Posts Tagged ‘மத சண்டை’

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? (1)

ஜூன் 28, 2023

சிஎஸ்ஐ, பிஷப், பாதிரி, திமுக எம்.பி, – எல்லாமே கிறிஸ்தவம் தான், கிறிஸ்தவர் தான், பிறகு எதற்கு சண்டை, அடிதடி, பரஸ்பர புகார்? (1)

பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக தேர்ந்தெடுக்கப் படுதல்: தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயரைத் தேர்வுசெய்வதற்கான பெயர் பட்டியல் தேர்வு 2021 செப்டம்பரில் நடைபெற்றது. இதில் ARGST பர்னபாஸ், A. பீட்டர் தேவதாஸ், TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ARGST பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதே 2021ல் திருநெல்வேலி பெருமண்டல உறுப்பினராக தேர்வானார் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம். இதற்குப் பிறகு திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் கல்வி நிலவரக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கடுத்த ஆறு மாதம் வரை பர்னபாஸ், ஞானதிரவியம் ஆகியோர் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர். இதற்குப் பிறகு ரெவரண்ட்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு வைக்கப்பட்டது. இதில் சிலரைத் தேர்வு செய்யும்படி ஞானதிரவியம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடிவுகள் வெளியானபோது ஞானதிரவியம் சொன்ன ஆட்களில் சிலர் தேர்வாகவில்லை.

ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் ஆரம்பித்த உரசல்கள்: தேர்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே ரெவரண்ட்கள் தேர்வானதாக பர்னபாஸ் தரப்பு கூறியது. இதற்குப் பிறகு ஞானதிரவியம் தரப்பிற்கும் பர்னபாஸ் தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்துகொண்டே இருந்தன. இதற்குப் பிறகு நடந்த கமிட்டி கூட்டங்களில் எல்லாம் இரு தரப்புக்கும் இடையில் வார்த்தை யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இந்தத் திருமண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போதும் இடமாற்றல்கள் செய்யும்போதும் ஞானதிரவியத்தின் பரிந்துரைப்படி நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது[1]. இதற்குப் பிறகு, பார்னபாஸைச் சுற்றியிருந்த சிலரை நீக்கும்படி ஞான திரவியம் கூறியபோது அதற்கு அவர் மறுத்துவிட்டார்[2]. இதற்குப் பிறகு கமிட்டி கூட்டம் நடக்கும் அறையில் சொத்து அலுவலரால் சிசிடிவி பொருத்தப்பட்டது. இதனால், சொத்து அலுவலரை மாற்றும்படி கூறினார் ஞானதிரவியம். இதனையடுத்தே சொத்து அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார் ஞானதிரவியம். புதிதாக ஒரு சொத்து அலுவலரையும் நியமித்தார். ஆனால், இதனால் திருமண்டலத்தின் அலுவல்கள் பாதிக்கப்படுவதாகவும் சொத்து அலுவல கதவைத் திறந்துவிடும்படியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் பர்னபாஸ். ஆனால், அதனை ஞானதிரவியம் தரப்பு ஏற்கவில்லை.

ஞானதிரவியம் எம்.பி, தென்னிந்திய திருச்சபை நிர்வாகம், சொத்து விற்பனை: தென்னிந்திய திருச்சபை எனப்படும் சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. கோடிக்கணக்கில் சொத்துகளைக் கொண்ட நெல்லை திருமண்டலத்தில் பிஷப்பாக பர்னபாஸ் உள்ளார். திருமண்டல செயலாளராக டி.எஸ்.ஜெயசிங் உள்ளார். இவரது ஆதரவோடு பிஷப் ஆனவர் தான் பர்னபாஸ். இருப்பினும் பொறுப்புக்கு வந்த பின் இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர். இந்த நிர்வாகத்தில் ஞானதிரவியம் எம்.பி முக்கிய பங்காற்றி வந்த நிலையில், அவருக்கும் பிஷப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கல்வி நிலைக்குழுச் செயலாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி, பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சில சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்ய தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், தன்னை எதிர்த்தவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதற்கு பிஷப் பர்னபாஸ் மறுத்ததால் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

