Posts Tagged ‘வெட்கங்கெட்ட மோசடிகள்’

கிருத்துவர்களின் தாமஸ் மோசடி தொடர்கிறது! அருளப்பா மற்றும் ஆச்சார்ய பால் முதலியோர்களின் ஆவிகள் என்ன செய்யும்?

ஜனவரி 4, 2011

கிருத்துவர்களின் தாமஸ் மோசடி தொடர்கிறது! அருளப்பா மற்றும் ஆச்சார்ய பால் முதலியோர்களின் ஆவிகள் என்ன செய்யும்?

வெட்கங்கெட்ட மோசடிகள், போலித்தனங்கள்: கிருத்துவர்கள் தாமஸ் விஷயத்தில் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் மேன்மேலும் மோசடி செய்து வருவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. பொய், மோசடி, கள்ள ஆவணங்கள், போலி தஸ்ஜாவேஜுகள், என எல்லாவற்றின் மொத்த உருவமாக இந்த தாமஸ் மோசடி, மாய்மாலங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. ஏதோ வாடிகனையும் விஞ்சியவர் தாம் என்ற போக்கில் இங்கு கிருத்துவர்கள் நடந்து கொள்வது போல இருக்கிறது.

செய்தி எனது விமர்சனம்
பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்தலமாகிறது. இதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தேர்தல் சமயத்தில் இப்படி அரசியல்வாதிகள் செய்யலாம். ஆனால், அவர்களும் அத்தகைய மோசடிகளுக்குத் துணை போகிறார்கள் என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். நாளைக்கு சரித்திரமும் இதை நினைவில் வைத்துக் கொள்ளும்.
பழமையான ஆலயம்: சென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கி.பி. 52-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பழமையான ஆலயமாகும். இந்த ஆலயம் தற்போது தமிழக திருத்தலமாக உள்ளது. இதை தேசிய திருத்தலமாக மாற்ற இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை முடிவு செய்து உள்ளது. உள்ள இந்துக் கோவிலை இடித்துவிட்டு, இது 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று முந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே தனது புத்தகத்தில் விவரமாக எழுதியுள்ளார். மேலும், அந்த கட்டிடம் புதுப்பிக்கத் தோண்டியபோது, சக்கிரம் வரைந்த கல் கிடைத்தது என்றும் எழுதியுள்ளார்.
இது பற்றி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் டாக்டர் ஏ.நீதிநாதன் நேற்று பரங்கிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஏசுநாதரின் சீடர் ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான தோமையார் மயிலை பகுதியில் நற்செயல்களை செய்து வந்தார். அவர் இந்த மலையில் கொல்லப்பட்டதால் புனித தோமையார் மலை என அழைக்கப்படுகிறது. இல்லாத ஆசாமி ஏன் இங்கு வருகிறான், கொல்லப் பட்டான் என்ற கட்டுக்கதைகளை விடும் இந்த கிருத்துவர்கள் முதலில் தமது கிருத்துவ சரித்திரத்தை படிக்கவேண்டும். இல்லையென்றால், உலகளவில், இவர்களது மானம் கப்பலேறிவிடும்.
இங்கு புனித இறைவனின் தாய் அன்னை மரியாள் ஓவியம் கண்டு எடுக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஏசு மற்றும் 12 சீடர்களின் ஓவியங்கள் உள்ளன. ஆமாம், கொண்டு வந்து போட்டால், கண்டு எடுக்கத்தான் செய்வார்கள். போர்ச்சுகீசியரே தாம்தான் கொண்டுவந்து போட்டேன் என்று எழுதி வைத்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஆலயம் செங்கல்பட்டு மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த ஆலயம் தமிழக திருத்தலமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. புனிதம்மிக்க இந்த ஆலயம் தேசிய திருத்தலமாக மாற்றப்பட உள்ளது. தமது சௌக்கியத்திற்கு கிருத்துவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், மற்ற கிருத்துவர்களும், இவர்களைக் கவனித்து வருகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் மதம் மாறினாலும், கிருத்துவ பாரம்பரியம் தெரியாமல் இப்படியான கூத்துகளை செய்ய கூடாது.
அகில இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம் வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க உள்ளது. அப்போது தேசிய ஆலயமாக்கி ஆணை வழங்கப்பட உள்ளது. வாடிகன் என்ன செய்யும்? ஏற்கெனெவே செக்ஸ் விவகாரங்கள் வெள்ளம் போல பெருகி வந்து மூழ்கடித்துள்ள போது, இத்தகைய கூத்துகளை மற்ற பொறுப்புள்ள கிருத்துவர்கள் கண்டிப்பார்கள்.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: இதற்கான விழா 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பரங்கிமலை புனித தோமையார் ஆலயத்தில் நடக்க உள்ளது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வதோர் பெனாக்கியோ தலைமையில் 120 ஆயர்கள் கலந்து கொண்டு அறிவிக்க உள்ளனர். இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சுரேஷ்ராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேசிய திருத்தலமாக மாற்றப்படும் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பரங்கிமலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தேர்தல் சமயத்தில் இப்படி அரசியல்வாதிகள் செய்யலாம். ஆனால், அவர்களும் அத்தகைய மோசடிகளுக்குத் துணை போகிறார்கள் என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். நாளைக்கு சரித்திரமும் இதை நினைவில் வைத்துக் கொள்ளும்.
புனிதமிக்க இந்த பரங்கிமலையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்று அவர் கூறினார். அப்போது திருத்தலதந்தை பாக்கியரெஜிஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதயராஜ், பங்குத்தந்தைகள் அன்பு ரோஸ், லூயிஸ்ராயர், சிரில்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர் அந்நிய சுற்றுலாவினர் வந்தால், சிரிக்கத்தான் செய்வார்கள். அடடா, இந்துவ கிருத்துவர்கள், இவ்வளவு கேவலமாக இருக்கிறார்களே, கொஞ்சம் கூட அறிவில்லாமல், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி உழலுகிறார்களே என்று தான் நினைப்பார்கள்!

