ஆசிய ஆயர் பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட ஆறு பெண்கள் – ஆசிய கிறிஸ்தவ பெண்கள், கன்னியாஸ்த்திரிக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவில்லை! (3)
ஆசிய ஆயர் பேரவை மாநாட்டில் கலந்து கொண்ட ஆறு பெண்கள்: பாங்காக்கில் நடந்த ஆசிய பிஷப் பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்[1]என்று வாடிகன் செய்தி கூறுகிறது. அவர்கள் கலந்து கொண்டது முக்கியமாகக் கருதப் படுகிறது. ஏனெனில் அவர்கள் பிராந்தியத்தில் உள்ள ஏழைகள், சிறுபான்மையினர், பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்[2], என்று தொடர்கிறது. முன்பு “எட்டு கன்னியாஸ்திரிகள்” கலந்து கொண்டார்கள் என்று செய்தி வந்தது. அதாவது ஐந்து / ஆறு கண்டங்களுக்கு ஒரு பெண் அல்லது அவ்வாறான ஆசிய கண்டத்தது நிலைக்கு, என்று எதோ, ஒப்புக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப் பட்டார்கள் போலிருக்கிறது. பாங்காக்கில் நடைபெறும் ஆசிய ஆயர்களின் பொது மாநாட்டில் (FABC) கலந்துகொள்ள அழைக்கப்பட்ட விருந்தினர்களில் பல மதப் பெண்களும் உள்ளனர்[3], என்றாலும், யார் கலந்து கொண்டனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், கத்தோலிக்கக் கிருத்துவத்தில் பெண்கள் பாஸ்டர், பிஷப் போன்றெல்லாம் ஆக முடியாது என்று தான் உள்ளது.
முந்தைய செய்தி – போப்பும், ஆயர் மாநாடும்: FABC [Federation of Asian Bishops’ Conferences (FABC)] என்னும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் 50 வது ஆண்டுப் பொன்விழாவை முன்னிட்டு, தாய்லாந்தில் ஒன்று கூடியுள்ள ஆயர்கள் அக்டோபர் 12 முதல் கூடினார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு கத்தோலிக்க ஆயர் மாநாடுகளின் மாநாடு அக்டோபர் 30 அன்று முடிந்தது. அதே நேரத்தில் உலகத்தில் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. போப்பே கார்டினல் முதல் கன்னியாஸ்த்திரி வரை போர்னோகிராபி படம் பார்க்கின்றனர் என்று வாடிகனில் நடந்த கூடுதலில் கூறி வருத்தப் பட்டார். அக்டோபர் 30 தேதி மாநாடு முடிவுற்றது. 20 கர்தினல்கள், 120 பிஷப்புகள், 37 பாதிரியார்கள், எட்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் 41 பொது மக்கள் FABC 50 பொது மாநாட்டில் கலந்துகொண்டனர்[4]. ஆனால், சைனாவிலிருந்து கலந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஆசியாவில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதிகள் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்தனர்[5]. ஆக நூற்றுக்கணக்கில் ஆண்-பாதிரி-பிஷப்புகள் கலந்து கொண்டபோது, இப்பொழுது, “பொது மாநாட்டில் ஆறு பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்,” என்று செய்தி வந்துள்ளது.
மாநாட்டில் பெண்கள் மதம் சார்ந்தவர்கள் கலந்து கொள்வது ஏன் முக்கியம்: வாடிகன் செய்திக்கு அளித்த பேட்டியில், மாநாட்டில் பெண்கள் மதம் சார்ந்தவர்கள் கலந்து கொள்வது ஏன் முக்கியம் என்று பேசினர்[6]. தலிதா கும் (Talitha Kum) பிரதிநிதியாக, தாய்லாந்தின் செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரி, ஸ்ரீ பவுலா, மதம் சார்ந்த பெண்கள் இங்கு இருப்பது முக்கியம், எனவே மனித கடத்தல் பகுதியில் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆயர்கள் அறிவார்கள்[7]. “நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம், மேலும் அவர்கள் எங்கள் குரலைக் கேட்க வேண்டும் மற்றும் எங்கள் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் மற்றும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்[8]. தாய்லாந்தில் உள்ள தலிதா கும் உடன் தொடர்புடைய செயின்ட் பால் ஆஃப் சார்ட்ரின் சகோதரியான சீனியர் பிரான்சுவா, “ஆயர்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்களின் மறைமாவட்டங்களில் எங்கள் பணியை ஏற்றுக்கொள்ளவும் நான் விரும்புகிறேன்“, எனவே அவர்கள் மனித கடத்தலால் “காயமடைந்தவர்களுக்கு” உதவி வழங்க முடியும்,” என்று ஒப்புக்கொள்கிறார். “மனித கடத்தல்,” என்று குறிப்பிட்டாலும் அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதும், அவர்களை வைத்து நடக்கும் குற்றங்கள், குறிப்பாக, கத்தோலிக்க சர்ச்சுகள், கான்வென்டுகள் மற்றும் மடாலயங்களில் நடக்கும் பாலியல் வன்மங்கள் பற்றி மூச்சு விடவில்லை. போப்பே, பலமுறை அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிகிறது.