25-06-2023 – CSI நம்பிக்கையாளர்களுக்குள் சச்சரவு, அறைகளுக்கு பூட்டு: கடந்த 25ம் தேதி டயோசீஸ் அலுவலகத்தில் இரு தரப்பினர் கூடினர். அங்கு ஞான திரவியம் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிஷப் தலைமையில் கல்வி நிலைக்குழுக் கூட்டம் நடந்தபோது அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிஷப் முன்னிலையில் அருவருக்கத்தக்க வகையில் ஞானதிரவியம் பேசியுள்ளார்[3]. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது[4]. அதைப் பார்த்த சி.எஸ்.ஐ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும், ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்[5]. அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்[6]. ஆனால், அதை அவர் ஏற்க மறுத்ததோடு, சி.எஸ்.ஐ அலுவலகத்தின் சில அறைகளை அவரது ஆதரவாளர்கள் பூட்டிச் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. தி.மு.க-வின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிஷப் தரப்பினர் கட்சித் தலைமையிடம் புகார் அளித்தனர். அத்துடன், உளவுத்துறை மூலமாகவும் இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு புகார் சென்றது.

பிஷப் காட்ப்ரே நோபுள் ஞானதிரவியம் எம்.பி மீது வீடியோகுற்றச்சாட்டு: நெல்லை திருமண்டலத்தில் ஆளும் தி.மு.க-வின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தும்  முயற்சியில் ஞானதிரவியம் எம்.பி ஈடுபடுவதாக அனைத்திந்திய ஜனநாயக பாதுகப்பு கழகம் கட்சியின் தலைவரும் ஜே.எஸ்.எம் என்ற தனித்திருச்சபை நடத்திவரும் பிஷப் காட்ப்ரே நோபுள் என்பவர் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். வழக்கு, சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர். நாலுமாவடி மத போதகர் மோகன் சி லாசரசின் சகலைஅதில் ஞானதிரவியம் மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில், 26—06-2023 அன்று பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ அலுவலகத்தை ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் கைப்பற்றப் போவதாக தகவல் பரவியது[7]. அதனால் பிஷப் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது அங்கு காட்ப்ரே நோபுளும் இருந்தார்[8]. அப்போது அங்கு வந்த ஞானதிரவியம் ஆதரவாளர்கள், காட்ப்ரே நோபுள் மீது தாக்குதல் நடத்தினார்கள்[9]. அவர் தப்பி ஓட முயன்றபோது, அவரைத் துரத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே தாக்கினர். அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்[10]. அவரது சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர்[11]. கிழிந்த சட்டையுடன் அவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார்[12]. பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வைரலானது. 

எல்லோருமே கிருத்துவர்கள் தான், ஆனால், அரசியல், பணம் முதலியன பிரிக்கின்றன: பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஞானதிரவியத்தை நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய தாளாளருக்கும், ஞானதிரவியம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றிருந்தது[13]. பேராயர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா.ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[14]. எல்லோருமே கிருத்துவர்களாக இருந்தாலும், டினாமினேஷன்களால் பிரிந்திருக்கிறார்கள். ஆனால், பணம், அந்தஸ்து, சொத்து, சுகம் என்றெல்லாம் இருக்கும் பொழுது, அரசியல் கூட்டுடன் கொள்ளையடிக்க முயல்கின்றனர். போதாகுறைக்கு, கனிமகொள்லைகளில் இந்த பகுதி பிஷப்புகள், பாதிரிகள் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் அரசியல் ஆதரவு இல்லாமல் நடக்குமா என்று தெரியவில்லை. இங்கு செக்யூலரிஸத்தில், கம்யூனலிஸத்தில், பெரியாரிஸத்தில், திராவிட மாடலில், எதில் ஒன்று படுகிறார்கள்-வேறுபடுகிறார்கள் என்பதும் புரியவில்லை.

© வேதபிரகாஷ்

28-06-2023


[1] தமிழ்.பிபிசி, மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.. எம்.பி. மீது வழக்குப் பதிவுஎன்ன நடந்தது?, 27 ஜூன் 2023

[2] https://www.bbc.com/tamil/articles/c6pd6608ew9o

[3] தினசரி.காம், thinasari.kaam, சிஎஸ்ஐ., பிஷப்பை அடித்து ஓட ஓட விரட்டிய நெல்லை திமுக., எம்.பி. ஞானதிரவியம் ஆட்கள்,  Dhinasari Reporter, June 27, 2923 12.31 PM

[4] https://dhinasari.com/latest-news/289818-csi-bishop-attacked-by-dmk-mp-goons.html

[5] பத்திரிக்கை.காம், திருநெல்வேலி எம்.பி.க்கு திமுக நோட்டீஸ், JUN 27, 2023 p

[6] https://patrikai.com/duraimurugan-notice-gnanathiraviam-mp/

[7] விகடன், பாதிரியார் மீது தாக்குதல்ஆபாச பேச்சுதிமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு!, பி.ஆண்டனிராஜ், 11.00 ஜூன்.27, 2023 காலை.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-secretary-has-issued-notice-to-gnanadiraviyam-mp-for-misbehaving-in-csi-diocese

