எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (3)

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (3)

Bishop refused to leave causes unrest, The Tribune, 09-12-2000

2000ல் குஜராத்தில் நில அபகரிப்பு கலாட்டா: சிந்தியா என்ற கிராமத்தில், எஸ்ரா மக்களைத் தூண்டி விட்டு கலவரத்தை உண்டாக்க முயன்றார். “மைனாரிடி” அந்தஸ்து மற்றும் பிஷப் என்ற ரீதியில் அங்கு போராட்டத்தை 29-11-200 அன்று ஆரம்பித்தார். மதமாற்றங்களில் ஈடுபட்ட குழுக்களிடையே, நில-அபகரிப்பு செய்ய, இந்து கடவுள் விக்கிரங்களை நீக்கி, கிருத்துவக் கூட்டம் அத்துமீறி செயல் பட்டது. அப்போழுது தான், எஸ்ரா அங்கு நுழைந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால், போலீஸார் அவரை கைது செய்ய தீர்மானித்தனர். ஆனால், 14-12-200 அன்று பெயிலைப் பெற்றார்[1]. வியாரா மாவட்டத்தில் யாரும்நுழையக் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது. அந்நிலையில், தான் தமிழ்நாடு மைனாரிடி கமிஷனின் துணைத் தலைவர் என்பதால், கருணாநிதி சொன்னால் தான் திரும்புவேன் என்று அடம் பிடித்தார்[2]. இதனால், குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, தகுந்த நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆணையிட்டார். உள்துறை செயலரும், கருணாநிதிக்கு கடிதம் எழுத, நிலைமை மோசமான நிலையில், கருணாநிதி, அவரை உடனடியாக வருமாறு ஆணையிட்டார். தப்பித்தோம்-பிழைத்தோம் என்று எஸ்ரா ஓடிவிட்டார்[3]. அதாவது, குஜராத்தில் தமிழக பிஷப் எவ்வாறு கலாட்டா செய்யலாம் என்பதனை இது எடுத்துக் காட்டுகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை ஆங்கிலத்தில் சென்ற வருடம் எழுதியுள்ளேன்[4].

Karu asked Ezra Sargunam to return to TN, Dec.07, 2000 - The Hindu

கருணாநிதி, ஏசு, எஸ்ரா ஒப்பீடு – 2016: எஸ்ரா எப்பொழுதும், கருணாநிதியை ஏசுக்கு ஒப்பிட்டு பேசுவது வழக்கமாக இருக்கிறது. 2016ல், ஏசு கிறிஸ்துவை கருணாநிதியின் வடிவில் காண்கிறேன், என்று சொன்னது வேடிக்கையாக இருந்தது. கருணாநிதி உடல்நலம் இல்லாத போது வந்து, அவரது உடல்நலம் பெற்றி பேட்டி கொடுப்பதும் வழக்கமாக்கிக் கொண்டார். கருணாநிதி நலமாக இருக்கிறார், கண்ணசைத்தார், போன்று பேட்டி கொடுத்துள்ளார். ஒருமுறை ஏசு போக உயிர்த்தெழுவார் என்றபோது, மக்களுக்கு தமாஷாகி விட்டது. அதாவது, இறந்து, புதைக்கப் பட்டு, பிறகு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவர் போலும். இருப்பினும் திராவிட நம்பிக்கையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. கிருஸ்துமஸ் கொண்டாட்டம் என்ற சாக்கில், இவர் திமுக தலைவர்களுக்கு தொப்பி மாட்டி விடுவது, கேக் வெட்டி, வாயில் ஊட்டுவது போன்ற வேலைகளும் செய்து வருகிறார்.

Ezra compres Karu with Jesus often

வைமுத்து, செக்யூலரிஸம், பைபிள் – 2012: நீர்ப்பறவை திரைப்படத்தின் பாடல்கள் 2012ல் வெளியிடப்பட்டன. இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். இதில் ஒரு பாடலில் பைபிள் சொற்களை வைத்து பாட்டெழுதியிருந்தார். இதற்கு கிறிஸ்துவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது[5]. வைரமுத்துவை கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவ கழக தலைவர் தலைமையில் 15 பேர் இன்று திடீரென கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்து வீட்டை முற்றுகையிட்டனர்[6]. அங்கு சிறிது நேரம் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய 15 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்[7]. பிறகு, அந்த பாடலில் இடம் பெற்ற சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறார்கள். பேரா.எஸ்ரா சற்குணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தில் பற.. பற.. என்கிற பாடலில் இடம் பெற்ற… ஸ்தோத்திரம் மற்றும் சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறேன்.. என்கிற சொற்களை நீக்கியிருக்கிறார்கள்[8]. மேலும் நீர்ப்பறை திரைப்படம், சிறுபான்மை மக்களின் அன்பான வாழ்க்கையை சொல்லும் திரைப்படம் என அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

