Archive for the ‘கலசபாக்கம்’ Category

பர்வதமலையில் கிருத்துவர்கள் வைத்த சிலுவை அகற்றப் பட்டது! அதர்ம ஆக்கிரமிப்புத் தனம், சட்டமீறல் கேவலமாக இருக்கிறது!

திசெம்பர் 7, 2018

பர்வதமலையில் கிருத்துவர்கள் வைத்த சிலுவை அகற்றப் பட்டது! அதர்ம ஆக்கிரமிப்புத் தனம், சட்டமீறல் கேவலமாக இருக்கிறது!

குன்றுகளை ஆக்கிரமித்து சர்ச்சுகள் கட்டும் கிருத்துவர்கள்: சமீபகாலமாக கிருத்துவர்கள் வேண்டுமென்றே, மலைப்பகுதிகளில் உள்ள மேடுகள், சிறு குன்றுகள், குன்றுகள், முதலிய இடங்களில் முதலில் கான்கிரீட் சிலை வைத்தல், பத்து-பதினைந்து பேர் வந்து வழிபடுதல், பிறகு, 50-100 என்று ஆட்களை வரவழைத்து, பிரதி ஞாயிற்றுக்கிழமை என்று ஜெபம் செய்தல், படிப்படியாக கூரை போடுதல், ஒலை / தகடுகள் வைத்து கூடம் கட்டுதல், பிறகு சுவர்கட்டி, அறை போன்றாக்குதல், ஒரு ஆளை தக்க வைத்தல், மின்னிணைப்புப் பெறுதல், என்று படிப்படியாக அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்[1]. திண்டிவனத்திற்கு போகும் வழியில் உள்ள அச்சிறும்பாக்கம் சிவன் கோவில் மலையை அவ்வாறு ஆக்கிரமித்து, பட்டிப்படியாக கட்டிடங்கள் கட்டி, இன்றைக்கு அதனை, ஒரு அனைத்துலக கிருத்துவர்கள் உல்லாச சுற்றுலா இடமாக மாற்றி விட்டனர். மேரி அம்மலை மீது காட்சியளித்ததாக, புது-புது கதைகளைக் கட்டி, அயல்நாட்டவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தையும் வசூலித்து, அந்த இடத்தினையே மாற்றிவிட்டனர். அத்தகைய முயற்சிகள் தாம் மற்ற இடங்களிலும் கையாண்டு வருகின்றனர். இது, செங்கல்பட்டு அடுத்த சோகன்டி கிராமத்துக்கும், அருகில் உள்ள அழகுசமுத்திரம் கிராமத்துக்கும் இடையே காப்பு காடு மற்றும் மலை இடங்களில் வெளிப்பட்டு வருகிறது. செஞ்சியைப் பற்றி இங்கு படிக்கலாம்[2].

2009ல் வாக்குறுதி கொடுத்து 2010ல் ஆக்கிரமிப்பில்ல் ஈடுபட்ட சர்ச்[3]: அச்சிறுப்பாக்கத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் குன்று புறம்போக்கு நிலத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக கிராம நிர்வாக அலுவலர், போலீசில் புகார் செய்துள்ளார். அச்சிறுப்பாக்கத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் வஜ்ஜிரகிரி மலை உள்ளது. இதன் உச்சியில் பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று புறம்போக்கு நிலம், வருவாய்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில், மழைமலை மாதா என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு முரணாக அனுமதியின்றி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதும் ஆலயத்தை விரிவுபடுத்தி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆலய நிர்வாகம், பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிரச்னை ஏற்பட்டது. வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து அவ்வப்போது அமைதி கூட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு 2009 நடந்த அமைதி கூட்டத்தின்போது மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என உறுதி அளித்தனர்[4]. தற்போது அதையும் மீறி தொடர்ந்து கட்டடம் கட்டி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, குன்று புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அத்துமீறி அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை தடுக்கக் கோரி அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பூங்காவனம், அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பர்வதமலை மீது கண் வைக்கும் கிருத்துவர்கள்: கிருத்துவர்களின் அடாவடித் தனங்கள் எல்லைகளை மீறி சென்று கொன்டிருக்கின்றன. உண்மையான விசுவாச்சிகள் என்றால், தங்கள் மதம் உண்டு, என்று செக்யூலரிஸ நாட்டில் இருக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்ற்றே, இந்துக்களுக்கு காலம்-காலமாக புனித இடங்களாக இருக்கும் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, இவ்வேலையை செய்து வருகின்றனர். இப்பொழ்ழுது பர்வதமலைமீது கண் விழுந்துள்ளது போலும். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்து தென்மாதிமங்கலம் என்கின்ற கிராமத்தில் உள்ள சிவன்மலை பெயர் பருவதமலை. இது சுமார் 4,500 அடி உயரம் உள்ள இந்த மலையின் மீது அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கிரிவலம் வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலம் வரக்கூடிய சீனனந்தல் என்கின்ற பகுதியில் திடீரென யாருடைய அனுமதியும் இன்றி சிலுவை நடப்பட்டது.