[9] தினமலர், சி.எஸ்.., அலுவலகத்தில் பிஷப்புக்கு அடி, உதை, பதிவு செய்த நாள்: ஜூன் 27,2023 01:33, https://m.dinamalar.com/detail.php?id=3358976

[10] https://m.dinamalar.com/detail.php?id=3358976

[11] நியூஸ்.18தமிழ், பாதிரியார் மீது தாக்குதல்ஆபாச பேச்சுதிமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு! || News18Tamil, gmrtech, Last updated: 2023/06/27 at 5:49 AM.

[12]https://www.news18tamil.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/

[13] குமுதம், பாதிரியார் மீது தாக்குதல்: நெல்லை தி.மு.., எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு, Kumudam News Desk, 12.00 HRS, june 27, 2023.

[14] https://www.kumudam.com/news/politics/dmk-mp-case-registered-against-33-people-including-gnana-thiraviyam

கிருத்துவ-துலுக்க மோதல்களைத் தடுப்பது எப்படி? சிலுவை -ஜிஹாத் போர்களை ஏன் நிறுத்தக் கூடாது?

ஏப்ரல் 23, 2019

கிருத்துவதுலுக்க மோதல்களைத் தடுப்பது எப்படி? சிலுவைஜிஹாத் போர்களை ஏன் நிறுத்தக் கூடாது?

Jihad, Crusade, ideology-2

அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியன: பாலஸ்தீன படுகொலைகள், பொகோ ஹராம் குரூர கொலைகள், ஐசிஸ் கொடூர-குரூர கொலைகள் முதலியவை போன்று, இலங்கை குண்டுவெடிப்புகள் மக்களை பாதித்துள்ளது. இலங்கையில், இனம், மதம் முதலிய காரணிகளால் போர், கொலை முதலியவை நடந்தது தெரிந்த விசயமாக இருந்தாலும், சில தனிமனிதர்கள், குழுக்கள் முதலியவர்களால் நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணாக்கான மக்கள் பலியாவது, வன்முறைக்கு பாதிக்கப் படுவது ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், கிருத்துவர் மற்றும் துலுக்கர் இடைகாலத்திலிருந்தே, அத்தகைய பகைமை வளர்த்து வந்துள்ளார்கள். இஸ்ரேல்-பாலஸ்தீனம் வைத்து, இரு கும்பல்களும், வன்முறை, குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றெல்லாம் வளர்த்தன. அமெரிக்க இரட்டை கோபுர குண்டுவெடிப்பு முதலியவையும் அவ்வாறே, அப்பாவி மக்களை கொன்றது. ஜெருசலேத்தை மீட்போம் என்று ஆரம்பித்த, மதசண்டைகள், இப்பொழுதும், வேறு வடிவங்களில் நடந்தேறி வருகின்றன. தொடர்ந்து துலுக்கர் தீவிரவாதத்தில் ஈடுபட்டதால், ஒருநிலையில், தீவிரவாதத்தை அவர்களுடன் தொடர்பு படுத்தப் பட்டது.

Crusade, ideology, propaganda

இறையியலை அடிப்படைவாதத்துடன் இணைத்து, வன்முறையுடன் தீவிரவாதத்தில் முடிந்த நிலை: தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்[1], இதெல்லாம் எப்படி கவனித்தால், குண்டு வைத்தவன், குண்டினாலேயே சாவான் போலும்! தற்கொலை செய்பவன் மறுபடியும் பிறப்பானா? சொர்க்கம் எப்படி கிடைக்கிறது? என்று தெரியவில்லை. வினை, செய்வினை, செயபாட்டு வினை, எதிர்வினை, தொல்வினை என்ற நம்பிக்கைகள் வளர்ந்து விட்டதும் வினையென்று தான் சொல்ல வேண்டும்! நம்பிக்கையின் பெயரில், இப்படி நம்பிக்கையாளர்கள் கொன்றுக் கொள்வதை, குவிப்பதை எப்படி ஜேஹோவா, அல்லா ஏற்றுக் கொள்கிறார், என்று தெரியவில்லை. முன்பு இஸ்லாமிக் குண்டு என்றார்களே, அதுதானா இது? இனி ஜேஹோவா, ஜோசப், மேரி, ஏசு, கிருஸ்து குண்டுகள் எல்லாம் வருமா? ஆம்கெதன் போர் [Armageddon War ] வருமா, யார் வருவாரோ, வந்தால் போரில் வெல்வாரா, குண்டுக்கு பதில் குண்டா, அணுகுண்டா, கத்தியா? எது? இவையெல்லாமே, பைபிள் மற்றும் குரானில் உள்ள வசனங்கள் மீது ஆதாரமாக எழுப்பப் பட்ட விசயங்கள், கேள்விகள் மற்றும் விவகாரங்கள் ஆகும்.

