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, (இலங்கை) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து CSI சபைகள் அடங்கிய டையோசிஸ்ஸின் தலைமை ஸ்தாபனம் CSI சினாட் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 66 ஆண்டு காலவரலாற்றில் நடந்திராத அவமானகரமான சம்பவம் கடந்த 2013 பிப்ரவரி மாதம் CSI சினாட் கமிட்டியில் நடந்தது[10]. தமிழ்நாடு தூத்துக்குடி – நாசரேத் டையோசிஸ்ஸின் பிஷப். Rt.Rev.Dr. ஜெபசந்திரன் அவர்கள் மேல் ஏராளமான ஊழல்குற்றச்சாட்டுகள் எழும்பியது. ஆனால் சினாட் வழக்கம் போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றசாட்டுகளை ஊறப்போட்டது. அதன்பிறகு அவர்மேல் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாகவே CSI சினாட் செயற்குழு பிஷப் மீதுநடவடிக்கை எடுத்தது. பிஷப்.ஜெபசந்திரன் அவர்களை பிஷப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை சஸ்பெண்ட் செய்கிறது என்ற சினாட் நிர்வாக கமிட்டி எடுத்த தீர்மானத்தை மாடரேட்டர். தேவகடாட்சம் அவர்கள்முன்னிலையிலும் மற்றும் சினாட் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நான்கு பாஷைகள் பேசும் நான்கு மாநில பிஷப்மார்கள், மெம்பர்கள் கூடிய அக்கூட்டத்தில் CSI சினாட்செயலர் திரு.பிலிப் அவர்கள் சஸ்பெண்ட் அறிக்கையை 05-02-2013 அன்று வாசித்தார்”.
சைனாட்கூட்டத்தில்நடந்தசண்டை (2013)[11]: “உடனே தூத்துக்குடி பிஷப். ஜெபசந்திரன் அவர்கள் பிலிப் அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து அவரை தாக்கி, அறிக்கையை படிக்கவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் MLA, MP அரசியல்வாதிகள் கூட்டத்தில் வழக்கமாக நடப்பதைப்போல் மைக்கை பிடித்து எடுத்து எறிந்தார்[12]. இந்த சண்டையில் தூத்துக்குடி பிஷப்புக்கு உதவியாக சினாட் செயற்குழு உறுப்பினர் கோயமுத்தூர் டையோசிஸ்ஸை சேர்ந்த திரு.அமிர்தம் அவர்களும் பிஷப் அவர்களுக்கு உதவியாக பிஷப்புடன் சேர்ந்து திரு.பிலிப்பை தாக்கி அவை நாகரீகம் இல்லாமல் கெட்டவார்த்தைகளை உபயோகித்து ஏசினார். இவைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி பிஷப்புடன் சேர்ந்து பிலிப் அவர்களை தாக்கி கெட்டவார்த்தைகளை பேசியதாக கூறப்பட்ட சகோ.அமிர்தம் அவர்கள் உடனே அங்கேயே தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் சினாட் அவருக்கு உடனே மன்னிப்பு கொடுத்தாக அறிவித்தது. ஆனால் பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. எழுத்து மூலமாகவும் மன்னிப்பு கேட்க ஆலோசனை அளிக்கப்பட்டது. அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. ஆகவே அவர் பிஷப் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக சினாட்டில் அறிவிக்கப்பட்டது. பிஷப். ஜெபசந்திரன் அவர்கள் சண்டைப்போட்டு கெட்டவார்த்தைகளை உபயோகித்தது (சினாடில்) இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மற்ற மாநில பிஷப்மார்கள் முன்னிலையில் நடந்ததால் தமிழ்நாட்டு CSI சபைகளுக்கு பெரும் தலைக்குனிவை உண்டாக்கி விட்டது”.
