Posts Tagged ‘எவாஞ்சலைசேஷன்’

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (2)

ஜூலை 28, 2018

எஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்! (2)

ECi, USA-Ezra

2014 தேர்தல் கூட்டணியில், கீழ்கண்டவர்கள் திமுகஅணியில் இருந்தனர். அதில் எஸ்ரா பங்கு வகித்தார்: 2014 தேர்தலின் போது, தமிழகத்தில், இந்தியாவில் கூட்ட கட்சிகள் அணிகள் மாறின. தேர்தல் கூட்டணி, சித்தாந்த இணைப்பணி என்று இவர்கள்  சேருவது செக்யூலைஸமா, என்னது என்று கவனிக்கலாம்.

  1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,
  2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
  3. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி,
  4. மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  5. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி,
  6. எம்.ஜி.ஆர்.,கழகம் ஆர்.எம்.வீரப்பன்,
  7. பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன்,
  8. திராவிடர் கழகம் கி.வீரமணி,
  9. இந்திய தேசிய லீக் திருப்பூர் அல்தாப்,
  10. பேராயர் எஸ்ரா சற்குணம்,
  11. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம்,
  12. உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து மற்றும்
  13. பொன் குமார்

ஆகியோர் பங்கேற்றனர். 2019ல் இவை / இவர்கள் எப்படி மாறுவார்கள் என்ற்று பார்க்கலாம்.

Ezra Sargunam, wife Mangalam, details

குடும்பத்தில்  ஈடுபட்ட கிருத்துவ பாஸ்டர், பிஷப்: பொதுவாக கிருத்துவ சாமியார்கள், திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள், ஆனால், கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவர்களுக்கு அத்தகைய கட்டுப்பாடு இல்லை. ஆக, 24ம் வயதில், மங்களம் என்ற பெண்ணை 1962ல் கல்யாணம் செய்து கொண்டு, இல்வாழ்க்கையை நடத்தினார். இரண்டு பெண்கள் பிறந்தனர். இரண்டு மகள்கள் மூலம் நான்கு பேரப் பிள்ளைகள் உள்ளனர். 08-01-1943 அன்று பிறந்த இவர், 46 வயது தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகு, 29-02-2008  அன்று அவர் காலமானர். அவர் காலமானபோது, ஜே.எல். வில்லியம்ஸ் என்ற அமெரிக்க சர்ச்-பிளான்ட் கூட்டாளியும் வந்திருந்தார். விஜிபி.சந்தோசமும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நெருக்கங்களை கவனிக்க வேண்டியுள்ளது. முன்பு, ஜெருசலேம் பல்கலைக் கழகத்தில், “டாக்டர்” பட்டம் இவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டதை நினைவில் கொள்ளலாம்.

VGP Santhosam came to condole the death of Mangalam

50 வருடங்களில் 3,500 சர்ச்சுகளை உண்டாக்கி, வளர்த்த அதிசயக்கார பிஷப்: எஸ்ரா சற்குணம் ஜூலை 19, 1938ம் ஆண்டு, கிருத்துவர்களாக மதம் மாறிய பெற்றோர்களுக்குப் பிறந்தார்[1]. அதாவது இந்துக்களாக இருந்த குடும்பம் தான் மதம் மாறியுள்ளது. 17வது வயதில் ஏசுவை ஏற்றுக் கொண்டு, 1957ல், தனது 19 வது வயதில் பாஸ்டர் ஆனார். சர்ச்-வளர்த்தல் [church planting ] அதாவது, புதியதாக சர்ச் கட்டுவது என்ற வித்தையில் தேர்ந்தவராக இருந்தார். 1957-58களிலேயே, சென்னைக்கு வெளியே இருந்து போரூரில் சர்ச் கட்டினார். அத்ற்குப் பிறகு, அதனை மையமாக வைத்துக் கொண்டு, மற்ற சர்ச்சுகள் கட்டப் பட்டன. 1961-62ல், கும்பமேளாவிலேயே, கிருத்துவ நோட்டிஸுகளை விநியோகித்தார்[2]. அதாவது, அத்தகைய மதவெறி பிடித்தவாராக இருந்தார் போலும். கீழ்பாக்கம் சர்ச்சில் 1972ல் பாஸ்டராக இருந்த போது, 100 .  ECI சர்ச்சுகள் கட்ட திட்டம் போட்டாரம்[3]. உடனே ஜேஹோவா அவருக்கு அருள் கொடுத்து விட்டாராம். உடனே அதே 19972ம் ஆண்டு, அமெரிக்கா செல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாம். அமெரிக்காவிலிருந்து நிறைய பணம் வந்ததால், 1998லேயே 1000-வது சர்ச்சை கட்டிவிட்டாராம். 2005ற்குள் இன்னொரு 1000 சர்ச்சுகளை உண்டாக்க, ஜேஹோவா வழி காட்டினாராம்[4]. மிஷின் – 2015 என்ற திட்டத்தின் படி, 1,00,000 சர்ச்சுகள் கட்ட மற்றும் 1,00,00,000 பேரை மதம் மாற்ற திட்டம் உள்ளதாம்[5]. நவீன இந்தியாவில் சர்ச்சுக்களை பெருக்குவது [Multiplying Churches in Modern India], மிஷன்தீர்மானமான திட்டம் [Mission Mandate], மத சகிப்புத் தன்மை மற்றும் சமூக ஒற்றுமை [Religious Toleration] and Social Harmony, பேராயர் நிரூபணங்கள், முதலிய புத்தகங்கள் மூலம், தனது திட்டங்களை அறிவித்துள்ளார். 

 JL Williams came to condole the death of Mangalam

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லைசொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[6]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கிப, உள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[7] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

ECI bishops

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்குஅதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்!: திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[8] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! அப்படியென்றால், பட்டா, கட்டிட பிளான் முதலியவை அனுமதி கொடுக்கும் விசயங்களில் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம், ஆனால், இங்கோ சித்தாந்த ரீதியில் திக-திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

© வேதபிரகாஷ்

28-07-2018

Ezra Sargunam, Karu health - 27-07-2018

[1] Bishop Ezra Sargunam is a second generation Christian. His father was a little boy when he and his non-Christian parents became Christians.http://www.ecionline.org/post/bishop-ezra-sargunam

[2] இங்கும் அவர் குறிப்பிடும் கதை ஒருதலை பட்சமாக இருக்கிறது. அதற்கான ஆதாரத்தை யாரும் கொடுக்க முடிய்யாது.

[3] It was in 1972 when Bishop Sargunam was a Pastor of the Church at Kilpauk that he prayerfully set the goal of the first 100 ECI churches. ECI had less than 32 churches at that time when God gave him the promise…. http://www.ecionline.org/post/bishop-ezra-sargunam

[4] Then God gave Bishop Sargunam the vision for another 1000 churches before AD 2005, which we have been able to achieve through the grace of God. But this has not quenched the thirst of this aggressive church-planter. His ultimate goal in life is to realise the God-given vision of planting one church among every responsive people group of India.

[5] He has given us at the moment, we are now prayerfully working towards the God-given goal of 100 thousand churches and 10 million ECI believers by 2056 our Centenary Year.

[6] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[7] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[8] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.