Posts Tagged ‘அறுவடை’

லாவண்யா தற்கொலை வழக்கு – மதமாற்றம் போன்றவை பெயர் மாற்றங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன (1)

ஜனவரி 31, 2022

லாவண்யா தற்கொலை வழக்குமதமாற்றம் போன்றவை பெயர் மாற்றங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன (1)

திருக்காட்டுப் பள்ளிபாடல் பெற்ற ஸ்தலத்தில் நடந்தது என்ன?: திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியிலிருந்து, தஞ்சாவூர் 30 கி.மீ; திருச்சி 32 கி.மீ; திருவையாறு 17 கி.மீ; பூதலூர் 8 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த பாடல் பெற்ற ஸ்தலத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி, இப்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47)[1]. இவரின் முதல் மனைவி கனிமொழி. அவரது மகளுக்கு வயது 17. கனிமொழி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்[2]. இதனால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மகள் லாவண்யா, தஞ்சை அருகிலுள்ள திருக்காட்டுப் பள்ளியில் – தூய இருதய மேல்நிலைப் பள்ளி (Sacred Heart Higher Secondary School) மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு படித்துவந்தார். இம்மாணவி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருக்காட்டுப் பள்ளி, மைக்கேல்பட்டி ஆனதே கிறிஸ்தவ மதமாற்றத்திற்குச் சான்று: இன்றைய செக்யூலார் மற்றும் நாத்திக-இந்து விரோத ஆட்சியில், தமிழக புராதன இடங்கள், ஊர்கள், கிராமங்கள் முதலியவற்றின் பெயர்க்ள் மாற்றப் படுவதிலிருந்தே, அங்கே எவ்வாறு துலுக்கர் மற்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், திடீரென்று தஞ்சாவூர், கும்பகோணம், திருநெல்வேலி, கன்யாகுமரி போன்ற இடங்களில் அல்லாப்பேட்டை, மொஹம்மது நகர், அஹமது நகர், பெத்தேல் நகர், மைக்கேல் பட்டி என்றெல்லாம் தோன்றி விட முடியாது. இது, மக்கள் தொகை, ஜனத்தொகை மாற்றம், புவியியல், சரித்திரம் மற்றும் உள்ளூர் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் என்று எல்லாவற்றியும் மாற்றும், மறைக்கும் வேலைகள் ஆகும்[3]. இதற்கு உள்ளூர் அதிகாரிகளும் ஒத்துழைத்துள்ளார்கள் என்று தெரிகிறது[4]. பத்திரப் பதிவுகளில், 200 ஆண்டுகளாக இருந்து வரும் பெயர்களை இன்றும் உபயோகப் படுத்தப் படுகிறது. இல்லையென்றால், மூல்ங்களை அறிய முடியாது, சரிபார்க்கவும் முடியாது. இல்லையென்றால், அவ்வாறேல்லாம் பெயர்களை மாற்றி விட முடியாது. அவை அரசு ஆவணங்களிலும் இடம் பெற முடியாது.

09-01-2022 முதல் 15-01-2022 வரை நடந்தது: தற்போது பிளஸ் 2 படித்து வந்த அவர், ஜன.9-ம் தேதி விடுதியில் இருந்தபோது வாந்தி எடுத்துஉள்ளார்[5]. அப்போது, அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மிஷினரிகள் உள்ளனர்[6]. அந்த சிகிச்சை விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து, மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜன.15-ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது, மாணவியை பரிசோதித்த மருத்துவர்களிடம், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால், ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸார் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

லாவண்யா 09-01-2022 அன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன் என்றார்: “இதற்கிடையே மாணவி அளித்த இறுதி வாக்குமூலத்தில், கடந்த ஆண்டுகளாக விடுதியில் தங்கி படித்து வருகிறேன். விடுதி வார்டன் என்னை மட்டும் கணக்கு வழக்குகளை பார்க்கச் சொல்லுவார். இதனால் விடுமுறைக்கு கூட என்னை வீட்டிற்கு அனுப்ப மாட்டார். வீட்டில் இருந்து யார் கேட்டாலும் ஒழுங்காக படிப்பார் என்று சொல்லி விடுவார். உடம்பு சரியில்லை என்றால் கூட என்னை விட்டுவிட மாட்டார். இதனால் விரக்தி அடைந்த நாள் கடந்த 9ஆம் தேதியன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன்”. இது மருத்துவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனால் தான், போலீஸாரிடம் புகார் கொடுக்கப் பட்டது. ஒருவேளை, தந்தைக்கும் அதன் தீவிரம் புரிந்திருக்கலாம். சந்தேகமும் எழுந்திருக்கலாம்.