Ezra -vairamuthu, neerparavai

2003ல் சேலத்தில் நரிக்குறவர்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தது: சேலத்தில் நரிக்குறவர்களை மதமாற்றம் செய்ததற்காக, சென்னை பிஷப் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவடம் இந்து முன்னணி அமைப்பு மனு கொடுத்துள்ளது[9]. ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்த பிறகு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வெள்ளையப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம், பஞ்சமதங்கம் ஏரிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்குஆக்கிரமித்து குடிசை போட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது வீடுகளை இழந்தனர்.இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பலரும் உதவிகள் செய்தனர். ஆனால் சென்னையைச் சேர்ந்த பிஷப் எஸ்ரா சற்குணம், தனது இவாஞ்சலிகல் சர்ச் என்றஅமைப்பின் மூலம், நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்து, மூளைச் சலவை செய்து,கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளார்[10]. நரிக்குறவர்கள், ஏரிப் பகுதியை ஆக்கிரமித்துத் தங்கியிருந்தவர்கள். அவர்களுக்கு உதவுவதாக கூறி கட்டாயமதமாற்றம் செய்துள்ளனர். எனவே எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார் வெள்ளையப்பன்.

Bishop Sundar Singh was commissioned as the new presiding Bishop of ECI.

கத்தோலிக்ககத்தோலிக்கம் அல்லாத சண்டையில் எஸ்ரா ஈடுபட்டுள்ளாரா?: வைகோவுக்கும், எஸ்ராவுக்கும் தகராறு ஏற்பட்ட போது, வைகோ அவரை கள்ள தீர்க்கதரிசி, கருப்பு ஆடு ஏன்றெல்லாம் சாடியுள்ளார். லாசரஸ் போன்றோர் வைகோவை கிருத்துவர் என்கின்றனர். இருப்பினும், இவர்கள் எல்லோருமே சண்டைப் போட்டுக் கொள்வது கவனிக்கத் தக்கது. இதற்கு ஒருவர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார். “தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள்ஓர் ஆய்வுஎன்ற நூலை எழுதிய . மா. சாமி கிறிஸ்தவரல்லாத ஒரு பத்திரிகையாளர். அந்நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்து ஆசீர்வாதம் தந்தவர்கள் கத்தோலிக்க, ஆங்லிக்கன் மற்றும் சுவிசேஷ இயக்கத் தலைவர்கள். அந்நூல் முழுவதும் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு அங்கமாகவே கருதி ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதை எந்தவொரு தமிழ் சுவிசேஷ இயக்கத் தலைவரும் திருத்தவோ கண்டிக்கவோ இல்லை; மாறாக தென்னிந்திய திருச்சபைத் தலைவர்களிலிருந்து தலித் தளபதி எஸ்ரா சற்குணம் வரை இதற்குப் பாராட்டுரை எழுதியிருக்கின்றனர். இதிலிருந்து தமிழர் மத்தியில் கிறிஸ்தவம் என்றால் என்ன? என்று புரியாத ஒரு குழப்பமான சூழ்நிலை இருப்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இக் குழப்பத்தாலேயே அநேகருக்கு கத்தோலிக்க சமயம் என்பது என்ன? என்பதும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத, கிறிஸ்தவப் போதனைகளுக்கு முரணானவற்றைப் போதிக்கும் ஒரு மதம் என்பதும் தெரியாமலிருக்கின்றது”, என்று வருத்தப்பட்டார்[11].

first-early-christianity-in-india-held-2005-santhosam-deivanayagam-john-samuel

எந்த மேடையாய் இருந்தாலும் எஸ்றா சற்குணம் அங்கே இருப்பார்: அரசியல் மேடை மற்றுமல்லாது, ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ போன்ற மோசடி ஆராய்ச்சி  மாநாடுகளிலும், இந்த எஸ்ரா பங்கு கொள்வது, இன்னுமொரு சதிதிட்டத்தை வெளிப்படுத்துகிறது எனலாம். ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான் சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற  2005ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு, ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றது. அதில், டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன்  முதலியோர் கலந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை”யை மேலும் விவாதித்தனர். ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறது படுவேடிக்கை. இருப்பினும், எஸ்ரா அங்கிருப்பது நோக்கத் தக்கது.