CSI. டையோசிஸ்ஸில் நடக்கும் அநியாயங்களின் பட்டியல்: “மிஷனரிமார்கள், ஆயர்மார்கள், உபதேசியார் ஆகியவர்களின் பிராவிடன்ட் ஃபண்ட், பணம், பென்ஷன் பணம் ஆகியவற்றை டையோசிஸ் நிர்வாகம் அரசாங்க வங்கியில் இதுவரை சேர்க்காமலும் டையோசிஸ் சார்பில் இவர்கள் பணத்துடன் சேர்த்து மேலே கூறப்பட்ட ஊழியர்களுக்காக சேர்த்து அடைக்கவேண்டிய பணமும் இதுவரை அரசாங்கவங்கியில் சேர்க்கப்படாமல், பணம் பேங்க்கில் அடைக்காததால் ஆரம்பகாலத்திலிருந்து ஊழியர்கள்கணக்கில் வரவு வைக்கப்படவேண்டிய வட்டிபணம் பலகோடிகள் ஊழியர்கள் கணக்கில் வங்கியில் இல்லை என்பதாக CSI சினாடுக்கும், பிராவிடன் ஃபண்ட், பென்ஷன் அதிகாரிகளுக்கும் ஊழியர்கள் சிலராக புகார் எழுதி அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது. இது உண்மையானால் இது பெரும் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு டையோசிஸ் அதிகாரிகள் முதல் பிஷப்மார் வரை ஜெயிலுக்கு போக வேண்டி வரும். இவர்களுக்கு பெரும் ஆபத்தும், அவமானமும் காத்துக் கொண்டிருக்கிறது. இது டையோசிஸ் நிர்வாகிகளும், பிஷப்மாரும் டையோசிஸ் ஊழியர்களுக்கு செய்யும் பெருத்த துரோகம் ஆகும்”.
வேலை நியமனத்திலும் ஊழல்: “டையோசிஸ் வேலை நியமனத்தில் குறிப்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோரின் வேலைநியமனத்தில் பல வருடமாக வரிசையில் காத்துக் கிடக்கும் எத்தனையோ CSI டையோசிஸ்ஸில் CSI சபை அங்கத்தினரின் பிள்ளைகள், மனைவிமார்கள் வரிசைப்படி காத்துக்கிடக்க வேலை நியமான லிஸ்டில் இல்லாத நபருக்கு பணிநியமனம் கொடுத்தது துரோக குற்றச்சாட்டில் டையோசிஸ் நிர்வாகத்தினருடன் பிஷப் அவர்களும் குற்றவாளியாகிறார். இந்தவிதமான அநியாயத்துக்கு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் போக ஏழைகளுக்கு பணவசதியில்லை. ஆனால் அவர்களின் ஏமாற்றம் கண்ணீராக மாறி தேவசமூகத்தில் சென்றால் கர்த்தரே இந்தகுற்றச்சாட்டுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பார் என்பது நிச்சயம். இந்த சம்பவங்களும் சினாட்டில் குற்றச்சாட்டாக அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் நியாயம் தீர்க்க வேண்டிய தலைவரின் டையோசிஸ்ஸிலேயே இதே நியமனம் குறித்த குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. அப்படியானால் சினாடின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது நம்மால் யூகிக்க முடிகிறதே!”.
எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் தெய்வபயம் ஒழிந்துப் போனது: “இப்போதுதான் CSI சினாட்டுக்கு பிஷப்மார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் புதுதைரியம் உண்டாகியிருக்கிறது, அதற்காக பாராட்டுகிறோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய CSI பிஷப்மார்கள் பட்டியல் நீண்டுள்ளது. சீக்கிரம் நடவடிக்கை எடுத்தால் CSI சபைகள் நல்ல ஒழுங்குக்கு வரும். நடவடிக்கை CSI சினாட் தலைமையிலிருந்தும் ஆரம்பிக்கப் படவேண்டும். ஜெபிப்போம் சில வருடங்களுக்கு முன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD அனுப்பி உதவிய பலகோடிகளில் ஊழல் செய்து களவாடிய பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கொடுக்காமல் பலகோடிகள் தன் மகள் பெயரில் சினாட் பொறுப்பாளர்கள் சிலர் பலகோடிகளை வங்கியில் போட்டு வைத்ததை போலீஸ் கண்டு பிடித்தது. சினாடில் பொதுசெயலர் இன்னும் சம்பந்தப் பட்டவர்கள் பொது செயலரின் கர்ப்பிணியான நிலையில் இருந்த மகள் ஆகியவர்களை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கடலே இல்லாத இடங்களில் உள்ள CSI பிஷப்மார்களும் சுனாமி உதவிதொகையில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்று வாங்கிப்போன அநியாயங்களும் CSIயில் நடந்தது. சுனாமி உதவிதொகை அனுப்பிய அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD, CSI மீது வழக்கு தொடுத்துள்ளது. ERD உதவிஸ்தாபனம் CSI சினாடிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கிறது. பணம் வாங்கின எந்த பிஷப்பும் திருமண்டலத்தில் இதுவரை கணக்கு ஒப்புவிக்கவில்லை. பிரதம மந்திரிக்கு ERD தகவல் அனுப்பியுள்ளது. நீதிமன்றவழக்கை CSI சினாட் வேண்டுமென்றே வாய்தா வாங்கி வருடகணக்கில் நீட்டிக்கொண்டு போகிறார்கள். இப்போதுள்ள சினாட் புதிய கமிட்டி சுனாமி நிதிகணக்கை சம்பந்தப்பட்ட பிஷப்மார்களிடத்தில் கேட்டு வாங்குவார்களா?” என்று ஜாமக்காரன் முடித்துள்ளார்.