மதம் சார்ந்த பெண்கள், மதப்பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்: தாய்லாந்தில் உள்ள அனுமானத்தின் மதவாதியும், பிலிப்பைனா மிஷனரியுமான டியன்னா (Sr Deanna), அவர்களின் அருகை “அங்கு மிகவும் முக்கியமானது…….”எனது பிரசன்னம் நமது பிஷப்புகளுக்கு, மதம், குறிப்பாக மதம் சார்ந்த பெண்கள், மதப்பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை நினைவூட்டுவதாக நான் உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.” என்று கூறுகிறார். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அலுவலகத்தின் நிர்வாகச் செயலாளரின் பங்கு காரணமாக தனிப்பட்ட அளவில் இது முக்கியமானது. இங்கு “மதம் சார்ந்த பெண்கள், மதப்பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். அதாவது, பெண்கள் இக்காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவார்கள், ஆனால், ஆண்களுக்கு நிகராக அந்தஸ்து, சர்ச்சில் பதவிகள் கொடுக்கப் பட மாட்டாது என்படு உறுதியாகிறது.
இந்திய பெண்மணி இந்திய கன்னியாஸ்த்திரிக்களின் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை: இந்தியாவிலுள்ள செயின்ட் பாலின் மகளான சகோதரி ஜோயன்னா டிசோசா (Sr Joeyanna D’Souza, a Daughter of St Paul), “ஊடகங்கள் மூலம் நற்செய்தியை அறிவிப்பதில் முழு ஈடுபாடு கொண்டதால் தான் பவுலின் ஆக அழைக்கப்பட்டதாகக் கூறினார். இங்கே இருப்பது,” அவள் தொடர்ந்தாள், “நான் இங்கு இருப்பது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் FABC இன் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் கோணத்தில் என்னால் சிறந்த பங்களிப்பை வழங்குகிறேன்,” எனும் போது, இந்தியாவில் எவ்வாறு கன்னியாஸ்திரிக்கள் பிஷப்புகளால், பாஸ்டர்களால் பாலியல் சதாய்ப்புகளுக்கு உள்ளாகிறார்கள், கற்பழிக்கப் படுகிறார்கள், கருவுற்று குழந்தை பெறுகிறார்கள் போன்றவற்றைப் பற்றி பேசாமல் இருந்ததையும் கவனிக்கலாம். சமீபத்தில் மூலக்கல் கற்பழிப்பு எல்லோருக்கும் அறிந்த விசயமாயிற்று, ஆனால், நடவடிக்கை எடுக்கப் படாமல் தப்பித்துக் கொண்டார்.
மத நம்பிக்கையுள்ள பெண்கள் FABC இல் கலந்துகொள்வது முக்கியம்: சகோதரி வெல் (Sr Whel) சிஸ்டர்ஸ் ஆஃப் தி டிவைன் சேவியர், பிலிப்பைன்ஸ், “எனக்கு குரல் இருப்பதால், மத நம்பிக்கையுள்ள பெண்கள் FABC இல் கலந்துகொள்வது முக்கியம் என்று தான் நம்புவதாகக் கூறினார். பிறகு ஏன் ஆறு பெண்கள் மட்டுமே கலந்து கொன்டார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் யதார்த்தம் என்ன என்பதை நான் வெளிப்படுத்த வேண்டும், சூழ்நிலைகளில் மட்டுமல்ல, FABC ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆனால் நாங்கள் பங்களிக்க முடியும், எங்களுக்கு யோசனைகள் உள்ளன. வெல் தலிதா கும் உடன் இணைந்து பணியாற்றுகிறார். “அவர்களும் நாமும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்க வேண்டும் என்பதும் கவலை அளிக்கிறது. அனைத்து மதத்தினரையும், குறிப்பாக பெண்கள் கேட்க வேண்டியது முக்கியம்.
ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… தரையில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் குரல்: “தலிதா கும் மற்றும் சிறுபான்மையினருடன் பணிபுரியும் குட் ஷெப்பர்ட் பிரதிநிதித்துவப்படுத்தும் FABC உடன் இங்கு வந்திருப்பதை நான் தனிப்பட்ட முறையில் ஆசீர்வதித்ததாக உணர்கிறேன்” என்று தாய்லாந்தில் உள்ள எங்கள் அறக்கட்டளையின் சகோதரியான Sr Sutisa தொடங்கினார். இது நேரம், “ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… தரையில் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் குரல் FABC இன் மேஜையில் கேட்கப்படும்” என்று அவர் தொடர்ந்தார். “இதுவும் ஒரு சேனலாகும்,” அவள் தொடர்ந்தாள், “அது மாற்றத்தை கொண்டு வரும்…எதிர்காலத்தில்…மிக சமீப எதிர்காலத்தில் FABC ஒரு சேனலாகும் .” முதலில் அவர்களது பாதிப்புக் குரலே இதில் கேட்காமல் இருக்கிறது. ஏழைகள்… சிறுபான்மையினர்… பாதிக்கப்படக்கூடியவர்கள்… என்றெல்லாம் பேசினாலும், இவர்கள் கைப்பாவைகளாக வேலை செய்கிறார்கள் என்று தான் தெரிகிறது. தனித்து, சுதந்திரமாக, தமது கருத்தை, ஏன் உண்மையான நிலைமையைக் கூட அவர்களால் சொல்ல முடியவில்லை என்பது தான் நிதர்சனமாகிறது.
2022 – அக்டோபர் பிரச்சினை, நவம்பரிலும் தொடர்கிறது: அக்டோபரில் இம்மாநாடு நடந்து முடிந்தாலும், வாடிகனில், அப்பிரச்சினை அலசப் படத்தான் செய்கிறது. ஜெர்மனியின் மூத்த கத்தோலிக்க பிஷப் 19-11-2022 சனிக்கிழமையன்று, பெண் பாதிரியார்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதங்கள் மூடப்பட்டுவிட்டன என்ற வாடிகனின் கருத்தை எதிர்த்து, அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசினார்[9]. போப் பிரான்சிசுக்கும் வத்திக்கான் அதிகாரிகளுக்கும் ஒரு பக்கம், மற்றும் ஜெர்மனியின் பிஷப்கள் அனைவரும் இன்னொரு பக்கம் என அடத்திய ஒரு வார உரையாடல் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் பிஷப் ஜியார்ஜ் பேட்ஜிங் (Georg Baetzing) இவ்வாறு பேசினார்[10].
© வேதபிரகாஷ்
20-11-2022.
[1] Vatican News, The voice of women religious at FABC General Conference, By Sr Bernadette Mary Reis, fsp – Bangkok, 25 October 2022, 16:35.
[2] https://www.vaticannews.va/en/church/news/2022-10/women-religious-talitha-kum-fabc-general-conference-bangkok.html
[3] Usig.News, The voice of women religious at FABC General Conference,25 October 2022, 16:35.
[4] UCAN.News, Bishops regret lack of Chinese presence at Asian gathering, ASIA | Updated: October 31, 2022 07:22 AM
[5] https://www.ucanews.com/news/bishops-regret-lack-of-chinese-presence-at-asian-gathering/99252
[6] https://www.uisg.org/en/news/The-voice-of-women-religious-at-FABC-General-Conference
[7] Herald Malaysia , The voice of women religious at FABC General Conference, Source Herald Malaysia, 26/10/2022 12:30:00 PM.
[8] https://headtopics.com/my/the-voice-of-women-religious-at-fabc-general-conference-31093271
[9] Reuters, Women priests, homosexuality, not closed debate in Church, German bishop says, By Philip Pullella November 19, 20225:49 PM GMT+5:30; Last Updated 4 hours ago
[10] https://www.reuters.com/world/europe/women-priests-homosexuality-not-closed-debate-church-german-bishop-says-2022-11-19/