19-01-2022 காலை அன்று லாவண்யா இறந்தார்: இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா கடந்த 19-ந் தேதி மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 20-01-2022 அன்று லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.  ஆனால் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர்.  தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மாணவி லாவண்யாவின் உடலை பெற பெற்றோர், உறவினர்கள் வருவார்கள் என போலீசார் காத்து இருந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்கி கொள்வோம் என பெற்றோர் கூறியதுடன் உடலை பெற்றுச் செல்ல வரவில்லை. இதனால் பிரேத பரிசோதனை முடிந்து 2 நாட்கள் ஆகியும் உடலை ஒப்படைக்க முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள். எனினும் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

22-01-2022 அன்று மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவை சந்தித்து கொடுத்த மனு: மேலும் மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவை சந்தித்து மனு அளித்தார்[7]. அந்த மனுவில், “எனது மகளை மதம் மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அவரை திட்டி, அதிகமாக வேலைவாங்கியதால் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என குறிப்பிடப்பட்டிருந்தது[8]. ஆனால் சிகிச்சையின்போது லாவண்யா அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை. தற்போது லாவண்யாவின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார்.  இதெல்லாம் முரண்பாடா, செய்திகள் வெளியிடுவதில் குறைபாடா, அல்லது பள்ளி நிர்வாகத்தினர் அழுத்தம் கொண்டு வந்தனரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

31-01-2022


[1] புதியதலைமுறை, தஞ்சையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை: வார்டன் கைதுஉடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம், தமிழ்நாடு, Jnivetha, Published : 20,Jan 2022 05:57 PM.

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/127496/Hostel-Warden-arrested-in-Thanjavur-in-12th-class-student-commits-suicide

[3] Place name Society of India போன்ற அமைப்புகள் இத்தகைய சரித்திர மாற்றங்கள், மறைப்புகள் மற்றும் மோசடிகளை சுட்டிக் காட்டவேண்டும், தடுக்க வேண்டும். ஏனெனில், சொத்துக்களை ஏமாற்றிப் பறிக்கவும், பதிவு செய்யவும், இம்முறைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. குறிப்பாக கோவில் நிலங்கள் இவ்வாற்று தான் கொள்ளையடிக்கப் பட்டு வருகின்றன.

[4]  வட்டாட்சிய அலுவலகங்களே ஊழலுக்கு பெயர் போனதால், அவர்கள் செய்யும் பதிவுகளில் அத்தகைய மோசடிகள் காணப் படுகின்றன. பலமுறை அத்தகைய செய்திகள் வெளி வந்தாலும் மறைக்கப் படுகின்றன.

[5] தமிழ்.இந்து, தஞ்சாவூர்: விடுதியில் அறைகளை சுத்தம் செய்யக் கூறி திட்டியதாக புகார்; மாணவி தற்கொலையில் பெண் வார்டன் கைது: மதம் மாற கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டி பாஜகவினர் மறியல், செய்திப்பிரிவு, Published : 21 Jan 2022 08:17 AM; Last Updated : 21 Jan 2022 08:17 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/759295-female-warden-arrested.html

[7] தினத்தந்தி, மதம்மாற கட்டாயப்படுத்தியதாக புகார்: தற்கொலை செய்த மாணவிஉடலை வாங்க மறுக்கும் பெற்றோர், பதிவு: ஜனவரி 22,  2022 07:23 AM மாற்றம்: ஜனவரி 22,  2022 07:32 AM.

[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2022/01/22072328/Complaint-of-being-forced-to-convert-Student-who-committed.vpf

பாபா ராம்தேவ், அலோப்பதியா-ஆயுர்வேதமா பிரச்சினை – ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பிரச்சினையானது – நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (1)

ஓகஸ்ட் 4, 2021

பாபா ராம்தேவ், அலோப்பதியாஆயுர்வேதமா பிரச்சினைஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பிரச்சினையானதுநீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்றது (1)

பாபா ராம்தேவ் அல்லோபதி மருந்து முறையை விமர்சித்தது, IMA கண்டித்தது, வழக்கு போட்டது: பாபா ராம்தேவ் கொரோனா மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி விமர்சித்த போது, இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு / இன்டியன் மெடிகல் அசோஸியேஷன் (IMA) அதனைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். மன்னிப்புக் கேட்க சொன்னார்கள். மோடி கூட அறிவுருத்தினார். பாபா ராம்தேவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மன்னிப்புக் கேட்டப் பிறகும், தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அலோபதி மருத்துவம், கரோனா தடுப்பூசி குறித்து யோகாகுரு பாபா ராம்தேவ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தார். தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைக் கூறியும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளைத் தெரிவித்துவரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியது.

ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது: இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, அலோபதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அலோபதி மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் எதிராக அவதூறு கருத்துகளை யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதற்கு எதிராக, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தங்கிப் பணியாற்றும் ரெஸிடெனட் மருத்துவர்கள் கூட்டமைப்பு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாபா ராம்தேவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன[1]. இந்த நிலையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார்[2]. கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் பலமுறை கண்டனங்கள் எழுப்பினார். இவையெல்லாம், டிவி மற்ற ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருந்தன.