அருளப்பா மற்றும் ஆச்சார்ய பால் முதலியோர்களின் ஆவிகள் என்ன செய்யும்? அதுமட்டுமல்லாது, ஆட்சியாளர்களையும் அத்தகைய மோசடிகளில் ஈடுபடுத்துவதால், போலிக்கு, மோசடிக்கு, கள்ளதனத்திற்கு…அங்கீகாரம், ஏற்ப்புத்தனமை, சரித்துவத்துவம்……………..எல்லாம் வந்துவிடும் என்று நினைத்தால், அருளப்பா ஆவி சும்மா விடாது. அந்த ஆச்சார்யா பாலின் ஆவியும் சும்மா விடாது!

உள்ள பொருட்கள் மற்றவற்றை கார்பன்-14 பரிசோதனை செய்தாலே வடவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்: மயிலை, சின்னமலை மற்ரும் பரங்கிமலை என்ற மூன்று  இடங்களில், மூன்று இந்து கோவில்களை இடித்துவிட்டு, இப்படி அடிக்கடி நாடகம் ஆடி, அதற்கு அப்பா-கருணாநிதி, மகன்-ஸ்டாலின் என்று கூட்டத்தை சேர்த்தால், மோசடிகள் ஆசிர்வதிக்கப் பட்டு, புனிதமாகி விடாது. இதெல்லாம், நரகத்திற்கு செல்லும் வழி என்பதனை, இந்த மதம் மாறிய கிருத்துவர்கள் நினைவில் வைத்துக் கொள்லவேண்டும். உள்ள கிருத்துவ சித்திரங்கள் / ஓவியங்கள், ஆர்மீனிய கல்வெட்டு முதலியவை எல்லாமே 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் கொண்டுவரப்பட்டவை ஆனால், வேறு-வேறு கதைகளை பின்னர் கட்டி விட்டனர். இப்பொழுது கூட இவற்றை தகுந்த ஆராய்ச்சி கூடங்களுக்கு, வாடிகனின் ஒப்புதலோடு முதலில் அனுப்பி சோதிக்க வேண்டும். அப்பொழுது உண்மை என்னவென்று தெரிந்துவிடும். அதற்கு பிறகுதான், இத்தகைய கதைகளை விடவேண்டும். அதற்கு கிருத்துவர்கள் தயாரா?

வேதபிரகாஷ்

04-01-2011