சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? (1)
பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக தேர்ந்தெடுக்கப் படுதல்: தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயரைத் தேர்வுசெய்வதற்கான பெயர் பட்டியல் தேர்வு 2021 செப்டம்பரில் நடைபெற்றது. இதில் ARGST பர்னபாஸ், A. பீட்டர் தேவதாஸ், TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ARGST பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதே 2021ல் திருநெல்வேலி பெருமண்டல உறுப்பினராக தேர்வானார் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம். இதற்குப் பிறகு திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் கல்வி நிலவரக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கடுத்த ஆறு மாதம் வரை பர்னபாஸ், ஞானதிரவியம் ஆகியோர் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர். இதற்குப் பிறகு ரெவரண்ட்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு வைக்கப்பட்டது. இதில் சிலரைத் தேர்வு செய்யும்படி ஞானதிரவியம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடிவுகள் வெளியானபோது ஞானதிரவியம் சொன்ன ஆட்களில் சிலர் தேர்வாகவில்லை.
ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் ஆரம்பித்த உரசல்கள்: தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே ரெவரண்ட்கள் தேர்வானதாக பர்னபாஸ் தரப்பு கூறியது. இதற்குப் பிறகு ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன. இதற்குப் பிறகு நடந்த கமிட்டி கூட்டங்களில் எல்லாம் இரு தரப்புக்கும் இடையில் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இந்தத் திருமண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போதும் இடமாற்றல்கள் செய்யும்போதும் ஞானதிரவியத்தின் பரிந்துரைப்படி நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது[1]. இதற்குப் பிறகு, பார்னபாஸைச் சுற்றியிருந்த சிலரை நீக்கும்படி ஞான திரவியம் கூறியபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார்[2]. இதற்குப் பிறகு கமிட்டி கூட்டம் நடக்கும் அறையில் சொத்து அலுவலரால் சிசிடிவி பொருத்தப்பட்டது. இதனால், சொத்து அலுவலரை மாற்றும்படி கூறினார் ஞானதிரவியம். இதனையடுத்தே சொத்து அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார் ஞானதிரவியம். புதிதாக ஒரு சொத்து அலுவலரையும் நியமித்தார். ஆனால், இதனால் திருமண்டலத்தின் அலுவல்கள் பாதிக்கப்படுவதாகவும் சொத்து அலுவல கதவைத் திறந்துவிடும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பர்னபாஸ். ஆனால், அதனை ஞானதிரவியம் தரப்பு ஏற்கவில்லை.
ஞானதிரவியம் எம்.பி, தென்னிந்திய திருச்சபை நிர்வாகம், சொத்து விற்பனை: தென்னிந்திய திருச்சபை எனப்படும் சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. கோடிக்கணக்கில் சொத்துகளைக் கொண்ட நெல்லை திருமண்டலத்தில் பிஷப்பாக பர்னபாஸ் உள்ளார். திருமண்டல செயலாளராக டி.எஸ்.ஜெயசிங் உள்ளார். இவரது ஆதரவோடு பிஷப் ஆனவர் தான் பர்னபாஸ். இருப்பினும் பொறுப்புக்கு வந்த பின் இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர். இந்த நிர்வாகத்தில் ஞானதிரவியம் எம்.பி முக்கிய பங்காற்றி வந்த நிலையில், அவருக்கும் பிஷப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கல்வி நிலைக்குழுச் செயலாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி, பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சில சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்ய தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தன்னை எதிர்த்தவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு பிஷப் பர்னபாஸ் மறுத்ததால் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
25-06-2023 – CSI நம்பிக்கையாளர்களுக்குள் சச்சரவு, அறைகளுக்கு பூட்டு: கடந்த 25ம் தேதி டயோசீஸ் அலுவலகத்தில் இரு தரப்பினர் கூடினர். அங்கு ஞான திரவியம் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிஷப் தலைமையில் கல்வி நிலைக்குழுக் கூட்டம் நடந்தபோது அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிஷப் முன்னிலையில் அருவருக்கத்தக்க வகையில் ஞானதிரவியம் பேசியுள்ளார்[3]. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது[4]. அதைப் பார்த்த சி.எஸ்.ஐ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும், ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்[5]. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்[6]. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்ததோடு, சி.எஸ்.ஐ அலுவலகத்தின் சில அறைகளை அவரது ஆதரவாளர்கள் பூட்டிச் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க-வின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிஷப் தரப்பினர் கட்சித் தலைமையிடம் புகார் அளித்தனர். அத்துடன், உளவுத்துறை மூலமாகவும் இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு புகார் சென்றது.
