Posts Tagged ‘போலிசெட்டி’

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

மார்ச் 25, 2012

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

அமெரிக்கா, 2004: “நான் எப்படி கன்னியாஸ்திரீ ஆவது?” என்று கேட்டு வந்தாள், 14 வயதான மெகா பீட்டர்சன்.

“நாளைக்கு சர்ச்சுக்கு வா, நான் விளக்கமாகக் கூறுகிறேன்” – ஜோசப் பழனிவேல் ஜெயபால்

சொன்னபடியே இளம் வயது மொட்டான அழகிய மேகா மெகாவாக மெதுவாக வந்தவுடன், ஜோசப்பிற்கு பொறுக்க முடியவில்லை. ரோஜா மலர் போன்ற நிறம், இளம் வயதில் செழிப்பான உருண்டு திரண்ட உடல், கட்டழகு, தொட்டுவிட நினைத்தான்.

“அருகில் வா, நான் வழி காட்டுகிறேன்” என்றழைத்து தோள்களை பிடித்துக் கொண்டானாம்.

பாதிரியார்கள், பிஷப்புகள் அப்படித்தான் செல்லமாகப் பிடிப்பார்கள் என்று அமைதியாக இருந்தாளாம்.

ஆனால், பிறகு தன் பக்கமாக இழுத்து கட்டிப் பிடித்தானாம். முதலில் மௌனமாக இருந்த அவள், பிறகு, அப்பாதிரி தனது மார்பங்களைப் பிடித்தபோது தான், உண்மையை அறிந்து கொண்டாள்.

பாதிரி கன்னியாஸ்திரீ ஆக வழி சொல்ல கூப்பிடவில்லை, தனது கன்னித்தன்மையை போக்கத்தான் முயல்கிறான் என்று.

இருப்பினும் காலம் கடந்து விட்டது. கொடுமையாகக் கற்பழித்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்[1].

அமெரிக்கா 2005: இதே கதை இன்னொரு பெண்ணிடமும் நடந்துள்ளது, ஆனால், பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவில் ஏழு வருடம் வாழ்க்கை 2005-2011: ஜோசப் பழனிவேல் ஜெயபால் 2005ல் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தான்[2].

ஆனால், அதற்குள் இன்னொரு 16-வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக செய்தி வந்ததும், அமெரிக்காவிற்குத் திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டான்.

பிறகு தான் 14-வயதான பெண்ணை கற்பழித்த குற்றத்திற்கு கிரிமினல் வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப் பட்டது.

அதிலிருந்து, “தண்டனைக்கு பயந்து ஓடி மறைந்து வாழும்” வாழ்க்கை ஆரம்பித்தது[3]. வாடிகன் அசிங்கத்தை உணர்ந்து அவனது அங்கியைக் கழற்றச் சொன்னது.

இரண்டு பெண்களைக் கற்பழித்தால், செயலர், படிப்புத்துறை உத்தியோகம் கிடைக்கும்: ஆனால், உள்ளூர் சர்ச் அவ்வாறு செய்யாமல், ஒரு வருட “மதசட்டத் தண்டனை” என்று ஊட்டியில்[4] உல்லாசமாக இருக்க வைத்தது[5]. அந்த தண்டனை என்னவென்றால் செயலர், படிப்புத்துறை, ஊட்டி மறை மாவட்டம் [ Secretary of Education Commission in the Diocese of Ootacamund (Tamil Nadu)] என்ற உத்தியோகம் தான்[6]. இரண்டு பெண்களைக் கற்பழித்தால், இத்தகைய உத்தியோகத்தைக் கொடுப்பார்கள் போலும். இனி படிக்கும் பிள்ளைகளின் கதி அதோகதிதான். இவ்வாறே சிலீவா ராஜு போலிசெட்டி[7] என்கின்ற இன்னொரு பாதிரியும் இந்தியாவில் உல்லாசமாக உள்ளான்[8].

