கடவுளின் வங்கி, வாடிகன் வங்கி நிதி மோசடிகளில் ஊறி, பணமோசடிகள் செக்ஸ்–குற்றங்களில் முடிந்த நிலை!
வாடிகன் நாடும், வங்கியும்: வாடிகன் நகரம், “ஒரு நாட்டில் உள்ள நாடு” [State wthin a state] என்ற ரீதியில், ரோமில் செயல்பட்டு வருகிறது. அதனால்,அதற்கான வங்கியும் தனியாக உள்ளது. உலகத்தின் பல இடங்களிலிருந்து, பலவழிகளில் நிதி வந்து கொண்டிருக்கிறது. அதனை வாடிகன் வங்கி நிர்வகித்து வருகின்றது. வாடிகன் வங்கி [The Institute for the Works of Religion (Italian: Istituto per le Opere di Religione – IOR] ஜூன் 1942ல், போப் பயஸ்-12 ஆல் நிறுவப்பட்டது. 2012ல் பரவலாக தன்னுடைய வங்கிப்பணிகளை விரிவுப் படுத்தியது. 2013ல் தனது வரவு-செலவு அறிக்கையினையும் வெளியிட்டது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதால், யூரோ இதன் கரன்சியாக இருக்கிறது. இது கடவுளின் வங்கி, தேவனின் / தெய்வத்தின் / மேரியன் வங்கி என்றெல்லாம் வழங்கப் படுகிறது. பல நேரங்களில் வங்கிப் பணம் மற்ற செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படுவது, தெய்வ-தருமகாரியங்களுக்கு என்று வரிவிலக்குக் ஒடுக்கப் பட்டுள்ள பணம், சொத்து முதலியவற்றை மற்ற காரியங்களுக்கு உபயோகப் படுத்த அனுமதி கொடுக்கப் பட்டு பணத்தை அள்ளி வருகின்றனர்.
2019 ஆண்டு பிரச்சினை, விவகாரம் முதலியன: வாடிகன் வங்கி [The Vatican Bank, officially known as the Institute for Religious Works or IOR] சமீப காலங்களில் பல நிதிமோசடிகளில் சிக்கியுள்ளது. வாடிகனின் தரும காரியங்களுக்கு என்று துவக்கப் பட்ட கோடானுக் கோடி பணம் [$400 million], லண்டனில் அடுக்குமாடி கட்டிடங்கள் வாங்க உபயோகப் படுத்தப் பட்டது. அதாவது, பணத்தை முறைதறிய லாபங்களுக்காக, வாடிகன் வங்கி அதிகாரிகள் இவ்வாறு திருப்பியுள்ளனர். அவ்வாறு வாங்கப்பட்ட கட்டிடங்கள், ஓரின சேர்க்கை கத்தோலிக்க சாமியார்களின் விபச்சார மடங்கள் [gay brothels] ஆகின, சில நேரங்களில் பெண்களும் வந்து சென்றனர். அதாவது, பாதிரிகளில் உல்லாசக் கூடங்களாக இருந்தன. இவற்றை சில இத்தாலிய நாளிதழ்கள் கண்டு பிடித்து வெளியிட்டன. இதனால், பிரச்சினை வெளியே தெரிய, அசிங்கமாகியது. 02-10-2019 அன்று ஐந்து வங்கி அதிகாரிகள் வேலை-நீக்கம் செய்யப் பட்டனர்[1]. இதனால், குற்றம் நிவத்தியாகி விட்டது என்று அர்த்தமில்லை. பொதுவாக இவ்வாறு வழக்குகள் அமைதியாக மூடப்படும்.