Crusade, ideology, propaganda-2

நாத்திகர், இந்துவிரோதிகள் இப்பிரச்சினையைக் குழப்புதல்: இறைவன் பெயரால் புனித போர்கள் நடத்துவதால், மற்ற கடவுள் நம்பிக்கையாளர்கள் மட்டும் இறப்பதில்லை, உங்களது இறைவனே இறக்கிறான்! கடவுள் நம்பிக்கையாளன், என் கடவுள் தான் கடவுள்; உன் கடவுள், கடவுள் இல்லை என்று சொல்ல மாட்டான். சொன்னால் கடவுளே இல்லை. உன் கடவுள், நான் தான் கடவுள்; என்னையன்றி வேறு கடவுள் பூமியில், பூமிக்குக் கீழ், மேல் இல்லை என்றால், அத்தகைய சந்தேகம் எப்படி வருகிறது? நாத்திகன் கடவுள் இல்லை என்கிறான்; உன் கடவுளோ என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என்கிறான்! திராவிட நாத்திகனோ இந்து கடவுள் இல்லை என்கிறான்!

Jihad, Crusade,2

இடைகாலத்தில் ரோமன் கத்தோலிக்க சர்ச் ஏன் போர்களில் ஈடுபட்டது?:

  1. சிலுவைப்போர்கள் – குருசேட் [Crusades], இடைகாலத்தில் அடிப்படைவாத கிருத்துவர்கள் நடத்திய மதவெறி கொண்ட குரூர போர்கள் ஆகும்.
  2. மத்தியத் தரைகடல் பகுதிகள், குறிப்பாக, ஜெருசலேம் உள்ளிட்ட புனித நிலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்கும் போர்வையில் நடத்தப் பட்டன!
  3. கிருத்துவ நம்பிக்கைகளை ஏற்காத எவரையும், கிருத்துவர் உட்பட, கொல்லுதல் என்ற ரீதியில் நடத்தப் பட்ட போர்கள் ஆகும்.
  4. ஆதாமின் பாவம், ஆண் இன்றி கன்னி குழந்தை பெற்றெடுத்தல், திரியேகத்துவம், சிலுவையில் அறைதல், சிலுவையில் மரித்தல், உயிர்த்தெழுதல், உடல் மேலே எழும்பி ஆகாயத்தில் செல்லுதல், ரொட்டியும் மதுவும் மாமிசம்-ரத்தமாக நம்புதல், ஏசுவின் ரத்தம் ஆதாமின் பாவத்தைத் துடைக்கும், ஆதாம்-ஏவாள் வழி பிறந்தவர் எல்லோருமே பாவிகள், முதலியவற்றை நம்பாதவர்களைக் கொல்லுதல் முதலியவையும் அடங்கும்!
  5. இதனால், கோடிக்கணக்கில் பேகன் [Pagan, heathen, Gentile, idolaters etc] என்கின்ற நம்பிக்கையாளர், மற்ற கிருத்துவர், துலுக்கர் முதலியோர் கொல்லப் பட்டனர்.
  6. ரோமன் கத்தோலிக்க சமயக்குழுக்களுக்கு இடையே, பலவிதமான, இறையியல் சித்தாந்த போட்டிநிலைமைக்குத் தீர்வு காணவும் நடத்தப் பட்டன.
  7. குறிப்பாக கிழக்கத்தைய ஆசார சர்ச் [Eastern Orthodox Church] மற்றும் ரோமன் கத்தோலிக்க [Roman Catholic] சர்ச்சுகளுக்கு, எப்பொழுதும் கருத்து வேறுபாடு இருந்தது.
  8. பிதா, சுதன், ஆவி என்ற திரியாகவ தத்துவத்தில், இரண்டிற்கும் முரண்பாடு உள்ளது.
  9. கிழக்கத்தைய ஆசார சர்ச் போப்பின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
  10. கிழக்கத்தைய ஆசார சர்ச், மடாதிபதிகள் மற்ற சாமியார்கள் திருமணம்செய்துகொள்ள அனுமதிக்கிறது, ஆனால், ரோமன் கத்தோலிக்க சர்ச் அனுமதிப்பதில்லை.