 2020லிருந்து கொரோனா காலத்தை, ஊழியக் காலமாக மாற்றிக் கொண்ட கிறிஸ்துவ மிஷினரிகள்: ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் மருத்துவராக இருந்தது மட்டுமல்லாது, விசுவாசமான கிறிஸ்துவராகவும் இருந்துள்ளார். அதிலும் தப்பில்லை, ஆனால், கொரோனா தொற்று, மரணங்கள், ஊரடங்கு முதலியவற்றை வைத்து, எப்படி கிறிஸ்தவத்தைப் பரப்பலாம் என்று, “கிறிஸ்டியானிடி டுடே” என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விரித்துள்ளார்[3]. மார்ச் 2021லேயே இந்த பேட்டி வந்துள்ளது[4]. தவிர “ஹக்கை இன்டெர்நேஷனல்” என்ற கிறிஸ்தவ மதப் பிரச்சார மற்றும் மதமாற்றம் செய்யும் இணைதளத்திலும் இவரது அப்பட்டமான பேச்சுகள் பதிவாகி இருந்தன. ஆனால், சுதாரித்துக் கொண்ட கிருத்துவர்கள் அதனை நீக்கிவிட்டார்கள். இருப்பினும், “ஸ்கிரீன் ஷாட்” பலரிடத்தில் உள்ளது.  அவர்கள் இதைப் பற்றி 2020லிருந்தே பிரச்சாரம் செய்து வருகின்றனர்[5]. இந்த கொரோனா காலமே, கடவுள் நமக்குக் கொடுத்த வரப் பிரசாட்தம் ஆகும் என்று ஊழியத்தை ஆரம்பித்தனர்[6]. ஆனால், IMA இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. 30-03-2021 தேதியிட்ட கடிதத்தில் IMA, ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலாலுக்கு வக்காலத்து வாங்கி, அவரது கடிதத்தை சான்றாக வைத்து, அவரைப் பற்றிய வரும் செய்திகள் பொய் என்று அறிக்கை விட்டது. அதாவது, அந்த அளவுக்கு அவருக்கு ஆதரவு தெரிவிக்கப் பட்டது.

ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால்IMA தலைவரின் பிரச்சாரம்: தனது பதவியையும், அலுவலகத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு பயன்படுத்தியதாக புகார்கள் வந்ததை அடுத்து அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது[7]. தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக ஜெயலால் பயன்படுத்தியதால் நீதிமன்றத்தில் ஆஜராகி இது குறித்து பதிலளிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது[8]. LRPF என்ற தன்னார்வ அமைப்பு ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் அளித்த இரண்டு நேர்காணல்களை மேற்கோள் காட்டி அவர் தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது[9]. அவர் தனது நேர்காணலில், “தொழுநோய், காலரா மற்றும் பிற தொற்றுநோய்கள் உலகை பேரழிவிற்கு உட்படுத்தியபோது, ​​கிறிஸ்தவ மருத்துவர்கள் மற்றும் தேவாலயங்கள் மட்டுமே அவற்றிற்கு எதிராக நின்று போராடிய கிறிஸ்தவர்களின் தயாள குணத்தைக் காட்டினர்,” என்று கூறியிருந்தார்[10]. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தி அளிக்க வேண்டும் என்ற அவசரம் மத சார்பற்ற நிறுவனங்களில், அதாவது அரசு மற்றும் கிறிஸ்தவர் அல்லாதோரின் தனியார் மருத்துவமனைகள், கூட மதப் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஹக்காய் இன்டர்நேஷனலுக்கு அளித்த நேர்காணலில் ஒவ்வொரு தேசமும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மூலம் மீட்கப்பட்டு நல்ல மாற்றம் அடைந்துள்ளது: இதேபோல் ஹக்காய் இன்டர்நேஷனலுக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஒவ்வொரு தேசமும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மூலம் மீட்கப்பட்டு நல்ல மாற்றம் அடைந்து உள்ளதாக அவர் கூறி இருந்தார். ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்த ஒரு யோசனையை அவர் விரும்பவில்லை என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் ஆயுஷ் அமைச்சகத்தை குறிப்பிட்டு, “அவர்கள் ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை என்று மாற்ற விரும்புகிறார்கள். அடுத்து, அவர்கள் அதை ஒரே மதமாக மாற்ற விரும்புவார்கள். அது சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது, அது எப்போதும் பாரம்பரியமான இந்து மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்று தெரிவித்தார். எனவே, “சமஸ்கிருத மொழியையும் இந்துத்துவாவின் கொள்கைகளையும் மக்களின் மனதில் அறிமுகப்படுத்த இது ஒரு மறைமுக வழி,”‌ என்றே தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவர் தனது நேர்காணலில் இந்து மதத்தை தாழ்த்தியும் கிறிஸ்தவ மதத்தை உயர்த்தி பேசியுள்ளது தெள்ளத் தெளிவாகிய நிலையில் இவர் இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பை மதமாற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