தூத்துக்குடி – நாசரேத்திருமண்டலநிர்வாகத்தை கவனிக்க Rev.ஜேசுசகாயம் நியமனம்[13]:தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை கவனிப்பதற்காக பிரதம பேராயர் பிரதிநிதியாக மதுரையை சேர்ந்த CSI குருவானவர். ஜேசுசகாயம் நியமிக்கப் பட்டுள்ளார்.தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர். தேவகடாசம் அவர்கள் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல குருவானவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்: சென்னையில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த தென்னிந்திய திருச்சபையின் தலைமை செயலக (சினாடு) நிர்வாக குழுகூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன்சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இப்பொழுது மார்ச் 2014ல் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
© வேதபிரகாஷ்
25-03-2014
[1] The Tirunelveli police have registered a cheating case against three CSI bishops in Tirunelveli and Tuticorin and a retired district judge for allegedly swindling several crores of rupees from a trust. Based on a complaint by Bala Singh, principal of the Bishop Sargent Teacher Training Institute, which was founded in 1818, the Palayamkottai police registered a case against the Tirunelveli CSI diocese bishop Rev J J Christudoss, Tuticorin CSI diocese bishop Rev J A D Jebachandran , a former Tirunelveli CSI diocese bishop Rev Jayapaul David, Tirunelveli CSI diocese treasurer Selvin Jayaraj, Tuticorin CSI diocese treasurer Samuel Selvaraj and retired district judge Retinaraj, a synod member, who has been appointed as the financial administrator for the Tirunelveli CSI diocese.
http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms
[2] Police registered a case under IPC Sections 406 (punishment for criminal breach of trust), 420 (cheating), 464 (making a false document) and 465 (punishment for forgery). Tirunelveli police commissioner Karunasagar said, “We have registered a case based on a court direction. We will pursue the case further.” The complainant has accused the former Bishop and the present Bishops of conniving with each other and bifurcating the diocese into two, which was against the Company Law. “We maintain elaborate and meticulous records,” Tirunelveli CSI diocese Bishop Rev J J Christudoss said. He said the records were proper and there were no malpractices. “Every year we send our account details to the central government through CSI. This year also we had sent it and there was no flaw in the records,” he said.
http://timesofindia.indiatimes.com/cheating-case-against-3-bishops-ex-judge/articleshow/16500346.cms
[3]தினமலர், மாஜிபிஷப்உட்படநான்குபேர்மீதுவழக்கு, சென்னை, 25-03-2013, பக்கம்,9.
[4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/jebachandran-frst-bishop-of-tuticorinnazareth-diocese/article3145638.ece
[5] Madras High Court-Thoothukudi Nazareth Diocese vs The Church Of South India on 23 September, 2008–IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS; DATE: 23.9.2008.
[6] http://indiankanoon.org/doc/1420149/
[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/parishioners-go-on-hunger-strike-condemn-activities-of-bishop/article3249357.ece
[8] Contravening the rules and regulations formulated by State and Central governments, lecturers were recruited at colleges under his maladministration. Alleging that those with educational qualifications and eligible for recruitment to posts of lecturers against existing vacancies were not considered but on the contrary, recruitments were made for money. Proper auditing was not executed to assess income and expenditure at regular intervals.
[9]இங்குள்ளவிசயங்கள்ஜாமக்காரன்என்றுஒருவர்எழுதிவரும்பதிவுகளினின்றுஎடுத்தாளப்பட்டுள்ளது. இங்குதேவைஎன்பதால்சேர்க்கப்பட்டுள்ளது.
[10] http://newindian.activeboard.com/t34454994/christian-world/?ts=1364740940&page=12&sort=newestFirst&direction=prev&w_r=1381895588
[11] http://jamakaran.com/tam/2013/june/csi.htm
[12] http://tamil.oneindia.in/news/2013/04/04/tamilnadu-tuticorin-nazareth-diocese-bishop-jebachandran-172791.html
[13]தூத்துக்குடி: மே 3-2013, தினகரன்