2010 – அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு – சென்னை பிஷப் உத்தரவு: இதற்குள் சென்னை பிஷப்பிற்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், “மாதவி பொன் மயிலால்” புகழ் சின்னாப்பா அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு என்று அறிவுறுத்தினாராம். ஆனால், “சின்னப்பா” சொன்னதையும் கேட்காத “பெரியப்பா” ஜோசப் பழனிவேல் ஜெயபால் ஈரோட்டில் ஒரு சர்ச்சில் மறைந்து வாழ ஆரம்பித்தானாம். அமெரிக்காவிலிருந்து கேட்டால், நாங்கள் அவருக்கு உரிய தண்டனைக் கொடுத்து பத்திரமான கண்காணிப்பில் வைத்திருக்கிறோம் என்று பதிலளித்துள்ளனரம். இன்டெர்போல், இந்திய போலீஸ் முதலியோர்கள் இவற்றில் தலையிட மாட்டார்களா, முடியாதா? இல்லை, இவர்களுக்கென்று தனியாக சட்டம் உள்ளதா?

வேதபிரகாஷ்

25-03-2012


[1] Prosecutors say the priest violently raped and threatened the girls in 2004 and 2005 while at Blessed Sacrament in Greenbush – http://www.wdaz.com/event/article/id/12772/

[2] He returned to India in 2005 to visit his ailing mother, and was asked not to return to the Minnesota church after being accused of having an inappropriate relationship with another 16-year-old.

[3] The criminal case relating to the 14-year-old was filed later. Jeyapaul never returned to the United States and has been a fugitive there ever since

[5] Vatican officials recommended Jeyapaul’s removal from the priesthood, but the local Indian bishop instead sentenced him to a year in a monastery through a canonical trial, the Chicago Tribune reported. Read more: http://www.dailymail.co.uk/news/article-2117651/Joseph-Jeyapaul-Fugitive-priest-arrested-India-7-years-run-sexually-assaulted-girl.html#ixzz1q5w7Af24

இன்னுமொரு காமக் கிருத்துவ பாதிரி தப்பி ஓட்டம்!

மார்ச் 11, 2012

இன்னுமொரு காமக் கிருத்துவ பாதிரி தப்பி ஓட்டம்! இதோ இவர்களை அடையாளம் தெரிகிறதா? இவர்கள் எல்லோருமே, சிறுமிகள், இளம் பெண்களை தமது செக்ஸ் இச்சைகளுக்கு, காமப்பசிக்கு உபயோகப் படுத்திக் கொண்டவர்கள். அமெரிக்காவிலிருந்து தப்பியோடு மறைந்து வாழ்கின்றவர்கள். ஆனால், இந்த எட்டு காமக்கயவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் அவர்கள் இந்தியாவில் மறைந்து வாழ்கிறார்கள்.

முதலிலும், ஏழாவதும் ஆக இருப்பவர்கள் இந்தியர்கள். முதல் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருப்பவன் சிலீவா ராஜு போலிசெட்டி. ஏழாவது புகைப்படத்தில் இருப்பவன், ஊட்டி உல்லாச பாதிரி ஜோசப் பழனிவேல்.                                                       ஆந்திராவிலிருந்து உதயமான ஒரு கத்தோலிக்கக் காமப் பாதிரி: சிலீவா ராஜு போலிசெட்டி என்ற கத்தோலிக்கக் கிருத்துவக் காம பாதிரி சிகாகோவில் 16 வயது இளம்பெண்ணை செக்ஸ் குற்றத்தில் உள்ளாக்கி, இந்தியாவிற்கு ஓடி வந்தபோது, ஹைதரபாத் ஆர்ச்பிஷப், அவன் எந்தவிதமான ஊழியமும் செய்யக் கூடாது என்று தடை விதித்தாராம். ஹைதராபாதில் நான்கு அடுக்கு வீடு வைத்திருக்கிறான். அமெரிக்காவில் செக்ஸ் குற்றத்தைச் செய்து விட்டு, இந்தியாவில் புகுந்து கொண்டால், எப்படி, இந்திய அதிகாரிகள் – பாஸ்போர்ட், இமிக்ரேஷன், கஸ்டம்ஸ், உள்துறை அமைச்சகம், உள்ளூர் போலீஸார் – சும்மாயிருக்கிறார்கள் அல்லது, இந்த கிருத்துவ பாதிரிகள் எப்படி அத்தகைய விலக்கு அல்லது பாதுகாப்பு கிடைக்கிறது என்று தெரியவில்லை.