கடந்த ஆண்டுகளில் நடந்த நிதி மோசடிகள், வரியேய்ப்புகள் முதலியன: 2006-2011 ஆண்டுகளில் €4bn சொத்துவரி வாடிகன் ஏமாற்றியதால், நீதிமன்றம் செல்லுத்துமாறு ஆணையிட்டது! ஜூன் 28, 2013 அன்று, மோன்சிக்னர் நுன்சியோ ஸ்கெராரானோ என்ற கிருத்துவ சந்நியாசி மோசடி மற்றும் ஊழல் காரணங்களுக்காக, இத்தாலிய போலீஸார் கைது செய்தனர்[2]. சுமார் 10 பில்லியன் $ சொத்து, 40,000 வங்கிக் கணக்குகள், என்று இருந்தும், வருவாய்க்கு மேல் செலவு செய்து, நஷ்டத்தைக் காட்டுகிறது! 1982ல், ராபர்டோ கல்வி என்ற “கடவுளின் வங்கி அதிகாரி,” லண்டனில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார்[3]. பணமோசடி வித்தைகளில் கடவுளின் வங்கியான, வாடிகன் வங்கி, தொடர்ந்து ஈடுபட்டு வருவது, போப்பிற்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. ஆனால், அவருக்குத் தெரிந்தே, எல்லாம் நடக்கின்றன, அவரே அதற்கு ஒப்புக் கொள்கிறார் என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிக்க அதிகாரம் மற்றும் ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் போப் மற்றும் கடவுளின் வங்கி, இவ்வாறு பணமோசடிகளில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையாளர்களுக்கு திகைப்பாக இருக்கிறது.
குழந்தை கற்பழிப்பாளிகள் செக்ஸ் குற்றங்களும், அதற்கு இழப்பீடு கொடுத்து சமரசப் படுத்தலும்: குழந்தை கற்ப்பழிப்பாளிகள் கிருத்துவத்தில் அதிகம், இதைப் பற்றி பல கட்டுரைகளில், பல உடாரணங்களுடன் விவரமாக எடுத்துக் காட்டியுள்ளேன். இத்தகைய செக்ஸ் குற்றங்களினால், உலகம் முழுவதுமே, அசிங்கம் ஏற்பட்டுள்ளதால், வாடிகன், போப் மற்ற கிருத்துவ பாதிரிகள், இக்குற்றங்களை மறைத்தே வந்துள்ளனர், வருகின்றனர். 2017ல் ஆஸ்திரேலியாவில், இக்குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போய், நாறிவிட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகள், அதாவது 18 வயது வரையுள்ள இளம் ஆண்-பெண்கள் கற்பழிக்கப் பட்டு, தொடர்ந்து, தங்களது காமப் பசிக்கு, அவர்களை உபயோகப் படுத்திக் கொண்டனர[4]. இதனால், 4445 குழந்தைகளுக்கு 213 மில்லியன்$ கொடுத்து அமுக்கியுள்ளனர்[5]. இதைப்பற்றி, ஆஸ்திரெலிய அரசு ஒரு ஆராய்ச்சியே நடத்தி, முடிவுகளை வெளியிட்டது[6]. இருப்பினும், இதனை ஆதரிக்க, ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அதாவது, பிடோபைல் ஒரு வியாதியாகும், குற்றமல்ல, என்று விசித்திரமான அருவருக்கத் தக்க கருத்துடன், உலா வந்துக் ஒண்டிருக்கிறது அக்கூட்டம்.
குழந்தை கற்பழிப்பிற்கு அடுத்ததாக உள்ளது, கன்னியாஸ்திரிக்களைக் கற்பழிக்கும் விவகாரம்: இதுவும் உலகம் முழுவதும் தெரிந்த விசயமாகி விட்டது. இந்தியாவிலும் அதிகமாகி வருகின்றது. அபயா கொலை, கன்னியாஸ்திரி கற்பழிப்புகள் என்று அதிகமாகி வருகின்றன. இவையெல்லாமும், பணத்தால் சரிகட்டப் பார்க்கிறனர். ஜோசப் பழனிவேல் ஜெயபால் விவகாரத்தில், பணம் கொடுத்து சரிகட்டப் பட்டது[7]. பிஷப் மூலக்கல் விவகாரம் நாறி விட்டது. ஆகவே, பணத்தை வைத்து, எல்லாவற்றையும் சரிகட்டலாம், என்ற எண்ணத்துடன் இருப்பது, செயல்படுவது, அழிவிற்கு எடுத்துச் செல்லும் பாதையாகி விடும். இப்பொழுது செக்ஸ் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உலகில் கிருத்துவ பாதிரிகள் பாஸ்டர்கள் முதலியோர் பற்றி யாரும் நம்புவதாக இல்லை. கிருத்துவமதத்தின் பெயரும் அடியோடு கெட்டு விட்டது. இஸ்லாம் தீவிரவாதம் என்றால், கிருத்துவம் செக்ஸ்-கற்பழிப்பு குற்றங்கள்-பாலியல் அசிங்கங்கள் என்ற நிலைக்கு, ஒப்பீட்டில் உள்ளது. அதனால் தான் குற்றங்களை மறைத்து வெள்ளையடிக்க முயன்று வருகின்றனர். அங்கு தான் பணம் கொடுத்து சரிகட்டும் முறை வருகிறது.