இந்துக்கள் விழித்துக் கொண்டு புகார் கொடுத்தது: இதை அறிந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், சிவனடியார்கள், இந்து இயக்க நண்பர்கள், இந்து இயக்கத்தவர்கள், என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்[5]. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி 2018 புதுப்பாளையம் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த சிலுவையை நடவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து சிலுவை அகற்ற முடிவு செய்து காவல்துறை பாதுகாப்பு கேட்டு அவர்கள் முன்னிலையில் சிலை அகற்றப்பட்டது[6]. உடனே ஒரு சிலர் மறியல் செய்ய, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து சென்றார்கள்.   சிவன்மலை சிலுவை மலையாக மாற்றி சென்னை அச்சிரப்பாக்கம் மலைபோல மதமாற்ற கேந்திரமாக மாற்ற முயற்சித்த கிறிஸ்தவ பாதிரியார்களிடமிருந்து பருவதமலை பாதுகாத்திட்ட வனத்துறை, மாவட்ட வருவாய் துறை, மற்றும் தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்கிறார் ரவிக்குமார். சிலுவை மலையாக அந்தோணியார் மலையாக மாற்ற முயற்சி நடத்தப் பட்டது முறியடிக்கப் பட்டுள்ளது!

இராம. ரவிக்குமார் , மாநில பொதுச்செயலாளர் , இந்து மக்கள் கட்சி தமிழகம் கூறியது[7]: இந்த பருவதமலை பாதுகாப்பு பணிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட அனைத்து இந்து இயக்க சகோதரர்களுக்கும் பாதம் பணிந்து என்னுடைய வணக்கங்களை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் திடீரென அந்தோணியார் குளம் என்று பேனர் வைத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய பாதிரிகளின் அயோக்கியத்தனத்தை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவனடியார்கள் இதற்காக போராட வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கிறோம். இல்லையெனில் பக்தர்களை, பொதுமக்களை திரட்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம் என உறுதி எடுக்கிறோம். வரக்கூடிய மார்கழி மாதம் ஒன்றாம் தேதி போற்றுதலுக்குரிய காஞ்சி மடத்து மாமுனிவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பருவதமலை கிரி வலம் செய்து வழிபாடு செய்வதற்கு வருகிறார்கள். இந்த மார்கழி ஒன்றாம் தேதி நடக்கக்கூடிய கிரிவலத்தில் அனைவரும் பங்கேற்று இந்து சக்தியை, சிவசக்தியை வெளிப்படுத்துவோம். நஞ்சை உண்ட கண்டன் சிவன்பிள்ளைகள் நாம் நயவஞ்சக கிறிஸ்தவர்களின் மதமாற்றம் நிகழ்ச்சியை, மலை ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிப்போம். பர்வத மலையை பாதுகாப்போம் பாரத தேசத்தை பாதுகாப்போம்,” என்றார். இவரது முயற்சியை அனைவரும் பாராட்ட வேண்டும்.

காலனிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு எண்ணம் மற்றும் அடிவருடிகளாக, அடிமைகளாக, கூலி மனப்பாங்குடன் இருப்பது: காலனிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு எண்ணம், இன்றும், இந்த மதம் மாறிய கூட்டத்திற்கு இருக்கிறது என்றால், அவர்கள் அந்த அளவுக்கு அடிவருடிகளாக, அடிமைகளாக, கூலி மனப்பாங்குடன் இருப்பது தெரிகிறது. அத்தகைய இழிய நிலையிலிருந்து, முதலில் அவர்கள் வெளியே வரவேண்டும். ஒரு உண்மையான கடவுள் நம்பிக்கையாளன் அத்தகைய செயலை செய்ய நினைக்கவும் மாட்டான். ஆனால் செய்து விட்டான் எனும் போது, தீவிரவாதி நிலையில் இருக்கிறான் என்று தெரிகிறது. ஆகவே, அரசு மற்றும் போலீஸார் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-12-2018


நன்றி: புகைப்படங்கள் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன.

[1]https://christianityindia.wordpress.com/2010/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

[2] வேதபிரகாஷ், கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?, மே.19, 2010.

[3] தினமலர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் மீது புகார், Added : அக் 02, 2010 01:49

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=97459&Print=1

[5] தினசரி, பர்வத மலைசிவன் மலையை சிலுவை மலையாக்கும் கிறிஸ்தவ வெறியர்களின் முயற்சி முறியடிப்பு, செங்கோட்டை ஶ்ரீராம், 05-12-2018, 11:42 pm.

[6] https://dhinasari.com/local-news/chennai-news/63283-christian-missionaries-trying-to-make-parvatha-malai-siluvai-malai.html

[7] இராம. ரவிக்குமார் , மாநில பொதுச்செயலாளர் , இந்து மக்கள் கட்சி தமிழகம், 86430-8143096553 -65696.