04-06-2021 அன்று நீதிபதி கண்டித்த நிலை:  “ஹக்காய் இன்டெர்நேஷனல்” இணைதளத்தில் அரசாங்கத்தை “இந்து நாடு இந்தியா” என்றெல்லாம் விமர்சித்ததை நீக்கி விட்டு, இவ்வாறு பொய் என்று வாதிட ஆரம்பித்தனர். மின்னணு கருவிகளில், இத்தகைய மோசடிகள் செய்தால், சைபர் கிரைம் குழுவினர் கூட கண்டு பிடிக்கலாம். தான் பேசியதற்கு ஒருவர் தைரியமாக நிற்கிறேன் என்று உறுதியாகச் சொல்லும் போது, எதையும் இவ்வாறு நீக்கவோ, மறைக்கவோ தேவையில்லை. இதனால், ரோஹித் ஜா என்பவர், தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்[11]. அதுவரை கிடைத்த ஆதாரங்களை இணைதள “ஸ்கிரீன் ஷாட்டுகள்” முதலியவற்றை சமர்ப்பித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினார். நீதிமன்றமும், அவர் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று 04-06-2021 கண்டித்து, தீர்ப்பளித்தது[12].  தனது பதவியையும், அலுவலகத்தையும் கிறிஸ்தவ பிரச்சாரத்திற்கு, மதமாற்றத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றது. 09-06-2021 தேதிக்குள், இதற்கு எதிராக எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டியவற்றை சமர்ப்பிக்கலாம் என்று நீதிபதி ஆணையிட்டார்[13]. ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெய்லாலும், தில்லி நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார். வழக்கம் போல, இழுத்தடிக்க, வழக்கறிஞரை வைத்து, வாதிக்கு முடிவு செய்துள்ளார். நீதிமன்றத்தில், சமர்ப்பிக்கப் படும் ஆவணங்களை வைத்தே, சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 27-07-2021 செவ்வாய் கிழமை இவரது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்டது.

© வேதபிரகாஷ்

04-08-2021


[1] தமிழ்.இந்து, டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகள்; உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பாபா ராம்தேவ் மனு, செய்திப்பிரிவு, Published : 23 Jun 2021 05:21 PM; Last Updated : 23 Jun 2021 05:23 PM.

[2] https://www.hindutamil.in/news/india/685347-yoga-guru-ramdev-goes-to-supreme-court.html

[3] Christianity Today, An Indian Christian Doctor Sees COVID-19’s Silver Linings, INTERVIEW BY MORGAN LEE , MARCH 30, 2021.

Johnrose Austin Jayalal, president of the Indian Medical Association, says the pandemic stirred the church to action.

[4] https://www.christianitytoday.com/ct/2021/march-web-only/india-covid-19-pandemic-medical-association.html

[5] Christianity Today, The Pandemic Lockdown Is a Godsend for the Indian Church, ISAAC SHAW, APRIL 16, 2020

[6] https://www.christianitytoday.com/ct/2020/april-web-only/india-churches-covid-19-coronavirus-pandemic-lockdown.html

[7] கதிர்.செய்தி, தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்நீதிமன்றத்தில் வழக்கு!, Monday, 31 May, 8.43 pm

[8] கதிர்.செய்தி, தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்நீதிமன்றத்தில் வழக்கு!, By : Shiva  |  1 Jun 2021 7:00 AM

[9] https://kathir.news/big-picture/–1093991

[10]தினசரி.காம், வெறித்தனமாய் மதம் மாற்றும் கிறிஸ்டீன் மெடிகல் அச்சொசியேஷன்: LRO குற்றச்சாட்டு!, Suprasanna Mahadevan, 02-06-2021. 12:4 PM.

[11] Brand.Bench, IMA Chief Johnrose Austin Jayalal moves Delhi High Court against trial court order deprecating interview to Christianity Today, Aditi, Published on :  14 Jun, 2021 , 3:30 pm.

[12] The President of Indian Medical Association (IMA), Johnrose Austin Jayalal has moved the Delhi High Court against a trial court order deprecating his interview to Christianity Today as being against secularism (Johnrose Austin Jayalal vs Rohit Jha).

https://www.barandbench.com/news/litigation/ima-chief-johnrose-austin-jayalal-moves-delhi-high-court-interview-christianity-today

[13] (Ajay Goel)  Vacation Judge/ADJ-04/Dwarka Courts/SW  New Delhi/03.06.2021….. Ld. Principal District & Session Judge, South West District, Dwarka on 09.06.2021