Santhosam, Samuel, Sargunam

குழப்பவாதம் செய்து, இந்துமதத்தைத் தாக்கும் எஸ்ரா சற்குணம்: முகலாயர், ஆங்கிலேயர் ஆட்சி பிரமாதமாக இருந்தது, இந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை, என்ற்றெல்லாம் பேட்டிகளில் கூறும் விதம் மற்ற மேடைகளில் “சலாம் அலைக்கும்” என்பதெல்லாம், இவரது போலித்தனம், அகம்பாவம், பொய்மை முதலியவற்றை வெளிப்படுத்துகிறது. வயதானாலும், பக்குவம் இல்லை அல்லது வேண்டுனென்றே திமிர்ரோடு இவ்வாறு பேசி வருகிறார் என்ற்று தெரிகிறது. தான் மைனாரிட்டி மற்றும் திமுக ஆதரவு கொடுக்கிறது என்ற கொழுப்பும் சேர்ந்துள்ளது எனலாம், குஜராத்தில் சென்று கலாட்டா செய்தபோது, கைது செய்யும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, கருணாநிதியே, திரும்பி வா என்று ஆணையிட்டார். அதாவது, கருணாநிதிக்கும், சர்ச்சுகளுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான இணைப்பை இதை காட்டுகிறது. ஒரு பக்கம் நாத்திகம், இன்னொரு பக்கம் பகுத்தறிவு, இன்னொமொரு பக்கம் இந்து-தூஷணம், இவையெல்லாவற்றையும் சேர்த்து, கிருத்துவ ஆதரவு, தாமஸ் கட்டுக்கதை போற்றல், தமிழை கேவலப்படுத்தும் “திருவள்ளுவர் பைபிள் காப்பி” கதைகளை ஊக்குவித்தல் என்ற வகைகளில் இவர்கள் 1960களிலிருந்து செயல்ப்ட்டு வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

30-07-2018

deivanayagam-johnson-basakara-dos-devalkaa-alva-edison-sameul

[1] The Hindu, Bail granted to Bishop, By Manas Dasgupta, Friday, December 15, 2000.

http://www.thehindu.com/2000/12/15/stories/02150005.htm

[2] The Tribune, Bishop’s refusal to leave causes unrest, December 9, 2000.

 http://www.tribuneindia.com/2000/20001210/nation.htm – 8

[3] UCAnews, Protestant bishop leaves after Hindu state head refuses to meet, December 15, 2000.

https://www.ucanews.com/story-archive/?post_name=/2000/12/15/protestant-bishop-leaves-after-hindu-state-head-refuses-to-meet&post_id=17391

[4] https://indiainteracts.wordpress.com/2017/11/14/ezra-sargunam-church-planting-land-grabbing-politics-and-communalization-under-the-guise-of-secularization/

[5] தமிழ் உள்ளூர்செய்தி, கோடம்பாக்கத்தில் வைரமுத்து வீடு முற்றுகை: கிறிஸ்தவ உரிமை கழக தலைவர் கைது, Written By உள்ளூர் செய்திகள் on Saturday, October 13, 2012 | 5:43 PM.

[6] 4.தமிழ்.சினிமா, நீர்ப்பறவையில் நீக்கப்பட்ட வார்த்தைகள்..Oct 16, 2012

[7]  http://4tamilcinema.com/neer-paravai-news/

[8]http://ulloorseithikal.blogspot.com/2012/10/blog-post_9329.html

[9] ஒன்.இந்தியா, எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோருகிறது இந்து முன்னணி, Posted By: Published: Thursday, October 30, 2003, 5:30 [IST]

[10] https://tamil.oneindia.com/news/2003/10/30/hindu.html

[11]https://biblelamp.me/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (3)”

  1. vedaprakash Says:

    DMK works for minorities: Stalin
    STAFF REPORTER NAGERCOIL:, DECEMBER 25, 2014 00:00 IST; UPDATED: DECEMBER 25, 2014 05:46 IST

    https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dmk-works-for-minorities-stalin/article6724107.ece

    The Dravida Munnetra Kazhagam (DMK) always strived for the welfare of the minorities, Scheduled Castes and Tribes, party treasurer M.K. Stalin said here on Tuesday night.

    Speaking at the 17th Christmas festival organised by the Arumanai Vattara Christian Iyakkam at Arumanai, Mr. Stalin said that it was the DMK government that extended reservation in 1974 to SC/STs, who had converted to Christianity. The DMK government was also responsible for the formation of

    Minorities Welfare Commission and Tamil Nadu Minorities Economic Development Corporation.

    Mr. Stalin strongly opposed the move to wind up the self-help group movement, which was introduced in 1989 and was a big success among women.

    N. Devaraj, president, Arumanai Vattara Christian Iyakkam, presided.

    Ezra Sargunam of Ecumenical Church of India, Kanyakumari CSI Bishop Deva Kadatcham, Kottar Bishop Peter Remigious, Marthandam Bishop Vincent Mar Poulos and Thuckalay Bishop Mar George offered felicitations

    .

    Congress MLA S. Vijayadharini representing Vilavancode, DMK MLA Pushpa Leela Alban of Padmanabhapuram constituency, former DMK MP J. Helen Davidson among others participated.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.