வழக்குகள், வாய்தாக்கள் என்று இழுத்தடிப்பது (2003 – 2012): மே 2003ல், ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டான்[1]. ஆனால், இவன் மீது ஏகப்பட்ட வழக்குகள் குவிந்தன. அமெரிக்கா நாடு கடத்த உத்தரவு இட்டது. ஆனால், தில்லி நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு தாமதித்து வந்தான். வேடிக்கையென்னவென்றால், இவனுக்காக வாதாடி வருவதே, ஒரு பெண் வழக்கறிஞர் என்பது வருத்தமாக இருக்கிறது. ஒரு பெண்ணை சீரழித்துள்ளான் என்றபோது, எப்படி என்னொரு பெண் அவனை ஆதரித்து வாதாடி வருகிறாள் என்று தெரியவில்லை. பணம் ஒன்றுதான் பிரதானம் என்று தெரிகிறது.

வாடிகன் அங்கியைக் கழட்டிய பிறகும் தப்பி வரும் காமுகன் (மார்ச் 2012): இதனால், வாடிகனே வேறு வழியில்லை என்று 2008ல். இவனது அங்கியை உருவிவிட்டதாம்! அதாவது, இனிமேல் பாதிரி கிடையயது என்ர்ய் அறிவித்து விட்டது. பாவம், பெண்களின் பாவவடைகளை உருவிய இவனது அங்கியை வாடிகன் உருவியது நல்ல வேடிக்கைத்தான். பைளில் வெளிவந்த இவனைக் காணோம் என்று அமெரிக்கப் போலீஸ் அறிவித்துள்ளது[2]. இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. இப்பொழுது தண்டனைக்கு பயந்து இவன் பல நாடுகளுக்குள் மறைந்து வாழ்ந்து வருவதாகத் தெரிய வந்துள்ளதால், அறிக்கை விடப்பட்டுள்ளது[3].

மேலே சிரித்துக் கொண்டிருப்பவன் தான் ராஜு!

Sleeva Raju Policetti                                                         From: Chicago, Illinois Fled to: India Fled in 2002 from Chicago to India. Policetti was charged in 2002 with 20 counts of criminal sexual assault and abuse of a 16-year-old girl. Policetti fought extradition in court in New Delhi for years. The charges are now in jeopardy because a lawyer for the alleged victim has indicated she may not want to pursue prosecution.

Policetti was barred from ministry in Hyderabad, India, in 2002, three weeks after he fled the U.S., and the Vatican defrocked him in 2008.

சிறிய வயது பெண்களை குறிவைக்கு காமப் பாதிரிகள்: கத்தோலிக்கப் பாதிரிகளுக்கு பெண்கள், அதிலும் சிறிய வயது பெண்கள் என்றாலே கிரக்கம் தான் போலும். முன்பு ஊட்டி உல்லாச பாதிரி எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள். நாடு மாறினாலும், இவர்களது குணம் மாறாமல் இருப்பது ஆச்சரியமமன விஷயம். இம்மாதிரி 32 பாதிரிகள் தப்பியோடி மறைந்து வாழ்கிறார்களாம்[4]. அதில் இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சரி, நமது நாட்டில், தமிழகத்தில் கற்பழித்த பாதிரியார்கள், பிஷப்புகள் உள்ளார்களே, இவர்களை ஏன் இந்தியா விட்டு வைக்கிறது?

மேலேயுள்ளது, ஹைதரபாதில் உள்ள அவனது நான்கு மாடி வீடு!

வேதபிரகாஷ்

11-03-2012