இந்த செக்ஸ்-கற்பழிப்புகள் குற்றம், மிகப் பெரிய சமூக குற்றம்: இச்செயல்களை ஏதோ மனம் சிதைந்தவர்களின் செயல் போன்று திரிபுவாதங்கள் கொடுக்க, அமெரிக்கர்கள் முயன்று வருகின்றனர்[8]. “பிடோபிலியா” என்று அதற்கு ஏதோ ஜுரம், சளி மாதிரி பெயரை மாற்றி வைத்து, குற்றமல்ல என்று வாதிக்கவும் தயாராகி விட்டனர்[9]. கற்பழிப்பு குற்றமல்ல என்பது, விவேக்கின் மைனர் குஞ்சு ஜோக் போன்று உள்ளது. வாடிகன், வங்கியில் பணத்தை செலவிடப்படும் முறை. அவற்றுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடவுளின் பணம், மிகத் தூய்மையாக இருக்க வேண்டிய நிலையையும் மறந்து அது பாவமான காரியங்களுக்கு உபயோகப்படுகின்றன இந்நிலையில்தான் எல்லா குற்றங்களும் கிருத்துவ மதத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அதுவே இது உலகம் முழுவதும் மற்றும் இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் ஒரு பெரிய அபாயகரமான போன்ற கொடிய நோய் போன்று அல்லது இக்காலச் போன்ற தீவிரவாத செயலை விட மிகக் கொடுமையாக தான் கருத வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது சமுதாயத்தையே அழிக்கும் புற்றுநோய் போல ஒரு அச்சத்தை உண்டாக்கி வருகிறது.
வேதபிரகாஷ்
16-10-2019
[1] The five senior officials were suspended on Wednesday after the Vatican confirmed on Tuesday that prosecutors had seized documents from the offices of the city state’s financial information authority, an oversight body, and its secretariat of state.
[2] On June 28 2013, Italian police arrested a silver-haired priest, Monsignor Nunzio Scarano, in Rome. The cleric, nicknamed Monsignor Cinquecento after the €500 bills he habitually carried around with him, was charged with fraud and corruption,
[3] The Vatican’s bank made headlines following the 1982 death of Roberto Calvi, known as “God’s banker” because of his links to the Holy See, whose corpse was found hanging from Blackfriars Bridge in London
[4] SocialConsciousness, Catholic Church Paid $213 Million To 4,445 Children Sexually Abused By Pedophile Priests In Australia, Monday, June 5, 2017.
Read more at:
[5] Read more at: http://www.social-consciousness.com/2017/06/catholic-church-paid-213-million-4445-children-sexually-abused-pedophile-priests-in-australia.html
[6] ஆஸ்திரேலிய அரசின் அறிக்கையை இங்கே படிக்கலாம் – https://www.childabuseroyalcommission.gov.au/case-studies/case-study-50-institutional-review-catholic-church-authorities
[7] https://christianityindia.wordpress.com/2010/04/07/the-rapist-of-america-lives-in-ooty-happily/
[8] The New York Times, Pedophilia: A Disorder, Not a Crime, By Margo Kaplan, Oct. 5, 2014
[9] https://www.nytimes.com/2014/10/06/opinion/pedophilia-a-disorder-not-a-crime.html
குறிச்சொற்கள்: அசிங்மான பாலியல், ஓரின சேர்க்கை, கடவுளின் வங்கி, கத்தோலிக்க செக்ஸ், காப்பக செக்ஸ், கார் செக்ஸ், குழந்தைப் பாலியல், சம்பளத்தின் பாவம், சர்ச் செக்ஸ், சிறுவர் பாலியல், தெய்வத்தின் வங்கி, பாவத்தின் சம்பளம், பாவப் பட்ட நிதி, பாவப்பட்ட பணம், பாவம், மேரியின் வங்கி, வாடிகன் வங்கி
பின்னூட்டமொன்றை இடுக