பாதிரி கணவனை விட்டு, காதலன் எஸ்.ஐயுடன் ஓடிய கர்ப்பிணி பெண்!
கர்ப்பிணி காணவில்லை என்று புகார்: கர்ப்பிணி மாயமானது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[1].சேலையூரைச் சேர்ந்தவர் ஜான்சன் ஐ.ஐ.டியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் எமிமால், பாதிரி பிரபுராஜ் இவர்களுக்கு 2011ல் திருமணம் நடந்தது. தாம்பரத்தைச் சேர்ந்தவர் பிரபுராஜ். பேராசிரியர், தமது கிருத்துவ பிரிவு அனுமதிப்பதால், எமியைத் திருமணம் செய்து கொண்டார்.. எமிமால், 26. நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், பிரசவத்திற்காக, சேலையூரில் உள்ள தாய் வீட்டிற்கு, சில வாரங்களுக்கு முன் சென்றார். கடந்த 23-02-2012 அன்று, மருத்துவமனைக்கு சென்று விட்டு, கணவரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. கணவர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததை அடுத்து, அவரது பெற்றோர் சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2].
குழந்தை பிறந்து விட்டது, ஆசிரமத்தில் உள்ளேன்: 26-02-2012 அன்று தனது தந்தியாருக்கு போன் மூலம், “தனக்கு குழந்தை பிறந்ததாக எமிமால் அறிவித்து தான் ஒரு ஆசிரமத்தில் இருப்பதாக சொல்லி தொலைபேசியைத் துண்டித்து விட்டதாக”, தந்தை பிரபுராஜ் போலீசாரிடம் அறிவித்துள்ளார். போலீசார் அது சிட்லபாக்கத்திலிருந்து வந்தது என்று கண்டறிந்தனர். அதற்குள் 28-02-2012 அன்று எமிமால் தன் காதலன் அறிவழகன், தாம்பரம் போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ.யுடன் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சரணடைந்தனர். இருவரும் கிருத்துவக் கல்லூரியில் படித்துவரும் போது காதல் ஏற்பட்டதாம். அதனால் 2006லேயே பதிவு திருமணம் செய்து கொண்டனராம். ஆனால், இவ்விஷயத்தை எமிமால் சொல்லவில்லை என்பதனால், 2011ல் பிரபுராஜிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனால், ஏற்கெனெவே, தாம்பரத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளாதால், அங்கு சென்று பிரச்சினையைத் தீர்க்கச் சொல்லி அறிவுருத்தப்பட்டது. ஆனால், எமிமால் அங்கு செல்ல விரும்பவில்லை.
முந்தைய காதலனா, கணவன் பாதிரியா: எமிமால் மிகவும் தீமானமாக இருந்தது தெரிகிறது. முந்தைய காதலனா, கணவன் பாதிரியா எனும் போது, காதலன் தான் என்று பெற்றக் குழந்தையையும் விடுத்து, காதலுடன் செல்லத் துணிந்தாள் போலும். பாவம் கணவன் பாதிரி பிரபுராஜ். “சேலையூரில் பரபரப்பு: பாதிரியாரின் மனைவியை எஸ்.ஐ. அபகரித்ததாக புகார்: விசாரணை நடத்த போலீஸ் தயக்கம்” என்று தலைப்பிட்டு செய்தி கொடுத்தது ஒரு பத்திரிக்கை. எது எப்படியாகிலும், அந்த குழந்தையின் கதியை யாரும் கண்டுகொள்ளவிலை எனும் போது ஆச்சரியம் தான். பெற்றெடுத்த எமிமால் எப்படி குழந்தையை மறக்கலாம்?
இந்திய நாட்டின் அலங்கோலம்: திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பேசிய குஷ்பு, இதனை உதாரணமாகக் காட்டலாம். இந்த அழகில், குஷ்பு ஐ.நா.சார்பில் நடக்கும் மாநாட்டில் வேறு பேசப்போகிறாராம்.தைதுதான் மானம் கப்பலில் ஏறுகிறது என்று சொன்னார்கள் போலும். குஷ்பு பெண்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து நைரோபியில் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுகிறார்[3]. இதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து நைரோபி செல்கிறார். ஐ.நா. சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கென்யா தலைநகர் நைரோபியில் கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16,17 ஆகிய 2 தேதிகளில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கூட்டத்தில் இளைஞர்கள் நலன் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசுகிறார்[4]. அதற்கான உரையையும் அவர் தயார் செய்துள்ளார். அவர் தனது உரையில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நைரோபி செல்கிறார்.
இளைஞர்களின் பிரச்சினைப் பற்றி குஷ்பு பேசினால், இளைஞர்கள் என்னாவது? 2013 இளைய தலை முறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின், வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு ஐ.நா சபைக்கு தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்[5]. உலகில் தினமும் 20 டாலருக்கும் குறைவாக வருமானம் உல்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த ,இளைஞர்களை எத்தகைய முயற்சியில் ஈடுபட வைக்க் வேண்டும் என்று பேச போகிறேன். ஐக்கிய நாடுகளின் சபை தலைமை நிலையம் உள்ள கெய்ரோவில் உள்ள நைரோபி என்ற இடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள கென்யாவுக்குக் செல்ல இருக்கிறேன்.
வேதபிரகாஷ்
05-03-2012
[1] தினமலர், கர்ப்பிணிமாயம்:போலீசார் விசாரணை, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2012, http://www.dinamalar.com/district_detail.asp?id=415964&Print=1
[3] http://tamil.oneindia.in/news/2012/03/05/tamilnadu-kushboo-deliver-speech-un-council-meet-in-nairobi-aid0128.html
[4] http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=562250&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest
1:21 முப இல் ஒக்ரோபர் 8, 2012 |
[…] https://christianityindia.wordpress.com/2012/03/05/wife-of-christian-priest-eloped-with-police/ […]