பிஷப் காட்ப்ரே நோபுள் ஞானதிரவியம் எம்.பி மீது வீடியோ–குற்றச்சாட்டு: நெல்லை திருமண்டலத்தில் ஆளும் தி.மு.க-வின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் முயற்சியில் ஞானதிரவியம் எம்.பி ஈடுபடுவதாக அனைத்திந்திய ஜனநாயக பாதுகப்பு கழகம் கட்சியின் தலைவரும் ஜே.எஸ்.எம் என்ற தனித்திருச்சபை நடத்திவரும் பிஷப் காட்ப்ரே நோபுள் என்பவர் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். வழக்கு, சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர். நாலுமாவடி மத போதகர் மோகன் சி லாசரசின் சகலைஅதில் ஞானதிரவியம் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில், 26—06-2023 அன்று பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ அலுவலகத்தை ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் கைப்பற்றப் போவதாக தகவல் பரவியது[7]. அதனால் பிஷப் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது அங்கு காட்ப்ரே நோபுளும் இருந்தார்[8]. அப்போது அங்கு வந்த ஞானதிரவியம் ஆதரவாளர்கள், காட்ப்ரே நோபுள் மீது தாக்குதல் நடத்தினார்கள்[9]. அவர் தப்பி ஓட முயன்றபோது, அவரைத் துரத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்கினர். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்[10]. அவரது சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர்[11]. கிழிந்த சட்டையுடன் அவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார்[12]. பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வைரலானது.
எல்லோருமே கிருத்துவர்கள் தான், ஆனால், அரசியல், பணம் முதலியன பிரிக்கின்றன: பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஞானதிரவியத்தை நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய தாளாளருக்கும், ஞானதிரவியம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றிருந்தது[13]. பேராயர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[14]. எல்லோருமே கிருத்துவர்களாக இருந்தாலும், டினாமினேஷன்களால் பிரிந்திருக்கிறார்கள். ஆனால், பணம், அந்தஸ்து, சொத்து, சுகம் என்றெல்லாம் இருக்கும் பொழுது, அரசியல் கூட்டுடன் கொள்ளையடிக்க முயல்கின்றனர். போதாகுறைக்கு, கனிமகொள்லைகளில் இந்த பகுதி பிஷப்புகள், பாதிரிகள் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் அரசியல் ஆதரவு இல்லாமல் நடக்குமா என்று தெரியவில்லை. இங்கு செக்யூலரிஸத்தில், கம்யூனலிஸத்தில், பெரியாரிஸத்தில், திராவிட மாடலில், எதில் ஒன்று படுகிறார்கள்-வேறுபடுகிறார்கள் என்பதும் புரியவில்லை.
© வேதபிரகாஷ்
28-06-2023
[1] தமிழ்.பிபிசி, மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. மீது வழக்குப் பதிவு – என்ன நடந்தது?, 27 ஜூன் 2023
[2] https://www.bbc.com/tamil/articles/c6pd6608ew9o
[3] தினசரி.காம், thinasari.kaam, சிஎஸ்ஐ., பிஷப்பை அடித்து ஓட ஓட விரட்டிய நெல்லை திமுக., எம்.பி. ஞானதிரவியம் ஆட்கள், Dhinasari Reporter, June 27, 2923 12.31 PM
[4] https://dhinasari.com/latest-news/289818-csi-bishop-attacked-by-dmk-mp-goons.html
[5] பத்திரிக்கை.காம், திருநெல்வேலி எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், JUN 27, 2023 p
[6] https://patrikai.com/duraimurugan-notice-gnanathiraviam-mp/
[7] விகடன், பாதிரியார் மீது தாக்குதல்… ஆபாச பேச்சு… திமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு!, பி.ஆண்டனிராஜ், 11.00 ஜூன்.27, 2023 காலை.
[8] https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-secretary-has-issued-notice-to-gnanadiraviyam-mp-for-misbehaving-in-csi-diocese
[9] தினமலர், சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் பிஷப்புக்கு அடி, உதை, பதிவு செய்த நாள்: ஜூன் 27,2023 01:33, https://m.dinamalar.com/detail.php?id=3358976
[10] https://m.dinamalar.com/detail.php?id=3358976
[11] நியூஸ்.18தமிழ், பாதிரியார் மீது தாக்குதல்… ஆபாச பேச்சு… திமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு! || News18Tamil, gmrtech, Last updated: 2023/06/27 at 5:49 AM.
[12]https://www.news18tamil.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/
[13] குமுதம், பாதிரியார் மீது தாக்குதல்: நெல்லை தி.மு.க., எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு, Kumudam News Desk, 12.00 HRS, june 27, 2023.
[14] https://www.kumudam.com/news/politics/dmk-mp-case-registered-against-33-people-including-gnana-thiraviyam