Jihad, Crusade,3

மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தை எதிர்த்த கிருத்துவ இறையியல்: பைபிளில் உள்ளவற்றிற்கு எதிராக விஞ்ஞான உண்மைகளை எடுத்துக் காட்டியவர்கள், பெண்கள், சிறுவர்கள் முதலியோரும் தப்பவில்லை, அவர்களும் சிலுவைப் போர்களில் கொல்லப்பட்டனர். உலகம் உருண்டை, சூரியனைச் சுற்றி கிரகங்கள் சுற்றுகின்றன, ரத்த ஓட்டம் உள்ளது, என்று சொன்ன விஞ்ஞானிகள் தண்டனைக்குள்ளானார்கள். ஜிரார்னோர்டோ உரோனே உயிரோடு எரிக்கப்பட்டார். கலிலியோ முதையோர் தண்டிக்கப்பட்டனர். உயிர்த்தெழுதல், உடல் மேலே எழும்பி ஆகாயத்தில் செல்லுதல் நியூட்டனின் விதிகளுக்கு முரணாக இருந்ததால், கொடுமைப் படுத்தப் பட்டார். சில ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தார். மதக் கொடுமையினால், பைபிளைப் பற்றி தான் நியூட்டன் 80% எழுதியுள்ளார், மற்ற 20% தான் விஞ்ஞானமும், கணிதமும், கால்குலஸும்! துலுக்கரும் சளைத்தவர் இல்லை, குரான் படி, ஏசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிரோடு இருந்து பிறகு மரித்தார் என்றனர். இதனால், துவேசம் அதிகமாகி, சிலுவை போர்கள், கடுமை, கொடுமை, குரூரம் ஆகியதை அவர்களே திரைப்படங்களில் காட்டுகிறார்கள்!

Jihad, Crusade,4

கடவுள் ஒருவரே  என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொண்டால் தான் அமைதி உண்டாகும்:

  1. முதலாவது சிலுவைப் போர்  1097 CEல்,
  2. இரண்டாவது சிலுவைப் போர்  1149 CEல் ,
  3. மூன்றாவது சிலுவைப் போர்  1189 CEல்,
  4. நான்காவது சிலுவைப் போர்  1204 CEல்,
  5. ஐந்தாவது சிலுவைப் போர்  1218 CEல்,
  6. ஆறாவது சிலுவைப் போர்  1228 CE ல்,
  7. ஏழாவது சிலுவைப் போர்  1248 CE ல்,
  8. எட்டாவது சிலுவைப் போர் 1269 CEல் நடைபெற்றன.

இன்று கூட அதே வெறியுடன் “குருசேட்” கூட்டங்கள் என்று நடத்தி, மக்களை, கிருத்துவர்களைப் பிரித்து வருகிறார்கள். இந்தியாவில் லவ் ஜிஹாத் போன்று லவ் குருரேட் செயல்பட்டு வருகிறது. இந்த உண்மைகள் எல்லாம் தெரியாமல், புரிந்து கொள்ளாமல், மறைக்கப்பட்டன, ரகசியமாக இருந்தன என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நியூட்டன் விஞ்ஞானியா, மெய்ஞானியா, பைத்தியமா, கிருத்துவக் கிருக்கா, ரசவாதியா? யார்? இந்தியாவைப் பற்றி நியூட்டன் சரித்திரம் எழுதியுள்ளது எத்தனை பேருக்குத் தெரியும்? மதரீதியிலான போர், சண்டை முதலியவை முடிவதில்லை. குறிப்பாக கிருத்துவ-துலுக்க சண்டைகள் தொடந்து நடந்து வருகின்றனர். நவீனகாலத்தில், ஆயுதங்கள் தான் மாறியுள்ளவே அன்றி, மற்ற எதுவும் மாறவில்லை. எவ்வளவு படித்திருந்தாலும், உண்மைகள் அறிந்திருந்தாலும்,  ஏதையோ மனத்தில் வைத்துக் கொண்டு, வெறுப்பு, காழ்ப்பு, துவேசம் முதலியவற்றை மனத்தில் வைத்துக் கொண்டு, பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்ற ரீதியில், சிலுவை-ஜிஹாத் கூட்டங்கள் செயல்பட்டு வருவதால், அமைதி என்றாலும், அதனை குலைப்பதில், ஈடுபட்டு வருகிறார்கள். கடவுள் ஒருவரே  என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொண்டால் தான் அமைதி உண்டாகும்.

வேதபிரகாஷ்

22-04-2019

Jihad, Crusade,5

[1] பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.Think not that I am come to send peace on earth: I came not to send peace, but a sword.